TerrorisminFocus

Showing posts with label ஜனநாயகம். Show all posts
Showing posts with label ஜனநாயகம். Show all posts

Wednesday, October 16, 2013

அன்பான வாக்காள வடிவேலு பெருமக்களே....

எங்கூருல நான் பத்தாங்கிளாஸ கடேசி பரிட்ச்சேல மட்டும் பாஸாகி பிரமோசன் ஆன காலத்திலேயே பாராளுமன்றம், நீதிமன்றம்னு பஹுல் விட்டுட்டு திரிஞ்சவர்தான் அஸ்வின். இவருக்கு எங்கள விட ஒரு வயசுதான் அதிகம் (இப்ப வரைக்கும் அப்படித்தான்னா பாத்துக்கோங்களேன்) ஆனாப் பாருங்க சின்ன வயசுல இருந்தே ரொம்ப கருத்தாப் பேசுவாப்புல. ரொம்ப நா கழிச்சி போன வாரம் அவர பாத்தேன். இப்பயும் அதே கருத்தாப் பேசும் சுபாவம் மட்டும் மாறவில்லை.


பொதுவான நல விசாரிப்புகளுக்குப் பிறகு, இந்தியா இப்ப இருக்குற நிலமய நினைச்சி உச்சுக் கொட்டி பேசத் துவங்கினார். சமூக அக்கறையுடன் பேசுகிறார் கவனிப்போம் என்று கேட்கத் துவங்கினேன். எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருந்த நிலையில் தீர்வு என்று கடைசியாக ஒன்றைச் சொன்னார் பாருங்கள், நான் அப்படியே ஷாக்காயிட்டேன். அவர் சொன்ன தீர்வு இதுதான், இந்தியாவுல எங்கும் ஊழல், எதிலும் ஊழல், உலகத்துல இருக்குற அத்தன பேரும் இங்க வந்து ஆட்டையப் போடுறானுங்க அதுக்கு அரசாங்கமும் துணை போகுது. இதுக்கெல்லாம் காரணம்... மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸு அரசாங்கம் எனவே இந்தியாவ தூக்கி அப்படியே அலேக்கா மோடி கையில கொடுத்துட்டா நாடு இன்னைக்கோ நாளைக்கோ வல்லரசாயிடும் என்றார். இதச் சொன்னா என்ன பைத்தியக்காரன்னு சொல்றாய்ங்க என்று வடிவேலு போல அவர் பினிசிங் டச் வைக்காத ஒன்றுதான் குறை. வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு பாத்திரம் விளக்குவது போல என் தரப்பை விளக்கினேன்.



இவர் மட்டுமல்ல இந்தியாவின் நடுத்தர வர்க்கப் படித்த கும்பலில் ஒரு பகுதியினர் இப்படியான வாக்காள வடிவேலுகளாகவே தீர்வு சொல்லித் திரிகிறார்கள். அடிப்படை பொது அறிவு கூட இல்லாமல் கூட்டத்தோடு கோவிந்தா சொல்லும் மந்தை மனோபாவம் மேலோங்கிய நிலையில்தான் இத்தகையோர் இருக்கின்றனர். சில சுலபமான விவரங்களை பரிசீலித்தாலே தீர்வு என்ற பெயரிலான இத்தகைய அடி முட்டாள்தனங்கள் புரிபடும்.

முதல் விசயம்,  இந்தியத் தேர்தல் முறை விகிதாசார அடிப்படையிலானது அல்ல, பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றவர் ஆட்சிக்கு வருகின்ற முறையிலான அமைப்பு அல்ல என்பதையெல்லாம் விட்டு விடுவோம். இவர்கள் வோட்டு போட்டு தேர்ந்தெடுப்பது மோடியையா? இல்லை குறைந்த பட்சம் பாஜகவையா? அல்லது இவர்கள் வோட்டு போட்டு நிராகரிப்பது காங்கிரசையா/மன்மோகனையா? இரண்டும் இல்லை என்பதே உண்மை. அவரவர் தொகுதியில் நிற்கும் அல்லக்கை நொல்லக்கை கிரிமினல் வேட்பாளர்களில் ஏதோ ஒரு பொறுக்கியைத்தான் தேர்ந்தெடுக்க முடியும். அமெரிக்கா போல நேரடியாக நாட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் ஜனநாயக முறை இங்கிருந்தாலாவது யோசிக்கலாம். அதுதான் இங்கு கிடையாதே அதனால்தான் தேர்தலில் போட்டியே போடாத மன்மோகன் பிரதமராக முடிந்தது. நிலமை இப்படியிருக்க மக்கள் வோட்டு போடாம விட்டாத்தான் நாட்டுக்கு எதோ கெட்டது நடந்துடும் என்று நம்புகிறார்கள். அதனால் இருப்பதில் பெஸ்ட் பொறுக்கி யாருன்னு தேர்ந்தெடுத்து போறோம். அது இப்போதைக்கு மோடி என்பது வடிவேலுகளின் கருத்து.


இரண்டாவது விசயம். காங்கிரசுக்கு மாற்று என இவர்கள் முன் வைக்கும் பாஜக எப்படியாப்பட்டது? அவர்கள் ஆட்சி செய்த முந்தைய காலத்திலும், அவர்கள் தற்போது ஆட்சி செய்த மாநிலங்களிலும், இப்போது எதிர்கட்சியாக நாடாளுமன்றத்தை நாறடித்து வரும் நிலையிலும், காங்கிரசுக்கு போட்டியாக ஊழல்கள், கிரிமினல் வேலைகள் என்று பட்டையை கிளப்பி வருகிறார்கள். ஈயம் பித்தளையைப் பார்த்து இழித்த கதைதான் இது. மோடி மட்டும்தான் நல்லவன் என்று பாஜகவே சொல்கிறது. வாக்காள வடிவேலுகளுக்கும் இது புரிந்துதான் உள்ளது. மோடி நல்லவன் என்றே வைத்துக் கொள்வோம், தனிமனிதனால் நாட்டை நிர்வாகிக்க முடியுமா? ஒரு வேளை பாஜக நினைத்தால் மோடியை தூக்கியெறிந்து விட்டு இன்னொரு கேடியை பிரதமராக்க முடியுமே? அந்த மேற்படி கேடி தேர்தலில் போட்டி கூட இட்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றுதானே இந்திய 'ஜனநாயகம்'  சொல்கிறது.

மூன்றாவது விசயம். மோடியே பெரும் கிரிமினல், ஊழல் பேர்வழியாக குஜராத்தை ஆட்சி செய்து வருவதும். பன்னாட்டு கம்பனிகளுக்கு பல லட்சம் கோடி குஜராத்து வளங்களை முறைக்கேடான முறைகளில் தாரை வார்த்துள்ளதும், ஐநா அவார்டு கொடுத்தாய்ங்க, எங்கூரு பஸ்ஸாடண்டு சும்மா ஏரோப்ளேன் இறங்குற ரேஞ்சுல இருக்கும், உலக வங்கியிலேயே கோடிக்கணக்குல டேபாசிட் பன்னிருக்கோம், பிரிட்டிஸ் தூதுவரே எங்கள ரொம்ப்பப நல்லவன்ன்ன்னு சொல்லிட்டாரு, ஜப்பானுல ஜாக்கிசானு கூப்பிட்டாஹ, அமெரிக்காவுல மைக்கேல் சாக்சன் கூப்பிட்டாஹ  என்பதாக வகை தொகையில்ல்லாம இவர்கள் கொடுத்த பில்டப்புகள் அனைத்தும் பச்சை பொய்கள் என்பதும் தொடர்ச்சியாக அம்பலமாகி வருகின்றன. காங்கிரசு அரசை மக்கள் வெறுத்து ஒதுக்க காரணமாக அமைந்த அதே சி ஏ ஜியின் அறிக்கைகள்தான் மோடியின் ஊழல்களையும் பட்டியலிடுகின்றன. ஆஹ இவன் ஆட்சிக்கு வந்தாலும் காட்சிகள் மாறப் போவதில்லை. என்ன, இவன் கொஞ்சம் மசாலா ஜாஸ்தி போட்டு படம் காட்டுவான். அவ்வளவுதான் வித்தியாசம்.



ஆனாப் பாருங்க வாக்காள வடிவேலுகள் ஒரு தடவ முடிவெடுத்துட்டா அத பிற்பாடு அவிங்களே நினைச்சாலும் மாத்திக்க மாட்டாய்ங்க. ஒரு அஞ்சு பத்து வருசம் பிஞ்ச செருப்பாலேயே அடி வாங்கின பிறகுதான் முடிவ மாத்திக்குவாய்ங்க. அதுவும் பிஞ்ச செருப்பு தூள் தூளாகிப் போயிருச்சி இதுக்கு மேல அடி வாங்க நினைச்சாலும் அது அந்த செருப்புக்கு ஆகாத காரியம் என்ற நிலையின் காரணமாகவே வேறு செருப்பைத் தேடும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை மேற்கொள்வார்கள்.ஏன்னா, நாங்க கருத்தாப் பேசுவது  மட்டுமல்ல, கருத்தா அடியும் வாங்கவோம்.


ஆஹவே அன்பான வாக்காள வடிவேலு பெருமக்களே, உங்கள் பொன்னான வாக்குகளை இந்த முறையும் மறக்காமல் பிஞ்ச செருப்புக்கே குத்தி இன்னும் ஏழேழு ஜென்மங்களுக்கும் செருப்படி வாங்கி சாபல்யம் அடைவீர்.

அசுரன்
 

இதச் சொன்னா என்ன பைத்தியக்காரன்னு சொல்றாய்ங்க...



தொடர்புடைய பதிவுகள்:

Mr. NaMo NaNo

சு.சாமி, சோ ராமசாமி – இரட்டை புரோக்கர்களின் ஒத்த சிந்தனை!


நரேந்திர மோடி : இந்தியாவின் ராஜபக்சே !

மோடியை எதிர்க்கும் சென்னை பொதுக்கூட்டம் – ஆதரவு தாரீர் !

இவனுங்க அப்பனுங்க எல்லாம் குதிருக்குள்ளே இல்லையாம், அவனுங்களே சொல்றானுங்க!!!

Wednesday, October 09, 2013

பல் இல்லாத பாம்பை அடிப்பியா, இல்ல பாம்பாட்டியை அடிப்பியா?

ஆதார் அட்டை (அது அட்டையா எண்ணா என்பதையே குழப்பி விடுகிறார்கள் வேண்டுமென்றே) சட்டவிரோதமானது என்பதையும், அது கட்டயமாக்கப்படுவதை எதிர்த்தும் தொடுக்கப்பட்ட வழக்கில் ஆதார் அட்டை கட்டாயமல்ல என்று உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

உளவுத் துறை தலைவன் நீல்கேனி

வழக்கு விவரங்கள் வினவில் உள்ளன. சுருக்கமாக உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலம் மத்திய அரசின் பாதி உண்மை, பாதி பொய் கலந்த பிரச்சாரம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எந்தவிதமான சட்ட அங்கீகாரமும் இல்லாமல் நந்தன் நீல்கேனி மூலம் ஒரு நிறுவனத்தை உருவாக்கி, 122 கோடி மக்களுக்கு அடையாள அட்டை வழங்குகிறேன் என பிரச்சாரம் செய்து இதற்காக சுமார்ரூ. 50,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. மக்களுக்கு இதனால் எந்த பயனும் இல்லை.

ஆதார் என்பது 12 டிஜிட் அடையாள எண் தான். இதனால் எந்த அட்டையையும் வழங்க மாட்டோம் என்ற உண்மையை கூட மக்களுக்கு அரசாங்கம் சொல்லவில்லை. ’ஆதார்’ ஒரு அடையாள அட்டை என பிரச்சாரம் செய்து, மானியம், கேஸ் சிலிண்டர் அது இருந்தால் தான் கிடைக்கும் என மக்களை அச்சுறுத்தி இத்திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. மக்களை உளவு பார்க்க மட்டுமே ஆதார் அடையாளம் பயன்படும்.

சரி  இதில் பாம்பும், பல்லும் எங்கே வந்தது. உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்தான் மேற்படி பல்லில்லாத பாம்பு. உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கிவிடவில்லை. மாறாக ஆரம்ப கட்ட விவரங்களின் அடிப்படையில் ஆதார் அட்டை சட்ட விரோதமானது, அரசியலமைப்புச் சட்டங்களுக்கு எதிரானது என்பது உறுதிப்பட்ட நிலையில் அதனை மக்களுக்கு கட்டாயமாக்கக் கூடாது என்று நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. இதற்கே அரசு தைய தக்க என்று குதியாட்டம் போட்டு நீதிமன்றத்தை மிரட்டியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் ஆதார் அட்டை உத்திரவை ரத்து செய்யக் கோரியும், குற்றப் பிண்ணனி கொண்டவர்கள் தேர்தலில் பங்கெடுப்பது, 49 O வை  ஒரு பட்டனாக வோட்டுப் பெட்டியில் இணைப்பது  உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றிய உச்சநீதிமன்ற உத்திரவை ரத்து செய்யக் கோரியும் மத்திய அரசு மனு கொடுத்திருந்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது உச்சநீதிமன்றம் அநாவசியமாக அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடுவதாக அரசால் சுட்டிக் காட்டப்பட்டது. இதெல்லாம் உனக்கு தேவையில்லாத வேலை என்பதுதான் அரசின் கருத்து. மேலும், மேற்படி விவகாரங்களில் உச்சநீதிமன்றத்தின் எந்த முடிவையும் குப்பை கூடையில் வீசும் வகையில் சட்டம் இயற்றவதற்கான வேலைகள் அமைச்சரவையில் நடந்துவருவதும் விவாதிக்கப்பட்டது. இதனை உச்சநீதிமன்ற நீதிபதிகள் முரன்நகையாக இப்படி குறிப்பிட்டனர் "You have the ordinance route also. If you have a law this case becomes irrelevant.' அதாவது, 'சட்டம் போட்டுட்டா நீதிமன்ற வழக்கு ஒன்னுமில்லா போயிரும் இல்லையா' என்று கேட்டுள்ளனர்.

இப்படியாக பாம்புக்கு பல் இல்லை என்பதை ஒரு வழியாக ஒத்துக் கொண்டார்கள். அணு ஒப்பந்தம் தவறு என்று நீதிமன்ற படியேறினால், அது வெளியுறவு கொள்கை முடிவு அதில் நாடாளுமன்றத்திற்கே அதிகாரமில்லை பிறகல்லவா உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் என்றனர். இப்போ ஆதார் எண், தேர்தல் சீர்திருத்தம் பற்றிய வழக்கில் உச்சநீதிமன்றத்திற்கு அரசின் கொள்கை முடிவுகளிலே தலையிடுவதற்கு அதிகாரமில்லை என்கின்றனர். இப்படியெல்லாம் நீட்டி முழக்க வேண்டாம் என்றுதான் நேரடியாக எங்களுக்கு பல் இல்லை என்று அறிவித்து விட்டனர் நீதிபதிகள்.

பல்லில்லாதா பாம்பு


ஆனாப் பாருங்க நம்ம ஜனங்க சரியா பழக்கப்படுத்தினா இந்த பாம்பு கொத்தி கொன்றும்னு இன்னும் நம்பிட்டு திரியுதுங்க. இந்த பாம்பு புஸ் புஸ் என்று கார்போரேசன் குழாய் மாதிரி சவுண்டு மட்டும்தான் விடும் எனும் போது பாம்பை நொந்து என்ன பயன்? பாம்பாட்டியை அல்லவா நொங்கெடுக்க வேண்டும்?

அசுரன்


ஆதார் அட்டை கட்டாயமல்ல – உச்சநீதி மன்றம்

ஆதார்: விலை போகும் உங்கள் தகவல்கள்!

ஆதார் அடையாள அட்டை: மக்களை உளவு பார்க்கும் ஏற்பாடா?

ரேசன் கடை ஒழிப்பே நேரடிப் பணப் பட்டுவாடா திட்டம் !

உங்களைப் பற்றிய விவரங்கள் விற்பனைக்கு கிடைக்கும் !

டீனேஜ் பெண்ணின் கர்ப்பம் முதலில் கடைக்காரனுக்கு தெரிந்ததெப்படி?

Thursday, March 17, 2011

நன்றி விக்கிலீக்ஸ், நல்ல இந்திய ஜனநாயகம்!

விக்கிலீக்ஸ் இந்தியா கேட் எப்போ ரிலீஸ் ஆவும்னு ஆவலா ரொம்ப நா காத்திருந்தேன். சரியா தேர்தல் நெருங்கி வற்ற நேரமாப் பாத்து ரிலீஸ் பன்னிருக்காய்ங்க. இதுல அம்பலமாயிருக்கிற விசயங்கள் எல்லாம் யாருக்கும் தெரியாதவை அல்ல. ஆனால் அவை அவர்களின் சொந்த வாக்குமூலங்களாக ஆணித்தரமாக அம்பலமாகியிருக்கின்றன என்பதுதான் இங்கு விசயம். என்னென்ன அம்பலமாகியிருக்கின்றன?

1) இந்திய அமைச்சரவையை அமெரிக்காவின் விருப்பத்திற்கு இணங்க மாற்றியுள்ளனர். இந்தியாவை அமெரிக்காரன் தான் ஓட்டிட்டு இருக்கான்.




2) அமெரிக்காவுடனான அணு ஒப்பந்த்தத்தை பாரளுமன்ற பன்றித் தொழுவத்தில் நிறைவேற்றிட அனைத்து எதிர்கட்சிகளுக்கும் பணம் கொடுத்துள்ளனர் காங்கிரசு கட்சியினர் . அமுக்கான் பாண்டியன் பிரதமரிலிருந்து அத்தனை அயோக்கியனும் இதற்காக அலைஞ்சிருக்கானுங்க.

வாஜ்பேயியோட மருமகப் பிள்ளை மூலம் பாஜக ஓட்டுக்களை வாங்கவும் முயற்சி நடந்துள்ளது. பாஜகக்காரன் வருவான்னு காங்கிரசுக்கு முன் அனுபவம் இருந்தனாலத்தான் அவிங்க முயற்சி செஞ்சிருக்கானுங்க. அந்த முன் அனுபவம்: பவர் புரோக்கர் நிராராடியாவின் கைங்காரியத்தால் ரிலையன்ஸ் அம்பானிக்காக முன்பு ஆதரவு ஓட்டுப் போட்டது எதிர்கட்சி பாஜக(நிரா ராடியா டேப்). ஆனால், அணு ஒப்பந்த்தின் போது பாஜக நல்லவன் வேசம் கட்டிக் கொண்டதற்கு பின்னணி எனன்வென்பது இன்னும் தெரியவில்லை (நாம எதிர்த்தாலும் பாஸ் ஆயிரும்னு தெரிஞ்சனாலக் கூட இருக்கலாம்). இங்கு கவனிக்க வேண்டிய விசயம், அமெரிக்காரனுக்காக காங்கிரசுக்காரன் நூற்றுக்கணக்கான கோடிகளை வாரியிறைத்து ஓட்டு வாங்குகிறான் எனில் இது பேரு ஜனநாயகமாய்யா? அன்றைய பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கு உட்பட்ட இந்திய பாராளுமன்றக் கிளைக்கும், இன்றைக்கு அமெரிக்கா செனட்டுக்கு உட்பட்டு வேலை செய்யும் இந்திய பாராளுமன்றக் கிளைக்கும் என்ன வித்தியாசம்?

3) இலங்கையில் ஈழ இன அழிப்புப் போரின் இறுதிக் காலங்களில் இலங்கைக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களையெல்லாம் திசைதிருப்பி இலங்கை சிங்கள இனவெறி அரசைப் பாதுகாக்கும் வேலையை செய்திருப்பவர் திருவாளர் 'உலகின் மிகப் பெரிய ஜனநாயகம்' இந்தியா அவர்கள் என்று அமெரிக்கத் தூதரக கேபிள் உரையாடல் பதிவுகள் அம்பலமாக்கியிருக்கின்றன.


இது மட்டுமில்லாமல் விளக்குப் பிடிக்கும் மூன்றாம் தர மாமா வேலையும் பார்த்துள்ளது நமது பெருமை மிகு பாரத மாதா கி ஜே. விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலில் இருந்து இலங்கையைப் பாதுகாக்க இந்திய ராடார்களுக்கு வலுவில்லை என்பதால் அமெரிக்காவின் உதவியைக் கேட்டுள்ளனர் சிரிலங்காப் படையினர் அந்தத் தகவலும் விக்கிலீக்கில் வெளிவந்துள்ளது. இதன் அர்த்தம் இந்தியா அங்கு ராடார் கொடுத்து உதவியுள்ளது என்பதுதான்.



4) நேபாளத்தில் மாவோயிஸ்டுகளின் வெற்றியை முறியடிக்க அமெரிக்க இந்திய கூட்டுச் சதிகள், உள்ளடி வேலைகள் விக்கிலீக்ஸால் அம்பலமாகியிருக்கின்றன. ஏற்கனவே நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட (அப்சலூயுட் மெஜாரிட்டி, ரிப்பெரசன்டேட்டிவ் ஒதுக்கீடு கொண்ட அரசியலமைப்புச் சட்டம் இயற்றும் தேர்தல் அங்கு நடந்துள்ளது. இந்தியாவில் அப்படி ஒன்று நடக்கவேயில்லை ஆயினும் நாம் ஜனநாயகமாம்) நேபாள அரசை சீர்குலைக்க அங்குள்ள இந்தியத் தூதரகம் சதி வேலை செய்தது சமீபத்தில் இதே 'தி இந்து'ப் பத்திரிக்கையில் அம்பலமானது கவனத்தில் கொள்ளத்தக்கது.



5) மியான்மாரில் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராடும் தலைவர் ஆங் சன் சூ கிய் வீட்டுச் சிறையில் இருந்தார். அவரை கைவிட்டு விட்டு அங்குள்ள ராணுவ சர்வாதிகார கும்பலுக்கு முட்டுக் கொடுக்கும் வேலையைச் செய்கிறது 'ஜனநாயக இந்தியா' அரசு.



6)
 தேச பக்த வேசம் போடும் பயங்கரவாத கட்சியான பாஜகவின் அமெரிக்க எதிர்ப்பு ஏமாற்றும் விக்கிலீக்ஸில் அம்பலமாகி சிரிப்பாய் சிரிக்கிறது. அயோக்கியக் கிரிமினல் புணந்தின்னி சொறிநாய் அத்வானி தனது ஹிட்லர் மீசையில் மட்டுமல்ல பொய், மோசடி, சுத்துமாத்துக்களிலும் ஹிட்லருக்குக் குறைவில்லாத 420  என்பதையும், ரெட்டை நாக்குப் பீப் பொறுக்கி என்பதையும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. வெளிய தேசபக்த வீறாப்புப் பேசி அமெரிக்காவை  எதிர்த்துவிட்டு உள்ள போயி அவனோட கால்ல விழுந்து கதறிருக்கானுங்க இந்த காவி டவுசர் டப்பா மண்டையங்க.

இத விட அசிங்கம் நம்ம ஆர்எஸ்எஸ் கியிஞ்ச கோமனம் வாஜ்பேயிய பத்தின விசயம்.

நாம என்னவோ மன்னுமோகன் சிங்தான் பெரிய பூட்ஸ் நக்கினு நினைச்சுட்டு இருக்கோம், ஆனா அவன விட பெரிய பூட்ஸ் நக்கி வாஜ்பேயின்னு அமெரிக்காரனே  சர்டிபிகேட் கொடுக்கிறான். அத்தோட நில்லாம, காங்கிரசுக்காரன விட பாஜகக்காரன் இருந்தா இந்த நாட்ட இன்னும் சீக்கிரமாக் கூட்டிக் கொடுத்துறுப்பானுங்களேன்னு வருத்தப்படறான் அமெரிக்காக்காரன். இதுதாம்பா ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள் சொல்லும் இந்து தேசியம்.

ரெட்டை நாக்கு காவி கும்பலின் அமெரிக்க தேசபக்தி
 


இது  தவிர பிரதமர் அலுவலகத்தில் மலையாள மாபியா(அதிகாரிகள்தான்) கோட்டமும் அம்பலமாகியுள்ளது.


இன்னும் நிறைய வரும். நண்பர் மா. சிவக்குமார் போன்றோர் இங்கு ஏதோ ஜனநாயகம் நிலவுவது போல அவ்வப்போது திடீர் மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் அருள்வாக்குக் கொடுப்பது வழக்கம். அவர்களின் சிந்தனைக்கு இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன்.

இன்னொருவருக்கும் இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன். பெயரில் கம்யூனிசத்தை வைத்துக் கொண்டு வாழ்நாள் முழுவதும், தனது வரலாறு முழுவதும் கட்சி மாறி கட்சி மாறி காவடி தூக்குவதற்கு மயிர் பிளக்க வியாக்கியானம் கொடுப்பதை மட்டுமே செய்துள்ள சிபிஎம்யைச் சேர்ந்த தோழர் மாதவராஜ் அவர்களுக்கும் இந்தப் பதிவு சமர்ப்பனம்.

நல்ல காலம் பொறக்குது

நல்ல காலம் பொறக்குது

இந்தியாவில் ஜனநாயகம் நிலவுது... ஜனநாயகம் நிலவுது....

இந்த மொற நாங்க காவடி தூக்குற கட்சிக்கே ஓட்டுப் போட்டா

இந்த தடவயாவது.. நல்ல காலம் பொறக்குது.. நல்ல காலம் பொறக்குது...


ஸார் டேப்பு அந்து ரொம்ப நேரம் ஆச்சி....


நன்றி தி இந்து

அசுரன்

Friday, December 10, 2010

விக்கிலீக்கை ஆதரிப்போம்!!

மீபத்தில் விக்கிலீக் வெளியிட்ட ரகசிய அமெரிக்கத் தூதரக உரையாடல்கள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. உலகிலுள்ள பல்வேறு அரசுகள், குறிப்பாக யுத்தவெறி பிடித்த அமெரிக்க அரசின் ரகசிய அயோக்கியத்தனங்களை துகிலுரித்தன விக்கிலீக்கின் இந்தச் செயல்பாடுகள். இதனைத் தொடர்ந்து கடும் கோபமுற்றுள்ள அமெரிக்கா விக்கிலீக்கின் ஸ்தாபகர் ஜூலியன் ஆசென்ஜை போலியான பாலியல் பாலாத்கார குற்றத்தில் லண்டனில் கைது செய்துள்ளது. அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.










இது தவிர விக்கிலீக் தளத்திற்கான பணப்பட்டுவாடாவை கையாண்டு வந்த விசா, மாஸ்டர் கார்டு மற்றும் பே பால் போன்ற தனியார் நிறுவனங்கள் தற்போது தமது சேவைகளை தீடிரென்று நிறுத்திக் கொண்டுள்ளனர். விக்கிலீக் தளம் செயல்பட்டு வந்த அமேசான் வழங்கி தனது சேவையை தடை செய்து விட்டது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், விக்கிலீக் சட்டவிரோதமான செயலில் இறங்கியுள்ளது என்பதே ஆகும். இது நகைப்புக்குரியது, ஏனேனில் ரகசிய ஆவணங்களை பத்திரிகைகளில் வெளியிடுவது சட்டவிரோதமானது அல்ல.










மேலும், அமெரிக்கா மற்றும் அதன் அல்லக்கை நாடுகளின் சகல மூன்றாம்தர இணையப் பொறுக்கிகளும் தற்போது விக்கிலீக்கின் இணையச் செயல்பாடுகளை முடக்க சட்டவிரோத வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை சமாளிக்கும் வகையில் பல்வேறு இணையக் திசைதிருப்பித் தளங்களில் (மிரர் சைட்டுகள்) தற்போது விக்கிலீக் செயல்பட்டு வருகிறது. விவரம் இங்குள்ளது: . இவற்றுக்கு எதிராக உலகம் முழுவதிலும் விக்கிலீக்கிற்கு ஆதரவாக ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம் இவற்றில் நம்பிக்கை கொண்ட ஆர்வலர்கள் களம் இறங்கியுள்ளனர். அரசு இணையதளங்களும், விக்கிலீக் எதிர்ப்புத் தளங்களான விசா, மாஸ்டர் கார்டு, அமேசான் போன்றவை விக்கிலீக் ஆத்ராவாளர்களால் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன.


இன்னிலையில், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் விக்கிலீக்கை பாதுகாக்க வேண்டிய அவசியம் உணர்ந்து விக்கிலீக்கின் மீது நடந்து வரும் இந்த அநீதிகளை எல்லாருக்கும் பெரும் அளவில் கொண்டு செல்லவேண்டும். விக்கிலீக்கின் போராட்டத்தில் அதற்கு பக்கபலமாக நிற்க வேண்டும்.

பதிவர்களாகிய நாம் விக்கிலீக்கை ஆதரிப்போம் என்ற லோகோவை நமது தளங்களில் ஒட்டியும், பேஸ்புக், டிவிட்டர்களிலும், இமெயில்களிலும் விக்கிலீக் பற்றிய செய்திகளை பகிர்ந்து கொண்டும். நேர் உரையாடல்களில் இது குறித்து பேசியும் தமது ஜனநாயக உணர்வை வெளிப்படுத்த கடமைப்பட்டுள்ளனர்.

தோழமையுடன்,
அசுரன்

விக்கிலீக் லோகோ:






wikileaks facebook: http://www.facebook.com/wikileaks#!/wikileaks?v=wall

தடையை மீறி விக்கிலீக்: http://www.wikileaks.ch/mirrors.html

விக்கிலீக்ஸ் பற்றிய ஒரு தொடர் பதிவு:

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 8

Tuesday, September 07, 2010

கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடக் கூடாது, ஆனால் உலக வங்கி தலையிடலாம்!!

லி தின்று வீணாகப் போகும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாகக் கொடு என்று நீதிமன்றம் சொன்னதற்கு பிரதமர் சொல்லிய பதில். 'அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது'. இதுக்கு முன்பு உலக வங்கி, அமெரிக்கா, இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதுரகம் போன்றவை இந்திய அரசின் எல்லா கொள்கைகளையும் தீர்மானித்தனவே அப்போதெல்லாம் மன்மோகன் இப்படித்தான் குதித்தாரா? இல்லையே? அப்புறமென்ன கொள்கை முடிவு? வேறொன்றும் இல்லை, உலகமயக் கொள்கைகளை உலக வங்கியின் ஆணைப்படி நிறைவேற்றுவதைத்தான் மன்மோகன் இப்படிச் சொல்கிறார். அந்தக் கொள்கைகளுக்கு எதிராக நீதிமன்றம் இலவசம் என்று சொன்னதைத்தான் மன்மோகன் எதிர்க்கிறார்.

இலவசம் என்பது பன்னாட்டு முதலாளிகளுக்கு மட்டும்தான், ஏழை மக்களுக்கு டிவி பொட்டி வேண்டுமானால் இலவசமாகக் கிடைக்கும். ஆனால் அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், குடிநீர் போன்றவை இலவசமாகக் கொடுக்கப்படாது. ஏனேனில், இவையெல்லாம் பன்னாட்டு முதலாளிகளின் வியாபாரப் பொருட்கள். இவற்றை இலவசமாகக் கொடுத்துப் பழக்கினால் விலை வைத்து விற்று பன்னாட்டு கம்பனிகள் லாபம் பார்ப்பதை மக்கள் விரும்ப மறுப்பார்கள். எனவேதான் உலக வர்த்தகக் கழகம் தெளிவாகச் சொல்கிறது இவற்றை சரக்கு என்று. இந்த கொள்கையில்தான் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று குதிக்கிறார் மன்மோகன் சிங்.

ஏறு பூட்டி விளைவித்த விவசாயிக்கே விளை பொருளின் மீது உரிமையில்லை, பட்டினியில் சாகிறான். ஆனால் இவன் சொல்கிறான் உணவை இலவசமாகக் கொடுக்க முடியாது என்று. யாருடைய சொத்து அது? இவனுடைய அப்பன் வீட்டுச் சொத்தா அது? இதனால் விவசாயிக்கு பாதிப்பு என்கிறார் மன்மோகன். புதிய பொருளாதாரக் கொள்கையால் விவசாயம் அழிவதைப் பற்றி கேட்டால், உணவு உற்பத்தி குறைவதைப் பற்றி கேட்டால் நாடு தொழில்மயமாக வேண்டும் என்று சொல்லும் நீ, இப்போது மட்டும் விவசாயிக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறாயா?

கோதுமை அதிகமாக விளைந்தால் அதை கடலில் கொட்டுவேனே அன்றி ஏழை நாடுகளுக்குக் கொடுக்க மாட்டேன், பால் உற்பத்தி அதிகமானால் அவற்றை கொட்டி அழிப்பேனே அன்றி ஏழை நாடுகளுக்குக் கொடுக்க மாட்டேன் இதுதானே மேலை நாடுகளின் சந்தை விதிகள். இதைத்தானே மன்மோகனும் வேறு மொழியில் - அடிமைகளின் மொழியில் - பேசுகிறார்?

இன்னுமாயா இதை உலகின் மிகப் பெரிய ஜனநாயகம்னு சொல்லிட்டுத் திரியுறீங்க? உலகின் மிகப் பெரிய பிண நாயகம்னு சொல்லுங்க அதுதான் சரி.

அசுரன்

Monday, July 19, 2010

சீமான் கைது - இது ஆரம்பம் மட்டுமே!!!


சீமான் மீண்டும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் பிணையில் வர இயலாத சிறைத் தண்டனைக்கு ஆளாகியுள்ளார். பிரிவினையைத் தூண்டும் வகையில் அவர் பேசினாராம். ஆர் எஸ் எஸ் இந்து பயங்கரவாதிகள் மத அடிப்படையில் நாட்டைத் துண்டாடும் பேச்சுக்களை எந்த பயமும் இன்றி பேசி வரும் வேளையில், சீமானுடைய பேச்சு ஒரு பெரிய விசயமே இல்லை. ஆனால், இதற்கு முன்பு கோக்கை எதிர்த்து போஸ்டர் ஒட்டிய தேசத் துரோகம், பெரியார் சிலை உடைப்பை எதிர்த்த குற்றம் போன்றவற்றிற்காக 'மட்டுமே' தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ள நிலையில் சீமான் மீது அதே சட்டம் பாய்ந்துள்ளது ஆச்சர்யமானது அல்ல.

ஆனால், அச்சட்டம் சீமான் மீது பாய்ந்துள்ள நேரம் சில விசயங்களை முன்னறிவிக்கின்றன. அது இந்திய அரசு பாசிசமயமாகிவிட்டது என்பதைத்தான். இந்திய அரசை எதிர்க்கும் அதன் நடவடிக்கைகளை விமர்சிக்கும் எந்தவொரு பேச்சுக்களும் கடுமையான சிறைவாசத்தையே எதிர்கொள்ளும் என்பதே சீமான் கைது அறிவிக்கும் செய்தி.

இம் என்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம் என்ற காட்டு பாசிச நிலையை நோக்கி உலகின் மிகப் பெரிய 'ஜனநாயகம்' சென்று கொண்டுள்ளது. மாவோயிஸ்டுகளை ஒடுக்குவது என்ற பெயரில் மத்திய இந்தியாவின் இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு கூட்டிக் கொடுக்கும் மாமா வேலையும், இலங்கையில் இன அழிப்புப் போரின் மூலமாக இந்திய மூலதனத்தின் வன்புணர்ச்சிக்கு களம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள நிலையும் இங்கு ஒப்பிட்டு நோக்கத்தக்கது. மேலும், விலைவாசி உயர்வு, நாட்டின் மிகப் பெரும்பான்மை மக்களின் வறுமை, உணவுத் தட்டுப்பாடு, பெட்ரோல் விலையுயர்வு, காஷ்மீர் விடுதலைப் போராட்டம், வடகிழக்கில் கிளர்ச்சி என பல சிக்கல்கள் முன்னுக் வந்துள்ள சூழல் இங்கு கவனிக்கத்தக்கது. மொத்த நாட்டின் பெரும் பகுதி உள்நாட்டு போர் சூழலை நோக்கி சென்று கொண்டுள்ளதையே இவை காட்டுகின்றன.

பசுமை வேட்டையின் முன்னறிவிப்பான சல்வாஜூடுமின் அட்டூழியங்களை அமபலப்படுத்திய 'குற்றத்தி'ற்காக பினாயக் சென் ஒரு வருடம் விசாரணையின்றி சிறை வைக்கப்பட்டார். பல மனித உரிமை ஆர்வலர்கள் இதே போல ஒடுக்கப்பட்டனர். பசுமை வேட்டையின் கொடூரங்களை அம்பலப்படுத்திய 'குற்றத்திற்காக' ஹிமேஸு குமார் என்ற காந்தியவாதியின் ஆசிரமம் நொறுக்கப்பட்டது, அவரது உதவியாளர் மீது வழக்கு, சிறைவாசம். லிங்கராம் என்ற பத்திரிகைத் துறை மாணவர் டெல்லியில் படிக்கிறார். அவர்தான் ஆசாத்தின் இடத்தை நிரப்ப இருக்கும் மாவோயிஸ்டு தலைவர் என்று கூறி அவருடன் தொடர்புள்ளவர்கள் என்று அருந்ததி ராய் உள்ளிட்ட பல முக்கிய மனித உரிமையாளர்களை குறி வைத்தது அரசு. இவையனைத்தும் தமக்கு எதிரான எதிர்ப்புகளை அனைத்தையும் மிரட்டி பணிய வைக்கும் தந்திரமாகவே அரசு செய்தது.

இன்னிலையில், இறையாண்மை பாதுகாப்புச் சட்டம் என்ற ஒன்றை கொண்டு வர உள்ளனர். அத்துடன் பசுமை வேட்டையையும் விரிவுபடுத்தி ராணுவம், விமானப் படையை இறக்கி விரிவானதொரு உள்நாட்டு யுத்தம் தொடுக்க உள்ளனர். எனவே கொஞ்சம் நஞ்ச எதிர்ப்புக் குரல்களையும் கிள்ளியெறியும் தேவை அரசுக்கு உள்ளது. ஒரு பக்கம் சட்டப் பூர்வமாக பாசிசமயமாகி வரும் அரசு, இன்னொரு பக்கம் அரசியல் கட்சிகளின் அணிகளின் சட்டத்தை மீறிய ரவுடித்தனங்களுக்கு ஆசி வழங்கி சிவில் சமூகத்தையும் பாசிச மயமாக்கி வருகிறது. கர்நாடகா- மாஹாராட்டிரா எல்லைப் பிரச்சினை குறித்து தொலைக்காட்சியில் விவாதிக்க நாக்பூர் சென்ற கர்நாடாக ரக் சன வேதிகே அமைப்பின் தலைவர்(முஸ்லீம்) இந்து பயங்கரவாத- தமிழர் விரோத சிவசெனா ரவுடிகளால் எல்லார் முன்னிலையிலும் தாக்கப்பட்டு காதுகள் கிழிக்கப்பட்டு அடித்து நொறுக்கப்பட்டார். ஆர் எஸ் எஸ் ரவுடிகள் தமக்கு எதிரான சிறு குரலையும் தமது குரங்குப் படையை கூட்டிக் கொண்டு சென்று தாக்கி ஒடுக்குகின்றனர். குஜராத்தில் மாவோயிஸ்டு பீதியைக் காட்டி பல பத்து மனித உரிமையார்வளர்கள் கைது. டெல்லியில் தொழில்சங்க தலைவர்கள் மாவோயிஸ்டுகளாக சித்தரிக்கப்பட்டு கைது. மதுரையில் தமிழக அரசுக்கு எதிராக வால்போஸ்டர் அடித்தால் ரவுடி அழகிரியின் மிரட்டல். இந்திய அரசும், சமூகமும் பாசிச மயமாகி வருகிறது. பிணையில் வர இயலாத சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்ட போபால் ஆண்டர்சன் பாதுகாப்புடன் விடுதலை, ஆர் எஸ் எஸ் பயங்கரவாதி தாராசிங், அத்வானி போன்றோருக்கு தண்டனையில்லை, கயர்லாஞ்சி சாதி வெறியர்களுக்கு கரிசனம் - தண்டனைக்குரியவர்களுக்கு அன்பையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனையும் தருகின்ற இன்றைய சூழலில், இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு முழுமையாக பாசிச மயமான ஒரு அரசே தேவையாக உள்ளது. சீமானின் கைது சொல்லும் செய்தி இதுதான்.

உலகின் மிகப் பெரிய 'ஜனநாயக' நாட்டின், வசதி படைத்த குடிகளே.. .இதோ உங்களது நாட்டுப்பற்றை விளம்பரப்படுத்த அற்புதமானதொரு வாய்ப்பு. இந்திய அரசின் பாசிச நடவடிக்கைகளை எதிர்த்து களமிறங்குங்கள்.

அசுரன்

உள்நாட்டுப் போருக்கு தயாராகிறது இந்திய அரசு !!

Wednesday, July 14, 2010

இது துரோகத்தின் விளைநிலம் - 2


போபால் வழக்குத் தீர்ப்பு மற்றும் இந்திய மக்களுக்கு இந்த அரசு செய்த மாபெரும் துரோகம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இந்த துரோகத்திற்கு உள்ளேயே இன்னொரு உப துரோகம் உள்ளது.




போபால் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக நீக்கப்படாமல் சேர்த்து வைக்கப்பட்டிருந்த யூனியன் கார்பைடு ஆலையின் நச்சுக் கழிவுகள் அந்தப் பகுதியில் கடுமையான உடல் நலக் குறைபாடுகளையும், காற்று, நிலம், நீர் மாசுபாட்டையும் ஏற்படுத்தி வந்தது. இதனை எதிர்த்து மக்களும் தொடர்ந்து போராடி வந்தனர். போபால் கழிவுகளை சுத்தப்படுத்தி அப்புறப்படுத்தும் பொறுப்பு அசுத்தப்படுத்திய யூனியன் கார்பைடு (இன்றைய டௌ கெமிக்கல்ஸ்) நிறுவனத்துக்கே சொந்தம் என்பது மக்களின் முக்கியக் கோரிக்கை. ரத்தன் டாடா சில வருடம் முன்பு மாமா வேலை பார்க்கும் முகமாக நான் வேண்டுமானால் சுத்தம் செய்கிறேன் என்று சொல்லிப் பார்த்தார். அதனை எதிர்த்தும் மக்கள் போராடினார்கள். இனி உலகில் போபால் போல ஒன்று நடைபெறாமல் இருக்க வேண்டுமெனில் சுத்தப்படுத்தும் பொறுப்பு யூனியன் கார்பைடிற்கே செல்ல வேண்டும் என்று உறுதியுடன் நின்று போராடி வருகிறார்கள் மக்கள்.



இன்னிலையில் போபால் வழக்குத் தீர்ப்பு வந்தது. தீர்ப்பு எனும் துரோகம் கிளப்பிய சந்தடி அடங்கும் முன்பே அடுத்தக்கட்ட துரோகம் ஒன்றும் வெளி வந்துவிட்டது. யூனியன் கார்பைடு ஆலையின் நச்சுக் கழிவுகளில் 40 டன்களை ரகசியமாக பிதாம்பூர் என்ற கிராமத்தில் கொண்டு போய் கொட்டியுள்ளது அரசு. இதை 2008லேயே செய்துள்ளனர். அதாவது ரத்தன் டாடா மாமா வேலை பார்க்கிறேன் என்று சொன்னார் அல்லவா? அதற்கு எதிர்ப்பு வந்தது அல்லவா? எனவே வெளிப்படையா செய்தால்தான் பிரச்சினை என்று ரகசியமாக செய்துள்ளனர். இப்போது அம்பலமாகியுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சர் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

எந்தளவுக்கு மக்களை கிள்ளுக் கீரையாக எண்ணியிருந்தால் இந்த அரசு இந்தத் துரோகத்தைச் செய்திருக்கும்? போபால் மக்கள் எக்கேடு கெட்டால் என்ன என்று டௌ கெமிக்கல்ஸுக்கு ஆதரவாக நின்று அந்த மக்களை இன்று வரை வதைத்து வருகிறது எனில், இன்னொரு பக்கம் அதே டௌ கெமிக்கல்ஸை தப்பிக்க வைக்க, திருப்திப்படுத்த ரகசியமாக நச்சுக் கழிவுகளை இன்னொரு கிராமத்தில் சென்று பதுக்குகிறது. அந்தக் கிராம மக்களுக்கும் பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் ஏற்படுமே, அங்கும் நீர், நிலம், காற்று பாதிகப்படுமே என்பது பற்றியெல்லாம் இவர்களுக்கு கவலையில்லை. இந்தியாவில் கம்பனி ஆரம்பிக்கும் அமெரிக்க நிறுவனங்கள் தாம் ஏற்படுத்தும் விபத்துக்களுக்கு பொறுப்பேற்க வேண்டாம் என்றும் சட்டம் கொண்டு வர ஏற்பாடு செய்த அரசுதானே இது. கீழே தள்ளிய குதிரை குழியும் பறித்ததாம்.

இப்படி மக்களை காட்டிக் கொடுத்து கழுத்தறுப்பதைப் பற்றி ஒரு துளியளவு கூட கவலைப்படாத, பன்னாட்டு கம்பனிகளுக்கு பாதசேவை செய்யும் ஒரு துரோக அரசை தாங்கி நிற்கின்ற அமைப்பின் பெயர் ஜனநாயகம் என்றால் நம்மால் வாயால் சிரிக்க இயலவில்லை.

தயவு செய்து உன்னோட ஜனநாயக உளறல்களைத் தூக்கி கக்கூஸில் போடு.....

(போபால் பற்றிய விரிவான செய்திகள் கட்டுரைகள் ஜூலை மாத புதிய ஜனநாயகம் சிறப்பிதழில் கிடைக்கும்)

அசுரன்

Air, Water, Earth And The Sins Of The Powerful

Ramesh apologises for dumping of Carbide waste

End Of Bhopal Protests?

The Night Bhopal Was Poisoned In Its Sleep

Timeline: The Toxic Trail

அணு உலை விபத்து இழப்பீடு மசோதா: அமெரிக்காவின் இலாபவெறிக்கு இந்திய மக்கள் பலிகிடா!

போபால் படுகொலை: ஆண்டர்சனை தூக்கில் போடு!

முள்ளிவாய்க்கால் – போபால்

புதிய ஜனநாயகம்,போபால் – சிறப்பிதழ், ஜூலை-2010, மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

இது துரோகத்தின் விளை நிலம்!








துரோகம் 1:
கயர்லாஞ்சி (2006 செப்) என்ற பெயர் பலருக்கு மறந்திருக்கும். ஞாபகம் இல்லாதோர் இந்த சுட்டியில் படித்துக் கொள்ளவும்.

கயர்வாஞ்சி தாழ்த்தப்பட்டோர் படுகொலை : சாதிவெறியர்களின் வக்கிரம்-கொடூரம்!

கயர்லாஞ்சி சாதிவெறிப் படுகொலை இந்தியாவைவே உலுக்கியது. ஏனென்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்திய மாதக்கணக்கிலான வீரம் செறிந்த போராட்டத்தின் காரணமாக இந்தியா குலுங்கியது. பத்திரிகைகள் இந்தப் படுகொலையை போராட்டங்கள் வீரியமாக மாறிய ஒரு மாதம் முழுவதும் வெளியிடமால் ரகசியமாகவே வைத்திருந்தன. ஆனந்த் தெல்தும்பெடே அவர்கள் இந்தப் படுகொலையை ஒட்டி உலகமய அரசியல் சாதியத்தை எத்தகைய பரிணாமத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது என்று விரிவானதொரு ஆய்வுக் கட்டுரையையும் எழுதினார். உலகமயம் அடிப்படையில் உழைக்கும் மக்களை ஒடுக்குகிறது என்ற வகையில் தாழ்த்தப்பட்டவர்களும் கடுமையாக ஒடுக்கப்படுகிறார்கள் என்பதே அதன் சாரம். கயரலாஞ்சி காட்டும் பேருண்மைகள் - உலகமயம் - தலித்தியம் - தலித் விடுதலை

இந்தப் படுகொலை வழக்கை கையிலெடுத்த சிபிஐ வழக்கம் போல தனது துரோகத்தை அரங்கேற்றத் துவங்கியது. சிபிஐ கேட்டுக் கொண்டதன் பேரில் பிப்ரவரி 2007ல் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 46 பேரில் 35 பேர் விடுவிக்கப்பட்டனர்.

செப் 2008ல் குற்றம்ச்சாட்டப்பட்ட 11பேரில் 6 பேருக்கு மரண தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும் மூவரை விடுவித்தும் தீர்ப்பானது.

ஆனால் தண்டனைக்கான காரணங்களாக சாதிவெறி வன்கொடுமையோ, பெண் மீதான பாலியல் அத்துமீறலோ, திட்டம்மிட்ட படுகொலை முயற்சி என்பதோ சொல்லப்படவில்லை. அதாவது மொத்தத்தில் கயர்லாஞ்சி படுகொலை ஒரு படுகொலை மட்டுமே. அதில் சாதியோ, பெண்ணடிமைத்தனமோ இல்லை இல்லை இல்லைவேயில்லை என்பதே செப் 2008 தீர்ப்பின் சாரம்.

கயாலாஞ்சி வன்கொடுமையும் நீதிமன்றத்தின் சாதிப் பாசமும்

இவ்வாறாக, வழக்கு அடுத்தக்க்கட்ட நீர்த்துப் போதலுக்குச் சென்றது. சாதிவெறிப் படுகொலை வெறும் 'கொலை வழக்காக' மாறியது. மேல் முறையீடு செய்யப்பட்ட இந்த நீர்த்துப் போன வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் நடந்துவந்தது. இதோ இன்று அந்தக் 'கொலை வழக்கில்' தீர்ப்பு வந்துள்ளது. ஆறு சாதி வெறியர்களுக்கும் வழங்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுவிட்டது.

இதே போலத்தான் கிருத்துவர்கள் மீது ஒரிஸ்ஸாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தி வந்த பஜ்ரங் தள் இந்து பயங்கரவாதி தாராசிங்ன் மீதான வழக்கும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளது. போபால் வழக்கு பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

துரோகம் 2, 3.. என்று பட்டியலிட கீழ் வெண்மணியிலிருந்து, போபால் வரை பெரிய பட்டியலே உள்ளது.

இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாம். உலகின் மிகப் பெரிய துரோகிகளின் நாடு என்று பெயர் மாற்றுங்கள் அதுவே பொருத்தமாக இருக்கும்.

அசுரன்

தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வன்கொடுமைகளின் தொகுப்பு

நீதித்துறையை ஆள்கிறது இந்து மனச்சாட்சி!

காவிக் கறை படிந்த தீர்ப்புகள்

பில்கிஸ் தீர்ப்பு - சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியுமா எது உள்ளே எது வெளியே என்று?


சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்... அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்

Monday, August 17, 2009

கரண்டு இல்ல, பேனு சுத்தல அதனால வேல செய்யலை...

ரண்டு சப்ளை இல்லை, அதனால மின்விசிறி வேலை செய்யவில்லை. இதன் காரணமாக எனது வேலைகளை முடிக்க முடியவில்லை. ஒழுங்கு மரியாதையாக தங்கு தடையற்ற மின்சாரம், ஜெனரேட்டர் வசதிகளை செய்து கொடுத்து விட்டு பிறகு வேலைகளை முடிப்பது குறித்து என்னிடம் பேசு. வேக்காட்டுல உக்காந்துக்கிட்டு வேலய செய்ய சொன்னா எப்படி செய்யிறது?

இந்த மாதிரி எக்கத்தாளம் பிடிச்சு பேசுனா என்ன நடக்கும்? பொடதிலேயே அடிச்சு வெளியெ தொரத்திருவாங்க. இந்த மாதிரி அல்பத்தனமான கோரிக்கைகளை விடுங்கள். நியாயமான உரிமைகளுக்காக தொழிலாளர்களும், மக்களும் போராடினாலே கூட நீதிமன்றம் குறுக்கே பாய்ந்து குய்யோ முறையோ என்று அறிவுரை வழங்கி தண்டிக்கும்.

அப்படியாப்பட்ட நீநீநீநீநீதி மன்றத்தின் மாமாமாமாட்சிமை தாங்கிய நீதிபதிகள்தான் மேற்சொன்ன முதல் பத்தி அரை வேக்காட்டு காரணத்தை முன் வைத்து வழக்குகள் நிலுவையில் இருப்பதை நியாயப்படுத்துகிறார்கள். புச்சா எதுவும் சிக்கலையே கிசு கிசு பேசன்னு யோசிச்சு கொஞ்ச நா முன்ன மன்னுமோகன் சிங் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்து கருத்துச் சொல்லியிருந்தார். இவற்றை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இதுக்குத்தான் இப்படி சாமியிடிருக்கானுங்க நீதிபதிகள். அதுவும் கொஞ்சம் நஞ்சமில்ல 21 ஐகோர்ட் நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டில் ஒன்னு கூடி நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில்தான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

ஒரே வேக்காடா இருந்தாங்கண்டி வேல நடக்கிலன்னு சொல்வதை ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளலாம் என்றால் கூட நிலுவையில் இருக்கும் வழக்குகளையும், அவற்றை வருடக் கணக்கில் இழுத்தடிக்கும் 'வாய்தா'பதிகளின் டிமிக்கிகளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது. குறைந்த பட்சம் வேக்காட்டின் காரணமாக வழக்குகள் தீர்க்கப்படாமல் போய்விட்டன என்பதற்கு ஆதாரம், புள்ளிவிவரம் கூட வழங்காமல் மிகத் திமிராக ஆணையிடுகிறார்கள் நீதிபதிகள். இவிங்க சொல்றத பாத்தா 24 மணி நேரமும் கோர்ட்டுல கரண்டு இல்லங்கற மாதிரி இருக்கு. இவர்கள் வேக்காட்டில் வாடுவதாக காரணம் கூறி இழுத்தடித்துள்ள லட்சக்கணக்கான வழக்குகளில் சிக்கிக் கொண்டு சிறைக் கொட்டடிகளிலும், நீதிமன்ற வளாகங்களிலும் கொசுக்கடியிலும், வேக்காட்டிலும் வாழ்க்கையை இழுந்து வருகிறார்கள் ஆயிரக்கணக்கான அப்பாவிகள்.

ஆனா இதே நீதிபதிகள்தான் தமது உச்சானிக் குடுமியை சுருட்டி வைத்துக் கொண்டு, இந்துத்துவ பார்ப்பன பயங்கரவாதிகளின் வழக்குகளை ஞாயிற்றுக்கிழமை கூட கடைய திறந்து வைத்து விரைவாக முடித்து வைத்துள்ளனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

டேய்.. என்னப்பாத்தாடா கேள்வி கேக்குற மவனே ஒழுங்கா எனக்கு முதுகு சொறிஞ்சு விடுடா அப்புறம் வேல நடக்கிறத பத்தி பேசுன்னு சொல்லி ஆண்டைத்தனத்துடன் தாண்டவம் ஆடியுள்ளனர் நீதிபதிகள். அத்தோட சேந்து இதுதான் சாக்குன்னு சில பல சலுகைகளையும் கோரியுள்ளனர்.

ஏண்டா வேல நடக்கலன்னு கேட்டா காக்கா கத்துச்சு, குயில் கூவுச்சி, மூக்குல வேர்வைன்னு கதய விட்டுப்புட்டு அத்தோட சேர்ந்து மேற்கொண்டு சில பல சலுகைகளையும் கேக்கற மொள்ளமாறித்தனம் இருக்கே... அடேங்கப்பா... சும்மாவா சொன்னாய்ங்க.... ஒலகத்திலேயே பெரிய ஜனநாயகம் இந்தியா... இந்தியா... இந்தியான்னு....

ஜோய்ங் லந்து....(ஜெய் ஹிந்த தாம்பா அப்படி சொன்னேன்)

""Do you expect a trial court judge to achieve the case disposal target when he has to sit all day under a fan that stands still and a court room that is packed with litigants creating an unworkable condition ""

""As the state governments have been citing funds crunch to extend additional financial assistance to the subordinate judiciary, the CJs again suggested that financial autonomy be given to the HCs. ""


அசுரன்

Thursday, April 10, 2008

புனித பிம்பங்கள்!! நல்லொழுக்க ஆதீனங்கள்!!! ஆனந்த விகடன்கள்!!!

திபெத் பிரச்சினையை ஒட்டி மிகப் பெரும்பாலனவர்கள் தமது புனிதத் தன்மையை விளம்பரப்படுத்திக் கொண்டனர். தமது அரசியல் அரிப்பை சொறிந்து கொண்டனர். பொதுவாகவே ஒடுக்குமுறைகள், காட்டுமிராண்டித்தனங்களுக்கு எதிராக தமது தார்மீக கோபத்தை எப்போதுமே வெளிப்படுத்துபவர்களை இங்கு நான் குறிப்பிடவில்லை. அது போன்றவர்கள் கணக்கில் காஸ்மீரும், ஈராக்கும், வடகிழக்கும், ஈழமும், பாலஸ்தீனமும், திபெத்தும் ஒன்றுதான். மாறாக, திபெத் பிரச்சினை அது சீனாவுடன் சம்பந்தப்பட்டது என்ற ஒரே காரணத்தால் தமது புனிதத்தன்மையெனும் போர்வையில் நல்லொழுக்க ஆதினங்கள் செய்த அரசியல் சித்து விளையாட்டுகளையே இங்கு குறிப்பிடுகிறேன். உடனே சீனாவுக்கு நாம் வக்காலத்து வாங்குவதாக யாரேனும் குறிப்பிட விரும்பினால் மன்னிக்கவும், சீனா என்ற பிற்போக்கு ஜனநாயக விரோத அரசுக்கு பட்டு குஞ்சலம் கட்டும் வரலாற்று கடமை எமதுடையது அல்ல. அந்த வேலையையும் கூட அதே நல்லொழுக்க ஆதினங்கள்தான் செய்து வருகின்றன.

ஆனந்த விகடனின் போலி வீரவேசமும், கேலிக்கூத்தான தார்மீக கோபமும்!!!:
குறிப்பாக - ஒரு வகை மாதிரியாக(prototype) - ஆனந்த விகடனை எடுத்துக் கொள்வோம். ஆனந்த விகடன் மட்டுமல்லாமல் அகில இந்திய RSS பத்திரிகையான டைம்ஸ் ஆப்பு இந்தியா(ஆப்பு இந்தியாவுக்கு) வும் இதுதான் சாக்கு என்று வளைத்து வளைத்து எழுதியிருந்தது. பல்வேறு பத்திரிகைகளும் அவ்வாறே செய்திருந்தன. ஆனந்த விகடனில் பா. ராகவன் என்பவர் எந்தவொரு தர்க்கமும் இல்லாமல், தரவும் இல்லாமல் வெறுமே திபெத் ஒடுக்குமுறையின் உணர்வுப் பூர்வமான பொது புரிதலின் பலத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதனை படித்தவுடன் மனதில் எழுந்த கேள்வி ஒன்றேயொன்றுதான் இந்தளவுக்கு நல்லொழுக்க சீலரான ஆனந்த விகடன் இதே வாரத்தில் இங்கு சிதம்பரத்தில் நிகழ்ந்த சம்பவம் குறித்து ஒரு துண்டு செய்தி கூட எழுதவில்லையே என்ன அதிசயம் என்பதுதான்.

இவர்கள் கடந்த காலத்திலும் கூட தமது நல்லொழுக்கத்தை செலக்டிவாகவே காட்டியுள்ளனர். அகில உலகமே CPM பாசிஸ்டுகளை காறி உமிழ்ந்த நந்திகிராம் குறித்து இவர்கள் எவனும் இப்படி டே-டு-டே கவர் ஸ்டோரி எழுதவில்லை. இன்று வரை ஒரு பரபரப்பு சினிமாவுக்கு இணையாக நடந்தேறிவரும் ஒரிஸ்ஸாவின் கலிங்காநகர் போராட்டம் பற்றி இந்த நாய்களின் எவனும் மூச்சு கூட விட்டதில்லை. சட்டீஸ்கர அரசை குறிப்பாக சல்வாஜுதம் அமைப்பு எந்தளவுக்கு மக்கள் விரோதமானது என்று போன வாரம் உச்ச நீதிமன்றம் கண்டிக்கும் அளவு இருக்கும் பேயாட்சி சூழல் குறித்து மனித உரிமை போராளியான பினாயக் சென் கைது செய்யப்பட்டு எந்த முகாந்திரமும் இன்றி பினை மறுக்கப்பட்டுள்ள நிலையிலும் இவர்கள் எவனும் எதுவும் எழுதவில்லை. சட்டீஸ்கரில் கிராமப்புறங்களை எரித்து தீக்கிரையாக்கி மக்களை வலுக்கட்டாயமாக முகாம்களில் அடைத்து வைத்துள்ளது குறித்து இவன்கள் எவனும் எந்த காலத்திலும் எழுதப் போவதில்லை. குஜராத் கலவரத்தின் போதும் சரி அதனை தெஹல்கா விரிவாக அம்பலப்படுத்திய போதும் சரி இவர்கள் எல்லாம் எந்த நல்லொழுக்கத்தை பற்றி ஒழுகிக் கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை. திபெத்தின் மீது சீனா செய்து வரும் ஆக்கிரமிப்பு குறித்து மனிதாபிமான அங்கலாய்ப்புகளை கடை விரிக்கும் இந்த நாகரிக கோமான்கள் இந்தியாவையே ஆக்கிரமித்து வருசத்துக்கு 17000 விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளி உணவு பஞ்சத்தின் விளிம்பில் நிறுத்தியுள்ள உள்நாட்டு யுத்தத்தை ஒத்த நிலை குறித்து எழுத தமது பேனாவின் ஒரு சொட்டு மையைக் கூட இவர்கள் செலவழித்ததில்லை. அதை விடுங்கள் ஈழத்தில் நடக்கும் யுத்தத்திற்க்கு சிரிலங்காவிற்க்கு ராணூவ ரீதியாக எல்லாவகை உதவிகளும் செய்வதுடன் ஈழத் தமிழர்களை நட்டாற்றில் விட்டுள்ள இந்திய தரகு அதிகார பார்ப்பன அரசு குறித்து மூச்சு கூட விடுவதில்லை இந்த மேன் மக்கள்.

தற்போதைய திபெத் பிரச்சினை போன்ற தருணங்களில் ஜனநாயகம், மனிதாபிமானம், நியாயம், தர்மம், அஹிம்சை என்று பெரிய நன்னூல்கள் போல பிரசங்கம் செய்து போலி ஆவேசங்களையும் தார்மீக பலத்தின்பாற்ப்பட்ட சாபங்களையும் கண்டனங்களையும் எழுதும் இவர்களின் தலையங்கங்கள் உண்மையிலேயே இந்த சொல்லாடல்களின் நடைமுறைக்கு ஆபத்து நிகழ்ந்து கொண்டிக்கும் போது பதுங்கி பம்மி வேறதாவது அலப்பத்தனமான உளறல்களில் முங்கி முத்தெடுக்கின்றன. ரஜினி வீட்டிலும், விஜய் வீட்டிலும் புல் புடுங்கிக் கொண்டிருக்கின்றன.

அட இவர்களின் இந்த செலக்டிவ் புத்தி உள்நாட்டு விவகாரங்களில்தான் என்று பார்த்தால் வெளிநாட்டு விசயங்களிலும் இவர்கள் அப்படியே. லெபனான் மீது மிக சமீபத்தில் மிகக் கோடூரமானதொரு யுத்தத்தை - எந்தவொரு தரக்க நியாயமுமற்ற யுத்தத்தை - இஸ்ரேல் தொடுத்து பேரழிவை உண்டாக்கி தோல்வியடைந்து ஓடியது இந்த கனவான்களின் மனதை கலக்கியதேயில்லை.

இதே திபெத் பிரச்சினை நடக்கும் சமகாலத்தில்தான் ஈராக்கில் யுத்தம் வேறெந்த காலத்தையும் விட தீவிரமடைந்துள்ளது குறித்தும், நாளும் அமெரிக்காவினால் ஈராக் மக்கள் படுகொலை செய்யப்படுவதும், கொத்து கொத்தாக மனிதர்கள் சாகடிக்கப்படுவதுமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருப்பதும் பற்றி செய்திகள் வருகின்றன. குறிப்பாக திபெத் பிரச்சினை வரும் அதே சர்வதேச செய்திகள் பக்கத்திலும், மையப் பகுதிகளிலும் இது குறித்து செய்திகள் வருகின்றன(செய்திகள் மட்டுமே அதன் மீதான தார்மீக கோபத்தின் வெளிப்பாடாக அமைந்த கருத்து கட்டுரைகள் அல்ல). அமெரிக்க எனும் ஒரு நாடு வெறும் பொய்களின் அடிப்படையில் ஈராக் என்னும் ஒரு நாட்டை ஒரு இருபது வருடங்கள் தொடர் யுத்ததில் சிதறடித்து வரலாறு இது வரை கண்டிராத மிக கோழைத்தனமானொதொரு யுத்தத்தின் மூலம் தனக்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத ஒரு நாட்டில், தனது அவதூறுகள் அனைத்தும் பொய் என்று அப்பட்டமாக நிரூபணம் ஆகிய பிறகும் மிகத் தைரியமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதுடன், ஒரு முழுமையான யுத்தத்தை தொடுத்து வருவது குறித்து இந்த நன்னூல்கள் யாரும் வாய் தவறி கூட பேசுவது இல்லை. இந்த உலகமாகா அயோக்கியத்தனத்திற்க்கு உரை போடக் காணாது திபெத்தில் சீனாவின் அட்டுழியம். ஆயினும் இந்த அன்பர்கள் யாரும் அமெரிக்க தூதரகத்திற்கு முன்போ அல்லது அகில இந்திய அளவிலோ அல்லது அகில உலக அளவிலோ அமெரிக்காவின் இந்த அயோக்கியத்தனத்திற்க்கு எதிரான நடைபெறும் மக்களின் இயல்பான தன்மான உணர்ச்சியின் பாற்பட்ட ஆவேச போராட்டங்கள் குறித்து எழுதுவதில்லை.

ஏனேனில் திபெத்தோ அல்லது ஈராக்கோ அல்லது காஸ்மீரோ இவர்களை உந்தித் தள்ளுவதெல்லாம் இவர்களின் அரசியல்-பொருளாதார நலன்கள்தானேயன்றி பரந்துபட்ட மக்கள் நலன்களல்ல, உண்மையான நல்லொழுக்க கருத்துக்கள் அல்ல, மக்களின் மீதான காதல் அல்ல, மனித குலத்தின் மீதான அன்பு அல்ல. இவர்களின் இந்த அரசியல் கழிசடைத்தனத்தை, அரசியல் மலச்சிக்கலை அல்பத்தனமான சரசரப்பு காகிதங்களின் பலபலப்பில் கட்டிக் கொடுத்தால் அதுவும் மனிதாபிமானம், ஜனநாயகம், அஹிம்சை என்பது போன்ற சொல்லாடல்களின் புனித புகை எபெஃக்ட்டுகளுடன் கொடுத்தால் கேள்வி கேட்க்காமல் தின்று செரிக்க சொந்த புத்தியில்லாத தற்குறிகளாக வாசகர்கள் இருக்கும் வரை இவர்களுக்கு கவலையில்லை.

அசுரன்

Related Article:
இன்னொரு கொசோவா உருவாகிறது!

Monday, February 18, 2008

வீர முழக்கமிடும் சொறிநாயும், கிழிந்து தொங்கும் ஜனநாயக கோமணமும்!!!!

"சூரியன யார் சுட்டது?
சூரியன யாரும் சுட முடியாது சார்.... சூரிய வெப்பம்தான் நம்மள சுடும்.... "
இது பிரபலமான கவுண்டமணி பட டயலாக்.

இதே மாதிரி "சூரியன கண்டு நாய் குரைத்த மாதிரி" அப்படின்னும் ஒரு பேமஸான டயலாக்/சொலவடை மக்களிடையே வெகு காலமாக புழக்கத்தில் உள்ளதுதான்.

சமீப காலங்களில் பார்ப்பனியவாதிகளும், ஏகாதிபத்திய அடிவருடிகளும் ஜனநாயக முகமூடி போட்டுக் கொண்டு முற்போக்காளர்களை மோதவிட்டு ரத்தம் குடிக்க செய்த சதிகளும், கிருத்துவ, இஸ்லாமிய பதிவர்களை மோதவிடுவதற்க்காக முகமூடி போட்டுக் கொண்டு வேலை செய்ததும் அனானிகள் முன்னேற்ற கழகத்தாலும், தோழர் நண்பர் சம்பூகனாலும் அம்பலப்படுத்தப்பட்டன. குறிப்பாக தோழர் சம்பூகனின் அறநெறியின் பாற்பட்ட ஆக்ரோசமான வாதங்கள் தமிழ்மணி என்ற பெயரில் ஒளிந்திருந்த - தமிழ்மணத்தில் மார்க்கெட் இழந்த ஏகாதிபத்திய அடிவருடி கும்பல்/பார்ப்ப்னிய கும்பல் கூட்டணியை அம்பலப்படுத்தியது.

இன்னிலையில் இவர்களது ஒரேயொரு வாதமான ஜனநாயகம் என்பதை அவர்கள் உண்மையில் எந்த அர்த்தத்தில் சொல்கீறார்கள் என்பதையும், இன்றைக்கு ஜனநாயகம் என்று முன்னிறுத்தப்படும் மக்கள் விரோத அமைப்பின் அருகதையையும் விளக்கி அசுரனில் கட்டுரை இடும் எண்ணம் இருந்து வந்தது. அந்த தேவையை இல்லாதொழிக்கும் வகையில் ஆக்ரோசமான வெகு சில வரிகளில் சூரியனை பார்த்து குரைத்த ஒரு நாய்க்கு பதிலளிக்கும் முகமாக தோழர் சூரியன் ஜனநாயகம் என்று மக்கள் விரோத அடிவருடி குமபல் எதை சொல்கிறது என்பதனை குறிப்பிட்டுள்ளார். அந்த வரிகள் கீழே.....
__________________________________________________
நாய் இப்படி குரைத்தது:
ஜனநாயகவாதிகளே கம்யூனிச சர்வாதிகாரத்தை கொண்டு வரத்திட்டம் போடும் இந்த பயங்கரவாத கும்பலை முறியடிப்போம் இந்த்திய ஜனநாயகத்தை கட்டிக்காப்போம்.

சூரியன் இப்படி சுட்டது:
வீர முழக்கம் போடும் சொறி நாயே!!!!!!

எது உன் ஜனநாயகம், "மகாராஷ்ட்ராவில் 17,000 விவசாயிகளை கொன்று" ,

அம்பானியை 1 நொடிக்கு 40 லட்ச‌ம் சம்பாரிக்க வைத்தியே அதுவா ?

எது உன் ஜனநாயகம், "3000 முஸ்லிம் மக்கள் படுகொலையை நாங்கள் ரானா ப்ரதாப் சிங் போல் ருசித்து செய்தோம்" என்று சொன்ன RSS, BJP, BAJRANG DAL ஆகிய இந்து மத வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல்",

தன் சுய நிர்ணய உரிமைக்காக போராடும் காஷ்மிர் மக்களை பயஙகரவாதி என்கிறாயே
அதுவா ?

பதில் சொல் !

ஏன் இந்த பய பீதி!

உன் இந்து என்ற "தேவிடியா மகன்" பட்டத்தை நாங்கள் தூக்கி எரிந்து விட்டு மனிதனாக வாழ முற்பட்டால் பயங்கரவாதி !

நீ பீ அள்ளச் சொல்லி ஆனையிட கை நீட்டும் போது , தாழ்த்தப்படவன் கையை மடக்கி மேல் எழுந்தால் அவன் தீவிரவாதி !

அங்கே பார்ப்பனியம் என்ற‌ பேயை எம் உழைக்கும் மக்கள் அடித்து விரட்டுகின்றனர் !

அங்கே மன்னன் என்ற சொறி நாயை எம் உழைக்கும் மக்கள் அடித்து விரட்டுகின்றனர் !

இதெல்லாம் அம்பானிக்கும், அமெரிக்காவுக்கும் மாமா வேலை பார்க்கும் உனக்கு புரியாது !!!!!!!!!!!!!!!

__________________________________________________

Related Articles:
மக்கள் மன்றத்தின் மீது அரசு ...
இந்தியாவின் ஜனநாயகமும் - விவசாயமும் ...
விவசாயத்தின் பேரழிவும் - உயிர்ம ...
ஒரு மன்னன் மனிதனான கதை
அடிமை நாடும், போலி சுதந்திரமும்
அனானிக்கு ஒரு பதில் - அதிகார ருசி, புரட்சி, கம்யுன...
கேடு கெட்ட இந்தியா... யானை கட்டியா போரடித்தோம்?
விவசாயியும், SEZயும், அடிவருடிகளும்
மறுகாலனியாதிக்கமும், மாவீரன் பகத்சிங்கும்
இந்தியாவின் ஜனநாயகமும் - விவசாயமும், சிறு தொழில் த...
சோசலிச சமூகம் ஏன்? - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
தேசத் துரோக அடிவருடிகளும், சுதந்திர வர்த்தகமும் - ...
நவீன கிழக்கிந்திய கம்பேனிகள் - SEZ!
சோசலிசமும் - பார்ப்பினியத்தின் பொய்யுரைகளும்!
தோழர் ஸ்டாலினும், துரோகிகளும்!
ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை!
மாவோ - மானுட விடுதலையின் நம்பிக்கை ஒளி!!
நாலாவது தூண்களும், நாறும் போலி ஜனநாயகமும்!!
மக்கள் மீது மலம் கழிக்கும் நாட்டை 'பீ' காடாக்குவோம...

Friday, October 19, 2007

மாசி என்பவர் ஒரு பொய்யரா?

மாசி(Ma. Sivakumar) என்பவர் பொய்யரா அல்லது காந்தியவாதியா? என்று எனக்கு சந்தேகம் வந்ததில்லை. ஏனேனில் இந்த இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் பெரும்பாலும் இருப்பதில்லை. சமீபத்தில் மாசியினுடைய பொய்கள் இமாலயத்தை விஞ்சி செல்கின்றன.

மாசி சொல்கிறார் இந்தியா ஒரு சோசலிச நாடாக இருந்தது என்று. மாசி சொல்கிறார் கம்யுனிஸ்டுகள் மொட்டையாக பதில் சொல்லி தப்பிக்கிறார்கள் என்று.

இந்தியா ஒரு சோசலிச நாடாக இருந்ததா? அப்படி எந்த காலத்திலும் இருந்ததில்லை. ஆனாலும் கூட இன்றைய உலகமய பொருளாதாரத்தால் வளப்பமுறும் ஒரு சிறுபான்மை மக்கள் விரோத கும்பல் மட்டுமே இப்படி ஒரு பொய்யை முன் வைப்பதன் மூலம் உலகமயத்திற்க்கு புனித வட்டம் கட்டுகின்றனர்(மாசி எந்த கும்பல் என்பதை அவரே முடிவு செய்து கொள்ளட்டும்).

1947 போலி சுதந்திரத்திற்க்குப் பிறகு இந்தியா ஏகாதிபத்திய மூலதனத்திலிருந்து விடுதலை பெற்ற சோசலிசா நாடாக இருந்ததா என்றால் இல்லை. மாறாக பிரிட்டன் மற்றும் அமெரிக்க மூலதனங்கள் இங்கு முகமூடி போட்டுக் கொண்டு வேலை செய்தன அவ்வளவுதான் வித்தியாசம். சில போலச் செய்தல் பாணி சோசலிச நடவடிக்கைகள மட்டுமே இவர்கள் இந்தியாவை சோசலிச நாடு என்று சொல்ல வாய்ப்பளிக்கின்றன(எ-கா: ரேசன் கார்டு, அரசு தொழிற்சாலைகள், கோட்டா உற்பத்தி முறை, பலமான அரசு வங்கிகள் பொது நிறுவனங்கள் etc).

ஆனால் இதே காலகட்டத்தில்தான் பசுமை புரட்சி, வெண்மை புரட்சி என்ற பெயர்களில் ஏகாதிபத்திய நிறுவனங்கள் இங்கு தமது சுரண்டலை விரிவுபடுத்தத் தொடங்கின. யூனியன் கார்பைடு முதல் சுசுகி வரையான நிறுவனங்கள் இந்திய தரகு முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு தமது மூலதன சுரண்டலுக்கு அடித்தளம் அமைத்துக் கொண்டனர். தமது ஆயுதங்களை விற்க்கும் சந்தையாக இந்தியாவை வைத்துக் கொண்டனர். பசுமை புரட்சி என்ற பெயரில் இஸ்ரேல் முதலான நாடுகள் தமது ஆயுத ரசாயனங்களை பூச்சிக் கொல்லி மருந்தாகவும், உரமாகவும் விற்று மண்ணையும், நீரையும் நாசமாக்கினர். பெரிய அணைக்கட்டுகள் உள்ளிட்ட பல்வேறு தே஡ல்விகரமான(தோல்விகரமானது என்று இந்திய அரசே பல்வேறு கட்டங்களில் ஒத்துக் கொண்டுள்ளது) திட்டங்களில் மக்களின் வரிப்பணத்தை முடக்கினர். இதே காலகட்டத்தில்தான் சமூக ஏகாதிபத்தியமான ரஷ்யாவிற்க்கும், அமெரிக்காவிற்க்கும் அல்லக்கை தேசமாக இந்தியா வேலை செய்து கொண்டிருந்தது. ஆனால் தற்போதைய நிலையைப் போல அப்பட்டமாக அடிவருடித்தனம் செய்ய இந்திய அரசாலும் இயலவில்லை, அப்பட்டமாக நாட்டாமைத்தனம் செய்ய அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களாலும் இயலவில்லை என்ற ஒரே காரணம் மட்டுமே 1990 களுக்கு முந்தைய இந்தியாவை சோசலிச இந்தியாவாக கருத ஆதாரம் ஆகி஢விடாது.

இந்தியாவில் அன்னிய மூலதனம் குறித்தும், மாசி உள்ளிட்டவர்கள் பொய்களை அம்பலப்படுத்தவும் கீழே உள்ள கட்டுரை உதவும்: The Transfer of Power: Real or Formal? -- Suniti Kumar Ghosh

சோசலிசம் என்பது தனியுடைமைக்கு எதிரானது (தனியுடைமையை இல்லாதொழிக்கும் வளர்ச்சிப் போக்கு கொண்டது) மாறாக இந்திய஡வில் இவர்கள் இருந்ததாக சொல்லும் சோசலிசம் எந்த காலத்தில் தனியுடைமைக்கு எதிரானதாக இருந்தது? இந்தியாவில் சோசலிசம் இருந்ததாக சொல்லும் இந்த வருடங்களில் டாடா பிர்லா கும்பல்களேல்லாம் ஆணி பிடுங்கிக் கொண்டிருந்தார்களா? காதில் பூ சுற்றுவதற்க்கு ஒரு அளவு வேண்டாம்? ஒரு சிறிய விவசாய சீர்திருத்தம் கூட இந்த காலகட்டத்தில் நடந்து விடவில்லை என்பது ஒன்றே சோசலிசம் என்று இந்தியாவை இவர்கள் சொல்லும் பொய்க்கு ஒரு அத்தாட்சியாகும் (நில உச்ச வரம்பு சட்டமும், நிலங்களை பகிர்ந்து கொடுக்கும் திட்டமும் படு தோல்வி என்பதனை அடுத்தடுத்த ஐந்தாண்டு திட்ட அறிக்கைகளும், வேறு சில ஆய்வறிக்கைகளும் மிகத் தெளிவ஡க எடுத்துரைக்கின்றன. மேலும் விவசாய சீர்திருத்தம், விவசாயத்தில் சோசலிசம் என்ற பொய்களின் அவலம் விவசாயத்தின் தொடர் ஧தால்விகளின் மூலம் உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரியும் ஒரு உண்மை ஆகும்).

இந்தியாவில் உலகமயத்திற்க்கு முன்பு இருந்தது சோசலிச பொருளாதாரம் இல்லையெனில் அது எவ்வகையில் தற்போதைய பொருளாத஡ரத்துடன் மாறுபட்டது? இந்திய சிறு மூலதனத்தை சேகரமாக்கும் ஒரு வளர்ச்சிக் கட்டமாகவும், ஏகாதிபத்தியம் தற்காப்பு நிலையிலிருந்த பொழுது தனது இருப்பை பாதுகாக்க பயன்படுத்திய தந்திரமாகவுமே 1947க்கு பிறகான காலகட்டம் உள்ளது. மேலும் தரகு மூலதனத்தை (டாடா பிர்லா ரிலையன்ஸ் கும்பல்) வளப்படுத்துவதும், தேசிய முதலாளித்துவத்தை தேவைப்படுகின்ற அளவு வளர்த்து விடுவதும஡ன ஒரு போக்கு கொண்டதாகவே இந்த காலகட்டம் முழுவதும் இருக்கிறது. எந்த வகையிலும் சோசலிசம் என்று சொல்லிக் கொள்வதற்க்கான அடிப்படையில்லாத ஒரு பொருளாதார அமைப்பை சோசலிசம் என்று பொய்யாக சொல்வதற்க்கு மாசிக்கு சில தேவைகள் இருக்கலாம்(இருக்கலாம்..). சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நியாயப்படுத்துவதும், அதனை எதிர்ப்பவர்களை அறிவற்றவர்கள் என்பதாக கூற கருத்து அடிப்படைகளை உருவாக்குவதும், சிபொமாவின் கேடுகளுக்கு புனித வட்டம் கட்டவும் என்று பல காரணங்கள் இருக்கலாம்(இருக்கலாம்...).

சீனாவில் சிபொமா ஒரு தோல்வி என்பதை வலியுறுத்தும் பின்வரும் கட்டுரைக்களுக்கு அப்படியே மாசி விளக்க்ம கொடுத்தால் இன்னும் சிறப்பு. சீனாவில் சிபொமா கொத்தடிமை கூடாரமாக இருப்பதை அம்பலப்படுத்தி நாம் மட்டும் கட்டுரை எழுதியதாக் யாரும் எண்ணிவிட வேண்டாம். நண்பர் பத்ரி அவர்கள் கூட சிபொமா பற்றி தமிழ்மணத்தில் விவாதம் பொறி பறந்து கொண்டிருந்த பொழுது சீனாவில் அது தோல்வியடைந்த இந்த அம்சம் குறித்து கட்டுரை எழுதி கேள்வி எழுப்பியிருந்தார். சீனாவில் உலகமயத்திற்க்கு பிறகு மக்களின் போராட்டம் பல மடங்கு அதிகரித்துள்ளது என்று சீன அரசின் அறிக்கையே ஒத்துக் கொண்டுள்ளது. இத்தனைக்கும் சீனாவில் மொத்தமே 6 சிபொமாக்களோ என்னவோதான் உள்ளன. இந்தியாவில் இது வரை அனுமதி கொடுத்துள்ள சிபொமா எண்ணிக்கை 300க்கும் மேல்.

சிபொமா குறித்த பத்ரியின் கட்டுரை:

சிபொமா குறித்து அசுரனில் வந்த கட்டுரை: நவீன கிழக்கிந்திய கம்பேனிகள் - SEZ! சிபொமா குறித்த எந்தவொரு கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல், அதிலுள்ள மோசடிகள் குறித்து எந்தவொரு கேள்வியும் எழுப்பாமல், சீனாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது இங்கு ஏன் முடியவில்லை என்று மட்டும் ஆத
ங்கத்துடன் கேள்வி கேட்டுள்ளார் மாசி. ரொம்ப நோண்டி அவரிடம் கேள்விகள் கேட்டால் நான் ஏங்க அசுரன் அப்படி கேக்க போ஧றன் என்பது போல ஏதாவது மழுப்பலான பதில்களை கைவசம் எப்பொழுதும் வைத்திருக்கிறார் மாசி.

இது தவிர்த்து புஜ(புதிய ஜனநாயகம்)வில் சீனாவின் இன்றைய நிலைமைகள் குறித்து கடந்த மூன்று மாதங்களில் சில கட்டுரைகள் வந்தன. அவற்றின் மென்வடிவம் இன்னும் வலையேற்றப்படவில்லை(தமிழ்சர்க்கிள்). அந்த கட்டுரைகளிலும் சீனா உலகமயத்திற்க்கு பிறகு மக்களின் வாழ்க்கைத் தரம் படு பாதாளத்திற்க்கு சென்றுள்ளது குறித்து பல்வேறு தகவல்கள் உள்ளன.

மாசி தனது பதிவில் கம்யுனிஸ்டுகளிடம் அவரது சிபொமா குறித்த அந்த கேள்வியை கேட்டால் ஒரு நாட்டினுடைய அனுபவத்தை அப்படியே இன்னொரு நாட்டுக்கு பொருத்த முடியாது என்ற ஒற்றை பதிலை மட்டும் சொல்வதாக எழுதியுள்ளார்(கதை விட்டுள்ளார்). எந்த கம்யுனிஸ்டிடம் அவர் விவாதித்தார் என்று சொன்னால் வசதியாக இருக்கும். அல்லது இதோ இங்கு ஒரு கம்யுனிஸ்டு காத்துக் கெ஡ண்டிருக்கிறேன், சி.பொ.மா குறித்து விவாதம் செய்ய. உண்மையில் மாசிதான் எந்தவொரு விவாதத்திலும் தரவு, தர்க்க ரிதியாக ஸ்திரமாக வாதிடாமல் நழுவும் போக்கு கொண்டவர். ஒரு கருத்து சர்வாதிகாரியாக திரும்ப திரும்ப எந்த ஒரு தர்க்க அடிப்படையுமின்றி ஒரே
கருத்தை முன் வைத்து வாதிடும் போக்கு கொண்டவர் அவர். இதனை குறிப்பிட்டு அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களும், அவருடனான எமது முந்தைய விவாதங்களும் இதற்க்கு சாட்சியாக எமது தளத்திலும், அவரது தளத்தில் சில கட்டுரைகளாக கிடக்கின்றன (காந்தி மற்றும் அஹிம்ஸை குறித்தான கட்டுரைகள்).

இது தவிர்த்து அடுக்கடுக்காக பல பொய்களை சொல்லிச் செல்கிறார் மாசி. இந்திய நாடாளுமன்றத்தின் சிறப்பாம், ஜனநாயகமாம்... அதாவது சிபொமா விசயத்தில் மக்களுக்கும் அரசுக்கும் நடந்த மோதலுக்கு காரணம் இந்த அமைப்பை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்தானே தவிர்த்து மற்றபடி இந்த அமைப்பு ஜனநாயகமாகவே உள்ளது என்கிறார் மாசி. அது சரி மாசி.. சிபொமாக்கள் வருவது நின்றுவிட்டதா என்ன? மக்களின் குரல் துப்பாக்கி குண்டில் கறைந்தது மட்டுமே நடந்துள்ளது. மற்றபடி நந்திகிராமிலும், கலிங்காநகரிலும் பன்னாட்டு மூலதனம் பதுங்கு குழியில் பயந்து ஒளிந்திருப்பதிற்க்கு காரணம் மாசி சிலாகிக்கும் போலி ஜனநாயக அமைப்பு அல்ல மாற஡க அந்த குறிப்பிட்ட பகுதி மக்களின் போராட்டம் மட்டுமே காரணம். இந்த போராட்ட உணர்வும் தியாகமும் பிரிட்டிஸ் ஆட்சி செய்த
பொழுதும் இருந்த ஒன்றுதான். உடனே பிரிட்டிஸ் அரசின் ஜனநாயக சிறப்பே சிறப்பு என்று மாசி பதிவு போட்டாலும் போடுவார். அவரது நோக்கம் தனது வர்க்க நலனுக்கேற்ற சமூக அமைப்புக்கு புனிதம் பிம்பம் கட்டும் வேலை. இதே இடத்தில் சீனா குறித்த தனது அறியாமையையும் முன் வைக்கீறார் மாசி. சீனாவில் உலகமயத்திற்க்கு பிறகு மக்களின் போராட்டங்கள் பல மடங்கு அதிகரித்து விட்டன. அங்கும் பிரச்சினைகள் கருக் கொண்டு வளர ஆரம்பித்து விட்டன என்ற உண்மை எந்தளவுக்கு அவருக்கு தெரியும் என்று நமக்கு தெரியவில்லை. குறைந்த பட்சம் சீன அரசின் அதிகாரப்பூர்வ ஆண்டறிக்கைகளை வாசித்தாலே சில தெளிவுகள் கிட்டும் என்று தெரிகிறது.

இந்திய நாடாளுமன்றத்திற்க்கு ஒரு அதிகாரமும் கிடையாது என்பதுதான் உண்மை. எ-காவிற்க்கு 1990 காட்ஸ் ஒப்பந்தமும், தற்போநதய அணு ஆயுத ஒப்பந்தமும் நாடாளுமன்ற ஒப்புதல்(123-agreement - அடிமை ! அடியாள் !! ) இன்றியே நடைமுறைக்கு வந்துள்ளன(இது தவிர்த்து பல்வேறு ஒப்பந்தங்களும் கூட இதே போல). இந்த ஒப்பந்தங்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்கக் கூட நாடாளுமன்றாத்திற்க்கு அதிகாரம் இல்லை என்பது குறித்தாவது மாசிக்கு தெரியுமா? இதுதான் ஜனநாயகம். இவ்வளவுதான் ஜனநாயகம். மாறாக நாடாளுமன்ற அரசியலுக்கு வெளியே மக்கள் செய்துள்ள போராட்டங்களே இந்த அரசை பின்வாங்கச் செய்துள்ளது(சிபொமா முதல் சில்லறை வணிகம் வரை). இப்படிப்பட்ட போலி ஜனநாயகத்தை, நாடாளுமன்ற ரப்பர் ஸ்டாம்பை கேள்வி கேட்டு (அணு அயூத ஒப்பந்தம் சம்பந்தமாக) போடப்பட்ட வழக்கை விசாரிக்கக்கூட எடுக்காமல் நீதிமன்றம தள்ளுபடி செய்து விட்டது. காரணம் கேட்ட பொழுது வந்த பதில்தான் மாசி கட்டியெழுப்பும் புனித போர்வையை கிழிக்கீறது. நீதிமன்றம் சொன்னது: "வழக்கை நிராகரிக்க காரணம் சொல்லும் அவசியம் நீதிமன்றத்திற்க்கு இல்லை. வழக்குகளை எடுப்பதும் நிராகரிப்பதும் நீதிமன்றத்தின் தனிப்பட்ட விருப்பம்(discretion) சார்ந்தது". என்னே உங்கள் ஜனநாயக மான்பு!!! இதே நீதிமன்றம் பார்ப்ப்னியத்திற்க்கு ஆபத்து வந்த ஆதாம் பால பிரச்சினையிலும் சரி, உழைக்கும் மக்களை மாநகரங்களை விட்டு விரட்டியடிப்பது உள்ளிட்ட ஏகாதிபத்திய திட்டங்களிலும் சரி யாரும் கூப்பிடாமலே வந்து தனது அதிகாரத்தை வைத்து மிரட்டியுள்ளது. அரசு என்பது அரசாங்கம் என்பது வெவ்வேறு என்பதாவது மாசிக்கு தெரியுமா என்று தெரியவில்லை. இந்த அரசு தரகு அதிகார வர்க்க அரசு, அரசாங்கம் என்பது அதற்க்கான முகமூடி
அவ்வளவுதான். முகமூடியை மாற்றி/சீர்திருத்தி எந்த பிரயோசனமும் இல்லை.

அப்புறம் அவரது பொய்களிலேயே மிகப் பெரிய பொய் வருகிறது,

//முதலில் நல்ல எண்ணமும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட தலைவர்கள் அரசு கொள்கையை வகுக்கிறார்கள்.//
யாருய்யா இந்த நல்லெண்ணம் கொண்ட ஆத்மாக்கள்.... விவசாயிகள் ஒரு லட்சம் பேர் சாவதை வேடிக்கை பார்த்தவ்ரகளா? அல்லது அவர்கள் சாவுக்கு காரணமான கொள்கைகளை வகுப்பவர்களா? சில்லறை வணிகத்திலும் கூட பன்னாட்டு மூலதனத்தை நுழைத்த அயோக்கிய சிகாமணிகளா? அணு ஆயுத ஒப்பந்தம் முதல் பல்வேறு அடிமை ஒப்பந்தங்களை மக்களிடம் பொய் சொல்லிவிட்டு விமானம் ஏறிப் போய் கள்ளத்தனமாக கையெழுத்து போட்டு வந்தார்களே அவர்களா? வேதாந்த கம்பேனியின் நிர்வாகியாக நேற்று வரை இருந்த பா சிதம்பரமா? அல்லது தான் லீகல் அட்வைசராக வேலை பார்த்த என்ரான் கம்பேனிக்கு தான் நிதிஅமைச்சர் ஆனவுடன் 7000 கோடி ரூபாய் கிடைக்க வழி செய்த பா சிதம்பரமா? கங்கையை கூட்டிக் கொடுத்த வாஜ்பேயியா? ராணுவ ஒப்பந்தம் முதல் அணு ஆயுத ஒப்பந்தம் வரை மக்களிடமும், நாடாளூமன்றத்திடமும் பொய் சொல்லி கையெழுத்திட்டு வந்த மன்மோகன் சிங் உள்ளிட்ட அடிய஡ள் கும்பலா? கேள்வி கேட்க்க கூட பணம் வாங்கிய புண்ணியாத்மாக்களா? ஹவாலா முதல் பல்வேறு கொலை கொள்ளை மாபியா வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 80% மேலான நாடாளுமன்ற உறுப்பினர்களா? அல்லது இத்தனைக்கும் பிறகும் நாடாளுமன்ற மாண்பு காக்கும் சோம்நாத் சேட்டர்ஜியா?

ஏன் மாசி இந்தளவுக்கு தரம்தாழ்ந்து போய்விட்டீர்கள் என்று கேட்க்க மாட்டேன். பூனைக்குட்டி வெளிவந்துவிட்டது என்று வேண்டுமானல் சொல்வேன்.

//நாடாளுமன்றத்தில் பொருளாதார மண்டலம் குறித்த விவாதத்தின் போது எதிர்கட்சிகள் வேறு ஏதாவது தலைப்புச் செய்தியை உருவாக்கும் கலாட்டாவில் இறங்கி மசோதாவை அலசலின்றி நிறைவேற விட்டிருக்கலாம்.//

இப்படி தமது சகோதரர்கள் மீது பலி விழுந்து விடக் கூடாது என்பதற்க்காக யூகங்கள் வேறு. உண்மையில் நாடாளுமன்றத்தில் மாமா வேலை பார்த்துக் கொண்டிருக்கும் யாருக்கும் சிபொமா குறித்து கருத்து வேறுபாடே கிடையாது. அதனால் விவாதமும் தேவைப்படவில்லை. இன்னும் சொன்னால் காட்ஸ் ஒப்பந்தம் முதல் இறக்குமதி சலுகைகள், விவசாய விதை நெல் சீர்திருத்த சட்டம், தண்ணீர் தனியார்மயம் முதலான எந்தவொரு மக்கள் விரோத திட்டமும், உலகமயத் திட்டமும் நாடாளுமன்றத்தில் விவாதம் செய்யப்படவில்லை. செய்ய வேண்டிய தேவை நாடாளுமன்றத்தை அலங்கரிக்கும் மாசியின் ஆதரவு பெற்ற நல்லொழுக்க சீலர்களுக்கும் கிடையாது. அவர்களின் சொந்த சம்பாத்தியம் மற்றும் அதிகார பகிர்வு குறித்த கட்டபஞ்சாயத்து கூடமாகவும், வோட்டு பொறுக்கி சில்லறை நாடக அரங்கமாகவும், அரட்டைமடமாகவுமே இருக்கும் அளவு மட்டுமே அதிகாரம் பெற்ற ஒரு அமைப்பு குறித்துதான் மாசி சிலாகிக்கிறார்.


அசுரன்

Tuesday, June 12, 2007

மக்கள் மீது மலம் கழிக்கும் நாட்டை 'பீ' காடாக்குவோம்!

ங்க நாற்க்கர சாலைகள் என்ன?, பட்டன் அளவே உள்ள கைத் தொலைபேசிகள் என்ன? வித விதமாய் ஆடைகள், ஆங்கில படங்களுக்கு நிகராக தமிழகத்திலேயே வாழ்க்கை நடத்த பன்னாட்டு கம்பேனிகள் வீட்டு வாசலில் வந்து நமது உச்சி முகர்ந்து கொஞ்சி கூத்தாடும் அற்புதம் என்ன? என்னே இந்த இந்தியாவின் வளர்ச்சி பாரீர்.

ஆனால் இதே இந்தியாவில் மிகப் பெரும்பான்மை மக்கள்(30% மேல்) 12ரூபாய் காசில் தின வாழ்க்கையை ஓட்டும் அவலமும் நடக்கிறது. இதே இந்தியாவில்தான் காலையில் மலம் கழிக்க இடமின்றி மக்கள் அல்லலுறும் அவலமும் நடந்தேறுகிறது.

அட நீ ஒன்னு, அவிங்கள்ளாம் கொழுப்பெடுத்தவனுங்க, காலைக் கடன்களை ரோட்டிலேயே இருப்பானுங்க இன் டீசண்ட் ஃபேலோஸ் - இப்படி ஒரு அல்பை அலுத்துக் கொள்வது காதில் கேட்க்காமலில்லை. ஆமாம் கிராமங்களில் அவர்களது வாழ்க்கையை தொலைத்த அவ்ர்கள் இன் டீசண்ட் ஃபேலோஸ்தான், வாழ்வுரிமை பறிக்கப்பட்ட இந்த பெரும் பட்டாளத்தை குறைந்த கூலிக்கு நகரங்களில் சுரண்டி தின்க்கும் நடுத்தர மற்றும், உயர் வர்க்கமோ டீசண்டொ டீசண்ட்.... தூ..... உண்மையில் காலை மலத்தின் அதி அற்புத மணத்தை விட இவர்களின் இந்த பிழைப்புவாத கள்ளமௌனமும், நாகரிகம் குறித்த பொய் நடிப்புகளுமே ஆகக் கேவலமாக மூக்கையடைக்கிறது.

இந்த பெரும்பான்மை மக்களின் அடிப்படை உரிமைகளை வெறுமே பிரச்சாரம் செய்து சொன்னால் அவர்களை சுரண்டுபவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? இப்படித்தான் ஒரு காந்திய கற்பனாவாதி சொல்லிக் கொண்டிருக்கிறார். உண்மையில அவரது சித்தாந்தத்தில் அவருக்கே நம்பிக்கை கிடையாது ஆயினும் ஒவ்வொருவருக்கும் தன்னை பற்றி ஒரு பிம்பத்தை உருவாக்கி பராமரிக்கும் நிர்பந்தம் உள்ளதல்லவா? நம்ம கற்பனாவாதிக்கும் அந்த அளவில் காந்தி தேவைப்படுகிறார் போலும். துரதிருஷ்டவசமாக காந்தியே இந்த விசயத்தில் படு கயமைத்தனமானவர். இப்படி பிரச்சாரம் செய்து அடக்கும் வர்க்கத்தை திருத்தி சமனிலை உருவாக்கலாம் என்று இவர் போன்றவர்கள் ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் மக்கள் தங்கள்து உரிமைகளை தாங்களே மீட்டெடுக்கும் போராட்ட வழிமுறைகளை இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் பரிசோதிக்கத் துவங்கியுள்ளனர்.

SEZக்களுக்கு எதிரான போராட்டங்கள் - வட கர்நாடக, புதுச் சேரி, சென்னை, பஞ்சாப், ராஜஸ்தான், நந்திகிராம், சிங்கூர் என்று பற்றிப் பரவுகிறது, சில்லறை வியாபாரி ரிலையன்ஸ் அம்பானி போலிஸ் பாதுகாப்புடன் தான் கடை நடத்த வேண்டும் என்ற நிலை ராஞ்சியில், பெருத்து தடித்து கொழுத்த ஊடகங்களோ அய்யரின் ஆசன வாயில் இருந்து வரும் வளிக்கு கொடுக்கும் முதற் பக்க முன்னுரிமையை மறந்தும் கூட இது போன்ற மக்கள் திரள் போராட்டங்களூக்கு கொடுப்பதில்லை. இதே போன்றதோரு போர்க்குணமிக்க போராட்டம் சமீபத்தில் கோயெம்பேடை ஒட்டியுள்ள மதுரவாயல் நகராட்சி பகுதியில் நடந்தது.

போபால் விசவாயு நடந்து வருசம் பல ஆகி விட்டது கற்பனாவாத போராட்டங்களை நடத்தி கண்ட பலன் ஒன்றுமில்லை. அதே விசவாயு குரூப் மேற்கு வங்கத்தில் Dow Chemicals என்ற பெயரில் மீண்டும் கடை பரப்பும் அவலம் தவிர. நர்மதா போராட்டம்... அடேங்கப்பா எத்தனை கவர்ச்சிகரமான போராட்டம் அது. பிருமாண்டமான பின்னனியுடன் அதனால் சாதிக்க முடிந்தது எல்லாம் ஒரு தேசிய விவாதத்தை எழுப்பியதை மட்டுமே. தேசிய விவாதஙகள் எழுவது என்ன புதிய விசயமா என்ன? பெண்களை கள்ள பாஸ்போர்ர்டில் கடத்தியோ, நாடாளூமன்றத்தில் பேசுவதற்க்கு துட்டு வாங்கியோ சுலபமான பல வழிகளில் தேசிய விவாதத்தை கிளப்பலாம். மணிப்பூரின் விடுதலைக்காக 6 வருடங்களாக உண்ணாவிரதம் இருந்து கண்ட பலன் மதிய இடைவேளியில் வயிறு முட்ட உண்ட பிற்பாடு ஒரு சுகமான ஏப்பாத்திற்க்கு பிற்பாடு வெளி வந்த ச்சோ... ச்சோ.. மட்டுமே.

அருந்ததிராய் சொல்கிறார்: "வன்முறையற்ற போராட்டங்களுக்கான முயற்சிகள் ஒவ்வொன்றின் மீதும் இந்த அரசு தனது கதவுகளை அறைந்து சாத்திவிட்டது. மக்கள் இப்பொழுது அதிகமாக துப்பாக்கிகளை நாடுகிறார்கள்"

மதுரவாயல் மக்களுக்கும் கூட இதே அனுபவம்தான். அருந்ததிராய் இங்கு துப்பாக்கி என்று சொல்வதை ஒரு குறீயீடாக எடுத்துக் கொள்ளலாம். அதாவது இந்த அரசு நமக்கான அரசு அல்ல என்பதை புரிந்து கொண்டு மக்கள் அதற்கேற்ப போராட்ட வடிவங்களை தீர்மானிக்கும் தன்மையை குறிப்பதாக கொள்ளலாம். மதுரவாயல் மக்களும் பல முறை முயன்ற பிற்ப்பாடு தங்களது போராட்ட முறைகளை மாற்றினர். கோரிக்கை வைத்து பலனில்லை. தாம் அனுபவிக்கும் துன்பம் என்னவென்பதை மணக்க மணக்க சம்பந்தப்பட்ட அரசுக்கு புரியவைப்பதே ஒரே வழி என்று தீர்மானித்து முள்ளை முள்ளால் - வன்முறையை வன்முறையால் ஈடுகட்ட களமிறங்கினர்.

மதுரவாயல் நகராட்சி அலுவலகத்தையே தமது தற்காலிக கழிவறையாக்க தீர்மானித்து ஒரு நல்ல நாளில் நகராட்சி அலுவலகத்தில் மலம் கழிக்கும் போராட்டத்தை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் நடத்தத் தீர்மானித்தனர். விசயம் கேள்விப்பட்ட அரசு நிர்வாகிகள் நிலையை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. காலையில் ஒருவர் உள்ளே போய் 'வெளியே' வந்த பிற்பாடு அடுத்த ஆள் உள்ளே போவதற்கே பல்வேறு சுவாசப் பிரச்சனைகளை சந்திக்கும் அவர்களுக்கு நாள் முழுவதும் ஒரு கழிப்பறையில் உட்கார்ந்து வேலை பார்ப்பது என்ற விசயம் கனவில் கூட கற்பனை செய்து பார்க்க முடியாத கோடுரமே. தமது மூக்கை பாதுகாக்கும் குறைந்த பட்ச தேவையை முன்னிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க முனைந்துள்ளது அரசு நிர்வாகம். அழுத குழந்தை பால் குடிக்கும் - லட்சம் விவசாயிகளின் தற்கொலை சாவு ஒரு டீக்கடை உரையாடலுக்கான தகுதியைக் கூட இழந்த அவலமும், 12 நந்திகிராம் மற்றும் ஒரிஸ்ஸா கலிங்காநகர் போராளிகளின் தியாகம் நாட்டையே உலுக்கி மக்கள் விரோத திட்டங்களை ஓட ஓட விரட்டிய அற்புதமும் நம் கண் முன்னே காணக் கிடக்கிறது. மலத்தை விசிறியடிக்கும் இந்த போராட்டமும் கூட இரண்டாம் வகையீனமே. அரசு, கலாச்சார நிறுவனங்களும் பல நுண்ணிய தளங்களீல் மக்கள் மீது வன்முறை செலுத்துகிறது எனில் மக்களின் எதிர் நடவடிக்கையும் அதற்க்கிடான நுண்ணிய தளங்களில் எதிர்வன்முறை செலுத்தும் வகையிலே அமைந்து விடுகிறது.

இரங்கிக் கேட்டு இதுவரை இந்த நாட்டாமை அரசும் நமது குரலுக்கு செவிமடுத்ததாக வரலாறு இல்லை. இதோ மதுரவாயல் மக்கள் மீண்டும் நமக்கு சொல்லித் தருகிறார்கள் - இந்த அரசுக்கு எப்படி லாடம் கட்டுவது என்று. ஜனநாயகம், நாகரிகம் என்று வழக்கம் போல ஏமாந்த சோனகிரி அல்பவாதிகள் புனிதங்களின் போதையில் மயங்கிக் கிடக்கட்டும். நாம் அநீதிகளை கண்ட இடத்திலேயே பொசுக்கும் மன வலிமை கொண்டு இயங்க வேண்டிய காலங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன.

அசுரன்

பின்னுட்டத்தில் இது குறித்து செய்தி கொடுத்த அனானிக்கு நன்றி!

கழிவறை கட்டித்தர வக்கில்லாத மதுரவாயல் நகராட்சியை மலக்காடாக்குவோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

சென்னை மாநகரத்தின் நுழைவு வாயில்களில் ஒன்றான கோயம்பேட்டின் அருகில் உள்ளது மதுரவாயல் நகராட்சி. இந்த நகராட்சியின் 2 - வது வார்டுதான் பிள்ளையார் கோவில் தெரு பகுதி. இப்பகுதியில் கடந்த 25 வருடங்களாக எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் சுமார் 2000 குடும்பங்கள் வசித்து வருகின்றன. குறிப்பாக மனித கழிவுகளை வெளியேற்றுவதற்கு கக்கூசு (கழிவறை) கூட இல்லாதது, இப்பகுதி அவலத்தின் உச்சம்.

ஒரு வீடோ , அலுவலகமோ கட்டும்போது அங்கு முதலில் அமைப்பது குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள்தான். இதை நகராட்சி விதிமுறைகள் கூட கூறுகின்றன. ஆனால் வரிவசூல் மூலம் கொள்ளையடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள இப்பகுதி நகராட்சியோ உழைக்கும் மக்களின் அடிப்படை வசதிகளைப்பற்றிக் கண்டு கொள்வதே இல்லை.

கடந்த 2003 ஆம் வருடத்திலிருந்து இலவச கழிவறை கட்டித்தர வேண்டுமென்று பலமுறை நகராட்சித் தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது. பகுதி மக்களுடன் நேரில் சென்று கோரிக்கையும் வைக்கப்பட்டது. ஆனால் பலன் ஒன்றும் இல்லை.

ஒருபுறம் உழைக்கும் மக்கள் பிரச்சினையை மயிருக்குச் சமமாக நினைக்கும் மதுரவாயல் நகராட்சி, மனுக்களையும், கோரிக்கைகளையும் குப்பையில் வீசி எறிந்து விட்டது. மறுபுறம், அருகிலுள்ள V.G.P. குடியிருப்பு, 'மேட்டுக்குடி' முதலாளிகளுக்கு காற்று வாங்கவும், உடற்பயிற்சி செய்யவும், அழகிய பூங்காவை அவர்கள் கேட்காமலேயே அமைத்துக் கொடுத்து வர்க்க பாசத்தோடு நடந்து கொள்கிறது.

இப்படிப்பட்ட ஆட்சியாளர்களின் தடித்த தோலுக்கு உறைக்கும் வகையில்தான் 2004-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மலம் கழிக்கும் போராட்டத்தை அறிவித்தோம். அறிவிப்பைக்கண்டு அரண்டு போன நகராட்சித் தலைவர் 6 மாதத்தில் கழிவறை கட்டித் தருவதாக உறுதியளித்தார். காலம் ஓடியது, தேர்தலும் நடந்தது, நகராட்சித் தலைவரும் மாறினார். ஆனால், இப்பகுதியில் அவலம் மட்டும் இன்னும் மாறவே இல்லை.

இதற்கெல்லாம் காரணம் என்ன?

சாலைகளை அகலப்படுத்த வேண்டுமென்றால் யாரையும் கேட்காமலேயே சாலை ஓரத்திலுள்ள வீடு, கடைகளை இடித்து தேவையான இடத்தை எடுத்துக்கொள்ளும் நகராட்சிக்கு பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் கழிவறை கட்ட மட்டும் இடம் இல்லையா? மக்களிடம் கட்டாயமாக வரி வசூலித்து சம்பளம், கார், டெலிபோன் வசதி, நகராட்சி கூட்ட செலவு என்று மக்கள் பணத்தை லட்சக்கணக்கில் வீணடிக்கும் நகராட்சியில் பணம்தான் இல்லையா? இதுவல்ல காரணம்.

உண்மை என்ன தெரியுமா?

தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற நாசகார கொள்கைகளை ஏற்றுக் கொண்டு, 'காட்ஸ்' என்ற ஒப்பந்தத்தை அனைத்து ஓட்டுக் கட்சிகளும் கொண்டு வருகின்றன. அதனால்தான் கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இன்று நம் போற உழைக்கும் மக்களுக்கு மறுக்கப்படுகின்றன. சேவைகள் அனைத்தும் லாபகரமான தொழிலாக மாற்றப்பட்டு வருகின்றன.

எனவேதான் இந்த அரசுகள் நகராட்சிகள் மூலம் கழிவறை கட்டுவதற்கான நிதி ஒதுக்கீட்டை படிப்படியாகக் குறைக்கின்றன. சுலாப் இண்டர்நேஷனல் என்ற கட்டணக் கழிப்பறைகளை அனுமதிக்கின்றன. எனவே ஆட்சியாளர்களின் பொய் வாக்குறுதிகளை நம்புவதில் பயன் இல்லை. வீதியில் இறங்கி போராடினால் மட்டுமே நமது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும்.

அத்தகைய போராட்டங்களால் மட்டுமே ஆட்சியாளர்களை பணிய வைக்கவும் முடியும் என்பதற்கு நமது பகுதிக்கு அருகிலுள்ள பாடிக்குப்பம் மக்கள் தொடர்ச்சியாகப் போராடி இலவச கழிவறை பெற்றுள்ளது முன்னுதாரணமாகும். அவர்கள் வழியில் நாமும் உறுதியாகப் போராடுவோம். கோரிக்கையை வென்றெடுப்போம். நிறுத்தி வைத்த மலம் கழிக்கும் போராட்டத்தை நடத்திடுவோம். "நம்முடைய வேதனைகள் நகராட்சிக்குத் தெரிய வேண்டுமென்றால் அதை அவர்களும் அனுபவிக்க வேண்டும்" என்ற வகையில் மதுரவாயல் நகராட்சி அலுவலகத்தைப் "பீ"க் காடாக்குவோம்!

மலம் கழிக்கும் போராட்டம்

04-06-2007
காலை 5.30 மணி மதுரவாயல் நகராட்சி அலுவலகம்

RSYF புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சென்னை.

தொடர்புக்கு
வ.கார்த்திகேயன் நெ.1 பிள்ளையார் கோவில் தெரு, மதுர வாயல் சென்னை-95 செல்: 944516625

Thursday, February 15, 2007

இந்தியாவின் ஜனநாயகமும் - விவசாயமும், சிறு தொழில் துறையும்

ந்திய அரசு தனது வர்க்க சார்பை விட முடியாமல் தவிக்கிறது. விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பான துறை என்பதை யாராலும் மறுக்க இயலாது. இதனை முன்னிட்டுதான் விவசாயத்தில் குறைந்த பட்ச GDP வளர்ச்சியில்லையெனில் இந்தியாவின் GDP இலக்கை அடைய முடியாது என்று அலறுகிறார்கள் பா. சி., மண்டேக் சிங் அலுவாலியா முதலான அமெரிக்க புரோக்கர்கள்.
ஆயினும், இந்த அலறலை மக்கள் மீதான அன்பால் ஏற்ப்பட்ட அலறல் என்று யாரும் தவறாக எண்ணிவிட வேண்டாம். ஏனெனில் உண்மையில் இந்திய விவசாயத்தை வளர்க்க அதில் முதலாளித்துவ பாணி உற்பத்தி முறைகளை கொண்டு வர வேண்டும். ஆனால் இதனை செய்யும் தைரியமும், தனது சொந்த வர்க்கங்களுக்கு துரோகம் செய்யும் நெஞ்சுரமும் இந்த கைக்கூலிகளுக்கு இல்லை.

முதலில், அது என்ன முதலாளித்துவ பாணி உற்பத்தி முறை?

மிகப் பெரிய அளவில், ஒரே இடத்தில், மையப்படுத்தப்பட்ட முறையில் நவீன கருவிகள் உதவியுடன், பெரும் எண்ணிக்கையில் விஞ்ஞான முறைகளின் துணையுடன் செய்யப்படும் உற்பத்தி முறைதான் முதலாளித்துவ உற்பத்தி முறை. இதனை மேலைநாடுகளில் பார்த்திருக்கலாம். பல லட்சம் ஏக்கருக்கு ஒரே ஒரு பயிர்தான். விமானம் மூலம் உரம்-பூச்சி மருந்துகள், நீர் பாய்ச்சுவது மையப்படுத்தப்பட்டிருக்கும், ஒரு குறிப்பிட்ட பெரிய சந்தையை மனதில் கொண்டு திட்டமிடப்பட்ட உற்பத்தி, அதி நவீன ராட்சச யந்திரங்கள் மூலம் அறுவடை. இப்படி ஒரு தொழிற்சாலை போலவே அங்கு விவசாயம் நடைபெறுகிறது. இன்னும் சொன்னால் அங்கு விவசாய முதலாளியும், தொழிலாளியும்தான் உண்டு. விவசாயியோ அல்லது நிலபிரபுவோ கிடையாது.

ஆனால் இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் பின்னிபிணைந்துள்ள விவசாயமோ இன்னும் சிதறிய சிறுவீத உற்பத்தி எனும் நிலபிரபுத்துவ முறையையே பின்பற்றி வருகிறது. அதிலிருந்து மேலேறி அடுத்தக் கட்டத்திற்கு வரவிடாமல் இந்தியாவின் பொருளாதாரம் ஏகாதிபத்திய முடக்கு வாதத்தால் அவதியுறுகிறது. இதைத்தான் நாம் அரைக்காலனியம், அரை நிலபிரபுத்துவம் என்கிறோம்.

ஏன் இந்திய அரசால் விவசாயத்தை வளர்க்க முடியவில்லை:

விவசாயத்தை அடுத்தக் கட்டத்திற்க்கு கொண்டு வரும் முயற்சிகள் பெரும் நிலவுடமையாளர்களுக்கும், விவசாய உற்பத்தி பொருட்களின் விற்பனை பிரிவு, சந்தை பிரிவுகளில் ஆதிக்கம் செலுத்தும் புரோக்கர் கும்பல்களுக்கு பெரும் ஆபத்தாக இருக்கும் என்பதால்தான் இந்த அரசு அத்தகைய நிலச் சீர்திருத்தம், விவசாய சீர்திருத்த நடவடிக்கைகளை செய்வதில்லை. இது பிரச்சனையின் ஒரு அம்சம் மட்டுமே.

இன்னொரு முக்கிய அம்சம் ஏகாதிபத்தியத்தின் சந்தை தேவையையும், மூல வளங்களின் தேவையையும் நிவர்த்தி செய்யும் ஒரு இழிச்சவாய நாடு என்று முத்திரையை இந்தியாவிற்க்கு தொடர்ந்து குத்துவதில் உள்ள ஆர்வம். இந்த அம்சம் மிக குறிப்பாக உலகமயத்திற்க்கு பிறகு பெரும் முக்கியத்துவம் பெருகிறது.
ஏனேனில், உலகமயத்திற்க்கு பிற்ப்பாடு மேலே சொன்ன முதல் அம்சமான - நிலவுடைமையாளர் மற்றும் விற்பனை மற்றும் சந்தை பிரிவுகளும் கூட MNC, தரகு முதலாளிகளுக்கு திறந்து விடப் படுவதுதான்.

இந்திய விவசாயத்தை இப்படி அரை நிலபிரபுத்துவமாக வைத்திருப்பதில் ஏகாதிபத்திய நாடுகளுக்கு என்ன அரசியல் இருக்க முடியும்?

மூன்று நோக்கங்கள்,

#1) குறை கூலி மனித வளம்:
குறைந்த கூலிக்கு, சொன்னதை அடிமை போலச் செய்யும் உழைப்பாளர்களை தொடர்ந்து உருவாக்கி(பெற்றெடுத்து வளர்த்து) செய்வதற்க்கு கிராம உற்பத்தி உறவுகளை நிரந்தரமாக பாதுகாப்பது அவசியம். இது குறித்து இந்த கட்டுரையில் 'இந்த பாணி உற்பத்தி முறையின் விளைவு என்ன?' என்ற தலைப்பின் கீழ் ஓரளவு விளக்கியுள்ளேன்.

இந்த பாணி உற்பத்தி முறை எப்படி அவனுக்கு குறைந்த கூலி ஆட்களை பெற்றெடுக்கிறது,

விவசாயத்தை சுதாட்டம் போல மாற்றி, விவசாயியை நிலத்தை விட்டு ஒரு பக்கம் விரட்டுகிறது இந்த பொருளாதாரம். இதன் மூலம் நகரங்களில் குறைந்த கூலிக்கு சுரண்ட தொடர்ந்து மனித வளம் கிடைப்பதை உத்திரவாதப்படுத்துகிறது. இன்னொரு பக்கம் அவனது வாழ்வை நகரங்களில் உத்திரவாதப்படுத்தாமல் கிராமம் பாதி நகரம் பாதி என்று அவனை அலைக்கழிக்கிறது. இதன் மூலம் அவன் நகரத்தில் குறை கூலிக்கு சம்பாதித்து அதை கிராமத்தில் மீண்டும் முதலிடுகிறான். அந்த முதலீட்டில் உற்பத்தியாகும் விவசாய பொருளை மிக குறை கூலிக்கு இந்த சமுகமே நுகர்கிறது. இங்கு கிராம நகர(Cost of Living) வேறுபாடு கிராமத்து கூலி தொழிலாளியை எப்படி ட்புள் சுரண்டலுக்கு உட்படுத்துகிறது என்பது புலனாகும். நகரத்திலோ அவனை தற்காலிக தொழிலாளியாக சிறு அளவிலும், சிறு பட்டறைகளில், கட்டுமான இடங்கள், ஹோட்டல் முதலான இடங்களில் உதிரி தொழிலாளியாக பெரும் எண்ணிக்கையிலும் வைத்து சுரண்டுகிறது. அவனை ஜனநாயகப்படுத்தாமல் மிக கவனமாக இந்த சமூக அமைப்பு கையாளுகிறது.


#2) மலிவு விலை மூல வளங்களும், மலிவு விலை சந்தைக்கான உற்பத்தி பொருட்களும்:

அ) சிறுவீத உற்பத்திகளான பட்டறை முதலாளிகளின் வளர்ச்சியை தடுப்பது. திருப்பூர் பனியன் பட்டறை முதலாளியால் திருப்பூரை தாண்டி சென்று விட முடியாது ஏனேனில் சந்தை ஒரு MNC கையிலோ அல்லது தரகு முதலாளி கையிலோ உள்ளது, இதன் மூலம் அவை காலாகாலத்தும் MNC, தரகு கம்பேனிகளுக்கு உற்பத்தி செய்யும் ஒரு தொங்கு சதையாகவே தேங்கி விடுவது.
சிறு முதலாளி, சுதந்திரமான தனது சந்தைகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டு, இன்று MNC, தரகு கம்பேனிகளிடம் தமது பொருளை விற்க்கிறான். ஒரு விவசாயியின் நிலையைப் போலவே அவனும் தான் உற்பத்தி செய்யும் பொருளுக்கு விலை வைக்க வக்கின்றி இருக்கிறான். ஏனேனில் உற்பத்தி நடந்தால்தான் அவனுக்கு சோறு, உற்பத்திக்கு MNCயும், தரகு முதலாளியும் காண்ட்ராக்ட் தர வேண்டும், அப்படி அவன் காண்ட்ராக்ட் தருவதற்க்கு அவன் சொன்ன விலைக்கு விற்க்க தயாராக இருக்க வேண்டும். இந்த கந்து வட்டி போன்ற விசச் சூழல் மலிவு விலையில் MNC, தரகு முதலாளிகளுக்கு சந்தைக்கான பண்டங்களை உற்பத்தி செய்து கொடுக்கிறது. இது ஓரளவு IT தொழிலாளிக்கும் பொருந்தும்.
ஆ) விவசாயத்தின் நவீன உற்பத்தி முறைகளை தடுப்பது - அதாவது பெரும் விவசாய கூட்டுப் பண்ணைகள், மையப்படுத்தப்பட்ட சந்தை, மையப்படுத்தப்பட்ட விவசாய உற்பத்திக்கான திட்டம் போன்றவற்றை தடுப்பது - இதன் மூலம் சிறுவீத உற்பத்தி மூறையால்(Ex: காண்ட்ராக்ட் Farming) தொடர்ந்து தனது தேவைகளுக்கு மட்டும் இந்திய விவசாயம் சேவை செய்வதை நிரந்தரமாக்குவது.
இதற்க்கு உதாரணம்தான் பூ விவசாயம், இறால் பண்ணைகள் etc. லாபம் எந்த பொருளுக்கு உள்ளது என்பதை அவன் நிர்னயிப்பதன் மூலம் அதனை நாம் உற்பத்தி செய்ய வைக்கிறான். சில மடையர்கள் லாபம் என்பதனை மட்டும் பார்த்து இந்த அடிமை விசச் சூழலை வளர்ச்சி என்கிறார்கள். ந்மது தேவைக்கு உற்பத்தி செய்வதை விடுத்து அவனது சந்தை தேவைக்கு உற்பத்தி செய்வதன் மூலம் பாரம்பரியமான நமது சுயசார்பு பொருளாதார வலைப்பின்னல் சின்னாபின்னமாகிவிட்டது. இந்தியாவின் சுயசார்பை இப்படி அடித்து நொறுக்குவதன் மூலம், அந்த சந்தையையும் அவனே கைப்பற்றிக் கொள்வது(கோதுமை பிரச்சனை).

#3) சந்தை:
சுயசார்பை உடைத்தெறிவதன் மூலமும், இந்திய தொழில் துறையின் வளர்ச்சி என்பது தனது வளர்ச்சியாக மட்டுமே இருக்கமாறும் பார்த்துக் கொள்வதன் மூலமும் இந்த பெரிய சந்தையை தன் இஸ்டம் போல சுரண்டுவது.
(எ-கா: பசுமைப் புரட்சி காலத்தில் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தமது காலவதியான ஆயுத மருந்துகளை பூச்சிக் கொல்லியாக உரமாக கொடுத்தது, தற்போதைய BT விதைகள், விதை நெல் சீர்திருத்தம், ரீட்டையல் பிசினெஸில் FDI, சுதந்திரம் அடைந்த குறுகிய காலத்திலேயே அம்பலமான 'கோக்'கின் ஆதிக்கம், பேட்டண்ட்ஸ் ரைட்ஸ் மூலம் மருந்து சந்தைய முழுமையாக கபளீகரம் செய்துவிட்டது etc).

ஆக,
மலிவு விலையில் கூலி,
மலிவு விலையில் வளங்கள்,
மலிவு விலையில் உற்பத்திப் பொருட்கள்,
உற்பத்தியின் ஒரு பெரும் பகுதியையும் கூட சிறு முதலாளி எனும் இழிச்சவாயனும், விவசாயியும் பார்த்துக் கொள்வது,

இவையெல்லாம் போக அவன் எதை உற்பத்தி செய்தாலும் வாங்கிக் கொள்ள அவனது வர்க்கத்தின் ஆதிக்கம் மட்டுமே உள்ள மிகப் பெரிய சந்தை. இவற்றை மீறி அவனுக்கு உள்ள பிரச்சனையெல்லாம் அவனிடையே உள்ள போட்டி போறாமைதான். இத்தனை சாதகங்கள் இருந்து வெற்றி பெருவதை வெற்றி என்று நாராயன்களும், அல்பை ஆசீமும் பெருமையாகச் சொல்வது நகைப்பிற்கிடமாகவும், உண்மையான சாதனையாளர்களை கிண்டல் செய்வதாகவும் உள்ளது.

ஆக, நாம் உற்பத்தி செய்யும் பொருளை அவன் வந்து இஸ்டம் போல விலை வைத்து வாங்கிச் செல்ல வாய்ப்பார்த்து காத்துக் கொண்டிருப்போம், அதே நேரத்தில் நமக்கு தேவையான பொருளை அவன் இஸ்டம் போல விலை வைத்து விற்று செல்வதையும் நாம் வாய் பார்த்துக் கொண்டிருப்போம்.
இதனைத்தான் நாம் இழிச்சவாயத்தனம் என்போம். சில, தொந்தி வளர்க்கும் அடிமைகள் இதனை வளர்ச்சி, வல்லரசு என்றும் சொல்லுவர். இந்த மேற்சொன்ன சூழல்தான் இன்று நிலவுகிறது. ஒரு பக்கம் கோதுமையை அவன் கேட்ட விலைக்கு விற்று இழிச்சவாயர்களான விவசாயிகள், இன்னொரு பக்கம் கோதுமை விலை ஆறு மாதத்தில் ஆறு ரூபாய் ஏறி நாம் அவனை வாய் பார்த்துக் கொண்டிருப்பது. இந்த சூழல் இன்னும் வெகு துலக்கமான வடிவத்தை பெறவில்லை ஆயினும் அப்படி வரும் வரை காத்திருக்க வேண்டும் எனும் முட்டாள்களுக்காக இந்த பதிவு அல்ல.

இந்த மூன்று காரணத்திற்க்காத்தான் சிதறிய சிறுவீத கிராம விவசாய உற்பத்தி முறையையும், சிறு தொழில் பட்டறை முறையையும் இந்த ஆளும் வர்க்கம் பேணி பாதுகாக்கிறது. ஒரு வேளை விவசாயத் துறையிலொ அல்லது சிறு தொழில் துறையிலோ செய்யப்படும் எந்த மாற்றமும் இந்த மூன்று காரணங்களுக்கு குந்தகம் வாராத வடிவத்திலேயே நடைபெறும். எடுத்துக்காட்டுகள்: காண்ட்ராக்ட் விவசாயம், ஊக வணீகத்தில் விவசாய பொருட்கள், சிறு தொழில் துறையின் வளர்ச்சி.


இந்த பாணி உற்பத்தி முறையின் விளைவு என்ன?

பெரும்பான்மை மக்கள் இத்தகைய சிதறிய சிறு வீத உற்பத்தி முறையிலேயே, வளர்ச்சியின்றி தலைமுறை தலைமுறையாக பினைந்திருப்பது ஒரு சமூகத்தின் ஒட்டு மொத்த அறிவு, பண்பாட்டு வளர்ச்சியை தடுக்கிறது.
அவனை ஜனநாயகமில்லாதவனாகவே வைத்து சுரண்டுகிறது. இதன் பொருளாதார அம்சம் - அந்த சமூகத்தில் மிக பெரும் தொழில்புரட்சி என்றுமே நடந்து விட விடாமல் செய்கிறது.

ரோட்டில் எச்சில் துப்புவது, ஒன்னுக்கடிப்பது, சிக்னலை மதிக்காமல் அவனவன் இஸ்டம் போல நடந்து கொள்வது, சிறு பட்டறை முதலாளியின் வீட்டு வேலைகளையும் சேர்த்தே செய்வது, போலிஸ், நீதிபதி இவர்கள் எல்லாம் ஏதோ வானத்து தேவர்கள் போல நடந்து கொள்வதும் சாதாரண கிராமத்து ஏழை அவர்களுக்கு அது போன்றே மரியாதை கொடுப்பது - இவை எல்லாம் ஜனநாயகமின்மையின் அறிகுறிதான். சமூகம் எனபது சக மனிதர்கள் இயைந்து பழகும் ஒரு அமைப்பு, இதில் அனைவருக்கும் உரிமை, பொறுப்பு உள்ளது என்ற புரிதலெல்லாம் பெரும்பாலானவர்களுக்கு இல்லையென்பதுதான் - இது போல பிறர் உரிமையில் தலையிடும் நடவடிக்கைகளையும், பிறரிடம் அடிமை போல நடந்து கொள்ளும் நடவடிக்கைகளையும் ஒருங்கே மேற்கொள்ள செய்கிறது.
அராஜகமும், அடிமைத்தனமும் ஒரே பொருளாதார அமைப்பு பெற்றெடுக்கும் பிள்ளைகள்தான். இதுதான் இயங்கியலின் விதி. இதைத்தான் ஜனநாயகமின்மை என்கிறோம்.
இது ஏன் இப்படி உள்ளது எனில் தனிப்பட்ட உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஒரு சிறுபட்டறை தொழிலாளி, ஒரு விவசாய கூலிக்கு இந்த சமூகம் இயைந்து இயங்குவது போன்ற ஜனநாயக அடிப்படைகளை புரிந்து கொள்ளும் உற்பத்தி முறை கிட்டவில்லை. பெரும் தொழிற்சாலை பாணி உற்பத்தியில் ஈடுபடுபவர்களிடம் இந்த பண்பாட்டை நாம் பெரும்பாலும் காணாலாம்(Exceptions இருக்கும்).
ஏனேனில் அவனது ஒவ்வொரு உற்பத்தி உறவிலும் அவன் கூட்டு உழைப்பினை உணர்கிறான். கூட்டு உழைப்பின் காரணமாக கட்டுப்பாடான தனது பங்களிப்பை செய்யும் கடமையை உணர்கிறான். எனவே தனது உரிமையையும், பிறரின் உரிமையையும் உணர்கிறான். உரிமைகளை மீறப்படும் போது உற்பத்தியில் ஏற்ப்படும் பிரச்சனைகளைப் பார்க்கிறான். ஒரே இடத்தில் தொழிலாளர்களை இணைத்து முதலாளியே அவனை அமைப்பாக ஆக்குகிறார். எனவே ஒற்றுமையின் வலிமையை உணர்கிறான். அவனிடம் இருந்து அடிமைப் புத்தி காணமல் போகிறது.
வேலை முடிந்தால், போட்டுக் கொண்டுள்ள சட்டையைத் தவிர வேலை சார்ந்த எந்த பொறுப்பும் கிடையாது என்பது அவனை சுதந்திர மனிதனாகாவும் - தான் வேறு தனது தொழிற்சாலை வேறு எனபதனையும் - தான் உண்மையில் அந்த தொழிற்சாலையின் ப்ரந்த தொழிலாளர்கள் எனும் பெரும் அமைப்பின் அங்கத்தினன் என்பதையும் உணர வைக்கிறது.

மாறாக, சிறுவீத உற்பத்தியில்(சிறு பட்டறை தொழிற்சாலை, விவசாயம்) விடிந்தால், பட்டறை முடிந்தால் படுக்கை என்று நாள் முழுவது கட்டுண்டு கிடக்கிறான். சுதந்திரம் தவிர்க்கிறான். கூட்டு உழைப்பின் பிரமாண்டத்தையும், முதலாளியே உருவாக்கிக் கொடுக்கும் ஒற்றுமையையும் அனுபவிக்கும் வாய்ப்பின்றி தான் பிறந்து வளர்ந்த நிலபிரபுத்துவ அடிமைத்தனத்தை பேணிக் காக்கும் நிலைக்குத் தள்ளப்படுகீறான். சமூகம், அரசு, வர்க்கம் என்பனவற்றைப் பற்றி சிந்திக்கவே நேரமில்லை என்பதிருக்க, அவனது உற்பத்தி முறைகளும் அதனை உணரவிடாமல் அவனை தொடர்ந்து ஏமாற்றியே சுரண்டுகின்றன.

இந்தியாவின் மிகப் பெரும்பான்மையினர் இது போன்ற உற்பத்தி முறையில்தான் ஈடுபட்டுள்ளனர். எனவேதான் இந்தியாவை ஜனநாயகம் இல்லாத நாடு என்கிறோம்.

ஜனநாயகம் என்பது சட்டத்திருத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விசயமா?, இல்லை. அது சமூக பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டம். அது சமூகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியின் அலகு.

இந்தியாவில் பெரும் தொழிற்சாலைகள் ஒரு சிறு அளவிலான பிரிவினைரை மட்டுமே இது போன்ற தொழிற்சாலை பாணி ஜனநாயக உற்பத்தி முறைகளில் வைத்துக் கொண்டு, வாய்ப்புள்ள இதர பிரிவுகளையெல்லாம் சிறு பட்டறை முதலாளிகளிடம் காண்ட்ராக்ட் கொடுத்து விடுகிறார்கள். இதன் மூலம் இயல்பான முதலாளித்துவ வளர்ச்சி சமூகம் மொத்தத்திற்க்கும் பரவலாகிவிடாமல் தடுக்கப்பட்டு சமூகம் அழுகத் துவங்குகிறது.
இதை தடுக்க என்ன செய்யலாம்?

- இந்தியாவின் விவசாயத்தை ஏகாதிபத்தியங்களின் சந்தைக்காக உற்பத்தி செய்யும் பின்நிலங்கள் என்ற அள்வைத் தாண்டி இம்மிகூட முன்னேற விடாமல் தடுக்கும் அரசையையும், அதிகாரிகளையும் என்ன செய்யலாம்?

- இந்தியாவின் சிறு தொழில் துறையையும் இதே நிலைமையில் வைத்து இந்தியா முழுமைக்குமுள்ள நடுத்தர வர்க்கத்தின் கையிலுள்ள் சிறு மூலதனத்தின் சுதந்திரத்தையும், அவர்களின் இயல்பான சாதிக்கும் தாகத்தையும் முடக்கிப் போட்டு , அவற்றையும் தனது சந்தைக்காக உற்பத்தி செய்யும் பின் நிலங்களாக வைத்திருக்கும் இவர்களை என்ன செய்யலாம்?

- இந்தியனுக்கு ஜனநாயகத்தை மறுக்கும் இவர்களை என்ன செய்யலாம்?

- இது பேசி தீர்க்க முடியக் கூடிய விசயமா? சீர்த்திருத்தத்தில் தீர்வு அடங்கியுள்ளதா? புரட்சி செய்யவோமா?

அசுரன்
More articles in: http://www.tamilcircle.net/

Related Posts with Thumbnails