TerrorisminFocus

Wednesday, August 30, 2006

பகத்சிங்கும், சில பன்னாடைகளும் - நொறுக்குத் தீனி

கீற்றுவில் சில உண்மைகள்:

பகத்சிங்கும் ஆனந்த விகடனும் - நொறுக்குத் தீனி #1


ஆனந்த விகடன் - அன்றே பிரிட்டிஷ் இந்தியாவில் பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசிய பகத்சிங்கையும், அவரது தோழர்களையும் “முழுமூட சிகாமணிகள்” என்று ஆனந்த விகடன் அன்று பரிகசித்து எழுதியது.

பகத்சிங்கும் காந்தியும் - நொறுக்குத் தீனி #2


அகிம்சையின் உருவம் காந்தி-இர்வின் ஒப்பந்தம் காங்கிரஸ் மகாசபையில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு பகத்சிங் மீதான லாகூர் சதி வழக்கும் அதன் தீர்ப்பும் தடையாகிவிடும் நிலைமை இருந்தது. அப்போது, “அந்த பையன்களை தூக்கிலிட வேண்டுமென்றால் கராச்சி காங்கிரஸ் கூடுவதற்கு முன்பே தூக்கிலிடுவது நல்லது” என்று பிரிட்டிஷாரிடம் காந்தி சொன்னதாக, காந்தியின் வலதுகரமாக விளங்கிய பட்டாபி சீத்தாராமையா எழுதிய காங்கிரஸ் மகாசபை சரித்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


(ஆதாரம்: ‘வீர சுதந்திரம் வேண்டி..’ நூல்)

பசுக் கலாச்சாரமும், பன்னிக் கலாச்சாரமும்

இந்தக் பதிவின் பின்னூட்டத்தில் பெரியார் சிலையை அசிங்கப்படுத்தியதை ஏதோ மிகப் பெரிய சாதனை போல பேசும் சில அற்ப பன்னிகள் பற்றிய எனது கருத்தை பதிய வைத்துள்ளேன்(இதுக்கெல்லாம் தனி பதிவு அவசியமில்லை). விருப்பமுள்ளவர்கள் பாடித்து ரசிக்கலாம்.
************
பசுவுக்காக தலித்துகளின் தோலுரிச்சவங்களையும், அதற்க்கு ஆதரவாக சாஸ்திரம் நம்பிக்கை என்று விளக்கு பிடித்தவர்களையும் (அனைவரும் அர்ச்சகராகலாம், தமிழ் வழிபாடு போன்றவை நம்பிக்கை, பாரம்பரியத்துக்கு எதிர் என்பது போல திண்ணைகளில் உட்கார்ந்து பிடில் வாசிக்கிறார்களே சிலர் அது போல) சில பன்னிகளை டீசன்டாக மாடு என்கிறார் விவேகானந்தர்.
********************


பசு பாதுகாப்பு பிராச்சாரகர் ஒருவரிடம், “மனிதர்கள் பசியாலும், பட்டினியாலும் செத்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்களின் உயிரைக் காப்பாற்ற ஒரு பிடி சோறுகூடத் தராமல் விலங்குகளையும், பறவைகளையும் காப்பாற்றுவதற்காக உணவை வாரி வாரித் தரும் சங்கங்களிடம் எனக்கு சிறிதுகூட அனுதாபம் கிடையாது. மனிதன் பட்டினியால் சாவதற்கு அவனது கருமங்கள் காரணம் என்று கரும நியதிக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதாக இருந்தால் இந்த உலகத்தில் எதற்காகவும் முயற்சி செய்வதோ, போராடுவதோ பயனற்ற வேலை. பசுக்களைக் காப்பாற்றும் உங்கள் வேலையும் அப்படிப்பட்டதுதான்” என்றார் விவேகானந்தர்.

இதைக் கேட்ட பசு பாதுகாப்பு பிராச்சாரகர் கொஞ்சம் வெட்கம் அடைந்தவராகத் தடுமாறினார். பிறகு சமாளித்துக் கொண்டு “நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், பசு நமது தாய் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றனவே” என்றார். சுவாமிஜி லேசாகச் சிரித்தபடி “ஆமாம். பசு நம் தாய்தான். எனக்குப் புரிகிறது. வேறு யாருதான் நம்மைப் போன்ற இவ்வளவு புத்திசாலிகளான பிள்ளைகளைப் பெற முடியும்” என்றார்.

(ஆதாரம்: ‘எனது சிந்தனைகள் - விவேகானந்தர்')
*********
நன்றி: கீற்று

Friday, August 25, 2006

அக்காமாலா, கப்ஸியும் - இம்சை அரசன் துன்பமணியும்

Photobucket - Video and Image Hosting

**********
காட்சி #1: (சோழ புரம் அரசசபை - எல்லா அமைச்சர்களும் தூங்கிக் கொண்டும் சிலர் பணிப் பெண்களிடம் சில்மிஷம் செய்து கொண்டும் இருக்கிறார்கள்.

அவையை தலைமை தாங்கி நடத்தும் புலவர் பானபத்ரஒனாண்டியும், அரசன் துன்பமணியும், தளபதி மெலிந்த முத்துவும் வெகு மும்மரமாக விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அவை நடவடிக்கைகளை பார்வையிட பொதுமக்களும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இனி அவர்களின் உரையாடல்...)

தளபதி மெலிந்தமுத்து: மன்னா!... நாடு இருக்கும் நிலைமையில் அக்காமாலா, கப்ஸி போன்ற நச்சு பானங்கள் தேவையா?


இம்சை அரசன் துன்பமணி: நச்சு இருக்கிறதா இல்லையா என்று ஆய்வு செய்ய ஒரு குழுவை போட்டுள்ளோம் ஒன்று அல்லது இரண்டு வருடத்தில் சங்கதி தெரிந்து விடும்...


தளபதி மெலிந்தமுத்து: மன்னா!.. அது தெரியும் வரை மக்கள் நஞ்சை குடித்துக் கொண்டிருப்பதா?


இம்சை அரசன் துன்பமணி: லகுட பாண்டியா.... மண்டை மேல் மண்டை இருந்தால் மட்டும் போதாது மதி வேண்டும். மக்கள் நச்சு பானம் குடிக்ககூடாது என்று தெரிந்துதான் பஞ்சாயத்துக்களுக்கு தகுந்த அறிவுரைகளைக் கூறி ஓலைகளை அனுப்பியுள்ளோம். சோழபுர சட்டம் 7ன் படி பஞ்சாய்த்து புளியமரங்களுக்கு நச்சு பானங்களை தடை செய்ய உரிமை உள்ளது. அப்புறம் அது அவர்கள் பொறுப்பில் உள்ள விசயம். மன்னர் செய்வதற்க்கு ஒன்றுமில்லை.


தளபதி மெலிந்தமுத்து: அதே சட்டத்தின் சரத்துக்கள் மன்னரே நாடு முழுவதும் அக்காமாலா, கப்ஸீயை தடை செய்ய வழி சொல்கிறதே... அதன்படி மன்னர் தடை செய்யலாமே?


இம்சை அரசன் துன்பமணி: யோவ்.. தளபதி.... உனது அப்பா போன முறை ஆட்சியிலிருந்த போது தடை செய்தாரா? இப்பொழுது மட்டும் என்னை கேட்கிறீர்கள்.... கிராதகா.... மூக்குக்குள் மீசையை விட்டு மூளையை குதறி விடுவேன்... ஜாக்கிரதை...


தளபதி மெலிந்தமுத்து: எனது தந்தையின் ஆட்சியின் பொழுது மொச(rabit) மூத்திரமும், பாம்பு புழுக்கையும் அந்த பானங்களில் இருந்ததாக நிருபிக்கப்படவில்லை. தற்பொழுதுதான், போன வாரம்தான் உங்க ஆட்சியிலதான் கண்டுபிடிச்சாங்க. நாங்க எங்க கிராம பஞ்சாயத்துலகூட தடை போட்டுட்டோம்.


தலைமைப் புலவர் பானபத்திர ஓனாண்டி: ஆமாம், ஆமாம்... தடை போட்டீர்கள் பிறகு அதை தூக்கி விட்டீர்கள்....


இம்சை அரசன் துன்பமணி: ஆமாம்... அவர்கள் எதை தடுத்தார்கள், எதை தூக்கினார்கள் என்று தெரியாதா?... இது பல பிரச்சனைகள் சம்பந்தப்பட்டது... விவசாய நெறிமுறைகளும்கூட இதில் சம்பந்தப்பட்டுள்ளது.....(தளபதி குறிக்கிடுகிறார்.... ஒரே சலசலப்பு).


தலைமைப் புலவர் பானபத்திர ஓனாண்டி: அரசவை இன்று ஒத்தி வைக்கப்படுகிறது.


இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் குடிமகன்: என்னடா இது..... கடைசி வரைக்கும் நாடு முழுவதும் தடை செய்றத பத்தி மன்னரும் ஒன்னும் சொல்லல... புலவரும் ஒன்னும் சொல்லல... தளபதியும் ஒன்னும் சொல்லல.... கடசில விவசாயத்தில ஏதோ பிரச்சனன்னு சம்பந்தமில்லாம ஒரு வார்த்த விடுறாரு..... எல்லாரும் வெள்ளிப் பணத்த எண்ணி வாங்கிட்டாங்களோ..... வேற வழியில்லை உக்கிரபுத்திரன்ட்ட போயி சேர்ந்திர வேண்டியதுதான்...


*****************
மேலே காணப்படும் உரையாடலுக்கும்
நாடாளுமன்றத்தில் நடந்த கோக் ஆதரவு சதியாலோசனைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
*********

காட்சி #2:(அரண்மனை உள்ளே போர்க்கள உடையுடன் ஆயுதம் தரித்து இம்சை அரசன் துன்பமணியும், அவரது அல்லக்கை மொக்கைப்பாண்டியரும்)


துன்பமணி: அமைச்சரே.. தொட்டுப் பாருங்கள். காய்ச்சல் அடிப்பதுபோல் தெரிகிறதா?


மொக்கைப்பாண்டி: ஆமாம் மன்னா, எனக்குக்கூட அப்படித்தான் உள்ளது.


துன்பமணி: என்ன தங்களுக்குமா?.... ஏன் அமைச்சரே நமக்கு மட்டும் இப்படி நடக்கிறது? ஒரு அக்காமாலாவுக்காக போரா?


மொக்கைப்பாண்டி: உக்கிரபுத்திரன் ஓலை அனுப்பினானே.... அக்காமாலா, கப்ஸியை தடை செய் இல்லையின்னா மக்களோட கோபத்துக்கு ஆளாவன்னு... கேட்டீர்களா?..... அனுப்பிய ஓலையை கிழித்துவிட்டு. புறாவை வறுத்து அக்காமாலவுடன் கலந்து ஒரு பிடி பிடித்தீர்களே..... இப்பொழுது வருத்தப்பட்டு என்ன செய்வது....


மொக்கைப்பாண்டி: உக்கிரபுத்திரனின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு... அவன் வாசலை உடைத்து மக்கள் உள்ளே வரும்முன்ம்ம்ம்......(துன்பமணி அமைச்சரின் வாயை பொத்துகிறார். கண்களில் நீர் கோர்க்க கண்ணீர் வடிக்கிறார்).


துன்பமணி: அய்யோ!... அய்யோ! ஒரு இழவும் புரியவில்லையே...... ஏன் அமைச்சரே இப்படி செய்துவிட்டால் என்ன?..... சமணச் சாமியார்கள் வேசம் போட்டு சந்தடி செய்யாமல் தப்பிவிடலாமே?


மொக்கைப்பாண்டி: சிரிக்கிறார்.....

தொடர்ந்து சிரிக்கிறார்......


துன்பமணி: ஏனய்யா சிரிக்கிறீர்.... மொக்கை..... சொல்லித் தொலையுமய்யா... மணிக்கொருதரம் மொக்கை என்பதை நிரூபித்துக் கொண்டே இரும்...


மொக்கைப்பாண்டி: நம்மை சமணச் சாமியார்கள் போல கற்பனை செய்து பார்த்தேன்... அம்மணமாக... சிரிப்பை அடக்க முடியவில்லை...

துன்பமணி: அமைச்சரே.... அது என்ன சத்தம்?......


மொக்கைப்பாண்டி: ஜங்கு சத்தம்.... மக்கள் கிளர்ந்து விட்டனர். மன்னா கிளம்புங்கள்..... உங்கள் உத்தியையே செய்லபடுத்துவோம்....


(அங்கே மக்கள், கோட்டை வாசலை உடைத்து கொண்டு பெருத்த ஆராவாரத்துடன் உள் நுழையும் பெரும் ஓசை கேட்கிறது.....)


*********************
தொடர்புடைய பதிவுகள்:


* அக்காமாலா, கப்ஸி, இம்சை அரசனும் - தாமிரபரணியும்

தொடர்புடைய சுட்டிகள்:


#a) தண்ணீர் தனியார்மயம்


#b) கோக் அடிமைத்தனத்தின் சுவை


#1) Indian Freedom and Imperialism - Immediately after August 15


#2) கடல் நீர் தனியார்மயம், காற்றும் ஆகலாம் எதிர்காலத்தில்


#4) கோக் அடிமைத்தனத்தின் சுவை


#5) தண்ணீரில் எழுதிய புதிய மனு நிதி


#6) நீரில் வணிகம், நீரில்லா துயரம்

#7) பாட்டில் தண்ணீர் பாண்டியர்களே கொஞ்சம் இங்கே பாருங்கள்


கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு அருமையான சிறு பிரசுரத்தையும் படிக்கவும்:
தண்ணீர் தாகத்திற்க்கா, லாபத்திற்க்கா?



இத்துடன் சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மெயிலில் வந்த ஒரு Flash presentation-யை கீழே வழங்குகிறேன்.

Water - It's Not Fun
Water - It's Not F...
Hosted by eSnips


Wednesday, August 23, 2006

வந்தே ஏமாத்துறோம் - ஒரு தேச பக்தி பாடலா?

வந்தே ஏமாத்துறோம் - ஒரு தேச பக்தி பாடலா?

"எனக்கு அவன் கொடுத்த செக் திரும்பி வந்திடுச்சுண்ணே."


"விளக்கமா சொல்லு"


"அண்ணே.. அவனுக்கு நான் பத்தாயிரம் பணம் கொடுத்திருந்தனா.. அதை அவன்கிட்ட திருப்பிக் கேட்டப்போ அவன் ஒரு செக் கொடுத்திருந்தான்னே.. அது பேங்கில திரும்பி வந்துடுச்சு.. என்னன்னு கேட்டு பணத்த வாங்கித்தாங்க!"


"நீ எப்போ அவனுக்கு..பணம் கொடுத்தே?"

"அவன் பொண்டாட்டி ஓடிப்போவதுக்கு முன்னாடி?"

"என்னது அவன் பொண்டாட்டி ஓடிப்போயிட்டாளா? யார் கூட? அந்த நெட்டையா ஒருத்தன் ஊடகீட வந்துகிட்டு இருந்தானே அவனோடயா? ஏம்பா ஏன் என்கிட்டே சொல்லல இத?"

"அண்ணே! விசயம் அது இல்லண்ணே! செக்கப் பத்திக் கேளுங்க!"

"கொஞ்சம் சும்மா இருப்பா நீ! எவ்வளாவு நாளாப்பா அவன்கூட ஒன் பொண்டாட்டி பழக்கம்? எங்க ஓடிப் போனாங்க?"

********



இந்த மாதிரி உரையாடலை காமெடி என சினிமாவில் ரசித்திருப்பீர்கள்.. நிஜத்திலும் இவ்வாறு நடந்து கொண்டுள்ளது இந்தியாவில் காங்கிரசு, பிஜேபி எனும் ஆளும் வர்க்கக்கட்சியின் வடிவில்.

வந்தே ஏமாத்தறோம் பஜனையின் பிண்ணனி:

நாட்டின் சுரங்கங்கள், விமான ஓடுதளங்கள், நிலையங்கள், ஆறு, நிலத்தடி நீர் என ஒன்றும் பாக்கி இல்லாமல் அன்னியனுக்குக் காட்டிக் கொடுத்தாயிற்று.. சுயசார்புக்கொள்கையை அணுசக்தித்துறையில் கைகழுவி அமெரிக்காவிடம் சரணாகதி ஆன விசயம் மக்களிடம் அம்பலமாகி நிற்கும் வேளையில் 'வந்தேமாதரம் பஜனை'யைக் கையில் எடுத்துள்ளனர் இரு கயவாளிகளும்.

தேசபக்தி என்பது வெறும் பஜனைப்பாட்டு அல்ல. அது கோடானுகோடி உழைக்கும் இந்திய மக்களின் நலனுக்காக சிந்திப்பதாகும். இவர்களின் நலனை அன்னியனிடம் அடகு வைத்த விசயம் அம்பலமாகும்போது அதிலிருந்து மக்களை திசை திருப்பும் உத்தியாகவே இவர்கள் செய்து வரும் வாதம் உள்ளது. (செக்கு திரும்பி வந்த விசயத்தை விட்டு விட்டு பொண்டாட்டி ஓடிப்போனது பற்றிப் பேச ஆரம்பிக்கும் காமெடியை நினைவுகொள்க).

இவர்கள் இப்படி வந்தே மாதரம் பற்றிய சர்ச்சையை நடத்திக்கொண்டிருக்கையிலேயே ஓசையில்லாமல் கோக்கோகோலா கம்பெனிக்காரனுக்கு 'நற்சான்றிதழ்' தரும் மாமா வேலையை அமெரிக்க அடிமை மன்மோகன்சிங்கின் கூலிப்படை செய்து விட்டது.

இதே தாசானுதாசன், கொஞ்ச நாளுக்கு முந்தி, 'ராவின் அரசில் இருந்த அமெரிக்க உளவாளி யார்?" என்பதை முன்னாள் ஜஸ்வந்த் சிங்கிடம் லாவணி பாடிக்கொண்டிருந்தார். அமெரிக்க உளவாளியே பிரதமராக இருப்பதும், அவர், உளவாளி பற்றிப் பேசுவதும்தான் காலக்கொடுமை.

மருத்துவம், கல்வி, குடிநீர் எல்லாமே தேசத்து மக்களுக்குக் கிடைக்கவிடாமல் தனியார்மயமாக்கப்பட்டு அம்மக்களின் நலன்கள் காவு கொள்ளப்பட்டு வரும் சூழலில் இந்த மாமாக்கள் (காங்கிரசு, பாஜக) 'தேசபக்தி' பற்றிப் பினாத்துகிறார்களே? அன்னிய நிறுவனமான சோனி, பத்தாண்டுகளுக்கு முன் 'வண்ட்ட்ட்ட்டேஏ மாத்த்தரம்' என்று மலச்சிக்கல் வந்தவன் முக்குகிற மாதிரி ஏ ஆர் ரகுமானை வைத்துப் பாடச்சொல்லி காசு சம்பாதித்ததே! அப்போது அன்னியக்கம்பெனி எப்படி எங்களோட 'தேசபக்தி' வியாபாரத்துல தலையிடலாம்னு குறைந்தபட்சம் 'தேசிய முதலாளிகள்' மாதிரியாவது கண்டித்தார்களா இந்த இந்துவியாதிகள் என்றால் அதெல்லாம் இல்லை.
சரி.. இவர்கள் சொல்லிவரும் வந்தே மாதரத்தின் லட்சணத்தைத்தான் பார்த்து விடுவோமே!

வந்தே ஏமாத்துறோம்! எப்படி?
"மொகலாயர் ஆட்சிக்குப் பிறகு வங்காளத்தை ஆண்ட முசுலீம் நவாபுகள், ஜமீன்தார்கள் ஆட்சியில் பார்ப்பன மேல்சாதியினர் தங்கள் ஆதிக்கத்தை இழந்து தவித்தனர். எனவே நவாபுகளை முறியடித்த ஆங்கிலேயர்களை அவர்கள் நெஞ்சார வாழ்த்தி வரவேற்றனர்.

இந்தச் சூழ்நிலையை வைத்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி எனும் பார்ப்பனர் 'ஆனந்த மடம்' எனும் புதினத்தை எழுதினார். முசுலீம் அரசர்களை எதிர்த்து இந்துச் சாமியார்கள் போராடுவதைக் கூறும் இக்கதையில்தான் 'வந்தே மாதரம்' (தாய்க்கு வணக்கம்) என்ற பாடல் வருகிறது. காளி, சரஸ்வதி, லட்சுமி என்று தாயை விளிக்கும் 'வந்தே மாதரம்' இப்படித்தான் தோன்றியது.

"நம்முடைய நவாபின் ராஜ்ய பரிபாலனத்தைப் பாரும். மதம் போய் விட்டது; சமூகம் போய் விட்டது; மானம் போய்விட்டது;குலம் போய்விட்டது; இப்போது பிராணனும் போய்க்கொண்டிருக்கிறது.." இது 'ஆனந்தமடம்' நாவலில் வரும் ஓர் உரையாடல். இதில் யாருடைய மதம்-சமூகம்-மானம்-குலம்-பிராணன் போய்விட்டதென்பதைத் தெள்ளெனவே உணரமுடியும்.

அதனால்தான் முசுலீம் அரசர்களிடமிருந்து வங்கத்து மாதாவை விடுதலை செய்த 'ஆங்கிலப் பிதாவை' அன்றைய வங்கத்துப் பார்ப்பன மேல் சாதியினர் மனதார வாழ்த்தினர். வந்தேமாதரத்தின் தோற்றத்திலேயே நாட்டுப்பற்றுக்கு இடமில்லை!


காலப்போக்கில் வங்கத்து வந்தே மாதரம் ஆங்கிலப் பிதாவை எதிர்க்கும் பாரத மாதாவாக மறுபிறவி எடுத்தது. இந்த பாரத மாதா பஜனையை விடுதலைப் போராட்டத்தில் திணித்தது காங்கிரசு கும்பலின் கைங்கர்யமாகும். இந்திய அளவில் இந்து மதமும், பாரத மாதாவும் உருவாக்கப்பட்டு வந்த நிகழ்ச்சிப் போக்கும், காங்கிரசின் பார்ப்பன மேல்சாதித் தலைவர்களும் அவர்களின் பார்ப்பனீய இந்துத்துவக் கருத்தும் 'வந்தே மாதரத்தை'ப் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக இருந்தன.


கோவில்களில் அம்மணமாக நிற்கும் பெண் கடவுள்களை மாதிரியாகக் கொண்டு, அந்தப் பெண் உருவங்களுக்கு பார்ப்பன, உயர்சாதி மாமிகளின் பாணியில் சேலை கட்டி "இதுதான் லட்சுமி,சரஸ்வதி,பார்வதி" என்று வரைந்து தள்ளினார் திருவாங்கூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ஓவியர் ரவி வர்மா. இப்படியே 'மாதா'க்களை உருவாக்கிய மன்னர் பரம்பரைதான் கடைசி வரை வெள்ளையனின் விசுவாச அடிமையாக இருந்தது. முதுகில் நாலு கை முளைத்த லட்சுமிதான் பாரத மாதா; இந்தப் பெண் தெய்வத்தை வருணிக்கும் பாடல்தான் 'விடுதலை கீதம்' என்று சொன்னால் அது பிற மதத்தினரை வெறுப்படையச் செய்யாதா?

பிற மதத்தினரை விடுங்கள், மக்கள் மீது மீளாக் காதல் கொண்ட எந்த ஒரு சுயமரியாதை உள்ள தேச பக்தருக்கும் இந்த பிற்போக்கு போக்கிரி பாடலை தேச பக்தி பாடல் என்றால் கொலை வெறி வரத்தான் செய்யும்.

மத வெறி அரசியலும், மாற்று அரசியலும்:


இப்படித்தான் விடுதலைப் போராட்டத்திலிருந்து மதத்தின் பெயரால் முசுலீம் மக்களைத் தனிமைப்படுத்தும் போக்கைக் காங்கிரசுக் கும்பல் ஆரம்பித்து வைத்தது.


இப்போது பிஜேபி அர்ஜூன் சிங்கை நெளிய வைக்கவும் தனது இந்துவியாதி அரசியல் ஆயுதத்தை கூர்மைப் படுத்தவும் இந்த பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டுள்ளது.

ஏகாதிபத்திய அடிமைகளான பிஜேபியும், காங்கிரசும் நாட்டின் மூல வளங்களையும், நாட்டின் இறையாண்மையையும் டாலர் தேவதையின் முன் சமர்ப்பித்து விடுவதில் போட்டாபோட்டி போடுகின்றன. போராடும் உழைக்கும் இந்திய மக்கள் மீது , ஹூண்டாய் காரனின் எச்சில் காசுக்காக அடக்குமுறையையும், உரிமைப்போர் நடத்தும் மக்கள் மீது தாமிரபரணியில் கோக் கொடுக்கும் எலும்புத்துண்டுக்காக அரசு எந்திரத்தை ஏவி விடுவதிலும் இந்த இரண்டு கூட்டுக்களவாணிகளும் கள்ள மவுனமே சாதித்தன.


இது இன்று நேற்றல்ல. நூறாண்டுகளாக நடந்து வரும் துரோக வரலாறுதான். மக்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராய் எப்போதெல்லாம் போராடினரோ அப்போதெல்லாம், காங்கிரசு மக்களை அன்னியனுக்குக் காட்டிக்கொடுத்தே வந்துள்ளது. (புன்னபுரா, சவுரிசவுரா, தெலங்கானா உழவர் எழுச்சிகள், பகத்சிங்கின் புரட்சிப்படை ஆகியவற்றுக்கு எதிராக இருந்தமை).

பாஜகவின் மூல வேரான இந்துமகாசபையும் ஆர் எஸ் எஸ் ம், மற்ற இந்துவியாதிகளும் இதே மாமா வேலையைத்தான்(விளக்கு பிடித்தல்) 1947க்கு முன்னரும், பின்னரும் செய்தனர் (வெள்ளையனே வெளியேறு, தல்வார் புரட்சி ஆகியவற்றிற்கெதிராக வேலை செய்தமை). இன்றும் தொடர்கின்றனர்.


ஒட்டுண்ணிகளை அழிக்கும் வீரிய மருந்து - உழைக்கும் வர்க்கம்:


வந்தே மாதரம் பாடி நம்மை ஏமாற்றும் அரசியல் ஒட்டுண்ணிகளும், அவர்களின் எச்சில் பொறுக்கி அல்லக்கைகளும் நம்மைப் பார்த்து 'வந்தே ஏமாத்துறோம்' எனச்சொல்வது கேட்கிறது.


இந்த தேசத்தின் நலன்களையோ, தேசத்தின் செல்வங்களையோ, உழைப்பாளர்களையோ மதிக்காமல், அவற்றுக்கெல்லாம் எதிரானவர்களாய் நடந்து கொண்டு, வெறுமனே 'வந்தே மாதரம்' போன்ற பஜனைகளை தூக்கிப்பிடித்துக்கொண்டு 'போலி தேசப்பற்று' பேசி அதற்கென 'நாய்ச்சண்டை இடுவது' எவ்வாறு சாத்தியமாகின்றது?


மக்களிடம் நாம் உண்மையான அரசியலை - அதாவது ஏகாதிபத்தியத்தை, அதற்கு நக்கிப்பிழைக்கும் காங்கிரசு, பாஜக கூட்டத்தை - பற்றி பேசத்தொடங்க வேண்டும். அவர்களின், இந்த அரசின் மக்கள் விரோத போக்கை அம்பலப்படுத்த வேண்டும்.


பிளாக்ஸ்பாட்டுகளில் நுழைந்து அங்குள்ள பல போலி தேசிய கூமுட்டைகளை உடைக்க வேண்டும்.

கற்பக விநாயகம்
vellaram@yahoo.com

Tuesday, August 22, 2006

மொசக்குட்டிகளும், கழுதைபுலிகளும் - சந்துத்துவத்தின் கதை

தேவர் என்னும் சாதி வெறியர் பற்றிய கட்டுரையில் கீழ் காணும் பின்னூட்டம் வந்திருந்தது. இதற்க்கு பதில் சொல்லும் முகமாக ஒரு சின்ன ஆக்கப்பூர்வமான என்டர்டெய்ன்மென்ட் ஒன்னு பன்னலாமேன்னு தோனுச்சி.


////மற்றொன்று அடக்குமுறைக்கு எதிரான ஆற்றமையின் வெளிப்பாடு. அது சரியான அமைப்பு வடிவில் வரவில்லை என்று வேண்டுமானல் தங்களது வாதத்தை வையுங்க்ள் //
இந்துமத தத்துவங்களுக்கு எதிராக தற்போது நடந்து வரும் அடக்குமுறையின் வெளிப்பாடாய் காலப்போக்கில் கிளர்ந்து எள இருக்கும் இந்தியர்களின் இயக்கத்தையும் இதே கண்கொண்டு தங்களால் பார்க்க இயலுமா?

commented by Parama Pitha, August 21, 2006 11:43 PM ////

அய்ய.... இதப்பாருடா காமெடிய...

************************

மொசக்குட்டிகளும், கழுதைபுலிகளும் - சந்துத்துவத்தின் கதை


ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டுல மொசக்குட்டிக நிறைய இருந்தது. அள்ள அள்ளக் குறையாத அளவு ரொம்ப அதிகப்படியா இருந்திச்சிங்க. இந்த மொசகுட்டிக கடுமையான உழைப்பாளிக. அந்த காட்டுல கழுதைப் புலி குடும்பம் ஒன்னு வேற இருந்துச்சு. சரியான மொள்ளமாறி குடும்பம், இந்த கழுதப் புலி குடும்பம். அந்த கழுதப் புலி குடும்பம் ரொம்ப வருசமா(ஒரு சில ஆயிரம் வருசம்) அந்த காட்டுலதான் இருக்குதுங்க.

அதோட முப்பாட்டனார் கழுதைப் புலி, கடவுள் சக்தி தனக்கு இருக்குதுன்னு சொல்லி, எங்க வம்சத்துக்கு தினப்படி ஒரு மொசலு(rabit) தானா வந்து பலி கொடுத்துக்கனும்ன்னு சொல்லி காட்டுல இருக்கிற மத்த இனா.வானா. மிருகங்களை நம்ப வைச்சதுங்க. எதித்து பேசின மிருகங்களை கூர்மையான கம்ப நட்டி ஆசன வாயை அதுல உட்காரவைச்ச கோடூரமா கொன்னுபோட்டுடிச்சிங்க.


இப்படி அநியாயம் பன்றதையே 'சோமாயனம்'**, 'சோகவத்பீடை'** அப்படின்னு பல புத்தகங்களா எழுதி தேய்வீகமாக்கி வச்சிருந்தாங்க. இது போக நாலு 'வாதம்'** எல்லாம் கடவுள் கொடுத்ததுன்னு சொல்லி ஊர அடிச்சி ஏமாத்திக்கிட்டிருந்தாங்க.


உழைப்பாளிகதான அத்தனை கலையையும் உருவாக்குறவிய்ங்கறத உலக உண்மை. அதே போல மொசக்குட்டிக வேலை செய்யற அலுப்பு தெரியாம இருக்க உருவாக்குன கலைய எல்லாம் இந்த கழுதப் புலி குடும்பம் டாக்குமென்டு பன்னிட்டு. அதையும் கடவுள்தான் கொடுத்தார்ன்னு டன் கணக்குல பூ சுத்துனாங்க. இந்த கஸ்மாலம் பிடிச்ச கழுதைப் புலி கோஸ்டிக ரொம்பவே அதிகப்படியா அழிச்சாட்டியம் பன்னிக்கிட்டிருந்தாங்க. இப்படி மொசக்குட்டிக கிட்டயிருந்தே எல்லாத்தையும் பிடுங்கிட்டு அவுங்களையே அவாமனப்படுத்தியும் வைச்சிருந்தாங்க.


காட்டு பொது ஆத்துல வாய வைச்சி தண்ணி குடிக்கப்படாது. காட்டுக்குள்ள புல்லு காயப் போடப்படாது. இப்படி பல கட்டுப்பாடுக, ஏகப்பட்ட 'ப்படாது'க.


இந்த அநியாயம் ரொம்பகாலத்துக்கு தாங்கலை. மொசக்குட்டிக கூட்டத்திலேயே இந்த அநியாயத்தை எதிர்க்க ஆளுக அதிக மாயிட்டாங்க. இது பத்தாதுன்னுட்டு ஒரு வலிமையான மொசக்குட்டியும், மான்குட்டியும் ரொம்பத் தீவிரமா கழுதைப்புலிகள எதுக்க ஆரம்பிச்சுட்டாங்க.


இதே நேரத்தில கழுதைப்புலிகளுக்கு போட்டியா சில குள்ள நரிகளும் அந்த காட்டுக்கு புதுசா குடிவந்தாங்க. ஒரு பக்கம் குள்ள நரி கூட்டம் கழுதை புலி சொல்றது டூபாக்கூரு, நாங்கதான் ஒரிசினல் கடவுள் சக்தி உள்ளவய்ங்க அப்படின்னு சொல்லி மொசக்குட்டி கூட்டத்துல ஒரு பகுதியை பிச்சுக்கிட்டு போயிருச்சி. இன்னோரு பக்கம் இந்த மொசக்குட்டிகள்ள பெரும்பாலனவங்க எல்லாம் சேர்ந்து - தலைவர்கள் மொசக்குட்டி, மான்குட்டி தலைமையிலே அங்கங்க கடுமையா போராட ஆரம்பிச்சாங்க.


இதுல இந்த குள்ள நரி கோஸ்டிக ஒரு மாசத்துக்கு ஒரு மொசல பலி கொடுத்தா போதும்ன்னு சொல்லியிருந்தாங்க. அதுவுமில்லாம அவிங்க ஓரளவுக்கு மொசக்குட்டிகள மருவதையா நடத்துனாங்க.


இந்த சூழலல்ல ஒரு கட்டத்துக்கு மேல தாங்க முடியாம சரி நாமலும் மொசக்குட்டிகள நம்ம பக்கத்துல வைச்சிக்கலைனா முதலுக்கே மோசமாயிரும்னு இந்த கழுதப் புலிக முடிவு செய்தாங்க.


அதுப்படி தங்களோட அடக்குமுறய கொஞ்சம் குறைச்சி கிட்டு. கொஞ்சம் சமரசம் பன்னிக்கிட்டு. இந்த வாதம், சோமாயணம், சோகவத்பீடை இதெல்லாம் ரோம்ப பெருமை வாய்ந்தது. இந்த காட்டுடோ அடையாளமே இந்த புராண, புரட்டு இழிச்சவாயகாசங்கள்ளதான் இருக்குதுன்னு, Tree TV ல்ல ஞாயித்து கிழமைகள்ள சீரியல் போட்டு மொசக்குட்டிகள விசுவலா(Visual) ஏமாத்த முடிவு செஞ்சாங்க. அது நல்லவே எஃபெக்ட் கொடுத்தது.


சிங்கம், புலி, கரடி இப்படி எவன் ஆட்சிக்கு வந்தாலும் கழுதைப் புலி தான் எப்போதும் சூத்திரதாரியா இருந்தான். அந்த அதிகாரத்த உபயோகிச்சு குள்ள நரிகள கன்ட்ரோல் செய்றதுக்காக சதைமாற்றத் தடைச் சட்டம் எல்லாம் கொண்டு வந்தாங்க. ஆனா இந்த தலைவர் மொசக்குட்டி, மான்குட்டி களோட வாரிசுகளொட(காட்டு நீதிக்காக போராடுறவங்க) தாக்குதல கழுதப்புலிகளால கன்ட்ரோல் செய்யமுடியல. எங்க போனாலும் அவிங்க ஆள் ஒருத்தன் கரடிகனக்கா உக்காந்திகிட்டு கழுதைபுலிகளோட பூசையில மண்ணள்ளி போட்டாய்ங்க.


கழுதைப் புலிகளோட நலன மறைமுகமா சொல்லுறதுக்கு பல பேருல(Name) கச்சி ஆரம்பிச்சாங்க. சோ.எஸ்.எஸ், பீ.எச்சி.ஈ..... இப்படி.


ஒரு பக்கம் மொசக்குட்டி கூட்டத்துல போயி நீயு நானும் ஒன்னு அப்படின்னு புதுசா ஒரு கதைய விட்ட இந்த கழுதைப் புலி கோஸ்டிகள, காட்டு நீதிக்காக போராடுனவங்க அம்பலப்படுத்தி அவமானப்படுத்தினாங்க.


இது பொறுக்க முடியாம யாரோ ஒரு கழுதைப்புலியோ அல்லது புதியகழுதைப்புலியோ**, ப்ரம்மாவோட பிதா அப்படிங்கற பேர்ல வந்து கீழே வர்ர மாதிரி சொல்லிச்சு:

"மொசக்குட்டிக, அடக்குமுறைக்கு எதிரா போராடுரத ஏத்துக்கற காட்டு நீதி போராட்டக்கரர்களே! இதே போல நாளைக்கு கழுதைப்புலிக தங்களோட தத்துவம் அடக்கப்படுதுன்னு சொல்லி அடக்குமுறைக்கு எதிரா போராடினா ஏத்துப்பீங்களான்னு"

இதக் கேள்விப்பட்டவொடனே எனக்கு என்ன கேக்க தோனுச்சுன்னா.....

"நீங்க நல்லவரா... கெட்டவரா??" ன்னு


அவ்வ்வ்வ்வ்வ்வ்................

**********

சொற்க்குறிப்பு:

சோமாயனம்** - இதன் ஹீரோ சோமாறி மொசக்குட்டிகள அழிச்சி கழுதப் புலி ராஜ்யத்த பலப்படுத்தினான்.


சோகவத்பீடை** - இத்த சொன்னவர் பேரு கோட்டினன். அவர் ஒரு இழிச்சவாயன் தலையில மொளகா அரச்சி மொசக்குட்டிகளுக்கு எதிரான அடக்குமுறை தத்துவத்தை டாகுமென்ட் செய்தார்.


வாதம்** - இது நாலு வகைப்படும். பக்க வாதம், முடக்கு வாதம் இன்னும் ரெண்டு பெர் மறந்து போச்சி தெரிஞ்ச யாராச்சும் சொன்ன சந்தோசமா இருக்கும்.

இதுல பக்க வாதம் மூச்சுடும் அடுத்தவன எப்படி நாசமாக்கிறதுன்னு இருக்கும்.

முடக்கு வாதம் மூச்சுடும் தன்க்கு அது வேனும் இது வேனும்னு ஒர கழுதைப் புலி புலம்பல்(கறி சாப்பிட்டிட்டு ஊளையிடுமே அது போல).


புதிய கழுதைப்புலி** - கழுதைப் புலி தத்துவத்தை நடைமுறைப்படுத்தும் (அ)சிங்கம், கரடி சந்ததியினர். கழுதைப் புலி தத்துவத்தை நடைமுறையில் இந்த கோஸ்டிதான் செயல்படுத்தும். கழுதைப் புலி கோஸ்டி இந்த நூற்றாண்டுல தான் வேற வழியில்லாம நேரடியா நடவடிக்கையில எறங்க வேண்டியதா போச்சி.


Note: சந்து கத தத்துவம், சந்துத்துவம் - இது எல்லாம் கழுதைப் புலி தத்துவத்தோட புத்தகப் பேரு.

****************
Disc:
இந்த கதையில் உள் குத்துக்களை கண்டுபிடிப்பவர்களுக்கு எந்த பரிசும் வழங்க'ப்படாது'.

Friday, August 18, 2006

பத்ரியின் கிராமப் பொருளாதாரக் கட்டுரை - ஒரு உட்டோ பியா

பத்ரி என்பவர் இந்தியாவில் ஏழ்மை ஒழிப்பில் அக்கறை செலுத்தி அதற்க்கான ஒரு தீர்வாக பொருளாதார அமைப்பு ஒன்றை தனது கட்டுரையில் குறிப்பிட்டு எழுதியிருந்தார்.


பத்ரியின் நல்ல நோக்கங்கள் பாராட்டுக்கு உரியது.

அந்த கட்டுரை நல்ல விசய்ம்தான்.

முதலாளித்துவ வளர்ச்சிக்கு இது போன்ற பொருளாதார அமைப்புதான் இன்றைய இந்தியாவின் தேவை. இத்துடன் துண்டு துக்காடாவாக இருக்கும் நிலங்களை இணைத்து கூட்டுறவு பண்ணைகள் மூலம் ஒருங்கிணைந்த மையப்படுத்தப்பட்ட முன்னேறிய வடிவத்தில் விவசாய உற்பத்தியும் மாற்றி அமைக்கப்பட்டால், நீங்கள் மேற்கூறிய பொருளாதார அமைப்பு ஒரளவு புதிய ஜன நாயாக புரட்சிக்கு பிந்தைய இந்திய பொருளாதார அமைப்பை ஒத்திருக்கிறது.


புதிய ஜனநாயக பொருளாதார அமைப்புக்கும், பத்ரி கூறிய அமைப்புக்கும் உள்ள மிக மிக முக்கியாமான வித்தியாசம் என்ன என்பதையும், அந்த வித்தியாசங்களின் அடிப்படையில் பத்ரி கூறிய அமைப்பு எப்ப்டி ஒரு உட்டோ பியன் கனவு என்பதையும் விளக்குகிறேன்.


#1) விவசாயத்தை - விவசாயிகளை விரட்டயடிக்காமல், முதலாளித்துவ மயமாக்கும் விசயம் நீங்கள் மேற்கூறிய பொருளாதார அமைப்பில் இல்லை என்பது ஒரு முக்கியமான விசயம்.

#2) மற்றொரு விசயம் இந்த பொருளாதார சீர்திருத்தம், எந்த விதமான அரசு அதிகாரம் செலுத்தும் போது நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதில்தான் இந்த பொருளாதார அமைப்பு வரமா, சபாமா என்பது அடங்கியுள்ளது.


*********
முதல் விசயத்தில் விவாதிக்க ஒன்றுமில்லை. அது வெளிப்படையாக தெரியும் விசயம்.

இரண்டாவது விசய்ம்தான் சிறிது விளக்கம் தேவைப்படுகிறது.

பத்ரி, மேற்சொன்ன பொருளாதார அமைப்பு(விவசாய சீர்திருத்தம் தவிர்த்த) இந்தியா முழுவதும் வீச்சாக அமல் படுத்தப்படுமா?


அமல்படுத்தப்படுவதற்க்கான(இதே வடிவத்தில் இல்லாவிட்டாலும் வேறு வடிவங்களில் - Ex. உலக வங்கி உதவியுடன் தற்பொழுது செயல்படுத்தப்படும் கிராம சுய தேவை பூர்த்தி செய்யும் திட்டங்கள்) சாத்தியம் அதிகமுள்ளது. இதைப் பற்றி இந்த பின்னூட்டத்தின் பிற்பகுதியில் சொல்கிறேன். அவ்வாறு அமல் படுத்தப்படுவதில் இந்தியாவின் வளங்களை கொள்ளையிடும் ஏகாதிபத்திய சதியும் அடங்கியுள்ளது என்பதை மட்டும் இப்பொழுது குறிப்பிடுகிறேன்.


இது போல ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் மக்கள் தேவைக்காக உற்பத்தி செய்வது தற்பொழுது கூட்டுறவு பண்ணைகளின் கையில் உள்ளதால் அதில் சேகரமாகும் மூலதனம் மீண்டும் மக்கள் நலனுக்கு செலவழிக்கப்படுகிறது.

இதில் குறிப்பிட்ட அளவு தனியார் மூலதனத்தை அனுமதிப்பதும் சரிதான். ஆனால் எந்த அமைப்பில் இந்த கிராம பொருளாதார சீரமைப்பு நடைபெறுகிறது?


இந்தியவின் அரசியல் பொருளாதார மூக்காணங் கயிறு முற்று முதலாக ஏகாதிபத்தியங்களின், MNC க்களின் கையில் இருக்கும் ஒரு சூழலில் நீங்கள் மேற்கூறிய பொருளாதார அமைப்பு நடைமுறைக்கு வருகிறது. (தனித் தனியாக பல இடங்களில்(ஒரு 1000 கிராமங்களுக்கு ஒரு மண்டலம் என்று வைத்துக் கொள்வோம்)).


இதில் தனியார் முதலீடும் வருகிறது. இதன் வளர்ச்சி காலப்போக்கில்(ரொம்ப காலமெல்லாம ஆகாது) கிராம வளங்கள் அனைத்தும், ஒரு சில தனியார் வசம் - ஏற்கனவே சாதி மற்றும் இன்னபிற நிலபிரபுத்துவ பிற்போக்கு தளைகளால் சக்திவாய்ந்தவர்கள் - கையில் சென்று மையப்படுத்தப்படும், இதே நேரத்தில் மக்கள் அரசு என்பதையும் நம்பி இல்லாமல், தங்களது அத்தனை தேவையையும் பணம் கொடுத்து வாங்கப் பழக்கப்பட்டிருப்பார்கள். (இப்படி ஒரு உணர்வுக்கு மக்கள் வந்தடைவதில், MNCக்கு உள்ள அட்வான்டேஜ் என்ன என்பதை கடைசிப் பகுதியில் சொல்கிறேன்.)

இந்த சமயத்தில் பகுதி அளவில் வளர்ச்சியடைந்த அந்த முதலாளிகளை தரகு முதலாளிகள் அல்லது MNCக்கள் விலைக்கு வாங்கி(acquisition) தங்களது சந்தையை விரிவுபடுத்திக் கொள்வார்கள். இந்த இடத்தில் இந்தியாவின் கிராம வளங்களையும், சந்தையையும் கையகப்படுத்தும் ஏகாதிபத்திய தந்திரம் நிறைவடைகிறது.


இதற்க்கு ஏன், ஏகாதிபத்தியங்கள்(WTO, Worl Bank) தலையை சுற்றி மூக்கைத் தொடும் ஒரு process-யை தேர்ந்தெடுக்கிறார்கள்?


#1)இந்தியா மிகப் பெரிய சந்தை. இந்தியாவில் தற்பொழுது MNC க்களின் கையை கிட்டும் அளவில் உள்ள சந்தையே மிகப் பெரிது. ஆனால் அந்த சந்தை இந்தியாவின் மக்கள் தொகையுடன் ஒப்பிடும் பொழுது மிக சிறிது(30 கோடி - rough estimation).

மீதியுள்ள 90 கோடி பெரும்பாலும் சிறு முதலாளிகள், அரசு நிறுவனங்கள், கிராம உதிரி உற்பத்தி நிலையங்கள்(துண்டு நிலங்கள் etc) கையில் உள்ளன. இந்த சந்தை ஏகாதிபத்தியங்க்ளின் target.

#2) இந்தியாவின் வளங்கள் - தண்ணீர், நிலம் பிரதானமாக - இன்னும் நிலபிரபுத்துவ பிற்போக்கு கிராம சார்ந்ததாக உள்ளது, இந்த வளங்களை கைப்பற்றை தனது சந்தை தேவைக்கு உபயோகப்படுத்துவது இரண்டாவது target.

இந்த இரண்டு விசயத்திலும் நம்மிடம் போட்டி போடும் நம்மை விஞ்சும் ஒரு நாடு - சீனா.

ஆனால் சீனா அரசு ஒரு கம்யுனிஸ்டு அரசாக இன்று இல்லாவிட்டாலும் கூட, அது ஒரளவுக்கு தேசிய முதாலாளிகளின் நலன்களுக்கான அரசு என்பதை சொல்லிவிடலாம். அவர்களின் சந்தையும், வளங்களும் ஏற்கனவே முதலாளித்துவ உற்பத்தி முறை நன்கு வளரந்த அந்த ஊர் தேசிய முதலாளிகள் கையில் இருப்பதும், MNC - க்கள் இந்தியாவில் செய்வது போல் அங்கு விளையாட முடியாது என்பதும் சேர்ந்து இந்தியாவை போட்டியின்றி முதல் இடத்தில் வைக்கிறது.


ஆக, இப்படி ஒரு மிக மிக முக்க்யாமான ஒரு சந்தையில்- ஒரு வளங்களுக்கான பின் நிலத்தில் , நடைமுறைப்படுத்தப்படும் அவர்களின் சதி திட்டம் வெற்றியை உறுதிப் படுத்தும் விதமாக பல இடங்களில் பரிசோதித்த மாடல்களின் விளைவான ஒரு திட்டமாக இருக்க வேண்டும்.


MNC -க்களுக்கு ஏற்கனவே லத்தீன் அமேரிக்க நாடுகளில் படு மோசமான அனுபவங்க்ள் உண்டு. பல இடங்களில் MNC-க்களின் சேவையால் ஆத்திரமுற்று மக்கள் பல கம்பேனிகளை அடித்து விரட்டியிருக்கிறார்கள் (அப்படி வெளியேறிய கம்பேனிகள் GATS போன்ற ஒப்பந்தத்தின் சரத்துக்களில் உள்ளபடி அந்த அரசாங்கங்களிடமிருந்து நஸ்டயீடு பெற்றுவிட்டன என்பது இன்னோரு கொடுமையான விசயம் - இந்தியாவில் இதற்க்கு உதாரணம் மகாராட்டிர என்ரானுக்கு மின்சாரம் தாயரிக்காமல் இருக்க ஒவ்வொரு வருடமும் சில நூறு கோடிகள் கொடுத்த விசயம்).
அந்த அனுபவங்களிலிருந்து அவர்கள் கற்றுக் கொண்டது, மக்கள் விலை கொடுத்து வாங்க பழக்கப்படுத்த வேண்டும் என்பதும், தங்களது பிரச்சனைகளுக்கு அரசையையோ வேறு யாரையுமே நிர்பந்திக்கூடாது எனும் எண்ணத்தை தார்மீக ரீதியாக அவர்கள் மனதில் உருவாக்குவதும். அதாவது தமது பிரச்சனைக்கு தான் தான் காரணம் என்ற உணர்வை மக்களிடம் உருவாக்குவதுதான்.


அதாவது பின்வரும் எடுத்துக்காட்டை பார்க்கவும்,

////

ஒரு தலைவர்: இந்த கம்பேனியின் சுரண்டலை எதிர்த்து போராடி அரசை கேள்வி கேட்டு போராட வேண்டும்.

மக்கள்: அரசு என்னப்பா செய்யும், நாமதான 10 வருச ஒப்பந்தம் ஒரு கோடி ருபாய் வாங்கிக்கிட்டு தண்ணீய அவனுக்கு வித்தோமே. எல்லாம் சட்டப்படி நாம செஞ்ச தப்பு. அந்த கம்பேனிட்ட ஏதாவது பேசி வேலை ஆகுதானு பார்ப்பம். அதவிட்டு போராடுனா, Govt போலிசோட வந்து அடிச்சு நொறுக்கிடுவான் - அரசுக்கு சட்ட ஒழுங்கு ரொம்ப முக்க்யம், அரசு, அவன் கடமையை செய்ய வேண்டாமா?....(அந்த கம்பேனி விலை குறைவாக தண்ணீர் கொடுத்தால் தரம் குறைவாகத்தான் கொடுப்பேன் என்று மோசமான தண்ணீரை கிராமத்துக்கும், நல்ல சுத்திகரிக்கப்பட்ட நீரை ஐரோப்பவிற்க்கும் ஏற்றுமதி செய்யும் - அந்த சமயத்தில் ஐரொப்பாவில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பஞ்சத்தில் லாபம் பார்ப்பதற்க்காக. இதனை ஒத்த அனுபவம் பொலிவியா கொச்சபம்ப நகரத்தில் நடந்து, மக்களே அணீதிரண்டு அந்த கம்பேனி அடித்து விரட்டினர்.)

////



தண்ணீர் போன்ற அதி அவசிய பொருட்களை விலை கொடுத்து வாங்க மக்களை பழக்கப்படுத்துதல் என்ற சரத்து GATS ஒப்பந்தத்தில் உள்ள விசய்ம்.

இன்னொரு முக்கிய சரத்து:

லாபத்தை அரசு உறுதிப்படுத்த வேண்டும்(அதாவது புரட்சி, போர் அல்லது வேறு காரணத்தால் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்ப்பட்டால் அரசு நஸ்டஈடு தர வேண்டும் - Ex: என்ரான்)



பத்ரியின் அமைப்பு ஏகாதிபத்திய சேவை நோக்கி போவதற்க்கும், இதனை ஒத்த புதிய ஜனநாயக பொருளாதார அமைப்பு மக்கள் சேவையை நோக்கி போவதற்க்கும் உள்ள முக்கிய காரணங்களில் ஒன்று அதிகாரத்தில் உள்ள அரசு எனில்,

இன்னோரு முக்கிய காரணம்,

பத்ரியின் அமைப்பு தவிர்க்க இயலாமல் தனியார்மயத்தை நோக்கிப் போகும்(சந்தை தேவைதான் அதை ஒந்தித் தள்ளும், மக்களின் தேவையல்ல)ஆனால் புதிய ஜனநாயக அமைப்பு முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சியின் தேவைக்கான அளவில் தனியார் மயத்தை வைத்துக் கொண்டு அந்த வரம்பை எட்டும் போக்கில் தனியாரின் தேவை சிறிது சிறிதாக சுருங்கி இறுதியில் இல்லாமல் போய்விடும்.

ஆக, மேற் சொன்ன இந்த காரணங்களினால்தான் பத்ரி சிலாகித்து எழுதியிருந்த பொருளாதார அமைப்பு அதன் உண்மையான வர்க்கச் சார்பில் ஒரு கானல் நீராக/ஏகாதிபத்திய சேவை செய்வதாக உள்ளது.


பத்ரி மற்றும் இந்த பொருளாதார அமைப்புக்கு பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஆனால் இந்த அமைப்பு வெற்றிகரமாக மக்களின் வாழ்வை வளம் செய்ய போதுமான நிலைமைகள் இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ளாமல் இருப்பது பகுத்தறிவாக இருக்காது.

மேலும், பத்ரியே சொல்வது போல் அந்த சிறு பகுதியே 6 கோடி அளவிலான சந்தையைக் கொண்டுள்ளது. அதை MNCக்கள் விட்டு வைக்கும் என்ற நம்பிக்கைக்கு உத்திரவாதம் கொடுக்கும் அள்விற்க்கு நம்மை ஆள்பவர்கள் நேர்மையாக இல்லை என்பதையும், அதாவது சாதரண(commener) மக்கள் நலனை முன்னிறுத்தும் ஒரு அரசு ஆட்சி செய்யவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Monday, August 14, 2006

அடிமை நாடும், போலி சுதந்திரமும்

சுதந்திரமும் சூழ்ச்சியும்:

1947 - இல் நாம் பெற்றது சுதந்திரமல்ல; அது போலி சுதந்திரம். வெள்ளையன் இந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்படவில்லை; தனது விசுவாசமான கையாட்களிடம் அவன் அதிகாரத்தைக் கைமாற்றிக் கொடுத்தான். பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான மும்பை கடற்படை வீரர்களின் எழுச்சியும் தெலிங்கானா விவசாயிகளின் ஆயுதப் போராட்டமும் நாடெங்கும் பற்றிப் படர்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களும், அன்று காங்கிரசு - முஸ்லிம் லீக் தலைமைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு புரட்சிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருந்தன.


ஒரு மக்கள் பேரெழுச்சியால் தூக்கியெறியப்படுவோம் என்று அஞ்சி, இந்தியாவைத் திரைமறைவிலிருந்து ஆட்டி வைக்கும் திட்டத்துடன், தனது கையாட்களான காங்கிரசிடமும் முஸ்லீம் லீகிடமும் அரசு அதிகாரத்தை ஒப்படைத்தது பிரிட்டிஷ் அரசு. இந்தப் போலி சுதந்திரத்திற்கு வயது 60.


இன்று, வாயளவில் சுதந்திரம் என்று பீற்றிக் கொள்வதற்குக் கூட வழியில்லாமல், வெளிப்படையாகவே நம் நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன ஏகாதிபத்திய வல்லரசுகள். தற்போது நம்மீது திணிக்கப்படும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையின் உண்மையான பொருள் மறுகாலனியாதிக்கம் என்பதுதான். நமது நாட்டின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகள், மக்களின் தேவையையோ நாட்டு நலனையோ கணக்கில் கொண்டு வகுக்கப்படுவதில்லை. மாறாக, உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம், சர்வதேச நாணய நிதியம், பன்னாட்டு நிறுவனங்கள் ஆகிய ஏகாதிபத்திய நிறுவனங்களின் ஆணையைத்தான் எல்லா அரசாங்கங்களும் பணிவுடன் அமல்படுத்தி வருகின்றன.


இந்தக் கொள்கைகளால் இந்தியத் தரகு முதலாளிகளின் லாபம் விண்ணை முட்டுமளவு உயர்கிறது. உழைக்கும் மக்களின் வாழ்க்கையோ மரணக் குழிக்குள் சரிகிறது. இது தெரிந்தும் "இந்தியா ஒளிர்கிறது" என்று குதூகலிக்கிறார்கள் ஏகாதிபத்திய அடிமைகள். உலகையே தன் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்காகப் போர்வெறி பிடித்து அலையும் அமேரிக்க வல்லரசின் எடுபிடியாகவும் ஆசியப் பகுதிக்கான அடியாளாகவும் இந்தியா மாற்றப்பட்டு விட்டது. இந்த அடிமைகளோ, "இந்தியா வல்லரசாவதற்க்கு இதுதான் சிறந்த வழி" என்று குதூகலிக்கிறார்கள்.


இவர்கள் சுதந்திர உணர்வற்ற பிழைப்புவாதிகள், நாட்டுப்பற்றும் சுயமரியாதை உணர்வுமற்ற புழுக்கள் - ஆனால் படித்த புழுக்கள், "ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், ஹார்வர்டு, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் எனப் படித்துப் பட்டம் வாங்கி பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரிகளாகி லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம்; குடும்பத்தோடு அமேரிக்காவில் குடியேறலாம்; பன்னாட்டு முதலாளிகளுடன் சேர்ந்து கூட்டாக இந்தியாவைக் கொள்ளையிடலாம்" என்றெல்லாம் கனவு காணும் இத்தகைய அற்பர்கள்தான் மறுகாலனியாக்க அடிமைத்தனத்தை முன்னேற்றம் என்று கூறி நம்மை ஏமாற்றுகிறார்கள்.


அன்று பகத்சிங் முதலான போராளிகள் நாட்டு விடுதலைக்காக தூக்கு மேடையில் நின்று கொண்டிருந்த போது இத்தகைய மானமற்ற புழுக்கள் பிரிட்டிஷ் அரசின் பதவி நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள். கலெக்டராக, ஜட்ஜாக, போலீசு அதிகாரியாக, அமைச்சராக, துரைமார்களுக்கு தொண்டூழியம் செய்யும் விசுவாசமான அரசு ஊழியர்களாக இருந்து கொண்டு வெள்ளைக்காரனின் நிர்வாகத்திறனை மெச்சி, அவன் ஆட்சி நீடிக்க வேண்டுமெனப் பிரார்த்தனையும் செய்து கொண்டிருந்தார்கள்.


அன்றைக்கும் இன்றைக்கும் வேறென்ன வேறுபாடு? அதிகார நாற்காலியில் அந்நியன் நேரடியாக அமர்ந்திருந்தால்தான் காலனியாதிக்கமா? கல்லாவில் அமர்ந்திருந்தால்தான் கடைமுதலாளியா?


"பிரிட்டனின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அனைத்துக்கும் துணை நிற்க வேண்டுமென்றும், தன்னை மீறி வேறு அரசுகளுடன் உறவு வைத்துக் கொள்ளக் கூடாதென்றும் வெல்லெஸ்லியின் துணைப்படைக் கொள்கை அன்று இந்திய மன்னர்களை நிர்பந்தித்தது. இன்றைய அமேரிக்க - இந்திய இராணுவ ஒப்பந்தம், அமெரிக்காவின் ஆக்கரமிப்புப் போர்களுக்கேல்லாம் இந்திய இராணுவம் அடியாள் வேலை செய்ய வேண்டுமெனக் கட்டாயப்படுத்துகிறது, இரானுடன் உறவைத் துண்டிக்குமாறு உத்தரவிடுகிறது, இந்திய அணு ஆயத உற்பத்திக்குத் தடை விதிக்கிறது.


அன்று டல்ஹவுஸியின் வாரிசிலிக் கொள்கை, வாரிசு இல்லாத மன்னர்களின் நாட்டை இணைத்துக் கொள்வதாகக் தொடங்கி, பின்னர் எல்லா சமஸ்தானங்களையும் ஆக்கிரமித்துக் கொள்வதில் முடிந்தது. இன்றோ, 'நட்டமாகும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம்' எனத் தொடங்கிய தனியார்மயக் கொள்கை, லாபமீட்டும் பொதுத்துறைகளையும் பன்னாட்டுக் கம்பெனிகளின் பசிக்கு விருந்தாக்க வேண்டும் என்று வளர்ந்திருக்கிறது.


அன்று ஜமீன்தாரி, ரயத்வாரி, மகல்வாரி முறைகள் மூலம் விவசாயிகளைப் பிழிந்து கஜனாவை நிரப்பியது பிரிட்டிஷ் அரசு. இன்று அரசுக் கொள்முதல் ரத்து, மானிய வெட்டு, தானியக் கொள்முதலில் அன்னியக் கம்பெனிகள், அதிலும் ஊகவணிகம், விவசாயிகளின் பாரம்பரிய விதைகளையே அன்னியன் உடைமையாக்குவது போன்ற சதிகள் மூலம் விவசாயியைக் கடனாளியாக்கி விவசாயத்தை விட்டே துரத்துகிறது அரசு.


அன்று கந்து வட்டிக்குக் கடன் பட்ட தமிழ்நாட்டின் விவசாயிகளை ஏமாற்றிக் கப்பலேற்றி, இலங்கையின் தேயிலைத் தோட்டங்களிலும், மலேசியாவின் ரப்பர் தோட்டங்களிலும் அவர்களைக் கொத்தடிமைகளாக்கிக் கொண்டது பிரிட்டிஷ் அரசு. இன்றோ கடன்பட்ட விவசாயிகளின் பிள்ளைகள், 'கொத்தடிமையாவோம்' என்று தெரிந்தே மலேசியாவுக்கு ஓடுகிறார்கள். பஹரைனில் தீக்கிரையாகி சவப்பெட்டியில் வீடு திரும்புகிறார்கள்.


எதுவும் பழங்கதையல்ல. கடந்த காலத்தின் காலனியாதிக்கக் கொடுமைகளைப் பூதக் கண்ணாடியால் பெருக்கிக் காட்டியதைப் போல இன்று நம் கண் முன்னே காட்சி தருகிறது மறுகாலனியாதிக்கம். இதற்கெதிராக நம்மைப் போராட தூண்டும் உந்துவிசையாக, இந்திய விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியாக, 200 ஆண்டுகளுக்கு முன்னரே வெள்ளையனுக்கு எதிராக வீரச்சமர் புரிந்திருக்கிறார்கள் தென்னகத்தின் வீரர்கள், தமிழகத்தின் வீரர்கள்!




விடுதலைப் போராட்ட வீர வரலாறு-ஒரு பார்வை:

1801 ஜூன் மாதம் திருச்சியிலிருந்து சின்ன மருது வெளியிட்ட பிரகடனம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. "இந்தியத் துணைக்கண்டத்திலிருந்தே வெள்ளையர்களை விரட்டியடிக்க சாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்று திரளுமாறு" மக்களை அறை கூவி அழைக்கிறான் சின்ன மருது. இந்தியா ஒரு நாடு என்ற கருத்து அக்காலத்திய பேரரசர்களிடமே உருவாகியிராத போது துணைக் கண்டத்தின் விடுதலைக்கே குரல் கொடுத்த இந்த அறிக்கைதான் இந்தியாவின் முதல் விடுதலைப் போர்ப் பிரகடனம்.


1795-இல் வெள்ளையருக்கெதிராக திப்பு நடத்திய போரில் தொடங்கி, 1806-இல் வேலூர்க் கோட்டைச் சிறையில் சிப்பாய்கள் நடத்திய புரட்சி வரை நீடித்த இந்தப் போர்தான் இந்தியாவின் உண்மையான முதல் சுதந்திரப் போர். ஆனால் தென்னிந்திய வரலாற்றைப் புறக்கணிப்பது, இசுலாமியர்களை புறக்கணிப்பது என்ற இந்து தேசியக் கண்ணோட்டத்தின் காரணமாக, தமிழகம் மற்றும் தென்னிந்தியாவின் பெருமைமிக்க இந்த விடுதலைப் போராட்ட மரபு இந்திய வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.


1799-இல் சீரங்கப்பட்டினம் கோட்டையின் வாசலில் ஒரு சாதரணப் போர்வீரனைப் போலப் போரிட்டு மடிந்தான் திப்பு சுல்தான். நிஜாமும், பேஷ்வாவும், ஆறுகாட்டு நவாபும் துரோகமிழைத்துவிட்ட நிலையில் தென்னிந்தியா முழுவதும் உள்ள விடுதலை வீரர்களுடன் கூட்டணி அமைத்தான். தீரன் சின்னமலை திப்புவுடன் நின்று வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டான். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு சிறையிலிருந்து தப்பிய ஊமைத்துரைக்கு சின்ன மருது பாதுகாப்பு கொடுத்தான். கும்பினியாட்சியை எதிர்த்து சின்ன மருது நடத்திய போருக்கு திப்பு ஆயுதமும் நிதி உதவியும் வழங்கினான்.


திப்பு சுல்தான் கேளிக்கைகளில் திளைத்திருந்த மன்னனுமல்ல, சின்ன மருது கிணற்றுத் தவளையை ஒத்த பாளையக்காரனுமல்ல; இருவரும் ஆங்கிலம், பிரெஞ்சு உள்ளிட்ட பல மொழி அறிந்தவர்கள். பிரெஞ்சுப் புரட்சியால் கவரப்பட்ட திப்பு தன்னை 'குடிமகன் திப்பு' என்றே அழைத்துக் கொண்டான். சின்ன மருதுவோ "ஏழை மக்கள் கண்ணீரில்லாத வாழ்க்கை வாழ கும்பினியாரை எதிர்த்துப் போரிட வேண்டும்" என்று கூறி விடுதலைப் போருக்கு மக்களையும் அறைகூவி அழைத்தான்.


சின்னமலை, பூலித்தேவன், சின்ன மருது, வேலு நாச்சியார், ஒண்டிப்பகடை, சுந்தரலிங்கம், கட்டபொம்மன், ஊமைத்துரை, வெள்ளையத்தேவன் போன்றோர் தனித்தனியாகப் போராடி மடிந்த வீரர்கள் அல்ல. அவர்கள் தமக்குள் கூட்டிணைவுகளை உருவாக்கியிருந்தனர். நெல்லைக் கூட்டிணைவுக்கு கட்டபொம்மனும், திண்டுக்கல் கூட்டிணைவுக்கு கோபால நாயக்கரும், கன்னட நாட்டில் துந்தாஜியும், கேரளத்தில் கேரளவர்மனும், கோவையில் கானிஜகானும் தலைமை தாங்கினர். அனைவரும் இணைந்து உருவாக்கியிருந்த 'தீபகற்பக் கூட்டிணைவு' தனது ஆட்சிக்கே பேராபத்து என்று கும்பினிக்காரன் ஆஞ்சினான்.


1800-1801-ஆம் ஆண்டுகளில் மிகத் தீவிரமாக நடைபெற்ற இந்தப் போரில் சுமார் 30,000 வீரர்கள் தென்னிந்தியா முழுவதும் கும்பினியாட்சியை நிலைகுலைய வைத்திருக்கின்றனர். சாதி மத வேறுபாடுகளைக் கடந்து கிளர்ந்தெழுந்த இந்தப் போராட்டம் 1806-ஆம் ஆண்டு வேலூர் புரட்சியில் முடிவடைந்தது. இந்த விடுதலை வீரர்கள் காலனியாதிக்கத்தை ஒழிப்பதுடன் தம் கடமை முடிந்ததாகக் கருதவில்லை. கண்ணீரில்லாத மகிழ்ச்சியான வாழ்வை மக்கள் பெற வேண்டும் எனக் கனவு கண்டான் சின்ன மருது. பிரெஞ்சு புரட்சியால் கவரப்பட்ட திப்புவோ நாட்டைத் தொழில்மயமாக்கவும், மக்களுக்கு நல்வாழ்வு வழங்கவும் கனவு கண்டான். ஒரு சோசலிச இந்தியாவைப் படைக்க விழைந்தான் பகத்சிங்.



தூரோக வரலாறும் - தேர்தல் அரசியலும்:

அன்று அவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்; இன்றோ அவர்களது கனவும் தோற்றுக் கொண்டிருக்கிறது. பகத்சிங்கின் மண்ணிலிருந்து ஒரு மண்புழுவாம் மன்மோகன் சிங்! மருதுவின் சிவகங்கை மண்ணிலிருந்து சிரழிவுவாதி சிதம்பரம்! வீரர்களின் மண்ணிலிருந்து தப்பிப் பிறந்துவிட்ட இந்த ஈனர்கள், கூசாமல் துரோகிகளின் மொழியில் பேசுகிறார்கள்.


சின்ன மருதுவைத் தூக்கிலிட்ட பின் சிவகங்கை அரியணையை கும்பினியாரிடமிருந்து பிச்சையாகப் பெற்ற கவுரி வல்லபத் தேவன், கர்னல் அக்னியூவின் காலில் விழுந்து வணங்கினான் என்கின்றன ஆவணங்கள். "200 ஆண்டுகள் எங்களுடன் வணிகம் செய்தீர்கள். மேலும் 200 ஆண்டுகள் வணிகம் செய்ய உங்களை அழைக்கிறோம்" என்று கூறி இன்றைய ஐரோப்பிய முதலாளிகளிடம் பல்லிளிக்கிறார் ப.சிதம்பரம்.


'கடவுளே' என்று கும்பினியாரை விளித்துக் கடிதம் எழுதிய துரோகி தொண்டைமான், சின்ன மருதுவை 'நாய்' என்று கடிந்து ஏசுகிறான். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்குச் சென்று உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங்கோ காலனியாட்சி செய்த நன்மைகளுக்காக பிரிட்டனுக்கு நன்றி கூறுகிறார். ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக போராடும் உண்மையான நாட்டுப்பற்றாளகளான நக்சல்பாரிகளை "இந்தியாவின் மிகப்பெரிய உள் நாட்டு அபாயம்" என்று கூறி ஒடுக்குவதற்கு திட்டம் தீட்டுகிறார்.


அன்று கட்டபொம்மனைப் பிடித்துக் கொடுத்தது தொண்டைமானின் கூலிப்படை. இன்று கோலாவுக்கு எதிராக போராடும் அனைவரையும் ஒடுக்க நெல்லை மண்ணிலேயே எதிரிக்கு ஏவல் செய்கிறது தமிழக போலீசு. அன்று வெள்ளையனை எதிர்த்த விடுதலை வீரர்களைத் தன்னுடைய படைகளைக் கொண்டே ஒடுக்கினான் ஆற்காட்டு நவாப்; இன்று, ஜப்பானிய ஹோண்டா நிர்வாகத்தின் அடக்குமுறையை எதிர்க்கும் தொழிலாளர்களை நரவேட்டையாடுகிறது அரியானா போலீசு.



மறுகாலனியாதிக்கத்தை முறியடிக்க உறுதியெடுப்போம்:

முந்தைய காலனியாதிக்கத்தைக் காட்டிலும் கொடியது இந்த மறுகாலனியாதிக்கம். இதனை முன்னேற்றம் என்று கூறி மக்களை மூளைச்சலவை செய்து கொண்டிருக்கிறது ஆளும் வர்க்கம். பதவிக்கும் பவிசுக்கும் ஆசைப்பட்டு அன்று ஆங்கிலேயருக்குச் சேவகம் செய்தவர்களை 'ஈனப்பிறவிகள்' என்றான் சின்ன மருது. இன்று நாடே அன்னியனுக்கு அடிமையாகி வருவதை அறிந்தும் அமைதி காப்பதும், அலட்சியம் காட்டுவதும் கூட ஈனச் செயல்தான்.


விடுதலைப் போரில் முதல் குரல் எழுப்பிய தமிழகத்திலிருந்து இன்றைய மறுகலனியாக்க எதிர்ப்புப் போரும் துவங்கட்டும்! விடுதலைப் போராளிகளின் தியாக வரலாறு நம்மை முன்னோக்கிச் செலுத்தும் உந்து விசையாகட்டும்!


************

மேலே உள்ள கட்டுரை புதிய காற்று என்ற வலைப்பூவில் இருந்த ஒரு பதிவிலிருந்து மறுபதிப்பு செய்யப்படுகிறது.

*****

தொடர்புடைய பதிவுகள்:

Wednesday, August 02, 2006

அக்காமாலா, கப்ஸி, இம்சை அரசனும் - தாமிரபரணியும்

ஒரு மறுகாலனியாதிக்கச் சதியின் கிளைக் கதை

(இக்கட்டுரையின் கீழே தாமிரபரணி கோக் பிரச்சனை பற்றிய ஒரு presentation இணைக்கப்பட்டுள்ளது).

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு அருமையான சிறு பிரசுரத்தையும் படிக்கவும்:

தண்ணீர் தாகத்திற்க்கா, லாபத்திற்க்கா?

*************


அக்காமால/கப்ஸி நிர்வாகி: நன்கு காய்ச்சிய பின்பு ஆற வைத்து அதில் ஒரு முயலை மூன்று நாட்கள் ஊறப்போட வேண்டும்.


இம்சை அரசன்: ஓவ்வ்.....


அ.க.நி: பிறகு, அதை பாம்பு கழ்ட்டி போட்ட சட்டையில் ஊற்றி நன்கு ஊறப்போட வேண்டும்.


இம்சை அரசன்: ஓவ்வ்வ்வ்வ்... (வாந்தியை காவலனின் முகத்தில் அபிசேகம் செய்கிறார்).


அக்காமால், கப்ஸி பானங்களின் தாயாரிப்பு முறை பற்றி இம்சை அரசனில் வரும் நகைச்சுவை காட்சியில் வரும் வசனங்கள் மேற்சொன்னவை.


ஏற்கனவே BJP ஆட்சி செய்த பொழுது இந்த குளிர்பானங்களில் பூச்சிக் கொல்லி மருந்து இருப்பதை கண்டுபிடித்து அது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த விசயம் எல்லாம் தெரிந்தும் கூட, வழக்கம் போல் நடுத்தர வர்க்க மோகிகள் கோகோகோலா, பெப்ஸியை தொடர்ந்து பருகிக் கொண்டு "ஏ தில் மாங்கே மோர்' என்று கூறி அலப்பரையாக பவனி வந்து கொண்டிருக்கிறார்கள். இதையும்கூட இம்சை அரசனில் நக்கல் செய்திருப்பார்கள்.


இப்பொழுது இந்த விசயத்தை ஊர்ஜிதம் செய்யும் விதமாக மீண்டும் இந்த குளிர்பானங்களில் பூச்சிக் கொல்லி இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.


மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட, அந்த பூச்சிக் கொல்லி மருந்து கலப்படத்திற்க்கு, பிற்பாடும் கூட நிலைமை இன்றுவரை மாறவில்லி என்று அந்த செய்தி கூறுகிறது (cnnibn breaking news - cnnibn.com). அந்த சம்யத்தில், பாரளுமன்ற கூட்டு கமிட்டி(Joint Parliamentary Committee (JPC)) சமர்பித்த ஆலோசனைகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. உடல் நலத்திற்க்கு ஊறு விளைவிக்காமல் இருப்பதற்க்கு என்று நிர்னயிக்கப்பட்ட தரக் கட்டுப்பாட்டுகள் கம்பேனியின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டதாக் அந்த செய்தி கூறுகிறது.


2006 -ல் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment (CSE)) என்ற நிறுவனம் மீண்டும் இந்த குளீர்பானங்களை ஆய்வு செய்து பின்வரும் தகவல்களை வெளியிட்டுள்ளது.


12 மாநிலங்களில் உள்ள 25 கோக் மற்றும் பெப்ஸி நிறுவன பானங்களை தாயாரிக்கும் ஆலைகளிலிருந்து பெறப்பட்ட பாட்டில்களை ஆய்வு செய்ததில், பிரோ ஆப் இன்டியன் ஸ்டண்டார்டு பரிந்துரைக்கும் அளவை விட, சராசரியாக 24 மடங்கிற்க்கும் அதிகமாக பூச்சிக்கொல்லி மருந்தின அளவு இந்த குளிர்பானங்களில் இருக்கிறது.


கொல்கத்தவிலிருந்து எடுக்கப்பட்ட சாம்பிளில் லிந்தேன் என்ற மிகவும் அபாயகரமான நச்சு பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட 140 மடங்கிற்க்கும் அதிகமாக உள்ளது.


தானே விலிருந்து எடுக்கப்பட்ட சாம்பிளீல் நியுட்ராக்சின் குளோர்பிரிபோஸ் என்ற நச்சு 200 மட்ங்கு உள்ளது.


பூச்சிக் கொல்லிகள் இவ்வாறு உடலில் செர்வது உடனடி விளைவுகளை ஏற்படுத்தவிடினும். நீண்ட கால பயன்பாட்டில், மலட்டுத்தன்மை, கான்சர், வேறு இனம் தெரியாத வியதிகள். உடல் குறைபாடுகள், மரபனு குறைபாடுகள் என்று பல வகையில் ஒரு சமூகத்தையை பாதிக்கும் அபாயகரமானது.


CSE நடத்திய ஆய்வின் முடிவில், பூச்சிக் கொல்லிகள் 2003ல் இருந்த அளவுக்கும் இப்பொழுது 2006-ல் உள்ள அளவுக்கும் 30 மடங்கு அதிகரித்திருப்பதாக சொல்கிறது.


மேலும் மிக அபாயகரமான இன்டேன், DDT, மாலாதின் மற்றும் குளோர்ப்ய்ரிபொஸ் போன்ற நச்சுகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்ட எல்லா பானங்களிலும் இருப்பதாக CSE சொல்லுகிறது.


இப்படி வெளிப்படையாகவே விளம்பரம் செய்து நஞ்சை விற்பனை செய்யும் இவர்களை அரசு ஒன்றும் செய்வதில்லை. ஆனால் இந்திய மருந்து சந்தையை பன்னாட்டு கம்பேனிகளுக்கு திறந்து விடும் திட்டத்துடன் உள் நாட்டு மருந்து பொருட்களை தரம் என்று காரணம் கூறி தடை செய்கிறது இந்த அரசு.


தடை செய்யப்பட்ட அந்த விலை குறைந்த மருந்துக்களைத் தான் இது நாள் வரை ஏழை எளிய மக்கள் பயன்படுத்தி வந்தனர். patent rights-ன் மூலம் ஒரு புறம் மருந்து பொருள் விலைகளை ஏற்றிய அரசு மறுபுறம் மக்கள் நலம் என்று நாடகமாடி பன்னாட்டு கம்பேனிகளுக்கு மாமா வேலை செய்கிறது. அரசின் இந்த காலனியாதிக்க சேவை - கோக் மற்றும் மருந்துப் பொருட்களில் தரம் என்ற விசயத்தில் கடைபிடிக்கும் இரட்டை அனுகுமுறையின் மூலம் அம்பலமாகிறது.


மறுகாலனியாதிக்கச் சூழல் மக்களுக்கு கிடைத்து வந்த குறைந்த பட்ச ஜனநாயகத்தையும் கூட தடுக்கிறது. கோகோ கோலா என்ற விச பானம் உறப்த்தி செய்யும் நிறுவனத்தை, உள் நாட்டு உற்பத்தியாளர்களை நாசமாக்கிய கம்பேனியை இம்சை அரசனை போல போசித்து பாதுகாக்கும் இந்த அரசு, அதற்க்கு எதிராக ஒரு சிறு துரும்பு எடுத்துப் போட்டால் கூட அரசுக்கு எதிராக சதி என்று கூறி கைது செய்கிறது. இதன் மூலம் அரசு என்பது பன்னாட்டு கம்பேனிகள்தான் என்பதை சொல்லாமல் சொல்கிறது அரசு. புரிந்து கொள்ளாத மரமண்டைகள் இன்னும் அக்கமால, கப்ஸி குடித்துக் கொண்டு மாடுகளாக(அதுவும், எருமை மாடு) வலம் வந்து கொண்டிருக்கின்றன.


ம.க.இ.க பாடல் ஒன்று:
"தேசத் துரோகி ஆகனுமா பெப்ஸியக் குடி! - வெள்ளக் காரன் வாரிசாகனுமா கோலா குடி!"


ம.க.இ.க பிரசுரங்கள் கோக்கை "அமேரிக்க மூத்திரம்" என்று கூறி அதை சப்புக் கொட்டி பந்தாவாக குடிப்பவர்களை கேலி செய்கின்றன.


தாமிரபரனி பிரச்சனையில், குடிக்க தண்ணீரின்றி திருநெல்வேலி பகுதி மக்களே கஸ்டப்படும் பொழுது கோகோகோலாவுக்கு லிட்டர் 1.2 பைசாவுக்கு தண்ணீர் விற்ப்பது ஒரு பொறுப்புள்ள அரசு செய்யும் வேலையா என்று கேட்டு போராடிய ஜனநாயக சக்திகளுக்கு(ம.க.இ.க., CPI, CPM, தலித அமைப்புகள்) சிறைத்தணடனைதான் பரிசாக கிடைத்தது. வால்போஸ்டர ஒட்டிய ம.க.இ.க வை செர்ந்த ஒருவருக்கு அரசை எதிர்த்து சதி செய்ததாக சிறைத் தண்டனை (அந்த வால்போஸ்டரில் இருந்த வார்த்தைகள் - "அமெரிக்க கோக்கே வெளியேறு, கோக் மற்றும் பன்னாட்டு பொருட்களை எரித்து போராட்டம்").


தாமிரபரனி பிரச்சனை பற்றி எடுக்கப்பட்ட 'மூழ்கும் நதி'(தமுஎச) படத்தை திரையிட தடை போடப்பட்டது. கங்கைகொண்டான் பஞ்சாயத்தில் கோகோகோலாவுக்கு தடையாக தீர்மானம் நிறைவேற்றி விடுவார்கள் என்ற உளவுத்துறை செய்தியை அடிப்படையாக வைத்து கிராம பஞ்சாயத்து கூடும் அடிப்படை ஜன நாயக உரிமையை தடை செய்தார் கோகோகோலாவின் வாட்ச்மேனாக புல் டைம் வேலை பார்க்கும் கலெக்டர். இப்படி அரசும் அதன் இயந்திரங்களும் முழு வீச்சில் வாட்ச்மேன், கங்கானி, கூலிப்படை உத்தியோகம் பார்த்து கோகோகோலாவுக்கு பன்னாட்டு சேவையை செவ்வன செய்தன. இதை மீறி தீர்மானம் நிறைவேற்றிய பஞ்சாயத்து தலைவர் கம்சனை உற்சாக பானம் கொடுத்தே கொன்றது கோகோகோலா. இப்படி மறுகாலனியாதிக்கத்தின் கோர முகம் அப்பட்டமாக வெளியே தெரிந்தும்கூட சிலர் இந்த போலி ஜனநாயக அமைப்புக்கு முட்டு கொடுப்பது காரியவாதமான செயல்.


இந்த குளிர்பான நிறுவனங்களால் ஏற்படும் சூற்றுச்சூழல் மாசுபாட்டிற்க்கு கேரளா பிளச்சிமேடா ஒரு சிறந்த உதாரணம். மிளகு பயிரிடும் அளவு வளமான அந்த பூமி இன்று நஞ்சாக மாறிவிட்டது. காரணம், ஒரு லிட்டர் கோக்குக்கு 8 லிட்டர் நிலத்தடி நீரை நஞ்சாக்கும் தாயாரிப்பு முறையும், அதில் கிடைக்கும் அபாயகரமான நச்சு கழிவை குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு உரமாக விற்றதும்.


இந்த குளிர்பான நிறுவனங்களின் கோட்டம் லத்தின் அமேரிக்க நாடுகளில் மிகவும் மோசமாக உள்ளது. பொலிவியாவில் இதுவரை 8 தொழிற்சங்கத் தலைவர்களை அந்த நாட்டு பாரமிலிட்டரி படையின் துணையோடு படுகொலை செய்துள்ளது கோகோகோலா நிறுவனம். இதை குறிப்பிட்டு கண்டிக்கிறது பொலிவிய உயர் நீதிமன்றம்.


சமீபத்தில் இந்த நிறுவனங்களின் பானங்களை அமேரிக்கவிலிலுள்ள 11 யுனிவர்சிட்டிகள் தடை செய்தன. அதற்க்கு அவர்கள் சொன்ன காரணம்: இந்தியாவில் இந்த நிறுவனங்கள் செய்த சுற்றுசூழல் சீர்கேடுகள், லத்தின் அமெரிக்காவில் செய்த படுகொலைகள், மனித உரிமை மீறல் செய்ல்கள்.


அமேரிக்க இளைஞர்களின் இந்த நடவடிக்கை, இது போன்ற நிறுவனங்கள் ஆளூமைக்கு வருவதற்க்கு காரணாமான அரசியல் பொருளாதார அடித்தளம், ஏகாதிபத்திய சுரண்டல் பொருளாதாரத்துக்கும் இது போன்ற கம்பேனிகளுக்கும் உள்ள தொப்புள் கொடி உறவு போன்றவற்றை உணர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல. அதனாலேயே இந்த நடவடிக்கை வெறுமனே கோக்கை மற்றும் குற்றம் சாட்டி விலகி விடுகிறது, உண்மையான குற்றவாளியான ஏகாதிபத்தியத்தை இவர்கள் அடையாளம்கூட காணவில்லை.


கோக் ஒரு அடையாளம் மட்டுமே. அது மறுகாலனியாதிக்கத்தின் குறியீடு. கோக் தண்ணீர் தனியார்மயத்தின் ஒரு அம்சம், அவ்வளவே. சமீபத்தில் வந்த செய்திகள் பிரிட்டனில் இன்னும் சில வருடங்களில் மிகக் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை எதிர்பார்த்து தண்ணீர் சிக்கனம் பற்றி பிரச்சாரம் செய்கிறார்களாம். அவர்களுக்கு கவலையில்லை, தண்ணீர் பிரச்சனை வரும் காலத்தில் இந்தியாவின் அனைத்து நீராதரங்களும் பன்னாட்டு கம்பெனிகளின் கையில் இருக்கும்(தண்ணீர் வியாபாரத்தில் ஐரோப்பாதான் கிங்). தண்ணீர் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கு போகும். அதை சிலர் டெவலப்மென்ட் என்றும் கூறுவார்கள். ஆக உண்மையில் பிரச்சாரம் தேவைப்படுவது இந்தியாவில்.

சினிமா கதைகளில்தான் அநியாயம் நடக்கும் பொழுது ஹீரோ உக்கிரபுத்திரனைப் போல குதிரையிலோ அல்லது பறந்தோ வந்து நியாயத்தை நிலை நாட்டிச் செல்வார். உண்மையில் இப்படி தனி மனித சாகச படங்களை ஆளும் வர்க்கம் அனுமதிப்பது மக்கள் தங்களது கூட்டு சக்தியை உணர்வதை தடுக்கவும், மக்களது கோபங்களுக்கு அந்த படங்கள் வடிகாலாக இருப்பதுமே காரணம். மற்றபடி இதில் ஜன நாயகம் எல்லாம் ஒன்றும் கிடையாது. அப்படி உண்மையிலேயே ஜன நாயகம் இருந்தால் கோக் பிரச்சனையில் போஸ்டர் ஒட்டவும், 'மூழ்கும் நதி' படத்தை திரையிடவும் தடை போடுவதேன். வரலாற்றில் மக்கள் தங்களது விடுதலையை தாங்களேதான் போராடி பெற்றுள்ளனர். பிச்சையாக போடப்படுவது விடுதலையாக இருக்காது.


ஆகவே இந்த அநியாயங்களை, மறுகாலனியாதிக்கச் சதிகளை மக்கள்தான் வெகுண்டெழுந்து ஆங்காங்கே போராடி வீழ்த்த வேண்டும். தத்துவ பலம் கொண்ட புரட்சிகர அமைப்புகளில் மக்கள் அணிதிரண்டு தங்களது உண்மையான எதிரிகளான ஏகாதிபத்தியத்தையும் அவர்களின் பிரதிநிதிகளான பன்னாட்டு கம்பேனிகளின் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும். அவர்களின் இருப்பை கேள்விக் குறியாக்க வேண்டும். மறுகாலனியாதிக்க ஏஜென்டான இந்த போலி அரசை தூக்கியெறிய வேண்டும். இல்லையெனில் குடிக்க கோக் கூட இன்றி எதிர்கால சந்ததி தங்களுக்குள் சண்டையிட்டு தமது தாகத்தை தீர்த்துக் கொள்வர்கள்.


இத்துடன் சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மெயிலில் வந்த ஒரு Flash presentation-யை கீழே வழங்குகிறேன்.



Water - It's Not Fun
Water - It's Not F...
Hosted by eSnips

தொடர்புடைய சுட்டிகள்:

#a) தண்ணீர் தனியார்மயம்

#b) கோக் அடிமைத்தனத்தின் சுவை

#1) Indian Freedom and Imperialism - Immediately after August 15

#2) கடல் நீர் தனியார்மயம், காற்றும் ஆகலாம் எதிர்காலத்தில்

#4) கோக் அடிமைத்தனத்தின் சுவை

#5) தண்ணீரில் எழுதிய புதிய மனு நிதி


#6) நீரில் வணிகம், நீரில்லா துயரம்

#7) பாட்டில் தண்ணீர் பாண்டியர்களே கொஞ்சம் இங்கே பாருங்கள்

Related Posts with Thumbnails