TerrorisminFocus

Showing posts with label ஏகாதிபத்தியம். Show all posts
Showing posts with label ஏகாதிபத்தியம். Show all posts

Monday, July 12, 2010

மகளிர் சுய உதவிக் குழுக்களா? கந்துவட்டி புரோக்கர்களா?






வீட்டு வேலை செய்யும் அக்கா ஒருவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவரது குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை, குழந்தைகளின் படிப்பு என பல கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தேன். கடுமையாக உழைக்கும் அந்தப் பெண் எனக்குத் தெரிந்து காலையில் 7 மணிக்கு அவரை அந்தப் பகுதியில் பார்த்தால் இரவு பத்து பத்தரை வரை கூட அங்குதான் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருப்பார். மூன்று/நான்கு வீடுகளில் வேலை செய்யும் அந்தப் பெண் மாதம் 3000திலிருந்து 4000ரூபாய் வரை சம்பாதிக்கிறார். அவரது சம்பத்தியத்தை நம்பியே அவரது குடும்பம் உள்ளது. இதில்தான் படிப்புச் செலவு, வீட்டு வாடகை, மருத்துவச் செலவு என அனைத்தையும் செய்து கொள்கிறார்கள்.



இவர்களின் அன்றாடச் செலவுகளுக்கும், தீடீர்ச் செலவுகளுக்கும் இவர்களது சம்பாத்தியம் போதுவதில்லை. வங்கிகளோ இவர்களுக்கு கடன் கொடுப்பது இல்லை. இவர்களின் ஒரே புகலிடமாக சமீப காலம் வரை இருந்து வந்தது ஏலச் சீட்டுக்கள் எனப்படும் சிட்பண்ட்ஸ். அதற்கும் இப்போது ஏகப்பட்ட போடி என்று ஆகிவிட்டது. இன்னிலையில் இது போன்ற எளிய உழைக்கும் மக்களின் உடனடித் தேவைகளுக்கு கடன் கொடுத்து அவர்களது உழைப்பை வட்டியின் மூலம் சுரண்டுவதற்கு என்றே உலக வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டது மகளிர் சுய உதவிக் குழுக்கள். இது தவிர்த்து கிராம சந்தையை அபகரிக்கும் திட்டங்கள், மகளிர் சுய உதவிக் குழு மூலம் அமைப்பாக உள்ள பெண்களை அந்தப் பகுதி தொழிலாளர்களுக்கு எதிராக திருப்பி விடுவது (ஓசூர் டி வி எஸ்) உள்ளிட்ட உலக வங்கியின் பல்வேறு பயன் நோக்குகளை மகளிர் சுய உதவிக் குழு கொண்டுள்ளது.

இதன் மூலம் கடன் பெறுவது இவர்களுக்கு கிடைக்கும் எளிய வடிவிலான கடனாக உள்ளது. ஆனால் வட்டியோ கந்துவட்டியை மிஞ்சுகிறது. அந்த அக்கா சொன்ன கணக்குப்படி 10,000 ரூபாய்க்கு ஒன்றரை வருடம் வாரத் தவணை முறையில், வாரம் ஒன்றுக்கு 250 ரூபாய் கட்டுகிறார்கள். அதாவது வட்டியும் அசலும் சேர்த்து ஒரு மாதத்திற்கு 1000 ரூபாய்(4*250). ஒரு வருடத்திற்கு 12000 ரூபாய். ஆஹ, ஒன்றரை வருடத்திற்கு 18000 ரூபாய் வட்டியும் அசலுமாகக் கட்டுகிறார் அந்த உழைக்கும் பெண். இந்தப் பகுதியில் மட்டும் பத்துக் கணக்கில் சுய உதவிக் குழுக்கள் உள்ளன. அவற்றின் ஒரே தொழில் வட்டிக்கு விடுவது மட்டுமே. ஆரம்பத்தில் உழைக்கும் பெண்களின் தொழில் முனைவுக்கான ஒரு அமைப்பு என்று சொல்லப்பட்டது இன்று அவர்களின் குருதி குடிக்கும் வடிவமாக தன்னை வெளிப்படுத்தியுள்ளது.

10,000 ரூபாய் என்பது இந்த பதிவைப் படிக்கும் பலருக்கு வெகு சொற்பமான ஒரு தொகை. ஆனால் இந்தத் தொகையை அந்தப் பெண் ஒன்றரை வருடங்கள் உழைத்து, 8000 ரூபாய் வட்டி கட்டி அடைக்கிறார். இதுதான் இந்திய உழைக்கும் மக்களின் நிலை. சப் பிரைம் கடன்கள் மூலம் அமெரிக்க ஏழை மக்களை அதிக வட்டிக்குச் சுரண்டின நிதி மூலதன நிறுவனங்கள். இங்கு, இந்திய உழைக்கும் பெண்களை சுரண்டுவதற்காகத்தான் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பின்னிருந்து கொண்டு தமது வட்டித் தொழிலை நடத்துகின்றன பெரிய பெரிய வங்கிகளும், நிதி நிறுவனங்களும்.

இந்தியா பழி வாங்கும்*!! வட்டியும் முதலுமாக...

*(இந்தியா பழி வாங்கும் - துரை. சண்முகம் கவிதை ஒன்றின் தலைப்பு மற்றும் மையக் கருத்து)

அசுரன்

மகளிர் சுய உதவிக் குழுக்கள் : பலனடைந்தது யார் பன்னாட்டு நிறுவனங்களா? அடித்தட்டுப் பெண்களா?



நுண்கடன் மிகப்பெரும் கொள்ளை


நுண்கடன் - நுண்தொழில் : ஏழைகளைக் கொள்ளையிடும் ஏகாதிபத்திய சதி!

இந்திய அரசியலின் இழிநிலை: ஆ.விகடனில் தோழர் மருதையன் !

பெருந்தொழில் நிறுவனங்களின் 'சமூகப் பொறுப்புணர்வு" ஓநாய்களின் திடீர் கரிசனை

வட்டமிடும் பன்னாட்டு நிறுவனங்கள் இரையாகும் கிராமப் பொருளாதாரம்

பெரியார் புரா : தி.க.வீரமணியின் ஏகாதிபத்திய சேவை

தேர்தல் கூட்டணிகள்:சிகரத்தைத் தொடும் பொறுக்கி அரசியல்

Tuesday, January 27, 2009

ஒரு இந்தியனாக, சிங்களர்கள் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகிறேன்!!

லங்கை அணியுடன் கிரிக்கெட் விளையாட உள்ள இந்திய அணி தோல்வியடைந்து சிங்கள அணி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இந்தியர்கள், இந்தியர்களாக அங்கீகரிக்கப்படும் தகுதியுடையவர்கள், சிங்களர்கள் வெற்றியடையவே விரும்பும் போது ஒரு இந்தியனாக நானும் சிங்களர்களின் வெற்றியை விரும்புவது தவறில்லை என்று நம்புகிறேன்.

எனது ஜெய் ஹிந்த் வெறியை இங்கு பறைசாற்றுவதில் பெருமையடைகிறேன்.

தேச பக்தியுள்ள இந்தியர்களின் நல்லாதரவையும் இங்கு வேண்டுகிறேன்.

அங்கே படுகொலை செய்யப்படும் ஒவ்வொரு குழந்தையின், ஒவ்வொரு மகனின்/மகளின், ஒவ்வொரு கனவனின்/மனைவியின் உடலிலும் இந்திய துப்பாக்கி தோட்டாக்களும், பீரங்கி குண்டு சில்லுகளும் இருக்கும் என்பதை எண்ணி நாம் புளங்காகிதப்பட வேண்டிய நேரமிது.

இந்தியர்களாகிய நாம் இல்லாத இடமே இல்லை என்பதை எண்ணி பெருமைப்பட வேண்டிய நேரமிது. சந்திரனில் மட்டுமா நமது கருவிகள் தரையிறங்கியுள்ளன?

இதோ சிங்களர்களின் கைகளிலிருந்த இந்திய துப்பாக்கிகளின் கத்திகள்கூட ஈழத் தமிழ் பெண்களின் மார்புகளையும், யோனிகளையும் பதம் பார்த்து நமது இந்திய கருவிகளின் அடையாளத்தை சதையிறக்கிச் சென்றுள்ளன. ஜெய் ஹிந்த்!!

*****************

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது பிரதேச ஆதிக்கத்தை நோக்கமாக கொண்டதே ஆகும். இது தெரிந்திருந்தும் இந்தியாவிடமிருந்து எதையாவது பெற்று தப்பித்துவிடலாம் என்பது போல மாயையை உருவாக்கும் ஈழ ஆதரவு ஆட்களை இங்கு கடுமையாக விமர்சிக்கிறேன்.

உலகளவில் விடுதலை போராட்டங்களின், தேசிய விடுதலையின் எதிரி ஏகாதிபத்தியம் எனில் தெற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்க அடிவருடியான இந்தியாதான் எதிரி. அப்படியிருக்கு அமெரிக்க, இந்திய ஆதரவை வேண்டி நிற்பது ஏமாற்றே ஆகும்.

இந்த உண்மையை உற்று நோக்கும் திரணியற்ற, உரக்க அறிவுக்கும் துணிவற்ற ஈழ ஆதரவு ஆட்களை மிகக் கடுமையாக விமர்சிக்கிறேன். புலம்பி திரிவதில் எந்த பிரயோசனமும் இல்லை. பின் மண்டையில் துப்பாக்கி வைத்து மிரட்டும் ஆண்டையிடம் நியாயம் பேசுவதற்கு ஒத்த நாய்த்தனம் இது. சாவின் விளிம்பில் நம்மிடம் தெரிக்க வேண்டியது தார்மீக அவேசம்தானேயொழிய கழிவிரக்கமல்ல.

ஈழ விடுதலை என்பது மக்களை சார்ந்து நின்று மக்களால் பெறப்படவேண்டும். மாறாக மக்களின் சார்பில் நாம் பினாமி யுத்தம் நடத்தி பெற முடியாது. விடுதலை புலிகளின் அரசியல்லற்ற ஆயுத சாகச வழிபாடு இன்று ஈழ விடுதலையை கரை சேர்த்துள்ள இடம் இதுதான்.

இந்த வாழ்வா சாவா தருணத்திலாவது தமது தவறுகளை பரிசீலனை செய்து விடுதலை புலிகள் சரியான நிலைப்பாட்டுக்கு வருவார்கள் என்ற நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில் சந்தர்ப்பவாதத்தின் கடை கோடி எல்லைக்கு சென்றனர் புலிகள்.

சங்காராச்சாரியாரிடமும், RSS கும்பலிடமும், இந்து பார்ப்பன பயங்கரவாதிகளிடமும் ஆதரவு கோரிப் பெற்றது புலிகளை இன்னும் இன்னும் பலவீனமாக்கவே செய்யும். புலிகளுக்கு ஆதரவான ஜனநாயக சக்திகளை விரட்டியடிப்பதாகவே இந்த நடவடிக்கை இருக்கும்.

இந்திய மேலாதிக்க கனவுகளுக்கும் அதில் பொதிந்துள்ள இந்திய தரகு முதலாளிகளின் பேராசைகளுக்கும், ஏகாதிபத்திய நலன்களுக்கும் எதிராக இந்திய மக்களின் கருத்தை ஆதிக்கம் செய்யவல்ல அரசியல் கொண்ட ஒரு செயல்பாடே இந்திய ஆளும் வர்க்கங்களை ஈழ போராட்டத்தில் பின்னடையச் செய்யும். மாறாக இந்திய ஆளும் வர்க்கங்களிடையே உள்ள சிற்சில முரன்பாடுகளை மட்டும் வைத்தே ஒட்டு மொத்தமாக அவர்களை பின்னடையச் செய்ய முடியும் என்று நம்புவது படு முட்டாள்தனமானது.

ஆனால் அப்படிப்பட்ட நம்பிக்கையைத்தான் ஈழ விடுதலையின் ஒட்டு மொத்த தமிழக பிரதிநிதிகளாக முன்னிறுத்திக் கொள்ளும் பிழைப்புவாதிகள் மக்கள் மனதில் விதைத்து வருகிறார்கள்.

இந்திய அரசை விமர்சனம் செய்வதில் அவர்களுக்கு இத்தனை தயக்கம். அதன் நோக்கங்களை அம்பலப்படுத்துவதற்கு இத்தனை பயம். கிசு கிசு போல பேசுகிறார்கள். ஆணித்தரமாக அடித்து பேச தொண்டை குழி தயங்குகிறது.

ஆனால் இதே வாயால்தான் கூசாமல் தமிழனின் தலைகுனியத்தக்க மோன நிலையை விமர்சிக்கிறார்கள். இது தலைகுனியத்தக்கதுதான் ஆனால் இந்த மோனநிலைக்கு காரணம் மேற்சொன்ன ஆட்களுடைய சந்தர்ப்பவாத, மோசடி அரசியல்தான் என்பதையும், ஏகாதிபத்தியத்தின் நுகர்வு கலாச்சாரம்தான் என்பதையும் விமர்சனம். சுயவிமர்சனம் செய்து கொண்டு தமிழனை விமர்சிப்பதே தகும்.

புலிகளை சிங்களர்கள் அழித்துவிடுவார்கள் என்பதை நான் நம்பவில்லை. அது நடக்கவே நடக்காது. ஆனால் புலிகள் இதே போல செயல்படுவதை தொடர்ந்தால் ஈழ மக்களே அவர்களை வரலாற்றின் பக்கங்களில் கரைத்துவிடுவார்கள். உணர்ச்சிவசப்படும் புலி ஆதரவாளர்கள் யாதார்த்தத்தை கண் கொண்டு நோக்க வேண்டப்படுகிறார்கள்.

இதோ கண் முன்னே ஒரு சமூகம் அழிகப்படுகிறது. இன்றைக்கு சிங்களர்களின் கைக்கு வந்துள்ள பிரதேசங்களில் பன்னாட்டு மூலதனம் வெறி கொண்டு இறங்கும். நுகர்வு கலாச்சாரம் பரப்பப்படும். பல ஆண்டுகளாக யுத்தம் ஏற்படுத்திய காயங்களை ஏகாதிபத்திய நுகர்வு கலாச்சார போதையில் மூழ்கி மக்கள் மறக்க முயலுவார்கள். இதனை எதிர்கொள்ளூம் சரியான அரசியலை கொண்டிராத ஒரு இயக்கமோ ஏகாதிபத்தியத்தின் இந்த தாக்குதலில் பழம் பொருள் காட்சியகத்தின் பெட்டகங்களில் முடங்கிவிடும்.

ஏனேனில் மக்களின் பினாமிகள் வரலாற்றில் அடையாளம் இழப்பதுதான் எப்போதுமே நடந்துள்ளது.

ஆனால் ஈழ விடுதலை? அது வரலாற்றின் தேவை. அது இன்றைக்கு இல்லாவிடிலும் என்றைக்காவது தனக்கான சரியான வாகனத்தை தேர்ந்தெடுத்து கரை சேர்ந்துவிடும்.

அசுரன்

ஈழம்: தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் போராட்டம் !

கருணாநிதியின் இறுதி நாடகம்?

ஈழம் - இந்தியா முதுகில் குத்துவது ஏன்?

கருத்துப்படங்கள்

விடுதலைப்புலிகள் தவறுகளை உணர்ந்து திருந்தி விட்டார்கள்!?

தமிழீழம் என்ற கோரிக்கை அரசியல் ரீதியாகவே மரணித்துவிட்டது

இந்தியாவும் தமிழீழமும்

Monday, April 28, 2008

தத்துவ குருடர்களும், முதலாளித்துவ வளர்ச்சியும்!!!

சில தத்துவ குருடர்களும், வரலாற்று குருடர்களும் முதலாளித்துவ வளர்ச்சி என்ற பெயரில் நாட்டை கூட்டிக் கொடுப்பதையே மார்க்ஸியம் என்று சொல்லி வருகின்றனர். அவர்களுக்கு மார்க்ஸியத்திலிருந்தே இதற்க்கான மறுப்பை அறிமுகப்படுத்தும் முகமாக ஒரு பழைய பதிவை மீள் பதிவு செய்கிறேன்.
___________________________________________________________________
இன்றைக்கு சுதந்திர வர்த்தகம் குறித்து பேசும் ஏகாதிபத்திய அடிவடுடிகள், தொழில் வளர்ச்சி, தொழில் முதலீட்டிற்க்கான மூலதன்ம் இவற்றையே காரணமாக கூறி ஏமாற்றுகிறார்கள். ஆனால் உலகில் முன்னேறி நிற்க்கும் நாடுகளின் வரலாறை பார்க்கும் பொழுது இவர்களின் இந்த கூற்று பொய் என்று தெரிய்வருகிறது.

Free Trade குறித்து மார்க்ஸின் கட்டுரைக்கான ஏங்கெல்ஸின் முன்னுரை.

""After a long and violent struggle, the English industrial capitalists, already in reality the leading class of the nation, that class whose interests were then the chief national interests, were victorious. The landed aristocracy had to give in. The duties on corn and other raw materials were repealed. Free Trade became the watchword of the day. To convert all other countries to the gospel of Free Trade, and thus to create a world in which England was the great manufacturing centre, with all other countries for its independent agricultural districts, that was the next task before the English manufacturers and their mouthpieces, the political economists.""

பிரிட்டிஷ் முதலாளிகளின் இடத்தில் இன்றூ தேசம் கடந்த பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகள் உள்ளனர். மூன்றாம் உலக நாடுகளை தங்களது சந்தை மற்றும் உற்பத்திக்கான பின்நிலங்களாக வைத்துள்ளனர் என்ற அளவில் ஒப்பிட்டு புரிந்து கொள்ள இந்த வரிகள் உதவும்.

மேலும் இங்கு பிரிட்டனுக்கும் அதனுடன் சுதந்திர வர்த்தகம் செய்ய விழைந்த நாடுகளுக்கும் இடையிலான முதலாளித்துவ வளர்ச்சி வித்தியாசம் என்பது மிக குறைவு. எனவே இந்த வர்த்தக உறவால் ஏற்பப்டும் பாதிப்பு குறைவே. ஆனால் இந்தியாவுடன் பிற் ஏகாதிபத்தியங்களுக்கு உள்ள ஒப்பிட இயலா வித்தியாசத்துடன் பொருத்திப் பார்க்கும் பொழுது இந்தியாவுக்கு அது மரண அடியாக பாதிப்பு கொடுக்கும் என்பதை விவசாயிகளின் தற்கொலைகளில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

பிரிட்டனின் இந்த சுதந்திர வர்த்தக நோக்கத்தை மார்க்ஸ் ஆதரித்தார். ஏனேனில், இது பிரிட்டனில் தொழில் வளர்ச்சியை மிக வேகமாக முடுக்கி விடும் எனவே புரட்சிக்கான சூழல் மிக வேகமாக வளரும் என்ற அடிபப்டையில். ஆக, ஏகாதிபத்தியத்தின் பொருளாதார் வளர்ச்சிக்கு சுதந்திர வர்த்தகம் உதவி புரிவதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இது எந்த வகையிலும் சுதந்திர வர்த்தகத்தில் இணையும் பிற நாடுகளுக்கு உதவிகரமானது இல்லை எனப்தை கீழே விவரிக்கிறேன்.

அன்றைய பிற முதலாளித்துவ நாடுகள் பிரிட்டனின் உலக மேலாதிக்க திட்டங்களைப் பார்த்துக் கொண்டு புளிய்ம பழமா பறித்துக் கொண்டிருந்தார்கள்? இல்லை மாறாக அவர்களும் தமது சொந்த உற்பத்தியை மிக வேகமாக வளர்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் சுதந்திர வர்த்தகம் மூலமாக இல்லை, மாறாக தமது பொருளாதாரத்தை இறுக்க மூடி வெளி நாட்டு மூலதனத்திலிருந்த பாதுகாத்தன் மூலமே தமது பொருளாதாரத்தை வளர்த்தனர்.

""The foreign countries did nothing of the kind. France, for nearly 200 years, had screened her manufactures behind a perfect Chinese wall of protection and prohibition, and had attained in all articles of luxury and of taste a supremacy which England did not even pretend to dispute.""

இங்கு பிரான்ஸ் தேசம் தனது சொந்த நாட்டின் தொழில் வளர்ச்சியை புரொக்டசனிஸ்ட் முறை மூலம் காபந்து செய்து வளர்த்தது குறித்து ஏங்கெல்ஸ் சொல்கிறார். இது போலவே ஜெர்மனி, சுவிட்சர்லாந்து என எல்லா நாடுகளும் தமது தொழில் வளர்ச்சியை இப்படி பொத்தி பொத்தி பாதுகாத்துதான் வளர்த்தனர்.

ஏங்கெல்ஸ் ஒரு ரயில் பிரயாணத்தில் தன்னுடம் பயணம் செய்த சக பயனியான இரும்பு வியாபாரியிடம் பேசுகிறார். இரும்பு வியாபாரி அமெரிக்காவின் protectionist பொருளாதார கொள்கையை விமர்சித்து பேசுகிறார்.

"Was it not inconceivable that a nation of sharp businessmen like the Americans should pay tribute to indigenous ironmasters and manufacturers, when they could buy the same, if not a better article, ever so much cheaper in this country?"

அதாவது இரும்பை குறைந்த விலைக்கு உற்பத்தி செய்யும் இங்கிலாந்திலிருந்து வாங்குவதை விடுத்து ஏன் உள்ளூர் இரும்பு உற்பத்தியாளர்களை அமெரிக்க ஊக்கப்படுத்துகிறது என்கிறார். மேலும் அவர் free trade என்ற இன்றைய உலகமயத்தின ஆதார நியதியை ஆதரித்து பேசுகீறார்.

இதற்கு எங்கெல்ஸ் பின்வருமாறூ கூறுகிறார்,

""Well," I replied, "I think there is another side to the question. You know that in coal, waterpower, iron, and other ores, cheap food, homegrown cotton, and other raw materials, America has resources and advantages unequalled by any European country; and that these resources cannot be fully developed except by America becoming a manufacturing country. You will admit, too, that nowadays a, great nation like the Americans' cannot exist on agriculture alone; that would be tantamount to a condemnation to permanent barbarism and inferiority; no great nation can live, in our age, without manufactures of her own. Well, then, if America must become a manufacturing country, and if she has every chance of not only succeeding but even outstripping her rivals, there are two ways open to her: either to carry on for, let us say, 50 years under Free Trade an extremely expensive competitive war against English manufactures that have got nearly a hundred years start; or else to shut out, by protective duties, English manufactures for, say, 25 years, with the almost absolute certainty that at the end of the 25 years she will be able to hold her own in the open market of the world. Which of the two will be the cheapest and the shortest? That is the question. If you want to go from Glasgow to London, you take the parliamentary train at a penny a mile and travel at the rate of 12 miles an hour. But you do not; your time is too valuable, you take the express, pay twopence a mile and do 40 miles an hour. Very well, the Americans prefer to pay express fare and to go express speed.""

அதாவது அமெரிக்காவில் அளப்பரிய வளங்கள் உள்ளன. இவற்றை வளர்த்தெடுக்க அமெரிக்க ஒரு உற்பத்தி பொருளாதாரமாக மாற வேண்டும். விவசாயத்தை மட்டும் நம்பி ஒன்றும் செய்ய முடியாது. இதை சாதிகக் இரு வழிகள் உள்ளன. ஒன்று தனது நாட்டை திறந்து விடுவதன் மூலம் இங்கிலாந்து முதலாளீகளுடன் முட்டி மோதி தந்து நாட்டு உற்பத்தியை வளர்ப்பது. இன்னொன்று தனது நாட்டை இறுக்கமாக மூடி சொந்த நாட்டு உற்பத்தியை வளர்த்தெடுப்பது.

நீ ஒரு இடத்துக்கு போக சாதா ரெயிலும், எக்ஸ்பிரஸ் ரயிலும் இருந்தால் காசு கொஞச்ம் கூட ஆனாலும் பரவாயில்லை என்று எக்ஸ்பிரஸ் ரெயிலில்தானே செல்வாய்? அதைத்தான் அமெரிக்க செய்கீறது. தனது நாட்டின் உற்பத்தியை வேகமாக வளர்த்தெடுக்க காசு அதிகமாகா செல்வனாலும் பரவாயில்லை என்று அமெரிக்க த்னது கதவுகளை மூடி கொண்டுள்ளது. என்று ஏங்கெல்ஸ் பதில் சொல்கீறார்.

இப்படி ஒவ்வொரு ஏகாதிபத்தியமும் தமது பொருளாதாரத்தை பொத்தி பொத்தி வளர்த்துவிட்டு இன்று இந்தியா போன்ற நாடுகளை கதவைத் திறந்து விடச் சொல்கின்ற்ன. அதற்க்கு சில அடிவருடிகளின் ஆதரவு வேறு.

இவர்களின் ஒரே வாதம், இந்தியாவில் தொழில் புரட்சி நடக்க இந்தியாவை திறந்து விட வேண்டும் என்பதுதான். ஆனால் இவர்களின் அப்பன் நாடுகள் எதுவும் இவர்களின் இந்த கூற்றை நடைமூறையில் இன்று வரை ஏற்றுக் கொள்ளவில்லை. இன்றூம் கூட தனது விவ்சாய உற்பத்தியை protectionist கொள்கையின் மூலம் காத்து வருபவர்கள்தான் ஏகாதிபத்திய்ஙகள். அதாவது இந்தியாவை தமது குறை விலை பருத்தியால், பாலால் நிறைக்கும் ஏகாதிபத்திய்ங்கள், தமது நாட்டில் இந்திய விவசாய பொருட்களை அனுமதிப்பதில்லை. அனுமதித்தாலும் நாம் சந்தையில் நிற்க முடியாது ஏனேனில் ஒவ்வொரு நாடும் தனது உள்நாட்டு விவசாய உற்பத்தியாளருக்கு 100% வரை மானியம் தருகீறார்கள்.

ஆக நேற்றைய வரலாறு நமக்கு சொல்வது , "ஒரு நாட்டின் முதலாளித்துவ வளர்ச்சி என்பது, உற்பத்தி வளர்ச்சி என்பது அதனை வெளிநாட்டு மூலதனத்திலிருந்து பாதுகாப்பதில் அடங்கியுள்ளது என்பதை" அதாவது உள்நாட்டு முதலாளிகளை வளர்ப்பதில் அடங்கியுள்ளது.

இன்றைய ஏகாதிபத்தியங்கள் தமது விவசாய உற்பத்தியில் நடைமுறைப்படுத்தும் கொள்கையும் இதையேதான் சொல்கீறது.

தமது சொந்த் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு ஆதரவாக பேசும் போது குறைந்த் விலை, தொழில்நுட்பம் என்றெல்லாம் சப்பைக் கட்டு கட்டாமல் தமது பொருளாதாரத்தை கட்டி காத்து வளர்த்த அன்றைய முதலாளித்துவ நாடுகளும், இன்றைய் ஏகாதிபத்திய நாடுகளின் தேசபக்தி எங்கே? இதே தொழில் வளர்ச்சியை நாட்டை திறந்து விட்டு நாறடித்தால்தான் சாத்தியம் என்று கதை கட்டி இந்தியாவின் வளங்களை கூட்டிக் கொடுக்கும் அடிவருடிகளின் தேசத் துரோகம் எங்கே?

இவர்களின் யாருக்கு தேசப்பற்று உள்ளது? வெறுமனே சுதந்திர தின விழாவுக்கு கட்டுரை எழுதி மிட்டாய் கொடுத்தால் தேசப்பற்றா?

அடிவருடிகள் பதில் சொல்வார்களா அல்லது வழக்கம் போல ஓடி மறைந்து கொள்வார்களா?

இங்கு ஒரு விசயம் கவனிக்க வேண்டும். அமெரிக்காவின் தொழில் வளர்ச்சி ஓரளவு நல்ல நிலையில், இங்கிலாந்துடன் போட்டி போடும் நிலையில் இருக்கும் பொழுதே அதன் சந்தையை இங்கிலாந்துக்கு திறந்து விடுவது அதன் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்ப்படுத்தும் என்பதுதான் உண்மை. இந்தியாவோ எந்த வகையிலும் உற்பத்தியில் ஏகாதிபத்திய நாடுகளின் அருகிலேயே இல்லை. இந்நிலையில் திறந்து விடுவது என்பது சுத்தமாக இந்தியாவை அழிவின் விளிம்புக்கு கொண்டு செல்லும் என்பதுதான் உண்மை.

ஏகாதிபத்திய்ங்களின் இன்றைய கொள்கைகளும் சரி, நேற்றைய வரலாறும் சரி நமக்கு சொல்வது இதுதான், "சுதந்திர வர்த்தகம் என்பது உள்நாட்டு தொழில் வளர்ச்சிக்கு ஆபத்தே'. அது உண்மையான தொழில் வளர்ச்சியின் வேகத்தை முடக்கி போட்டு மந்தமான வளர்ச்சியையே உருவாக்கும் என்பதுதான் உண்மை. இந்த மந்தமான வேகத்தைத்தான் அடிவருடிகள் ஊதிப் பெருக்கி நம்மை ஏமாற்றுகிறார்கள். மாறாக 10 வருடங்க்ளில் 56 மடங்கு உற்பத்தியை வளர்த்திக் காட்டிய சோசலிச(1970's) சீனாவின் அனுபவ்ம் நமக்கு மாற்றுப் பாதையைக் காட்டுகிறது.
நாம் இழிச்சவாயர்களா? அடிவருடிகளா? தற்குறிகளா? பிழைப்புவாதிகளா? அலல்து சுயமரியாதை உள்ள தேச பக்தர்களா என்பதை அவரவர சொந்த முயற்சியில் பரிட்சித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அசுரன்
Related Articles:

Sunday, December 30, 2007

ஏழ்மையின் அரசியல்!! யார் இந்த அன்னை தெரசா???


""தில் கிடைக்காத கேள்விகள் பல எனக்குள் வாழ்கின்றன தேவதூஷணமாகிவிடும் என்பதால் அவற்றை வெளியிட அஞ்சுகிறேன் ஒருவேளை கடவுள் இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என் சிந்னைகளை சொர்க்கத்தை நோக்கி எழுப்ப முயல்கிறேன் அங்கோ தண்டிக்கும் வெறுமை அந்தச் சிந்தனைகள் கூரிய கத்திகளாய்த் திரும்ப வந்து என் இதயத்தைக் கிழிக்கின்றன தேவன் என்னை நேசிப்பதாகச் சொல்கிறார்கள் இருப்பினும் எதார்த்தத்தில் இருளும் உணர்ச்சியின்மையும் வெறுமையும் என்னுள் நிறைந்து மேலோங்கியிருப்பதால் எதுவும் என் ஆன்மாவைத் தொடுவதில்லை பரிசுத்த ஆவியின் அழைப்பை ஏற்று குருட்டுத்தனமாக என்னை ஒப்புக்கொடுத்ததன் மூலம் தவறு செய்து விட்டேனோ?''

""என்னுள் ஓங்கி நிறைந்திருக்கும் வெறுமை காரணமாக நான் பார்க்கிறேன், ஆனால் கவனிப்பதில்லை கேட்கிறேன், ஆனால் காது கொடுப்பதில்லை என் நாக்குதான் அசைகிறது, நான் பேசுவதில்லை.''

""என்னை நானே எதற்காக வருத்திக் கொள்கிறேன்? தேவன் இல்லையெனும்போது ஆன்மாவும் இருக்க முடியாது ஆன்மா இல்லையென்றால் யேசுவே நீரும் உண்மையல்ல.''

துயரம் ததும்பும் இந்தச் சொற்கள் "அன்னை' தெரசாவின் இதயத்திலிருந்து கசிந்தவை.

1949இல் கல்கத்தாவில் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி என்ற அமைப்பை அவர் தொடங்கியது முதல் 1997 இல் மரிக்கும் வரையில் இடையறாது அவரது இதயத்தை அரித்துக் கொண்டிருந்த "அவிசுவாசத்தை' எழுத்து பூர்வமாகவே பதிவு செய்திருக்கிறார் தெரசா. மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீஸின் மூத்த உறுப்பனரும், தெரசாவுக்கு "புனிதர்' பட்டம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து வருபவருமான அருட்தந்தை ப்ரியன் கலோடிஜெக் வெளியிட்டுள்ள "அன்னை தெரசாவா என் ஒளியாய் இரு' என்ற நூலில் தனது நம்பிக்கையின்மையை வெளியிடும் வண்ணம் தெரசா எழுதிய சுமார் 40 இரகசியக் கடிதங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

அதிக முக்கியத்துவமின்றி சில ஆங்கில நாளேடுகளில் மட்டும் தெரசா குறித்த இச்செய்தி வெளியாகியிருக்கிறது. தமிழ் ஊடகங்களில் இது பரவலாக வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இயேசுவுக்கு அடுத்தபடியாக ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் மதிக்கத்தக்க குறியீடாகவும், மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட மனிதாபிமானத்தின் சின்னமாகவும், ஐஸ்வர்யா ராய் முதல் அமெரிக்க அதிபர் வரை அனைவரும் போற்றிப் பணியும் தெய்வமாகவும் வனைந்து உருவாக்கப்பட்ட தெரசா என்ற திருஉரு, திடீரென்று நொறுங்கிச் சரிவதை ஆளும் வர்க்கங்கள் விரும்பாததில் வியப்பில்லை.

இக்கடிதங்களை ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையே வெளியிட்டிருப்பதால் இதை விசுவாசிகள் யாரும் "நாத்திகர்களின் சதி' என்று கூறி மறுக்க முடியாது. தனது மரணத்துக்குப் பிறகு இக்கடிதங்களை அழித்துவிட வேண்டுமென்று தெரசா கோரியிருந்ததையும் மீறி இவை வெளியிடப்படக் காரணம் என்னவென்று தெரியவில்லை. சிலுவையின் முன்புறத்தில் இயேசுவையும் பின்புறத்தில் உண்மையையும் அறைந்து வைத்திருக்கும் திருச்சபை, உண்மையின் பால் கொண்ட காதலால் இவற்றை வெளியிட்டிருக்காது என்பதை மட்டும் நாம் நிச்சயமாகக் கூறலாம்.

""இக்கடிதங்களின் காரணமாகப் "புனிதர்' பட்டம் பெறும் தகுதியை தெரசா இழக்க மாட்டார்'' என்று கூறுகிறது வாடிகன். ""இயேசுவும் கூட சிலுவையில் மரிக்குமுன் தன்னைக் கைவிடப்பட்டவராகவே உணர்ந்தார்..... தெரசாவிடம் நாம் காணும் "விசுவாசம் நிரம்பிய மன உறுதி' என்பது ஒரு காப்பியச் சிறப்பு மிக்க ஆன்மீக வீரம்'' என்கிறார் இந்நூலாசிரியர் கலோடிஜெக்.

ஆன்மீகத் துயரம் என்று கத்தோலிக்க குருமார்களால் வருணிக்கப்படும் தெரசாவின் இந்த உளவியல் வேதனை குறித்து பொருள் முதல்வாதிகளாகிய நாம் மகிழவும் தேவையில்லை, வருந்தவும் தேவையில்லை. தெரசாவிற்குள் "தேவன்' இறங்கியதெப்படி, வெளியேறியதெப்படி என்பதைப் புரிந்து கொள்வதுதான் நம் அக்கறை.

பின்தங்கிய நாடான அல்பேனியாவின் விவசாயக் குடும்பமொன்றில் பிறந்த தெரசா, பரிதாபத்துக்குரிய கன்னியா ஸ்திரீகளின் கூட்டத்தில் ஒருவராக இந்தியாவிற்கு வருகிறார். 1929 முதல் கல்கத்தாவில் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வந்த தெரசா, 1946இல் ஓய்வுக்காக டார்ஜிலிங் சென்றபோதுதான் அவரில் அந்த "அற்புதம்' நிகழ்ந்தது.

""இயேசு என்முன் தோன்றினார். "நீ திறமைகள் ஏதுமற்ற பலவீனமான பாவி என்பதை நான் அறிவேன். அதனால்தான் என்னுடைய புகழைப் பரப்ப உன்னைப் பயன்படுத்த விரும்புகிறேன். நீ மறுப்பாயா?' என்று கேட்டார். எனவே எனக்கு இந்த ஆசிரியைப் பணி வேண்டாம். நான் நிராதரவான ஆன்மாக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்'' என்று தனது திருச்சபை மேலிடத்திடம் கோரினார், தெரசா. "ஒரு உண்மையான விசுவாசி' கைவசம் இருப்பதைக் கண்டுகொண்ட ஆர்ச் பிஷப், வாடிகனின் அனுமதியைத் தெரசாவுக்குப் பெற்றுத் தந்தார். 1948இல் கல்கத்தாவில் தொடங்கியது தெரசாவின் "மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி.'

இரண்டே மாதங்களில் தெரசாவின் வெறுமையும் விசுவாசமின்மையும் தொடங்கி விட்டன. துன்பங்களற்ற வசதியான பள்ளி ஆசிரியை வாழ்க்கையை 16 ஆண்டு காலம் வாழ்ந்து விட்டு திடீரென தொழுநோயாளிகள் மற்றும் ஆதரவற்ற ஏழைகளின் "பொந்துக்குள்' வீழ்ந்ததனால் ஏற்பட்ட அதிர்ச்சியும், இந்தச் சூழலை வலியத் தருவித்துக் கொண்டதனால் தன்மீதே தோன்றியிருக்கக் கூடிய வெறுப்பும் தெரசாவிடம் "விசுவாசமின்மை' துவங்குவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

""பரிசுத்த ஆவியின் அழைப்பை ஏற்று குருட்டுத்தனமாக என்னை ஒப்புக்கொடுத்ததன் மூலம் தவறு செய்து விட்டேனோ?'' என்று பின்னாளில் அவர் எழுதும் கடிதம் அந்த மனக்காயத்தின் ஆழத்தைக் காட்டுகிறது.

தமது விருப்பங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள இயலாமல் திருச்சபைச் சூழலில் நிரப்பப்பட்டிருக்கும் போலி ஒழுக்கப் புகைமூட்டம், தவறுகளை வெளிப்படையாகப் பரிசீலனைக்கு உட்படுத்துவதைத் தந்திரமாகத் தவிர்க்கும் பாவமன்னிப்பு முறை, அம்பலப்படாத தனது சுய ஆளுமையைப் பாதுகாத்துக் கொள்ளும் பதற்றம், நெஞ்சில் ஆழப்பதிய வைக்கப்பட்டிருக்கும் தேவதூஷணம் குறித்த அச்சம், ஊன்றி நிற்பதற்குத் தேவையான விசுவாசமோ, திரும்பச் செல்வதற்கான துணிவோ இல்லாததால் தோன்றக்கூடிய விரக்தி.. இத்தகைய சூழலில் சிக்கிக்கொண்ட ஒரு முதிர்கன்னி இதுதான் 1949இன் தெரசா.

தனது வெறுமை குறித்தும், நம்பிக்கையின்மை குறித்தும் தனக்கு உயர் தகுதியில் உள்ள அருட்தந்தைகளுக்கு தெரசா இடையறாமல் கடிதம் எழுதியிருக்கிறார் எனினும், பரிதாபத்துக்குரிய இந்தப் பெண்மணியை விடுவிக்க திருச்சபை முயலவில்லை. மாறாக, அவரைச் சிலுவையில் அறைவதற்கான ஆணியைத்தான் தயார் செய்தது. 1969இல் கத்தோலிக்க மத வெறியனான மால்கம் மக்கரிட்ஜ் என்ற பிரிட்டிஷ் செய்தியாளர் தெரசாவைப் பற்றிய செய்திப் படம் ஒன்றைத் தயாரித்தார். பி.பி.சி இதனை ஒளிபரப்பியது. இருட்டறையில் விளக்குகள் இல்லாமலேயே ஒரு காட்சி பதிவாகியிருப்பதாகவும், அது தெரசா நிகழ்த்திய அற்புதம் என்றும் கூவினார் மக்கரிட்ஜ். தனது விசுவாசமின்மை குறித்து கடிதங்கள் அனுப்பிக் கொண்டிருந்த தெரசாவும், "தானே அடிக்கடி பரிசுத்த ஆவியுடன் பேசுவதாக' அந்தப்படத்தில் பேட்டியளித்தார்.

1960களின் பிற்பகுதியில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் எழுந்த வியத்நாம் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஏகாதிபத்தியவாதிகளைத் தனிமைப்படுத்தியிருந்தன. மூன்றாம் உலக ஏழைகளுக்கு உதவும் ஒரு கருணை முகத்தை அவர்கள் காட்டவேண்டியிருந்தது. இப்படி உருவாக்கப்பட்டதுதான் தெரசாவின் ஒளிவட்டம். நோபெல் சமாதானப் பரிசு உள்ளிட்ட பரிசுகளை அவர் மீது பொழிந்தது ஏகாதிபத்தியம். தாட்சர், டயானா, ரீகன், பல்வேறு நாடுகளின் பிரதமர்கள், அதிபர்கள்.. என்று தரிசனத்துக்கு வரும் பிரமுகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. மெலிந்து சுருங்கிய தோற்றமும், வெள்ளைக் கைத்தறி ஆடையும், ஆதரவற்றோர் சேவையும் தெரசாவை மதச்சார்பு கடந்த ஒரு புனிதத் திரு உருவாக ஏகாதிபத்தியங்கள் முன்நிறுத்துவதற்குப் பயன்பட்டன.

ஆனால் உலகமே கொண்டாடிய அவரது சேவையோ, விருதுகளோ, பணிந்து வணங்கிய பல நாட்டு அதிபர்களோ, இவையனைத்தும் வழங்கியிருக்கக் கூடிய மனநிறைவோ தன்னிடம் இல்லை என்கின்றன தெரசாவின் கடிதங்கள். தெரசாவின் இறைநம்பிக்கை ஏன் தகரவேண்டும்? விசுவாசமில்லாத நிலையிலும் அவர் காட்டிய மன உறுதியை வியக்கிறார் கலோடிஜெக். அவருடைய விசுவாசத்தைப் பறித்தது எது? விசுவாசம் தளர்ந்த பின்னரும் அவருடைய மன உறுதியைத் தாங்கி நின்றது எது?

மாபெரும் தத்துவஞானிகளும், விஞ்ஞானிகளும்கூட "கடவுள்' தோற்றுவிக்கும் இத்தகைய மனத்துயருக்கு ஆட்படுவதுண்டு. அது அறிவுத்தேடல் தோற்றுவிக்கும் மனத்துயர். அத்தகைய அறிவுத்தேடலின் சாயல் கூட தெரசாவின் கடிதங்களில் இல்லை. அவர் அறிவின் சாயல் கூட எஞ்சியிராத வண்ணம் கத்தோலிக்கத் திருச்சபையின் உலைக்களத்தில் உருக்கி அடிக்கப்பட்ட அடிமை.

நீதியற்ற உலகின் நீதியாய், இரக்கமற்ற உலகின் இதயமாய் கடவுளைச் சரணடையும் மக்களின் மத உணர்வு கூட ""கடவுளே உனக்குக் கண்ணில்லையா'' என்று குமுறி நம்பிக்கை இழக்கும். தெரசாவைச் சூழ்ந்திருந்த ஏழைகளும் நோயுற்றவர்களும் அநாதைகளும் வடித்த கண்ணீர் "தேவன் இருக்கிறானா' என்ற கேள்வியை அவருக்குள் எழுப்பவில்லை.

""ஏழ்மையைச் சகித்துக்கொள்வதும் கிறிஸ்துவின் துயரத்தோடு அதனைப் பகிர்ந்து கொள்வதும் மிகவும் அழகானது. ஏழை மக்களின் துயரம் இந்த உலகுக்கு பெரிதும் உதவுகிறது என்று நான் கருதுகிறேன்'' என்று 1981இல் ஒரு பேட்டியில் குறிப்பட்டார் தெரசா. மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி அமைப்பின் சகோதரி நிர்மலா இதை மேலும் தெளிவுபடுத்துகிறார், ""ஏழ்மை என்பது இருக்கத்தான் செய்யும். தங்களுடைய ஏழ்மையை சரியான கோணத்தில் ஏழைகள் புரிந்து கொள்ளவேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்''. வலியால் துடித்துக் கொண்டிருந்த ஒரு புற்றுநோயாளியிடம் தெரசா பேசுவது படமாகப் பதிவாகியிருக்கிறது, ""சிலுவையில் இயேசு துன்புற்றதைப் போல நீ துன்புறுகிறாய். இயேசு உன்னை முத்தமிடுகிறார் என்று நினைக்கிறேன்'' என்கிறார் தெரசா. ஆனால், தான் நோய்வாய்ப்படும்போது இயேசுவால் முத்தமிடப்படுவதை தெரசா விரும்பவில்லை. மன உறுத்தல் ஏதுமின்றி அமெரிக்காவில் மருத்துவம் பார்த்துக் கொண்டார்.

தெரசாவின் இல்லத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக உலகெங்கும் ஒரு பொதுக்கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு வடிகட்டிய பொய். அங்கே வலியால் துடிப்பவர்களுக்கு வலி நிவாரணி மருந்து கூடத் தரப்படுவதில்லை என்ற உண்மையை பல மருத்துவர்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றனர். கல்கத்தா இல்லத்தைக் காட்டி தெரசா உலகெங்கும் வசூலித்த பல நூறு கோடி ரூபாய்களில் ஒரு மருத்துவமனை கூட அங்கே கட்டப்படவில்லை. மாறாக, 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒயினும் கறியும் புழங்கும் 500 செமினரிகளை அமைத்திருக்கிறார் தெரசா.

இந்த இரக்கமின்மை அவரது தனிப்பட்ட குணாதிசயம் அல்ல. இதுவே ஒரு சித்தாந்தமாக, மதக் கோட்பாடாக அவர் சிந்தனையில் பதிந்திருக்கிறது. இத்தகைய சிந்தனையின் மீதான விசுவாசமின்மை எதையும் அவரது கடிதங்கள் எழுப்பவில்லை என்பதும் கவனத்துக்குரியது.

தெரசாவை அம்பலப்படுத்தும் "நரகத்தின் தேவதை' என்ற செய்திப்படத்தைத் தயாரித்த கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ் கூறுகிறார்: ""தெரசா ஒரு வெகுளி என்றோ புத்திசாலி என்றோ நான் நினைக்கவில்லை. சிக்கலான மனப்பாங்கும் அவருக்குக் கிடையாது. ஆனால் ஒரு வகையான சூழ்ச்சித் தன்மை அவரிடம் இருந்தது. அவர் கத்தோலிக்க வெறி பிடித்த ஒரு கடுங்கோட்பாட்டுவாதி, ஒரு மோசடிப் பேர்வழியும் கூட'' என்கிறார். தெரசாவின் மீது மதிப்புக் கொண்டவர்கள் இதனைப் படித்ததும் ஆத்திரப் படலாம். ஆனால் இக்கூற்று ஆதாரமற்றதல்ல.

ஹெய்தி நாட்டின் சர்வாதிகாரியும், அமெரிக்கக் கைக்கூலியுமான டுவாலியரை ""அற்புதமானவர். ஏழைகள் என்னமாய் அவரை நேசிக்கிறார்கள்'' என்று வியந்தார் தெரசா. போபால் விஷவாயுப் படுகொலையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் ""இது ஒரு விபத்தாக இருக்கலாம். மன்னித்து விடுங்கள்'' என்று உபதேசித்தார். பங்குச் சந்தை மோசடி மூலம் அமெரிக்க சிறுமுதலீட்டாளர்களிடமிருந்து 250 மில்லியன் டாலர் பணத்தைச் சூறையாடிய கீட்டிங் என்பவனிடமிருந்து நன்கொடை வாங்கினார் தெரசா. ""பாவப்பட்ட மக்களிடம் திருடிய பணம் தன்னிடம் தரப்பட்டால் கிறிஸ்து என்ன செய்திருப்பாரோ அதைச் செய்யுங்கள். பணத்தை மக்களிடம் திருப்பிவிடுங்கள்'' என்று அமெரிக்காவிலிருந்து தெரசாவுக்குக் கடிதம் எழுதினார் அரசு வக்கீல். தெரசா பதிலளிக்கவில்லை. மாறாக, ""கீட்டிங்கின் தண்டனையை ரத்து செய்யுங்கள்'' என்று நீதிபதிக்குக் கடிதமெழுதினார் தெரசா. பெண்களுக்கு மணவிலக்கு உரிமை இல்லாத அயர்லாந்தில் அது தொடர்பான வாக்கெடுப்பு நடந்தபோது ""மணவிலக்குக்கு ஆதரவாக வாக்களிப்பவர்களுக்கு தேவனிடம் மன்னிப்பே கிடையாது'' என்று பிரச்சாரம் செய்தார்; அடுத்த 2 மாதங்களில் டயானாவின் மணவிலக்கை ஆதரித்து கருத்து வெளியிட்டார்.

அரசியல் அறிவற்ற பரிதாபத்துக்குரிய ஒரு கன்னியாஸ்திரீயாக தோற்றம் தந்தாலும், திருச்சபையின் ஆதரவு பெற்ற கொடுங்கோலர்களின் பக்கம்தான் தெரசா எப்போதுமே நின்றார். போராடும் மக்களின் பக்கம் தவறிக்கூட அவர் நின்றதில்லை. அறமோ நேர்மையோ இல்லாத இந்த நடவடிக்கைகள் அவரது விசுவாசிகளையே துணுக்குறச் செய்தன. ஆனால் இவையெதுவும் தெரசாவிடம் மனப்போராட்டத்தைக் கூடத் தோற்றுவிக்கவில்லை.

தெரசாவின் இதயத்தில் தேவன் இல்லையேயொழிய, ஏகாதிபத்தியங்களின் கைக்கருவியான "திருச்சபை' உறுதியாகவே அமர்ந்திருந்தது. எனவே, திருச்சபையின் ஊழல்கள், ஒழுக்கக் கேடுகள், அறம் வழுவிய செயல்கள் எதுவும் அவருடைய இந்த ஆன்மீக நெருக்கடிக்குக் காரணமாக அமையவில்லை. பிழைப்பதற்குரிய தொழிலாக தேவ ஊழியத்தைத் தெரிவு செய்து கொண்டிருக்கும் விசுவாசமற்ற பாதிரியார்களிடமிருந்து இந்த விசயத்தில் தெரசா எந்த வகையிலும் வேறுபட்டவராக இல்லை.

தனக்கே விசுவாசமில்லாத ஒன்றின்மீது மற்றவர்களை விசுவாசம் கொள்ளச் செய்யும் மோசடியில் தெரசாவும் ஈடுபட்டிருக்கிறார். தான் இறந்த பிறகும் தன்னிடம் நிலவிய விசுவாசமின்மையை வெளியிட வேண்டாமென்ற அவரது கோரிக்கை, அவரது சிந்தனையில் ஊறியிருந்த கூச்சமற்ற போலித்தனத்தையே காட்டுகிறது.

ஆதரவற்றவர்கள் மீது அன்பு காட்டுவதற்காக அவர் தொடங்கிய சேவையே அவரது இதயத்திலிருந்து அன்பை உறிஞ்சி எடுத்துவிட்டது. ஏழ்மையை உற்பத்தி செய்யும் சமூக அமைப்பை ஒழிக்கத் துடிப்பவர்களிடம் மட்டுமே ஏழைகள் மீதான அன்பு இடையறாமல் சுரக்க முடியும். ஏழ்மையின் துயரத்தில் கிறிஸ்துவைக் காண்பவர்களால் ஏழைகளை நேசிக்க முடியாது.

கிறிஸ்துவை நேசிக்கும் பொருட்டுத்தான் தெரசா ஏழைகளை நேசித்தார். எந்த அளவுக்கு ஏழ்மையும் துயரமும் அவருக்கு உணர்ச்சியற்றவையாக ஆகத்தொடங்கினவோ, அதே அளவுக்கு கிறிஸ்துவும் அவருக்கு உணர்ச்சியற்றவரானார். ஆனால், ""விசுவாசத்தை இழக்க இழக்க, மேலும் தீவிரமான விசுவாசியாகத் தன்னை அவர் காட்டிக்கொண்டார். தன்னைக் குணமாக்கிக் கொள்ள தெரசா செய்த இந்த முயற்சி, தனக்குத் தானே அவர் வெட்டிக் கொண்ட படுகுழியை மேலும் ஆழப்படுத்தியிருக்கும்'' என்கிறார் ஹிட்சென்ஸ்.

தன்னில் கிறிஸ்து இறங்கியதாக கருதிக்கொண்ட அந்த மாயக்காட்சி (Hallucination) அனுபவம் இன்னொரு முறை நிகழுமென்று தெரசா எதிர்பார்த்திருக்கக் கூடும். ஆனால் 1946இல் இருந்தது போல "திறமைகள் ஏதுமற்ற பரிதாபத்துக்குரிய முதிர்கன்னியாய்' தெரசா இல்லையே! நிர்வாகம், நன்கொடை, விருதுகள், விமானப்பயணங்கள், தொலைக்காட்சிக் காமெராக்கள், பிரமுகர்களுடனான சந்திப்புகள் என அவரது வாழ்க்கை விரிந்து விட்டது. பொய்மை, இரட்டை வேடம், நேர்மையின்மை, அநீதியை அரவணைத்தல் என எல்லாத் தீமைகளும் அவர் இயல்பில் சேர்ந்து விட்டன.

எனினும், தெரசாவுக்குள் மிச்சமிருந்த அந்த அல்பேனிய முட்டாள் பெண் அவ்வப்போது விழித்துக் கொண்டு ஏசுவைத் தேடியிருக்கிறாள். ஆனால், தேவனைக் கதறி அழைக்கத் தேவைப்படும் கையறு நிலை தெரசாவின் வாழ்க்கையிலிருந்து அகன்று விட்டது. எவ்வளவு முயன்றும் அந்த மாயக்காட்சியை இன்னொருமுறை அவரால் தன்னில் தருவிக்க முடியவில்லை.

· மருதையன்

புதிய கலாச்சாரம்

நன்றி: தமிழரங்கம்

Wednesday, June 06, 2007

ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னொருவன் கன்னத்தை காட்டிக் கொடு - புதிய புரா

ந்த புறா இல்ல புறா.... வெள்ளையா இருக்கும். கக்கா போறது கூட வெள்ளையாவே கழியும்.... ஆங்.... நம்ம மாமா(நோ டபுள் மீனிங் ப்ளீஸ்) நேருகூட கையில வைச்சி சின்ன குழந்தைகள ஏமாத்துவாறே... அதே புறாதான். சமீபத்துல ஒரு புறாவ பத்தின கட்டுரைகள் சிலது படிச்சேன். உடனே மண்டக்குள்ளாற முதல்ல ஓடுனது மேல சொன்ன விசயங்கதான்.

அது வேற ஒன்னுமில்ல, சுயமரியாதை செம்மல் கீக்கீக்கீக்கீ வீரமணி அய்யா புறாவ வைச்சி ஏதோ செய்யிறாருன்னு படிச்சேன். எதோ பெரியார் புராவாம். கிரகத்துக்கு RSS அயோக்கிய பய புள்ளகளும் ஏதோ கோல்வால்கர் புரா அப்படின்னு புறா வளக்குறாங்கன்னு படிச்சவுடனே ரொம்ப குழப்பமாயிருச்சி. என்னாடாது தீடீர்னு புறாவுக்கு வந்த கேடு, ரெண்டு அயோக்கிய தறுதலைகளும் புறாவ வைச்சி ஏதோ முழு மூச்சா பன்றாய்ங்களே, உறுதியா நாட்டுக்கு நல்லது செய்யிற மாதிரி இருக்காதே அப்படின்னு.

RSSக்காரன விடுங்க அது பன்னி வாய் வச்ச வைக்கப்படப்பு மாதிரி எப்போதுமே புளுத்து நாறும், நம்ம வீரமணி அய்யா ஒழுங்கத்தான பொழப்ப ஓட்டிக்கிட்டு இருந்தாரு. ஏதோ அவருக்கு தெரிஞ்ச அளவுல திருகு வேலகள் பாத்துக்கிட்டு கண்ண மண்ண உறுத்தாமத்தான் அலஞ்சிக்கிட்டு இருந்தாரு. அப்பப்போ கொஞ்சம் கையறிப்பா இருந்தனா 'சுயமுன்னேற்றம்', 'கூட்டி கெடுத்தும்'.. சீ... 'கொடுத்தும் பிழைப்பது எப்படி?' அப்படிங்கற மாதிரி 'யு கென் வின்' பாணி கட்டுரைகள் எழுதிக்கிட்டிருந்தார். இலமர காய்மறயாத்தான் புண்ணாக்கு பாண்டி வேலைகள பாத்துக்கிட்டிருந்தாரு. ஆனா தீடீர்னு புறாவ வைச்சி என்ன பிசினஸ் கெட்ட கிரகத்த செய்றாங்கன்னு தெரியலயேன்னு ஒரே மண்ட குடைச்சல். ஏதுவும் புறாவுக் கூட்டிக் கொடுக்கிறாய்ங்களான்னு விபரீதமா நினைச்சி மனசு கெடந்து அடிச்சுக்கிது. சரி இத கண்டுபிடிச்சே தீர்ரதுன்னு எல்லாந் தெரிஞ்ச ஏகாம்பரத்துக்கிட்ட கேட்டேன்.

அவன் வழக்கம் போல சம்பந்தமில்லாம கரடி விட்டைப் போட்டது, யானை முட்டைப் போட்டதுன்னு வாய்க்கு வந்தத அடிச்சு விட்டான். இவிங்கிட்ட எதுவும் தேறாதுன்னு நாமளா எங்கனா தேடி தெரிஞ்சுக்க வேண்டியதுதான்னும் முடிவு பன்னிட்டேன்.

சரி விளையாட்டை விடுவோம், விசயத்துக்கு வருவோம்.

சமீபத்தில வடகர்நாடகாவிலும், மஹாராஸ்டிராவிலும் இன்னும் பல பகுதிகளிலும் கரும்பு விளைவித்த விவசாயிகள் அதனை வாங்க ஆளில்லாமல், உற்பத்திச் செலவுக்கு ஈடான விலை கொடுக்க ஆளில்லாமல் கரும்புகள் விறகுகளாய் மாறுவதை காணச் சகியமால் தற்கொலை செய்து வருகின்றன. அதிலும் குறிப்பாக விதர்பா பகுதி விவசாயிகளிடம் கரும்பு விளைவிக்கச் சொல்லி போன வருடம் கோரிக்கை விடுத்தார் மஹாராஸ்டிர முதலமைச்சர். அவரது சொல்லைக் கேட்டு கரும்பு விளைவித்த விவசாயிகள் அதனை வாங்க ஆளில்லாமல் தற்கொலை செய்து வருகின்றனர். தாங்கள் விளைவித்த கரும்பு காய்ந்து விறகாய் மாறிய பிறகு அதனை தீ வைத்து கொளுத்துவதை தவிர வேறு வழியில்லை என்று கொளுத்தி வருகின்றனர்.

இதற்க்கு காரணமாக இந்த வருடம் வேறு எந்த வருடத்தையும் விட மிக மிக அதிகமாக கரும்பு விளைந்து விட்டது என்று ஒரு சொத்தை வாதத்தை வைக்கிறார்கள். அதிகமாய் என்றால்? தன்னிறைவை ஈடுக்கட்டுவதை மீறிய அளவு கரும்பு விளைந்து விட்டதா? அல்லது சர்க்கரை இந்தியாவில் எல்லாருக்கும் தேவையான அளவு கிடைத்துக் கொண்டிருக்கிறதா? இல்லையே?

உண்மையில் இந்தியாவின் தன்னிறைவை நிறைவு செய்யும் அளவு கரும்பு உற்பத்தி செய்வது என்றால் இதை விட அதிகப்படியாகவே உற்பத்தி செய்ய வேண்டியிருக்கும். ஒரு பக்கம் கரும்பு குறைந்த பட்ச விலை கொடுத்து வாங்கவும் ஆளில்லை ஆனால் சந்தையில் மட்டும் சர்க்கரை விலை குறையக் காணோம்.

இதே நிலைமைதான் பிற தானிய வகையாறாக்களிலும். கரும்பு முதல் இன்னபிற அத்தியாவசிய விளை பொருள்கள் எல்லாம் இந்தியாவின் தன்னிறைவை ஈடு செய்யும் அளவு உற்பத்தி செய்யப்படுவதில்லை. இதற்க்கு எடுத்துக்காட்டு கோதுமையை நாம் இறக்குமதி செய்த அவலம். ஆனால் அரசோ இவற்றின் விளைச்சல் அளவை அதிகப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதோடல்லாமல் விளைவித்த பொருட்களையும் அழிய விட்டு பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த அழிவு தக்காளியில் தொடங்கி, பருத்தியில் வீரியமாகி, விவசாயியின் தற்கொலை வரை நீடிக்கிறது

சும்மாவா சொன்னார் மார்க்ஸ், உற்பத்தி சக்திகளின்(உழைப்பில் ஈடுபடும் மனிதனின் அனுபவ அறிவு, உற்பத்திக்கு உதவும் பொருட்கள், உற்பத்தியாகும் பொருட்கள்) முன்னேற்றத்துக்கேற்ப உற்பத்தி முறையில்(நிலபிரபுத்துவ பாணி உற்பத்தி, சிதறிய உற்பத்தி, முதலாளித்துவ உற்பத்தி) மாறாவிடில், உற்பத்தி சக்திகளின் அழிவு ஏற்ப்படும் என்று.

இப்படி அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிகமாக இருப்பினும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளவற்றை விநியோகம் செய்யவும் ஆளில்லை, உற்பத்தியை பெருக்கி எல்லாருக்கும் அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்க செய்யவும் ஆளில்லை. ஆனால் எந்த தறுதலைக்கும் உயிராதாரமான விசயமாயில்லாத மூங்கில் பயிர் வளர்க்க சொல்லி இந்த அரசும், NGO உளவாளிகளும் இந்திய விவசாயத்தின் முகத்தை மாற்றி வருகின்றனர்.

ஒரு சின்ன ஒப்பீட்டைப் பார்ப்போம். சர்க்கரைத் தேவைக்காக கரும்பு பயிர் செய்யும் இந்தியாவில் கரும்பு விவசாயம் செய்தவன் நாண்டு கொண்டு சாகும் நிலைதான் உள்ளது. ஆனால், ஒருவேளை இதே கரும்பை ஏகாதிபத்திய தரகு நிறுவனங்களுக்கு தேவையான ஏதோவொன்றை தாயாரிக்கும் விசயமாக இங்கு தயாரித்தால் நாண்டு கொண்டு சாகும் நிலையிருக்குமா?

இந்திய விவசாயிக்கு இருக்காது அன்பர்களே! ஆனால் இந்தியர்கள் என்ற வகையில் நாண்டு கொள்ள வேண்டிய நிலை நம்மெல்லோருக்கும் ஏற்ப்படும். இதோ இந்திய கரும்பு விவசாயத்தை பயோடீசல் தயாரிக்க பயன்படுத்தும் திட்டம் விரைவில் அமலாக இருக்கிறது. கரும்பு விவசாயம் நமது தேவைக்கு என்று இருந்த வரை ஆதரிக்க ஆளின்றி அழிந்த கதை போய் ஏகாதிபத்தியத்தின் தேவைக்கு என்று மாறிய பிறகு கொடுக்கப்படும் அதி அற்புத உபச்சாரத்தை நம் பார்க்க இருக்கிறோம்.

இதைத்தான் மறுகாலனியாதிக்கம் என்கிறோம். இந்திய வளங்களை நமது தேவைக்காக அன்றி ஏகாதிபத்தியங்களின் சந்தை தேவைக்காக சுரண்டும் இந்த அப்பட்டமான கொள்ளையைத்தான் மறுகாலனியாதிக்கம் என்கிறோம்.

நேற்று பிரிட்டிஸ் ஏகாதிபத்தியம் அவனது சாயப் பட்டறைகளுக்கு தேவையான அவுரி செடி பயிரிடச் சொன்னான். பல்லாயிரம் வருடங்கள் பண்படுத்தப்பட்ட மண்ணும், நீரும், நிலமும் நாசமாகும் என்பதை உணர்ந்த விவசாயி உயிரை விட்டானே ஒழிய அவுரி பயிரிட ஒப்புக் கொள்ளவில்லை. அவன் தன்மானமுள்ளவன்.

இன்று நெல் பயிரிட்ட இடங்களிலெல்லாம் அவனது செண்ட் தொழிற்சாலைகளுக்கான பூ பயிரிடச் சொல்லி அரசும், NGO வும் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்திய மக்களின் தேவைக்கான விவசாய உற்பத்தி அனைத்தும் திட்டமிட்ட அழித்தொழிக்கப்பட்டு அதன் விளைவாய் விரக்தியில் இருப்பவனிடம் சென்று ஏகாதிபத்தியத்திற்க்கு விவசாயம் செய் என்று பிரச்சாரம் செய்யும் படு கேவலமான கைக்கூலிகளாக அரசும், NGOக்களும் செயலபட்டு வருகிறார்கள். பூ பயிரிட தேவைப்படும் தண்ணீரின் அளவு குறித்து ஒரு தோழர் என்னுடன் உரையாடும் போது விளக்கினார். கேட்க்க மலைக்க இருந்தது. ஒருவேளை இந்த அதீத சுரண்டலில் தண்ணீர் வற்றிப் போனால்? அவனுக்கென்ன வந்தது. இந்தியா இல்லாவிட்டால் ஒரு இலங்கை. அவனது பூ தேவையை உலகம் முழுவதும் இடம் தேடி கண்டுபிடித்து பூர்த்தி செய்து கொள்வான். நமது உணவு தேவை?

இதோ கரும்பு பயிர்களெல்லாம் அமெரிக்க கார்களில் கரியாகப் போகிறது. இதோ கண்முன்னே கோதுமை இறக்குமதி செய்கிறோம். நமது தேசம் இயறகை வளமில்லாத பாலைவனம் இல்லையா அதனால்தான் கோதுமையை, உணவை இறக்குமதி செய்கிறோம்.

இதோ கட்டாமணக்கு பயிரிடுகிறோம். கட்டாமணக்கு தட்டுப்பாட்டால்தான் உபியிலும், ஒரிஸ்ஸாவிலும் பட்டினி சாவுகள் நிகழந்தனவல்லவா? அதனால்தான்.

இதோ பெரியார் புரா சொல்கிறார் 'அன்பர்களே மூங்கில் பயிரிடுங்கள்' என்று. பெரியாரை அவமானப்படுத்த இதைவிட வேறு சிறந்த வழியிருக்குமா தெரியவில்லை. தன்மானமின்றி கூட்டிக் கொடுக்கும் தரகு வேலைக்கு பெரியார் புரா என்று பெயர். இவர்களும் கூட கோல்வால்கர் புரா என்றே பெயர் வைத்திருக்கலாம். கூட்டிக் கொடுக்கும் தொழிலுக்கேற்ற பொருத்தமான பெயராகவாவது இருந்திருக்கும்.

முப்போகம் நெல் விளைந்த தஞ்சை மண். ஆனை கட்டி போரடித்த மண். சோழ வள நாடு சோறுடைத்து என்று பண்டைய இலக்கியங்களிலெல்லாம் பாடல் பெற்ற பாரம்பரிய விவசாய பூமி. வெள்ளையன் ஆட்சியில் கூட இந்தளவு ஒவ்வொரு முக்குச் சந்தும் அவனது சுரண்டலுக்கு ஆளாகியிருக்குமா தெரியவில்லை ஆனால் மறுகாலனியின் ஆட்சியில் தஞ்சையிலும் கை வைத்து விட்டனர் ஏகாதிபத்தியங்கள். நெல் விளைந்த பூமி இனி மூங்கில் விளைவித்து கப்பலில் ஏற்றுமதி செய்யும்.
சாலையின் இருமறுங்கில் பயிர்கள் பரந்து விரிந்து எங்கே வாகனங்களின் சக்கரங்களை தொட்டு விடுமோ என்று பரிதவிப்பை ஏற்படுத்தும் அடர்ந்த பச்சை, தொடுவானம் வரை நீண்டு கிடக்கும் வயல் வெளிகள். சிறு குழந்தையின் வெற்றுடம்பில் இயற்கை அன்னை முத்தமிட்ட தடங்களோ என்று வியப்பை ஏற்படுத்தும் வெள்ளி மடைகள். அதிகாலையின் இளம்குளிரில் நீராவி மேக மூட்டமாய் குவிந்து பயிர்களின் மீது போர்வை போர்த்தியிருக்கும் அழகு. சோம்பல் முறித்து அந்த பயிர்கள் சூரியனின் அன்பு அரவனைப்பில் உருகி பனி நீரை சொறியும் அற்புதம். இவையெல்லாம் காப்பிய கனவுகளாய் மாறும் காலம் வெகு தூரமில்லை. மூங்கில் பயிரிடும் தஞ்சை எப்படியிருக்கும்? சென்னை உயிரியல் பூங்காவில் மூங்கில் காடுகளைப் பார்த்ததில்லை நீங்கள்? சென்னைவாசிகள் தஞ்சையின் அழகை சென்னையிலேயே ரசிக்கலாம்.

அஸ்ஸாம் தேயிலையின் நிறம் என்னவென்றே கூட தெரியாத இந்தியர்கள்தானே நாம். லாபம்... ஆம் லாபம் வருமென்றால் மூங்கில் பயிரிட வேண்டியதுதானே. பிழைப்புவாதம் பேசும் டாலர் கண்மணிகளே உங்கள் வீட்டுப் பெண்களை கொஞ்சம் கூட்டிக் கொடுங்களேன் சில எச்சில் டாலர்களை உங்கள் மணம் குளிரும் அளவு மலையாய் அள்ளி குவிக்கிறேன். செய்வீர்களா அடிவருடிகளே?

எதிர்காலத்தை விற்று நிகழ்காலத்தை கரியாக்கும் இந்த கேட்டிற்க்கு பெயர் திறமையாம், லாபமாம்.

இப்படி ஏகாதிபத்தியத்திற்க்கு இந்தியாவை கூட்டிக் கொடுக்கும் வேலையில்தான் இந்த எதிர்பாராத கூட்டணி ஏற்ப்பட்டுள்ளது. RSS, திராவிடர் கழகம் கூட்டணி. ஜார்ஜ் புஷ் செப் 11யை ஒட்டி சொன்னான் "ஒன்று நீங்கள் எங்கள் பக்கம் அல்லது பயங்கரவாதிகளின் பக்கம்" என்று. இதோ மறுகாலனியாதிக்கம் செவுளில் அறைந்து இதே கேள்வியை கேட்கிறது ஒவ்வொருவரையும். வீரமணியும் கூட அறை வாங்கியிருப்பார் உடனே சுயமரியாதை பொங்க முடிவெடுத்திருப்பார்: "பெருந்தகையீரே! ஏகாதிபத்தியமே! நாங்கள் உங்கள் பக்கம்" என்று. அவர் செயல் வீரர். தந்து விசுவாசத்தை நிரூபித்தும் காட்டுகிறார்

செவுளில் அறை வாங்குபவர் அவர் மட்டுமல்ல. நாம் ஒவ்வொருவரும் நித்தம் வாங்குகிறோம். நாம் எந்த பக்கம் என்பதை உறுதியாக நாம் வாங்கும் அறை முடிவு செய்வதில்லை. அது ஒவ்வொருவரின் சுயமரியாதை சம்பந்தப்பட்ட விசயம். நீங்கள் அறை வாங்கினீர்களா? நீங்கள் எந்த பக்கம்? உங்களுக்கு சுயமரியாதை உள்ளதா?

அசுரன்


Related Articles:

நவீன கிழக்கிந்திய கம்பேனிகள் - SEZ!
இந்தியாவின் ஜனநாயகமும் - விவசாயமும், சிறு தொழில் துறையும்
பத்ரியின் கிராமப் பொருளாதாரக் கட்டுரை - ஒரு உட்டோஅடிமை நாடும், போலி சுதந்திரமும்
இழிச்சவாயர்களும், இந்திய விவசாயமும்
அவனுடைய உமியும் - நம்முடைய நெல்லும்!
India Inc Stinks-SEZ ல் செக்ஸ் அனுமதி உண்டா?

Wednesday, March 14, 2007

தேசத் துரோக அடிவருடிகளும், சுதந்திர வர்த்தகமும் - உலகமயம்!!

இன்றைக்கு சுதந்திர வர்த்தகம் குறித்து பேசும் ஏகாதிபத்திய அடிவடுடிகள், தொழில் வளர்ச்சி, தொழில் முதலீட்டிற்க்கான மூலதன்ம் இவற்றையே காரணமாக கூறி ஏமாற்றுகிறார்கள். ஆனால் உலகில் முன்னேறி நிற்க்கும் நாடுகளின் வரலாறை பார்க்கும் பொழுது இவர்களின் இந்த கூற்று பொய் என்று தெரிய்வருகிறது.

Free Trade குறித்து மார்க்ஸின் கட்டுரைக்கான ஏங்கெல்ஸின் முன்னுரை.

""After a long and violent struggle, the English industrial capitalists, already in reality the leading class of the nation, that class whose interests were then the chief national interests, were victorious. The landed aristocracy had to give in. The duties on corn and other raw materials were repealed. Free Trade became the watchword of the day. To convert all other countries to the gospel of Free Trade, and thus to create a world in which England was the great manufacturing centre, with all other countries for its independent agricultural districts, that was the next task before the English manufacturers and their mouthpieces, the political economists.""

பிரிட்டிஷ் முதலாளிகளின் இடத்தில் இன்றூ தேசம் கடந்த பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகள் உள்ளனர். மூன்றாம் உலக நாடுகளை தங்களது சந்தை மற்றும் உற்பத்திக்கான பின்நிலங்களாக வைத்துள்ளனர் என்ற அளவில் ஒப்பிட்டு புரிந்து கொள்ள இந்த வரிகள் உதவும்.

மேலும் இங்கு பிரிட்டனுக்கும் அதனுடன் சுதந்திர வர்த்தகம் செய்ய விழைந்த நாடுகளுக்கும் இடையிலான முதலாளித்துவ வளர்ச்சி வித்தியாசம் என்பது மிக குறைவு. எனவே இந்த வர்த்தக உறவால் ஏற்பப்டும் பாதிப்பு குறைவே. ஆனால் இந்தியாவுடன் பிற் ஏகாதிபத்தியங்களுக்கு உள்ள ஒப்பிட இயலா வித்தியாசத்துடன் பொருத்திப் பார்க்கும் பொழுது இந்தியாவுக்கு அது மரண அடியாக பாதிப்பு கொடுக்கும் என்பதை விவசாயிகளின் தற்கொலைகளில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

பிரிட்டனின் இந்த சுதந்திர வர்த்தக நோக்கத்தை மார்க்ஸ் ஆதரித்தார். ஏனேனில், இது பிரிட்டனில் தொழில் வளர்ச்சியை மிக வேகமாக முடுக்கி விடும் எனவே புரட்சிக்கான சூழல் மிக வேகமாக வளரும் என்ற அடிபப்டையில். ஆக, ஏகாதிபத்தியத்தின் பொருளாதார் வளர்ச்சிக்கு சுதந்திர வர்த்தகம் உதவி புரிவதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இது எந்த வகையிலும் சுதந்திர வர்த்தகத்தில் இணையும் பிற நாடுகளுக்கு உதவிகரமானது இல்லை எனப்தை கீழே விவரிக்கிறேன்.

அன்றைய பிற முதலாளித்துவ நாடுகள் பிரிட்டனின் உலக மேலாதிக்க திட்டங்களைப் பார்த்துக் கொண்டு புளிய்ம பழமா பறித்துக் கொண்டிருந்தார்கள்? இல்லை மாறாக அவர்களும் தமது சொந்த உற்பத்தியை மிக வேகமாக வளர்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் சுதந்திர வர்த்தகம் மூலமாக இல்லை, மாறாக தமது பொருளாதாரத்தை இறுக்க மூடி வெளி நாட்டு மூலதனத்திலிருந்த பாதுகாத்தன் மூலமே தமது பொருளாதாரத்தை வளர்த்தனர்.

""The foreign countries did nothing of the kind. France, for nearly 200 years, had screened her manufactures behind a perfect Chinese wall of protection and prohibition, and had attained in all articles of luxury and of taste a supremacy which England did not even pretend to dispute.""

இங்கு பிரான்ஸ் தேசம் தனது சொந்த நாட்டின் தொழில் வளர்ச்சியை புரொக்டசனிஸ்ட் முறை மூலம் காபந்து செய்து வளர்த்தது குறித்து ஏங்கெல்ஸ் சொல்கிறார். இது போலவே ஜெர்மனி, சுவிட்சர்லாந்து என எல்லா நாடுகளும் தமது தொழில் வளர்ச்சியை இப்படி பொத்தி பொத்தி பாதுகாத்துதான் வளர்த்தனர்.

ஏங்கெல்ஸ் ஒரு ரயில் பிரயாணத்தில் தன்னுடம் பயணம் செய்த சக பயனியான இரும்பு வியாபாரியிடம் பேசுகிறார். இரும்பு வியாபாரி அமெரிக்காவின் protectionist பொருளாதார கொள்கையை விமர்சித்து பேசுகிறார்.

"Was it not inconceivable that a nation of sharp businessmen like the Americans should pay tribute to indigenous ironmasters and manufacturers, when they could buy the same, if not a better article, ever so much cheaper in this country?"

அதாவது இரும்பை குறைந்த விலைக்கு உற்பத்தி செய்யும் இங்கிலாந்திலிருந்து வாங்குவதை விடுத்து ஏன் உள்ளூர் இரும்பு உற்பத்தியாளர்களை அமெரிக்க ஊக்கப்படுத்துகிறது என்கிறார். மேலும் அவர் free trade என்ற இன்றைய உலகமயத்தின ஆதார நியதியை ஆதரித்து பேசுகீறார்.

இதற்கு எங்கெல்ஸ் பின்வருமாறூ கூறுகிறார்,

""Well," I replied, "I think there is another side to the question. You know that in coal, waterpower, iron, and other ores, cheap food, homegrown cotton, and other raw materials, America has resources and advantages unequalled by any European country; and that these resources cannot be fully developed except by America becoming a manufacturing country. You will admit, too, that nowadays a, great nation like the Americans' cannot exist on agriculture alone; that would be tantamount to a condemnation to permanent barbarism and inferiority; no great nation can live, in our age, without manufactures of her own. Well, then, if America must become a manufacturing country, and if she has every chance of not only succeeding but even outstripping her rivals, there are two ways open to her: either to carry on for, let us say, 50 years under Free Trade an extremely expensive competitive war against English manufactures that have got nearly a hundred years start; or else to shut out, by protective duties, English manufactures for, say, 25 years, with the almost absolute certainty that at the end of the 25 years she will be able to hold her own in the open market of the world. Which of the two will be the cheapest and the shortest? That is the question. If you want to go from Glasgow to London, you take the parliamentary train at a penny a mile and travel at the rate of 12 miles an hour. But you do not; your time is too valuable, you take the express, pay twopence a mile and do 40 miles an hour. Very well, the Americans prefer to pay express fare and to go express speed.""

அதாவது அமெரிக்காவில் அளப்பரிய வளங்கள் உள்ளன. இவற்றை வளர்த்தெடுக்க அமெரிக்க ஒரு உற்பத்தி பொருளாதாரமாக மாற வேண்டும். விவசாயத்தை மட்டும் நம்பி ஒன்றும் செய்ய முடியாது. இதை சாதிகக் இரு வழிகள் உள்ளன. ஒன்று தனது நாட்டை திறந்து விடுவதன் மூலம் இங்கிலாந்து முதலாளீகளுடன் முட்டி மோதி தந்து நாட்டு உற்பத்தியை வளர்ப்பது. இன்னொன்று தனது நாட்டை இறுக்கமாக மூடி சொந்த நாட்டு உற்பத்தியை வளர்த்தெடுப்பது.

நீ ஒரு இடத்துக்கு போக சாதா ரெயிலும், எக்ஸ்பிரஸ் ரயிலும் இருந்தால் காசு கொஞச்ம் கூட ஆனாலும் பரவாயில்லை என்று எக்ஸ்பிரஸ் ரெயிலில்தானே செல்வாய்? அதைத்தான் அமெரிக்க செய்கீறது. தனது நாட்டின் உற்பத்தியை வேகமாக வளர்த்தெடுக்க காசு அதிகமாகா செல்வனாலும் பரவாயில்லை என்று அமெரிக்க த்னது கதவுகளை மூடி கொண்டுள்ளது. என்று ஏங்கெல்ஸ் பதில் சொல்கீறார்.

இப்படி ஒவ்வொரு ஏகாதிபத்தியமும் தமது பொருளாதாரத்தை பொத்தி பொத்தி வளர்த்துவிட்டு இன்று இந்தியா போன்ற நாடுகளை கதவைத் திறந்து விடச் சொல்கின்ற்ன. அதற்க்கு சில அடிவருடிகளின் ஆதரவு வேறு.

இவர்களின் ஒரே வாதம், இந்தியாவில் தொழில் புரட்சி நடக்க இந்தியாவை திறந்து விட வேண்டும் என்பதுதான். ஆனால் இவர்களின் அப்பன் நாடுகள் எதுவும் இவர்களின் இந்த கூற்றை நடைமூறையில் இன்று வரை ஏற்றுக் கொள்ளவில்லை. இன்றூம் கூட தனது விவ்சாய உற்பத்தியை protectionist கொள்கையின் மூலம் காத்து வருபவர்கள்தான் ஏகாதிபத்திய்ஙகள். அதாவது இந்தியாவை தமது குறை விலை பருத்தியால், பாலால் நிறைக்கும் ஏகாதிபத்திய்ங்கள், தமது நாட்டில் இந்திய விவசாய பொருட்களை அனுமதிப்பதில்லை. அனுமதித்தாலும் நாம் சந்தையில் நிற்க முடியாது ஏனேனில் ஒவ்வொரு நாடும் தனது உள்நாட்டு விவசாய உற்பத்தியாளருக்கு 100% வரை மானியம் தருகீறார்கள்.

ஆக நேற்றைய வரலாறு நமக்கு சொல்வது , "ஒரு நாட்டின் முதலாளித்துவ வளர்ச்சி என்பது, உற்பத்தி வளர்ச்சி என்பது அதனை வெளிநாட்டு மூலதனத்திலிருந்து பாதுகாப்பதில் அடங்கியுள்ளது என்பதை" அதாவது உள்நாட்டு முதலாளிகளை வளர்ப்பதில் அடங்கியுள்ளது.

இன்றைய ஏகாதிபத்தியங்கள் தமது விவசாய உற்பத்தியில் நடைமுறைப்படுத்தும் கொள்கையும் இதையேதான் சொல்கீறது.

தமது சொந்த் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு ஆதரவாக பேசும் போது குறைந்த் விலை, தொழில்நுட்பம் என்றெல்லாம் சப்பைக் கட்டு கட்டாமல் தமது பொருளாதாரத்தை கட்டி காத்து வளர்த்த அன்றைய முதலாளித்துவ நாடுகளும், இன்றைய் ஏகாதிபத்திய நாடுகளின் தேசபக்தி எங்கே? இதே தொழில் வளர்ச்சியை நாட்டை திறந்து விட்டு நாறடித்தால்தான் சாத்தியம் என்று கதை கட்டி இந்தியாவின் வளங்களை கூட்டிக் கொடுக்கும் அடிவருடிகளின் தேசத் துரோகம் எங்கே?

இவர்களின் யாருக்கு தேசப்பற்று உள்ளது? வெறுமனே சுதந்திர தின விழாவுக்கு கட்டுரை எழுதி மிட்டாய் கொடுத்தால் தேசப்பற்றா?

அடிவருடிகள் பதில் சொல்வார்களா அல்லது வழக்கம் போல ஓடி மறைந்து கொள்வார்களா?

இங்கு ஒரு விசயம் கவனிக்க வேண்டும். அமெரிக்காவின் தொழில் வளர்ச்சி ஓரளவு நல்ல நிலையில், இங்கிலாந்துடன் போட்டி போடும் நிலையில் இருக்கும் பொழுதே அதன் சந்தையை இங்கிலாந்துக்கு திறந்து விடுவது அதன் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்ப்படுத்தும் என்பதுதான் உண்மை. இந்தியாவோ எந்த வகையிலும் உற்பத்தியில் ஏகாதிபத்திய நாடுகளின் அருகிலேயே இல்லை. இந்நிலையில் திறந்து விடுவது என்பது சுத்தமாக இந்தியாவை அழிவின் விளிம்புக்கு கொண்டு செல்லும் என்பதுதான் உண்மை.

ஏகாதிபத்திய்ங்களின் இன்றைய கொள்கைகளும் சரி, நேற்றைய வரலாறும் சரி நமக்கு சொல்வது இதுதான், "சுதந்திர வர்த்தகம் என்பது உள்நாட்டு தொழில் வளர்ச்சிக்கு ஆபத்தே'. அது உண்மையான தொழில் வளர்ச்சியின் வேகத்தை முடக்கி போட்டு மந்தமான வளர்ச்சியையே உருவாக்கும் என்பதுதான் உண்மை. இந்த மந்தமான வேகத்தைத்தான் அடிவருடிகள் ஊதிப் பெருக்கி நம்மை ஏமாற்றுகிறார்கள். மாறாக 10 வருடங்க்ளில் 56 மடங்கு உற்பத்தியை வளர்த்திக் காட்டிய சோசலிச(1970's) சீனாவின் அனுபவ்ம் நமக்கு மாற்றுப் பாதையைக் காட்டுகிறது.
நாம் இழிச்சவாயர்களா? அடிவருடிகளா? தற்குறிகளா? பிழைப்புவாதிகளா? அலல்து சுயமரியாதை உள்ள தேச பக்தர்களா என்பதை அவரவர சொந்த முயற்சியில் பரிட்சித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அசுரன்
Related Articles:

Related Posts with Thumbnails