TerrorisminFocus

Friday, May 30, 2008

குஜ்ஜார் போராட்டமும், சாதிக் கொழுப்பெடுத்த பார்ப்பன வெறி டைம்ஸ் ஆப்பு இந்தியாவும்!!

பார்ப்பன கொழுப்பெடுத்த RSS பயங்கரவாத பத்திரிகை - டைம்ஸ் ஆப் இந்தியா!!!

டைம்ஸ் ஆப்பு(ஆப்பு இந்தியாவுக்கு) இந்தியா பத்திரிகை ஒரு பார்ப்பன பத்திரிகை என்பதும், குறிப்பாக அது ஒரு RSS பயங்கரவாதிகளின் அதிகாரப் பூர்வ பத்திரிகை என்பதும் பெரும்பாலனவர்கள் அறிந்ததே.

அடிக்கடி தனது பார்ப்பன தினவெடுத்த கருத்துக்கள் மூலம் பிற பிரிவு பெரும்பான்மை மக்களை அவமானப்படுத்தி, சிறுமைப்படுத்தி வருவதை குமுதம் உள்ளிட்ட இந்த பத்திரிகைகள் தொடர்ந்து செய்து வருகின்றன.

அதே நேரத்தில், பார்ப்பன கும்பலின் அநீதியான போராட்டங்களையும் கோரிக்கைகளையும் ஏதோ மிக உயர்வானது, நியாயமானது என்றும் தவறாமல் பிரச்சாரம் செய்து வருகின்றன இந்த பத்திரிகைகள். இடஓதுக்கீடை எதிர்த்து போராடிய மருத்துவ கல்லூரி பார்ப்பன கும்பல் முதல் சேது சமுத்திர திட்டம் வரை பல்வேறு பிரச்சினைகளில் இது கண்கூடு.

தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் சாதியினர் தம்மை ST பிரிவில் சேர்க்கக் கோரி போராடி வருவதையும் தனது பார்ப்பன கொழுப்பின் அடிப்படையிலேயே கேலி செய்துள்ளது டைம்ஸ் ஆப்பு இந்தியா. குஜ்ஜார் பிரச்சினையை பொறுத்த வரை நமக்கும் சில மாற்று கருத்துக்கள் உள்ளன. ஆனால் ஒரு பிரச்சினையை அதன் சரியான அம்சத்தில் அணுகுவதும் மாறாக அந்த பிரச்சினையை தமது மேலாதிக்க கருத்துக்களை நிறுவும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளும் குசும்பும் வேறு வேறு. டைம்ஸ் ஆப்பு இந்தியா போன்ற பார்ப்பன வெறி பத்திரிகைகள் இரண்டாவதையே செய்து வருகின்றன.

துப்யமேன் என்ற பெயரில் வெளிப்படையாகவே பார்ப்பினியத்தை நக்கும் டைம்ஸ் ஆப்பு இந்தியாவின் கார்ட்டூன் படங்கள் கடந்த சில நாட்களாக மிக வக்கிரமாக எழுதி வருகின்றன.





Photobucket

டைம்ஸ் ஆப்பு இந்தியாவில் வந்த கார்ட்டூன்


29 May 2008 ல் அது வெளியிட்ட கார்ட்டூனில் பொது மக்கள் குஜ்ஜார்களை எதிர்த்து கல்லெடுத்து தெருச் சண்டையில் ஈடுபட கோரிக்கை விடும் வகையில் கார்ட்டூன் வெளியிட்டிருந்தது இந்த கொழுப்பெடுத்த பத்திரிகை. குஜ்ஜார்கள் தமது உயிரை தியாகம் செய்தே போராடுகின்றனர். அந்த கோரிக்கை ஒரு தீர்வா என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும் அந்த கோரிக்கைக்கு அடிப்படையான சமூக பொருளாதார பின்னணி சாசுவதமான பேருண்மை என்பதில் நமக்கு மாற்று கருத்துக்கள் இல்லை. மாறாக, உயர் நடுத்தர வர்க்க AIMS பார்ப்பன பொறுக்கிகளோ அல்லது RSS, விஸ்வ ஹிந்து பரிசத் பயங்கரவாதிகளோ கோழைகளாய் பிறரின் ரத்தத்தில், அப்பாவி நோயாளிகளின் மரணத்தில், சிறுபான்மை உழைக்கும் இஸ்லாமிய மக்களின் ரத்தத்தில்தான் தமது அரசியல் கள்ளச் சாராயத்தை காய்ச்சிக் கொள்கின்றனர். ஆயினும் இந்த பத்திரிகைகள் அந்த அயோக்கியத்தனமான பார்ப்பன வெறி போராட்டங்களை, பயங்கரவாத செயல்களை ஏதோ விடுதலை போராட்டம் ரேஞ்சுக்கு உயர்த்தி பிடித்து முதல் பக்கத்தில் படங்களுடன் செய்தி வெளியிட்டு தமது அரிப்பை சொறிந்து கொள்கின்றன.

குறிப்பாக அந்த கார்ட்டூன் இடஓதுக்கீடிற்கு எதிராக எல்லா மக்களும் கல்லெடுத்து போராடுவதாக குறிப்பிடுகிறது. விரல் விட்டு எண்ணக் கூடிய பார்ப்பன மேல் சாதி வெறியர்களின் போராட்டத்தை ஏதோ மிகப் பெரிய போராட்டமாகவும், பெரும்பான்மை மக்களின் போராட்டங்களை சிறுமைப்படுத்துவதுமான இரட்டை நாக்கு அணுகுமுறை இவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆயினும் இவையெல்லாவற்றையும் சூடு சுரனையின்றி படித்துக் கொண்டிருக்கும் கும்பல்தான் நமது இலக்கு. இந்தியாவில் பார்ப்பனனுக்கு மட்டும்தான் சூடு சுரனையுள்ளது என்று நம்பும் பார்ப்பனியக் கொழுப்புக்கு இந்த மயான அமைதிதான் அடிப்படை அமைத்துக் கொடுக்கிறது எனும் போது அந்த மாயான அமைதியை சுட்டுப் பொசுக்குவதுதான் நமது இலக்கு.

பிற பெரும்பான்மை மக்களை தேவடியா மகன் என்று வெளிப்படையாக சொல்லித் திரிந்த தைரியம்தான் சிறுபான்மை பார்ப்பன கும்பலின் இடஓதுக்கீடு எதிர்ப்பு போராட்டத்தை வெகு மக்கள் போராட்டமாக திரிக்கும் திமிர்த்தனத்திற்க்கும் அடிப்படையாக உள்ளது. பெரும்பான்மை மக்களின் அன்றாட அவல வாழ்வின் காரணமாக இந்த அரசு வழங்கும் அல்ப சலுகைகளில் எப்படியாவது முட்டி மோதி தமக்கு ஒரு வாய்ப்பை பறித்துக் கொள்வதற்காக அவர்கள் நடத்தும் போராட்டங்களை அவதூறு செய்யவும் அடிப்படை அமைத்துக் கொடுக்கிறது.

Photobucket
கிரிமினல்கள் ஜக் சுரையாவும், நிலாபும் வெகு மக்களை கிரிமினல்கள் என்று புரளி பேசும் TOI கார்ட்டூன்

இன்னும் ஒரு படி மேலே போய் அதற்க்கு அடுத்த நாள் இந்த துப்யாமென் பொறுக்கி குஜ்ஜார்களை கிரிமினல்களாக சித்தரிக்கிறது. பல் டாக்டர் தனது மகளை கொன்ற வழக்கையும், குஜ்ஜார் போராட்டத்தையும் ஒன்றாக பட்டியலிட்டு இரண்டு கிரிமினல்கள் பேசுவது போல கார்ட்டூன் போட்டுள்ளது இந்த பத்திரிகை. கையில் காயாமல் வலிந்து ஓடும் ரத்தக் கறையுடன் அலையும் பார்ப்பன மத வெறி தலைவர்களான அத்வானி, பால்தாக்காரே, வாஜ்பேயி, மோடி போன்ற சொறிநாய்களை இந்த பத்திரிகைகள் என்றைக்கும் கிரிமினல்களாக காட்டுவதில்லை. உண்மையிலேயே கிரிமினல் குற்றங்களின் மாட்டிக் கொண்டு கையும் களவுமாக பல்வேறு தொலைக்காட்சி, செய்தி நிறுவனங்களால் அம்பலப்படுத்தப்பட்ட பார்ப்பன மதவெறி தலைவர்கள் யாரும் இது வரை இந்த பத்திரிகைகளால் கிரிமினல்கள் என்று காட்டப்படுவதில்லை.

மாறாக, பின் தங்கிய, படு மோசமான ஏழ்மை நிலையிலுள்ள குஜ்ஜார்களின் ஓட்டுக்களை வாங்குவதற்க்காக பழங்குடியினர் பட்டியலில் அவர்களை சேர்ப்போம் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த பாஜக பயங்கரவத கட்சிதான் உண்மையான கிரிமினல். இந்த கிரிமினல்கள் குறித்து டைம்ஸ் ஆப்பு இந்தியா, குமுதம் போன்ற RSS பயங்கரவாத, மக்கள் விரோத பத்திரிகைகள் என்றைக்கும் எழுத மாட்டார்கள். உலகமய பொருளாதாரம் இந்திய கிராமங்களை சாவின் விளிம்பில் நிறுத்தி வைத்து விளையாண்டு வரும் கிரிமினல் குற்றம் இன்னும் மேலதிகமாக இது போன்ற பெரும்பான்மை பின் தங்கிய பிரிவு மக்களின் வாழ்க்கையை மோசமாக்கி வருகிறது என்பதுதான் உண்மை. இந்த கிரிமினல் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து சிலாகித்து எழுதும் இந்த மக்கள் விரோத பத்திரிகைகள் அதன் விளைவாக எழும் வெகு மக்கள் போராட்டங்களை கேவலப்படுத்தி, சிறுமைப்படுத்தி எழுதி தமது மேல்சாதி அரிப்பை வெட்கமின்றி அப்பட்டமாகவே சொறிந்து விட்டுக் கொள்கின்றன. இது போன்ற பத்திரிகைகளை துட்டு கொடுத்து வாங்காமல் புறக்கணிப்பது என்பதுதான் தன்மானமுள்ள ஒவ்வொருவனும் செய்யக் கூடிய குறைந்த பட்ச எதிர்ப்பு நடவடிக்கை.

இவர்கள் உண்மைகளை என்றைக்கும் எழுதப் போவதில்லை. இவர்களுக்கான தண்டனைகள் வீதிகளில் வழங்கப்படும் போது உண்மைகள் எழுதும் தகுதியுள்ளவர்களுக்கோ எழுதுவதற்கு நேரமிருக்காது. இவர்களின் குரல்கள் கேட்க்க நாதியின்றி கரைந்து போய் கொண்டிருக்கும். கார்ட்டூன் எழுதிய திமிர் பிடித்த கரங்கள் தெய்வங்களை இறைஞ்சி உதவி கேட்டுக் கொண்டிருக்கும். கிரிமினல்கள் தெய்வமாகி இருப்பார்கள் அப்பொழுது.

அசுரன்

இடஓதுக்கீடு பிரச்சினையில் AIMS பார்ப்பன வெறியர்கள் அப்பாவி நோயாளிகளை பணயக் கைதிகளாக வைத்து நடத்திய மிரட்டல் நாடகத்தை அம்பலப்படுத்தி கைப்புள்ள தளத்தில் வெளியிடப்பட்ட கார்ட்டூன்:


Photobucket

This cartoon I got forwarded to my Mail from my friend. Sometime before Indian Express published a cartoon ridiculing SBI strike. Now while the upper class elite are striking against the right of oppressed people, Indian Express supporting them. This is the real face of Indian Express always against right of the people. The SBI cartoon is modifed to expose the Anti reservation strike by junior Doctors.
Cartoon & Caption: Kaipulla

Related Articles:
இவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான் நம்ப விரும்புகிறோம் அல்லவா??!!!
The media’s role in communalising Karnataka
குஜ்ஜார் போராட்டமும் 'சமூக நீதி"யின் வரம்பும்

Reservation!

Reservation-Haunts Again(More teeth added) -I

Thursday, May 29, 2008

ஒரு சிறுகதை - கண்ணாடி வேலிகளால் சிறையுண்ட நாகரிகம்!!

கரத்தின் இயந்திரகதியான வாழ்க்கையையும், மனித உறவுகளை கண்டாலே பீதியடைந்து தட்டிக் கழித்து ஓடும் இழிவையும், மனிதன் ஒரு சமூக விலங்கு என்ற இயல்பை மறுக்கும் ஏகாதிபத்திய தனிமனித காலாச்சாரத்தையும், நத்தை ஓட்டுக்குள் தம்மை சுருக்கிக் கொண்டு அல்ப மனிதர்களாய் வளம் வருபவர்களையும், மனித சமூகத்தின் சாரத்தை மறுக்கும் இன்றைய சமூகத்தின் போலித்தனத்தையும் திரை கிழித்து கார்க்கி எழுதிய சிறுகதை. சிறப்பாக உள்ளது அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும்.
அசுரன்
_____________________________________________________________

அவனை பதினேழு வருடம் கழித்து சந்திப்பேன் என்று நினைத்தும் பார்க்கவில்லை. வேலை முடிந்து ஆபீசில் இருந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் பெட்ரோல் பங்க்கில் வரிசையில் நின்று கொண்டிருக்கும் போது தான் அவனைப் பார்த்தேன். கல்லூரியில் கடைசி வருடம் கடைசி நாள் சான்றிதழ் வாங்கும் நாளன்று பார்த்தது தான். அதற்குப் பின்எங்கே போனான் என்னவானான் என்கிற ஒரு தகவலும் இல்லாமல் போய் விட்டது. தாளாத மகிழ்ச்சியோடு பேச ஆரம்பித்தேன்.

“டேய் சுந்தரா.. எப்படி இருக்கேடா.. இத்தனை நாளா எங்கேடா போயிருந்தே..எப்போ இந்த ஊருக்கு வந்தே?” கொஞ்சம் முன்வழுக்கையும் இளந்தொந்தியுமாக இருந்தான் எங்கள் கல்லூரிக் கால ரோமியோ. கண்களைச் சுற்றி இருந்த கருவளையம் ஒரு ஐந்து வயதை கூட்டிக் காட்டியது.

“ம்ம்ம் நல்லா இருக்கண்டா.. இங்கே வந்து ரெண்டு மாசமாச்சு நீ எப்படி இருக்கே” ஏதோ சொல்லமுடியாத அவஸ்த்தையில் கண்கள் அலைபாய்ந்தபடியே பேசினான். நான் அதைக்கண்டு கொள்ளாமல் தொடர்ந்தேன்.

“நானும் நல்லா இருக்கேன்.. அப்புறம் கல்யாணமெல்லாம் ஆயாச்சா?” என்று உரையாடலை நீட்டும் உத்தேசத்தோடு கேள்வியை வீசினேன்.

“ஆயாச்சு.. ஒரு பையன். ஐந்தாவது படிக்கிறான்” துண்டுத்துண்டான பதில்கள். எதிர்கேள்வியில்லை. ஏதோ அவசர வேலைக்குச் செல்பவனைப் போல கால் மாற்றி கால் மாற்றி நின்று கொண்டிருந்தான்.

“ஓ.. என்னடா ஒரு மாதிரியா பரபரப்பா இருக்கே? எதுனா அவசர வேலையா” கேட்டதும் அவன் முகத்தில் பல்பு எரிந்தது. இந்தக் கேள்விக்குத் தான் காத்திருந்தான் போல; உடனே பதில் வந்தது..

“ஹிஹி.. அமாண்டா.. கொஞ்சம் முக்கியமான ஒரு வேலை. ஒத்தரை பாக்க வர்றேன்னு சொல்லிருக்கேன் அதான் அவசரமா போயிட்டிருக்கேன் ஒன்னோட மொபைல் நெம்பர் கொடேன்.. அப்புறமா காண்டாக்ட் பன்றேன்” ஒருகையால் செல்பேசியை எடுத்துக் கொண்டே எதிர் காலை வீசி பைக் சீட்டை ஆரோகனித்தான். அவன் வண்டியின் டேங்க் கவர் புடைத்துக் கொண்டிருந்தது. உள்ளே எதையோ தினித்து வைத்திருந்தான்.

“சரி சரி.. உன் நெம்பர் கொடு மிஸ்டு கால் தர்றேன்”

மிஸ்டு கால் கொடுத்து விட்டு எனது செல்பேசியில் அவனது எண்ணை சேமித்துக் கொண்டே அடிக் கண்ணால் அவனைப் பார்த்தால் அவன் எனது எண்ணை சேமிக்காமல் பைக் சாவியை திருகிக் கொண்டிருந்தான்..

“டேய் சேவ் பண்ணிக்கடா”

“அப்புறம் பண்ணிக்கறேண்டா., மிஸ்டு கால் லிஸ்டிலே இருக்குமில்லே”

“சரி சரி எங்கே தங்கியிருக்கேன்னு சொல்லு நான் அந்தப் பக்கம் வந்தா வீட்டுக்கு வர்றேன்” என்றேன். அவன் பைக்கை உதைத்து அதை புகை கக்க வைத்துக் கொண்டே பேசினான்,

“நேத்தாஜி நகர் தெரியுமில்லே.. அங்கே சிம்பொனி அப்பார்ட்மெண்ட்; ரெண்டாவது ப்ளோர்.. டோர் நெம்பர் 204″ நான் குறித்துக் கொண்டேனா என்று கூட கவனிக்காமல் கியர் மாற்றி “சரிடா அப்புறம் கூப்பிடறேன்” என்று விட்டு எனது பதிலுக்குக் காத்திறாமல் பறந்தே போய் விட்டான்.

எனக்கு இப்போது ஆச்சரியம் கூடிப்போயிருந்தது; அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை பற்றி கிண்டலுடன் எழுதப்பட்ட நகைச்சுவைகளைப் படித்திருந்தாலும் இப்போது அதுவே எனக்கும் நடப்பது வியப்பாக இருந்தது. ஏனெனில் நானும் அதே அப்பார்ட்மெண்டில் ஐந்தாவது தளத்தில் தான் இரண்டு வருடங்களாக குடியிருக்கிறேன். ரெண்டு மாதமாக எனக்குக் கீழே உள்ள தளத்தில் வசிக்கும் நன்பனை கவனிக்காமல் இருந்திருக்கிறேன்.

‘போடா மவனே.. போ உனக்கு நாளைக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறேன் பாரு’ என்று நினைத்துக் கொண்டே கிளம்பினேன்.

வழக்கமான போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலை என் மனதைப் போலவே சந்தோஷமாக இருப்பது போல் தெரிந்தது. பதினேழு வருடங்கள் எத்தனை மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது.. இப்போதெல்லாம் கல்லூரி நன்பர்கள் தொடர்பு விட்டுப் போவதற்கெல்லாம் வாய்ப்பே இல்லாத அளவுக்கு தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து நிற்கிறது.. ஈமெயில் செல்போன் என்பதெல்லாம் அன்றைக்கு நாங்கள் கற்பனையே செய்து பார்த்திராத ஒன்று. அந்தக் கடைசி நாளில் கண்களில் கண்ணீரோடு ஒரு சின்ன அட்றஸ் புக்கில் எல்லோருடைய வீட்டு முகவரியையும் எழுதி வாங்கியது தான்; அதிலும் ஒரு பக்கத்தில் முகவரியும் அதன் எதிர்பக்கத்தில் அவர்கள் உதிர்த்த ஏதாவது ‘தத்துவ முத்தும்’ இருக்கும். அன்று பலர் வீட்டில் டெலிபோன் கூட இருக்காது. நன்பர்கள் நினைவு வரும் போதெல்லாம் அந்த புத்தகத்தை தடவிப்பார்த்துக் கொள்ள வேண்டியது தான். இதோ இன்றைக்கு ஏற்பட்டது போன்ற எதிர்பாராத இனிய ஆச்சர்யங்கள் எப்போதாவது தான் நிகழ்கிறது - இந்த நிமிடம் வானில் பறப்பது போல் உணர்கிறேன்.

பழைய நினைவுகளோடே வந்ததாலோ இல்லை போக்குவரத்து நெரிசல் இல்லாததாலோ என்னவோ சீக்கிரமே அப்பார்ட்மெண்ட் வந்து சேர்ந்து விட்டேன். பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி விட்டு லிப்டை நோக்கி திரும்பும் போது தான் கவனித்தேன். டேங்க் கவர் புடைத்துக் கொண்டிருந்த அந்த பைக் - ஸ்ப்ளெண்டர். ‘அட நம்மாளு வண்டியாச்சே.. எங்கியோ போயிட்டிருக்கேன்னு சொன்னானே..’

எதற்கும் சந்தேகத்தைப் போக்கிக் கொள்ள குனிந்து வண்டியின் சைலன்சரை தொட்டுப் பார்த்தேன். சூடாக இருந்தது. அப்படியானால் நம்மாளே தான். ‘எங்கேயோ போறேன்னு இவன் எதுக்கு டுபாக்கூர் வுட்டான்’ மணியைப் பார்த்தேன் ஏழாகியிருந்தது..

‘ம்ம்ம்.. இன்னிக்கே அவனுக்கு சர்ப்ரைஸைக் கொடுத்துட வேண்டியது தான்’ என்று நினைத்துக் கொண்டே லிப்டில் ஏறி ஐந்தாம் நெம்பர் பித்தானை அழுத்தினேன்.


“ஏங்க இன்னிக்கு லேட்? எங்கே ஊதுங்க பாக்கலாம்?” இது வீட்டுக்குள் நுழைந்ததும் நடக்கும் வழக்கமான செக்கிங் தான். போன வாரம் நானும் எனது இடதொரு பாகமும் சேர்ந்து இந்த முடிவை எடுத்திருந்தோம். ‘ஒரு நாளைக்கு இருபது ரூபாய்னு கணக்குப் போட்டா மாசம் அறுநூறு ரூபா ஆவுது ஒங்க புகை செலவுக்கு. காசு என்னா மரத்துலயா காய்க்குது? அதனாலே ஒழுங்கா மரியாதையா புகை விடற பழக்கத்தை விட்டொழிக்கறீங்க’ என்று கண்டிப்பான கட்டளை போட்டிருந்தாள்

“ஹேய்.. எம்மேல நம்பிக்கை இல்லையா உனக்கு” செல்லமாய்க் கோபித்துக் கொண்டே திரும்பிப் பார்த்தால், எனது வாரிசு நான் உள்ளே வந்ததுகூடத் தெரியாமல் வீடியோ கேம்ஸில் ஆழ்ந்து கிடந்தான்.
இவனுக்கு தெரிந்த உலகத்தில் ரெண்டே ரெண்டு இடங்கள் தான் இருக்கிறது. ஒன்று வீடு - அடுத்தது பள்ளி. இது இரண்டுக்கும் வெளியே ஒரு உலகமோ மனிதர்களோ இருப்பதே அவனுக்கு வீடியோ கேம்ஸில் வரும் க்ராபிக்ஸ் மனிதர்களை வைத்துத் தான் தெரியும். எனது பள்ளி நாட்களை நினைத்துப் பார்த்தேன். அரசுப் பள்ளியில் படிக்கத்தான் எங்களுக்கெல்லாம் வசதியிருந்தது. தமிழ்வழிக் கல்வி தான். ஆனால் உலகம் குறித்து என் மகனை விட அவன் வயதில் எனக்கு அதிகமாகவே தெரிந்திருந்தது. ஓரளவுக்கு வீட்டின் பொருளாதாரம் குறித்தும் அறியவைக்கப்பட்டிருந்தோம். ஒவ்வொரு பெரிய பரீட்சை விடுமுறையிலும் பக்கத்தில் இருந்த குளக்கரையில் விளையும் கீரையைக் அதிகாலை நேரத்திலேயே போய் பறித்து வந்து கட்டுக் கட்டி வீடு வீடாக விற்போம். கிடைக்கும் காசை சேர்த்து வைத்து தான் அடுத்த வருடத்திற்கான புத்தகங்களையும் சீருடைகளையும் வாங்க வேண்டும்.

அந்த நாட்களின் மாலை நேரமெல்லாம் எங்களுக்கு ஒரே கொண்டாட்டமாக
இருக்கும்; மாரியம்மன் கோயில் திடல் புழுதியில் கபடி விளையாடிக் கொண்டிருப்போம். சிராய்ப்புகள் இல்லாமல் வீட்டுக்குப் போனதாக சரித்திரமே கிடையாது. அப்போதெல்லாம் கிரிக்கெட் என்ற விளையாட்டைப் பற்றி எங்களுக்கு அதிகம் தெரியாது. விதம் விதமான விளையாட்டுகள் இருக்கும். கில்லி தாண்டு, பம்பரம், கரடி விளையாட்டு, கோலி என்று சொல்லிக் கொண்டே போகலாம். கோலி விளையாட்டின் அந்தப் பாட்டை
இப்போதும் சில நேரங்களில் ஹம் செய்வதுண்டு - “ஐய்யப்பஞ்சோலை.. அறுமுகதகடி… ஏழுவாலிங்கம்.. எட்டுமுத்துக் கோட்டை…” இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது. எங்கள் விளையாட்டுகள் ஒன்று உடலுக்குப் பயிற்சியாக இருக்கும் அல்லது பையன்கள் மத்தியில் கூட்டுறவான ஒரு நிலையை உண்டாக்குவதாய் இருக்கும்.

எங்கள் ஊரில் இருந்த என் வயதுச் சிறுவர்களெல்லாம் எனக்கு நன்பர்கள் தான். எல்லோரும் மற்றெல்லார் வீட்டுக் கதையும் அத்துப்படியாகத் தெரியும். ஒவ்வொருத்தன் வீட்டிலும் என்னப் பிரச்சினை, அது எப்படித் தீர்ந்தது என்பதை பேசிக் கொள்வோம். அந்த
அனுபவங்கள் இப்போதும் கைகொடுக்கிறது.

இவனுக்கோ விளையாட்டு என்றால் வீடியோ கேம்ஸைத் தவிர்த்து கிரிக்கெட் மட்டும் தான் தெரியும். பத்து வயதுப் பையன் நட்டமாய் வளராமல் பக்கவாட்டில் வளர்ந்து கொண்டே போய் இப்போது ஒரு உருண்டையான உருவத்தை அடைந்திருக்கிறான். இப்போதே சைனஸ் பிரச்சினை வேறு.. எடுத்ததற்கெல்லாம் பிடிவாதம். நினைத்தை நினைத்த நேரத்தில் வாங்கி விட வேண்டும் என்கிற பிடிவாதம். என் தந்தை எனக்கு சைக்கிள்
வாங்கிக் கொடுத்தது இன்னும் நினைவில் இருக்கிறது.. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக கேட்டு.. அப்புறம் உரமூட்டை சாக்குகளை சாக்கு வியயபாரி இஸ்மாயில் பாயிடம் ஒரு வருடத்துக்கு போட்டு அந்தக் காசை ஒரு வருடம் கழித்து மொத்தமாய் வாங்கி; அப்படி வந்த காசில் தான் எனக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். எங்களுக்கெல்லாம் எதையாவது வாங்கிக் கொடு என்று கேட்கவே பயமாக இருக்கும். எங்கள் முன்னே வைத்துத் தான் அப்பாவும் அம்மாவும் பணச் சிக்கல்களையெல்லாம் பேசிக் கொள்வார்களென்பதால் இயல்பாகவே அந்தத் தயக்கம் இருந்தது. என் மகனோ நாங்கள் பேசிக் கொள்ளும் போது ஒரு ‘டீசெண்ட் டிஸ்டென்ஸ் மெயிண்டென்ய்’ பண்ணுகிறான். ரொம்பநாள் கழித்து தான் தெரிந்தது -
அப்படிச் செய்யச் சொல்லி தான் அவர்கள் பள்ளியில் சொல்லிக் கொடுத்திருக்கிறார்களாம்.

எங்கள் விடலை வாழ்க்கைக்கும் இன்றைய நகர வாழ்க்கைக்கும் தான் எத்தனை வேறுபாடுகள்.. இந்த நகர வாழ்க்கையும் அப்பார்ட்மெண்ட வாசமும் ஏதோ நான் சிறையில் இருப்பது போன்றதொரு பிரமையைத் தான் தருகிறது. பாருங்களேன்.. கீழே எனது நன்பன்
குடிவந்து இரண்டு மாதங்களாகிறது.. நான் கவனிக்கவே இல்லை!! எங்கள் ஊரிலெல்லாம் புதிதாக எவர் வந்தாலும் அதைப் பற்றி எல்லோருக்கும் உடனடியாகத் தெரிந்து விடும். நல்லவேளை இப்போதாவது தெரிந்ததே.. சுந்தரின் மகனும் என் மகனும் விளையாட்டுத் தோழர்களாக இருந்தால் இவனுக்கு அது நல்லது தான்.. அட்லீஸ்ட் வீட்டை விட்டு வெளியேவாவது போகிறானா பார்க்க வேண்டும். சமூக உறவுகளோ நன்பர்களோ இல்லாமல் இவன் வளருவது எனக்கு அச்சமூட்டுவதாய் இருக்கிறது.

“என்னாங்க.. சப்பாத்திக்கு மாவு உருட்டித் தாங்க நான் கிழங்கு செய்யறேன்” துவாலையால் முகம் துடைத்துக் கொண்டே வந்தால் மனைவியின் அழைப்பு.

“இரு இரு இப்ப வேணாம்.. நான் உன் கிட்டே சொல்லியிருக்கேனில்லே என் ப்ரெண்டு சுந்தர் பத்தி.. அவன் இங்கே ரெண்டாவது ப்ளோரில் தான் குடிவந்து இருக்கான்.. போய் பார்த்திட்டு வந்து ஆரம்பிக்கலாம்”

“எப்ப வந்தாராம்.. நீங்க என்கிட்டே சொல்லவே இல்லையே..?”

“எனக்கே இன்னிக்குத் தான் தெரியும்மா.. சரி சரி கிளம்பு போயிட்டு வந்துடலாம். டேய் தம்பி நீயுந்தான் கெளம்பு கெளம்பு.. சீக்கிரம்”

ஒரு கொலைவெறிப் பார்வையை வீசி விட்டு எந்த வார்த்தையும் பேசாமல் வாசலுக்கு வெளியே போய் நின்று கொண்டான். ‘எல்லாம் நேரம்டா.. எங்கப்பன் கிட்டே இந்த முறுக்கை நான் காட்டியிருந்தா கண்ணை நோண்டியிருப்பான்; உங்கப்பன் ஈவாயன்றதால தானே இந்த லுக்கு.. இரு வச்சிக்கிறேன்’ என்று கருவிக் கொண்டேன். ஆரம்பத்தில் செல்லம் கொடுத்தது என் தவறு; இப்போது என்னத்தைப் புலம்பி என்னத்தச் செய்ய?

------------------------------------------------------------------------------

டோர் நெம்பர் 204.

உள்ளே ஹோவென்ற இரைச்சல் கேட்டுக் கொண்டிருந்தது. காலிங் பெல்லை அழுத்தினேன். இந்த திடீர் விஜயம் அவனை எப்படியெல்லாம் ஆச்சரியப்படுத்தும் என்று கற்பனை செய்து கொண்டிருந்த போதே காலடிச் சத்தம் கேட்டது.

அவன் தான்.. அவனே தான். பார்த்தவுடனே முகம் அஷ்டகோனலாகிப் போனது. அசடு வழிய சிரித்துக் கொண்டே.

“டே டேய்… நீ நீ எப்படிடா.. இங்க..? சங்கடத்துடன் வந்த வார்த்தைகளுக்குள் அதை விட சங்கடமான கேள்வி. ஹாங்..அப்புறம் நான் முக்கியமாய் எதிர்பார்த்த அந்த ஆச்சரியம் மிஸ்ஸிங்.

“ராஸ்கல்.. நான் உன் அட்ரஸ் கேட்டேனே.. பதிலுக்கு நீ கேட்டியாடா? நானும் இதே அப்பார்ட்மெண்டில் தாண்டா ரெண்டு வருஷமா குப்பை கொட்டிட்டு இருக்கேன். இது என் வைஃப் இது பையன். இவனும் ஐந்தாவது தான் படிக்கிறான்”

“ஹிஹி.. வாங்க வாங்க சிஸ்டர்” இப்போது கொஞ்சம் சமாளித்துக்கொண்டான்.

“வாங்க வாங்கன்னு சொல்லிட்டே நந்தி மாதிரி வாசலை அடைச்சு நிக்கிறாயே; வழிய விடு மொதல்ல” எங்களுடையதைப் போன்ற அதே விதமான ப்ளாட் தான். சிட்டவுட் தாண்டி ஹாலுக்குள் நுழைந்தால் இருபத்தோரு இன்ஞ் தொலைக்காட்சியின் திரைக்குள்ளே தலையை நுழைக்காத குறையாக இன்னொரு உருண்டை உருவம். அவன் மகனாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே..

“இது என் பையன். ராகுல் இங்க பாரேன் யாரு வந்திருக்கான்னு..” இவன் அழைப்பு சுவற்றில் மோதிய பந்தாக திரும்பி வந்தது. தலையைத் திருப்பாமலேயே “ஹலோ அங்கிள்” ஒன்றை வீசினான்.

“அவனுக்கு கிரிக்கெட்னா சரியான பயித்தியமாக்கும்” சுந்தரின் வார்த்தைகளில் பெருமிதம் அலைமோதியது. இப்போது தான் விளங்கியது இவன் ஏன் மாலை என்னை தவிர்த்து விட்டு பறந்தான் என்று. இப்போது எனக்கும் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. என்ன சொல்வது என்று
நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவன் உள்பக்கமாய் திரும்பி “பாப்பு.. இங்கெ வாயேன்” என்றான்.

“யாருங்க” என்றவாறே உள்ளேயிருந்து அவன் மனைவி வெளியே வந்தாள்.

“இது யார் தெரியுமா.. செந்தில்நாதன். என் பிரெண்டு. அது அவன் வைஃப். அது அவங்க பையன். இதே ஊரில் தான் இவனுக்கும் வேலை. நம்ம அப்பார்ட்மெண்டில் தான் குடியிருக்கான். ஐந்தாவது ப்ளோரில” தந்திவாக்கியங்களில் அறிமுகத்தை முடித்து வைத்தான். அவள் எனக்கு கையை கூப்பிவிட்டு என் மனைவியை நோக்கி ஒரு சினேகமான பார்வையை வீசினாள்.

“ஒரு நிமிஷம் இருங்க காபி கொண்டு வர்றேன்” என்றவாறே உள்ளே திரும்பினாள். உடனே நம்மாள் “நானும் வந்து ஹெல்ப் பண்ணலாமா” என்றவாறே எழுந்து விட்டாள்.

“அட.. என்னாங்க கேட்டுக்கிட்டு, தாராளமா வாங்களேன்” அவர்களிருவரும் சமையலறை நோக்கி நகர்ந்து விடவே நான் சுந்தரின் பக்கம் திரும்பினேன். அவனோ டி.வி பக்கம் மும்முரமாய் இருக்கவே நானும் அந்தப் பக்கம் திரும்பினேன். ஏதோ கிரிக்கெட் மாட்ச் நடந்து
கொண்டிருந்தது. இடையிடையே சில பெண்கள் இடையை அசைத்து நடனமாடிக் கொண்டிருந்தனர்.

“ஹேய் என்னடா இது.. கிரிக்கெட்டுக்கு மத்தில டாண்சு ஆடறாங்களே இதென்னடா கூத்து?” இப்போது தான் நான் இதைப் பார்க்கிறேன்.

அவன் தலையைத் திருப்பாமலேயே பதில் சொன்னான் “இது ஐ.பி.எல் மேட்ச். டொண்டி டொண்டி. அவங்க சியர் லீடர்ஸ்” மறுபடியும் தந்தி வாக்கிய பதில்கள். அட.. இவனுக்கு என்னதானாச்சு..? சரி.. அவனுக்கு ஆர்வமான இடத்திலேர்ந்தே பேச்சைத் தொடங்குவோம் என்று நினைத்து,

“ஆமா எந்தெந்த நாடுகள் விளையாடறாங்க?” என்றேன்.

விருட்டென்று திரும்பினான் “டேய் உனக்கு ஐ.பி.எல் பத்தி தெரியாதா?” என்று விட்டு பட்டிக்காட்டானைப் பார்ப்பது போல் பார்த்தான்.

“எனக்கு எப்படா இதிலெல்லாம் விருப்பமிருந்தது? எனக்குத் தெரிஞ்சி சச்சின் டெண்டுல்கர் இந்தியாவுக்கு விளையாடறார். போன உலகக் கோப்பையை நாம் தோத்துட்டோம்.. இப்படி தலைப்புச் செய்தியா வர்ற மேட்டர் மட்டும் தான் எனக்குத் தெரியும். அதிலும் இப்பல்லாம் பேப்பர் கூட முழுசா படிக்க நேரமிருக்கறதில்லே”

“அடப்பாவி… இதாண்டா இன்னிக்கு ஹாட் நியூஸே.. அதாவது.. உலக அளவில பேமஸான வீரர்களும் உள்ளூர் வீரர்களுமா சேர்ந்து அணிகளை அமைச்சிருக்காங்க. அவங்களுக்குள்ளே ஆளுக்கு இருபது ஓவர்கள் மட்டும் விளையாடும் விதமா ரூல்ஸை மாத்தி வைச்சி விளையாடறாங்க. பெரிய பெரிய கம்பெனி முதலாளிகளெல்லாம் அணிகளை விலைக்கு வாங்கி, இந்த வீரர்களை ஏலத்தில் எடுத்து இருக்காங்க” என்றான்.

“அப்ப இப்ப விளையாடற டீம் எதெது?”

“இது சென்னை டீமும் டெல்லி டீமும்.. தோ.. மஞ்ச சட்டை போட்ட டீம் தான் நம்ம சென்னை டீம்” என்றான்.. திரும்பிப் பார்த்தேன்.. மஞ்சள் சட்டை போட்ட வெள்ளையன் ஒருவன் பந்து வீச ஓடிக் கொண்டிருந்தான்.

“என்னடா அவனைப் பார்த்தா வெள்ளைக்காரன் மாதிரி இருக்கான்?” என்றேன் மீண்டும்.

இந்த முறை அவனிடம் இருந்து சலிப்பாக பதில் வந்தது.. “டேய் அதான் சொன்னேனே வெளியூர் வீரர்களும் உள்ளூர் வீரர்களும் சேர்ந்து விளையாடுவார்கள் என்று” என்றான்

“அப்ப சென்னை டீமில் எத்தனை பேர்டா நம்மாளுக?”

“ஒரு ரெண்டு மூனு பேர் இருப்பாங்க” தலையைத் திருப்பாம பதில் சொன்னான்.

‘ரெண்டு மூனு தமிழ்காரங்க இருக்கற டீமை எப்படி சென்னை டீம்னு சொல்றாங்க’ என்று தோன்றியதை கேட்கவில்லை. இந்த எழவு எனக்கு எப்போதும் புரியப்போவதில்லை என்பது மட்டும் புரிந்தது.

ஹோவென்ற அந்த இரைச்சலுக்கு மத்தியில் எங்களுக்குள் ஒர் மயான அமைதி நிலவியது. இவனிடம் என்னென்னவோ பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன். தொடர்பு விட்டுப்போன நன்பர்கள் குறித்து, அவன் வேலை குறித்து, பழைய நினைவுகள்.. ஆனால் அவனோ எதையும்
கேட்கும் நிலையில் இல்லை. நிறைய பேச்சு சப்தம் அந்த அறையில் இருந்து எழுந்தது; ஆனால் அவையெல்லாம் டீ.வி திரைக்குள்ளிருந்து. என் பக்கமாக அவன் திரும்புவதாயில்லை. ஒரு பதினைந்து நிமிடம் கழிந்திருக்கும், அவன் மனைவியும் என் மனைவியும் சமையலறையில் இருந்து வெளியே வந்தனர் - கைகளில் காபிக் கோப்பைகளோடு.

காபி அருந்தும் போது கூட அவன் திரும்பவேயில்லை. விளையாட்டு எந்தளவுக்கு கவர்ந்ததோ அதேயளவுக்கு விளம்பரங்களும் அங்கேயிருந்த எல்லோரையும் கவர்ந்தது. என் மனைவியும் மகனும் விளம்பரங்களை உண்ணிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர். எனக்கு உள்ளூர பயம் ஆரம்பித்து விட்டது.. ‘ இந்த மாதம் ‘இன்ப்ளேஷன்’ நோயால் கடும் தாக்குதலுக்குள்ளாகியிருக்கும் எனது பர்ஸ் ஏற்கனவே மெலிந்து கிடக்கிறது; இவர்கள்
இனிமேல் புதிதாய் ஏதேதும் பூதத்தைக் கிளப்பிவிட்டால் என்ன செய்வது’ என்கிற சிந்தனை வேறு வாட்டிக் கொண்டிருந்தது.

ஏண்டா வந்தோமென்றாகி விட்டது எனக்கு. அழைப்பில்லாத கல்யாண வீட்டுக்குள் புகுந்து விட்டதைப் போலிருந்தது. ஒரு இரண்டு மணி நேரம் எந்த உரையாடலும் இன்றி ஹோவென்ற அந்த இரைச்சலின் பின்னனி இசையுடன் இப்படியே கழிந்திருந்த நிலையில்.. என்னால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை. அந்த இரைச்சல் என் மூளைக்குள் அமிலத்தைக் கொட்டுவது போலிருந்தது.

“டேய் நாங்க அப்ப கிளம்பறோமே..” இதற்காவது திரும்புவான் என்று எதிர்பார்த்தேன்

“ம்ம் சரிடா” தலையைத் திருப்பாமலேயே பதிலை வீசினான்.

“சரிங்க அப்ப நாங்க வர்றோம்.. ஞாயித்துக் கிழமை நீங்களும் எங்க வீட்டுக்கு வாங்க. நாங்க அஞ்சாவது மாடில தான் இருக்கோம்” என்று அவன் மனைவியிடம் சொல்லிவிட்டு எழுந்தேன். கூடவே என் மனைவியும், பெரும் கடுப்போடு என் மகனும் எழுந்து விட்டனர்.

நாங்களே கதவைத் திறந்து வெளியே வந்து சாத்தி விட்டு லிப்டை நோக்கி நடையைப் போட்டோ ம். கடும் ஏமாற்றமாக இருந்தது… எத்தனை வருடங்கள் கழித்து சந்தித்த நன்பன்.. புதிப்பிக்கப் போகும் நட்பைக் குறித்து மகிழ்ச்சியாக வீட்டிலிருந்து கிளம்பினேன்.. இப்போது சோர்வாக உணர்கிறேன். போதைக்கு ஆட்பட்டவனைப் போல டி.வி திரையை வெறிக்கும் நன்பன் எனக்கு வினோதமாய் தென்பட்டான். எல்லோரும் நடமாடும் பண்டங்களாகிவிட்டாகளோவென்கிற சந்தேகம் எழுகிறது.

விளையாட்டு என்னும் நிலையைக் கடந்து கிரிக்கெட் வேறொருதளத்தை அடைந்துவிட்டது புரிந்தது. ஆட்டத்தின் இடையே கவர்ச்சியான உடையலங்காரத்தோடும்
ஆபாசமான உடலசைவுகளோடு ஆடும் பெண்கள். பரபரப்பு, ஆபாசம், வக்கிரம் என்று ஒரு நீலப்படத்தின் சகல அம்சங்களோடும் இருக்கிறது. விளம்பரங்களை வெறித்துப் பார்க்கும் பொடிசுகள் நம் மனதுக்குள் கலவரத்தை விதைக்கிறார்கள். ஏற்கனவே என் வாரிசு பெரும் பிடிவாதக்காரன்..இப்போது என்னென்ன எழவை மனதுக்குள் குறித்து வைத்திருக்கிறானோ தெரியவில்லை.

என் மகன் தான் கேட்டது கிடைக்கப் பெற்றால் தான் என்னோடு சகஜமாக பேசவே செய்கிறான். அந்தளவுக்கு இந்த விளம்பரங்கள் பொருட்களை வலுக்கட்டாயமாக மூளைக்குள்ளேயே திணித்து விடுகிறது. மனித உறவுகளே கூட வணிகமயமாகிவிட்ட போது விளையாட்டுகள் எம்மாத்திரம்.. அதிலும் கிரிக்கெட் போன்ற ஒரு விளையாட்டின் இடையிடையே தோன்றும் விளம்பரங்களோ வீரிய ஒட்டுரக வகையைச் சேர்ந்தவை. திரையில் சிக்ஸர் அடித்த அதே வீரர் இடைவெளியில் வந்து ‘பூஸ்ட் ஈஸ் த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி’ என்றால் என் மகன் வீட்டில் செய்த நவதானிய சத்துமாவை காறித்துப்புவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

எப்போது படுத்தேன் எப்போது உறங்கினேன் என்றே தெரியவில்லை; இதே நினைவுகளோடே உறங்கிப் போனேன்… அன்றைக்குக் கனவில் நான் ஒரு பெருங்கூட்டத்தின் மத்தியில் நிற்பது போலொரு காட்சி தோன்றியது. அக்கூட்டத்தில் எல்லோரும் தெரிந்தவர்களாக இருந்தனர். எல்லோரும் என்னோடு பேசினர், நானும் எல்லோரோடும் பேசினேன்.. ஆனால் எவருக்கும் மற்றவரின் குரல் கேட்கவில்லை. எங்கள் எல்லோரையும் ஏதோவொரு திரை - கண்களுக்குத் தெரியாத கண்ணாடித் திரை - மறித்து நிற்பது போலிருந்தது. தொட்டு விடும் தூரத்தில் தான் சுந்தர் தெரிந்தான்; ஏதோ பேசினான் எனக்குக் கேட்கவில்லை. எனது சப்தமும் அவனுக்குக் கேட்டிருக்காது. எல்லோரும் இருந்தும் எவரும் இல்லாத உணர்வொன்று அனைவரையும் ஆட்கொண்டது. இயந்திரம் போன்ற இறுக்கமான முகத்தோடே என் மகன் என்னைக் கடந்து போகிறான்.. வாங்கிக் கொடுக்க வக்கில்லாத உன்னோடு பேச்சு மட்டும் என்ன கேடு என்று அவன் முகம் சொன்னது மட்டும் எனக்குக் கேட்டது.. அந்தத் திரை சப்தங்களை மறித்தது போய் காற்றைக்கூட மறிக்கத் துவங்கிவிட்டதோ.. மூச்சுத் திணறுவது போலிருக்கிறது. சப்தங்களோ காற்றோ கூட இல்லை.. மரணாவஸ்த்தையாக இருக்கிறது.. ஆயினும் சிலர் சந்தோஷமாக இருப்பதாகவே தெரிந்தது..

சட்டென்று விழிப்பு வந்தது - தொப்பலாக வியர்த்திருந்தேன். அந்தத் திரை…அந்தத் திரை… அதை… உடைத்து நொருக்கத் தான் வேண்டும்..!

நன்றி: கார்க்கி

Tuesday, May 27, 2008

ஐன்ஸ்டீனும், கடவுளும் - சின்னப்புள்ளதனமாள்ள இருக்கு!!!

ன்ஸ்டீன் சொல்லிவிட்டார் என்று கூறி பிற்போக்குவாதிகள் தமது கருத்துக்கு அறிவியல் அடிப்படை தேடுவது எப்போதுமே நடந்து வருவதுதான். ஐன்ஸ்டீனின் கடவுள் குறித்த சில கருத்துக்களை வைத்து அவர் ஒரு ஆத்திகவாதி என்று சொல்லி மதவாதிகள் திரிப்பது வழமையே. இதே தமிழ்மணத்தில் RSS பயங்கரவாதியாக வதந்திகளையும், புரளிகளையும், பொய்யையும் பரப்பி நம்மிடம் அம்பலப்பட்டு ஓடிப்போன நீலகண்டனும் கூட மார்க்ஸியத்தின் மீதான தனது அவதூறு கட்டுரையில் ஐன்ஸ்டீனினுடைய எத்தர் குறித்த கருத்துக்கள் என்ற ஒரு பொய்யை அடிப்படையாக வைத்தே பேசியிருந்தான்.

அந்த கட்டுரைக்கும் கூட ஐன்ஸ்டீனினுடைய வார்த்தைகளிலிருந்தே பதில் சொல்லி நீலகண்டனின் பொய்களை அம்பலப்படுத்தப்பட்டன. அந்த கட்டுரை இங்கே உள்ளது சோசலிசமும் - பார்ப்பினியத்தின் பொய்யுரைகளும்!. தற்போது கடவுள் குறித்து ‘சிறுபிள்ளைத்தனமான மூடநம்பிக்கை’ என்று ஐன்ஸ்டீன் குறிப்பிட்டுள்ளது வெளிவந்துள்ளது. அதனை இங்கே படித்து பார்க்கவும்.

ஐன்ஸ்டீன் ஏற்கனவே சோசலிசம் குறித்து சொன்னது இங்கே உள்ளது. இதனையும் படித்து பார்க்கவும்.

நன்றி: செய்தி விமர்சனம்

Wednesday, May 21, 2008

புதிய உணர்வு, புதிய தளம் - தமிழசர்க்கிள் புதிய வடிவில்!!!

தோழர் ரயாகரன் தமிழரங்கம் என்ற பெயரில் வலைப்பூ எழுதி வருவது நாம் அறிந்ததே. தோழரின் தமிழ் சர்க்கிள் என்ற தளத்தில் சிந்தனையை தூண்டும் பல்வேறு கட்டுரைகள், புரட்சிகர பாடல்கள், உரைகள், வீடியோக்கள், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், சமர் பத்திரிகைகளின் இணைய பதிப்புகள் ஆகியவற்றை பராமரித்து வந்தார். தமிழ் புரட்சிகர சிந்தனைகளின் களஞ்சியமாக இருந்தது அந்த தளம்.

இந்த தளத்திலுள்ள பல்வேறு குறைபாடுகளை களைந்து கொண்டு முற்றிலும் புதியதொரு தளத்தை வடிவமைக்க சமீப காலமாகவே தோழர் முயன்று வந்தார். அதற்க்கு எதுவும் உருப்படியான பங்களிப்புகள் செய்ய வக்கறவனாக இருந்தது வெட்கமடையச் செய்கிறது. ஆயினும் அந்த முயற்சி தற்போது வெற்றியடைந்துள்ளது. தோழருக்கும், இந்த தள வடிவமைப்பு, பராமரிப்பில் பங்கெடுத்துள்ள முகம்/பெயர் தெரியா தோழர்களுக்கும்/நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.




புதிய தளம் இங்கே சொடுக்கினால் வரும். பார்த்து விட்டு தோழர் ரயாகரனிடம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். ஆலோசனைகளை வழங்குங்கள்.

தமிழ்சர்க்கிள் தனது பழைய மஞ்சளும், சிகப்பும் கலந்த பழமையை உணர்த்தும் வண்ணப் பின்னணியிலிருந்து விடுவித்துக் கொண்டு விட்டது. புதிய உலகின் சிந்தனைகளை பரப்பும் களமாக அடர் சிகப்பில் ஆழ்ந்து யோசிப்பது போல இருக்கிறது இப்பொழுது.

தளத்தின் இலச்சினை படமும் கூடசிகப்பு பின்னணியில் வண்ணமயமாக நவீனமாக உள்ளது. தலைப்புக்கு கீழே புதிய ஜனநாயகம், சமர் உள்ளிட்ட பத்திரிகைகளின் லிங்க கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பு.

புகைபடத் தொகுப்பு பகுதியில் படங்களின் மீது அம்புக்குறி சென்றால் பெரிதாக வருமாறு கொடுத்துள்ளது மிகச் சிறப்பாக உள்ளது.

தளத்தின் மேல் பகுதியில் படங்களை ஓடவிட்டுள்ளது நல்ல உத்தியாக மட்டும் இல்லாமல் அவை சிந்தனைகளை தூண்டும் விதமாக பல்வேறு வரலாற்று சம்பவங்களை நினைவுகூறும் முகமாக உள்ளன. படங்களை தொகுப்பாக காட்டும் பக்கத்தில் படங்களை இன்னும் பெரிதாக தெரியத் தரலாம். உலாவியோர் உலவுவோர் பகுதி மொத்தமே இரண்டு வரிகள் வருகிறது அதற்கு வலது கை பக்கத்தில் மொத்த பட்டையையும் ஒதுக்கியுள்ளது தேவையின்றி இடப் பற்றாக்குறையை தோற்றுவிக்கிறது.



புகைப்படங்களை ஓட விடும் மேல் பகுதியிலேயே வலது கை பக்கத்தில் உலவுவோர் விவரங்களை தந்து விட்டால் தளத்தின் முக்கிய பகுதிக்கு அதிக இடம் கிடைக்கும். புகைப் படங்களை தொகுப்பாக காட்டும் பக்கத்தில் படத்தின் அளவை அதிகப்படுத்தவும் இடம் கிடைக்கும்.

தலைப்பு பட்டையில் தமிழ் அரங்கம் என்ற எழுத்துப்படைக்கு வலது பக்கத்தில் மேற்கோள்கள் வருகின்றன. அவற்றின் பின்னணி வெண்மை நிறத்தில் உள்ளது மாறாக 'தமிழ் அரங்கம்' என்று எழுதப்பட்டுள்ள எழுத்துப்படையின் வண்ணத்தையே இதற்க்கும் பின்னணியாக கொடுத்துவிட்டு எழுத்தின் நிறத்தை வெண்மையாக மாற்றி தந்தால் தளம் பார்ப்பதற்க்கு இன்னும் மெருகேறியிருக்கும்.

வலது இடது பக்கங்களில் அதிக இடம் ஒதுக்கி தளத்தின் செய்திகள் இடம்பெறும் பகுதியை சுருக்கி கொடுப்பது சரியில்லை என்பது எனது கருத்து. பக்க பகுதிகள் என்பது முடிந்தளவு சுருக்கப்பட்டு முடிந்தால் அவை முழுவதுமாக எடுக்கப்பட்டு முழு இடமும் உபயோகப்படுத்தப்படுவதே சரி என்பது எனது கருத்து மட்டுமல்ல, முதலாளித்துவ தளங்கள் யாவற்றை பார்த்தாலும் கூட அவை இது போன்ற வடிவங்களையே பயன்படுத்துகின்றன.

அது போன்ற வடிவம் தளம் குறித்து உருவாகும் முதல் அபிப்ராயத்தை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு ஆற்றும்.

இணைப்புகளின் மீது அம்புக் குறியை கொண்டு சென்றாலோ அல்லது காப்பி சார்ட்கட் செய்தாலோ அதில் வருவது புரியாத தமிழ்சர்க்கிள் லிங்காக உள்ளது. மாறாக நேரடியாக அந்தந்த தளங்களின் முகவரி கிடைக்கப் பெறுமாறு செய்வது சரியாக இருக்குமென்று கருதுகிறேன்.

பழைய பதிவுகளை பார்க்க ஆர்செவ் பகுதி சேர்க்க வேண்டும். வேறு தளங்களின் பதிவுகளை தமிழ்சர்க்கிளில் இடும் பொழுது குறிப்பிட்ட பதிவரின் பெயர் வருவதில்லை இந்த குறை களையப்பட வேண்டியுள்ளது. மேலும் பெயரிலோ அல்லது வேறேதாவது இடத்திலோ கிளிக்கினாலே ஒரிஜினல் பதிவின் தளத்திற்கு செல்லுமாறு செய்தால் சிறப்பாக இருக்கும்.

பழைய தமிழ்சர்க்கிள் தளத்தில் சில லிங்குகள் வேலை செய்யவில்லை. ஒருவேளை தள மாற்றம் நடைபெற்று வருவதால் ஏற்ப்பட்ட பிரச்சினையா தெரியவில்லை.

கீழே மார்க்ஸிய மூலவர்களின் படம் உள்ள படம் உள்ளது அந்த படம் இடம் பெற்றுள்ள பகுதி சரியாக இல்லை என்று தோன்றுகிறது. ஒன்று கீழே இறக்க வேண்டும் அல்லது வேறேதாவது செய்ய வேண்டும்.

தளப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்றே கருதுகிறேன். நாகாசு வேலைகள் முழுமை பெற்ற பிறகு இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

வாழ்த்துக்கள் தோழர் ரயாகரன்.....

தோழமையுடன்,
அசுரன்

Thursday, May 15, 2008

நண்பர் அத்வானியும், காம்ரேடு சுஸ்மா சுவராஜும்!!!

ந்திகிராம் பிரச்சினையை ஒட்டி கல்கத்தா வந்து சென்றார் அத்வானி. வந்தவர் கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாமல் தனது நண்பர் CPM(டாடாயிஸ்ட்) முதலமைச்சர் புத்ததேவுவை பார்க்காமல் சென்று விட்டார். ஆயிரம் பிரச்சினை என்றாலும் ஒரு அடிப்படை நாகரிகம் வேண்டாம்? ஒரு நண்பரை அவ்வளவு தூரம் வந்துவிட்டு பார்க்காமல் சென்று விடுவதா?

மனம் வெதும்பி பத்திரிகைகளில் புலம்பினார் புத்ததேவு. 'நண்பர் அத்துவானி இம்புட்டு தூரம் வந்துபிட்டு என்ன பாக்காம போயிட்டாரு... ரொம்ப காண்டாக்கீது" என்று. உடனே அத்துவானிக்கு ரொம்ப பொச்சரிப்பா.. ஸாரி புல்லரிப்பாப் போச்சி. அவர் சொன்னார் "நண்பர் புத்ததேவு சந்திக்காம போனது வருத்தந்தான். நான் அவர சந்திக்கிறத எங்க கட்சி தொண்டர்கள் சரியா புரிஞ்சிக்க மாட்டாய்ங்க" அப்படின்னு.

இந்த ரெண்டு பேரோட நட்பு செண்டிமெண்டு மேற்கு வங்க கூரையை பிச்சிக்கிட்டு கொஞ்ச நாள் ஓடுச்சு. அந்த செண்டிமெண்டு எபெக்ட் ஆறாருதுக்கு முன்னெயே நாடாளுமன்றத்துல காம்ரேடு பிருந்தாகரத்தும், சுஸ்மாசுவராஜ் அப்படியே கட்டிப் பிடிச்சி உச்சி முகர்ந்து முத்தம் கொடுக்காத குறையாக தமது நட்பை, பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டனர். படம் பத்திரிகைகளில் வெளிவந்து மூன்று காட்சிகளும் ஹவுஸ் புல்லாக நூறு நாள்கள் ஓடும் அளவு பிரபலமாகியது. படத்த என்னால கண் கொட்டு பாக்க முடியல.. கண்ணு முழியெல்லாம் ஒரே கண்ணீரு.... (போட்டோ வுல கூட பின்னாடி ஒருத்தர் இந்த பாசப்பினப்ப பாத்து பீலிங்ஸ் ஆகி நிக்கிறாரு).


Where left & right unite: CPI(M) and BJP leaders Brinda Karat (left) and Sushma Swaraj exchange pleasantries after the Women’s Reservation Bill was tabled in the Rajya Sabha on Tuesday. — நன்றி: The Hindu

தூ... வெக்கங்கெட்ட நாயிகளா.... பார்ப்பன பயங்கரவாத படு கொலைகாரர்களுடன், மனித குல விரோதிகளுடன் வெட்கமின்றி பொது இடங்களில் ஒட்டி உறவாடும் இவர்கள் கம்யுனிஸ்டு என்று தமது கட்சிக்கு பெயர் வைத்து கம்யுனிசத்தின் மீதும் ஒணுக்கு அடிக்கின்றனர். விட்டால் பாஜகவை இடதுசாரி கட்சிகள் லிஸ்டில் சேர்த்து விடுவார்கள் போல தெரிகிறது. அங்கீகரிக்கப்பட்ட இடதுசாரிகள் லிஸ்டில் பாஜக இருந்தால் என்ன CPM இருந்தால் என்ன எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய பாசிச மட்டைகள்தான்.

நன்றி: செய்தி ரசம்

Related News:

CPM government has shot killed five Forward Bloc party persons over Anti SEZ protest

SEZயை எதிர்த்த பார்வேர்ட் ப்ளாக் கட்சியினர் ஐந்து பேர் CPM அரசால் சுட்டு சாகடிக்கப்பட்டனர்

கம்யுனிஸ்டு பார்ட்டி ஆப்பு இந்தியா - CPM வெறி நாயும்! CPIயும்!

மக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் தாண்டா நாங்கள் - CPM!

மானங்கெட்ட சிபிஎம்மும், விடுதலையின் விடிவெள்ளி பகத...

பாஸிஸ்டு CPMமும், லெனின் சொல்லும் ஜனநாயக புரட்சியு...

தத்துவ குருடர்களும், முதலாளித்துவ வளர்ச்சியும்!!!

அன்பழகன் வைத்த செக்கும், கருணாநிதி திருப்பிக் கொடுத்த ஆப்பும், மற்றும் கொளுகைப் போராளி சுப.வீ.யும்

2008 மே 11 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் காரைக்குடி ராம.சுப்பையா அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.

காரைக்குடி ராம.சுப்பையா, ஆத்திகர்களின் அசைக்கமுடியாத கோட்டையாகவும், பார்ப்பன அடிமைகளின் கூடாரமாகவும் திகழ்ந்த காரைக்குடியைச் சுற்றியுள்ள செட்டிநாட்டுப் பகுதியில் 1930களின் தொடக்கம் முதல் சுயமரியாதை இயக்கத்தையும், சுயமரியாதை சமதர்மக் கட்சியையும் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் கட்டி அமைத்தவர். பல இன்னல்களுக்கு மத்தியில் பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு இயக்கத்தை செட்டிநாட்டில் வேரூன்றச் செய்த சுப்பையா 1949 வரை பெரியார் இயக்கத்திலும், 1949 முதல் 1997இல் அவர் இறக்கும் வரை திமுகவிலும் செயல்பட்டவர். கட்சியை தனது சொந்த நலனுக்காக பயன்படுத்தாத சுப்பையாவின் போராட்டக்களன்களாக 1938இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் 1953இல் திமுக நடத்திய கல்லக்குடி போராட்டத்தையும் சொல்ல முடியும்.

அவரின் நூற்றாண்டு விழாவை அவர் சார்ந்த திமுகவும், அவரின் வாரிசுகளும் இணைந்து நடத்தினர். அவரின் வாரிசுகளில் இருவர் சற்றே பிரபலமாய் இருப்பவர்கள். மூத்தவர் எஸ்பி.முத்துராமன் என்ற 'மாபெரும்' மசாலா சினிமா இயக்குநர். இளையவர், 80,90களில் தமிழ்த்தேசியம், பெரியாரியம், ஈழ ஆதரவு, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்றெல்லாம் பேசியும் எழுதியும் வந்த சுப.வீரபாண்டியன்.

விழாவில் வீரபாண்டியன் (அதுதாங்க சுப.வீ) இதுவரை தனக்கு சூட்டி இருந்த அறிவாளி, கொள்கைக்காரர், போராளி போன்ற கனமான போர்வைகள், மேலாடைகள், உள்ளாடைகள் அனைத்தையும் உதறிவிட்டு, 'எரிக்கப்போகும் சூரியனே', 'ஓய்வறியா உதய சூரியனே' என்று கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்கும் இன்னொரு தொண்டரடிப்பொடியாக மாறிப்போனார். அநேகமாக அந்த விழாவை அவரின் தந்தைக்கு நூற்றாண்டு விழாக் கூட்டமாகவும், அவருடைய அரசியலுக்கு அஞ்சலிக்கூட்டமாகவும் நாம் கருதிக்கொள்ளலாம். வீணாய்ப்போன வலம்புரிஜானின் இடத்தைப் பிடிக்க எப்படி எல்லாம் பல்லிளிக்க வேண்டியிருக்கிறது!

ஏற்கனவே நாறிப்போயிருந்த கோடம்பாக்கத்தில் மேலும் பல பன்னிச்சாணிகளைக் கொட்டிய மாதிரி ரஜினி,கமல் கழிசடைகளை வைத்து சினிமா எனும் பேரில் பல குப்பைகளை எடுத்து தள்ளியவர் இந்த முத்துராமன். அவர் இந்த மேடையில் ஒரு சுவாரசியமான விசயம் சொன்னார். அவர் 10ஆம் வகுப்புப் படிக்கும்போது ஒருமுறை திமுக பேச்சாளர் ஒருவர் வராததால், அவருடைய அப்பாவின் வேண்டுகோளின்படி கூட்டத்தில் பேசப்போனாராம். அதே கூட்டத்தில் பேசி முடித்த க.அன்பழகன், கூட்டம் முடிந்ததும் 'யார் நீ?' எனக்கேட்டிருக்கிறார். முத்துராமன், 'ராம.சுப்பையாவின் மகன்' என்றதும் 'இதுதான் கடைசி..முதலில் படிச்சு முடிக்கிறதப் பாரு' என்று அன்பழகன் சொன்னாராம்.

எஸ்.பி.முத்துராமன், ஒழுங்காய் அன்பழகன் சொன்னதைக் கடைப்பிடித்துப் படித்திருந்திருக்கலாம். நாமும் பல கழிசடை குப்பைகளை பார்த்து கஸ்டப்பட்டிருக்க வேண்டியதிலிருந்து தப்பித்திருக்கலாம். சகலகலாவல்லவன்,முரட்டுக்காளை... உயர்ந்த உள்ளம், நல்லவனுக்கு நல்லவன்...... அடத் தூ....

வாழ்த்துரை வழங்க வந்த ராம.வீரப்பன் (முருகன் கை வேல் எடுத்த ஆர்.எம்.வீ. அண்ணே தான்), தன்னை ராம.சுப்பையாதான் அரசியலுக்கு அழைத்துவந்ததாகச் சொன்னார். பின்னர் இருவரும் வேறுவேறு பாதைகளில் அரசியல் பயணம் மேற்கொண்டதாகச் சொன்னது நம்மை வியப்பில் ஆழ்த்தியது. ஆர் எம் வீ 40களுக்குப் பிறகு அரசியலில் என்ன செய்துவிட்டார் என்று வேறு பாதையில் பயணித்ததாக கூறுகிறார்? எம்.ஜி.ஆருக்கு மேனேஜராகவும், எம்.ஜி.ஆரின் பல கள்ளத்தனமான வெளியில் சொல்லக்கூச்சப்படும் செயல்களுக்கு எடுபிடியாகவும் (மாமா) வேலை பார்த்ததை எல்லாம் அரசியல்பணி என்று சொல்லமுடியாது. எதனை சொல்வது? பெரியாரின் கைப்பிடித்து வளர்ந்த வீரப்பன், எம்.ஜி.ஆரிடம் அமைச்சராகி சங்கராச்சாரியின் பல்லக்கை சுமந்த மாட்டு வண்டியை மாட்டிற்குப் பதிலாக இழுத்து வந்தகதையையா? முருகனுக்கே மொட்டை போட்டு வைர வேலை எங்கப்பா? எங்க வீரப்பா? என்று மக்கள் கேட்டதையா? என்னமோ போங்க.

ஆர்.எம்.வீ. சொன்னார் 'அண்ணன் சுப்பையாவின் கடைசிக்காலங்களில் அவ்வப்போது அவரை சந்திப்பதுண்டு','ஏன் வீரபாண்டியன் தம்பி எதிர்ப்பா இருக்குதுன்னு தெரியலை என்பார். அவர் இப்ப இருந்திருந்தால் வீரபாண்டியனின் இன்றைய நிலைப்பாட்டைக்கண்டு மகிழ்ந்திருப்பார்' என்றார். இதைச் சொல்வதன் மூலம் ராம.சுப்பையாவுக்கு தேசிய இன, பெரியாரிய, தமிழ்த் தேசிய அரசியல் எதுவும் தெரியாது என்பதையும்(அதாவது வீராபண்டியன் ஏன் இந்த அடிப்படைகளில் கருணாநிதியை எதிர்த்தார் என்பது பற்றிய புரிதல் ராம. சுப்பையாவுக்கு இல்லை என்பதையும்) வீரபாண்டியன் தற்போது கடைசியில் கலைஞரின் நாய்க்குட்டியாகி எல்லாவற்றையும் உதிர்த்துவிட்டவர் என்பதையும் சொல்லாமல் சொன்னார்.

Photobucket Link

அன்பழகன் பேசும்போது உள்குத்து ஒன்றை வைத்து விட்டு அமர்ந்தார். "கலைஞர் ஒருவர்தான் ராம.சுப்பையா அவர்களை அண்ணன் என்று அழைப்பார். நாங்கள் அவரை 'தோழர்' என்றுதான் கூப்பிடுவோம். சுயமரியாதை இயக்கம் அப்படித்தான் பழக்கி இருந்தது. பெரியாரையே தோழர்.ராமசாமி என்றுதான் அழைப்பார்கள்" என்று குறிப்பிட்டார். இப்பேச்சின் சாரம் என்ன என்பதை அடிமட்ட கலைஞர் உடன்பிறப்பு புரிந்து கொள்ள மாட்டான். ஆயினும் தலைவர்மட்டத்தில் உடனடியாக உணர்ந்து கொள்வர்.

"யோவ்..கருணாநிதி..உம்மைவிட 15 வயசு மூத்தவரான ராம.சுப்பையாவையே தோழர்னுதான் அழைத்தோம். நீரோ என்னை விட 2 வயது இளையவர். உம் பெயரைக்கூட சொல்லிடாமல் 'தமிழினத் தலைவர்'னு அழைக்கணுமா?" - இதுதான் அன்பழகன் சொல்லாமல் சொன்ன விசயம்..

கருணாநிதி எப்பேர்ப்பட்ட ஆசாமி! அன்பழகன் வைத்த செக்குக்கு ஆப்புக் கொடுக்க வேண்டாமா? எப்படி இதைச் சமாளிப்பார் என்று பார்த்தோம்..

Photobucket Link

"கல்லக்குடி போராட்டத்தில் எங்களில் 30 பேர்களை முதலில் அரியலூர் சப்-ஜெயிலில் அடைத்தார்கள். ஏழெட்டுப் பேர்களை ஒரே செல்லில் அடைத்தார்கள். உள்ளே கடுமையான துர்நாற்றம். இரவு நல்ல காற்றை சுவாசிக்க மூக்கை கம்பிக்கு வெளியே நீட்டியபடி நின்று கொண்டிருந்தேன். இரவு வெகு நேரமான பின்னரும் நின்று கொண்டிருந்தேன். அப்போது அண்ணன் ராம.சுப்பையா , கால்கள் வலிக்குமே என்று என்கால்களைப் பிடித்து அமுக்கி விட்டுக் கொண்டிருந்தார். அவர் வயதென்ன? என் வயதென்ன? இதெல்லாம் அவர் செய்தது எதனால்? அதன் பெயர்தான் தொண்டு" என்று கருணாநிதி பேசினார்.

அதாவது,
"யோவ்..பெருசு..என்னமோ..அவரையே தோழர்னு சொல்லுவியா? ஒன் தோழரே என் காலைப்பிடிச்சுக்கிட்டு தொண்டு செஞ்சவர் பாத்துக்கோ..உன் மனசில அந்த மாதிரில்லாம் 'தோழர் கருணாநிதி..அடேய் கருணாநிதி'ன்னுல்லாம் கூப்பிடனும்னு வேற நினப்பிருக்கா? காலைப்பிடிப்பதுதான் தொண்டனுக்கு அழகு..பாத்துக்கோ"...இதுதான் கருணாநிதி சொல்லாமல் சொன்ன பதில்..

அன்பழகனுக்கு ஆப்படித்தாயிற்றா?

கூட்டம் முடிந்த பிறகு இதனைத் தோழர்கள் குறிப்பிட்டுச் சிரித்துக் கொண்டிருந்தனர். தோழர் ஒருவர் சொன்னார்.."கூட்டம் முடிந்து வீட்டுக்குப் போய் துணைவியாரிடம் அன்பழகன் சொல்வார் 'கருணாநிதிக்கு நல்லா செக்கு வச்சிட்டேன்'. அந்த அம்மா கேட்க்கும் 'அப்புறம்..என்னங்க ஆச்சு'. அன்பழகன் உடனே சொல்வார் 'பாவி மனுசன்..நம்மை நல்லா மூக்க உரிச்சிட்டான்..'. பதிலுக்கு அந்த அம்மா, 'அதான் 40 வருசமா இதுதான நடக்குது... என்னமோ புதுசா இன்னைக்குதான் நடக்கிற மாதிரி..போய்த் தூங்கும்வே,.ம்பாங்க"

விழாவை ஒட்டி ராம.சுப்பையா மலர் எனும் பெயரில் அவரின் குடும்ப போட்டோ ஆல்பம் ஒன்றை வெளியிட்டார்கள்..

ரூ100 கொடுத்து வாங்கிப் படித்துப் பார்த்த பின்னர்தான் தெரிந்தது.. சுயமரியாதையில் சாதிஒழிப்பு என்ற ஒன்றை ராம.சுப்பையா குடும்பம் கடைப்பிடிக்கவே இல்லை என்பது.... ஒரு வேளை "செட்டியார் சுயமரியாதையோ" என்னமோ?

நன்றி பின்னூட்டத்தில்
---வில்லாளன்----

Wednesday, May 14, 2008

இந்தியா வளருது, இந்தியனுங்க தேயுறானுங்க...

ற்கனவே சமீபத்திய விலையேற்றம் சில உண்மைகளை வெளி கொண்டு வந்தது. குறிப்பாக இந்தியாவின் உணவு இருப்பு 1972 அளவுக்கு இறங்கியிருப்பதும், ஒவ்வொரு தலைக்குமான உணவு அளவு 1950கள் அளவுக்கு இறங்கியிருப்பதும் அம்பலமானது. இன்னிலையில் ஏற்கனவே பலமுறை வெளிவந்த அதே செய்தி மீண்டும் வெளி வந்து உறுதிப்பட்டுள்ளது. இந்திய குழந்தைகளில் 51% பேர் ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்ட வளர்ச்சி குன்றியவர்களாக உள்ளனர் அதுவும் இந்த அம்சத்தில் உலகிலேயே மிக மோசமான நாடாக இந்தியா உள்ளது என்று எச்சரிக்கை செய்கிறது சமீபத்திய ஆய்வு.

இந்தியாதான் உலகிலேயே குழந்தைகளுக்கான மிக மோசமான நாடு என்பது சில மாதங்களுக்கு முன்பு விரிவாக அம்பலமானது. அதாவது சிறார்களின் மரணத்தில் உலகிலேயே முதல் இடத்தில் இருப்பது எத்தியோப்பியாவோ அல்லது வேறந்த ஆப்பிரிக்க வறுமை பகுதிகளோ அல்ல மாறாக இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது.

செய்தி ரசம்

Related Article:

19% இந்தியர்கள் வாழ்க்கையை ஒட்டுவது வெறும் 12 ரூபாயில்..!!!
India grows so does the Inflation - Don’t talk about Indians!!!
India is First always!!! The record breaking Three seconds

================================================
"59 ஆண்டு கால குடியரசு தினத்தின் யோக்கியதை" - ஓட்டுக்கட்சிகளின் சாதனை
நன்றி: இரும்பு

பட்டினியால் வாடும் மக்களின் தன்மையை அளவிடும் சர்வதேச அளவிலான குறியீட்டெண்ணின் அடிப்படையில் இந்தியா எத்தியோப்பாவை விடத் தாழ்ந்து போயுள்ளது. சீனா (47 வது இடம்), பாகிஸ்தானை விடவும் (88ஆவது இடம்) இந்தியா (94 ஆவது இடம்) மிகவும் பின்னோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது.
..
மகப்பேற்றின்போது போதிய மருத்துவ வசதி இன்மையால் இறந்து போகும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கை மட்டும் ஆண்டுக்கு 1.17 லட்சம்.

வயது வந்த இந்தியர்களில் 48.5% பேர்கள் ஊட்டச்சத்துக்குறைவானவர்கள். 3 வயதுக்குக் குறைவான குழந்தைகளில் 47! பேருக்கு வயதுக்கேற்ற உயரமில்லை. 15.5% பேர்களுக்கு உயரத்துக்கேற்ற எடை இல்லை என்பதெல்லாம் ஆய்வுகளில் தெரியவந்தவை.

1997 முதல் 2005 வரை இந்தியா முழுவதும் ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.

மராட்டியம், கருநாடகம், ஆந்திரம், மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் மட்டும் 89,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

32 ஆயிரம் பேர்கள் தற்கொலை செய்து கொண்ட மராட்டிய மாநிலத்தில் தான் 4 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள பணக்காரர்கள் 25 ஆயிரம் பேர் வாழும் மாநகரமான மும்பை உள்ளது என்பது வேதனை கலந்த உண்மை.

விவசாயத்துக்கு 1990-இல் வங்கிகள் வழங்கிய கடன் 13.8 சதவீதமாக இருந்தது. அதே வங்கிகள் 2001 - -2 நிதியாண்டில் வழங்கிய கடனோ 7.2 சதவீதம் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலில் இருந்தே, ஆட்சியாளர்களுக்கு விவசாயத்தின் மீதுள்ள அக்கறை தெளிவாகப் புரியும்.

விவசாயத்தைப் படிப்படியாய் தலைமுழுகி விடுவது என்ற அடிப்படையில், 1991-இல் விவசாயத் துறையில் அரசு செய்த முதலீடு 3.4 சதவிதமாக இருந்த நிலைமை மாறி, அதை 2001-ல் 1.3 சதவிதமாகச் சுருக்கி, விவசாயிக்கு சுருக்குக் கயிற்றைத் திரித்துத் தந்தது.

உடல் உழைப்புக்கு அவசியமாகத் தேவைப்படும் புரதத்தை வழங்கும் பருப்பின் நுகர்வோ 15.2 கிலோவில் இருந்து 10.6 கிலோவாகச் சரிந்துள்ளது.

உலக அளவில் நாளொன்றுக்கு தனிநபர் உண்ணும் உணவின் கலோரி மதிப்பு 3206. ஆனால் இந்திய மக்களின் ஏழைகளான 30 சதவிதம் பேர் உண்பதோ வெறும் 1626 கலோரிதான் என்றால், இந்திய ஏழைகளின் வாழ்க்கை என்பதே ஏதோ உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதுதானே பொருள்?

இந்திய மக்களில் 91 கோடி பேர்களின் தினசரி வருமானம் 80 ரூபாய்க்கும் கீழே என்றும், அந்தக் கொஞ்ச நஞ்ச பணத்துக்குள் உணவு, வீட்டு வாடகை, மருத்துவம், குழந்தைகளுக்கான கல்வி ஆகிய அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பார்த்துக் கொள்ளும்படியான அவல் நிலைக்குத் தள்ளி உள்ளது என்றும் உலக வங்கியே குறிப்பிடுகிறது.

ஆனால் அதே நேரத்தில், நாட்டில் உள்ள 10 சதவீதப் பணக்கார்கள் இந்நாட்டின் 52 சதவீத சொத்துக்களையும் வளங்களையும் அனுபவிக்கின்றனர். அடித்தட்டில் இருக்கும் 10 சத ஏழைகள் அனுபவிக்கும் வளங்களோ வெறும் 0.21 சதமாகச் சுருங்கி உள்ளது.

110 கோடி இந்திய மக்களில் வெறும் ஒரு லட்சம் பேரை மட்டும் கோடீஸ்வர்களாக்கி, பல பத்து கோடிப்பேரை ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடுபவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

டிசம்பர் "புதிய ஜனநாயகம்"
"உழைத்தவர் மெலிந்தனர் வலித்தவர் கொழித்தனர்" கட்டுரையில் இருந்து

Tuesday, May 13, 2008

உத்தபுரம்: பல்லிளிப்பதை கருணாநிதி அரசு நிறுத்த வேண்டும்!

துரை உத்தபுரத்தில் சாதி வெறியர்கள் கட்டிய சுவர் இடிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த ஊர் ஆதிக்க சாதி மக்கள் மலையில் சென்று குடியேறியுள்ளனர். அவர்கள் போராடுகிறார்களாம். அதுவும் எதற்கு? மக்களிலேயே இன்னொரு பிரிவினர் இவர்களைவிட தாழ்ந்தவர்கள் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டுமாம். அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டுமாம். இவர்களை ஆதரித்து இவர்கள் சாதியைச் சேர்ந்தவர்கள் தமது கடைகளை அடைத்துள்ளனர். இது அதிகாரிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாம். என்னாங்கடாது தர்ம சங்கடம்? உன் குடும்பத்த நான் கூட்டி கொடுத்தா அது நம்ம எல்லாத்துக்கும் தர்ம சங்கடம். உன் குடும்பத்த தேவடியா குடும்பம்னு ஒத்துக்க சொல்லி நான் போராடுனா அதுல நியாயம் சொல்றதுல நாட்டாமைக்கு என்னடா தர்ம சங்கடம்?

இந்த தர்ம சங்கடத்த தவிர்க்க அரசு பல்லிளித்துக் கொண்டு இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

அநீதியான சாதிவெறி கோரிக்கைக்கு அரசு பிச்சைக்காரன் போல ஆதிக்க சாதி வெறியர்கள் முன் மண்டியிடுவதும், நியாயமான தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் சாத்வீகமான பல்வேறு போராட்டங்களை இதே அரசின் துப்பாக்கி குண்டுகளாலும், குண்டாந்தடிகளாலும் ஒடுக்கப்படுவதும் என்பதுமாகவே இந்த அரசின் நடவடிக்கைகள் உள்ளது. இந்த அரசை எதால் அடிக்கலாம்?
_________________________________________________
உத்தபுரம்: போராடும் மக்களுக்கு ஆதரவாக இன்று கடையடைப்புசெவ்வாய்க்கிழமை, மே 13, 2008
மதுரை: உத்தபுரம் பிரச்னையைத் தொடர்ந்து அக்கிராம மக்கள் தற்போது மலையில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக கல்லுப்பட்டி, ஏழுமலை, பேரையூர் பகுதிகளில் இன்று கடையடைப்பு நடக்கிறது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உத்தபுரம் கிராமத்தில் சர்ச்சைக்குரிய சுவர் இடிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சமூகத்தினர் அருகில் உள்ள மலையில் குடியேறி நூதன போராட்டம் நடத்தி வருகின்றனர். இது அதிகாரிகளுக்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது

மலையில் உள்ள மக்களை அரசு அதிகாரிகளும், அரசியல் கட்சியினரும் சந்தித்து சமாதன பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் அதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை

மலையில் உள்ள மக்களை அரசு அதிகாரிகளும், அரசியல் கட்சியினரும் சந்தித்து சமாதன பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் அதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை

மலையில் உள்ள மக்களை அரசு அதிகாரிகளும், அரசியல் கட்சியினரும் சந்தித்து சமாதன பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் அதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை

கொட்டும் மழை, கொளுத்தும் வெயில் என்று எதையும் பொருட்படுத்தாமல் பெண்கள், குழந்தைகளுடன் மலையில் தொடர்ந்து வசித்து வருகின்றனர். பிரச்னைக்கு தீர்வு காண கோரி 70க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று மலையில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்

கொட்டும் மழை, கொளுத்தும் வெயில் என்று எதையும் பொருட்படுத்தாமல் பெண்கள், குழந்தைகளுடன் மலையில் தொடர்ந்து வசித்து வருகின்றனர். பிரச்னைக்கு தீர்வு காண கோரி 70க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று மலையில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்

கொட்டும் மழை, கொளுத்தும் வெயில் என்று எதையும் பொருட்படுத்தாமல் பெண்கள், குழந்தைகளுடன் மலையில் தொடர்ந்து வசித்து வருகின்றனர். பிரச்னைக்கு தீர்வு காண கோரி 70க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று மலையில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்

இந்நிலையில் மலையேறிய மக்களுக்கு ஆதரவாக கல்லுப்பட்டி, ஏழுமலை, பேரையூர் பகுதிகளில் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஒரு பிரிவு மக்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது அதிகாரிகளுக்கு மேலும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மலையேறிய மக்களுக்கு ஆதரவாக கல்லுப்பட்டி, ஏழுமலை, பேரையூர் பகுதிகளில் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஒரு பிரிவு மக்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது அதிகாரிகளுக்கு மேலும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மலையேறிய மக்களுக்கு ஆதரவாக கல்லுப்பட்டி, ஏழுமலை, பேரையூர் பகுதிகளில் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஒரு பிரிவு மக்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது அதிகாரிகளுக்கு மேலும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
_________________________________________________

1989இல் நடந்தது என்ன என்பதை சற்றே எண்ணிப்பார்க்கவும். போடிநாயக்கனூருக்கு அருகில் ஒரு ஊரில் தலித் பெண் ஒருத்தியை ஆதிக்க சாதி வெறியன் (பிள்ளை) பாலியல் வன்கொடுமை செய்து கொன்று விட்டான். அதனைக் கண்டித்தும், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும் ஜான்பாண்டியன் ஒரு கூட்டத்தில் பேசினார். கொலைக்குற்றவாளி அப்போதைய ஆளும் கட்சியான திமுகவிற்கு நெருக்கமானவர் (போடி மனோகரனா?) என்பதால் கருணாநிதி அரசு உளவுத்துறை மூலமாக ஜான்பாண்டியன் பேசிய வன்முறைப் பேச்சை ஒவ்வொரு ஊர்களிலும் டீக்கடைக்காரர்கள் ஊடாக எடுத்துச் சென்று கலவரத்துக்க்கு விதை ஊன்றி பாலியல் வன்முறைக்குற்றத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கிட முயற்சித்தது. (கோடொன்றை சிறிதாக்க அதன் பக்கத்திலே பெரிய கோடு போட்ட பீர்பால் கதை) உடனே தலித் (பள்ளர்)களுக்கு எதிராக பிள்ளை,நாய்க்கர்,தேவர் கூட்டணி அமைத்துக் கொலை செய்யத் தொடங்கினர். தீவைப்பு, கொள்ளை எனப்பரவி 10 நாட்கள் நடந்த இக்கலவரத்தில் பல இடங்களில் தலித்களும் திருப்பித் தாக்கினர். அப்படித் தாக்கிய பல ஊர்களில் உத்தபுரமும் ஒன்று. அங்கே உடனே அடிவாங்கிய ஆதிக்க சாதி சுவரொன்றை எழுப்பி விட்டது.

இது தீண்டாமைச் சுவர் என்று தெரிந்தும் இந்நாள்வரை அதனை அரசு அனுமதித்ததே தவறு.
மலைக்குப் போகட்டும்..அல்லது கடலில் கூட போய் விழட்டும்..
சாதித்தினவெடுத்த நாய்களை ஏன் மதிக்க வேண்டும்.
சமமாக வாழ முடியாதவனுக்கு ரேசன் கார்டு கொடுக்கக் கூடாது..
அவன் வீட்டுக்கு கரண்ட் கொடுக்கக் கூடாது,
அவன் பிள்ளைகளின் இட ஒதுக்கீட்டை (பி.சி.) ரத்து செய்ய வேண்டும்..
அவனுக எங்கேயும் பேங்கில் அக்கவுண்ட் கூட தொடங்க விடக்கூடாது..
பாஸ்போர்ட் வழங்கக் கூடாது..
ஒட்டுமொத்த இந்தியாவே மலைக்குப் போனவர்களின் முகத்தில் காறித் துப்ப வேண்டும்..
அச்சாதிகளின் ஓட்டுக்காகப் பல்லிளிப்பதை கருணாநிதி அரசு நிறுத்த வேண்டும்.

நன்றி இமேயிலில் கோவையன்
செய்திரசம்

Related Posts with Thumbnails