TerrorisminFocus

Showing posts with label தியாகி. Show all posts
Showing posts with label தியாகி. Show all posts

Friday, January 30, 2009

உயிரை கொடுத்து உணர்வை வளர்த்தாய், நீ இட்ட தீ எரிந்து சமைக்கும் முத்துக்குமரா!!

தோழர் முத்துக்குமார் தன்னை எரித்து தமிழகத்தின் உண்ர்வை எழுப்பியுள்ளார். சரியான அரசியல் தலைமை இன்றி தடுமாறிய அவல தமிழகத்திற்கு சரியான அரசியல் திசை வழி காட்டும் ஒளி விளக்காக தன்னை எரித்து மாண்டு போனான் முத்துக்குமாரன்.

இந்த தீயின் வெம்மையில் ஈழத் தமிழரின் விடுதலைக்கு ஒரு புதிய அத்தியாயம் திறக்கப் பட வேண்டும். துரோகிகள் பொசுக்கப்பட வேண்டும். இந்திய தரகு முதலாளிகளுக்கு சாமரம் வீசி ஈழத்தில் எறிகணைகளை மழை போல் பொழியும் இந்திய மேலாதிக்க கனவுகள் பொசுக்கப்பட வேண்டும்.

முத்துக்குமார் இட்ட தீ தமிழ் சிந்தனை வெளி எங்கும் பற்றி படர்ந்து அரசியல் களத்தை சுற்றி சூழ்ந்து எரிக்கும் இந்த வேளையில், அவர் குறித்து வந்த பதிவுகள், பின்னூட்டங்களில் தெரித்த கருத்து முத்துக்களை இங்கு இடுவது நாம் அவரது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல உரமாக அமையும் என்று நம்புகிறேன்.

முத்துகுமாரின் இறுதி அறிக்கை!

ஈழமும் முத்துக்குமாரின் தியாகமும் - நமது கடமை என்ன?

ஈழம்: முத்துக்குமாரை கொன்ற தீ சுரணையற்ற மனங்களை சுடட்டும்!

கொதித்தெழு, புது உலக வாழ்வினை சமைத்திட…!

***************




""
த‌ற்கொலைகள் செய்துகொள்வது கோழைத்தனமான முடிவா ?
தற்போது சிலர் இதைப் போன்று முனகிக்கொண்டிருக்கிறார்கள். பொதுவாகவே தற்கொலைகள் அனைத்தும் கோழைத்தனமானவை அல்ல.அவை அனைத்தும் சமூகத்திற்கெதிரான விமர்சன‌ங்கள்.
ஒருவ‌ன் உயிரை இழக்க முன் வருவது அவ்வளவு சாதாரன காரியமா என்ன? அதிலும் ஒரு அர‌சியல் பிரச்சனைக்காக உயிரை இழக்க முன் வருவது சாதாரண செயல் அல்ல‌ அது ஒரு வீரச்செயலாகும்.முத்துக்குமார் தீக்குளித்து இறந்து போயிருப்பது என்பது கோழைப்பயல் சோதாராமன் காலத்திலிருந்தே நம்பியவரை முதுகில் குத்தி,குத்தியே பழக்கப்பட்ட‌ இந்திய பயங்கரவாத கும்பலுக்கு எதிரான ஒரு கலகமாகும்.
""
superlinks

*************


""முத்துக்குமார் உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிக்கவில்லை. உணர்வுப்பூர்வமாக சிந்தித்து, தனது மரணம் தோற்றுவிக்கக்கூடிய அரசியல் எழுச்சியை கற்பனை செய்து, அது நிச்சயம் நிறைவேறும் என்ற கனவுடன் தன்னைப் பொசுக்கியிருக்கிறார். மரணத்துக்கு முந்தைய சில மணித்துளிகளுக்கு முன்னால் கூட மருத்துவர்களிடமும், போலீசிடமும் தனது அரசியல் கோரிக்கைகளை நிதானமாக பேசியிருக்கிறார்.""
வினவு
*************

""ஒவ்வொரு தற்கொலையும் அநீதியான இந்த சமூக அமைப்பிற்கு எதிராக நடத்தப்படும் கலகம் என்றார் மாவோ. ""
வினவு
*************


""
இந்த சமூக அமைப்பின் அநீதிகளை எதிர்த்துப் போராடும் போராளிகளோ தமது உயிரை முன்னறிந்து இழப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். ஒடுக்குமுறைகளைக் கண்டு குமுறும் உள்ளம் தனது உயிரை துச்சமென மதித்து துறப்பதற்கு மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறது. தனிப்பட்ட வாழக்கைப் பிரச்சினைகளுக்காகவும், சமூகக் காரணங்களுக்காகவும் தற்கொலை செய்வதில் பாரிய வேறுபாடு இருக்கிறது. அதே சமயம் இரண்டுமே தன்னுயிரை வதைக்கும் சமூகக் கொடுமைகளை இறப்பதன் மூலம் தண்டிக்க நினைக்கிறது.
""
வினவு
*************

purachi, மேல் ஜனவரி 30th, 2009 இல் 15:29 சொன்னார்:

//முத்துக்குமார் உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிக்கவில்லை. உணர்வுப்பூர்வமாக சிந்தித்து, தனது மரணம் தோற்றுவிக்கக்கூடிய அரசியல் எழுச்சியை கற்பனை செய்து, அது நிச்சயம் நிறைவேறும் என்ற கனவுடன் தன்னைப் பொசுக்கியிருக்கிறார்.//

விசயம் இப்படியிருக்க எப்பொழுதும் போலவே நல்லவர்கள் சிலர் முத்துகுமாரை மூடனாகவும், உணர்ச்சிவசப்பட்டவராகவும், மூர்க்கனாகவும் சித்திரிக்க முயல்கிறார்கள்.

தனது பிரேதத்தையே ஒரு குறியீடாக பயன்படுத்தி ஈழ விடுதலை போருக்கான அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க சொன்ன, அந்த போராட்டத்திற்கு இந்திய சிறைக்கூடத்தில் வாடும் பிற தேசிய இனங்களின் ஆதரவை கோரிய ஒரு சீரிய சிந்தனை கொண்ட இளைஞனை இந்தளவுக்கு அவர்கள் கொச்சை படுத்துவது மன வேதனையளிக்கிறது.

பகத்சிங்கை மூடன் என்று சொன்ன அன்றைய இந்திய பெருந்தலைவர்கள் போலவே இன்றும் உள்ளனர்.

*************


வினவு, மேல் ஜனவரி 29th, 2009 இல் 23:50 சொன்னார்:

மேலதிக தகவல்
உயிருக்கு போராடிய அவரை சிகிக்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மருத்துவர்களிடம் பேசிய முத்துக்குமரன், தீக்குளித்த தன்னை யாரும் காப்பாற்றி விடக்கூடாது என்பதற்காக, பெட்ரோல் கேனில் பெரிய அளிவில் ஓட்டை போட்டு, மண்ணென்ணெய்யை தன் மீது ஊற்றிக்கொண்டதாக தெரிவித்தார்.

இப்படி புத்திசாலித்தனமாக இருக்கும் ஏன் தீக்குளித்தாய் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு, என்னைவிட புத்திசாலியான குழந்தைகள், சிறுவர்கள், வாலிபர்கள், பெண்கள் அனைவரும் இலங்கையில் கொல்லப்படுகிறார்கள். போர் முனையில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திதான் நான் தீக்குளித்தேன் என முத்துக்குமரன் தெரிவித்தார்.

மேலும் பேசிய முத்துக்குமரன், எங்கள் ஊரில் போருக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் அதிகம். உலக அமைதிக்காக போராடுபவர்கள் அதிகப் பேர் இருக்கிறார்கள். ‘கொள்கை நல்லூர்’ என்றே எங்கள் ஊரை சொல்லுவார்கள் என்றார். அந்த ஊரில் பிறந்த நான் ஈழத்தமிழர்களுக்காக உயிர் விடுவதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன் என்றார்.

இன்று காலை முத்துக்குமரன் தூத்துக்குடியில் இருக்கும், தனது தந்தை குமரேசனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது குடும்பத்தாரின் நலம் பற்றி விசாரித்த முத்துக்குமரன், தீக்குளிக்கும் சம்பவம் பற்றி தனது தந்தையிடம் எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார்.

26 வயதான முத்துக்குமரன், இலங்கை தமிழர்களுக்காக சென்னையில் எங்கு கூட்டம் நடந்தாலும், தவறாமல் கலந்து கொள்வார். பத்திரிக்கையில் தட்டச்சு பணியில் இருந்தாலும், தமிழ் உணர்வுள்ளவர் என்றும், ஈழத்தமிழர்களைப் பற்றி அன்றாடம் வேதனையுடன் பேசி வந்தவர் என்றும் முத்துக்குமரனுடைய நண்பர்கள் தெரிவித்தனர்.

செய்தி: நக்கீரன்

*************


""இந்தப் போராட்டத்தினூடாக நல்ல தலைவர்கள் உருவாவார்கள் என்ற நம்பிக்கையையும் விவரிக்கும் அந்தக் கடிதத்தை படிக்கும்போது நம் நெஞ்சம் பதைக்கிறது.""
வினவு
*************


""
வெள்ளைக்கார வேசிம‌க‌ன் பெத்தெடுத்த‌ ‌காங்கிர‌சு கும்ப‌ல் அவ்வ‌ப்போது மிர‌ட்ட‌ல் விட்டு வ‌ருகிற‌து.த‌மிழ் பிஞ்சுக‌ள் தாயிட‌ம் குடித்த‌ பால் எல்லாம் தெருக்க‌ளில் இர‌த்த‌மாக‌ ஓடி உறைகிற‌து.இன்றைக்கு ம‌ட்டும் ஈழ‌த்தில் முன்னூறு உயிர்க‌ளை பிடுங்கி எடுத்திருக்கிற‌து சிங்கள இந்திய‌ பாஸிச‌ம்.அவ‌னுக்கு கூட்டிக்கொடுத்து இந்த இன‌ப்ப‌டுகொலையை மிருக‌த்தினுடைய‌ மூர்க்க‌த்த‌ன‌மான‌ வேக‌த்துட‌ன்‌ ந‌ட‌த்திக்கொண்டிருக்கும் இந்திய‌ ப‌ய‌ங்க‌ராவாதிக‌ளை இங்கே [தமிழகத்தில்] எவ‌னும் ச‌ட்டைக்காலரை பிடித்து கேட்பதில்லை,எம்மக்களின் ப‌டுகொலைக‌ளுக்கு ப‌தில் சொல்ல‌டா நாயே என்று செவுள்களில் அறைந்து கேட்ப‌தில்லை
""
superlinks
*************

""த‌ன்னுடைய‌ ஓட்டுப்பொறுக்கி ப‌த‌விக‌ளை விட்டுவிட்டு இவ‌ர்க‌ள் ஈழ‌த்த‌மிழ‌னுக்காக‌ போராட முன் வ‌ர‌மாட்டார்க‌ள்.அப்ப‌டி வந்தால் என்ன‌ ந‌ட‌க்கும் என்பதும் இவ‌ர்க‌ளுக்கு ந‌ன்றாகத் தெரியும். ""
superlinks
*************

""அவரது கடிதம் ஈழமக்களைக் காப்பாற்ற முடியாமல் இருக்கும் சிக்கலை எல்லாக் கோணங்களிலும் விவரிக்கிறது. துரோகம் செய்யும் இந்தியாவைக் கண்டித்தும், அமைதியாக வேடிக்கைப் பார்க்கும் சர்வதேச சமூகத்தை கேள்வி கேட்டும், சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களை போர்க்குணமிக்க போராட்டத்தை துவங்குமாறு கோரியும், இந்தப் போராட்டத்தினூடாக நல்ல தலைவர்கள் உருவாவார்கள் என்ற நம்பிக்கையையும் விவரிக்கும் அந்தக் கடிதத்தை படிக்கும்போது நம் நெஞ்சம் பதைக்கிறது.""
வினவு
*************


""தீக்காயங்களால் கருகியிருக்கும் தனதுஉடலை புதைக்காமல் அதை ஒரு அரசியல் குறியீடாக்கி போராடுமாறு மாணவர்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்.""
வினவு
*************

""விடுதலைப் போராட்டம் என்பது தேதி குறிப்பிட்டுத் தொடங்குவதல்ல, தேதி குறிப்பிட்டு நிறைவுசெய்யப்படுவதுமல்ல என்றும், தங்களது போராட்டமும் தொடருமென அறிவித்தார். ஆம், கிளிநொச்சி வீழ்ந்தாலும், முல்லைத்தீவு வீழ்ந்தாலும், ஏன், பிரபாகரனுக்குப் பிறகும்கூட அங்குள்ள மக்களின் உரிமைப்போராட்டம் என்பது தொடர்ந்து கொண்டேதான் இருக்குமென்ற உறுதியான நம்பிக்கையுடன் அங்கிருந்து கிளம்பினேன்.""
அங்கூ.... அங்கூ...
*************


""இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தோழர்.மருதையன் அவர்களின் உணர்ச்சிகரமான பேச்சிலிருந்து நான் புரிந்துகொண்ட செய்திகள்:
இந்திய அரசு வர்த்தகரீதியாக இலங்கை அரசை ஆதரிக்கும் நிலைப்பாட்டைப் போட்டுடைத்தார். தமிழக அரசியல்கட்சிகளால் பரவலாகப் பேசப்படும், தவறான வழிகாட்டுதலால்தான் மன்மோகன்சிங் இலங்கைக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்ற கருத்து தவறென்பதை எடுத்துரைத்தார்.""
அங்கூ.... அங்கூ...
*************


""சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்புக்கான போரில் சுடுவதற்கென்றே இந்திய பீரங்கிகள் தமிழகம் வழியே அனுப்பப்பட்ட மண்ணில் எந்த ஆயுதமின்றி தனது உயிரை அழித்து ஒரு மாபெரும் ஆயுதத்தை தமிழக மக்களுக்கு வழங்கியிருக்கிறான் ஒரு வீரன். ""
வினவு
*************

purachi, மேல் ஜனவரி 30th, 2009 இல் 12:36 சொன்னார்:
//இன்று சென்னையில் எமது தோழமை அமைப்பான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அனைத்துக் கல்லூரி மாணவர்களையும் அணிதிரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இந்தப் போராட்டச் செய்திகளையும், படங்களையும் வரும் நாட்களில் வெளியிடுகிறோம்.//

வாழ்த்துக்கள். தன்னையே எரிபொருளாக்கி முத்துகுமரன் இட்ட தீ துரோகிகளையும், சிங்கள பாசிசத்தையும், இந்திய மேலாதிக்கத்தையும் சுட்டெரித்து சாம்பாலாக்கும் வரை கொழுந்து விட்டு எரியட்டும். மக்களின் செயலூக்கத்தை இது கட்டவிழ்த்துவிடட்டும்.

*************


""முத்துக்குமார் எனும் போராளியின் உடலைக் கருக்கிய தீயின் நாக்குகள் சுரணையற்றிருக்கும் மனங்களை சுட்டுப்பொசுக்கி திருத்தட்டும்.""
வினவு
*************

முத்து said...கருத்து;

இன்று முத்துகுமரன் என்னும் விதை விதைக்கபட்டு இருக்கிறது .விரைவில் அது ஆலமரமாய் வளர்ந்து உங்களை வேரறுக்கும்

*************


யாழ் - ஈச‌ன், மேல் ஜனவரி 29th, 2009 இல் 18:46 சொன்னார்:

தொப்புள் கொடி உறவு என்பதன் அர்த்தம் இதுதானா ?

உணர்வற்ற தமிழகமே என்று ஒருமுறை தெரியாமல் திட்டிவிட்டேன்.

ஐயனே, என்னை மன்னித்துவிடு.

*************


""முத்துக்குமார் தனது கடைசிக்கடிதத்தில்..

‘என் பிரேதத்தை உடனே எரித்து விடாதீர்கள். துருப்புச் சீட்டாக வைத்துக்கொண்டு முடிந்தவரை போராடுகள்’ என்று சொல்லியிருக்கிறார்.

அதனால் சீக்கிரத்தில் உடல் அடக்கம் செய்ய மாட்டோம் என்று மாணவர்கள் பிடிவாதமாக உள்ளனர். அவர்கள் மேலும், முத்துக்குமார் உடல் அடக்கம் செய்வதை பொறுத்தவரை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அரசியல் வாதிகள் தலையிடாதீர்கள் என்று சொல்லிவருகின்றனர்.

""

நங்கூரம்
*************

Voice on Wings said...கருத்து;

ஒரு சேர வரலாறு, இலக்கியம் எல்லாம் படைத்து விட்டுச் சென்று விட்டார் இந்த வீரச் சகோதரர். இது போன்ற ஒரு தெளிவான ஆவணத்தை இது வரை தமிழில் வாசித்ததில்லை. அவருக்கு எனது வீர வணக்கங்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது அஞ்சலிகள்.

பலரும் குறிப்பிட்டது போல், இது பல மொழிகளில் (முடிந்தால் இந்தியிலும்) மொழிபெயர்க்கப்பட்டு பரவலாகச் சென்றடைய வேண்டும். எல்லா முக்கிய தேசிய / பிராந்திய அரசியல் கட்சித் தலைமைகள், தொலைக்காட்சிகள், அச்சு ஊடகங்கள் ஆகிய எல்லாருக்கும் அனுப்பப் பட வேண்டும்.

*************


""ஆம் மரத்துப்போயிருக்கும் தமிழுலகில் ஒரு இளைஞன் ஈழத்திற்காக தன்னுயிரைப் பலிதானம் செய்திருக்கிறான். அவனுக்கு அஞ்சலி செலுத்த விரும்புகிறவர்கள் என்ன செய்யப் போகிறீர்கள் ?""
வினவு
*************


""சிங்கள அரசுக்கும், இந்திய மேலாதிக்க அரசுக்கும் எதிரான பிரச்சாரத்தையும் போராட்டத்தையும் மக்கள் மத்தியில் முடுக்கி விடுவதுதான் நமது பணி. முடங்க வேண்டிய நிர்ப்பந்தம் சந்தரப்பவாதிகளுக்கும் ஓட்டுக் கட்சி பிழைப்புவாதிகளுக்குமதான் இருக்கிறது. இது நாம் செயல்பட வேண்டிய தருணம். சிங்கள இனவெறி அரசுக்கும், அதனுடன் கைகோர்த்து நிற்கும் இந்திய அரசுக்கும் எதிரான பிரச்சாரத்தையும் போராட்டங்களையும் நாம் தீவிரமாக நடத்த வேண்டும். எமது அமைப்புக்கள் தமிழகமெங்கும் மக்களி மத்தியில் விரிவான பிரச்சாரத்தை எடுத்துச் செல்வதோடு ஆர்ப்பாட்டங்களையும் நடத்துகின்றன.""
வினவு
*************

Related Posts with Thumbnails