TerrorisminFocus

Thursday, March 29, 2007

பார்ப்பனிய பயங்கரவாதத்தின் யாதார்த்தவாதம்!

நீலகண்டன் என்பவர் இந்துத்துவம் குறித்து ரொம்ப அடிப்படையான சில கேள்விகள் கேட்டத்தற்க்கு பதில் சொல்ல பயந்து ஓடினார். இணைய தொடர்பில்லா கிராமத்தில் உட்கார்ந்து யோசித்ததில் மார்க்ஸியத்தின் மீது நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மனோவியல் தாக்குதல் நடத்தும் விதமாக அவதூறூ பிரச்சாரம் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். இதன் மூலம் பார்ப்பினிய பயங்க்ரவாதத்தின் மீதான கேள்விகள் குறித்த வாசகர்களின் எண்ணவோட்டத்தை மடை மாற்றலாம் என்று பார்ப்பன துர் புத்தி சொல்லிக் கொடுத்திருக்கும். துரதிருஷ்டவசமாக அவர்து முதல் க்ட்டுரையில் இருக்கும் அவதூறுகளின் எண்ணிக்கையும் மீறி அதன் மையமான விசயத்தை விமர்சித்து தோழர்கள் ரயாகரனும், ராஜவனஜ்ஜும் கட்டுரைகள் இட்டுள்ளனர். இன்னும் அந்த கட்டுரையின் ஒவ்வொரு அம்சத்திலும் உள்ள பொய்யை அம்பலப்படுத்தி கட்டுரைகள் வரும் என்று வலைப்பதிவு தோழர்கள் குறிப்பிட்டுள்ளனர். வாழ்த்துக்கள். இந்த நிலையில் சோசலிச யாதார்த்தவாதம் என்ற பெயரில் ரஸ்ய பஞ்ச கால புகைப்படங்களை போட்டு வைத்து அடுத்த புரளியை தொடுத்துள்ளார் நீலகண்டன். ரஸ்யாவின் சாதனைகள் குறித்த கேள்விகளை கேட்டு வியப்பு தெரிவித்திருந்த முயூஸ்ஸின் பின்னூட்டத்திற்க்கு இது வரை பதிலளிக்காத நீலகண்டந்தான் இப்படி அரைபொய், அரை உண்மைகளை நம்பி ஜீவிதம் நடத்தி வருகிறார்.

மூயுஸின் கேள்வி:
""ரஷ்யாவோ, சீனாவோ, அல்லது வேறு எந்த கம்யூனிஸ எதேச்சதிகார நாடுகளோ முரண்பாட்டுஇயக்கவியலுக்கு எதிரான, அல்லது வேறுபட்ட கருத்துக்கூறிய அனைத்து அறிவியலாளர்களையும் அழித்ததா? அல்லது சகித்துக்கொண்டாலும், இத்தகைய பயங்கரத்தின் அச்சுறுத்தலுக்கு நடுவே பல கண்டுபிடிப்புக்களை வெற்றிகளை ரஷ்யர்கள் எங்கனம் சாதித்தார்கள்? ஏனெனின் மனிதம் சுதந்திரமான சூழ்நிலையிலேயே உற்பத்தித் திறன் அதிகம் கொண்டுள்ளது. அச்சூழ்நிலை இல்லாதபோதும் ரஷ்யா எத்தனையோ சாதனைகளை செய்தது என்பது ஒரு மிகப் பெரிய முரணாய் உள்ளதே. விளக்குங்களேன்.""

ஆனால் ஒரு முழு உண்மை ஒன்று பார்ப்ப்னிய பயங்க்ரவாத யாதார்த்தவாதத்திற்க்கு சாட்சியாக உள்ளது. சாதியில்லை, சாதியில்லை, சாதி குறித்து விமர்சிப்பவன் தான் உண்மையில் சாதி வெறியன் என்பதாக முற்போக்காளர்கள் மீதும், ஜனநாயக சக்திகள் மீதும், கம்யுனிஸ்டுகள் மீதும் அவதூறு பேசி வந்த பார்ப்பன கும்பலை யாதார்த்தில் ஒவ்வொரு அம்சத்திலும் பார்ப்ப்னியம் சாதியத்தை உறுதிப்படுத்தியுள்ளதை நாம் விரிவாக பேசி அம்பலப்படுத்தியே வந்துள்ளோம். ஆயினும் இதற்க்கு விசுவல் பலம் கொடுக்கும் வகையில் சமீபத்தில் நண்பர் யெஸ். பாலபாரதி ஒரு புகைப்படத்தை தனது தளத்தில் வெளியிட்டுள்ளார். வஜ்ரா என்ற பார்பினிய பயங்கரவாதியிடம் விவாதம் செய்த போது ராமேஸ்வரம் கோயில் குறித்த அந்த சாதி வெறி பலகைய நான் குறிப்பிட்ட பொழுது என்னை நம்ப மறுத்தார்கள் அவர்கள். இதோ அவர்களின் பார்வைக்கு பார்பினிய பயங்கரவாதத்தின் யாதார்த்தவாதம்.

சாதியில்லை எமது சித்தாந்தம், எமது சித்தாந்தம் வர்ணாஸ்ரமமே. அது குணத்தின் அடிப்படையிலானது, பிறப்பனடிப்படையிலானது இல்லை என்று கூறும் இந்த பொய்யர்கள். குணம் என்பது ஒருவனுடைய பொருளாதார சூழலால் உறுதிப்படுவதையும், பொருளாதார சூழல் என்பது ஒருவனுடைய பிறப்பால் தீர்மானிக்கப்படுவதும் குறித்து மௌனமே சாதிக்கிறார்கள். இது குறித்து கேள்வி எழுப்பிய நண்பர் திருவுக்கு இன்று வரை பதில் சொல்லவில்லை இவர்கள். இதோ சாதியில்லை என்று சொல்லும் கற்பனவாதிகளின் யாதார்த்தவாதம் ராமேஸ்வர கருங்கல்லில் பல்லிளிக்கிறது.





ராமனும் சிவனும் சேர்ந்த புண்ணிய பூமி ராமேஸ்வரத்தில், சாதியின் நர்த்தனம் தெரிகிறதா? இவர்கள் சாதியில்லை என்பதன் அர்த்தம் மேல்நிலையாக்கமடைந்த நடுத்தர வர்க்க அல்பைகளே சாதி பேதமின்றி பார்ப்பன பண்பாட்டை சுவிகரியுங்கள். நாம் இன்றைய நவீன யூகத்திற்க்கான புதிய பார்ப்பனராய் உருவாகி, இந்துத்துவத்தின் பார்ப்ப்னிய மேல் தளத்தை ஜனநாயகப்படுத்துவோம். இதன் மூலம் உழைக்கும் வர்க்கத்தை நாம் வர்ணாஸ்ரம கொடுங்கோன்மையில் பூட்டி இன்னும் ஒரு ஆயிரம் வருடம் இழிவு படுத்துவோம் என்ற அரைக் கூவுலின் வெளிப்பாடே. ஆனால் அல்பைகளே அறிவியலும், தத்துவமும் பார்ப்ப்னியத்தின் அடித்தளத்திற்க்கு ஆப்படிக்கும் இயக்கப் போக்கை கொண்டதாக இருப்பது தெரியாமல் பிரியானிக்கு கருவேப்பிலை ஆகிவிடாதீர்கள். இது கலியுகம்.

திருவின் கேள்விகள்:

1) குணநலன்களின் அடிப்படையில் தான் வர்ணப்படுத்தல் அமைகிறது என்றால், குறிப்பிட்ட அந்த குணநலன்கள் எவை?

2) குறிப்பிட்ட அந்த குணநலன்கள் 'குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே' அமையுமா? இல்லை எல்லோருக்கும் பொதுவானதா?

3) அந்த குணநலன்களை விதிப்பதும், காலத்திற்கேற்ப மாற்றும் அதிகாரமும் யாரிடம் இருந்தது? இருக்கிறது?

4) குணநலன்களின் அடிப்படையில் தரம் பிரித்து வர்ணங்களை மாற்றி அமைக்கும் 'தரக்கட்டுப்பாட்டு முறை' எப்படி அமல்படுத்தப்பட்டது? எவ்வளவு காலத்திற்கு ஒரு முறை அது நடைபெறும்?

5) குணம் உயர்ந்ததும் பிராமணனாக சூத்திரனை மாற்றியதற்கும், சூத்திரனாக பிராமணனை மாற்றியதற்கும் வரலாற்று ஆதாரங்கள் (புராணக் கதைகள் வேண்டாம்), நிகழ்கால சாட்சியங்கள் என்ன?

6) குணநலன்கள் அடிப்படையில் கொலை வழக்கில் சிக்கியிருக்கும் காஞ்சி சங்கராச்சாரி இருள்நீக்கி சுப்பிரமணியம், அப்பாவி மக்களை படுகொலைகளை நிகழ்த்த ஆதரவளித்த நரேந்திர மோடி, கலவரங்கள் உருவாக காரணமான மசூதி இடிப்பை மேற்பார்வையிட்டு நிகழ்த்திய சங்கப்பரிவார தலைவர்களுக்கு வர்ணம் மாறிவிட்டதா? இப்போது அவர்கள் எந்த வர்ணத்தில் இருக்கிறார்கள்?

7) அடுத்தவன் மலத்தை தின்ன வைக்கப்பட்டாலும், அடக்குமுறைகளை அனுபவித்து மனிதனாகவே அறமுடன் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வர்ண உயர்வு கிடைத்ததா? எங்கே? அந்த உயர்வால் அவர்கள் அடைந்த பயன் என்ன?


அசுரன்

Note:

அரவிந்தன் நீலகண்டன் தனது சமீபத்திய பதிவில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ஆன்டிரியூ கிரிகோரியேவிச் எழுதிய ஒரு புத்தகதிலிருந்து எடுக்கப்பட்டது அந்த புத்தகம் பற்றியும் புகைப்படங்கள் பற்றியும் ஏற்கனவே புதிய் கலாச்சாரம் அம்பலப்படுத்தி கட்டுரை வெளியிட்டுள்ளது மேலும் உக்ரைன் பிரச்சனையில் காட்டப்படும் புள்ளிவிவர்ங்கள் பெரும்பாலும் இட்டுக்கட்டியவை என்றும் அந்த கட்டுரை நிறுவுகிறது. அந்த கட்டுரையை ஞாபகப்படுத்தி அத்ற்கான சுட்டியை தந்த ராஜவனஜ்க்கும், ஸ்டாலினுக்கும் நன்றி.



தொடர்புடைய சுட்டிகள்:

வேதத்தின் சாறு இது - ஊரேல்லாம் நாறுது!!

சோசலிச சமூகம் ஏன்? - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

ஒரு மன்னன் மனிதனான கதை

Thursday, March 15, 2007

RSS: வடக்கே - சோதனைச் சாலை, தெற்க்கே - சோதனைச் சாலை பன்றி!!

ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை. ஆயினும் இது இங்கு தேவை என்று கருதுகிறேன். மருதையன் சொல்வது போல "North is the Laboratory of Brahminic Terrorism, then South is the Laboratory of Resisting Brahminic Terrorism and ensuring secularism in a true sense". ஆகவே வடக்கு RSS-ன் சோதனைச் சாலை எனில், RSSயை தெற்கின் சோதனைச் சாலை பன்றிகளாக மாற்றுவோம். ஜனநாயக சக்திகளே, நடுத்தர வர்க்க நாகாரீக கனவான்களே, இன்றைய உலகில் நடப்பவையெல்லாம் உங்கள் பெயரைச் சொல்லித்தான் இவையெல்லாம் நடக்கின்றன. எனக்கென்ன என்றூ இருந்து விட்டுச் செல்வது குறித்து பரிசீலிக்கவும்.

****************



“Mera apang, palnevala baccha tha voh (He was a handicapped son whom I had brought up with so much care). His name was Moinuddin. He was 18 years old. Though disabled, he had passed his GSC exams from Nasir Sir’s School in 1999.What could they gain by killing a boy like that? I am the unfortunate mother who saw it with my own eyes. I was in the kitchen. They made him drink kerosene, tied him to the bed and torched him. I was trying to save a young girl from the neighbour’s family. In trying to save her, I lost my own son. We were living at Hussain Nagar in Naroda Patiya. We saw many bodies burnt and dumped into a well.”

Place: Hussain Nagar, Naroda Patiya
Witness: Mariambi Hasan Bai Sayed

(Interviewed at Relief Camp on March 20)
- Communalism Combat, April 2002

I met Mariam Bibi at Chennai railway Station on February 21, 2003. Mariam roughly in her sixties accompanied by Ayisha came out of the Station carrying her small bag. She came along with the other Gujarat Genocide victims invited to our conference. Mariam lost her son Moinuddin at the so-called ‘backlash’ against Muslims on February 28, 2002 with the Godhra Train burning. As she says in the above excerpt, her son was 18 years old and was handicapped with both legs paralysed. He was killed by Bajrang Dal thugs by making him drink kerosene and setting him ablaze. When she spoke out to me in the train to Thanjavur on her horrifying tale, soon she broke out in tears. For the two days when I accompanied them, I found Mariam often speaking to herself with a shudder. It was a visible agony and I always found her eyes tired with a search in it.

We, People’s Art and Literary Association (PALA), Tamilnadu conducted ‘Conference against Brahminic Terrorism’ (CBT) on February 22, 23, 2003 at Thanjavur, Tamilnadu in view with the rising of Brahminic Terrorism (termed wrongly as ‘Hindutva’) in the country resulting in Gujarat carnage. We invited Dalits from Meenakshipuram who got converted to Muslim religion due to the atrocities of upper caste men in their village. Sangan, another Dalit from Pallapatti who was urinated in his mouth for defying upper caste men spoke in the conference. Murugesan a Dalit from Thinniyam who was forced to eat shit of the upper caste men for questioning the malpractices of local upper caste thug narrated his harrowing tale. Relatives of Dalit skin-reapers killed by VHP hooligans for cow-slaughtering in Jajjar were invited to the conference. But due to fear of backlash, they conveyed their inability to come to the conference.

In the second day of Conference, Gujarat Muslims gave their testimonies. Other than Shahbuddin and Maulana, a Hindu eye-witness also gave his account on the massacre. Ayisha narrated the horrifying days in a trembling voice with tears in her eyes. She spoke of the inhuman, unimaginable atrocities heaped on helpless Muslim men and women. She reminded Abidha, a 60 year old woman who was made to run nude in streets by the Bajrang Dal thugs and got killed. She spoke about Kausar banu, a pregnant woman whose belly was ripped open and the unborn child taken out pierced by a sword, and thrown into the fire. She narrated some more incidents which myself not able to narrate here. When Mariam came to the pedestal, she couldn’t even make a single sentence and broke out instantly. That poor old mother who had never stepped out of her home for years, came all along from Gujarat to Tamilnadu in the endless seek of justice for her son couldn’t utter a single word and cried. On behalf of her, Ayisha spoke again about her son.

Mariam’s husband ran a small hotel in Naroda Patiya and she had three daughters. After the carnage, their hotel was appropriated by a Hindu goon and all their jewels got looted and her house was burnt. She came to streets in a single day and she started living by selling golis (small candies) to school children. Mariam’s husband totally traumatized by losing his son remained in bed and Mariam needs to marry her three daughters.

After the Conference ended, we came by 4:00 AM and we all went to a lodge to take rest for two hours as we had to catch the train to Chennai by morning. The men got settled and I found a place to sleep. I was totally exhausted with the two days work and when I was about to sleep, I found the light still burning and Mariam sitting quietly in a corner. I asked Mariam to take rest and to switch off the light. She took a second and opened her bag. She picked a photograph of her son and showed it to me with a pleading voice, “Doesn’t he looks like you?” I got awestruck. I paused for a moment and said, “Yes, I am your son, don’t worry, go to sleep”. The next day Mariam went back to Gujarat with others waving her hands through the train window until we were visible to her eyes.

She must be in Naroda Patiya till date selling golis, trying to make up her family stand again and still searching for her son. This is the story of one Mariam I knew while there are Hundreds and hundreds of Mariams, Kausar Banus, Geeta Bens and Shabuddins in Gujarat. Geeta Ben, a Hindu woman was stripped, paraded naked by the Bajrang Dal thugs and got killed for trying to save her Muslim husband. Now be proud to say, this is the land of ‘tolerance’, with a ‘glorious’ past and a land that draws the world for its ‘heritage’ and ‘culture’.

Gujarat is not an unfortunate, lone, past accident to forget but it is Genocide by the RSS similar to the Genocide of Sikhs by Congress in 1984. Modi proclaimed Gujarat as the laboratory of Hindutva. The same Hindutva, which by bogus fixes a tag ‘Hindu’ on all of us and masks its core Brahminic face, is the demon that topples the lives of all working people of India. The stagnation of BJP today doesn’t mean the end of RSS and its ancillaries. The strength of RSS lies in its poison houses named as ‘Shakas’, which still thrive, by which it lures the innocent boys for physical training and there by metamorphosize them to Nazis of India.

Umpteen number of Laws, Commissions and legislations can never stop RSS. Also the counter-terrorism by Muslims in India can never solve the issue as RSS justifies all its barbaric acts only by showing the counter-terrorism creating an endless vicious cycle.
Fascist RSS can only be checked by People's resistance in street battles. We fought with RSS goons in Trichy, Chennai and all over Tamilnadu, whenever they tried to perpetrate terror.Till date we resist them and they have announced us as their prinicipal enemies in Tamilnadu.

If the Hindus of Gujarat would have checked the RSS hoodlums, Gujarat carnage wouldn’t have taken place. But they were poisoned by the RSS propaganda that the public opinion was in favour of slaughtering Muslims and nothing much changed till date which could be traced from my previous post. RSS and VHP are not the only ones who are responsible for Gujarat Carnage. Modi is not the single culprit.

We...We all are responsible for the carnage.

Hindus of Gujarat locked their doors when the Muslims were butchered in the streets. Hindus of other parts of the country locked their minds turning deaf to the helpless cries. Gujarat Carnage is an act of collective guilt. Comrade Marudhaiyan aptly asked in his end note, “Does anything called Conscience exist for a person who calls himself as Hindu, after hearing and seeing all this horrors that are perpetrated in the name of his religion, in the name of safeguarding his religion, and is these things are acceptable to him? If not then what you did to save them?”

Innocence cannot be an escape. Nazis were successful in demonstrating the Holocaust with the mute support of so-called decent, educated, peace-loving, apolitical Germans. It’s the same here. If you think you are responsible and accountable to all these things, then show it in action and not by shedding tears. As Comrade Marudhiyan says if North is the Laboratory of Brahminic Terrorism, then South is the Laboratory of Resisting Brahminic Terrorism and ensuring secularism in a true sense.
Mariam is still searching for her son, it’s not the search of a physical body but it’s the quest for justice and dignity and we all, as sons and daughters of Mariam have the responsibility to fulfill her just, ignored and forgotten aspirations.

I have given the video of the end note of Com. Marudhaiyan, secretary, PALA on the Testimonies which he spoke at the conference. I regret i couldn’t give English
sub-titles to the video at present. I think his speech is the fitting end note to this article too. The video can also be accessed at
http://youtube.com/arasubalraj.

Wednesday, March 14, 2007

தேசத் துரோக அடிவருடிகளும், சுதந்திர வர்த்தகமும் - உலகமயம்!!

இன்றைக்கு சுதந்திர வர்த்தகம் குறித்து பேசும் ஏகாதிபத்திய அடிவடுடிகள், தொழில் வளர்ச்சி, தொழில் முதலீட்டிற்க்கான மூலதன்ம் இவற்றையே காரணமாக கூறி ஏமாற்றுகிறார்கள். ஆனால் உலகில் முன்னேறி நிற்க்கும் நாடுகளின் வரலாறை பார்க்கும் பொழுது இவர்களின் இந்த கூற்று பொய் என்று தெரிய்வருகிறது.

Free Trade குறித்து மார்க்ஸின் கட்டுரைக்கான ஏங்கெல்ஸின் முன்னுரை.

""After a long and violent struggle, the English industrial capitalists, already in reality the leading class of the nation, that class whose interests were then the chief national interests, were victorious. The landed aristocracy had to give in. The duties on corn and other raw materials were repealed. Free Trade became the watchword of the day. To convert all other countries to the gospel of Free Trade, and thus to create a world in which England was the great manufacturing centre, with all other countries for its independent agricultural districts, that was the next task before the English manufacturers and their mouthpieces, the political economists.""

பிரிட்டிஷ் முதலாளிகளின் இடத்தில் இன்றூ தேசம் கடந்த பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகள் உள்ளனர். மூன்றாம் உலக நாடுகளை தங்களது சந்தை மற்றும் உற்பத்திக்கான பின்நிலங்களாக வைத்துள்ளனர் என்ற அளவில் ஒப்பிட்டு புரிந்து கொள்ள இந்த வரிகள் உதவும்.

மேலும் இங்கு பிரிட்டனுக்கும் அதனுடன் சுதந்திர வர்த்தகம் செய்ய விழைந்த நாடுகளுக்கும் இடையிலான முதலாளித்துவ வளர்ச்சி வித்தியாசம் என்பது மிக குறைவு. எனவே இந்த வர்த்தக உறவால் ஏற்பப்டும் பாதிப்பு குறைவே. ஆனால் இந்தியாவுடன் பிற் ஏகாதிபத்தியங்களுக்கு உள்ள ஒப்பிட இயலா வித்தியாசத்துடன் பொருத்திப் பார்க்கும் பொழுது இந்தியாவுக்கு அது மரண அடியாக பாதிப்பு கொடுக்கும் என்பதை விவசாயிகளின் தற்கொலைகளில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

பிரிட்டனின் இந்த சுதந்திர வர்த்தக நோக்கத்தை மார்க்ஸ் ஆதரித்தார். ஏனேனில், இது பிரிட்டனில் தொழில் வளர்ச்சியை மிக வேகமாக முடுக்கி விடும் எனவே புரட்சிக்கான சூழல் மிக வேகமாக வளரும் என்ற அடிபப்டையில். ஆக, ஏகாதிபத்தியத்தின் பொருளாதார் வளர்ச்சிக்கு சுதந்திர வர்த்தகம் உதவி புரிவதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இது எந்த வகையிலும் சுதந்திர வர்த்தகத்தில் இணையும் பிற நாடுகளுக்கு உதவிகரமானது இல்லை எனப்தை கீழே விவரிக்கிறேன்.

அன்றைய பிற முதலாளித்துவ நாடுகள் பிரிட்டனின் உலக மேலாதிக்க திட்டங்களைப் பார்த்துக் கொண்டு புளிய்ம பழமா பறித்துக் கொண்டிருந்தார்கள்? இல்லை மாறாக அவர்களும் தமது சொந்த உற்பத்தியை மிக வேகமாக வளர்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் சுதந்திர வர்த்தகம் மூலமாக இல்லை, மாறாக தமது பொருளாதாரத்தை இறுக்க மூடி வெளி நாட்டு மூலதனத்திலிருந்த பாதுகாத்தன் மூலமே தமது பொருளாதாரத்தை வளர்த்தனர்.

""The foreign countries did nothing of the kind. France, for nearly 200 years, had screened her manufactures behind a perfect Chinese wall of protection and prohibition, and had attained in all articles of luxury and of taste a supremacy which England did not even pretend to dispute.""

இங்கு பிரான்ஸ் தேசம் தனது சொந்த நாட்டின் தொழில் வளர்ச்சியை புரொக்டசனிஸ்ட் முறை மூலம் காபந்து செய்து வளர்த்தது குறித்து ஏங்கெல்ஸ் சொல்கிறார். இது போலவே ஜெர்மனி, சுவிட்சர்லாந்து என எல்லா நாடுகளும் தமது தொழில் வளர்ச்சியை இப்படி பொத்தி பொத்தி பாதுகாத்துதான் வளர்த்தனர்.

ஏங்கெல்ஸ் ஒரு ரயில் பிரயாணத்தில் தன்னுடம் பயணம் செய்த சக பயனியான இரும்பு வியாபாரியிடம் பேசுகிறார். இரும்பு வியாபாரி அமெரிக்காவின் protectionist பொருளாதார கொள்கையை விமர்சித்து பேசுகிறார்.

"Was it not inconceivable that a nation of sharp businessmen like the Americans should pay tribute to indigenous ironmasters and manufacturers, when they could buy the same, if not a better article, ever so much cheaper in this country?"

அதாவது இரும்பை குறைந்த விலைக்கு உற்பத்தி செய்யும் இங்கிலாந்திலிருந்து வாங்குவதை விடுத்து ஏன் உள்ளூர் இரும்பு உற்பத்தியாளர்களை அமெரிக்க ஊக்கப்படுத்துகிறது என்கிறார். மேலும் அவர் free trade என்ற இன்றைய உலகமயத்தின ஆதார நியதியை ஆதரித்து பேசுகீறார்.

இதற்கு எங்கெல்ஸ் பின்வருமாறூ கூறுகிறார்,

""Well," I replied, "I think there is another side to the question. You know that in coal, waterpower, iron, and other ores, cheap food, homegrown cotton, and other raw materials, America has resources and advantages unequalled by any European country; and that these resources cannot be fully developed except by America becoming a manufacturing country. You will admit, too, that nowadays a, great nation like the Americans' cannot exist on agriculture alone; that would be tantamount to a condemnation to permanent barbarism and inferiority; no great nation can live, in our age, without manufactures of her own. Well, then, if America must become a manufacturing country, and if she has every chance of not only succeeding but even outstripping her rivals, there are two ways open to her: either to carry on for, let us say, 50 years under Free Trade an extremely expensive competitive war against English manufactures that have got nearly a hundred years start; or else to shut out, by protective duties, English manufactures for, say, 25 years, with the almost absolute certainty that at the end of the 25 years she will be able to hold her own in the open market of the world. Which of the two will be the cheapest and the shortest? That is the question. If you want to go from Glasgow to London, you take the parliamentary train at a penny a mile and travel at the rate of 12 miles an hour. But you do not; your time is too valuable, you take the express, pay twopence a mile and do 40 miles an hour. Very well, the Americans prefer to pay express fare and to go express speed.""

அதாவது அமெரிக்காவில் அளப்பரிய வளங்கள் உள்ளன. இவற்றை வளர்த்தெடுக்க அமெரிக்க ஒரு உற்பத்தி பொருளாதாரமாக மாற வேண்டும். விவசாயத்தை மட்டும் நம்பி ஒன்றும் செய்ய முடியாது. இதை சாதிகக் இரு வழிகள் உள்ளன. ஒன்று தனது நாட்டை திறந்து விடுவதன் மூலம் இங்கிலாந்து முதலாளீகளுடன் முட்டி மோதி தந்து நாட்டு உற்பத்தியை வளர்ப்பது. இன்னொன்று தனது நாட்டை இறுக்கமாக மூடி சொந்த நாட்டு உற்பத்தியை வளர்த்தெடுப்பது.

நீ ஒரு இடத்துக்கு போக சாதா ரெயிலும், எக்ஸ்பிரஸ் ரயிலும் இருந்தால் காசு கொஞச்ம் கூட ஆனாலும் பரவாயில்லை என்று எக்ஸ்பிரஸ் ரெயிலில்தானே செல்வாய்? அதைத்தான் அமெரிக்க செய்கீறது. தனது நாட்டின் உற்பத்தியை வேகமாக வளர்த்தெடுக்க காசு அதிகமாகா செல்வனாலும் பரவாயில்லை என்று அமெரிக்க த்னது கதவுகளை மூடி கொண்டுள்ளது. என்று ஏங்கெல்ஸ் பதில் சொல்கீறார்.

இப்படி ஒவ்வொரு ஏகாதிபத்தியமும் தமது பொருளாதாரத்தை பொத்தி பொத்தி வளர்த்துவிட்டு இன்று இந்தியா போன்ற நாடுகளை கதவைத் திறந்து விடச் சொல்கின்ற்ன. அதற்க்கு சில அடிவருடிகளின் ஆதரவு வேறு.

இவர்களின் ஒரே வாதம், இந்தியாவில் தொழில் புரட்சி நடக்க இந்தியாவை திறந்து விட வேண்டும் என்பதுதான். ஆனால் இவர்களின் அப்பன் நாடுகள் எதுவும் இவர்களின் இந்த கூற்றை நடைமூறையில் இன்று வரை ஏற்றுக் கொள்ளவில்லை. இன்றூம் கூட தனது விவ்சாய உற்பத்தியை protectionist கொள்கையின் மூலம் காத்து வருபவர்கள்தான் ஏகாதிபத்திய்ஙகள். அதாவது இந்தியாவை தமது குறை விலை பருத்தியால், பாலால் நிறைக்கும் ஏகாதிபத்திய்ங்கள், தமது நாட்டில் இந்திய விவசாய பொருட்களை அனுமதிப்பதில்லை. அனுமதித்தாலும் நாம் சந்தையில் நிற்க முடியாது ஏனேனில் ஒவ்வொரு நாடும் தனது உள்நாட்டு விவசாய உற்பத்தியாளருக்கு 100% வரை மானியம் தருகீறார்கள்.

ஆக நேற்றைய வரலாறு நமக்கு சொல்வது , "ஒரு நாட்டின் முதலாளித்துவ வளர்ச்சி என்பது, உற்பத்தி வளர்ச்சி என்பது அதனை வெளிநாட்டு மூலதனத்திலிருந்து பாதுகாப்பதில் அடங்கியுள்ளது என்பதை" அதாவது உள்நாட்டு முதலாளிகளை வளர்ப்பதில் அடங்கியுள்ளது.

இன்றைய ஏகாதிபத்தியங்கள் தமது விவசாய உற்பத்தியில் நடைமுறைப்படுத்தும் கொள்கையும் இதையேதான் சொல்கீறது.

தமது சொந்த் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு ஆதரவாக பேசும் போது குறைந்த் விலை, தொழில்நுட்பம் என்றெல்லாம் சப்பைக் கட்டு கட்டாமல் தமது பொருளாதாரத்தை கட்டி காத்து வளர்த்த அன்றைய முதலாளித்துவ நாடுகளும், இன்றைய் ஏகாதிபத்திய நாடுகளின் தேசபக்தி எங்கே? இதே தொழில் வளர்ச்சியை நாட்டை திறந்து விட்டு நாறடித்தால்தான் சாத்தியம் என்று கதை கட்டி இந்தியாவின் வளங்களை கூட்டிக் கொடுக்கும் அடிவருடிகளின் தேசத் துரோகம் எங்கே?

இவர்களின் யாருக்கு தேசப்பற்று உள்ளது? வெறுமனே சுதந்திர தின விழாவுக்கு கட்டுரை எழுதி மிட்டாய் கொடுத்தால் தேசப்பற்றா?

அடிவருடிகள் பதில் சொல்வார்களா அல்லது வழக்கம் போல ஓடி மறைந்து கொள்வார்களா?

இங்கு ஒரு விசயம் கவனிக்க வேண்டும். அமெரிக்காவின் தொழில் வளர்ச்சி ஓரளவு நல்ல நிலையில், இங்கிலாந்துடன் போட்டி போடும் நிலையில் இருக்கும் பொழுதே அதன் சந்தையை இங்கிலாந்துக்கு திறந்து விடுவது அதன் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்ப்படுத்தும் என்பதுதான் உண்மை. இந்தியாவோ எந்த வகையிலும் உற்பத்தியில் ஏகாதிபத்திய நாடுகளின் அருகிலேயே இல்லை. இந்நிலையில் திறந்து விடுவது என்பது சுத்தமாக இந்தியாவை அழிவின் விளிம்புக்கு கொண்டு செல்லும் என்பதுதான் உண்மை.

ஏகாதிபத்திய்ங்களின் இன்றைய கொள்கைகளும் சரி, நேற்றைய வரலாறும் சரி நமக்கு சொல்வது இதுதான், "சுதந்திர வர்த்தகம் என்பது உள்நாட்டு தொழில் வளர்ச்சிக்கு ஆபத்தே'. அது உண்மையான தொழில் வளர்ச்சியின் வேகத்தை முடக்கி போட்டு மந்தமான வளர்ச்சியையே உருவாக்கும் என்பதுதான் உண்மை. இந்த மந்தமான வேகத்தைத்தான் அடிவருடிகள் ஊதிப் பெருக்கி நம்மை ஏமாற்றுகிறார்கள். மாறாக 10 வருடங்க்ளில் 56 மடங்கு உற்பத்தியை வளர்த்திக் காட்டிய சோசலிச(1970's) சீனாவின் அனுபவ்ம் நமக்கு மாற்றுப் பாதையைக் காட்டுகிறது.
நாம் இழிச்சவாயர்களா? அடிவருடிகளா? தற்குறிகளா? பிழைப்புவாதிகளா? அலல்து சுயமரியாதை உள்ள தேச பக்தர்களா என்பதை அவரவர சொந்த முயற்சியில் பரிட்சித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அசுரன்
Related Articles:

Friday, March 09, 2007

வேதத்தின் சாறு இது - ஊரேல்லாம் நாறுது!!

வேதத்தின் சாறு நீக்கமற எங்கும் நிரம்பியிருப்பதாக ஜடாயு(வேதங்கள், உபநிஷதங்கள், சனங்கள்) அவர்கள் கூறியுள்ளார். அதற்க்கு உதாரணமாக அன்னை பிதா முதலான சில நற்கருத்துக்கள் சமூகத்தில் உலாவுவதை எடுத்துக்காட்டுகளாக சொல்லியுள்ளார். வேதம் முதலான பார்ப்ப்னிய குப்பைகளை நாம் ஒதுக்குகிறோம் எனில் அதன் காரணம் அவற்றில் வலியுறுத்தப்படும் நால் வர்ண கோட்பாடும் அடிப்படையற்ற கற்பனாவாதங்களுமேயாகும். மற்றபடி அந்த பெரும் குப்பையில் அன்றைய சமூகத்தின் நல் வழக்கங்களின் பிரதிபலிப்பு எதுவும் இல்லை என்ற அர்த்தத்தில் கிடையாது. அப்படியில்லாமல் இருக்கவும் முடியாது. அது போன்ற சில விசயங்களை குறிப்பிட்டே வேதங்களில் ஏதோ ஆக உயர்வாக விசயங்கள் உள்ளது என்று புனித பிம்பம் கட்ட முயல்கிறார்.

வேதத்தின் சாறு நீக்கமற எங்கும் நிறைந்துள்ளது என்பதற்க்கு நானும் உதாரணம் தர முடியும், சாதி வெறியன் பசும்பொன் தேவர் தனது பொறுக்கிப் ப்டை துணை கொண்டு இமானுவேல் என்ற தலித் தலைவரை கொன்றான். அதையொட்டி சாதிக் கலவரமும் நடந்தது. இன்னிலையில் ஒரு பார்ப்பன இன்ஸ்பெக்டர் தேவர் சாதியினர் இருந்த ஊருக்கு சென்று அங்கிருந்த சில கலவரக்காரர்களை போலிஸிடம் ஒப்படைகக் ஊர் பெரியவரிடம் கேட்டார். அவர்களும் ஒப்படைத்து விட்டு பின்வருமாறு சொன்னார்கள்,

"அய்யா, நீங்க அய்யமாரு, உஙக் சொல்ல நான் இன்னைக்கி கேட்டாத்தான், நாளப்பின்ன அவன் கீழ்சாதிக்காரன் என் சொல்ல கேப்பான். இத அவன்கிட்டேயும் சொல்லி மருவாதையா நடந்துக்க சொல்லுங்க" என்றார்கள் தேவர் சாதி ஊர் பெரிசுகள்.

இதுவும் வேதத்தின் சாறுதான் எங்கிருந்தது வந்தது?

இன்னொரு உதாரணம், கருவறை நுழைவு குறித்து புதிய கலாச்சாரம் பத்திரிக்கை கருத்துக் கணிப்பு நடத்தியது. அந்த கருத்துக் கணிப்பில் ஆதிக்க சாதி முதல் தாழ்த்தப்பட்ட சாதி வரை அத்தனை பேரும் சொல்லி வைத்தாற் போல, "என்ன இருந்தாலும் பிற சாதிக்காரன் கருவறைக்குள்ளாற போகலாமா? அது எப்படி புனிதமாகும்" என்று தனது சொந்த பிறப்பையே தாழ்வாக, இகழ்வாக கருதி பதில் சொன்னார்கள். இந்த அடிமைப் புத்தி எங்கிருந்து வந்தது?

இப்படி ஆயிரம் உதாரணம் அடுக்கலாம். எனக்கு மீண்டும் ஒரு சில கேள்விகள்தான் வருகின்றன. வேதம் முதலான குப்பைகளில் சாதாரண உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு என்ன பதில் உள்ளது?

வேதம் என்ற தத்துவம் பிறந்த இந்தியா சோழர் காலத்தின் முடிவிலிருந்து ஆங்கிலேயன் வரும் வரை ஒரு மந்த நிலையிலேயே இருந்த மர்மம் என்ன? பெரிதாக எதுவும் தத்துவ முயற்சிகளோ, விஞ்ஞான முயற்சிகளோ இந்த காலகட்டத்தில் இல்லையே ஏன்?

இதன் அர்த்தத்தை உங்களைப் போலவே 1+1=2 என்று பொருத்திப் பார்த்து வேதம்தான் இந்தியாவின் மோன நிலைக்குக் காராணம். எனவே அதே போன்றதொரு முட்டாள்தனத்தை மீண்டும் செய்யக் கூடாது என்று முடிவு செய்யலாமா?

வர்ணாஸ்ரம குப்பை எந்த வகையில் மிகச் சிறந்த சமூக அமைப்பு?

அது ஏன் சாதியாக திரிந்தது? எவ்வாறு இனிமேல் சாதியாக திரியாது?

சாதி ஒழிய வேதத்தில் என்ன திட்டம் உள்ளது? அல்லது இந்த இந்துத்துவ மத வெறியர்களின் சாதி ஒழிப்பு திட்டம் என்ன?

இவர்களின் அர்த்தத்தில் சாதி என்றால என்ன? அது பொருளாதார அம்சத்தில் நிலை பெற்றுள்ளது குறித்து வேதம் என்ன சொல்கிறது?

தலித் ஹத்தி பற்றி பேசும் இவர்கள் அதனை நிவர்த்தி செய்ய் என்னவிதமான பரிகாரம் சொல்கிறார்கள்? ம்ஹூம் எதுவும் கிடையாது. நரபலி நாய் மோடி ஆட்சி செய்யும் இந்துத்துவ குஜராத்தில்தான் ஒரு இந்துத்துவ வெறியன், பஜ்ரங்தள்-ன் உறுப்பினன். இவனுடைய வேலை சாதி மீறி, மதம் மீறி காதல் திருமணம் செய்த பெண்களை பிரித்து கடத்தி வருவதுதான்.நரோடா பாட்டியா எனும் குஜராத்தின் ரத்த வெள்ள கொலைக் களத்தின் கதாநாயகன் இவந்தான். இவனைப் பற்றிய கட்டுரை Frontline-ல் வந்தது(Dec 16-29, 2006 - A serial kidnapper and his `mission'). இந்துத்துவம் ஆட்சி நடத்தும் குஜராத்தில் இஸ்லாமியரிடம் காட்டிய வீரத்தில் கோடி கோடியில் ஒரு துளியை சாதிக்கு எதிராக இந்த பன்றிகள் காட்டவில்லையே? மர்மம் என்ன? ஒரு மர்மமும் கிடையாது. பார்ப்பனியம் வர்க்க, வரண இடையே ஏற்ப்பட்டுள்ள வேறுபாட்டை சரி கட்டும் விதமாக, மேல்நிலையாக்கமடைந்த பிற் சாதியினரையும் உள்ளிழுக்கும் ஜனநாயக காலகட்டம் இது. எனவே சாதியில்லை என்று சும்மா பேச்சுக்கு மட்டும் சொல்லும். செயலில் ஒரு துரும்பு கூட கிடையாது.

கேள்விகளை நாமும் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறோம் மானமுள்ள(?) இவர்கள் பதில் சொல்லத்தான் வழியின்றி தவிக்கிறார்காள்.

பதில் இந்த முறையாவது சொல்வார்களா?

வாய்ப்பு நெம்ப கம்மி

சரி வேதம் குறித்து நாம் ஒரு சின்ன பார்வை பார்ப்போம். தத்துவத்தில் இரு பெரும் பிரிவுகளே உள்ளன. அவை பொருள்முதல்வாதம், சிந்தனைமுதல்வாதம் எனபன. பொருள்முதல் வாதம் என்பது பொருளே இந்த உலகில் என்றென்றைக்கும் இருந்து வருகீறது. உயிரினங்கள் தோன்றீய பிற்ப்பாடே சிந்தனை தோன்றியது என்று சொல்லுவது. சிந்தனை முதல் வாதம் என்பது பொருட்களுக்கு முன்பே சிந்தனை(கடவுள், ஜீவாத்மா, ப்ரமாத்மா) உண்டு என்பதாகும்.

சாதாரண இன்றைய இந்தியனின் கடவுள் பக்தி என்பது அடிப்படையில் அவனது பொருள் நாட்டம் குறித்த கோரிக்கைதானேயன்றி, சொர்க்கம் நரகம், பரமாத்மா என்பனவற்றின் பொருள் புரிந்த பக்தி அல்ல. இது சாராம்சத்தில் பொருள்முதல்வாத அடிப்படை கொண்டதுதான். ஏனேனில் கடவுள் பக்தி என்பதே வாழ்க்கை சிக்கல்களை கண்டு பயந்து, ஏதாவது பெரிய சக்தியின் மீது நம்பிக்கை வைத்தால்தான் மனது நிம்மதியடையும் என்று மனிதன் அடைக்கலம் அடையும் அளவே இந்த பக்தி உள்ளது. அதனால் சிந்தனைமுதல் வாதம் என்ற அம்சம் உணர்வு அடிப்படையில் கிடையாது. இந்துத்துவ வெறியோ அலல்து வேறு மத வெறியோ பிடிக்காத உங்கள் நண்பர்களிடம் அவரின் கடவுள் பக்தி குறித்துக் கேட்டால் இந்த கருத்துத்தான் வரும். 'மாப்ளே கடவுள் இருக்கா இல்லையான்னு எனக்கு தெரிஞ்சுக்க விருப்பமில்லடா. ஆனா, ஏதாவது ஒன்னுமேல் நம்பிக்கை வைச்சு பாரத்த போட்டாத்தான் மனசு நிம்மதியா இருக்கு.' என்பார்கள். சிலர் இதைக் கூட சொல்ல வெட்க்கப்பட்டு தனது அம்மா கும்பிடச் சொன்னாள் என்று பலியை அவர்கள் மீதும் போடுவார்கள்.

வெகு சொற்பமானவர்களே இதைத் தாண்டி ஆன்மா, இறப்புக்கு பிந்தைய வாழ்க்கை குறித்து தேடி இந்த சிந்தனமுதல்வாத தத்துவ பித்துக்களில் போய் சரணாகதி அடைகிறார்கள். அவர்களிலும் மிகப் பெரும்பான்மையினர் உண்டு கொழுத்து வயிறு அஜீரணக் கோளாறால தவிப்பவர்கள் அல்லது இன்றைய சூழலில் பார்ப்ப்ன மேலாதிக்கம் ஆட்டம் கண்டது கண்டு வயிறெரிபவர்கள் அல்லது பிற அரசியல், ஆதிக்க தேவைக்காக செயல்படுபவர்கள் ஆவர்.

வேதம் என்பது ஒரே வரலாற்று காலகட்டத்திற்க்கான கருத்துக்களை கொண்டது அல்ல. ரிக் வேதத்தின் 10 புத்தகங்களை எடுத்துக் கொண்டால் கடைசி இரண்டு புத்தக்ங்கள் காலத்தால் 500 வருடங்களுக்கும் மேல் பின்னால் வருகின்றன(அதாவது எட்டாவது புத்தகத்திலிருந்து). அதனால் இந்த முழு காலகட்டத்திலும் நிகழ்ந்த அனைத்து சமூக மாற்றங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் கருத்து, தத்துவங்களை ரிக் வேதம் கொண்டுள்ளன.

புரதான பொதுவுடமை சமுதாயம் எனும் காட்டுமிராண்டி பண்பின் எச்சங்களை கொண்ட ஆரிய சமூகத்தில் வாய் வழியாக சொல்லப்பட்டு வந்ததே வேதங்கள். இந்த வேதங்களில் உணவு வேண்டி, எதிரியை நாசமாக்குவது, எதிரியை நாசமாக்கிய தலைவனை கடவுளாக கொண்டாடி என்ற அடிப்படையிலேயே பாடல்கள் ஆரம்பத்தில் இருந்திருக்கின்றன. இந்த கோரிக்கைகளை வேண்டி செய்யும் சடங்குகள் குறித்தே அவை வருகின்றன. இதனைத்தான் கர்ம காண்டம் என்கிறார்கள். இதனை(கர்ம காண்டத்தை) வலியுறுத்துவதுதான் மீமாம்சம் எனும் வேதாந்த எதிர்ப்பு தத்துவம்.

பிறகு சிந்து சமவெளி நாகரித்துடன் ஏற்ப்பட கலப்புக்கு பிறகு அரசு, தனியான ஆயுதப் படை, உழைக்கும் மக்கள் எனும் தனிப் பிரிவு, அடிமைகள், பூசாரிகள் என்று சமூகம் வர்க்க பிரிவினை கொண்டதாகிறது. வர்க்க பிரிவினைகள்தான் மனிதனை தனது பிறப்பு குறித்து சிந்திக்க தூண்டுகிறது. ஏனேனில் அவன் சக மனிதனை(தனது சொந்த இனக் குழுவிலுள்ள ஒருவனையே) அடக்கி ஆள வேண்டியுள்ளது அல்லது அடங்கி போக வேண்டியுள்ளது. இதற்க்கு முந்தைய பிறப்பின் மீதோ அல்லது அவனை அவ்வாறு பிறக்க வைத்த கடவுள் மீதோ பலி போட்டுத்தான் தார்மீக கட்டுப்பாட்டை நிலை நிறுத்த வேண்டியுள்ளது (அட சக்கிலியானா பொறக்கனும்னு ஆண்டவ்ன் தலைல எழுதிருகான். நாம அந்த கடமையைத்தான் சாமி செய்யனும்).

இதுவே முதல் முறையாக எதிரியைக் கொல்வது, உணவு உள்ளிட்ட பொருள்முதல்வாத சிந்தனையிலிருந்து மாறுபட்டு, பிறப்பு, இறப்பு, ஆன்மா முதலான சிந்தனாமுதல்வாத கருத்துக்கள் குறித்து சிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்ப்படுத்திய சமூக பொருளாதார சூழ்நிலையாகும். இதே காலகட்டத்தில்தான் வேதங்கள் எழுத்து வடிவம் மேற்கொள்கிறது. எனவே முந்தைய சமூகத்தின் கர்ம காண்ட அம்சங்களுடன் ஆன்மா குறித்த ஆய்வுகளின் ஆரம்ப கூறுகளை உடைய பாடல்களும் ரிக் வேதத்தில் இடம்பெறூகின்றன.

இது வளர்ச்சியுற்று, வர்க்க பிரிவினைகள் முற்றும் பொழுது பல்வேறு தத்துவ குழ்ப்பங்கள் ஏற்ப்படுகின்றன. வர்க்க முரன்பாடுகளை மயக்குமுறச் செய்ய ஏதுவாக ஆன்மா குறித்த தத்துவம் இன்னும் ஆழமான தத்துவ வியாக்கியானங்களைக் கொண்டதாக இருந்தால்தான் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முடியும் என்ற நிலை. அதுவே யோக கண்டம் எனப்படும் வேதாந்தம். இதே காலகட்டத்தில்தான் இந்த வரக்க பிரிவினையின் வீச்சுக்கேற்றாற் போன்று பல்வேறு தத்துவங்கள் பிறக்கின்றன. வேதத்தை கண்மூடித்தனமாக பின்பற்றும், வேத சொற்களின் அர்த்தம் கால காலத்திற்க்கும் ஒரே அர்த்தமே தரும் என்று சொல்லும் மீமாம்சம், பார்ப்பனர்களை எதிர்த்த, கடவுளை மறுத்த சுத்தமான அஞ்ஞான பொருள்முதல்வாதமாகிய சாருவாகம், வேத மறுப்பு பௌத்தம், சமணம், பொருளூமுதல்வாத அடிப்படை கொண்ட சாங்கியம் (பிறகு இதன் 24 தாதுக்களில் 25 ஆக ஒன்றை சேர்த்து அந்த புருஷ்னுக்கு சக்தி கொடுத்து ஆன்மீகவாதமாக திரித்துவிட்டார்கள் என்பதிருக்க), இது தவிர்த்து இன்னும் சில தத்துவங்கள் உருவாகின்றன.

ஆக, இப்படி சமூக வளர்ச்சிப் போக்கின் அடிப்படையில்தான், சமூகத்தின் பொருளாதார தேவையின் அழுத்தம் மனதில் ஏற்ப்படுத்தும் விளைவுதான் தத்துவ வளர்ச்சிக்கு அடிபப்டையாக இருக்கீறது. இந்த வரலாற்று பார்வையில்லாத முட்டாள் பயல்கள்தான் வேத்த்தில் எல்லாம் உள்ளது என்று அதில் உள்ள கால முரன்பாடுடன்களுடன் கூடிய பல்வேறூ கருத்துக்களை சொல்லி புனித பிம்பம் கட்ட முயல்கிறார்கள்.

அதன் நடைமுறைப் பய்ன்பாடு குறித்துக் கேட்டால் வாய் மூடி செல்கிறார்கள்.

இவர்களின் முட்டாள்தனத்திற்க்கு ஒரு உதாரணம், நவீன தொழிற்நுட்பத்தின் உதவியால் பல அடுக்கு மாடிகளை கட்டிக் கொண்டிருக்கும் பொழுது, பழைய உற்பத்தி முறையின் துனையால் ராமர் கோயிலை வருடக் கணக்கில் கட்டிக் கொண்டிருக்கிறார்களே அது ஒன்று போதும். புனிதம் என்பதால் ஆயிரம் வருட பழைய பன்றிச் சாணத்தை ஊறுகாயாக தொட்டுக் கொள்ள முடியாது.

அசுரன்

Related Article:

Thursday, March 08, 2007

W(h)oman's Day!!


பெண்கள்!!!!

Photo Sharing and Video Hosting at Photobucket





இவுங்களும் பெண்கள்தான்!!!

Photo Sharing and Video Hosting at Photobucket




Woman's Day......

யாருக்கு???

Photo Sharing and Video Hosting at Photobucket
நன்றி 'தி ஹிந்து'

அசுரன்

Tuesday, March 06, 2007

சுயமரியாதையுள்ள(?) இந்துத்துவ வெறியர்களே - இந்த முறையாவது......

நீலகண்டன் என்பவர் RSS சுயம்சேவக்காக தன்னை கூறிக் கொள்பவர். அவர் சமீபத்தில் ஒரு கட்டுரை போட்டுள்ளார்.

கட்டுரை தலைப்பு,"வேதமும் பாலியல் பதங்களும்". வேதத்தின் புனிதம் பேச விழைந்த நீலருக்கு இந்துத்துவம் குறித்து நானும் பல இடங்களீல் எழுப்பிய கேள்விகளை மீண்டும் ஒரு முறை இங்கு இடுகிறேன். அதற்க்கு வசதியாக உள்ள இந்த கட்டுரை பகுதிகளை வைத்து அந்த கேள்விகளை எழுப்புகிறேன்.

நீலர்:
//வேதம் பல தள பொருட்களை உடையது என்பதையும் பல படிமங்களை கொண்டது என்பதனையும் இந்துக்கள் அறிவார்கள்//

அசுரன்:
எந்த இந்துக்கள்? வேதம் அறிந்தவந்தான் இந்து என்றால் அவன் சிறுபான்மை. உண்மை பேசும் அரவிந்தன் ஒரு அதிசயம்.



நீலர்://சம்பிரதாய நம்பிக்கைப்படி இராமாயணத்துக்கு முந்தைய உபநிடதங்களிலேயே சொல்லியிருக்கிறது. எனவே அசுவமேத யக்ஞத்திற்கு இப்படி அசிங்கமாக பொருள் கொள்வது தகாது என சொல்லியிருக்க வேண்டுமா இல்லையா? //

அசுரன்:அது சரி அசுவமேத யாகம் செய்த பின்பு யாகம் செய்த பார்ப்பனர்களுடம் படுத்த் எழுந்திருத்தே ராமன் பிறந்தான் என வால்மீகி ராமயணத்தில் உள்ளதே(ஏதோ ஒரு சாஸ்திரி என்பவர் 1920 களில் மூல பிரதிகளுடன் எழுதிய நுலையும் அந்த மூல பிரதியையும் அடிப்படையாக வைத்து குருவிக்கரம்பை வேலு என்பவர எழுதிய உரை). அவர் தனது புத்தகத்தின் முகப்பிலேயே சந்தேகப்படுபவர்கள் தமது முகவரிக்கு வந்தால் அந்த மூல பிரதியை காட்டுவதாகக் கூறியுள்ளார்.

சும்ம ஆன பூன என்று கதை விடக் கூடாது.

ஏற்கனவே நாங்கள் பல இடங்களில் கேட்டுள்ள கேள்விகள் எதற்க்கும் இது வரை பதில் சொல்லவில்லை,

#1) இந்து தர்மம் என்ன?

#2) பிறப்பினடிப்படையில் வர்ணாஸ்ரமம் ஏன் சாதியாக திரியாது? அது எந்த வகையில் சிறந்ததொரு சமூக அமைப்பு?



நீல்ஸ்://சரி அகப்பொருளை விடுவோம். அதனை சொல்லாமல் குறிப்பிடாமல் விட்டுவிட்டு செல்லும் நேர்மையின்மையை விடுவோம்.//

அசுரன்:நேர்மை வாய்மை என்று உங்களுக்கு சம்ப்ந்தமில்லா விசயங்களை பேசியுள்ளீர்கள் நீங்கள் நேர்மையானவர் எனில் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் do or die யுத்தம் ஒன்று நடத்துவோம். வரும் தைரியம் உண்டா?

இது அசுரர்களின் காலம் ஏனேனில் ஐயியாரம் வருடம் பழைய குப்பையை கிளறி ஒன்றும் செய்ய முடியாது.



நீல்ஸ்://நாட்டார் வழக்குகளிலும் இத்தகைய வழிபாட்டுமுறைகள் உள்ளன. இந்த வழிப்பாட்டுத்தன்மைகளை இதே ஆசாமிகள் வேத தருமத்துக்கு மாறுபட்டது என முன்வைப்பார்கள். ஆனால் அத்தகைய வழிபாட்டுமுறைகளும் வேதபாரம்பரியத்தினால் ஏற்கப்படுபவையே எனும் எளிய உண்மையினை ஏற்காமல் //

அசுரன்:வேத பாரம்பரியம், பிற பார்ப்ப்னிய குப்பைகள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும்(ஹோமோசெக்ஸ், தாயை புணர்தலையும் கூட) ஐயாயிரம் வருடம் உழைக்காமல் சும்ம இருந்த நேரத்தில் தின்று விட்டு ஏன்னத்தையோ கிறுக்கி வைத்திருந்தால் அதில் எல்லா இழவும் இருக்கத்தான் செய்யும். ஆனால், நாட்டார் வழிபாட்டை சம்ஸ்கிருதமயமாக்கும் நீங்கள் ஏன் பெரும் தெய்வங்களை நாட்டர் வழிபாட்டு முறைக்கு மாற்றக் கூடாது. இதில் எது சிறந்தது? ஏன் சிறந்தது? ஏன் பெரும் தெய்வ வழிபாட்டு முறை புனிதமானது? நாட்டார் வழிபாட்டு முறை இழிவானது?

இந்த கேள்விகளுக்கும் இது வரை பதிலிட வில்லை நேர்மையின் சிகரமான நீலக்ணடன். ஆனால் அறச் சீற்றத்த்ல் மட்டும் நல்ல ராமர்கள். அவனைப் போலவே கேப்மாறியாக இருக்கிறார்கள்.



நீல்ஸ்:///இதே அளவுக்கோலை இவர்களுக்கு பல்லாயிரம் கோடிக்கணக்கான டாலர்கள் செலவில் பரப்பப்பட்டுவரும் கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக காட்டமுடியுமா என்றால் நிச்சயமாக இல்லை//

அசுரன்:கிருத்துவ மதம், இஸ்லாம் இவை எல்லாம் மார்க்ஸியத்துக்கு விரோதிகளே. இவர்களை அத்து மீறும் பொழுது மிகக் கடுமையாக் விமர்சித்தே வந்துள்ளோம். ஆனால், இவையனைத்திற்க்கும் மதம் என்று குவாலிபையாக தகுதி உண்டு. ஏனேனில் இவையனைத்தும் மக்கள் விடுத்லையை முன்னிறுத்தி வந்த மதங்கள். அதாவது அபின் என்ற விளக்கத்துக்கு பொருத்தமானவை. பார்ப்னிய மதம் எனப்படும் சமூக ஒடுக்குமுறை வர்ணாஸ்ரம்ம் யாருடைய விடுதலை விரும்பி வந்தது?

அந்த பார்ப்ப்னிய பண்பாட்டு அடக்குமூறைகளுக்கெதிராக இன்று வரை நீலகண்டன் வகையாறாக்கள் ஒரு மசிறும் செய்யாமல்(குறைந்தது ஒரு கண்டதேவி, ஒரு பாப்பபட்டி, ஒரு கவுண்டனுடைய கிராமத்தில் சாதியை ஒழிக்க முடியுமா இந்த பொய்யர்களால்? ஒரு கருவறை நுழைவுப் போராட்டம் நடத்த இயலுமா இவர்களால்?) அதற்க்கு புனித வட்டம் கட்ட முற்ப்படும் போது அது எமது உடனடி எதிரியாக மாறிவிடுகீறது.

அதற்க்குப் பிறகு இந்த கட்டுரையில் இவர் அடிக்கும் ஜ்ல்லியெல்லாம் அகம் புறம் என்று புரியாத பாசைதான். அதிகம் தின்று ஆன்மீக அஜீரண கோளாறில் தவிக்கும் சில நடுத்தர வ்ரக்க அல்ப்பைகள் - இந்த மனித குல விரோதிகளின் குஜராத படுகொலைகள், பாபர் மசுதி இடிப்பு நாடகம் முதலானவற்றிக்கு புனித வட்டம் கட்டும் முகமாக இவர்களுடன் உரையாடி - "சூப்பர்", "உண்மை", என்று கருத்து தெரிவிக்க வசதியான மேஜிக்கல் ரியலிச எப்ஃக்டில் பேசுகிறார் நீல்ஸ். நமக்கு கொஞ்சம் தன்மான உணர்வு ஜாஸ்தி. பிழைப்புவாதம், எல்லாரிடமும் நல்ல பெயர் வாங்கும் தேவை எமக்கு இல்லை. குறிப்பாக ஆன்மிக ஆஜிரணக் கோளாறு இல்லை. ஏனேனில் வயிற்றுக்கு உணவில்லா மக்களின் பிரச்சனையே எனது ஆன்மிக உணர்வை தீர்மானிப்பதாக இருக்கிறது.

மற்றபடி இதுவரை நமது கேள்விகளுக்கு இவர்கள் செய்துள்ள எதிர்வினைகளும். பாபர் மசுதி இருந்த இடத்தில் ராமன் பேண்டான் மோன்டான் என்று கதை விடுத்ததையும் பார்க்குமிடத்து, ஈ.வே.ரா குறித்து இவர்கள் அள்ளிவிடும் சரக்குகளின் தரம் நமக்கு தெரிந்ததே. இது போல புரூடா விடுவதில் சுமார் 2500 வருச எக்ஸ்பீரியன்ஸ் கொண்ட பெரிய குப்பை மேடு ஒன்று இவர்களிடம் உள்ளதை நான் குறிப்பிட்டே தீர வேண்டும்.


நிற்க,

இவர்கள் ஒருத்தரை ஒருத்தர் சொறிந்து விடுவது இருக்கீற்தே அய்யோய்யோய்யோ... ரொம்ப அருமை. இவர் அவரை புகழ, அவர் இவரை புகழ்... நடுவில் ஒருவர் வந்து இருவரையும் புகழ..... மெய்மறந்து சொறிந்து விட்டுக் கொள்வார்கள்.

நான் முதலில் தமிழ்மணத்தில் எழுதத் துவங்கிய பொழுது இந்துத்துவ வெறியர்களின் கூடாரமாக அது இருந்தது அப்பொழுது இந்த சொறியல் சத்தம் ரொம்ப விமரிசையாகக் கேட்க்கும். அதே சத்தத்தை இப்பொழுது ஜடாயுவின் பதிவு ஒன்றின் பின்னூட்டத்தில் கண்டேன். அந்த பதிவு ஜெயமோகன் என்பவர் எழுதியுள்ள புரியாத குப்பை ஒன்றைப் பற்றியது. புரியாத ஒன்றை எழுதியதாலேயே எங்கே நமக்கு புரியவில்லை என்று தெரிந்தால் அசிங்கமாகிவிடுமோ என்று ப்யந்து ஒவ்வொருத்தரும் ஒரே சொறியல் - நீ ஆழமானவர், நீ அறிவுசீவி என்று. அல்பைகள் என்று சரியாகத்தான் சொல்லியுள்ளார் மார்க்ஸ்.

இதே அறிவு ஜீவிகள்தான் நாம் இதுவரை இவர்களிடம் கேட்ட சில அடிப்படை கேள்விகளுக்கு இன்று வரை பதில் சொல்லவில்லை. முட்டாள்களிலும் அடி முட்டாள், சுய இன்பக்காரர்கள் என்பதை மீண்டும் மீண்டும் இவர்கள் நிரூபிக்கிறார்கள்.

அசுரன்

Related Articles:

இந்து/பார்ப்னிய மத வெறியர்களே பதில் சொல்லுங்கள்!!!...

இந்து/பார்ப்பினிய மதம்-பிரியானி-கறிவேப்பிலை

பொங்கலும், இந்துத்துவ வெறியர்களும்!!

இவை எனது FAQ... பதில் சொல்லுங்க!

பார்ப்பனியம் என்னும் பண்பாட்டு மேலாதிக்கம்

Monday, March 05, 2007

வீரமணியின் பதில்கள் - அம்மணமா ஒரு அசிங்கம்!

கேள்வி: பகுத்தறிவின் ஆரம்பம் பிராம்மண எதிர்ப்பு என்றும், முடிவு சொத்துக் குவிப்பு என்றும் திருவாளர் 'சோ' கூறுகிறாரே?

வீரமணி பதில்: காமாலைக் கண்ணனுக்குக் காண்பதெல்லாம் மஞ்சளாகத் தானே தெரியும். அவர் தொழுது ஏத்தும், உளவாளி தூதுவராக மாறும் காஞ்சி சங்கராச்சாரியாரின் சனாதனமும் - ஆன்மீகமும் - சொத்துக் குவிப்புக்கு அப்பாற்பட்டதா? புத்தரின் பார்ப்பன எதிர்ப்பு எதற்கு? மடங்களை உருவாக்கிய புத்தர் பிக்குகளை உருவாக்கியது எதற்கு? அது போல மக்கள் தருவது மக்களுக்கே என்பதே பகுத்தறிவு என்பது மக்களுக்கு புரிந்தே வருகிறது!

********************

"நைனா இன்னா சொல்றாரு,..... ஒன்னுமே பிரியலயே? ஒரு வேள உண்மைய சொன்னதுனால படப்பிடிப்பு ஆகி... ஸாரி படபடப்பாகி வார்த்தைகளை சிதற் விட்டுட்டாரா?"

என்று புலம்பும் அன்பர்களே, அசிரியர் வீரmoney சரியாகத்தான் சொல்கிறார்.

கடைசி வரைக்கும் சொத்து சேர்ப்பது பற்றி பதிலே இல்லை எனபது போல தெரிகீறது, ஆனால், "காஞ்சி மடம் மட்டும் சொத்து சேர்க்கலாம" என்று ஒரு கேள்வி கேட்டுள்ளாரே அதில்தான் விசயம் உள்ளது. அதன் அர்த்தத்தை அவரது சிஸ்ய குஞ்சுகளே கண்டுபிடித்துக் கொள்ளட்டும்.

அப்புறம் நம்ம சோமாறி சோவை விட்டுவிடலாமா? முதலில் பகுத்தறிவுக்கும் வீரமணிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. சுயமரியாதையை ஜெயலலிதாவிடமும், கருத்து கருணாநிதியிடமும், கடைசியில் இன்றூ ஏகாதிபத்தியங்களிடமும் அடகு வைத்து சுயமுன்னேற்றம் குறித்து எழுதி வரும் இந்த தரகு வர்க்க ஜந்து, திக என்ற அமைப்பை NGO அமைப்பாக திரித்து விட்டது. பெரியார் புறா... ஸாரி பெரியார் புரா என்ற பெய்ரில் இவர்கள் செய்யும் NGO வேலைக்கு முன்பு பாரம்பரிய NGOக்களே தோற்றுவிடுவார்கள்.

அதனால் 'சோ' மாறியின் கேள்வியே தப்பு. சரி இவிங்க ரெண்டு பேர பத்தியும் சில கட்டுரைகளை கீழே கொடுக்கிறேன் படிச்சு பயனடையவும். பகுத்தறிவுள்ளவர்கள் சிந்தித்தால் சரி.

#1) பெரியார் சிலை - மானமிகு கலைஞரும், மான்புமிகு ஆசிரியரும்

#2) துக்ளக் சோ நாறிய இடம்!


அசுரன்

Sunday, March 04, 2007

சோசலிச சமூகம் ஏன்? - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

பொருளாதார, சமூகப்பிரச்சனைகளில் நிபுனத்துவம் இல்லாத ஒருவர் சோசலிசத்தைப் பற்றிக் கருத்துக் கூறுவது சரியானதா? பல காரணங்களை முன்னிட்டு அது சரியே என்று நான் கருதுகிறேன்.
உலகத்திலுள்ள மிக முக்கியமான நாடுகள் மற்ற நாடுகளை அடிமைபடுத்தி வாழ்கின்றன. தோல்வி அடைந்த நாடுகளின் செல்வங்களைச் சுரண்டுவதோடு அங்கே தங்களுக்குச் சாதகமான ஒரு கல்வி அமைப்பையும் ஏற்படுத்தி அடிமைத்தனத்தை நிரந்தரமாக்கிவிடுகிறார்கள்.
இதை சமூக வளர்ச்சியில் 'காட்டுமிராண்டிக்கட்டம்" எனலாம். நாம் இந்தக் கட்டத்தைக் கடந்து விடவில்லை சோசலிசத்தின் நோக்கம் இந்த கட்டத்தைக் கடந்து சென்று உண்மையான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாகும். சோசலிசம் என்பது ஒருசமூக-அறவியல் இலட்சியத்தை நோக்கி முன்னேறுகின்ற இயக்கமாகும்.
மனிதசமூகம் ஒரு மாபெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது: அதன் கட்டுக்கோப்பு குலைந்துவிட்டது என்று எல்லோரும் கூறுகிறார்கள் இத்தகைய சூழ்நிலையில் தனிநபர்கள் நாங்கள் சார்ந்திருக்கும் சமூகத்தின் மீது அக்கறையில்லாதிருப்பதும், சமூக நலங்களுக்கு எதிராக நடந்து கொள்வதும் இயல்பே.
மேலே கூறியதை விளக்கும் வகையில் என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து ஒருஉதாரணத்தை தருகிறேன் இன்னொரு உலகப்போர் ஏற்படக்கூடிய அபாயத்தை பற்றியும் அத்தகைய போரில் மனித குலம் பூண்டற்றுப் போய்விடும் என்பதையும் அறிவும் பண்பும் அமையப் பெற்ற ஒருவரிடம் விளக்கி கூறினேன. "மனிதகுலம்அழிந்துவிடக்கூடாது என்று நீங்கள் கவலைப்படுவது ஏன்?" என்று அவர் என்னிடம் கேட்டார்.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இந்த மாதிரி அலட்சியமாக யாரும் பேசியிருக்க மாட்டர்கள். தன்னுடைய வாழ்க்கையில் சமநிலையை ஏற்படுத்த முயற்சித்து, அந்த முயற்ச்சியில் தோல்வி கண்ட ஒருவரின் அழுகுரல் என்று இதை கூற வேண்டும். நிராசையும், அவநம்பிக்கையும், சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திக் கொள்ளும் போக்கும் இன்று ஏராளமானவர்களிடம் காணப்படுகிறது. இதற்கு காரணம் என்ன? இதை மாற்றும் வழி என்ன? என்னாலியன்ற வரை இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்ச்சிக்கிறேன்.
மனிதன் ஒரே சமயத்தில் தனிநபராகவும் சமூகப் பிராணியகவும் இருக்கிறான். தனிநபர் என்ற முறையில் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் காத்துக்கொள்ளவும், தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டு தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளவும் பாடுப்படுகிறான். சமூகப்பிராணி என்றமுறையில் மற்ற மனிதர்களின் அங்கீகாரத்தையும் பாரட்டையும் பெறுவதற்கும், அவர்களுடைய சுக துக்கங்களில் பங்குகொள்ளவும் சமூக முன்னேற்றத்துக்கும் பாடுபடுகிறான். இந்த இருவகை தன்மைகளும் அடிக்கடி மோதிக்கொள்ள நேர்ந்தாலும், இவையே மனிதனின் சிறப்பியல்புகளாகும். இவை இரண்டும் எந்தஅளவில் இணைகின்றன் என்பதை பொறுத்தே மனிதனின் அக வாழ்க்கை அமைகிறது.
ஒரு தனிமனிதனுக்கும் மற்றவர்களுக்கும் ஏற்படுக்கின்ற நேரடியான, மறைமுகமான உறவுகளின் மொத்ததையே "சமூக ம்" என்றகருத்து குறிப்பதாக அவனுக்குத் தோன்றுகிறது. ஒரு தனி நபரால் சிந்திக்கவும் தானாக வேபாடுபடவும் முடியும். ஆனால் அவனுடைய உடல், உணர்ச்சி, அறிவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சமூகத்தினால் மட்டுமே முடியும். ஊடை, உணவு, வீடு, மொழி உழைப்பதற்கான கருவிகள் ஆகியவற்றை அவனுக்கு தருவது சமூகமே. அவனுடைய சிந்தனை வடிவங்களையும் உள்ளடக்கத்தையும் நிர்ணயிப்பது சமூகமே. "சமூகம்" என்ற சிறுவார்த்தையில் மறைந்திருக்கும் பல் கோடிக்கணக்கான மக்களின் உழைப்பும் சாதனைகளுமே அவன் வாழ்க்கையை சாத்தியமாக்குகின்றது. இந்த கோடிக்கணக்கான மக்களில் அவனுக்கு முந்திய காலத்தில் வாழ்ந்தவர்களின் பங்கும் உண்டு.
நம் காலத்திய நெருக்கடியின் தன்மையை சுருக்கமாகக் கூற விரும்புகிறேன். அது சமூகத்துக்கும் தனிநபருக்கும் உள்ள உறவு பற்றியதாகும். தனிநபர் அதிகமான அளவுக்கு சமூகத்தை சார்ந்திருக்க வேண்டியிருப்பதை அவன் உணர்கிறான். ஆனால் இது ஒரு இயல்பான பினைப்பு என்றோ, ஆக்கப்பூர்வமான வளர்ச்சி என்றோ, அவன் கருதுவதில்லை. தன்னுடைய நியாயமான உரிமைகளை கட்டுப்படுத்தும் சக்தியாகவே சமூகத்தை கருதுகிறான். மேலும் இன்றைய சமூகத்தில் தனிநபர் போக்குகள் தீவிரம்டைகின்றன: சமூகப் பிணைப்புகள் மேன்மேலும் பலவீனமடைகின்றன. மனிதர்கள் அனைவரும் இத்தகைய படிப்படியான சீர்குலைவுக்கு ஆளாகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் தனிமை சூழ்ந்து, கவலை அதிகரிக்கிறது எளிமையான வாழ்க்கையில் நிறைந்திருக்கும் பரிசுத்தமான் மகிழ்ச்சியை அவர்கள் பெறமுடிவதில்லை. வாழ்க்கை என்பது குறுகியதாகவும் ஆபத்துகள் நிறைந்ததாகவும் இருக்கலாம். ஆனால் மனிதன் தன்னைச் சமுதாயத்துக்கு அர்பணித்துக் கொள்வதன் மூலம்தான், வாழ்க்கையின் நிறைவை பெற முடியும்.
முதலாளித்துவ சமூகத்தின் பொருளாதார அராஜகம்தான் இந்த நெருக்கடிக்கு உண்மையான காரணம். உற்பத்திச் சாதனங்கள் தனிவுடைமையாக இருக்கின்ற சமுதயத்தில் நாம் வாழ்கிறோம். இவர்கள் சட்டபூர்வமாகவே மற்றவர்கள் தங்களுடைய பயனைப் பெறமுடியாதவாறு செய்கிறார்கள். உழைப்புச் சாதனங்களை உடைமையாக வைத்திருக்கின்ற காரணத்தால், இவர்கள் தொழிலாளர்களுடைய உழைக்கும் சக்தியை விலைக்கு வாங்குகிறார்கள். தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும்பொருள் முதலாளிக்குச் சொந்தமாகிறது. அந்தப் பொருளின் மதிப்பு அதிகம், ஆனால் அவனுக்குத் தரப்படுகின்ற ஊதியம் குறைவு. இந்த வேறுபாட்டை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். முதலாளிகளிடையே போட்டியினாலும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் மூலதனம் சிலரிடத்தில் குவிகிறது. இவர்களே அரசாங்கத்தை நடத்துகிறார்கள். சட்டமன்றத்தின் பிரதிநிதிகளை அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுக்கின்றன. ஆனால் அரசியல் கட்சிகளை ஆட்டிப் படைப்பவர்கள் இவர்கள். எனவே மக்கள் பிரதிநிதிகள் பெரும்பாண்மையான ஏழைகளின் பிரதிநிதிகள் அல்ல. மேலும் பத்திரிக்கைகள். வானொலி, கல்வி அமைப்பு ஆகியவற்றை இவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் நிர்வகிப்பதால். மக்களாலும் தங்கள் அரசியல் உரிமைகளைச் சரியான வழியில் பயன்படுத்த முடியவில்லை. மக்களுக்கு தேவையானவற்றை இவர்கள் உற்பத்தி செய்வதில்லை. அதிகமான லாபமே இவர்களது குறிக்கோள். எல்லோருக்கும் வேலை கிடைப்பத்தில்லை. வேலையில் இருப்பவர்களுக்கும் வேலை போய்விடுமோ என்ற பயம் நிரந்தரமாக இருக்கிறது. லாப நோக்கம், தங்கு தடையில்லாத போட்டி ஆகியவையால் உழைப்பு அதிகமான அளவுக்கு வீணாவதையும், தனி நபர்களின் சமூகஉணர்வு சிதைக்கப்படுவதையும் பார்க்கிறோம். இது முதலாளித்துவ சமூகத்தின் படு மோசமான நோய்.
சோசலிச அமைப்பு மூலம்தான் இவற்றை ஒழிக்கமுடியும் என்பதில் எனக்குசிறிதும் சந்தேகமில்லை. சோசலிசப் பொருளாதாரத்தில் சமூக உடைமையாக இருக்கின்ற உற்பத்தி சாதனங்கள் திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்படுகின்றன. சமூகத்தால் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்தி நடைபெறுவதால் வேலை பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஆண்-பெண், குழந்தை-வயோதிகர் அனைவருக்கும் வாழ்க்கைக்கு உத்தரவாதமளிக்கப்படுகிறது. ஒவ்வொரு தனிநபரின் திறமையும் ஊக்குவிக்கப்படுகிறது. இன்றைய சமூகத்தில் பதவிக்கும் பணத்துக்கும் நடைபெறும் போட்டிக்கு பதிலாக, "மற்றவர்களுக்காக நான்" என்ற உணர்வு வளர்க்கப்படும். எனினும் திட்டமிட்ட பொருளாதரத்தில் தனிநபர் பரிபூரணமாக அடிமைப்டுத்தப்படும் அபாயம் இருக்கிறது. அரசியல் பொருளதார சக்தி அளவுக்குமீறி மையப்படுத்தப்படும் பொழுது, அதிகார வர்க்கம் சர்வ வல்லமை படைத்ததாக மாறுவதை எப்படித் தடுப்பது? அதிகாரவர்க்கத்துக்கு எதிராக தனிநபர் உரிமைகளை எப்படிக் காப்பது? சோசலிச அமைப்பு ஏற்படும்பொழுது இது போன்றசமூக-அரசியல் பிரச்சணைகள் தீர்க்கப்பட வேண்டும்.
-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
(Monthly Review, May 1949)
**
முருகன் என்ற பெயரில் ஒரு அன்பர் இந்த கட்டுரையை எனக்கு அனுப்பியிருந்தார்

தமிழ் மக்கள் இசை விழா - விடுதலையின் காலைக் கதிர்

மிழிசை குறித்து ஏற்கனவே பலரும் எழுதியிருக்கிறார்கள். இங்கு தமிழ்மணத்திலும் கூட சில காலம் முன்பு சிற்சில கட்டுரைகள் தமிழிசை குறித்து எழுதப்பட்டன. ஆயினும் இவையெல்லாம் ஏதோ ஆய்வு செய்யும் அறிவு ஜீவிகளுக்கான விசயம் போலும், சாதாரண சனங்களுக்கு அன்றாட வாழ்க்கை தேவைகளுக்கென்று இதில் எதுவும் இல்லை என்பது போலவும் நிலவுகின்ற பொதுக் கருத்துக்கு இந்த கட்டுரைகளில் எதுவும் பதில் சொல்லவில்லை. அதிலும் குறிப்பாக, தமிழிசையையும் கூட யாரும் ரசிப்பதில்லை என்று ஒரு அன்பர் வருத்தப்பட்டு எழுதியிருந்தார். இந்நிலையில்தான் இரண்டு ஆண்டுகள் சுனாமி காரணமாகவும், வெள்ள அழிவு காரணமாகவும் ஒத்தி வைக்கப்பட்டிருந்த ம.க.இ.க வின் தமிழ் மக்கள் இசை இந்த வருடம் மீண்டும் நடைபெற இருப்பது குறித்து அறிவிப்பு வந்தது.

ஒரு கம்யுனிஸ்டு கட்சிக்கு தமிழிசையை மீட்டெடுப்பதை முக்கிய அம்சமாக செயல்படுத்தும் தேவை என்னவாக இருக்க முடியும்? பார்ப்பினிய எதிர்ப்பையும் இதையும் இணைத்து பேசுகிறார்களே எப்படி? கர்நாடக இசைக்கும் தமிழிசைக்கும் அப்படி என்னதான் பிரச்சனை? தமிழசையை மேம்படுத்தும் நடைமுறை தேவை என்ன? இன்றைய திரையிசை கூட கர்நாடக சங்கீத அடிப்படையே கொண்டுள்ளதே? தமிழிசை என்பதை எங்குமே கேட்டதில்லையே? ஆக, வழகத்திலில்லாத ஒரு இசைக்கு விழாவா? இதையெல்லாம் தெரிந்து கொண்டுதான் என்ன ஆகப் போகிறது?

ஒரு முறை மருதையன் ஒரு கட்டுரையில் எழுதியிருப்பார்,
"தனது எதிரியை சரியாக எடை போடாதவன் கூட வெற்றியடையலாம், ஆனால் மிகையாக மதிப்பிட்டு பிரமிப்படைபவன் வெற்றியடைந்ததாக இல்லை".

இங்கோ பெரும் கேவலமாக தன்னை பற்றியே சரியான புரிதல் இன்றியும், எதிரியைப் பற்றியோ மிக மிக அதீதமான கற்பனைகளுடனும் இருக்கிறார்கள் பெரும் எண்ணிக்கையிலானவர்கள். இந்த சமூகத்தையே ஒரு பெரும் மலைப்பாம்பாக வளைத்து பிடித்து பார்ப்பினியம் பண்பாட்டு அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ள சூழலில் இது போன்ற மயக்கம் மக்கள் விரோதிகளுக்கு/பாசிஸ்டு இந்துத்துவவாதிகளுக்கு சாதகமான பொதுக் கருத்துக்களை வலுப்படுத்தி விடுகீறது.

முதலில் நம்மை நமது இசை பண்பாட்டு மரபுகளை அறிவோம், தத்துவம், மருத்துவம், வானவியல் முதல் கலை இலக்கியம் வரை பிறரிடமிருந்து திருடி அதனையே தனது சொந்த கண்டுபிடிப்பாக வரலாற்று புரட்டு செய்யும் பார்ப்ப்னியத்தின் புரட்டுகளில் ஒன்றாகிய இசை புரட்டையும் அறிவோம், பிறகு இதை ஏன் நாம் மீட்டெடுக்க வேண்டும் என்பதை அறிவோம், பிறகு இந்த வருட தமிழ் மக்கள் இசை விழா குறீத்து ஒரு சிறு சித்திரம். இவையெல்லாம் முடிந்தளவு சுருக்கமாக ஆனால் வீச்சாக இருக்குமாறு எழுத முயற்சிக்கிறேன்.




தமிழிசையும், வரலாற்று புரட்டும்:

தென்னிந்தியாவின் இசை மரபாக மகா பெரிய புனித வட்டம் கட்டப் பட்ட கர்நாடக சங்கீதம் வலம் வருகிறது. பிரதமர் முதல் ஜனாதிபதி வரை அரசாங்கத்தின் அனைத்து பிரதிநிதிகளும் தியாகய்யர் விழாவில் கலந்து கொண்டு இந்த வரலாற்று புரட்டுக்கு வலு சேர்க்கிறார்கள். வாசகர் படித்தாலும் படிக்காவிட்டாலும் அனைத்து பார்ப்பன பத்திரிக்கைகளும் பத்து பக்கங்களை ஒதுக்கி ஒரே பாட்டை பற்றீயே வருட வருடம் பல்வேறு விதங்களில் பொருளற்ற வார்த்தை ஜாலங்களின் மூலம் விமர்சனம் என்ற
பெயரில் வக்கரித்து செல்கின்றனர். புரியாத சாதாரண ஜனங்களோ இது ஏதோ உண்மையிலேயே மிகப் பெரிய விசயம் போல் என்று கருதி இதன் அடக்குமுறை வடிவம் உணராமல் அடையாளம் மறுத்து பக்கங்களைப் பிரட்டிச் செல்கிறார்கள்.

இத்தனையும் ஒரு வரலாற்று உண்மையை மறைத்து விட்டு செய்யப்படும் அசிங்கமாக உள்ளது. கர்நாடக சங்கீதம் என்பதே களவாடிய இசை என்பதை மறைத்துவிட்டே இத்தனை புனித ஆன்ம வியாபராமும் நடைபெறுகிறது. கர்நாடக இசை என்பது பார்ப்பனர்களின் வரலாறு படி, இசை சாம வேதத்திலிருந்து பிறந்ததாம். ஏழு கன்னிகள்தான் ஏழு சுரங்கள் என்று சொல்கிறார்கள். சாமவேதம் உதித்த இடம் சிந்து சமவெளி. ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. சாம வேததிலிருந்துதான் இசை உருவானது என்றால் அது வடநாட்டிலும் கருநாடக இசை போலவே இருக்க வேண்டுமே? ஏன் இல்லை. மேலும் சாம வேதத்தில் ஐந்து சுரங்களால் பாடப் பெறுகிறது. கர்நாடக சங்கீதமோ ஏழு சுரங்களில் பாடப் பெறுகிறது.

ஆனால், தமிழ் நாட்டில் 2000 வருடங்களுக்கு முன்பே இசை நன்கு வளர்ந்திருந்தது. நிலத்தை ஐந்து வகையாக பிரித்து ஒவ்வொரு பிரிவிற்க்கும் ஒவ்வொரு இசை வடிவை/உணர்வை வடித்திருந்தனர் தமிழர்கள். பேரகத்தியம் என்ற நூல் இசை, இயல், நாடக தமிழ் குறித்து பேசும் ஆதி நூலாகும். செய்யுட்டுறைக் கோவை என்ற நூல் இசைத் தமிழுக்கான இலக்கணத்தை பற்றிய நூலாகும். உலகிலேயே தொன்மையான இசை இலக்கண நூல் இதுவாகும். இது தவிர்த்து இடை, கடைச் சங்க கால நூல்கள் என இசைத் தமிழுக்கான நூல்கள் பல உள்ளன. தமிழ்நாட்டு இசையைப் பற்றி சிலப்பதிகாரம் முதல் பல்வேறு பௌத்த, சமண நூல்கள் எடுத்துரைக்கின்றன. பண்டைய தமிழிசையின் நுட்பங்களை இந்த நூல்கள் விளக்குகின்றன. அதனை காணுமிடத்து மிக உயர்வான ஒரு இசையாக தமிழிசை வழங்கி வந்துள்ளது தெரிகிறது. இந்த ஆதரங்களிலிருந்துதான் ஆய்வாளர்கள் இசை திருட்டை அம்பலப்படுத்தினர்.

அன்றைய தமிழகத்தில் ஐந்து வகை நிலங்களுக்கும் பெரும் பண், சிறு பண் என இசை வடிவங்கள் ஆகியவை வகுக்கப்பட்டிருந்தன. பண்கள்தான் காலப் போக்கில் இராகங்களாக வளர்ச்சி அடைந்தன. பண் என்பது பாடலின் இசை வடிவம். அதை மெட்டு என்றும் கூறலாம். சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை பாடல்பகுதி வருகிறது. அது முல்லை தீம்பாணி என்று கூறப்படுகிறது. இதற்க்கு சுரம் அமைத்து பாடியுள்ளார் குடந்தை சுந்தரேசனார். இந்த முல்லை தீம்பாணிதான் மோகனராகம் என கர்நாடக சங்கீதத்தில் உள்ள ராகம் ஆகும்.

மரபுகளை திருடும் பார்ப்பனியம், திருடும் பொழுதே அதன் மூலங்களை அழிப்பது/திருத்துவது வழக்கமாகக் கொண்டுள்ளது. இது அதனது வரலாற்று இயல்பாக இருந்துள்ளது. காட்டுமிராண்டி கூட்டமாக இந்தியா வந்த ஆரியக் கூட்டம் இங்கிருந்த நாகரிக சமூகத்தின் கூறுகளை தனதாக்கிக் கொண்டு அந்த கூட்டத்தவரை அழித்து அடிமையாக்கியது போல, சாருவாகம் முதல் சாங்கியம் வரை பல்வேறு தத்துவ மரபுகளை தன்னுள் செரித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் அவற்றீன் மூல நூல்களை திரித்து சிதைத்து அழித்து பேரழிவையும் ஏற்படுத்தியுள்ளனர் இவர்கள். இசையிலும் கூட மரபுகளை திருடிக் கொண்டு மூல நூல்களை ஆயிரக்கணக்கில் அழித்து விட்டனர். ராஜராஜ சோழன் தில்லை நடராசன் கோயிலுக்கு சென்றிருந்த போது அங்கு பூட்டியிருந்த ஒரு அறையை திறக்கச் சொன்னான். அந்த அறை முழுவதும் பழைய ஓலைச்சுவடிகள் அடைக்கப்பட்டு இருந்தன. சிதல் அரித்து அழிந்த போனவை தவிர மீதி கிடைத்தவைதான் தேவாரப் பதிகங்கள். இவற்றின் மொத்த எண்ணிக்கை 1,03,000. கிடைத்தவையோ 791. பௌத்தம் சமணம் வேகம் குன்றிய கட்டதில் இசைத் தமிழை வளர்த்தில் பக்தி இலக்கிய கால தேவரம் முக்கிய பங்களிப்பு செய்துள்ளதை இங்கு குறிப்பிட வேண்டும். பார்ப்பனர்களின் சம்ஸ்கிருத வெறி இது போல பல தமிழ் நூல்களை அழித்துள்ளது.

தமிழகத்தின் பல ஊர் பெயர்களையும், சொற்களையும் சம்ஸ்கிருதமயமாக்கினர் பார்ப்பனர்கள். மறைக்காட்டை வேதாரண்யம்(வேதம்+ஆரண்யம்) என்று மாற்றீயதைப் போலவே தமிழிசையும் கர்நாடக இசை என்று பெயர் மாறியது. மாறீயது பெயர் மட்டுமல்ல அதன் கலைச் சொற்களும், வடிவங்களும் கூட சம்ஸ்கிருதமயமாக்கப்பட்டன. கருநாடக சங்கீதத்தின் 'விநாயகுனி' தமிழிசையின் செந்துருத்திப் பண். தமிழிசையின் 'மீளா அடிமை' கர்நாடக சங்கீதத்தில் 'மத்தியமாவதி'. தமிழிசையின் காந்தார பஞ்சமம் கர்நாடக சங்கீதத்தின் கேதார கௌளம்.

இத்தனையையும் மீறி தமிழிசை வளந்தே வந்துள்ளது. பல தமிழிசை வாணர்கள் ஏராளமான தமிழ் உருப்படிகளை எழுதி குவித்துள்ளனர். அருணகிரிநாதர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாச்சல கவிராயர், ஊத்துக்காட்டு வேங்கட சுப்பையர், கோபால கிருஷ்ண பாரதியார், இராமசாமி சிவன், இராமலிங்க அடிகளார், கவிகுஞ்சாபாரதி, வேதநாயகம் பிள்ளை, திரிகூடராசப்ப கவிராயர், மாம்பழக் கவிச்சிங்க நாவலர், பாரதி, பாரதிதாசன். அண்மைக்காலத்தில் மாரியப்ப சுவாமிகள், சிதம்பரம் ஜெயராமன், திருவாரூர் நமச்சிவாயம், தண்டபாணி தேசிகர், கே.பி. சுந்தராம்பாள், தியாகராஜ பாகவதர்.

தியாகய்யருக்கும் முன்னால் தமிழில் செவ்வியல் இசை இருந்துள்ளது. ஆதி மும்மூர்த்திகளான முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசல கவிராயர் எனப்படும் சீர்காழி மூவர் இருந்துள்ளனர். தேவாரம் பதிகங்கள் இருந்துள்ளன. தமிழ் செவ்வியல் மரபை இசை வேளாளர்களும், ஓதுவார்களும் வளர்த்தனர். இதிலிருந்துதான் தியாகய்யர் தனது இசையை பெற்றார்.

இசை முதல் அனைத்து கலைகளும் உழைப்பின் ஊடாக பரிணமித்து வளர்கின்றன. அதனால்தான் வேறுபட்ட உற்பத்தி முறையை உடைய ஒரு சமூகங்களின் கலை இலக்கிய ரசனை மட்டத்திலும் வேறுபாடு உள்ளது. படகு வலிக்கும் அத்தனை பேரின் சக்தியையும் ஒருங்கினைக்க அவர்கள் எழுப்பும் சத்தம் இசையாகிறது. வயல் வேலையின் களைப்பை போக்க வேலையின் ரிதத்திற்க்கு ஏற்ப்ப ஓசை எழுப்ப அது இசையாகிறது. ஏற்றம் இறைக்க, வரப்பு வெட்ட என்று உழைப்பின் ஊடாக இசை பல்வேறு வடிவங்களை பெறுகிறது. பிரிண்டிங்க் பிரஸ்ஸில் வேலை பார்க்கும் ஒருவனுடைய உணர்ச்சிகள் அனைத்தும் சடக் புடக் என்ற இயந்திரத்தின் ரிதத்துடனும், சல சலக்கும் நகரத்தின் பிற இரைச்சல்களுடனும்தான் அவனுக்கு அறீமுகமாகிறது. அப்படியொரு சத்த அடிப்படையை கொண்ட இசையால்தான் அவனுக்குள் அந்த உணர்ச்சிகளை உருவாக்க முடியும். அப்படிப்பட்ட இசையைத்தான் அவனால் ரசிக்க முடியும். பின் தங்கிய உற்பத்தி முறையில் ஈடுபட்டுள்ள ஒருவரால் முன்னேறிய இசை வடிவங்களை ரசிக்க முடியாது. ஒரு கிராமத்தில் திரும்ப திரும்ப ஒரே கூத்தை அதிகாலை 3:00 வரை நடத்தினாலும் அவனால் ரசிக்க முடியும் ஆனால் ஒரு பத்து நிமிட பாப் இசையை அவனால் ரசிக்க இயலாது. இப்படி உழைப்பின் ஊடாக வளர்ந்து புழக்கத்தில் இருக்கும் நாட்டார் இசையிலிருந்துதான் செவ்வியல் இசை தன்னை புதுப்பித்துக் கொள்கிறது. இது உலகமுழுவதிற்க்குமான உண்மை. இதே போலத்தான் செவ்வியலாக பரிணமித்து புழங்கி வந்த தமிழிசையின் மரபுகளையும், அந்த தமிழசையை களவாடி டாகுமெண்ட் செய்த கர்நாடக இசையின் மரபுகளையும், நாட்டார் இசையின் இசை மரபுகளீலும் காணலாம். வள்ளப்பாட்டு ஆனந்த பைரவியாகவும், ஏற்றப்பாட்டு சங்கராபரணமாகவும் இருக்கிறது.

பார்ப்பனியம் மரபுகளை களவாடி தமதாக புரட்டுவதற்க்கு ஆயிரத்தெட்டு உதாரணங்கள் இருக்கின்றன அவற்றில் ஒன்றுதான் இந்த இசை திருட்டு, கிபி 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சாரங்க தேவர் எனபவர் எழுதிய 'சங்கீத ரத்னாகரம்' என்ற இசை நூலில் தான் தமிழிசை முறையிலான சரிகமபதநி என்னும் ஏழு தமிழ்க் குறீயிடுகளுக்கும் வடமொழி அடிப்படையிலான காரணப் பெயர்களை வலிந்து உருவாக்கி புரட்டலை செய்தார். இதனை அபிரகாம பண்டிதர் தனது கர்ணாமிர்த சாகரம் எனும் நூலில் மிக அருமையாக அமபலப்படுத்தியுள்ளார். இவர்தான் ஆலபனைகளுக்கான அடிப்படைகளை கண்டறிந்தவர். இவர்தான் ராகபுடம் செய்யும் முறையை கண்டறிந்தவர். இதற்க்குப் பிறகு கர்நாடக இசை களவாடிய இசை என்பதை நிறுவி பல ஆய்வு நூல்கள் விரிவாக வெளிவந்துள்ளன. இன்று வரை அதை மறுத்து பேச ஆள் இல்லை. இது என்ன அயோத்தி ராமனா? இங்குதான் படுத்தான், காலைக் கடன்களை முடித்தான் என்பது எங்கள் நம்பிக்கை என்று புருடா விட.

விசயம் இப்படி இருக்க இந்த வரலாற்று உண்மைகள் வெகு சனங்களுக்கு தெரியாத காரணத்தினாலேயே தமிழகத்தின் இசை கர்நாடக இசை என்று சாதித்து வருகிறார்கள் இவர்கள். தமிழிசை வளர்த்த காலத்தில் ஐந்து நிலங்களுக்கும் பறையையே இசைக் கருவியாக வரையறுத்து வைத்திருந்தனர் தமிழர்கள். மேற்கத்திய இசைக் கருவிகளைக் கூட அனுமதிககிறது தியாகய்யர் உற்சவம். ஆனால், தமிழிசையை களவாடிய இந்த திருட்டு கும்பல் தமிழ் வாத்தியக் கருவியான பறையை தியாகய்யர் விழாவில் அனுமதிக்குமா? அதைப் பற்றி பேசுவதற்க்கே அனுமதி கிடைக்காது இந்த ஜனநாயக நாட்டில். தமிழ் நாட்டில் தமிழில் பாடு என்று சொல்வதே தீவிரவாதமாக உள்ளது, போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. தமிழ் மக்கள் இசை விழாவில் தமிழிசையை பற்றீ பேசலாமாம் ஆனால் அது திருடப்பட்டதை பேசக் கூடாதாம் - திருட்டைப் பற்றீ பேசலாமாம் ஆனால் திருடனைப் பற்றி பேசக்கூடாதாம் -அன்றைய நீதிமன்ற உத்தரவு இப்படி வெளிப்படையாக திருடனுக்கு ஆதரவாக நிற்கிறது. சிதம்பரம் கோயிலில் தமிழில் பாடக் கூடாது இன்றைய நீதிமன்ற உத்தரவும் பார்ப்ப்னியத்திற்க்கு ஆதரவாகவே நிற்கிறது. தியாகராயர் உற்சவத்தில் இன்றளவும் தமிழிசைப் பாடபடுவதில்லை. திட்டமிட்டே புறக்கணித்து வருகின்றனர். தியாகய்யர் விழாவில் தமிழில் பாடுவது மட்டுமா நோக்கம்?

அது பிரதான நோக்கமாக இருக்க முடியாது. ஆயினும் அதனை வலியுறுத்துவதில் நமது தன்மானப் பிரச்சனை அடங்கியுள்ளது. நாங்கள் வழிபடுவதென்றுதான் கோயில் கட்டி வைத்திருக்கிறோம். நீங்கள் சாமி கும்பிட வேண்டுமென்றால் தனியாக உங்களுக்கென்று ஒரு கோயிலை கட்டி கும்பிட்டுக் கொள்ளுங்கள் அதை விடுத்து எங்களது கோயிலில் தான் நுழைவோம் என்று தலித்துக்கள் சொல்வது சரியில்லை என்று உயர் சாதியினர் அடாவடித்தனம் செய்வது போலத்தான், தமிழ் நாட்டில் இருந்து கொண்டு, ஒரு கூட்டம் திருடிய இசையையே தான் கண்டுபிடித்த இசை என்று கூறுவதும். அதை விழாவாக கொண்டாடுவதும். அதை மறுத்து தமிழில் பாடச் சொன்னால் நீ தனியாக விழா நடத்தி பாடிக் கொள் என்பதும். திருடன் நமது வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு நமது வீட்டில் திருடிய தொலைக்காட்சியிலேயே படம் பார்ப்பதை நாம் அனுமதிப்போமா? தமிழ் நாட்டிலேயே இருந்து கொண்டு தமிழில் பாட மாட்டோ ம், தமிழ் இசைக் கருவிகளான பறை, தவில் வாத்தியங்களை அனுமதிக்க மாட்டோ ம் என்றூ
பகிரங்கமாக திமிரோடு பேசுவது சுயமரியாதை உள்ளவர்களுக்கு அவமரியாதை இல்லையா? இதனை எதிர்த்து போராடமல் தமிழிசை வளர்ப்போம் என்பது ஈனத்தனமில்லையா? உண்மையில் இந்த பண்பாட்டு அடக்குமுறையை, மோசடியை எதிர்த்து போராடுவதின் ஊடாகத்தான் தமிழிசையை வளர்க்க முடியும். இது வெறும் இசையின் பெருமையையோ அல்லது வரலாறையோ மீட்டெடுக்கும் முகமாக மட்டுமல்ல, மாறாக மறுகாலனியாதிக்க சூழலில் மயங்கி அடிமை மனோபாவத்தில் சுனங்கிப்
போயிருக்கும் உழைக்கும் மக்களின் முகத்தில் அறைந்து சுயவுணர்வடையச் செய்யவும் தேவைப்படுகீறது.




தமிழிசைக்கு தனி விழா ஏன்?

தியாகய்யர் உற்சவத்தை தமிழில் பாடவைப்பதுதான் நோக்கமெனில் தனியாக தமிழ் மக்கள் இசை விழா கொண்டாடுவதில் என்ன நோக்கம் இருக்க முடியும்? தியாகய்யர் விழாவில் தமிழிசை பாடச் சொல்லுவது கர்நாடக சங்கீத புனிதத்தின் உண்மை முகத்தை கிழித்து காட்டுவதற்க்கத்தான், ஒரு பண்பாட்டு திருட்டை அம்பலப்படுத்தத்தான், தமிழகத்தின் சுயமரியாதையை காக்கத்தான். மாறாக தமிழிசையின் வளர்ச்சி என்பதும் அதன் நடைமுறைப் பயன்பாடு என்பதும் தியாகய்யர் விழா மேடையைத் தாண்டிய ஒன்று. அது வெகு சன உழைக்கும் மக்கள் என்ற மிகப் பெரிய மேடையின் ஒரு நிகழ்ச்சியாக இருக்கும் வல்லமை பெற்றது. இந்த வல்லமை தமிழிசையின் என்றும் அழியா அதன் நாட்டார் இசையியல் விழுமியங்களில் பொதிந்துள்ளது. அதனாலேயே தனியாக தமிழிசைக்கான ஒரு விழா தேவைப்படுகிறது.

பார்ப்பனியம் என்பது இந்திய தேசிய இனங்களின் உரிமைகளை ஒடுக்கும் இந்து தேசியம் எனும் தேசிய இனங்களின் சிறைக் கூடத்திற்க்கு தத்துவ பலமளிப்பதாக உள்ளது. இந்த இந்து தேசியத்தை வலுப்படுத்தும் தார்மீக கருத்துக்களூக்கு ஆதர பலமாகத்தான் இந்தியா முழுமைக்கும் ஒற்றை பார்ப்ப்னிய பண்பாட்டு அடையாளங்களை கட்டிக் காக்கும் வேலையை எல்லா பார்ப்ப்னிய வெறீயர்களும் செய்து வருகிறார்கள். இப்படி இந்தியாவின் தேசிய இனங்களனைத்தையும் வலுக்கட்டாயமாக இறூக்கி கட்டி வைப்பதன் மூலம்தான் ஏகாதிபத்தியத்திற்கு இஸ்டம் போல சுரண்ட ஏதுவாக வசதி செய்து கொடுக்கிறது. பார்ப்ப்னியமும், ஏகாதிபத்தியம் இணையும் புள்ளி ஜனநாயக மறுப்பு எனும் இந்த அம்சம் எனில். அவர்கள் தத்துவ ரீதியாக இணையும் வர்ணாஸ்ரம புள்ளி ஒன்று உள்ளது அதனை பின்னொரு கட்டுரையில் விளக்குகிறேன்.

இது உழைக்கும் மக்கள் தங்களைப் பற்றி தங்களது பண்பாடு பற்றி தாழ்வு மனப்பான்மை கொள்வதை உறுதிப்படுத்துகிறது. இதன் மூலம் உழைக்கும் மக்களை கருத்தியல் ரீதியில் தொடர்ந்து அடிமை நிலையில் வைத்திருக்க உதவுகிறது. அனைவரும் அர்ச்சகராவது குறித்து புதிய காலாச்சாரம் பத்திரிகை கருத்துக் கணீப்பு நடத்திய பொழுது, சாதி வேறுபாடின்றி, ஆதிக்க சாதி முதல் தாழ்த்தப்பட்டவர்கள் வரை அனைவரும் பார்ப்பனர்களே புனிதமானவர்கள் பிற சாதியினர் கருவறைக்குள் போவது புனிதமல்ல என்றும் கூறினர். தனது பிறப்பையே கேவலாமாக எண்ணும் கருத்து எப்படி வலுப்பெற்றது? இதே எண்ண அடிப்படையில்தானே பார்ப்ப்னிய பண்பாட்டு அடையாளங்களே சிறந்தது எனும் கருத்தும் வெளீப்படுத்துகிறது. உலகில் மூளையில் சிறந்தவர்கள் இரு இனங்களாம் ஒன்று யூதர்கள் இன்னொன்றூ பார்ப்பனர்கள். இந்த கூற்றை கேள்விப்பாடதவர் இருக்க முடியுமா?

இந்திய மக்களின் பொருளாதார/கலாச்சார விடுதலை என்பது பார்ப்பினியத்தின் வர்க்க அடிப்படையை உணர்ந்து அதனை எதிர்க்கும் போராட்டத்தின் ஊடாக மட்டும்தான் சாத்தியமாகும். இந்தியாவைச் சுரண்டும் ஏகாதிபத்தியத்திற்க்கு உள்ளூரில் களம் தயாரித்துக் கொடுக்கும் பார்ப்ப்னியத்தின் வர்க்க அடிப்படை புரிந்தால் மட்டுமே அதனை எதிர்த்து உழைக்கும் மக்களின்/ஒடுக்கப்பட்டவர்களின் மரபுகளை வளர்த்தெடுப்பதற்க்கான வழி புலப்படும். பார்ப்ப்னியம் குறித்த இந்த பார்வை இல்லாதால்தான் முந்தைய தமிழிசை இயக்கங்கள் அனைத்தும் கர்நாடக சங்கீதத்திற்க்குள் செரிமானமாகி விட்டன. நாட்டுக் கோட்டை செட்டியார்கள் எனும் தமிழகத்து முதலாளீகள் ஆதரித்த தமிழிசைச் சங்கம் அந்த முதலாளிகள் தரகு முதலாளிகளாக வளர்ந்த பிற்ப்பாடு வர்க்க இயல்புகேற்ப்ப கர்நாடக சங்கீதத்துடன ஐக்கியமாகி விட்டது. பண்ணாராய்ச்சி வித்தகர் சுந்தரேசனார் தலைமையில் தொடங்கப்பட்ட தமிழிசை மன்றம் தொடக்கத்தில் தியாகய்யர் விழாவிற்கு போட்டியாக நடந்து பிறகு மெல்ல மெல்ல தியாகய்யர் விழாக்குழுவோடு சங்கமமாகி விட்டது.

கர்நாடக இசை எனும் பார்ப்பினிய ஒடுக்குமுறை கலையின் உள்ளடக்கம் மூட நம்பிக்கை, கடவுள் பக்தி, அடிமை மனோபாவம், பார்ப்பினிய பண்பாடு என்பதாக உள்ளது. மாறாக விடுதலை விரும்பும் மக்களுக்கு அறிவியல் பூர்வமான, சிந்தனை, பகுத்தறிவு ஆகியவற்றை வளர்க்கும் விதமான உள்ளடக்கதோடான கலையே இன்றைய தேவையாக இருக்கிறது. மக்களிசையாக தமிழிசை மாற வேண்டுமெனில் இந்த உள்ளடக்கத்தையே அது சுவீகரிக்க வேண்டும். மாறாக தெலுங்கில் உள்ளதை அப்படியே தமிழில்
பாடுவதால் ஒரு வித்தியாசம் வந்து விடப் போவதில்லை. தமிழிசை இயக்கத்தின் ஆரம்பத்தில் அதில் சேர்ந்த தந்தை பெரியார், பார்ப்ப்னிய உள்ளடக்கத்தை அப்படியே தமிழில் பாடத் துவங்கிய உடன் அதன் ஆபத்தை உணர்ந்து தமிழிசை இயக்கத்திலிருந்து விலகிக் கொண்டார். தியாகய்யர் விழாக்குழு தமிழ் மக்களிசைக்கு குழி வெட்டுகிறது எனில். தமிழிசைக்காரகள் மண்ணை அள்ளிப் போடுகிறார்கள்.

கர்நாடக இசையின் வரலாற்று திருட்டை அம்பலப்படுத்துவது மட்டும் தமிழிசையை வளர்த்து விடாது மாறாக இன்றைய உழைக்கும் மக்களின் தேவைக்கேற்ப்ப அதன் உள்ளடகத்தை புத்துருவாக்கம் செய்வதன் மூலம் மட்டுமே, ஏகாதிபத்திய கழிசடை கலாச்சாரத்தை விற்பனை செய்யும் ஊடக வியாபாரிகளுக்கு மாற்றாக அதனை மக்கள் முன் நிறுத்தி தமிழிசையை நிகழ் கலையாக மாற்றும் பொழுது மட்டுமே அதனை வளர்த்தெடுக்க முடியும்.




பிப் 2007 - தமிழ் மக்கள் இசை விழா

எழுச்சியாக ஆரம்பித்த பேரணியுடன் பிப்ரவரி 24, சனிக்கிழமை தஞ்சாவூரில் தமிழ் மக்கள் இசை விழா ஆரம்பித்தது. திடலின் நுழைவாயிலின் இரு மருங்கிலும் முற்போக்கு புத்தக நிறுவனங்கள் கடைகள் போட்டிருந்தனர். இந்த முறை விழாவின் உள்ளடக்கமாக காலனியாதிக்க இந்தியாவின் உண்மையான விடுதலை போராட்ட மரபுகளை முன்னிறுத்தும் வகையில் கருத்தரங்க தலைப்புகளும், கலை நிகழ்ச்சிகளும் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தன.

பெரும்பாலான உழைக்கும் மக்களின் வாழ்க்கை மிகப் பெரிய கேள்விக் குறியாக்கியுள்ள உலகமயத்தின் பயன்களை நுகர்வோரின் அடிமை நிலையை/சுயமரியாதையின்மையை குத்திக்காட்டுவதாகவும், விடுதலைப் போரின் வீரமரபுகளான தென்னகத்தின் முதல் சுதந்திரப் போரையும், திப்புவையும், பகத்சிங்கையும் அவர்களின் உண்மையான வடிவத்தில் அறீமுகப்படுத்தும் விதமாகவும், காலனிய விடுதலைப் போராட்டத்தின் வீரத்திலிருந்தும், தியாகத்திலிருந்தும், துரோகத்தில்ருந்தும் - நாட்டு விடுதலையை விரும்பும் நாம் பாடங்கள் கற்றுக் கொண்டு அந்த மரபுகளை மறுகாலனியாதிக்கத்திற்க்கு எதிரான உரமாக இடவேண்டிய தேவையை வலியுறுத்தும் விதமாகவும் தலைப்புகளும் கலை நிகழ்ச்சிகளும் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தன. விடுதலை வீரர்களையும் அவர்களின் மரபுகளையும் நினைவுபடுத்து/அறிமுகப்படுத்தும் முகமாக பேரா. இராசைய்யன், தலக்காடு சிக்கே ரங்க கவுடா, பேரா சமன்லால் ஆகியொருக்கான கருத்தரங்க தலைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன, இந்த மரபுகளை அறிந்து கொண்ட உழைக்கும் வர்க்கம் இதனை பயன்படுத்த தடையாக இருக்கும் மறுகாலனியாதிக்க பண்பாட்டு சீரழிவுகளான அடிமைத்தனத்தையும், பிழைப்புவாதத்தையும், கழிசடைத்தனத்தையும் குத்தி கொதறி ஒவ்வொருவரையும் குற்றவுணர் கொள்ள செய்யும் விதமாக தோழர் துரை. சண்முகத்திற்க்கும், மருதையனுக்கும் தலைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன. கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் நிகழ் கலையாக உழைக்கும் மக்களிடம் புழங்கி வரும் பல்வேறு நாட்டார் கலை வடிவங்களுக்கு புரட்சிகர உள்ளடக்கம் கொடுக்கும் வகையிலான நிகழ்ச்சிகளை ஏற்ப்பாடு செய்திருந்தனர்.

தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து குடும்பத்துடன் திரண்டு வந்திருந்த உழைக்கும் மக்களால் திருவள்ளுவர் திடல் நிரம்பியிருந்தது. செஞ்சட்டை தோழர்கள் ராணுவ அணிவகுப்பில் விழா நடைபெற்ற திடலில் ஒழுங்கை பராமரித்தனர். போலீசாரோ மகஇகவின் விழாக்கள் குறித்த அனுபவம் உண்டு என்பதால் கவலையின்றி நாற்காலிகளில் அமர்ந்து பொழுதை போக்கிக் கொண்டிருந்தனர். பதினைந்தாயிரத்துக்கும் மேல் திரண்டிருந்த கூட்டத்தில் செஞ்சட்டை தோழர்கள் ஒவ்வொரு வரிசையிலும் தூங்குபவர்களை எழுப்பிவிட்டும், செல்பேசிகளை உபயோகிப்பதை கட்டுப்படுத்தியும், பேசுபவர்களை கண்டித்தும் ஒழுங்கை நிலைநாட்டிய பாங்கும், அதில் இருந்த நியாயத்தை உணர்ந்து கட்டுப்படுடன் நடந்து கொண்ட மக்களும் பெருவாரியான மாற்று அரசியல் கருத்துக் கொண்டவர்களுக்கு முற்றிலும் ஆச்சரியகரமான விசயமாக இருந்திருக்கும். மக்கள் சர்வாதிகாரம் குறித்தும், புரட்சிகர ஜனநாயகம் குறித்தும் சேறு வாரி வீசுபவர்கள் இது போன்ற அரங்குகளில் அது நிலைநாட்டப்படும் அழகை கண்ணுற்றால் தங்களது பிற்போக்கு மயக்கத்திலிருந்து தெளிவுபெறும் அபாயம் உள்ளதை நான் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

திடலின் உள்ளே மக்கள் உட்காரும் இடத்திற்க்கு ஒரு பக்கத்தில் மிக அருமையாக விடுதலைப் போராட்ட காட்சிகள் ஓவியங்களாக வடிக்கப்பட்டிருந்தன, சீறிப்பாயும் குதிரைகளும், புகை கக்கும் துப்பாக்கிகளும், பீரங்கிகளும் மிக அருமையாக சித்த்ரிக்கப் பட்டிருந்தன. இன்னொரு பக்கம் சின்ன மருதுவும், தீரன் சின்னமலை, திப்பு, கட்டபொம்மன் போன்றோர் நம்மையே முறைத்துப் பார்த்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர். என்னடா எங்களது தியாகத்தை விழா வைத்து நியாபகப்படுத்தும் இழி நிலையிலா இந்த நாடு உள்ளது? கேவலம், எமது மரபுகளை பற்றி விடுதலை வேண்டி காத்திருக்கும் நாட்டிற்க்காக அணி திரள்வாய் என்பது போல அந்த பார்வை நம்மை நாலா பக்கமிருந்தும் உறுத்தியது. அதே பக்கத்தில் புகைப்படக் கண்காட்சியில் கோக் ஆலை எதிர்ப்பு போராட்ட சமயத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த. மனதிலிருந்து மறந்து போன பல சம்பவங்களை திரும்ப கொணரும் வகையில் அந்த ஓவியங்கள் சிந்திக்க தூண்டுவதாக இருந்தது. நவீன ஓவியம் என்ற பெயரில் கண்ட கிறுக்கல்களையும் கடைபரப்பும் கலை இலக்கிய வியாபாரிகள் மத்தியில் புரட்சிகர கலை இலக்கியத்தின் வலிமைக்கு சான்று பகர்வதாக இந்த ஓவியக் கண்காட்சி இருந்தது.

இனி தோழர் கோபால் என்பவரின் வார்த்தைகளிலேயே தமிழ் மக்கள் இசை விழா கருத்தரங்கு குறித்த வர்ணனைகளை தருகிறேன்,

*****************
தென்னிந்தியக்கிளர்ச்சி 1800-01, முதல் சுதந்திரப்போர்'- என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் பேசுவதாயிருந்த பேரா. இராசைய்யன், என்ன நினைத்தாரோ, தனக்கு அவ்வளவாய் வராத தமிழிலேயே பேசினார். விடுதலைக்கு போராடிய வீரர்கள் பற்றிய நிறைய வரலாற்றுச்செய்திகளை அடுக்கினார். முதல் விடுதலைபோர் தென்னகத்தில் தான் நடந்ததென்று அறிவிக்கக்கோரி சென்னை நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார். விட்டால் திப்புவையே கூட்டி வந்திருப்பார், சாட்சி சொல்ல. பேராசிரியர் என்பதை நிரூபித்துக்கொண்டிருந்தார். புள்ளிவிவரங்கள் எதுவும் இப்போது நினைவில் இல்லை.

தலகாடு சிக்கே ரங்க கௌடா, திப்பு பற்றி நாம் அறிந்திராத நிறைய தகவல்களை கன்னடத்தில் சொன்னார். மொழிபெயர்ந்த சொற்கள் வீரியத்தை கொஞ்சம் தொலைத்திருந்தாலும், மறைக்கப்பட்ட பல தகவல்கள் கிடைத்தது. அந்த காலத்திலேயே நியாயமான நிலப்பங்கீடுகளைச் செய்திருக்கிறார், . தலித்களுக்கும் நில உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. அரண்மனைகளில் ஆடல் பாடல் கூத்துகளை அறவே வெறுத்து 'சந்திரனே சூரியனே' எனப்பாடி பைசா பார்க்க நினைத்த பார்ப்பனர்களை நைசாகத் துரத்தியடித்திருக்கிறார். அப்பவே புரளி புலம்ப ஆரம்பித்து விட்டிருக்கிறார்கள். திப்பு ஆட்சியில் அரசு விழாக்கள் சிக்கனமாய் நடந்திருக்கின்றன. தவறுகள் செய்த விவசாயிகளுக்கு சிறைத்தண்டனை கிடையாது, மாறாக மரக்கன்றுகளை நடச்சொல்லி பணித்திருக்கிறார். ஆச்சரியமாயிருந்தது.

ப்ரான்சிலிருந்து நீராவி எந்திரம் வாங்கமுயன்றது, உயிரித்தொழில்நுட்பத்தை ஊக்குவித்து, உளவுச்செய்திகளை விரைவாக கொண்டு வரும் திறமையான புறாக்களை உருவாக்கியது. சிவப்புச்சீருடையணிந்த வெள்ளையனின் படையாட்களை காளைப்படைகொண்டு காவு வாங்கியது, பட்டுபுழு வளர்க்கும் தொழிலை அறிமுகப்படுத்தியது என இன்னும் பல சாதனைகளை அடுக்கிகொண்டே போனார் ரங்க கௌடா. திப்பு, தொழில்புரட்சித்தருவை தண்ணீர் விட்டு வளர்த்திருக்கிறார். அதில்தான் அந்த வீணாய்ப்போன வெள்ளையனும் பாழாய்ப்போன பார்ப்பனியனும் வானத்தை வெறித்துக்கொண்டு சிறுநீர் கழித்திருக்கிறார்கள். திப்பு சரிந்ததும் முதல் வேலையாய் அவரது நூலகத்தைச் சூரையாடி தொழில்நுட்பக்குறிப்புகளைக் களவாடியிருக்கிறார்கள், வெள்ளையர்கள்.

தோழர். துரை சண்முகம் நையாண்டியாக சமூகசீர்கேடுகளை இடித்துரைத்தார். கெர்லாஞ்சியில் ஒரு இளம்பெண்ணும் அவளது தாயும் நிர்வாணப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்களே, அப்போது வாய்மூடிய வாசகன் ஒருவன், 'முற்றும் துறந்த முதிர்கன்னி' ஷில்பா ஷெட்டி அவமானப்படுத்தப்பட்டார் என்று வருத்தப்பட்டு பத்திரிகைக்கு கடிதம் எழுதுகிறானே, அவன் கையை உடைத்தால் என்ன?- கொதித்துப் போய் பேசினார். சம்பந்தப்பட்டவர்கள் சிக்கியிருந்தால் புத்தூருக்கு பயணமாயிருப்பார்கள்.

கெர்லாஞ்சி போன்ற சம்பவங்களை பத்திரிக்கைகள் இருட்டடிப்பு செய்கின்றன. அவனுக்கு முக்கியமான செய்தியாகப்படுவது ' இந்த வயதிலும் ரஜினி சுறுசுறுப்பாக இருக்கிறார்'. யாருக்குய்யா வேணும் இது? வெள்ளையனுக்கு எதிரான போரை சைகைகள் மூலமாகவே நடாத்திய ஊமைத்துரையின் சுறுசுறுப்பை நீ என்னவென்பாய்?? ஆறே நாளில் கோட்டையை எழுப்பிய பாஞ்சாலங்குறிச்சி மைந்தர்களின் சுறுசுறுப்பை நீ எப்படி மறந்தாய். கைத்தட்டல் கூரையைக் கிழித்தது.

'கேப்டன்' விஜயகாந்த் என்று சில கேனையன்கள் கூவித்திரிகிறான்கள். உரச்சாக்கு போல் இருக்கிறான், கேப்டனாம். வெள்ளைய ஏகாதிபத்தியத்திற்க்கு எதிராக மக்களிடம் நிதி திரட்டி சுதேசி கப்பல் விட்டானே வ. உ. சி, அவந்தானையா உண்மையான கேப்டன். தென்னாப்பிரிக்க இந்தியன் ஒருவன் வ.உ.சி. யிடம் சேர்ப்பிக்கச் சொல்லி காந்தியிடம் கொடுத்த 5000 ரூபாய் இன்று வரை கொடுக்கப்படவில்லை.இந்த துரோகிகள் தானேய்யா நமது நிஜ சுதந்திரத்தின் சங்கை அறுத்தவர்கள். பாலஸ்தீனத்தில் தமது நாட்டையும் உயிரையும் பறிக்கவரும் பீரங்கியை நோக்கி செருப்பைக்கழற்றி காட்டினானே அந்தப் பொடிச் சிறுவனின் வீரம் இந்த துரோகிகளிடம் இருந்ததா?

கோக்கையும் கோக்கை குடிக்கும் கோமாளிகளையும் ஒருபிடிபிடித்தார். இப்பத்தான் தெருமுக்கிலெல்லாம் இளநீர் கிடைக்கிறதே, வாங்கிப்பருகினால் உடம்புக்கும் நல்லதுதானே என்றுகேட்டால், கோக்கும் பெப்சியும் ஈசியாக கிடைக்கிறது என்கிறான். ஈசியாகக் கிடைத்தால் பினாயிலையும் குடிப்பாயா? காமாலைக்கு கறும்புசாறையும் இளநீரையும் தனேய்யா குடிக்கச் சொல்கிறார்கள். 200 மி.லி. கொக்ககோலாவையா குடிக்கச் சொல்கிறார்கள். நாம் அனைவருமே இளநீர் சாப்பிட ஆரம்பித்தால் எத்தனை விவசாயிகள் பிழைத்துக்கொள்வர்கள் என்று யோசித்தீர்களா??

தோழர் பேசிமுடிக்கையில் இடி ஓய்ந்தது போலிருந்தது. பேரா. சமன்லால் ஆங்கிலத்தில் 'பகத் சிங் மற்றும் அவர் தோழர்கள் பற்றிய ஆவணங்கள்' குறித்து பேசினார். மொழிபெயர்க்க அழைக்கப்பட்ட தோழர். அரசு சரியான தேர்வு.பகத்சிங் பற்றி அரசு பேசி நிறைய கேட்டிருந்ததால், சமன்லால் உரையின்போதுபோது கொஞ்ச நேரம் தஞ்சை கோவிலுக்கு இளைப்பாறச் சென்றுவிட்டேன். ராசராசன் கட்டிய தஞ்சையின் கொவிலையும் மாடமாளிகைகளையும் பார்த்தபோது துரை சண்முகம் பேசியதுதான் நினைவில் வந்தது. தஞ்சை பெரியகோவில் பெருமைகள் கிடக்கட்டும், அந்த கோவில்கட்டும் பணியில் கோபுரத்தின் மீதிருந்து கீழே வீழ்ந்த தொழிலாளர்கள் எத்தனை பேர்? தஞ்சையை சுற்றி இராசராசன் அவன் வைப்பாட்டிகளுக்கு கட்டிய மாளிகைகளும் சத்திரங்களும் அவமானச்சின்னங்கள் தானே?


தஞ்சை பூங்காவில் ஒய்வெடுத்துவிட்டு பந்தலுக்குத் திரும்பியபோது தோழர் மருதையன் பேச ஆரம்பித்திருந்தார். எப்போதும் போல எதிரிலிருப்போரின் தலையை நிமிர்த்தி 'உங்களைத்தான் கேட்கிறேன்' என்று கணை தொடுத்துக்கொண்டிருந்தார்.

ரிலையன்சு போன்ற உள்நாட்டு களவாணிகளுக்கும் ,வால்மார்ட் போன்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கும் சில்லறை வணிகத்தின் கதவை திறந்துவிட்டிருக்கிறது அரசு. ரிலையன்சு கடையில் 'சீப்'பாகக் கிடைக்கிறதாம். முலாயம் சிங் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை இலவசமாக கொடுத்தால் ஏன் அவன் 'சீப்'பாக கொடுக்கமாட்டான். என்ன ஒரு பத்து ரூபாய் குறைத்து கொடுத்து விடுவானா? நீங்கள் யோசிக்கவேண்டும்.

உங்கள் தெருமுனையில் உள்ள அண்ணாச்சிக் கடையில் கவனித்திருப்பீர்கள். அந்த கடையில் ஒரு குடும்பமே உழைத்துக்கொண்டிருக்கும். காலை நான்கு மணிக்கு சந்தைக்கு சரக்கெடுக்க செல்வதில் ஆரம்பிக்கிறது அவனது நாள். பகல் முழுதும் உழைத்துக் களைத்து அவர்கள் உறங்கச் செல்லும் போது இரவு பன்னிரெண்டாகிறது. இவ்வளவு உழைக்கிற அந்தக் குடும்பம் கோடிகோடியாக சேர்த்து விட்டதா என்ன?? யோசியுங்கள்.. அந்த அண்ணாசிக் கடையில் எத்தனை நாள் கடன் வைத்திருக்கிறீர்கள்? எத்தனை முறை 'புளி சரியில்லை' என்று சண்டை போட்டிருப்பீர்கள்? எத்தனை விசேஷங்களுக்கு அழைப்பு விடுத்திருப்பீர்கள்?? இன்று விலை மலிவாக கிடைக்கிறதென்று கோடிகளைச் சேர்த்துவைத்திருக்கிற அந்த கொள்ளையர்களுக்கு இன்னும் கொஞ்சம் கொட்டிக்கொடுக்கப் போகிறீர்களா? விலை அதிகமானாலும் எளியவனான நம்மவனையே ஆதரிக்க வேண்டுமென்ற எண்ணம் நமக்கு எழ வேண்டாமா?

ஐ.டி கம்பெனிகளின் படையெடுப்பு ஆரம்பித்திருக்கிறது. முப்பதாயிரம் நாப்பதாயிரம் என கொடுக்கிறானே நல்லதுதானே என்று கேட்பீர்கள். அங்கு வேலை செய்கிறவன் ஒரு நாளைக்கு பதினாறு மணிநேரம் உழைக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதை முன்னேற்றம் என்று கூறுவீர்களா? ஒரு எந்திரத்தையும் அதனைப் பயன்படுத்துவதையும் கற்றிருத்தல் உண்மையான அறிவியல் முன்னேற்றமில்லை. அடிப்படை அறிவியலைக் கற்று அதில் ஏற்படுத்துகிற முன்னேற்றம் தானே உண்மையான முன்னேற்றம்! சீனாவும் வங்காளதேசமும் இந்த ஐ.டி போட்டிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். வீட்டை விட்டுப் பிரிந்து வந்து வேலை செய்வோருக்காக அவரவர் ஊரிலேயே ஐ.டி. கம்பெனிகளை ஆரம்பிக்கப் போகிறார்களாம். எதற்கு?? இன்று சம்பளமாய் கொடுத்துக்கொண்டிருக்கிற நாப்பதாயிரத்தை நாலாயிரமாகக் குறைக்கத்தான்.

பேரா. சமன்லால் பேசும்போது விடுதலை வீரர்களின் வீர மரபைப் பற்றிய கூட்டத்திற்க்கு இவ்வளவு கூட்டம் கூடியிருப்பது பெருமையாக இருக்கிறதென்று சொன்னார். உண்மையில் பெருமைப் படுகிறோமா நாம்? அந்த வீரர்களின் பெருமைகளைப் பேசித்தான் தெரியப்படுத்தவேண்டும் என்கிற அவலநிலையில் அல்லவா நாம் இருக்கிறோம். உண்மையான சுதந்திரத்திற்காக போரிட்டு மாய்ந்தவர்களின் குடும்பத்தினரின் இன்றைய நிலை என்ன? அவர்கள் கட்டிய கோட்டைகள் தரைமட்டமாக்கப்பட்டு அலங்கோலமாய் காட்சியளிக்க தொண்டைமானின் மாளிகையும் எட்டப்பனின் அரண்மனையும் இன்றும் கம்பீரமாய் இருப்பதன் காரணம் தெரிகிறதா??

இன்றும் தஞ்சை கோவிலில் சரபோஜியின் வாரிசுகள் தான் பரம்பரை தர்மகர்த்தாக்கள். குடியரசு தினங்களில் ஆர்காட் நவாபின் வாரிசுகள் மேடையேறுகிறார்கள், சிறப்பு விருந்தினர்களாய். நம் சுதந்திரத்தை கருவறுத்த கயவர்களான தொண்டைமான்களும், எட்டப்பன்களும், சிந்தியாக்களும், பேஷ்வாக்களும், நவாப்களும் இன்று ஆட்சிஅதிகாரத்துடன் சுற்றித்திரிகிறார்களே, தெரியவில்லையா உங்களுக்கு எப்படிபட்ட விடுதலையை நாம் பெற்றிருக்கிறோம் என்று?

'மகாபிரபுவே, நான் நெடுநாளாய் பார்த்துவந்ததில் ப்ரெஞ்சுக்காரர்களோ திப்புவோ உங்களை எதிர்த்து வெற்றிபெறமுடியவில்லை. ஆனால் கம்பெனியை நம்பி வாழ்ந்தோர் பேரும் புகழும் பெற்றிருக்கின்றனர். இந்தக் காட்டு நாய் சின்ன மருது எதற்க்காக போராடுகிறான் என்றே தெரியவில்லை.' - என்று தனது கும்பினி எசமானுக்கு எழுதுகிறான் தொன்டைமான். அவனுக்கு நிஜமாகவே புரியவில்லை. வெள்ளையன் ஆண்டால் என்ன, மாளிகையும் மனைவிகளும் பத்திரமாய் இருக்கின்றனரே என்ற பிழைப்புவாதத்தில் ஊறிப்போயிருக்கிறது அவன் இரத்தம்.


தொண்டைமானுக்கு நிஜமாகவே புரியவில்லை. நமக்குப் புரிந்திருக்கிறதா? பன்னாட்டு நிறுவனங்களை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்களா? உங்களுக்கு இருநூறு மி.லி. தொண்டைமான் இரத்தம் ஏற்றப்பட்டிருக்கிறது. நமது விவசாய நிலங்களை ஆக்கிரமித்தால் என்ன, வேலை கொடுக்கிறானே, ஆயிரமாயிரமாய் சம்பளம் கொடுக்கிறானே என்று சாதிப்பீர்களானால் உங்கள் இரத்தத்தில் முன்னூறு மி.லி. எட்டப்பனுடையதாக இருக்கிறது.

திருச்சிப் பிரகடனத்தில் சின்ன மருது சரியாகக் கூறுகிறான் - இந்த ஈனர்களால் இப்போது ஆளப்படும் பகுதிகளிலெல்லாம், மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. இப்படித் துன்பப்படுவது தெரிந்த போதிலும் எக்காரணங்களினால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தாராயவும் புரிந்துகொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர்.

தோழர் மருதையன் தன் உரையை முடித்ததற்கும் கலைநிகழ்ச்சிகள் தொடங்குவதற்குமிடையேயான அரைமணிநேர இடைவெளி சுயபரிசோதனைக்காகவே விடப்பட்டிருக்கவேண்டும். திருவள்ளுவர் திடல் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது.

'ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்து விடவேண்டும்... இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்... இதை ஏற்றுக் கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி மயிருக்குச் சமமானது... இதனை ஏற்றுக் கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்குத் தன்னுடைய மனைவியைக் கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள். எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!.... '-என்ற மருதுவின் திருச்சிப் பிரகடனம், திருவள்ளுவர் திடல் பிரகடனமாக எதிரொலித்துக் கொண்டிருந்தது.-

*****************

நாகரீக கோமாளி திரைப்பட இயக்குனரின் உரைக்கு பிறகு வாத்தியங்களின் பிளிரலுடன் ஆரம்பித்தது கலை நிகழ்ச்சிகள். முதல் நிகழ்ச்சியாக வீர சோழ தப்பாட்ட குழுவினரின் சூறாவளி கிளப்பும் தப்பாட்டம் அரை மணி நேரத்திற்க்கு கூட்ட அரங்கை கட்டி போட்டு விட்டது. தப்பாட்டம் முடிந்த பொழுது இடி மின்னலுடன் கூடிய ஒரு கோடை மழையின் அனுபவத்தை உணர முடிந்தது. வசந்தத்தின் இடி முழக்கம் இப்படித்தான் இருக்குமோ என்று எதிரிகளுக்கு கிலியூட்டும் வகையில் கலை நிகழ்ச்சியின் ஆரம்பம் இருந்தது. திப்புவின் புகழ் பாடும் சுபி இசை மரபிலான ஒரு இசைப்பாடல் பாடப்பெற்றது. திப்புவின் வீரத்தை கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்த கார்வாலி சிப்பாய்களின் இசை கார்வாலி இசையாக இசைக்கப்பட்டது. இஸ்லாமிய மரபுடன் இசைக்கப்பட்ட அந்த இசை காதுகளில் இன்னும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது. முற்றிலும் புதுமையானதொரு அனுபவமாக அந்த இசை இருந்தது. பல்வேறு அளவுகளிலான தோல் வாத்தியக் கருவிகளுடன் பக்கீர்கள் எனப்படுபவர்கள் டம் டம் என்று தட்டிக் கொண்டு திப்புவின் புகழை புரியாத மொழியில் பாடினர். ஆயினும் அன்றைக்கு அவர்களிடம் இருந்த இசை மரபை விடுதலை போரின் வேள்விக்கு பயன்படுத்தினர் என்று பார்க்குமிடத்து மொழி ஒரு தடையாக இருக்கவில்லை. இதே கைகள் மக்களுக்கு புரிந்த மொழியில் பாடல் இசைத்து நாட்டு விடுதலைக்கு போராடும் என நம்பிக்கை தெரிவித்து பாராட்டினார் மகஇக மைய கலைக்குழு பாடகர் கோவன். இடையில் நடத்தபெற்ற நாடகம் தொய்வை ஏற்ப்படுத்தும் வகையில் இருந்தது ஆயினும் இது ஒட்டு மொத்த நிகழ்ச்சி ஏற்ப்படுத்திய தாக்கத்துடன் ஒப்பிடும் பொழுது கடலில் கரைத்த பெருங்காயமாகவே இருந்தது.

பிறகு, மருதிருவரின் புகழ் பாடும் மருதிருவர் கும்மி இசைக்கப்பட்டது.
"காளையார் கோயிலு காட்டுக்குள்ளே
ரெண்டு கன்னி கழியாத மாமரங்க
அது பூக்கவுமில்லே காய்க்கவுமில்லே
மருதிருவர் இன்னும் சாகவில்ல..."

என்ன மெட்டில் பாடுவது என்று தெரியவில்லையா? இளையராஜாவின் இசையில் வெளிவந்த 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களேன்' என்ற பாடலை பாடாத வாய் இன்றளவும் தமிழகத்தில் கிடையாது. அந்த மெட்டு கும்மி பாடலிலிருந்து எடுத்தாளப்பட்டு ஹார்மொனி வடிவம் கொடுக்கப்பட்டதுதான். பிறகு அனைவரும் எதிர்பார்த்த மகஇகவின் மையக் கலைக்குழுவின் நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. சமீப காலமாகவே ஹார்மொனி இசை வடிவங்களை முயற்சி செய்து வரும் இவர்கள் அதில் மிக அருமையானதொரு மேடை நிகழ்ச்சியை இந்த முறை நிகழ்த்தி காட்டின. ஆண் குரல் முடியும் தருவாயில் பெண்ணின் ஹம்மிங்குடன் புல்லாங்குழல் இணைந்து மிக அற்புதமான ஒரு இசை அனுபவத்தை வழங்கினார்கள். பாடல்களுக்கேற்ற மேடை நடனம் அல்லது அடவுகள் நவீன நாடக உத்திகளை புரட்சிகர கலை வடிவங்களுடன் இணைத்து வழங்கும் நல்ல முயற்சியாக இருந்தது. உழைக்கும் மக்களின் ஆக்ரோசத்தையும் வெஞ்சினத்தையும் வார்த்தைகளிலும், வாத்தியக் கருவிகளிலும், நடனத்திலும் வெளிப்படுத்தியது மகஇகவின் நிகழ்ச்சிகள். சிறுவர்களின் பாடல்கள் மிகச் சிறப்பாக இருந்தது, சிறார்களின் தடுமாறும் மழலையில் புரட்சிகர பாடல்களை கேட்ப்பது ஒரு நல்ல அனுபவமாக, கொண்ட கொள்கைக்கு நாம் நேர்மையாக இருக்க வேண்டும் ஏனேனில் நம்மை அடியொற்றி ஒரு சிறு தலமுறை உருவாகி வருகிறது அவற்றின் நம்பிக்கைகளை வெம்ப வைப்பதாக நமது நடவடிக்கைகள் இருந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கை உணர்வை வூட்டுவதாக இருந்தது.

தூக்கு மரம் - இசைச் சித்திரம் என்ற மேடை நிகழ்ச்சி வடிவத்தில் விடுதலைப் போராட்ட வீரர்கள் நமக்கு விட்டுச் சென்று செய்தி வசனங்களின்றி - இசை மற்றும் மேடைச் சித்திரம் வடிவத்தில் வழங்கப்பட்டது. முற்றிலும் புதியதொரு முயற்சியாக பார்ப்பவரை முழுவதும் கட்டியிழுக்கும் ஆற்றலுடன் இந்த நிகழ்ச்சி நடந்தேறியது. தமிழ் மக்கள் இசை விழாவிற்க்கு மகுடம் சூட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி இருந்தது. ஒரு சாதாரண வீரனாக போர்களத்தில் உயிர் துறந்த திப்புவை இரவு நேரத்தில் வெள்ளையர்கள் தேடி கண்டு பிடித்து மடியில் சாய்த்து உறுதிப்படுத்தும் ஒரு ஓவியம் அன்றைய பிரிட்டிஸ்க்காரர்களால் வரையப்பட்டது. அதை கண்ணுறும் யாரும் மனங்கலங்கிப் போகும் ஆற்றல் படைத்த அந்த ஓவியத்தை ஒரு திரைச் சித்திரத்தின் வலிமையுடன் மேடையில் அரங்கேற்றினர் மகஇக குழுவினர்(இந்த நிகழ்ச்சி ஆக்கத்தில் பங்களித்தவர்கள் - மையம் கலைக்குழுவினர்). திப்புவை தேடி வரும் வெள்ளையர் மேடையில் நுழையும் பொழுது அதிரும் இசை நமது மனதில் இனம் புரியாத உணர்வுகளை ஏற்ப்படுத்தியது, கையில் தீப்பந்தத்துடன் சிகப்பு நிற ஒளி பின்னணியில் அவர்கள் குவிந்து கிடக்கும் பிணங்களை பிரட்டிப் போட்டு திப்புவை தேடி கண்ணுறும் பொழுது திப்புவின் மீது ஒளி வெள்ளம் பாய்கிறது. தீப்பந்தம் பிடித்திருக்கும் ஒரு வெள்ளையனின் மடியில் தலை சாய்ந்து கிடக்கிறார் திப்பு. அந்த ஓவியம் கண்முன்னே உயிர் பெற்று நிற்க்கிறது. அல்லா... என்று ஒரு குரல் துயரச் சுவையுடன் ஒலிக்கிறது, மனது பாரமாகிறது. என்ன கைமாறு செய்யப் போகிறோம் இந்த மன்னர் குலம் சாரா புரட்சிக்காரர்களின் தியாகத்துக்கு என்ற கேள்வி மனது முழுவதும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது. இதே போல வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்களின் வீர தியாகம் உணர்வு பொங்க இதே போல சித்தரிக்கப்பட்டது. மருது சகோதரர்கள் தூக்கில் தொங்கிய பிற்ப்பாடு அந்த ஒற்றை தூக்கு ஊசலாடுகிறது. மேடையின் பின்னணி இருட்டாக நம்மை பயமுறுத்துகிறது. தூக்கு கயிறின் வட்ட வடிவின் மீது ஒளி வெள்ளம் பாய்கிறது. ஒரு பெண்ணின் குரல் சோகம் ததும்ப பாடுகிறது. "காளையார் கோயில் காட்டுகுள்ளே ரெண்டு கன்னி கழியாத மாமரங்க....." தட்டச்சு செய்ய வார்த்தைகளின்றி தடுமாறுகின்றன எனது விரல்கள். கணிணி திரையின் மேல் எனது கண்ணீர் திரையாக படர்கிறது. இது கண்ணீர் விடுவதற்க்கான காவியம் அல்ல என்று என் உள்மனம் என்னை எச்சரிக்கிறது. பகத்சிங்கின் தத்துவ தரிசனமும், கோர்ட் மேடையையே தனது பிரசங்கமாக பயன்படுத்திய அந்த வீரமும் தூக்கு மேடையை ஒரு துச்சமாக கருதிய தியாகமும் காவியமாக எந்தளவுக்கு வீச்சாக மேடையில் நிகழ்த்தப்பட்டதென்றால், பகத்சிங் முழங்கிய இன்குலாப் சிந்தாபாத் என்ற முழக்கத்தை பார்வையாளர்களிலிருந்த இளைஞர் கூட்டம் எதிரொலித்து முழங்கும் அளவு வீச்சான ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. நிகழ்ச்சி முடிந்தது. மேடையில் குண்டூசி பொட்டால் கேட்க்கும் ஆழ்ந்த நிசப்தம். சிறிது நேரத்தில் சுதாரித்த கூட்டம் கரவொலிகளால் தனது பாராட்டுக்களை தெரிவித்தது. சீட்டு நுனிக்கு வந்தனர் என்று இதுவரை புத்தகங்களீல்தான் பாடித்திருக்கிறேன் அன்று என்னையும் உள்ளிட்டு பெரும்பாலோர் சீட்டு நுனியில் உட்கார்ந்திருந்ததை கண்ணுற்று உதடுகளுக்குள் சிரித்துக் கொண்டேன்.

இது தவிர்த்து ஜிம்ப்ளா மேளம், தமுறு மேளம், வில்லுப்பாட்டு, உடுக்கடிப் பாடல், தெருக்கூத்து என்று அந்த இரவே இருட்டை விரட்டிய இசை இரவாக மாறிப்போனது. மறுகாலனிய பண்பாட்டு படையெடுப்பில் மறக்கடிக்கப்படும் உழைக்கும் வர்க்கத்தின் தன்மான உணர்ச்சிகளையும், நேர்மையையும் வலுப்படுத்தும் முகமாகவும், புதிய உத்வேகத்துடன் ஏகாதிபத்தியத்தையும், பார்ப்ப்னியத்தையும் எதிர்க்கும் ஆற்றலையும் மனதில் ஏற்றிக் கொள்ளவும். பிழைப்புவாதம், அடிமைத்தனம் போன்ற உணர்ச்சிகளையே வாழ்வின் வெற்றிகரமானவையாக முன்வைக்கும் ஊடகங்களை காறி உமிழும் நெஞ்சு நேர்மையையும் வழங்கும் முகமாகவும் இந்த விழா இருந்தது. நிகழ்ச்சி முடிவடைந்த போது நேரம் இரவு 2.30. திரும்பி வந்த போது முழக்கங்களும் கருத்துக்களும் எனது எண்ணங்களை களமாக்கி கொண்டிருந்தன. இந்த நாட்டின் விடுதலையை தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பாக பகத்சிங் உணர்ந்திருந்தார் என்ற தோழர். மருதையனின் சொற்கள் என் மனதில் "நீ பொறுப்பானவன் தானா?" எனற கேள்வியாய் எதிரொலித்துக் கொண்டே இருந்த்து. அந்த கேள்வியை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன்..

"நீங்கள் பொறுப்பானவர்தானா?"

அசுரன்

குறிப்பு:
இந்த கட்டுரை ம.க.இ.க வின் 'தமிழ் மக்கள் இசை விழா ஏன்?' என்ற வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளது. இது தவிர்த்து தமிழிசை குறீத்து சில பேட்டிகள் கட்டுரைகள், நூல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இந்த வருட இசை விழா குறித்த வர்ணனைகள் இடையன என்ற அன்பரின் தளத்தில் பதிக்கப்பட்டிருந்தன. அந்தக் கட்டுரைகளிலிருந்தும் கடன் வாங்கி எழுதப்பட்டுள்ளது.


தொடர்புடைய சுட்டிகள்:

தமிழ் மக்கள் இசை விழா' வின் கேள்வி "நீங்கள் பொறுப்பானவர்களா?

தமிழ் மக்கள் இசை விழா - III

தமிழ் மக்கள் இசை விழா - II

இசைவிழா பிரசுரம்

நிகழ்ச்சி நிரல்

பிப்' 24 - சனிக்கிழமை, தஞ்சை, திருவள்ளுவர் திடல

Related Posts with Thumbnails