TerrorisminFocus

Monday, August 17, 2009

கரண்டு இல்ல, பேனு சுத்தல அதனால வேல செய்யலை...

ரண்டு சப்ளை இல்லை, அதனால மின்விசிறி வேலை செய்யவில்லை. இதன் காரணமாக எனது வேலைகளை முடிக்க முடியவில்லை. ஒழுங்கு மரியாதையாக தங்கு தடையற்ற மின்சாரம், ஜெனரேட்டர் வசதிகளை செய்து கொடுத்து விட்டு பிறகு வேலைகளை முடிப்பது குறித்து என்னிடம் பேசு. வேக்காட்டுல உக்காந்துக்கிட்டு வேலய செய்ய சொன்னா எப்படி செய்யிறது?

இந்த மாதிரி எக்கத்தாளம் பிடிச்சு பேசுனா என்ன நடக்கும்? பொடதிலேயே அடிச்சு வெளியெ தொரத்திருவாங்க. இந்த மாதிரி அல்பத்தனமான கோரிக்கைகளை விடுங்கள். நியாயமான உரிமைகளுக்காக தொழிலாளர்களும், மக்களும் போராடினாலே கூட நீதிமன்றம் குறுக்கே பாய்ந்து குய்யோ முறையோ என்று அறிவுரை வழங்கி தண்டிக்கும்.

அப்படியாப்பட்ட நீநீநீநீநீதி மன்றத்தின் மாமாமாமாட்சிமை தாங்கிய நீதிபதிகள்தான் மேற்சொன்ன முதல் பத்தி அரை வேக்காட்டு காரணத்தை முன் வைத்து வழக்குகள் நிலுவையில் இருப்பதை நியாயப்படுத்துகிறார்கள். புச்சா எதுவும் சிக்கலையே கிசு கிசு பேசன்னு யோசிச்சு கொஞ்ச நா முன்ன மன்னுமோகன் சிங் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்து கருத்துச் சொல்லியிருந்தார். இவற்றை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இதுக்குத்தான் இப்படி சாமியிடிருக்கானுங்க நீதிபதிகள். அதுவும் கொஞ்சம் நஞ்சமில்ல 21 ஐகோர்ட் நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டில் ஒன்னு கூடி நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில்தான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

ஒரே வேக்காடா இருந்தாங்கண்டி வேல நடக்கிலன்னு சொல்வதை ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளலாம் என்றால் கூட நிலுவையில் இருக்கும் வழக்குகளையும், அவற்றை வருடக் கணக்கில் இழுத்தடிக்கும் 'வாய்தா'பதிகளின் டிமிக்கிகளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது. குறைந்த பட்சம் வேக்காட்டின் காரணமாக வழக்குகள் தீர்க்கப்படாமல் போய்விட்டன என்பதற்கு ஆதாரம், புள்ளிவிவரம் கூட வழங்காமல் மிகத் திமிராக ஆணையிடுகிறார்கள் நீதிபதிகள். இவிங்க சொல்றத பாத்தா 24 மணி நேரமும் கோர்ட்டுல கரண்டு இல்லங்கற மாதிரி இருக்கு. இவர்கள் வேக்காட்டில் வாடுவதாக காரணம் கூறி இழுத்தடித்துள்ள லட்சக்கணக்கான வழக்குகளில் சிக்கிக் கொண்டு சிறைக் கொட்டடிகளிலும், நீதிமன்ற வளாகங்களிலும் கொசுக்கடியிலும், வேக்காட்டிலும் வாழ்க்கையை இழுந்து வருகிறார்கள் ஆயிரக்கணக்கான அப்பாவிகள்.

ஆனா இதே நீதிபதிகள்தான் தமது உச்சானிக் குடுமியை சுருட்டி வைத்துக் கொண்டு, இந்துத்துவ பார்ப்பன பயங்கரவாதிகளின் வழக்குகளை ஞாயிற்றுக்கிழமை கூட கடைய திறந்து வைத்து விரைவாக முடித்து வைத்துள்ளனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

டேய்.. என்னப்பாத்தாடா கேள்வி கேக்குற மவனே ஒழுங்கா எனக்கு முதுகு சொறிஞ்சு விடுடா அப்புறம் வேல நடக்கிறத பத்தி பேசுன்னு சொல்லி ஆண்டைத்தனத்துடன் தாண்டவம் ஆடியுள்ளனர் நீதிபதிகள். அத்தோட சேந்து இதுதான் சாக்குன்னு சில பல சலுகைகளையும் கோரியுள்ளனர்.

ஏண்டா வேல நடக்கலன்னு கேட்டா காக்கா கத்துச்சு, குயில் கூவுச்சி, மூக்குல வேர்வைன்னு கதய விட்டுப்புட்டு அத்தோட சேர்ந்து மேற்கொண்டு சில பல சலுகைகளையும் கேக்கற மொள்ளமாறித்தனம் இருக்கே... அடேங்கப்பா... சும்மாவா சொன்னாய்ங்க.... ஒலகத்திலேயே பெரிய ஜனநாயகம் இந்தியா... இந்தியா... இந்தியான்னு....

ஜோய்ங் லந்து....(ஜெய் ஹிந்த தாம்பா அப்படி சொன்னேன்)

""Do you expect a trial court judge to achieve the case disposal target when he has to sit all day under a fan that stands still and a court room that is packed with litigants creating an unworkable condition ""

""As the state governments have been citing funds crunch to extend additional financial assistance to the subordinate judiciary, the CJs again suggested that financial autonomy be given to the HCs. ""


அசுரன்

Related Posts with Thumbnails