TerrorisminFocus

Showing posts with label ஊழல். Show all posts
Showing posts with label ஊழல். Show all posts

Thursday, August 04, 2011

அவனவன் எடுக்குற முடிவு - வாயில ஈ போனா எனக்கென்ன பீ போனா எனக்கென்ன?

வெளிய போற எடியூரப்பாவுக்கு பதில் அவனோட அல்லக்கை கர்நாடகா 'பன்னீர்செல்வம்' சதானந்த கௌடா என்ற ஒரு விளக்கெண்ணைய் மண்டையன் முதலமைச்சராகப் போறானாம். அவன் வந்து உக்காரதுக்கு முன்னாடியே அவன பத்தின ஊழல் செய்தி வந்திருச்சி.

ஆன வரும் பின்னே மணியோச வரும் முன்னேங்கற மாதிரி, பிக்காலிப் பசங்க அத்தனை பேரும் பொறுக்கிகளா இருக்கானுங்க இதுல நல்ல பொறுக்கியாப் பாத்து பொறுக்கி எடுத்து வோட்டுப் போடனும் என்று சில பேரு பொறுக்கித்தனமா சொல்லிட்டுத் திரியுறானுங்க.

ரப்பர் ஸ்டாம்பும் அதன் மேனுபேக்சரரும்


இது ஒரு பக்கமென்றால் இன்னொரு பக்கம், கல்மாடி என்ற களவாடிய காமென்வெல்த் பொறுப்புள உக்கார வைச்சது பிரதமர்னு சொல்லி பாஜக குத்தாட்டம் போட்டது, பதிலுக்கு பாஜக எம்.பி. கல்மாடிய ரெகமண்டு பன்னதயும், பதிலுக்கு அந்த எம்.பி.ய கல்மாடி ரெகமெண்ட் செஞ்சதையும் அம்பலப்படுத்தியது காங்கிரசு.

திருடா... திருடா...

சுருக்கமாச் சொல்லனும்னா, பிரதமர் மன்னு மோகன் சிங்கோட வார்த்தயத்தான் கடன் வாங்கனும். இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நாக்கப் பிடுங்கற மாதிரி பாஜகவினர் கேள்வி கேப்பாங்களே என்ன செய்யப் போறீங்க என்று மன்னுவிடம் கேட்டதற்கு அவன் சொன்னான், "பாஜக மட்டும் யோக்யமா, அவனும் என்ன மாதிரி ஊரக் கொள்ளையடிச்ச நாதாரிதாங்கறத பேசுவோம்" என்று. இதுதான் உண்மை. இத நேரடியச் சொல்லாம அத்தன பேரும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நடிக்கிறாய்ங்க.

மன்னுவோட மேற்படி கருத்துக்கு பதிலா பெரிசா புடுங்கப் போறதா சீன் போட்ட பாஜக ஒரு மண்ணையும் செய்யல. ஆஹ, ரெண்டு பேரும் எதோ அக்கிரிமெண்டு போட்டுக்கிட்டு அமைதியாப் போயிட்டாங்க. நடுவில லோக்பால் பேப்பர எரிச்சி இந்த அக்கப்போருக்கு விளக்குப் பிடிச்சிட்டு இருக்காரு நம்ம அன்னா ஹசாரே என்ற அகில இந்தியா டிராபிக் ராமசாமி.

விளக்குப் பிடிச்ச மன்னாரு அகில இந்திய டிராபிக் ராமசாமி


கூட்டுக் களவானிங்க. அவிங்க என்னவோ தெளிவாத்தான் இருக்காங்க. பாருங்க இத்தன அமளிக்கும் காரணம் பன்னாட்டு, உள்நாட்டு தரகு முதலாளிகளின் பகற் கொள்ளையே. மேற்படி விவகாரங்கள் அனைத்திலும் இதுதான் அம்பலமாகியுள்ளது. 2ஜி மோசடியில் 20கோடி டாடா லஞ்சம் கொடுத்தது, கர்நாடக ரெட்டி சகோதரர்கள் கொள்ளையிடவும், ஜிண்டால் (நம்ம ஊரு திருவண்ணாமலை கிட்ட ஒரு மலைய ஆட்டயப் போட்டுருக்காங்க இவிங்க), அதானி போன்ற நிறுவனங்களின் ஆட்டயப் போடவும்தான் கர்நாடகாவில் சர்வகட்சி அயோக்கியர்களும் ஊழல் செய்துள்ளனர். இன்னும் இதுவரையான அனைத்து ஊழல் கொள்ளைகளும் நாட்டின் வளங்களை கொழுத்த முதலாளிகள் கொள்ளையிடவே செய்யப்பட்டுள்ளன என்ற உண்மையும் இந்த அமளி துமளி நாடகத்தில் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றது. அன்னா ஹசாரே பிடித்த விளக்குக் கூட பாராளுமன்ற அக்கப் போருக்குத்தானேயொழிய அதன் அடிகொள்ளியான பன்னாட்டு-தரகு முதலாளிகளின் பகற் கொள்ளையை வெளிச்சமிட்டு காட்ட அல்ல.

ஏனேனில் இவர்கள் அனைவருமே மேற்படி முதலாளிகளின் ஏவல் நாய்கள்தான். ஏவல் நாய்களுக்கேயுரிய மனோபாவத்துடன் ஒருத்தனை ஒருத்தன் போட்டுக் கொடுக்கிறார்கள் அவ்வளவுதான் விசயம்.  இந்த நாடகத்துக்கு  முடிவு கட்ட வகையின்றி வாயில் ஈ போவது தெரியாமல் வேடிக்கைப் பாக்குது சனம் இதுதான் சகிக்க இயலாததாக உள்ளது....

அசுரன்

ஸ்பெக்ட்ரம் ஊழல் : மறுகாலனியாக்கத்தின் “பம்பர் பரிசு”!

ரூ 3,74,937 கோடி ஊழல்!

ஊழல் சிறப்பிதழ்!!


Tuesday, July 26, 2011

18 வருசமா ஆட்டையப் போட்டவங்களும், கடைசியா மாட்டிக்கிட்டவனும்!!



நேற்று நீதிமன்றத்தில் 2G ஊழல் பற்றி ஆ. ராசா சில விசயங்களை போட்டுடைத்துள்ளார். கேபினெட் அமைச்சகம் அலைக்கற்றையை ஏலம் விடக் கூடாது என்று முடிவெடுத்ததினால்தான், அலைக்கற்றை உரிமத்தை ஏலத்தில் விடாமல் கையளித்ததாக ஆ. ராசா சொல்லியுள்ளார்.

மேலும், "நான் பின்பற்றிய முறை தவறானது எனில், 1993லிருந்து தொலைத் தொடர்புத் துறை அமைச்சர்களாக இருந்த அத்தனை பேரும் இதைத்தான் செய்துள்ளனர், அவர்களும் சிறையிலிருக்க வேண்டியவர்கள்தான்" "பாஜகாவின் அருன் சோரி 26 உரிமங்களையும், தயாநிதி மாறன் 25 உரிமங்களையும், நான் (ஆ, ராசா) 122 உரிமங்களையும் கொடுத்துள்ளோம். இவையனைத்துமே ஏலம் விடப்பட்டு கொடுக்கப்பட்டவையல்ல. அவர்கள் செய்தது தவறில்லை என்றால், என்னை மட்டும் விசாரிப்பது ஏன்?" என்று கேட்டுள்ளார்.

இதைத்தான் பல முறை நாமும் சொல்லி வருகிறோம். உலகமயக் கொள்கைகளின் அடிப்படையில் நாட்டின் வளங்கள் எல்லாம் அடி மாட்டு விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொள்ளையடிக்கக் கொடுக்கப்படுகிறது என்று. இதில் பாஜக, காங்கிரசு, சிபிஎம், டி எம் சி என்ற பேதம் கிடையாது. அனைவரும் மாமாக்கள் என்று சொல்லி வருகிறோம்.

2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் மாட்டிக் கொண்டது ஆ. ராசா எனில் இதே போல அரசு சொத்துக்களை, உரிமங்களை பாஜக காலத்திலிருந்து குறைந்த விலைக்கு விற்றது, இலவசமாகக் கொடுத்தது, கரும்பு தின்னக் கூலி போல தனியார் கையில் காசையும் கொடுத்து அரசு நிறுவனத்தையும் ஒப்படைத்தது போன்ற அயோக்கியத்தனங்களைச் செய்வதற்கு டிஸ்இன்வெஸ்ட்மெண்ட் அமைச்சகத்தையே வைத்திருந்தார்கள் பாஜக மாமாக்கள்.

இவர்களின் ஆட்சியில் அம்பானி, டாடா உள்ளிட்ட தரகு முதலாளி கும்பல் ஆட்டயப் போடாத எண்ணைய் வயலா(உதா: பன்னா மெத்தா, கோதாவரி)? தொலைத் தொடர்புத் துறை உரிமங்களா (உதா: சிடிஎம்ஏ மோசடி, ISD மோசடி)? இவர்கள் ஆட்சியில் டாடா உள்ளிட்ட கொள்ளைக் கும்பல் ஆட்டயப் போடாத நிறுவனங்களா (BSNL, மாடர்ன் பிரட்)?



அது மட்டுமா, டாடா, அம்பானி போன்ற 'கொழுத்த' ஏழைகளுக்கு கொள்ளையடிக்க வசதி செய்து கொடுப்பதில் எதிர்கட்சி, ஆளும் கட்சி பேதமின்றி தோழமையுணர்வுடன் பாஜக-காங்கிரசு கூட்டணி செயல்பட்டுள்ளதற்கு உதாரணங்கள் ஒன்றா இரண்டா?

பாஜக-காங்கிரசு புனித கூட்டணிக்கு அப்படியொரு உதாரணம் நீராராடியா டேப் விவகாரத்தில் வெளிவந்தது. முகேஷ் அம்பானிக்குத் தாரை வார்க்கப்பட்ட எரிவாயு வயல்களின் உற்பத்தியின் மீது முன் தேதியிட்டு 91,000 கோடி ரூபாய் வரித்தள்ளுபடி செய்வதற்கு 2009 – ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சிதம்பரம் வைத்த முன்மொழிதலை, எதிர்க்கட்சித் தலைவர் வெங்கையா நாயுடு தீவிரமாக ஆதரித்துப் பேசுகிறார். ‘தேசிய நலனுக்காக’ ஆளும் கட்சியுடன் ஒன்றுபட்டு நிற்கும்படியான இத்தகைய ‘தேசிய உணர்வை’ பா.ஜ.க.வுக்கு ஊட்டியவர் நீரா ராடியாதான் என்ற உண்மையை புட்டு புட்டு வைத்தது நீராராடியா டேப்.

கடந்த 18 வருடங்களில் இவர்கள் அனைவரும் சேர்ந்து அள்ளிக் கொடுத்து கொள்ளையிடப்பட்ட நாட்டின் சொத்துக்கள், 73 லட்சம் கோடிகளுக்கும் மேல். இவர்களின் கூட்டுக் களவானித்தனத்துக்கு ஒரு சின்ன உதாரணம்தான் கிருஷ்ணா-கோதாவரி எண்ணைய் வயல் ஊழல். 2G ஊழலுக்கு இணையான இந்த ஊழலை கணக்குத் தணிக்கைத் துறை அம்பலப்படுத்தியது. ஆயினும் பாஜகவோ, சிபிஎம்மோ அல்லது வேறெந்த எதிர்கட்சியுமோ இதனை மக்களரங்கிற்கு கொண்டு வந்து காங்கிரசை அம்பலப்படுத்தும் வேலையைச் செய்யவில்லை.விவகாரம் அத்தோடு முடிவுக்கு வந்தது. ஏனெனில் இவர்கள் அனைவருமே கூட்டுக் களவானிகள்.

இதே போல, போன வாரம் கர்நாடக முதலமைச்சர் கோமாளி எடியூரப்பாவின் மெகா ஊழலை அம்பலப்படுத்தினார் லோகாயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே. பல கோடி ரூபாய்க்கு சுரங்க ஊழலிலும், நில ஊழலிலும் எடியூரப்பா நேரடி தொடர்பிருப்பதை அவரது அறிக்கை அம்பலப்படுத்தியது. இதை வைத்து கர்நாடக எதிர்க்கட்சிகள் பெரும் கலகத்தை உருவாக்கினார்களா என்றால் இல்லை. ஏனெனில் ஹெக்டேவின் அறிக்கை எடியூரப்பாவை மட்டுமல்ல, காங்கிரசின் எஸ். எம். கிருஷ்ணா, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி போன்றோரையும் சேர்த்து அம்பலப்படுத்தியிருந்தது. மேலும், எடியூரப்பா மாட்டிக் கொள்வது இது முதல்முறையும் அல்ல. நிலபேர ஊழலிலும், சுரங்க மோசடி ஊழலிலும், சட்டமன்ற குதிரை பேர ஊழலிலும், தேவ கவுடாவின் நாற்காலி சண்டை நாடகங்களில் கோமாளியாகவும் இன்னும் பல கோமாளித்தனமாக செயல்பாடுகளிலும் அவமானப்பட்டவன்தான் இந்த எடியூரப்பா. இதற்கு முன்பே சில முறை நீதிபதி ஹெக்டே இவனை அம்பலப்படுத்தி ஒன்றும் வேலைக்காகவில்லை என்று பத்திரிகையாளர்களிடம் அழுததும் உண்டு. இத்தனை நடந்தும் கோமாளி எடியூரப்பா வெட்கமின்றி சிரித்துக் கொண்டேதான் வலம் வருகிறான். இதே காலகட்டத்தில் பயங்கரவாத கட்சியான பாஜகவின் தலைவன் நிதின் கட்காரியின் மகன் வீட்டில் வருமான வரி ரெய்டு நடக்கிறது(கொஞ்ச காலம் முன்புதான் மிக ஆடம்பரமான திருமணம் ஒன்றை கட்காரி நடத்தியிருந்தான்).








(இன்னுமாடா நம்மள நம்புறாய்ங்க... அது அவிங்க தல விதி....!!)


இவையெல்லாம் காங்கிரசைப் பொறுத்தவரை ஒரேயொரு அம்சத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது என்னவென்றால், 'நீ மட்டும் யோக்கியமா' என்று வாயடைக்கும் கருணாநிதி டெக்னிக்தான் அது. ஏனேனில், பாஜக மத்தியில் ஆட்சி செய்த போதும் சரி, மாநிலத்தில் ஆட்சி செய்யும் போதும் சரி ஊழல், மோசடி புகாரில் மாட்டிக் கொண்ட யாரொருவரையும் பொறுப்பிலிருந்து நீக்கியதில்லை. இது தவிர்த்து இந்த விவகாரங்களில் அத்தனை பேறும் ஒன்றாக கை நனைத்து பன்னாட்டு, உள்நாட்டு கொள்ளைக்கார முதலாளிகளுக்கு திருட்டு சேவகம் செய்துள்ளதால் வாயை மூடிக் கொண்டு விவகாரங்களை குழி தோண்டி புதைக்கவே செய்கின்றனர். சிரித்து கொண்டே வலம் வருவது எடியூரப்பா மட்டுமா? ஆ. ராசா, ஜெயலலிதா, அத்வானி, வாஜ்பேயி, வெங்காய நாயுடு, பா. சிதம்பரம், மன்மோகன், பிரகாஷ் கரத், புத்ததேவு, மோடி என அத்தனை அயோக்கியன்களும்தான் வெட்கமின்றி சிரித்துக் கொண்டே வலம் வருகிறார்கள்.

மாட்டிக் கொண்ட திருடர்களும், கொள்ளையர்களும் வெட்கமின்றி சிரித்துக் கொண்டே வலம் வருவது எதனால்? அது சுற்றியிருக்கும் மக்கள் அவர்களுக்கு கொடுக்கும் அங்கீகாரத்தால்தான். இங்கு நாம் கடிந்தது கொள்ள வேண்டியது திருட்டு கும்பலின் வெட்கங்கெட்ட நகைப்பையா அல்லது அதை அங்கீகரிக்கும் மக்களின் அரசியல் மொன்னைத்தனத்தையா?

அசுரன்

ஸ்பெக்ட்ரம் ஊழல் : மறுகாலனியாக்கத்தின் “பம்பர் பரிசு”!


ரூ 3,74,937 கோடி ஊழல்!


ஊழல் சிறப்பிதழ்!!



Wednesday, January 14, 2009

முதலாளித்துவம் கொல்லுது - சத்யம் IT ஊழியரின் தற்கொலை

தற்கொலை செய்து கொண்ட சத்யம் ஊழியர்


த்யம் கம்பேனி 420 வேலை செய்து மாட்டிக் கொண்ட கதை இப்போது அனைவருக்கும் தெரிந்த விசயமாகிவிட்டது. இதே போல ஊழல் குற்றச்சாட்டில் விப்ரோ நிறுவனமும் அசிங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை ஒட்டிய கிளைக் கதையில் இன்போசிஸ் நாராயணமூர்த்தி கும்பலை சேர்ந்தவரின் பாலியல் வக்கிர கதைகள் மீண்டும் அரங்கிற்கு வந்து அசிங்கப்பட்டது.

இத்தனை அயோக்கியத்தனமும் செய்யும் இந்த பகாசுர சூதாட்ட முதலாளிகள், 420 பேர்வழிகள் எந்த தண்டனையும் அனுபவிப்பது இல்லை. ஆனால் எந்த தவறும் செய்யாதா அந்த நிறுவனங்களில் பணி புரிபவர்கள்தான் இதன் கஸ்டங்களை அனுபவிக்கிறார்கள். இந்திய தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி கொழுத்த பணம் சேர்த்த தொழில்துறை முதலாளிகள் அந்த பணத்தை சூதாடி தோற்றனர். இன்று சூதாட்டத்தின் நஸ்டத்தை தொழிலாளர் தலையில் சுமத்தி வேலையை விட்டு நீக்குகிறார்கள், வயிற்றில் அடிக்கிறார்கள்.

அது போலவே இந்திய IT துறை சுதாடிகளும், 420 களும் செய்கிறார்கள். கடந்த சில மாதங்களில் பல ஆயிரக்கணக்கானவர்கள் வேலையை விட்டு தூக்கப்பட்டுள்ளனர் IT துறையில். IT துறை சூப்பரு சூப்பரு என்று சொல்லி எல்லாரையும் அதனையே படிக்க சொல்லி ஊக்கப்படுத்திய அரசுகளோ இன்று IT துறை கவிழ்ந்து கிடக்கும் நேரத்தில் முதலாளிகளுக்கு அறிவுரை வழங்கி காப்பாற்றுகிறது. இந்த அரசை நம்பி IT படித்தவர்களைப் பற்றியோ அல்லது விவசாயம் செத்து போனதால் நகரத்துக்கு வந்த தொழில்சாலை தொழிலாளி பற்றியோ இந்த அரசுக்கு கவலையில்லை. வாழ்வையிழந்த, எதிர்காலம் நிச்சயமற்ற சதாரண மக்களுக்கு வாய்க்கரிசி போட வருகிறது அரசு. முதலாளிகளுக்கோ சின்ன எறும்பு கடி என்றால் கூட பெயில் அவுட் எடுக்கிறது.

வெட்கமின்றி கொஞ்சம் கூட பயமின்றி சத்யம் கம்பேனியில் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய சொல்லி அறிவுரை செய்துள்ளது இந்திய அரசு. இதன் மூலம் அதனது லாபம் 20% அதிகமாகும் என்று இந்த அறிவுரையை சொல்லியுள்ளது. இந்த அறிவிப்பு நடைமுறைக்கு இன்னும் வரவில்லை என்று நாம் எண்ணியிருந்த வேளையில் மேலே பதியப்பட்டுள்ள சத்யம் ஊழியரின் தற்கொலை செய்தி வெளி வந்துள்ளது. அவரை வேலையை விட்டு தூக்கியதால் அவர் தற்கொலை செய்துள்ளார் என்று தெரியவருகிறது.

எந்தளவுக்கு இந்த அரசு IT ஊழியர்களையும், இந்திய தொழிலாளர்களையும் கேவலமாக, முதுகெலும்பு அற்றவர்களாக நினைத்திருந்தால் 10,000 பேரை வேலையை விட்டு தூக்கிவிட அறிவுரை சொல்லியிருக்கும். மோசடி செய்தவனெல்லாம் சொகுசாக வலம் வருகிறான். வயிற்றுப் பிழைப்புக்கு கிடைத்த வேலையை செய்யும் சதாரணம் மக்களோ இப்படி உடனுக்குடன் தண்டனை அனுபவிக்கிறார்கள்.

ஒரு படத்தில் வடிவேலு சொல்லுவார், ஓரமா நின்னு பாத்தத்துக்கு தண்டனையாடா என்று அது போல முதலாளிகளின் மோசடிகளை நாம் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்ததற்கு நமக்கு தண்டனையா? இனிமேலும் இதை அனுமதிக்க முடியாது. இவர்கள் இனிமேலும் இந்த நாட்டை அதன் உற்பத்தியை நிர்வாகிக்கும் தகுதியை கொண்டிருக்க முடியாது. நாம்தான், மக்கள்தான் அனைத்தையும் உருவாக்குகிறோம் இதனை நாமே நிர்வாகிப்போம்.

தனிமனித லாப வெறியில் வித விதமாக சூதாடி, மோசடி செய்து, சதி திட்டம் தீட்டி நாட்டை நாசமாக்கும் பன்னாட்டு, தரகு பாகசுர முதலாளிகளை நாட்டை விட்டு விரட்டினால்தான் அனைவருக்கும் விடுதலை. வருத்தபப்ட்ட பாரம் சுமந்தது போதும் IT ஊழியர்களே. உங்களது சகோதரர்கள் உங்களுடன் தான் இருக்கிறார்கள். சிறிது கண் திறந்து பாருங்கள்.

முதலாளித்துவம் கொல்லும்! கம்யுனிசமே வெல்லும்!!

அசுரன்

ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா !!

விப்ரோ, சத்யம் போன்ற கம்பேனிகள் மோசடி 420 பேர்வழிகள் - உலக வங்கி அறிவிப்பு!!

வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் IT ஊழியர்களே! உங்கள் பாரங்களை (முன்னாள்)சத்யம்-ன் பிராபாத்திடம் இறக்கி வையுங்கள்!!

இங்கு கிழிந்த டவுசருக்கு மாற்றாக புது டவுசர் கிடைக்கும்!! - ரொம்ப நல்லவர்கள் கடை!!

அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது!

ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை!

Monday, January 12, 2009

விப்ரோ, சத்யம் போன்ற கம்பேனிகள் மோசடி 420 பேர்வழிகள் - உலக வங்கி அறிவிப்பு!!

லக வங்கி இனிமேல் விப்ரோ கம்பேனியுடன் எந்த ஒரு வர்த்தக தொடர்பும் வைத்துக் கொள்ளாது என்று தடை செய்து விட்டது. இது போல தடை செய்யப்பட்ட கம்பேனிகள் சத்யம், விப்ரோ, மற்றும் மெகா சாப்ட். தடை செய்யக் காரணம் இவை மோசடியான நடைமுறை கொண்டவை, உலக வங்கி ஊழியர்களை ஊழல்படுத்துகின்றன இந்த கம்பேனிகள், வெளிப்படையான நடைமுறை இல்லாதவர்கள், தகவல்களை சரியாகக் கொடுக்காமல் ஏமாற்றுபவர்கள். இந்த கம்பேனிகள் மோசடி மற்றும் ஊழல் குறித்த உலக வங்கியின் கொள்கைகளின் அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ளன. பட்டியலை விரைவில் வெளியிட இருக்கிறது உலக வங்கி.

இது குறித்து விப்ரோ கம்பேனி சம்பந்தமில்லாமல் கருத்து சொல்லியுள்ள நிலையில் உலக வங்கியானது தெளிவாக குறிப்பிட்டுவிட்டது, அதாவது தனது ஊழியர்களுக்கு கிடைத்த நியாயப்படுத்தமுடியாத அணுகூலகங்கள்தான் இந்த கம்பேனிகளை தடை செய்ய காரணம் என்று. இந்த நியாயப்படுத்த முடியாத அணுகூலம் என்ற வார்த்தை ஊழல், லஞ்சம் என்பதின் நாகரிகமான வடிவமேயன்றி வேறல்ல.


""
However, the World Bank said the ban was for improper benefits to its staff.
""

கீழே கொடுக்கப்பட்டுள்ள சரத்துதான் சத்யம், விப்ரோ போன்ற திறமையாளர்களை தடை செய்ய உலக வங்கி கூறும் காரணம்.


Fraud and Corruption

1.14 It is the Bank’s policy to require that Borrowers (including beneficiaries of Bank loans), as well as bidders, suppliers, and contractors and their subcontractors under Bank-financed contracts, observe the highest standard of ethics during the procurement and execution of such contracts. [18] In pursuance of this policy, the Bank:

(a) defines, for the purposes of this provision, the terms set forth below as follows:

(i) “corrupt practice” [19] is the offering, giving, receiving or soliciting, directly or indirectly, of anything of value to influence improperly the actions of another party;

(ii) “fraudulent practice” [20] is any act or omission, including a misrepresentation, that knowingly or recklessly misleads, or attempts to mislead, a party to obtain a financial or other benefit or to avoid an obligation;

(iii) “collusive practice” [21] is an arrangement between two or more parties designed to achieve an improper purpose, including to influence improperly the actions of another party;

(iv) “coercive practice” [22] is impairing or harming, or threatening to impair or harm, directly or indirectly, any party or the property of the party to influence improperly the actions of a party;

(v) "obstructive practice" is

(aa) deliberately destroying, falsifying, altering or concealing of evidence material to the investigation or making false statements to investigators in order to materially impede a Bank investigation into allegations of a corrupt, fraudulent, coercive or collusive practice; and/or threatening, harassing or intimidating any party to prevent it from disclosing its knowledge of matters relevant to the investigation or from pursuing the investigation; or

(bb) acts intended to materially impede the exercise of the Bank’s inspection and audit rights provided for under par. 1.14 (e) below.

இது குறித்த தகவல் தந்த பிராக்னோஸ்டிக் சேஜ் க்கு நன்றி. பிராக்னோஸ்டின் பின்னூட்டம்(சுருக்கப்பட்டது):


""""
விப்ரோ கம்பேனியுடன் பிசினஸ் செய்வதை 2011 வரை தடை செய்துள்ளது உலக வங்கி. ஏற்கனவே இது போல போன வாரம் சத்யம் கம்பேனியை தடை செய்தது உலக வங்கி. இப்போழுத் விப்ரோ இத்துடன் சேர்ந்து இன்னொரு கம்பேனியும். இது போல உள்ள கம்பேனிகளின் லிஸ்டை வெளியிட இருக்கிறார்கள்.

இவர்களை தடை செய்வதற்கு உலக வங்கி சொல்லும் காரணம்:
"Improper benefits to Bank staffs".

இந்த கம்பேனிகள் தமது கிளையண்டை பிடிக்க எல்லா வகை மோசடிகளீலும் ஈடுபடுவார்கள். வெளியே ரொம்ப யோக்கிய கனவான்கள் போல வேசமிடம் இவர்கள் (நீல்கேனி போன்றவர்கள்) உண்மையில் இப்படிப்பட்ட 420 கும்பல்கள்தான். அவர்கள் கிளையண்டை பிடிக்க செய்யும் மோசடிகள்

ஊற்றிக் கொடுப்பது முதல் கூட்டிக் கொடுப்பது வரை அடங்கும்.

சமீபத்தில் வினிதா என்கிற நடிகை மாட்டிக் கொண்ட சம்பவத்தில் அவருடன் இருந்த வெளிநாட்டு கிளையண்டும், இந்திய கம்பேனியும் சேர்ந்து அம்மணமாக நின்றனர்.

அது போல ஊழல்படுத்தி உலக வங்கி ஊழியர்களை தன் வசப்படுத்தினார்கள் என்பதே இவர்களை தடை செய்ய உலக வங்கி சொல்லும் குற்றச்சாட்டு.

அவர்கள் சொல்லும் இன்னொரு குற்றச்சாட்டு இவர்கள் வெளிப்படையான நடைமுறை கொண்டவர்கள் அல்ல என்பது.


http://web.worldbank.org/WBSITE/EXTERNAL/NEWS/0,,contentMDK:22030864~pagePK:64257043~piPK:437376~theSitePK:4607,00.html
""
This change was made in the interest of fairness and transparency.
""

இப்படிப்பட்ட கம்பேனிகளை பிராடு அன்டு கரப்பசன் (மோசடி மற்றும் ஊழல்) பக்கத்தில் இட்டுள்ளது உலக வங்கி.


""""


""""
இப்படி பொய் சொல்லி மோசடி செய்து மாமா வேலை செய்யும் இந்த கம்பேனிகளும், முதலாளிகளும் தான் இந்தியாவை வளர்க்கிறார்களாம், திறமையானவர்களாம்.

விவசாயியும், மக்களும் திறமையற்றவர்களாம் மோசடிக்காரர்களாம். போங்கடாங்....

இந்த பச்ச புள்ளகளத்தான் நம்ம அரசியல்வியாதிங்க கெடுத்துட்டாங்களாம்... ஏதோ ஒரு படத்துல சத்யராஜ் சாராயம் குடித்ததற்கு கவுண்டமணியை திட்டும் மனோராமா அது மாதிரி, இந்த ஊழல் சிகாமணிகள்தான் அரசியலையும், அரசையும் ஊழல்படுத்தி தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.


////புகுந்த(அரசியல்) கொஞ்ச நாட்களிலேயே சத்யம் அப்படிங்கிற மிகப்பெரிய கம்பெனியை காலி பண்ணிட்டாங்க. ////

தகவல் தொழில்நுட்பத் துறை மட்டுமல்ல ஒட்டு மொத்த கார்போரேட் முதலாளித்துவ கும்பலே ஊழல் கும்பல்தான்.

"முதலாளித்துவம் இயங்குவதே இந்த அரசை ஊழல் படுத்துவதன் மூலம்தான்"

முக்காலமும் உணர்ந்த முனிவன்


""""


அசுரன்

தொடர்புடைய பதிவுகள்:

ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா !!

ராமலிங்க ராஜூ கோவிந்தா, கோவிந்தா

வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் IT ஊழியர்களே! உங்கள் பாரங்களை (முன்னாள்)சத்யம்-ன் பிராபாத்திடம் இறக்கி வையுங்கள்!!

Related Posts with Thumbnails