TerrorisminFocus

Tuesday, November 20, 2007

கம்யுனிஸ்டு பார்ட்டி ஆப்பு இந்தியா - CPM வெறி நாயும்! CPIயும்!

போலி கம்யுனிஸ்டுகளை புரட்சியாளர்கள் விமர்சனம் செய்வது என்ன புதிய விசயமா? ஆனால் போலி கம்யுனிஸ்டுகளை கண்டனம் செய்வது இன்று புதிய வழமையாக மாறி உள்ளது. ஏனேனில் நேற்று வரை போலி கம்யுனிஸ்டுகளை விமர்சனம் செய்வதற்க்கு ஒருவன் புரட்சியாளனாக, முற்போக்காளனாக இருக்க வேண்டும் அல்லது அரசியல் விழிப்புணர்ச்சி உள்ளவனாக இருக்க வேண்டும். இன்று ஒரு மனிதனாக சுயமரியாதை உடையவனாக இருந்தாலே போதும் அவன் போலி கம்யுனிஸ்டுகளை விமர்சிக்க வேண்டிய நிர்பந்தத்திற்க்கு தள்ளப்படுகிறான். சத்தியமாக இதில் புரட்சியாளர்களின் பங்களிப்பு ஒன்றுமே கிடையாது. இது முற்றுமுதலாக போலிகளும், மறுகாலனிய எஜமானர்களும் சேர்ந்து உருவாக்கிய சூழல்தானேயன்றி வேறல்ல.

நந்திகிராமில் நிகழ்ந்துள்ளவை எந்த மனிதனையும் CPM(டாடாயிஸ்ட்)களின் முகத்தில் காறி உமிழச் செய்யும் அளவு கேவலமான விசயங்கள். படு கோழைத்தனமாக போலிசு உள்ளிட்ட சகல அரசு இயந்திரத்தின் துணையுடனும் மக்கள் மீது யுத்தம் தொடுத்துள்ளார்கள் இந்த பாசிஸ்டு கோழைகள். நேற்றுவரை இந்த பாசிஸ்டு கும்பலுடன் இருந்தவர்கள் கூட இன்று வெட்கி வேதனைப் பட்டு இவர்களை கடுமையாக கண்டனம் செய்யும் அளவு நிலைமை வெட்கக்கேடாக உள்ளது. CPM ஆட்களோ தலையில் முக்காடு போடாத குறையாக பதில் சொல்ல அஞ்சி தமது நண்பர்களைக் கண்டு கூட ஓடுகிறார்கள். குஜராத் இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வெட்கங்கட்ட வன்முறை கொலை வெறிச் செயலுக்கு எந்த வகையிலும் குறைவின்றி நந்திகிராமில் தாக்குதல் தொடுத்துள்ளனர் இந்த காம்ரேடுகள் – மார்க்ஸிஸ்டு வேடம் போட்ட பாசிஸ்டு கோழைகள்.



என்ன காரணமாம்? புத்ததேவ் சொல்கிறார், அவர்கள் எப்படி கொடுத்தார்களோ அதே போல நாங்களும் திருப்பிக் கொடுத்தோம் என்று. யார் இந்த ‘அவர்கள்’? நந்திகிராம் பகுதியிலிருந்த 2000 சொச்சம் CPM ஆதரவாளர்கள் தவிர்த்து மீதியுள்ள மிகப் பெரும்பான்மையான மக்கள்தான் அந்த ‘அவர்கள்’. யார் அந்த ‘நாங்கள்’? டாடா, இந்தோனேசியாவில் கம்யுனிஸ்டுகளை வேட்டையாடிய சலீம் கும்பல், போபாலில் விச வாயு கசிய விட்டு மக்களை கொன்று குவித்த பழைய யூனியன் கார்பைடு புதிய பெயரில் டௌவ் கெமிக்கல்ஸ, நந்திகிராமின் மீது முதல் முறை CPM குண்டர்கள் தாக்குதல் தொடுத்த போது கங்காணி வேலை பார்த்த CPM ஆதரவாளர்கள், இது தவிர்த்து CPM தரகு தாதாக்கள் இவர்கள்தான் அந்த ‘நாங்கள்’.

மக்களாகிய ‘அவர்கள்’ இவர்களுக்கு என்ன கொடுத்தார்களாம்? பதிலடி கொடுத்தார்கள். நந்திகிராம் தொகுதியிலிருந்த விளை நிலங்களை பன்னாட்டு/தரகு கம்பேனிகளுக்கு CPM கூட்டி கொடுப்பதை மக்கள் எதிர்த்தனர். அதை தடுக்க அந்த மக்கள் மீது குண்டு வீசி துப்பாக்கியால் சுட்டு கோடூரமானதொரு தாக்குதலை CPM குண்டர்களும், போலீசும் சேர்ந்து சில மாதங்கள் முன்பு நடத்தினர். அதில் 44 பேர் படு கொலை செய்யப்பட்டனர். பெண்களை வன்புணர்ச்சி செய்தும் சாகசம் செய்தனர் ‘காம’ரேடுகள். அதனை தொலைக்காட்சியில் விளம்பரம் வேறு செய்தார் ஒரு ‘காம’ரேடு. தெஹல்காவால் அம்பலமான இந்து மத பயங்கரவாத பாசிச கும்பலுக்கும், இந்த பொருளாதார பாசிஸ்டுகளுக்கும் தான் எத்தனை ஒற்றுமை?


More Photos

இத்தனையும் செய்த பிறகும் நந்திகிராம் வீழவில்லை. அதற்க்கு பிறகு கடந்த மாதங்கள் முழுவதும் அது ஒரு யுத்த பூமியாகவே இருந்துள்ளது. CPM குண்டர்கள் அரசு துணையுடன் அந்த பகுதியில் செய்த பல்வேறு முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன. நந்திகிராம் நின்று, பன்னாட்டு கும்பலுக்கு கூட்டிக் கொடுக்கும் திட்டத்தை விரட்டியடித்தது. கங்காணி வேலை பார்த்த CPM ஆட்களை நந்திகிராம் உள்ளே அனுமதிக்கவில்லை. அந்த 2000 பேரை நந்திகிராமத்திற்க்கு மீண்டும் சேர்க்கவே இந்த சமீபத்திய யுத்தம் என்றும், திட்டத்தை கைவிட்ட பிறகும் ஏன் CPM ஆட்களை நந்திகிராம் மக்கள் உள்ளே விடமாட்டென் என்கிறார்கள் என்றும் பல்வேறு வசனங்கள் பேசி இந்த அயோக்கியத்தனத்தை நியாயப்படுத்தி பேசினர் CPM பாசிஸ்டுகள், நந்திகிராமிற்க்குள் நுழைந்ததை ஏதோ அடுத்த நாட்டுக்குள் போர் தொடுத்து நுழைந்தது போல சாதனையாக கொண்டாடிய கையோடு மீண்டும் நந்திகிராமத்தை கூட்டி கொடுப்பது குறித்து விமரிசையாக பேச துவங்கிவிட்டனர். உண்மையில் 2000 CPM காரர்கள் அல்ல மாறாக நந்திகிராமின் வளங்களை நக்கி பிழைக்க CPMக்கு எலும்பு துண்டு வீசிய பன்னாட்டு எஜமானர்களின் கட்டளைக்கு வாலாட்டியே மக்கள் மீது பாய்ந்து கடித்து குதறியுள்ளது CPM வெறி நாய்.





Molina Malik, mother of Tapasi, whose body was found burning in the fields in Singur


இதோ சமீபத்திய நீதிமன்ற தீர்ப்பும், இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த ஒரு செய்தியும் இவர்களின் கொலை, கொள்ளை கற்பழிப்புக்கு சாட்சி சொல்கின்றன. NDTV ஆட்கள் ஒரு கிராமத்தில் நுழைந்த பொழுது அங்கிருந்த 160க்கும் மேற்ப்பட்ட வீடுகளில் 85% மேல் எரித்து நாசம் செய்யப்பட்டிருந்தன (நந்திகிராமை முற்றிலும் கைப்பற்றிய பிறகே ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டன. அதற்க்கு முன்பே இந்த விசயத்தை மோப்பம் பிடித்த ஊடகங்களில் சில தமது சொந்த அரசியல் தேவைக்காக கவர்னரிடம் மனுச் செய்வதில் துவங்கி பல வகைகளில் CPMயை அம்பலப்படுத்த முனைப்பு காட்டியுள்ளன. ஒரு முன்னாள் நீதிபதி ஒருவரும் கவர்னருக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதியுள்ளார்).

காம்ரேட்டுகள் இதற்க்கு முன்பு நடத்திய இதை விட பன்மடங்கு கோடூரமான தாக்குதலில் குண்டுகள் வீசியது, போலிசிடம் இருந்ததை விட அதி நவீன துப்பாக்கிகள் மூலம் மக்களின் முதுகுகளில் வயது வித்தியாசமின்றி சுட்டுக் கொன்றது, பெண்களை வன்புணர்ச்சி செய்தது, சிறுவர், சிறுமியர் முதல் பலரது சடலங்களை மறைக்கும் முகமாக அருகிலிருந்த செங்கல் சூளைக்கு எடுத்துச் சென்றது என்று CPMன் புதிய கம்யுனிச பாணியில் புரட்சி செய்திருந்தனர். இது தவிர்த்து இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க்க வந்த மேதாபட்கரையும் தாக்கியுள்ளனர்.

இத்தனை அநியாயங்களுக்கு பிறகும் கோடூரங்களுக்கு பிறகும் மக்கள் இந்த இழப்புகளை அக்கிரமங்களை எல்லாம் உடனே மறந்துவிட வேண்டுமாம், இவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமாம். இல்லையென்றால் இன்னுமொரு தாக்குதல் நடத்தி ஏற்றுக் கொள்ள சொல்லி வன்புணர்ச்சி செய்வார்களாம். என்னே இவர்களது கம்யுனிஸ நடைமுறை. இவர்கள் கம்யுனிஸ்டுகள் அல்ல போலிகள் என்பதுதான் நமது நிலைப்பாடு. ஆனால் மறுகாலனிய சூழலில் இவர்கள் பாசிசஸ்டுகளாக புல் டைம் வேலை செய்ய துவங்கிவிட்டனர். போலிகள் என்ற அடைமொழி கூட இவர்களைக் கண்டு வெட்கி தலைகுனிந்து ஓடுகிறது.

உண்மையான கம்யுனிஸ்டை விடுங்கள், உண்மையிலேயே சுயமரியாதை உள்ளவனும், மனிதாபிமானம் உள்ளவனும், மனிதனாக மதிக்க தகுதியுள்ளவனும் கூட இனிமேலும் தன்னை CPMக்காரன் என்று சொல்லமாட்டான். ஒரு நாய் கூட இன்னொரு நாயின் மீதான தாக்குதலை தூரமாகவேனும் நின்று பதட்டத்துடன் பார்க்கிறது. CPMக்காரன் என்று தன்னை இனிமேலும் சொல்லிக் கொள்பவன் அந்த நாய்க்கும் கீழானவன். ஏனேனில் சுயமாரியாதை விசயத்தில் அந்த நாய் CPMக்காரனைவிட பல மடங்கு மேலாகும்.

CPM வெறிநாயை விடுங்கள் அது பாசிஸ்டு. ஆனால் CPMவோடையே இன்னொன்று சுற்றுமே அது இந்த சம்பவங்களின் போது என்ன செய்தது? இதனை கண்டித்து ஒரு அறிக்கை விட்டது அவ்வளவுதான். அறிக்கைவிட்ட கையோடு CPMயோடு சேர்ந்து மன்மோகன் சிங் அணு ஆயுத ஒப்பந்தம் மூலம் நாட்டை கூட்டிக் கொடுப்பதற்க்கும் சிகப்பு கொடி…ஸாரி பச்சை கொடி காட்டிவிட்டது. இடது சாரி கூட்டணியாம்… 80 வருட பாரம்பரியம் அல்லவா?

CPI காரர்களிடம் அந்த கட்சியின் அருகதையை சொல்லி பேசினால் பின்வருமாரு ஒரு ரெடிமேட் பதில் ஒன்றை சொல்வார்கள்: “தோழர் CPI ஒன்றும் நல்ல கட்சி என்று சொல்லமாட்டேன். ஆனால் இருப்பதிலே அது நல்ல கட்சி.” இதை சொல்லி முடித்த பிறகு முகத்தை அப்படியே பரிதாபகரமாக வைத்துக் கொண்டு நம்மைப் பார்ப்பார்கள். அதாவது இவர்கள் நல்லவர்களாம், அப்பாவிகளாம். சாதாரணமான நல்லவர்கள் அல்ல எல்லாருக்கும் நல்லவர்கள். CPM பாசிச்டுகளுக்கும் இவர்கள் நல்லவர்கள். அதனால்தான் இப்படி அப்பட்டமான தனது நடவடிக்கைகள் மூலம் CPM தன்னை பாசிஸ்டுகளாக வெளிக்காட்டிக் கொண்டாலும் இவர்கள் அதனை தைரியமாக கட்சி ரீதியாக அம்பலப்படுத்தி பேசத் துணிவதில்லை. தனிப்பட்ட முறையில் கிசு கிசு பேசுகிறார்கள்.

CPI, CPMயிலுள்ள உண்மையான மக்களை நேசிக்கும் தோழர்கள் மட்டுமல்ல மனிதாபிமானமுள்ள அனைவருமே செயல்பட வேண்டிய தருணம் இது. இந்து மத வெறி பாசிசமும், மறுகாலனிய பாசிசமும் தனது முழு வேகத்தில் நாட்டை நாசமாக்கி வரும் பொழுது சமரசங்களும், புரட்சிக்கு குறுக்கு வழிகளும் இப்படி அதிகார வர்க்க சேவையில் வந்தே முடியும். கடைசியில் மக்கள் விரோதிகளாக மாறி வரலாற்றிலானால் படு கேவலமாக பழிக்கப்படும் நிலைக்கு ஆளாவோம்.

CPI அணிகளே உங்களது உண்மையான கம்யுனிஸ உணர்வை வெளிகாட்டுங்கள். CPM ஒரு பாசிஸ்டு கட்சி அது கம்யுனிஸ்டு கட்சியல்ல என்று மக்களிடம் இன்று அம்பலப்படுத்த தவறினால், அது கம்யுனிஸத்துக்கு செய்யும் துரோகம், உங்களுக்கே நேர்மையில்லாத செயலாகும். CPIயின் கையாலாகத தலையாட்டி பொம்மை தலைமையை கேள்வி கேட்டு அந்த போலி ஸ்தாபனத்திலிருந்து வெளியேறுங்கள். ஜனநாயக சக்திகளே பாசிச சக்திகள் முற்று முதலாக அம்பலப்பட்டுள்ள சூழலை மக்களிடம் விமரிசையாக கொண்டு செல்லுங்கள்.

வரலாறு நமக்கு வாய்ப்புகளை அள்ளி வழங்குவதில்லை….. இதோ வரலாறு கரிசனத்துடன் நமக்கு அபரிமிதமாக அள்ளிக் கொடுத்துள்ளது…. வாருங்கள் பயன்படுத்திக் கொள்வோம். ஒவ்வொரு டீக்கடையையும், ஒவ்வொரு சந்திப்பையும், ஒவ்வொரு உரையாடலையும், ஒவ்வொரு சொல்லையும் ஆயுதமாக பயன்படுத்தி இந்த மக்கள் விரோத அமைப்புகளை தனிமைப்படுத்துவதுடன் இவற்றில் உள்ள நல்ல நண்பர்களையும் மீட்டெடுப்போம்.

அசுரன்

Related Articles:

நந்திகிராம்: சிந்தனைச் சிற்பிகளின் கடிதமும் ஒரு மாவோயிஸ்டின் பதிலும்

Party Zindabad People Murdabad

“They kill people like birds”

BENGAL SHOWS THE WAY

Arundhati Roy on CPM Facists


Thanks: Tehelka

Sunday, November 04, 2007

வரலாறு பழிக்கிறது நாம் கோமாளிகள் என்று!

குஜாரத்தின் இன அழிப்பு படுகொலைகள் குறித்து பலமுறை பேசியாகி விட்டது. ஆயினும்.... மோடி என்ற இந்துத்துவ பயங்கரவாத நாய் குறித்து பலமுறை பேசியாகிவிட்டது. ஆயினும்.... பார்ப்ப்னிய பயங்கரவாதம் குறித்தும் பாசிசம் குறித்தும் மயிர் பிளக்க பேசி வார்த்தை கடல்களையே உருவாக்கிவிட்டோம். ஆயினும்.... நமக்கு விரும்புகிற வாய்ப்புகள் கிடைத்த இடத்திலெல்லாம் இந்துத்துவ பயங்கரவாதிகளை அந்த கடலில் முக்கியெடுத்து மூச்சு திணறடித்து வார்த்தைகளால் அடித்தே விரட்டி விட்டோம். ஆயினும்.... வார்த்தைகளால் இட்டு நிரப்ப முடியாத பயங்கரவாத வெளி என்பது இன்னும் பெரிய அளவில் விரிந்தே கிடக்கிறது. எந்தளவுக்கு என்றால் இந்துத்துவ அபாயம் குறித்த உண்மைகளை உணராமல் இருக்கும் கோடிக்கான மக்களுக்கும் இந்துத்துவ எதிர்ப்பு படிப்பறை கும்பலுக்கும் உள்ள இடைவெளி எந்தளவுக்கோ அந்தளவுக்கு. இது குஜராத்துக்கு மட்டும் பொருந்தும் உண்மையல்ல. இந்துத்துவ பயங்கரவாதமும் வெறும் அரட்டை அரங்க கூட்டத்தில் தோற்க்கடித்து ஓட விரட்ட வேண்டிய கூட்டமுமல்ல. ஆயினும்.... நாம் அப்படித்தான் இன்று வரை நம்பிக் கொண்டிருக்கிறோம்.

சமீபத்திய தெஹல்கா அம்பலப்படுத்திய குஜராத இனப் படுகொலை குறித்தான உண்மைகள் இந்துத்துவ பயங்கரவாதம் குறித்து வார்த்தைகளால் புரிய வைக்க முடியாத இடைவெளியை இட்டு நிரப்பும் ஒரு முயற்சியாகவே பார்க்கத் தோன்றுகிறது. புரட்சிகர ஜனநாயக் சக்திகள் என்று சொல்லிக் கொள்ளும் நமது கடமையோ மக்களுக்கும் இந்துத்துவ எதிப்பரசியலுக்கும் இடையே உள்ள இடைவெளியை இட்டு நிரப்புவதற்க்கு இந்த முயற்சியை பயன்படுத்திக் கொள்வதாக இருக்கிறது. ஆதிக்கத்தில் இருப்பவன் அப்பாவிகள் மீது தொடுக்கும் திட்டமிட்ட வன்முறைகள் நம்மை எப்பொழுதுமே கிளர்ந்தெழச் செய்கின்றன, அது ஈழமானலும் சரி, வட கிழக்கு - காஸ்மீரானலும் சரி. இது இனம், மதம், சாதி சார்ந்து வெளிப்படும் கோபமல்ல. மனிதம் குறித்தானது. சுயமரியாதை குறித்தானது. மனிதம் அவமானப்படுத்தப்படும் போதெல்லாம் இந்த கோபமும் ஆற்றமையும் வெளிப்படுகிறது.

சாதாரண மனித உருவில் அழையும் ஒருவன் கர்ப்பினி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை கொன்று எல்லாரிடமும் காட்டும் வெறி பிடித்தவனாக இருக்க முடியுமா? மழலை பேசும் குழந்தைகளை கொன்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துபவனாக இருக்க முடியுமா? நாங்கள் இத்தனை பேரைக் கொன்றோம், இத்தனை பெண்களை வன்புணர்ச்சி செய்தோம், பெண்கள் பழங்கள் போல இருந்தனர் நாங்கள் புசித்தோம் என்று ஒருவனால் சொல்ல முடியுமா? அப்படி சொல்பவனை உயிருடன் வைத்திருக்கத்தான் தன்மானமுள்ள ஒரு சமூகம் விரும்புமா? அதுவும் தனது மனைவியை அருகில் வைத்துக் கொண்டே ஒருவன் இப்படி சொல்ல முடியுமா? இப்படி சொல்லும் ஒருவனை ஒரு சமூகம் தலைவனாக தேர்ந்தெடுக்கிறது என்றால் அதனை எப்படி புரிந்து கொள்வது? இவையெல்லாம்தான் குஜராத்தில் இன்று நடைபெற்றுள்ளன. இவை இந்துத்துவம் ஒரு சமூகத்தை எப்படி சீரழிக்க முடியும் என்பதற்க்கு சாட்சியமாகும். ஒரு பெண்ணாக தனது கணவன் அரங்கேற்றியுள்ள மனித தன்மையற்ற செயல் குறித்து குறைந்த பட்ச அதிருப்தி கூட வெளிப்படுத்தாமல் பெருமிதம் கொள்ள அந்த பெண்ணை தயார்ப்படுத்தியுள்ளது இந்துத்துவ அரசியலுக்கான ஒரு சோற்று பதம். சரஸ்வதி லஹரி படிப்பதற்க்கு பெண்களை தாயார்ப்படுத்தும் இந்துத்துவம், இன்னபிற மனு தர்ம வக்கிரங்களுக்கு இளைஞர்களையும், மாணவர்களையும் ஒட்டு மொத்த சமூகத்தையும் தயார்படுத்தி வருகிறது. நாமோ பழங்கதை பேசி(மட்டும்) கொண்டிருக்கிறோம்.

ஆனால் இந்துத்துவ பயங்கராவதம் வார்த்தைகளை நம்பி களமிறங்கிய கூட்டமல்ல, அதனது ஆணி வேர் இந்திய மக்களின் ஜனநாயகமில்லா சாதி உற்பத்தி உறவிலும், ஆயிரம் வருடங்கள் தனது ஆதிக்கத்துக்காகவே உருவாக்கி வைத்துள்ள கருத்து நிறுவனங்கள், வரலாற்று திரிபுகள் மீதுமே நிலை கொண்டுள்ளது. முக்கியமான இந்த அரசின் வர்க்க இயல்பில்தான் இந்துத்துவத்தின் ஆணி வேர் உள்ளது. இவற்றை அழிக்கும் அறிவுப் பூர்வ வேலைகள் என்பது எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கோ அல்லது அதைவிட மிக முக்கியமனதாக களத்தில் இவர்களை அடித்து விரட்டும் வேலை உள்ளது. ஆனால், உண்மையில் முற்போக்கு வேடம் போட்டு வோட்டு பொறுக்கி அரசியல் செய்யும் கட்சிகளோ இந்துத்துவம் அம்பலமாகியுள்ள இந்த நேரத்தில் ஆழ்ந்த கள்ளமௌனம் சாதிக்கிறார்கள். இதுதான் நம்மை மேலதிகமாக ஆத்திரமுறச் செய்கிறது. அந்த கட்சிகளின் அல்லக்கைகளாக கோஸ்டி கானம் பாடும் படிப்பறை கும்பலின் முதுகெலும்பற்ற தனம்தான் நம்மை காறி உமிழச் செய்கிறது. அந்த கட்சிகளின் தலைவர்களின் வர்க்க இயல்புதான் இப்படி ஒரு நிலையில் அவர்களை வைத்துள்ளது. தரகு வர்க்கமாக ஒரு தலைவன் இருப்பது சமரசம் அல்ல கருங்காலித்தனம் என்பதை உண்மையான மக்கள் விடுதலை விரும்பும் ஒவ்வொருவனும் உணர வேண்டிய நேரம் இது.

அரசு என்பது சிலர் நம்பிக் கொண்டிருப்பது போல சட்டமன்றம், நாடாளுமன்றம் அல்ல. அது தேர்தல் ஜனநாயக் குறித்ததும் அல்ல இவையெல்லாம் அரசாங்கமாகும். மாறாக அரசு என்பது நீதித்துறை, காவல்துறை, ராணுவம், சிறைச்சாலை, அதிகாரிகள் என்ற இயந்திரம் குறித்தது. இந்த ஒட்டு மொத்த இயந்திரமும் குஜராத படுகொலையை செய்வதற்க்கு தமது முழு சக்தியை செயலபடுத்தியுள்ளன. போலிசுக்காரகள் RSS, VHPன் கங்காணிகளாக வேலை செய்துள்ளனர், அடியாட்படையாகவும் வேலை செய்து தப்பித்து ஓடும் முஸ்லீம் மக்களை சுட்டுக் கொன்றுள்ளனர், முஸ்லீம் மக்களின் வணிக நிறுவனங்களையும் வீடுகளையும் குறிபார்த்து அடிக்க தேவையான தகவல் தர அரசு அதிகாரிகள் முழு நேரம் வேலை செய்துள்ளனர், குண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள் தயாரித்து பயன்படுத்தியுள்ளனர், நீதித்துறையோ இந்துத்துவ கொலைகாரர்களை பாதுகாக்க தேவையான எல்லா வேலைகளையும் செய்துள்ளது, செய்யாத குற்றங்களுக்கு 10 வருடங்கள் கோடூரமான தண்டனை அனுபவித்து விட்டார் மாதானி என்பவர். ஆனாலும் தாம் செய்த படு பாதக குற்றங்களை தைரியமாக சொல்லிக் கொண்டு தலைவர்களாக உலாவருகிறார்கள் இந்துத்துவ கொலைகாரர்கள். இவர்கள் ஒரு வேலை சிறைச்சாலைக்கு சென்றாலும் அங்கும் தமது சுக போக வாழ்வை நடத்தவே செய்வார்கள் ஏனெனில் சிறைச்சாலை என்பதும் அரசு எந்திரம்தான். இவையெல்லாம் தெஹல்கா அம்பலபடுத்தியுள்ளது வெறும் சம்பவங்கள் குறித்த உண்மைகளை அல்ல. அது அம்பலப்படுத்தியுள்ளது நம்மால் சீரணிக்க இயலா சமூக உண்மைகளை. நம்மை செயலுக்கு தூண்டும் கடினமான உண்மைகளை.

இது ஏதோ குஜராத்துக்கு மட்டுமான உண்மை என்று பலரும் இன்று மௌனம் சாதிக்க கூடும், உலக தமிழ் த்லைவர் மீதும், இன்னபிற இத்தியாதி ஹோல்சேல் முற்ப்போக்கு டீலர்கள் மீதும் நம்பிக்கை வைத்து செயலின்றி இருக்க எண்ணக் கூடும். அவர்களுக்கு நாம் எச்சரிக்க கடமைப் பட்டுள்ளோம். ஏனேனில் குஜராத்தின் இந்துத்த்துவ மனநோய் கோத்ராவில் உருவாகி, குஜராத் படுகொலையில் வெளிவந்து இன்று குஜராத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கவில்லை. அது ஒரு நீண்ட கால பின்னணி கொண்டது. தெஹல்கா அம்பலப்படுத்தியுள்ளது மோடியை அல்ல, இந்துத்துவத்தை, ராம ராஜ்ஜியத்தை . மோடியை மட்டும் மாட்டிவிட்டு தப்பிக்க எண்ணுகிறது பார்ப்ப்னியம். நாமோ மோடி குறித்துக் கூட மக்களிடம் சென்று பேசாமல் மௌனம் சாதித்து பார்ப்ப்னியத்திற்க்கு ஒத்து ஊதுகிறோம்.

குஜராத் இனப் படுகொலைகள் தற்செயலானவை அல்ல, வெகுவாக திட்டமிட்டவை என்பதை தெஹல்கா அம்பலப்படுத்தியுள்ளது. ஆனால் மும்பை குண்டு வெடிப்புக்கு தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ள வேளையில் அதற்க்குக் காரணமான மும்பை கலவரமும், பாபர் மசூதி இடிப்பும் தீர்ப்பு வழங்காமல் இருப்பதும் அதன் குற்றவாளிகள் தைரியமாக அகில இந்திய தலைவர்களாக வலம் வருவதும் தற்செயலானவை அல்ல, கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக கண் குரூடானவர் கூட குற்றவாளியாக சேர்க்கப்பட்டு நேர்மை தவறா நீதிமன்றத்தால் பெயில் மறுக்கப்பட்டு பத்து வருடங்களுக்கு மேல் சிறையில் வாடுவதும், அந்த குண்டு வெடிப்புக்குக் காரணமான கோவை கலவரத்திற்க்குக் காரணமானவர்கள் மீது ஒரு சிறு துரும்பு கூட இது வரை நீதிமன்றமும் போலிசும் வீசியெறியாததும் தற்செயலானவையல்ல. குஜராது முதல் மும்பை, கோவை வரை பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாகவும், குறிப்பிட்ட சமூகத்தையே குற்றவாளியாகவும் ஒட்டு மொத்த மீடியாவும், சினிமாவும், அரசு இயந்திரங்களும் சித்தரித்து வன்முறை செலுத்துவதும், இதே நேரத்தில் முஸ்லீம் குண்டு வைத்தது போல செட்டப் செய்து நாக்பூர் RSS தலைமையகத்தில் விஹெச்பி குண்டு வைத்ததற்க்கும், நாண்டட்டில் குண்டு தயாரிக்க முயன்று VHP தொண்டர்கள் இறந்த போதும், அங்கு மற்றும் இன்ன பிற இடங்களில் முஸ்லீம்கள் போல வேடம் போட்டு குண்டு வைக்க VHP திட்டமிட்டுள்ளது குறித்து பல்வேறு ஆதாரங்கள் கிடைத்த போதும், அப்பட்டமாக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுத பயிற்சிகளை RSS குண்டர்கள் செய்வது குறித்து சில ஆண்டுகள் முன்பு பத்திரிக்கைகளில் அம்பலமாகிய போதும் அவர்கள் மீது ஒரு துரும்பைக் கூட இந்த அரசும் அரசாங்கமும் வீசாதது தற்செயலானது அல்ல.

காவிரி நீர் முதல் பல்வேறு விசயங்களில் வலிந்து மௌனம் காக்கும் நீதிமன்றம், ஜெயலலிதாவின் குற்றத்திற்க்கு அவரின் மனசாட்சிக்கு கோரிக்கை வைத்த கையோடு அதே குற்றத்திற்க்காக பல்லாயிரம் அரசு ஊழியர்களை பலி வாங்கியதும் தற்செயலானது அல்ல. வேலை நிறுத்தம் செய்வது குற்றம் என்று வியாக்கியானம் செய்த கையோடு AIMS பார்ப்பன மருத்துவ மாணவர்கள் வேலை நிறுத்தம் செய்தால் மட்டும் அவர்களுக்கு எல்லா வசதிகளும் செய்து தர நீதிமன்றம் அன்புமணிக்கு உத்தரவிட்டதும் தற்செயலானது அல்ல. அணு ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் ஏன் பேச முடியாது என்று விசாரிக்கக் கோரிய மனுவை விசாரணைக்குக் கூட எடுக்க முடியாது என்றதுடன் வழக்குகளை விசாரணைக்கு எடுப்பது எனது விருப்பம் சார்ந்தது என்ற கையோடு, கருணாநிதி அரசாங்கம் பார்ப்ப்னியத்திற்க்கு எதிராக ஏதோ செய்கிறார் என்ற தெரிந்தவுடன் உச்சி குடுமி களைந்தாட கண்டனக் குரல் எழுப்பி நீதிமன்றம் மிரட்டியதும் தற்செயலானது அல்ல. இவையெல்லாம் அரசு என்பதற்க்கும் அரசாங்கம் என்பதற்க்கும் இடையே உள்ள வேறுபாட்டை உணர்ந்து கொள்ள உதவும் தருணங்கள். அரசு என்பதுதான் சாசுவதமன உண்மை, அரசாங்கம் என்பது நிர்வாகத்திற்கான் ஒரு அமைப்புதான் என்ற இந்த உண்மைகளை உணர்வதற்க்கு ஒருவனுக்கு அடிப்படை பகுத்தறிவு இருந்தால் போதும். ஆனால் பகுத்தறிவு என்றும் சுயமரியாதை என்றும் ஹோல்சேல் வோட்டுரிமை பெற்ற கும்பல்கள் யாரும் இந்த உண்மைகளை வேண்டுமென்றே புரியாதது போல நடிப்பதுதான் நமக்கு ஆகக் கேவலமானதாக தெரிகிறது.

இதோ இந்துத்துவம் கடந்த ஐந்தாறு வருடங்களில் அன்னியச் செலவானி மோசடி, லஞ்சம் வாங்குது, முதல் தாய்நாட்டை வேறு யாரையும் விட வேகமாக கூட்டிக் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு விசயங்களில் அம்பலமாகியுள்ளது, அம்பலப்படுத்தியுள்ளனர். இதனை எந்தளவுக்கு நாம் மக்களிடம் கொண்டு சென்றுள்ளோம். பார்ப்ப்னிய எதிர்ப்பிற்க்கு உரிமை கொண்டாடும் கட்சிகளின் நண்பர்களே உங்களது தலைமை இந்த சம்பவங்களின் போதும், இப்போதும் என்ன செய்து கொண்டிருக்கீறது என்பதை பார்த்துக் கொண்டுதானே இருக்கீறீர்கள்? நேற்று குஜராது, நாளை கர்நாடகா, நாளை மறுநாள் தமிழ்நாடு. தெஹல்காக்கள் அம்பலப்படுத்தும் வீடியோ கேசட்டுகளின் எண்ணிக்கை மட்டுமே கூடும் - செத்து விழும் சிறுபான்மை மற்றும் உழைக்கும் மக்களின் எண்ணிக்கைக்கு இணையாக.

எந்த திருடனும் நோட்டம் விட்டுத்தான் திருடுகிறான். இந்துத்துவ பயங்கரவாதியும் களத்தை தனக்கு சாதகமாக தயார்ப்படுத்திவிட்டே காரியமாற்றுகின்றனர். அரசாங்கத்தில் இருந்தால் எல்லாம் கிழித்துவிடலாம் என்று தமது செயல்பாடுகளை வோட்டு பொறுக்கி அரசியலுக்குட்ப்பட்டே வைத்துக் கொள்ளும் போலி முற்ப்போக்காளர்களோ இந்துத்துவம் களத்தை தயார் செய்யும் காலங்களில் படுத்துறங்கிவிட்டு அது களப்பணி செய்யும் பொழுது கள்ளமௌனம் சாதிக்கிறார்கள். குஜராத் இனப் படுகொலைகள் தீடீரென்று வெடித்தவையல்ல. குஜராத் சமூகம் இந்த வக்கிரங்களை கண்டும் காணாமல் இருப்பதும் கூட தீடிரென்று ஏற்ப்பட்டவையல்ல. கீதாபென் என்ற பெண் இஸ்லாமிய காதலனை திருமணம் செய்த ஒரே காரணத்துக்காக, தனது கணவனை RSS கருங்காலிக் கும்பலின் கையில் ஒப்படைக்காமல் காப்பாற்றியதற்க்காக அந்த பெண்ணை நடு வீதியில் மக்கள் கூடி நின்று பார்க்க நிர்வாணமாக்கி கல்லால் அடித்து கொன்றது RSS கும்பல். ரத்த விளாறியாக ஆதரிக்க ஆளின்றி கீழே கிடந்த அந்த பெண்-அந்த பிணத்தின் கையில் அவளது கிழிந்த உள்ளாடை இருந்தது. ஒரு வேளை வாய் கொழுப்பு சீலையில் வடிய முற்போக்கு பேச மட்டும் செய்து விட்டு களத்தில் இந்துத்துவ பயங்கரவாதிகளை கண்டு கொள்ளாமல் இருக்கும் நமது முகத்தில் அந்த உள்ளாடையை விசிறியடிக்க மறுமை உலகில் காத்திருப்பதைத்தான் அவள் கைகளில் துவழும் உள்ளாடைகள் உணர்த்துகின்றனவோ. இது போன்ற பல சம்பவங்களில் ஒன்று ஆகும் இது.

இந்துத்துவம் RSS அல்லது BJP போன்ற சில அமைப்பு சார்ந்த விசயமோ அல்ல என்ற பேருண்மையையும் குறிப்பிட விரும்புகிறேன்(இது குறித்து இன்னொரு சந்தர்ப்பத்தில் விலாவாரியாக) அது ஒரு வர்க்க இயல்பு என்ற வகையில் இந்த தரகு வர்க்க ஆட்சியதிகாரத்தில் பங்கெடுக்கும் அத்தனை பேரிடமும் நிலவும் சித்தாந்தமாகும்.

இந்துத்துவத்தின் எதிரி இஸ்லாமியன் அல்ல என்ற கடைசி உண்மையையும் இங்கு சொல்லுவதே சரியானதாக இருக்கும். பார்ப்ப்னிய மேலாதிக்கத்துக்கு எதிரான எதுவும் இந்துத்துவ அரசியலின் எதிரிதான். தமிழத்தை அல்ல ஈரேழு உலகத்தையும் ஆட்சி செய்பவராக இருந்தாலும் பார்ப்ப்னிய அரசுக்கு எதிராக அரசாங்கம் செயல்பட முடியாது. அப்படி செயல்பட்டால் கீதாபென்னுக்கும், குஜராத் அப்பாவிகளுக்கும் நிகழ்ந்ததுதான் நமக்கும். ஆம் உயிருடன் வாழ பல எளிமையான வழிகள் உள்ளன. பாரதிதாசன் வார்த்தைகளில் சொலவதென்றால், நக்கிக் குடி, நாயினும் தாழ்ந்து போ.

மாறாக நம்மை மனிதர்கள் என்று நாளைய சமூகத்துக்கு நிரூபிக்க வேறொன்றும் செய்யலாம். பார்ப்ப்னியத்தின் இந்துத்துவ அரசியல் தூதுவர்களை வீதிகளில் சந்தித்து ஓட விரட்டி அடிக்கலாம். கீதாபென்னுக்கு தண்டனை கொடுத்த இந்துத்துவ பயஙகரவாதிகளை நாம் இந்திய வீதிகள் எங்கும் அதே போலான தண்டனைகளுடன் சந்திக்கலாம். இதோ இன்றே ஆளுக்கொரு கல்லெடுத்து, குறிப்பாக பெண்கள். ஆனால் அப்படி செய்தால் கருணாநிதியை மிரட்டியது எதுவோ அது, கீதேபென்னும், குஜராத் அப்பாவிகளும் கொலை செய்யப்படும் பொழுது வேடிக்கை பார்த்ததோடல்லாமல், உதவி செய்தது எதுவோ அது - அதாவது இந்த தரகு வர்க்க அரசு நம்மீது தனது தாக்குதலை தனது முழு பலத்துடன் தொடுக்கும். அப்பொழுது யாரும் அரசாஙக்த்தில் இருந்து கொண்டே பார்ப்ப்னக் கொழுப்பை பிடுங்கி எறீந்துவிடுவோம் என்று பொய் பேசித் திரிந்து கொண்டிருக்க மாட்டார்கள். ஏனேனில் எல்லைகள் தெளிவாகிவிடும் காலம் அது. இதோ அப்படியொரு போராட்டத்திற்க்கு மக்களை அணி திரட்ட வரலாறு நமக்கு தெஹல்கா ரூபத்தில் ஒரு அருமையான வாய்ப்பை வழங்கியுள்ளது. கைகள் கட்டுண்ட வீரபாண்டியன் போல வீரவேசம் பேசிய நாம் இனி மேலும் செயல்படாவிட்டால் கோமாளிகள் என்றுதான் அடையாளப்படுத்தப்படுவோம்.

அத்தனை அயோக்கியத் தனங்களையும் செய்து விட்டு இந்துத்துவ பயங்கரவாதம் ஆர்ப்பரித்து வருகிறது.... காவி இருள் படர்கிறது....

நீங்கள் கோமாளிகளா? சுயமரியாதை வீரர்களா? சொல்ல வேண்டாம் செய்து காட்டுங்கள்....

அசுரன்


Related Articles:

பார்ப்பனீயத்தின் சோதனைச்சாலை : நமது முகத்தில் விசிறியடிக்கப்பட்ட கீதா பென்னின் உள்ளாடை

இப்படித்தான் இருக்கும் ராம ராஜ்ஜியம்

இந்து மதவெறி பயங்கரவாதம் ! மதவெறிக்குமபல் பா.ஜ.கவும் இதர ஓட்டுப் பொறுக்கிக்கட்சிகளும் !!

குஜராத் பயங்கரம்: தெகல்கா-இந்தியா டுடேவின் அதிர்ச்சி வீடியோ

மதன் சாவலின் சக்கர வியூகம் !

மோடியிசமும் - இந்திய மதச்சார்பின்மை முகமூடியும் !

பய பீதியில் மோடியும், ஜெயலலிதாவும் - பாசிசம்=கோழைத...

Friday, November 02, 2007

குறை கூலி தேசத்து சொப்பன சுந்தர/சுந்தரிகளே!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருவதால் உலகமய இந்திய பொருளாதாரம் குறிப்பாக தகவல் தொழில் நுட்பத் துறையும், டெக்ஸ்டைல் உள்ளிட்ட ஏற்றுமதி சார்ந்த தொழில்களும் பாதிப்படைந்துள்ளன. IT கம்பேனிகள் தமது ஊழியர்களின் சம்பளத்தில் கை வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. இத்தனைக்கும் உலகிலேயே இந்திய IT ஊழியர்கள்தான் மூன்றாவது குறைந்த சம்பளம் பெறுபவர்களாக உள்ளனர் (முதலிடம் ஞாபகம் இல்லை, இரண்டாம் இடத்தில் பிலிப்பைன்ஸ் உள்ளது).
இந்நிலையில் சம்பள உயர்வு என்பது பழைய கனவாக ஆகி விட்டால், அதுவும் இதே உலகமய பொருளாதாரத்தின் விளைவால் விலைவாசி மிக மோசமாக உயர்ந்து வரும் வேலையில் IT யுப்பி கும்பல்களின் எதிர்கால ந்஢லைமை பிரகாசமானதாக தெரியவில்லை. இந்நிலையில் பழைய கட்டுரை ஒன்றை இங்கு மீண்டும் பிரசூரிப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதியதால் பின்வரும் கட்டுரையை பதிப்பிக்கிறேன்.

மேலும் உலகிலேயே மூன்றாவது குறைந்த கூலி இந்திய IT தொழிலாளி வாங்கினாலும் கூட எப்படி அது மிகப் பெரிய சம்பளமாக உள்ளது என்ற விசயத்தை கிழே உள்ள சுட்டியிலுள்ள கட்டுரை பேசுகிறது.

ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை!

இதே நேரத்தில், 100% வருமானவரிச் சலுகை முதல் பல்வேறு சலுகைகளை அனுபவித்துக் கொண்டு கோடிகளில் லாபம் சம்பாதிக்கும் IT கம்பேனிகள் ஒரு எறும்புக் கடி போன்ற ரூபாயின் சிறு மதிப்புயர்வுக்கே சம்பளத்தில் கை வைக்க முடிவு செய்துவிட்டனர். ஒருவேளை நாளை இந்த சலுகைகளும் பறிக்கப்பட்டால் என்னாகும்....
அப்பயம் நாடு வல்லராசாகவே இருக்கும், கனவுகள் காணச் சொல்லி அசரீரிகள் ஒலிக்கும், இந்தியா ஒளிர்ந்து கொண்டே இருக்கும்.

அசுரன்

*************************************
லேஆப்ஃ(Lay Off), லேஆப்ஃ குறித்த பயம், சந்தையின் உத்திரவாதமின்மை மற்றும் பங்கு சந்தை சரிவு குறித்த பயம், தாரளமாக சகட்டு மேனிக்கு முதலீடு செய்தல், வார இறுதி நாட்களில் தலையை அடகு வைத்தாவது இன்பம் நுகர எத்தணிப்பது, வீட்டுக்கள் ஒருவர் வேலை முடித்து வரும் பொழுது இன்னொருவர் வேலைக்கு கிளம்பும் ஒரு விதமான உறவு முறை இயல்பாக மாறிப் போனது, நுகர்வு வெறி, தனக்கு முடியாத அளவுக்கும் அதிகமாக விசயங்களை இழுத்துப் போட்டுக் கொள்வது, தன்னையே சந்தேகப்படுவதும், தன்னைச் சுற்றி உள்ளவர்களை சந்தேகப்படுவதும் - இவையெல்லாம் உலகமயம் இந்தியாவுக்கு கொடுத்த பரிசுகள் என்று நாங்கள் சொல்லவில்லை. சத்யம் நிறுவனத்தின் இணை நிறுவனர் G.B. பிரபாத் சொல்கிறார்.

இந்த விசயங்கள் எல்லாம் சேர்ந்து உலகமய பொருளாதார அமைப்பில் பின்னி பிணைந்துள்ள அனைத்து வர்க்கங்களையும், அனோமிய் என்ற மனோநோய்க்கு இட்டுச் செல்கிறது. இந்த அனோமிய் பின்புலமாக கொண்டு ஏகாதிபத்திய சமூக அமைப்பை கலாச்சார, பண்பாட்டு தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்து ஒரு நாவல் எழுதியுள்ளார் பிரபாத்.

அதாகப்பட்டது, உலகமய பொருளாதாரத்தின் உடன் விளைவாக அது சார்ந்த உற்பத்தி உறவுகளில் ஈடுபட்டுள்ள மனிதர்களுக்கு வரும் மனோவியாதியை அடிப்படையாகக் கொண்டு சத்யம் கம்யுட்டரின் இணை நிறுவனர்(Co Founder) G.B. பிரபாத் ஒரு நாவல் எழுதியுள்ளார். அது குறித்து இந்து பத்திர்க்கையின் மெட்ரோப்ளஸ் அவரை அணுகி ஒரு சிறிய உரையாடல் ஒன்றை நடத்துகிறது. அந்த அனுபவம் ஒரு சிறு கட்டுரையாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.

உலகமயத்தின் பலன்களை அனுபவித்தவர்களில் ஒருவரான அவர், உலகமயம் சார்ந்த சுரண்டல் பொருளாதாரத்தின் அடிப்படையில் இந்தியாவின் முகத்தை மாற்றியவர்களில் முக்கியமானவரான அவர், அதன் பின் விளைவுகள் அவருடன் உற்பத்தி ரீதியாக நெருங்கிய தொடர்புள்ள வர்க்கத்தினரையே(IT employee etc) பாதிப்பதை உணர்கிறார். ஆக, அந்த அம்சத்தில் உலகமயத்தின் மோசமான பக்கங்களை அம்பலப்படுத்துகிறார். உலகமய ஏகாதிபத்திய பொருளாதாரத்தை அவர் படு மோசமான அளவு விமர்சிப்பதாக மெட்ரோ ப்ளஸ் சொல்லுகிறது.

தரகு வர்க்க பிரபாத் சொல்கிறார்: "நான் பங்களித்து உருவாக்கிய ஒரு உலகம் எனது மனதை கவர்தாக இல்லை". "சில நேரங்களில் நம் நோக்கத்திற்க்கு மாறான விசயங்களை உருவாக்கி விடுகிறோம்".

யுப்பி கலாச்சாரமும், தனி மனித நுகர்வு வெறியும், ஒட்டு மொத்த சமூகத்தின் உயர் பண்புகள் அதலபாதளத்தில் புதைக்கப்பட்டும் உள்ள சூழலில் (இது பொதுவாக புரட்சிகர சூழலுக்கு முந்தைய சூழல்தான்) இது போன்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதில் அவரது தொழில் துறையின் பங்களிப்பை மதிப்பிட்டு கூறியவைதான் மேலெயுள்ள அவரது வரிகள்.

வேலைவாய்ப்பு, ஐந்திலக்க சம்பளம், சராசரியை விட சிறிது(சிறிது மட்டுமே) சுகமான(சுகாதாரமான அல்ல) வாழ்க்கை இவற்றை காரணம் காட்டி உலகமயத்திற்க்கு ஆதரவாகவும், தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்களின் உரிமைகளுக்கான குரல்களுக்கு எதிராகவும் கோசமிடும் IT தொழிலாளர்களை இங்கு விவாதம் செய்ய அழைக்கிறேன். உங்களது துறையைச் சேர்ந்த முன்னணி வீரர் ஒருவர் வாயிலிருந்துதான் நாங்கள் சுட்டிக் காட்டும் அதே பிரச்சனைகள் பற்றிய அங்க்லாய்ப்பு வந்துள்ளது.

நாங்க சொன்னாக்க நம்ப மாட்டீங்க. இவர் சொல்றாரே என்ன சொல்லப் போறீங்க....?

'அமெரிக்காவின் மிகபரவலான நோய் - தனிமை' இது இந்தியாவில் இப்பொழுது பரவி வருகிறது என்கிறார் இவர். மேலும், 'இங்கு தனிமையில் இருப்பவர்கள் பெரும்பான்மையாகவும், பிறர் அவர்களிடமிருந்து துண்டிக்கப்பட்டும் உள்ளன்ர். இந்த புதிய சூழலுக்கு சரியான பெயர் வைக்க விரும்புகிறேன்' என்கிறார். தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள் யாரேனும் இந்த பெயர் வைப்பு வைபவத்திலும் அவருக்கு உதவலாம்.

பொருள் நுகர்வு நாட்டம், கட்டவிழ்த்து விடப்பட்ட முதலாளித்துவம், தொழில்நுட்ப சாதனங்களைச் சார்ந்த ஒரு வாழ்க்கை இவை அனைத்தும் சேர்ந்து உருவாக்கும் ஒரு நிச்சயமற்ற சமுதாயம் குறித்த நிலையை சித்த்ரிக்கிறது அந்த நாவல். ஆயினும் இன்றைய இந்தியாவின் இளைய சமுதாயம் அப்படிப்பட்ட ஒரு சமூக வாழ்வை அடைவதைத்தான் லட்சியமாகக் கொண்டுள்ளனர்.

"ஆனால் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது. அப்படி ஒரு நிலை இருப்பதை நாம் உணர்வதில்லை அல்லது அதிலிருந்து ஓடி ஒளிய விரும்புகிறோம். முரன்நகையாக, தகவல் தொடர்பின் உச்சத்தில் உள்ள ஒரு உலகத்தில், தனிமையும், அதீத அச்சமும், மனச் சஞ்சலுமும்தான் அதிகப்படியாக உணரப்படுகிறது. எந்த ஒரு உறவும் உத்திரவாதப்படுவதாக இல்லை." இப்படி சொல்வது நாம் அல்ல. ஏகாதிபத்தியத்தின் குலக் கொழுந்து திருவாளர் பிரபாத், சத்யம் இணை-நிறுவனர் கூறுகிறார்.

"அதிகப்படியான தனிமனித வாதம் நிலவுகிறது, முற்றுமுதலாக நாம் தனி மனித மோக வயப்பட்டுள்ளோம், நாம் இணையத்தின் மூலமாக ஒரே ஒரு நபரிடம் மட்டுமே தொடர்பு கொள்கிறோம் அது நாம்தான்' - இப்படி ஏகாதிபத்திய தனிமனித வாதத்தின் அவலத்தை அம்பலப்படுத்துகிறார் பிரபாத்.

"எனது தாத்தாவோ அல்லது உங்களது தாத்தாவோ தனது வேலையை இழந்து விடுவது குறித்தோ அல்லது தனது மனைவி தன்னைவிட்டு விலகிவிடுவது குறித்தோ கவலைப்பட்டதுண்டா?" இப்படி கேட்ப்பது நாமல்ல. இது போன்ற நிலையிலுள்ள வர்க்கத்தை சுரண்டி, கொழுத்த லாபம் சேர்க்கும் தரகு வர்க்க முதலாளி பிரபாத் கேட்க்கிறார்.

சொல்லுங்கள் IT தொழிலாளர்களே என்ன பதில் சொல்லலாம் என்று? பிரபாத் உங்களுக்கு உலகமயத்தின் நன்மைகள் பற்றி தெரியாது என்று அறீவுரை பகர்வோமா? தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு சாலவும் சிறந்த் ஒரு எதிர்காலம் ஒளிமயமாக காத்திருக்கிறது, உங்களது பயம் ஒரு துர் கனவு என்று ஆலோசனை சொல்லுவோமா? வேலை வாய்ப்பு குறித்து RBIயும் சொல்கிறது, உலகமயத்தின் சாரதிகளில் ஒருவரும் சொல்கிறார் இன்னுமா மயக்கம்?

அவர் தொழில்நுட்பம் முதலாளித்துவ/ஏகாதிபத்தியத்தின் கையில் மாட்டிக் கொண்டு படும் பாடு குறித்தும் குத்திக் காட்டுகிறார், "தொழில்நுட்பத்தை நாம் எப்படி கையாளுகிறோம் என்பதிலும் அதை வைத்து என்ன செய்ய விரும்புகிறோம் என்பதிலும் தான் விசயம் உள்ளது. தொழில்நுட்பம் என்பதை பொருத்தளவில் தன்னளவில் எந்த ஒரு நல்லது கெட்டதுகளை கொண்டிருப்பதில்லை."

முதலாளித்துவத்தின் இழி நிலை குறித்து அவர் மேலும் குறிப்பிடுகிறார். "முதாலாளித்துவத்தால் செலுத்தப்படும் தொழில் நுட்பம் குறித்து யாரேனும் எச்சரிக்கை செய்து கொண்டிருக்க வேண்டும்". "முதலாளித்துவம் நமது உள்ளுணர்வுகளை கட்டவிழ்த்து விடுகிறது, நாமோ நம்மைச் சுற்றியுள்ள எல்லாமே நம்க்கு தீங்கு விளைவிக்கும் என்றூ பார்க்கிறொம்'. இதே விசயத்தைத்தான் இயற்கையுடன் முரன்படும் ஏகாதிபத்தியம் என்ற தலைப்பில் இரு கட்டுரையாக இங்கு பிரசுரிக்கப்பட்டது.

பிரபாத்தின் இந்த கட்டுரை கூட தனிமனித வாதத்தின் அடிப்படையில்தான் பிரச்சனையை அணுகுகிறது. அது எந்த அம்சத்திலும் உலகமய பொருளாதாரத்தில் ஆதாயமடையும் துறைகளில் ஏற்ப்படும் விளைவுகளை சித்தரிப்பதைத் தாண்டி, இதே பொருளாதாரம் இந்தியாவின் இதர பெரும்பான்மை மக்களின் வாழ்வை சுனாமியாக சூறையாடி இருப்பது குறித்து எதுவும் சொல்லுவதாக தெரியவில்லை.

நாம் எதை இழந்து எதை பெறுகிறீர்கள்? கணிணியுடன் இணைந்து அதன் ஒரு உறுப்பாக மாறி சொந்த வாழ்க்கையை இழப்பதுடன், சமூக வாழ்க்கையையும் இழந்து திக்கற்ற நிற்கிறோம். எந்த ஒரு தொழிலில் ஈடுபடுபவனுக்கும், அந்த தொழிலில் ஈடுபடும் உடல் உறுப்பு(கை, கால், விரல் etc) செய்யும் வேலைக்கேற்ற பாதிப்பை அடையும். அப்படியெனில் கணிணியின் ஒரு அங்கமாக மாறிப் போன நமது மூளைக்கு என்னவிதமான பாதிப்பு ஏற்ப்படுகிறது?
பெங்களூரில் போன வருடம் தற்கொலை செய்து கொண்டவர்களில் பெரும் சதவீதத்தனிர் IT துறையினர் என்ற விசய்ம் நமக்கு எதை உணர்த்துகிறது? மனோ தத்துவ நிபுனர்களை அணுகுபவர்களில் அதிகம் பேர் IT துறையினர் என்ற் தகவல் எதைக் காட்டுகிறது? நமது மன அழுத்தத்தை குறைக்க நம்மை சுரண்டிக் கொழுக்கும் தரகு வர்க்க முதலாளிகள் அரங்கேற்றும் கேளிக்கைகள் எதைக் காட்டுகிறது?

குறைந்த கூலி என்ற அம்சமும், இந்திய பணத்தின் மதிப்பு டாலருக்கு நிகராக குறைவாக இருப்பது இந்த அம்சங்கள் உண்மையாக இருக்கும் காலம் மட்டுமே நமது வேலை உத்திரவாதப்படுத்துகிறது. நமது மென்பொருள் தயாரிக்கும் திறமையல்ல மாறாக அவனுக்கு லாபம் தயாரித்துக் கொடுக்கும் திறமை-அதாவது குறைந்த கூலி- இதுதான் மதிக்கப்படுகிறது. இது தவிர்த்து உலக பொருளாதார சூழல், நம்மைவிட குறை கூலி உழைப்பை வழங்க தயாராயிருக்கும் வேறு நாடுகள், உள்நாட்டிலேயே வெளி நாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த வழி வகுக்கும் SEZ. இப்படி கண் முன்னே நமது உரிமைகளை குழி பறிக்க தேவையான விசயங்கள் நடக்கும் போது கூட சுகநாட்ட வாதத்தில் மூழ்கி திளைத்து நிதர்சனத்தை உள்வாங்கும் திறன் இழந்து நிற்கிறோமே என்ன செய்யலாம்?

வார இறுதி நாட்களிலும் வேலை, IBM-ன் யுட்டலிசேசன் டார்கெட்(90% மேல் ஒவ்வொரு நபரும் billable ஆக இருக்க முயற்சி செய்ய வேண்டும்), விப்ரோவின் மாணவ தொழிலாளர்கள், இப்படி நமது உழைப்பை சுரண்டி கோடிகளில் குளீர் காயுபவர்கள், கம்பேனியின் ஒரு துறையில் லாபம் இல்லையென்றவுடன் சம்பளத்தை குறைப்பதும் நடக்கிறது. கம்பேனி ஒட்டு மொத்தமாக லாபம் எடுக்கும் போதே இவ்வாறு எனில் இந்திய தொழிலாளர்கள் இனிமேலும் அவர்களின் டார்லிங்குகள் கிடையாது என்ற நிலை வரும் பொழுது என்ன செய்வார்கள்? இது தவிர்த்து பல்வேறு உடல் உபாதைகள் வேறு.

நம்மை விட அதிக உரிமைகளை சட்ட ரீதியாக பெற்றுள்ள அமெரிக்க தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் கூட இந்த கம்பேனிகளின் அநியாயங்களை எதிர்த்து போரிடுவதற்க்கு சங்கமாக திரண்டுள்ளனர். அதுவும் அமெரிக்க கார்ப்போரேட் வரலாற்றில் முதல் முறையாக IBM IT (Alliance@IBM) தொழிலாளர்கள் சங்கமாக திரண்டு பென்சன் பணத்தில் அவன் கைவைப்பதை எதிர்த்து போராடி வெற்றி பெற்றுள்ளனர். உரிமைகள் உத்திரவாதமான அவர்களுக்கே சங்கம் தேவைப்படுகிறது, நமக்கு?

IT தொழிலாளிக்கு எதிராக எப்படியெல்லாம் ஆப்பு வைப்பது, சுரண்டலை அதிகப்படுத்தி எப்படியெல்லாம் லாபத்தை அதிகப்படுத்துவது என்பது குறித்து கலந்து பேசி ஒரு பொது முடிவுக்கு வருவதற்க்கு IT முதலாளி சங்கமாக திரள்கிறான்(NASCOM, CII). National Skills Registry என்ற பெயரில் நமக்கு அடையாள எண் கொடுத்து மையப்படுத்தப்பட்ட ஒரு தகவல் கிடங்கை ஏற்படுத்தியுள்ளான். தேவைப்பட்டால் இந்தியாவின் எந்த ஒரு IT தொழிலாளி மீதும் கரும் புள்ளி குத்தி இந்தியாவில் அவனுக்கு எந்த இடத்திலும் வேலை கிடைக்க விடாமல் செய்யலாம். ஆக, எதிர்காலத்தில் IT தொழிலாளி மீது அவனுக்கு ஆதிக்கம் தேவைப்படும் என்பதை உணர்ந்து இப்பொழ்து தயாராகிறான் அவன். நாமோ பலி ஆடுக்கு நல்லா தீவனம் கிடைக்கிறது என்று தேமேவென்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

எதை இழந்து எதை பெறுகிறோம்? நமது பெற்றோர்கள் அரசு நிறுவனங்களில் வேலை பார்த்து ரிடையர் ஆகி வெளி வரும் பொழுது பெண்ணின் திருமணம், பையனின் படிப்பு, அது போக குறிப்பிடத் தகுந்த பென்சன், கையில் ஒரு பெரிய தொகை, இவை தவிர்த்து வீடு வாசல் அமைதியான வாழ்க்கை, உடல் ஆரோக்கியம் என்று இருந்தார்கள். நமது நிலைமை?

இந்த அம்சங்களையேல்லாம் விளக்கி ஒரு கட்டுரை ஆறேழு மாதங்களுக்கு முன்பு வந்து மிகப் பரவலாக அனைவராலும் மெயிலில் அனுப்பட்டது.

இதை விடுங்கள் ஒரு சமூகமே சீரழிந்து கொண்டிருக்கும் பொழுது, நாம் மட்டும் நல்லதொரு வாழ்க்கை வாழ்ந்திட முடியுமா? கார்போரேட் லெசன் என்ற பெயரில் சிறு கதைகள் அடங்கிய ஒரு இமேயிலை பெரும்பாலனவர்கள் படித்திருப்பீர்க்ள். அதில் குழுவில் ஒருவருக்கு பிரச்சனை வரும் பொழுது நாம் கண்டு கொள்ளாமல் இருப்பது நமக்கும் ஆபத்து வரும் பொழுது பேரிடராக இருக்கும் என்பதை வலியுறுத்தி ஒரு கதை வரும். இந்த சமூகம் ஒரு குழுவாக இணைந்து ஒவ்வோரு மனிதனின் தேவைகளை நிவர்த்தி செய்ய உற்பத்தி செய்கிறது. இதில் சமூகத்தில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெரும்பகுதி துன்பத்தில் துவளும் பொழுது நாம் மட்டும் எப்படி ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்திட முடியும்?

என்ன செய்யலாம்? க்ளையண்டின் பிரச்சனைகளை ஆய்வு செய்து தீர்வு சொன்ன நேரம் போக நமது பிரச்சனைகளையும் ஆய்வு செய்து தீர்வு குறித்து யோசிக்கலாம். After all, மற்ற யாரையும் விட சிந்திக்கும் திறமையிலும், அதற்க்கு தேவையான தகவலகளின் அருகாமையிலும் நாம் ஒரு சிறப்பான இடத்தில் இருக்கிறோம். பிரச்சனை நம்மை பற்றி சிந்திக்க நமக்குக் கிடைக்கும் சொற்ப நேரம்தான்......

என்ன செய்யலாம்?.....

அசுரன்



***********


அனோமிய் நோய் குறித்து:

ஒவ்வொரு சமூகமும், மனிதனும் தான் ஈடுபட்டுள்ள உற்பத்தியின் தன்மையைப் பொறுத்த அறிவு, மனவள முதிர்ச்சி அடைகிறான். இதுதான் சமூக பரிணாமத்துவம் குறித்த மார்க்ஸிய பொருள்முதல்வாதப் பார்வை. ஆக, ஏகாதிபத்திய சமூகத்தில் ஒரு பக்கம் நுகர்வு வெறி மூலமாகவும், இன்னொரு பக்கம் அதிகப்படியான சுரண்டல் மூலமாகவும்(12 மணீ நேரம் வேலை) சமூகத்துடனான தொடர்பை இழக்கிறான் மனிதன். அதே நேரத்தில் நுகர்வு வெறியை நியாயப்படுத்தவும், சமுகமாக தன்னை உணர்ந்து கூட்டுச் சேர்வதற்க்கான அடிப்படைகளை அடித்து நொறுக்கவும் தேவையான பல்வேறு பொதுக் கருத்துக்களை அவனது ஊடக பலத்தின் மூலம் உறுதிப் படுத்துகிறான். அப்படி ஒன்றுதான் தனிமனித வாதம். இதன் காரணமாக முந்தைய சமூகத்தின் மதிப்புவாயந்த பண்புகள் இன்று இழிச்சவாயத்தனமாகவும், முட்டாள்தனமாகவும் பார்க்கப்படுகிறது. விளைவு, இந்த சூழலிலான உற்பத்தியில் ஈடுபடும் ஒரு மனிதன் தனது பழைய உயர் மதிப்புகளை இழக்கிறான். இவை தவிர்த்து இந்த சூழல் உருவாக்கும் கலாச்சார பிரச்சனைகளும், தொழில் ரீதியான பிரச்சனைகளும், உடல், மன உபாதைகளும் சேர்ந்து உருவாக்கும் ஒரு மனோ வியாதிதான் - அனொமிய்.

"Alienation and purposelessness experienced by a person or a class as a result of a lack of standards, values, or ideals" - Anomie(அனொமிய்)

"தரம் தாழ்ந்த நிலை, உயர் பண்புகளை இழத்தல் இவற்றின் விளைவாக ஏற்ப்படும் அந்நியப்படுதலும், எந்த ஒரு குறிப்பிட்ட லட்சியமோ/நோக்கமோ அற்ற வாழ்க்கையும் ஏற்ப்படுத்தும் மனவியல் பிரச்சனை" - அனோமிய் எனப்ப்டுகிறது.

Must Read articles:

IBM IT union
software_job_india
workers-of-cyber-world-uniteatleast

corporate-lesson-secret-of-dreaming
it-survivors-staying-alive-in-software
are-we-living-at-mercy-of-their-profit
still-sleaping-jobs-started-flying
இயற்கையின் அழிவில் இன்பம் காண்போம் - பாகம் 1
அழிவில் லாபமும், லாபத்தால் அழிவும் - பாகம் II
கணிணி தொழில்நுட்ப வல்லுனர்களே !

இது குறித்து கருத்துக்களை ஆலோசனைகளை எனக்கு தனிமடலிலும் அனுப்பலாம்:

asuran07@gmail.com

Related Posts with Thumbnails