TerrorisminFocus

Thursday, January 20, 2011

உச்சிக் குடுமி மன்றத்தின் ஆர் எஸ் எஸ் தீர்ப்பு - தாராசிங்

ச்சரிக்கை செய்திருந்தது போலவே உச்சிக்குடுமி நீதிமன்றம் ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை வழக்கில் தாராசிங்கிற்கு மரண தண்டனையை நிராகரித்துள்ளது. மேலும், 11 ஆர் எஸ் எஸ் கிரிமினல்களின் விடுதலையையும் உறுதி செய்துள்ளது.

""
1998இல் பஜ்ரங்தள் கிரிமினல் தாராசிங்கால் பாதிரியார் ஸ்டெயின்ஸம் அவரது இரு பச்சிளம் குழந்தைகளும் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கின் நிலை அதைவிடக் கேவலமானது. தாராசிங்கிற்கு மரணதண்டனையும் 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து 2003 இல் தீர்ப்பளித்தது சி.பி.ஐ. நீதிமன்றம். பாதிரியை எரித்த கையோடு சையிக் ரஹ்மான் என்ற வியாபாரியை எரித்துக் கொன்றது பாதிரியார் அருள்தாஸை வெட்டிக் கொன்றது ஆகிய வழக்குகளும் தாராசிங்கின் மீது உள்ளன. ஆனால் சி.பி.ஐ. நீதிமன்றமோ ஸ்டெயின்ஸ் பாதிரியார் எரிக்கப்பட்ட சம்பவம் அரிதிலும் அரிதானதொரு சம்பவம் என்றது. சங்கப் பரிவாரங்களுடன் தாராசிங்கிற்கு உள்ள தொடர்புகள் குறித்து ஆதாரங்கள் நீதிமன்றத்தின் முன்பு வைக்கப்பட்டன. ஆனால் இந்த படுகொலையில் எந்த அமைப்புக்கும் தொடர் பில்லையென்று கூறியது சி.பி.ஐ. நீதிமன்றம்.

இந்த விளக்கங்களுக்குப் பொருத்தமானதொரு தீர்ப்பாக தாராசிங்கின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும் 11 பேரை விடுதலை செய்தும் 2005இல் தீர்ப்பு வழங்கியது ஒரிசா உயர்நீதிமன்றம். பாதிரியாரைக் கொலை செய்யும் வகையில் தாராசிங் தாக்கியதற்கு ஆதாரமில்லை என்று வேறு உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
"" (புதிய ஜனநாயகம் 2010)

2005ல் இப்படியென்றால், 2010ல் உச்சிக்குடுமி மன்றம் இன்னும் ஒரு படி மேலே சென்று, மத மாற்றம்தான் இந்தப் படுகொலைக்குக் காரணம் என்ற அரியதொரு ஆர் எஸ் எஸ் கண்டுபிடிப்பை மக்களுக்கு வழங்கியுள்ளது.

"We hope Mahatma Gandhi's vision of religion playing a positive development integrating into a prosperous nation will be realized. There is no justification from interfering in someone's belief through force, conversion or false premise that one religion is better than the other."

இதைத்தானே ஆர் எஸ் எஸ்ம் சொல்லுது? அதாவது இனிமே எவனாவது மதமாற்றத்திற்கு பிரச்சாரம் செய்தால் கொலைகள் நிகழும் என்று ஆர் எஸ் எஸ்ன்  குரலில் சொல்கிறது உச்சிக்குடுமி மன்றம்.

தாராசிங் திட்டமிட்டு படுகொலைகள் செய்கிறவன் என்பதும், ஆர் எஸ் எஸ்-பஜ்ரங்தள்ளின் தலைவன் என்பதும் மறுக்க இயலாத அளவு நிருபிக்கப்பட்டுள்ள போதும் அவற்றை நீதிமன்றம் ஏற்கவில்லை எனவே அவனுக்கு ஆயுள் தண்டனை. அதே நேரத்தில் பினாயக் சென்னுக்கோ அவர் அரசின் அயோக்கியத்தனத்தை அமைதி வழியில் தட்டிக் கேட்டார் என்பதற்காகவே அவருக்கெதிராகக் கொடுக்கப்பட்ட எல்லாமே பொய் ஆதாரங்கள் என்ற போதும் ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அயோக்கியத்தனத்துடன் ஒப்பிடும் போது பிரிட்டிஷ்காரன் கூட கொஞ்சம் நேர்மையா இருந்தானே?

இப்படி, நீதிமன்றங்களே ஆர் எஸ் எஸ்ன் பினாமிகளாக இருக்கும் போது ஆப்டர் ஆல் பத்ரி சேஷாத்ரியின் கிழக்குப் பதிப்பகமும், பா.ராகவனும் ஆர் எஸ் எஸ் பினாமிகளாக இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

தங்களை நடுநிலைவாதிகள் என்றும், இந்தியாவில் ஜனநாயகம் என்ற ஏதோ ஒன்று, எங்கோ ஒளிந்து கொண்டிருப்பதாகவும் அதனைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் இந்த இடத்தில் சிந்திக்க வேண்டும்.

அசுரன்


காவிக் கறை படிந்த தீர்ப்புகள்



இது துரோகத்தின் விளை நிலம்!


பினாயக் சென்னை விடுதலை செய்! சென்னையில் HRPC மறியல், 90 பேர் கைது!!


பினாயக்சென் விடுதலை: அரசை எதிர்த்ததால் இரண்டாண்டு சிறைவாசம்!!


டீச்சர்.. அருந்ததி ராய் என்னக் கிள்ளிட்டா - நிர்மலா சீதாராமன்!!


சீமான் கைது - இது ஆரம்பம் மட்டுமே!!!


அயோக்கியா: தீர்ப்பும், வரலாறும்!!

Related Posts with Thumbnails