TerrorisminFocus

Monday, April 30, 2007

மேதின வாழ்த்துக்கள்!





மே 1 ரிலையன்ஸ் முற்றுகைப் போராட்டத்தில் ஜனநாயக சக்திகள் எல்லாம் கலந்து கொண்டு ரிலையன்ஸ் எதிர்ப்பை உரக்க ஒலிப்போம்!





Saturday, April 28, 2007

கண்ணை மறைக்கும் காவிக் குடுமி - இந்துவும், இந்து தேசியமும்!

இந்துவும், இந்து தேசியமும்:
நம்மை நோக்கி எப்பொழுதுமே வெகு சுலபமானதொரு கேள்வி ஒன்றை கேட்பார்கள் பார்ப்ப்னியத்தின் ஆதரவாளர்கள். அதாவது, 'ஏன் எப்பொழுதும் இந்துத்துவத்தை மட்டும் விமர்சிக்கிறீர்கள் இதே போன்று மற்ற மதங்களை விமர்சிப்பதில்லையே'.

இதற்க்கு நாம் பொதுவாக, இந்துத்துவம் எனப்படும் பார்ப்ப்னியம் ஒரு மதமல்ல, அது ஒரு அடக்குமுறைத் தத்துவம், மேலும் பார்ப்ப்னியமே இந்தியாவின் அனைத்து அடிப்படைவாத வெறிகளுக்கும் மூல தத்துவம், மேலும் ஏகாதிபத்திய சுரண்டலுக்கு ஏதுவான சமூக சூழலை உருவாக்குவதும் பார்ப்ப்னியமே எனவே அதனை எதிர்ப்பதுதான் எமது முதல் கடமை. மற்றபடி பிற மத அடிப்படைவாதங்களை தேவையான போது மதம் என்ற அடிப்படையில் விமர்சித்தே வந்துள்ளோம். என்பதாக நமது பதில் இருக்கும்.

ஆனால் இந்த இடத்தில் பார்ப்ப்னியத்தின ஆதரவாளர்கள் ஒரு பித்தலாட்ட வேலை செய்கிறார்கள். நாம் இந்துத்துவம் என்று எதிர்ப்பது பார்ப்ப்னியத்தை மட்டுமே, ஆனால் இவர்கள் நம்மை பார்த்து கேள்விக் கேட்க்கும் போது இஸ்லாம், கிறுத்துவர் தவிர்த்து அனைத்து வழிபாட்டு முறைகளையும் இந்துத்துவத்திற்க்குள் அடக்கி கேள்வி கேட்பார்கள்.

ஆக, விசயம் இதுதான். 'இந்துத்துவத்தை தான் நீ எதிர்ப்பாயா? வேறு எதையும் எதிர்க்க மாட்டாயா?' என்று நம்மிடம் கேள்விக் கேட்க்கப்பட்டால், நாம் பதிலுக்கு அவர்களிடம் கேட்க்க வேண்டிய கேள்வி:

'இந்துத்துவம் என்று நீ எதை சொல்கிறாய்?'

'நான் எதிர்ப்பதைத்தான் இந்துத்துவம் என்று சொல்கிறாய் எனில் அது பார்ப்னியம் மட்டுமே'.

நாம் பார்ப்ப்னியத்தை திட்டுவதையே எல்லா இந்திய வழிபாட்டு முறைகளையும் திட்டுவதாகவும், நாம் பார்ப்ப்னிய தேசியத்தை திட்டினால் ஒட்டு மொத்த இந்திய தேசியத்திற்க்கே விரோதமாக திட்டுவதாகவும் கண்டனம் செய்வதன் மூலம் இவர்கள் இரண்டு உண்மைகளை இவர்கள் வாயாலேயே ஒத்துக் கொள்கிறார்கள்.

#1) இந்துத்துவம் எனப்படுவது பார்ப்ப்னிய வர்ணாஸ்ரம தர்மமே. அதாவது அது ஒரு மதமல்ல. சமூக ஒடுக்குமுறை தத்துவம் என்ற உண்மையை ஒத்துக் கொள்கிறார்கள்.

#2) இந்து அல்லது பார்ப்னிய தேசியம் என்பதுதான் இந்திய தேசியம் என்ற உண்மையையும் ஒத்துக் கொள்கிறார்கள்.

நாட்டார் வழிபாட்டு முறைகளை அழிக்கும் பார்ப்பனியம் குறித்து நாம் கேள்விகள் கேட்ட பொழுது இவர்கள் பதில் சொல்லாமல் நழுவிப் போனதில் இந்த உண்மை இன்னும் எடுப்பாக தெரிந்தது.

பார்ப்ப்னியம் குறித்தும், தேசியம் குறித்தும் இந்த புரிதல்தான் இவர்களை ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளாக கூச்ச நாச்சமின்றி வேலை செய்யச் செய்கிறது. எப்படியெனில் பெரும்பான்மை மக்களின் வாழ்வை நாசமாக்கும் வகையில் ஏகாதிபத்தியங்கள் இந்திய இறையாண்மையை குப்பைத் தொட்டியில் வீசினால் இவர்களுக்கு வலிக்காது. ஏனேனில் அவ்வாறு செய்யும் போது இவர்களின் பார்ப்ப்னிய தேசியத்தின் இறையாண்மைக்கு எந்த குந்தகமும் ஏற்ப்படுவதில்லை. அத்துடன் தரகு பணமும் கிடைக்கிறது(ஏகாதிபத்திய நிறுவனங்கள் இங்கே சுரண்டுவதற்க்கு மாமா வேலை பார்த்து கிடைக்கும் தரகு பணம்).

இதே அடிப்படையில்தான் இவர்களின் தலைவன் 'பெரும் பொய்யன்' கோல்வால்கர் பிரிட்டிஸ் காலனியாதிக்கத்திற்க்கு அடிமை சேவகம் செய்தான். எப்படியெனில், "பிரிட்டிஸ் அரசு மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் பதி விரதை பாரத மாதவை கூட்டிக் கொடுக்கலாம். ஆனால் இந்து (ie: பார்ப்ப்னியத்தின்) பெருமைக்கு மட்டும் குந்தகம் வந்து விடக் கூடாது. எமது கருத்தில் பிரிட்டிஷ் அரசு இந்து தர்மத்திற்க்கு (அதாவது பார்ப்ப்னிய தர்மத்திற்க்கு) குந்தகம் விளைவிக்கும் அரசாக இல்லாதவரை அவர்கள் வெளியேற வேண்டிய அவசியமில்லை"(#1, #2) என்றான்.

அப்போ பாரத மாதா? அட போடா அபிஸ்டு, கூட்டிக் கொடுத்தா காசு வருமுன்னாக்க அத்த செய்றதுல என்ன துன்பம் வந்தச்சு? ஒரு யாகம் செஞ்சாக்க எல்லாம் சரியாப் போயிடாது?

பாரதா மாதகி ஜொய்ங்............



இப்படிப்பட்ட அரசில் இந்துவுக்கு என்ன இடமிருக்கும்?

ஆக, பெரும்பான்மை இந்துக்கள் என இவர்கள் குறிப்பிடும் மக்களின் வாழ்க்கையுடன் எவன் எப்படி விளையாண்டாலும் பரவாயில்லை. பழைய காலத்து நம்பியார் படம் போல பாரத மாதாவை துரத்தி துரத்தி வன்புணர்ச்சி செய்தாலும் இவர்களுக்கு கவலையில்லை. இவர்களுக்கு நோக்கம் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 'பார்ப்பனர்கள் மட்டுமே உள்ளே நுழைய அனுமதி' என்ற பலகை மீது ஏகாதிபத்தியமோ அல்லது வெறு வெளிநாட்டு சக்திகளோ(வேற யாரு? கம்யுனிஸ்டுகள், ஜனநாயக சக்திகளைத்தான் வெளிநாட்டு சக்திகள் என்று இவர்கள் சொல்கிறார்கள்) கை வைத்து இந்து தர்மத்திற்க்கு அழிவை உண்டாக்கிவிடாமல் இருந்தால் போதும். இதற்க்காக பல தலைமுறைகள் வெளிநாட்டிலேயே வாழ்ந்த பார்ப்ப்னிய தேசத்து மைந்தர்கள் சதி செய்வதெல்லாம் உள்நாட்டு புனித போராக பார்க்கப்படும்.

நீங்களே பாருங்கள், ஆடம் பிரிட்ஜ் என்று இயற்கையாக உருவான ஒரு பாலம் சிரிலங்காவையும் இந்தியாவையும் இணைக்கிறது. இதனை உடைத்து சேது சமுத்திரம் கட்டுவதில் ஏகாதிபத்தியத்தின் திட்டம் ஒன்று உள்ளது. அது இந்திய கடல் வளத்தை கொள்ளையடிப்பது மற்றும் யுத்த கேந்திர ரீதியாக இந்திய கடல் பரப்பில் இலகுவாக அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவது என்ற அமெரிக்காவின் ராணுவ பொருளாதார நலன்களுக்கான ஒரு திட்டமே. ஆக, இவர்களின் சந்தைப் போட்டிக்காக இந்திய மக்களின் வாழ்வை நிர்மூலமாக்காதே என்ற அடிப்படையில் நாம் அந்த திட்டத்தை எதிர்க்கிறோம்.

இதே திட்டத்தை இதே அமெரிக்க மேலாதிக்கம் என்ற ஆச்சர்யகரமான முழக்கத்துடன் இன்னொரு கும்பலும் எதிர்க்கிறது. என்னாடாதி அதிசயம் 'கண்ணை மறைக்கும் காவிக் குடுமி'யையும் மீறி அமெரிக்க மேலாதிக்கம் இவர்கள் கண்ணுக்கு தெரிந்ததோ என்று ஆச்சர்யப்படும் வேலையில்தான் இன்னோரு முழக்கம் காதில் விழுகிறது - 'ராமன் பாலத்தை உடைக்காதே! அங்குதான் ராமன் குந்த வைத்து மேம்படி வேலைகளைச் செய்தான்!' என்று.

இதோ இங்கு மீண்டும் பார்ப்ப்னிய தேசத்தின் இறையாண்மை என்பது ராமன் மேப்படி வேலைகள் செய்த இடத்தின் புனிதம் காக்கும் அளவில்தான் உள்ளது என்பதையும், மக்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து இந்த கற்பனாவாதி கபோதிகளுக்கு கிஞ்சித்தும் அக்கறை கிடையாது என்பதையும் நிரூபித்துவிட்டார்கள். உண்மையில் இவர்களின் பார்ப்ப்னிய தேசியத்தில் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நலன்களுக்கு எந்த இடமும் இல்லை என்பதையும் எடுப்பாக காட்டுகிறார்கள்.

இப்படிப்பட்ட அரசில் இந்துவுக்கு என்ன இடம் இருக்கும்? இவர்கள் வாயிலிருந்தே நமக்கு தெளிவாக புலப்படும் விசயம் இந்து என்று இவர்கள் சொல்வது பார்ப்ப்னியர்களையே(பிறப்பின் அடிப்படையில் அல்ல மாறாக பார்ப்ப்னிய பண்பாட்டை சுவீகரித்த எவரும் பார்ப்ப்னியரே). அப்படியெனில் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் இந்துக்கள் கிடையாது என்பதுதான் இவர்களே மறைமுகமாக ஒத்துக் கொள்ளும் உண்மை. ஏனேனில் பார்ப்ப்னியம் என்று இவர்கள் சொல்லும் விசயங்களை ஒருவன் படித்து தத்துவரீதியாக அதனை சுவீகரிக்க வேண்டும் எனில் அவன் குறைந்தது நடுத்தர வர்க்க பின்னணி கொண்டவராக இருக்க வேண்டும். எனவே உழைக்கும் மக்கள் இந்து என்ற பொதுவாக நிலவும் கருத்தின் அடிப்படையில் இவர்களுக்கு அடியாள் வேலை செய்ய திரள்வார்களே அன்றி, இவர்களின் ராஜ்ஜியத்தில் அவர்களின் நலனுக்கென்று ஒன்றும் கிடையாது. ஆக, இந்துக்கள் அல்லாதவருக்கு இந்து தேசத்தில் என்ன இடம் என்று கோல்வால்கன் சொல்கிறானோ அதே இடம் தான் சர்டிபிகேட் படி இந்து எனப்படுபடும் உழைக்கும் மக்களுக்கும் தரப்படும்.

நாட்டார் வழிபாட்டு தெய்வங்களை நயவஞ்சகமாக அழிப்பதற்க்கும், பிற மதத்தவர் வழிபாட்டு தளங்களை அப்பட்டமாக அழிப்பதற்க்கும் உள்ள வித்தியாசம் போன்ற ஒரு வித்தியாசம் வேண்டுமானால் உழைக்கும் மக்கள் இந்துவுக்கும், பிற மதத்தவருக்கும் இருக்கலாம். அழிவு என்னவோ நிச்சயம். பார்ப்ப்னியத்தில் கறைந்தது போக சில சொற்ப அடையாளம் மட்டும் மிஞ்சலாம். ஆனால் ஒரு விசயம், சர்டிபிகேட்டி இந்து என்று போட்டுக் கொள்ளும் உரிமை விட்டு வைக்கப்படும். ஏனேனில் அடியாள் வேலை செய்ய ஒரு ஐடெண்டிட்டி தேவைப்படுகிறதல்லவா?

இவர்களின் நடவடிக்கைகளும் பார்ப்ப்னியத்தின் நலன் காக்கும் அம்சத்தில் மட்டுமே உள்ளது. தவிர்க்க இயலாமல் ஏகாதிபத்தியத்தின் நாகரிக நடவடிக்கைகள் பார்ப்ப்னியத்தின் பழைய பஞ்சாங்க (ஆடம் பிரிட்ஜை இடிப்பது போன்று) நடவடிக்கைகளுடன் முரன்படும் இடத்தில் மட்டும்தான் இவர்கள் இருவரும் வேறு வேறு வர்க்கங்கள் என்ற விசயம் வெளி வருகிறது. இடஓதுக்கீடு விசயத்தில் கூட சும்மா ஒரு கொள்கை தீர்மானத்தை மட்டும் நிறைவேற்றி விட்டு உண்மையில் இவர்களின் அணிகளை எல்லாம் இடஓதுக்கீடு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளச் செய்தனர். ஏன் இடஓதுக்கீடை ஆதரிக்கும் இவர்கள் அதனை எதிர்த்தவர்களின் மண்டயை உடைத்து வீட்டுக்கு அனுப்பும் ஒரேயொரு போராட்டம், ஒரேயொரு துண்டறிக்கை வெளியிட்டார்களா? ஷில்பா செட்டியின் ஜட்டி வெளியே தெரிந்தால் கூட ஊரே அலற ஒப்பாரி வைக்கும் இந்த மடவெறி கூட்டம் இடஓதுக்கீட்டிற்கு ஆதரவாக வெறும் தீர்மானம் மட்டும் இயற்றினார்கள் எனில் இவர்களின் மொசடி என்னவென்பதை புரிந்து கொள்ளலாம்.



சாதியை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லையே?
ஆம் இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஏனேனில் சாதி என்ற மேல் ஓடு தனது உண்மையான அர்த்தத்தை இழந்து விட்டது. "பாருங்களேன் கொடுமையை, டோண்டு என்ற ஒரு பார்ப்பன சாதியைச் சேர்ந்தவர் பிராமணனுக்குரிய எந்த பண்பும் இன்றி வெறும் அடையாளத்தை மட்டும் தூக்கிக் கொண்டு வலம் வருவதை, பாருங்களேன் பாசமிகு தம்பி நீலகண்டன் ஒரு பிராமணனுக்குரிய எல்லா அம்சங்களுடன் வலம் வருவதை" - இப்படி மறைமுகமாக நமக்கு சொல்கிறார்கள் நீலகண்டன் போன்ற RSS வெறியர்கள்.

ஏன் இது ஏற்பட்டது? எவ்வளவுதான் சாதி ரீதியாக பிறப்பின் அடிப்படையில் பொருளாதார நலன்களை பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வந்தாலும், சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் சாதி வேறுபாடுகளை மீறி தாழ்த்தப்பட்ட, பிற்ப்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலானவர்கள் செல்வாக்கு படைத்தவர்களாக மாறி நிற்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பார்ப்ப்னியம் அவ்வப் பொழுது சந்தித்து வரும் ஒரு பிரச்சனைதான். அதுவும் குறிப்பாக பிரிட்டிஸ்க்காரகள் இந்தியாவின் ஆசிய பொருளாதார அமைப்பை சிதைத்தன் மூலம் இந்த போக்கை வீரியமாக்கினார்கள். பட்டா போட்டு நிலத்தை தனியுடமை ஆக்கினார்கள். நிலவுடைமை என்பதை சாதி கடந்த ஒரு விசயமாக வெள்ளையர்கள் மாற்றினார்கள்.

ஆக, இன்று சாதி என்பது எந்த வகையிலும் வர்ண அமைப்பின் விதிமுறைகளை ஏற்றுக் கொள்வதாய் இல்லை. சாதியை ஏற்றுக் கொள்வது எனில் சில அபிஷ்டு சர்டிபிகேட் பார்ப்பனரை பிராமனராக பார்க்க வேண்டும். அந்த முட்டாள்தனத்தை செய்வது நீலகண்டன் போன்ற சுத்தமான RSS பார்ப்பனர்களுக்கு ஏற்புடையதல்ல. ஆள் சேர்த்து ஆங்கீகாரம் பெறுவதற்க்கும் பிற சாதி அறிவுஜீவிகளை ஜீரணிக்க வேண்டியுள்ளது.

இந்த வர்க்க வர்ண முரன்பாட்டை எப்படி சமாளிப்பது? பார்ப்பனியத்தின் உண்மையான இன்றைய வரலாற்று கடமை என்னவாக இருக்க முடியும்? ஏற்கனவே சொன்னது போல பார்ப்ப்னியத்திற்க்கு இது ஒரு புதிய சிக்கலல்ல. வரலாற்றில் இது போல சிக்கல்களை சந்தித்த போதெல்லாம் அது தன்னை சிறிது ஜனநாயகப்படுத்திக் கொண்டு தப்பித்துவிடும்.

வர்க்க பிரிவுக்கும் வர்ண பிரிவுக்குமான முரன்பாடிற்க்கு வரலாறு நெடுகிலும் பல உதாரணங்கள் உள்ளன. குறிப்பாக சத்ரியர், பார்ப்ப்னர் சண்டையும் அதன் விளைவாக தத்துவங்களில் ஏற்பட்ட வளர்ச்சிப் போக்கின் வரலாறாகத்தான் வேத காலம் (மீமாம்சம், வேதாந்தம், சாருவாகம் etc) தொட்டு பகவத் கீதை காலம் வரையிலான வரலாறு உள்ளதாக பல வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள். விஸ்வாமித்திரர் எனும் சத்ரிய முனியன், பரசுராமன் எனும் பார்ப்ப்ன வெறியன் - இப்படி இன்னும் பல உதாரணங்கள். இந்த அம்சத்தில் விலாவாரியாக பேசுவது இந்த கட்டுரையில் சாத்தியமில்லை. இதை ஒரு hypothesisஆக எடுத்துக் கொண்டு தொடர்ந்து படிக்கவும்.

ஆக, சாதி என்பதை இவர்கள் இந்த அம்சத்தில்தான் ஏற்றுக் கொள்வதில்லை. அதாவது இனிமேலும் வர்ண அமைப்பின் புனிதம் காக்கும் வரையறைக்குள் சாதி என்ற வடிவம் இல்லை என்ற அர்த்தத்திலேயே.

அப்படியேனில், வர்ண அமைப்பு சரிதானா? என்று கேள்வி எழுகிறது. வர்ணம் என்பது குணத்தின் அடிப்படையில் உருவாகிறது என்கிறார்கள் இவர்கள். குணம் என்று இவர்கள் சொல்லும் மூன்று குறிப்பான குணங்கள் யாவும் பிறக்கும் போதே எற்படுவதல்ல என்பதை உயிரியலின் இது வரையான கண்டுபிடிப்புகளின் அடிப்படையிலேயே சொல்லலாம். அப்படியானால் வேறு எப்படி ஏற்ப்படுகிறது? உண்மையில் ஒருவனது குணம் அவன் பிறந்து வளரும் சூழலாலேயே பிரதானமாக தீர்மானிக்கப்படுகிறது. அப்படியெனில் இவர்கள் சொல்லும் இந்த குணங்கள் என்பவை இயல்பாகவே ஒருவனுடைய பொருளாதார பிரிவினடிப்படையிலான குணங்களே ஆகும். ஒரு ஏழை வீட்டில் பிறந்தவன், சேரியில் வளருபவன் எந்த காலத்திலும் பிராமனனுக்குரியதாக இவர்கள் சொல்லும் குணங்களுடன் வளரும் வாய்ப்புகளை மிக மிக குறைவாவே பெறுகிறான். அப்படியெனில் அவன் வர்ண படிக்கட்டில் கீழ் நிலைக்கு செல்கிறான். அவனது குழந்தையும் அதே நிலையில் தொடர்கிறது. ஆக மீண்டும் அது பிறப்பனடிப்படையிலான சாதி அமைப்பில்தான் போய் முடியும். ஒரு வேளை அதற்க்கு அப்பொழுது வேறு ஏதாவது பெயர் வைத்து அழைப்பார்கள். ஆனால் விசயம் இதுதான் - "ஒரு வர்க்க சமுதாயத்தில் , வர்ண சமுதாயம் சாதி சமுதாயமாகவே சீரழியும். தனியுடைமை அழிந்த ஒரு நவீன எதிர்கால வர்க்கமற்ற சமுதாயத்தில் வர்ண சமுதாயம் என்பது தேவையின்றி அழிந்து போகும்".

இதுதான் இவர்கள் சொல்லும் இந்து தேசியத்தின் லட்சணம், இதுதான் இவர்கள் சொல்லும் இந்து தர்மம். இதுதான் வரணாஸ்ரமத்தின் தன்மை. இவ்வளவுதான் இந்து உழைக்கும் மக்களுக்கு இவர்கள் தரும் இடம். இதனை புரிந்து கொண்டு இந்த மக்கள் விரோத தத்துவத்தை வேரோடு அழிக்க ஜனநாயக சக்திகள் அனைத்தும் புரட்சிகர சக்திகளுடன் அணி திரண்டு போராட வேண்டும். அதுதான் இந்திய தேசியத்தை இந்து தேசம் எனும் பார்ப்பன கொடுங்கோன்மையிலிருந்தும், மறுகாலனியம் எனும் ஏகாதிபத்திய கொடுங்கோன்மையிலிருந்தும் விடுதலை செய்யும் போராக இருக்கும்.

அதற்க்கு முதல் தேவையாக இந்து என்று இவர்கள் பிரதிநிதித்துவப் படுத்துவதாக சொல்லும் மக்களின் நலனும் உண்மையில் இவர்களின் சித்தாந்த பொருளாதார சார்பின் கீழ் பிரதிநிதித்துவப் படுத்தும் பார்ப்ப்னியர்களின் நலனும் வெவ்வேறு என்ற புரிதல் வேண்டும்.(அதாவது இந்து என்ற பொதுப் புரிதல் வேறு அவர்களின் அர்த்தத்தில் அது பார்ப்பனியர்களையே குறிக்கிறது).

இரண்டாவது தேவையாக இந்தியாவில் சாதி ரீதியாகவோ அல்லது மத ரீதியாகவோ அணி திரண்டு, அடையாளப்படுத்திக் கொண்டு இவர்களை எதிர்த்து எந்த பலனையும் அடைந்து விட முடியாது என்பது. உண்மையில் இப்படி அணி திரள்வது என்பது அவர்களின் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டே அவர்களை எதிர்ப்பது என்பதாகும்.

மூன்றாவது தேவையாக, பார்ப்ப்னிய பயங்கரவாதத்திற்க்கு என்று ஒரு வர்க்க இயல்பு உள்ளது என்பதையும், அந்த அம்சத்தில் அதனது பொருளாதார சுரண்டல் அடிப்படையை எதிர்க்காமல் அவர்களை தத்துவ தளத்தில் மட்டும் வெற்றி கொள்ள முடியாது என்பதாகும்.

இந்த புரிதல் வரும் பொழுது புரட்சிகர-ஜனநாயக சக்திகள் மட்டுமே இந்த மூன்று அம்சங்களையும் உள்ளடக்கி பார்ப்பினியத்திற்க்கு சாவு மணியடிக்கும் சித்தாந்த-அமைப்பு பலம் பெற்றவையாக இருப்பது புரிய வரும்.

01 Irul Nerunguthu... (If you have problem accessing click here)


அசுரன்





பாடல்: காவி இருள், மகஇக வெளியீடு


பாடல் ஒலிப் பேழைகள் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
இரா. சீனிவாசன், No 18, முல்லை நகர் வணிக வளாகம், இரண்டாவது நிழற்சாலை, அசோக் நகர், சென்னை - 83


தொலைபேசி: 23718706

Friday, April 27, 2007

நவீன கிழக்கிந்திய கம்பேனிகள் - SEZ!

ல்லாயிரம் வருடங்களாய் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் சொந்தமாக நிலமின்றி அல்லது சொற்ப நிலத்தில் கடுமையான உழைப்பைச் செலுத்தி பரம்பரை பரம்பரையாக மக்களின் உணவுத் தேவைக்காக உழைக்கிறான் இந்திய விவசாயி. உழவன் கணக்குப் பார்த்தால் உளக்குக் கூட மிஞ்சாது என்பது பழமொழி மட்டுமல்ல அது நிதர்சனமான உண்மை என்பதுதான் இந்திய சமூகத்தின் கோடூரமான விசயம்.

இந்த நிலையில் அவனுக்கு பதிலுக்கு இந்த சமூகம் எதுவும் செய்யாவிடில் கூட பரவாயில்லை. ஆனால் இருக்கின்ற வாழ்வாதாரத்தையும் பிடுங்கி நாடோ டியாக, உள்நாட்டு அகதியாக வீசுவது என்பது துரோகத்திலேயே பெரிய துரோகம். SEZக்கள் என்பவை அப்படிப்பட்டவையே.

SEZக்களுக்கு நவீன கிழக்கிந்திய கம்பேனிகள் என்று இன்னுமொரு பரிமாணம் இருக்கிறது. அதனை பிறகு பார்ப்போம். அதற்க்கு முன்பாக அதற்க்கு ரியல் எஸ்டேட் பிசினஸ் என்று இன்னுமொரு முக்கிய பரிமாணம் இருப்பதையும், அது விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் செயல் என்பதையும், இந்திய சுயச்சார்பின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை என்பதையும் பார்ப்போம்.

ரியல் எஸ்டேட் பிசினசும் - மாஃபியா அரசும்:

சிங்கூரில் டாடாவுக்கு என்று 'போலி கம்யுனிஸ்டு பாசிச CPM' அரசு மக்களை ஏமாற்றி வாங்கிய நிலத்திற்க்கு அவர்கள் கொடுத்த விலை 140 கோடி ரூபாய். இதற்க்கு டாடா கம்பேனி அரசுக்கு கொடுக்கும் விலை வெறும் 20 கோடி ரூபாய் இதையும் அரசே கடனாக கொடுக்கும். அதற்க்கான வட்டி என்பது மிக மிக மிக சொற்பமான அளவே ஆகும். கவனிக்கவும் சிங்கூர் நல்ல வளமான விவசாய நிலப்பகுதி என்பது குறிப்பிடத்தக்கது(ஏதோ - 220 percent crop density என்று சொல்கிறார்கள் எனக்கு ஒன்னும் புரியல, மொத்ததுல நல்ல விவசாய நிலம் என்று சொல்கிறார்கள் என்று மட்டும் புரிந்தது).

SEZக்களுக்கு ஒதுக்கப்படும் நிலங்கள் எல்லாம் குறைந்தது ஆயிரம், ஐயாயிரம் ஏக்கர் என்ற கணக்கில் ஒதுக்குகிறார்கள். அப்படியென்ன ஆயிரம் ஏக்கரில் பன்னாட்டு தரகு முதலாளிகள் மயிரப் புடுங்கி எறியப் போகிறார்கள் என்று பார்க்கும் முன்பு சில உண்மைகளைப் பார்த்து விடுவோம்.
பெங்களூர் எலெக்ட்ரானிக் சிட்டி எனும் தொழில்பேட்டை phase - I ன் அளவு முன்னூத்தி சொச்சம் ஏக்கர் மட்டுமே. அதில் 100க்கும் மேற்ப்பட்ட கம்பேனிகள் இருக்கின்றன. அவற்றில் பெரிய கம்பேனிகள் சிமன்ஸ், HP, இன்போசிஸ், விப்ரோ, சத்யம் உள்ளிட்டவை உள்ளன. இந்த கம்பேனிகளில் ஒவ்வொன்றும் பத்தாயிரம் எண்ணிக்கையில் ஆட்களை வேலைக்கு வைத்துள்ளனர். இது போக வங்கிகள், ஹோட்டல்கள், தங்குமிடங்கள் என்று பிற வசதிகளும் உள்ளிட்டே மூன்னூறு சொச்சம் ஏக்கர்தான். இவை அத்தனையும் நூறு கம்பேனிகளுக்கு மேல் ஒரே இடத்தில் இருக்கும் நிலையில். இந்தியாவில் இது போன்ற சிறப்பு தொழிற்பேட்டைகளில் மிகப் பெரியனவற்றுள் ஒன்று எலெக்ட்ரானிக் சிட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அடிவருடி அரசோ ஆயிரம், ரெண்டாயிரம், பல இடங்களில் 20,000 ஏக்கர் நிலங்களை அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டு கம்பேனிகளுக்கு ஒதுக்குகிறது எனில் அதில் எந்த ஒரு நேர்மையான நோக்கத்தையும் பார்க்க முடியவில்லை. அவர்களின் உண்மையான நோக்கம் ரியல் எஸ்டேட் பிசினஸ்தான். ஏனேனில், SEZயில் 25% மட்டுமே உற்பத்தி கேந்திரங்களாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மீதி இடங்களை கேளிக்கை விடுதிகள், தங்குமிடங்கள் உள்ளிட்ட விருப்பமான எவற்றை வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம் என்றும் அரசு சலுகை கொடுத்துள்ளது. உண்மையில் 20,000 ஏக்கரை விடுங்கள், ஆயிரம் ஏக்கர் அளவுக்கே கூட தொழிற்சாலை கட்ட நிலம் தேவைப்படாது.

கல்கத்தா புறநகர் பகுதி ராஜர்ஹாட்டில் ஒரு ஹோட்டா(ஒரு நில அளவுக்கான அலகு) 5000 முதல் 15000 ரூபாய் வரை கொடுத்து நிலங்களை எடுத்துக் கொண்டது ஹிட்கோ என்ற அரசு நிறுவனம். இன்று அந்த நிலங்களின் மதிப்பு 10-20 லட்சம் வரை உள்ளது. அதாவது SEZயில் 25% இடத்தில் 'நாட்டுக்கு உதவாத' தொழிற்சாலையை கட்டி வைத்து, மீதியுள்ள இடத்தை ரியல் எஸ்டேட் வேலைகள் செய்து அதிக விலைக்கு விற்று கோடி கோடியாக அவன் கொள்ளையடிக்க அரசாங்கம் எடுபிடி வேலை பார்க்கிறது. இப்போது கொஞ்சம் முன்பு சொன்னவற்றை மீண்டும் மனதில் ஓட விடுங்கள் விலை மதிப்பில்லா சிங்கூர் நிலங்களை 140 கோடி ரூபாய்க்கு வாங்கி அதனை 20 கோடி ரூபாய்க்கு டாடாவுக்கு விற்க்கும் ஒருவனை புரோக்கர் நாய் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது? அதற்க்காக மக்களை மிரட்டி, கடத்தி, சுட்டுக் கொல்பவனை ஃமாபியா என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது?

மும்பை, ஹைதராபாத், பெங்களூர் நகரங்களின் வளர்ச்சியின் உடன் விளைவாக ரியல் எஸ்டேட் பிசினஸும் வளர்ந்தது. அதனுடன் ரியல் எஸ்டேட் ஃமாபியாக்களும் வளர்ந்தனர். குறைந்த விலைக்கு சொத்துக்களை விற்க சொல்லி சொத்துக்களுக்கு சொந்தக்காரர்களை மிரட்டுவதுதான் இவர்களின் வேலை. ஆட்களை கடத்திச் சென்று கொல்வது உள்ளிட்ட எல்லா அக்கிரமங்களையும் இவர்கள் செய்வார்கள் இதோ நந்திகிராமத்திலும், சிங்கூரிலும் ரியல் எஸ்டேட் ஃமாபியாவாக அரசு நிற்கிறது. தமிழகத்தில் SEZ எனும் ரியல் எஸ்டேட் பிசினஸ்க்கு ஃமாபியா வேலை செய்பவராக தரகு தாத்தா கருணாநிதி நிற்கிறார் - "சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராக அனாவசியமாக பிரச்சனையை கிளப்புபவர்களை இந்த அரசு பொறுத்துக் கொண்டிருக்காது"(அவர் சொன்ன அதே வார்த்தைகள் நினைவில் இல்லை) இப்படி மிரட்டுகிறார் தாத்தா. எது அனாவசியம்? இந்தியாவின் வாழ்வை சூறையாட வரும் SEZ உனக்கு அத்தியாவசியம் எனில் உனது கணக்கில் எனது வாழ்க்கையே அனாவசியமாகிப் போகிறதே?


விவசாய நிலத்தை ஒதுக்குவது நியாயமா?
இந்தியா எனும் மிகப்பெரிய நிலப்பரப்பில் SEZக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் என்பது சொற்பம் என்று ஜல்லியடிக்கிறார் ஒருவர். இந்தியா உணவு தன்னிறைவு அடைந்த நாடு அல்ல. விவசாய உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டியுள்ளது. பூ இறால் பண்ணைகள் முதலானவற்றிற்க்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அத்தியாவசிய உணவு தாணியம் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவசாய நிலப்பரப்பை அதிகப்படுத்த வேண்டிய ஒரு நிலையில் தற்போதைய இந்தியா உள்ளது. இந்தியாவின் தற்போதைய விவசாய நிலப்பரப்பை இன்னும் விரிவு படுத்துவது, வளமான நிலங்களை நன்கு பயன்படுத்தும் அதே வேளையில், தரிசு நிலங்களை பண்படுத்தி விவசாய நிலங்களாக மாற்றுவது, விவசாயத்தை மையப்படுத்தப்பட்ட உற்பத்தி முறைக்குக் கொண்டு செல்வதன் மூலமாக சிறுக சிறுக விவசாய மக்கள் தொகையின் எண்ணிக்கையை குறைப்பது. இதனை ஈடுகட்டும் வகையில் பெரிய, சிறிய தொழிற்சாலைகள், பட்டறைகள் கட்டுவது இதுதான் உண்மையில் நாம் செல்ல வேண்டிய பாதை. இதுதான் உண்மையில் சமூகத்தின் ஒட்டு மொத்த அறிவு வளர்ச்சி, தொழில் நுட்ப வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்கும். ஆனால் இந்த விசயங்களை செய்யாமல் ஏமாற்றும் இந்த அரசு அதற்க்கு எதிர் திசையில் சென்று, இருக்கும் சொற்பமான வளமான நிலங்களையும் SEZக்கு கொடுப்பதை கொஞ்சமா ஏதோ கொடுத்துட்டு போறான் விட வேண்டியதுதானே என்று வெட்கமின்றி நியாயப்படுத்துகிறார்கள் மானங்கெட்டவர்கள். "உன் புள்ள குட்டிகளா ஒரே ஒரு நாள் வாடகைக்கு கொடேன், அதான் வருசம் முன்னூத்தி சொச்சம் நாள் நீ வைச்சிருக்க இல்லையா? ஒரேயொரு நாள் எனக்குக் கொடுத்தா குடியா முழுகிப் போயிரும்?" இதற்க்கு அந்த அடிவருடிகள் ஒத்துக் கொள்வார்கள் எனில் அதற்க்கப்புறம் இந்த SEZ விசயத்தைப் பேசிக்கலாம். ஆட்டோ க்காரனிடம் ஐந்து பைசாவுக்கு பேரம் பேசி கன்ஸ்யூமர் கோர்ட் போகும் நாதாரி நாய்கள், இவர்கள்தான் ஆயிரம் வருடங்கள் வியர்வை சிந்தி பண்படுத்திய விவசாய நிலத்தை SEZக்கு கொடுப்பதை சரி என்று சொல்கிறார்கள். யார் வீட்டு சொத்தை யார் விலை பேசுவது?

பிரச்சனைக்குரிய நந்திகிராம் பகுதி 100 கிராமங்களுக்கும் மேலானவற்றை உள்ளடக்கிய பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. பொது நலனுக்காக அல்ல மாறாக ஏதோ ஒரு தனியார் தரகு முதாலாளி கொள்ளை லாபம் அடிக்க லட்சக்கணக்கான மக்களை தியாகம் செய்யச் சொல்லி கேட்பதற்க்கு இவர்களெல்லாம் கொஞ்சம் கூட வெட்கப்படுவதில்லையே? சோற்றைத் தின்கிறார்களா அல்லது வேறு எதையுமா?

அதுவும் இந்த அயோக்கியத்தனம் அனைத்தும் 1894-ல் பிரிட்டிஸ்க்காரனால் போடப்பட்ட நிலம் கையகப்படுத்தும் ஒரு சட்டத்தின் பெயரிலேயே செய்யப்படுகிறது. இந்தியா விடுதலை பெறவில்லை என்பதற்க்கு இது ஒரு உதாரணம். உண்மையில் அரசின் கையில் ஏற்கனவே இருக்கின்ற நிலங்களையே தொழில் வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தலாம். அதனை விடுத்து இது போல கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அவர்கள் ஆக்கிரமிப்பதில் பன்னாட்டு - தரகு கும்பல்களின் விருப்பத்துக்கு ஆடும் விசுவாசமே வெளிப்படுகிறது.

விவசாய நிலங்களை இவர்கள் கையகப்படுத்துவதில் நியாயமான விலை பெரும்பாலும் கொடுக்கப்படுவதில்லை. பொதுக்கருத்தை உருவாக்கி, மக்கள் மனதில் பயத்தை ஏற்ப்படுத்தி அவசர அவசரமாக கிடைத்த விலைக்கு கொடுக்க வைக்கும் உளவியல் தந்திரங்கள் முதல் பல்வேறு தந்திரங்களை செய்து எவ்வளவு தூரம் விலையை குறைத்து கொடுக்க முடியுமோ அவ்வளவு குறைத்தே கொடுக்கிறார்கள் ஃமாபியா அரசும், கம்பேனிகளும். சிங்கூரில் ஒரு ஏக்கருக்கு 8 லிருந்து 12 லட்சம் வரை கொடுத்துள்ளனர். மஹாராஸ்டிராவில் 4 லட்சம்தான். பலருக்கு ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலமே சொந்தமாக இருக்கிறது. நிரந்தரமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரும் நிலமா? நிரந்தரமில்லா பணத்திற்க்கு விற்று விட்டு வாழ்வை தொலைப்பதா? இந்த இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கக்கூட வாய்ப்பின்றி அவர்கள் மீது முடிவை திணிப்பது என்ன வகை நீதி? வாழ்க்கையை வேரோடு பிடுங்கி நடுவது என்பது சிலருக்கு ஏதோ சட்டையை மாற்றிக் கொள்வது போன்று மிக சுலபமான விசயமாக தெரிகிறது போலும். இப்படி பேசும் அந்த அல்பைகள்தான் தனது நகத்தில் ஒரு சின்ன கீறல் விழுந்தால் கூட ஊரைக் கூட்டி ஒப்பாரி வைக்கிறார்கள்.

அரசாங்கத்தினுடைய மறுவாழ்வுக்கான நிவாரணம் கொடுப்பதிலும் பல தில்லு முல்லுகள். ஒரு எ-காவுக்கும், மாஹாராஸ்டிராவில் ரிலையன்ஸ் கையகப்படுத்தியுள்ள இடங்களில் எல்லாம் இருப்பிடங்கள் மக்களின் கையிலேயே இருக்கின்றன. அவற்றை கம்பேனிகள் வாங்கவில்லை. இதன் மூலம் அவர்களுக்கு முழுமையான நிவாரணம் கொடுக்க வேண்டிய கடமையிலிருந்து அரசு நழுவிக் கொள்கிறது. அதே நேரத்தில் SEZக்கள் எனும் அயல்நாட்டு காலனிகளின் நடுவே தீவுகளாய் மாட்டிக் கொள்ளும் இந்த மக்கள் தமது வாழ்வாதாரமான விவசாய நிலங்களையும் இழந்து அத்துக் கூலிகளாக அதே தரகு-பன்னாட்டு கம்பேனி வாசலில் நிற்பார்கள். சட்டப்படி எல்லாம் சரிதான். வாழ்வாதாரம் சட்டப்படி பறிக்கப்படவில்லைதான். ஆனால் யதார்தத்தில்? எல்லாம் சட்டப்படிதான். ஆனால் சட்டம் எல்லாம் அவனுக்கு எடுபிடிதான்.

இது கூட பரவாயில்லை. நிலவுடைமையாளர்களுக்கு நிலத்தின் பெயரில் ஏதோ ஒரு தொகையாவது கிடைக்கிறது. அந்த நிலங்களை நம்பி வேலை செய்யும் நிலமற்ற கூலிகளின் வாழ்க்கை? அவர்களுக்கு என்ன நிவாரணம்? ஓ.. அவர்கள்தான் மனிதர்களே கிடையாதல்லவா? மறந்துவிட்டேன். என்னை மன்னித்தருளுங்கள், (அ)நாகரீக பெருந்தகையீரெ!

விவசாயிகளுக்கு ஆப்பு செருகும் SEZக்கு ஆதரவாக பேசும் அதே வாய்கள்தான் சில்லறை வணிகத்திற்க்கு ஆதரவாக பேசும் போது விவசாயியின் நலனுக்காக ஓநாயைப் போல ஒப்பாரி வைத்து அழுததை இங்கு நினைவு படுத்திக் கொள்ளுங்கள். இவர்கள் உண்மையில் யாருடைய நலனுக்காக நாயைப் போல நாக்கைத் தொங்க விட்டு அலைகிறார்கள் என்பதனை புரிந்து கொள்ளுங்கள். இவர்கள் மக்கள் மீது பாசமிருப்பது போல நடிப்பதின் நோக்கத்தையும் இவர்கள் உண்மையில் எந்த தேசத்துக்கு விசுவசமாக உழைக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.


மறுகாலனியத்தின் எல்லா அம்சங்களும் பொருந்திய ஒரு தாக்குதலே SEZ:

கொஞ்சம் கூட நியாயப்படுத்த வகையின்றி 10,000 ஏக்கர்களுக்கும் அதிகமான நிலங்களை பிடுங்குவது என்பது ரியல் எஸ்டேட் பிசினஸுக்கு அரசே ஃமபியா வேலை பார்க்கும் விசயம் என்பதை பார்த்தோம். விவசாய நிலங்களை கையகப்படுத்துவது என்பது இந்திய சுயச்சார்பின் மீதும், அந்த நிலங்களை நம்பி வாழும் லட்சக்கணக்கான் மக்களின் வாழ்க்கையையும் பாதிக்கும் ஒரு அட்டுழியம் என்பதை பார்த்தோம். ஆனால் இதையெல்லாம் மீறி சில விசயங்கள் SEZயில் உள்ளன.

SEZக்கு முழுமையான வருமான வரி விலக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. SEZயில் செய்யப்படும் கட்டுமான நடவடிக்கைகளுக்குக் கூட வருமான வரி கிடையாது. இதனால் அரசுக்கு ஏற்ப்படும் நஸ்டம் 1 லட்சத்தி சொச்சம் கோடிகள். ஏற்கனவே 15 வருடமோ அல்லது பத்து வருடமோ வருமான வரிச் விலக்குகளை அனுபவிக்கும் தகவல் தொழில் நுட்ப கம்பேனிகள் எல்லாம் நாக்கைத் தொங்க விட்டுக் கொண்டு தாம் ஏற்கனவே இருக்கும் பகுதிகளையும் SEZக்களாக அறிவிக்க சொல்லி விண்ணப்பிக்கின்றன. இன்னுமொரு பத்து வருடம் வரி விடுமுறை கிடைக்கிறதல்லவா? நம்மிடம் வருமானத்திலிருந்தும் வரியை பிடுங்கி விட்டு பிறகு வரி போக எஞ்சிய பணத்தில் நாம் வாங்கும் பொருட்களிலும் சேவை வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை பிடுங்கும் அரசு, அவனது லாபத்திற்க்கு மட்டுமே பிடுங்கப்படும் வருமான வரிக்குக் கூட விலக்குக் கொடுப்பது எந்தளவுக்கு அயோக்கியத்தனம்.

என்னவிதமான தொழிற்சாலைகளையும், என்னவிதமான அயோக்கியத்தனங்களையும் SEZகளில் செய்யலாம். ஏனேனில் SEZக்களின் முழுமையான கட்டுப்பாடு என்பது அதற்கென உருவாக்கப்படும் அரசு உறுப்பு அல்லாதா ஒரு குழுவின் கையிலேயே இருக்கும். போலிசோ அல்லது வேறு யாருக்குமோ அங்கு அதிகாரம் கிடையாது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கூட அவர்களே பார்த்துக் கொள்வாரகள். நந்திகிராமத்தில் அரசாங்கம் செயல்பட முடியவில்லை என்று அங்கலாய்த்த புத்ததேவு SEZக்களில் அரசாங்கம் இருக்குமிடம் எது என்று கண்டுபிடித்துச் சொன்னால் புண்ணியமாகப் போகும். தொழிலாளர் சட்டங்களும் கூட SEZக்களில் செல்லுபடியாகாது. தொழிலாளர் சட்டங்கள் நடைமுறையில் உள்ள இடத்திலேயே அவன் அத்தனை விதமான அயோக்கியத்தனங்களிலும் ஈடுபடுகிறான் எனில் SEZக்களில் என்னென்னெ செய்வான் என்பதற்க்கு எந்த வரம்புக் கிடையாது. ஹோண்டா தொழிலாளர்களின் சுயமரியாதை உணர்வுக்கு இந்திய அரசும், ஹோண்டா நிர்வாகமும் இணைந்து கற்றுக் கொடுத்த பாடத்தை நினைவு படுத்திக் கொள்ளவும்.

SEZக்கள் என்று ஒரு சிறிய மாவட்டத்தின் அளவுக்கான இடத்தை ஒதுக்கிக் கொடுக்கும் பகுதிகள் எதுவும் இந்திய அரசமைப்பு வடிவஙகளுக்கு உட்ப்பட்டவையல்ல. அதாவது தேர்தல் கிடையாது, போலிசு கிடையாது, பஞ்சாயத்து, உள்ளூராட்சி என்று எந்தவொரு ஜனநாயக அரசு வடிவங்களும் கிடையாது. இதனால்தான் இதனை நாட்டுக்குள்ளேயே ஒரு தனி நாடு என்கிறோம். அங்கு நடப்பது அவனது ராஜ்ஜியம்தான். அதிகபட்சம் கண் துடைப்புக்காக ஒரு கண்காணிப்பு குழு ஒன்றை போடுவார்கள் அரசு சார்பிலிருந்து. இது போன்ற குழுக்களின் இது வரையான செயல்பாடுகளே நகைப்புகிடமாக உள்ளன. எ-காவுக்கு TRAI எனப்படும் தொலைத் தொடர்பு துறைக்கான கட்டபஞ்சாயத்து சபை உள்ளது. இதன் வேலையே ரிலையன்ஸ் செய்கிற அத்தனை அயோக்கியத்தனங்களையும் நியாயப்படுத்தி சட்டம் இயற்றுவதுதான். அதாவது விவேக் காமெடியில் வரும் மைனர் குஞ்சுவைப் போல அட்வான்ஸ் புக்கிங்கில் ரேப்பிங் வேலைகளை செய்வதை உறுதிப்படுத்தும் ஒரு கட்டபஞ்சாயத்து கூடமாக உள்ளது.

போபாலின் யூனியன் கார்பைடு கம்பேனி சட்டப்பூர்வ நடைமுறைகள் சாத்தியமான இடத்திலே உட்கார்ந்து கொண்டுதான் விச வாயு தொழிற்சாலையை நடத்தினர். இன்று வரை யூனியன் கார்பைடு கழிவுகள் கூட அகற்றப்படாமல் போபாலில் இருக்கிறது. இன்று வரை ஒன்றும் பிடுங்க வக்கின்றி இந்த அரசும் எடுபிடி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை சுற்று வட்டாரத்தில் கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் அளவில் பெரும் சீர்கேட்டை உருவாக்கிக் கொண்டு இன்னும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. இங்கேயே இப்படியெனில் எந்த ஒரு அரசு நிர்வாகத்தின் கீழும் வராத சுயாட்சி பிரதேசஙகளான SEZக்களில் என்னவிதமான நாசகர ஆய்வுகளை அவர்கள் செய்வார்கள்? அதனை அரசு எப்படி கட்டுப்படுத்தும்? அப்படி ஒரு நமபகமான அரசுதானா இது? அப்படியெதுவும் முன்னோடியாக இந்த அரசு இது வரை நடவடிக்கை எடுத்ததில்லையே?

ஒரு எ-காவுக்கு வங்காளத்தில் யாருக்காக ஃமாபியா வேலை செய்துள்ளது 'போலி கம்யுனிஸ பாசிச' CPM அரசு என்று பார்த்தால் காறி உமிழ்ந்து விடுவீர்கள். போபால் விசவாயு புகழ் Union Carbide கம்பேனி Dow Chemicals என்ற பெயரில் நந்திகிராம் எனும் நான்கு போகத்திற்க்கும் அதிகமாக விளையும் பசுமையான இடத்தை நாசமாக்கவும், இந்தோனேசியா கம்யுனிஸ்டுகளை சுகர்தோ கொன்று குவிப்பதற்க்கு உதவி செய்த ஃமாபியா கம்பேனியான Salim Groupற்க்காகவுமே நந்திகிராமத்தில் நாய் போல விசுவாசமாக நடந்து கொண்டுள்ளது இந்த அரசு.

இப்படி நாட்டின் இறையாண்மையின் மீது மூத்திரம் அடிக்கும் வகையில் நாட்டிற்க்குள்ளேயே ஒரு காலனியாக உருவாகும் SEZக்களை வேலைவாய்ப்பு மற்றும் மூலதனம் என்ற இரு காரணங்களால் வரவேற்கிறார்கள் அடிவருடிகள். வேலை வாய்ப்பு என்பதைப் பொறுத்த வரை இவர்கள் எந்தளவுக்கு பொய்யர்கள் என்பதைப் பார்ப்போம். இதற்க்கு முன்பு இத்தனை ஆயிரம், இத்தனை லட்சம் வேலை வாய்ப்புக் கொடுக்கும் என்று ஆரம்பித்த எல்லா உலகமயத் திட்டங்களும் உண்மையில் வேலைவாய்ப்பை ஒரு செக்ஷனிடமிருந்து பிடுங்கி இன்னொரு செக்ஷனுக்கு கொடுக்கும் வேலையைத்தான் செய்துள்ளன. நிரந்தர தொழிலாளர்களாக பல கம்பேனிகளில் வேலை பார்த்தவர்கள், அரசு நிறுவனங்களில் வேலை பார்த்தவர்கள் ஆகியோரை ஒப்பந்த கூலிகளாக மாற்றிய அதே நேரத்தில்தான், விவசாயத்தை அழித்து கோடிக்கணக்கில் நகரங்களுக்கு சாரி சாரியாக நவீன நாடோ டிகளாக உருவாக்கிய அதே நேரத்தில்தான், சிறு தொழில் துறையில் சிதைவை உருவாக்கி வேலை உத்திராவாதமின்மையை உருவாக்கிய அதே நேரத்தில்தான் சேவை துறையில் சில லட்சம் வேலையை உருவாக்கியது உலகமய நடவடிக்கைகள். இதனை முன்னிட்டுத்தான் 2004 செப்டம்பரில் RBIயினுடைய அறிக்கை பின்வருமாறு கூறியது - "உலகமயம் வேலை வாய்ப்பு விகிதத்தை குறைத்து விட்டது." என்று. 2004 செப் க்கும் 2006 செப் க்கும் இடையில் பெரிய அதிசயம் எதுவும் நிகழ்ந்து விடவில்லை - சில ஆயிரம் விவாசாயிகளின் சாவை தவிர்த்து. சேவை துறையிலும், சில தரகு முதலாளித்துவ உற்பத்தித் துறையிலும் வளப்பமாக உட்கார்ந்து கொண்ட சில லட்சம் பேருக்காக இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வை காவு கொடுப்பது என்பது படு முட்டாள்தனம். இவர்கள் கொடுக்கும் வேலைவாய்ப்பின் அழகு ரயில்வே காலாசி வேலைக்கு(இதுதான் இருப்பதிலேயே குறைந்த தகுதி தேவைப்படும் ரயில்வே வேலை) MBA படித்தவர்களும், BE, ME படித்தவர்களும் ஆயிரக்கணக்கில் விண்ணப்பமிட்ட போது வெளி வந்த மர்மம் குறித்து அடிவருடிகள் பதில் சொல்ல வேண்டும்.

SEZக்களால் வாழ்வாதாரம் பறிக்கப்படும் லட்சக்கணக்கானவர்கள், அதற்க்கு பல லட்சம் கோடியில் வழங்க்ப்படும் சலுகைகள், சுற்றுச் சூழலில் அவை ஏற்ப்படுத்தும் பாதிப்புகள், இந்திய வளங்களை குறைந்த விலைக்கு சுரண்டி வரிச் சலுகைகளின் உதவியுடன் குறைந்த விலைக்கு நமக்கே விற்று தேசிய முதலாளிகளை அழிவிற்க்கு தள்ளும் நிலை, உள்ளூர் தொழில்களை ஒழிக்கும் நிலை, நமது சுயச் சார்பை அழித்து, நமது வளங்கள் மீது அவனது ஆதிக்கத்தை நிறுவுவது இவற்றையெல்லாம் நோக்கும் போது அது வழங்கும் வேலை வாய்ப்பு என்பது உண்மையில் ஏமாற்றே. உண்மையைச் சொன்னால் யாருடைய வாழ்வாதாரத்தை அழித்து சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் கட்டப் படுகின்றனவோ அவர்களுக்கு SEZ எந்த ஒரு வேலைவாய்ப்பையும் வழங்கும் அடிப்படையின்றி இருக்கிறது. அதிகபட்சம் கட்டுமான இடங்களில் கூலி வேலை செய்ய மட்டுமே அந்த அப்பாவி விவசாயிகளை அவர்களால் பயன்படுத்த முடியும்.

SEZக்களில் யாரை வேண்டுமானாலும் அவன் வேலைக்கு வைத்துக் கொள்ளலாம். இதன் அர்த்தம் குறைந்த கூலிக்கு வேலை செய்யத் தாயார் எனில் அவன் ஆப்பிரிக்க நாட்டினரைக் கூட இங்கு கொண்டு வந்து வைத்து வேலை வாங்கலாம்.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்பவை ஏற்றுமதிக்கான இடங்கள் என்று அரசு சொல்கிறது. ஆனால் அங்கு உற்பத்தியாகும் பொருட்கள் உள்நாட்டில் விற்க்கப்படாது என்பதற்க்கு எந்த விதமான சட்டப் பூர்வ தடையும் கிடையாது. எனவே அனைத்து வித சலுகைகளின் துணை கொண்டு குறைந்த விலையில் பொருட்களை தயார் செய்து உள்நாட்டு தொழிலை நிர்மூலமாக்குவதை தடுக்க எந்த சட்ட பாதுகாப்பும் கிடையாது.

இப்படி சட்டப்பூர்வமாக இந்தியாவில் ஒரு பெரிய இடத்தை வளைத்துக் கொண்டு அதில் இந்திய அரசமைப்பு வடிவங்கள் எதற்க்கும் உட்ப்படாமல், கிராம பஞ்சாயத்து, உள்ளூராட்சி என்று எந்தவொரு ஜனநாயக அரசு வடிவங்களுக்கும் உட்படாமல், தனியொரு ராஜ்யமாய், தனது இஷ்டம் போல இந்திய வளங்களை சுரண்டிக் கொண்டு, எல்லா சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு. அதன் விளை பொருளை நமக்கே விற்றுக் கொண்டு - இவையெல்லாம் பழைய பிரிட்டிஸ் கிழக்கிந்திய கம்பேனி அரசை நியாபகப்படுத்தவில்லை. கல்லாப் பெட்டியில் உட்கார்ந்திருந்தால்தான் ஒருவனை கடை முதலாளி என்று நம்புவேன் என்று சொல்லும் முட்டாள்களா நாம்.

உலகமய மறுகாலனியாதிக்கம் எப்படி பிறந்தது?
1980களின் இறுதியில் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய பொருளாதாரம் முற்றிலும் மீள முடியாத நெருக்கடியில் இருந்தது. இதே காலத்தில்தான் மேலை நாட்டு பெரும் தொழில் கூடங்களினால் சுற்றுச் சூழலில் ஏற்ப்பட்ட மாசுகள் மேற்கொண்டு முதலாளித்துவ உற்பத்தியை அந்த நாடுகளில் வளர்க்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தின.

முதலாளித்துவம் உயிர்வாழ்வதற்க்கு மிக மிக அடிப்படையான விசயம் தங்கு தடையற்ற உற்பத்தியாகும். உற்பத்தி தடை படக் கூடாது என்பதற்க்காக உற்பத்தியான பொருட்களைக் கூட அழிக்க தயங்காது முதலாளித்துவம். இன்னிலையில் மீண்டும் தமது இழந்த சொர்க்கத்தை பெருவதற்க்கு இரண்டு விசயங்கள் ஏகாதிபத்தியத்திற்க்கு தேவையாய் இருந்தது. ஒன்று புதிய சந்தைகள், இரண்டு புதிய உற்பத்தி மையங்கள்.

உலகமயம் என்பது அவர்களின் இந்த இரண்டு தேவையையும் நிவர்த்தி செய்யும் விசயமாக இருக்கிறது. தமது பொருளை விற்பனை செய்ய பெரியதொரு உலக சந்தை, குறைந்த விலையில் பொருட்களை உற்பத்தி செய்ய மலிவு விலை கூலி உழைப்பு, மூல வளங்கள், இதெல்லாம் போக அரசினுடைய அத்தனை விதமான சலுகைகளும் அவனுக்கு கிடைக்கின்றன. இத்துடன் சுற்றுச் சூழல் மாசுபாடு தமது நாட்டின் மீது பாதிப்பு ஏற்படுத்துவதிலிருந்தும் விடுதலை.

வெறுமனே மூன்றாம் உலக நாடுகளில் முதலீடு மட்டும் செய்தால் உற்பத்தி பொருளின் மீதான, சந்தை மீதான, வளங்கள் மீதான தனது முழு ஆதிக்கத்தின் மூலம் கோடி கோடியாய் கொள்ளையடிக்க உலகமயம் வகை செய்கிறது. இதை மறைக்கத்தான் வேலை வாய்ப்பு என்று பூ சுற்றுகிறார்கள் அடிவருடி நாய்கள். இதோ சீனாவின் சந்தை சோசலிச சாதனைகளை சிறிது ஒற்று நோக்கினால் அதன் அருகதை என்னவென்று தெரியும்.

நமக்கு பத்து பதினைந்து வருடம் முன்பே வீட்டை திறந்து விட்டவன் சீனாக்காரன். 1980களின் இறுதியில் மாவோவினுடைய பொருளாதார திட்டங்கள் தமது வரம்பெல்லையை அடைந்தன. அத்ற்க்கு மேல் அவற்றை வேறு வடிவங்களுக்கு மாற்ற வேண்டிய தேவை ஏற்ப்பட்டது. ஆனால் அது வரை அந்த பொருளாதாரம் பல சாதனைகளை சாதித்திருந்தது. சீனாவின் வாழ்க்கைத் தரம் இந்தியாவைவிட பல மடங்கு உயர்ந்திருந்தது. ஆண்டுக்கு 11.5% சதவீதமாக சோசலிச சீனாவின் தொழில்த் துறை வளர்ச்சி இருந்தது. விவசாயத்தின் வளர்ச்சி என்பது 150% க்கும் மேல் இருந்தது. தனிமனிதனுடைய சாராசரி நுகர்வு பல மடங்கு உயர்ந்திருந்தது. பணி நிரந்தர பாதுகாப்பு இருந்தது, மருத்துவம் அரசாஙக்த்தினுடைய பொறுப்பாக இருந்தது(பொது இன்ஸுரன்ஸ்), சுத்தமான தண்ணீர் இருந்தது, கல்வி அனைவருக்கும் கிடைத்தது. ஆமாம், கோக்கும், பெப்சியும், பிசாவும், பேஜ் 3 இன்பங்களும் மட்டும் சீனாவில் கிடைக்காமல் இருந்த சோகம் ஒன்று இருந்ததை நான் கட்டாயம் சொல்லியே தீர வேண்டும். இன்னிலையில் சீன பொருளாதாரத்தின் சாதனைகளின் பலத்தில் நின்று கொண்டு அதனை அடுத்தக்கட்ட சோசலிச வளர்ச்சிக்கு கொண்டு செல்லாமல் சீனாவை சீரழிவுப் பாதைக்கு திருப்பினர் டெங் தலைமையிலானவர்கள். சீனாவின் கதவுகள் அன்னிய மூலதனத்தின் வேட்டைக்காக திறந்துவிடப்பட்டன.

இதோ இன்று சீனாவினுடைய அதிகாரப் பூர்வ அறிக்கையே அங்கு ஏழை பணக்காரன் பிளவு அதிகாமிவிட்டதாக ஒத்துக் கொள்கிறது. வேலை உத்திரவாதம் கிடையாது, கிடைக்கும் வேலைகள் பெரும்பாலும் ஒப்பந்த கூலி வேலைகள், போதிய வேலை வாய்ப்பில்லை, working povertyயின் அளவு அதிகரித்துள்ளது, விவசாயம் வாடுகிறது, ஐரோப்பாவிற்க்கு கள்ளத் தோணி ஏறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, மருத்துவம் - காசு, கல்வி - காசு, முக்கிய ஆறுகள் அனைத்தும் சாக்கடையாகி விட்டன, உலகின் சுற்றுசூழல் மாசுபாடில் முன்னணியில் உள்ள பத்து நகரங்களில் 8 சீனாவில் உள்ளது, கலாச்சார சீர்கேடுகள் ஒரு பக்கம் தாக்குதல் நடத்துகிறது, சுத்தமான குடிநீர் கிடைக்காமல் தவிப்பவர்கள் எண்ணிக்கை போன வருடத்தை விட இந்த வருடம் அதிகரித்து விட்டது(வெறும் எண்ணிக்கை அல்ல சதவீத கணக்கே அதிகரித்து விட்டது), இந்த அம்சத்தில் இந்தியாவைவிட மோசமானதொரு நிலையை அடைந்து விட்டது சீனா.

இந்தியாவின் பிரதமர் கூட சொல்கிறார்: "உலகமயம் இந்தியாவில் பிளவை அதிகப்படுத்தியுள்ளது. இந்திய அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள்" என்று. ஃகோபி அன்னானும் கூட இதனையே சொன்னார். ஆம் GDPதான் வளர்ச்சி என்றால் இந்தியாவும், சீனாவும் வல்லரசுகள்தான். துரதிருஷ்டவசமாக எல்லைக் கோடுகள் நாட்டைச் சுற்றி ஓடவில்லை. உலகமய சூழலில் அவை நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக ஓடுகிறது. சீனாவிற்க்குள் ரெண்டு சீனா, இந்தியாவுக்குள் ரெண்டு இந்தியா. உண்மையில் இந்த GDPக்கள் எந்த சீனாவின், எந்த இந்தியாவின் வளர்ச்சியை குறிக்கின்றன? எந்த இந்தியா ஒளிர்கிறது? எந்த சீனா ஒளிர்கிறது?

ஏன் இந்த குழப்பம்? இனிமேல் இந்த எல்லைக் குழப்பம் வந்து விடக் கூடாது என்பதற்க்காகவே நாட்டுக்குள்ளேயே நாடாக SEZக்களை உருவாக்குகிறார்கள். உண்மைதான் சீன GDP வளர்ச்சியில் SEZக்களின் பங்களிப்பை நாம் மறுக்கவே இல்லை. அதே சீனாவின் சீரழிவிலும் SEZக்களின் பங்கை நாம் மறப்பதேயில்லை.

இப்படிப்பட்ட சீனாவிலேயே 6 SEZக்கள்தான் உள்ளன. இந்தியாவில் இது வரை ஒப்புதல் கொடுக்கப்பட்ட SEZக்களே 300யை தொடும். எனில் அன்னிய மூலதனம் இந்திய வளங்களை என்ன பாடு படுத்தப் போகிற்து என்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள்.

ஏகாதிபத்தியங்கள் தமது மூலதன சிக்கலை சரி செய்ய இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் சந்தையையும், வளங்களையும் சுரண்டுகின்றனர். இதனை முன்னிட்டு இந்திய தொழில்களுக்கும், விவசாயத்திற்க்கும் மான்யம் கொடுக்காதே என்று நமது அரசை மிரட்டுகின்றனர். இப்படி நமது சொந்த நாட்டின் தொழில்கள் அழிக்கப்படுகின்றன, அல்லது அவனுக்கு ஒப்பந்த தொழில் செய்யும் பட்டறையாக மாறுகின்றன. உள் நாட்டு விவசாயிக்கு மான்யம் கொடுக்காதே என்று சொல்லும் அவன் அவனது சொந்த நாட்டில் விவசாயத்துக்கு 100% 120% மான்யம் கொடுத்து உலக சந்தையை தனது கட்டுப்பாட்டில் வைப்பதுடன், இந்திய சந்தையிலும் தனது பொருளை குவிக்கிறான்(பருத்தி, கோதுமை, Tea etc).
சிறு தொழில் உள்ளிட்டவற்றுக்கு மான்யம் கொடுப்பதை எதிர்க்கும் அவன் இந்தியாவில் தொழில் தொடங்க வரிவிலக்கு உள்ளிட்ட எல்லா சலுகைகளையும் மறைமுகமாக பெற்றுக் கொள்கிறான். இந்தளவுக்கு இழிச்சவாயானாடா நீ என்று தனிமையில் உட்கார்ந்து அவன் நம்மை இகழ்ந்து பேசுவதை வீடியோ பிடித்து போட்டால் கூட சில அடிமை ஜென்மங்கள் திருந்தாது என்பதிருக்க, சுயமரியாதையுள்ளவர்கள் நாடு அடிமையாகும் இந்த அம்சத்தை புரிந்து கொள்வதும், இந்த அடிப்படையில் SEZக்களை ஒப்பிட்டு புரிந்து கொள்வதும் மிகவும் அவசியமானதாகிறது.
SEZக்கள் அவனது சந்தை வெறிக்கும், வளங்களை சுரண்டும் கவந்த பசிக்கும் முழுமையாக இரை போடும் ஒரு அருமையான மறுகாலனியாதிக்க திட்டம். உலகமயத்தின் பல் பரிணாம நோக்கங்களை ஒருங்கே நிறைவேற்றும் ஒரு வடிவமே SEZக்கள்.

இதோ, இருந்த கொஞ்சம் நஞ்சம் முகமூடியும் கழண்டு, பிரிட்டிஸ் கிழக்கிந்திய கம்பேனியின் அதே வடிவத்தில் மறுகாலனியம் SEZ என்ற பெயரில் ஆர்ப்பரித்து வருகிறது. ஆள், அம்பு, சேனையுடன் நமது எதிர்காலத்தை, நமது குழந்தைகளின் எதிர்காலத்தை தமது லாப வெறிக்கு இரையாக்க நாக்கைத் தொங்க போட்டுக் கொண்டு வருகிறது. வீரமுள்ள, சுயமரியாதையுள்ளவர்கள் வீட்டுக்கொருவர் அல்லது இருவராய் வீதியில் இறங்கி மறுகாலனியாதிக்க வெறியர்களையும், அவர்களின் அடிவருடிகளையும் அடித்து நொறுக்க அணி திரள வேண்டிய காலம் நெருங்கி விட்டது.

அசுரன்

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்கள்!

மார்க்ஸின் காலனிய பார்வை குறித்த பொய்:

நீலகண்டன் மார்க்ஸின் காலனிய பார்வை என்று எதைச் சொல்கிறார்? "இந்தியாவின் துன்பங்கள் பார்ப்பனர்களால வெகு காலத்துக்கு முன்பே கிருத்து பிறப்பதற்கு வெகு காலத்துக்கு முன்பே தொடங்கிவிட்டது என்று மார்க்ஸ் சொல்வதைத்தான் இவர் மார்க்ஸினுடைய காலனிய பார்வை என்கிறார். நீலகண்டனின் வர்க்க பாசம் வேலை செய்கிறது. இதே கருத்தை முன் வைத்த சாருவாகர்கள், பௌத்தர்களை எந்த காலனிய பார்வை ஆட் கொண்டது என்ற கேள்விகளுக்கெல்லாம் இவரிடமிருந்து பதில் வராது.

மார்க்ஸ் இந்தியாவின் வளங்களையும், படையெடுப்பு வரலாறையும், புவியியல் கூறுகளையும் இத்தாலியுடன் ஒப்பிடுகிறார். இந்தியாவின் துன்பங்களை அயர்லாந்துடன் ஒப்பிடுகிறார்.

இந்தியாவில் பிரிட்டிஸ் அரசாட்சி ஏற்படுத்தியிருந்த மிகக் கொடூரமான விளைவுகளை மிகச் சரியாக சொல்கிறார் மார்க்ஸ். இன்றும் அதன் விளைவுகளை வெகு எடுப்பாக நாம் பார்க்கிறோம். இதே வார்த்தைகளை இந்தியாவின் விடுதலையில் விருப்பம் கொண்டவர்களும் கூறுகிறார்கள். முரன் நகையாக இதே வார்த்தைகளை இந்துத்துவக்காரர்களும் கூட சொல்கிறார்கள். எனவே இந்துத்துவக்காரர்கள் எல்லாம் காலனிய பார்வையுடையவர்கள் என்று நீலகண்டன் சொல்வார் என்று எதிர்ப்பார்த்தால் தவறிழைக்கிறீர்கள்.
"பேச நா இரண்டுடையா போற்றி!".

இது தவிர்த்து செமி பார்பேரியன், செமி சிவிலைஸ்டு என்று இந்திய சமூகத்தை மார்க்ஸ் குறிப்பிடும் இடத்தில் அதன் காரணம் என்னவென்று ஒப்பிட்டு பார்க்க வேண்டும்(context). அதை விடுத்து அகண்ட பாரத கனவு காணும் கற்பனாவாதிகளின் பண்டைய பெருமைகள் பற்றிய ஊதிப் பெருக்க வைக்கப்பட்ட பொய்களின் அடிப்படையில் இந்த வார்த்தைகளை நோக்கினால் மார்க்ஸை காலனிய பார்வை கொண்டவர் என்பது போல அரைகுறை வியாக்கியானம் செய்யும் முட்டாள்தனத்தில் வந்து முடியும். மார்க்ஸ் இருந்ததோ ஐரோப்பிய நாகரிகம் தழைத்தோங்கிய ஒரு சூழல், தொழில் புரட்சி, பெரும் தொழில்சாலைகள், பாரளுமன்றம், பகுதி அளவில் ஆட்சி செய்த நிலபிரபுக்களின் ஆதிக்கம் முற்றிலும் ஒழிந்து போய் மையப்படுத்தப்பட்ட, முழு கட்டுப்பாட்டை நாடெங்கும் செலுத்தும் அரசு வடிவம். அதே நேரத்தில் இந்தியாவின் நிலை என்ன? குழந்தை திருமணம், சதி, சாதி, தீண்டாமை, பல்வேறு மூடநம்பிக்கைகளின் உறைவிடமாய், கிராம நிர்வாகம் எனும் சிதறிய உற்பத்தி முறையில், பாளையக்காரர்கள் போன்ற பகுதி அளவிலானவர்களின் செல்வாக்கு மண்டலங்களாக சிதறிய சமூகம், நிலபிரபுத்துவத்துக்கேயுரிய பிற்போக்குத்தனங்களுடன் இருந்தது. மார்க்ஸினுடைய கண்டனம் அனைத்தும் ஐரோப்பாவிற்க்கு பல்லாயிரம் வருடம் முன்பே நாகரிகம் தழைத்தோங்கி இருந்து பிறகு அழுகிய நிலையில் நெடிய காலத்திற்க்கு நிலவி, அந்த இடைப்பட்ட நேரத்தில் ஐரோப்பா முந்திக் கொண்டு சென்றதை முன்னிட்டே. இதன் அர்த்தம் முதலாளித்துவ ஐரோப்பா பிற்போக்கானது இல்லை என்ற அர்த்தத்தில் அல்ல. மாறாக நிலபிரபுத்துவ பிற்போக்குதனங்கள் எந்த வகையில் பார்த்தாலும் முதலாளித்துவ பிற்போக்குதனத்தைவிட கேவலமானது என்ற அர்த்ததிலேயே வருகின்றன. ஏனேனில் ஐரோப்பாவையும் மிகக் கடுமையாக விமர்சிக்கிறார் மார்க்ஸ்.

இவையநநத்துமே பிரிட்டிஸ்க்காரர்கள் இந்திய சமூக பொருளாதார அமைப்பில் திரும்ப சரி செய்ய முடியாத அளவு ஏற்படுத்திய பாதிப்புகள், ஆசிய சொத்துடமை வடிவத்தின் சாதக பாதக அம்சங்கள் போன்றவை குறித்து கூறிய பிற்பாடே சொல்கிறார் மார்க்ஸ். ஆயினும் மார்க்ஸியத்தை ஏகாதிபத்தியவாதிகளின் நூல்களின் மூலம் மட்டுமே அதுவும் மேற்கோள்கள் மற்றும் அரைப் பொய்களின் மூலம் மட்டுமே அறிய துணிந்த நீலகண்டன் சுலபமாக ஒரு வரியில் மார்க்ஸின் பார்வை காலனிய பார்வை என்று சொல்வது அவரது மேம்போக்கான வாசிப்பு முறையையே காட்டுகிறது. சொந்த கருத்தோட்டங்களிலேயே சுயமுரன்பாட்டுக்கு இட்டுச் செல்லும் முடிவுகளுக்கு வருவதற்க்காக பார்ப்ப்னியம் என்றுமே வெட்க்கப் படுவதில்லை. அதனை நீங்கள் அம்பலப்படுத்தி எவ்வளவு கேவலப்படுத்தினாலும் மீண்டும் அதே சுயமுரன்பாட்டு முட்டாள் கருத்துக்களை சொல்வார்கள். ஏனேனில் கோயபல்ஸின் வழிமுறைகளில் நம்பிக்கைக் கொண்டவர்கள் இவர்கள்.
"பொய்களே என்றும் பகர்வர் போற்றி!"

கடுமையான உழைப்பை செலுத்தும், மோன நிலையிலிருக்கும்(எந்த ஒரு புரட்சியோ, போராட்டமோ, கிளர்ச்சியோ இன்றி) இருக்கும் எண்ணிலடங்கா இந்திய கிராம அமைப்புகள் பிரிட்டிசாரால் சிரழிக்கப்பட்டு. சிதறடிக்கப்பட்டு துன்ப பெருங்கடலில் வீசப்படுவதை நாம் கண்ணுற வேண்டியுள்ளதாக மார்க்ஸ் குறிப்பிடுகிறார். இந்திய காட்டன் குறித்தும், இந்தியாவின் கைவினை பொருட்களின் தரம் குறித்தும் அவற்றை அழிக்கும் பிரிட்டிஸார் குறித்தும் குறிப்பிடுகிறார் மார்க்ஸ். இந்தியா பிரிட்டிஸாரின் ஆட்சியில் தனது புரதான காலாச்சாரத்தை இழந்து வருவதை குறிப்பிடுகிறார். மேலும் புதிய முயற்சிகள் இல்லாத மாற்றம் என்பதே இல்லையோ என்பது போல மிக மிக மிக மெதுவான சமூக மாற்றத்தை/சமூக வீழ்ச்சியை உள்ளடக்கிய, இயல்பாக வளர வேண்டிய சமூகத்தை சாதி, அடிமை முறை என்று மடைதிருப்பி மாற்றமேயில்லாத இயற்கை தலைவிதியின் பாற்ப்பட்ட சமூக வளர்ச்சியைக் கொண்டு அதன் விளைவாகவே மிகவும் புரதானமான பண்டைய இயற்கை வழிபாட்டு முறையை வழக்கத்தில் கொண்டு - மனிதன் எனும் இயற்கையின் சுதந்திர படைப்பை அனுமன் எனும் குரங்கின் கால்களிலும், பசு எனும் மாட்டின் கால்களிலும் விழ வைக்கும் அழுகி வரும் ஆசிய சொத்துடமை வடிவமாகிய கிரா சுய தேவை பூர்த்தி செய்யும் பொருளாதார அமைப்பை கடிந்து சொல்கிறார். இவையனைத்துமே ஐரோப்பாவின் தொழிற்புரட்சி அங்கு ஏற்படுத்திய மாற்றங்களுக்கு மாறாக அழகானதாக தோற்றம் தரும் ஆசியாவின் கிராம சொத்துடைமை வடிவம் இங்கு மாற்றங்களை மிக மிக மெதுவாக ஏற்படுத்துவது கண்டு ஏற்பட்ட ஆற்றாமையின் வெளிப்பாடுகளேயாகும்.

இந்தியாவின் மோன நிலையை கடுமையாக கண்டன குரலெழுப்பி கண்டிக்கும் மார்க்ஸ் அதே நேரத்தில் இந்தியாவை மோன நிலையிலிருந்து தட்டியெழுப்பும் சமூக புரட்சியை முதல் முறையாக செய்யும் ஐரோப்பா அதை செயல்படுத்தும் விதம் குறித்தும் தமது கடும் கண்டனக் குரலை எழுப்புகிறார். துரதிருஷ்டவசமாக அல்ல மாறாக வேண்டுமென்றே நீலகண்டன் படித்த புத்தகங்களில் இந்திய சமூகம் குறித்து மார்க்ஸ் எழுப்பும் கண்டனக் குரல்கள் மட்டும் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதனை கண்ணுற்ற நீலகண்டன் தனது குடுமி அவிழ ஆவேசம் கொண்டு மார்க்ஸின் பார்வை காலனிய கருத்தோட்டம் என்று முடிவுக்கு வருகிறார். "வாழ்க அவர் அரைகுறை ஆய்வு முயற்சிகள்". பிரிட்டன் குறித்த மார்க்ஸீன் கண்டனப் பார்வையையும் கணக்கில் கொண்டால் ஒட்டு மொத்தமாக சுரண்டலுக்கெதிரான மார்க்ஸின் தார்மீக கோபத்தையே அது காட்டுகிறது. சுரண்டல்க்காரர்கள் மார்க்ஸை நிந்தனை செய்வதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

உண்மையில் இவற்றை காலனியப் பார்வை என்று கூறுவதில் இந்துத்துவத்தின் வெளியே சொல்லமுடியாத பெருங்கனவு குறித்த ஏக்கப் பெருமூச்சுதான் வெளிப்படுகிறது. ஏன் வெளியே சொல்லமுடியாதது என்பதை பார்ப்ப்னிய பயங்கரவதிகள்தான் சொல்ல வேண்டும் ஏனெனில் நாம் பல முறை கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லவில்லையெனில் வெளியே சொல்லமுடியாத ஏதோ ஒன்றுதான் நமது கேள்விகளுக்கு பதிலாக இருக்கும் என்று நாம் அனுமானிக்க வேண்டிய நிர்பந்தத்திற்க்கு தள்ளப்படுகிறோம். ஒரு வேளை உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதிகளாகிய நாங்கள் சூத்திரர்கள் ஆகையால் அவற்றை எம்மிடம் பகர்வது இந்து தரமத்திற்க்கு விரோதமானதோ?
"காதிலே காய்ச்சிய ஈயமே போற்றி!"



கலை கலைக்காக - கூத்தாடும் நீலகண்டனின் அவதூறு:

அடிமுட்டாள் ஒருவன் நீலகண்டனின் பதிவில் கூறினான், "மார்க்ஸியனாக ஒரு விஞ்ஞானி இருந்தால் அவன் முட்டாளாகத்தான் இருக்க முடியும்" என்று. மார்க்ஸியத்துக்கு ஆதரவாக வந்தார் இந்த உலகின் ஆகத் தலை சிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டீன். இந்த அடிமுட்டாள், ஐன்ஸ்டீனையும்
கூட அடி முட்டாள் என்று சொல்லும் அபாயம் உள்ளது. அது அவர்கள் உட்கொண்ட இந்துத்துவ பயங்கரவாத போதைப் பொருளின் விளைவு.

இந்த அல்பைகள் தாங்கள் மூழ்கி குளிக்கின்ற சாக்கடை குட்டையையே இந்த உலகம் என்று கருதி அந்த குட்டையின் விளிம்பிலிருந்தே தமது உலக கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். என்ன செய்ய இந்த அல்பவாதிகளின் பார்வையில் ஐன்ஸ்டீனும் அடி முட்டாள்தான். இந்த அல்பவாதம் வெறும் தனிமனித குணாம்ச சம்பந்தப்பட்ட விசயமல்ல. இது ஒரு அரசியல் பண்பாடு. இதன் அரசியல் ஆளும் வர்க்க சேவகம் செய்வது. எனவேதான் இந்த அல்பவாதம் கலை முதலான அனைத்து விதமான அரசு வடிவங்களிலும் தனது இருப்பைக் காட்டுகிறது.

கலை கலைக்குத்தான் என்று சாமியாடும் கும்பல் அவ்வாறு சொல்வதில் ஆதாயம் இல்லாமல் சொல்லவில்லை. மக்களின் பிரச்சனைகளை பேச விடாமல் கலைஞர்களை ஊழல் மயப்படுத்தி போதையூட்டி தனது கருத்துக்களை பேச வைக்க தார்மீக பலம் கொடுப்பதோடல்லாமல், கலைக்கு புனித வட்டம் கட்டி அதனை உழைக்கும் மக்களிடமிருந்து தள்ளி வைக்கும் மனு நிதிக்கும் ஆதரவாக இருப்பதாலேயே 'கலை கலைக்குத்தான்' என்ற இந்த கருத்தாக்கத்தை ஆதரிக்கிறார்கள் இவர்கள்.

கலை இலக்கியமல்லவா? வெறும் தார்மீக பலம் பலன் கொடுக்குமா? அழகியல் வேண்டாமா? இதோ அடிமுட்டாள்கள் தங்களது குட்டையில் மிதக்கும் குப்பைகளையும், துகள்களையும் நுன்னோக்கி கொண்டு 200 பக்கங்களுக்கு விவரிப்பு செய்து எழுதும் அழகை பாருங்கள். இதை ஆழ்மன ஆய்வு, உள்மன அனுபவம் என்றும் சொல்வார்கள்.

இதே போன்று அல்பைத்தனமாக ஆராய்ச்சி செய்தவர்கள் இந்தியாவுக்கு புதிதல்ல, வரலாற்றில் ஒரு அல்பை இருட்டில் தொங்குவது கயிறா அல்லது பாம்பா என்று ஆராய்ச்சி செய்தது. அந்த அல்பையின் பெயர் ஆதி சங்கரன், அந்த அல்பவாத தோற்ற விளைவு மாயாவாதம். இன்றைக்கு உலகமயச் சூழலில் அல்பவாதிகளுக்கா பஞ்சம்? இப்படித்தான் ஒரு அல்பவாதி தான் புழங்கும் ஒரு குட்டையை அகழ்வாராய்ச்சி செய்து அனைத்து குப்பைகளையும் ஆகப் பெரிதான நுன்னோக்கி கொண்டு பார்த்த பிற்பாடு கூறியது, "இந்த உலகில் எல்லா விசயங்களுமே ஆய்வு செய்து ஆழமாக செல்ல செல்ல அபத்தமாக இருக்கிறது". அந்த அல்பவாதியின் பெயர் ஜெயமோகன். குப்பைகளை நுன்னோக்கி கொண்டு அல்ல வெறும் கண்களில் பார்த்தாலே அபத்தம் என்று சொல்லிவிடலாம். ஆனால் அப்படி சுலபமாக செய்தால் கலை அரிப்பை சொரிந்து கொள்ள முடியாதே? இவர்களின் 'சுய சொறிதல்'அனுபவத்திற்க்கு கலை இலக்கிய நுன்னோக்கியும், 200 பக்கமும் தேவைப்படுகிறது.

அல்பவாதியின் உலகம் தனது சேற்றுக் குட்டையின் அடி ஆழத்தில் ஆரம்பித்து விளிம்பில் முடிந்து விடுகிறது. சிலருக்கு இது தலைகீழாகவும் நடக்கிறது. ஐன்ஸ்டீனை அடி முட்டாள் என்று அர்த்தம் வர வியாக்கியானம் செய்த அல்பையும், மார்க்ஸியத்தை ஏகாதிபத்திய அவதூறுகளின் துணை கொண்டு ஆய்வு செய்ய முயன்ற அல்பையும் கூட இதே ரகம்தான். இந்த அல்பைகள் கலை கலைக்காகத்தான் என்று கதறுவதில் உள்ள அடிப்படை இயங்கியல் இதுதான். ஒரு அல்பவாதியின் நாவலை தமது கடைகளில் விற்க்கும் விசயத்துக்கும் இதுவே அடிப்படை.

கலை கலைக்காகத்தான் என்று கலைஞர்களை ஏதோ சமூகத்திற்க்கு சம்பந்தமில்லாதவர்களாக மாற்றும் கருத்து முதல் வாத கோஸ்டிகளை பாரதிதாசனின் இந்த பாடலை கேட்ட பின்பு மதிப்பிடுங்கள். "எல்லாம் எமக்கு தெரியும், ஆழ்ந்து ஆராய்ச்சி செய்தால் எதிலும் ஒன்றும் இருப்பதில்லை. அபத்தமே மிஞ்சுகிறது", என்று சுயதிருப்தியில் சலிப்புடன் சொல்லும் கலைஞர்களையே எல்லாம் தெரிந்த வித்தகர்கள் என்றும், அறிவாளிகள் என்றும் சிலர் கருதி வரும் போது, கவிஞரும் எழுதுகிறார், எதைப் பற்றி? இதோ படியுங்கள்.

ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட
'என்னை எழு'தென்று சொன்னதுவான்!
ஓடையுந் தாமரைப் பூக்களும் தங்களின்
ஓவியந் தீட்டுக, என்றுரைக்கும்!
ஓவியந் தீட்டுக, என்றுரைக்கும்!

காடும் கழனியும் கார்முகிலும் வந்து
கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்!
ஆடும் மயில்நிகர்ப் பெண்களெல்லாம் உயிர்
அன்பினைச் சித்திரம் செய்க,என்றார்!
அன்பினைச் சித்திரம் செய்க,என்றார்!

சோலைக் குளிர்தரு தென்றல்வரும், பசுந்
தோகை மயில்வரும் அன்னம்வரும்,
மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்
மாணிக்கப் பரிதி காட்சிதரும்
மாணிக்கப் பரிதி காட்சிதரும்

'வேலைச் சுமந்திடும் வீரரின் தோள்உயர்
வெற்பென்று சொல்லி வரைக' எனும்
கோலங்கள் யாவும் மலைமலையாய் வந்து
கூவின என்னை! - இவற்றிடையே,
கூவின என்னை! - இவற்றிடையே,

இன்னலிலே, தமிழ் நாட்டினி லேயுள்ள
என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்.
அன்னதோர் காட்சி -ரக்கமுண் டாக்கியென்
ஆவியில் வந்து கலந்ததுவே!
ஆவியில் வந்து கலந்ததுவே!

'இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்
துன்பங்கள் நீங்கும், சுகம்வரும், நெஞ்சினில்
தூய்மை யுண்டாகிடும், வீரம் வரும்.'



02 Eadeduthen.mp3 (If you have problem listening click here)



இதோ ரஸ்ய பாட்டாளி வர்க்க புரட்சியின் அதிர்வலை உலகெங்கும் எதிரொலித்தது போல இங்கு தமிழ்நாட்டிலும் பேரலைகளை உருவாக்கியது. கலை இலக்கியங்கள் யாவும் மக்களைப் பேசத் துவங்கின. பாரதிதாசன் என்ன விதிவிலக்க என்ன? 'கலை மக்களுக்காக' என்று உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்காக பாடுகிறார். கேளுங்கள்.....

காடு களைந்தோம் - நல்ல
கழனி திருத்தியும் உழவு புரிந்தும்
நாடுகள் செய்தோம் - அங்கு
நாற்றிசை வீதிகள் தோற்றவும் செய்தோம்
வீடுகள் கண்டோ ம் - அங்கு
வேண்டிய பண்டங்கள் ஈண்டிடச் செய்தோம்
பாடுகள் பட்டோ ம் - புவி
பதமுறவே நாங்கள் நிதமும் உழைத்தோம்.
மலையைப் பிளந்தோம் - புவி
வாழவென் றேகடல் ஆழமும் தூர்த்தோம்
அலைகடல் மீதில் - பல்
லாயிரங் கப்பல்கள் போய்வரச் செய்தோம்
பலதொல் லையுற்றோம் - யாம்
பாதாளம் சென்று பசும்பொன் எடுத்தோம்
உலையில் இரும்பை - யாம்
உருக்கிப்பல் யந்திரம் பெருக்கியுந் தந்தோம்.

ஆடைகள் நெய்தோம் - பெரும்
ஆற்றை வளைத்துநெல் நாற்றுக்கள் நட்டோ ம்;
கூடை கலங்கள் - முதல்
கோபுரம் நற்சுதை வேலைகள் செய்தோம்
கோடையைக் காக்க - யாம்
குடையளித் தோம்நல்ல நடையன்கள் செய்தோம்
தேடிய பண்டம் - இந்தச்
செகத்தில் நிறைந்திட முகத்தெதிர் வைத்தோம்.
வாழ்வுக் கொவ்வாத - இந்த
வையத்தில் இந்நிலை எய்தப் புரிந்தோம்
ஆழ்கடல் காடு - மலை
அத்தனை யிற்பல சத்தை யெடுத்தோம்.
ஈழை அசுத்தம் - குப்பை
இலைஎன்ன வேஎங்கள் தலையிற் சுமந்தோம்.
சூழக் கிடந்தோம் - புவித்
தொழிலாள ராம்எங்கள் நிலைமையைக் கேளீர்.
கந்தை யணிந்தோம் - இரு
கையை விரித்தெங்கள் மெய்யினைப் போர்த்தோம்.
மொந்தையிற் கூழைப் - பலர்
மொய்த்துக் குடித்துப் பசித்துக் கிடந்தோம்
சந்தையில் மாடாய் - யாம்
சந்ததம் தங்கிட வீடுமில் லாமல்
சிந்தை மெலிந்தோம் - எங்கள்
சேவைக் கெலாம்இது செய்நன்றி தானோ?
மதத்தவன் தலைவீர்! - இந்த
மண்ணை வளைத்துள்ள அண்ணாத்தை மாரே!
குதர்க்கம் விளைத்தே - பெருங்
கொள்ளை யடித்திட்ட கோடி சுரர்காள்!
வதக்கிப் பிழிந்தே - சொத்தை
வடிகட்டி எம்மைத் துடிக்க விட்டீரே!
நிதியின் பெருக்கம் - விளை
நிலமுற்றும் உங்கள் வசம்பண்ணி விட்டீர்!
செப்புதல் கேட்பீர்! - இந்தச்
செகத்தொழி லாளர்கள் மிகப்பலர் ஆதலின்,
கப்பல் களாக - இனித்
தொழும்பர்க ளாக மதித்திட வேண்டாம்!
இப்பொழு தேநீர் - பொது
இன்பம் விளைந்திட உங்களின் சொத்தை
ஒப்ப டைப்பீரே - எங்கள்
உடலில் இரத்தம் கொதிப்பேறு முன்பே
ஒப்படைப்பீரே!

06 Kaadu Kalaintho...


தாம் குதித்து மூழ்கும் குட்டையையே இந்த பரந்த பிரபஞ்சமாக கருதி அந்த குட்டையின் ஆழத்தில் அபத்தமே உள்ளது என்று தனது குட்டையிலிருந்தே உலகை வியாக்கியானம் செய்யும் அல்பவாதிகளையும், அவர்களின் அல்லக்கைகளையும் கூட கவிஞர் தட்டியெழுப்புகிறார்.

கேளுங்கள் அல்பவாதிகளே!!
கெட்டி தட்டிய சுயதிருப்தியெனும் மேல் ஓடுகளை உடைத்து மண்டைச் சுரப்பை வெள்ளமென புரளச் செய்யுங்கள். பாருங்கள் இந்த பிருமாண்டமான மனித சமூகத்தின் யத்தனங்களை.... அவற்றில் இல்லாதா அழகியலா உங்களது ஆழ்மன குட்டையில் கிடைத்து விடும்.


அசுரன்


பாடல்கள்: பாரடா உனது மானிடப் பரப்பை - பாரதிதாசன் பாடல்கள், மகஇக வெளியீடு.

பாடல் ஒலிப் பேழைகள் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
இரா. சீனிவாசன், No 18, முல்லை நகர் வணிக வளாகம், இரண்டாவது நிழற்சாலை, அசோக் நகர், சென்னை - 83

தொலைபேசி: 23718706

Wednesday, April 25, 2007

சோசலிசமும் - பார்ப்பினியத்தின் பொய்யுரைகளும்!

ஸ்டாலின் ஆட்சியின் தவறுகள் குறித்து நமக்கு பல்வேறு விமர்சனங்கள் இருப்பதையும், அதிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்கிறோம் என்பதையும் குறிப்பிடுகின்ற அதே வேளையில். இது குறித்து பல்வேறு இடங்களில், பின்னூட்டங்ளில், பதிவுகளில் எழுதியுள்ளோம் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். ஏனேனில் ஏதோ ஸ்டாலின் குறித்து இதுதான் முதல் முறையாக நாம் பேசுவதாக இவர்கள் சொல்லும் அபாயம் உள்ளது. ஸ்டாலின் மீதான எமது விமர்சனங்கள் ஏகாதிபத்தியவாதிகளோ அல்லது பிற்போக்குவாதிகளோ குறிப்பிடும் அம்சங்களில் அல்ல எனபதனை தெளிவாக குறிப்பிட்டு விடுகிறேன். இந்த விசயத்தையும் பல இடங்களில் குறிப்பிட்டும் உள்ளேன். இன்னும் சொன்னால் ஏகாதிபத்தியங்களின் அடிவருடிகள் ஜல்லியடிக்க துவங்கும் முன்பே கூட கம்யுனிஸ்டு கட்சியின் விமர்சனம் சுய விமர்சன முறைப்படி ஸ்டாலினை லெனின் விமர்சித்துள்ளார். ஸ்டாலினை மாவோகூட விமர்சித்துள்ளார். ஆனால் அவை விமர்சனம் செய்வது என்ற அம்சத்திலும் தவறுகளை திருத்த வேண்டும் என்ற அம்சத்திலுமே செய்யப்பட்டன. மாறாக பொய்களை கட்டியமைப்பதற்க்கான அடிப்படையாக அந்த விமர்சனங்கள் செய்யப்படவில்லை.

புரட்சி என்பது பாட்டாளி வர்க்கம் ஆட்சிக்கு வந்தவுடன் முடிவடைந்து விடுகிறது என்ற பொதுக் கருத்துதான் அரசு அதிகாரத்தில் இருக்கும் போது பாட்டாளி வர்க்கம் தனது எதிரி வர்க்கத்தின் மீது செலுத்தும் தவிர்க்க இயலா வன்முறையை தவறாக பார்க்கும் அடிப்படையை உருவாக்குகிறது. உண்மையில் எதிரி வர்க்கம் இருக்கும் வரை புரட்சி நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஏனேனில் சில கற்பனாவாதிகள் நினைப்பது போல இந்த சமூகத்தின் அனைத்து உறுப்பினரும் ஒரே விதமாக அன்பே உருவானவர்களாக இருப்பதில்லை. ஒவ்வொருவரின் அன்பும் அவர்களுக்கேயுரிய வர்க்க சார்புடன்தான் உள்ளது. பாருங்களேன் காந்தியாவாதி மா சிவகுமாருக்கு, இந்திய போலி ஜனநாயகத்தில் செத்துப் போகும் லட்சக்கணக்கான விவசாயிகளை விட பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் செத்துப் போகும் ஆயிரக்கணக்கான ஆதிக்க வர்க்கத்தினரின் சாவு மிகப் பெரிதாகவும், ஜனநாயக மறுப்பாகவும் தோன்றுகிறது. அவரது அஹிம்சைக்கும் வர்க்க சார்பு உண்டு எனபதை அவர் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

ஆக, பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சியை சீர்குலைத்து நிர்மூலமாக்குவதற்க்காக ஆக மேலான முயற்சிகளை அதிகாரத்தை இழந்த வர்க்கங்கள் உலக மேலாதிக்க ஏகாதிபத்தியங்களின் உதவியுடன் செய்யும். உண்மையில் பாட்டாளி வர்க்கம் ஆட்சிக்கு வந்த பிற்ப்பாடு புரட்சி என்பது இன்னொமொரு உயர்ந்த வடிவத்தில் நடந்து கொண்டேதான் இருக்கிறது. கம்யுனிசத்தை அடையும் வரை இது தொடரும். இங்கு இதை நிறுத்திக் கொள்வோம்.

இப்பொழுது நீலகண்டன் எழுதியுள்ள கட்டுரைக்கு செல்வோம். அதற்க்கு முன்பு சில விசயங்கள். நீலகண்டன் மற்றும் பிற RSS ஆட்களிடம் இந்துத்துவத்தின் அடிப்படை குறித்து கேள்விகள் கேட்டிருந்தோம். அதற்க்கு பதில் கொடுக்க வழியின்றியே மார்க்ஸியம் குறித்து விவாதத்தை திசை திருப்புகிறார்கள் என்பதை கூறிக் கொள்கிறேன். ஏனேனில் எமது சித்தாந்தமான மார்க்ஸியம் குறித்து முயற்சி செய்து கட்டுரை இடும் நீலகண்டன். இந்துத்துவம் குறித்தும் அதன் சித்தாந்தம் குறித்தும் அடிப்படையாக கேட்டுள்ள எமது கேள்விகளுக்கு மிக சுலபமாகவே பதில் சொல்லலாம். அதாவது இந்துத்துவம் குறித்து அவருக்கு போதிய அறிவிருந்தால். இதுவரை அவர்கள் பதில் சொல்லாதது, இந்துத்துவம் குறித்து அடிசுவடு கூட தெரியாமல் அதன் மற்றைய இலக்கிய மேல் தட்டுகளிலேயே அவர்கள் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை காட்டுவதாக உள்ளது. அல்லது அவர்களின் சொந்த வர்க்க நலன்களின் தேவைக்கேற்ற அரசியலாக பார்ப்பனிய பயங்கரவாத அரசியல் உள்ளதாலேயே அதனை பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கருதலாம்.

உண்மையில் இது பரிதாபகரமானது என்பதை நான் குறிப்பிட்டே தீர வேண்டும். மார்க்ஸியம் குறித்து தாக்குதல் தொடுத்துள்ள நீலகண்டன் அது குறித்தும் கூட தமக்கு அறிவு படு பாதளம்தான் என்பதை நிறுவுகிறார். இதற்க்கு நீயுட்டானிய பொருள்முதல்வாதம் என்ற ஒன்று குறித்து பேசுகிறாரே அதுவும், மாவோ செடிகளிடையே வர்க்க பேதம் பார்த்தார் என்பது குறித்த படு முட்டாள்தனமான ஒரு பொய்யும் உதாரணம். மார்க்ஸியம் ஒரு வளரும் தத்துவம். ஏனேனில் அது தனது அடிப்படையாக இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை கொண்டுள்ளது. மாறாக, RSS ஆட்கள் முன் வைக்கும் வறட்டு மக்கள் விரோத சித்தாந்தமோ கற்பனவாதமாக இருக்கிறது. இரண்டாயிரம் வருடமாக அது வர்ணாஸ்ரமத்தை தாண்டி வேறு எங்கும் செல்லவில்லை. இதோ மாவோ இயக்கவியலை அடுத்தக் கட்டத்திற்க்கு வளர்த்துச் சென்றார். லெனின் ஏகாதிபத்திய காலகட்டத்திற்க்கான விளக்கங்களை சேர்த்தார். மாறாக, பார்ப்ப்னியத்தில் அதிகபட்சம் சிலரின் நம்பிக்கை என்ற அளவைத் தாண்டி அதில் ஒன்றும் கிடையாது என்பதுதான் அவர்களை இந்த அம்சத்தில் விவாதத்தை முன்னெடுத்துச் செல்ல தயங்க வைக்கிறது.

//மார்க்சீய வட்டாரங்களில் பொதுவாக கூறப்படுவது என்னவென்றால் லெனினுக்கு பின் ஸ்டாலினுக்கு பதிலாக ட்ராஸ்கி அதிகாரத்தை கைப்பற்றியிருந்தால் அறிவியல், கலை, மானுட உயிர் மற்றும் மானுட உரிமைகள் பெரும் அழிவுகளை சந்திக்க நேர்ந்திருக்காது என்பதாகும். //

இந்த வரிகளைப் பொறுத்தவரை ஒரே விசயம்தான். மார்க்ஸீய வட்டாரம் என்று நீலகண்டன் குறிப்பிடுவது யாரை? அவர் குறிப்பிடும் வட்டாரம் என்பது மேற்கத்திய சூழலின் பிழைப்புவாதம் உருவாக்கிய கோஸ்டிகள்தானேயன்றி வேறல்ல. இது போல பல பத்து கருத்துக் கொண்டவர்களை குறிப்பிடலாம். ட்ராஸ்கியை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவே அதிலும் ஒரு பெரும் பகுதி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சம்பளத்தில் அரசியல் செய்து கொண்டிருப்பவர்கள். இன்று மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக களத்தில் போராடிக் கொண்டிருப்பவர்களில் எத்தனை பேர் அவரது மேற் சொன்ன கருத்தை ஆதரிக்கிறார்கள். பூஜ்யம் என்று சொல்லலாம்.

மற்றபடி கலைஞர்களை கைது செய்ததாக - நீலகண்டன், மலர்மன்னன் போன்ற மக்கள் விரோதிகளை கைது செய்வதைத்தான் நீலகண்டன் குறிப்பிடுகிறார். இந்த இடத்தில் கம்யுனிசத்தின் கலை இலக்கிய பங்களிப்பு குறித்து சொல்லியே தீர வேண்டும். சோவியத் ரஸ்யாவின் பொற்காலகட்டத்தில் அங்கு நிகழ்ந்த கலை இலக்கிய நிகழ்வுகள் குறித்தும் அதன் மொழிபெயர்ப்புகள் இங்கு தமிழகம் முதல் பல இடங்களில் உருவாக்கிய விளைவுகள் குறித்தும் அறிந்தவர்கள் நீலகண்டனின் இந்த அரை உண்மை, அரைப் பொய் பிரச்சாரத்தில் விஞ்சி நிற்க்கும் முழு புரளியை புரிந்து கொள்வார்கள். குழந்தைகள் இலக்கியத்தைப் பொறுத்த வரை இன்று வரை ரஸ்யாவின் இடத்தை இட்டு நிரப்ப ஒரு நாடு இல்லை. நல்ல தடித்த அட்டைகளுடன் நல்ல தரமான புத்தகத்தை மிகக் குறைந்த விலைக்கு உலகம் முழுவதும் எல்லா மொழிகளிலும் மொழி பெயரத்து அனுப்பிய சோசலிச ரஸ்யாவின் வலிமை என்பது ஸ்டாலின் கட்டியமைத்த சோசலிசத்தின் சாதனைக்கு ஒரு சான்று. ரஸ்யாவின் சீரழிவோடு நம்மை விட்டுப் போன விசயம் குழந்தைகளுக்கான ஆக்கப் பூர்வமான இலக்கியமும் என்ற உண்மை எனது இந்த கருத்துக்கு வலு சேர்க்கும்.

லெனின் மாக்ஸிம் கார்க்கியை குற்றம் சாட்டினார் என்று எழுதியுள்ளார் நீலகண்டன். சொற்களை சரியாக தேர்வு செய்வதன் மூலம் ஒரே சம்பவத்தை வர்ணிப்பதில் தமக்கு சாதகமான வெவ்வேறு கருத்து நிலைப்பாடுகளை உருவாக்குவதில் பார்ப்பனிய பயங்கரவாதிகள் திறமையானவர்கள் என்பதற்க்கு இது ஒரு நிரூபணம். கம்யுனிசத்தில் சுயவிமர்சனம், விமர்சனம் என்பது மிக முக்கியமானது. தனது நடவடிக்கைகளை குறித்து சுயவிமர்சனம் செய்து கொள்வதுடன், தமது தோழர்களின் மீதும் விமர்சனம் வைத்து தவறுகளை திருத்திக் கொள்வது கம்யுனிச பண்பாடு. அதைத்தான் லெனின் செய்கிறார். மாக்ஸிம் கார்க்கி கடவுள் நம்பிக்கையை வலியுறுத்தி எழுதிய போதுகூட அதனை விமர்சனம் செய்து கண்டித்தவர்தான் லெனின். ஆனால் இவை எதையும் அவர்கள் திரை மறைவுக்குள் மக்களுக்கு தெரியாமல் செய்யவில்லை (கிசு கிசு: சிலர் பிரிண்டிங் பிரஸில் தமது சபலத்தை தீர்த்து மாட்டிக் கொண்டு வெளியில் யோக்கியனாக வலம் வருவது போல அல்ல). அப்படி செய்பவர்கள் யார் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. இந்த பண்பாடுதான் சாம்பலிலிருந்து பீனிக்ஸ் பறவையாக ரஸ்யாவையும், சீனாவையும் அதி வேகத்தில் வளர்ச்சியுறச் செய்தது.

ரஸ்யாவின் விஞ்ஞான சாதனைகளுக்கு அதன் பிரபஞ்ச ஆராய்ச்சி சாதனைகளே பதில் சொல்லும். ஆனால் விஞ்ஞானத்தில் அதுவும் குறிப்பாக இயற்பியலில் நீலகண்டனைவிட ஒப்பிட இயலாத அளவு அறிவு பெற்ற ஐன்ஸ்டீன் ரஸ்ய சோசலிசம் குறித்து என்ன சொல்கிறார் என்று பார்த்தால் அது நீலகண்டன் சொல்வது போல இல்லை. ஐன்ஸ்டீனும் கூட ரஸ்யாவை விமர்சனப் பூர்வமாகவே அனுகுகிறார். ஆனால் அது நீலகண்டன் செய்யும் பொய்யுரை திரிப்பு வேலைகளாக இல்லை. ஐன்ஸ்டீனின் விமர்சனங்களை நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்பதை இங்கு குறிப்பிடுகிறேன்.

மார்க்ஸியம் குறித்து ஒன்றுமே தெரியாமல் வியாக்கியானம் செய்தால் அது ஜெயமோகனின் பின் தொடரும் நிழல் போல புரளி பேசும் மனப் பொக்கரிப்பாகவே இருக்கும். இங்கும் நீலகண்டனும் வெகு சுலபமாக தனக்கு தெரிந்த ஒன்றை மார்க்ஸியம் என்று சொல்கிறார். அதனையே உடைத்தும் பேசுகிறார். இது அவர்களின் பாரம்பரியம். பரபக்க வாதம் என்ற உரைநடை முறையின் அடிப்படையில் பார்ப்பினியத்தின் பழைய நூல்களில் பண்டைய பொருள்முதல்வாதமாகிய சாருவாகத்தை உடைத்து பேசும் போது கூட அதனை திரித்துக் கூறியே உடைக்கிறார்கள்.

அப்புறம் லெனின், ஸ்டாலின் சிலை தகர்ப்பு குறித்து படங்கள் போட்டு தமக்கு சாதகமான ஒரு உணர்வை ஏற்ப்படுத்த முயன்றுள்ளார். அவருக்கு ஒரே பதில், பெரியார் சிலை உடைப்பு எப்படி பெரியாரை உண்மையில்லை என்று சொல்லிவிடாதோ அதே போலத்தான் லெனின், ஸ்டாலின் சிலை உடைப்புகளும். ஆனால் தற்பொழுது லெனின், ஸ்டாலின் மீதான ரஸ்ய மக்களின் காதல் அதிகரித்து வருவது குறித்து நீலகண்டன் பதில் சொல்ல வாய்ப்பிருக்காது. அதுவும் குறிப்பாக ஸ்டாலின் பொற்காலம் குறித்த காதல் ரஸ்ய மக்களிடம் அதிகரித்து வருவது பிற்போக்கு சக்திகளுக்கு கிலி மூட்டக் கூடியது. உண்மையில் அதுதான் இவர்களை கதறியடித்துக் கொண்டு கூகிளில் வரும் முதல் இருபது தளங்களில் 90% இவர்களின் தளங்களாக இருக்கும் படி மாற்றி வைத்திருக்கிறது. சும்மாவா சொன்னார் மாவோ இவர்களை "காகித புலி' என்று.

மாக்ஸிம் கார்க்கியும், லெனினும்:

மாக்ஸிம் கார்க்கியுடனான லெனினுடைய உறவு ஏதோ சம்பிரதாயப் பூர்வமானது என்ற புரிதலில் படிப்பவர்கள் மாக்ஸிம் கார்க்கி மீதான லெனினின் விமர்சனத்தை திரித்து புரிந்து கொள்ளவே வழிவகுக்கும். மாறாக 1905-ல் மே நாள் பிரசூரம் எழுதச் சொல்லி மாக்ஸிம் கார்க்கியை கேட்டுக் கொண்டதிலிருந்து, மாக்ஸிம் கார்க்கி எப்பொழுதெல்லாம் தனது கலை மனதுக்கு மயங்கி நிலை தடுமாறுகிறாரோ அப்பொழுதெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்தது, ரஸ்ய பஞ்சத்திற்க்கு வெளிநாடுகளிடம் உதவி கோரி கார்க்கியை தூதனுப்புவது வரை அவர்களின் உறவு பலப்பட்டே வந்துள்ளது.

மாக்ஸிம் கார்க்கியை சிகிச்சை எடுத்துக் கொள்ளச் சொல்லி நிர்பந்தித்து வேறு நாடுகளுக்கு செல்ல அறிவுறுத்தி லெனின் பல கடிதங்கள் எழுதுகிறார். இதனைத்தான் திரித்து நீலகண்டன் வகையாறாக்கள், லெனின் கார்க்கியை மிரட்டி நாட்டை விட்டு துரத்தினார் என்று எழுதுகிறார்கள். அவற்றில் சில இங்கே: #1, #2

முதலாளித்துவ அறிஞர்களின் போலி மனிதாபிமானத்தையும், அதன் பின்னே ஒளிந்துள்ள ஏகாதிபத்திய அடிவருடித்தனத்தையும் உணராமல் குரல் கொடுத்த கார்க்கியை கண்டித்து லெனின் எழுதுகிற கடிதம் - #3.

இதே கடிதத்தில் கடைசி வரியை மட்டும் "You will die" என்று மாற்றி அதையே ஆதராமாக கொண்டு கார்க்கியை, லெனின் மிரட்டியதாக வெளியிடும் நீலகண்டனின் தரத்தை/நேர்மையின்மையை புரிந்து கொள்ளுங்கள்.

இத்துடன் சேர்ந்து மாக்ஸிம் கர்க்கி லெனினின் மரணத்தை ஒட்டி லெனின் குறித்து எழுதிய சிறு புத்தகத்தை படித்தால் அவர்களிடையே இருந்த உறவு தெரிய வரும். அப்படியில்லாமல் வெறும் வார்த்தைகளை பிய்த்துப் போட்டு விரும்பிய அர்த்தம் கொடுப்பதில் நேர்மையின்மை தவிர்த்து வேறு ஒன்றும் புலப்படவில்லை.

லெனின் குறித்து 1920களில் மாக்ஸிம் கார்க்கி எழுதியதை கீழே கொடுக்கிறேன்.

A Frenchman once asked me:
"Don't you think that Lenin is a guillotine, endowed with a mind?"

"No, I would compare the work of his mind with the blows of a hammer, which possesses the power of sight, and which crushes only that which should have been destroyed long ago."

லெனின் தனது சுத்தியலால் அடித்து நொறுக்கிய பழைய உலகத்தின் பிற்போக்கு மக்கள் விரோதிகளைத்தான் நீல்ஸ் முதலான இன்றைய பிற்போக்குவாதிகள் தூக்கி வைத்துக் கொண்டு அவதூறு கிளப்புகிறார்கள்.

ஸ்டாலின் காலத்தில்தான் கார்க்கி கலை இலக்கிய துறையின் தலைவராக இருந்தார் என்பதே அவர்களிடயே இருந்த உறவை புரிந்து கொள்ள போதுமானது.

லெனின் காலத்தில் அறிவு ஜீவிகளுக்கான, அறிஞர்களுக்கான ரேசன் ஓதுக்கீடு குறித்தான் விசயங்களை கார்க்கிதான் பார்த்துக் கொண்டார் என்பதை நான் இங்கு குறிப்பிட்டே தீர வேண்டும். ஏனேனில் புரட்சியின் நிறைவில் முதல் உலகப் போரின் அழிவால் பஞ்சத்தில் தவித்துக் கொண்டிருந்த ஒரு நாட்டில் அறிவியல் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்க்கான ரேசன் ஒதுக்கீட்டை கார்க்கி கேட்ட போதெல்லாம் தருவித்தார் லெனின். இதைத்தான் நீலகண்டன் அறிவியலை முடக்கிய மார்க்ஸியம் என்கிறாரா? ஆனால் இதனால்தான் ரஸ்யா பல சாதனைகளை சாதிக்க முடிந்தது.

மாக்ஸிம் கார்க்கி ஏதோ ரஸ்ய போல்ஸ்விக் புரட்சியை விரும்பவில்லை போலும், அதனை ரஸ்யர்கள் மீது லேனின் ஏவும் கொடூரமான பரிசோதனை என்றும் கூறுவதாக கூகிளில் வரும் முதல் பத்து பக்கங்கள் எல்லாம் புரளி கிளப்புகின்றன. ஆனால் இவர்கள் கார்க்கியை லெனின் மிரட்டியதாக குறிப்பிட்ட அடுத்த ஆண்டில் அதாவது 1920-ல் அவர் எழுதிய லெனின் எனும் கட்டுரை இவர்கள் சொல்லுவதை எதையும் உறுதிப்படுத்தும் வகையில் இல்லை. மாறாக ரஸ்ய புரட்சியின் மீதான அவரது காதலை வெளிப்படுத்துகிறது. லெனின் மீதான அவதூறுகளுக்கு கார்க்கி பதில் சொல்லுகிறார். அவதூறு பேசுபவர்களை கேவலப்படுத்துகிறார். முதலாளித்துவ ஜனநாயகத்தின் கிரிமினல் முகத்தை கிழிக்கிறார்.

கார்க்கி எழுதுகிறார்:
"எங்கோ ஒரு மூலையில் ஒழிந்திருக்கும் தூரத்து இந்திய கிராமத்திலிருந்து, காடுகளும், மலைகளுமாக பல நூறு மைல்களை கடந்து, தமது உயிரை தொடர்ந்து ஆபத்துக்குள்ளாக்கி, ஆங்கிலேய அதிகாரிகளின் ஆண்டாண்டு கால அடக்குமுறைக்குள்ளான இந்துக்கள் தமது ரஸ்ய லட்சியத்துக்காக காபுலுக்கு வந்து கேட்டனர் "யார் இந்த லெனின்?' என்று"

இதை விட விமரிசையாக லெனினை பாராட்ட முடியாது. இவர்தான் லெனினை பிடிக்காமல் நாட்டை விட்டு வெளியேறினாராம். கேக்குறவன் கேனைப்பயல் என்றால்.....

மேலும் இன்னும் ஒரு படி மேலே சென்று புரட்சிகர வன்முறை குறித்தான தனது கருத்துக்களை முன் வைக்கிறார் கார்க்கி:
"At times one can see in this harsh political leader flashes of almost feminine gentleness and kindness to others, and I am sure that the terror costs him many sufferings, which he succeeds in concealing skillfully. It is impossible and inconceivable that men, destined by history to perform the great contradiction of killing some for the freedom of others, should not feel the pains and the sufferings which nearly exhaust the soul. I know several pairs of eyes in which this burning pain has become fixed forever, for their whole life. All killing is organically revolting for me; but these men are martyrs, and my conscience would never permit me to condemn them"

"இந்த கடுமையான அரசியல் தலைவர்(லெனின்) அடுத்தவர் மீது பெண்மையின் அன்பையையும், பண்பையும் காட்டுபவராக இருப்பதை யாரும் கவனிக்கலாம், மேலும் இந்த பயங்கரங்கள்(புரட்சிக்கு பிந்தைய பாட்டாளி வர்க்கம், எதிரிகள் மீது ஏவிவிட்ட வன்முறைகளை குறிக்கிறார் கார்க்கி) அவருக்கு அதிகப்படியான கஸ்டங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதை உறுதியாக கூறுவேன், அவற்றை வெகு திறமையாக அவர் மற்றவர்கள் பார்வையிலிருந்து மறைக்கிறார். ஒருவரது ஆன்மாவை உறைய செய்யும் வகையில் மற்றவர்களின் சுதந்திரத்துக்காக சிலரை கொன்று விடும் கடமை வரலாற்றால் தம்மீது சுமத்தப்பட்ட ஒருவர் அந்த வலியையும், கஸ்டங்களையும் உணர மாட்டார் என்பது ஏற்றுக் கொள்ளமுடியாததும், சாத்தியமில்லாததும் ஆகும். சுட்டெரிக்கும் இந்த வலியை நிரந்தரமாக தமது வாழ்நாள் முழுவதும் ஏந்தி நிற்க்கும் பல ஜோடி கண்களை நான் பார்க்கிறேன். எல்லாவிதமான படுகொலைகளூம் என்னை வெகு இயல்பாக கிளர்ந்தெழச் செய்கிறது. ஆனால், இவர்கள்(ரஸ்ய கம்யுனிஸ்டுகள்) தியாகிகள், இவர்களை கண்டனம் செய்வதற்க்கு எனது மனசாட்சி எந்த காலத்திலும் இடம் கொடுக்காது".

உண்மையில் இவர்கள் குறிப்பிடும் அடிப்படையில் கார்க்கி எதுவும் சொல்லவில்லை. கார்க்கி இது போல பல இடங்களில் தனது அழகியல் மயக்கத்தையும், அதனால் தவறான நிலைப்பாடு எடுப்பதையும் குறிப்பிடுகிறார். மேலும், லெனின் குறித்து சொல்லும் போது "அவர் ஒவ்வொரு மனிதரைப் பற்றியும் மிகச் சரியாக அவர்களின் நடவடிக்கைகள் மூலம் விளக்குகிறார். அவரது கருத்து இது வரை தவறாக போனதில்லை என்றே சொல்ல வேண்டும்" என்று கார்க்கி குறிப்பிடுகிறார். இவையெல்லாம் கார்க்கியின் தவறுகளை விமர்சித்து லெனின் எழுதியதை மனதில் வைத்தே சொல்கிறார். ஏனேனில் கார்க்கி ஆதரித்த சிலரை பிறகு தவறானவர்கள் என்று கார்க்கியே புரிந்து கொள்கிறார்.

இதோ கார்க்கி தனது ஊசாலட்டத்தை பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

"This fearlessness has been counted by many sheer madness. I was one who began his career of promoting revolution by singing the glory of the madly brave. Yet there was a moment when my natural pity for the people of Russia made me consider this madness as almost a crime. But now I see that this people can suffer patiently much better than it can work conscientiously and honestly. So again I sing the glory of the sacred madness of the brave. And of them, Vladimir Lenin is the first and the maddest."

இதில் கடைசியாக வரும் வரிகள் லெனினை கிறுக்கன் என்று கூறி உரிமையுடன் வஞ்ச புகழ்ச்சி அணிந்துரை செய்கிறது. பார்ப்ப்னிய பயங்கரவாதிகள் இந்த ஒரு வரியை மட்டும் பிய்த்து போட்டு ஏதேனும் கட்டுரையோ புத்தகமோ எழுதும் அபாயம் உள்ளது. இதெல்லாம் கார்க்கிக்கு தெரியாமல் போனது வரலாற்றின் குற்றம்தான்.

ஆக, இப்படி இருக்கிறது லெனின் கார்க்கி உறவு. நீலகண்டனோ கேட்க யாரும் இல்லாத தைரியத்தில் திண்ணையில் எழுதி குவித்த புரளியை இங்கும் கடை பரப்புகிறார். படிக்கும் சாதரண வாசகன் கார்க்கி லெனின் கடிதப் போக்குவரத்துக்கள், பிற உறவுகள் குறித்து ஆய்வு செய்து கொண்டா இருப்பான்?

அறிவியலும் மார்க்ஸியமும்:
அறிவியலைப் பொறுத்தவரை இவர்களுக்கு கிடைத்தவர் லைசென்கோ என்பவர்.

லைசென்கோ சரியானவரா? இல்லையா என்பதை இங்கு பேசப் போவதில்லை. மாறாக, ரஷ்யாவில் நடந்த அறிவியலுக்கான போராட்டத்தின் நிகழ்வுகளை நீலகண்டன் போன்றவர்கள் எப்படி தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதனை அம்பலப்படுத்தும் அளவிலேயே இந்த பகுதியை அனுகவும். ஏனேனில் அறிவியல் குறித்து எனக்கு அறிமுகம் போதாது.

//இன்று எப்படி கத்தோலிக்க சபை பூமி சூரியனை சுற்றுவதை ஏற்றுக்கொள்கிறதோ அது போல இன்று மார்க்சிஸ்ட்கள் (எல்லோரும் அல்ல: அண்மையில் நான் சந்தித்த ஒரு முதுபெரும் தோழர் வர்க்க போராட்ட சுபாவம் பாட்டாளிகளுக்கு மரபு மரபாக கடத்தப்படுவதாக கூறினார்,) ஜீன்களின் இருப்பை ஏற்றுக்கொள்கிறார்கள்.//

லைசென்கோ ஏதோ சுத்தமாக மரபணு விஞ்ஞானத்தையே ஏற்றுக் கொள்ளவில்லை என்று மிகப் பெரிய பொய்யை கடை பரப்புகிறார் நீலகண்டன். புரியாத வார்த்தைகளாக நியுட்டானிய பொருள்முதல்வாதம் போன்றவற்றை உபயோகப்படுத்தி குழப்பவது உள்ளிட்ட இவர்களின் உத்திகளில் இவையும் ஒன்று. அதாவது படிப்பவனுக்கு பிரமிப்பை உருவாக்கும் வார்த்தைகளை போட்டு வைத்து தம்மீது நம்பிக்கையை உருவாக்குவது அதனடிப்படையிலேயே பொய்களை கடை பரப்புவது. லைசென்கோ என்ன சொன்னார் என்று நீலகண்டனுடைய இந்த கட்டுரையை படிக்கும் யாரும் பார்க்கப் போவதில்லை என்ற தைரியமே இப்படி அவரை பொய் சொல்ல வைக்கிறது. கீழே லைசென்கோ மார்கன் மரபு கடத்தல் கோட்பாடை மறுதலிக்கும் அம்சத்தை தருகிறேன். பிறகு படிப்பவர்களே நீலகண்டனுடைய நம்பகத்தன்மையை எடை போட்டுக் கொள்ளுங்கள்.

""Following Weismann, the Mendelist-Morganists contend that the chromosomes contain a special "hereditary substance" which resides in the body of the organism as if in a case and is transmitted to coming generations irrespective of the qualitative features of the body and its conditions of life. The conclusion drawn from this conception is that new tendencies and characteristics acquired by the organism under the influence of the conditions of its lift and development are not inherited and can have no evolutionary significance.""

மேண்டலின்-மார்க்ன் பிரிவைச் சேர்ந்தவர்களின் கூற்றுப் படி, குரொமோசோமில் இருக்கும் ஒரு சிறப்பு பொருள் குறிப்பிட்ட உயிரினத்தின் சுற்றுச் சூழலினால் பாதிக்கப்படாமலேயே ஒரே தகவலை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்கிறது. உண்மை என்னவெனில், சுற்றுச் சூழல் உள்ளிட்ட பல விசயங்களின் பாதிப்பினால் உருவாகும் தகவல்களும் சேர்ந்தே ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது என்பதை நவீன விஞ்ஞானம் ஏற்றுக் கொள்கிறது.

இதைத்தான் லைசென்கொ மறுக்கிறார். மேலேயுள்ள கருத்து தவறுதானே? இது பரினாமத்துவத்தை மறுப்பதுதானே? அதை லைசென்கோ மறுப்பதில் என்ன தவறுள்ளது?

""In other words, whether qualitative variations of the nature of vegetable and animal organisms depend on the conditions of life which act upon the living body, upon the organism.

The Michurin teaching, which is in essence materialist and dialectical, proves by facts that such dependence does exist.

The Mendel-Morgan teaching, which in essence is metaphysical and idealist, denies the existence of such dependence, though it can cite no evidence to prove its point.""

""Naturally, what has been said above does not imply that we deny the biological role and significance of chromosomes in the development of the cells and of the organism. But it is not at all the role which the Morganists attribute to the chromosomes.""

இங்கு லைசென்கோ, மரபணுவில் நடைமுறை வாழ்க்கை ஏற்படுத்தும் பாதிப்புக்குள்ள தொடர்பு குறித்து சொல்கிறார். நீலகண்டன் சொல்லுவது போல குரோமோசோம் உள்ளிட்டவற்றின் பங்களிப்பை அவர் மறுக்கவில்லை(இதனை இரண்டாவது மேற்கோள் குறிப்பிடுகிறது). மாறாக அவற்றுக்கு மட்டுமே அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தைத்தான் மறுக்கிறார்.

ஆக, நடைமுறை வாழ்க்கை மரபணுவில் பதிய வைக்கும் செய்திகளை மறுக்கும் மாண்டலிய-மார்கன் குழுவினரின் சில கருத்துக்களைத்தான் லைசென்கோ மறுக்கிறார். இப்படிப்பட்ட கருத்துக்கள் யாருக்கு தேவைப்படுகிறது? வேறு யாருக்கு கருத்து முதல் வாதிகளான மத வெறியர்களுக்குத்தான் தேவைப்படுகிறது. ஏனேனில் சுற்றுச்சூழல் அல்லாத வேறு எதோ விசயம் உயிரணங்களின் பண்பை தீர்மானிப்பதாக நிறுவ முடியும் எனில் அந்த இடைவெளியில் கடவுளை கொண்டு வந்து உட்கார வைப்பது வெகு சுல்பமல்லவா?(அறிவியலை திரிக்கும் இந்த வேலையை பார்ப்ப்னிய, கிறுத்துவ வெறியர்கள் உலகெங்கும் வெகு விமரிசையாக செய்து வருகிறார்கள்)

ஸ்டீபன் ஹாக்கின்ஸ்சினுடையை பேரண்ட வெடிப்பை கிறுத்துவ மத வெறியர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்த விளைந்தனர். 'There is no place for Super inteligent in Big bang'(சரியான வார்த்தை ஞாபகம் இல்லை) என்று ஸ்டிபன் ஹாக்கின்ஸ் மத வெறியர்களுக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டியிருந்தது. அதே போலத்தான் தமது வர்ணாஸ்ரம தர்மம் குண அடிப்படையில் உருவாகிறது என்பதற்க்கான அறிவியல் அடிப்படையை என்றும் மாறாத 'குரோமோசோமின் ஒரு தகவல் சேமிப்புப் பொருள்' கருத்தாக்கத்தில் காண்கிறார் நீலகண்டன்(இதோ பார்ப்பனியத்தின் சாயலுடன் எழுதும் Bad News India கூட இந்த அம்சத்தில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார் - நான் இங்கு BNIயை பார்ப்ப்னியவாதி என்று குறிப்பிடவில்லை). குணத்தின் அடிப்படையில் வர்ணம் பிரிக்கிறோம் என்று நீலகண்டன் சொல்லி நாம் அதற்க்கான அறிவியல் அடிப்படையை கேட்டால், குரோமோசோமில் உள்ள 'என்றும் மாறா தகவல் சேமிப்பு உட்பொருள்'தான் அவர் நமக்கு பதில் சொல்வதில் உதவ முடியும். இதனாலேயே ஏதையாவது செய்து மரபணு குறித்த இந்த பிற்போக்கு தத்துவத்தை உறுதிப் படுத்தும் அதே நேரத்தில் மார்க்ஸியத்தின் மீது அடிப்படையற்ற பொய்களை சொல்கிறார். இந்த அடிப்படையில்தான் அன்றைய ரஸ்ய மார்க்ஸியர்கள் மாண்டெலிய-மார்கன் குழுவினரின் கருத்து முதல் வாத தன்மையை அம்பலப்படுத்தியுள்ளனர் என்று கருத வேண்டியுள்ளது.

மாண்டெல் ஜீன்கள் குறித்த கருத்துக்களை டார்வின் பாரிணாமத்துவத்தை வந்தடைந்த அதே காலகட்டத்தில்தான் வெளியிடுகிறார். ஜீன்கள் குறித்த மாண்டெலினின் பங்களிப்பு, அவர் மரபணு துறையின் தந்தை என்பதெல்லாம் மறுக்கவியலாதவை. லைசென்கோ சாலவும் சிறந்த விஞ்ஞானி என்பதை நிறுவுவதும் எனது நோக்கம் அல்ல. உண்மையைச் சொன்னால் அந்தளவுக்கு மரபணு குறித்தோ, அறிவியல் குறித்தோ எனக்கு அறிவில்லை.மாறாக அன்றைய சோவியத்தில் நிகழ்ந்த விஞ்ஞானத்திற்க்கான போராட்டத்தை கொச்சைப் படுத்தி அவதூறு கிளப்பும் நீலகண்டனை அம்பலப்படுத்துவதே இங்கு நோக்கம். இந்த வரம்பிற்குட்ப்பட்டே நான் இங்கு கொடுத்துள்ள விசயங்களை புரிந்து கொள்ள வேண்டும். இன்றும் கூட பிரபஞ்ச ஆராய்ச்சியில் பொருள்முதல்வாத துறைக்கு ஆதரவான ஆராய்ச்சிகளை செய்ய கிருத்துவ அடிப்படைவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள அமெரிக்க அரசு நிதி ஓதுக்கீடுகள் தராமால் புறக்கணிப்பதை எதிர்த்து பல விவாதங்கள் லாவணிகள் நடந்து வருகின்றன என்ற கொசுறு தகவலை இங்கு கொடுப்பது பொருந்தும் என்று கருதுகிறேன். ஏன் பண்டைய இந்தியாவிலும், கலிலியோவும் கூட சித்தாந்த போராட்டத்தின் விளைவுகளை சந்தித்துள்ளனர். விஞ்ஞானத்தில் சித்தாந்த போராட்டம் என்பது எல்லா காலத்திலும் நிகழ்ந்து வரும் ஒரு விசயம்தான். வர்க்க சமுதாயம் இருக்கும் வரை இது தவிர்க்க இயலாதது.
மேலும் நீலகண்டன் குறிப்பிடுகிறார், லெனினியத்தை விட நடைமுறை பலனில் நம்பிக்கைக் கொண்ட ஸ்டாலினிசத்தால் இயற்பியல் துறை தப்பித்தது. என்று. ஆனால் ரஸ்ய வரலாறு வேறாக உள்ளது. மரபணு துறையில் மாண்டேலிய-லாமார்க்கம் இரண்டிற்க்கும் முக்கியத்துவம் கொடுத்தே விவாத சூழல் நிலவி வந்துள்ளது. ஏன், ஹேல்டேன், முல்லர் முதல் பலரும் லைசென்கோவை மறுத்து அவர்தான் இயக்கவியலுக்கு முரனானவர் என்று வாதிடுகிறார்கள். ஆக, இந்த விசயம் சோவியத்தில் நிலவிய ஆரோக்கியமான விவாத சூழலையே காட்டுகிறது. நீலகண்டனின் கூற்றை மறுப்பதாகவே உள்ளது. நீலகண்டன் குறிப்பிட்ட விஞ்ஞானிகள் யாருமே லைசென்கோவைத்தான் குற்றம் சாட்டினரே ஒழிய சோசலிசத்தையோ அல்லது மார்க்ஸியத்தையோ அல்ல. மேலும் சொன்னால் இவர்கள் லைசென்கோவை குற்றம் சொன்ன அடிப்படை என்பதே லைசென்கோ மார்க்ஸியத்தை சிதைக்கிறார் என்பதாக இருப்பது, நீலகண்டன் தனது கட்டுரையில் நிறுவ விரும்பும் கருத்துக்கு முரனாக உள்ளது. அதாவது மார்க்ஸியம் அறிவியலுக்கு முரனானது என்ற அவரது அவதூறுக்கு எதிராக இவை உள்ளன.

அறிவியல் அறிஞர்கள் ரஸ்யாவிலிருந்து வெளியேறியது என்பது உள்ளிருந்தே சிதைக்கப்பட்ட ரஸ்ய சோசலிச போராட்டத்தின் ஒரு அங்கமாகவே வருகிறது. இதனாலேயே இந்த அறிஞர்கள் யாரும் சோசலிசத்தை இன்று வரை குறை சொல்லவில்லை.


"In public, he bent over backwards to put a brave face on it. To charges of fellow scientists that Soviet science was overladen by fraud and propaganda and that Soviet genetics was being destroyed by the attempt to apply dialectical materialism to science, Haldane tried to shift the focus by throwing back at them the situation at home. Conditions for research in genetics were better in the Soviet Union than in the British Empire, where scientific research was dependent on patronage from wealthy individuals, he argued, and pointed out that the only department of genetics in the University of London was about to fold. In any case, he went on, "hard words break no bones" (!) and remarked that the attacks on genetics had not led to the curtailment of Vavilov's work. He expressed confidence that, as a scientific question, it would be resolved in a scientific fashion. Going even further, he expressed the view that, so long as it did not lead to the suppression of research, such controversies were a sign of healthy scientific thought. "'

"For 1938, it was entirely too sanguine. In 1939, Haldane wrote to Vavilov, a longtime friend and the source of his invitation to the Soviet Union in 1928, asking him to write an article for Modern Quarterly. Vavilov agreed. However, in 1940 Vavilov was arrested. Yet in 1941, the year of Vavilov's trial,
Haldane wrote:
The controversy among Soviet geneticists has been largely one between the academic scientist, represented by Vavilov and interested primarily in the collection of facts, and the man who wants results, represented by Lysenko. It has been conducted not with venom, but in a friendly spirit. Lysenko said (in the October discussions of 1939): "The important thing is not to dispute; let us work in a friendly manner on a plan elaborated scientifically. Let us take up definite problems, receive assignments from the People's Commissariat of Agriculture of the USSR and fulfil them scientifically. "Soviet genetics, as a whole, is a successful attempt at synthesis of these two contrasted points of view.""

இந்த மேற் சொன்ன ஹால்டேனின் வரிகள், நீலகண்டனின் பொய்களை கிழிக்கும் முகமாக உள்ளன.

ஹால்டேன் மேலும் சொல்கிறார்.

"In delivering the Haldane Memorial Lecture (in memory of his father) at Birkbeck College, London, in 1938, Haldane himself shed light on his own intellectual development in the sphere of philosophy of science. Until going to the Soviet Union, he said, he had been unaware of the existence of Marxism as a philosophy of science, but it had made a deep impression on him, both in virtue of its prevalence and of its connection to concrete scientific research, especially to biological research. Until then, he had no idea that an astronomer, chemist, or biologist might find Marxist principles to be an aid to research. Thereupon, he read Engels's Anti-Duhring and Ludwig Feuerbach and thought Engels far ahead of his time:

Had these books been known to my contemporaries, it was clear that we should have found it easier to accept relativity and quantum theory, that tautomerism would have seemed an obvious hypothesis to organic chemists, and that biologists would have seen that the dilemma of mechanism and vitalism was a false dilemma."

அறிவாளிகள் யாரும் மார்க்ஸிஸ்டுகளாக இருகக் முடியாது என்ற பார்ப்பன கருத்தை பதிய வைத்த அன்பர் இதனையும் எதிர்த்து வாதிட வேண்டும். வாதிட வர மாட்டார் அந்த அன்பர். ஏனேனில் இதற்க்கு முன்பு அவரை வாதிட கூப்பிட்ட இடத்திலெல்லாம் ஓடி ஒளிந்து கொண்டவர் அவர்.

இப்படி ஹால்டேனை சோவியத் ரஸ்யாவுக்கு ஆதரவாக கொண்டு வந்து விடுவார்கள் என்று தெரிந்துதான் அவர் மீதும் ஒரு கறையை விட்டுச் சென்றுள்ளார் நீலகண்டன். ஆனால் அவரது கூற்றுக்கு மாறாக உள்ளது உண்மை. லைசென்கோவின் ஆதிக்கம் தலைத் தோங்கி இருந்ததாக இவர்கள் சொல்லும் காலக்கட்டம் முழுவதும் ஹேல்டென் ஐரோப்பாவில்தான் இருக்கிறார். சூயஸ் யுத்தத்திற்க்கு எதிராகத்தான் இந்தியாவுக்கு ஹேல்டேன் வந்ததாக விக்கிபீடியா சொல்கிறது. அதுவும் 1956யை ஒட்டி. அதாவது ஸ்டாலினின் மறைவுக்கு பிற்பாடு. அதாவது சோச்லிச முகாமை முதலாளித்துவ பிற்போக்குவாதிகள் கைப்பற்றிய பிறகு நடந்தது. 1941-ல் சதி குற்றச்சாட்டின் பேரில் கொல்லபப்ட்ட வவிலோவை 1939-ல் கூட கட்டுரைகள் எழுதச் சொல்லி கேட்டிருக்கிறார்கள் ரஸ்யாவில். இது அங்கு நிலவிய விவாத சூழலையே காட்டுகிறது. ஹேல்டெனை சோவியத்துக்கு அழைத்தவரே வவிலோவ்தான். வவிலோவ் அவரது விஞ்ஞானத்திற்க்காக கொல்லப்படவில்லை, அவர் சதி செய்ததாகவே விசாரனை செய்து பிறகு கொல்லப்பட்டார்.

லைசென்கோவின் சொந்த வார்த்தைகள் மரபணூவை அவர் மறுதலிக்கும் அம்சத்தை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இதனை ஆதரித்த ஹெல்டெனோ மார்க்ஸியத்தை வெறுத்து கடைசி வரை எதுவும் சொன்னதாக எனக்கு தெரியவில்லை. அவர் இந்து மதத்தின் மீதிருந்த பற்றினால்தான் இந்தியா வந்தார் என்றும் எங்கும் எழுதப்படவில்லை. மாறாக இங்கிலாந்து சூயஸ் மீது தொடுத்த யுத்தத்தை எதிர்த்தே இந்தியா வந்தார். இங்கு வந்த பிற்பாடு இந்து மத தத்துவங்களால் ஈர்க்கப்பட்டார். இப்படி நீலகண்டன் கட்டியமைத்த பொய்யுரைகள் எதுவுமே நிற்க இடமின்றி அந்தரத்தில் தத்தளிக்கின்றன. ஹேல்டேனே சொல்லுவது போல அன்று மரபணூ துறையில் ரஸ்யாவில் நிகழ்ந்தவையெல்லாம், நடைமுறை பலனை கொடுத்த லைசென்கோவிற்க்கும், அறிவியல் ரீதியாக சரியாக இருந்த வவிலோவுக்கும் நடந்த போராட்டமே.

ஆனால் வவிலோவ் சதி செய்தார் என்று குற்றம் சாட்டி கொல்லப்பட்டது இந்த ஆராய்ச்சி துறை போராட்டங்களுக்கு சம்பந்தமில்லா ஒன்றாகவே நிகழ்ந்துள்ளது. இதனை ஆராய்ச்சி துறையுடன் சம்பந்தப்படுத்தி அவதூறு கிளப்ப முயற்சித்துள்ளார் நீலகண்டன். இங்கு லைசென்கோவின் அதிகார துஸ்பிரயோகம் நிகழ்த்திய பாதிப்புகளை ஸ்டாலினுக்கும், அதை லெனினுக்கும், பிறகு கம்யுனிசத்துக்கும் விரிவு படுத்தி பேசுகிறார் நீலகண்டன். ஆனால் பாதிக்கப்பட்ட தலைசிறந்த விஞ்ஞானிகளோ தனிமனித தவறுகளை கண்டிதத்தார்கள் ஆனால் சோசலிசத்தையோ இயக்கவியல் பொருள்முதல்வாதத்தையோ குறை சொல்லவில்லை இன்று வரை.

அன்றைய அறிவுஜீவி வர்க்கம் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் ஏகாதிபத்திய ஆட்களின் ஊடுருவல் மிகக் கடுமையாக இருந்தது. முதல் உலகப் போர், உள்நாட்டுப் போர், பஞ்சம், எல்லையில் யுத்த அபாயம், உள்நாட்டு சதி, இரண்டாம் உலகப் போர் இப்படி தொடர்ந்து கடும் நெருக்கடியிலேயே தன்னை வளர்த்து எந்த நாட்டையும் சுரண்டாமல் வல்லரசாகிய ரஸ்யாவின் இந்த கொடுமையான பாதையில் சில சறுக்கல்கள் நிகழ்ந்தன. ஏன், ஸ்டாலினுடைய மெய்காவலரையே கைது செய்து தண்டிக்கும் அளவுக்கு போனார்கள் கட்சிக்குள் ஊடுருவிய ஏகாதிபத்திய ஆதரவாளர்கள். ஆனால் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் எல்லா இடங்களிலும் ஊடுருவியிருந்த தேச துரோகிகளை தண்டித்ததைத்தான் நீலகண்டன் இங்கு பிரதானப்படுத்துகிறார். ஆனால் இதே காரணத்திற்க்காகத்தான், அதாவது இந்த தவறுகளையும் மீறி சோசலிசத்தை எல்லா சதிகளையும் முறியடித்து நடைமுறைப்படுத்தியதற்காகத்தான் ஸ்டாலின் எமது தலைசிறந்த தலைவராக இருக்கிறார்.

சோவியத் ரஸ்யா உலகின் முதல் சோசலிச அரசு. சோசலிச அரசின் தவறுகள் இல்லாமல் இல்லை. தவறுகள் இல்லாமல் அந்த அரசில் முதலாளித்துவ பாதையாளர்கள் புகுந்திருக்க முடியாது. எனவே சோவியத் ரஸ்யா, சீன அனுபவங்களை நாங்கள் கம்யுனிஸ்டுகள் விமர்சனக் கண்ணோட்டத்துடன் தான் அனுகுகிறோம். இதன் அர்த்தம் அடிப்படையின்றி நிராகரிப்பதோ அல்லது அவதூறு தொடுப்பதோ அல்ல. மாறாக, ஒரு தத்துவத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள தவறுகளை களைவது என்ற அம்சத்திலேயே அவற்றைப் பார்க்கிறோம்.
ஆனால் எமது தத்துவம் குறித்து எந்த ஒரு கேள்வியும் எழுப்ப இயலாத நீலகண்டன், அதை நடைமுறைப்படுத்தியதில் நிகழ்ந்த சில தவறுகளையும், பிற்போக்குவாதிகளின் பொய்யான அவதூறுகளையும் நம்பி தாக்குதல் தொடுத்துள்ளார்.

இப்பொழுது மீண்டும் எமது கேள்விகளை ஞாபகப்படுத்துகிறோம். மார்க்ஸியத்தின் அடிப்படை என்னவென்றே தெரியாமல் அவதூறு கிளப்பத் துணிந்த நீலகண்டன் அவர்களே, ஏன் உங்களது இந்துத்துவத்தின் அடிப்படை குறித்து கேட்ட எமது ஒரு கேள்விகளுக்கும் இது வரை பதில் சொல்லவில்லை?

மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் இறந்து போன சமூக விரோத கும்பல்களின் குடும்பத்துக்கு சமர்பித்து நீலகண்டன் இந்த புரளி கட்டுரையை எழுதியது சாலவும் பொருத்தமானதே. அதே நேரத்தில் உலகமய தாக்குதலில் இறந்து போன லட்சம் விவாசாயிகளுக்கு சமர்ப்பித்து எதுவும் கட்டுரை எழுதி அவர்களை அவமானப்படுத்தியுள்ளாரா நீலகண்டன் என்று தேடிக் கொண்டிருக்கிறேன். அப்படியெதுவும் நடந்து விடாமல் இருக்க எல்லாம் வல்ல பரமாத்வாவை வேண்டுகிறேன்.

எத்தரும், ஐன்ஸ்டீனும் - நீலகண்டனின் பொய்யுரையும்:
எத்தர் எனும் பருப் பொருள் பிரபஞ்சம் முழுவதும் இருப்பதாக ஒரு கருத்தை சோசலிஸ்டு ஆய்வாளர்கள் கூறியதாகவும் அதனை ஐன்ஸ்டீனின் புரட்சிகர கண்டுபிடிப்புகள் அடித்து நொறுக்கி விட்டதாகவும் சொல்கிறார் நீலகண்டன். ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்புகள் புரட்சிகரமானவை என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை. எத்தர் குறித்து இன்று வரை பெரிய அளவில் விவாதம் சென்று குறிப்பது குறித்தும் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அவருடைய கண்டுபிடிப்புகளோ அல்லது இன்று வரையான அறிவியல் கண்டுபிடிப்புகளோ இயக்கவியல் பொருள்முதல்வாதத்திற்க்கு முரனாக எதுவும் சொல்லவில்லை என்பதை வலியுறுத்துகிறேன். இது குறித்தான ராஜவனஜ்ஜின் கட்டுரையை படிக்கவும். மாறாக ஒவ்வொரு கண்டுபிடிப்பும் கருத்து முதல்வாத பார்ப்ப்னியத்தின் மென்னியை பிடித்து உலுக்கி வருகின்றன. இதனை அம்பலப்படுத்தத்தான் வர்ணாஸ்ரமத்தில் விவாதம் செய்ய கூப்பிட்டோம் உண்மை தெரிந்த நேர்மையாளர்கள்(?) ஓடி ஒளிந்து கொண்டு இப்பொழுது அவதூறு பிரச்சாரம் செய்கிறார்கள்.

பேரண்ட வெடிப்பு கருத்தாக்கத்திற்க்கான மறுப்பாக பல விவாதங்கள் பிரபஞ்ச ஆய்வாளர்களிடையே நடந்தேறி வருகின்றன. அதிலும் கூட அரசாங்கம் கருத்து முதல்வாதத்திற்க்கு ஆதரவாக இருக்கும் பேரண்ட வெடிப்பு சம்பந்தப்பட்ட ஆய்விற்க்கு முக்கியத்துவம் கொடுப்பதும் பிற முயற்சிகளுக்கு தடை ஏற்படுத்துவதும் நடந்து வருகிறது. எத்தர் என்ற துகள் குறித்து எழுதிய நீலகண்டன் சமீபத்திய கண்டுபிடிப்பாக பிரபஞ்சம் முழுவதும் எனர்ஜி துகள் ஒன்றால் நிரம்பி உள்ளது என்ற கண்டுபிடிப்பைப் பற்றி ஒன்றும் சொல்லாதது எமக்கு ஆச்சரியம் தரவில்லை. பொய்யை நம்பி புலவர் பட்டம் பெற விரும்பிய அவரின் நிலை பரிதாபகரமானதே.

ஒரு வேளை எத்தர் எனும் பருப் பொருள் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருப்பது குறித்து ஐன்ஸ்டீன் மறுத்திருப்பார் எனில் இன்று அது போன்றதொரு மெல்லிய பொருள் படந்திருப்பது குறித்து விஞ்ஞானிகள் ஒத்துக்கொள்கிறார்கள்.

உடனே இதனை குறிப்பிட்டு ஐன்ஸ்டீன் எனும் அடைக்கப்பட்ட ஆபிரகாமிய சித்தாந்தவாதி என்று பதிவிடுவது எந்தளவுக்கு முட்டாள்தனமோ அந்தளவுக்கு முட்டாள்தனமானதாக நீலகண்டனின் இந்த பதிவும் உள்ளது, உண்மையில் ஐன்ஸ்டீனின் சில அடிப்படை கண்டுபிடிப்புகள் தவறு என்று உறுதி செய்து பதிவிடுவதே நேர்மையானதொரு ஆய்வு முறையாக இருக்க முடியும். அப்படி இயங்கியலின் அடிப்படை எதையும் நீலகண்டன் கேள்வி எழுப்பவில்லை.

ஆனால் உலகின் சாலச் சிறந்த இயற்பியல்வாதி ஐன்ஸ்டீன் மார்க்ஸிய-சோசலிசத்திற்க்கு ஆதரவானவராக இருந்து பிற்போக்காளர்களை மூக்குடைத்தது போலவே, எத்தர் எனும் பருப் பொருள் இருப்பதையும் உறுதிப்படுத்தி அவர்களின் மூக்குடைக்கிறார். 1916க்கு பிறகு எத்தர் இருப்பதை உறுதிப் படுத்துகிறார் ஐன்ஸ்டீன். சமீபத்திய கண்டுபிடிப்புகளும் அண்ட வெளியில் நிரம்பியிருக்கும் மெல்லிய பருப் பொருள் குறித்து பேசுகின்றன.

ஐன்ஸ்டீன் எத்தரை மறுத்தார் என்று பொய் சொன்ன நீலகண்டன் எனும் அதி அறிவுஜீவிக்கு அதனை பிறகு ஐன்ஸ்டீன் உறுதிப் படுத்தியது தெரியாமலா இருந்திருக்கும்? இல்லை அன்பர்களே, அவரது பார்ப்னிய வெறி இவ்வாறு கண்மூடித்தனமாக எழுதச் சொல்லுகிறது. அவரது பாணியிலேயே நானும் சொல்லலாமா இயக்கவியல் அறிவியல் பூர்வமாகவும் வென்றே வருகிறது என்று? ஆம் அப்படித்தான் சொல்ல வேண்டும். ஐன்ஸ்டீனின் இந்த கண்டுபிடிப்பு கருத்துமுதல்வாதிகளின் அடித்தளத்தை சுத்தமாக பிடுங்கி எறியும் விசயம். இதோ எத்தர் எனும் கருத்தாக்கத்தில் ஐன்ஸ்டீன் எதை மறுக்க விரும்பினார் என்பதையும் எத்தர் எனும் அண்ட பொருள் குறித்து அவர் எதை நம்பினார் என்பதையும் அவரது வரிகளே கூறுகின்றன.

"It would have been more correct if I had limited myself, in my earlier publications, to emphasizing only the nonexistence of an ether velocity, instead of arguing the total nonexistence of the ether, for I can see that with the word ether we say nothing else than that space has to be viewed as a carrier of physical qualities."

"in 1905 I was of the opinion that it was no longer allowed to speak about the ether in physics. This opinion, however, was too radical, as we will see later when we discuss the general theory of relativity. It does remain allowed, as always, to introduce a medium filling all space and to assume that the electromagnetic fields (and matter as well) are its states. [...] once again 'empty' space appears as endowed with physical properties, i.e., no longer as physically empty, as seemed to be the case according to special relativity "

"There is an important argument in favour of the hypothesis of the ether. To deny the existence of the ether means, in the last analysis, denying all physical properties to empty space."

எத்தர் குறித்த ஐன்ஸ்டீன் என்ற இந்த கட்டுரையையும் படிக்கவும். எத்தர் குறித்து ஐன்ஸ்டீன்

கருத்து முதல் வாதிகளே, பார்ப்பனிய பொய்யர்களே உங்களது தத்துவ அடிப்படை இப்படி ஓட்டையாக(hallow) நிற்கிறதே எதை கொண்டு இந்த அவமானத்தை மூடி மறைக்கப் போகிறீர்கள்?

நீலகண்டனின் அந்த குறிப்பிட்ட கட்டுரையில் உள்ள பொய்கள், அரைப் பொய்கள், திரிக்கப்பட்ட கருத்துக்களை முடிந்தளவுஅம்பலப்படுத்தியாகிவிட்டது. சில விசயங்கள் ஏகாதிபத்திய புரளிகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. கூகிளில் தேடினால் வரும் முதல் பத்து பக்கங்களில் லெனினின் பாலியில் ஒழுக்கம் முதல் மாவோவின் களி வெறியாட்டம் வரை பல மூன்றாம் தர பொய்கள் நீலகண்டனின் கட்டுரை தரத்திற்க்கு கடை பரப்பப்பட்டுள்ளன அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் வேறு எதுவும் உருப்படியாக செய்ய முடியாது.

மேலும் சோவியத் ரஸ்யாவும், சீனாவும் சத்தியமாக பண்டைய கால புனித ராம ராஜ்யம் அல்ல(:-))). அதாவது தவறுகளே நிகழாத கற்பனை தேசங்கள் அல்ல. அந்த தவறுகளை வைத்து அடிக்கப்படும் ஜல்லிகளை, அந்த நாடுகளின் சாதனைகளை முன்னுக்கு கொண்டு வந்துதான் எடை போட வேண்டியுள்ளது. இவையனைத்தையும் ஏற்கனவே கேடயம் பதிவில் தோழர் பாவேல் குறிப்பிட்டது போல வேறு பல முதலாளித்துவ அறிஞர்களின் எழுத்துக்களின் மூலமே கூட புரிந்து கொண்டால் அடிப்படையற்ற இந்த அவதூறுகளிலுள்ள பொய் தெரிய வரும்.

சாம்பலிலிருந்து பீனிக்ஸ் பறவையாக, எந்த ஒரு நாட்டையும் சுரண்டாமல் வல்லரசாகிய வெல்ல முடியா மக்கள் சக்தியை பார்த்துதான் சோசலிசத்தை நாம் எடை போடுகிறோம். இதனை சாதித்த சோசலிச உற்பத்தி முறையை பார்க்கிறோம். மாறாக இவையனைத்தையும் பற்றி எந்த ஒரு மூச்சும் விடாமல் பஞ்ச கால போட்டோ வை போட்டு வைத்து யாதார்த்தவாதம் என்ற பெயரில் குதர்க்கவாதம் பேசும் மனநோய் எமக்கு இல்லை.

அசுரன்

Related Posts with Thumbnails