TerrorisminFocus

Showing posts with label பயங்கரவாதம். Show all posts
Showing posts with label பயங்கரவாதம். Show all posts

Thursday, November 26, 2009

எல்லை தாண்டிய பயங்கரவாதம்!!

வர்கள் வண்டிகளில் வந்து இறங்கினார்கள். துப்பாக்கிகளை இயக்கி சட சடவென சுட்டுத் தள்ளினார்கள். சிதறி ஓடிய மக்களில் 12 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

அவர்கள் படகுகளில் வந்தனர். துப்பாக்கிகளை இயக்கி சட சடவென சுட்டுத் தள்ளினார்கள். சிதறிய ஓடிய மக்கள் கொல்லப்பட்டனர்.

மேலே சொல்லப்பட்ட இரண்டு சம்பவங்களில் ஒன்று நடந்தது ஒரிஸ்ஸாவின் கலிங்கா நகர். ஒரிஸ்ஸாவின் இரும்பு கனிம வளம் நிறைந்த நிலங்களை போஸ்கோ என்ற பன்னாட்டு இரும்பு உருக்கு ஆலைக்கு கொடுப்பதை எதிர்த்துப் போராடிய கலிங்கா நகர் மக்கள் மீது காக்கி சீருடை அணிந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சுடு ஆகும்.

இரண்டாவது சம்பவம் நவம்பர் 26 மும்பை ரயில் நிலையத்தில் பல வண்ண ஆடைகள் அணிந்து வந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சுடு ஆகும்.

தற்போது, 11/26 இந்தியாவின் ஊடக-அரசியல் திருவிழாக்களில் ஒன்றாக மாறிவிட்டதை சில வாரங்களாகப் பார்க்கிறோம்.
நவம்பர் 26 ன் போது அந்த பக்கமாக குப்பை பெருக்கிக் கொண்டிருந்தவர் முதற்கொண்டு பேட்டியெடுத்து போட்டு அமளி கிளப்பிக் கொண்டிருந்தனர் ஆர்.எஸ்.எஸின் பினாமி தொலைக்காட்சியான NDTVயினர்.

'மக்கள் பாதுகாப்பாக இல்லை'
'மும்பை மக்கள் கோபத்தில் உள்ளனர்'

இப்படி மக்களுக்கே தெரியாதவற்றையெல்லாம் கண்டுபிடித்து சுய அரிப்பை தீர்த்துக் கொண்டிருந்தார்கள். நவ 26 அன்று, மும்பை ரயில் நிலையத்தில் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை ஒரு சடங்கு போல காட்டி முகம் திருப்பிக் கொண்டன இந்த ஊடகங்கள். ஆனால், இதே நேரத்தில் தமது வர்க்கத்தினர் கொல்லப்பட்ட தாஜ் ஹோட்டலைத்தான் முழுவதும் தொலைக்காட்சியில் ஒலி ஒளி பரப்பினர். மக்களும் சரி, மும்பை ரயில் நிலையமும் சரி நவம்பர் 26க்கு அடுத்த நாட்களிலேயே சகஜ நிலைக்கு திரும்பி விட்டிருந்தனர் எனும் போது, இன்றைக்கு ஒரு வருடம் கழித்து அந்த உணர்வு என்னவாக இருக்கும் என்று புரிந்து கொள்ள இயலும்.

ஆனால், இதே நேரத்தில் காக்கி உடை பயங்கரவாதிகளையும், அவர்களை ஏவிவிட்ட கதர், காவி, சிவப்பு ஆடை அரசியல்வாதி-பயங்கரவாதிகளையும், அவர்களை பின்னால் இருந்து ஆட்டுவிக்கும் எல்லை கடந்த பயங்கரவாத பன்னாட்டு கம்பனிகளையும் எதிர்த்து இன்று வரை கலிங்காநகர், நந்திகிராம், லால்கர் என மக்கள் போராடி வருகிறார்கள். அது குறித்து இந்த ஊடகங்கள் வாய் திறந்து பேசுவதில்லை.

பொய்யான உணர்வுகளை ஊதிப் பெருக்கி உண்மை என நிறுவுவதும், அன்றாட வழமையாகிப் போன ஒடுக்குமுறைகளை இல்லாதவொன்றாக சித்தரிக்க எண்ணி மறைப்பதும்தான் உலகமய காலகட்டத்தின் ஊடக தர்மமாகிப்(வியாபாரம், சுய அரசியல்) போனது.

நவம்பர் 26ன் நாய'கரா'க, பா. சிதம்பரத்தை நடுநாய'கமா'க நிறுத்தி(உட்கார) வைத்து சில மேட்டுக்குடி அறிவுஜீவிகள் 'இந்தியா அண்டர் அட்டாக்' என்ற பொய்யான வருவித்துக் கொண்ட உணர்வுடன் கேள்விகளை விளாசிக் கொண்டிருந்தனர் NDTVயில். அது பார்ப்பதற்கு மூல வியாதி வந்தவனின் முக்கிய அவஸ்தைகளை எனது மனத்திரையில் விரித்தது.

என்னவொரு பதைபதைப்பு, ஆக்ரோசம்? சல்வாஜூடம் என்ற கூலிப் படையின் மூலம் ஒரு மாநிலமே எல்லை தாண்டிய பயங்கரவாதிகளின் தாக்குதல் இலக்காகி பல நூறு பேர்களின் உயிரையும், பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வையும், இந்தியாவின் எதிர்காலத்தையும் கபளீகரம் செய்து வருவது குறித்து இந்த ஆவேசமும், ஆக்ரோசமும் இவர்களுக்கு வருவதில்லையே?

இதைத்தான், இந்தியாவின் இதயத்தில் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது என்ற தனது கட்டுரையிலும் அருந்ததிராய் எழுதியிருந்தார். (The Heart Of India Is Under Attack, By Arundhati Roy - 31 October, 2009, Guardian.co.uk.) இந்தியா அண்டர் அட்டாக் என்பதை விடுங்கள், இந்தியாவின் இதயமே அட்டாக் ஆகி உள்ளதே என்ன செய்யப் போகிறீர்கள் என்று எவனும் கேள்வி கேட்கவில்லை.

நவ 26 எனது உணர்ச்சிகளை முடக்கிப் போட்டதாக சொல்கிறார் தெண்டுல்கர். இன்றைய நிலவரப்படி இந்தியாவின் தலை சிறந்த தேச பக்தராக முன்னிறுத்தப்படுபவர் இவர்தான். ஆயினும் இவரால் மும்பை தாக்குதல்களுக்கு மட்டும்தான் இவ்வாறு முடங்கியிருக்க முடிந்தது. இந்தியாவின் பிற பகுதிகளில் - சட்டீஸ்கர், கர்நாடகா, மஹாராட்டிரா, மேற்கு வங்கம், ஒரிஸ்ஸா, பீஹார் - பன்னாட்டு நிறுவனங்கள் கனிம வளங்களுக்காகவும், தமது கொழுத்த லாப வேட்டைக்காகவும் நடத்தி வரும் அரசு பயங்கரவாத தாக்குதல்கள் இவர்களை பாதிக்கவில்லை. பாதிக்கப் போவதுமில்லை.


நவம்பர் 26 தாக்குதலின் போது கூட தெளிவாக தாஜ் ஹோட்டலை கட்டியழுதவர்கள், இன்றுவரை அழுது கொண்டிருப்பவர்கள்தான் இவர்கள். அவர்கள் யார் என்பதில் அவர்கள் வெகு தெளிவாக உள்ளனர்.

அப்படியென்றால் நாம் யார்? எது தேச பக்தி? எது எல்லை தாண்டிய பயங்கரவாதம்? எனது இந்தியா எது? எந்த இந்தியா யாரால் தாக்கப்படுகிறது? இந்த கேள்விகளில் அடங்கியுள்ளது யார் நான் என்பதற்கான பதில்கள். விடை தெரியும் போது மிகப் பெரும் உள்நாட்டு அபாயமாக நீங்களே சித்தரிக்கப்படும் அபாயமும் நிகழலாம்.

அசுரன்

மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம் – 1)


மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம் – 2)

Wednesday, January 30, 2008

ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!

நன்றி லேமூரியன்


ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!

தாவது நாங்க ஒரு ஆள்தான் பார்ப்ப்னியத்த எதிர்க்குறோம், நாங்கதான் உண்மையான பார்ப்பன எதிர்ப்பாளர்கள் அப்படின்னெல்லாம் மார் தட்டிக் கொண்டு அலைஞ்சவங்க எல்லாம் இப்போ பார்ப்ப்னியம் மேலே ஏறி நின்னு அடிக்கும் போது எங்கியோ போய் ஒளிஞ்சுக்கிட்டாங்க. அது தனிக் கதை.




இப்போ விசயம் என்னன்னா, பார்ப்பனியத்தோட அடியாள் படை, ரவுடி, கழிசடை கும்பல் துப்பாக்கியோட மத்திய பிரதேசத்துல ஊர்வலம் போயிருக்கானுங்க. அது 30ஆம் தேதி இந்தியன் எக்ஸ்பிரசில் செய்தியா வந்திருக்கு. இதே RSS கும்பலோட அல்லக்கை அமைப்பான பஜ்ரங்தள் ஆளுங்க 2007 ஆரம்பத்தில் மஹாராஸ்டிர நாண்டட்டில் குண்டு தயாரிக்கும் போது வெடித்து மாட்டிக்கிட்டாங்க. அப்பொதான் RSS நாக்பூர் ஆபிசுக்கு குண்டு வைச்சது, வெறு சில மசூதிகளில் குண்டு வெச்சது எல்லாம் இவந்தான்னு தெரிஞ்சது. குண்டு வைச்சிட்டு பலிய முஸ்லீம் மேல போட வசதியா முஸ்லீம் குல்லா முதலான தயாரிப்புகளோட நாண்டட்டில் மாட்டிக்கிட்டாங்க.

இது தவிர்த்து சாஹா பயிற்சி முகாம்களில் துப்பாக்கி பயிற்சி எடுப்பது குறித்து பத்திரிக்கைகளில் படங்களுடன் செய்திகள் வந்தது. இதற்க்கெல்லாம் சிகரம் வைச்ச மாதிரி, குஜராத கலவரத்தில் ராக்கெட் லாஞ்சர் டைப் வெடிகுண்டுகள் பயன்படுத்தியதாக தெஹல்கா விடியோவில் பேசினான் ஒரு எம்.எல்.ஏ. இப்போ போதாக்குறைக்கு RSS கும்பல் IT துறையில் வேறு நேரடியாக நுழைந்துவிட்டது.

இப்படி ஒரு அதி பயங்கரவாத கும்பாலா இருந்தாக் கூட இவனுக்கு இந்த அரசு எல்லா பாதுகாப்பும் வழங்கும். ஏன்னா இந்த அரசே ஒரு பார்ப்பனிய அரசுதான். இது தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்கிறாங்க சில பார்ப்பன எதிர்ப்பாளர்கள். அவிங்கள் நினைச்சாதான் பாவமா இருக்கு.

பார்ப்பினியம் தெளிவாக உள்ளது, இந்த அரசாங்க அமைப்பை நம்பி தனது செய்ல்பாடுகள் இல்லை என்பதில். மாறாக இந்த அரசின் இயல்பில்தான் தனது பலத்திற்க்கான ஊற்று மூலம் உள்ளது என்பது அதற்க்கு தெளிவாக தெரிந்த காரணத்தினால்தான் அரசாங்கம் அமைக்கும் விசயத்தில் ஏற்ப்படும் பின்னடைவுகளை அது பொருட்படுத்துவதில்லை.

ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் இந்தியாவில் பார்ப்னியத்தை வீதிகளில் சந்தித்து அடிக்காத வரை பார்ப்பனியத்துக்கு கவலையில்ல.

Indian Express News

Source: Newscap also read செய்தி விமர்சனம்

Related Articles:

"குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பயங்கரவாதிகள்"

இவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான் ...

பில்கிஸ் தீர்ப்பு - சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியும...

Sunday, November 04, 2007

வரலாறு பழிக்கிறது நாம் கோமாளிகள் என்று!

குஜாரத்தின் இன அழிப்பு படுகொலைகள் குறித்து பலமுறை பேசியாகி விட்டது. ஆயினும்.... மோடி என்ற இந்துத்துவ பயங்கரவாத நாய் குறித்து பலமுறை பேசியாகிவிட்டது. ஆயினும்.... பார்ப்ப்னிய பயங்கரவாதம் குறித்தும் பாசிசம் குறித்தும் மயிர் பிளக்க பேசி வார்த்தை கடல்களையே உருவாக்கிவிட்டோம். ஆயினும்.... நமக்கு விரும்புகிற வாய்ப்புகள் கிடைத்த இடத்திலெல்லாம் இந்துத்துவ பயங்கரவாதிகளை அந்த கடலில் முக்கியெடுத்து மூச்சு திணறடித்து வார்த்தைகளால் அடித்தே விரட்டி விட்டோம். ஆயினும்.... வார்த்தைகளால் இட்டு நிரப்ப முடியாத பயங்கரவாத வெளி என்பது இன்னும் பெரிய அளவில் விரிந்தே கிடக்கிறது. எந்தளவுக்கு என்றால் இந்துத்துவ அபாயம் குறித்த உண்மைகளை உணராமல் இருக்கும் கோடிக்கான மக்களுக்கும் இந்துத்துவ எதிர்ப்பு படிப்பறை கும்பலுக்கும் உள்ள இடைவெளி எந்தளவுக்கோ அந்தளவுக்கு. இது குஜராத்துக்கு மட்டும் பொருந்தும் உண்மையல்ல. இந்துத்துவ பயங்கரவாதமும் வெறும் அரட்டை அரங்க கூட்டத்தில் தோற்க்கடித்து ஓட விரட்ட வேண்டிய கூட்டமுமல்ல. ஆயினும்.... நாம் அப்படித்தான் இன்று வரை நம்பிக் கொண்டிருக்கிறோம்.

சமீபத்திய தெஹல்கா அம்பலப்படுத்திய குஜராத இனப் படுகொலை குறித்தான உண்மைகள் இந்துத்துவ பயங்கரவாதம் குறித்து வார்த்தைகளால் புரிய வைக்க முடியாத இடைவெளியை இட்டு நிரப்பும் ஒரு முயற்சியாகவே பார்க்கத் தோன்றுகிறது. புரட்சிகர ஜனநாயக் சக்திகள் என்று சொல்லிக் கொள்ளும் நமது கடமையோ மக்களுக்கும் இந்துத்துவ எதிப்பரசியலுக்கும் இடையே உள்ள இடைவெளியை இட்டு நிரப்புவதற்க்கு இந்த முயற்சியை பயன்படுத்திக் கொள்வதாக இருக்கிறது. ஆதிக்கத்தில் இருப்பவன் அப்பாவிகள் மீது தொடுக்கும் திட்டமிட்ட வன்முறைகள் நம்மை எப்பொழுதுமே கிளர்ந்தெழச் செய்கின்றன, அது ஈழமானலும் சரி, வட கிழக்கு - காஸ்மீரானலும் சரி. இது இனம், மதம், சாதி சார்ந்து வெளிப்படும் கோபமல்ல. மனிதம் குறித்தானது. சுயமரியாதை குறித்தானது. மனிதம் அவமானப்படுத்தப்படும் போதெல்லாம் இந்த கோபமும் ஆற்றமையும் வெளிப்படுகிறது.

சாதாரண மனித உருவில் அழையும் ஒருவன் கர்ப்பினி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை கொன்று எல்லாரிடமும் காட்டும் வெறி பிடித்தவனாக இருக்க முடியுமா? மழலை பேசும் குழந்தைகளை கொன்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துபவனாக இருக்க முடியுமா? நாங்கள் இத்தனை பேரைக் கொன்றோம், இத்தனை பெண்களை வன்புணர்ச்சி செய்தோம், பெண்கள் பழங்கள் போல இருந்தனர் நாங்கள் புசித்தோம் என்று ஒருவனால் சொல்ல முடியுமா? அப்படி சொல்பவனை உயிருடன் வைத்திருக்கத்தான் தன்மானமுள்ள ஒரு சமூகம் விரும்புமா? அதுவும் தனது மனைவியை அருகில் வைத்துக் கொண்டே ஒருவன் இப்படி சொல்ல முடியுமா? இப்படி சொல்லும் ஒருவனை ஒரு சமூகம் தலைவனாக தேர்ந்தெடுக்கிறது என்றால் அதனை எப்படி புரிந்து கொள்வது? இவையெல்லாம்தான் குஜராத்தில் இன்று நடைபெற்றுள்ளன. இவை இந்துத்துவம் ஒரு சமூகத்தை எப்படி சீரழிக்க முடியும் என்பதற்க்கு சாட்சியமாகும். ஒரு பெண்ணாக தனது கணவன் அரங்கேற்றியுள்ள மனித தன்மையற்ற செயல் குறித்து குறைந்த பட்ச அதிருப்தி கூட வெளிப்படுத்தாமல் பெருமிதம் கொள்ள அந்த பெண்ணை தயார்ப்படுத்தியுள்ளது இந்துத்துவ அரசியலுக்கான ஒரு சோற்று பதம். சரஸ்வதி லஹரி படிப்பதற்க்கு பெண்களை தாயார்ப்படுத்தும் இந்துத்துவம், இன்னபிற மனு தர்ம வக்கிரங்களுக்கு இளைஞர்களையும், மாணவர்களையும் ஒட்டு மொத்த சமூகத்தையும் தயார்படுத்தி வருகிறது. நாமோ பழங்கதை பேசி(மட்டும்) கொண்டிருக்கிறோம்.

ஆனால் இந்துத்துவ பயங்கராவதம் வார்த்தைகளை நம்பி களமிறங்கிய கூட்டமல்ல, அதனது ஆணி வேர் இந்திய மக்களின் ஜனநாயகமில்லா சாதி உற்பத்தி உறவிலும், ஆயிரம் வருடங்கள் தனது ஆதிக்கத்துக்காகவே உருவாக்கி வைத்துள்ள கருத்து நிறுவனங்கள், வரலாற்று திரிபுகள் மீதுமே நிலை கொண்டுள்ளது. முக்கியமான இந்த அரசின் வர்க்க இயல்பில்தான் இந்துத்துவத்தின் ஆணி வேர் உள்ளது. இவற்றை அழிக்கும் அறிவுப் பூர்வ வேலைகள் என்பது எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கோ அல்லது அதைவிட மிக முக்கியமனதாக களத்தில் இவர்களை அடித்து விரட்டும் வேலை உள்ளது. ஆனால், உண்மையில் முற்போக்கு வேடம் போட்டு வோட்டு பொறுக்கி அரசியல் செய்யும் கட்சிகளோ இந்துத்துவம் அம்பலமாகியுள்ள இந்த நேரத்தில் ஆழ்ந்த கள்ளமௌனம் சாதிக்கிறார்கள். இதுதான் நம்மை மேலதிகமாக ஆத்திரமுறச் செய்கிறது. அந்த கட்சிகளின் அல்லக்கைகளாக கோஸ்டி கானம் பாடும் படிப்பறை கும்பலின் முதுகெலும்பற்ற தனம்தான் நம்மை காறி உமிழச் செய்கிறது. அந்த கட்சிகளின் தலைவர்களின் வர்க்க இயல்புதான் இப்படி ஒரு நிலையில் அவர்களை வைத்துள்ளது. தரகு வர்க்கமாக ஒரு தலைவன் இருப்பது சமரசம் அல்ல கருங்காலித்தனம் என்பதை உண்மையான மக்கள் விடுதலை விரும்பும் ஒவ்வொருவனும் உணர வேண்டிய நேரம் இது.

அரசு என்பது சிலர் நம்பிக் கொண்டிருப்பது போல சட்டமன்றம், நாடாளுமன்றம் அல்ல. அது தேர்தல் ஜனநாயக் குறித்ததும் அல்ல இவையெல்லாம் அரசாங்கமாகும். மாறாக அரசு என்பது நீதித்துறை, காவல்துறை, ராணுவம், சிறைச்சாலை, அதிகாரிகள் என்ற இயந்திரம் குறித்தது. இந்த ஒட்டு மொத்த இயந்திரமும் குஜராத படுகொலையை செய்வதற்க்கு தமது முழு சக்தியை செயலபடுத்தியுள்ளன. போலிசுக்காரகள் RSS, VHPன் கங்காணிகளாக வேலை செய்துள்ளனர், அடியாட்படையாகவும் வேலை செய்து தப்பித்து ஓடும் முஸ்லீம் மக்களை சுட்டுக் கொன்றுள்ளனர், முஸ்லீம் மக்களின் வணிக நிறுவனங்களையும் வீடுகளையும் குறிபார்த்து அடிக்க தேவையான தகவல் தர அரசு அதிகாரிகள் முழு நேரம் வேலை செய்துள்ளனர், குண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள் தயாரித்து பயன்படுத்தியுள்ளனர், நீதித்துறையோ இந்துத்துவ கொலைகாரர்களை பாதுகாக்க தேவையான எல்லா வேலைகளையும் செய்துள்ளது, செய்யாத குற்றங்களுக்கு 10 வருடங்கள் கோடூரமான தண்டனை அனுபவித்து விட்டார் மாதானி என்பவர். ஆனாலும் தாம் செய்த படு பாதக குற்றங்களை தைரியமாக சொல்லிக் கொண்டு தலைவர்களாக உலாவருகிறார்கள் இந்துத்துவ கொலைகாரர்கள். இவர்கள் ஒரு வேலை சிறைச்சாலைக்கு சென்றாலும் அங்கும் தமது சுக போக வாழ்வை நடத்தவே செய்வார்கள் ஏனெனில் சிறைச்சாலை என்பதும் அரசு எந்திரம்தான். இவையெல்லாம் தெஹல்கா அம்பலபடுத்தியுள்ளது வெறும் சம்பவங்கள் குறித்த உண்மைகளை அல்ல. அது அம்பலப்படுத்தியுள்ளது நம்மால் சீரணிக்க இயலா சமூக உண்மைகளை. நம்மை செயலுக்கு தூண்டும் கடினமான உண்மைகளை.

இது ஏதோ குஜராத்துக்கு மட்டுமான உண்மை என்று பலரும் இன்று மௌனம் சாதிக்க கூடும், உலக தமிழ் த்லைவர் மீதும், இன்னபிற இத்தியாதி ஹோல்சேல் முற்ப்போக்கு டீலர்கள் மீதும் நம்பிக்கை வைத்து செயலின்றி இருக்க எண்ணக் கூடும். அவர்களுக்கு நாம் எச்சரிக்க கடமைப் பட்டுள்ளோம். ஏனேனில் குஜராத்தின் இந்துத்த்துவ மனநோய் கோத்ராவில் உருவாகி, குஜராத் படுகொலையில் வெளிவந்து இன்று குஜராத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கவில்லை. அது ஒரு நீண்ட கால பின்னணி கொண்டது. தெஹல்கா அம்பலப்படுத்தியுள்ளது மோடியை அல்ல, இந்துத்துவத்தை, ராம ராஜ்ஜியத்தை . மோடியை மட்டும் மாட்டிவிட்டு தப்பிக்க எண்ணுகிறது பார்ப்ப்னியம். நாமோ மோடி குறித்துக் கூட மக்களிடம் சென்று பேசாமல் மௌனம் சாதித்து பார்ப்ப்னியத்திற்க்கு ஒத்து ஊதுகிறோம்.

குஜராத் இனப் படுகொலைகள் தற்செயலானவை அல்ல, வெகுவாக திட்டமிட்டவை என்பதை தெஹல்கா அம்பலப்படுத்தியுள்ளது. ஆனால் மும்பை குண்டு வெடிப்புக்கு தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ள வேளையில் அதற்க்குக் காரணமான மும்பை கலவரமும், பாபர் மசூதி இடிப்பும் தீர்ப்பு வழங்காமல் இருப்பதும் அதன் குற்றவாளிகள் தைரியமாக அகில இந்திய தலைவர்களாக வலம் வருவதும் தற்செயலானவை அல்ல, கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக கண் குரூடானவர் கூட குற்றவாளியாக சேர்க்கப்பட்டு நேர்மை தவறா நீதிமன்றத்தால் பெயில் மறுக்கப்பட்டு பத்து வருடங்களுக்கு மேல் சிறையில் வாடுவதும், அந்த குண்டு வெடிப்புக்குக் காரணமான கோவை கலவரத்திற்க்குக் காரணமானவர்கள் மீது ஒரு சிறு துரும்பு கூட இது வரை நீதிமன்றமும் போலிசும் வீசியெறியாததும் தற்செயலானவையல்ல. குஜராது முதல் மும்பை, கோவை வரை பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாகவும், குறிப்பிட்ட சமூகத்தையே குற்றவாளியாகவும் ஒட்டு மொத்த மீடியாவும், சினிமாவும், அரசு இயந்திரங்களும் சித்தரித்து வன்முறை செலுத்துவதும், இதே நேரத்தில் முஸ்லீம் குண்டு வைத்தது போல செட்டப் செய்து நாக்பூர் RSS தலைமையகத்தில் விஹெச்பி குண்டு வைத்ததற்க்கும், நாண்டட்டில் குண்டு தயாரிக்க முயன்று VHP தொண்டர்கள் இறந்த போதும், அங்கு மற்றும் இன்ன பிற இடங்களில் முஸ்லீம்கள் போல வேடம் போட்டு குண்டு வைக்க VHP திட்டமிட்டுள்ளது குறித்து பல்வேறு ஆதாரங்கள் கிடைத்த போதும், அப்பட்டமாக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுத பயிற்சிகளை RSS குண்டர்கள் செய்வது குறித்து சில ஆண்டுகள் முன்பு பத்திரிக்கைகளில் அம்பலமாகிய போதும் அவர்கள் மீது ஒரு துரும்பைக் கூட இந்த அரசும் அரசாங்கமும் வீசாதது தற்செயலானது அல்ல.

காவிரி நீர் முதல் பல்வேறு விசயங்களில் வலிந்து மௌனம் காக்கும் நீதிமன்றம், ஜெயலலிதாவின் குற்றத்திற்க்கு அவரின் மனசாட்சிக்கு கோரிக்கை வைத்த கையோடு அதே குற்றத்திற்க்காக பல்லாயிரம் அரசு ஊழியர்களை பலி வாங்கியதும் தற்செயலானது அல்ல. வேலை நிறுத்தம் செய்வது குற்றம் என்று வியாக்கியானம் செய்த கையோடு AIMS பார்ப்பன மருத்துவ மாணவர்கள் வேலை நிறுத்தம் செய்தால் மட்டும் அவர்களுக்கு எல்லா வசதிகளும் செய்து தர நீதிமன்றம் அன்புமணிக்கு உத்தரவிட்டதும் தற்செயலானது அல்ல. அணு ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் ஏன் பேச முடியாது என்று விசாரிக்கக் கோரிய மனுவை விசாரணைக்குக் கூட எடுக்க முடியாது என்றதுடன் வழக்குகளை விசாரணைக்கு எடுப்பது எனது விருப்பம் சார்ந்தது என்ற கையோடு, கருணாநிதி அரசாங்கம் பார்ப்ப்னியத்திற்க்கு எதிராக ஏதோ செய்கிறார் என்ற தெரிந்தவுடன் உச்சி குடுமி களைந்தாட கண்டனக் குரல் எழுப்பி நீதிமன்றம் மிரட்டியதும் தற்செயலானது அல்ல. இவையெல்லாம் அரசு என்பதற்க்கும் அரசாங்கம் என்பதற்க்கும் இடையே உள்ள வேறுபாட்டை உணர்ந்து கொள்ள உதவும் தருணங்கள். அரசு என்பதுதான் சாசுவதமன உண்மை, அரசாங்கம் என்பது நிர்வாகத்திற்கான் ஒரு அமைப்புதான் என்ற இந்த உண்மைகளை உணர்வதற்க்கு ஒருவனுக்கு அடிப்படை பகுத்தறிவு இருந்தால் போதும். ஆனால் பகுத்தறிவு என்றும் சுயமரியாதை என்றும் ஹோல்சேல் வோட்டுரிமை பெற்ற கும்பல்கள் யாரும் இந்த உண்மைகளை வேண்டுமென்றே புரியாதது போல நடிப்பதுதான் நமக்கு ஆகக் கேவலமானதாக தெரிகிறது.

இதோ இந்துத்துவம் கடந்த ஐந்தாறு வருடங்களில் அன்னியச் செலவானி மோசடி, லஞ்சம் வாங்குது, முதல் தாய்நாட்டை வேறு யாரையும் விட வேகமாக கூட்டிக் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு விசயங்களில் அம்பலமாகியுள்ளது, அம்பலப்படுத்தியுள்ளனர். இதனை எந்தளவுக்கு நாம் மக்களிடம் கொண்டு சென்றுள்ளோம். பார்ப்ப்னிய எதிர்ப்பிற்க்கு உரிமை கொண்டாடும் கட்சிகளின் நண்பர்களே உங்களது தலைமை இந்த சம்பவங்களின் போதும், இப்போதும் என்ன செய்து கொண்டிருக்கீறது என்பதை பார்த்துக் கொண்டுதானே இருக்கீறீர்கள்? நேற்று குஜராது, நாளை கர்நாடகா, நாளை மறுநாள் தமிழ்நாடு. தெஹல்காக்கள் அம்பலப்படுத்தும் வீடியோ கேசட்டுகளின் எண்ணிக்கை மட்டுமே கூடும் - செத்து விழும் சிறுபான்மை மற்றும் உழைக்கும் மக்களின் எண்ணிக்கைக்கு இணையாக.

எந்த திருடனும் நோட்டம் விட்டுத்தான் திருடுகிறான். இந்துத்துவ பயங்கரவாதியும் களத்தை தனக்கு சாதகமாக தயார்ப்படுத்திவிட்டே காரியமாற்றுகின்றனர். அரசாங்கத்தில் இருந்தால் எல்லாம் கிழித்துவிடலாம் என்று தமது செயல்பாடுகளை வோட்டு பொறுக்கி அரசியலுக்குட்ப்பட்டே வைத்துக் கொள்ளும் போலி முற்ப்போக்காளர்களோ இந்துத்துவம் களத்தை தயார் செய்யும் காலங்களில் படுத்துறங்கிவிட்டு அது களப்பணி செய்யும் பொழுது கள்ளமௌனம் சாதிக்கிறார்கள். குஜராத் இனப் படுகொலைகள் தீடீரென்று வெடித்தவையல்ல. குஜராத் சமூகம் இந்த வக்கிரங்களை கண்டும் காணாமல் இருப்பதும் கூட தீடிரென்று ஏற்ப்பட்டவையல்ல. கீதாபென் என்ற பெண் இஸ்லாமிய காதலனை திருமணம் செய்த ஒரே காரணத்துக்காக, தனது கணவனை RSS கருங்காலிக் கும்பலின் கையில் ஒப்படைக்காமல் காப்பாற்றியதற்க்காக அந்த பெண்ணை நடு வீதியில் மக்கள் கூடி நின்று பார்க்க நிர்வாணமாக்கி கல்லால் அடித்து கொன்றது RSS கும்பல். ரத்த விளாறியாக ஆதரிக்க ஆளின்றி கீழே கிடந்த அந்த பெண்-அந்த பிணத்தின் கையில் அவளது கிழிந்த உள்ளாடை இருந்தது. ஒரு வேளை வாய் கொழுப்பு சீலையில் வடிய முற்போக்கு பேச மட்டும் செய்து விட்டு களத்தில் இந்துத்துவ பயங்கரவாதிகளை கண்டு கொள்ளாமல் இருக்கும் நமது முகத்தில் அந்த உள்ளாடையை விசிறியடிக்க மறுமை உலகில் காத்திருப்பதைத்தான் அவள் கைகளில் துவழும் உள்ளாடைகள் உணர்த்துகின்றனவோ. இது போன்ற பல சம்பவங்களில் ஒன்று ஆகும் இது.

இந்துத்துவம் RSS அல்லது BJP போன்ற சில அமைப்பு சார்ந்த விசயமோ அல்ல என்ற பேருண்மையையும் குறிப்பிட விரும்புகிறேன்(இது குறித்து இன்னொரு சந்தர்ப்பத்தில் விலாவாரியாக) அது ஒரு வர்க்க இயல்பு என்ற வகையில் இந்த தரகு வர்க்க ஆட்சியதிகாரத்தில் பங்கெடுக்கும் அத்தனை பேரிடமும் நிலவும் சித்தாந்தமாகும்.

இந்துத்துவத்தின் எதிரி இஸ்லாமியன் அல்ல என்ற கடைசி உண்மையையும் இங்கு சொல்லுவதே சரியானதாக இருக்கும். பார்ப்ப்னிய மேலாதிக்கத்துக்கு எதிரான எதுவும் இந்துத்துவ அரசியலின் எதிரிதான். தமிழத்தை அல்ல ஈரேழு உலகத்தையும் ஆட்சி செய்பவராக இருந்தாலும் பார்ப்ப்னிய அரசுக்கு எதிராக அரசாங்கம் செயல்பட முடியாது. அப்படி செயல்பட்டால் கீதாபென்னுக்கும், குஜராத் அப்பாவிகளுக்கும் நிகழ்ந்ததுதான் நமக்கும். ஆம் உயிருடன் வாழ பல எளிமையான வழிகள் உள்ளன. பாரதிதாசன் வார்த்தைகளில் சொலவதென்றால், நக்கிக் குடி, நாயினும் தாழ்ந்து போ.

மாறாக நம்மை மனிதர்கள் என்று நாளைய சமூகத்துக்கு நிரூபிக்க வேறொன்றும் செய்யலாம். பார்ப்ப்னியத்தின் இந்துத்துவ அரசியல் தூதுவர்களை வீதிகளில் சந்தித்து ஓட விரட்டி அடிக்கலாம். கீதாபென்னுக்கு தண்டனை கொடுத்த இந்துத்துவ பயஙகரவாதிகளை நாம் இந்திய வீதிகள் எங்கும் அதே போலான தண்டனைகளுடன் சந்திக்கலாம். இதோ இன்றே ஆளுக்கொரு கல்லெடுத்து, குறிப்பாக பெண்கள். ஆனால் அப்படி செய்தால் கருணாநிதியை மிரட்டியது எதுவோ அது, கீதேபென்னும், குஜராத் அப்பாவிகளும் கொலை செய்யப்படும் பொழுது வேடிக்கை பார்த்ததோடல்லாமல், உதவி செய்தது எதுவோ அது - அதாவது இந்த தரகு வர்க்க அரசு நம்மீது தனது தாக்குதலை தனது முழு பலத்துடன் தொடுக்கும். அப்பொழுது யாரும் அரசாஙக்த்தில் இருந்து கொண்டே பார்ப்ப்னக் கொழுப்பை பிடுங்கி எறீந்துவிடுவோம் என்று பொய் பேசித் திரிந்து கொண்டிருக்க மாட்டார்கள். ஏனேனில் எல்லைகள் தெளிவாகிவிடும் காலம் அது. இதோ அப்படியொரு போராட்டத்திற்க்கு மக்களை அணி திரட்ட வரலாறு நமக்கு தெஹல்கா ரூபத்தில் ஒரு அருமையான வாய்ப்பை வழங்கியுள்ளது. கைகள் கட்டுண்ட வீரபாண்டியன் போல வீரவேசம் பேசிய நாம் இனி மேலும் செயல்படாவிட்டால் கோமாளிகள் என்றுதான் அடையாளப்படுத்தப்படுவோம்.

அத்தனை அயோக்கியத் தனங்களையும் செய்து விட்டு இந்துத்துவ பயங்கரவாதம் ஆர்ப்பரித்து வருகிறது.... காவி இருள் படர்கிறது....

நீங்கள் கோமாளிகளா? சுயமரியாதை வீரர்களா? சொல்ல வேண்டாம் செய்து காட்டுங்கள்....

அசுரன்


Related Articles:

பார்ப்பனீயத்தின் சோதனைச்சாலை : நமது முகத்தில் விசிறியடிக்கப்பட்ட கீதா பென்னின் உள்ளாடை

இப்படித்தான் இருக்கும் ராம ராஜ்ஜியம்

இந்து மதவெறி பயங்கரவாதம் ! மதவெறிக்குமபல் பா.ஜ.கவும் இதர ஓட்டுப் பொறுக்கிக்கட்சிகளும் !!

குஜராத் பயங்கரம்: தெகல்கா-இந்தியா டுடேவின் அதிர்ச்சி வீடியோ

மதன் சாவலின் சக்கர வியூகம் !

மோடியிசமும் - இந்திய மதச்சார்பின்மை முகமூடியும் !

பய பீதியில் மோடியும், ஜெயலலிதாவும் - பாசிசம்=கோழைத...

Thursday, October 11, 2007

கலி முற்றும் பொழுதெல்லாம் நான் அவதரிப்பேன்!!!

“paritranaya sadhunam vinasaya ca duskrtam dharma-
samsthapanarthaya sambhavami yuge yuge”

ராமன் ஒரு கடவுளா? ராமாயணம் என்ற இதிகாசப் புரட்டை முன் வைத்தே காவி(லி) கும்பல் தனது ஒவ்வொரு பயங்கரவாத நடவடிக்கையையும் முன்னெடுத்து வருகீறது. இந்துக்களின் நம்பிக்கை என்ற பெயரிலேயே இவை அனைத்தும் புனிதப்படுத்தப்படுகின்றன. சமீபத்திய ராமேஸ்வரம் மணல் திட்டு பிரச்சினையில் கூட கருணாநிதியை முதல் குற்றவாளியாக்கி தீர்ப்பளித்தன குமுதம் முதலான அனைத்து மக்கள் விரோத ஊடகங்களும். உச்ச நீதிமன்றமோ முற்றிலும் அம்பலமாகி தான் ஒரு பார்ப்பன பாத தாங்கி என்று அம்மணாமாய் கோக்கரித்தது(இதே உச்சநீதி மன்றம் அணூ விவகாரம் தொடர்பான ஒரு பொது நல வழக்கை எடுக்காமல் தள்ளுபடி செய்தது காரணம் கேட்ட பொழுது, நீதிமன்றம் தனது விருப்பம் போல முடிவெடுக்கும் அதிகாரமுள்ளது, காரணங்கள் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று திமிராக பதில் சொல்லியது).

இங்கு தமிழ்மணத்திலும் கூட ராம பக்தர்கள் சிலர் ராமனை திட்டுவது தவறு என்று எழுதியிருந்தனர். ராமன் ஒரு கடவுளா? ராமனை கும்பிடுவது பெரும்பான்மை இந்தியர்களை அவமானப்படுத்துவதாகாதா? அவன் எந்த வகையில் ஒரு கடவுள்? என்பது குறித்தேல்லாம் இவர்களுக்கு என்னவிதமான புரிதல் இருக்கும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். குறைந்த பட்சம் ராமன் என்ற உத்தம புருஷன் குறித்த வந்த தொலைக்காட்சி புரட்டு மற்றும் பல ஊடக வரலாற்று பொய்களை கேள்விக்குள்ளாக்கும் முகமாக சில அடிப்படை கேள்விகளை முன் வைக்கும் ஆர்வம் பலருக்கும் இருந்திருக்கும். அது போன்றதொரு முயற்சியாக பயங்கரவாதம் தளத்தில் ஒரு இ மெயில் கட்டுரை பிரசூரம் செய்யப்பட்டுள்ளது.

ராமன் ஒரு பார்ப்பன சாதி சங்க தலைவன் என்பதையும். அவன் ஒரு மக்கள் விரோத வர்ணாஸ்ரம வெறியன் என்பதையும். சீதாவை ஒரு போகப் பொருளாக கருதிய பிற்போக்கானவன் என்பதையும் அம்பலப்படுத்தியும் மக்கள் மீது காதல் கொண்டவர்கள் உண்மையில் ராமனை குப்பையில் வீசி வெறிய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கேள்விகள் கேட்க்கப்பட்டுள்ளன். படித்து பார்க்கவும். விமர்சனங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

Rama.... Rama....

அசுரன்

Monday, July 09, 2007

இந்திய பயங்கரவாதம் ஒரு அறிமுகம் - பாசிசத்துடனான வரலாற்று தொடர்பு

யங்கரவாதம் தளத்தில் பார்ப்பனிய பயங்கரவாதம் தனக்கான அமைப்பு வடிவங்களையும், தேசிய வெறி பிரச்சார உத்திகளையும், சித்தாந்த அடிப்படைகளையும் பாசிசத்தை உருவாக்கிய முசோலினியிடமிருந்து கற்றுக் கொண்டதையும், முசோலினிக்கும் RSS பயங்கரவாத இயக்கத்திற்க்கும் இருந்த உறவுகளையும் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தும் கட்டுரை. படித்து கருத்துக்களை விட்டுச் செல்லுங்கள். நண்பர்களூக்கு அறிமுகப்படுத்துங்கள்.

Introduction to the Indian Terrorists - The Historic Facist Link

அசுரன்

Tuesday, June 12, 2007

செய்தி: பயங்கரவாதி!

செய்தி:

தமிழகத்தில் விஏஓ பதவிக்கான தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதற்கான வினாத்தாளில், 17வது கேள்வியாக பாலகங்காதர திலகர், அரவிந்தகோஷ், வஉசி, சுரேந்திரநாத் பானர்ஜி உள்ளிட்ட சுதந்தர போராட்ட தியாகிகள் பெயர் குறிப்பிட்டு, இதில் யார் தீவிரவாதிகள் இல்லை என கேட்கப்பட்டிருந்தது.

***************

பயங்கரவாதம் வலைப்பூவிலிருந்து

//அருந்ததிராயின் வார்த்தைகளில் சொல்வதென்றால், "இந்திய ஒரு போலீஸ் ராஜ்யமாக மாற இருக்கிறது. அங்கு நடப்பவற்றை ஏற்றுக் கொள்ளாத ஒவ்வொருவரும் பயங்கரவாதி என்று அழைக்கப்படும் அபாயம் உள்ளது..... பயங்கரவாதம் என்ற சொல்லாடலுக்கு எந்தவொரு தெளிவான விளக்கமும் கொடுக்காமல் விட்டு வைத்திருப்பதன் மூலம் அதன் அர்த்தம் மிகப்பரந்து விரிந்ததாக திட்டமிட்டே விடப்பட்டுள்ளது. நாமும் கூட வெகு விரைவில் மாவோயிஸ்டுகள் என்றோ நக்சலைட்டுகள் என்றோ, பயஙகரவாதிகள், பயங்கரவாதி ஆதரவாளன் என்றோ அழைக்கப்பட்டு முடித்துக்கட்டப்படும் நாள் வெகு தூரத்திலில்லை."//


//வரைமுறையின்றி இந்தியாவின் வளங்களை கூட்டிக் கொடுக்கும் தரகு வர்க்க அரசியல்வாதிகளும், அதற்க்கு தரகு வேலை செய்யும் பார்ப்ப்னிய பயங்கரவாதிகளும் தமது இருப்பை நியாயப்படுத்திக் கொள்ள தொடர்ந்து ஒரு போலியான எதிரியை உருவாக்கும் தேவை உள்ளது.//


//தொடர்ந்து பயங்கரவாத பீதியூட்டுவதன் மூலம் தமது பாசிச செயல்பாடுகளையே நியாயமானது என்ற பொதுக்கருத்தை வலுப்பெறச் செய்யும் தேவை இருவருக்கும் உள்ளது.//

//எதிர்மறையாக நமக்கு சொல்லும் செய்தி என்னவென்றால், இவர்களின் பாசிச நடவடிக்கைகளும் வீரியம் பெற இருக்கின்றன என்பதே ஆகும். இவர்களின் பய பீதியூட்டும் கோயபல்ஸ் பிரச்சாரம் வேகம் பிடிக்கப் போகின்றன என்பதே ஆகும். பய பீதியூட்டவும், போலி எதிரியை உருவாக்கவும் தேவையான சம்பவங்கள் இனி தொடர்ந்து அடிக்கடி உற்பத்தி செய்யப்படும் என்பதே ஆகும்.//

அசுரன்

Thursday, March 29, 2007

பார்ப்பனிய பயங்கரவாதத்தின் யாதார்த்தவாதம்!

நீலகண்டன் என்பவர் இந்துத்துவம் குறித்து ரொம்ப அடிப்படையான சில கேள்விகள் கேட்டத்தற்க்கு பதில் சொல்ல பயந்து ஓடினார். இணைய தொடர்பில்லா கிராமத்தில் உட்கார்ந்து யோசித்ததில் மார்க்ஸியத்தின் மீது நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மனோவியல் தாக்குதல் நடத்தும் விதமாக அவதூறூ பிரச்சாரம் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். இதன் மூலம் பார்ப்பினிய பயங்க்ரவாதத்தின் மீதான கேள்விகள் குறித்த வாசகர்களின் எண்ணவோட்டத்தை மடை மாற்றலாம் என்று பார்ப்பன துர் புத்தி சொல்லிக் கொடுத்திருக்கும். துரதிருஷ்டவசமாக அவர்து முதல் க்ட்டுரையில் இருக்கும் அவதூறுகளின் எண்ணிக்கையும் மீறி அதன் மையமான விசயத்தை விமர்சித்து தோழர்கள் ரயாகரனும், ராஜவனஜ்ஜும் கட்டுரைகள் இட்டுள்ளனர். இன்னும் அந்த கட்டுரையின் ஒவ்வொரு அம்சத்திலும் உள்ள பொய்யை அம்பலப்படுத்தி கட்டுரைகள் வரும் என்று வலைப்பதிவு தோழர்கள் குறிப்பிட்டுள்ளனர். வாழ்த்துக்கள். இந்த நிலையில் சோசலிச யாதார்த்தவாதம் என்ற பெயரில் ரஸ்ய பஞ்ச கால புகைப்படங்களை போட்டு வைத்து அடுத்த புரளியை தொடுத்துள்ளார் நீலகண்டன். ரஸ்யாவின் சாதனைகள் குறித்த கேள்விகளை கேட்டு வியப்பு தெரிவித்திருந்த முயூஸ்ஸின் பின்னூட்டத்திற்க்கு இது வரை பதிலளிக்காத நீலகண்டந்தான் இப்படி அரைபொய், அரை உண்மைகளை நம்பி ஜீவிதம் நடத்தி வருகிறார்.

மூயுஸின் கேள்வி:
""ரஷ்யாவோ, சீனாவோ, அல்லது வேறு எந்த கம்யூனிஸ எதேச்சதிகார நாடுகளோ முரண்பாட்டுஇயக்கவியலுக்கு எதிரான, அல்லது வேறுபட்ட கருத்துக்கூறிய அனைத்து அறிவியலாளர்களையும் அழித்ததா? அல்லது சகித்துக்கொண்டாலும், இத்தகைய பயங்கரத்தின் அச்சுறுத்தலுக்கு நடுவே பல கண்டுபிடிப்புக்களை வெற்றிகளை ரஷ்யர்கள் எங்கனம் சாதித்தார்கள்? ஏனெனின் மனிதம் சுதந்திரமான சூழ்நிலையிலேயே உற்பத்தித் திறன் அதிகம் கொண்டுள்ளது. அச்சூழ்நிலை இல்லாதபோதும் ரஷ்யா எத்தனையோ சாதனைகளை செய்தது என்பது ஒரு மிகப் பெரிய முரணாய் உள்ளதே. விளக்குங்களேன்.""

ஆனால் ஒரு முழு உண்மை ஒன்று பார்ப்ப்னிய பயங்க்ரவாத யாதார்த்தவாதத்திற்க்கு சாட்சியாக உள்ளது. சாதியில்லை, சாதியில்லை, சாதி குறித்து விமர்சிப்பவன் தான் உண்மையில் சாதி வெறியன் என்பதாக முற்போக்காளர்கள் மீதும், ஜனநாயக சக்திகள் மீதும், கம்யுனிஸ்டுகள் மீதும் அவதூறு பேசி வந்த பார்ப்பன கும்பலை யாதார்த்தில் ஒவ்வொரு அம்சத்திலும் பார்ப்ப்னியம் சாதியத்தை உறுதிப்படுத்தியுள்ளதை நாம் விரிவாக பேசி அம்பலப்படுத்தியே வந்துள்ளோம். ஆயினும் இதற்க்கு விசுவல் பலம் கொடுக்கும் வகையில் சமீபத்தில் நண்பர் யெஸ். பாலபாரதி ஒரு புகைப்படத்தை தனது தளத்தில் வெளியிட்டுள்ளார். வஜ்ரா என்ற பார்பினிய பயங்கரவாதியிடம் விவாதம் செய்த போது ராமேஸ்வரம் கோயில் குறித்த அந்த சாதி வெறி பலகைய நான் குறிப்பிட்ட பொழுது என்னை நம்ப மறுத்தார்கள் அவர்கள். இதோ அவர்களின் பார்வைக்கு பார்பினிய பயங்கரவாதத்தின் யாதார்த்தவாதம்.

சாதியில்லை எமது சித்தாந்தம், எமது சித்தாந்தம் வர்ணாஸ்ரமமே. அது குணத்தின் அடிப்படையிலானது, பிறப்பனடிப்படையிலானது இல்லை என்று கூறும் இந்த பொய்யர்கள். குணம் என்பது ஒருவனுடைய பொருளாதார சூழலால் உறுதிப்படுவதையும், பொருளாதார சூழல் என்பது ஒருவனுடைய பிறப்பால் தீர்மானிக்கப்படுவதும் குறித்து மௌனமே சாதிக்கிறார்கள். இது குறித்து கேள்வி எழுப்பிய நண்பர் திருவுக்கு இன்று வரை பதில் சொல்லவில்லை இவர்கள். இதோ சாதியில்லை என்று சொல்லும் கற்பனவாதிகளின் யாதார்த்தவாதம் ராமேஸ்வர கருங்கல்லில் பல்லிளிக்கிறது.





ராமனும் சிவனும் சேர்ந்த புண்ணிய பூமி ராமேஸ்வரத்தில், சாதியின் நர்த்தனம் தெரிகிறதா? இவர்கள் சாதியில்லை என்பதன் அர்த்தம் மேல்நிலையாக்கமடைந்த நடுத்தர வர்க்க அல்பைகளே சாதி பேதமின்றி பார்ப்பன பண்பாட்டை சுவிகரியுங்கள். நாம் இன்றைய நவீன யூகத்திற்க்கான புதிய பார்ப்பனராய் உருவாகி, இந்துத்துவத்தின் பார்ப்ப்னிய மேல் தளத்தை ஜனநாயகப்படுத்துவோம். இதன் மூலம் உழைக்கும் வர்க்கத்தை நாம் வர்ணாஸ்ரம கொடுங்கோன்மையில் பூட்டி இன்னும் ஒரு ஆயிரம் வருடம் இழிவு படுத்துவோம் என்ற அரைக் கூவுலின் வெளிப்பாடே. ஆனால் அல்பைகளே அறிவியலும், தத்துவமும் பார்ப்ப்னியத்தின் அடித்தளத்திற்க்கு ஆப்படிக்கும் இயக்கப் போக்கை கொண்டதாக இருப்பது தெரியாமல் பிரியானிக்கு கருவேப்பிலை ஆகிவிடாதீர்கள். இது கலியுகம்.

திருவின் கேள்விகள்:

1) குணநலன்களின் அடிப்படையில் தான் வர்ணப்படுத்தல் அமைகிறது என்றால், குறிப்பிட்ட அந்த குணநலன்கள் எவை?

2) குறிப்பிட்ட அந்த குணநலன்கள் 'குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே' அமையுமா? இல்லை எல்லோருக்கும் பொதுவானதா?

3) அந்த குணநலன்களை விதிப்பதும், காலத்திற்கேற்ப மாற்றும் அதிகாரமும் யாரிடம் இருந்தது? இருக்கிறது?

4) குணநலன்களின் அடிப்படையில் தரம் பிரித்து வர்ணங்களை மாற்றி அமைக்கும் 'தரக்கட்டுப்பாட்டு முறை' எப்படி அமல்படுத்தப்பட்டது? எவ்வளவு காலத்திற்கு ஒரு முறை அது நடைபெறும்?

5) குணம் உயர்ந்ததும் பிராமணனாக சூத்திரனை மாற்றியதற்கும், சூத்திரனாக பிராமணனை மாற்றியதற்கும் வரலாற்று ஆதாரங்கள் (புராணக் கதைகள் வேண்டாம்), நிகழ்கால சாட்சியங்கள் என்ன?

6) குணநலன்கள் அடிப்படையில் கொலை வழக்கில் சிக்கியிருக்கும் காஞ்சி சங்கராச்சாரி இருள்நீக்கி சுப்பிரமணியம், அப்பாவி மக்களை படுகொலைகளை நிகழ்த்த ஆதரவளித்த நரேந்திர மோடி, கலவரங்கள் உருவாக காரணமான மசூதி இடிப்பை மேற்பார்வையிட்டு நிகழ்த்திய சங்கப்பரிவார தலைவர்களுக்கு வர்ணம் மாறிவிட்டதா? இப்போது அவர்கள் எந்த வர்ணத்தில் இருக்கிறார்கள்?

7) அடுத்தவன் மலத்தை தின்ன வைக்கப்பட்டாலும், அடக்குமுறைகளை அனுபவித்து மனிதனாகவே அறமுடன் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வர்ண உயர்வு கிடைத்ததா? எங்கே? அந்த உயர்வால் அவர்கள் அடைந்த பயன் என்ன?


அசுரன்

Note:

அரவிந்தன் நீலகண்டன் தனது சமீபத்திய பதிவில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ஆன்டிரியூ கிரிகோரியேவிச் எழுதிய ஒரு புத்தகதிலிருந்து எடுக்கப்பட்டது அந்த புத்தகம் பற்றியும் புகைப்படங்கள் பற்றியும் ஏற்கனவே புதிய் கலாச்சாரம் அம்பலப்படுத்தி கட்டுரை வெளியிட்டுள்ளது மேலும் உக்ரைன் பிரச்சனையில் காட்டப்படும் புள்ளிவிவர்ங்கள் பெரும்பாலும் இட்டுக்கட்டியவை என்றும் அந்த கட்டுரை நிறுவுகிறது. அந்த கட்டுரையை ஞாபகப்படுத்தி அத்ற்கான சுட்டியை தந்த ராஜவனஜ்க்கும், ஸ்டாலினுக்கும் நன்றி.



தொடர்புடைய சுட்டிகள்:

வேதத்தின் சாறு இது - ஊரேல்லாம் நாறுது!!

சோசலிச சமூகம் ஏன்? - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

ஒரு மன்னன் மனிதனான கதை

Thursday, March 15, 2007

RSS: வடக்கே - சோதனைச் சாலை, தெற்க்கே - சோதனைச் சாலை பன்றி!!

ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை. ஆயினும் இது இங்கு தேவை என்று கருதுகிறேன். மருதையன் சொல்வது போல "North is the Laboratory of Brahminic Terrorism, then South is the Laboratory of Resisting Brahminic Terrorism and ensuring secularism in a true sense". ஆகவே வடக்கு RSS-ன் சோதனைச் சாலை எனில், RSSயை தெற்கின் சோதனைச் சாலை பன்றிகளாக மாற்றுவோம். ஜனநாயக சக்திகளே, நடுத்தர வர்க்க நாகாரீக கனவான்களே, இன்றைய உலகில் நடப்பவையெல்லாம் உங்கள் பெயரைச் சொல்லித்தான் இவையெல்லாம் நடக்கின்றன. எனக்கென்ன என்றூ இருந்து விட்டுச் செல்வது குறித்து பரிசீலிக்கவும்.

****************



“Mera apang, palnevala baccha tha voh (He was a handicapped son whom I had brought up with so much care). His name was Moinuddin. He was 18 years old. Though disabled, he had passed his GSC exams from Nasir Sir’s School in 1999.What could they gain by killing a boy like that? I am the unfortunate mother who saw it with my own eyes. I was in the kitchen. They made him drink kerosene, tied him to the bed and torched him. I was trying to save a young girl from the neighbour’s family. In trying to save her, I lost my own son. We were living at Hussain Nagar in Naroda Patiya. We saw many bodies burnt and dumped into a well.”

Place: Hussain Nagar, Naroda Patiya
Witness: Mariambi Hasan Bai Sayed

(Interviewed at Relief Camp on March 20)
- Communalism Combat, April 2002

I met Mariam Bibi at Chennai railway Station on February 21, 2003. Mariam roughly in her sixties accompanied by Ayisha came out of the Station carrying her small bag. She came along with the other Gujarat Genocide victims invited to our conference. Mariam lost her son Moinuddin at the so-called ‘backlash’ against Muslims on February 28, 2002 with the Godhra Train burning. As she says in the above excerpt, her son was 18 years old and was handicapped with both legs paralysed. He was killed by Bajrang Dal thugs by making him drink kerosene and setting him ablaze. When she spoke out to me in the train to Thanjavur on her horrifying tale, soon she broke out in tears. For the two days when I accompanied them, I found Mariam often speaking to herself with a shudder. It was a visible agony and I always found her eyes tired with a search in it.

We, People’s Art and Literary Association (PALA), Tamilnadu conducted ‘Conference against Brahminic Terrorism’ (CBT) on February 22, 23, 2003 at Thanjavur, Tamilnadu in view with the rising of Brahminic Terrorism (termed wrongly as ‘Hindutva’) in the country resulting in Gujarat carnage. We invited Dalits from Meenakshipuram who got converted to Muslim religion due to the atrocities of upper caste men in their village. Sangan, another Dalit from Pallapatti who was urinated in his mouth for defying upper caste men spoke in the conference. Murugesan a Dalit from Thinniyam who was forced to eat shit of the upper caste men for questioning the malpractices of local upper caste thug narrated his harrowing tale. Relatives of Dalit skin-reapers killed by VHP hooligans for cow-slaughtering in Jajjar were invited to the conference. But due to fear of backlash, they conveyed their inability to come to the conference.

In the second day of Conference, Gujarat Muslims gave their testimonies. Other than Shahbuddin and Maulana, a Hindu eye-witness also gave his account on the massacre. Ayisha narrated the horrifying days in a trembling voice with tears in her eyes. She spoke of the inhuman, unimaginable atrocities heaped on helpless Muslim men and women. She reminded Abidha, a 60 year old woman who was made to run nude in streets by the Bajrang Dal thugs and got killed. She spoke about Kausar banu, a pregnant woman whose belly was ripped open and the unborn child taken out pierced by a sword, and thrown into the fire. She narrated some more incidents which myself not able to narrate here. When Mariam came to the pedestal, she couldn’t even make a single sentence and broke out instantly. That poor old mother who had never stepped out of her home for years, came all along from Gujarat to Tamilnadu in the endless seek of justice for her son couldn’t utter a single word and cried. On behalf of her, Ayisha spoke again about her son.

Mariam’s husband ran a small hotel in Naroda Patiya and she had three daughters. After the carnage, their hotel was appropriated by a Hindu goon and all their jewels got looted and her house was burnt. She came to streets in a single day and she started living by selling golis (small candies) to school children. Mariam’s husband totally traumatized by losing his son remained in bed and Mariam needs to marry her three daughters.

After the Conference ended, we came by 4:00 AM and we all went to a lodge to take rest for two hours as we had to catch the train to Chennai by morning. The men got settled and I found a place to sleep. I was totally exhausted with the two days work and when I was about to sleep, I found the light still burning and Mariam sitting quietly in a corner. I asked Mariam to take rest and to switch off the light. She took a second and opened her bag. She picked a photograph of her son and showed it to me with a pleading voice, “Doesn’t he looks like you?” I got awestruck. I paused for a moment and said, “Yes, I am your son, don’t worry, go to sleep”. The next day Mariam went back to Gujarat with others waving her hands through the train window until we were visible to her eyes.

She must be in Naroda Patiya till date selling golis, trying to make up her family stand again and still searching for her son. This is the story of one Mariam I knew while there are Hundreds and hundreds of Mariams, Kausar Banus, Geeta Bens and Shabuddins in Gujarat. Geeta Ben, a Hindu woman was stripped, paraded naked by the Bajrang Dal thugs and got killed for trying to save her Muslim husband. Now be proud to say, this is the land of ‘tolerance’, with a ‘glorious’ past and a land that draws the world for its ‘heritage’ and ‘culture’.

Gujarat is not an unfortunate, lone, past accident to forget but it is Genocide by the RSS similar to the Genocide of Sikhs by Congress in 1984. Modi proclaimed Gujarat as the laboratory of Hindutva. The same Hindutva, which by bogus fixes a tag ‘Hindu’ on all of us and masks its core Brahminic face, is the demon that topples the lives of all working people of India. The stagnation of BJP today doesn’t mean the end of RSS and its ancillaries. The strength of RSS lies in its poison houses named as ‘Shakas’, which still thrive, by which it lures the innocent boys for physical training and there by metamorphosize them to Nazis of India.

Umpteen number of Laws, Commissions and legislations can never stop RSS. Also the counter-terrorism by Muslims in India can never solve the issue as RSS justifies all its barbaric acts only by showing the counter-terrorism creating an endless vicious cycle.
Fascist RSS can only be checked by People's resistance in street battles. We fought with RSS goons in Trichy, Chennai and all over Tamilnadu, whenever they tried to perpetrate terror.Till date we resist them and they have announced us as their prinicipal enemies in Tamilnadu.

If the Hindus of Gujarat would have checked the RSS hoodlums, Gujarat carnage wouldn’t have taken place. But they were poisoned by the RSS propaganda that the public opinion was in favour of slaughtering Muslims and nothing much changed till date which could be traced from my previous post. RSS and VHP are not the only ones who are responsible for Gujarat Carnage. Modi is not the single culprit.

We...We all are responsible for the carnage.

Hindus of Gujarat locked their doors when the Muslims were butchered in the streets. Hindus of other parts of the country locked their minds turning deaf to the helpless cries. Gujarat Carnage is an act of collective guilt. Comrade Marudhaiyan aptly asked in his end note, “Does anything called Conscience exist for a person who calls himself as Hindu, after hearing and seeing all this horrors that are perpetrated in the name of his religion, in the name of safeguarding his religion, and is these things are acceptable to him? If not then what you did to save them?”

Innocence cannot be an escape. Nazis were successful in demonstrating the Holocaust with the mute support of so-called decent, educated, peace-loving, apolitical Germans. It’s the same here. If you think you are responsible and accountable to all these things, then show it in action and not by shedding tears. As Comrade Marudhiyan says if North is the Laboratory of Brahminic Terrorism, then South is the Laboratory of Resisting Brahminic Terrorism and ensuring secularism in a true sense.
Mariam is still searching for her son, it’s not the search of a physical body but it’s the quest for justice and dignity and we all, as sons and daughters of Mariam have the responsibility to fulfill her just, ignored and forgotten aspirations.

I have given the video of the end note of Com. Marudhaiyan, secretary, PALA on the Testimonies which he spoke at the conference. I regret i couldn’t give English
sub-titles to the video at present. I think his speech is the fitting end note to this article too. The video can also be accessed at
http://youtube.com/arasubalraj.

Related Posts with Thumbnails