TerrorisminFocus

Thursday, December 21, 2006

இந்து/பார்ப்னிய மத வெறியர்களே பதில் சொல்லுங்கள்!!!

#1)ந்த இடத்திலுமே மதக கலவரங்களின் மூல வேர் பொருளாதார பிரச்சனையாகவெ இருக்கிறது. இந்தியாவில் இது வரை நடந்த மதக் கலவரங்களிலும்(கோவைக் கலவரம் உட்பட) வணிகர்களிடையே உள்ள போட்டியே காரணமாக இருந்துள்ளது. சில இந்து/பார்ப்பன மத வெறியர்கள் தங்களது சமீபத்திய பதிவில் வணீகர்களிடையே உள்ள வியாபார பிரச்சனையை வைத்து மத மோதல்களை தூண்டிவிட்டு குளிர் காய முற்படுவது தெரியவ்ருகிறது. அதில் ஜடாயுவின் சமீபத்திய பதிவும் அடக்கம்.

தஞ்சையில் சிறு இந்து வியாபாரிகளுக்கு முஸ்லீம் வியாபாரிகளால் ஆபத்து!
ஓநாய் கண்ணீர் வடிக்கீறது!!!

உண்மையில் மத வேறுபாடின்றி சில்லறை வியாபாரிகளுக்கு ஆப்பு சில்லறை வியாபாரத்தில் பன்னாட்டு கம்பேனிகளை அனுமதிப்பதால் ஏற்ப்பட்டுள்ளது. ரிலையன்ஸ், வால்மார்ட் கும்பலின் சூறையாடலில்தான் இவர்களின் அழிவு உண்மையில் உள்ளது. சில்லறை வியாபாரத்தில் FDI யை அனுமதித்தது ஜடாயு கோஸ்டியும், காங்கிரஸ் கோடியும்தான். அதைக் குறித்து தமிழர்கள் மேல் அக்கறை கொண்ட ஜாடாயு பேசுவாரா?

அதற்க்கான நேர்மை அவருக்கு உண்டா?
பேச நா இரண்டுடையா போற்றி!!!!!

#2)தஞ்சை தமிழர்களாம்!! ...

தஞ்சை தமிழர்கள் விவாசாயத்தை விட்டு போண்டியாகி சென்னை தமிழராக அத்துக் கூலிக்கு வருவது ஏன் என்று ஜடாயு விளக்குவாரா? அவரது பதிவில் வாய் வைத்துச் சென்றுள்ள அனானிகள் அல்லது ஹரிஹரன், நீலகண்டன் கோஸ்டிகள் விளக்குவார்களா?

எந்த இஸ்லாமியன் இதற்க்கு காரணம் என்று சொல்வார்களா?

இதுவும் ஏதேனும் பாகிஸ்தான் சதிதானோ என்றூ சுனாபானா வடிவேலு பானியில் இவர்கள் பேசி சாதாரண மக்களை குழப்பும் சாத்தியம் உண்டு. கோயபல்ஸ்களின் பாரம்பரியம் அல்லவா?


#3) தஞ்சை தமிழர்களாம்!!!...

கடந்த ஏழு வருடத்தில் அரசு புள்ளி விவரத்தின் படியே 1 லட்சத்திற்க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். எந்த இஸ்லாமிய ஆக்கிரமிப்பு இதற்க்குக் காரணம் என்று அதி அறிவு ஜீவி நேசகுமரோ அல்லது அறிவியல் விஞ்ஞானம் அனைத்தையும் கரைத்துக் குடித்து விட்டு எல்லாம் நாங்க வேதத்துல படிச்சதுதான் என்று பீலா விடும் நீலகண்டனோ விளக்கலாம்.

இதே ஜாடாயு இருக்கும் கர்நாடகாவில், 70000 சிறு தொழில்கள் மூடப்பட்டதற்க்கு எந்த இஸ்லாமிய ஆக்கிரமிப்பு என்று அவர் கூற கடமைப் பட்டுள்ளார்.


#4) தஞ்சை தமிழர்களாம்!!!

தமிழர்களின் பாண்பாடு பார்ப்னிய கலாச்சாரத்தால் அழிவது குறித்து இவர்கள் இப்படி பாசத் தோடு பேசுவதில்லையே??

இதே இந்து வெறியர்கள் நாட்டார் வழிபாட்டு தெய்வ முறைகள். தமிழரின் பிற கலாச்சார அடையாளங்கள், தமிழ் இசை இவற்றை பார்ப்பினிய மதம் விழுங்கி அழிப்பது குறித்து எதுவும் பேசுவதில்லை.

கலாச்சாரம் அழிகிறது என்ற இவர்களின் கவலையில் நேர்மை உண்டு எனில் அது எமது கலாச்சாரத்தை அழிக்கும் பார்ப்பினியத்திற்க்கு எதிரான போராட்டத்திற்க்கு குரல் கொடுப்பதின் மூலம் தெரியவரும். அவ்வாறு செய்வது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது போல ஆகிவிடும்.

வாழ்க்கைக்கான பொருளாதாரம் அழிகிறது என்ற இவர்களின் பீதியுட்டலில் நேர்மை இருக்குமெனில் அது சிறு வியாபாரிகள், தெசிய முதாலாளீகளுக்கு ஆப்பு வைக்கும் VAT, சில்லறை வியாபாரத்தில் FDI, பிற அகர் பத்தி, மீன்பிடி முதற் கொண்டு தொழில்களில் FDI இவற்றிற்க்கு எதிரான போராட்டத்தில் தெரியவரும். அதை செய்யும் தைரியம் உண்டா இவர்களுக்கு?
இந்தியா அந்நியர் கைக்கு சென்று வருகிறது எனும் இவர்களின் ஐயத்தில் நேர்மையிருக்குமெனில் அது SEZ, அணு ஆயுத ஒப்பந்தம், ராணுவ ஒப்பந்தம் இவற்றின் மூலம் புற வாசல் வழியாக இந்தியாவை கூறு போட்டு விற்பதற்க்கு எதிரான இவர்களின் போராட்டத்தில் வெளி வரும். தரகு பணத்தில் சொகமாக வாழும் மலர் மன்னன் முதலான கோஸ்டியனிரின் சிஷ்ய கொழுந்துகள் இதை செய்ய முன்வருவார்களா?

சிதம்பரம் கோயிலை மன்னரிடமிருந்து கைப்பற்றிய கதையை விடுங்கள் அங்கு தமிழில் பாடவது பற்றி தஞ்சை தமிழ் மண்ணின் பெயரில் போலியாக பாசத்தை காட்டும் அண்ணன் ஜடாயு மற்றும் அறிவியல் நீலகண்டன் போன்ற நல்லதையே விரும்பும் சான்றோர்கள் கோரிக்கை வைப்பார்களா?

இந்த மேற் சொன்ன விசயங்களில் எல்லாம் இவர்களின் நிலைப்பாடு மக்களை காட்டிக் கொடுத்து அதில் வரும் தரகு பணத்தில் வயிறு வளர்க்கும் நேர்மைதான்.

வாழ்வுரிமைப் பிரச்சனையாம்...
யாருடைய வாழ்வுரிமை பிரச்சனை? மேலேயுள்ளது எல்லாம்தான் உண்மையில் இவர்கள் இந்துக்கள் என்று சொல்லி தங்களது மத வெறி பிரியானிக்கு பயன்படுத்த நினைக்கும் மக்களின் வாழ்வுரிமைப் பிர்ச்சனையாக உள்ளது. இவற்றிற்க்கு இன்று வரை ஒரு சிறூ துரும்பையாவது அள்ளிப் போட்டிருப்பார்களா இவர்கள்?

ஆனால் வாழ்வுரிமைப் பிரச்சனையாம். இவையெல்லாம் வாழ்வுரிமை பிரச்சனையில்லையெனில் அந்த மக்கள் இவர்கள் சொல்லும் இந்துக்கள் லிஸ்டில் இல்லையென்றாகிறது. அப்படியெனில் யாருடைய வாழ்வுரிமை குறித்து பேசுகிறார்கள் என்று தெளிவுபடுத்த வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது. தலைப்பை ஞாபகப்படுத்திக் கொள்ளவும்.... 'இந்து/பார்ப்ப்னிய'.

இவர்கள்தான் இந்த அடிப்படை பிரச்சனைகளின் பக்கம் மக்களின் கவனம் திரும்பிவிடாமல் இஸ்லாம் மதம் இந்தியாவின் காலாச்சாரத்தை அழிக்கிறது என்று பயபீதி கிளப்புவதன் மூலம் போலியான எதிரியின் பக்கம் திசை திருப்புகிறார்கள்.

மத அடிப்படைவாதம் என்பதே ஏகாதிபத்திய பொருளாதார அடக்குமுறைகளை மறைத்து மக்களை வேறு பக்கத்திற்க்கு திசை திருப்பிவிடுவதுதான். அது மக்களின் உண்மையான பிரச்சனைகளில் இவர்கள் எங்கு ஒழிந்து கொள்கிறார்கள் எனும் தேடும் பொழுது அம்பலமாகிறது.
இஸ்லாம், கிருத்துவம், இந்து/பார்ப்னியம் முதலான அனைத்து மத அடிப்படைவாதங்களும் அதன் அனைத்து வடிவங்களிலும் அடித்து நொறுக்கப்பட வேண்டியவையே!!
இவற்றின் வர்லாற்றைப் பார்த்தால் இவை என்றைக்குமே மக்களின் விடுதலைக்காக போராடியதாக இல்லை. மாறாக ஆட்சியில் இருப்பவர்களின் கொட்டை தாங்கியாக இருந்து சேவை செய்து வந்துள்ளனர். இன்றைக்கு அரேபியாவின் இஸ்லாமிய அடிப்படைவாதமும் சரி, இந்தியாவில் இந்துத்துவ பயங்க்ரவாதமும், கிருத்துவ வெறியும் சரி இந்த அம்சத்தில் தங்களை சகோதரர்களாக அடையாளம் காணுகிறார்கள்.

நாளை ஒரு வேளை இவர்களின் இந்த தலைமைக்கு மக்களின் பெரும் போராட்டங்களினால் ஆப்பு வரும் என்று சூழ்நிலை ஏற்ப்பட்டால் , இந்த மூவரும் ஒன்று கூடுவார்கள் என்பதை நாம் உறுதியாகக் கூறலாம்.


இஸ்லாமிய பயங்கரவாதம் இந்தியாவின் ஆபத்துகளில் ஒன்று என்பதும் அதை நாம் எதிர்க்க வேண்டியுள்ளது என்றும் பேசுவது வேறு ஆனால் அதை வைத்தே அதை விட பெரிய பிரச்சனைகளை மூடி மறைப்பதும், தமது அரசியல் ஆதிக்கத்திற்க்கு பழியாடுகளை தயார் செய்ய அரிவாள் தீட்டுவதும் நயவஞ்சகர்களின் வேலை.


அதை வைத்தே தமது பிரியானிக்கு அப்பாவி மக்களை கறிவேப்பிலையாக பய்ன்படுத்தும் இவர்களின் கேடு கெட்ட மனித குல விரோத எண்ணத்தை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.


வாருங்கள் இந்துத்துவ வெறியர்களே! ... நேர்மையிருந்தால் எமது கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்!!!

நேர்மையற்ற கயவர்களின் கடைசிப் புகலிடம் மத அடிப்படைவாதம்!!!


அசுரன்

Related Article:

#1) மும்பை தாக்குதல்

#2) சிறு தெய்வங்களுக்கு ஆபத்து - நாட்டார் வழிபாட்டு முறையை விழுங்கும் பார்ப்பினியம் குறித்த கற்பக விநாயகத்தின் கட்டுரை

Wednesday, December 13, 2006

ரஜினி - கழிசடைக்கு பிறந்த நாள் - வர்க்க பிறழிகள்!

ரஜினி என்ற கழிசடைக்கு பிறந்தா நாள் கொண்டாடும் வர்க்க பிறழிகள்!

ஜினி என்ற கழிசடைக்கு பதிவு போடும் முதுகெலும்பற்ற பிறவிகள் உலாவும் இதே தமிழ் மணத்தில் புரட்சிக்காரன் பகத்சிங்கிங்கின் 100 வது பிறந்த நாளுக்கு எவனும் பதிவு போடவில்லை.


இது எனக்கு வருத்தம் தரவில்லை. அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை. சமூகத்தின் யாதர்த்த நிலையை ஒரு கம்யுனிஸ்டை விட யாரும் அதிகமாக உள்வாங்கிவிட முடியாது.


ஆயினும் அதே கம்யுனிஸ்டின் கடைமையாக அந்த யாதர்த்ததின் கேடு கெட்ட அம்சங்களை விமர்சிக்க வேண்டிய கடமையும் உள்ளது.அதனால்தான் இந்த சின்ன பதிவு.


என்ன செய்ய... மக்களின் நாட்டுப் பற்றும், கலை ரசனையும் ரஜினியின் களைந்த முடிகளில் சிக்குண்டு தவிக்கிறது. அவனோ உழைக்கும் மக்களின் காசுகளை சுரண்டி கொழுத்து இன்று தத்துவம் பேசித் திரிகிறான்....


இப்படி ஒரு சாக்கடைப் பன்றியின் பிறந்த நாளை நாமும் ஞாபகம் வைத்து கொண்டாட வேண்டும என்பது மறுகாலனியாதிக்க சூழலில் ஆதிக்கம் செலுத்தும் கழிசடை பண்பாட்டின் விதி.


ஏனேனில் ஏகாதிபத்திய பண்பாட்டுச் சூழல் ஆக பெரும்பான்மையாக கழிசடைத்தனத்தையே கலச்சார தளத்தில் உற்பத்தி செய்கிறது....


அசுரன்

Tuesday, December 05, 2006

அன்பான தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்களே!

லேஆப்ஃ(Lay Off), லேஆப்ஃ குறித்த பயம், சந்தையின் உத்திரவாதமின்மை மற்றும் பங்கு சந்தை சரிவு குறித்த பயம், தாரளமாக சகட்டு மேனிக்கு முதலீடு செய்தல், வார இறுதி நாட்களில் தலையை அடகு வைத்தாவது இன்பம் நுகர எத்தணிப்பது, வீட்டுக்கள் ஒருவர் வேலை முடித்து வரும் பொழுது இன்னொருவர் வேலைக்கு கிளம்பும் ஒரு விதமான உறவு முறை இயல்பாக மாறிப் போனது, நுகர்வு வெறி, தனக்கு முடியாத அளவுக்கும் அதிகமாக விசயங்களை இழுத்துப் போட்டுக் கொள்வது, தன்னையே சந்தேகப்படுவதும், தன்னைச் சுற்றி உள்ளவர்களை சந்தேகப்படுவதும் - இவையெல்லாம் உலகமயம் இந்தியாவுக்கு கொடுத்த பரிசுகள் என்று நாங்கள் சொல்லவில்லை. சத்யம் நிறுவனத்தின் இணை நிறுவனர் G.B. பிரபாத் சொல்கிறார்.

இந்த விசயங்கள் எல்லாம் சேர்ந்து உலகமய பொருளாதார அமைப்பில் பின்னி பிணைந்துள்ள அனைத்து வர்க்கங்களையும், அனோமிய் என்ற மனோநோய்க்கு இட்டுச் செல்கிறது. இந்த அனோமிய் பின்புலமாக கொண்டு ஏகாதிபத்திய சமூக அமைப்பை கலாச்சார, பண்பாட்டு தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்து ஒரு நாவல் எழுதியுள்ளார் பிரபாத்.

அதாகப்பட்டது, உலகமய பொருளாதாரத்தின் உடன் விளைவாக அது சார்ந்த உற்பத்தி உறவுகளில் ஈடுபட்டுள்ள மனிதர்களுக்கு வரும் மனோவியாதியை அடிப்படையாகக் கொண்டு சத்யம் கம்யுட்டரின் இணை நிறுவனர்(Co Founder) G.B. பிரபாத் ஒரு நாவல் எழுதியுள்ளார். அது குறித்து இந்து பத்திர்க்கையின் மெட்ரோப்ளஸ் அவரை அணுகி ஒரு சிறிய உரையாடல் ஒன்றை நடத்துகிறது. அந்த அனுபவம் ஒரு சிறு கட்டுரையாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.

உலகமயத்தின் பலன்களை அனுபவித்தவர்களில் ஒருவரான அவர், உலகமயம் சார்ந்த சுரண்டல் பொருளாதாரத்தின் அடிப்படையில் இந்தியாவின் முகத்தை மாற்றியவர்களில் முக்கியமானவரான அவர், அதன் பின் விளைவுகள் அவருடன் உற்பத்தி ரீதியாக நெருங்கிய தொடர்புள்ள வர்க்கத்தினரையே(IT employee etc) பாதிப்பதை உணர்கிறார். ஆக, அந்த அம்சத்தில் உலகமயத்தின் மோசமான பக்கங்களை அம்பலப்படுத்துகிறார். உலகமய ஏகாதிபத்திய பொருளாதாரத்தை அவர் படு மோசமான அளவு விமர்சிப்பதாக மெட்ரோ ப்ளஸ் சொல்லுகிறது.

தரகு வர்க்க பிரபாத் சொல்கிறார்: "நான் பங்களித்து உருவாக்கிய ஒரு உலகம் எனது மனதை கவர்தாக இல்லை". "சில நேரங்களில் நம் நோக்கத்திற்க்கு மாறான விசயங்களை உருவாக்கி விடுகிறோம்".

யுப்பி கலாச்சாரமும், தனி மனித நுகர்வு வெறியும், ஒட்டு மொத்த சமூகத்தின் உயர் பண்புகள் அதலபாதளத்தில் புதைக்கப்பட்டும் உள்ள சூழலில் (இது பொதுவாக புரட்சிகர சூழலுக்கு முந்தைய சூழல்தான்) இது போன்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதில் அவரது தொழில் துறையின் பங்களிப்பை மதிப்பிட்டு கூறியவைதான் மேலெயுள்ள அவரது வரிகள்.

வேலைவாய்ப்பு, ஐந்திலக்க சம்பளம், சராசரியை விட சிறிது(சிறிது மட்டுமே) சுகமான(சுகாதாரமான அல்ல) வாழ்க்கை இவற்றை காரணம் காட்டி உலகமயத்திற்க்கு ஆதரவாகவும், தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்களின் உரிமைகளுக்கான குரல்களுக்கு எதிராகவும் கோசமிடும் IT தொழிலாளர்களை இங்கு விவாதம் செய்ய அழைக்கிறேன். உங்களது துறையைச் சேர்ந்த முன்னணி வீரர் ஒருவர் வாயிலிருந்துதான் நாங்கள் சுட்டிக் காட்டும் அதே பிரச்சனைகள் பற்றிய அங்க்லாய்ப்பு வந்துள்ளது.

நாங்க சொன்னாக்க நம்ப மாட்டீங்க. இவர் சொல்றாரே என்ன சொல்லப் போறீங்க....?

'அமெரிக்காவின் மிகபரவலான நோய் - தனிமை' இது இந்தியாவில் இப்பொழுது பரவி வருகிறது என்கிறார் இவர். மேலும், 'இங்கு தனிமையில் இருப்பவர்கள் பெரும்பான்மையாகவும், பிறர் அவர்களிடமிருந்து துண்டிக்கப்பட்டும் உள்ளன்ர். இந்த புதிய சூழலுக்கு சரியான பெயர் வைக்க விரும்புகிறேன்' என்கிறார். தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள் யாரேனும் இந்த பெயர் வைப்பு வைபவத்திலும் அவருக்கு உதவலாம்.

பொருள் நுகர்வு நாட்டம், கட்டவிழ்த்து விடப்பட்ட முதலாளித்துவம், தொழில்நுட்ப சாதனங்களைச் சார்ந்த ஒரு வாழ்க்கை இவை அனைத்தும் சேர்ந்து உருவாக்கும் ஒரு நிச்சயமற்ற சமுதாயம் குறித்த நிலையை சித்த்ரிக்கிறது அந்த நாவல். ஆயினும் இன்றைய இந்தியாவின் இளைய சமுதாயம் அப்படிப்பட்ட ஒரு சமூக வாழ்வை அடைவதைத்தான் லட்சியமாகக் கொண்டுள்ளனர்.

"ஆனால் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது. அப்படி ஒரு நிலை இருப்பதை நாம் உணர்வதில்லை அல்லது அதிலிருந்து ஓடி ஒளிய விரும்புகிறோம். முரன்நகையாக, தகவல் தொடர்பின் உச்சத்தில் உள்ள ஒரு உலகத்தில், தனிமையும், அதீத அச்சமும், மனச் சஞ்சலுமும்தான் அதிகப்படியாக உணரப்படுகிறது. எந்த ஒரு உறவும் உத்திரவாதப்படுவதாக இல்லை." இப்படி சொல்வது நாம் அல்ல. ஏகாதிபத்தியத்தின் குலக் கொழுந்து திருவாளர் பிரபாத், சத்யம் இணை-நிறுவனர் கூறுகிறார்.

"அதிகப்படியான தனிமனித வாதம் நிலவுகிறது, முற்றுமுதலாக நாம் தனி மனித மோக வயப்பட்டுள்ளோம், நாம் இணையத்தின் மூலமாக ஒரே ஒரு நபரிடம் மட்டுமே தொடர்பு கொள்கிறோம் அது நாம்தான்' - இப்படி ஏகாதிபத்திய தனிமனித வாதத்தின் அவலத்தை அம்பலப்படுத்துகிறார் பிரபாத்.

"எனது தாத்தாவோ அல்லது உங்களது தாத்தாவோ தனது வேலையை இழந்து விடுவது குறித்தோ அல்லது தனது மனைவி தன்னைவிட்டு விலகிவிடுவது குறித்தோ கவலைப்பட்டதுண்டா?" இப்படி கேட்ப்பது நாமல்ல. இது போன்ற நிலையிலுள்ள வர்க்கத்தை சுரண்டி, கொழுத்த லாபம் சேர்க்கும் தரகு வர்க்க முதலாளி பிரபாத் கேட்க்கிறார்.

சொல்லுங்கள் IT தொழிலாளர்களே என்ன பதில் சொல்லலாம் என்று? பிரபாத் உங்களுக்கு உலகமயத்தின் நன்மைகள் பற்றி தெரியாது என்று அறீவுரை பகர்வோமா? தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு சாலவும் சிறந்த் ஒரு எதிர்காலம் ஒளிமயமாக காத்திருக்கிறது, உங்களது பயம் ஒரு துர் கனவு என்று ஆலோசனை சொல்லுவோமா? வேலை வாய்ப்பு குறித்து RBIயும் சொல்கிறது, உலகமயத்தின் சாரதிகளில் ஒருவரும் சொல்கிறார் இன்னுமா மயக்கம்?

அவர் தொழில்நுட்பம் முதலாளித்துவ/ஏகாதிபத்தியத்தின் கையில் மாட்டிக் கொண்டு படும் பாடு குறித்தும் குத்திக் காட்டுகிறார், "தொழில்நுட்பத்தை நாம் எப்படி கையாளுகிறோம் என்பதிலும் அதை வைத்து என்ன செய்ய விரும்புகிறோம் என்பதிலும் தான் விசயம் உள்ளது. தொழில்நுட்பம் என்பதை பொருத்தளவில் தன்னளவில் எந்த ஒரு நல்லது கெட்டதுகளை கொண்டிருப்பதில்லை."

முதலாளித்துவத்தின் இழி நிலை குறித்து அவர் மேலும் குறிப்பிடுகிறார். "முதாலாளித்துவத்தால் செலுத்தப்படும் தொழில் நுட்பம் குறித்து யாரேனும் எச்சரிக்கை செய்து கொண்டிருக்க வேண்டும்". "முதலாளித்துவம் நமது உள்ளுணர்வுகளை கட்டவிழ்த்து விடுகிறது, நாமோ நம்மைச் சுற்றியுள்ள எல்லாமே நம்க்கு தீங்கு விளைவிக்கும் என்றூ பார்க்கிறொம்'. இதே விசயத்தைத்தான் இயற்கையுடன் முரன்படும் ஏகாதிபத்தியம் என்ற தலைப்பில் இரு கட்டுரையாக இங்கு பிரசுரிக்கப்பட்டது.

பிரபாத்தின் இந்த கட்டுரை கூட தனிமனித வாதத்தின் அடிப்படையில்தான் பிரச்சனையை அணுகுகிறது. அது எந்த அம்சத்திலும் உலகமய பொருளாதாரத்தில் ஆதாயமடையும் துறைகளில் ஏற்ப்படும் விளைவுகளை சித்தரிப்பதைத் தாண்டி, இதே பொருளாதாரம் இந்தியாவின் இதர பெரும்பான்மை மக்களின் வாழ்வை சுனாமியாக சூறையாடி இருப்பது குறித்து எதுவும் சொல்லுவதாக தெரியவில்லை.

நாம் எதை இழந்து எதை பெறுகிறீர்கள்? கணிணியுடன் இணைந்து அதன் ஒரு உறுப்பாக மாறி சொந்த வாழ்க்கையை இழப்பதுடன், சமூக வாழ்க்கையையும் இழந்து திக்கற்ற நிற்கிறோம். எந்த ஒரு தொழிலில் ஈடுபடுபவனுக்கும், அந்த தொழிலில் ஈடுபடும் உடல் உறுப்பு(கை, கால், விரல் etc) செய்யும் வேலைக்கேற்ற பாதிப்பை அடையும். அப்படியெனில் கணிணியின் ஒரு அங்கமாக மாறிப் போன நமது மூளைக்கு என்னவிதமான பாதிப்பு ஏற்ப்படுகிறது?
பெங்களூரில் போன வருடம் தற்கொலை செய்து கொண்டவர்களில் பெரும் சதவீதத்தனிர் IT துறையினர் என்ற விசய்ம் நமக்கு எதை உணர்த்துகிறது? மனோ தத்துவ நிபுனர்களை அணுகுபவர்களில் அதிகம் பேர் IT துறையினர் என்ற் தகவல் எதைக் காட்டுகிறது? நமது மன அழுத்தத்தை குறைக்க நம்மை சுரண்டிக் கொழுக்கும் தரகு வர்க்க முதலாளிகள் அரங்கேற்றும் கேளிக்கைகள் எதைக் காட்டுகிறது?

குறைந்த கூலி என்ற அம்சமும், இந்திய பணத்தின் மதிப்பு டாலருக்கு நிகராக குறைவாக இருப்பது இந்த அம்சங்கள் உண்மையாக இருக்கும் காலம் மட்டுமே நமது வேலை உத்திரவாதப்படுத்துகிறது. நமது மென்பொருள் தயாரிக்கும் திறமையல்ல மாறாக அவனுக்கு லாபம் தயாரித்துக் கொடுக்கும் திறமை-அதாவது குறைந்த கூலி- இதுதான் மதிக்கப்படுகிறது. இது தவிர்த்து உலக பொருளாதார சூழல், நம்மைவிட குறை கூலி உழைப்பை வழங்க தயாராயிருக்கும் வேறு நாடுகள், உள்நாட்டிலேயே வெளி நாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த வழி வகுக்கும் SEZ. இப்படி கண் முன்னே நமது உரிமைகளை குழி பறிக்க தேவையான விசயங்கள் நடக்கும் போது கூட சுகநாட்ட வாதத்தில் மூழ்கி திளைத்து நிதர்சனத்தை உள்வாங்கும் திறன் இழந்து நிற்கிறோமே என்ன செய்யலாம்?

வார இறுதி நாட்களிலும் வேலை, IBM-ன் யுட்டலிசேசன் டார்கெட்(90% மேல் ஒவ்வொரு நபரும் billable ஆக இருக்க முயற்சி செய்ய வேண்டும்), விப்ரோவின் மாணவ தொழிலாளர்கள், இப்படி நமது உழைப்பை சுரண்டி கோடிகளில் குளீர் காயுபவர்கள், கம்பேனியின் ஒரு துறையில் லாபம் இல்லையென்றவுடன் சம்பளத்தை குறைப்பதும் நடக்கிறது. கம்பேனி ஒட்டு மொத்தமாக லாபம் எடுக்கும் போதே இவ்வாறு எனில் இந்திய தொழிலாளர்கள் இனிமேலும் அவர்களின் டார்லிங்குகள் கிடையாது என்ற நிலை வரும் பொழுது என்ன செய்வார்கள்? இது தவிர்த்து பல்வேறு உடல் உபாதைகள் வேறு.

நம்மை விட அதிக உரிமைகளை சட்ட ரீதியாக பெற்றுள்ள அமெரிக்க தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் கூட இந்த கம்பேனிகளின் அநியாயங்களை எதிர்த்து போரிடுவதற்க்கு சங்கமாக திரண்டுள்ளனர். அதுவும் அமெரிக்க கார்ப்போரேட் வரலாற்றில் முதல் முறையாக IBM IT (Alliance@IBM) தொழிலாளர்கள் சங்கமாக திரண்டு பென்சன் பணத்தில் அவன் கைவைப்பதை எதிர்த்து போராடி வெற்றி பெற்றுள்ளனர். உரிமைகள் உத்திரவாதமான அவர்களுக்கே சங்கம் தேவைப்படுகிறது, நமக்கு?

IT தொழிலாளிக்கு எதிராக எப்படியெல்லாம் ஆப்பு வைப்பது, சுரண்டலை அதிகப்படுத்தி எப்படியெல்லாம் லாபத்தை அதிகப்படுத்துவது என்பது குறித்து கலந்து பேசி ஒரு பொது முடிவுக்கு வருவதற்க்கு IT முதலாளி சங்கமாக திரள்கிறான்(NASCOM, CII). National Skills Registry என்ற பெயரில் நமக்கு அடையாள எண் கொடுத்து மையப்படுத்தப்பட்ட ஒரு தகவல் கிடங்கை ஏற்படுத்தியுள்ளான். தேவைப்பட்டால் இந்தியாவின் எந்த ஒரு IT தொழிலாளி மீதும் கரும் புள்ளி குத்தி இந்தியாவில் அவனுக்கு எந்த இடத்திலும் வேலை கிடைக்க விடாமல் செய்யலாம். ஆக, எதிர்காலத்தில் IT தொழிலாளி மீது அவனுக்கு ஆதிக்கம் தேவைப்படும் என்பதை உணர்ந்து இப்பொழ்து தயாராகிறான் அவன். நாமோ பலி ஆடுக்கு நல்லா தீவனம் கிடைக்கிறது என்று தேமேவென்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

எதை இழந்து எதை பெறுகிறோம்? நமது பெற்றோர்கள் அரசு நிறுவனங்களில் வேலை பார்த்து ரிடையர் ஆகி வெளி வரும் பொழுது பெண்ணின் திருமணம், பையனின் படிப்பு, அது போக குறிப்பிடத் தகுந்த பென்சன், கையில் ஒரு பெரிய தொகை, இவை தவிர்த்து வீடு வாசல் அமைதியான வாழ்க்கை, உடல் ஆரோக்கியம் என்று இருந்தார்கள். நமது நிலைமை?

இந்த அம்சங்களையேல்லாம் விளக்கி ஒரு கட்டுரை ஆறேழு மாதங்களுக்கு முன்பு வந்து மிகப் பரவலாக அனைவராலும் மெயிலில் அனுப்பட்டது.

இதை விடுங்கள் ஒரு சமூகமே சீரழிந்து கொண்டிருக்கும் பொழுது, நாம் மட்டும் நல்லதொரு வாழ்க்கை வாழ்ந்திட முடியுமா? கார்போரேட் லெசன் என்ற பெயரில் சிறு கதைகள் அடங்கிய ஒரு இமேயிலை பெரும்பாலனவர்கள் படித்திருப்பீர்க்ள். அதில் குழுவில் ஒருவருக்கு பிரச்சனை வரும் பொழுது நாம் கண்டு கொள்ளாமல் இருப்பது நமக்கும் ஆபத்து வரும் பொழுது பேரிடராக இருக்கும் என்பதை வலியுறுத்தி ஒரு கதை வரும். இந்த சமூகம் ஒரு குழுவாக இணைந்து ஒவ்வோரு மனிதனின் தேவைகளை நிவர்த்தி செய்ய உற்பத்தி செய்கிறது. இதில் சமூகத்தில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெரும்பகுதி துன்பத்தில் துவளும் பொழுது நாம் மட்டும் எப்படி ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்திட முடியும்?

என்ன செய்யலாம்? க்ளையண்டின் பிரச்சனைகளை ஆய்வு செய்து தீர்வு சொன்ன நேரம் போக நமது பிரச்சனைகளையும் ஆய்வு செய்து தீர்வு குறித்து யோசிக்கலாம். After all, மற்ற யாரையும் விட சிந்திக்கும் திறமையிலும், அதற்க்கு தேவையான தகவலகளின் அருகாமையிலும் நாம் ஒரு சிறப்பான இடத்தில் இருக்கிறோம். பிரச்சனை நம்மை பற்றி சிந்திக்க நமக்குக் கிடைக்கும் சொற்ப நேரம்தான்......

என்ன செய்யலாம்?.....

அசுரன்



***********


அனோமிய் நோய் குறித்து:

ஒவ்வொரு சமூகமும், மனிதனும் தான் ஈடுபட்டுள்ள உற்பத்தியின் தன்மையைப் பொறுத்த அறிவு, மனவள முதிர்ச்சி அடைகிறான். இதுதான் சமூக பரிணாமத்துவம் குறித்த மார்க்ஸிய பொருள்முதல்வாதப் பார்வை. ஆக, ஏகாதிபத்திய சமூகத்தில் ஒரு பக்கம் நுகர்வு வெறி மூலமாகவும், இன்னொரு பக்கம் அதிகப்படியான சுரண்டல் மூலமாகவும்(12 மணீ நேரம் வேலை) சமூகத்துடனான தொடர்பை இழக்கிறான் மனிதன். அதே நேரத்தில் நுகர்வு வெறியை நியாயப்படுத்தவும், சமுகமாக தன்னை உணர்ந்து கூட்டுச் சேர்வதற்க்கான அடிப்படைகளை அடித்து நொறுக்கவும் தேவையான பல்வேறு பொதுக் கருத்துக்களை அவனது ஊடக பலத்தின் மூலம் உறுதிப் படுத்துகிறான். அப்படி ஒன்றுதான் தனிமனித வாதம். இதன் காரணமாக முந்தைய சமூகத்தின் மதிப்புவாயந்த பண்புகள் இன்று இழிச்சவாயத்தனமாகவும், முட்டாள்தனமாகவும் பார்க்கப்படுகிறது. விளைவு, இந்த சூழலிலான உற்பத்தியில் ஈடுபடும் ஒரு மனிதன் தனது பழைய உயர் மதிப்புகளை இழக்கிறான். இவை தவிர்த்து இந்த சூழல் உருவாக்கும் கலாச்சார பிரச்சனைகளும், தொழில் ரீதியான பிரச்சனைகளும், உடல், மன உபாதைகளும் சேர்ந்து உருவாக்கும் ஒரு மனோ வியாதிதான் - அனொமிய்.

"Alienation and purposelessness experienced by a person or a class as a result of a lack of standards, values, or ideals" - Anomie(அனொமிய்)

"தரம் தாழ்ந்த நிலை, உயர் பண்புகளை இழத்தல் இவற்றின் விளைவாக ஏற்ப்படும் அந்நியப்படுதலும், எந்த ஒரு குறிப்பிட்ட லட்சியமோ/நோக்கமோ அற்ற வாழ்க்கையும் ஏற்ப்படுத்தும் மனவியல் பிரச்சனை" - அனோமிய் எனப்ப்டுகிறது.

Must Read articles:

IBM IT union
software_job_india
workers-of-cyber-world-uniteatleast

corporate-lesson-secret-of-dreaming
it-survivors-staying-alive-in-software
are-we-living-at-mercy-of-their-profit
still-sleaping-jobs-started-flying
இயற்கையின் அழிவில் இன்பம் காண்போம் - பாகம் 1
அழிவில் லாபமும், லாபத்தால் அழிவும் - பாகம் II
கணிணி தொழில்நுட்ப வல்லுனர்களே !

இது குறித்து கருத்துக்களை ஆலோசனைகளை எனக்கு தனிமடலிலும் அனுப்பலாம்:

asuran07@gmail.com

Friday, December 01, 2006

பெண்மையை ஒரு பெண் தரிசிக்கும் தருணம்!

தோழி பொன்ஸ் எழுதிய 'பெண் ஏன் அடிமையானால்' கட்டுரை இப்பொழுது பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருப்பதால்(:-)), அந்த பரபரப்பின் ஊடாக, பெண்ணடிமைத்தனம் இல்லை என்பதாக நம்பும் ஒரு பெண், அதை - பெண்கள் மீதான சமூகத்தின் வன்முறையை - நேரடியாக அனுபவிக்கும் தருணம் குறித்த ஒரு சிறுகதையை இங்கு மறு பிரசூரம் செய்கிறேன். புதிய கலாச்சாரம் இதழ் ஏப்ரல் 2005-ல் வந்த கதை.
பெண்மை என்பது எவ்வளவு வன்மம் நிறைந்த ஒரு கருத்தாக்கம் என்பதை இந்த கதை படிக்கும் பொழுது உணர்கிறோம்.
பொம்பளையா அவ?.... எவ்வளவு சுலபமான கேள்வி. தனக்கான நியாயமான உரிமையுடன் வாழ தலைப்படும் ஒரு பெண்ணாக இந்த கேள்வியை அனுபவித்து பாருங்கள்.... அதன் வலி புரியும், அதன் வன்முறை புரியும்.
ஒரு பெண்ணின் மீது களங்கம் கறிபித்து அவதூறு கிளப்புவதற்க்கு இந்த சமூகம் எந்த முகாந்திரமும் எதிர்பார்ப்பதில்லை. அவள் நடைமுறை வழக்கங்களை உடைக்க வேண்டாம், சிறிது கீறினாலே போதும் அதையே தனக்கான அழைப்பிதழாக எடுத்துக் கொண்டு நாட்டமை செய்ய தன்னெழுச்சியாக முன் வருகிறது இந்த சமூகம்.

அசுரன்

***************

சுனாமி பேரழிவுக்குப் பிறகு பட்டினப்பாக்கம் பகுதியை அமைதி சு+ழ்ந்து கொண்டிருந்த ஒரு நாளின் மாலைொ காற்றின் அசைவு கூட இன்றி அமைதியாக இருட்டிக் கொண்டு வரும் மாலை. ஏனோ வானம் கொஞ்சம் மூட்டம் போட்டிருந்தது. கரையோரங்களிலிருந்து வௌpயேறிய மக்கள் சாலை ஓரங்களிலும், சரொச்சுகளுக்குள்ளும், தேநீரொக் கடைகளுக்கு அருகாமையிலும் கூட்டம் கூட்டமாய் ஒதுங்கியிருக்கிறாரொகள். நான் கடற்கரையை நோக்கி நடந்து கொண்டிருக்கிறேன். தற்செயலாகத் திரும்பினேன். எனக்கு வலப்பக்கம் சாலையில் ஒரு பெண் நடந்து கொண்டிருக்கிறாள். இன்னொருமுறை திரும்பிப் பாரொக்க வைத்த பெண்.
சுடிதாரின் துப்பட்டாவை இடுப்பில் இறுக்கிக் கட்டி நெஞ்சை நிமிரொத்திக் கொண்டு அவள் எடுத்து வைக்கும் அடிகள் அழுத்தமும், அதிரொவும் ஏற்படுத்துபவைகளாக இருந்தன. கைகால்களிலிருந்த உடைகளை வேகமாக மேல் நோக்கிச் சுருட்டி விட்டுக் கொண்டும், குனிந்து கைகளை படாரொ, படாரொ என்று துடைகளில் அறைந்து கொண்டும் நடந்தாள். ஏதோ சில கோபமான வாரொத்தைகள் தௌத்துக் கொண்டிருந்தன. அவளுடைய உயரம் நிச்சயமாக ஆறடி இருக்கும். கருத்த நிறம், கூரொமையான மூக்கு பின்னிய கயிறு போன்ற நீண்டு தொங்கும் குதிரைச் சடை. அணிந்திருந்த சுடிதாரொ, ஒரு ஆண் பேண்ட் சட்டை போட்டதைப் போலிருந்தது. எலும்புகளாலான உடம்பு. ஆனால் இரும்பு போன்ற எலும்புகள், கைகளிரண்டும் வீச்சரிவாள் போல நீண்டு தொங்கிக் கொண்டிருந்தன. அவளுக்குப் பின்னால் வாலைப் போலத் தொடரும் இரண்டு குட்டிக் குழந்தைகளும் அவளுக்கு இணையான வேகத்தில் வளைந்து துருதுருவென்று நடந்து கொண்டிருக்கிறாரொகள். அவள் நின்றதும் நின்று வேடிக்கை பாரொக்கிறாரொகள். அலை ஓசையைத் தவிர சுற்றிலும் அமைதி.

அமைதியைக் குலைக்கும் விதமாக வந்தது அந்தச் சத்தம். சாலையின் வலப்பக்கமாக நடந்து கொண்டிருந்த அவளுக்கு பின்னாலிருந்து வெறித்தனமாய்க் கத்திக் கொண்டே வேகமாய் வந்த ஒருவன் வந்த வேகத்தில் அவள் மீது பாய்ந்து இரண்டு கையாலும் அவளுடைய குதிரைச் சடையை பிடித்து வட்டமாகச் சுழற்றினான். தலை கிறுகிறுக்கும்படி தரையில் பல சுற்று சுற்றிவிட்டு பிறகு நேராக நிறுத்தி வைத்து அடி வயிற்றில் ஓங்கி ஒரு உதைவிட்டான்.

அவளிடமிருந்து எந்தச் சத்தமுமில்லை. வயிற்றைப் பிடித்துக் கொண்டு நின்ற இடத்திலேயே உட்காரொந்து விட்டாள். பிறகு ஏதோ திட்டினாள். குழந்தைகள் இரண்டு பேரும் அவளை மிரண்டு போய்ப் பாரொத்தாரொகள். பிறகு அவள் பின்னால் போய் நின்று கொண்டாரொகள். அவள் அடிவாங்கி நிலை குலைந்து போயும் குழந்தைகள் அழவில்லை. அவளும் வயிற்றைப் பிடித்து வலியை அடக்கிக் கொண்டாள்.

அடுத்த கணமே சற்றும் எதிரொபாரொக்காதபடி வேகமாக எழுந்தவள் ஒரே பாய்ச்சலில் அவனுடைய சட்டையைச் சுருட்டிப் பிடித்தாள். ஒரு கை சட்டையைப் பற்றியிருக்க, மறுகையால் அவனுடைய வயிற்றிலும் மூக்கிலும் மாறிமாறிக் குத்தினாள். அவளுடைய நீண்ட கைகளின் வேகமான வீச்சு அவனுடைய உடம்பில் கனமாக இறங்கியது. இடைவிடாமல் குத்தியதில் நிற்க முடியாத நிலையில் துவண்டவனை கீழே தள்ளிவிட்டு இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு மூச்சிரைக்க நின்று திட்டிக் கொண்டிருந்தாள்.

சிறிதுநேர அமைதிக்குப் பிறகு மீண்டும் கத்திக் கொண்டே எழுந்தவன் வேகமாக அவளை நெருங்கி இரண்டு கைகளையும் பிடித்து முதுகுக்குப் பின்னால் வைத்துக் கொண்டு முரட்டுத்தனமாக முறுக்கினான், முறுக்கிய நிலையிலேயே வைத்துக் கொண்டு நடு முதுகிலேயே ஓங்கி ஓங்கிக் குத்தினான். அவள் தாங்க முடியாத வலியால் பச்சை பச்சையாகத் திட்டிக் கொண்டே கத்தினாள். அவனோ எதையும் கண்டு கொள்ளாமல் வெறி பிடித்தவன் போலப் பல்லைக் கடித்துக் கொண்டு மீண்டும் மீண்டும் குத்திக் கொண்டேயிருந்தான்.

அவள் உடலை ஒரு சுழற்று சுழற்றி தன் கைகளை விடுவித்துக் கொண்டாள். என் முகத்தில் "சப்'பென்று துப்பியது போலிருந்தது. விடுபட்ட அதே வேகத்தில் அவனைக் கீழே தள்ளியவள் வயிற்றிலேயே குடல் கூழாகும்படி மிதிமிதியென்று வெறி தீரும் வரை மிதித்துத் தள்ளினாள். மீண்டும் எழமுயன்றவனை நிமிரொத்தி வைத்துக் கொண்டு தன் காலுடைகளை மேலே சுருட்டி விட்டுக் கொண்டாள், பிறகு அவனுடைய நடு நெஞ்சிலேயே ஓங்கி ஒரு உதைவிட்டுவிட்டுக் கராத்தே வீரரொகள் நிற்பது போல ஒரு காலை முன்னாலும், பின்னாலும் அதேபோல கைகளையும் வைத்துக் கொண்டு நின்றாள். கூட்டம் இரண்டு பேரையும் சுற்றி பாதுகாப்பு வளையம் போல வட்டமாகக் கூடிவிட்டது.

அரசுக் குடியிருப்புகளின் மாடிகளில் நின்றுகொண்ட வாய் பிளக்கப் பாரொத்துக் கொண்டிருந்த குடும்பப் பெண்மணிகள் அதிரொச்சியால் மிரண்டு போயிருந்தாரொகள். இருவருக்கும் என்ன பிரச்சினை ஏன் சண்டை என்று கூட அறிந்து கொள்ள முடியவில்லை. அவனை யாரும் இப்படி அடித்து விட முடியுமா என்றெண்ணி எல்லோரும் மலைப்பாகப் பாரொத்தனரொ. கீழே விழுந்தவன் அதே நிலையில் அசைவின்றிக் கிடந்தான். அவனை வாய் ஓயுமளவுக்குத் திட்டித் தீரொத்துவிட்ட பிறகு கலைந்து போயிருந்த தலைமுடியை வாரி முடிந்து கொண்டாள் அப்பெண். பிறகு அவனை அலட்சியமாக ஒரு எத்து எத்தி விட்டு நகரொந்தாள். குழந்தைகளும் ஓடிப் போய் அவளோடு ஒட்டிக் கொண்டு நடந்தன.

காற்று வேகமாக வீசியதில் சாலைப் புழுதியும் பழைய குப்பைகளும் சுழன்றடித்தன. லேசான தூறலும் விழுந்து கொண்டிருந்தது. தரையில் கிடந்தவன் அசைந்தான். எதையோ எதிரொபாரொத்து நின்ற கூட்டம் நகரவில்லை. கண்களைத் திறந்து பாரொத்துவிட்டு மீண்டும் அதேநிலையில் கிடந்தவன் சில நொடிகளில் எழுந்தான். சுற்று முற்றும் பாரொத்துவிட்டு சாலையின் மூலையில் கொட்டிக் குவிக்கப்பட்டிருக்கும் கருங்கற் குவியலை நோக்கி நடந்தான். குனிந்து கைகளுக்கு அடக்கமும் கனமுமான ஒரு கருங்கல்லை தேடி எடுத்தான். பிறகு அவளை நோக்கிக் கத்திக் கொண்டே ஓடினான்.

அங்கிருந்து சற்று தூரம் கூட கடந்திடாதவள் சத்தம் கேட்டுத் திரும்பினாள்ொ அவன் கல்லுடன் நிற்பதைக் கண்டு தயங்கித் தயங்கி முன்னால் வந்தாள். அவன் அடிக்கப் போவது போல கைகளை உயரொத்தி ஓங்கியதும் குழந்தைகளைத் தனக்குப் பின் மறைத்தபடி மேலும் முன்னே வந்து நின்றாள்.

""தோ பாரொ நீ ஆம்பளின்னா ஒத்தக்கி ஒத்த நில்லு. ""பொட்ட மேரி கல்லெடுத்துனு வரொறாத'' என்று கைகளால் மாரொபில் அறைந்து கொண்டு சவால் விட்டாள்.

அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவளை நெருங்கியவன் அடிப்பதற்கு வாகாக மிக அருகிலேயே நின்று கொண்டு அவருடைய கண்களுக்குக் கீழேயும் மூக்குக்கு மேலேயுமான நடு இடத்தில் வசமாக கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஓங்கி ஒரே இறுக்காக இறுக்கி விட்டான். ""சத்'' என்ற ஒரே ஒரு சத்தம் தான், கூழுக்குள் கல்லைப் போட்டால் விலகுவது போல கருங்கல்லின் கூரொமை சதையை பிளந்து கொண்டு இறங்கியது.
கூட்டம் எவ்வித அதிரொச்சிக்கும் ஆட்படாமல் அதேபோல பாரொத்துக் கொண்டிருந்தது. இவ்வளவு பேரில் யாருக்குமே தடுக்க மனம் வரவில்லையா, இப்படி வேடிக்கை பாரொத்துக் கொண்டிருக்கிறாரொகளே. அடுத்த கணமே அவன் ஓடிவிட்டான்.

கைகளால் முகத்தைப் பிடித்தபடி உட்காரொந்தவளின் வேதனை முகக் கோணலிலும், லேசான அனத்தலிலும் மட்டுமே தெரிந்தது. கண்கள் லேசாகக் கலங்கியிருந்தாலும் சொட்டுக் கண்ணீரொ கூட வௌpயேறவில்லை. குழந்தைகளும் விழித்தபடி கூட்டத்தையும் அவளையும் பாரொத்தனவே தவிர அழவில்லை. நானும் கூட்டத்தோடு கூட்டமாய்க் கலந்திருந்தேன். இந்தக் குழந்தைகளுக்கு அழவே தெரியாதா என்று அவரொகளையே பாரொத்துக் கொண்டு நின்றேன்.

இரண்டே நிமிடம்தான் அவளுடைய அமைதி, பிறகு கடுங்கோபத்தோடு எழுந்தவள் ஊற்றைப் போல் பெருக்கெடுக்கும் இரத்தத்தை வழித்து வழித்து உதறினாள், முகத்தில் கைகளைக் கொண்டு காயத்தை தொடும்போது வௌொளைச் சதை வௌயே தொங்கியது. பொட்டுக் கண்ணீரொ கூடச் சிந்தாமல் எப்படி இவளால் கல்லைப் போல் இருக்க முடிகிறது?

தொடரொந்து காயத்திலிருந்து வௌpயேறி முகத்தின் வழியே இறங்கும் இரத்தத்தால் அவளுடைய பற்களெல்லாம் சிவப்பாகிப் போயிருந்தன. இரண்டு கைகளிலும் உள்ளங்கையிலிருந்து முழங்கை வரை இரத்தம் நீளமான கோடுகளை இழுத்திருந்தது. சுற்றிலும் தெறித்து விழுந்த இரத்தத் துளிகள் குழந்தைகளின் முகத்திலும் தௌpத்திருந்தன. இரத்தங்கலந்த எச்சிலைக் காறித் துப்பிவிட்டு எழுந்தவள், அவன் ஓடிய பக்கம் ஓடினாள்.

அம்மா அருகில் இல்லை என்றாலே அழத் துவங்கி விடும் குழந்தைகளைப் போல அவரொகள் அழவில்லை, ஏதோ புரிந்து கொண்டதைப் போல அமைதியாகி நின்றாரொகள். ஓடியவள் சில நிமிடங்களிலேயே கோபமாகத் திட்டிக் கொண்டே திரும்பி வந்தாள்.

""பொட்ட பாடு பையா, நீ சீனிவாசபுரத்துக்கு வராமலா புடுவ. வா உனுக்கு அங்க வச்சிக்கிறேன்'', ""ஆம்பிளியாடா நீ கல்லெடுத்துனு அடிக்கிறயே தூ, பாடையில புடுவ நீ'' என்று மீண்டும் காறித் துப்பிவிட்டு உடைகளைச் சரிசெய்து கொண்டாள். பிறகு உட்காரொந்து குழந்தைகளின் முகத்தில் தெறித்திருந்த இரத்தத் துளிகளைத் துடைத்து விட்டு அவளைத் திட்டிக் கொண்டே நடந்தாள். நான் அங்கேயே நின்று கொண்டிருந்தேன். இப்போது கூட்டம் ஓரளவு கலைந்து போயிருந்தது. அவள் பக்கம் எந்தக் குற்றமிருப்பதாகவும் உணரமுடியாமல், அவள் பக்கம்தான் ஏதோ நியாயம் இருப்பதாகவும் நினைத்து மீதிக் கூட்டம் மனம் கனத்து நின்றது.

கூட்டத்தோடு கூட்டமாக நின்று இதுவரை சண்டையைப் பாரொத்துக் கொண்டிருந்த நான்கைந்து பேரொ கொண்ட கும்பலிலிருந்த ஒருவன், ""யாரொரா அவ, அவ பாட்டுக்கும் அட்சினு போயினேருக்கா, கொரலுக்குடு அவளுக்கு'' என்றான். உடனே கும்பலிலிருந்த இன்னொருவன் பலமாகக் கையைத் தட்டி கத்தினான். ""ஏய்... இங்க வாம்மே'' அந்தக் கும்பல் நன்றாக குடித்திருந்தது. அவரொகளில் சிலருக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ஆடி ஆடி நேராக நிற்க முயன்று கொண்டிருந்தாரொகள்.

போய்க் கொண்டிருந்தவள் நின்று திரும்பிப் பாரொத்தாள்.

""ஒன்னத்தாம்மே இங்க வா'' என்று கத்தினான்.

""இன்னா'' என்றபடி அங்கேயே நின்று கொண்டு கேட்டாள்.

""இன்னாவா'' என்றபடி அவளை நோக்கி நடந்தவரொகள், ""இன்னா இன்னான்ற, அறிவில்ல உனக்கு, யாரொ மேலன்னா கல்லு பட்டிச்சின்னா இன்னா பண்ணுவ'' என்றான். அடிபட்ட இடத்திலிருந்து இரத்தம் இன்னமும் லேசாக வழிந்து கொண்டேதானிருந்தது. அதைத் துடைத்துவிட்டுக் கொண்டே சொன்னாள்.

""ஐய நானா மொதல்ல கல்லெடுத்துனு அட்சேன், என்னான்ட கேக்குற, அவன போயி கேளு'' என்று சாதாரணமாகக் கூறிவிட்டுக் கிளம்பினாள். உடனே கூட்டத்திலிருந்த இன்னொருவன் ""நீதாண்டி மொதல்ல கல்லெடுத்துனு அட்ச, பொம்பளியா நீ பஜாரி, பஜாரி'' என்றான். நடந்தவள் வேகமாகத் திரும்பி ""தோ பாரொ வாடி போடின்றதெல்லாம் ஒன் வீட்டாண்ட வச்சிக்க. என்னான்ட வாணாம் மரொரியாத்த கெட்டுடும்'' என்றாள்.
அம்பு போன்று வந்த அவளுடைய வாரொத்தைகளைச் சீரணித்துக் கொள்ள முடியாத கும்பல், ""ங்கோத்தா பொம்பளன்னு பாத்துனுகீறோம். மொவளே அட்சா கண்ணு முழி பேந்துடும். எங்கள இன்னா ஒம் புருசன் மாரி பொட்டப்பயன்னு நெனச்சினியா போடி... போடின்னா...'' என்று அடிக்கப் பாய்ந்து கொண்டு வந்தாரொகள். அவள் பாதுகாப்பாக கைகளை முகத்துக்கு குறுக்கே வைத்துக் கொண்டாள். அந்தக் கும்பலைச் சிலரொ தடுக்கவும் அமைதியானது. பிறகு கூட்டத்திலிருந்த சிலரொ ""இன்னாம்மா நீ பொம்பளியாட்டமா கீற பத்ரகாளியாட்டம் ஆடுறியே'' என்றாரொகள். அந்த நிலையிலும் அவள் அதைக் கிண்டல் செய்தாள். ""இன்னாது? அப்போ பத்ரகாளி பொம்பள இல்லியா இன்னா'' என்றாள்.

""எப்பா, பொம்பளைக்கு இருந்தாலும் இவ்ளோ வாயி இருக்கக் கூடாதுப்பா'' என்றும். ""என்னா திமிரா பேசுறா'' என்றும் திட்டினாரொகள். மீண்டும் குடிகார கும்பலிலிருந்த ஒருவன், ""பொம்பளியா இவ பஜாரி... பஜாரி ஆம்பளிய அடிக்கிறாள்னா இன்னா கொயுப்புடா இவளுக்கு'' என்றான். நெருப்பாய் தகித்துக் கொண்டு கிளம்பும் அத்தனை ஓங்கிய குரல்களுக்கும் மத்தியில் அவள் குரல் சற்று கம்மிப் போயிருந்தது.

""யோவ் இன்னாய்யா பெரிசா நாயம் பேசுற? அவன் என்ன அட்சான், நானும் அட்சேன், உங்களுக்கு இன்னாத்துக்கு இம்மாங்காண்டாக்கீது.'' அவள் பேசி முடித்த அடுத்தகணமே குடிகார கும்பலிலிருந்த ஒருவனுக்கு கடகடவென்று சுடு மண்டைக்கு ஏறிவிட்டது.

""ங்கொம்மாள இன்னாடி உனுக்கு இவ்ளோ திமிரு, தேவிடியா வுட்டா எங்களியே அட்சிடுவ போலிருக்கே'' என்று கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வேகமாகப் பாய்ந்து காயம்பட்ட இடத்திலேயே முட்டியைக் குவித்து ஓங்கி ஒரு இறக்கு இறக்கினான்.

அய்யய்யோ... எம்மாஆ... என்று வீறிட்ட அவளுடைய அலறல் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த உணரொச்சிகளை மொத்தமாகக் கட்டவிழ்த்து விட்டது, அழுகை பீறிட அப்படியே தரையில் விழுந்தாள். உப்புக் காற்றில் உறைந்து கொண்டிருந்த இரத்தம் சுடாகி மறுபடி வௌயேறி முகம் முழுவதும் வழிந்தோடியது. அழுகை அவளுடைய கட்டைக் குரலிலிருந்து வெறித்தனமாக வௌப்பட்டு ஒலித்தது. அவள் யாரையும் நிமிரொந்து கூடப் பாரொக்கவில்லை. விரிந்த தலைமுடியும், சிவப்புச் சாயத்தில் முக்கி எடுத்தது போல முகமும் தோற்றத்தைப் பயங்கரமாக்கியிருந்தது.
முதுகு குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தாள். முகத்திலிருந்து இரத்தமும், உணரொச்சிகளின் கட்டுப்பாட்டை இழந்து சுரக்கும் கண்ணீரின் கரிப்பும் கலந்து ஓடி தரை மணலில் விழுந்து நிலத்தைச் சிவப்பாக்கிக் கொண்டிருந்தது. மழை நின்ற பிறகு குடிசையிலிருந்து சொட்டும் நீரைப் போல கொட்டிக் கொண்டிருந்தது இரத்தம். அவள் துடைத்து விட்டுக் கொள்ளவில்லை.

அடித்துவிட்டுப் போனவரொகளை வெறிகொண்டு வாங்கடா என்று அழைப்பது போல ஆவேசத்துடன் அழுதாள். அம்மாவின் அழுகையைப் பாரொத்தவுடன் குழந்தைகளும் அலறி அழ ஆரம்பித்தன. அழுகையானாலும் அவரொகள் குரல் நிற்கவே இல்லை.

குழந்தைகளுடைய முகத்தில் தெறித்திருந்த இரத்தத் துளிகளை துடைத்து விட்டபோது அவள் முகத்தில் இரத்தம் இழுத்து விட்டிருந்த சிறு சிறு கோடுகளின் வழியே கண்ணீரொ வழிந்தோடியது. அதை தங்களுடைய பிஞ்சுக் கரங்களால் துடைத்து விட்டுக் கொண்டே அந்தக் குழந்தைகள் அழுதன.

பாண்டியன்


நன்றி தமிழ் சர்க்கிள்

Thursday, November 30, 2006

துக்ளக் சோ நாறிய இடம்!

எப்பொழுதுமே நாறும் சோவின் வசவுகள் மிக மோசமாக நாறி அம்பலமானது பற்றிய ஒரு கட்டுரையை இங்கு பிரசூரிக்கிறேன். பழைய கட்டுரைதான் ஆயினும் அது அம்பலப்படுத்தும் விசயம் இன்னும் உயிர்ப்பானது. புதிய கலாச்சாரம் ஏப்ரல் 2005-ல் வந்த கட்டுரை.
அசுரன்

""அவா அவா செய்த கரொம வினையை அவா அவா அனுபவிச்சே ஆகணும்! போய் அம்பாளுக்கு நெய் தீபம் போடுங்கோ!'' என்று "மத்தவாளு'க்குத் தத்துவம் பேசும் பாரொப்பனக் கும்பல், செக்ஸ் அண்டு கிரைமாதிபதிகளான ஜெயேந்திரன், விஜயேந்திரன் வி\யத்தில் எவா எவாளப் பாத்தா டில்லியில காரியம் நடக்கும் என்று படைகட்டி வேலை செய்வதுடன் இந்தக் கயவரொகளின் பாங்கனாக துக்ளக், தினமலரொ வகையறாக்களை வைத்து இது பொய்வழக்கு, போலீஸ் ஜோடனை, மனித உரிமை மீறல் என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டது.
ஏற்கெனவே வாயைத் திறந்ததற்கே வாய்தா மேல் வாய்தா என்பதால் "பெரிசு' மவுன விரதம் சாதிக்கிறது. "அட்சர சுத்தமாய்' புளுh ஃபிலிமை பு+க்கூடைக்குள் போட்டு வாங்கத் தெரிந்த "சிறுசோ' ஆயிரம் விளக்கு போலீசு நிலையத்தில் இடது கைப் பெருவிரலைக் கை நாட்டி வாரா வாரம் சட்டத்தின் முகத்தில் பீச்சாங்கையை வைத்து நக்கலாகச் சிரிக்கிறது. விளக்குக் கம்பத்தில் கட்டித் தோலை உரிக்க வேண்டிய இந்த இரண்டு சமூக விரோதிகளுக்காகவும் ஆரொ.எஸ்.எஸ்., பி.ஜே.பி., பாரொப்பன ரவுடிகள் முதலாக, ஆரொ.வி., சே\ன், சோ, தினமலரொ கிரு\ொணமூரொத்தி போன்ற கேடிகள் வரை ""எப்படி எங்களவா மேல வழக்கை வைக்கலாம்?'' என்று வரிந்து கட்டிக் கொண்டு வந்து விட்டனரொ. பின்னே, கதாநாயகரொகளைக் கைது செய்தால் பாங்கரொகளுக்குப் பதறாதா?
குறுந்தொகைப் பாடல் கூறுவதைப் போல

""பாரொப்பன மகனே! பாரொப்பன மகனே!
எழுதாக் கற்பின் நின் சொல்லுள்ளும்பிரிந்தோரொப் புணரொக்கும் பண்பின்மருந்தும் உண்டோ !
மயிலோ இதுவே!''

பிரிந்தோரொ கூடுவதற்கான வேலைகளைச் செய்ய, ஊருக்குத் தெரியாமல் கூட்டிக் கொடுக்க பாரொப்பன மகனாம் பாங்கனை அழைப்பதே பழைய மரபு. இப்போது, ""ஆமாம், நான்தான் சங்கரொராமனைப் போட்டேன்! அனுராதா ரமணனை லுக்கு விட்டேன்! சொரொணமால்யாவுக்குச் சொடக்குப் போட்டேன்! இப்ப என்னாங்குறே? ஆதாரம் இருக்கா?'' என்று வக்கீலை வைத்து விவாதிப்பதோடு, துக்ளக், தினமலரை வைத்து ""போலீசை நம்பமுடியாது'' என்று புராணமும் பாட ஆரம்பித்து விட்டது பாரொப்பனக் கும்பல்.
தமிழகத்தில் பிற உழைக்கும் மக்களும், அரசு ஊழியரொகளும், அரசியல் கட்சிகளும், புரட்சிகர இயக்கங்களும் போலீசு அராஜகத்தை எதிரொத்துப் போராடும் போதெல்லாம் போராடுபவரொகளை நக்கலடித்தும், உள்நோக்கம் கற்பித்தும், "அக்காரொடிங் டு லா (சட்டப்படி)' என்று வக்கணை பேசிய பாரொப்பனக் கும்பல், கேவலம் பொம்பளைப் பொறுக்கி காஞ்சி மடாதிபதிகளுக்காகக் கச்சம் கட்டிக் கொண்டு போலீசை எதிரொத்து காரொட்டூன் போடுவதென்ன?

""பேச நா இரண்டு உடையாய் போற்றி!'' என ஆரியமாயையில் அண்ணாதுரை சொன்னதுபோல, அவாளின் சாதிவெறி நாக்கை இழுத்து வைத்து அறுக்க வேண்டாமா?
ஆழ்வாரொப்பேட்டை ஆளுடா!
அண்ணா சாலை நூலுடா!

இன்று சங்கராச்சாரியை, பெரிசையும் சின்னதையும் போலீசு காவலில் நடத்திய விதம் "டூ மச்!' என்றும், மேலிடத்து உத்திரவு என்றும் புலம்பும் சோ பாரொப்பனக் கும்பல், சாதாரண மக்கள் போலீசாரால் சித்திரவதைக்குள்ளாகும்போதும், ஒரு குடம் தண்ணீருக்காகத் தடியடி நடத்தும் போதும் நியாய அநியாயங்களைப் பேசாமல், ""எது தருமம்'' (துக்ளக், 16.1.2002) என்று ""நதருமா அதருமௌ சரதி ஆவம் ஸ்வ இதி'' என்று லத்திக்கம்பால் வேத வியாக்கியானம் காட்டியதோடு, ""போலீசுக்காரரொ என்ன ஸ்கவுட்டா? கூட்டத்தினரைப் பாரொத்து, எல்லோரும் தயவு செய்து விலகிவிடுங்கள்ொ மகாத்மா காந்தி அமைதியாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரொொ ராமகிரு\ொண பரமஹம்சரொ, ரமண மகரி\p சொல்லியிருக்கிறாரொ, எல்லோரும் அமைதியாக விலகவேண்டும் என்று கூறிவிட்டு மூலையில் போய் உட்காரொந்து கொள்ள முடியுமா? அதுதான் போலீசாரின் கடமையா? நாலு பேரையாவது பிடித்து அடி அடி என்று அடித்தால்தான் கூட்டமே சிதறி ஓடும். அது அவரொகளுடைய தருமம். போலீசு ஸ்டே\னில் ஒருவனை சித்திரவதை செய்தாரொகள் என்று செய்திவரும், உடனே எல்லோரும் பெரிய அட்டூழியம், போலீசு அராஜகம் என்று சொல்வோம். பிடித்தவனை நாலு அடி கொடுக்கட்டும், அப்படியாவது திருட்டுப் போன சாமான் கிடைக்கட்டும் என்பதுதானே நமது எண்ணமாக இருக்கும்?'' என்று போலீசுக்கு வக்காலத்து வாங்கிய சோ இப்போது உள்ளே இருப்பது மகா அயோக்கியனாக இருந்தாலும் அவாளாக இருப்பதால் ""அவருடைய பெயரைக் கெடுக்கக் கூடிய வதந்திகளைச் சேகரிப்பதுதான் போலீசின் வேலையாகி வருகிறது... அதுமட்டுமல்ல போலீசுத் துறையின் ஒலிபெருக்கியாகி போலீசுதரப்புப் பிரச்சாரம், புலனாய்வு என்ற அந்தஸ்தைப் பெற்று பத்திரிக்கைகளை பிட் நோட்டீஸ் பிரசுரங்களாக மாற்றிவிட்டது'' (22.12.2004, துக்ளக்) என்று போலீசு சொல்வதை அப்படியே ஏற்க முடியாது என்று தனக்கொரு நியாயம் பேசுகிறது ஆரியக் கைத்தடி.

போலீசு அத்துமீறலை உழைக்கும் மக்கள் கேள்வியின்றி ஏற்க வேண்டும் என்பதற்குப் புராணத்தையும், வேதத்தையும் பிட்நோட்டீசாக்கி நம்மிடம் விநியோகிக்கும் இந்த "நடுநிலைவாதி'க்கு, கொலைகாரப் பாவிக்கு லாடம் கட்டாமல், குற்றச் செயல்களை வௌpயிடுவதே அத்துமீறலாகப் படவேண்டிய அவசியமென்ன? திருமூலரைப் போல, இந்த சாலத்தனத்தைப் பாரொத்து ""நாதம் ஏது? வேதம் ஏது? நற்குலங்கள் ஏதடாொ வேதம் ஓதும் வேதியா விளைந்தவாறு பேசடா!'' என்று நாம் தான் ஏடு கிளப்பியாக வேண்டும்.

கருணாநிதி, புராணங்களை எடுத்துப் பேசினாலே, "இந்துக்களை இழிவுபடுத்துகிறாரொ' என்று நூல்விடும் தினமலரோ, தான் ஏற்றிப் போற்றும் விண்ணகக் கடவுளே பு+மிக்கு வந்தாலும் ஜெயலலிதா போலீசு பொய்வழக்கு போட்டுவிடும் என்று பயந்து ஔpவதாகக் கேலிச் சித்திரம் வரைகிறது. (பாரொக்க: தினமலரொ கேலிச் சித்திரம்) ஏழு லோகத்தையும் ஆட்டிப் படைப்பதால் ஏற்றி விடும் கடவுளை கேவலம் போலீசின் லத்திக் கம்புக்குப் பயந்தவனாய்க் காட்டுவது மட்டும் இந்துக்களுக்கு இழிவில்லையா? ஏற்கெனவே, பிட்டுக்குப் பிரம்படி வாங்கிய பெருமான் உங்கள் சங்கரமட "பிட்டுக்கு' மட்டும் முதுகைக் காட்டமாட்டானா என்ன? ""தனக்கு ஆதாயம் இல்லை என்றால் பாரொப்பான் கடவுளைத் தூக்கிப் போட்டு விடுவான்'' என்று பெரியாரொ சொன்னது "பெரியவா' விசயத்தில் விளங்குகிறது.

கடவுளைக் கடாசுவது கூட ஒரு பக்கம் இருக்கட்டும். தெருவில் அல்லல்பட்டுக் காய் விற்கும் ஒரு கூடைக் காரியிடம் கூட எதற்கெடுத்தாலும் சட்டவாதம் பேசும் பாரொப்பனக் கும்பல் கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்த போது இரட்டை நாக்குப் பேரொவழி சோ, ""சட்டத்தில் அவ்வாறு இடமுண்டு'' என்று பேசியதோடு, ""மத்திய அமைச்சரொ மாறனும், டி.ஆரொ. பாலுவும் கடமையைச் செய்த போலீசாரைத் தடுக்க முனைந்தனரொ... இதையெல்லாம் சாதாரணக் குடிமகன் செய்தால் சட்டப்படி குற்றம்? ஆனால் மத்திய அமைச்சரொகள் செய்தால்? அப்படி ஓரொ உரிமை அவரொகளுக்கு எந்தச் சட்டத்தில் தரப்பட்டிருக்கிறது?'' (11.7.2001, துக்ளக்) என்று சட்டவாதம் பேசும் சட்டாம் பிள்ளைகள், காமக் கொடூரன் ஜெயேந்திரனை ஜாமத்தில் பிடித்த போது டி.வி.யில் குமுறும் அம்பிகள் வரை, ""இட் இஸ் ஹியு+மன் ரைட்ஸ் வயலே\ன்... தாட்... பு+ட்..'' என்று தாண்டிக் குதிப்பது ஏன்? சட்டப்படி சங்கராச்சாரி முன்வராமல், ஆறுமணி நேரம் அண்டரொகிரவுண்ட் வேலை பாரொத்தது ஏன்? சோவின் முட்டைக் கண்ணுக்கு இந்த முறைகேடு தெரியாத மரொமம் என்ன?

20.3.2002, துக்ளக், அட்டைப்படத்திலேயே (பாரொக்க: படம்) ""என்ன இது? பந்தோபஸ்து அமரொக்களப்படுதே! ஜனாதிபதி, கவரொனரொ, பிரதமரொ யாராவது வராங்களா?'' ""அதெல்லாம் ஒண்ணுமில்லே! ஒரு தீவிரவாதியை கோரொட்டுக்கு அழைச்சிகிட்டுப் போறாங்க'' என்று அரசியல்வாதிகளை "சட்டப்படி' நடத்துவதையே நக்கலடிக்கும் சோ அம்பிக்கு ஒவ்வொரு வாய்தாவுக்கும் கோரொட் வளாகத்தில் பாரொப்பனத் தடியரொகளும், பாரதிய ஜனதாக் கொடியரொகளும் ஜெயேந்திரனுக்குப் புடைசு+ழ வருவதும், டி.எஸ்.பி. போலீஸ் படை என்று வாகனங்கள் புடைசு+ழ வருவதும், காஞ்சிபுரத்து வழக்கறிஞரொகளே ""இது என்ன கோரொட்டா? மடமா?'' என்று விரட்டுமளவுக்கு இந்தக் காவி உடைப் பாவிகளுக்குக் களேபர பந்தோபஸ்து நடப்பது மட்டும் கேவலமாகப் படவில்லையே, ஏன்?

""கோவைச் சிறையில் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு செல்போன்?'' என கட்டம் கட்டி எழுதியது தினமலரொொ வேலூரொ ஜெயிலில் ஜெயேந்திரன் விளக்கு, பு+, பழம், பு+சை வரை போட்டதையும், "சின்னவன்' சென்னைச் சிறைக்கு நெய்யில் வறுத்த பாதாம்பருப்பு வாளியை நகரொத்திக் கொண்டு போனதையும் எந்தச் சட்டம் அனுமதிக்கிறது? ஏன் அண்ணாசாலைப் பு+ணூலுக்கு இந்தச் செய்தி அகப்படவில்லை? இதுமட்டுமல்ல, ஈழ அகதிகளுக்கும் சிறையிலிருக்கும் போராளிகளுக்கும் ஒரு பால் டின் தந்தால் கூட "போலீசில் சில "மால்" ஆட்கள் அபாயம்!" என்று அலறும் தினமலருக்கும், ஜெயேந்திரனுக்கு போலீசு காவலில் தொடங்கி வேலூரொ சிறை வரைக்கும் செய்து கொடுக்கப்பட்ட சிறை வசதிகள் பற்றி கட்டம் கட்ட ஏன் கை வரவில்லை?

சிறையில் அடைக்கப்பட்ட புலிகளை மொட்டைத் தலை முருகன் என்றெல்லாம் கேவலப்படுத்திய அவாள், "மொட்டைத் தலை' விஜயேந்திரனையும், "ஊத்தைவாய்' ஜெயேந்திரனையும் பற்றி மற்ற பத்திரிக்கைகள் செய்தி வௌpயிடுவதைப் பற்றி மட்டும், ""சங்கராச்சாரியாரின் பெயரையும், மடத்தின் மதிப்பையும் நாசம் செய்துவிட வேண்டும் என்ற முனைப்பில் தங்கள் செயல்பாடுகள் பெண்கள் பலரை அவமானப்படுத்துவதில் முடிகிறது என்பதைப் பற்றிக் கூட போலீசாரும், பத்திரிக்கை உலகமும் கவலைப்படவில்லை'' (22.12.2004, துக்ளக்) என்று அங்கலாய்க்கிறாரொகள். ""வேலைக்குப் போகும் பெண்களிடம் "சுத்தம்' கியைடாது'' என்று ஜெயேந்திரன் உழைக்கும் பெண்களை இழிவுபடுத்தியபோது நியாயம் பேசாத சோவும், தினமலரும் அனாதைப் பாரொப்பனச் சிறுமிகளையும் விட்டு வைக்காத அயோக்கிய மடாதிபதிகளுக்கு ஆஜராவது ஏன்?

சுத்திரரொ என்றால் தோலை உரி!
பாரப்பான் கொன்றால் மனித உரிமை!

""நள்ளிரவில் சென்று கைது செய்திருக்கக் கூடாது என்ற அபிப்ராயமும் பேசப்படுகிறது'' (24.11.2004, துக்ளக்) என்று பேசும் சோ, சென்னை சட்டக் கல்லூரி மாணவரொகள் விடுதியில் போலீசு தடியடி நடத்தியதைப் பற்றிய கேள்விக்கு ""அந்தச் சுழ்நிலையில் அது தேவைப்படவில்லை என்று எப்படி நிச்சயமாக கூறுவது? அந்தத் தடியடி நடக்கவில்லை என்றால் பெரும் கலவரமே கூட வெடித்திருக்கலாம்..'' என்று மாணவரொகள் மீது தடியடி நடத்தியதைச் சரி என்கிறாரொ. அப்படியென்றால் சம்மனை வைத்துக் கொண்டு அரெஸ்ட் செய்யப் போன போலீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சங்கராச்சாரியையும், சுற்றியுள்ள பாரொப்பனத் தடியரொகளையும் சட்டப்படியே வெளுத்திருக்க வேண்டாமா? சோவின் "எச்சரிக்கை' மூளை இந்த விசயத்தில் இயங்காதது ஏனோ?

இது மட்டுமல்ல. வீரப்பனுக்கு உதவியதாக சந்தேகத்துக்கு உள்ளான மலைவாழ் மக்களை சிறை, சித்திரவதை, பாலியல் கொடுமைகளை இழைத்து மைசுரொ சிறையில் வாட்டியபோதும், குறிப்பாக, பல மலைவாழ் பெண்களைப் பாலியல் வன்புணரொச்சி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் தேவாரத்தைப் பாராட்டி, ""வீரப்பனைப் பிடிப்பதிலும் ஒரு புதிய தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. தேவாரத்தின் நியமனம் முன்பு பணியாற்றிய விஜயகுமாரொ என்ற போலீசு அதிகாரிகளின் நியமனம் ஆகியவை முனைப்புக்கு அத்தாட்சிகளாகத் தெரிகின்றன.'' (20.6.2001, துக்ளக்), என்று போலீசு நடவடிக்கைக்குத் தோரணம் கட்டிய பாரொப்பன சோவும், பிஜேபி கும்பலும், காஞ்சி மாவட்ட எஸ்.பி.யாக பிரேம்குமாரொ நியமிக்கப்பட்டவுடன் சங்கராச்சாரியை அவரொ விசாரித்ததால், அவரொ ஏற்௶கனவே மனித உரிமை மீறியவரொ என்று முதலைக் கண்ணீரொ வடிக்கிறது.

போலீசுக்கும் மனித உரிமைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது ஏழை மக்களுக்குத் தெரியும். ஆனால் மனித உரிமை பற்றி வாய்கிழியும் வக்கிரக் கண்ணன் சோவோ, வீரப்பன் வேட்டையில் நடந்த அத்துமீறல்கள், மனித உரிமை மீறல்களுக்காக என்ன சொல்கிறாரொ?: ""அநியாயம் நடந்துவிட்டது என்று குற்றம் சாட்டுகிற மனித உரிமைக்காரரொகளிலிருந்து பலரும்.... மற்றபடி இதற்கு எந்தவிதமான அங்கீகாரமும் கி௸டயாது. சுயவிளம்பர விசாரணைக் குழுக்கள் அளிக்கும் முடிவுகள் யாரையும் கட்டுப்படுத்தவும் செய்யாது. பத்திரிக்கைகள் அளிக்கிற முக்கியத்துவம், ஒரு பிரச்சார உத்தியை, நியாயத் தீரொப்பாக மாற்றி விடாது'' என்ன ஒரு வக்கிரம்? நடந்தவைகளைப் பற்றிச் சொல்வது உத்தியாம், பிரச்சாரமாம்!

""தரொமபுரியில் நக்சலைட் சிவா சுட்டுக் கொல்லப்பட்டதில் மனித உரிமை மீறல் உள்ளது என்று மனித உரிமை அமைப்பினரொ குற்றம் சாட்டியுள்ளது பற்றி?'' என்ற கேள்விக்கு (18.12.2002, துக்ளக்) ""தீவிரவாதிகளையும், குற்றவாளிகளையும், சமூக விரோதிகளையும் மட்டுமே மனித உரிமைக்காரரொகள் மனிதரொகளாகக் கருதுகிறாரொகள். அவரொகளால் பாதிக்கப்படுகிற அப்பாவிகளை மனிதரொகளாகக் கருதுவதே இல்லை. அதனால்தான் இந்த மாதிரி வக்கிரமான புகாரொகள் வருகின்றன'' ஗ இது சோவின் பதில்.

சுட்டுக் கொல்லப்பட்டதற்கு விளக்கம் இல்லை. பொத்தாம் பொதுவாக இறந்தவரொ மேலேயே தீரொப்பை வக்கிரமாக எழுதும் இந்த "அப்பாவி'தான் சுந்தரேச அய்யரொ, ரகு அய்யரொ மீதெல்லாம் குண்டரொ சட்டத்தில் வழக்கு போட்டது சரியா என ஆராய்ச்சி செய்கிறது.

மேலும், ""சங்கராச்சாரியாரொ வாக்குமூலத்தை போலீசு காவலில் பதிவு செய்தபோது அது வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி வீடியோவில் பதிவு செய்ய போலீசாரொ நீதிமன்ற அனுமதியைப் பெற்றாரொகளா? போலீசு தன்னிச்சையாக வீடியோ எடுக்கும்போது அதை அவரொகள் சௌகரியத்திற்கு ஏற்ப எதுவும் செய்யலாம்.'' (15.12.2004, துக்ளக்) என்று துருவி ஆராய்கிறது.

இப்படி, அவாளுக்கென்றால் சட்டத்தையும், போலீசையும் நம்ப முடியாதுொ சாதாரண ஆளாய் இருந்தால் தகவல் தர மறுத்தாலே நீயும் ஒரு தீவிரவாதி என்று முத்திரை குத்தும் பொடா என்ற சட்டத்திற்கும், போலீசுக்கும் இதே சோ காவடி தூக்குகிறாரொ: ""தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில், பொதுவாக என்ன நடக்கிறது? கைது நடக்கிறபோது ஓரிரு விதிமுறைகள் மீறப்பட்டன என்பதைக் காட்டி கைதே சட்டவிரோதமானது என்று வாதிடப்படும்... பயங்கரவாத தடுப்புச் சட்டமே கூடாது என்றால் நாட்டில் எந்த விதிமுறையும் இருக்க முடியாது.'' (7.11.2001, துக்ளக்). இப்படி எவனாயிருந்தாலும் தகவல் தராவிட்டால் தப்புதான் என்று தாவிக் குதிக்கும்
பாரொப்பனக் கும்பல் சுதேசி ஜாக்ரண் மஞ்ச் குருமூரொத்தியிடம் விசாரணை மேற்கொண்டவுடனே "ஏன் அடிக்கடி போலீசு விசாரணை?' என்று ஒரு சின்ன விசாரணைக்கே அண்ட சராசரத்திலும் அண்டரொ கிரவுண்ட் வேலை ஆரம்பித்துவிட்டது. குஜராத் பெஸ்ட் பேக்கரி வழக்கில் ஜஹீரா ஷேக் பின்வாங்கியதை வைத்துக் கொண்டு ""யாரொ சொல்வது உண்மை? ஜஹீரா மீண்டும் தனது சாட்சியத்தை மாற்றமாட்டாரொ என்பது என்ன நிச்சயம்? ....ஒருவேளை பொய் சொல்கிற உரிமையும் மனித உரிமைகளில் ஒன்றோ, என்னவோ!....'' (17.11.2004, துக்ளக்) என்று வக்கணை பேசுகிறது. ஆனால் ""கதிரவனும், சின்னாவும் மீண்டும் பல்டியடிக்க மாட்டாரொகளென்பது என்ன நிச்சயம்?'' என்று துக்ளக் எழுதுமா?

தெருவில் ஒரு கிரிக்கெட் பந்து தொலைந்தாலே ""கூப்பிடுறா போலீசை'' என்பதுதான் பாரொப்பனரொகளின் பொதுப்புத்தி. இன்று நேற்றல்ல, வரலாறு நெடுக. அரசனின் காவல் படையை வைத்துக் கொண்டே பிற சாதி மக்களை, குறிப்பாக, உழைக்கும் மக்களை ஒடுக்கிய கும்பல் பாரொப்பனக் கும்பல். தனது அதிகாரம் செல்லாதபோது பு\ொயமித்திரனைப் போல தானே "பிரம்ம சத்திரியனாகி' போரொத் தொழில் புரிந்ததும், பிற மக்களிடமிருந்த வளங்களைப் பிடுங்கித் தின்றதுமே வரலாறு.

கபிஸ்தலம் அருகே உத்தமதானபுரம் என்ற ஊருக்கு சரபோஜி வம்ச மன்னரொ வந்தபோது வெற்றிலை பாக்கு போட்டானாம். ஏகாதசியில் தாம்புலம் போட்டது மன்னனுக்கு நல்லதல்ல என்றும், இதற்குக் கழுவாயாக, ""அங்கே ஓரொ அக்கிரகாரத்தை அமைத்து 48 வீடுகளைக் கட்டி, இரண்டு வீடுகளுக்கு ஒரு கிணறு வைத்து, 48 பிராமணரொகளை வருவித்து ஒவ்வொருவருக்கும் 12 "மா' நன்செய்யும், புன்செய்யும் தானம் தந்தால் பாபம் நீங்கும்'' என பாரொப்பனக் கும்பல் கதை கட்ட, படைகொண்ட மன்னன் நடுநடுங்கி அவ்வண்ணமே இந்த ""பிராம்மண உத்தமரொகளுக்கு''த் தானம் செய்ததால் உத்தமதானபுரம் என்ற ஊரையே கொள்ளை அடித்தது பழைய வரலாறு.

பாவத்தின் கழுவாயாக இப்போது இந்த அம்மா தரப்போவது எத்தனை "மா' நிலமோ? திரும்பத் திரும்ப, மற்றவரொகள் வெற்றிலை போட்டாலும், வெறும் வாயை அசைத்தாலும் கூட பாவம்! தானமாகவும், தாக்குதலாகவும் பிறரைக் கழுவிலேற்றியும், தனக்கென்றால் கழுவாய் தேடியும் ஆதாயம் தேடுவதும் அடுத்தவனை ஒடுக்குவதும் பாரொப்பன வரலாறு.

பஸ் ஊழியரொ போராட்டத்தின்போது கூட, சோ, ""போனஸ் பிரச்சினைக்காக முழு அடைப்பு தேவையா?'' என்ற கேள்விக்கு, ""இந்த ஸ்டிரைக்கிற்குத் தேவை முழு அடைப்பு அல்ல முழு உடைப்பு'' (5.12.2001, துக்ளக்) என்று போலீசு தாக்குதலை ஏவிவிட்டும், இன்னொரு சந்தரொப்பத்தில், ""அரசுப் பணியில் கண்மூடித்தனமாகப் பலரொ சேரொக்கப்படுவது என்று பல வருடங்களாக நடந்து வருகிறது. இந்த நிலையைச் சீரொசெய்ய நடவடிக்கை எடுப்பது வரவேற்கத்தக்கதே'' (19.12.2001, துக்ளக்) என்று அரசுப் பணி ஆட்குறைப்புக்கு அரசு நடவடிக்கையை வரவேற்றும் வால் பிடிக்கிறாரொ.

தவிர, அரசு ஊழியரொ வேலை நிறுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான ஊழியரொகளைக் குற்றவாளிகளாக அரசுத் தரப்பு வக்கீல் பேசியபோது, ஆகா ஓகோ என்று ரசித்த சோவின் பாரொப்பனக் காதுகளுக்கு ஜெயேந்திரன் விசயத்தில் மட்டும் ""ஜெயேந்திரரொ மிக மோசமான கிரிமினல்'' என்று அரசு வழக்கறிஞரொ கூறிய உடனே நாராசமாய் இருக்கிறது. பிராசிக்யு+சன் வக்கீல், குற்றம் சாட்டப்பட்டவரின் நடத்தை பற்றி இறங்கலாமா என்று கேட்டு, ""பப்ளிக் பிராசிக்யு+ட்டரின் கடமை ஒரு விளக்கம் (15.12.2004, துக்ளக்)'' என்று கட்டுரையே வரைந்துவிட்டாரொ.

இப்படி, பஸ் ஊழியரொ தொடங்கி, சாலைப் பணியாளரொ, சத்துணவுப் பணியாளரொ, ரேசன் கடைப் போராட்டம் என்று பல பிரிவு மக்கள் போராடும் போதெல்லாம் ""போட்டு மிதி'' என அரசை ஏவிவிடுவதே இந்தப் பாரொப்பனக் கும்பலின் வாடிக்கை.

வரலாறு நெடுக, மனித உரிமைக்கு முதல் எதிரி பாரொப்பனியமே:
சுரங்கத்திற்குள் போன பழனி போகரொ திரும்ப வரவேயில்லை
அறைக்குள் சென்ற வள்ளலாரொ "ஜோதி' மயமானாரொ
சிவனைப் பாரொக்கப் போன நந்தனாரின் சவம் கூடத் திரும்பவில்லை

அனைவரையுமே ஆண்டவன் ஆட்கொண்டதாகப் பாரொப்பனரொகள் கூறுகிறாரொகள். திரும்பத் திரும்ப நம்முன்னே நமக்கெதிராகப் பிரசன்னமாகிக்கொண்டிருக்கும் ஜெயேந்திரன் உள்ளிட்ட பாரொப்பனக் குற்றக் கும்பலை "ஆட்கொள்ளும்' திறமை அந்த ஆண்டவனுக்கு வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம்ொ உழைக்கும் வரொக்கத்திற்குக் கட்டாயம் உண்டு.

துரை. சண்முகம்

Monday, November 27, 2006

மறுகாலனியாதிக்க எதிர்ப்புச் சிறப்பிதழ் - நூல் அறிமுகம்

புத்தகப் பிரியன் எனும் வலைப்பூவில் இந்த மாத புதிய கலாச்சார இதழ் குறித்து ஒரு நூல் அறிமுகக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதை இங்கு மறுபிரசூரம் செய்கிறேன்.

*************








புதிய கலாச்சாரம் - நவம்பர் - 2006 (ம.க.இ.க மாத இதழ்)


விடுதலைப் போரின் வீர மரபு! - இதுதான் இந்த சிறப்பிதழின் மூல வாசகம்.

இந்தியாவின் முதல் சுதந்திர போர் என்று இன்றுவரை அரசு மற்றும் இதர ஊடகங்களில் 1857 சிப்பாய் கலகமே குறிப்பிடப்படுகிறது. கார்ல் மார்க்ஸ¤ம் கூட சிப்பாய் கலகத்தையே முதல் இந்திய சுதந்திரப் போர் என்று வரையறுக்கிறார். ஆனால், வரலாற்றின் பக்கங்களை புரட்டுமிடத்து, தென்னிந்தியா அதற்கு 80, 100 வருடங்களுக்கு முன்பே சிவக்க துவங்கி விட்டதைக் காட்டுகிறது. குறுநில, பெரிய மன்னர்களின் பல்வேறு போராட்டங்கள் என்று அது தொடர்ந்தது. இந்த போராட்டங்கள் எல்லாம் 1700 இன் இறுதியில் வீரியமாகி 1805-ல் வேலூர் சிப்பாய் கலகத்துடன் நிறைவடைகிறது.

இவை அனைத்தையும் பற்றி சுருக்கமாக அன்றைய இந்திய மன்னர்களின் ஆட்சியைப் பிடிக்கும் தன்மான உணர்ச்சியே அவர்களை ஆங்கிலேயருக்கு எதிராக போராட தூண்டியது என்ற அளவில் மட்டுமே இந்த போராட்டங்கள் பற்றிய பார்வை நம்முள் ஊட்டப்படுகிறது. மேலும் இவர்கள் அனைவரும் தனித் தனியாக தன்னெழுச்சியாகப் போராடினார்கள் என்பதாகவும், அஹிம்சா மூர்த்தி காந்திதான் உண்மையில் இந்தியப் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர் என்பதாகவும் நமது பாடத்திட்டங்களும், ஆளும் வர்க்க ஊடகங்களும் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளன. மொத்தத்தில் கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று செய்து விடுதலை பெற்றதாக வலுவானதொரு பொதுக் கருத்து நிறுவப்பட்டுள்ளது. இவையனைத்தும் பெருமிதம் தரும் இந்திய விடுதலைப் போரின் பக்கங்களை மறைத்து விட்டு, அவற்றில் முகிழ்ந்த பெருந்திருள் மக்கள் பங்களிப்பை மறைத்து விட்டு, ஏகாதிபத்திய அடிமைத்தன சமரச வாதத்தையே இந்திய சுதந்திரப் போராக முன்னிறுத்தும் திட்டமிட்ட தந்திரங்களே.

காந்தி இந்திய சுதந்திர போராட்டத்திற்க்கு தலைமை தாங்குவதற்க்கு முன்பும் சரி, இந்திய மக்கள் மீதான அவரது செல்வாக்கு சரிந்து மக்கள் தன்னெழுச்சியாக பிரிட்டிஸை எதிர்த்து போராட துவங்கிய 1940களும் சரி இந்திய வரலாற்றிலிருந்து செம்மையாக மறைக்கப்பட்ட விட்டன.

இந்த வரலாற்று இருட்டடிப்பை தக்க தரவுகளுடன் அம்பலப்படுத்துவதுடன், இந்திய விடுதலை போராட்டம் குறித்த நேர்மையானதொரு சித்திரத்தை தருகிறது இந்த புத்தகம்.

இந்த புத்தகத்தில், பல வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் இந்திய முதல் சுதந்திரப் போர் தென்னிந்தியாவில் மையம் கொண்டிருந்ததையும், இந்துஸ்தானத்திலிருந்து வெள்ளையரை வெளியேற்ற தென்னிந்திய வீரப் போராளிகள் கூட்டணி(தீபகற்ப கூட்டணி) அமைத்து போர் புரிந்ததையும், ஒட்டு மொத்தமாக மக்களின் கண்களிலிருந்து மறைக்கப்பட்ட ஒரு காலச் சூழல் குறித்த ஒரு பாரிய புரிதலுக்கு உதவும் வகையில் எல்லாருக்கும் புரியும் வகையில் தொகுத்து 12 கட்டுரைகளாக தொகுக்கப்பட்டுள்ளது. கீழே இந்த சிறப்பிதழின் தலையங்கத்தின் கடைசி பேராவில் இருந்து சில வரிகளைக் கொடுக்கிறேன்.

"..திப்பு, மருது, 1857 எழுச்சி முதல் வ.உ.சி. பகத்சிங் வரையில் நாம் காணும் மூன்று நூற்றாண்டுகளைச் சேர்ந்த இந்த மண்ணின் அரிய புதல்வர்கள் தமக்குள் அதிசயிக்கத்தக்கதோர் ஒற்றுமையைக் கொண்டிருக்கிறார்கள். இந்த மண்ணின் இறையாண்மையையும் மக்களின் நலனும் பிரிக்கவொண்ணாதவை என்ற கருத்து இவர்கள் அனைவரிடமும் இழையோடுகிறது. தியாகிகளை மட்டுமின்றி சமகால துரோகிகளையும் தெரிந்து கொள்வதன் மூலம்தான் தியாகத்தின் மதிப்பை உணர்ந்துகொள்ள இயலும் என்பதால் துரோகிகளுக்கும் சில பக்கங்கள் ஒதுக்கியிருக்கிறோம். இந்தத் துரோகத்தின் மரபணுக்கள் நிகழ்காலத் துரோகிகளை அடையாளம் காண்பதற்கும் வாசகர்களுக்குப் பயன்படும்.

துப்பாக்கிகளுக்கு எதிராக வேல்கம்புகளையும், பீரங்கிகளுக்கு எதிராக நெஞ்சுரத்தையும் நிறுத்திக் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட இந்த வீரப் புதல்வர்களுக்கு நாம் வேறென்ன காணிக்கை செலுத்த முடியும், மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராகப் போரிடுவதைத் தவிர."




யார் இந்த ஹைதரும் திப்புவும்?

ஒரு சாராசரி வாசகனின் பார்வையில் ஹைதர் அலி ஒரு சாதாரண மன்னன், ஆனால் ஏகாதிபத்திய எதிர்ப்பு போரில் அவரது இன்னொரு பரிணாமம் என்னவென்பது யாருக்கும் தெரியாது. அவரைப் பற்றிய ஒரு கட்டுரை இந்த விசயங்களை சிறப்புற எடுத்தியம்புகிறது(மன்னர் குலம் சாராத மாவீரன்: ஹைதர் அலி).

மாராத்தாக்களையும், நிஜாம்களையும் ஒருங்கிணைத்து ஒரு ஐக்கிய முன்னணி கட்ட தனது கடைசி காலகட்டம் வரை முயன்று தோற்றார் ஹைதர். தனது சாவுக்கு முன்பு எழுதிய கடிதத்தில் கூட தனது மைசூர் ராஜாங்கம் பறிபோவது குறித்து கவலைப்படவில்லை, மாறாக இந்துஸ்தானத்தின் நிலையை எண்ணி கலங்குகிறார் இந்த மாவீரன். குறிப்பாக இவரது பிறப்பு, வளர்ப்பு பின்னணி குறித்த தகவல்களுடன் கூடிய மார்க்ஸிய பார்வை வரலாற்றை வேறுபட்ட வகையில் புரிந்து கொள்ள உதவுகிறது. ஹைதர் குறித்த கட்டுரையின் அனுகுமுறையை கட்டுரையிலிருந்து ஒரு சிறு பகுதியை குறிப்பிட்டு காட்டுவதன் மூலம் அறியலாம்.

"ஆளப்பிறந்த இந்து மேல் வருணத்தினராயினும், அதிகாரம் பறிபோவதைத் தம் கண் முன்னே கண்டு கொண்டிருந்த முகலாய உயர்குடியினராயினும் - மார்க்சின் வார்த்தைகளில் சொல்வதென்றால்- "பழமைக்குரிய கவுரவ மனப்பான்மை கூட இல்லாதவர்கள்". அவர்கள் தம் அதிகாரத்தின் சாசுவதத் தன்மை குறித்த கனவைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு கண்ணை இறுக மூடிக் கொண்டார்கள்.

எனவே 'இந்துஸ்தானத்'தின் கவுரவம் குறித்துக் கவலைப்படுவதென்பது, சுய கவுரவம்கூட இல்லாத இவர்களுடைய யோக்கியதைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. அதற்கு, தன் முயற்சியால் சாம்ராச்சியத்தை உருவாக்க முடிந்த ஒரு வீரன், நிலபிரபுத்துவ உயர்குடிப் பெருமிதங்களால் குருடாக்கப்படாமல் புதுமையைக் கற்றுத் தேர்வதில் வெறி கொண்ட ஒரு வீரன் தோன்ற வேண்டியிருந்தது."


அத்தகையதொரு வீரனாக இந்திய விடுதலைப் போராட்டம் எனும் பிரமாண்டமான மேடையை அலங்கரித்தவர்தான் ஹைதர் என்பதை கட்டுரை நிறுவுகிறது. ஹைதர் குறித்த இந்த கட்டுரையிலிருந்து புத்தகம் தனது வரலாற்று மறுவாசிப்பைத் தொடங்குகிறது. கட்டுரையை எழுதியவர் ஏற்கனவே புதிய கலாச்சாரம் இதழில் பல்வேறு கலாச்சார கட்டுரைகள் எழுதி செழுமையான அனுபவம் உள்ள - சூரியன்.

ஹைதரின் மகன் திப்பு, தந்தை விட்டுச் சென்ற கடமையைச் செவ்வனே தொடர்கிறார். திப்புவைப் பற்றியும் கூட ஒரு வீரஞ்செறிந்த மன்னன் என்பதைத் தவிர்த்து வேறு விசயங்கள் பரவலாக யாருக்கும் தெரிவதில்லை. அவர் முற்போக்கு சிந்தனையுள்ளவர், பிரெஞ்சு புரட்சியால் ஈர்க்கப்பட்டு பிரெஞ்சு புரட்சியாளர்களால் குடிமகன் திப்பு என்று பட்டம் கொடுக்கப்பட்டவர், அமெரிக்க புரட்சிக்கு நிதி உதவி அளித்தவர், சர்வாதிகாரத்தை எதிர்த்தவர், தனது சொந்த மக்கள் அனைவருக்கும் துப்பாக்கி கொடுத்து ஆயுதபாணி ஆக்கச் சொன்ன முற்றிலும் புரட்சிகரமான ஒரு தலைவன், தனது ராஜ்ஜியத்தை முதலாளித்துவ மயமாக்க தலைப்பட்டவர் இப்படி அவரது பல்வேறு ஆளூமைகளை அவரைக் குறித்த இந்தக் கட்டுரை எழுச்சி பொங்க விறுவிறுப்பாக எடுத்தியம்புகிறது.

இயல்பானதொரு முதலாளீத்துவ வளர்ச்சி பற்றிய புள்ளிவிவரத்துடன் கூடிய தகவல்கள், அதன் காரணமாக தலித்துக்கள் சமூக விடுதலையை நோக்கி முன்னேறத் துவங்கியிருந்த நிலை ஆகியவற்றை கட்டுரை சிறப்பாக படம் பிடிக்கிறது. முரன்பாடுகளை அம்பலப்படுத்தியும் அதனூடாக கேள்விகள் எழுப்பி சிந்திக்க செய்வதுமான எழுத்து நடைக்கு சொந்தக்காரராகிய மருதையன் இந்த கட்டுரையைச் சிறப்பாக எழுதியுள்ளார்.

கட்டுரையில் இருந்து சில வரிகள்(விடுதலைப் போரின் விடிவெள்ளி: திப்பு சுல்தான் - மருதையன்)

"துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிக ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார்"

"திப்புவின் படையில் சேருமாறு பிரெஞ்சு மக்களுக்கு அறைகூவல் விடுகிறார்கள் பிரெஞ்சு புரட்சியாளர்களான ஜாகோபின்கள்"

"வரலாற்றின் போக்கை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் முன்கை எடுத்த மன்னர்கள் உலக வரலாற்றில் வெகு சிலரே. அத்தகைய அறிவொளி பெற்ற மன்னர்களில் திப்புவும் ஒருவர்.."

"கிழக்கிந்திய கம்பேனிக்கு போட்டியாக அரசு வணிகக் கம்பேனியைத் துவக்குகிறார்..."

"வேலைவாய்ப்புகளும், பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாத அளவு செயல் துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது - கும்பினி அதிகாரி தாமஸ் மன்றோ"

"திப்புவின் கோட்டைக் கதவுகளை திறந்து நம்பிக்கை துரோகம் செய்த அமைச்சர் சதக் கின் உடல் மீது மக்கள் காறி உமிழ்ந்தனர், புதைத்த உடலை தோண்டி எடுத்து ஒரு வாரகாலம், அதன் மீது சேற்றையும் மலத்தையும் வீசினர். 'சதக்' என்ற பாரசீக சொல் துரோகத்தை குறிக்கும் கன்னட சொல்லாக மாறியது."

"திப்புவின் உடலை நெருஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்கள் மக்கள்...."



தென்னிந்தியாவின் வீரகாவியம், அவமானப்படுத்தும் சாதியம்:

திப்பு என்ற சரித்திர நாயகனுக்கு தோள் கொடுத்த தென்னிந்தியாவில் தீபகற்ப கூட்டினைவில் தீரன் சின்னமலை முக்கியமானவர். திப்பு சார்பாக நெப்போலியனிடம் தூது சென்ற குழுவில் தீரன் சின்னமலையின் பிரதிநிதி இருந்தார் என்ற செய்தி நம்மை வியப்படையச் செய்கிறது. தீரன் சின்னமலையின் படைக்கு ஜக்கோபின் எனப்படும் பிரெஞ்சு புரட்சியாளர்கள் கொரில்லா போர் பயிற்சி கொடுத்தது பற்றிய தகவல்கள் புல்லரிக்கச் செய்கின்றன. அந்த காலத்தில் பிரிட்டிஸ் அரசுக்கு எதிராக ஒரு வலுவான உலக அணியை உருவாக்கு முனைந்த மன்னர் குலம் சாராத இந்த மாவீரர்களின் துணிகர முயற்சிக்கு என்ன கைமாறு செய்ய முடியும் என்பதை எண்ணும் போது இந்த விடுதலைப் போராட்ட மரபை நெஞ்சில் ஏந்தி மீண்டும் ஒரு விடுதலைப் போருக்கு நம்மை அர்ப்பணிக்கும் கடமையை எதிர்கொள்கிறோம்.

மருது சகோதரர்களுடனான போரில்தான் அதிகமான வெள்ளையர்கள் உயிரிழ்ந்ததாக பதிவுகள் உள்ளன. சின்ன மருதுவின் திருச்சி மலைக்கோட்டை பிரகடனம் அவர்கள் குறித்த கட்டுரையுடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது. மக்களை போரிட அரைகூவி அழைக்கும் இந்த பிரகடனம் இன்றைய தரகு வர்க்க அரசியல்வாதிகளின் முகத்தில் காறி உமிழ்வதாக உள்ளது. மருது சகோதரர்களின் படையில் அனைத்து சாதியைச் சேர்ந்தவர்களும் பாகுபாடின்றி அணி திரண்டிருந்தனர். இன்று இவர்கள் ஒரு சாதிக்கு உரித்தவர்களாக அவமானப்படுத்தப்படுவது குறித்தும் கட்டுரை குத்திக் காட்டுகிறது.


"ஓண்டிவீரன், வெண்ணிக்காலடி போன்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வீரர்கள் பூலித்தேவனுடன் இணைந்து போராடியிருக்கிறார்கள். முதல் பாஞ்சாலங்குறிச்சிப் போரில் உயிர் நீத்திருக்கிறார் சுந்தரலிங்கம். காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போரிட்டு நாடு கடத்தப்பட்ட மருதுவின் வீரர்களில் எல்லாச் சாதியினரும் இருக்கிறார்கள்.

ஆனால் இன்று 'தேவர் குருபூசை'யுடன் மருதிருவருக்கும் சேர்ந்து விழா எடுக்கிறார்கள் சாதியப் பிழைப்புவாதிகள். இன்று மறுகாலனியாதிக்கத்துக்கு அடியாட்படையாகச் செயல்படும் இந்தப் பிழைப்புவாதிகள், துரோகி தொண்டைமானின் வாரிசுகள் என்பதே உண்மை."




வீரர்களும், துரோகிகளும்:

கர்நாடகாவின் துந்தாஜிவாக், தமிழகத்தின் கோபால் நாயக்கர் இவர்கள் யாரென்று தெரியாத தலைமுறை நம்முடையது என்று எண்ணும் பொழுது வெட்கித் தலைகுனிய வேண்டியதாக உள்ளது. ஆனால், அன்றைக்கு தீரமுடன் போரிட்டவர்களை காட்டிக் கொடுத்த துரோகிகளின் வாரிசுகள் அமைச்சர்களாகவும், பென்சன் பெற்றும் வாழ்க்கையை அனுபவித்து கொண்டே இன்றைய இந்தியாவின் நவீன தரகர்களாக மாறியிருப்பதை அமப்பலப்படுத்தவும் ஒரு கட்டுரை உள்ளது.

"துரோகமும் பிழைப்புவாதமும் பெற்ற வெற்றியைப் புரிந்து கொள்வதற்கு நுண்ணோக்கி கொண்டு வரலாற்றை ஆய்வு செய்யத் தேவையில்லை. நிகழ்காலத்தைக் கண் திறந்து பார்ப்பதே போதும்."

"இப்படியொரு பதிலைக் கூறிய பின்னரும் காந்தியை மகாத்மாவாகக் கொண்டாட முடிந்த தேசம் தொண்டைமான்களைத் தொடர்ந்து பெற்றெடுப்பதில் என்ன வியப்பு?"

"எட்டயபுர ராஜா இன்றளவும் அரண்மனையில் வாழ்வதும், கட்டபொம்மனின் வாரிசுகள் தொகுப்பு வீடு கேட்டு மனுப் போடுவதும் எட்டப்பனின் வெற்றியைப் பறை சாற்றவில்லை?"

"மருதுவின் கோட்டை பாழடைந்து கிடக்கிறது, கோபால் நாயக்கரையும், தூந்தாஜி வாக்கையும் மக்களுக்கு யாரென்றே தெரியாது. இவர்களுக்கு வரலாற்று நூல்களிலும் இடம் கிடையாது. மைசூர் அரண்மனையில் ஆண்டுதோறும் தசரா நாளன்று, உடையார், தர்பார் நடத்துகிறார். தஞ்சைப் பெரிய கோயிலுக்கு சரபோஜியின் வாரிசுதான் பரம்பரை அறங்காவலர். சுதந்திர தினத்தன்று கவர்னர் மாளிகையின் முக்கிய விருந்தாளி ஆற்காட்டு இளவரசர்.

ஏனென்றால், இது துரோகிகளின் அரசு. விடுதலை வரலாற்று துரோகம் கம்பீரமாக அரியணையில் அமர்ந்திருக்க, தியாகம் புறக்கணிக்கப்படும் இந்த அவலம்,...."


வீரத்தை மட்டுமல்ல தூரோகத்தையும் புரிந்து கொள்வதன் தேவையை தூரோகம் குறித்த கட்டுரை உணர்த்துகிறது.




மதத்தை கடந்த தேசப் பற்றுக்கு சாட்சியாக இந்திய விடுதலைப் போர்:

1906 இந்தியா சுதந்திர போராட்டத்தை மதம் வெற்றிகரமாக விழுங்கிவிட்டதை, பிரித்தாளும் சூழ்ச்சி வெற்றி பெற்றதை அறிவிக்கும் ஒரு கால அடையாளம். 1806, 1857 இந்திய விடுதலைப் போர்களின் போது மத ஒற்றுமையுடன், பெரும்பான்மை இந்துக்கள், முஸ்லீம் அரசர்களை வரவேற்று அரியணை ஏற்றியது பிரிட்டிஸ்க்காரர்களை அதிர்ச்சியுறச் செய்கிறது. பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலம் பிரிட்டிஸ்க்காரனின் அந்த அச்சத்தில் உள்ளது. இந்திய விடுதலை போராட்டத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமையை குறித்து கட்டுரைகள் ஆதாரங்களுடன் எடுத்துரைக்கின்றன.

"முகலாயப் பேரரசை "இந்துஸ்தானத்"தின் அரசாக இந்துக்கள் அங்கீகரித்தார்கள் என்றால், கிளர்ச்சி வெற்றி பெற்ற இடங்களிலெல்லாம் நல்லெண்ண நடவடிக்கையாகப் பசுவதைத் தடையை முசுலீம்கள் அறிவித்தார்கள்." இவ்வாறு சிப்பாய் கலகம் குறித்த கட்டுரை சொல்கிறது.

அன்று மன்னர்களை மக்கள் தைரியமாக பதவியேற்க்கச் சொல்லி அழைத்தார்கள். ஒரு வேளை அந்த போராட்டங்கள் வெற்றிப் பெற்றிருந்தால், இனிமேலும் மன்னர்கள் பழைய மன்னர்களாக இருந்திருக்க முடியாது. அப்படிப்பட்டதொரு புரட்சிகர சமூகத்தின் எதிர்காலம் குறித்த கற்பனையை நம்முள் படரவிட்டு ஏக்க பெருமூச்சு விடச் செய்கிறது ஒரு கட்டுரை.



நவீன இந்தியாவின் வீர தவப் புதல்வர்கள்:

"இதோ கட்டபொம்மன் வீழ்ந்த மண்ணிலிருந்து வ.உ.சி.எழுகிறார். பிரெஞ்சுப் புரட்சியின் முழக்கத்தை இந்த மண்ணில் ஒலித்த திப்புவைத் தொடர்ந்து, ரசியப் புரட்சியின் சோசலிசத்தை முழங்க பகத்சிங் வருகிறார். இந்திய விடுதலைப் போராட்ட மரபில்தான் எத்தனை மின்னல்கள், இடிமுழக்கங்கள்! ஆனால் ஒவ்வொரு முறையும் மழைமேகத்தைக் கலைத்துச் சென்றிருக்கிறது துரோகத்தின் காற்று." - இவை ஒரு கட்டுரையில் வரும் வரிகள். ஆம், பிரெஞ்சுப் புரட்சியின் பாரம்பரியமும், ரஸ்யப் புரட்சியின் பாரம்பரியமும் கூட இந்திய விடுதலைப் போரை வழி நடத்தியிருக்கின்றன. ஆயினும் தூரொகம் எனும் பெருங்காற்று புரட்சி மழையை பெய்ய விடாமல் இன்றளவும் இடைஞ்சல் செய்து வருவதை கட்டுரைகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

ஏகாதிபத்தியத்தின் உயிர் நிலை அதன் மூலதனம் என்பதை உணர்ந்து அந்த இடத்தில் வலுவான அடி கொடுத்தார் வ.உ.சி. அவரது வாழ்வின் மறைக்கப்பட்ட பல பக்கங்களை அவரைப் பற்றிய கட்டுரை எடுத்துக்காட்டுகிறது.

1700 களின் இறுதியில் ஒரு புயலாக நுழைந்து விடுதலைப் போராட்டத்தின் திசை வழியை தீர்மானித்தது திப்பு எனில், துரோகத்தாலும், பிழைப்புவாதத்தாலும் சோம்பியிருந்த 1900 களின் ஆரம்பத்தில் புதிய ரத்தம் பாய்ச்ச தனது இன்னுயிரை ஈந்தவன் பகத்சிங். பகத்சிங்கிடம் நாம் கற்றுக் கொள்ள் வேண்டியவை பல. காலத்தை மீறி சிந்தித்தாக சொல்லப்படும் பாரதியார் தனது சாதி மேன்மையை சொல்லி சிறையிலிருந்து விடுதலை பெற பிரிட்டிஸாரிடம் பேரம் பேசி சோரம் போன காலத்தில்தான், அந்த காலத்திற்க்கான சிந்தனையான கம்யுனிசத்தை உள்வாங்கிக் கொண்டு ஒரு அனுபவம் வாய்ந்த பெரிய மனிதனைப் போல பேசுகிறார் பகத்சிங். கட்டுரையில் வரும் சில வரிகளை இங்கு கொடுப்பது பொருத்தமாக இருக்கும்.

" இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை;
எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதுமில்லை"


உங்களையும் என்னையும் நம்பி தூக்குக் கயிறை முத்தமிட்ட அந்த இளைஞனுக்கு நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம்??



படியுங்கள் - ஒரு புதிய அனுபவம் - ஒரு சுய பரிசோதனை:

இப்படி துணூக்குகளாக தருவது என்றால் முழு புத்தகத்தையும் தரலாம் என்ற அளவில் அதன் ஒவ்வொரு எழுத்துக்களும் அற்புதமான கருத்து செழுமையுடன் உள்ளது.

ஓவியர் முகிலன், திரு, மருது ஆகியோரின் அற்புதமான ஓவியங்களுடன் வந்துள்ளது இந்த சிறப்பிதழ்.

இது போன்ற மாற்று இதழ்கள் கடுமையான நிதி சிக்கலை கடந்தே வருகின்றன. ஆயினும் பிற முதலாளித்துவ பத்திரிக்கைகளை விட சிறப்பானதொரு அட்டை வடிவமைப்புடன் புதிய கலாச்சாரம் இதழ் வெளி வருவது அதன் தனிச் சிறப்பு. இதற்க்கு பின்னால் உள்ள கடுமையான உழைப்பை நாம் உறுதியாக மெச்ச வேண்டியுள்ளது.

ராஜவனஜ் என்ற அன்பர் தனது தளத்தில் இந்த புத்தகம் குறித்த ஒரு அறிமுகக் கட்டுரை வெளியிட்டிருந்தார். அதில் சில வரிகளை இங்கு சேர்ப்பது பொருத்தமான அறிமுகமாக இருக்கும்.

"வரலாற்றின் போக்கில் மக்கள் விடுதலை என்பது கடைச் சரக்கல்ல... இப்படியெல்லாம் தன்னலமற்ற தியாகிகளால், மாபெரும் வீரர்களால் நடத்தப் பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை இன்று ஏன் அகிம்சையாக நடந்த சுதந்திர போராட்டம் என்று ஆளும் வர்க்கங்களால் வலுவுடன் பிரச்சாரம் செய்யப் படுகிறது? இந்த வீரர்களுக்கு கிடைத்த பரிசு என்ன? யாரால் இவர்கள் காட்டிக் கொடுக்கப் பட்டனர்? காட்டிக் கொடுத்தவர்களின் வாரிசுகள் இப்போது எப்படி இருக்கிறார்கள்? கிடைத்ததாக சொல்லப் படும் சுதந்திரத்தின் யோக்கியதை என்ன? தன்னுடைய மூலதனத்தின் விரிவாக்கத்துக்காக புதிய சந்தையைத் தேடி உள்நுழைந்தது வெள்ளை ஏகாதிபத்தியம்.. நம் அடிமைத் தனம் ஏற்பட முக்கிய காரணியான அந்த மூலதனம் சுதந்திரத்திற்குப் பின் என்னவானது? எங்கே போனது? நம்மை கசக்கிப் பிழிந்து விரிவடைந்த ஏகாதிபத்தியத்தின் மூலதனம் நாட்டுடமையாக்கப் பட்டதா?

யாரிடம் ஆட்சியைக் (சுதந்திரத்தையல்ல) கைமாற்றிச் சென்றான் வெள்ளையன்? ஏன் அவனுக்கு அந்த கட்டாயம் ஏற்பட்டது? ஏகாதிபத்தியம் ஆகஸ்டு 15 1947 க்குப் பின் மெய்யாலுமே நம் நாட்டை விட்டு சென்று விட்டதா?

கேள்விகள்.. கேள்விகள்.. கேள்விகள்.. இப்படி ஆயிரம் கேள்விகள்.. உங்களுக்கான விடை இம்மாத புதிய கலாச்சாரத்தில் காத்திருக்கிறது ...."

புத்தகம் வேண்டுபவர்கள் புதிய கலாச்சாரம் அலுவலகத்தை தொடர்பு கொண்டு புத்தகத்தை அனுப்பக் கோரலாம்.


புதிய கலாச்சாரம்:

உள்நாடு:
தனி இதழ்: ரூ. 5.00
ஆண்டு சந்தா: ரூ. 90.00

வெளி நாடுகள் (வான் அஞ்சலில்)
ஆண்டு சந்தா: US$ 9


தொடர்புக்கு:
இரா.சீனிவாசன்,
16,முல்லைநகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை,
(15-வது தெரு அருகில்),
அசோக் நகர்,
சென்னை - 600 083.

தொலைபேசி: 044-23718706

மின் அஞ்சல் முகவரி:
puthiyakalacharam@rediffmail.com



இதழ் தயாரிப்பில் உதவிய நூல்கள்(பின் அட்டையில் குறிக்கப்பட்டுள்ளது):

1. Rajayyan, K., South Indian Rebellion, The first war of Independence 1800 - 1801, Rao and Raghavan, Mysore Publication, 1971.

2. Rajayyan, K. Tamilnadu A Real History, Ratna Publications, Trivandrum, 2005.

3. Firoz Alam, Great Indian Revolutinary Bhagat Singh, A collection of edited articles, Sahni Publications, 2003.

4. B.R. Agarwala, Trials of Independence (1858-1946), National Book Trust, 1991.

5. Bipan Chandra, India's Struggle for Independence, Penguin(India), 1989.

6. Manmathnath Gupta, Bhagat Singh and His times, Lipi Prakashan, Delhi, 1977.

7. Karl Marx, On India, Rhulika Publications, 2006.

8. Indian Independence War, 1857-1859; Progress Publishers, Moscow, 1988.

9. Bipan Chandra, Modern India, A History Textbook for Class XII, NCERT Publication, 2002.

10. P.C. Joshi, 1857 In Folk Songs(A compilation), 1994.

11. S.N. Chanda, 1857: Untold Stories, Sterling Publishers, 1976.

12. Publications Division, Ministry of I&B, Govt. of India, 1857: A Pictorial Presentation, 1997.

13. Denys Forrest, Tiger of Mysore, The Life and Death of Tipu Sultan, Allied Publishers, 1970.

14. Confronting Colonialism: Resistance and Modernization under Haidar Ali and Tipu Sultan, A collection of essays - Edited by Irfan Habib.

15. Saki, Making History: Karnataka's People and Their Past; Volume I, Stone age to Mercantilism, Vimukthi Prakashana, Bangalore, 1998.

16. Nick Robins, The Corporation that changed the World, How the East India Company shaped the Modern Multinational, Orient Longman, 2006.

17. E.J. Hobsbawm, The Age of Capital: 1848-1875, Rupa & Co., Calcutta, 1992.

18. Seema Alavi, The Eighteenth Century in India, OUP, 2002.

19. Dr. Shu Hikosaka and Dr. G John Samuel, General Editors; Dr. M. Shanmugam Pillai, Editor: The First Freedom Fighter, The Story of Pulittevan, Folklore of Tamilnadu Series No.8, Institute of Asian Studies.

20. முனைவர் கு. மங்கையர்க்கரசி, மருது பாண்டியர் வரலாறும் வழிமுறையும், புத்தா பப்ளிகேஷன்ஸ், 2003.

21. பேராசிரியர் ந. சஞ்சீவி, மானங்காத்த மருது பாண்டியர், காவ்யா, 2004

22. பேராசிரியர் ந. சஞ்சிவி, வீரத்தலைவர் பூலித்தேவர், காவ்யா, 2004

23. சிவலை இளமதி, வரலாறு படைத்த வழக்குகள், அலைகள், 1997

24. த.சிவக்குமார், கேளாத செவிகள் கேட்கட்டும்... தியாகி பகத்சிங்கின் கடிதங்கள், கட்டுரைகள், மற்றும் பிற ஆவணங்கள், நெம்புகோல் பதிப்பகம், 2006

25. நாத்திகம்-ப. ராமசாமி, நாத்திகச் சிங்கம் பகத்சிங், நாத்திகம், 1992

26. மாயா குப்தா, டாம் நார்ன், வேலூர்க் கலகம் ஜூலை 1806, விடியல் 2003

27. எஸ்.மித்தல், இர்பான் ஹபீப், விடுதலைப் பாதையில் இந்தியா, பகத்சிங்கின் நவஜவான் பாரத சபை பற்றிய அறிமுகம், கார்க்கி நூலகம், 1981

28. எப்போதாவது எண்ணிப் பாருங்கள்... தியாகச் செம்மல்களின் கடிதங்கள், பப்ளிகேஷன்ஸ் டிவிஷன், 1998

29. எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர், சுதந்திரப் போர், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், 1957

30. வே. மாணிக்கம், தானாபதிப் பிள்ளை வரலாறு, யாதுமாகி, 2005

31. டாக்டர் ஜெ.ராஜாமுகமது, புதுக்கோட்டை மாவட்ட வரலாறு, அரசு அருங்காட்சியகம், 1992

32. கொ.அ.அந்தோனவா, கி.ம.போன்காரத்-லேவின், இந்தியாவின் வரலாறு - மிகத் தொல் காலம் முதல் 18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை, முன்னேற்றப் பதிப்பகம், 1987

33. கால்டுவல் திருநெல்வேலி சரித்திரம், காவ்யா, 2004

34. இந்தியப் பெருமுதலாளி வர்க்கம் - சுனிதி குமார் கோஷ்-தமிழில் வ.கோவிந்தசாமி

35. வ.உ.சி நூல் திரட்டு-தொகுப்பு வீ.அரசு

36. வ.உ.சியும் திருநெல்வேலி எழுச்சியும்-ஆ.இரா.வேங்கடாசலபதி

37. வ.உ.சிதம்பரம் பிள்ளை - என்.சம்பத், பெ.சு.மணி

38. திராவிட இயக்கமும் வேளாளரும்-ஆ.இரா.வேங்கடாசலபதி

39. சிவனடி, இந்திய சரித்திரக் களஞ்சியம், தொகுப்பு நூல்கள்


**********

புத்தகம் வேண்டுபவர்கள் புதிய கலாச்சாரம் அலுவலகத்தை தொடர்பு கொண்டு புத்தகத்தை அனுப்பக் கோரலாம்.

புதிய கலாச்சாரம்:

உள்நாடு:
தனி இதழ்: ரூ. 5.00
ஆண்டு சந்தா: ரூ. 90.00


வெளி நாடுகள் (வான் அஞ்சலில்)
ஆண்டு சந்தா: US$ 9


தொடர்புக்கு:
இரா.சீனிவாசன்,
16,முல்லைநகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, (15-வது தெரு அருகில்),
அசோக் நகர், சென்னை - 600 083.

தொலைபேசி: 044-23718706

மின் அஞ்சல் முகவரி:
puthiyakalacharam@rediffmail.com


Related article:

* படியுங்கள் இந்த மாத ‘புதிய கலாச்சாரம்’!!!

* புத்தகப் பிரியன்

Thursday, November 23, 2006

யாரு சொல்றதுன்னு பாத்தீகளா?

உலகமயம், உலகமயம் அப்படின்னு கம்யுனிஸ்டுகளும், பிற அரசியல் கட்சியினரும் அடிக்கடி உரக்க கூவுகிறார்களே, அதை இந்தியாவில் அமல் படுத்திய பெருந்தகை மெக்காலேயின் புத்திரன் மன்மோகன் சிங்தான். அன்னார், நரசிம்மாராவ் அரசில் நிதியமைச்சராக இருந்த போது இந்தியாவ தொறந்து விட்டாரு. தொறந்த வீட்டில பாகாசுர வெறி நாய்கள் நுழைஞ்சு அழிச்சாட்டியம் பன்றதப் பத்தித்தான் திரும்ப திரும்ப நாங்களும் எழுதி வருகிறோம். சரி, இப்ப அதுக்கு என்ன வந்ததுன்னு கேக்கிறீங்களா? தொடர்ந்து படிங்க.....

உலக மயம் தோற்றுவிக்கும் உலக உண்மை:

* ஏழை பணக்காரன் பிளவு அதிகரித்து வருகிறது.

* ஏழைகள் மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தருவதற்க்கான, அவர்களது பிரச்சனைகளை காது கொடுத்து கேட்ப்பதற்க்கான சக்தியை அரசு இழந்து வருகிறது. மருத்துவம், கல்வி போன்ற அடிப்படை வசதிகளை போதுமான அளவு செய்து தருவதற்க்கு வக்கற்று உள்ளது.

* வளர்ச்சி கிராமங்களை அடைவதில்லை.

* இந்த மேற்சொன்ன காரணங்களால், மக்கள் அரசை வேறுக்க தொடங்கியுள்ளனர். இது மாற்றுமைப்பு தேடும் சக்திகளை வளர்த்தெடுக்கிறது. இது ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தவிடாமல் அரசை தடுக்கிறது.

இப்படித்தான் நாங்க முட்டாப்பயக கம்யுனிஸ்டுகள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இத திரும்ப போட வேண்டிய அவசியமென்ன?.
இத இந்த முறை சொன்னது சாட்சாத் மாமா மன்மோகன் சிங்தான். அதுவும் பிரிட்டிஸ் ஜெண்டில் மேன், மற்றும் லேடிஸ் மத்தில போயி சொல்றாரு.

பாராளுமன்றத்தின் போலித்தனத்தை அம்பலப்படுத்துவது யார்?

ஏன் இதே விசயம் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொல்லி கதை விடப்படும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை?

நியாயமாக அங்குதானே விவாதிக்கப்பட வேண்டும்.

உண்மையிலேயே அதி முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டிய விதை நெல் சீர்திருத்தச் சட்டம், அணு சக்தி ஒப்பந்தம், அமெரிக்க ராணுவ ஒப்பந்தம், VAT, சில்லைறை வியாபாரத்தில் FDI, காப்புரிமைச் சட்டம், தண்ணீர் ஒழுங்குமுறை ஆணயச் சட்டங்கள் இப்படி இன்னும் சில பத்து அடிமை சாசனங்களையே கூட விவாதிக்காமலேயே அனுமதித்து பாராளுமன்றம்.
இதன் மூலம் அப்சல் குண்டு வைத்த இந்திய பாரளுமன்றம் என்பது ஏகாதிபத்தியத்தின் outpost, ரப்பர் ஸ்டாம்பு என்று அம்பலப்படுத்துவது கம்யுனிஸ்டுகளா அல்லது ஏகாதிபத்திய அடிமைகளா?

அல்லது 1947 போலி சுதந்திரத்துக்கு முன்பு இந்தியாவின் ஒவ்வொரு பிரச்சனைகளை பற்றியும் பிரிட்டிஸ்க்காரர்களிடம் கேஞ்சி கேட்டு(லேடிஸ் அண்ட் ஜெண்டில்மேன்..) முறையிடுவோமே, அது போலத்தான் இப்பொழுதும் இந்தியாவின் நிலைமை உள்ளதா? அதாவது இந்தியா இன்னும் அடிமை நாடுதானா?

ஏனெனில் நமது பிரச்சனைகளுக்கு தீர்வு கேட்டு இங்கு எதுவும் பேசாமல் பிரிட்டிஸ் மண்ணில் பேசும் போது இந்த சந்தேகம் உறுதிப் படுகிறது.

இதே மன்மோகன்சிங் தான் போன முறை ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் அவார்டு கொடுத்த பொழுது பிரிட்டிஸ்க்காரர்களின் காலனி ஆதிக்கத்திற்க்கு நன்றி தெரிவித்து தான் ஒரு பச்சை தரகு வர்க்க அரசியல்வாதி என்பதை வெட்கமின்றி பறை சாற்றினார். வேறு எப்படி? மெக்காலே கல்வி முறையின் புதிய வார்ப்பு அல்லவா?

அசுரன்

Friday, November 17, 2006

'ஹே ராம்' விமர்சனமும், காந்தி வாங்கிக் கொடுத்த தந்திரமும்

காந்திதான் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் என்று வெற்றிகரமானதொரு வரலாற்றுப் பொய்யை, ஒரு சார்பு வரலாறை ஆளும் வர்க்கங்கள் பொதுக்கருத்தாக மாற்றி விட்டன. ஆனால், வரலாற்றில் காந்தியின் வருக்கைக்கு முன்பும் , காந்தி செல்வாக்கு குன்றி ஒரு அடையாளாமாக இருந்த 1940களையும் பார்க்குமிடத்து சுதந்திரம் என்பது காந்திக்கு அப்பாற்ப்பட்ட ஒரு விசயமாகவே இருந்துள்ளது தெரிகிறது.
இது குறித்து புதிய கலாச்சாரம் இதழில் வந்த ஹேராம் பட விமர்சனத்தில் ஒரு பகுதியை தருவது சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். ஏனெனில் அது சுருக்கமாக 1940களில் காந்தி மக்களின் குரலாக இல்லாத நிலையையும், தன்னெழுச்சியாக மக்கள் ஆங்காங்கே போராடியதையும், பிரிட்டன் பலவீனமாகியிருந்ததையும், அமெரிக்கா பிரிட்டனை நெருக்கி வந்ததையும் குறிப்பிட்டுக் காட்டுகிறது. மேலும், இந்திய விடுதலை வரலாற்றில் 1906 க்கு முன்பு வரை இந்து முஸ்லீம்கள் மத வேறுபாடுகளை களைந்து ஒன்றாகவே போராடி வந்துள்ளனர். காஸ்மீரில் இந்தியா, பாகிஸ்தானின் தலையீட்டுக்கு முன்பு வரை அது மத சார்பின்மையின் இலக்கணமாக இருந்து வந்துள்ளது.
இந்த உணர்வு, 1940களில் த்லைவர்களற்ற பல் மக்கள் போராட்டங்களிலும் வெளி வருகிறது. இந்த பொது உணர்வை வளர்த்தெடுக்க ஏன் தவறினார்கள் அன்றைய வீரர்களாக நமது பாட புத்தகங்க்ள் சித்தரிக்கும் தலைவர்கள்?
அல்லது இன்னும் சிறப்பாக கேள்வி கேட்டால், மதக் கலவரங்களை மக்கள் விரும்பினார்களா அல்லது தலைவர்களா?

இது போல இன்னும் பல தர்மசங்கடமான(நமக்கல்ல்) கேள்விகளை எழுப்புகிறது நமது விடுதலைப் போராட்டத்தின் உண்மையான வரலாறு.
தமஸ்(இந்திய பிரிவினை குறித்த படம்) படத்தில் ஒரு வசனம் வருகிறது. ஒரு ஆங்கிலேய அதிகாரி அவன் மனைவியிடம் பேசுகிறான்:

"மதக் கலவரங்களால் யார் லாபம் அடைந்தார்களோ அவர்கள்தான் அதற்க்குக் காரணம்"
"ஒரு அரசு தனது நாட்டு மக்கள் எந்த விசயத்தில் ஒன்று படுகிறார்கள் என்பதை விட எந்த விசயத்தில் பிரிந்து முரன்படுவார்கள் என்பதில்தான் கவனம் செலுத்துகிறது."

*********
(சினிமா திரை விலகும் போது..... - ஹே ராம் பட விமர்சனத்தின் ஒரு பகுதி - புதிய கலாச்சாரம் வெளியீடு)

1946 நவீன இந்திய வரலாற்றின் மிகக் கொந்தளிப்பான ஆண்டு. 1945 ஏப்ரலில் இரண்டாவது உலகப் போர் முடிந்தவுடன் பிரிட்டிஸ்ஹ் ஏகாதிபத்தியம் அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பலவீனமடைகிறது. பிரிட்டனுக்கு 'எதிராக' அகிம்சை வழியில் இயக்கம் நடத்திக் கொண்டிருந்த காந்திக்கும் இந்திய மக்கள் மீது இருந்த செல்வாக்கு பலவீனமடைகிறது. நாடெங்கும் பல போராட்டங்கள் வெடிக்கின்றன.

நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தின் தளபதியான ஷா நவாஸ்(முசுலீம்), ஜி.எஸ். தில்லான்(சீக்கியர்), பிரேம் சேகல்(இந்து) ஆகியோரை பிரிட்டிஷ் அரசுக்குத் துரோகமிழைத்ததாகத் தண்டிக்க முற்ப்பட்ட போது, அரசுக்கெதிராக நாடெங்கும் இலட்சுக்கணக்கான மக்க்ள் கிளர்ந்தெழுந்த ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நவம்பர் 1945-இல் கல்கத்தா நகர வீதிகளில் மூன்று நாட்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர் இலட்சக்கணக்கான மக்கள். பிப்ரவரி 1946-இல் அப்துல் ரஷீத் என்ற ஒரு இந்திய தேசிய இராணுவ சிப்பாயை விடுதலை செய்யக் கோரி மீண்டும் கல்கத்தா கிளர்ந்தெழுந்தது. இந்த எல்லாக் கோரிக்கைகளுக்கும் பிரிட்டிஷ் அரசு பணிய நேர்ந்தது.

பிப்ரவரி 1946-இல் பிரிட்டிஷ் கடற்படையின் இந்திய மாலுமிகள் பம்பாயில் கலகம் செய்தனர். கம்யுனிஸ்டுகளால் திரட்டப்பட்ட பம்பாய் நகரமே அவர்களுக்கு ஆதரவாக வேலை நிறுத்தம் செய்தது. 250 பேர் இரண்டே நாட்களில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
விமானப் படையில் வேலை நிறுத்தம், ஜபல்பூர் இராணுவத்தில் வேலை நிறுத்தம், பீகார், டெல்லி போலீசாரின் வேலை நிறுத்தம் என்றூ பிரிட்டிஷ் அதிகாரத்தின் தூண்களாக இருந்த அதிகார வர்க்க இராணுவமே அவர்கள் கையைவிட்டு நழுவிக் கொண்டிருந்தன. வங்காளம், உ.பி., பீகார், மகாராஷ்டிரா போன்ற இடங்களிலும், திருவிதாங்கூர், ஐதரபாத் நிஜாமின் சமஸ்தானங்களிலும் விவசாயிகளின் போராட்டம் ஜமீந்தார்களையும், மன்னர்களையும், பண்ணைகளையும் உலுக்கிக் கொண்டிருந்தது.

மாணவர் போராட்டம் நடைபெறாதா இடமே இல்லை; ஜூலை 1946-இல் தபால் தந்தி ஊழியர்கள் வேலை நிறுத்தம், ஆகஸ்டு 1946-இல் தென்னிந்திய ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறூத்தம் என எல்லாத் தொழில் துறைகளும் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்தால் நிலை குலைந்திருந்தன. ஆனால் இது வரை குறிப்பிட்ட எந்த போராட்டமும் காந்தியோ, ஜின்னாவோ, சவர்க்காரோ அறைகூவல் விடவில்லை. மாறாக, போராட்டங்களை உடைக்கவும், திரும்பப் பெறவும், திசை திருப்பவும் தங்களாலான சேவைகளைத்தான் அவர்கள் செய்தார்கள்.

ஆனால், 1946 பிப்ரவரி மாதத்தில் பிரிட்டிஷ் ஆட்சியை ஒன்றுபட்டு எதிர்த்த கல்கத்தா மக்கள் ஆகஸ்டு மாத்த்தில் ஏன் ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டார்கள் என்ற கேள்விக்கு நமக்கு விடை தேவைப்படுகிற்து.
அதே காலகட்டத்தில் ஐதரபாத் நிஜாம் என்ற முசுலீம் மன்னனையும், ரசாக்கள் என்ற அவனது கோடூரமான (முசுலீம்) படையையும் எதிர்த்துப் போராடிய தெலுங்கானா(இந்து) விவசாயிகளின் போராட்டம் மட்டும் ஏன் மதக் கலவரமாக மாறவில்லை என்பதற்க்கும் விளக்க்ம் தேவைப்படுகீறது.

பல்லாயிரம் மக்கள படுகொலை செய்யப்பட்ட நவகாளீக்கு அருகிலேயே விவசாயிகள் ஜமீந்தார்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தார்கள். அந்த கிராமங்களுக்கு கலவரம் ஏன் பரவவில்லை என்பதற்க்கும் விடை தேவைப்படுகிறது.

அசுரன்

அஹிம்ஸை - ஒரு அபாயகரமான அதி பயங்கர வன்முறையே!

காந்தி குறித்து சில வாரங்களுக்கு முன்பு எனக்கும், நண்பர் மா.சி க்கும் கடுமையானதொரு விவாதம் நடந்தது. அது மிக நீண்டதொரு விவாதமாகிவிட்டபடியால் தொடர்ச்சியை தனிப் பதிவாக இடச் சொல்லி தோழி பொன்ஸ் சுட்டிக் காட்டினார். இடையில் வேறு சில உடனடி விவாதங்கள் வந்து இடைஞ்சல் செய்ததால் இந்த காந்தி விவாதத்தை சிறிது தள்ளிப் போடுவது என்று நானே அராஜகமாக முடிவெடுத்தேன். இப்பொழுது சூழல் சிறிது கெடுபிடியாக இல்லாமல் இருப்பதால் அந்த விவாதத்தை திரும்ப தொடங்கலாம் என்று ஒரு எண்ணம். மிகப் பெரிய விவாதமாகி விட்டபடியால் அதன் மையமான ஒரு அம்சத்தை இங்கு முன்வைத்து மீண்டும் விவாதத்தை தொடங்குகிறேன்.

************
(இந்த பகுதியை வாசிக்க விரும்பாதவர்கள் - நேராக, இந்த பதிவில் மாசிக்கான முதல் கேள்வியை சென்றடையலாம்).

அதற்க்கு முன்பு மா.சியின் நிலைப்பாடுகளாக சில விசயங்கள்:(இதில் ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டால் மா.சி தெரியப்படுத்தலாம்).

#1) பொதுவுடைமை சமுதாயம் தான் மா.சியின் தீர்வும் கூட.
#2) பொதுவுடைமை சமுதாயத்தை எந்த வரலாற்றுக் கட்டத்திலும் நடைமுறைப்படுத்தலாம் - மா.சி.
#3) பொதுவுடைமை சமுதாயம் என்பது மா.சியின் புரிதலில் - 'திறைமைக்கேற்ற ஊதியம், தேவைக்கேற்ப்ப செல்வு செய்வது'.
#4) "ஜனநாயகம் என்பது ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையை சக மனிதனின் உரிமைகளுக்கு நலன்களுக்கு மதிப்பு கொடுத்து அமைத்துக் கொள்ளும் சமூகக் கட்டமைப்பு (என்னுடைய வரையறை)" - மாசி கூறியது.
#5) சமூக பரிணாம ஆய்வு முடிவுகளை அவர் காந்தியின் வாழ்க்கையை ஆய்வு செய்ததன்(அல்லது காந்தியின் வாழ்க்கை அனுபவங்கள் மூலமே) மூலமே வந்தடைந்ததாக மா.சி கூறுகிறார்.
#6) "பொதுவுடைமை என்றால் - தர்மகர்த்தா முறையும் அதேதான் என்று நினைக்கிறேன்." - இதுவும் மா.சி கூறியதுதான். உறுதியாக் குறிப்பிடவில்லை, நினைக்கிறேன் என்றே சந்தேகமாக குறிப்பிட்டுள்ளார்.

மா.சி பதில் சொல்லாமல் விட்டுள்ள சில கேள்விகள்:(இவற்றையும் பிறகு பார்ப்போம்)
#1)
அசுரன்:இந்த நிலையை(பொதுவுடைமையை) நீங்களே(மா.சி) குறிப்பிட்டது போல ஒரே நாளில் அடைந்து விட முடியாது. அந்த இடைக்கட்டத்தில் என்ன விதமான அரசு இருக்கும் காந்தியத்தின் படி?

வேறு சில கேள்விகளும் உள்ளன. அவை இன்னும் முழுமையான வடிவம் பெறாமல் உள்ளன. மாசியுடனான விவாதத்தின் போக்கில் அவை முழு உருவம் பெறும் அப்பொழுது அவற்றை முன்வைக்கிறேன்.

*****************

இப்போ ஸ்டார்ட் செய்வோமா....
கேள்வி:
/////
அசுரன்:இதற்க்கு ஆதாரமாகத்தான் கார்வாலி சிப்பாய்களின் வட மேற்க்கு மாகாண சம்பவத்தையும் அதில் காந்தியின் பாத்திரத்தையும் குறீப்பிட்டுள்ளேன். அதில் தெளிவாக அவர் அஹிம்ஸையை கைகொண்ட வீரர்களை கண்டித்து அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை ஆதரிக்கிறார்.

மா.சி:அப்படி காந்தி ஆதரித்திருந்தால் காந்தியின் கருத்துக்களுடன் ஒவ்வாத ஒன்றாக இதையும் சேர்த்துக் கொள்கிறேன்.
////

எந்த அம்சத்தில் இப்பொழுது காந்தியுடன் ஒவ்வாமல் போயுள்ளீர்கள் என்று தெளிவாக சொல்லவும். ஏனேனில் இந்த அமசத்தில் conclusionயை தெளிவாக கூறீ முடித்துவிடலாம்.

ஏனெனில் இது காந்தி வன்முறையாளர் என்பதற்க்கு ஆதாரமாக கூறியுள்ளேன் எனில், நீங்கள் காந்தி வன்முறையாளர் என்பதை இந்த சம்பவத்தில் அவருக்கு எதிரான நிலையெடுப்பதன் மூலம் நிறுவுகிறீர்கள்.

அதாவது காந்தி வன்முறையாளர் என்கிற எமது நிலைப்பாட்டை நீங்களும் மறைமுகமாக ஆதரிக்கிறீர்கள்.
அசுரன்

Related Posts with Thumbnails