TerrorisminFocus

Showing posts with label மக்கள். Show all posts
Showing posts with label மக்கள். Show all posts

Saturday, May 16, 2009

இந்த தேர்தலில் மக்கள் யாருக்கு பாடம் கற்றுக் கொடுத்தார்கள்?

நாடாளுமன்றத் தேர்தல் எதிர்பார்த்தபடியே முடிவடைந்துவிட்டது. தேர்தல் முடிவுகள் அனேகமாக தெளிவாக தெரிந்துவிட்டது. காங்கிரசு கூட்டணி பல இடங்களில் முன்னணி பெற்று உள்ளது. தமிழகத்தில் திமுக-காங்கிரசு ஓபன் கூட்டணி, தேமுதிக-காங்கிரசு பினாமி கூட்டணி வெற்றி பெற்றுள்ளன. எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாகவே அடிதடி-அதிரடி-சரவெடி அழகிரி அண்ணே, லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார். வீரத் தளபதி கந்துவட்டி மைனர் ஜே. கே. ரித்தீஷ் 60,000 வோட்டு வித்தியாசத்தில் வெற்றி. செலவழித்த தொகைக்கு ஏற்ப வோட்டு வித்தியாசம். ஈழப் பெருச்சாளி வைகோ மண்ணை கவ்வி விட்டார். பாமகவுக்கு கோமணத்துணி கூட மிஞ்சவில்லை.

தமிழகத்தில் நவரசங்களும் கலந்தோடுகிறது. குறிப்பாக, ஈழத்திற்கு பலி வாங்கும் வகையில் பாடம் கற்பிக்க தேர்தல் களத்தில் இறங்கி குருதி சிந்திய தோழர்களும், உணர்வாளர்களும் பேரதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். ஈழத்து குருதியில் கை நனைத்து வோட்டுப் பொறுக்க களம் இறங்கிய சூத்திரதாரி தா.பாண்டியன் கட்சியும், இரட்டை இலையும், பிற போலித் தமிழ்த் தேசிய வியாதிகளும் வாயடைத்துப் போயுள்ளனர். மக்களுக்கு உணர்வு மங்கிவிட்டது, மக்கள் காசு வாங்கிக் கொண்டு வோட்டு போட்டு விட்டனர் என்று பல்வேறு புலம்பல்கள்.

ஆனால், இவையெல்லாவற்றையும் விட பேருண்மை ஒன்று உள்ளது. அது இந்த தேர்தலில் மக்கள் கற்றுக் கொடுத்துள்ள பாடம். யாருக்கு? தேர்தலின் மூலம் மக்களின் பிரச்சினைகளுக்கு ஏதோ ஒரு வகையில் பங்களிப்பு செய்ய முடியும் என்று ஊரை ஏமாற்றி வந்தவர்கள், தானும் ஏமாந்து மக்களையும் ஏமாற்ற முயன்றவர்கள் இவர்களுக்குத்தான் பாடம் கற்பித்துள்ளனர் மக்கள். ஈழம், தொழில் மந்தம், பொருளாதார கொள்கையின் தோல்வி, விவசாயிகள் தற்கொலை, விலைவாசி உயர்வு, வேலையின்மை, மின்வெட்டு இவற்றை மீறி காங்கிரசு போன தடவையை விட அதிக இடங்களில் வெற்றி பெறுள்ளது. எனில், இவை குறித்து மக்களுக்கு அக்கறை இல்லை என்று அர்த்தமா? இவையெல்லாம் மக்களின் ஜீவாதார பிரச்சினைகள் இல்லை என்று அர்த்தமா? இல்லை, மாறாக, தேர்தல் முடிவுகள் இந்த பிரச்சினைகளின் மீது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் என்பதுதான் அர்த்தம்.

எந்த அயோக்கியன் வந்தாலும் இதைத்தான் செய்யப் போகிறான் எனும் போது, மாற்று வழி எதுவும் புலப்படவில்லை எனும் போது, யார் அதிக பணம் கொடுக்கிறானோ, யார் நம்ம சாதிக்காரனோ, யார் வெற்றி பெறுவார்களோ அவர்களுக்கு வோட்டு போட்டு விட்டு போய்விடுவோம் என்பதைத்தான் மக்கள் இந்த தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளனர். ஈழத்து ரத்தத்திற்கு பதில் சொல்லும் தேர்தல் இது என்று தேர்தலில் போராடிய பெதிக தோழர்களே, உணர்வாளர்களே இதோ இதுதான் உங்களுக்கான பாடம். மக்களுக்கு இந்த தேர்தலின் மீது அப்படி எந்தவொரு மயக்கமும் இல்லை. இந்த தேர்தல் ஜனநாயகத்தின் மோசடி முகத்தை மக்கள் நன்கு உணர்ந்தே இருக்கிறார்கள். அவர்களது பிரச்சினை எல்லாம் மாற்று அரசியல் ஒன்று வலுவாக, நம்பிக்கையூட்டும் வகையில் இல்லாததுதான்.

தோழர்களே, உண்மையான தீர்வை நோக்கித்தான் நமது பயணம் எனில் மக்கள் மத்தியில் மாற்று அரசியலுக்கான நம்பிக்கையை விதைப்போம். இல்லையேல் அதுவரை மக்கள் நமது சந்தர்ப்பவாத தேர்தல் நம்பிக்கைகளில் பகடை உருட்டவே செய்வார்கள். உணர்வு மங்கி போயுள்ளது மக்களுக்கல்ல தோழர்களே, நமக்குத்தான். விலை போனது மக்கள் அல்ல தோழர்களே, நாம்தான் சரியான அரசியல் மீது நம்பிக்கையின்றி விலை போய் விட்டோம். தமிழகத்தின் தலைவிதியை இப்படியெல்லாம் மாற்றிவிட முடியாது தோழர்களே. இதோ மக்கள் இந்த தேர்தலில் செவிட்டில் அறைந்தது போல நமக்கு இந்த உண்மையையே உணர்த்தியுள்ளனர்.

அசுரன்

தமிழ்சசி எழுதிய ஒரு கட்டுரையில் ப்ரோக்னோஸ்டிக்சேஜ் என்ற தோழர் இட்டுள்ள ஒரு பின்னூட்டத்தின் அடிப்படையிலேயே இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. தோழர் ப்ரோக்னோஸ்டிக்சேஜ்க்கு நன்றிகள்.


கோடீசுவர வேட்பாளர்கள்! கோவணத் துணியோடு மக்கள்!!

Wednesday, January 14, 2009

முதலாளித்துவம் கொல்லுது - சத்யம் IT ஊழியரின் தற்கொலை

தற்கொலை செய்து கொண்ட சத்யம் ஊழியர்


த்யம் கம்பேனி 420 வேலை செய்து மாட்டிக் கொண்ட கதை இப்போது அனைவருக்கும் தெரிந்த விசயமாகிவிட்டது. இதே போல ஊழல் குற்றச்சாட்டில் விப்ரோ நிறுவனமும் அசிங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை ஒட்டிய கிளைக் கதையில் இன்போசிஸ் நாராயணமூர்த்தி கும்பலை சேர்ந்தவரின் பாலியல் வக்கிர கதைகள் மீண்டும் அரங்கிற்கு வந்து அசிங்கப்பட்டது.

இத்தனை அயோக்கியத்தனமும் செய்யும் இந்த பகாசுர சூதாட்ட முதலாளிகள், 420 பேர்வழிகள் எந்த தண்டனையும் அனுபவிப்பது இல்லை. ஆனால் எந்த தவறும் செய்யாதா அந்த நிறுவனங்களில் பணி புரிபவர்கள்தான் இதன் கஸ்டங்களை அனுபவிக்கிறார்கள். இந்திய தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி கொழுத்த பணம் சேர்த்த தொழில்துறை முதலாளிகள் அந்த பணத்தை சூதாடி தோற்றனர். இன்று சூதாட்டத்தின் நஸ்டத்தை தொழிலாளர் தலையில் சுமத்தி வேலையை விட்டு நீக்குகிறார்கள், வயிற்றில் அடிக்கிறார்கள்.

அது போலவே இந்திய IT துறை சுதாடிகளும், 420 களும் செய்கிறார்கள். கடந்த சில மாதங்களில் பல ஆயிரக்கணக்கானவர்கள் வேலையை விட்டு தூக்கப்பட்டுள்ளனர் IT துறையில். IT துறை சூப்பரு சூப்பரு என்று சொல்லி எல்லாரையும் அதனையே படிக்க சொல்லி ஊக்கப்படுத்திய அரசுகளோ இன்று IT துறை கவிழ்ந்து கிடக்கும் நேரத்தில் முதலாளிகளுக்கு அறிவுரை வழங்கி காப்பாற்றுகிறது. இந்த அரசை நம்பி IT படித்தவர்களைப் பற்றியோ அல்லது விவசாயம் செத்து போனதால் நகரத்துக்கு வந்த தொழில்சாலை தொழிலாளி பற்றியோ இந்த அரசுக்கு கவலையில்லை. வாழ்வையிழந்த, எதிர்காலம் நிச்சயமற்ற சதாரண மக்களுக்கு வாய்க்கரிசி போட வருகிறது அரசு. முதலாளிகளுக்கோ சின்ன எறும்பு கடி என்றால் கூட பெயில் அவுட் எடுக்கிறது.

வெட்கமின்றி கொஞ்சம் கூட பயமின்றி சத்யம் கம்பேனியில் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய சொல்லி அறிவுரை செய்துள்ளது இந்திய அரசு. இதன் மூலம் அதனது லாபம் 20% அதிகமாகும் என்று இந்த அறிவுரையை சொல்லியுள்ளது. இந்த அறிவிப்பு நடைமுறைக்கு இன்னும் வரவில்லை என்று நாம் எண்ணியிருந்த வேளையில் மேலே பதியப்பட்டுள்ள சத்யம் ஊழியரின் தற்கொலை செய்தி வெளி வந்துள்ளது. அவரை வேலையை விட்டு தூக்கியதால் அவர் தற்கொலை செய்துள்ளார் என்று தெரியவருகிறது.

எந்தளவுக்கு இந்த அரசு IT ஊழியர்களையும், இந்திய தொழிலாளர்களையும் கேவலமாக, முதுகெலும்பு அற்றவர்களாக நினைத்திருந்தால் 10,000 பேரை வேலையை விட்டு தூக்கிவிட அறிவுரை சொல்லியிருக்கும். மோசடி செய்தவனெல்லாம் சொகுசாக வலம் வருகிறான். வயிற்றுப் பிழைப்புக்கு கிடைத்த வேலையை செய்யும் சதாரணம் மக்களோ இப்படி உடனுக்குடன் தண்டனை அனுபவிக்கிறார்கள்.

ஒரு படத்தில் வடிவேலு சொல்லுவார், ஓரமா நின்னு பாத்தத்துக்கு தண்டனையாடா என்று அது போல முதலாளிகளின் மோசடிகளை நாம் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்ததற்கு நமக்கு தண்டனையா? இனிமேலும் இதை அனுமதிக்க முடியாது. இவர்கள் இனிமேலும் இந்த நாட்டை அதன் உற்பத்தியை நிர்வாகிக்கும் தகுதியை கொண்டிருக்க முடியாது. நாம்தான், மக்கள்தான் அனைத்தையும் உருவாக்குகிறோம் இதனை நாமே நிர்வாகிப்போம்.

தனிமனித லாப வெறியில் வித விதமாக சூதாடி, மோசடி செய்து, சதி திட்டம் தீட்டி நாட்டை நாசமாக்கும் பன்னாட்டு, தரகு பாகசுர முதலாளிகளை நாட்டை விட்டு விரட்டினால்தான் அனைவருக்கும் விடுதலை. வருத்தபப்ட்ட பாரம் சுமந்தது போதும் IT ஊழியர்களே. உங்களது சகோதரர்கள் உங்களுடன் தான் இருக்கிறார்கள். சிறிது கண் திறந்து பாருங்கள்.

முதலாளித்துவம் கொல்லும்! கம்யுனிசமே வெல்லும்!!

அசுரன்

ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா !!

விப்ரோ, சத்யம் போன்ற கம்பேனிகள் மோசடி 420 பேர்வழிகள் - உலக வங்கி அறிவிப்பு!!

வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் IT ஊழியர்களே! உங்கள் பாரங்களை (முன்னாள்)சத்யம்-ன் பிராபாத்திடம் இறக்கி வையுங்கள்!!

இங்கு கிழிந்த டவுசருக்கு மாற்றாக புது டவுசர் கிடைக்கும்!! - ரொம்ப நல்லவர்கள் கடை!!

அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது!

ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை!

Monday, January 12, 2009

விப்ரோ, சத்யம் போன்ற கம்பேனிகள் மோசடி 420 பேர்வழிகள் - உலக வங்கி அறிவிப்பு!!

லக வங்கி இனிமேல் விப்ரோ கம்பேனியுடன் எந்த ஒரு வர்த்தக தொடர்பும் வைத்துக் கொள்ளாது என்று தடை செய்து விட்டது. இது போல தடை செய்யப்பட்ட கம்பேனிகள் சத்யம், விப்ரோ, மற்றும் மெகா சாப்ட். தடை செய்யக் காரணம் இவை மோசடியான நடைமுறை கொண்டவை, உலக வங்கி ஊழியர்களை ஊழல்படுத்துகின்றன இந்த கம்பேனிகள், வெளிப்படையான நடைமுறை இல்லாதவர்கள், தகவல்களை சரியாகக் கொடுக்காமல் ஏமாற்றுபவர்கள். இந்த கம்பேனிகள் மோசடி மற்றும் ஊழல் குறித்த உலக வங்கியின் கொள்கைகளின் அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ளன. பட்டியலை விரைவில் வெளியிட இருக்கிறது உலக வங்கி.

இது குறித்து விப்ரோ கம்பேனி சம்பந்தமில்லாமல் கருத்து சொல்லியுள்ள நிலையில் உலக வங்கியானது தெளிவாக குறிப்பிட்டுவிட்டது, அதாவது தனது ஊழியர்களுக்கு கிடைத்த நியாயப்படுத்தமுடியாத அணுகூலகங்கள்தான் இந்த கம்பேனிகளை தடை செய்ய காரணம் என்று. இந்த நியாயப்படுத்த முடியாத அணுகூலம் என்ற வார்த்தை ஊழல், லஞ்சம் என்பதின் நாகரிகமான வடிவமேயன்றி வேறல்ல.


""
However, the World Bank said the ban was for improper benefits to its staff.
""

கீழே கொடுக்கப்பட்டுள்ள சரத்துதான் சத்யம், விப்ரோ போன்ற திறமையாளர்களை தடை செய்ய உலக வங்கி கூறும் காரணம்.


Fraud and Corruption

1.14 It is the Bank’s policy to require that Borrowers (including beneficiaries of Bank loans), as well as bidders, suppliers, and contractors and their subcontractors under Bank-financed contracts, observe the highest standard of ethics during the procurement and execution of such contracts. [18] In pursuance of this policy, the Bank:

(a) defines, for the purposes of this provision, the terms set forth below as follows:

(i) “corrupt practice” [19] is the offering, giving, receiving or soliciting, directly or indirectly, of anything of value to influence improperly the actions of another party;

(ii) “fraudulent practice” [20] is any act or omission, including a misrepresentation, that knowingly or recklessly misleads, or attempts to mislead, a party to obtain a financial or other benefit or to avoid an obligation;

(iii) “collusive practice” [21] is an arrangement between two or more parties designed to achieve an improper purpose, including to influence improperly the actions of another party;

(iv) “coercive practice” [22] is impairing or harming, or threatening to impair or harm, directly or indirectly, any party or the property of the party to influence improperly the actions of a party;

(v) "obstructive practice" is

(aa) deliberately destroying, falsifying, altering or concealing of evidence material to the investigation or making false statements to investigators in order to materially impede a Bank investigation into allegations of a corrupt, fraudulent, coercive or collusive practice; and/or threatening, harassing or intimidating any party to prevent it from disclosing its knowledge of matters relevant to the investigation or from pursuing the investigation; or

(bb) acts intended to materially impede the exercise of the Bank’s inspection and audit rights provided for under par. 1.14 (e) below.

இது குறித்த தகவல் தந்த பிராக்னோஸ்டிக் சேஜ் க்கு நன்றி. பிராக்னோஸ்டின் பின்னூட்டம்(சுருக்கப்பட்டது):


""""
விப்ரோ கம்பேனியுடன் பிசினஸ் செய்வதை 2011 வரை தடை செய்துள்ளது உலக வங்கி. ஏற்கனவே இது போல போன வாரம் சத்யம் கம்பேனியை தடை செய்தது உலக வங்கி. இப்போழுத் விப்ரோ இத்துடன் சேர்ந்து இன்னொரு கம்பேனியும். இது போல உள்ள கம்பேனிகளின் லிஸ்டை வெளியிட இருக்கிறார்கள்.

இவர்களை தடை செய்வதற்கு உலக வங்கி சொல்லும் காரணம்:
"Improper benefits to Bank staffs".

இந்த கம்பேனிகள் தமது கிளையண்டை பிடிக்க எல்லா வகை மோசடிகளீலும் ஈடுபடுவார்கள். வெளியே ரொம்ப யோக்கிய கனவான்கள் போல வேசமிடம் இவர்கள் (நீல்கேனி போன்றவர்கள்) உண்மையில் இப்படிப்பட்ட 420 கும்பல்கள்தான். அவர்கள் கிளையண்டை பிடிக்க செய்யும் மோசடிகள்

ஊற்றிக் கொடுப்பது முதல் கூட்டிக் கொடுப்பது வரை அடங்கும்.

சமீபத்தில் வினிதா என்கிற நடிகை மாட்டிக் கொண்ட சம்பவத்தில் அவருடன் இருந்த வெளிநாட்டு கிளையண்டும், இந்திய கம்பேனியும் சேர்ந்து அம்மணமாக நின்றனர்.

அது போல ஊழல்படுத்தி உலக வங்கி ஊழியர்களை தன் வசப்படுத்தினார்கள் என்பதே இவர்களை தடை செய்ய உலக வங்கி சொல்லும் குற்றச்சாட்டு.

அவர்கள் சொல்லும் இன்னொரு குற்றச்சாட்டு இவர்கள் வெளிப்படையான நடைமுறை கொண்டவர்கள் அல்ல என்பது.


http://web.worldbank.org/WBSITE/EXTERNAL/NEWS/0,,contentMDK:22030864~pagePK:64257043~piPK:437376~theSitePK:4607,00.html
""
This change was made in the interest of fairness and transparency.
""

இப்படிப்பட்ட கம்பேனிகளை பிராடு அன்டு கரப்பசன் (மோசடி மற்றும் ஊழல்) பக்கத்தில் இட்டுள்ளது உலக வங்கி.


""""


""""
இப்படி பொய் சொல்லி மோசடி செய்து மாமா வேலை செய்யும் இந்த கம்பேனிகளும், முதலாளிகளும் தான் இந்தியாவை வளர்க்கிறார்களாம், திறமையானவர்களாம்.

விவசாயியும், மக்களும் திறமையற்றவர்களாம் மோசடிக்காரர்களாம். போங்கடாங்....

இந்த பச்ச புள்ளகளத்தான் நம்ம அரசியல்வியாதிங்க கெடுத்துட்டாங்களாம்... ஏதோ ஒரு படத்துல சத்யராஜ் சாராயம் குடித்ததற்கு கவுண்டமணியை திட்டும் மனோராமா அது மாதிரி, இந்த ஊழல் சிகாமணிகள்தான் அரசியலையும், அரசையும் ஊழல்படுத்தி தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.


////புகுந்த(அரசியல்) கொஞ்ச நாட்களிலேயே சத்யம் அப்படிங்கிற மிகப்பெரிய கம்பெனியை காலி பண்ணிட்டாங்க. ////

தகவல் தொழில்நுட்பத் துறை மட்டுமல்ல ஒட்டு மொத்த கார்போரேட் முதலாளித்துவ கும்பலே ஊழல் கும்பல்தான்.

"முதலாளித்துவம் இயங்குவதே இந்த அரசை ஊழல் படுத்துவதன் மூலம்தான்"

முக்காலமும் உணர்ந்த முனிவன்


""""


அசுரன்

தொடர்புடைய பதிவுகள்:

ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா !!

ராமலிங்க ராஜூ கோவிந்தா, கோவிந்தா

வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் IT ஊழியர்களே! உங்கள் பாரங்களை (முன்னாள்)சத்யம்-ன் பிராபாத்திடம் இறக்கி வையுங்கள்!!

Tuesday, June 12, 2007

மக்கள் மீது மலம் கழிக்கும் நாட்டை 'பீ' காடாக்குவோம்!

ங்க நாற்க்கர சாலைகள் என்ன?, பட்டன் அளவே உள்ள கைத் தொலைபேசிகள் என்ன? வித விதமாய் ஆடைகள், ஆங்கில படங்களுக்கு நிகராக தமிழகத்திலேயே வாழ்க்கை நடத்த பன்னாட்டு கம்பேனிகள் வீட்டு வாசலில் வந்து நமது உச்சி முகர்ந்து கொஞ்சி கூத்தாடும் அற்புதம் என்ன? என்னே இந்த இந்தியாவின் வளர்ச்சி பாரீர்.

ஆனால் இதே இந்தியாவில் மிகப் பெரும்பான்மை மக்கள்(30% மேல்) 12ரூபாய் காசில் தின வாழ்க்கையை ஓட்டும் அவலமும் நடக்கிறது. இதே இந்தியாவில்தான் காலையில் மலம் கழிக்க இடமின்றி மக்கள் அல்லலுறும் அவலமும் நடந்தேறுகிறது.

அட நீ ஒன்னு, அவிங்கள்ளாம் கொழுப்பெடுத்தவனுங்க, காலைக் கடன்களை ரோட்டிலேயே இருப்பானுங்க இன் டீசண்ட் ஃபேலோஸ் - இப்படி ஒரு அல்பை அலுத்துக் கொள்வது காதில் கேட்க்காமலில்லை. ஆமாம் கிராமங்களில் அவர்களது வாழ்க்கையை தொலைத்த அவ்ர்கள் இன் டீசண்ட் ஃபேலோஸ்தான், வாழ்வுரிமை பறிக்கப்பட்ட இந்த பெரும் பட்டாளத்தை குறைந்த கூலிக்கு நகரங்களில் சுரண்டி தின்க்கும் நடுத்தர மற்றும், உயர் வர்க்கமோ டீசண்டொ டீசண்ட்.... தூ..... உண்மையில் காலை மலத்தின் அதி அற்புத மணத்தை விட இவர்களின் இந்த பிழைப்புவாத கள்ளமௌனமும், நாகரிகம் குறித்த பொய் நடிப்புகளுமே ஆகக் கேவலமாக மூக்கையடைக்கிறது.

இந்த பெரும்பான்மை மக்களின் அடிப்படை உரிமைகளை வெறுமே பிரச்சாரம் செய்து சொன்னால் அவர்களை சுரண்டுபவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? இப்படித்தான் ஒரு காந்திய கற்பனாவாதி சொல்லிக் கொண்டிருக்கிறார். உண்மையில அவரது சித்தாந்தத்தில் அவருக்கே நம்பிக்கை கிடையாது ஆயினும் ஒவ்வொருவருக்கும் தன்னை பற்றி ஒரு பிம்பத்தை உருவாக்கி பராமரிக்கும் நிர்பந்தம் உள்ளதல்லவா? நம்ம கற்பனாவாதிக்கும் அந்த அளவில் காந்தி தேவைப்படுகிறார் போலும். துரதிருஷ்டவசமாக காந்தியே இந்த விசயத்தில் படு கயமைத்தனமானவர். இப்படி பிரச்சாரம் செய்து அடக்கும் வர்க்கத்தை திருத்தி சமனிலை உருவாக்கலாம் என்று இவர் போன்றவர்கள் ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் மக்கள் தங்கள்து உரிமைகளை தாங்களே மீட்டெடுக்கும் போராட்ட வழிமுறைகளை இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் பரிசோதிக்கத் துவங்கியுள்ளனர்.

SEZக்களுக்கு எதிரான போராட்டங்கள் - வட கர்நாடக, புதுச் சேரி, சென்னை, பஞ்சாப், ராஜஸ்தான், நந்திகிராம், சிங்கூர் என்று பற்றிப் பரவுகிறது, சில்லறை வியாபாரி ரிலையன்ஸ் அம்பானி போலிஸ் பாதுகாப்புடன் தான் கடை நடத்த வேண்டும் என்ற நிலை ராஞ்சியில், பெருத்து தடித்து கொழுத்த ஊடகங்களோ அய்யரின் ஆசன வாயில் இருந்து வரும் வளிக்கு கொடுக்கும் முதற் பக்க முன்னுரிமையை மறந்தும் கூட இது போன்ற மக்கள் திரள் போராட்டங்களூக்கு கொடுப்பதில்லை. இதே போன்றதோரு போர்க்குணமிக்க போராட்டம் சமீபத்தில் கோயெம்பேடை ஒட்டியுள்ள மதுரவாயல் நகராட்சி பகுதியில் நடந்தது.

போபால் விசவாயு நடந்து வருசம் பல ஆகி விட்டது கற்பனாவாத போராட்டங்களை நடத்தி கண்ட பலன் ஒன்றுமில்லை. அதே விசவாயு குரூப் மேற்கு வங்கத்தில் Dow Chemicals என்ற பெயரில் மீண்டும் கடை பரப்பும் அவலம் தவிர. நர்மதா போராட்டம்... அடேங்கப்பா எத்தனை கவர்ச்சிகரமான போராட்டம் அது. பிருமாண்டமான பின்னனியுடன் அதனால் சாதிக்க முடிந்தது எல்லாம் ஒரு தேசிய விவாதத்தை எழுப்பியதை மட்டுமே. தேசிய விவாதஙகள் எழுவது என்ன புதிய விசயமா என்ன? பெண்களை கள்ள பாஸ்போர்ர்டில் கடத்தியோ, நாடாளூமன்றத்தில் பேசுவதற்க்கு துட்டு வாங்கியோ சுலபமான பல வழிகளில் தேசிய விவாதத்தை கிளப்பலாம். மணிப்பூரின் விடுதலைக்காக 6 வருடங்களாக உண்ணாவிரதம் இருந்து கண்ட பலன் மதிய இடைவேளியில் வயிறு முட்ட உண்ட பிற்பாடு ஒரு சுகமான ஏப்பாத்திற்க்கு பிற்பாடு வெளி வந்த ச்சோ... ச்சோ.. மட்டுமே.

அருந்ததிராய் சொல்கிறார்: "வன்முறையற்ற போராட்டங்களுக்கான முயற்சிகள் ஒவ்வொன்றின் மீதும் இந்த அரசு தனது கதவுகளை அறைந்து சாத்திவிட்டது. மக்கள் இப்பொழுது அதிகமாக துப்பாக்கிகளை நாடுகிறார்கள்"

மதுரவாயல் மக்களுக்கும் கூட இதே அனுபவம்தான். அருந்ததிராய் இங்கு துப்பாக்கி என்று சொல்வதை ஒரு குறீயீடாக எடுத்துக் கொள்ளலாம். அதாவது இந்த அரசு நமக்கான அரசு அல்ல என்பதை புரிந்து கொண்டு மக்கள் அதற்கேற்ப போராட்ட வடிவங்களை தீர்மானிக்கும் தன்மையை குறிப்பதாக கொள்ளலாம். மதுரவாயல் மக்களும் பல முறை முயன்ற பிற்ப்பாடு தங்களது போராட்ட முறைகளை மாற்றினர். கோரிக்கை வைத்து பலனில்லை. தாம் அனுபவிக்கும் துன்பம் என்னவென்பதை மணக்க மணக்க சம்பந்தப்பட்ட அரசுக்கு புரியவைப்பதே ஒரே வழி என்று தீர்மானித்து முள்ளை முள்ளால் - வன்முறையை வன்முறையால் ஈடுகட்ட களமிறங்கினர்.

மதுரவாயல் நகராட்சி அலுவலகத்தையே தமது தற்காலிக கழிவறையாக்க தீர்மானித்து ஒரு நல்ல நாளில் நகராட்சி அலுவலகத்தில் மலம் கழிக்கும் போராட்டத்தை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் நடத்தத் தீர்மானித்தனர். விசயம் கேள்விப்பட்ட அரசு நிர்வாகிகள் நிலையை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. காலையில் ஒருவர் உள்ளே போய் 'வெளியே' வந்த பிற்பாடு அடுத்த ஆள் உள்ளே போவதற்கே பல்வேறு சுவாசப் பிரச்சனைகளை சந்திக்கும் அவர்களுக்கு நாள் முழுவதும் ஒரு கழிப்பறையில் உட்கார்ந்து வேலை பார்ப்பது என்ற விசயம் கனவில் கூட கற்பனை செய்து பார்க்க முடியாத கோடுரமே. தமது மூக்கை பாதுகாக்கும் குறைந்த பட்ச தேவையை முன்னிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க முனைந்துள்ளது அரசு நிர்வாகம். அழுத குழந்தை பால் குடிக்கும் - லட்சம் விவசாயிகளின் தற்கொலை சாவு ஒரு டீக்கடை உரையாடலுக்கான தகுதியைக் கூட இழந்த அவலமும், 12 நந்திகிராம் மற்றும் ஒரிஸ்ஸா கலிங்காநகர் போராளிகளின் தியாகம் நாட்டையே உலுக்கி மக்கள் விரோத திட்டங்களை ஓட ஓட விரட்டிய அற்புதமும் நம் கண் முன்னே காணக் கிடக்கிறது. மலத்தை விசிறியடிக்கும் இந்த போராட்டமும் கூட இரண்டாம் வகையீனமே. அரசு, கலாச்சார நிறுவனங்களும் பல நுண்ணிய தளங்களீல் மக்கள் மீது வன்முறை செலுத்துகிறது எனில் மக்களின் எதிர் நடவடிக்கையும் அதற்க்கிடான நுண்ணிய தளங்களில் எதிர்வன்முறை செலுத்தும் வகையிலே அமைந்து விடுகிறது.

இரங்கிக் கேட்டு இதுவரை இந்த நாட்டாமை அரசும் நமது குரலுக்கு செவிமடுத்ததாக வரலாறு இல்லை. இதோ மதுரவாயல் மக்கள் மீண்டும் நமக்கு சொல்லித் தருகிறார்கள் - இந்த அரசுக்கு எப்படி லாடம் கட்டுவது என்று. ஜனநாயகம், நாகரிகம் என்று வழக்கம் போல ஏமாந்த சோனகிரி அல்பவாதிகள் புனிதங்களின் போதையில் மயங்கிக் கிடக்கட்டும். நாம் அநீதிகளை கண்ட இடத்திலேயே பொசுக்கும் மன வலிமை கொண்டு இயங்க வேண்டிய காலங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன.

அசுரன்

பின்னுட்டத்தில் இது குறித்து செய்தி கொடுத்த அனானிக்கு நன்றி!

கழிவறை கட்டித்தர வக்கில்லாத மதுரவாயல் நகராட்சியை மலக்காடாக்குவோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

சென்னை மாநகரத்தின் நுழைவு வாயில்களில் ஒன்றான கோயம்பேட்டின் அருகில் உள்ளது மதுரவாயல் நகராட்சி. இந்த நகராட்சியின் 2 - வது வார்டுதான் பிள்ளையார் கோவில் தெரு பகுதி. இப்பகுதியில் கடந்த 25 வருடங்களாக எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் சுமார் 2000 குடும்பங்கள் வசித்து வருகின்றன. குறிப்பாக மனித கழிவுகளை வெளியேற்றுவதற்கு கக்கூசு (கழிவறை) கூட இல்லாதது, இப்பகுதி அவலத்தின் உச்சம்.

ஒரு வீடோ , அலுவலகமோ கட்டும்போது அங்கு முதலில் அமைப்பது குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள்தான். இதை நகராட்சி விதிமுறைகள் கூட கூறுகின்றன. ஆனால் வரிவசூல் மூலம் கொள்ளையடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள இப்பகுதி நகராட்சியோ உழைக்கும் மக்களின் அடிப்படை வசதிகளைப்பற்றிக் கண்டு கொள்வதே இல்லை.

கடந்த 2003 ஆம் வருடத்திலிருந்து இலவச கழிவறை கட்டித்தர வேண்டுமென்று பலமுறை நகராட்சித் தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது. பகுதி மக்களுடன் நேரில் சென்று கோரிக்கையும் வைக்கப்பட்டது. ஆனால் பலன் ஒன்றும் இல்லை.

ஒருபுறம் உழைக்கும் மக்கள் பிரச்சினையை மயிருக்குச் சமமாக நினைக்கும் மதுரவாயல் நகராட்சி, மனுக்களையும், கோரிக்கைகளையும் குப்பையில் வீசி எறிந்து விட்டது. மறுபுறம், அருகிலுள்ள V.G.P. குடியிருப்பு, 'மேட்டுக்குடி' முதலாளிகளுக்கு காற்று வாங்கவும், உடற்பயிற்சி செய்யவும், அழகிய பூங்காவை அவர்கள் கேட்காமலேயே அமைத்துக் கொடுத்து வர்க்க பாசத்தோடு நடந்து கொள்கிறது.

இப்படிப்பட்ட ஆட்சியாளர்களின் தடித்த தோலுக்கு உறைக்கும் வகையில்தான் 2004-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மலம் கழிக்கும் போராட்டத்தை அறிவித்தோம். அறிவிப்பைக்கண்டு அரண்டு போன நகராட்சித் தலைவர் 6 மாதத்தில் கழிவறை கட்டித் தருவதாக உறுதியளித்தார். காலம் ஓடியது, தேர்தலும் நடந்தது, நகராட்சித் தலைவரும் மாறினார். ஆனால், இப்பகுதியில் அவலம் மட்டும் இன்னும் மாறவே இல்லை.

இதற்கெல்லாம் காரணம் என்ன?

சாலைகளை அகலப்படுத்த வேண்டுமென்றால் யாரையும் கேட்காமலேயே சாலை ஓரத்திலுள்ள வீடு, கடைகளை இடித்து தேவையான இடத்தை எடுத்துக்கொள்ளும் நகராட்சிக்கு பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் கழிவறை கட்ட மட்டும் இடம் இல்லையா? மக்களிடம் கட்டாயமாக வரி வசூலித்து சம்பளம், கார், டெலிபோன் வசதி, நகராட்சி கூட்ட செலவு என்று மக்கள் பணத்தை லட்சக்கணக்கில் வீணடிக்கும் நகராட்சியில் பணம்தான் இல்லையா? இதுவல்ல காரணம்.

உண்மை என்ன தெரியுமா?

தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற நாசகார கொள்கைகளை ஏற்றுக் கொண்டு, 'காட்ஸ்' என்ற ஒப்பந்தத்தை அனைத்து ஓட்டுக் கட்சிகளும் கொண்டு வருகின்றன. அதனால்தான் கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இன்று நம் போற உழைக்கும் மக்களுக்கு மறுக்கப்படுகின்றன. சேவைகள் அனைத்தும் லாபகரமான தொழிலாக மாற்றப்பட்டு வருகின்றன.

எனவேதான் இந்த அரசுகள் நகராட்சிகள் மூலம் கழிவறை கட்டுவதற்கான நிதி ஒதுக்கீட்டை படிப்படியாகக் குறைக்கின்றன. சுலாப் இண்டர்நேஷனல் என்ற கட்டணக் கழிப்பறைகளை அனுமதிக்கின்றன. எனவே ஆட்சியாளர்களின் பொய் வாக்குறுதிகளை நம்புவதில் பயன் இல்லை. வீதியில் இறங்கி போராடினால் மட்டுமே நமது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும்.

அத்தகைய போராட்டங்களால் மட்டுமே ஆட்சியாளர்களை பணிய வைக்கவும் முடியும் என்பதற்கு நமது பகுதிக்கு அருகிலுள்ள பாடிக்குப்பம் மக்கள் தொடர்ச்சியாகப் போராடி இலவச கழிவறை பெற்றுள்ளது முன்னுதாரணமாகும். அவர்கள் வழியில் நாமும் உறுதியாகப் போராடுவோம். கோரிக்கையை வென்றெடுப்போம். நிறுத்தி வைத்த மலம் கழிக்கும் போராட்டத்தை நடத்திடுவோம். "நம்முடைய வேதனைகள் நகராட்சிக்குத் தெரிய வேண்டுமென்றால் அதை அவர்களும் அனுபவிக்க வேண்டும்" என்ற வகையில் மதுரவாயல் நகராட்சி அலுவலகத்தைப் "பீ"க் காடாக்குவோம்!

மலம் கழிக்கும் போராட்டம்

04-06-2007
காலை 5.30 மணி மதுரவாயல் நகராட்சி அலுவலகம்

RSYF புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சென்னை.

தொடர்புக்கு
வ.கார்த்திகேயன் நெ.1 பிள்ளையார் கோவில் தெரு, மதுர வாயல் சென்னை-95 செல்: 944516625

Tuesday, January 30, 2007

தமிழ் மக்கள் இசை விழா - நிகழ்ச்சிநிரல்

தமிழ் மக்கள் இசை விழா
- பதினான்காம் ஆண்டு

___________________________________________________________________________ மறுகாலனிய, பார்ப்பனியப் பண்பாட்டுப்படையெடுப்பிற்கெதிரான போர் முழக்கம்.
___________________________________________________________________


பிப்ரவரி 24, 2007 சனிக்கிழமை
_________________________
தஞ்சை-திருவள்ளுவர் திடல்
__________________
காலை : கருத்தரங்கம்
_______________________
மாலை : கலை நிகழ்ச்சிகள்
____________________




காலனியாதிக்க எதிர்ப்பு மரபு !
மறுகாலனியாக்கம் எதிர்த்து முழங்கு !



அன்பார்ந்த உழைக்கும் மக்களே,


ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிரான சுதந்திரப் போர், தென்னகத்தில்தான் முதன்முதலில் மூண்டெழுந்தது. திப்பு, மருது, கட்டபொம்மன், ஊமைத்துரை, சுந்தரலிங்கம், தீரன் சின்னமலை, தூந்தாஜி வாக் என எண்ணற்ற வீரர்கள் இந்த விடுதலைப் போரில் உயிர் துறந்திருக்கின்றனர்.


இது மன்னர்களும் படைவீரர்களும் மட்டும் நடத்திய போர்அல்ல; ஆயிரக்கணக்கான மக்களும் விவசாயிகளும்பங்கு கொண்ட மாபெரும் மக்கள் போர். 1800-01 ஆண்டுகளில் தென்னிந்தியா முழுவதும் நடைபெற்ற இந்தப்போர்தான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர்.


ஆனால் பெருமை மிக்க இந்த விடுதலைப் போராட்ட மரபு இந்திய வரலாற்றில் புறக்கணிக்கப் பட்டிருக்கிறது. 1806 வேலூர் சிப்பாய் புரட்சி என்பது இந்த முதல்சுதந்திரப் போரின் வீரமிக்க முடிவுரை.


அந்த வீரம் செறிந்த வேலூர் புரட்சிக்கு இது 200ஆம் ஆண்டு.


வட இந்தியா முழுவதும் காட்டுத்தீ போலப் பற்றிப்படர்ந்து ஆங்கிலேய அரசையே அலறவைத்த 1857சுதந்திர போருக்கு இது 150ஆம் ஆண்டு.


வ.உ.சி யின் 'சுதேசிக் கப்பல் கம்பெனி' துவங்கப்பட்டதற்கு இது நூற்றாண்டு.


விடுதலைப் போரின் விடிவெள்ளி, பகத்சிங்கின் பிறந்த நாளுக்கு இது நூற்றாண்டு.


நேரடிக் காலனியாதிக்கத்தைக் காட்டிலும் கொடிய மறுகாலனியாதிக்கம் இன்று நம் நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் சூழலில், அன்றைய விடுதலைப் போரின் வீரமரபை இந்த இசைவிழாவில் நினைவு கூர்கிறோம். தனியார்மய தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், சிறுவணிகர்கள் போன்ற எல்லாத் தரப்பு மக்களையும் இந்த விழாவில் பங்கேற்க அழைக்கிறோம்.


****************
தங்கள் நன்கொடைகளை அனுப்பி இசை விழாவினை சிறப்பிக்கலாம்.
****************


காசோலைகளாக அனுப்பவும்.

Name: paanumathi srinivaasan
Bank : State Bank of India
Bank Code No : 1852
Account No : 10098061432



அனுப்ப வேண்டிய முகவரி:

இரா.சீனிவாசன்,
எண் - 4, 5-வது தெரு,
ஜெகந்னாதபுரம்,
சேத்துப்பட்டு,சென்னை- 600 031


***
மேல் விவரங்களுக்கு புத்தகப்பிரியன் வலைப்பூவை அனுகவும்.


நன்றி புத்தகப் பிரியன்,

அசுரன்


****************************************************
தோழர் சபாபதி சரவணனின் சிறப்பு அழைப்பு:
****************************************************

வலையுலக தோழர்களில் யார் யார் கலந்து கொள்ளப் போகிறீர்கள் என்பதை இங்கோ அல்லது எனக்கு தனிமடலிலோ (wewakeananda@yahoo.com) தெரியப்படுத்தினால் மகிழ்ச்சி. எல்லோரும் சந்தித்து மகிழ ஆவல்.
ஒரு முக்கிய குறிப்பு: எல்லா ஆண்டு போலவும் இவ்வாண்டும் 10 ரூபாய் மாட்டுக் கறிச் சாப்பாடு விழா அரங்கத்தில் கிடைக்கும். என்னைப் போல் சில்லி பீப் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.



தமிழ் மக்கள் இசை விழா - நிகழ்ச்சிநிரல்





Related Posts with Thumbnails