TerrorisminFocus

Wednesday, November 11, 2009

சுகாதாரத்துறை தனியார்மயம் - தாய்மையை கருவறுக்கும் அவலம்

னியார் மருத்துவமனைகளுக்குச் சென்றால் முதலில் கேட்க்கப்படும் கேள்வி மருத்துவக் காப்பீடு இருக்கிறதா என்பதுதான். ஆம் என்று சொன்னால் ஆபத்து அங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று பொருள். நமக்கு தேவையோ இல்லையோ எதையாவது அறுத்துக் கட்டி, எக்ஸ்ட்ரா பணம் சேர்த்து காப்பீட்டின் மூலம் கறந்துவிடுவார்கள் தனியார் மருத்துவமனைகள்.

இந்த அவலம் எந்தளவுக்குச் சென்றுள்ளது என்றால், அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொண்ட பெண்களுக்கு அவர்களின் கருப்பை வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இப்படி வெட்டி எடுப்பது தேவையே இல்லை என்ற போதிலும் பண வெறி பிடித்தழையும் தனியார் மருத்துவமனைகள் இவ்வாறு செய்து வருவது வெளி வந்துள்ளது.

ஒரு பக்கம் தரகு பன்னாட்டு முதலாளிகளுக்கு வருடா வருடம் வரி தள்ளுபடியாக மட்டும் பல லட்சம் கோடிகளில் கொடுத்துள்ள அரசு, இன்னொரு பக்கம் அடிப்படை வசதிகளை தனியார்மயப்படுத்தி வருகிறது. இவ்வாறு மிகப் பெரிய அளவில் தனியார்மயமான ஒரு துறைதான் மருத்துவத் துறை. ஏற்கனவே, ஏழை எளிய மக்களிடம் மதுரை, சென்னை, கோவை நகரங்களில் கிட்னி திருடப்பட்டது போன வருடம் வெளிவந்தது. இந்த வருடம் தாய்மை திருடப்படுகிறது.

மக்களின் வரிப்பணத்தில் தரகு பன்னாட்டு முதலாளிகளுக்கு அள்ளி வழங்கும் அரசு. மக்களுக்கு அத்தியாவசியமான சுகாதரத்துறையிலும் அவர்களை கை விட்டு அனாதரவாக அலைய விடுகிறது. தனியார் மருத்துவமனைகள் ஒன்றுதான் ஒரே கதி என்ற நிலைக்கு தள்ளியுள்ளது. இதனை வைத்து தனியார் மருத்துவ கம்பெனி பிசினஸ் சக்கை போடு போடுகிறது. மக்களின் வாழ்க்கையோடு விளையாடும் மருத்துவத்துறை ஏற்கனவே இந்தியாவில் மிக அதிகப்படியாகவே தனியார்மயப்படுத்தப்பட்டுள்ளது. அதில் மிச்ச சொச்சம் இருக்கும் தொழில் நேர்மை, மருத்துவரின் புனிதம் போன்ற பழைய உலகத்து அடையாளங்கள் சுத்தமாக வழித்தெடுக்கப்பட்டு உலகமய கொள்கைகளுக்கு ஏற்ப மருத்துவத்துறையும் முதலாளித்துவ லாப வெறிக்கு இரையாகி வருகிறது. மெரினா பீச்சில் கிரிக்கெட் விளையாண்டால் மண்டை உடையும், அமைதி கெடும் எனவே தடை செய்தது சரி என்று பேசிய மிக நல்லவர்கள் எல்லாம் இது போன்ற பிரச்சினைகளைப் பற்றி பேசும் போது காணாமல் போய் விடுகிறார்கள்.

நாட்டை வல்லரசாக்குகிறோம் என்ற பெயரில் தனியார்மயம், தாராளமயம், உலகமய கொள்கைகள் மூலம் இந்த நாடு கருவறுக்கப்படுவதன் அம்சங்களாகத்தான் இவை நடைபெறுகின்றன. இத்தகைய தனியார்மயமும், லாப வெறியும், போட்டியும் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டால் நாளைய உலகம் சுடுகாட்டில்தான் வசிக்கும்.


Surgeries under govt insurance plan in question
Publication: The Times Of India - Chennai; Date: Nov 10, 2009; Section: Front Page; Page: 1
Hysterectomy On Many Women Was ‘Needless’

Pushpa Narayan | TNN

Chennai: At 25, it was a surgery Meena Kumari least expected. She had complaints of an irregular menstrual cycle last year. A city-based private hospital then diagnosed a small fibroid as the problem and removed her uterus. Covered as she was by the government employees’ health insurance scheme, the hospital sent a Rs 40,000 bill to the insurance company.

Sounds routine, but her surgery has now been termed “needless” by an expert panel of doctors from the insurance company running the scheme. What’s more, an ongoing audit by doctors working for Star Health and Allied Insurance has revealed that Meena’s case resembled a sizeable number of hysterectomies done under the scheme in the last one year — they were unwarranted and left many young women unfit to conceive.

The findings suggest medical ethics violations and an excessive tendency to use elaborate procedures on patients, presumably to inflate bills. “Many young women need not have gone through the surgery. Many of them needed just medicines to regularise their periods. They had no family history of cancer or any problem with their reproductive system,” said V Jagannathan, chairman, Star Health, who has recently been holding marathon meetings against such practices.

The insurance scheme covers 12 lakh government employees and their dependents. Since its launch in late 2008, 16,000 women have undergone hysterectomies or overectomies for removal of uterus or ovaries. According to the data, 30% of the surgeries were suspect, and of these, at least 540 women were in the age group of 25-35 — and more than 100 in the 20-30 age group. As a result of the surgery, many of those under 30 may have hit menopause early, apart from losing all chances of bearing a child.

Under The Knife

At least 540 women in 25-35 age group have had their uterus or ovaries removed

Case sheets of patients show that for fibroids as small as 1.4cm, uterus and ovaries have been removed

Around 30% of such surgeries have been termed needless by doctors employed by insurance firms

Tamil Nadu health secretary VK Subburaj said the state health department was yet to get any formal complaint Hospitals warned on unwanted surgeries

Chennai: An audit by doctors working for Star Health and Allied Insurance has revealed that tendency to use elaborate procedures on patients to inflate bills is commonplace.

“One patient told us how she had agreed to the surgery only because she was told the fibroid could turn cancerous,” Star Health chairman Jaganathan said.

Parallel audits on other insurance schemes show that uterus removal for women below 30 years was very low. “We have 1.5 lakh women under the age of 35 covered under the company’s own general health insurance scheme. Of this, just seven women below the age of 35 have had their uteruses removed,” Jagannathan said.

Case sheets of patients billed to Star show that for fibroids as small as 1.4cm, many patients in the government scheme had had their uterus and ovaries removed. Reacting to the findings, fertility expert Dr Priya Selvaraj said: “As far as possible, we ensure that a woman retains her reproductive organs.”

Health secretary VK Subburaj said the health department was yet to get any formal complaints. “If any hospital is found violating rules we will initiate criminal action,” he said. Recently, the insurance company removed two private hospitals in Nagercoil and Kanyakumari for charging extra from beneficiaries of the Kalaignar health insurance scheme.

There are also false claims by some hospitals. A patient who underwent cataract surgery was found not to have an intra-ocular lens implanted as mentioned in the bill.

Finance secretary G Gnanadesikan said state employees had benefited much from the scheme. “We paid premium of Rs 120 crore for 12 lakh employees, who get Rs 2 lakh cover for two years. At the end of the first year, we have received claims for more than Rs 125 crore.”


அசுரன்

தமிழக அரசின் மருத்துவக் காப்பீடு திட்டம்: மு.கவின் கருணையா? நரித்தனமா?

அமெரிக்கா - மருத்துவ காப்பீட்டின் அவலங்கள்!

தரகு முதலாளிகளுக்கு மானியம் தொழிலாளிகளுக்கு திருவோடு

திவாலாகும் அமெரிக்காவிற்கு அடிமையாகும் இந்தியா !

உலக வங்கி உத்தரவு : தனியார்மயமாக்கும் ஆரம்ப சுகாதார மையங்கள்

மருந்துப் பரிசோதனை: சோதனைச்சாலை எலிகளாக மாற்றப்படும் ஏழைகள்

சிறுநீரகக் கொள்ளை :வெட்கங்கெட்ட இந்திய அரசு

தாய்மையை விலை பேசும் உலகமயம்

தாய்மை விற்பனைக்கு

Wednesday, November 04, 2009

மீள் பிரசுரம்: வந்தே ஏமாத்துறோம் - ஒரு தேச பக்தி பாடலா?

மறுபதிப்பு: ஆகஸ்டு 2006ல் பதிப்பிக்கப்பட்ட இந்தக் கட்டுரை காலப்பொருத்தம் கருதி மீண்டும் மறுபதிப்பு செய்யப்படுகிறது. விமர்சனங்கள், விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன. தோழி லிவிங் ஸ்மைல் அந்தக் குறிப்பிட்ட பதிவில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சில தேவையற்ற வார்த்தைகள் நீக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.

இந்தக் கட்டுரையை மீண்டும் வெளியிடும் தேவை என்ன? சமீபத்தில் ஒரு முஸ்லீம் அமைப்பு வந்தே மாதரத்தை முஸ்லீம்கள் பாடக் கூடாது என்று தடை விதித்துள்ளது. இது போல மத அமைப்புகள் மக்களின் சமூக வாழ்வில் தலையிடுவதும், முடிவெடுப்பதும் அராஜகமானது என்பதும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், இதை விட முக்கியமாக இந்தப் பிரச்சினையை வழக்கம் போல தனது மத வெறி பிரச்சாரத்திற்கு ஆர் எஸ் எஸ், பாஜக பயங்கரவாதிகள் பயன்படுத்துவதை எதிர்த்து பிரச்சாரம் செய்வதே முக்கியமானது என்று கருதுகிறேன். முஸ்லீம்கள் மட்டுமல்ல, மக்கள் மீது காதல் கொண்டவர்கள் யாருமே இந்த கேடு கெட்ட பாடலை பாட மாட்டோம் என்று சொல்வதுதான் நியாயமானது என்பதை உரக்கச் சொல்ல வேண்டியுள்ளது. அந்த அடிப்படையிலேயே இந்த கட்டுரை மீள் பிரசுரம் செய்யப்படுகிறது.

மேலும், சமீப காலங்களில் வலையுலகில் முற்போக்கு, ஜனநாயக சக்திகளின் குரல் வலுவிழந்து வருவதும், தீடிரென மேல்தட்டுக்கு உயர்ந்துள்ள நடுத்தர வர்க்கத்தின் அரைகுறை நாட்டுப்பற்று இந்துத்துவத்தின் குரலாக ஒலிப்பதும் அதிகரித்துள்ளது. இதனை முன்னிட்டு குறிப்பான பிரச்சினைகளில் முற்போக்கு கருத்துக்களை பரவலாக எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்தும் வகையிலும் இந்தக் கட்டுரை மீள் பிரசுரம் செய்யப்படுகிறது.

தோழமையுடன்,
அசுரன்

##############################

வந்தே ஏமாத்துறோம் - ஒரு தேச பக்தி பாடலா?

"எனக்கு அவன் கொடுத்த செக் திரும்பி வந்திடுச்சுண்ணே."


"விளக்கமா சொல்லு"


"அண்ணே.. அவனுக்கு நான் பத்தாயிரம் பணம் கொடுத்திருந்தனா.. அதை அவன்கிட்ட திருப்பிக் கேட்டப்போ அவன் ஒரு செக் கொடுத்திருந்தான்னே.. அது பேங்கில திரும்பி வந்துடுச்சு.. என்னன்னு கேட்டு பணத்த வாங்கித்தாங்க!"


"நீ எப்போ அவனுக்கு..பணம் கொடுத்தே?"

"அவன் பொண்டாட்டி ஓடிப்போவதுக்கு முன்னாடி?"

"என்னது அவன் பொண்டாட்டி ஓடிப்போயிட்டாளா? யார் கூட? அந்த நெட்டையா ஒருத்தன் ஊடகீட வந்துகிட்டு இருந்தானே அவனோடயா? ஏம்பா ஏன் என்கிட்டே சொல்லல இத?"

"அண்ணே! விசயம் அது இல்லண்ணே! செக்கப் பத்திக் கேளுங்க!"

"கொஞ்சம் சும்மா இருப்பா நீ! எவ்வளாவு நாளாப்பா அவன்கூட ஒன் பொண்டாட்டி பழக்கம்? எங்க ஓடிப் போனாங்க?"

********



இந்த மாதிரி உரையாடலை காமெடி என சினிமாவில் ரசித்திருப்பீர்கள்.. நிஜத்திலும் இவ்வாறு நடந்து கொண்டுள்ளது இந்தியாவில் காங்கிரசு, பிஜேபி எனும் ஆளும் வர்க்கக்கட்சியின் வடிவில்.

வந்தே ஏமாத்தறோம் பஜனையின் பிண்ணனி:

நாட்டின் சுரங்கங்கள், விமான ஓடுதளங்கள், நிலையங்கள், ஆறு, நிலத்தடி நீர் என ஒன்றும் பாக்கி இல்லாமல் அன்னியனுக்குக் காட்டிக் கொடுத்தாயிற்று.. சுயசார்புக்கொள்கையை அணுசக்தித்துறையில் கைகழுவி அமெரிக்காவிடம் சரணாகதி ஆன விசயம் மக்களிடம் அம்பலமாகி நிற்கும் வேளையில் 'வந்தேமாதரம் பஜனை'யைக் கையில் எடுத்துள்ளனர் இரு கயவாளிகளும்.

தேசபக்தி என்பது வெறும் பஜனைப்பாட்டு அல்ல. அது கோடானுகோடி உழைக்கும் இந்திய மக்களின் நலனுக்காக சிந்திப்பதாகும். இவர்களின் நலனை அன்னியனிடம் அடகு வைத்த விசயம் அம்பலமாகும்போது அதிலிருந்து மக்களை திசை திருப்பும் உத்தியாகவே இவர்கள் செய்து வரும் வாதம் உள்ளது. (செக்கு திரும்பி வந்த விசயத்தை விட்டு விட்டு பொண்டாட்டி ஓடிப்போனது பற்றிப் பேச ஆரம்பிக்கும் காமெடியை நினைவுகொள்க).

இவர்கள் இப்படி வந்தே மாதரம் பற்றிய சர்ச்சையை நடத்திக்கொண்டிருக்கையிலேயே ஓசையில்லாமல் கோக்கோகோலா கம்பெனிக்காரனுக்கு 'நற்சான்றிதழ்' தரும் மாமா வேலையை அமெரிக்க அடிமை மன்மோகன்சிங்கின் கூலிப்படை செய்து விட்டது.

இதே தாசானுதாசன், கொஞ்ச நாளுக்கு முந்தி, 'ராவின் அரசில் இருந்த அமெரிக்க உளவாளி யார்?" என்பதை முன்னாள் ஜஸ்வந்த் சிங்கிடம் லாவணி பாடிக்கொண்டிருந்தார். அமெரிக்க உளவாளியே பிரதமராக இருப்பதும், அவர், உளவாளி பற்றிப் பேசுவதும்தான் காலக்கொடுமை.

மருத்துவம், கல்வி, குடிநீர் எல்லாமே தேசத்து மக்களுக்குக் கிடைக்கவிடாமல் தனியார்மயமாக்கப்பட்டு அம்மக்களின் நலன்கள் காவு கொள்ளப்பட்டு வரும் சூழலில் இந்த மாமாக்கள் (காங்கிரசு, பாஜக) 'தேசபக்தி' பற்றிப் பினாத்துகிறார்களே? அன்னிய நிறுவனமான சோனி, பத்தாண்டுகளுக்கு முன் 'வண்ட்ட்ட்ட்டேஏ மாத்த்தரம்' என்று மலச்சிக்கல் வந்தவன் முக்குகிற மாதிரி ஏ ஆர் ரகுமானை வைத்துப் பாடச்சொல்லி காசு சம்பாதித்ததே! அப்போது அன்னியக்கம்பெனி எப்படி எங்களோட 'தேசபக்தி' வியாபாரத்துல தலையிடலாம்னு குறைந்தபட்சம் 'தேசிய முதலாளிகள்' மாதிரியாவது கண்டித்தார்களா இந்த இந்துவியாதிகள் என்றால் அதெல்லாம் இல்லை.
சரி.. இவர்கள் சொல்லிவரும் வந்தே மாதரத்தின் லட்சணத்தைத்தான் பார்த்து விடுவோமே!

வந்தே ஏமாத்துறோம்! எப்படி?
"மொகலாயர் ஆட்சிக்குப் பிறகு வங்காளத்தை ஆண்ட முசுலீம் நவாபுகள், ஜமீன்தார்கள் ஆட்சியில் பார்ப்பன மேல்சாதியினர் தங்கள் ஆதிக்கத்தை இழந்து தவித்தனர். எனவே நவாபுகளை முறியடித்த ஆங்கிலேயர்களை அவர்கள் நெஞ்சார வாழ்த்தி வரவேற்றனர்.

இந்தச் சூழ்நிலையை வைத்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி எனும் பார்ப்பனர் 'ஆனந்த மடம்' எனும் புதினத்தை எழுதினார். முசுலீம் அரசர்களை எதிர்த்து இந்துச் சாமியார்கள் போராடுவதைக் கூறும் இக்கதையில்தான் 'வந்தே மாதரம்' (தாய்க்கு வணக்கம்) என்ற பாடல் வருகிறது. காளி, சரஸ்வதி, லட்சுமி என்று தாயை விளிக்கும் 'வந்தே மாதரம்' இப்படித்தான் தோன்றியது.

"நம்முடைய நவாபின் ராஜ்ய பரிபாலனத்தைப் பாரும். மதம் போய் விட்டது; சமூகம் போய் விட்டது; மானம் போய்விட்டது;குலம் போய்விட்டது; இப்போது பிராணனும் போய்க்கொண்டிருக்கிறது.." இது 'ஆனந்தமடம்' நாவலில் வரும் ஓர் உரையாடல். இதில் யாருடைய மதம்-சமூகம்-மானம்-குலம்-பிராணன் போய்விட்டதென்பதைத் தெள்ளெனவே உணரமுடியும்.

அதனால்தான் முசுலீம் அரசர்களிடமிருந்து வங்கத்து மாதாவை விடுதலை செய்த 'ஆங்கிலப் பிதாவை' அன்றைய வங்கத்துப் பார்ப்பன மேல் சாதியினர் மனதார வாழ்த்தினர். வந்தேமாதரத்தின் தோற்றத்திலேயே நாட்டுப்பற்றுக்கு இடமில்லை!


காலப்போக்கில் வங்கத்து வந்தே மாதரம் ஆங்கிலப் பிதாவை எதிர்க்கும் பாரத மாதாவாக மறுபிறவி எடுத்தது. இந்த பாரத மாதா பஜனையை விடுதலைப் போராட்டத்தில் திணித்தது காங்கிரசு கும்பலின் கைங்கர்யமாகும். இந்திய அளவில் இந்து மதமும், பாரத மாதாவும் உருவாக்கப்பட்டு வந்த நிகழ்ச்சிப் போக்கும், காங்கிரசின் பார்ப்பன மேல்சாதித் தலைவர்களும் அவர்களின் பார்ப்பனீய இந்துத்துவக் கருத்தும் 'வந்தே மாதரத்தை'ப் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக இருந்தன.


கோவில்களில் அம்மணமாக நிற்கும் பெண் கடவுள்களை மாதிரியாகக் கொண்டு, அந்தப் பெண் உருவங்களுக்கு பார்ப்பன, உயர்சாதி மாமிகளின் பாணியில் சேலை கட்டி "இதுதான் லட்சுமி,சரஸ்வதி,பார்வதி" என்று வரைந்து தள்ளினார் திருவாங்கூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ஓவியர் ரவி வர்மா. இப்படியே 'மாதா'க்களை உருவாக்கிய மன்னர் பரம்பரைதான் கடைசி வரை வெள்ளையனின் விசுவாச அடிமையாக இருந்தது. முதுகில் நாலு கை முளைத்த லட்சுமிதான் பாரத மாதா; இந்தப் பெண் தெய்வத்தை வருணிக்கும் பாடல்தான் 'விடுதலை கீதம்' என்று சொன்னால் அது பிற மதத்தினரை வெறுப்படையச் செய்யாதா?

பிற மதத்தினரை விடுங்கள், மக்கள் மீது மீளாக் காதல் கொண்ட எந்த ஒரு சுயமரியாதை உள்ள தேச பக்தருக்கும் இந்த பிற்போக்கு போக்கிரி பாடலை தேச பக்தி பாடல் என்றால் கொலை வெறி வரத்தான் செய்யும்.

மத வெறி அரசியலும், மாற்று அரசியலும்:


இப்படித்தான் விடுதலைப் போராட்டத்திலிருந்து மதத்தின் பெயரால் முசுலீம் மக்களைத் தனிமைப்படுத்தும் போக்கைக் காங்கிரசுக் கும்பல் ஆரம்பித்து வைத்தது.


இப்போது பிஜேபி அர்ஜூன் சிங்கை நெளிய வைக்கவும் தனது இந்துவியாதி அரசியல் ஆயுதத்தை கூர்மைப் படுத்தவும் இந்த பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டுள்ளது.

ஏகாதிபத்திய அடிமைகளான பிஜேபியும், காங்கிரசும் நாட்டின் மூல வளங்களையும், நாட்டின் இறையாண்மையையும் டாலர் தேவதையின் முன் சமர்ப்பித்து விடுவதில் போட்டாபோட்டி போடுகின்றன. போராடும் உழைக்கும் இந்திய மக்கள் மீது , ஹூண்டாய் காரனின் எச்சில் காசுக்காக அடக்குமுறையையும், உரிமைப்போர் நடத்தும் மக்கள் மீது தாமிரபரணியில் கோக் கொடுக்கும் எலும்புத்துண்டுக்காக அரசு எந்திரத்தை ஏவி விடுவதிலும் இந்த இரண்டு கூட்டுக்களவாணிகளும் கள்ள மவுனமே சாதித்தன.


இது இன்று நேற்றல்ல. நூறாண்டுகளாக நடந்து வரும் துரோக வரலாறுதான். மக்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராய் எப்போதெல்லாம் போராடினரோ அப்போதெல்லாம், காங்கிரசு மக்களை அன்னியனுக்குக் காட்டிக்கொடுத்தே வந்துள்ளது. (புன்னபுரா, சவுரிசவுரா, தெலங்கானா உழவர் எழுச்சிகள், பகத்சிங்கின் புரட்சிப்படை ஆகியவற்றுக்கு எதிராக இருந்தமை).

பாஜகவின் மூல வேரான இந்துமகாசபையும் ஆர் எஸ் எஸ் ம், மற்ற இந்துவியாதிகளும் இதே மாமா வேலையைத்தான்(விளக்கு பிடித்தல்) 1947க்கு முன்னரும், பின்னரும் செய்தனர் (வெள்ளையனே வெளியேறு, தல்வார் புரட்சி ஆகியவற்றிற்கெதிராக வேலை செய்தமை). இன்றும் தொடர்கின்றனர்.


ஒட்டுண்ணிகளை அழிக்கும் வீரிய மருந்து - உழைக்கும் வர்க்கம்:


வந்தே மாதரம் பாடி நம்மை ஏமாற்றும் அரசியல் ஒட்டுண்ணிகளும், அவர்களின் எச்சில் பொறுக்கி அல்லக்கைகளும் நம்மைப் பார்த்து 'வந்தே ஏமாத்துறோம்' எனச்சொல்வது கேட்கிறது.


இந்த தேசத்தின் நலன்களையோ, தேசத்தின் செல்வங்களையோ, உழைப்பாளர்களையோ மதிக்காமல், அவற்றுக்கெல்லாம் எதிரானவர்களாய் நடந்து கொண்டு, வெறுமனே 'வந்தே மாதரம்' போன்ற பஜனைகளை தூக்கிப்பிடித்துக்கொண்டு 'போலி தேசப்பற்று' பேசி அதற்கென 'நாய்ச்சண்டை இடுவது' எவ்வாறு சாத்தியமாகின்றது?


மக்களிடம் நாம் உண்மையான அரசியலை - அதாவது ஏகாதிபத்தியத்தை, அதற்கு நக்கிப்பிழைக்கும் காங்கிரசு, பாஜக கூட்டத்தை - பற்றி பேசத்தொடங்க வேண்டும். அவர்களின், இந்த அரசின் மக்கள் விரோத போக்கை அம்பலப்படுத்த வேண்டும்.


பிளாக்ஸ்பாட்டுகளில் நுழைந்து அங்குள்ள பல போலி தேசிய கூமுட்டைகளை உடைக்க வேண்டும்.

கற்பக விநாயகம்
vellaram@yahoo.com

Monday, October 26, 2009

கவிதையைப் படிக்கும் முன்….

கவிதையைப் படிக்கும் முன்….

காலனி(ணி)க் கவிதை
""
ஆனால்,
நீ என்னோடு வரும்போழுது,
உன் பிஞ்சுப் பாதங்களால்
மேலத்தெருவில் அழுத்தமாய்
பாதம் பதித்து நடக்க வேண்டும்.

உன் காலணிகளின் அடியிலிருந்து எழும் இசை
அந்தத் தெருவில் குடிகொண்டிருக்கும்
ஜாதியத்தின் செவிகளை
துளைத்தெடுக்க வேண்டும்.

செய்வாயா என் செல்ல மகளே!
""


"இப்பொ யாருங்க சாதி பாக்குறாங்க? " வினயமாகக் கேட்டார் ஆனந்த பவனில் காபி குடித்துக் கொண்டிருந்த ஆறுமுகப் பாண்டியன். தினமலர் செய்தி ஏட்டில் முக்குலத்தோர் மணமாலையில் மணமகன் தேடி விளம்பரம் கொடுத்திருந்த செய்தித் தாளை அருகில் வைத்துக் கொண்டே.

"ஏதாவது சிறுசா நடந்துடக் கூடாது, உடனே தலித்து தலித்துன்னு கூப்பாடு போட்டு ஊரக் கூட்டிருவாங்க. வேலையத்த பயளுக.", அமைதி விரும்பியாக அறவுரை வழங்கினார் 'Veg ஒன்லி' விளம்பரம் கொடுத்து வீடு வாடகைக்கு விடும் பக்கத்து வீட்டு பரசுராமன்.

"அதெல்லாம் அந்தக் காலம், இப்போ வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வைச்சி மேல் சாதிக்காரன கொடுமப்படுத்துறாங்க" சமூக நீதி போதனை செய்தார், பேராசிரியர் திருவேல்முருகன், தனக்குப் பின்னால் ஒட்டியிருந்த கீழ் வெண்மணி நினைவுநாள் சுவரொட்டியையும், கடையில் தொங்க விடப்பட்டிருந்த வாரப் பத்திரிகையில் தெரிந்த கயர்லாஞ்சி தீர்ப்பையும் தனது தொந்தியால் மறைத்துக் கொண்டே..

"அவா அவா வேலய அவா அவா செஞ்சா லோகத்துல என்ன பிரச்சினை வந்துடப் போறது?" பாதாளச் சாக்கடையில் இறங்கி கழிவு அகற்றியவருக்கு 10 ரூபாய் அருளிக் கொண்டே நவீன வர்ணாஸ்ரமத்தை அழுத்தம் திருத்தமாக கேட்டார் ஹரிராமன், பக்கத்தில் தொலைக்காட்சிப் பெட்டி பல்லிளித்துக் கொண்டிருந்தது - "அனைவரும் அர்ச்சகர் ஆவதற்கு நீதிமன்றத் தடை கோரும் வழக்கு விசாரணைக்கு வந்தது."

"தாழ்த்தப்பட்ட சாதிக்காரன் அவனோட அடையாளங்களை பெருமையா காட்டிக் கொள்வதை யார் தடுத்தாங்க?" நெத்தியில் கண்ணைக் கூசுச் செய்யும் அளவு நாமம் போட்டுக் கொண்டே நியாயம் பேசினார் வெங்கடராம நாயக்கர், மாட்டுக் கறி தின்ற ஹரியான தலித்துக்களின் தோலுரித்துக் கொன்ற ஆர் எஸ் எஸ் இந்து பயங்கரவாதிகளும் நெற்றியில் நாமம் இட்டுக் கொண்டுதான் நியாயப்படுத்தினர் என்பது, கண்ணில் நிழலாடியது.

தடித்த, சொரனையற்ற சாதியக் காதுகளுக்கு எவ்வளவு அருகில் சென்று காலனி(ணி)ச் சத்தங்கள் ஒலிக்க முடியுமோ அவ்வளவு அருகில் சென்று ஒலிக்கட்டும், அப்பொழுதாவது சாதிய வண்ணம் பூசிய இந்த ஆபாசங்களையே நியாயம், நீதி என்று பேசுபவர்களின் செவிட்டுத் தனம் கிழிகிறதா என்று பார்க்கலாம்.

தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான வன்கொடுமைகளை தினமும் தொகுத்து வழங்கும் ஒரு தளம்.


காலனிச் சத்தங்கள்

என் செல்ல மகளே!
நீ பிறந்ததில் எனக்கு
மிக்க மகிழ்ச்சி.

உன் தாத்தாவிற்குத்தான்
என் மீது கொஞ்சம் வருத்தம்.
குலசாமி பெயர் விடுத்து,
மரித்தவர்களின் ஊர்ப்பெயரை
உனக்கு சூட்டியதற்காக…
முடிந்தவரை விளக்கிவிட்டு
பிடிவாதமாய்,
வெண்மணி என்றே உனக்கு
பெயரிட்டு விட்டேன்.
என்னைப் பொறுத்தவரை அவர்கள்
மரிக்கவில்லை.

நகரவாழ்வின் விழுமியங்களோடு
சங்கமித்து நிறைய வருடங்கள்
உருண்டோடிவிட்டன.
அதன் தொடர்ச்சியாய் – இப்பொழுது
நீயும் வந்துவிட்டாய்…

கடந்துவந்த தூரங்களின்
நீளத்தை என்றாவது ஒருநாள்- நீ
கேட்டறிய வேண்டும் என்பதே
என் ஆவல்.

ஏனெனில்,
தழும்புகளற்ற காயங்கள்
என்னிடம் நிறைய உண்டு.
அதை உன்னோடு பகிர்ந்து கொள்ளும் போது
உனக்குள் ஒரு பண்புமாற்றம்
நிகழலாம் என்பது என் நம்பிக்கை.

முரண்களின் மூட்டையாக
இருக்கும் இந்த சமூக அமைப்பின்
சிக்கல்களை
அறுத்தெறிவதற்கான ஆயுதமாக…
அந்த நம்பிக்கை
உனக்குள்ளும் ஊடுருவலாம்.

அழகிய ஓவிய வேலைப்பாடுகளடங்கிய
பீங்கான் குவளைகளில்,
நீயும் நானும்- இப்பொழுது
தேநீர் அருந்திகொண்டிருக்கிறோம்,
இவை நாம் எட்டிய
குறைந்தபட்ச வாழ்க்கை.

இது நடந்தது கூட
உடனடி நிகழ்வல்ல,
ஒரு நெடிய போராட்டத்தின்
விளைவு.

பனை மரத்து ஓலைகள்,
செரட்டைகள்,
அலுமினிய கிண்ணங்கள்…
இவைகள்தான்
உனது முன்னோர்களின்
தேநீர் குவளைகள்

அதாவது,
‘நாகரிக’ சமூகத்தை
தலைகுனியச் செய்திடும்
இருண்ட கணங்கள்.

“மனிதர்களை ‘மனிதர்’
நாயினும் கேவலமாய்
நடத்த முடியுமா அப்பா?”
என்று நீ கேட்கலாம்.

ஆம்,
இப்பொழுதும் இந்த வன்கொடுமைகள்
தொடர்கிறது…
புதிய வடிவங்களில்.
நீ எதிர்கொள்ளும்போது
இன்னும் நவீனப்பட்டிருக்கலாம்.

ஆனாலும்,
உன் கல்விக்கூடத்தில்
‘தீண்டாமை ஒரு பாவச்செயல்,
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்,
………………………………’ என்று,
நாடே புனித திருவுருவாய்
இருப்பதுபோல்
வெற்று வார்த்தைகளை
உன்னுள் இட்டு நிரப்புவார்கள்

அப்பொழுது
உண்மையையும், பொய்யையும்,
உரசி பார்த்துக்கொள்ள
நம் பகிர்தல் உனக்கு பயன்படலாம்.

என் செல்ல மகளே!
நீ நடைபயில கற்றுக்கொண்ட
தருணங்கள் – உண்மையில்
அழகானவை, அற்புதமானவை.

எல்லா அப்பாக்களையும் போல்
அந்நிமிடங்களை மிகுந்த
ரசனையோடு விழுங்கியுள்ளேன்.

இருக்கட்டும்.
கடைவீதிக்கு சென்ற போதுதான்
உன் அம்மாவின் செல்ல கத்தல்
ஞாபகத்திற்கு வந்தது.

“குழந்தை இருக்கும் வீட்டில்
பொம்மைகளைவிட -
புத்தகங்கள்தான் அதிகமாய் உள்ளது,
அவள் எவற்றோடுதான் விளையாடுவாள்?”

உனக்கான பொம்மைகள்
விளையாட்டு பொருட்கள்,
நிறைய வண்ணங்கள்
கொஞ்சம் தூரிகைகள்…

எல்லாம் வாங்கிவிட்டேன்
குறிப்பாக,
நீ விரும்பி கேட்ட
அழுத்தி நடந்தால்
இசை எழுப்பக்கூடிய காலணிகளையும்
கவனமாய் வாங்கிக் கொண்டேன்.

அடுத்த வாரம்
அநேகமாய் நாம் ஊருக்கு
செல்ல நேரிடும்.

அப்பொழுது மேலத்தெரு வழியாகத்தான்
தாத்தா வீட்டிற்கு செல்வோம்.

அந்த வழியாக,
உன் கொல்லுத் தாத்தா,
தாத்தா…, ஏன் நானும் கூட
செருப்பை கையில் தூக்கியபடிதான்
கடந்து சென்றுள்ளோம்

ஆனால்,
நீ என்னோடு வரும்போழுது,
உன் பிஞ்சுப் பாதங்களால்
மேலத்தெருவில் அழுத்தமாய்
பாதம் பதித்து நடக்க வேண்டும்.

உன் காலணிகளின் அடியிலிருந்து எழும் இசை
அந்தத் தெருவில் குடிகொண்டிருக்கும்
ஜாதியத்தின் செவிகளை
துளைத்தெடுக்க வேண்டும்.

செய்வாயா என் செல்ல மகளே!

நீ நடைபயில கற்றுக்கொண்ட
தருணங்களை விட,
அப்போதைய நிமிடங்கள் இன்னும்
அழகானதாய், அற்புதமானதாய் இருக்கும்.

- முகிலன்

Monday, August 17, 2009

கரண்டு இல்ல, பேனு சுத்தல அதனால வேல செய்யலை...

ரண்டு சப்ளை இல்லை, அதனால மின்விசிறி வேலை செய்யவில்லை. இதன் காரணமாக எனது வேலைகளை முடிக்க முடியவில்லை. ஒழுங்கு மரியாதையாக தங்கு தடையற்ற மின்சாரம், ஜெனரேட்டர் வசதிகளை செய்து கொடுத்து விட்டு பிறகு வேலைகளை முடிப்பது குறித்து என்னிடம் பேசு. வேக்காட்டுல உக்காந்துக்கிட்டு வேலய செய்ய சொன்னா எப்படி செய்யிறது?

இந்த மாதிரி எக்கத்தாளம் பிடிச்சு பேசுனா என்ன நடக்கும்? பொடதிலேயே அடிச்சு வெளியெ தொரத்திருவாங்க. இந்த மாதிரி அல்பத்தனமான கோரிக்கைகளை விடுங்கள். நியாயமான உரிமைகளுக்காக தொழிலாளர்களும், மக்களும் போராடினாலே கூட நீதிமன்றம் குறுக்கே பாய்ந்து குய்யோ முறையோ என்று அறிவுரை வழங்கி தண்டிக்கும்.

அப்படியாப்பட்ட நீநீநீநீநீதி மன்றத்தின் மாமாமாமாட்சிமை தாங்கிய நீதிபதிகள்தான் மேற்சொன்ன முதல் பத்தி அரை வேக்காட்டு காரணத்தை முன் வைத்து வழக்குகள் நிலுவையில் இருப்பதை நியாயப்படுத்துகிறார்கள். புச்சா எதுவும் சிக்கலையே கிசு கிசு பேசன்னு யோசிச்சு கொஞ்ச நா முன்ன மன்னுமோகன் சிங் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்து கருத்துச் சொல்லியிருந்தார். இவற்றை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இதுக்குத்தான் இப்படி சாமியிடிருக்கானுங்க நீதிபதிகள். அதுவும் கொஞ்சம் நஞ்சமில்ல 21 ஐகோர்ட் நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டில் ஒன்னு கூடி நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில்தான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

ஒரே வேக்காடா இருந்தாங்கண்டி வேல நடக்கிலன்னு சொல்வதை ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளலாம் என்றால் கூட நிலுவையில் இருக்கும் வழக்குகளையும், அவற்றை வருடக் கணக்கில் இழுத்தடிக்கும் 'வாய்தா'பதிகளின் டிமிக்கிகளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது. குறைந்த பட்சம் வேக்காட்டின் காரணமாக வழக்குகள் தீர்க்கப்படாமல் போய்விட்டன என்பதற்கு ஆதாரம், புள்ளிவிவரம் கூட வழங்காமல் மிகத் திமிராக ஆணையிடுகிறார்கள் நீதிபதிகள். இவிங்க சொல்றத பாத்தா 24 மணி நேரமும் கோர்ட்டுல கரண்டு இல்லங்கற மாதிரி இருக்கு. இவர்கள் வேக்காட்டில் வாடுவதாக காரணம் கூறி இழுத்தடித்துள்ள லட்சக்கணக்கான வழக்குகளில் சிக்கிக் கொண்டு சிறைக் கொட்டடிகளிலும், நீதிமன்ற வளாகங்களிலும் கொசுக்கடியிலும், வேக்காட்டிலும் வாழ்க்கையை இழுந்து வருகிறார்கள் ஆயிரக்கணக்கான அப்பாவிகள்.

ஆனா இதே நீதிபதிகள்தான் தமது உச்சானிக் குடுமியை சுருட்டி வைத்துக் கொண்டு, இந்துத்துவ பார்ப்பன பயங்கரவாதிகளின் வழக்குகளை ஞாயிற்றுக்கிழமை கூட கடைய திறந்து வைத்து விரைவாக முடித்து வைத்துள்ளனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

டேய்.. என்னப்பாத்தாடா கேள்வி கேக்குற மவனே ஒழுங்கா எனக்கு முதுகு சொறிஞ்சு விடுடா அப்புறம் வேல நடக்கிறத பத்தி பேசுன்னு சொல்லி ஆண்டைத்தனத்துடன் தாண்டவம் ஆடியுள்ளனர் நீதிபதிகள். அத்தோட சேந்து இதுதான் சாக்குன்னு சில பல சலுகைகளையும் கோரியுள்ளனர்.

ஏண்டா வேல நடக்கலன்னு கேட்டா காக்கா கத்துச்சு, குயில் கூவுச்சி, மூக்குல வேர்வைன்னு கதய விட்டுப்புட்டு அத்தோட சேர்ந்து மேற்கொண்டு சில பல சலுகைகளையும் கேக்கற மொள்ளமாறித்தனம் இருக்கே... அடேங்கப்பா... சும்மாவா சொன்னாய்ங்க.... ஒலகத்திலேயே பெரிய ஜனநாயகம் இந்தியா... இந்தியா... இந்தியான்னு....

ஜோய்ங் லந்து....(ஜெய் ஹிந்த தாம்பா அப்படி சொன்னேன்)

""Do you expect a trial court judge to achieve the case disposal target when he has to sit all day under a fan that stands still and a court room that is packed with litigants creating an unworkable condition ""

""As the state governments have been citing funds crunch to extend additional financial assistance to the subordinate judiciary, the CJs again suggested that financial autonomy be given to the HCs. ""


அசுரன்

Thursday, June 18, 2009

லால்கார் மேற்கு வங்கத்தில் ஒரு புரட்சி பூமி!

லால்கார், மேற்கு வங்கத்தில் உள்ள பழங்குடியினர் பகுதியாகும். இங்கு தற்போது ஈழம் அளவுக்கு இல்லாவிடிலும் அதனை ஒத்ததொரு கோடூரமானதொரு தாக்குதலை இந்திய அரசும் அதன் அல்லக்கையான CPM அரசும் மேற்கொண்டு வருகின்றன. துணை ராணுவப் படை உதவியுடன் அங்கு மக்கள் மீது தாக்குதல் தொடுத்து அவர்களின் போராட்டத்தை முறியடிப்பதுடன், இந்த போராட்டத்தை வழி நடத்தும் மாவோயிஸ்டு புரட்சியாளர்களை ஒழித்து கட்டவும் வேலைகள் நடந்து வருகின்றன.

""Sources say the forces want to minimize casualties and will thus move slowly.""


மேலேயுள்ள வார்த்தைகளின் அர்த்தம் அங்கு போராடிக் கொண்டிருக்கும் மக்களை கொன்றொழிக்கும் முடிவில் அரசு படைகள் இறங்கி விட்டன என்பதே ஆகும். இதற்கு தோதாக ஊடகங்களும் தமது வார்த்தைப் பிரயோகங்களை மாற்றிக் கொண்டுள்ளன. சில நாள் முன்பு வரை பழங்குடியின மக்கள் அரசுக்கு எதிராக போராடுவதாக எழுதி வந்த ஊடகங்கள் திடீரென்று நேற்று முதல் மாவோயிஸ்டு அராஜகம் என்று எழுதத் துவங்கியுள்ளன. ஆனால், உண்மையில் அங்கு உள்ள பழங்குடியின மக்கள் தமது வாழ்வாதார உரிமையை பறிக்கும் பன்னாட்டு-தரகு கம்பேனிகளுக்கும், அவர்களின் அல்லக்கையான CPMக்கும் எதிராக மக்கள் கமிட்டி அமைத்து போராடி வருகிறார்கள். இவர்களுக்கான அரசியல் தலைமையைத்தான் மாவோயிஸ்டுகள் வழங்கி வருகிறார்கள்.


தரகு கம்பேனியான ஜிண்டால், இரும்பு எஃகு ஆலை அமைக்க ஏதுவாக காடுகளை அழித்து, அங்குள்ள பழங்குடி மக்களை விரட்டி விட்டு 5000 ஏக்கர் பரப்பளவில் சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவ CPM-போலி கம்யூனிஸ்டு பாசிஸ்டுகள் ஏற்பாடுகள் செய்து வருவதை எதிர்த்தே மக்கள் அங்கு போராடி வருகிறார்கள். இந்த போராட்டம் கடந்த ஆறேழு மாதமாகவே நடந்து வருகிறது. இந்த போராட்டத்தை சிதைக்க போலீசின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களையும், நந்திகிராம பாணி CPM குண்டர் படை தாக்குதல்களையும் தொடர்ந்து ஏவி வருகிறது CPM-போலி கம்யுனிஸ்டு பாசிஸ்டு கட்சி. இதற்கு உள்ளூர் CPM காலிகளின் காட்டிக் கொடுப்பு வேறு உதவியுள்ளது.

இன்னிலையில், போலீசின் அடக்குமுறைக்கு எதிராக 600மேலான கிராமத் தலைவர்களை ஒன்று கூட்டி 'போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டி''யைக் கட்டியமைத்தனர் மாவோயிஸ்டுகள். இதனைத் தொடர்ந்துதான் CPM குண்டர் படை தாக்குதல்கள் நடந்தன. சமூக பாசிஸ்டுகளாகச் சீரழிந்துவிட்ட சி.பி.எம். ஆட்சியாளர்களின் சூழ்ச்சிகள் சதிகளைப் புரிந்து கொண்ட பழங்குடியின மக்கள், தாங்கள் கட்டியமைத்துள்ள ''போலீசு அட்டூழியங்களுக்கு எதிரான மக்கள் கமிட்டி'' (கஇஅகஅ) முடிவின்படி, ஏப்ரல் 6ஆம் தேதியன்று கொல்கத்தா நகரில் ஆர்ப்பாட்ட பேரணியையும் பொதுக்கூட்டத்தையும் நடத்தினர். பல்வேறு மனித உரிமை ஜனநாயக உரிமைக்கான அமைப்புகளும், எழுத்தாளர்கள் பத்திரிக்கைகள் கலைஞர்கள் உள்ளிட்ட அறிவுத் துறையினரும் பங்கேற்ற இந்தப் பேரணியும் பொதுக்கூட்டமும், லால்கார் பகுதியை இன்னுமொரு நந்திகிராமமாக இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கத் துடிக்கும் போலி கம்யூனிச ஆட்சியாளர்களை மக்களிடம் திரைகிழித்துக் காட்டுவதாக அமைந்தது.

மறுகாலனியாதிக்கச் சூழலில், மக்களின் அடிப்படை வாழ்வாதரங்களை பறிக்கும் உலகமயத் திட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்கள் எல்லாம் சீரழிக்கப்பட்டுள்ளன. ஆனால், நக்சல்பாரி புரட்சியாளர்களின் போராட்டம் மட்டுமே வெற்றி பெற்று வருகிறது. அப்படிப்பட்டதொரு போராட்டம்தான் லால்கார் போராட்டம் இதனை சிதைத்து அழித்தொழிக்க மத்திய காங்கிரசும், மாநில CPM-பாசிஸ்டுகளும், இதர பெரு ஊடகங்களும் களமிறங்கியுள்ளனர். இதனை படித்துக் கொண்டிருக்கும் போதே அங்கு போர் உக்கிரம் பெற்றிருக்கும்.

லால்கார் குறித்து மேலதிக தகவல்களுக்கு பின்வரும் புதிய ஜனநாயகம் கட்டுரையை படிக்கலாம்.

பின்னூட்டத்தில் தெரியப்படுத்தி சுட்டிகள் கொடுத்த தோழர் பூச்சாண்டிக்கு நன்றி

சந்தால் பழங்குடியின மக்களின் எழுச்சி: மண்டியிட்டது, சி.பி.எம்.


போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி !

அசுரன்


Tribals on warpath in Lalgarh; say can work better than govt


Tribals stop paramilitary from entering Lalgarh, reinforcement rushed


Security forces begin ops to free Lalgarh from Maoists

Saturday, May 16, 2009

இந்த தேர்தலில் மக்கள் யாருக்கு பாடம் கற்றுக் கொடுத்தார்கள்?

நாடாளுமன்றத் தேர்தல் எதிர்பார்த்தபடியே முடிவடைந்துவிட்டது. தேர்தல் முடிவுகள் அனேகமாக தெளிவாக தெரிந்துவிட்டது. காங்கிரசு கூட்டணி பல இடங்களில் முன்னணி பெற்று உள்ளது. தமிழகத்தில் திமுக-காங்கிரசு ஓபன் கூட்டணி, தேமுதிக-காங்கிரசு பினாமி கூட்டணி வெற்றி பெற்றுள்ளன. எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாகவே அடிதடி-அதிரடி-சரவெடி அழகிரி அண்ணே, லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார். வீரத் தளபதி கந்துவட்டி மைனர் ஜே. கே. ரித்தீஷ் 60,000 வோட்டு வித்தியாசத்தில் வெற்றி. செலவழித்த தொகைக்கு ஏற்ப வோட்டு வித்தியாசம். ஈழப் பெருச்சாளி வைகோ மண்ணை கவ்வி விட்டார். பாமகவுக்கு கோமணத்துணி கூட மிஞ்சவில்லை.

தமிழகத்தில் நவரசங்களும் கலந்தோடுகிறது. குறிப்பாக, ஈழத்திற்கு பலி வாங்கும் வகையில் பாடம் கற்பிக்க தேர்தல் களத்தில் இறங்கி குருதி சிந்திய தோழர்களும், உணர்வாளர்களும் பேரதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். ஈழத்து குருதியில் கை நனைத்து வோட்டுப் பொறுக்க களம் இறங்கிய சூத்திரதாரி தா.பாண்டியன் கட்சியும், இரட்டை இலையும், பிற போலித் தமிழ்த் தேசிய வியாதிகளும் வாயடைத்துப் போயுள்ளனர். மக்களுக்கு உணர்வு மங்கிவிட்டது, மக்கள் காசு வாங்கிக் கொண்டு வோட்டு போட்டு விட்டனர் என்று பல்வேறு புலம்பல்கள்.

ஆனால், இவையெல்லாவற்றையும் விட பேருண்மை ஒன்று உள்ளது. அது இந்த தேர்தலில் மக்கள் கற்றுக் கொடுத்துள்ள பாடம். யாருக்கு? தேர்தலின் மூலம் மக்களின் பிரச்சினைகளுக்கு ஏதோ ஒரு வகையில் பங்களிப்பு செய்ய முடியும் என்று ஊரை ஏமாற்றி வந்தவர்கள், தானும் ஏமாந்து மக்களையும் ஏமாற்ற முயன்றவர்கள் இவர்களுக்குத்தான் பாடம் கற்பித்துள்ளனர் மக்கள். ஈழம், தொழில் மந்தம், பொருளாதார கொள்கையின் தோல்வி, விவசாயிகள் தற்கொலை, விலைவாசி உயர்வு, வேலையின்மை, மின்வெட்டு இவற்றை மீறி காங்கிரசு போன தடவையை விட அதிக இடங்களில் வெற்றி பெறுள்ளது. எனில், இவை குறித்து மக்களுக்கு அக்கறை இல்லை என்று அர்த்தமா? இவையெல்லாம் மக்களின் ஜீவாதார பிரச்சினைகள் இல்லை என்று அர்த்தமா? இல்லை, மாறாக, தேர்தல் முடிவுகள் இந்த பிரச்சினைகளின் மீது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் என்பதுதான் அர்த்தம்.

எந்த அயோக்கியன் வந்தாலும் இதைத்தான் செய்யப் போகிறான் எனும் போது, மாற்று வழி எதுவும் புலப்படவில்லை எனும் போது, யார் அதிக பணம் கொடுக்கிறானோ, யார் நம்ம சாதிக்காரனோ, யார் வெற்றி பெறுவார்களோ அவர்களுக்கு வோட்டு போட்டு விட்டு போய்விடுவோம் என்பதைத்தான் மக்கள் இந்த தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளனர். ஈழத்து ரத்தத்திற்கு பதில் சொல்லும் தேர்தல் இது என்று தேர்தலில் போராடிய பெதிக தோழர்களே, உணர்வாளர்களே இதோ இதுதான் உங்களுக்கான பாடம். மக்களுக்கு இந்த தேர்தலின் மீது அப்படி எந்தவொரு மயக்கமும் இல்லை. இந்த தேர்தல் ஜனநாயகத்தின் மோசடி முகத்தை மக்கள் நன்கு உணர்ந்தே இருக்கிறார்கள். அவர்களது பிரச்சினை எல்லாம் மாற்று அரசியல் ஒன்று வலுவாக, நம்பிக்கையூட்டும் வகையில் இல்லாததுதான்.

தோழர்களே, உண்மையான தீர்வை நோக்கித்தான் நமது பயணம் எனில் மக்கள் மத்தியில் மாற்று அரசியலுக்கான நம்பிக்கையை விதைப்போம். இல்லையேல் அதுவரை மக்கள் நமது சந்தர்ப்பவாத தேர்தல் நம்பிக்கைகளில் பகடை உருட்டவே செய்வார்கள். உணர்வு மங்கி போயுள்ளது மக்களுக்கல்ல தோழர்களே, நமக்குத்தான். விலை போனது மக்கள் அல்ல தோழர்களே, நாம்தான் சரியான அரசியல் மீது நம்பிக்கையின்றி விலை போய் விட்டோம். தமிழகத்தின் தலைவிதியை இப்படியெல்லாம் மாற்றிவிட முடியாது தோழர்களே. இதோ மக்கள் இந்த தேர்தலில் செவிட்டில் அறைந்தது போல நமக்கு இந்த உண்மையையே உணர்த்தியுள்ளனர்.

அசுரன்

தமிழ்சசி எழுதிய ஒரு கட்டுரையில் ப்ரோக்னோஸ்டிக்சேஜ் என்ற தோழர் இட்டுள்ள ஒரு பின்னூட்டத்தின் அடிப்படையிலேயே இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. தோழர் ப்ரோக்னோஸ்டிக்சேஜ்க்கு நன்றிகள்.


கோடீசுவர வேட்பாளர்கள்! கோவணத் துணியோடு மக்கள்!!

Thursday, May 14, 2009

கம்யுனிஸ்டுகளா இவர்கள்? கம்முனாட்டிகள், மலம் உருட்டும் வண்டுகள்!!!

கொஞ்ச காலம் முன்னாடி மதவாதம்தான் நாட்டின் பெரிய எதிரின்னு சொல்லிக் கொண்டு காங்கிரசுக்கு சிரத்தையாகக் கோமணம் கட்டிக் கொண்டிருந்தனர் CPM காம்ரேடுகள். காங்கிரசு கோமனம் குத்திய உள் குத்து வலி தாங்காமல் ஒரு கட்டத்தில் 'காங்கிரசு இந்தியாவை கூட்டிக் கொடுப்பதுதான்' நாட்டின் முதன்மை அபாயம்ன்னு சொல்லிக் கொண்டு வெளியே வந்தனர். ஆனால், இந்த காலகட்டம் முழுவதும் கேரளாவிலும், மே.வாவிலும் இவர்களும் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கூட்டிக் கொடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள் என்பது வேறு விசயம்.

இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற புனிதப் ப(கு)சு சோம்நாத் சாட்டர்ஜி CPMலிருந்து வெளியேறினார். இன்னிலையில் தேர்தல் வந்தது.

உடனே கொஞ்சம் கொஞ்சமாக காம்ரேடுகளின் பஞ்ச் டயலாக்குகள் உருமாறத் துவங்கின. முதல் கட்டமாக மதச்சார்பற்ற அரசு அமைப்போம் என்ற முழக்கத்தை முன்னுக்குக் கொண்டு வந்தனர்.

அத்துடன் சேர்ந்து ஜெயலலிதா எனும் இந்துத்துவ பாசிஸ்டை மதச்சார்பற்ற ராணியாக உருவகப்படுத்தினார்கள். இதன் அடுத்த கட்டமாக, மதச் சார்பற்ற அரசு அமைக்க எதையும் செய்வோம் என்றார் கரத். அடுத்த கொஞ்ச நாளிலேயே காங்கிரசுடன் கூட்டணி குறித்து மே 16க்கு அப்புறம் முடிவு செய்வோம் என்றார்.

"காங்கிரசு ஒன்றும் தீண்டத்தகாத கட்சியல்ல" என்று புத்ததேவு குத்துதேவாக மாறி ஒரு ஓரத்தில் பஞ்ச் ஒன்றை குத்தி வைத்தார். இவர்களுடன் சேர்ந்து ராகுல் காந்தியும் ரெண்டு செண்டர் குத்து குத்தி இடதுசாரிகளுடன் நாங்கள் குத்தாட்டம் போடத் தயார் என்றார்.

உடனே பாரளுமன்ற கோவனம் சோம்நாத் சாட்டர்ஜி தான் சாகும் போது ஒரு சாதாரண CPM தொண்டனாக சாக விரும்புவதாகக் கூறி செண்டிமெண்டு குத்து அடித்தார்.


இவையணைத்தும் தெளிவாக CPMன் காங்கிரசு நோக்கிய சவாரியை சுட்டிக்காட்டின.


இப்படி எல்லாம் கூடி வந்த வேளையில், சனியன் திடீரென்று யெச்சூரி நேற்று பின்வருமாறு கருத்துக் கூறினார்: "காங்கிரசு அரசுக்கு நாங்கள் ஆதரவு குத்தாட்டம் போட மாட்டோம்", "கரத் சொன்னது அவரது சொந்த கருத்து" என்றார் யெச்சு ஊறி.

இதை பார்க்கும் பொழுது ஏதோ CPM தனது கொள்கையில் விலகுவதும் பிறகு மீண்டும் சரியான பாதைக்கு வந்து விட்டதும் போன்று யாருக்காவது தோன்றினால் அவரை நினைத்து பரிதாபப்படத்தான் வேண்டியுள்ளது.

எப்பொழுதுமே சந்தர்ப்பவாதத்தின் எல்லா நிலைகளையும் ஆதரித்து தனது கட்சி அணிகளை மாற்றி மாற்றி பேச விடும் மொள்ளமாறித்தனத்தை CPM வெகு காலமாக செய்து வருகிறது. கம்யுனிசம் குறித்து கரத் கதறினால், முதலாளித்துவம் குறித்து ஜோதிபாசு உளறுவார்.

வட கிழக்கில் பாஜகவுடன் CPM மாநிலத் தலைமை கள்ளத் தேர்தல்க் கூட்டு சேர்ந்தால், இந்திய தலைமையோ அந்த அணிகள் எமது நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என்பதுடன் முடித்துக் கொள்வார்.

நந்திகிராம் குறித்து ஒருவர் பிளிறினால், மம்தா குறித்து ஒருவர் பிதற்றுவார். ஸ்டைரைக் தப்பு என்பார் புத்ததேவு, ஸ்ட்ரைக் எங்கள் மயிர் மூச்சு என்பார் கரத். அமெரிக்க பூட்ஸை மோந்து பார்க்க ஒருத்தர், நக்கி பார்க்க ஒருத்தர், அதை அம்பலப்படுத்த ஒருத்தர்.

முதலாளித்துவம் ஒழிகன்னு ஒரு காம்ரேடு சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, இன்றைய பொருளாதாரச் சரிவிலிருந்து முதலாளித்துவத்தை காப்பாற்றும் ஐ.நா ஆலோசனை குழுவில் ஒரு காம்ரேடு பஜனை செய்து கொண்டிருப்பார்.

தாழ்த்தப்பட்டவருக்கு நெஞ்சு விடைக்க குரல் மட்டும் கொடுக்க ஒருவர், ஆதிக்க சாதிகளுடன் நெஞ்சாரத் தழுவி கூடிக் குலாவ பலர்.

இப்படி எல்லா கருத்துக்களையும் சொல்லி வைப்பதன் மூலம் எல்லா வோட்டுக்களையும் பொறுக்கலாம் என்ற மக்கள் ஜனநாயக செயல் தந்திரம்தான் CPMனுடையது.

இதுகள் காமெரெடுகள் அல்ல, கன்றாவிகள். இவர்கள் கம்யுனிஸ்டுகள் அல்ல கம்னாட்டிகள். மொத்தத்தில் இந்த அருவெறுக்கத்தக்க சமூக கிருமிகளின் அழிவில்தான் விடுதலைக்கான புதிய முழக்கங்கள் தமது புத்துணர்வை பேண முடியும். இல்லையேல், இந்த கம்முனாட்டிகள் கழிக்கும் மலத்தில் பிரண்டு எழுந்து மீள்வதிலேயே பல நேர்மையான அணிகளின் காலம் கடந்துவிடும்.


அசுரன்