TerrorisminFocus

Wednesday, May 21, 2008

புதிய உணர்வு, புதிய தளம் - தமிழசர்க்கிள் புதிய வடிவில்!!!

தோழர் ரயாகரன் தமிழரங்கம் என்ற பெயரில் வலைப்பூ எழுதி வருவது நாம் அறிந்ததே. தோழரின் தமிழ் சர்க்கிள் என்ற தளத்தில் சிந்தனையை தூண்டும் பல்வேறு கட்டுரைகள், புரட்சிகர பாடல்கள், உரைகள், வீடியோக்கள், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், சமர் பத்திரிகைகளின் இணைய பதிப்புகள் ஆகியவற்றை பராமரித்து வந்தார். தமிழ் புரட்சிகர சிந்தனைகளின் களஞ்சியமாக இருந்தது அந்த தளம்.

இந்த தளத்திலுள்ள பல்வேறு குறைபாடுகளை களைந்து கொண்டு முற்றிலும் புதியதொரு தளத்தை வடிவமைக்க சமீப காலமாகவே தோழர் முயன்று வந்தார். அதற்க்கு எதுவும் உருப்படியான பங்களிப்புகள் செய்ய வக்கறவனாக இருந்தது வெட்கமடையச் செய்கிறது. ஆயினும் அந்த முயற்சி தற்போது வெற்றியடைந்துள்ளது. தோழருக்கும், இந்த தள வடிவமைப்பு, பராமரிப்பில் பங்கெடுத்துள்ள முகம்/பெயர் தெரியா தோழர்களுக்கும்/நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.




புதிய தளம் இங்கே சொடுக்கினால் வரும். பார்த்து விட்டு தோழர் ரயாகரனிடம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். ஆலோசனைகளை வழங்குங்கள்.

தமிழ்சர்க்கிள் தனது பழைய மஞ்சளும், சிகப்பும் கலந்த பழமையை உணர்த்தும் வண்ணப் பின்னணியிலிருந்து விடுவித்துக் கொண்டு விட்டது. புதிய உலகின் சிந்தனைகளை பரப்பும் களமாக அடர் சிகப்பில் ஆழ்ந்து யோசிப்பது போல இருக்கிறது இப்பொழுது.

தளத்தின் இலச்சினை படமும் கூடசிகப்பு பின்னணியில் வண்ணமயமாக நவீனமாக உள்ளது. தலைப்புக்கு கீழே புதிய ஜனநாயகம், சமர் உள்ளிட்ட பத்திரிகைகளின் லிங்க கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பு.

புகைபடத் தொகுப்பு பகுதியில் படங்களின் மீது அம்புக்குறி சென்றால் பெரிதாக வருமாறு கொடுத்துள்ளது மிகச் சிறப்பாக உள்ளது.

தளத்தின் மேல் பகுதியில் படங்களை ஓடவிட்டுள்ளது நல்ல உத்தியாக மட்டும் இல்லாமல் அவை சிந்தனைகளை தூண்டும் விதமாக பல்வேறு வரலாற்று சம்பவங்களை நினைவுகூறும் முகமாக உள்ளன. படங்களை தொகுப்பாக காட்டும் பக்கத்தில் படங்களை இன்னும் பெரிதாக தெரியத் தரலாம். உலாவியோர் உலவுவோர் பகுதி மொத்தமே இரண்டு வரிகள் வருகிறது அதற்கு வலது கை பக்கத்தில் மொத்த பட்டையையும் ஒதுக்கியுள்ளது தேவையின்றி இடப் பற்றாக்குறையை தோற்றுவிக்கிறது.



புகைப்படங்களை ஓட விடும் மேல் பகுதியிலேயே வலது கை பக்கத்தில் உலவுவோர் விவரங்களை தந்து விட்டால் தளத்தின் முக்கிய பகுதிக்கு அதிக இடம் கிடைக்கும். புகைப் படங்களை தொகுப்பாக காட்டும் பக்கத்தில் படத்தின் அளவை அதிகப்படுத்தவும் இடம் கிடைக்கும்.

தலைப்பு பட்டையில் தமிழ் அரங்கம் என்ற எழுத்துப்படைக்கு வலது பக்கத்தில் மேற்கோள்கள் வருகின்றன. அவற்றின் பின்னணி வெண்மை நிறத்தில் உள்ளது மாறாக 'தமிழ் அரங்கம்' என்று எழுதப்பட்டுள்ள எழுத்துப்படையின் வண்ணத்தையே இதற்க்கும் பின்னணியாக கொடுத்துவிட்டு எழுத்தின் நிறத்தை வெண்மையாக மாற்றி தந்தால் தளம் பார்ப்பதற்க்கு இன்னும் மெருகேறியிருக்கும்.

வலது இடது பக்கங்களில் அதிக இடம் ஒதுக்கி தளத்தின் செய்திகள் இடம்பெறும் பகுதியை சுருக்கி கொடுப்பது சரியில்லை என்பது எனது கருத்து. பக்க பகுதிகள் என்பது முடிந்தளவு சுருக்கப்பட்டு முடிந்தால் அவை முழுவதுமாக எடுக்கப்பட்டு முழு இடமும் உபயோகப்படுத்தப்படுவதே சரி என்பது எனது கருத்து மட்டுமல்ல, முதலாளித்துவ தளங்கள் யாவற்றை பார்த்தாலும் கூட அவை இது போன்ற வடிவங்களையே பயன்படுத்துகின்றன.

அது போன்ற வடிவம் தளம் குறித்து உருவாகும் முதல் அபிப்ராயத்தை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு ஆற்றும்.

இணைப்புகளின் மீது அம்புக் குறியை கொண்டு சென்றாலோ அல்லது காப்பி சார்ட்கட் செய்தாலோ அதில் வருவது புரியாத தமிழ்சர்க்கிள் லிங்காக உள்ளது. மாறாக நேரடியாக அந்தந்த தளங்களின் முகவரி கிடைக்கப் பெறுமாறு செய்வது சரியாக இருக்குமென்று கருதுகிறேன்.

பழைய பதிவுகளை பார்க்க ஆர்செவ் பகுதி சேர்க்க வேண்டும். வேறு தளங்களின் பதிவுகளை தமிழ்சர்க்கிளில் இடும் பொழுது குறிப்பிட்ட பதிவரின் பெயர் வருவதில்லை இந்த குறை களையப்பட வேண்டியுள்ளது. மேலும் பெயரிலோ அல்லது வேறேதாவது இடத்திலோ கிளிக்கினாலே ஒரிஜினல் பதிவின் தளத்திற்கு செல்லுமாறு செய்தால் சிறப்பாக இருக்கும்.

பழைய தமிழ்சர்க்கிள் தளத்தில் சில லிங்குகள் வேலை செய்யவில்லை. ஒருவேளை தள மாற்றம் நடைபெற்று வருவதால் ஏற்ப்பட்ட பிரச்சினையா தெரியவில்லை.

கீழே மார்க்ஸிய மூலவர்களின் படம் உள்ள படம் உள்ளது அந்த படம் இடம் பெற்றுள்ள பகுதி சரியாக இல்லை என்று தோன்றுகிறது. ஒன்று கீழே இறக்க வேண்டும் அல்லது வேறேதாவது செய்ய வேண்டும்.

தளப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்றே கருதுகிறேன். நாகாசு வேலைகள் முழுமை பெற்ற பிறகு இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

வாழ்த்துக்கள் தோழர் ரயாகரன்.....

தோழமையுடன்,
அசுரன்

Thursday, May 15, 2008

நண்பர் அத்வானியும், காம்ரேடு சுஸ்மா சுவராஜும்!!!

ந்திகிராம் பிரச்சினையை ஒட்டி கல்கத்தா வந்து சென்றார் அத்வானி. வந்தவர் கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாமல் தனது நண்பர் CPM(டாடாயிஸ்ட்) முதலமைச்சர் புத்ததேவுவை பார்க்காமல் சென்று விட்டார். ஆயிரம் பிரச்சினை என்றாலும் ஒரு அடிப்படை நாகரிகம் வேண்டாம்? ஒரு நண்பரை அவ்வளவு தூரம் வந்துவிட்டு பார்க்காமல் சென்று விடுவதா?

மனம் வெதும்பி பத்திரிகைகளில் புலம்பினார் புத்ததேவு. 'நண்பர் அத்துவானி இம்புட்டு தூரம் வந்துபிட்டு என்ன பாக்காம போயிட்டாரு... ரொம்ப காண்டாக்கீது" என்று. உடனே அத்துவானிக்கு ரொம்ப பொச்சரிப்பா.. ஸாரி புல்லரிப்பாப் போச்சி. அவர் சொன்னார் "நண்பர் புத்ததேவு சந்திக்காம போனது வருத்தந்தான். நான் அவர சந்திக்கிறத எங்க கட்சி தொண்டர்கள் சரியா புரிஞ்சிக்க மாட்டாய்ங்க" அப்படின்னு.

இந்த ரெண்டு பேரோட நட்பு செண்டிமெண்டு மேற்கு வங்க கூரையை பிச்சிக்கிட்டு கொஞ்ச நாள் ஓடுச்சு. அந்த செண்டிமெண்டு எபெக்ட் ஆறாருதுக்கு முன்னெயே நாடாளுமன்றத்துல காம்ரேடு பிருந்தாகரத்தும், சுஸ்மாசுவராஜ் அப்படியே கட்டிப் பிடிச்சி உச்சி முகர்ந்து முத்தம் கொடுக்காத குறையாக தமது நட்பை, பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டனர். படம் பத்திரிகைகளில் வெளிவந்து மூன்று காட்சிகளும் ஹவுஸ் புல்லாக நூறு நாள்கள் ஓடும் அளவு பிரபலமாகியது. படத்த என்னால கண் கொட்டு பாக்க முடியல.. கண்ணு முழியெல்லாம் ஒரே கண்ணீரு.... (போட்டோ வுல கூட பின்னாடி ஒருத்தர் இந்த பாசப்பினப்ப பாத்து பீலிங்ஸ் ஆகி நிக்கிறாரு).


Where left & right unite: CPI(M) and BJP leaders Brinda Karat (left) and Sushma Swaraj exchange pleasantries after the Women’s Reservation Bill was tabled in the Rajya Sabha on Tuesday. — நன்றி: The Hindu

தூ... வெக்கங்கெட்ட நாயிகளா.... பார்ப்பன பயங்கரவாத படு கொலைகாரர்களுடன், மனித குல விரோதிகளுடன் வெட்கமின்றி பொது இடங்களில் ஒட்டி உறவாடும் இவர்கள் கம்யுனிஸ்டு என்று தமது கட்சிக்கு பெயர் வைத்து கம்யுனிசத்தின் மீதும் ஒணுக்கு அடிக்கின்றனர். விட்டால் பாஜகவை இடதுசாரி கட்சிகள் லிஸ்டில் சேர்த்து விடுவார்கள் போல தெரிகிறது. அங்கீகரிக்கப்பட்ட இடதுசாரிகள் லிஸ்டில் பாஜக இருந்தால் என்ன CPM இருந்தால் என்ன எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய பாசிச மட்டைகள்தான்.

நன்றி: செய்தி ரசம்

Related News:

CPM government has shot killed five Forward Bloc party persons over Anti SEZ protest

SEZயை எதிர்த்த பார்வேர்ட் ப்ளாக் கட்சியினர் ஐந்து பேர் CPM அரசால் சுட்டு சாகடிக்கப்பட்டனர்

கம்யுனிஸ்டு பார்ட்டி ஆப்பு இந்தியா - CPM வெறி நாயும்! CPIயும்!

மக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் தாண்டா நாங்கள் - CPM!

மானங்கெட்ட சிபிஎம்மும், விடுதலையின் விடிவெள்ளி பகத...

பாஸிஸ்டு CPMமும், லெனின் சொல்லும் ஜனநாயக புரட்சியு...

தத்துவ குருடர்களும், முதலாளித்துவ வளர்ச்சியும்!!!

அன்பழகன் வைத்த செக்கும், கருணாநிதி திருப்பிக் கொடுத்த ஆப்பும், மற்றும் கொளுகைப் போராளி சுப.வீ.யும்

2008 மே 11 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் காரைக்குடி ராம.சுப்பையா அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.

காரைக்குடி ராம.சுப்பையா, ஆத்திகர்களின் அசைக்கமுடியாத கோட்டையாகவும், பார்ப்பன அடிமைகளின் கூடாரமாகவும் திகழ்ந்த காரைக்குடியைச் சுற்றியுள்ள செட்டிநாட்டுப் பகுதியில் 1930களின் தொடக்கம் முதல் சுயமரியாதை இயக்கத்தையும், சுயமரியாதை சமதர்மக் கட்சியையும் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் கட்டி அமைத்தவர். பல இன்னல்களுக்கு மத்தியில் பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு இயக்கத்தை செட்டிநாட்டில் வேரூன்றச் செய்த சுப்பையா 1949 வரை பெரியார் இயக்கத்திலும், 1949 முதல் 1997இல் அவர் இறக்கும் வரை திமுகவிலும் செயல்பட்டவர். கட்சியை தனது சொந்த நலனுக்காக பயன்படுத்தாத சுப்பையாவின் போராட்டக்களன்களாக 1938இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் 1953இல் திமுக நடத்திய கல்லக்குடி போராட்டத்தையும் சொல்ல முடியும்.

அவரின் நூற்றாண்டு விழாவை அவர் சார்ந்த திமுகவும், அவரின் வாரிசுகளும் இணைந்து நடத்தினர். அவரின் வாரிசுகளில் இருவர் சற்றே பிரபலமாய் இருப்பவர்கள். மூத்தவர் எஸ்பி.முத்துராமன் என்ற 'மாபெரும்' மசாலா சினிமா இயக்குநர். இளையவர், 80,90களில் தமிழ்த்தேசியம், பெரியாரியம், ஈழ ஆதரவு, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்றெல்லாம் பேசியும் எழுதியும் வந்த சுப.வீரபாண்டியன்.

விழாவில் வீரபாண்டியன் (அதுதாங்க சுப.வீ) இதுவரை தனக்கு சூட்டி இருந்த அறிவாளி, கொள்கைக்காரர், போராளி போன்ற கனமான போர்வைகள், மேலாடைகள், உள்ளாடைகள் அனைத்தையும் உதறிவிட்டு, 'எரிக்கப்போகும் சூரியனே', 'ஓய்வறியா உதய சூரியனே' என்று கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்கும் இன்னொரு தொண்டரடிப்பொடியாக மாறிப்போனார். அநேகமாக அந்த விழாவை அவரின் தந்தைக்கு நூற்றாண்டு விழாக் கூட்டமாகவும், அவருடைய அரசியலுக்கு அஞ்சலிக்கூட்டமாகவும் நாம் கருதிக்கொள்ளலாம். வீணாய்ப்போன வலம்புரிஜானின் இடத்தைப் பிடிக்க எப்படி எல்லாம் பல்லிளிக்க வேண்டியிருக்கிறது!

ஏற்கனவே நாறிப்போயிருந்த கோடம்பாக்கத்தில் மேலும் பல பன்னிச்சாணிகளைக் கொட்டிய மாதிரி ரஜினி,கமல் கழிசடைகளை வைத்து சினிமா எனும் பேரில் பல குப்பைகளை எடுத்து தள்ளியவர் இந்த முத்துராமன். அவர் இந்த மேடையில் ஒரு சுவாரசியமான விசயம் சொன்னார். அவர் 10ஆம் வகுப்புப் படிக்கும்போது ஒருமுறை திமுக பேச்சாளர் ஒருவர் வராததால், அவருடைய அப்பாவின் வேண்டுகோளின்படி கூட்டத்தில் பேசப்போனாராம். அதே கூட்டத்தில் பேசி முடித்த க.அன்பழகன், கூட்டம் முடிந்ததும் 'யார் நீ?' எனக்கேட்டிருக்கிறார். முத்துராமன், 'ராம.சுப்பையாவின் மகன்' என்றதும் 'இதுதான் கடைசி..முதலில் படிச்சு முடிக்கிறதப் பாரு' என்று அன்பழகன் சொன்னாராம்.

எஸ்.பி.முத்துராமன், ஒழுங்காய் அன்பழகன் சொன்னதைக் கடைப்பிடித்துப் படித்திருந்திருக்கலாம். நாமும் பல கழிசடை குப்பைகளை பார்த்து கஸ்டப்பட்டிருக்க வேண்டியதிலிருந்து தப்பித்திருக்கலாம். சகலகலாவல்லவன்,முரட்டுக்காளை... உயர்ந்த உள்ளம், நல்லவனுக்கு நல்லவன்...... அடத் தூ....

வாழ்த்துரை வழங்க வந்த ராம.வீரப்பன் (முருகன் கை வேல் எடுத்த ஆர்.எம்.வீ. அண்ணே தான்), தன்னை ராம.சுப்பையாதான் அரசியலுக்கு அழைத்துவந்ததாகச் சொன்னார். பின்னர் இருவரும் வேறுவேறு பாதைகளில் அரசியல் பயணம் மேற்கொண்டதாகச் சொன்னது நம்மை வியப்பில் ஆழ்த்தியது. ஆர் எம் வீ 40களுக்குப் பிறகு அரசியலில் என்ன செய்துவிட்டார் என்று வேறு பாதையில் பயணித்ததாக கூறுகிறார்? எம்.ஜி.ஆருக்கு மேனேஜராகவும், எம்.ஜி.ஆரின் பல கள்ளத்தனமான வெளியில் சொல்லக்கூச்சப்படும் செயல்களுக்கு எடுபிடியாகவும் (மாமா) வேலை பார்த்ததை எல்லாம் அரசியல்பணி என்று சொல்லமுடியாது. எதனை சொல்வது? பெரியாரின் கைப்பிடித்து வளர்ந்த வீரப்பன், எம்.ஜி.ஆரிடம் அமைச்சராகி சங்கராச்சாரியின் பல்லக்கை சுமந்த மாட்டு வண்டியை மாட்டிற்குப் பதிலாக இழுத்து வந்தகதையையா? முருகனுக்கே மொட்டை போட்டு வைர வேலை எங்கப்பா? எங்க வீரப்பா? என்று மக்கள் கேட்டதையா? என்னமோ போங்க.

ஆர்.எம்.வீ. சொன்னார் 'அண்ணன் சுப்பையாவின் கடைசிக்காலங்களில் அவ்வப்போது அவரை சந்திப்பதுண்டு','ஏன் வீரபாண்டியன் தம்பி எதிர்ப்பா இருக்குதுன்னு தெரியலை என்பார். அவர் இப்ப இருந்திருந்தால் வீரபாண்டியனின் இன்றைய நிலைப்பாட்டைக்கண்டு மகிழ்ந்திருப்பார்' என்றார். இதைச் சொல்வதன் மூலம் ராம.சுப்பையாவுக்கு தேசிய இன, பெரியாரிய, தமிழ்த் தேசிய அரசியல் எதுவும் தெரியாது என்பதையும்(அதாவது வீராபண்டியன் ஏன் இந்த அடிப்படைகளில் கருணாநிதியை எதிர்த்தார் என்பது பற்றிய புரிதல் ராம. சுப்பையாவுக்கு இல்லை என்பதையும்) வீரபாண்டியன் தற்போது கடைசியில் கலைஞரின் நாய்க்குட்டியாகி எல்லாவற்றையும் உதிர்த்துவிட்டவர் என்பதையும் சொல்லாமல் சொன்னார்.

Photobucket Link

அன்பழகன் பேசும்போது உள்குத்து ஒன்றை வைத்து விட்டு அமர்ந்தார். "கலைஞர் ஒருவர்தான் ராம.சுப்பையா அவர்களை அண்ணன் என்று அழைப்பார். நாங்கள் அவரை 'தோழர்' என்றுதான் கூப்பிடுவோம். சுயமரியாதை இயக்கம் அப்படித்தான் பழக்கி இருந்தது. பெரியாரையே தோழர்.ராமசாமி என்றுதான் அழைப்பார்கள்" என்று குறிப்பிட்டார். இப்பேச்சின் சாரம் என்ன என்பதை அடிமட்ட கலைஞர் உடன்பிறப்பு புரிந்து கொள்ள மாட்டான். ஆயினும் தலைவர்மட்டத்தில் உடனடியாக உணர்ந்து கொள்வர்.

"யோவ்..கருணாநிதி..உம்மைவிட 15 வயசு மூத்தவரான ராம.சுப்பையாவையே தோழர்னுதான் அழைத்தோம். நீரோ என்னை விட 2 வயது இளையவர். உம் பெயரைக்கூட சொல்லிடாமல் 'தமிழினத் தலைவர்'னு அழைக்கணுமா?" - இதுதான் அன்பழகன் சொல்லாமல் சொன்ன விசயம்..

கருணாநிதி எப்பேர்ப்பட்ட ஆசாமி! அன்பழகன் வைத்த செக்குக்கு ஆப்புக் கொடுக்க வேண்டாமா? எப்படி இதைச் சமாளிப்பார் என்று பார்த்தோம்..

Photobucket Link

"கல்லக்குடி போராட்டத்தில் எங்களில் 30 பேர்களை முதலில் அரியலூர் சப்-ஜெயிலில் அடைத்தார்கள். ஏழெட்டுப் பேர்களை ஒரே செல்லில் அடைத்தார்கள். உள்ளே கடுமையான துர்நாற்றம். இரவு நல்ல காற்றை சுவாசிக்க மூக்கை கம்பிக்கு வெளியே நீட்டியபடி நின்று கொண்டிருந்தேன். இரவு வெகு நேரமான பின்னரும் நின்று கொண்டிருந்தேன். அப்போது அண்ணன் ராம.சுப்பையா , கால்கள் வலிக்குமே என்று என்கால்களைப் பிடித்து அமுக்கி விட்டுக் கொண்டிருந்தார். அவர் வயதென்ன? என் வயதென்ன? இதெல்லாம் அவர் செய்தது எதனால்? அதன் பெயர்தான் தொண்டு" என்று கருணாநிதி பேசினார்.

அதாவது,
"யோவ்..பெருசு..என்னமோ..அவரையே தோழர்னு சொல்லுவியா? ஒன் தோழரே என் காலைப்பிடிச்சுக்கிட்டு தொண்டு செஞ்சவர் பாத்துக்கோ..உன் மனசில அந்த மாதிரில்லாம் 'தோழர் கருணாநிதி..அடேய் கருணாநிதி'ன்னுல்லாம் கூப்பிடனும்னு வேற நினப்பிருக்கா? காலைப்பிடிப்பதுதான் தொண்டனுக்கு அழகு..பாத்துக்கோ"...இதுதான் கருணாநிதி சொல்லாமல் சொன்ன பதில்..

அன்பழகனுக்கு ஆப்படித்தாயிற்றா?

கூட்டம் முடிந்த பிறகு இதனைத் தோழர்கள் குறிப்பிட்டுச் சிரித்துக் கொண்டிருந்தனர். தோழர் ஒருவர் சொன்னார்.."கூட்டம் முடிந்து வீட்டுக்குப் போய் துணைவியாரிடம் அன்பழகன் சொல்வார் 'கருணாநிதிக்கு நல்லா செக்கு வச்சிட்டேன்'. அந்த அம்மா கேட்க்கும் 'அப்புறம்..என்னங்க ஆச்சு'. அன்பழகன் உடனே சொல்வார் 'பாவி மனுசன்..நம்மை நல்லா மூக்க உரிச்சிட்டான்..'. பதிலுக்கு அந்த அம்மா, 'அதான் 40 வருசமா இதுதான நடக்குது... என்னமோ புதுசா இன்னைக்குதான் நடக்கிற மாதிரி..போய்த் தூங்கும்வே,.ம்பாங்க"

விழாவை ஒட்டி ராம.சுப்பையா மலர் எனும் பெயரில் அவரின் குடும்ப போட்டோ ஆல்பம் ஒன்றை வெளியிட்டார்கள்..

ரூ100 கொடுத்து வாங்கிப் படித்துப் பார்த்த பின்னர்தான் தெரிந்தது.. சுயமரியாதையில் சாதிஒழிப்பு என்ற ஒன்றை ராம.சுப்பையா குடும்பம் கடைப்பிடிக்கவே இல்லை என்பது.... ஒரு வேளை "செட்டியார் சுயமரியாதையோ" என்னமோ?

நன்றி பின்னூட்டத்தில்
---வில்லாளன்----

Wednesday, May 14, 2008

இந்தியா வளருது, இந்தியனுங்க தேயுறானுங்க...

ற்கனவே சமீபத்திய விலையேற்றம் சில உண்மைகளை வெளி கொண்டு வந்தது. குறிப்பாக இந்தியாவின் உணவு இருப்பு 1972 அளவுக்கு இறங்கியிருப்பதும், ஒவ்வொரு தலைக்குமான உணவு அளவு 1950கள் அளவுக்கு இறங்கியிருப்பதும் அம்பலமானது. இன்னிலையில் ஏற்கனவே பலமுறை வெளிவந்த அதே செய்தி மீண்டும் வெளி வந்து உறுதிப்பட்டுள்ளது. இந்திய குழந்தைகளில் 51% பேர் ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்ட வளர்ச்சி குன்றியவர்களாக உள்ளனர் அதுவும் இந்த அம்சத்தில் உலகிலேயே மிக மோசமான நாடாக இந்தியா உள்ளது என்று எச்சரிக்கை செய்கிறது சமீபத்திய ஆய்வு.

இந்தியாதான் உலகிலேயே குழந்தைகளுக்கான மிக மோசமான நாடு என்பது சில மாதங்களுக்கு முன்பு விரிவாக அம்பலமானது. அதாவது சிறார்களின் மரணத்தில் உலகிலேயே முதல் இடத்தில் இருப்பது எத்தியோப்பியாவோ அல்லது வேறந்த ஆப்பிரிக்க வறுமை பகுதிகளோ அல்ல மாறாக இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது.

செய்தி ரசம்

Related Article:

19% இந்தியர்கள் வாழ்க்கையை ஒட்டுவது வெறும் 12 ரூபாயில்..!!!
India grows so does the Inflation - Don’t talk about Indians!!!
India is First always!!! The record breaking Three seconds

================================================
"59 ஆண்டு கால குடியரசு தினத்தின் யோக்கியதை" - ஓட்டுக்கட்சிகளின் சாதனை
நன்றி: இரும்பு

பட்டினியால் வாடும் மக்களின் தன்மையை அளவிடும் சர்வதேச அளவிலான குறியீட்டெண்ணின் அடிப்படையில் இந்தியா எத்தியோப்பாவை விடத் தாழ்ந்து போயுள்ளது. சீனா (47 வது இடம்), பாகிஸ்தானை விடவும் (88ஆவது இடம்) இந்தியா (94 ஆவது இடம்) மிகவும் பின்னோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது.
..
மகப்பேற்றின்போது போதிய மருத்துவ வசதி இன்மையால் இறந்து போகும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கை மட்டும் ஆண்டுக்கு 1.17 லட்சம்.

வயது வந்த இந்தியர்களில் 48.5% பேர்கள் ஊட்டச்சத்துக்குறைவானவர்கள். 3 வயதுக்குக் குறைவான குழந்தைகளில் 47! பேருக்கு வயதுக்கேற்ற உயரமில்லை. 15.5% பேர்களுக்கு உயரத்துக்கேற்ற எடை இல்லை என்பதெல்லாம் ஆய்வுகளில் தெரியவந்தவை.

1997 முதல் 2005 வரை இந்தியா முழுவதும் ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.

மராட்டியம், கருநாடகம், ஆந்திரம், மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் மட்டும் 89,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

32 ஆயிரம் பேர்கள் தற்கொலை செய்து கொண்ட மராட்டிய மாநிலத்தில் தான் 4 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள பணக்காரர்கள் 25 ஆயிரம் பேர் வாழும் மாநகரமான மும்பை உள்ளது என்பது வேதனை கலந்த உண்மை.

விவசாயத்துக்கு 1990-இல் வங்கிகள் வழங்கிய கடன் 13.8 சதவீதமாக இருந்தது. அதே வங்கிகள் 2001 - -2 நிதியாண்டில&#