TerrorisminFocus

Monday, April 28, 2008

தத்துவ குருடர்களும், முதலாளித்துவ வளர்ச்சியும்!!!

சில தத்துவ குருடர்களும், வரலாற்று குருடர்களும் முதலாளித்துவ வளர்ச்சி என்ற பெயரில் நாட்டை கூட்டிக் கொடுப்பதையே மார்க்ஸியம் என்று சொல்லி வருகின்றனர். அவர்களுக்கு மார்க்ஸியத்திலிருந்தே இதற்க்கான மறுப்பை அறிமுகப்படுத்தும் முகமாக ஒரு பழைய பதிவை மீள் பதிவு செய்கிறேன்.
___________________________________________________________________
இன்றைக்கு சுதந்திர வர்த்தகம் குறித்து பேசும் ஏகாதிபத்திய அடிவடுடிகள், தொழில் வளர்ச்சி, தொழில் முதலீட்டிற்க்கான மூலதன்ம் இவற்றையே காரணமாக கூறி ஏமாற்றுகிறார்கள். ஆனால் உலகில் முன்னேறி நிற்க்கும் நாடுகளின் வரலாறை பார்க்கும் பொழுது இவர்களின் இந்த கூற்று பொய் என்று தெரிய்வருகிறது.

Free Trade குறித்து மார்க்ஸின் கட்டுரைக்கான ஏங்கெல்ஸின் முன்னுரை.

""After a long and violent struggle, the English industrial capitalists, already in reality the leading class of the nation, that class whose interests were then the chief national interests, were victorious. The landed aristocracy had to give in. The duties on corn and other raw materials were repealed. Free Trade became the watchword of the day. To convert all other countries to the gospel of Free Trade, and thus to create a world in which England was the great manufacturing centre, with all other countries for its independent agricultural districts, that was the next task before the English manufacturers and their mouthpieces, the political economists.""

பிரிட்டிஷ் முதலாளிகளின் இடத்தில் இன்றூ தேசம் கடந்த பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகள் உள்ளனர். மூன்றாம் உலக நாடுகளை தங்களது சந்தை மற்றும் உற்பத்திக்கான பின்நிலங்களாக வைத்துள்ளனர் என்ற அளவில் ஒப்பிட்டு புரிந்து கொள்ள இந்த வரிகள் உதவும்.

மேலும் இங்கு பிரிட்டனுக்கும் அதனுடன் சுதந்திர வர்த்தகம் செய்ய விழைந்த நாடுகளுக்கும் இடையிலான முதலாளித்துவ வளர்ச்சி வித்தியாசம் என்பது மிக குறைவு. எனவே இந்த வர்த்தக உறவால் ஏற்பப்டும் பாதிப்பு குறைவே. ஆனால் இந்தியாவுடன் பிற் ஏகாதிபத்தியங்களுக்கு உள்ள ஒப்பிட இயலா வித்தியாசத்துடன் பொருத்திப் பார்க்கும் பொழுது இந்தியாவுக்கு அது மரண அடியாக பாதிப்பு கொடுக்கும் என்பதை விவசாயிகளின் தற்கொலைகளில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

பிரிட்டனின் இந்த சுதந்திர வர்த்தக நோக்கத்தை மார்க்ஸ் ஆதரித்தார். ஏனேனில், இது பிரிட்டனில் தொழில் வளர்ச்சியை மிக வேகமாக முடுக்கி விடும் எனவே புரட்சிக்கான சூழல் மிக வேகமாக வளரும் என்ற அடிபப்டையில். ஆக, ஏகாதிபத்தியத்தின் பொருளாதார் வளர்ச்சிக்கு சுதந்திர வர்த்தகம் உதவி புரிவதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இது எந்த வகையிலும் சுதந்திர வர்த்தகத்தில் இணையும் பிற நாடுகளுக்கு உதவிகரமானது இல்லை எனப்தை கீழே விவரிக்கிறேன்.

அன்றைய பிற முதலாளித்துவ நாடுகள் பிரிட்டனின் உலக மேலாதிக்க திட்டங்களைப் பார்த்துக் கொண்டு புளிய்ம பழமா பறித்துக் கொண்டிருந்தார்கள்? இல்லை மாறாக அவர்களும் தமது சொந்த உற்பத்தியை மிக வேகமாக வளர்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் சுதந்திர வர்த்தகம் மூலமாக இல்லை, மாறாக தமது பொருளாதாரத்தை இறுக்க மூடி வெளி நாட்டு மூலதனத்திலிருந்த பாதுகாத்தன் மூலமே தமது பொருளாதாரத்தை வளர்த்தனர்.

""The foreign countries did nothing of the kind. France, for nearly 200 years, had screened her manufactures behind a perfect Chinese wall of protection and prohibition, and had attained in all articles of luxury and of taste a supremacy which England did not even pretend to dispute.""

இங்கு பிரான்ஸ் தேசம் தனது சொந்த நாட்டின் தொழில் வளர்ச்சியை புரொக்டசனிஸ்ட் முறை மூலம் காபந்து செய்து வளர்த்தது குறித்து ஏங்கெல்ஸ் சொல்கிறார். இது போலவே ஜெர்மனி, சுவிட்சர்லாந்து என எல்லா நாடுகளும் தமது தொழில் வளர்ச்சியை இப்படி பொத்தி பொத்தி பாதுகாத்துதான் வளர்த்தனர்.

ஏங்கெல்ஸ் ஒரு ரயில் பிரயாணத்தில் தன்னுடம் பயணம் செய்த சக பயனியான இரும்பு வியாபாரியிடம் பேசுகிறார். இரும்பு வியாபாரி அமெரிக்காவின் protectionist பொருளாதார கொள்கையை விமர்சித்து பேசுகிறார்.

"Was it not inconceivable that a nation of sharp businessmen like the Americans should pay tribute to indigenous ironmasters and manufacturers, when they could buy the same, if not a better article, ever so much cheaper in this country?"

அதாவது இரும்பை குறைந்த விலைக்கு உற்பத்தி செய்யும் இங்கிலாந்திலிருந்து வாங்குவதை விடுத்து ஏன் உள்ளூர் இரும்பு உற்பத்தியாளர்களை அமெரிக்க ஊக்கப்படுத்துகிறது என்கிறார். மேலும் அவர் free trade என்ற இன்றைய உலகமயத்தின ஆதார நியதியை ஆதரித்து பேசுகீறார்.

இதற்கு எங்கெல்ஸ் பின்வருமாறூ கூறுகிறார்,

""Well," I replied, "I think there is another side to the question. You know that in coal, waterpower, iron, and other ores, cheap food, homegrown cotton, and other raw materials, America has resources and advantages unequalled by any European country; and that these resources cannot be fully developed except by America becoming a manufacturing country. You will admit, too, that nowadays a, great nation like the Americans' cannot exist on agriculture alone; that would be tantamount to a condemnation to permanent barbarism and inferiority; no great nation can live, in our age, without manufactures of her own. Well, then, if America must become a manufacturing country, and if she has every chance of not only succeeding but even outstripping her rivals, there are two ways open to her: either to carry on for, let us say, 50 years under Free Trade an extremely expensive competitive war against English manufactures that have got nearly a hundred years start; or else to shut out, by protective duties, English manufactures for, say, 25 years, with the almost absolute certainty that at the end of the 25 years she will be able to hold her own in the open market of the world. Which of the two will be the cheapest and the shortest? That is the question. If you want to go from Glasgow to London, you take the parliamentary train at a penny a mile and travel at the rate of 12 miles an hour. But you do not; your time is too valuable, you take the express, pay twopence a mile and do 40 miles an hour. Very well, the Americans prefer to pay express fare and to go express speed.""

அதாவது அமெரிக்காவில் அளப்பரிய வளங்கள் உள்ளன. இவற்றை வளர்த்தெடுக்க அமெரிக்க ஒரு உற்பத்தி பொருளாதாரமாக மாற வேண்டும். விவசாயத்தை மட்டும் நம்பி ஒன்றும் செய்ய முடியாது. இதை சாதிகக் இரு வழிகள் உள்ளன. ஒன்று தனது நாட்டை திறந்து விடுவதன் மூலம் இங்கிலாந்து முதலாளீகளுடன் முட்டி மோதி தந்து நாட்டு உற்பத்தியை வளர்ப்பது. இன்னொன்று தனது நாட்டை இறுக்கமாக மூடி சொந்த நாட்டு உற்பத்தியை வளர்த்தெடுப்பது.

நீ ஒரு இடத்துக்கு போக சாதா ரெயிலும், எக்ஸ்பிரஸ் ரயிலும் இருந்தால் காசு கொஞச்ம் கூட ஆனாலும் பரவாயில்லை என்று எக்ஸ்பிரஸ் ரெயிலில்தானே செல்வாய்? அதைத்தான் அமெரிக்க செய்கீறது. தனது நாட்டின் உற்பத்தியை வேகமாக வளர்த்தெடுக்க காசு அதிகமாகா செல்வனாலும் பரவாயில்லை என்று அமெரிக்க த்னது கதவுகளை மூடி கொண்டுள்ளது. என்று ஏங்கெல்ஸ் பதில் சொல்கீறார்.

இப்படி ஒவ்வொரு ஏகாதிபத்தியமும் தமது பொருளாதாரத்தை பொத்தி பொத்தி வளர்த்துவிட்டு இன்று இந்தியா போன்ற நாடுகளை கதவைத் திறந்து விடச் சொல்கின்ற்ன. அதற்க்கு சில அடிவருடிகளின் ஆதரவு வேறு.

இவர்களின் ஒரே வாதம், இந்தியாவில் தொழில் புரட்சி நடக்க இந்தியாவை திறந்து விட வேண்டும் என்பதுதான். ஆனால் இவர்களின் அப்பன் நாடுகள் எதுவும் இவர்களின் இந்த கூற்றை நடைமூறையில் இன்று வரை ஏற்றுக் கொள்ளவில்லை. இன்றூம் கூட தனது விவ்சாய உற்பத்தியை protectionist கொள்கையின் மூலம் காத்து வருபவர்கள்தான் ஏகாதிபத்திய்ஙகள். அதாவது இந்தியாவை தமது குறை விலை பருத்தியால், பாலால் நிறைக்கும் ஏகாதிபத்திய்ங்கள், தமது நாட்டில் இந்திய விவசாய பொருட்களை அனுமதிப்பதில்லை. அனுமதித்தாலும் நாம் சந்தையில் நிற்க முடியாது ஏனேனில் ஒவ்வொரு நாடும் தனது உள்நாட்டு விவசாய உற்பத்தியாளருக்கு 100% வரை மானியம் தருகீறார்கள்.

ஆக நேற்றைய வரலாறு நமக்கு சொல்வது , "ஒரு நாட்டின் முதலாளித்துவ வளர்ச்சி என்பது, உற்பத்தி வளர்ச்சி என்பது அதனை வெளிநாட்டு மூலதனத்திலிருந்து பாதுகாப்பதில் அடங்கியுள்ளது என்பதை" அதாவது உள்நாட்டு முதலாளிகளை வளர்ப்பதில் அடங்கியுள்ளது.

இன்றைய ஏகாதிபத்தியங்கள் தமது விவசாய உற்பத்தியில் நடைமுறைப்படுத்தும் கொள்கையும் இதையேதான் சொல்கீறது.

தமது சொந்த் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு ஆதரவாக பேசும் போது குறைந்த் விலை, தொழில்நுட்பம் என்றெல்லாம் சப்பைக் கட்டு கட்டாமல் தமது பொருளாதாரத்தை கட்டி காத்து வளர்த்த அன்றைய முதலாளித்துவ நாடுகளும், இன்றைய் ஏகாதிபத்திய நாடுகளின் தேசபக்தி எங்கே? இதே தொழில் வளர்ச்சியை நாட்டை திறந்து விட்டு நாறடித்தால்தான் சாத்தியம் என்று கதை கட்டி இந்தியாவின் வளங்களை கூட்டிக் கொடுக்கும் அடிவருடிகளின் தேசத் துரோகம் எங்கே?

இவர்களின் யாருக்கு தேசப்பற்று உள்ளது? வெறுமனே சுதந்திர தின விழாவுக்கு கட்டுரை எழுதி மிட்டாய் கொடுத்தால் தேசப்பற்றா?

அடிவருடிகள் பதில் சொல்வார்களா அல்லது வழக்கம் போல ஓடி மறைந்து கொள்வார்களா?

இங்கு ஒரு விசயம் கவனிக்க வேண்டும். அமெரிக்காவின் தொழில் வளர்ச்சி ஓரளவு நல்ல நிலையில், இங்கிலாந்துடன் போட்டி போடும் நிலையில் இருக்கும் பொழுதே அதன் சந்தையை இங்கிலாந்துக்கு திறந்து விடுவது அதன் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்ப்படுத்தும் என்பதுதான் உண்மை. இந்தியாவோ எந்த வகையிலும் உற்பத்தியில் ஏகாதிபத்திய நாடுகளின் அருகிலேயே இல்லை. இந்நிலையில் திறந்து விடுவது என்பது சுத்தமாக இந்தியாவை அழிவின் விளிம்புக்கு கொண்டு செல்லும் என்பதுதான் உண்மை.

ஏகாதிபத்திய்ங்களின் இன்றைய கொள்கைகளும் சரி, நேற்றைய வரலாறும் சரி நமக்கு சொல்வது இதுதான், "சுதந்திர வர்த்தகம் என்பது உள்நாட்டு தொழில் வளர்ச்சிக்கு ஆபத்தே'. அது உண்மையான தொழில் வளர்ச்சியின் வேகத்தை முடக்கி போட்டு மந்தமான வளர்ச்சியையே உருவாக்கும் என்பதுதான் உண்மை. இந்த மந்தமான வேகத்தைத்தான் அடிவருடிகள் ஊதிப் பெருக்கி நம்மை ஏமாற்றுகிறார்கள். மாறாக 10 வருடங்க்ளில் 56 மடங்கு உற்பத்தியை வளர்த்திக் காட்டிய சோசலிச(1970's) சீனாவின் அனுபவ்ம் நமக்கு மாற்றுப் பாதையைக் காட்டுகிறது.
நாம் இழிச்சவாயர்களா? அடிவருடிகளா? தற்குறிகளா? பிழைப்புவாதிகளா? அலல்து சுயமரியாதை உள்ள தேச பக்தர்களா என்பதை அவரவர சொந்த முயற்சியில் பரிட்சித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அசுரன்
Related Articles:

Friday, April 25, 2008

ராஜீவின் புத்திரியும், நளினியும், IPL 20/20யும் - மேன்மக்கள் மேன்மக்கள்தான்!!!




கவிதைக்கு நன்றி அரசுபால்ராஜ்


வேலூர் சிறையில்
கண்ணீரால் முறையிட்ட
ஆனந்த பவனத்து
குலக்கொழுந்துக்கு,
நளினி
என்ன பதில்
சொல்லியிருக்கக் கூடும்?
தெரிந்து கொள்ள
யாருக்கும் ஆர்வம் இல்லை.

பதில் கிடக்கட்டும்.
இந்தப் புதுமை
புல்லரிக்க வைக்கவில்லையா?
குற்றவாளி
தனது குற்றத்தை உணர்ந்து
குமைய வைக்கும் கண்ணீர்...
மனங்களிடையேயான
அகழிகளை நிரப்பும்
பாதிக்கப்பட்டவர்களின்
பரிசுத்தமான கண்ணீர்...
என்ன இருந்தாலும்
மேன்மக்கள் மேன்மக்களே!

ஆனால்,
கேவலம்
அவ்வாறு
கண்ணீர் சிந்தி கதறியழும்
வாய்ப்பையேனும்
என்றைக்காவது
எமக்கு வழங்கியிருக்கிறீர்களா
எசமானர்களே...?

தகப்பன் பாசம் கூட
சீமாட்டிகளுக்குத்தான்
சொந்தமோ?
மணிப்பூரின் தாய்மார்கள்
மன்மோகன் சிங்கை சந்திக்கவும்,
நரோடா பாட்டியாவின்
இசுலாமியக் குழந்தைகள்
மோடியை கண்டு முறையிடவும்...
முறையிட அல்ல,
மனுக் கொடுப்பதேனும் சாத்தியமா?
இவற்றுக்கும்
உளவுத் துறை
உறுதுணையாய் வருமா?

சீமாட்டிகளின்
பொழுதுபோக்குகளில்
சுவாரஸ்யத்திற்கு
பஞ்சமில்லை.
அதனால்தான்
அடுத்த சில நாட்களில்
அரை மணி நேரத்திற்கு
ஒரு விவசாயி
தற்கொலை செய்து கொள்ளும்
இழவு நாட்டில்,
சற்றும் துணுக்குறாமல் நடைபெறும்
வக்கிரக் கொண்டாட்டத்தில்
அம்மையார் பிரசன்னமானார்.

வேலூர் சிறை 'த்ரில்'
அலுத்துப் போயிருக்கலாம்.
ஷாருக் கானின் அருகாமையில்
புதிய 'த்ரில்'
தேவைப்பட்டிருக்கலாம்.
அல்லது
அங்கும் கூட
அன்பிற்குரிய
அப்பா தென்பட்டிருக்கலாம்.
உண்மைதானே,
21-ஆம் நூற்றாண்டுக்கு
இந்தியாவை அழைத்துச் செல்லும்
ராஜீவின் கனவு
20-20-ல் தானே நிறைவேறுகிறது...

ஆனால்,
பிரியத்திற்கிடமற்ற
பிரியங்கா அம்மையாரே...
ஒன்றை மட்டும்
நினைவில் கொள்ளுங்கள்...
தண்ணீரை விட மட்டுமல்ல,
கண்ணீரை விடவும்
இரத்தம் அடர்த்தியானது.

Thursday, April 17, 2008

மீள் பதிவு: "அடிமை நாடும், போலி சுதந்திரமும்"

ந்த கட்டுரை அசுரனில் 2006-ல் பதியப்பட்டது. தற்போதைய சில அவதூறுகளுக்கு பதில் சொல்லும் முகமாகவும், புதிய வாசகர்களுக்கு ஏற்கனவே இங்கு பதியப்பெற்றவற்றை அறிமுகப்படுத்தும் விதமாகவும் மீள் பதியப்படுகிறது. முதல் பதிவு இங்கு உள்ளது. கட்டாயம் அங்கு சென்று படிக்கவும் சுவையான விவாதங்கள் நிகழ்ந்துள்ளன.
_____________________________________________________________
சுதந்திரமும் சூழ்ச்சியும்:

1947 - இல் நாம் பெற்றது சுதந்திரமல்ல; அது போலி சுதந்திரம். வெள்ளையன் இந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்படவில்லை; தனது விசுவாசமான கையாட்களிடம் அவன் அதிகாரத்தைக் கைமாற்றிக் கொடுத்தான். பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான மும்பை கடற்படை வீரர்களின் எழுச்சியும் தெலிங்கானா விவசாயிகளின் ஆயுதப் போராட்டமும் நாடெங்கும் பற்றிப் படர்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களும், அன்று காங்கிரசு - முஸ்லிம் லீக் தலைமைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு புரட்சிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருந்தன.

ஒரு மக்கள் பேரெழுச்சியால் தூக்கியெறியப்படுவோம் என்று அஞ்சி, இந்தியாவைத் திரைமறைவிலிருந்து ஆட்டி வைக்கும் திட்டத்துடன், தனது கையாட்களான காங்கிரசிடமும் முஸ்லீம் லீகிடமும் அரசு அதிகாரத்தை ஒப்படைத்தது பிரிட்டிஷ் அரசு. இந்தப் போலி சுதந்திரத்திற்கு வயது 60.

இன்று, வாயளவில் சுதந்திரம் என்று பீற்றிக் கொள்வதற்குக் கூட வழியில்லாமல், வெளிப்படையாகவே நம் நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன ஏகாதிபத்திய வல்லரசுகள். தற்போது நம்மீது திணிக்கப்படும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையின் உண்மையான பொருள் மறுகாலனியாதிக்கம் என்பதுதான். நமது நாட்டின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகள், மக்களின் தேவையையோ நாட்டு நலனையோ கணக்கில் கொண்டு வகுக்கப்படுவதில்லை. மாறாக, உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம், சர்வதேச நாணய நிதியம், பன்னாட்டு நிறுவனங்கள் ஆகிய ஏகாதிபத்திய நிறுவனங்களின் ஆணையைத்தான் எல்லா அரசாங்கங்களும் பணிவுடன் அமல்படுத்தி வருகின்றன.

இந்தக் கொள்கைகளால் இந்தியத் தரகு முதலாளிகளின் லாபம் விண்ணை முட்டுமளவு உயர்கிறது. உழைக்கும் மக்களின் வாழ்க்கையோ மரணக் குழிக்குள் சரிகிறது. இது தெரிந்தும் "இந்தியா ஒளிர்கிறது" என்று குதூகலிக்கிறார்கள் ஏகாதிபத்திய அடிமைகள். உலகையே தன் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்காகப் போர்வெறி பிடித்து அலையும் அமேரிக்க வல்லரசின் எடுபிடியாகவும் ஆசியப் பகுதிக்கான அடியாளாகவும் இந்தியா மாற்றப்பட்டு விட்டது. இந்த அடிமைகளோ, "இந்தியா வல்லரசாவதற்க்கு இதுதான் சிறந்த வழி" என்று குதூகலிக்கிறார்கள்.

இவர்கள் சுதந்திர உணர்வற்ற பிழைப்புவாதிகள், நாட்டுப்பற்றும் சுயமரியாதை உணர்வுமற்ற புழுக்கள் - ஆனால் படித்த புழுக்கள், "ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், ஹார்வர்டு, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் எனப் படித்துப் பட்டம் வாங்கி பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரிகளாகி லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம்; குடும்பத்தோடு அமேரிக்காவில் குடியேறலாம்; பன்னாட்டு முதலாளிகளுடன் சேர்ந்து கூட்டாக இந்தியாவைக் கொள்ளையிடலாம்" என்றெல்லாம் கனவு காணும் இத்தகைய அற்பர்கள்தான் மறுகாலனியாக்க அடிமைத்தனத்தை முன்னேற்றம் என்று கூறி நம்மை ஏமாற்றுகிறார்கள்.

அன்று பகத்சிங் முதலான போராளிகள் நாட்டு விடுதலைக்காக தூக்கு மேடையில் நின்று கொண்டிருந்த போது இத்தகைய மானமற்ற புழுக்கள் பிரிட்டிஷ் அரசின் பதவி நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள். கலெக்டராக, ஜட்ஜாக, போலீசு அதிகாரியாக, அமைச்சராக, துரைமார்களுக்கு தொண்டூழியம் செய்யும் விசுவாசமான அரசு ஊழியர்களாக இருந்து கொண்டு வெள்ளைக்காரனின் நிர்வாகத்திறனை மெச்சி, அவன் ஆட்சி நீடிக்க வேண்டுமெனப் பிரார்த்தனையும் செய்து கொண்டிருந்தார்கள்.

அன்றைக்கும் இன்றைக்கும் வேறென்ன வேறுபாடு? அதிகார நாற்காலியில் அந்நியன் நேரடியாக அமர்ந்திருந்தால்தான் காலனியாதிக்கமா? கல்லாவில் அமர்ந்திருந்தால்தான் கடைமுதலாளியா?

"பிரிட்டனின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அனைத்துக்கும் துணை நிற்க வேண்டுமென்றும், தன்னை மீறி வேறு அரசுகளுடன் உறவு வைத்துக் கொள்ளக் கூடாதென்றும் வெல்லெஸ்லியின் துணைப்படைக் கொள்கை அன்று இந்திய மன்னர்களை நிர்பந்தித்தது. இன்றைய அமேரிக்க - இந்திய இராணுவ ஒப்பந்தம், அமெரிக்காவின் ஆக்கரமிப்புப் போர்களுக்கேல்லாம் இந்திய இராணுவம் அடியாள் வேலை செய்ய வேண்டுமெனக் கட்டாயப்படுத்துகிறது, இரானுடன் உறவைத் துண்டிக்குமாறு உத்தரவிடுகிறது, இந்திய அணு ஆயத உற்பத்திக்குத் தடை விதிக்கிறது.

அன்று டல்ஹவுஸியின் வாரிசிலிக் கொள்கை, வாரிசு இல்லாத மன்னர்களின் நாட்டை இணைத்துக் கொள்வதாகக் தொடங்கி, பின்னர் எல்லா சமஸ்தானங்களையும் ஆக்கிரமித்துக் கொள்வதில் முடிந்தது. இன்றோ, 'நட்டமாகும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம்' எனத் தொடங்கிய தனியார்மயக் கொள்கை, லாபமீட்டும் பொதுத்துறைகளையும் பன்னாட்டுக் கம்பெனிகளின் பசிக்கு விருந்தாக்க வேண்டும் என்று வளர்ந்திருக்கிறது.

அன்று ஜமீன்தாரி, ரயத்வாரி, மகல்வாரி முறைகள் மூலம் விவசாயிகளைப் பிழிந்து கஜனாவை நிரப்பியது பிரிட்டிஷ் அரசு. இன்று அரசுக் கொள்முதல் ரத்து, மானிய வெட்டு, தானியக் கொள்முதலில் அன்னியக் கம்பெனிகள், அதிலும் ஊகவணிகம், விவசாயிகளின் பாரம்பரிய விதைகளையே அன்னியன் உடைமையாக்குவது போன்ற சதிகள் மூலம் விவசாயியைக் கடனாளியாக்கி விவசாயத்தை விட்டே துரத்துகிறது அரசு.

அன்று கந்து வட்டிக்குக் கடன் பட்ட தமிழ்நாட்டின் விவசாயிகளை ஏமாற்றிக் கப்பலேற்றி, இலங்கையின் தேயிலைத் தோட்டங்களிலும், மலேசியாவின் ரப்பர் தோட்டங்களிலும் அவர்களைக் கொத்தடிமைகளாக்கிக் கொண்டது பிரிட்டிஷ் அரசு. இன்றோ கடன்பட்ட விவசாயிகளின் பிள்ளைகள், 'கொத்தடிமையாவோம்' என்று தெரிந்தே மலேசியாவுக்கு ஓடுகிறார்கள். பஹரைனில் தீக்கிரையாகி சவப்பெட்டியில் வீடு திரும்புகிறார்கள்.

எதுவும் பழங்கதையல்ல. கடந்த காலத்தின் காலனியாதிக்கக் கொடுமைகளைப் பூதக் கண்ணாடியால் பெருக்கிக் காட்டியதைப் போல இன்று நம் கண் முன்னே காட்சி தருகிறது மறுகாலனியாதிக்கம். இதற்கெதிராக நம்மைப் போராட தூண்டும் உந்துவிசையாக, இந்திய விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியாக, 200 ஆண்டுகளுக்கு முன்னரே வெள்ளையனுக்கு எதிராக வீரச்சமர் புரிந்திருக்கிறார்கள் தென்னகத்தின் வீரர்கள், தமிழகத்தின் வீரர்கள்!

விடுதலைப் போராட்ட வீர வரலாறு-ஒரு பார்வை:

1801 ஜூன் மாதம் திருச்சியிலிருந்து சின்ன மருது வெளியிட்ட பிரகடனம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. "இந்தியத் துணைக்கண்டத்திலிருந்தே வெள்ளையர்களை விரட்டியடிக்க சாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்று திரளுமாறு" மக்களை அறை கூவி அழைக்கிறான் சின்ன மருது. இந்தியா ஒரு நாடு என்ற கருத்து அக்காலத்திய பேரரசர்களிடமே உருவாகியிராத போது துணைக் கண்டத்தின் விடுதலைக்கே குரல் கொடுத்த இந்த அறிக்கைதான் இந்தியாவின் முதல் விடுதலைப் போர்ப் பிரகடனம்.

1795-இல் வெள்ளையருக்கெதிராக திப்பு நடத்திய போரில் தொடங்கி, 1806-இல் வேலூர்க் கோட்டைச் சிறையில் சிப்பாய்கள் நடத்திய புரட்சி வரை நீடித்த இந்தப் போர்தான் இந்தியாவின் உண்மையான முதல் சுதந்திரப் போர். ஆனால் தென்னிந்திய வரலாற்றைப் புறக்கணிப்பது, இசுலாமியர்களை புறக்கணிப்பது என்ற இந்து தேசியக் கண்ணோட்டத்தின் காரணமாக, தமிழகம் மற்றும் தென்னிந்தியாவின் பெருமைமிக்க இந்த விடுதலைப் போராட்ட மரபு இந்திய வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

1799-இல் சீரங்கப்பட்டினம் கோட்டையின் வாசலில் ஒரு சாதரணப் போர்வீரனைப் போலப் போரிட்டு மடிந்தான் திப்பு சுல்தான். நிஜாமும், பேஷ்வாவும், ஆறுகாட்டு நவாபும் துரோகமிழைத்துவிட்ட நிலையில் தென்னிந்தியா முழுவதும் உள்ள விடுதலை வீரர்களுடன் கூட்டணி அமைத்தான். தீரன் சின்னமலை திப்புவுடன் நின்று வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டான். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு சிறையிலிருந்து தப்பிய ஊமைத்துரைக்கு சின்ன மருது பாதுகாப்பு கொடுத்தான். கும்பினியாட்சியை எதிர்த்து சின்ன மருது நடத்திய போருக்கு திப்பு ஆயுதமும் நிதி உதவியும் வழங்கினான்.

திப்பு சுல்தான் கேளிக்கைகளில் திளைத்திருந்த மன்னனுமல்ல, சின்ன மருது கிணற்றுத் தவளையை ஒத்த பாளையக்காரனுமல்ல; இருவரும் ஆங்கிலம், பிரெஞ்சு உள்ளிட்ட பல மொழி அறிந்தவர்கள். பிரெஞ்சுப் புரட்சியால் கவரப்பட்ட திப்பு தன்னை 'குடிமகன் திப்பு' என்றே அழைத்துக் கொண்டான். சின்ன மருதுவோ "ஏழை மக்கள் கண்ணீரில்லாத வாழ்க்கை வாழ கும்பினியாரை எதிர்த்துப் போரிட வேண்டும்" என்று கூறி விடுதலைப் போருக்கு மக்களையும் அறைகூவி அழைத்தான்.

சின்னமலை, பூலித்தேவன், சின்ன மருது, வேலு நாச்சியார், ஒண்டிப்பகடை, சுந்தரலிங்கம், கட்டபொம்மன், ஊமைத்துரை, வெள்ளையத்தேவன் போன்றோர் தனித்தனியாகப் போராடி மடிந்த வீரர்கள் அல்ல. அவர்கள் தமக்குள் கூட்டிணைவுகளை உருவாக்கியிருந்தனர். நெல்லைக் கூட்டிணைவுக்கு கட்டபொம்மனும், திண்டுக்கல் கூட்டிணைவுக்கு கோபால நாயக்கரும், கன்னட நாட்டில் துந்தாஜியும், கேரளத்தில் கேரளவர்மனும், கோவையில் கானிஜகானும் தலைமை தாங்கினர். அனைவரும் இணைந்து உருவாக்கியிருந்த 'தீபகற்பக் கூட்டிணைவு' தனது ஆட்சிக்கே பேராபத்து என்று கும்பினிக்காரன் ஆஞ்சினான்.

1800-1801-ஆம் ஆண்டுகளில் மிகத் தீவிரமாக நடைபெற்ற இந்தப் போரில் சுமார் 30,000 வீரர்கள் தென்னிந்தியா முழுவதும் கும்பினியாட்சியை நிலைகுலைய வைத்திருக்கின்றனர். சாதி மத வேறுபாடுகளைக் கடந்து கிளர்ந்தெழுந்த இந்தப் போராட்டம் 1806-ஆம் ஆண்டு வேலூர் புரட்சியில் முடிவடைந்தது. இந்த விடுதலை வீரர்கள் காலனியாதிக்கத்தை ஒழிப்பதுடன் தம் கடமை முடிந்ததாகக் கருதவில்லை. கண்ணீரில்லாத மகிழ்ச்சியான வாழ்வை மக்கள் பெற வேண்டும் எனக் கனவு கண்டான் சின்ன மருது. பிரெஞ்சு புரட்சியால் கவரப்பட்ட திப்புவோ நாட்டைத் தொழில்மயமாக்கவும், மக்களுக்கு நல்வாழ்வு வழங்கவும் கனவு கண்டான். ஒரு சோசலிச இந்தியாவைப் படைக்க விழைந்தான் பகத்சிங்.

தூரோக வரலாறும் - தேர்தல் அரசியலும்:

அன்று அவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்; இன்றோ அவர்களது கனவும் தோற்றுக் கொண்டிருக்கிறது. பகத்சிங்கின் மண்ணிலிருந்து ஒரு மண்புழுவாம் மன்மோகன் சிங்! மருதுவின் சிவகங்கை மண்ணிலிருந்து சிரழிவுவாதி சிதம்பரம்! வீரர்களின் மண்ணிலிருந்து தப்பிப் பிறந்துவிட்ட இந்த ஈனர்கள், கூசாமல் துரோகிகளின் மொழியில் பேசுகிறார்கள்.

சின்ன மருதுவைத் தூக்கிலிட்ட பின் சிவகங்கை அரியணையை கும்பினியாரிடமிருந்து பிச்சையாகப் பெற்ற கவுரி வல்லபத் தேவன், கர்னல் அக்னியூவின் காலில் விழுந்து வணங்கினான் என்கின்றன ஆவணங்கள். "200 ஆண்டுகள் எங்களுடன் வணிகம் செய்தீர்கள். மேலும் 200 ஆண்டுகள் வணிகம் செய்ய உங்களை அழைக்கிறோம்" என்று கூறி இன்றைய ஐரோப்பிய முதலாளிகளிடம் பல்லிளிக்கிறார் ப.சிதம்பரம்.

'கடவுளே' என்று கும்பினியாரை விளித்துக் கடிதம் எழுதிய துரோகி தொண்டைமான், சின்ன மருதுவை 'நாய்' என்று கடிந்து ஏசுகிறான். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்குச் சென்று உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங்கோ காலனியாட்சி செய்த நன்மைகளுக்காக பிரிட்டனுக்கு நன்றி கூறுகிறார். ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக போராடும் உண்மையான நாட்டுப்பற்றாளகளான நக்சல்பாரிகளை "இந்தியாவின் மிகப்பெரிய உள் நாட்டு அபாயம்" என்று கூறி ஒடுக்குவதற்கு திட்டம் தீட்டுகிறார்.

அன்று கட்டபொம்மனைப் பிடித்துக் கொடுத்தது தொண்டைமானின் கூலிப்படை. இன்று கோலாவுக்கு எதிராக போராடும் அனைவரையும் ஒடுக்க நெல்லை மண்ணிலேயே எதிரிக்கு ஏவல் செய்கிறது தமிழக போலீசு. அன்று வெள்ளையனை எதிர்த்த விடுதலை வீரர்களைத் தன்னுடைய படைகளைக் கொண்டே ஒடுக்கினான் ஆற்காட்டு நவாப்; இன்று, ஜப்பானிய ஹோண்டா நிர்வாகத்தின் அடக்குமுறையை எதிர்க்கும் தொழிலாளர்களை நரவேட்டையாடுகிறது அரியானா போலீசு.

மறுகாலனியாதிக்கத்தை முறியடிக்க உறுதியெடுப்போம்:

முந்தைய காலனியாதிக்கத்தைக் காட்டிலும் கொடியது இந்த மறுகாலனியாதிக்கம். இதனை முன்னேற்றம் என்று கூறி மக்களை மூளைச்சலவை செய்து கொண்டிருக்கிறது ஆளும் வர்க்கம். பதவிக்கும் பவிசுக்கும் ஆசைப்பட்டு அன்று ஆங்கிலேயருக்குச் சேவகம் செய்தவர்களை 'ஈனப்பிறவிகள்' என்றான் சின்ன மருது. இன்று நாடே அன்னியனுக்கு அடிமையாகி வருவதை அறிந்தும் அமைதி காப்பதும், அலட்சியம் காட்டுவதும் கூட ஈனச் செயல்தான்.

விடுதலைப் போரில் முதல் குரல் எழுப்பிய தமிழகத்திலிருந்து இன்றைய மறுகலனியாக்க எதிர்ப்புப் போரும் துவங்கட்டும்! விடுதலைப் போராளிகளின் தியாக வரலாறு நம்மை முன்னோக்கிச் செலுத்தும் உந்து விசையாகட்டும்!

************

மேலே உள்ள கட்டுரை புதிய காற்று என்ற வலைப்பூவில் இருந்த ஒரு பதிவிலிருந்து மறுபதிப்பு செய்யப்படுகிறது.

*****

தொடர்புடைய பதிவுகள்:

The Transfer of Power: Real or Formal? -- Suniti Kumar Ghosh

Monday, April 14, 2008

பாரதியார், எஸ்.வி.ராஜதுரை மற்றும் சிலகேள்விகள்!!!

மார்க்சிய அறிஞர் என்றும் பெரியாரியல் மேதை என்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி என்றும் போற்றப்படும் எஸ்.வி.ராஜதுரையின் சொற்பொழிவு ஏப்ரல் 11 அன்று ரோஜா முத்தையா நூலகக் கட்டிடத்தில் நடைபெற்றது. தலைப்பு “ஃபுலே முதல் பெரியார் வரை: சுயமரியாதை ஏடுகள்”.

மகாத்மா புலே, அம்பேத்கர், பெரியார் ஆகிய மூவரும் ஆற்றிய தொண்டுகளை ஒப்பிட்டுப் பேசி வந்த எஸ்விஆர், சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசும்போது அக்காலகட்டத்தில் சாதிகுறித்து இம்மூவரைத் தவிர பிற அறிவுஜீவிகளின் கருத்து என்னவாக இருந்தது என்பதைத் தொட்டுச் செல்ல பாரதியை துணைக்கழைத்தார். இந்து பத்திரிக்கையில் ‘அரசியல் சீர்திருத்தங்களை விட சமூக சீர்திருத்தமே முதலில் செய்யப்பட வேண்டும்’ எனும் சங்கரன் நாயரின் கருத்தை ஆதரித்து பாரதி எழுதிய கடிதத்தைப் பற்றிக் குறிப்பிட்ட எஸ்விஆர், பாரதியிடம் வெளிப்பட்ட தடுமாற்றத்தையும் சரியாகவே குறிப்பிட்டார். ‘சங்கரன் நாயர் சொல்வது போல முதலில் செய்யப்பட வேண்டியது சமூக சீர்திருத்தமே. இதற்கு திலகர் வழிகாட்டி இருக்கிறார்’ என்று பாரதி எழுதிய கடிதத்தை சுட்டிக் காட்டிய எஸ்விஆர் ‘இங்குதான் நமக்குப் பிரச்சினை வருகிறது. ஒன்று சமூக சீர்திருத்தத்தை மட்டும் பேசி இருக்க வேண்டும். அல்லது திலகரை மட்டும் குறிப்பிட்டிருக்க வேண்டும். திலகர் சமூக சீர்திருத்தங்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் செயல்பட்டார்?” என்றும் பூலே,பெரியார் அம்பேத்கர் ஆகியோரால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பகவத்கீதையை பாரதியார் உயர்த்திப் பிடித்தார்’ என்றும் எஸ்விஆர் ஒப்பிட்டுப் பாரதியின் வர்ணாசிரம ஆதரவுப் போக்கை இலேசாக சுட்டிக் காட்டினார்.

இதை எல்லாம் சொல்வதற்கு முன், பீடிகையாக பாரதியார் இந்துவுக்கு எழுதிய கடிதங்களைத் தேடி எடுத்த ஆ.ரா. வெங்கடாசலபதியைக் கருத்தில் கொண்டு ‘இந்த இளம் முனைவர் ஆரம்பகட்டத்தில் பாரதியார் பிரெஞ்சு இந்தியாவில் இருந்து வெளியேறி பிரிட்டிஷ் இந்தியாவுக்குள் வருவதற்காக அழாத குறையாக தெண்டனிட்டு கவர்னருக்கு எழுதிய மன்னிப்புக் கடிதத்தைத் தேடி எடுத்தவர். அப்போது பாரதி எதுவுமே செய்யாமல் புதுவையில் முடங்கிக் கிடப்பதற்குப் பதில் எழுதிக் கொடுத்து விட்டு இந்தியாவிற்கு வந்து இயங்கலாமே எனும் உணர்வில் அப்படி செய்திருக்கக் கூடும். மேலும் அவர் அந்தக் காலகட்டத்தின் குழந்தை. இந்தக் கடிதத்தின் மூலம் அவரை மலினப்படுத்தக் கூடாது. அவருடைய அரசியல் மீது எனக்கு விமர்சனங்கள் இருப்பினும் தமிழின் நவீனப் போக்குகளுக்கு பாரதி வற்றாத ஊற்றுக்கண்.” என்றெல்லாம் சலபதியிடம் சொன்னதாக அறிஞர் தனது சொற்பொழிவில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அறிஞர் எஸ்விஆர், ஆய்வு என்பது எவ்வாறு காய்தல் உவத்தலின்றி இருக்கவேண்டும் என்றும் அறம் போதித்தார். “பாரதி ஆய்வாளர்கள் கூட பாரதியை மிகவும் கடுமையாக விமர்சித்து வந்திருக்கும் இரண்டு நூல்களையும் படித்து விட்டுத்தான் ஆய்வு முடிவுக்கு வரவேண்டும். அதில் ஒரு நூல் பாரதியை ஆர்.எஸ்.எஸ். இயக்க முன்னோடி என்று கூடக் கடுமையாக விமர்சித்திருந்தது. அந்த இரண்டு நூல்களின் ஆசிரியர்களில் ஒருவர் இங்கு வந்திருக்கிறார்” என்று நான்கைந்து முறை அந்த ‘இரண்டு நூல்’களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்த அறிஞரோ சொற்பொழிவின் இறுதி வரை நூல்களின் பெயரைச் சொல்லவில்லை. சொற்பொழிவைக் கேட்க வந்திருந்தவர்களில் நாம் அந்த ஒருவரைத் தேடினோம். பாரதிய ஜனதாப் பார்ட்டி எழுதிய மதிமாறன் வரவில்லை. பாரதிபக்தர்களின் கள்ளமவுனம் நூலின் ஆசிரியர்களில் ஒருவரான மருதய்யன் எங்காவது ஒளிந்திருக்கிறாரா என்று தேடும் அளவிற்குக் கூட்டமும் அதிகமில்லை. அறிஞரையும் சேர்த்து 31 பேர்கள்தான் இருப்பர். ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார்’ ஆசிரியர் வாலாசா வல்லவன் முதல்வரிசையில் அமர்ந்திருந்தது, கொஞ்ச நேரம் கழித்த பிறகுதான் தெரிந்தது.

கேள்வி நேரத்தின்போது ஒரு நண்பர் கேள்வி எழுப்பினார். “நீங்கள் சொன்னீர்களே மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு பாரதி எதையாவது உருப்படியாகச் செய்யலாமேன்னு. பாரதி மன்னிப்புக் கடிதம் கொடுத்திட்டு வந்த பிறகு புரட்சி நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லையே? கடலூர் சிறையில் இருந்து வந்தபிறகு அவர் செய்த காரியம் என்னவென்றால் எட்டப்ப மகாராஜாவிடம் தூது விட்டு ‘தங்கள் குலவம்ச வரலாற்றை சிறப்பாக எழுதித்தருகிறேன்’ என்றுதானே செயல்பட்டிருக்கிறார்” என்றார். எஸ்விஆர் இடைமறித்து “பாரதி, அரசியல்வாதி அல்ல. அவர் கவிஞர். அவர் கடுமையான வறுமையில் வாடியவர் என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும். இளமையிலும் சரி பின்னாளிலும் சரி அவர் புரட்சி ஏதும் செய்ததில்லை” என்றார். “இரண்டு நூல்கள் என்று சொன்னீர்களே! அதன் பெயரைக் கூறலாமே?” என்றதும் “அதுதான் பாரதிய ஜனதா பார்ட்டி..இன்னொன்னு வாலஜா வல்லவனோடது’ என்று குறிப்பிட்டார். (இத்தனைக்கும் மதிமாறனின் கட்டுரைத்தொடர் வெளிவந்த தலித்முரசுவிலே அக்கட்டுரைக்கு பக்கத்திலேயே எஸ்விஆர் கட்டுரைகளும் வெளிவந்தன. பெயரைக் குறிப்பிடாமலே இருக்கும் அளவிற்கு அந்த நூல், ‘அறிஞரை’ ரொம்பவே படுத்தி இருக்கிறது போல)

இன்னொருவர் எழுந்து நின்று “அப்படின்னா நீங்க சுஜாதாவை ஆதரிக்கிறீர்களா? ஏனென்றால் பாரதி,சுஜாதா இந்த ரெண்டு பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. இரண்டு பேரும் செத்துப்போவதற்குக் கொஞ்சக்காலம் முன்பு பார்ப்பனர் சங்கத்தின் மாநாடு,பொதுக்கூட்டங்களில் போய்க்கலந்து கொண்டு சாதிப் பற்றாளர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்டனர்” என்றார். இந்த விவாதம் இப்படிப்போனதுமே எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் கீழ் ‘புரட்சிகர’ நாடகங்களை நடத்தி வரும் அ.மங்கை ‘பாரதியும் சுஜாதாவும் ஒன்னா? ரெண்டு பேரும் வாழ்ந்த காலகட்டமும் ஒன்னா?’ என்று சாமியாட முனைந்தார்.

அறிஞர் ‘நான் சுஜாதாவை ஆதரிக்கலை’ என்றார். காலகட்டம் பற்றிய அ.மங்கையின் கேள்விக்குக் கூட்டத்தில் இருந்து கேள்வி கேட்ட முதல் நண்பர் “அவர்கள் வாழ்ந்த காலகட்டம் புரட்சிக்கு இளைஞர்கள் கிளர்ந்தெழுந்த கால கட்டம். ஜாலியன் வாலபாக் படுகொலையில் மக்கள் கொதித்தெழுந்த நேரம். அந்த நேரத்தில் மன்னிப்புக் கடிதம் கொடுத்து விட்டு ஒன்றுமே செயல்படாமல் பார்ப்பன சங்கக் கூட்டங்களில் கலந்து கொண்டவர்தானே பாரதி. தம்மிடம் இருக்கும் முரண்பாடுகளைக் களைந்து கொள்ள முயற்சித்து வெற்றி காண்பவர்கள்தான் கதாநாயகர்களாக இருக்க முடியும். முரண்பாடுகளிலிருந்து வெளியேற முடியாதவர்கள் நிறைய பேர் அக்காலகட்டத்தில் இருந்தார்கள். நீங்கள் சொல்வது போல் பார்த்தால் அவர்கள் அனைவருமே கதாநாயகர்கள்தான். காலகட்டம் கோருவதை நிறைவு செய்ய முடிந்தவர்கள்தான் கதாநாயகர்களாக முடியும். பாரதியைக் கதாநாயகனாக முன்னிறுத்துவதால்தான் பிரச்சினை. ஒரு பெரியாரிஸ்டாக, மார்க்சிய லெனினியத்தைப் படித்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருந்துகொண்டு பாரதியை எப்படி ரசிக்க முடிகிறது?” என்று எஸ்விஆரிடம் கேள்வி எழுப்பினார்.

எஸ்விஆர் இதற்கு சரியான பதிலைக் கூறாமல் “இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற கவிஞர் அவர். அவர் காலகட்டத்தின் குழந்தை. நவீன தமிழ் அவரிடம் இருந்துதான் ஆரம்பமாகிறது. அதை மதிக்கிறேன்.” என்று சொல்லி நழுவிக் கொண்டார்.

இப்படி பாரதியாரை கவிஞர் என்று மட்டுமே ரசிக்கப் பழகியவர், இதற்கடுத்த கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கையில் ‘பாரதிதாசன், சாதி உணர்வாளர்தான். அவர் தன் சொந்த சாதியில்தான் குடும்பத்தினருக்குக் கல்யாணம் செய்துவித்தார்’ என்று அறிஞர் நீட்டி முழங்கிக் கொண்டிருந்தார். பாரதியின் அரசியலைக் குறித்துக் கேள்வி கேட்டால் அவரின் கவிதையை சிலாகித்துக் கொள்ளும் அறிஞர், பாரதிதாசனை மட்டும் ஏன் கவிதைக்கு வெளியில் நின்று விமர்சிக்கிறார் என்பது நமக்குப் புரியவில்லை.

அன்று கேள்வி நேரம் முடிந்துவிட்டாலும் அவரிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் பல இன்னும் மிச்சம் உள்ளன.

1) பெரியார் சமதர்மம் போன்று தலையணை தடிமனுக்குப் புத்தகம் எழுதும் பெரியாரியல் அறிஞர், பாரதி பற்றிய பெரியாரின் கருத்து என்ன என்பதை ஏன் பேசுவதில்லை?

2) பெரியாரைப் பின்பற்றும் அமைப்பினர், மரபாக பாரதியை அவனுடைய பார்ப்பன சார்பைக் காரணமாக்கி ஒதுக்கி வைத்துப் பாரதிதாசனை உயர்த்திப் பிடித்து வருவது அறிஞருக்குத் தெரியுமா? பெரியார் ஆய்வு மையத்தில் இருந்து கொண்டே பாரதிதாசனைத் திட்டிக் கொண்டும் பாரதியை உயர்த்திப் பிடிப்பதும் பெரியாரியல் சிந்தனையா? அந்தக் கருத்துக்களை திரிக்கும் செயல் இல்லையா?

3) பாரதிக்கு அடுத்து தமிழுக்கு தொண்டாற்றியவர் சுஜாதாதான் என்கிறார்களே? வெறுமனே தமிழை, இலக்கியத்தை மட்டும் ரசிப்பவர் எஸ்விஆர் என்றால் சுஜாதாவை மட்டும் உதறித் தள்ளுவது ஏன்?

4) பல இசங்களைக் கரைத்துக் குடித்து விட்டு இப்போதைக்கு பெரியாரியலை ஒருவழி பண்ணிக் கொண்டிருக்கும் எஸ்விஆர், நீதிக்கட்சியைப் பற்றிய பாரதியின் கருத்து பற்றி என்ன கருதுகிறார்? (‘இன்றைக்கு நாங்கள்தான் முன்னர் ஆண்டோம் என்பார்கள். . .. இப்படியே போனால் நாளைக்கு காக்கை குருவிகள் கூட நாங்கள்தான் முன்னர் ஆண்டோம் எனக் கூறி உரிமை கோருவார்கள்’ என்று பாரதி நீதிக்கட்சியின் கொள்கையை நக்கல் செய்து எழுதினார்.)

5) போகிறபோக்கில் ஒரு மனிதனுடைய சாரம் கடைசிக்காலத்தில் இல்லை என்ற எஸ்விஆரின் வாதத்தை நியாயப்படுத்துவதற்காக பெரியாரையும் மாவோவையும் கடைசிக்காலத்தில் தங்களது கொள்கைகளின்பால் நம்பிக்கையற்றுத் தனிமையில் புலம்பியதாக அவதூறு செய்ததுதான் எஸ்விஆரின் அரசியலற்றவாதத்தின் அற்பத்தனம்தானே? ஒரு வாதத்திற்காக எஸ்விஆர் சொல்வது உண்மை என்றால் கூட ‘கராறான கொள்கையைக் கடைப்பிடிக்க முடியாது’ என்ற எஸ்விஆரின் பிழைப்புவாதக் கண்ணோட்டம்தானே நியாயப்படுத்தப்படுகிறது? விமர்சனம் என்று சொல்லவந்தால் நேர்மையாக பெரியார் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலை.யில் இருந்து பெரியாரை விமர்சித்து விட்டு ராஜினாமா செய்ய வேண்டியதுதானே?


பாரதியை பாரதிக்குள் நின்று ஆய்வு செய்வதை விட அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அறிவுஜீவிகளிடம் இருந்து தொடங்கலாம். ஜாலியன்வாலாபாக்கிற்கு கள்ளமவுனம் சாதித்த பாரதி, ஒருவேளை வசதிவாய்ப்புகள் பெற்ற நபராக இருந்திருந்தால், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கோ, ஃபோர்டு பவுண்டேசனுக்கோ தன்னுடைய கவிதைப்படைப்பைக் காணிக்கையாக்கி இருப்பார். தில்லைவாழ் அந்தணர்களுக்கு ஆதரவாக ஆரிய சமுதாயத்தைப் பாதுகாப்பதற்கு பராசக்தியையும் அழைத்திருப்பார், பாரதி. தீட்சிதர்களோடு நின்று மீசைக்கும் வெண்ணெய் தடவிப் போரிட்டிருப்பார். சோ ராமசாமிக்கும் அர்ஜூன் சம்பத்திற்கும் வேலை குறைந்திருக்கும்.

எஸ்விஆருக்கோ அல்லது அறிவு ஜீவிகளுக்கோ தம்முடைய படைப்பிற்கு நேர்மையாகத் தாம் இருக்கவேண்டும் என்ற கட்டாயத்தைக் காலம் என்றென்றைக்கும் கோருகிறது. சொல்லுக்கும் செயலுக்கும் ஒற்றுமை இருக்கவேண்டும் என்பது சாதாரண மனிதர்களுக்கே பொருந்தும்போது பூஜ்யங்களுக்குத் தலைமை வகிக்கும் இவர்களுக்கோ செயலில் மாத்திரம் பிற்போக்கு அவசியமாகிறது. அதுதான் அவர்களது சாரமும் கூட. சமூகம் இப்படித்தான் எல்லோரையும் மதிப்பிடுகிறது. கள்ளுண்ணாமைக்குத் தனி அதிகாரம் எழுதிய வள்ளுவர் எழுதிய களைப்புத் தீர கள்ளருந்தினார் என்று ஒருக்கால் கூறினால் அதனை சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? தன்னார்வக்குழுக்களிடம் தாங்கள் சோரம் போன வரலாற்றின் காலகட்டத்தை இப்படித்தான் நியாயப்படுத்துகிறார்கள், இன்றைய அறிவுஜீவிகள். இவர்களுக்கு வகைமாதிரி பாரதி.

பாரதியின் கவிதைகளை ரசிப்பதாகச் சொல்லும் எஸ்விஆர், மகாபாரதத்தினையும் ரசித்தாக வேண்டும். கம்பராமாயணத்தை ரசிக்கத் தெரிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், ராமர் பாலப் பிரச்சினையில் மூடநம்பிக்கைக்கெதிராக அதாவது ராமாயணத்துக்கு எதிராகப் போராடுவதை எப்படி வேறு வேறாகக் கருதினார்களோ அப்படித்தான் எஸ்விஆர் பாரதியையும் ரசிக்கிறார். பெரியாரையும் ரசிக்கிறார்.

ஆதிக்க சாதியில் பிறந்து முற்போக்கை அதாவது பரந்துபட்ட மக்களின் விடுதலையை தங்களுடைய extra-curricular activity ஆகப் பார்க்கப் பழகிய அறிவுஜீவிகளுக்கு தத்துவமோ, கட்சியோ கட்டுப்பாடுகள் போலத்தான் தெரிகிறது. இது பாரதியிடமும் இருந்தது. அறிவுஜீவிகளாக மாறி இருந்தாலும், ஆதிக்க சாதிக்கோ, தன்னை உயர்சாதிக்காரன் போலக் காட்டிக் கொள்ளுவதில் அகவிருப்பம், தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சொந்த சாதியின் ஆதிக்கத்திற்கு எதிராக, அரசியல், பண்பாட்டு, கலாச்சாரத் துறைகளில் போராடுவதன் மூலமாகத்தான் உண்மையான கம்யூனிஸ்ட்கள் தங்களைப் புடம்போடுகிறார்கள். அதற்குக் கட்சியும் தத்துவமும் உதவுகின்றன. கட்சி சார்பற்ற அறிவுஜீவிகளுக்கோ தாங்கள் நிலை தடுமாறிய தருணங்களை நியாயப்படுத்தச் சொல்கிறது. அதுதான் பாரதியின் அவலத்தை அவனைக் கண்டுகொள்ளாத சமூகத்தைப் பழிக்கச் சொல்கிறது. அதுதான், தான் போர்டு பவுண்டேசன் முன்னாலும் எம்.எஸ்.சுவாமிநாதன் முன்னாலும் கைகட்டி நிற்க நேர்ந்த தருணத்திற்காக சமூகத்தைப் பழிக்கிறது.

எஸ்விஆர், பாரதி, புரட்சிகர நடவடிக்கைகளில் இறங்காததற்கான காரணமாக வறுமையை சுட்டிக்காட்டுகிறார். வறுமையிலோ அல்லது இக்கட்டான தருணங்களிலோதான் மனிதனின் சாரமான குணம் வெளிப்படுகிறது.
இன்றைக்கும் அரசியல் போராட்டங்களில் கலந்து கொள்வதற்கு இந்துத்துவா, மற்றும் வலதுசாரிகளுக்குத்தான் வறுமையின்மை முன்நிபந்தனையாகிறது. ஆனால் மா-லெ இயக்கங்களுக்கோ இது ஒரு பொருட்டல்ல. வறுமையின்மைதான் பாரதியின் முன்நிபந்தனை என்றால், அதை ஆர்.எஸ்.எஸ். மட்டும் தான் நிறைவு செய்ய முடியும். இல.கணேசனும், ராம.கோபாலனும் பாரதி இலக்கியத்தின் உள்ளடக்கத்தை ரசிப்பதன் மூலம் தங்களது அகண்டபாரதக் கனவிற்கு பாரதியைத் துணைக்கு அழைப்பது, பாரதி அன்பர்களுக்கு கண்ணில் பட்ட முள்ளாக உறுத்துவதே இல்லை.


பாரதியின் அன்பர்கள் உதிர்ந்து கொண்டிருக்கும் நிலப்பிரபுத்துவ இந்திய சமூகத்தின் பிரதிநிதிகள். இவர்களுக்கு முன்னோடிகள், 50 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் சினிமாவில் ‘பா’வரிசைப் படங்களைத் தந்துவிட்டுப் போய்விட்டார்கள். ஆம், கடந்த காலம் அற்பவாதிகளுக்குச் சொந்தமானது (நன்றி-கார்ல்மார்க்ஸ்).

நன்றி: இமெயிலில் மருதன்

Thursday, April 10, 2008

புனித பிம்பங்கள்!! நல்லொழுக்க ஆதீனங்கள்!!! ஆனந்த விகடன்கள்!!!

திபெத் பிரச்சினையை ஒட்டி மிகப் பெரும்பாலனவர்கள் தமது புனிதத் தன்மையை விளம்பரப்படுத்திக் கொண்டனர். தமது அரசியல் அரிப்பை சொறிந்து கொண்டனர். பொதுவாகவே ஒடுக்குமுறைகள், காட்டுமிராண்டித்தனங்களுக்கு எதிராக தமது தார்மீக கோபத்தை எப்போதுமே வெளிப்படுத்துபவர்களை இங்கு நான் குறிப்பிடவில்லை. அது போன்றவர்கள் கணக்கில் காஸ்மீரும், ஈராக்கும், வடகிழக்கும், ஈழமும், பாலஸ்தீனமும், திபெத்தும் ஒன்றுதான். மாறாக, திபெத் பிரச்சினை அது சீனாவுடன் சம்பந்தப்பட்டது என்ற ஒரே காரணத்தால் தமது புனிதத்தன்மையெனும் போர்வையில் நல்லொழுக்க ஆதினங்கள் செய்த அரசியல் சித்து விளையாட்டுகளையே இங்கு குறிப்பிடுகிறேன். உடனே சீனாவுக்கு நாம் வக்காலத்து வாங்குவதாக யாரேனும் குறிப்பிட விரும்பினால் மன்னிக்கவும், சீனா என்ற பிற்போக்கு ஜனநாயக விரோத அரசுக்கு பட்டு குஞ்சலம் கட்டும் வரலாற்று கடமை எமதுடையது அல்ல. அந்த வேலையையும் கூட அதே நல்லொழுக்க ஆதினங்கள்தான் செய்து வருகின்றன.

ஆனந்த விகடனின் போலி வீரவேசமும், கேலிக்கூத்தான தார்மீக கோபமும்!!!:
குறிப்பாக - ஒரு வகை மாதிரியாக(prototype) - ஆனந்த விகடனை எடுத்துக் கொள்வோம். ஆனந்த விகடன் மட்டுமல்லாமல் அகில இந்திய RSS பத்திரிகையான டைம்ஸ் ஆப்பு இந்தியா(ஆப்பு இந்தியாவுக்கு) வும் இதுதான் சாக்கு என்று வளைத்து வளைத்து எழுதியிருந்தது. பல்வேறு பத்திரிகைகளும் அவ்வாறே செய்திருந்தன. ஆனந்த விகடனில் பா. ராகவன் என்பவர் எந்தவொரு தர்க்கமும் இல்லாமல், தரவும் இல்லாமல் வெறுமே திபெத் ஒடுக்குமுறையின் உணர்வுப் பூர்வமான பொது புரிதலின் பலத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதனை படித்தவுடன் மனதில் எழுந்த கேள்வி ஒன்றேயொன்றுதான் இந்தளவுக்கு நல்லொழுக்க சீலரான ஆனந்த விகடன் இதே வாரத்தில் இங்கு சிதம்பரத்தில் நிகழ்ந்த சம்பவம் குறித்து ஒரு துண்டு செய்தி கூட எழுதவில்லையே என்ன அதிசயம் என்பதுதான்.

இவர்கள் கடந்த காலத்திலும் கூட தமது நல்லொழுக்கத்தை செலக்டிவாகவே காட்டியுள்ளனர். அகில உலகமே CPM பாசிஸ்டுகளை காறி உமிழ்ந்த நந்திகிராம் குறித்து இவர்கள் எவனும் இப்படி டே-டு-டே கவர் ஸ்டோரி எழுதவில்லை. இன்று வரை ஒரு பரபரப்பு சினிமாவுக்கு இணையாக நடந்தேறிவரும் ஒரிஸ்ஸாவின் கலிங்காநகர் போராட்டம் பற்றி இந்த நாய்களின் எவனும் மூச்சு கூட விட்டதில்லை. சட்டீஸ்கர அரசை குறிப்பாக சல்வாஜுதம் அமைப்பு எந்தளவுக்கு மக்கள் விரோதமானது என்று போன வாரம் உச்ச நீதிமன்றம் கண்டிக்கும் அளவு இருக்கும் பேயாட்சி சூழல் குறித்து மனித உரிமை போராளியான பினாயக் சென் கைது செய்யப்பட்டு எந்த முகாந்திரமும் இன்றி பினை மறுக்கப்பட்டுள்ள நிலையிலும் இவர்கள் எவனும் எதுவும் எழுதவில்லை. சட்டீஸ்கரில் கிராமப்புறங்களை எரித்து தீக்கிரையாக்கி மக்களை வலுக்கட்டாயமாக முகாம்களில் அடைத்து வைத்துள்ளது குறித்து இவன்கள் எவனும் எந்த காலத்திலும் எழுதப் போவதில்லை. குஜராத் கலவரத்தின் போதும் சரி அதனை தெஹல்கா விரிவாக அம்பலப்படுத்திய போதும் சரி இவர்கள் எல்லாம் எந்த நல்லொழுக்கத்தை பற்றி ஒழுகிக் கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை. திபெத்தின் மீது சீனா செய்து வரும் ஆக்கிரமிப்பு குறித்து மனிதாபிமான அங்கலாய்ப்புகளை கடை விரிக்கும் இந்த நாகரிக கோமான்கள் இந்தியாவையே ஆக்கிரமித்து வருசத்துக்கு 17000 விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளி உணவு பஞ்சத்தின் விளிம்பில் நிறுத்தியுள்ள உள்நாட்டு யுத்தத்தை ஒத்த நிலை குறித்து எழுத தமது பேனாவின் ஒரு சொட்டு மையைக் கூட இவர்கள் செலவழித்ததில்லை. அதை விடுங்கள் ஈழத்தில் நடக்கும் யுத்தத்திற்க்கு சிரிலங்காவிற்க்கு ராணூவ ரீதியாக எல்லாவகை உதவிகளும் செய்வதுடன் ஈழத் தமிழர்களை நட்டாற்றில் விட்டுள்ள இந்திய தரகு அதிகார பார்ப்பன அரசு குறித்து மூச்சு கூட விடுவதில்லை இந்த மேன் மக்கள்.

தற்போதைய திபெத் பிரச்சினை போன்ற தருணங்களில் ஜனநாயகம், மனிதாபிமானம், நியாயம், தர்மம், அஹிம்சை என்று பெரிய நன்னூல்கள் போல பிரசங்கம் செய்து போலி ஆவேசங்களையும் தார்மீக பலத்தின்பாற்ப்பட்ட சாபங்களையும் கண்டனங்களையும் எழுதும் இவர்களின் தலையங்கங்கள் உண்மையிலேயே இந்த சொல்லாடல்களின் நடைமுறைக்கு ஆபத்து நிகழ்ந்து கொண்டிக்கும் போது பதுங்கி பம்மி வேறதாவது அலப்பத்தனமான உளறல்களில் முங்கி முத்தெடுக்கின்றன. ரஜினி வீட்டிலும், விஜய் வீட்டிலும் புல் புடுங்கிக் கொண்டிருக்கின்றன.

அட இவர்களின் இந்த செலக்டிவ் புத்தி உள்நாட்டு விவகாரங்களில்தான் என்று பார்த்தால் வெளிநாட்டு விசயங்களிலும் இவர்கள் அப்படியே. லெபனான் மீது மிக சமீபத்தில் மிகக் கோடூரமானதொரு யுத்தத்தை - எந்தவொரு தரக்க நியாயமுமற்ற யுத்தத்தை - இஸ்ரேல் தொடுத்து பேரழிவை உண்டாக்கி தோல்வியடைந்து ஓடியது இந்த கனவான்களின் மனதை கலக்கியதேயில்லை.

இதே திபெத் பிரச்சினை நடக்கும் சமகாலத்தில்தான் ஈராக்கில் யுத்தம் வேறெந்த காலத்தையும் விட தீவிரமடைந்துள்ளது குறித்தும், நாளும் அமெரிக்காவினால் ஈராக் மக்கள் படுகொலை செய்யப்படுவதும், கொத்து கொத்தாக மனிதர்கள் சாகடிக்கப்படுவதுமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருப்பதும் பற்றி செய்திகள் வருகின்றன. குறிப்பாக திபெத் பிரச்சினை வரும் அதே சர்வதேச செய்திகள் பக்கத்திலும், மையப் பகுதிகளிலும் இது குறித்து செய்திகள் வருகின்றன(செய்திகள் மட்டுமே அதன் மீதான தார்மீக கோபத்தின் வெளிப்பாடாக அமைந்த கருத்து கட்டுரைகள் அல்ல). அமெரிக்க எனும் ஒரு நாடு வெறும் பொய்களின் அடிப்படையில் ஈராக் என்னும் ஒரு நாட்டை ஒரு இருபது வருடங்கள் தொடர் யுத்ததில் சிதறடித்து வரலாறு இது வரை கண்டிராத மிக கோழைத்தனமானொதொரு யுத்தத்தின் மூலம் தனக்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத ஒரு நாட்டில், தனது அவதூறுகள் அனைத்தும் பொய் என்று அப்பட்டமாக நிரூபணம் ஆகிய பிறகும் மிகத் தைரியமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதுடன், ஒரு முழுமையான யுத்தத்தை தொடுத்து வருவது குறித்து இந்த நன்னூல்கள் யாரும் வாய் தவறி கூட பேசுவது இல்லை. இந்த உலகமாகா அயோக்கியத்தனத்திற்க்கு உரை போடக் காணாது திபெத்தில் சீனாவின் அட்டுழியம். ஆயினும் இந்த அன்பர்கள் யாரும் அமெரிக்க தூதரகத்திற்கு முன்போ அல்லது அகில இந்திய அளவிலோ அல்லது அகில உலக அளவிலோ அமெரிக்காவின் இந்த அயோக்கியத்தனத்திற்க்கு எதிரான நடைபெறும் மக்களின் இயல்பான தன்மான உணர்ச்சியின் பாற்பட்ட ஆவேச போராட்டங்கள் குறித்து எழுதுவதில்லை.

ஏனேனில் திபெத்தோ அல்லது ஈராக்கோ அல்லது காஸ்மீரோ இவர்களை உந்தித் தள்ளுவதெல்லாம் இவர்களின் அரசியல்-பொருளாதார நலன்கள்தானேயன்றி பரந்துபட்ட மக்கள் நலன்களல்ல, உண்மையான நல்லொழுக்க கருத்துக்கள் அல்ல, மக்களின் மீதான காதல் அல்ல, மனித குலத்தின் மீதான அன்பு அல்ல. இவர்களின் இந்த அரசியல் கழிசடைத்தனத்தை, அரசியல் மலச்சிக்கலை அல்பத்தனமான சரசரப்பு காகிதங்களின் பலபலப்பில் கட்டிக் கொடுத்தால் அதுவும் மனிதாபிமானம், ஜனநாயகம், அஹிம்சை என்பது போன்ற சொல்லாடல்களின் புனித புகை எபெஃக்ட்டுகளுடன் கொடுத்தால் கேள்வி கேட்க்காமல் தின்று செரிக்க சொந்த புத்தியில்லாத தற்குறிகளாக வாசகர்கள் இருக்கும் வரை இவர்களுக்கு கவலையில்லை.

அசுரன்

Related Article:
இன்னொரு கொசோவா உருவாகிறது!

Monday, April 07, 2008

ஒகேனாக்கல் - எச்சப் பொறுக்கி RSS எடியூரப்பாவும், மொள்ளாமாறி பாஜகவும்!!

பாஜக அலுவலக முற்றுகையும், பாஜகவின் பித்தலாட்ட புலம்பலும்!!!

பாஜக அலுவலகம் போன வார இறுதியில் மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி உள்ளிட்ட அமைப்புகளால் முற்றுகையிடப்பட்டது. அலுவலகத்திற்க்குள் நுழையும் முன்னரே இவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆயினும் RSS தீவட்டி தடியன் எடியூரப்பாவின் கொடும்பாவி வெற்றிகரமாக எரிக்கப்பட்டது.

புரட்சிகர அமைப்புகளின் முற்றுகையை எதிர்கொள்ள ரவுடிகளை அலுவலகத்தில் வைத்திருந்த பாஜக உண்மையில் அன்றைக்கு அரசின் கருணையால் தப்பித்துவிட்டது. புரட்சிகர அமைப்புகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு பாஜக உள்கட்சி சண்டையில் இந்த ரவுடிகள் அடித்துக் கொண்டனர் என்பது கிளைக் கதை.

இந்த சம்பவத்தையொட்டி, காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிடாமல் ஏன் பாஜக அலுவலகத்தை முற்றுகையிடுகிறீர்கள் என்று பெரிய நன்னூல் போல கேள்வி எழுப்புயுள்ளது பாஜக. உண்மையில் இந்த பிரச்சினையில் கர்நாடகாவில் ஒருவிதமாகவும், இங்கு ஒருவிதமாகவும் மொள்ளமாறித்தனமாக பேசி வரும் இந்த இந்துத்துவ பயங்கரவாத அமைப்பான பாஜக ஒகேனாக்கல் பிரச்சினையை கிளப்பியதே காங்கிரஸை பிரச்சினையில் சிக்க வைத்து ஆதாயம் பார்க்கும் நோக்கத்துடன் தான். அது குறித்து பார்ப்போம்.

_________________________________

பொய் சொல்லியே பழகிய பாஜக RSS இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகள் ஒகெனாக்கல் பிரச்சினையிலும் வழக்கம் போல பொய் சொல்லுகின்றனர். கர்நாடகாவில் இந்த பிரச்சினையை கிளப்பியவன் கர்நாடக பாஜக தலைவரான எடியூரப்ப என்ற சொறிநாய். இவன் ஒரு RSS சுயம்சேவக் என்பதாக பெருமையாக கூறி வருபவன். விசயம் இப்படியிருக்க, 1998-ல் ஆட்சியில் இருந்த பாஜக இந்த திட்டத்திற்க்கு ஒப்புதல் கொடுத்த போது இந்த எடியூரப்பா என்ன கிழித்துக் கொண்டிருந்தான் என்று தெரியவில்லை. இப்பொழுது எடியூரப்பா கிழித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவனது கட்சி தலைமையான மத்திய பாஜக என்ன கிழித்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை.

இவர்களது ஓட்டு பொறுக்கி அரசியலுக்காக ராமர் சேது பாலத்துக்கு இவர்கள் ஆட்சியில் இருக்கும் போது அனுமதி கொடுப்பதும் ஆட்சியில் இல்லாத போது அதை எதிர்த்து வன்முறை கிளப்புவதும்(பெங்களூரில் தமிழ்நாடு பஸ் கொளுத்தப்பட்டு மூவர் கொல்லப்பட்டனர்) என்று செய்த அதே மோசடியை ஒகேனாக்கல் பிரச்சினையிலும் செய்கிறார்கள் இந்த இழிந்த மிருகங்கள்.

அங்கு ஓட்டு பொறுக்குவதற்க்காக இந்த எடியூரப்பா ஒகேனாக்கல் பிரச்சினையை கிளப்புவானாம், அவனை இங்குள்ள ஏல கனேசன் கண்டிப்பது போல தொட்டிலை ஆட்டிவிடுவாராம், மத்தியில் உள்ள பாஜக இந்த விசயங்களை அமைதியாக *&*&*த்தை மூடிக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்குமாம்.

இந்த அரசியல் கேப்மாறித்தனத்தை அம்பலப்படுத்த சென்னை பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டால் பெரிய நியாயவான் போல காங்கிரஸ் பக்கம் கைகாட்டுவானாம். காங்கிரஸை ஏதோ நாம் நல்ல கட்சி என்று சொன்னது போல.

பெரியார் சிலை உடைப்பது முதல் இந்துக்களின் நலன் காக்க எந்த லெவலுக்கும் போகத் தயாரான (தென்காசியில் சொந்த கட்சி அலுவலகத்திற்க்கே குண்டு வைக்கும் அளவு) இந்த வீர பரம்பரையினர், இவர்களது கவுண்டர் பார்ட்டான கன்னட குண்டர்/வானர படை தலைமை பொறுக்கியான எடியூராப்பாவின் மண்டையில் ரெண்டு தட்டு தட்டுவதற்க்கு தனது அமைப்பின் அகில இந்திய தலைமையிடம் போராட வேண்டியதுதானே? அந்த இழவை செய்வதற்க்கு எந்த மக்கள் கலை இலக்கிய கழகக்காரன் தடையாக இருக்கிறான்?

இத்தனைக்கும் RSS பயங்கரவாத பொறுக்கி அமைப்பு வலுவாக உள்ள பகுதி ஒகெனாக்கல் தண்ணீரை வேண்டி நிற்க்கும் பகுதிகள் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. போலியான எதிரிகளை உருவாக்கி அந்த அறியாமையில் உள்ள மக்களை தனக்கான அடியாளாக பயன்படுத்தும் இந்த நாய்கள் அந்த மக்களின் மிக அடிப்படையான தேவையில் எப்படி கேடு கெட்ட அரசியல் செய்கிறார்கள் என்பதற்க்கு இதுவும் ஒரு எ-காவாக உள்ளது.

இந்த அமைப்புகளில் மானமிழந்து அடிமைநாய்களாக அங்கம் வகிக்கும் தமிழகத்தை சேர்ந்த நபர்கள் செருப்பால் அடித்தால் கூட திருந்தாத தோல் தடித்தவர்கள் என்பது மட்டும் உறுதி.

(ஒசூர், தர்மபுரி பகுதியில் நிலத்தடி நீரில் குறிப்பிட்ட கடினப் பொருளின் (ஃபோளேரைட்) அளவு மிக அதிகமாக இருப்பதால் அவை குடிப்பதற்கு லாயக்கற்றவை. வேறு தண்ணீர் வசதி இல்லையென்பதால் அந்த தண்ணீரை குடிக்கும் அந்த பகுதி மக்களுக்கு 15 வயதிற்க்குள்ளாகவே பற்கள் கரை படிந்து நொறுங்கும் தன்மை பெற்று நாசமாகிவிடுகின்றன. இந்த கோடூரத்தை தடுக்கவே ஒகேனாக்கல் தண்ணீர் திட்டம் நிறைவேற்றப்படுகிறது என்பது நினைவு கூறத்தக்கது).


தாட்ஸ் தமிழில் வந்த செய்தி

சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை-100 பேர் கைது
சனிக்கிழமை, ஏப்ரல் 5, 2008

சென்னை: சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஓகனேக்கல் விவகாரத்தில் தேவையில்லாமல் தலையிட்டு தமிழர்களுக்கு எதிராக கலவரம் மூளக் காரணமாக இருந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவைக் கண்டித்து இன்று சென்னையில் பாஜக தலைமை அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடந்தது.

மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 100 பேர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து முன்பே அறிவிக்கப்பட்டதால் அப்பகுதியில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

துணை ஆணையர் லட்சுமி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் போக் ரோடு தணிகாசலம் ரோட்டில் அணி வகுத்து நின்றனர். வைத்தியராமன் ரோட்டிற்கு சென்றவர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

இந் நிலையில் காலை 11 மணியளவில் வெற்றிச் செழியன் தலைமையில் தணிகாசலம் ரோட்டில் இருந்து பாஜக அலுவலகத்துக்கு செல்ல ஓடி வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அதேசமயம், பா.ஜ.கவினரும் எதிர் தாக்குதலுக்கு தயாரானார்கள்.
மாநில துணைத் தலைவர் குமாரவேலு, இளைஞர் அணி மாநில துணைத் தலைவர் ஜெய்சங்கர் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் திரண்டு ரோட்டுக்கு வந்தனர். போராட்டம் நடத்த வந்தவர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

போலீசார் அவர்களை தடுத்து அலுவலகத்துக்கு செல்லும்படி கேட்டுக் கொண்டனர். இரு தரப்பினும் மோதல் எண்ணத்தில் இருந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

பின்னர் போலீஸார் மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்தவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.

இந்த சமயத்தில், இன்னொரு குழு அங்கு வந்து எடியூரப்பாவின் கொடும்பாவியை எரித்தது.

இது குறித்து பாஜக துணைத் தலைவர் குமாரவேலு கூறுகையில், ஓகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு கடந்த 1998-ம் ஆண்டே ஒப்புதல் அளித்து 2 மாநில அரசுகளும் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் ஆட்சியில் இருந்த திமுகவும், அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுகவும் இந்த திட்டத்தை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு விட்டனர்.

இப்போது கர்நாடகாவில் நடக்கும் சம்பவம் கண்டனத்துக்குரியது. சில சமூக விரோத சக்திகள்தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசு உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடும் அமைப்புகளை தடை செய்ய வேண்டும்.

மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றன. பாஜக மீது கொண்டுள்ள வெறுப்பின் காரணமாகவே எங்கள் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்துவது, தாக்குதலில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

உண்மையில் இந்த அமைப்புகளுக்கு தமிழ்நாட்டு நலன் மீது அக்கறை இருந்தால் ஓகேனக்கல் திட்டத்தை எதிர்க்கும் காங்கிரஸ் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி இருக்க வேண்டும். ஏன் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்றார்.

Related Posts with Thumbnails