TerrorisminFocus

Friday, December 10, 2010

விக்கிலீக்கை ஆதரிப்போம்!!

மீபத்தில் விக்கிலீக் வெளியிட்ட ரகசிய அமெரிக்கத் தூதரக உரையாடல்கள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. உலகிலுள்ள பல்வேறு அரசுகள், குறிப்பாக யுத்தவெறி பிடித்த அமெரிக்க அரசின் ரகசிய அயோக்கியத்தனங்களை துகிலுரித்தன விக்கிலீக்கின் இந்தச் செயல்பாடுகள். இதனைத் தொடர்ந்து கடும் கோபமுற்றுள்ள அமெரிக்கா விக்கிலீக்கின் ஸ்தாபகர் ஜூலியன் ஆசென்ஜை போலியான பாலியல் பாலாத்கார குற்றத்தில் லண்டனில் கைது செய்துள்ளது. அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.










இது தவிர விக்கிலீக் தளத்திற்கான பணப்பட்டுவாடாவை கையாண்டு வந்த விசா, மாஸ்டர் கார்டு மற்றும் பே பால் போன்ற தனியார் நிறுவனங்கள் தற்போது தமது சேவைகளை தீடிரென்று நிறுத்திக் கொண்டுள்ளனர். விக்கிலீக் தளம் செயல்பட்டு வந்த அமேசான் வழங்கி தனது சேவையை தடை செய்து விட்டது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், விக்கிலீக் சட்டவிரோதமான செயலில் இறங்கியுள்ளது என்பதே ஆகும். இது நகைப்புக்குரியது, ஏனேனில் ரகசிய ஆவணங்களை பத்திரிகைகளில் வெளியிடுவது சட்டவிரோதமானது அல்ல.










மேலும், அமெரிக்கா மற்றும் அதன் அல்லக்கை நாடுகளின் சகல மூன்றாம்தர இணையப் பொறுக்கிகளும் தற்போது விக்கிலீக்கின் இணையச் செயல்பாடுகளை முடக்க சட்டவிரோத வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை சமாளிக்கும் வகையில் பல்வேறு இணையக் திசைதிருப்பித் தளங்களில் (மிரர் சைட்டுகள்) தற்போது விக்கிலீக் செயல்பட்டு வருகிறது. விவரம் இங்குள்ளது: . இவற்றுக்கு எதிராக உலகம் முழுவதிலும் விக்கிலீக்கிற்கு ஆதரவாக ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம் இவற்றில் நம்பிக்கை கொண்ட ஆர்வலர்கள் களம் இறங்கியுள்ளனர். அரசு இணையதளங்களும், விக்கிலீக் எதிர்ப்புத் தளங்களான விசா, மாஸ்டர் கார்டு, அமேசான் போன்றவை விக்கிலீக் ஆத்ராவாளர்களால் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன.


இன்னிலையில், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் விக்கிலீக்கை பாதுகாக்க வேண்டிய அவசியம் உணர்ந்து விக்கிலீக்கின் மீது நடந்து வரும் இந்த அநீதிகளை எல்லாருக்கும் பெரும் அளவில் கொண்டு செல்லவேண்டும். விக்கிலீக்கின் போராட்டத்தில் அதற்கு பக்கபலமாக நிற்க வேண்டும்.

பதிவர்களாகிய நாம் விக்கிலீக்கை ஆதரிப்போம் என்ற லோகோவை நமது தளங்களில் ஒட்டியும், பேஸ்புக், டிவிட்டர்களிலும், இமெயில்களிலும் விக்கிலீக் பற்றிய செய்திகளை பகிர்ந்து கொண்டும். நேர் உரையாடல்களில் இது குறித்து பேசியும் தமது ஜனநாயக உணர்வை வெளிப்படுத்த கடமைப்பட்டுள்ளனர்.

தோழமையுடன்,
அசுரன்

விக்கிலீக் லோகோ:






wikileaks facebook: http://www.facebook.com/wikileaks#!/wikileaks?v=wall

தடையை மீறி விக்கிலீக்: http://www.wikileaks.ch/mirrors.html

விக்கிலீக்ஸ் பற்றிய ஒரு தொடர் பதிவு:

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 8

Saturday, November 13, 2010

பன்னியக் குளிப்பாட்டி அதுக்கு குதிரை என்று பெயர் வை!!

மியான்மார்ல ராணுவ ஆட்சியாம். என்ன கொடுமை பாருங்க 15 வருசமா ஆங்சான் சூகியி என்ற தலைவரை வீட்டுச் சிறையில் வைத்துள்ளனராம். இப்போதான் ரிலீசே செஞ்சிருக்காங்க. ராணுவ ஆட்சின்னா எப்படி இருக்கும்? நம்ம மாதிரி 'ஜனநாயாக' நாட்டுல இருக்குறவங்களுக்கு அந்த கஸ்டம் புரியாதுதான். இப்படியும் பலர் பெருமிதத்துடன் பேசிக் கொள்கிறார்கள்.

அது சரி. ஆங்சான் சூகியியாவது தற்போது விடுதலை செய்யப்பட்டு விட்டார். ஆனால் கடந்த 10 வருடங்களாக இந்தியாவில் நடக்கும் ராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடி உண்ணாவிரதம் இருந்து வருகிறார் ஐரோம் சர்மிளா. அவரை கைது செய்து 10 வருடங்களாகின்றன. அவருக்கு என்று விடுதலை? 60 வருட ஜனநாயகம் சர்மிளாவுக்கு தராததை, மியான்மார் ராணுவ ஆட்சி ஆங்சான் சூகியிக்கி தந்திருக்கு என்று சொல்லலாமா?

ஐரோம் சர்மிளா




இந்திய ராணுவம் - ஊர் மேயும் மைனர் பொறுக்கிகள்


ஜம்மு-காஷ்மீரிலும், மணிப்பூரில் 1961லிருந்தும், பெரும்பாலான வடகிழக்குப் பகுதிகளில் 1972லிருந்து ராணுவத்திற்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கொடுங்கோலாட்சிதான் நடக்கிறது. அரசே ஒத்துக் கொண்ட படி இதுவரை 20,000 பேருக்கும் மேல் காணாமல் போயுள்ளனர் மணிப்பூரில். தேச சேவை செய்வதாகக் கதை விட்டுக் கொண்டு தேக சேவை செய்யும் ராணுவப் பொறுக்கிகள் மீதுள்ள 458 வழக்குகளை விசாரிக்கக் கோரியுள்ளது ஜம்மு காஷ்மீர் அரசு. இன்று இத்தகைய ராணுவ ஆட்சி தண்டகாரன்யா, மத்திய இந்தியா, மேற்கு வங்கம் என விரிவாகி வருகிறது. நிலைமை இப்படியிருக்கு ஈயம் பித்தளையைப் பார்த்து பல்லிளித்த கதையாக இந்திய ஜனநாயகம், மியான்மார் ராணுவநாயகம் என்று வெத்துப் பெருமை பேசி இளித்துக் கொண்டழைகிறார்கள் சிலர்.

நாடாளுமன்றத்தில் படுத்துபுரளும் ஒரு எம். பி.



பன்றித் தொழுவத்தில் படுத்துப் புரளும் சில பன்றிகள் (பன்னினும் சொல்லலாம், நீங்க சொல்ற மாதிரிஎம்.பி.னும் சொல்லலாம்)

பன்னியக் குளிப்பாட்டி அதுக்கு குதிரை என்று பெயர் வைத்தால் அது #$%டேஸ்@#@ திங்காமல் இருந்துவிடப் போகிறதா என்ன? பன்றித் தொழுவத்துக்கு செண்ட் அடிச்சி நாடாளுமன்றமென்று பேர் வைத்தால் அது மியான்மார் ராணுவ ஆட்சியிலிருந்து இந்திய போலி ஜனநாயகத்தை வித்தியாசப்படுத்திவிடுமா என்ன?

அசுரன்

Related:

Irom And Her Sisters


Murder In Plain Sight

Irom And The Iron In India’s Soul

Tuesday, October 26, 2010

டீச்சர்.. அருந்ததி ராய் என்னக் கிள்ளிட்டா - நிர்மலா சீதாராமன்!!

ருந்ததிராய் மற்றும் கிலானி இருவரையும் அரசுக்கு எதிராக சதி செய்ததாகக் கூறி கைது செய்ய வேண்டும் என்று மதச்சார்புள்ள பாஜகவும், 'போலி கம்யூனிஸ்டுகளின் அக்மார்க் முத்திரையுடன்' மதசார்பற்றதாக காட்டப்படும் காங்கிரசும் ஒரே களேபாரம் செய்தன நேற்று. பிரச்சினை என்னவென்றால், 'விடுதலை ஒன்றுதான் தீர்வு' (Azadi - The Only Way) என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்ற பேருண்மையை அவர்கள் இருவரும் பேசிவிட்டார்கள். அதுவும் டெல்லியில். குறிப்பாக அருந்ததிராய் சொன்னது #$த்தில் சுண்ணாம்பு தடவியது போலாகிவிட்டது: "காஷ்மீர் எந்த காலத்திலும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை. இது வரலாற்று உண்மை. இதனை இந்திய அரசாங்கமும் ஏற்றுக் கொண்டுள்ளது".

இந்தக் கருத்தரங்கம் நடந்த முடிந்தவுடன், உள்துறை அமைச்சரை சந்திக்க ஓடி வந்தனர் எதிர்கட்சி பாஜகவினர். உள்துறை அமைச்சரும் விடியோ ஆதாரங்களைப் பார்த்து நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கொடுத்துள்ளதாக பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுத்தார் பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன்.


டீச்சர்.. அவன் என்னக் கிள்ளிட்டான் - கோள் மூட்டும் துஸ்டத்தனமான சிறுமி


மனித உரிமை என்ற பெயரில் பிரிவினைவாதிகளையும், நக்சல்களையும் ஆதரிக்கிறார்கள் அருந்ததி ராய் போன்றோர் என்று மதவாதிகளையும், காவி பயங்கரவாதிகளையும், தேச விரோதிகளையும், நாட்டின் எதிரிகளையும் வைத்து கட்சி நடத்தும் பாஜக குதியோ குதி என்று குதிக்கிறது.

வரலாறு முழுவதும் இந்துத்துவத்திற்கு பக்கவாத்தியம் வாசிக்கும் பாத்திரம் ஏற்றுள்ள காங்கிரசு, இதற்கும் வாசித்துள்ளது. காங்கிரசுத் தலைவர் சத்யப் பிரகாஷ் மால்வியா அருந்ததிராய் தனது கருத்துக்களை வாபஸ் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று மிரட்டுகிறார். சட்ட அமைச்சர் மொய்லி, 'ரெண்டு பேரும் இப்படிச் சொன்னது ரொம்ப துரதிருஷ்டமானது' என்று சொல்கிறார். யாருக்கு துரதிருஷ்டம்? யாருக்கோ.... என்று வடிவேலு பாணியில் மனதுக்குள் பேசிக் கொள்வார் போல என்று நினைத்தால் அடுத்த வரியில் சொல்கிறார், 'பேச்சு சுதந்திரமெல்லாம் இருக்கத்தான் செய்யுது.. ..அதுக்காக மக்களோட தேசப் பற்றுணர்வை புண்ணாக்கும் விதமாகப் பேசக் கூடாது' என்று தொடர்கிறார். யாருக்கு துரதிருஷ்டம் என்று தெளிவாகவே எச்சரிக்கை செய்து விட்டார்.

பேச்சு சுதந்திரம் பற்றி மொய்லி சொல்வது இருக்கட்டும், ஜான் ஸ்டுவர்ட் மில் என்ன சொல்கிறார் என்று முதலில் பார்ப்போம். ஜான் ஸ்டுவர்ட் மில் யாரென்று தெரியாதவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன், எனக்கும் அவர் யாரென்று தெரியாது. பேச்சு சுதந்திரம் என்பது என்னவென்றால், 'ஒருவருடைய கருத்தினால் பலருக்கு துன்பம் ஏற்படுவதை தடுப்பது என்ற நோக்கத்தில் மட்டுமே அவருடைய வாயை பலவந்தமாக அடைப்பதை நியாயப்படுத்த முடியும்' என்கிறார்(நன்றி: தி இந்து - அக்டோபர் 27, 2010 தலையங்கம்). எடுத்துக்காட்டுக்கு நம்ம நண்பர் அதியமானின் கருத்துக்களில் எனக்கு ஒப்புதல் இல்லாவிடினும் அதை அவர் பேசும் உரிமை அவருக்கு உண்டு என்ற உண்மையை நான் அங்கீகரிப்பதாகும். இதைத்தான் அருந்ததி ராயும் வேறு வார்த்தைகளில் சொல்கிறார், 'மதவெறி படுகொலையாளர்களாயும், மொத்த மொத்தமாக படுகொலைகள் செய்தவர்களையும், ஊழல்வாதிகளையும், கொள்ளையர்களையும், பாலியல் வன்புணர்வாளர்களையும், ஏழைகளைச் சுரண்டி கொழுப்பவர்களையும் சுதந்திரமாக அலைய விட்டு விட்டு, நீதி வேண்டும் என்று கேட்க்கும் என்னைப் போன்றவர்களை சிறையிலடைக்க முயலும் இந்த தேசத்தை நினைத்து பரிதாபப்படுகிறேன்' என்று. கிலானி இன்னும் ச்ஜிம்பிளாக முடித்துக் கொண்டார், 'எம்மேல ஏற்கனவே 70 கேசு இருக்கு இது 71வ்து' என்று.


இந்த லாவணிகள் எல்லாம் முடிவதற்குள்ளாக அருந்ததி ராயையும், கிலானியையும் கைது செய்வது பற்றிய பரிசீலனைகளை காங்கிரசு முடித்துக் கொண்டு ரிசல்டை அறிவித்துவிட்டது. இதுக்கெல்லாம் கைது செய்ய முடியாது என்று. சரி, உண்மையிலேயே காங்கிரசு பேச்சு சுதந்திரத்தை மதித்துத்தான் இந்த முடிவை எடுத்ததா? இல்லை நண்பர்களே, அத்வானி, மோடி போன்ற கிரிமினல் பாசிஸ்டுகளை பெருமைமிக்க தலைவர்களாக அலைய விடும் காங்கிரசு, எளிய உண்மைகளை உரக்க பேசிய குற்றத்திற்காக சீமான், பினாயக் சென், ஹிமான்சு குமார், ஐரோம் சர்மிளா உள்ளிட்ட பலரை சிறையிலடைத்தும், அடித்து மிரட்டியும் ஒடுக்கியுள்ளது.

அருந்ததிராய், கிலானி இருவரையும் சதி செய்ய முயன்றதாகக்(124A) கூறி கைது செய்யவே டெல்லி போலிசுக்கு முதலில் மத்திய காங்கிரசு அரசு பரிந்துரைத்துள்ளது. பிறகுதான் பின் வாங்கியுள்ளது.

அருந்ததிராய் விசயத்தில் அவரை முடக்கிப் போட நடந்த முயற்சிகளில் இதுவும் ஒன்று என்பதைத் தாண்டி இதில் காங்கிரசின் ஜனநாயக முகம் எதுவும் இல்லை. காஷ்மீர் மக்களின் போர்க்குணமிக்க போராட்டங்களும், அருந்ததிராயின் செல்வாக்குமே காங்கிரசை பதுங்கித் தாக்க அறிவுறுத்துகிறது. சுருக்கு இறுகுகிறது, வாயை அடைத்துக் கொள் என்று சாத்வீகமாக அருந்ததிராயை மிரட்டுவது ஒன்றுதான் இந்த விசயத்தை பொறுத்த வரை காங்கிரசின் அதிகபட்ச இலக்கு. மிரட்டல் அருந்ததிக்கு மட்டுமல்ல, மனசாட்சியுள்ள எல்லாருக்கும்தான்.

மக்களின் வெறுப்பை மேலும், மேலும் சம்பாதித்து நாடு முழுவதும் அம்பலப்பட்டுப் போயுள்ளது இந்திய அரசு. இந்நிலையில் பெரும் பீதியுற்றுள்ள அரசு தனது பாசிச அஸ்திரங்களைத்தான் ஒரேயடியாக நம்பியுள்ளது. எனவேதான் தன்னை நோக்கிய சிறு சலசலப்பையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கிறது. அதை தேசப் பற்று என்று நியாயம் பேசுகிறது. இந்தியா முழுவதும் மக்கள் பிரச்சினைகளுக்காக களம் இறங்கிப் போராடிய பல்வேறு ஜனநாயக சக்திகளை சமீப காலங்களில் கைது செய்தும், மிரட்டியும் முடக்கிப் போட்டுள்ளது இந்திய அரசு(தெஹல்கா). சீமான் கைதின் போது இந்தத் தளத்தில் எழுதப்பட்ட கட்டுரையின் மையக் கருவும் இதுதான், 'சீமான் கைது - இது ஆரம்பம் மட்டுமே'.

பன்னாட்டு கம்பனிகளுக்காக அரசியலமைப்புச் சட்டத்தை மீறி மக்களைக் கொல்லும், காங்கிரசும், சிபிஎம்மும் ஒரு பக்கம் என்றால், அதே அரசியலமைப்புச் சட்டத்தை மீறி மக்களை மதத்தின் பெயரால் கொல்லும் பாஜக இன்னொரு பக்கம். இதுதான் இந்திய 'ஜனநாயகம்'. இப்படி அரசியலமைப்புச் சட்டம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இந்துத்துவத்திற்கும் மீறப்படுமானால் அது தேசப்பற்றுக்கு விரோதமானது அல்ல என்பதே இவர்களின் நியாயம். தேசப்பற்று என்றால் என்னவென்று இந்தச் சிறுபிள்ளைகளுக்கு சரியான வகையில் பாடம் புகட்டுவதே ஜனநாயக சக்திகளின் இன்றைய பெரும் கடமையாக முன்னெழுந்துள்ளது.

அசுரன்

Monday, October 25, 2010

இந்துக்களின் வழிபாட்டுரிமைக்காக இந்துத்துவக் குரங்குகள் போராடுமா?

புண்ணிய பூமியாம் இந்த பாரதத்தில் இந்துக்களுக்கு எங்குமே நிம்மதியில்லை. பாரத மாதாவின் புதல்வர்களாம் இந்துக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் தட்டிக் கேட்பதற்கு ஆர் எஸ் எஸ்யையும் அதன் சங் பரிவார குரங்குகளையும் விட்டால் வேறு நாதியில்லை - இதெல்லாம் ஆர் எஸ் எஸ் குரங்குகளின் வழக்கமான புலம்பல்களாகும்.

இவர்கள் சொல்லும் இந்துக்கள் யார்? இதோ அந்த அப்பாவி இந்துக்கள்தான் திருப்பூர் உத்தமபாளையத்தில் தலித்துக்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கிறார்கள். திருப்பூரில் பெரிய புடுங்கி போல வலம் வரும் ஆர் எஸ் எஸ் இந்து - காவி பயங்கரவாதிகள் இந்த தலித் 'இந்து'க்களின் வழிபாட்டுரிமைக்காக ஏன் போராடுவதில்லை? தமிழகம் முழுவதும் இவ்வாறு தலித்துக்களின் வழிபாட்டு உரிமையை எதிர்த்து ஆதிக்க சாதி வெறியர்கள் நடத்திய பல்வேறு கொலை வெறித் தாக்குதல்கள் இந்த சுட்டியில் இருக்கின்றன. வினாயகர் சதுர்த்தி அன்று அய்யோ இந்துக்களின் உரிமையெல்லாம் பறி போகிறதே என்று ஒப்பாரி வைத்து அப்பாவி கிருத்துவ, முஸ்லீம் மக்களை வில்லன்களாக்கும் இந்த கிரிமினல்கள், ஏன் அதே போல தலித்துக்களின் வழிபாட்டு உரிமையைப் பறிக்கும் ஆதிக்க சாதியினரை எதிர்த்து ஒப்பாரி வைப்பதில்லை?

ஏனேனில், கவுண்ட சாதி வெறியர்களிடமு, பிற சாதி வெறியர்களிடமும் கஞ்சி வாங்கி ஊற்றிக் கொண்டுதான் ஆர் எஸ் எஸ் அல்லக்கைகள் வயிறு வளர்க்கிறார்கள். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்ய முடியுமா? அதுப் பாரதப் பண்பாடாகுமா என்ற லாஜிக் பிரச்சினையின் காரணமாக அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்று யாரும் தப்பாக எடை போட்டுவிடாதீர்கள்.

இங்கு மட்டுமல்ல இந்தியா முழுவதுமே ஆதிக்க சாதி வெறியர்களின் காலை நக்கும் சொறி நாய்தான் ஆர் எஸ் எஸ் இந்து காவி பயங்கரவாத கும்பல். குஜராத்தில் சாதி மீறி காதல் மணம் புரிபவர்களை கடத்தி வந்து பிரிப்பதற்கு என்றே ஆர் எஸ் எஸ் குண்டன் ஒருவன் பிரபலமாக உள்ளான். இதே காவிக் கொடி சாதி வெறி சொறிநாய்கள்தான், பசு மாட்டுத் தோலுரித்த குற்றத்திற்காக தலித்துக்களை உயிருடன் தோலுரித்தனர்.

இப்படியெல்லாம் அயோக்கியத்தனம் செய்யும் இந்த பொய்யர்கள் இன்னொரு பக்கம் இந்துக்களுக்கு அபாயம், இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று கதறுவதின் ஒரே நோக்கம், கலவரங்களின் போது அடியாள் வேலை செய்ய தலித் மக்களை அணி திரட்டுவதே ஆகும். எனவே...

எச்சரிக்கே....
எச்சரிக்கை, எச்சரிக்கை, எச்சரிக்கை...
அந்த ஆர் எஸ் எஸுக்காரன் வற்றான் எச்சரிக்கை....

எச்சரிக்கை, எச்சரிக்கை, எச்சரிக்கை...
கையில் தீப்பெட்டிய எடுத்து வற்றான் எச்சரிக்கை...

அசுரன்

Saturday, October 23, 2010

மாட்டிக் கொண்ட திருடனும், சந்தைக் கடை ரவுடியும் - ஒரு ஆர்எஸ்எஸ் காவி பயங்கரவாதியின் கதை!!

ந்தையிலோ அல்லது காலனியிலோ திருடன் எவனாவது மாட்டிக் கொண்டால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவனை ஒரு விளக்குக் கம்பத்தில் கட்டி வைத்து மக்களெல்லாம் ஒன்று கூடி கையில் கிடைத்ததை வைத்து அடித்து நொறுக்குவார்கள். இப்படி நடந்து கொண்டிருக்கும் போதே திருடனுடன் ஒப்பிடும் போது கொஞ்சம் ரீஜெண்டான தோற்றம் உள்ள (வேறென்ன வெளுத்த சட்டை வேட்டி, அல்லது பேண்டு) ஒரு தடியன் திடீரென்று எங்கிருந்தோ தோன்றுவான். மக்களே மிரண்டு போகும்படி கட்டி வைக்கப்பட்ட திருடனை சகட்டு மேனிக்கு அடித்து நொறுக்குவான். இந்த இடத்தில் மக்கள் சுதாரிக்கவில்லையென்றால், 'இந்த மொள்ளமாறிய நான் பாத்துக்கிறேன் சார்', 'கொய்யால,எங்க ஏரியாவுலய வேலையக் காட்டுற' என்று பலப் பல உதார் வசனங்களை உதிர்த்து விட்டு திருடனை தன்னுடன் இழுத்துச் செல்வான். அத்துடன் இருவரும் எஸ்கேப் ஆவார்கள்.

இதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், இப்போ இதே மாதிரி ஒரு விசயம் நடந்து வருகிறது. அதைப் பார்ப்போம்.

ஆர்எஸ்எஸ் தலைவனான இந்திரேஸ் குமார் பல்வேறு குண்டு வெடிப்பு செயல்களை செய்த ஆர்எஸ்எஸ் காவி பயங்கரவாத கும்பல்களின் தலைவன் என்பதை ஹெட்லைன்ஸ் டுடே வெளியிட்ட விடியோ ஆதாரங்கள் அம்பலப்படுத்தியிருந்தன. இதனை ஒட்டி இடப்பட்ட இடுகை இங்குள்ளது(முற்றும் கழண்ட டவுசர்!! அடடே ஆர் எஸ் எஸ் அம்மணக்கட்டை!!!).

(இந்து-காவி பயங்கரவாத கும்பலின் கொடி)


இவன் தேச விரதோ-சமூக விரோத சக்தியான ஆர்எஸ்எஸ் காவி பயங்கரவாத கும்பலின் முக்கியத் தலைவனாவான். பல்வேறு தலைமைப் பொறுப்புகள் வகிப்பவன். குறிப்பாக, ஆர்எஸ்எஸ்ன் முஸ்லீம் பிரிவின் தலைவனாகவும் உள்ளான் என்பது இவர்களது அயோக்கியத்தனத்திற்கு ஒரு சோற்றுப் பதம். மேலும், இவன் தான் காஷ்மீர் அமர்நாத் நிலப் பிரச்சினையை தூபம் போட்டு வளர்த்தவர்களில் ஒருவன். இவன் தான் நேபாள மாவோயிஸ்டுகளுக்கு எதிராகவும் வேலை செய்துள்ளான். மொத்தத்தில் தன்னைச் சுற்றியுள்ள நாடுகளில் ஒருவனும் நிம்மதியாக இருக்கக் கூடாது என்ற ஆர்எஸ்எஸ்ன் கொள்கையை செயல்படுத்திய பெரும் பயங்கரவாதியாவான்.

தற்போது ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் அஜ்மீர் குண்டு வெடிப்பு வழக்கில் இவனையும், இதர காவி பயங்கரவாதிகளையும் குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளனர். மிக விரிவாகத் திட்டமிட்டு, பயங்கரவாதிகளின் கூட்டங்களை நடத்தியுள்ளானாம். மத நிறுவனங்கள் என்ற பெயரில் ஏதாவதொரு அமைப்பை அமைத்துக் கொண்டு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட ஐடியாக் கொடுத்துள்ளான். அப்போதுதானே ஆர்எஸ்எஸ் என்ற தேசவிரோத காவி பயங்கரவாத அமைப்பைக் காப்பாற்ற முடியும்?

(மலேகான் குண்டு வெடிப்பில் இந்து-காவி பயங்கரவாதிகள்)


(இந்து-காவி பயங்கரவாதி இந்திரேஸ் குமார் - ஆர் எஸ் எஸ் தலைவன்)


இந்த உண்மைகளெல்லாம் புதிய விசயங்கள் அல்ல ஆனால் முதல்முறையாக அரசாங்கம் இந்த விசயங்களை அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது என்பதுதான் புதிய விசயம். ஆனால், வழக்கம் போல இது ஒரு அரசியல் சதி என்று புலம்புகிறது ஆர்எஸ்எஸும் அதன் ஆசனவாயான பாஜகாவும். மீசையில் மண் ஒட்டாத குறையாக 'ஆர்எஸ்எஸ் போன்ற தேசத்தை கட்டியமைக்கும்(தேசவிரோத-சமூக விரோத என்று புரிந்து கொள்ளவும்) அமைப்பின் பெருமையின் மீது சேறடிக்கும் சதி' என்று கூச்ச நாச்சமின்றி புளுகியுள்ளது பாஜக. காங்கிரசு மணீஸ் திவாரி , 'இந்தியா பன்முகப் பண்பாட்டு விழுமியங்களை சீர்குலைக்க தொடர்ந்து ஆர்எஸ்எஸ் வேலை செய்து வருகிறது' என்றுள்ளான். இங்கே மணீஸ் திவாரியை இந்தப் பதிவின் முதல் பேராவில் படித்த திடீர் தடியனுடன் ஒப்பிட்டுக் கொள்ளவும்.

"ஹேய் மீ எஸ்கேப்பு வித் திருடன்யா... நெக்ஸ்டு மீட்டு...." - சந்தைக் கடை திடீர்த் தடியன் மணீஸ் திவாரி


வசமாக மாட்டிக் கொண்டான் என்று பாஜகவை கோத்து விட்டு வேடிக்கைப் பார்ப்பதும், அதன் ஊடாக தனது ஆட்சியை கட்டிக் காப்பதும்தான் காங்கிரசின் நோக்கம். மேலும், இதுவரை ஆர்எஸ்எஸ் மாட்டிக் கொண்டுள்ள பயங்கரவாத செயல்கள் - குண்டு வெடிப்புகள், மதக் கலவரங்கள், தலித் மக்கள் மீதான சாதிவெறித் தாக்குதல்கள்- போன்றவற்றின் அடிப்படையில் அந்த அமைப்பைத் தடை செய்ய முடியும். பாப்புலர் பிரண்டு உள்ளிட்ட பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் மீது வெறும் சந்தேகத்தின் அடிப்படையிலேயே பல அடக்குமுறைகளை ஏவிவிட்ட அரசு, அதே போல, நாக்பூரிலும், டெல்லியிலும், சென்னையிலும் மேலும் பல முக்கிய இடங்களிலும் உள்ள காவி பயங்கரவாத ஆர்எஸ்எஸின் தலைமை அலுவலகங்களை சோதனையிட்டு அவர்களது பயங்கரவாதத் திட்டங்களை சந்தி சிரிக்கச் செய்ய முடியும்.

தமிழகத்தில் கூட நாகர்கோவில் அரவிந்த நீலகண்டன், மலர்மன்னன் போன்ற காவி பயங்கரவாதிகளையும் அவர்களது நண்பர்கள், தோழர்கள் என்ற பெயரில் உலாவும் பிற 'நல்லவர்களையும்' நன்கு 'விசாரித்து' பல பயங்கரவாத திட்டங்களை வெளிக் கொண்ர முடியும். ஆனால், காங்கிரசு அரசோ அல்லது 'தமிழினத் தலைவன்' 'மஞ்சத் துண்டு மன்னன்' 'பத்மா சுப்பிரமணியன் புகழ்ந்த' கருணாநிதிச் சோழனது அரசோ அவ்வாறு செய்யாது.ஏனேனில், இந்து பாசிச பயங்கரவாதத்தை அமல்படுத்துவதில் காங்கிரசுக்கும், பாஜகாவுக்கும் செயல்முறையில்தான் முரன்பாடு உள்ளது.

எனவேதான் ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் காவி பயங்கரவாத கும்பல் என்று சொல்லிக் கொண்டே பாபர் மசூதி தீர்ப்பு எனும் அயோக்கியத்தனத்தை காங்கிரசு செய்கிறது. அதே போல அமெரிக்க அடிவருடி காங்கிரசு என்று சொல்லிக் கொண்டே அமெரிக்காவின் பூட்ஸை பாஜக நக்குகிறது.

இவர்கள் அனைவருமே கூட்டுக் களவானிகள் என்பதுதான் உண்மை. ஆர்எஸ்எஸ்ன் பல்வேறு பயங்கரவாத செயல்கள் கடந்த 80 வருடங்களில் பலமுறை அம்பலமானவைதான். ஆனால், அந்த அமைப்பு இன்னமும் ஏதோ நல்லவன் போல வேசம் கட்டி வலம் வருவதும், பதிவுலகில் இருக்கும் 'நல்லவர்கள்' அதே போல 'நல்லவர்களாகவே' ஆர்எஸ்எஸ்ன் அரசியலைப் பேசுவதும் சாத்தியமாகியுள்ளதற்குக் காரணம் மக்கள் சுதாரித்துக் கொள்ளாமல் இருப்பதுதான். இந்தப் பதிவின் ஆரம்பத்தில் சொன்ன உண்மைச் சம்பவத்தையே பாருங்கள், மக்கள் சுதாரிப்பாக இருந்தால், மாட்டிக் கொண்ட திருடனை காப்பாற்றக் களமிறங்கிய ரவுடியையும் சேர்த்து புரட்டி எடுத்து ஒரேடியாக முடித்துக் கட்டியிருக்கலாம். மாறாக, தெருவோரத்தில் நின்று வேடிக்கைப் பார்ப்பதும், டீக்கடை கிசுகிசுவுமே அரசியலாக இருப்பதன் விளைவு ரவுடியும், திருடனும் எஸ்கேப் ஆகிறார்கள். மீண்டும் மீண்டும் தமது கூட்டுக் களவானித்தனத்தை செய்கிறார்கள். ஆட்டையப் போட வற்றவன் மாட்டிக் கொண்டால் தப்பிப்பதற்கு திட்டமில்லாமலா வருவான்?

எனவே மக்களே எங்கும், எப்பொழுதும் ஆர்எஸ்எஸ் காவி பயங்கரவாதிகளையும், அவர்களது கூட்டுக் களவானிகளையும் கேள்வி கேட்டு, கண்டித்து, அம்பலப்படுத்தி, அவமானப்படுத்தி வெளியேற்ற களமிறங்குங்கள்.


அசுரன்

தரவுகள் ஆதாரம்: ஹெட்லைன்ஸ் டுடே


முற்றும் கழண்ட டவுசர்!! அடடே ஆர் எஸ் எஸ் அம்மணக்கட்டை!!!

'வினை'யகர் சதுர்த்தி!!

தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!

வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!


ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!



சிபிஐயிடம் மாட்டிக் கொண்டனர் இந்து பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்ன் முக்கியத் தலைவர்கள்!



Hindu Rashtra: Saffron terror's hall of shame



The Headlines Today sting




Vedio-Saffron goons attack HT Delhi office


Saffron goons attack Headlines Today office


Hindu terror is a reality, yet India refuses to utter its name

Thursday, October 07, 2010

தீபாவளி, நவராத்தியின் போது பயங்கரவாதிகளின் தாக்குதல் அபாயம் உள்ளது எச்சரிக்கை!!

வெடிகுண்டு 1:

கடந்த தீபாவளியைப் போலவே இந்த தீபாவளிக்கும் பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்பு தாக்குதல் அபாயம் உள்ளதென்று உளவுத் துறை எச்சரிக்கை செய்துள்ளது. அதுவும் குறிப்பாக கோவாவில் அபாயம் அதிகமாம்.

போன வருடம் உளவுத் துறை எச்சரிக்கை செய்ததைப் போலவே காவி பயங்கரவாதிகள் கோவாவில் இந்துக்கள் மீது குண்டு வைக்கும் முயற்சியிலிருந்த பொழுது, அந்த சதியில் தாமே பலியாகி வெடித்துச் சிதறினர்.

ஆகவே ஜனங்களே, அதே போல இந்த தீபாவளிக்கும் இந்துக்கள் மீது இந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாலும். போன தடவை செய்து மாட்டிக் கொண்டது போலல்லாமல், இந்த முறை திறம்படச் செய்து முஸ்லீம்கள் மீது பலி போட்டு, அவ்வகையான தாக்குதலைக் காரணம் காட்டி மதவெறி தூண்டி மக்களை துண்டாடி, ரத்தம் குடிக்கும் அபாயம் இருப்பதாலும் அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், இந்து காவி பயங்கரவாதிகளின் பிரித்து மோதவிடும் அரசியலுக்கான ரத்த பலி சூத்திர/தாழ்த்தப்பட்ட இந்துக்களின் உடலிலிருந்தே எடுக்கப்பட வேண்டியுள்ளதை அவர்களின் முந்தைய நடவடிக்கைகள் பல நிரூபித்துள்ளன என்பதால், இந்த எச்சரிக்கைகளை இந்துக்கள் எனச் சொல்லப்படுபவர்கள் தகுந்த கவனத்துடன் பரிசீலிக்க வேண்டுகிறேன். இந்து என்றால் யார் என்று சந்தேகமுள்ளவர்களுக்கு கீழ்கண்ட சட்ட விளக்கம்:

"யார் முஸ்லீம், கிருத்துவ, சீக்கிய மதங்களைச் சேர்ந்தவரில்லையோ அவர் இந்து".**


இந்த பதிவை படித்து எழுச்சியுற்ற இந்துக்களுக்கான பாடல்(கிளிக்கி பாடலைக் கேட்க்கவும்):

எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை....
அந்த ஆர் எஸ் எஸுக்காரன் வற்றான் எச்சரிக்கை...

எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை....
கையில் தீவட்டிய எடுத்து வற்றான் எச்சரிக்கை...



**இந்து குறித்த இந்த சட்ட விளக்கம் அப்படியே அயோத்தி தீர்ப்பு நகலைப் போல டாமால் டூமீலாக இருப்பதற்கு கொம்பேனி பொறுப்பல்ல.

அசுரன்

இந்து என்று சொல்லுடா மாட்டுக் கறி தின்னுடா!!

மாட்டுக் கறி லெக் பீசு 1:

காமன்வெல்த் போட்டியில் வெளிநாட்டினருக்கு மாட்டுக் கறி போடுகிறார்கள் - என்று மோடி புகார் கொடுத்துள்ளாராம். அவருக்கு மாட்டுக்கறி லெக் பீசு கொடுக்கப்படவில்லை என்ற வருத்தத்தில் சொல்லியது போலத் தெரியவில்லை.

ஏனேனில், போன முறை வைப்ரெண்டு குஜராத் நிகழ்ச்சிக்கு குஜராத்து வந்த வெளிநாட்டுக்காரர்களுக்கு மோடி அரசு மாட்டுக்கறி கொடுக்கவில்லை. காரணம், கிருமிகள்.... ஸாரி மன்னிக்கவும். காரணம் என்று அவர் கூறியது இதோ:
"அவர்களிடம் குஜராத் மக்கள் சாப்பிடும் உணவைத்தான் உங்களுக்குத் தர முடியும் என்று நாங்கள் கூறியபோது அதை மறுக்காமல் அவர்கள் ஏற்றுக் கொண்டனர்."

ஆஹ, அவரது இந்த லாஜிக்கின் படி இந்திய மக்கள் சாப்பிடும் உணவைத்தான் காமென்வெல்த் கும்பலுக்கும் தர வேண்டும் என்று அவர் கருதுகிறார். அதையே வலியுறுத்தியுள்ளார். இது சரிதான். இந்த கூற்றின் தர்க்க முடிவு என்னவென்றால் மாட்டுக்கறி சாப்பிடுபவன் இந்தியனல்ல என்று ஆகிறது.

அப்படியானால் இந்தியாவில் வாழும் பெரும்பான்மை உழைக்கும் மக்களாயுள்ள தாழ்த்தப்பட்ட மக்களும், சூத்திர மக்களும் மாட்டுக்கறியை பாரம்பரியமாகவே சாப்பிடுகிறார்கள் என்ற வகையில் அவர்கள் இந்திய மக்கள் அல்ல என்று ஆகிறது. ஏனேனில், இந்திய மக்கள்தான் மாட்டுக்கறி சாப்பிட மாட்டார்களே? அல்லது இந்திய மக்கள் என்று எதிர்காலத்தில் மோடி கும்பல் அனுமதிக்கும் மக்கள் மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது அல்லவா?

இன்னொரு பக்கம், உலகமய ஏகாதிபத்திய அரசியலானது இதே உழைக்கும் மக்களின் வாழ்வுரிமையை மறுத்து அவர்கள் மீது அறிவிக்கப்படாததொரு யுத்தத்தை அரசியலமைப்புக்கு விரோதமாக நாடு முழுவதும் நடத்தி வருவதன் மூலம் அதே தாழ்த்தப்பட்ட, சூத்திர மக்களை இந்தியர்கள் இல்லை என்று சூசகமாக அறிவித்துவிட்டது. என்னவொரு பொருத்தம் பாருங்கள் இந்துத்துவவாதிகளுக்கும், ஏகாதிபத்தியவாதிகளுக்கும்.

எனவே, இந்தியன் என்று நம்புபவன் உழைக்கும் மக்களை அழித்தொழிக்கும் உலகமய அரசியலை எதிர்ப்பதன் மூலமும், இந்து என்று நம்புபவன் மாட்டுக்கறி தின்பதன் மூலமும் தமது நேர்மையை நிரூபிக்க வேண்டியது வரலாற்றுக் கடமையாக மாறிவிட்டது.

நான் இந்தியன் என்றோ இந்து என்றோ நம்பிக் கொண்டிருக்கவில்லை ஆயினும் உலகமயத்தை மாட்டுக்கறி லெக்பீசு வறுவலை ருசித்துக் கொண்டே எதிர்ப்பேன்.

அசுரன்

Friday, October 01, 2010

அயோக்கியா: தீர்ப்பும், வரலாறும்!!

"கடந்த கால கசப்பு அனுபவங்களை மறந்துவிட்டு முன்னேறிச் செல்வோம்" - ஆர் எஸ் எஸ் தலைவன் மோகன் பகவத் சொல்கிறான். பல நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த ஆதாரமற்ற கசப்பனுபவமாம் ராமன் கோயில் இடிப்பு என்ற கதையை வைத்துக் கொண்டு பல ஆயிரம் உயிர்களை பலியெடுத்த பயங்கரவாத அமைப்பின் தலைவன் சொல்கிறான் இதை.

"நமது சமூகத்தில் மதவெறியர்களுக்கு(fanatics) இடமில்லை, இந்தத் தீர்ப்பு நல்ல தீர்ப்பு" இப்படி சொல்வது வேறுயாருமல்ல குஜராத் பாசிச மோடி என்ற மதவெறியன் தான்.

"தேசிய இணைவுக்கான புதிய சாத்தியம் உருவாகியுள்ளது, உடனே ராமன் கோயிலை பெரிதாக கட்டுவோம்" இப்படி புரிய வேண்டியவர்களுக்கு மட்டும் புரிகின்றபடி உளறியது போல தெளிவாக உளறியிருப்பவன் திருவாளர் மார்க்கெட் போன அத்வானி.

அயோத்தித் தீர்ப்பு என்ற அயோக்கியத்தனம் செய்யும் மாயம் இந்த அதிசய பேச்சுக்களையெல்லாம் நாம் கேட்க வேண்டிய காலக் கொடுமை நிகழ்ந்துவிட்டது. நேற்று எல்லா தொலைக்காட்சிகளும் இந்து மத வெறித் தலைவர்களின் நல்லொழுக்க பேச்சுக்களால் நிரம்பி வலிந்தன. இது அயோத்தித் தீர்ப்பு அல்ல, அயோக்கியத் தீர்ப்பு என்பதை இதுவே உரக்க ஒலித்தது.

இந்தத் தீர்ப்பில் இந்து ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளின் மனசாட்சியாக நீதிமன்றத்தின் குரல் ஒலித்துள்ளது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், பாபர் மசூதி மற்றும் அது இருந்த இடத்தின் மீதான முஸ்லீம்களின் உரிமை என்னென்ன காரணங்களை நிராகரித்து பறிக்கப்பட்டதோ அதே நிராகரிக்கப்பட்ட காரணங்களை/வாதங்களை ஏற்றுக் கொண்டு ஆர் எஸ் எஸ் காவி வெறியர்களுக்கு அந்த இடத்தின் மீது உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது முரன்பாடு என்று கேட்டவர்கள் எல்லாம் நேற்று தேசவிரோதிகள் என்று தூற்றப்பட்டார்கள், கேலி செய்யப்பட்டார்கள்.

'அங்குதான் ராமன் பிறந்தான் என்பது இந்துக்களின் நம்பிக்கை எனவே அந்த இடம் அவர்களுக்கே சொந்தம்' (தீர்ப்பு நகல்1 மற்றும் 2) என்று சொல்லும் நீதிமன்றம்,

'அது பாபருக்கு சொந்தமான இடம் என்பதும், அதைக் கட்டியது பாபர்தான் என்பதும் போதுமான அளவு நிருபிக்கப்படவில்லை, எனவே உரிமையில்லை' (தீர்ப்பு நகல் 2, சரத்து 2) என்று கூறி முஸ்லீம்களின் உரிமையை மறுத்துள்ளது. ஆதாரமே இல்லாத ராமன் பிறந்த இடம் என்ற கட்டுக்கதை உண்மை ஏனேனில் அது இந்துக்களின் நம்பிக்கை. ஆனால் நேரடி ஆதாரமற்றது(தீர்ப்பு நகல் 1, சரத்து 2.) என்பதாலேயே 1992ல் இடிக்கப்பட்ட பாபர் மசூதி பொய் ஏனேனில் அது இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிரானது.

இதைத்தான் இந்திய வரலாற்று முக்கிய ஆய்வாளர்களில் ஒருவரான இர்பான் ஹபீப் இப்படிக் கூறுகிறார்: "இந்த நாட்டின் இராண்டம்தர குடிமகனாக உணர்கிறேன்". இப்படித்தான் பெரும்பான்மை முஸ்லீம்களும் உணர்கிறார்கள். உலகின் இரண்டாவது மிகப் பெரிய முஸ்லீம் மக்கள் தொகையை கொண்ட நாட்டின் முஸ்லீம்கள் இரண்டாம்தரக் குடிமகன்களாக உணர வைக்கப்பட வேண்டும், அதன்படி அவர்கள் அடங்கி ஒடுங்கி நடக்க வேண்டும் என்பதுதான் ஆர் எஸ் எஸ்ன் இலட்சியமும் ஆகும்.இதைத்தான், 'தேசிய ஒருங்கிணைப்புக்கான புதிய சாத்தியம் உருவாகியுள்ளது' என்று முழங்குகிறான் அத்வானி.

இல்லாத ராமனுக்கு அந்த இடம் சொந்தமாம், ஆனால் பாபர் கட்டவில்லையென்பதாலேயே அது மசூதிக்கு சொந்தமில்லையாம். அப்படியென்றால் இடிக்கப்பட்ட மசூதி என்ன அந்தரத்திலா தொங்கிக் கொண்டிருந்தது, அந்த இடத்தில்தானே இருந்தது? யார் கட்டினால் என்ன? மசுதி இருந்தது என்ற உண்மைதானே இங்கு முக்கியமானது? 1949ல் ராமன் சிலையை அங்கு வைத்த திருடன் யார் என்று நீதிமன்றம் ஆராய்ந்துதான் தீர்ப்பளித்ததா? அப்போது மட்டும் இந்துக்களின் நம்பிக்கை முக்கியம், அதன் பூர்வாசிரமம் தேவையில்லை?

'1949ல்தான் மசூதியின் மைய கோபுரத்திற்குக் கீழே ராமன் சிலை வைக்கப்பட்டது (தீர்ப்பு நகல் 1,2,3). எனவே அது இந்துக்களுக்குச் சொந்தம்' என்று கூறியுள்ள நீதிமன்றம்.

'மசூதியை இஸ்லாம் சொல்லுகின்ற விதிகளின் படி கட்டவில்லை எனவே அது மசூதியில்லை(தீர்ப்பு நகல் 3), அங்கு முஸ்லீம்களுக்கு உரிமையில்லை" என்று கூறியுள்ளது. ராமன் சிலை மட்டும் இந்து விதிமுறைகளின் படித்தான் 1949ல் அங்கு திருட்டுத்தனமாக வைக்கப்பட்டதா என்ன? விதிமுறைகளெல்லாம் முஸ்லீமுக்கு மட்டும்தான் போலும்?

1949க்குப் பிறகு மைய கோபுரத்தின் கீழ் ராமன் சிலை வைக்கப்பட்டதால் அது இந்துவுக்குச் சொந்தம்(தீர்ப்பு நகல் 1, 2,3) எனில் 1949க்கு முன்புவரை அங்கு சிலையும் கிடையாது ஒன்றும் கிடையாது. பல நூறு வருடங்களாக அங்கு முஸ்லீம்கள்தான் தொழுதார்கள்(தீர்ப்பு நகல் 1,2). எனில், அவர்களுக்கு உரிமையில்லையா என்று யாரும் கேள்வி எழுப்பிவிடாதீர்கள். தேவைப்பட்டால் ஆயிரம் வருட பழய நம்பிக்கை(ராமன்) என்று நியாயப்படுத்தவும், தேவையில்லையெனில் லேட்டஸ்ட்(1949ல் சிலை வந்தது) என்னவென்று பாருங்கள் என்று நிராகரிக்கவும் ஆர் எஸ் எஸ்ன் மனசாட்சியாம் நீதிமன்றங்களுக்குத் தெரியும்.

அதாவது மைய கோபுரம் முஸ்லீம்களுக்குச் சொந்தம் என்பது நிருபிக்கப்படவில்லை என்கிறது நீதிமன்றம். சரி இருக்கட்டும். ஆனால் இந்துக்களுக்கு மைய கோபுரம் சொந்தம் என்பதை மட்டும் எப்படி நீதிபதிகள் ஆணித்தரமாக சொல்கிறார்கள்? அங்கு 1949ல் சிலை வைக்கப்பட்டதாலேயும், அதற்கு முன்பு வரை பொதுவாக அயோத்தியில் ராமன் பிறந்தான் என்று நம்பிக் கொண்டிருந்த இந்துக்கள், மசூதி உருவான பிறகு அந்தக் குறிப்பிட்ட பகுதியில் இராமன் பிறந்தான் என்று மாற்றிக் கொண்ட இந்துக்கள், பிறகு 1949ல் திருட்டுத்தனமாக ராமனது சிலை மசூதியின் மைய கோபுரத்தின் கீழே வைக்கப்பட்டது எனவே அது இந்துக்களுக்குச் சொந்தமாம்(தீர்ப்பு நகல் 1, 2,3). நீதிமன்றத்தின் தீர்ப்பு இப்படித்தான் சொல்கிறது.

நீதிமன்ற தீர்ப்பில் எங்கேயுமே மைய கோபுரம் உள்ள பகுதி இந்துக்களுக்கு சொந்தம் என்பது நிருபிக்கப்பட்டுள்ளதால் அதை அவர்களுக்குத் தருகிறோம் என்று சொல்லவில்லை. நிருபணம் எல்லாம் முஸ்லீம்களுக்குத்தான், இந்துக்களுக்கு நம்பிக்கை ஒன்று மட்டும் இருந்தால் போதும் என்பதுதான் இதன் பொருள்.

"மசூதி இருந்த இடத்தின் மீதான உரிமையை சன்னி வக்பு வாரியம் நிருபிக்கவில்லை. மேலும், மசூதி இருந்த இடம் பாபருக்கு சொந்தமானது என்பதும் நிருபனமாகவில்லை" என்று கூறியுள்ளது நீதிமன்றம் (தீர்ப்பு நகல் 1, 2, 3).

ராமன் பிறந்த இடம் என்பதும்தான் நிருபிக்கப்படவில்லை, அங்கு ராமன் கோயில்தான் இருந்தது என்பதோ அல்லது கோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது என்பதோ கூடத்தான் நிருபிக்கப்படவில்லை(தீர்ப்பு 1, 2). அந்த இடம் இந்துக்களுக்கானது என்பதும் கூடத்தான் நிருபிக்கப்படவில்லை. ஆனாலும் இந்துக்களின் நம்பிக்கை என்பதால் அது மூன்றாகப் பிரிக்கப்பட்டு மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்களுக்குத் தரப்படவேண்டும் என்கிறது தீர்ப்பு.

பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பின் படி நிருபிக்கப்பட்டவையெல்லாம் இவைதான், 1) ஏற்கனவே, இடிந்த கோயில் ஒன்று இருந்துள்ளது, அங்குதான் மசூதி கட்டப்பட்டது. 2) கோயிலை இடித்து மசூதி கட்டப்படவில்லை. 3) மசூதி கட்டப்பட்ட பிறகுதான் மசூதி இருக்கும் அந்தக் குறிப்பான பகுதியில் ராமன் வழிபாடு நடக்கத் தொடங்கியது. 4)அதுவும் வெளிப் பிரகாரத்தில்தான். 5)1853 வரை மசூதி ஒரு பிரச்சினையாகவே இல்லை, இரு மதத்தவரும் அக்கம் பக்கமாக வழிபட்டு வந்துள்ளனர்.

இதிலும் கோயில்தான் இருந்ததா என்பதை ஆணித்தரமாக அகழ்வாராய்ச்சியால்` சொல்ல இயலவில்லை. பூசி மெழுகவே செய்கிறார்கள்.

இவைதான் நிருபிக்கப்பட்டவையெனில், இதே நிலையை மீண்டும் கொண்டு வருவதுதானே நியாயம்? மசூதியின் பிரகாரத்தில் இந்துவின் வழிபாட்டையும், மசூதி இருந்த இடத்தில் மசூதியையும் கொண்டு வருவதுதானே நியாயம்?

தீர்ப்பு என்ன சொல்கிறது என்றால், வெளிப் பிரகாரத்தில் சீதா மற்றும் ராமன் வழிபாடு நிகழ்ந்ததால் அது நிர்மோகி அகாராவுக்குச் சொந்தம், உள்ளே மைய ஸ்தூபியில் 1949ல் ராமன் சிலையை வைக்கப்பட்டதாலும் அதையே இந்துக்கள் அன்றிலிருந்து நம்பத் தொடங்கியதாலும் அந்த இடம் இனிமேல் மசூதிக்கோ அல்லது முஸ்லீம்களுக்கோ சொந்தம் கிடையாது இந்து மகா சபைக்கே சொந்தம், 1992ல் மசூதி இடிக்கப்படும் வரை அங்கு மசூதி இருந்தது என்பது மறுக்க இயலாத அளவு நிருபிக்கப்பட்டுவிட்டது எனவே போனால் போகிறது மூனாவது பங்கு முஸ்லீம்களுக்கு என்று தீர்ப்பு சொல்லியுள்ளனர்.

அதாவது 400 வருடம் மசூதி இருந்தது ரெவின்யு டிப்பார்மெண்டிலோ அல்லது நிலப் பட்டா மூலமோ ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை (பாபருக்கு இந்த சட்டப் பிரச்சினையெல்லாம் தெரியாமல் போனதற்கு பாவம் நீதிபதிகள் என்ன செய்வார்கள்) எனவே அங்கு முஸ்லீம்களுக்கு உரிமையில்லை போலும். 400 வருட மசூதிக்கு உரிமையில்லை ஆனால் 61 வருடங்களுக்கு முன்பு வைக்கப்பட்ட ராமனது திருட்டு சிலைக்கு உரிமையுண்டு. ஏனேனில் அது இந்துக்களின் நம்பிக்கை(புதிய நம்பிக்கையா, பழைய நம்பிக்கையா என்பதெல்லாம் நீதிமன்றத்திற்கு தேவையில்லாத விசயம்).

இப்போது இந்தப் பிரச்சினையின் காலனி ஆட்சிக்கால பரிணாமத்தை புரிந்து கொள்வது தேவையாக உள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் இந்து முஸ்லீம் பிரித்தாளும் சூழ்ச்சியும், காலனியாதிக்க பிரிட்டிஷ்க்காரர்களின் ஏவல் படையாகச் செயல்பட்ட இந்துத்துவவாதிகளின் முஸ்லீம் எதிர்ப்பு, பிரிட்டிஷ் ஆதரவு அரசியலும் இந்த பிரச்சினையில் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளன.

நிர்மோகி என்ற குழு அங்கு கோயில் இருந்ததை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது என்று களத்தில் இறங்கிய பிறகுதான் 1853ல் அங்கு முதல் மத மோதல் ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து இரு வருடங்கள் நடந்த கலவரங்களின் விளைவால், நவாபின் ஆட்சியின் கீழ் இருந்த அங்கு கூட்டாக இந்துக்களும், முஸ்லீம்களும் உள்பிரகாரத்தில் வழிபடுவது தடை செய்யப்பட்டது. ஏற்கனவே மசூதி இருந்தபடியால், இந்துக்களின் வழிபாடிற்கு என்று வெளிப் பிரகாரத்தில் ஒரு இடம் கட்டப்பட்டது.

இதுதான் பிரச்சினையின் மையமான பகுதி. 1850களில் இந்துக்களும், முஸ்லீம்களும் ஒருங்கிணைந்து பிரிட்டிஷ் ஆட்சியை வெளியேற்றும் சுதந்திரப் போரை நடத்திக் கொண்டிருந்தனர். திப்பு சுல்தான் தலைமையில் தென்னிந்தியாவில் ஒரு கூட்டிணைவு உருவாகி அது பிரிட்டிஸால் சிதைக்கப்பட்டிருந்தது. திப்பு சுல்தான் தலைமையில் தந்திரப் போரில் ஈடுபட்ட அரசர்கள் மூட்டிய கனல் 1805ல் வேலூர் சிப்பாய்க் கலகமாக வெடித்தது. பிற்பாடு, 1857ல் இந்திய சுதந்திரப் போராக இந்தியா முழுவதும் வெடித்துக் கிளம்பியது. இவையிரண்டும் பிரிட்டிஷ்க்காரர்களால் ஒடுக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் இந்தியா ஒரு புரட்சியை எதிர்நோக்கி இருந்தது.

மத பிரிவினைகள் இன்றி மக்கள் ஒன்று பட்டு நின்றது பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கு அபாயமானது எனவே, பிரித்தாளும் தந்திரம் விரிவாக அமல்படுத்தப்பட்டது. இன்னொரு பக்கம், புரட்சிகரமான இந்த காலகட்டத்தில்தான் துரோகமமும் உத்வேகத்துடன் முன்னுக்கு வந்தது. அந்தத் துரோகத்தின் வரலாற்றுக் குரலாக பதிவு செயப்பட்டதுதான், பக்கிம் சந்தர் சாட்டர்ஜியின் 'ஆனந்த மடம்' என்ற புதினம், அதில் முஸ்லீம்களை நாட்டை விட்டு விரட்டுவதே முக்கியம், பிரிட்டிஷ்க்காரர்களின் ஆட்சி நமக்குத் தேவையானது என்ற அரசியலும் பேசப்பட்டது. முஸ்லீம்களை விரட்ட செல்லும் கூட்டத்தினரின் 'தேசபக்த'ப் பாடலாக வந்தேமாதரம் பாடலும் புதினத்தில் இயற்றப்பட்டது.

இந்துத்துவாதிகளின் மதவெறி முஸ்லீம் வெறுப்புப் பிரச்சாரமும், பிரிட்டிஷ்க்காரர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியும் தாளமும், லயமுமாக இணைந்து செயல்பட்டு இந்திய விடுதலைப் போராட்ட அரசியலை பிழைப்புவாத லாவணிக் கச்சேரியாகவும், மதவாத பிரிவினையாகவும் சிதைத்தன. இவைதான் பாபர் மசூதிப் பிரச்சினையில் தெரிந்தே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மோதலைத் தூபம் போடும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்தன.

ஒரு நீதிமன்றத் தீர்ப்பு முற்றுமுதலாக பெரும்பான்மையினரின் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் வழங்க இயலுமா? அத்தகைய நம்பிக்கை பெரும்பான்மையினருடையது என்பது கூட ஜனநாயக முறையில் நிருபிக்கப்படாத பொழுது தீர்ப்பின் தன்மையை நியாயமானதாக எப்படி புரிந்து கொள்ள இயலும்? மசூதியை இடிக்கக் கூடாது என்று நீதிமன்றம் சொல்லியதை மீறி அது இடிக்கப்பட்டுள்ளதற்கு நீதிமன்றத்தின் எதிர்வினை என்ன? இவையெல்லாம் உண்மையில் இந்திய மக்கள் ஒற்றுமையுடன் இருப்பதையல்ல மாறாக இன்னும் சில பல வருடங்களுக்கு அடித்துக் கொண்டு அப்பாவி மக்களை பலி கொடுக்கப்படுவதையே உறுதி செய்யும். அதைத்தான் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளும் விரும்புகிறார்கள்.

இது தீர்ப்பு அல்ல, துரோகம். இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்தவர்களுக்கு செய்யப்பட்ட நம்பிக்கைத் துரோகம்.

அசுரன்

தீர்ப்பு நகல் 1

தீர்ப்பு நகல் 2

தீர்ப்பு நகல் 3

காலக் குறிப்புகள்

காலக் குறிப்புகள்

பாபர் மசூதி இடிப்பு வழக்குகள்: சட்டப்படி நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம்

அயோக்கியத் தீர்ப்பு

கடப்பாறையேவ ஜெயதே – அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு !!
ராமனுக்கே மயிர் பிடுங்கிய அலகாபாத் நீதிமன்றம்..

Monday, September 27, 2010

உன்னோட வெட்டி கவுரதைக்கு பலி 300 உயிர்களா?






காமென்வெல்த் போட்டிகளில் ஊழல், வரலாறு காணாத முறைக்கேடுகள். இப்படியும் அல்பத்தனமாக ஊழல் செய்ய முடியுமா என்பது போல குடை வாடகைக்கு எடுத்தது, பீ துடைக்கும் காகிதம் விலைக்கு வாங்கியது என்று நாம் நகைச்சுவைத் துணுக்குகளாக மட்டுமே படித்துள்ளவற்றையெல்லாம் இன்று உண்மையாக்கியுள்ளனர். இது குறித்து தெரிவிக்கப்படும் பல்வேறு கருத்துக்களில் தொக்கி நிற்பவை இரண்டு விசயங்கள்தான், ஒன்று பல்லாயிரம் கோடி ஊழலும், இந்த ஆடம்பரமும் வறுமையில் மக்கள் வாடும் இந்தியாவிற்குத் தேவையா என்கிற ஒரு வாதம், இன்னொன்று அய்யோ போச்சே... போச்சே.. இந்தியாவோட கவுரதை கட்டமண்ணாப் போச்சே.. என்ற வாதம்.

இவையிரண்டில் முதல் வாதம் மிகச்சரியானது எனினும், இந்த ஊழலின் வக்கிரமான பக்கத்தை இந்த இரண்டு வாதங்களும் காண மறுக்கின்றன. தேசத்தின் கவுரம் என்ற பெயரில் இந்த ஆடம்பர விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்படத் தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை ஆந்திரா, பிஹார், ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த கூலிக்கு உழைக்கும்(விவசாயிகள்) மக்களும், டெல்லி வாழ் ஏழைகளும் மிகக் கொடூரமாக வதைக்கப்பட்டுள்ளனர்.

காமன்வெல்த் போட்டிகளுக்காக இடிக்கப்படும் சேரிகள்

""முதலமைச்சர் ஷீலா தீட்சித், டெல்லியிலுள்ள 60,000 பிச்சைக்காரர்களை விரட்டியடித்தார். சேரிகளை இடித்துத் தரை மட்டமாக்கி இலட்சக்கணக்கான ஏழை மக்களை வீடற்ற அனாதைகளாக, கடுங்குளிரில் அல்லாடவிட்டார். டெல்லி யுனிவர்சிட்டி மாணவர்களின் தங்கும் விடுதிகள் பிடுங்கப்பட்டு நடுரோட்டில் நிறுத்தப்பட்டனர். ஏழை மக்களின் பென்சம் பணம் முதற்கொண்டு இந்த ஊழலில் கரைக்கப்பட்டுள்ளது.

காமன்வெல்த் போட்டிக்காக டெல்லியின் உள்கட்டுமானத்தை மேம்படுத்தும் கட்டுமானப் பணிகளை ஒப்பந்தமெடுத்து ஊழல் செய்தவர்கள், இன்னொரு பக்கம் பீகார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் இருந்து 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அற்ப கூலிக்கு வரவழைத்து, கொத்தடிமைகளாகக் கசக்கி பிழிந்து வேலை வாங்கியுள்ளனர். சந்தை விலையை விட அதிக விலைக்குப் பொருட்களை வாடகைக்கு எடுத்தவர்கள், தொழிலாளர்கள் தங்குவதற்கு வீடுகள் கூடக் கொடுக்காமல் பிளாஸ்டிக் தார்பாயிலும் தகரக் கொட்டைகளிலும் மொத்தமாக அடைத்ததால், தொற்று நோய் தாக்கி இதுவரை நூறு பேருக்கும் மேல் பலியாகியுள்ளனர். கட்டுமானப் பணிகளில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படாத நிலையில் ஏற்பட்ட விபத்துகளிலும், தரக்குறைவான பொருட்களால் கட்டப்பட்ட பாலங்கள், கட்டுமானங்கள் இடிந்து விழுந்த சம்பவங்களிலும் நூற்றுக்கணக்கில் தொழிலாளர்கள் கேள்வி கேட்க நாதியின்றி கொல்லப்பட்டுள்ளனர். இதே போன்ற விபத்துகளின் காரணமாக மெட்ரோ ரயில் திட்டப் பணியில் மட்டும் 90-க்கும் மேலான தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்."" (நன்றி: புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2010 )

இப்படி 300க்கும் மேல் ஏழை மக்களின் உயிர்களை பறித்தது, அவர்களை இத்தனை ஆண்டுகள் மிகக் கொடூரமான சித்திரவதைக்கு ஆட்படுத்தியது இவையனைத்தும் தேசத்தின் கவுரம் என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டது. இன்று அதே கவுரத்தின் பெயரால் அவர்கள் செய்த ஊழலும் கடந்த செல்லப்படுகிறது. அப்படியானால், 300 உயிர்கள் பலியானதும், ஏழை மக்கள் அனுபவித்த சித்திரவதைகளும் எதற்காக? தேசத்தின் கவுரத்தால் ஏழை உழைக்கும் மக்களுக்கு ஒரு மசிரளவும் பிரயோசனமில்லை என்றாலும், குறைந்தது இந்தியன் என்ற போலியான பெருமிதமாவது மிஞ்சியிருக்கும்(வலியை மறைக்க உதவும் போதையைப் போல), அதனையும் பறித்துள்ள இந்த ஊழல் எத்தனை வக்கிரமானது? இன்றைக்கு இந்த ஊழல் அசிங்கம் வெளிப்பட்டுள்ள தருணத்தில் கூட மறந்தும் யாருமே உயிர்விட்ட நூற்றுக்கணக்கிலான உழைக்கும் மக்கள் பற்றியோ, டெல்லிவாழ் ஏழைகள் பற்றியோ பேசக் காணும். மனிதம் என்பதே இவர்களின் மனதில் இருந்து மறைந்துவிட்டதா? லாபமும், சுக போகமும், இந்த நிமிடத்தை அனுபவிப்போம் என்கிற நுகர்வு வெறியும் இவர்களின் அடிப்படை நாகரிகத்தையே அழித்தொழித்துவிட்டதா? கோட்டு, சூட்டுப் போட்டு ஊடகங்களில் ஒளிரும் இந்த ஜடங்கள் எல்லாம் மனிதர்களா இல்லை கிடைத்தவற்றையெல்லாம் அனுபவித்து, நுகர்ந்து கழியும் இயந்திரங்களா? அல்லது, ஏழைகள் என்பதால் அவர்களின் உயிர் எச்சில் இலைகளுக்கும் கீழோ? ஊழல் செய்தவர்களைவிட ஊழல் குறித்து பேசும் இத்தகைய மேட்டுக்குடி நியாயவன்கள் மற்றும் ஊடகங்கள், ஏழை மக்கள் மீது நடத்தப்பட்ட சித்திரவதை குறித்து இப்போது கூட கண்டும் காணாமல் இருக்கும் வக்கிரம் மிக கேவலாமானதாக இருக்கிறது.







இப்போதைய நிலையில், மனசாட்சியுள்ள எவனுமே கேட்க்க வேண்டிய கேள்வி இதுதான், செப் 11 மும்பை தாக்குதல் கொலையாளிகள் பயங்கரவாதிகள், அவர்களுக்குத் தூக்குதண்டனை கொடுப்பது சரி எனில் 300 ஏழை உழைக்கும் மக்களின் உயிர்களைப் பறித்த காமன்வெல்த் விளையாட்டு பயங்கரவாதிகளுக்கு என்ன தண்டனை கொடுப்பது? ஊடகங்கள் புடை சூழ ராஜ பரிபாலனம்தான் அவர்களுக்கான தண்டனையா?

அசுரன்

தொடர்புடைய பதிவுகள்


காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: ஊழலுக்குக் கவசமாகும் ‘தேசிய கவுரவம்’!

Thursday, September 23, 2010

இந்தியாவைப் பீடித்த பன்றிக் காய்ச்சலும், பாபர் மசூதி வழக்குத் தீர்ப்பும்!!!


டிசம்பர் 6, 1992 அயோத்தி பாபர் மசூதியை இடிக்க கையில் கடப்பாரைகளுடன் 200,000 காவி வெறியர்கள் கூடினர்.

கையில் கடப்பாரைகளுடன் இத்தனை பேர் காராப் பூந்தி சாப்பிடக் கூடியதாக போலீசு நினைத்துவிட்டது போலும், அவர்களை தடுக்கவோ அல்லது இத்தனை பேர் ஓரிடத்தில் அபாயகரமான முறையில் கூடுவதை நிறுத்தவோ போலீசு ஒன்றுமே செய்யவில்லை. இதுவே, நியாயமான கோரிக்கைகளுக்கு ஒரு பத்து பேர் கூடினாலே சட்டம் ஒழுங்கு என்று ஒப்பாரி வைத்து தடியடி நடத்தி மண்டையுடைக்கும் போலீசு, காவிக் கறையைக் கண்டால் மட்டும் பல்லிளிக்கிறது.

பாபர் மசூதி இடிக்கப்படுவதிலிருந்து காக்கப்பட வேண்டும் என்று 1992க்கு முன்பே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதுவும் நீதிமன்றத் தீர்ப்புதான். நாளை வரவிருப்பதும் நீதிமன்ற தீர்ப்புதான். எது மீறப்பட வேண்டும், எது கட்டாயமாக்கப்படும் என்று முடிவு செய்பவர்கள்/செய்தவர்கள் என்றுமே காவி பயங்கரவாதிகள்தான்.

அரசின் ஆயுதப் படைகள் அமைதியாகப் பார்த்து ரசிக்க, காவி பயங்கரவாதிகள் மசூதியை இடித்துத் தள்ளினர்.

அத்துடன் நில்லாமல், அருகாமை முஸ்லீம் வீடுகள், சொத்துக்களை தாக்கினர். பத்திரிகை, ஊடகத் துறையினரும் தாக்கப்பட்டனர். போலீசு அமைதியாகவே இருந்தனர். அவர்களது கடமை காவி வெறியர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது போலும்.



இதற்குப் பிறகு நடைபெற்ற ஜவ்விழுக்கும் நீதிமன்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக அகல்வாய்வு செய்யப்பட்டது. அங்கு ராமன் இருந்ததற்கு எந்த விஞ்ஞான ஆதாரமும் இல்லையென்று முடிவானது. இதுவும் நீதிமன்ற தீர்ப்புதான் ஆனால் காவி வெறியர்கள் கூறினர், அது எங்கள் நம்பிக்கையென்று.

2002ல் வி ஹெச் பி வெறியர்கள் ராமர் கோயிலை கட்டப் போகிறோம் என்று இன்னொரு ரவுண்டு கிளம்பினர், அப்படி போன கும்பலில் ஒன்று திரும்பி வரும் போது வழி நெடுக ரவுடித்தனம் செய்து கொண்டே சென்றது. அந்த கும்பல்தான் குஜராத்தில் ரயில் பெட்டியோடு எரியூட்டப்பட்டது. அது விபத்தா, அல்லது தாக்குதால என்பதைவிட அந்தக் கும்பல் எரியூட்டப்பட்டதற்கு பின் உள்ள நியாயங்களே என் கண்ணுக்குத் தெரிகின்றன.

இடிக்கப்பட்ட பாபர் மசூதி இடத்தில் இன்று பலத்த பாதுகாப்புகளுடன் ராமனது வழிபாடு நடந்து வருகிறது. கேட்டால் ஸ்டேட்டஸ் க்யூ என்கிறார்கள். அதாவது இதன் பொருள் எனக்கு விருப்பபடும் போது நீதிமன்றம், சட்டம் சொல்கிறபடி நட என்பேன். ஆனால், எனக்குப் பிடிக்கவில்லையெனில் நானே அதனை மீறுவேன் என்பதே ஆகும்.



இதுதான் இந்தியாவைப் பிடித்துள்ள பன்றிக் காய்ச்சல். காவிப் பன்றிக் காய்ச்சல். காய்ச்சலும், பன்றியும் என்று ஒழிக்கப்படுமோ அன்றுதான் இந்தியாவிற்கு விடிவு.

அசுரன்

**
இதே டிசம்பர் 6தான் காவிப் பன்றிக் காய்ச்சலுக்கு மருந்து சொன்ன அம்பேத்கரின் இறந்தநாள் ஆகும். காவி வெறியர்களின் காழ்ப்புணர்ச்சியைக் கவனியுங்கள், டிசம்பர் ஆறு அன்றுதான் பாபர் மசூதி, பெரியார் சிலை உடைப்பு எல்லாம் அரங்கேறின.

Rama.... Rama....

படியுங்கள், பயங்கொள்ளுங்கள்.... 3_4

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில் 1 -2

கோவை மும்பய் குண்டு வெடிப்பு தீர்ப்புகள்: நவீன மனு...

'வினை'யகர் சதுர்த்தி!!

அக்சார்தம் கோயிலை தாக்கியவர்களுக்கு மரணதண்டனை, பாபர் மசூதியை தாக்கிய காவி பயங்கரவாதிகளுக்கு?

முற்றும் கழண்ட டவுசர்!! அடடே ஆர் எஸ் எஸ் அம்மணக்கட்டை!!!

அயோத்தி: முஸ்லீம்கள் பராமரித்த இராமன், துரோகம் செய்த பா.ஜ.க – தலைமை பூசாரி பேட்டி

அத்வானி, ஜோஷி முதலான சங்கப்பரிவாரத் தலைவர்கள் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் விடுவிப்பு

Wednesday, September 15, 2010

'வினை'யகர் சதுர்த்தி!!

பெரும்பாலான வீதி முனைகளில் இருட்டின் துணையுடன் ஒன்னுக்கடிக்கக் கூடிய வாய்ப்பான இடங்கள் அமைந்திருக்கும். பாதசாரிகளின் 'ஒன்னாம்' நம்பர் அவசரத் தேவைகளுக்கு உடனடித் நிவாரணமாக அமைபவை இத்தகைய முனைகளே. மூத்திரச் சந்துகளை விட இந்த தெரு முனைகள் சுகாதாரமானவை, பாதுகாப்பானவையாகும் என்பது இவற்றின் பிரபல்யத்திற்கான காரணமாக அமைகின்றன. அப்படியான மூத்திர முக்குகளையெல்லாம் திட்டமிட்டு ஆக்கிரமித்து விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் விநாயகனின் சிலையை வைக்கும் அபாயகரமான கலாச்சாரம் தமிழ்நாட்டில் பெருகி வருகிறது. இது தமிழகத்து ஆண்களின் உயிர்நாடியில் கை வைக்கும் ஒரு அத்துமீறல் என்பதாகவே நான் உணர்கிறேன்.

அத்தகையதொரு மூத்திர உரிமையை மீறிய விநாயகனின் சிலை ஒன்றை கே கே நகரில் பார்த்தேன். அந்த வினை தீர்க்கும் வினாயகர் சிலைக்குப் பின்னே 'முஸ்லீம்களுக்கு சலுகை இந்துக்களுக்கு ஒன்றுமில்லையா' என்ற வினையான வாசகம் வக்கிரமாய் சிரிக்கிறது. உபயம், காவி பயங்கரவாத கட்சிகளில் ஒன்றான இந்து மக்கள் கட்சி. பெரும்பான்மை இந்து உழைக்கும் மக்கள் தெரு முனைகளில் ஒன்னுக்கடிக்கும் உரிமையை சிலை வைத்து தடுத்துள்ளதைத்தான் இப்படிச் சொல்கிறார்களோ என்று மனதில் எழுந்த சிறு ஐய்யத்தை முஸ்லீம் என்ற வார்த்தை களைத்தது. இது வேறு ஏதோவொரு பிரச்சினை என்று புரிந்தது. ஆனால், 'இந்துக்களுக்கு ஒன்றுமில்லையா' என்பதன் பொருள் மட்டும் புரியாமலேயே குழப்பியது. யாராவது விளக்கினால் தேவலாம் என்றும் தோன்றியது. இத்துடன் இன்னொரு கிளைக் கேள்வி எழுந்தது அது இந்த பதிவின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது.

மல்லாக்கப் படுத்து விட்டத்த பாத்தா எவ்வளவு சுகமா இருக்கு... ம்... அதுவும் கால விரிச்சுப் படுத்தா எவ்வளவு காத்தோட்டம்..

எனக்கும், சச்சார் கமிட்டியில் அறிக்கை எழுதியவருக்கும் தெரிந்த வரையில் இந்தியாவிலேயே ஏழ்மையான, வறிய, பின் தங்கிய, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவினர் தாழ்த்தப்பட்டவர்களும், முஸ்லீம்களும்தான், இந்துக்களல்ல எனும் போது இந்துக்கள் என்று குறிப்பிட்டு வினாயகனுக்கு பின்னே ஒளிரும் இந்த வாசகங்கள் வன்மம் நிறைந்தவையாகத்தான் தோன்றுகின்றன.

தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்கள்தான் என்று வினாயகன் சிலை வைத்தவர்கள் சொல்லக் கூடுமோ என்று ஒரு சிறு எண்ணம் தோன்றியது. ஆனால், அவர்களும் இந்துக்கள்தான் எனில் ஏன் கோயிலுக்குள் விடுவதில்லை, கோயில் மரியாதைகளை அவர்களுக்குக் கொடுப்பதில்லை, அவர்களுக்கு ஏன் பலரும் வீடு வாடகைக்குக் கொடுப்பதில்லை, அவர்களுடன் திருமணம் பந்தம் ஏன் வைத்துக் கொள்வதில்லை, சாதிப் பெருமிதம் என்று காட்டிக் கொள்ள பூனூல், நாமம் என்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏன் எதுவும் இல்லை, மாட்டு மாமிசம் சாப்பிட்டால் ஏன் தாழ்த்தப்பட்டவர்கள் பிற சாதி இந்துக்களால் தாக்கப்படுகிறார்கள், அவர்கள் மீது நாடு முழுவதும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக சாதி வெறி தாக்குதல் நடத்தப்படுவதை இதே 'இந்து'க்களின் கட்சிகள் ஏன் கண்டு கொள்வதேயில்லை என்று பல கேள்விகள் மூளையை சல்லடையாகத் துளைத்தன.

இவற்றுக்கு கிடைத்த ஒரே விடை இந்துக்கள், கடவுள் என்ற பெயரில் இந்த கட்சிகள் நடத்துவதெல்லாம் மதவெறி பிரச்சாரம் மட்டுமே என்பதே ஆகும்.

ங் கொய்யால குப்புறக் கவுத்திடாய்ங்களே....

இந்தக் கட்சிகளை விட வன்மம் நிறைந்தவையாக உள்ளன வினாயகனின் பெயரில் நடைபெறும் இந்த மதவெறி அரசியலை, எவன் இழவு கொட்டினால் எனக்கென்ன என் வீட்டில் இனிப்பு சேவு கிடைக்கிறதா போதும் என்று கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு வினாயகனை மட்டும் வாழ்த்தும் படித்த, நுண்ணறிவு நிரம்பிய சிலரின் நடவடிக்கைகள்.

இவர்கள் வழிபடும் ஒரு கடவுளின் பெயரால் நடக்கும் மதவெறி அயோக்கியத்தனத்தை எதிர்த்து குரல் கொடுக்க ஞாபகமாக மறந்துவிடும் இவர்களை என்னவென்று சொல்ல? இவர்கள் வழிபடும் வினாயகனை அவமானப்படுத்தி வினாயகன் என்றால் ஒரு மதவெறி, ரத்தவெறி பிடித்த மிருகம் என்ற பிம்பத்தை உருவாக்கும் காவி பயங்கரவாத கட்சிகளின் மேல் பக்தர்களின் கோபம் திரும்பவதில்லையே ஏன்?

இந்தக் கேள்விகளால் வறட்சியுற்ற எனது மூளை அடுத்த டாபிகிற்க்கு வேகமாக தாவ எத்தணித்தது. துரதிருஷ்டவசமாக அதுவும் இந்துக்கள் பற்றியதாகவே அமைந்துவிட்டது. இதோ அடுத்த டாபிக்...

இந்துக்கள் என்றால் யார் என்பது குறித்தும், மத நல்லிணக்கத்தின் சாத்தியக்கூறு குறித்தும் தோ. பரமசிவன் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம். (நன்றி: நறும்புனல்)

(தோ. பரமசிவன்)

இந்து” என்ற சொல் சமய ஆதிக்கச் சொல்லாக மட்டுமின்றி அரசியல் ஆதிக்கச் சொல்லாக வளர்ந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் இந்து என்பவன் யார்? இந்தியச் அரசியல் சட்டப்பிரிவுகள் “இந்து” என்ற சொல்லாடலுக்கு நேரிடையான வரவிலக்கணத்தை தரவில்லை..என்பது தான் இந்து என்ற சொல்லாடலை வைத்துப் பிழைக்கும் இந்துத்வவாதிகளுக்கு வசதியாகப் போய்விட்டது.ஆகவே இந்து என்ற சொல்லாடலுக்கு அரசியல் சட்டம் நேரிடையான விளக்கம் தரவேண்டும்..அந்தச் சொல் பல்வேறு சமயஙகளையும், நம்பிக்கைகளையும், வழிபாட்டு நெறிகளையும் குறிக்கும் சொல் என்பதால் வெவ்வேறு சமயங்களுக்குமான வரம்புகளை நெறிப்படுத்தி சட்டமாக்க வேண்டும்.அதுவரை சமய நல்லிணக்கம் என்பது சமயச் சிந்தனையாளர்களின் கனவாவே இருக்க முடியும்...

(மூத்திர தெருமுனைகளை ஆக்கிரமித்த குற்றத்திற்காக அடித்து நொறுக்கப்பட்ட விநாயகன்)

(கிளைக் கேள்வி: மூத்திர முக்குகளை ஆக்கிரமித்து உரிமைமீறலில் ஈடுப்பட்டுள்ள வினாயகனை மூத்திரச் சந்தில் வைத்து அடித்து நொறுக்குவதுதானே தர்க்க(லாஜிக்கல்)ரீதியாக சரியாக இருக்கும்? ஏன் கடலில் கொண்டு போய் அடித்து நொறுக்குகிறார்கள்?)

இப்படிக்கு,
மூத்திரச் சந்து முனிசாமி


பதிந்தவர்
அசுரன்

Tuesday, September 07, 2010

கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடக் கூடாது, ஆனால் உலக வங்கி தலையிடலாம்!!

லி தின்று வீணாகப் போகும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாகக் கொடு என்று நீதிமன்றம் சொன்னதற்கு பிரதமர் சொல்லிய பதில். 'அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது'. இதுக்கு முன்பு உலக வங்கி, அமெரிக்கா, இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதுரகம் போன்றவை இந்திய அரசின் எல்லா கொள்கைகளையும் தீர்மானித்தனவே அப்போதெல்லாம் மன்மோகன் இப்படித்தான் குதித்தாரா? இல்லையே? அப்புறமென்ன கொள்கை முடிவு? வேறொன்றும் இல்லை, உலகமயக் கொள்கைகளை உலக வங்கியின் ஆணைப்படி நிறைவேற்றுவதைத்தான் மன்மோகன் இப்படிச் சொல்கிறார். அந்தக் கொள்கைகளுக்கு எதிராக நீதிமன்றம் இலவசம் என்று சொன்னதைத்தான் மன்மோகன் எதிர்க்கிறார்.

இலவசம் என்பது பன்னாட்டு முதலாளிகளுக்கு மட்டும்தான், ஏழை மக்களுக்கு டிவி பொட்டி வேண்டுமானால் இலவசமாகக் கிடைக்கும். ஆனால் அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், குடிநீர் போன்றவை இலவசமாகக் கொடுக்கப்படாது. ஏனேனில், இவையெல்லாம் பன்னாட்டு முதலாளிகளின் வியாபாரப் பொருட்கள். இவற்றை இலவசமாகக் கொடுத்துப் பழக்கினால் விலை வைத்து விற்று பன்னாட்டு கம்பனிகள் லாபம் பார்ப்பதை மக்கள் விரும்ப மறுப்பார்கள். எனவேதான் உலக வர்த்தகக் கழகம் தெளிவாகச் சொல்கிறது இவற்றை சரக்கு என்று. இந்த கொள்கையில்தான் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று குதிக்கிறார் மன்மோகன் சிங்.

ஏறு பூட்டி விளைவித்த விவசாயிக்கே விளை பொருளின் மீது உரிமையில்லை, பட்டினியில் சாகிறான். ஆனால் இவன் சொல்கிறான் உணவை இலவசமாகக் கொடுக்க முடியாது என்று. யாருடைய சொத்து அது? இவனுடைய அப்பன் வீட்டுச் சொத்தா அது? இதனால் விவசாயிக்கு பாதிப்பு என்கிறார் மன்மோகன். புதிய பொருளாதாரக் கொள்கையால் விவசாயம் அழிவதைப் பற்றி கேட்டால், உணவு உற்பத்தி குறைவதைப் பற்றி கேட்டால் நாடு தொழில்மயமாக வேண்டும் என்று சொல்லும் நீ, இப்போது மட்டும் விவசாயிக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறாயா?

கோதுமை அதிகமாக விளைந்தால் அதை கடலில் கொட்டுவேனே அன்றி ஏழை நாடுகளுக்குக் கொடுக்க மாட்டேன், பால் உற்பத்தி அதிகமானால் அவற்றை கொட்டி அழிப்பேனே அன்றி ஏழை நாடுகளுக்குக் கொடுக்க மாட்டேன் இதுதானே மேலை நாடுகளின் சந்தை விதிகள். இதைத்தானே மன்மோகனும் வேறு மொழியில் - அடிமைகளின் மொழியில் - பேசுகிறார்?

இன்னுமாயா இதை உலகின் மிகப் பெரிய ஜனநாயகம்னு சொல்லிட்டுத் திரியுறீங்க? உலகின் மிகப் பெரிய பிண நாயகம்னு சொல்லுங்க அதுதான் சரி.

அசுரன்

Monday, September 06, 2010

அக்சார்தம் கோயிலை தாக்கியவர்களுக்கு மரணதண்டனை, பாபர் மசூதியை தாக்கிய காவி பயங்கரவாதிகளுக்கு?

இந்தியாவின் அதி பயங்கர உள்நாட்டு அச்சுறுத்தல் - தேசத் துரோக காவி பயங்கரவாதி அத்வானி

ல்லாயிரம் பேரை கொன்றுவிட்டு, கோயிலை இடித்துவிட்டு, கலவரங்கள் செய்துவிட்டு இந்தியாவில் பாதுகாப்பாக, பெருந்தலைவர்களாக வலம் வர முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டியவன்தான் அத்வானி என்ற காவி பயங்கரவாதி. இவனது அடியொற்றிய அதி பயங்கரவாதிதான் மோடி என்பவன்.













இன்று அக்சார்தம் கோயிலைத் தாக்கியவர்களுக்கு மரண தண்டனை இடை-நிறுத்தி வைக்கப்பட்டதாக செய்தி வெளிவந்துள்ளது. குஜராத் உயர் நீதிமன்றத்தில் மரண்தண்டனை வழங்கப்பட்ட பயங்கரவாதிகள்தான் இவர்கள். ஏனேனில், இவர்கள் சிறுபான்மை முஸ்லீம்கள் என்பதால், 'சிறுபான்மையை குளிர்விக்கும்' நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், இதற்கும் முன்பே பாபர் மசூதியை இடித்ததுடன், ரத யாத்திரைகள், கலவரங்கள் நடத்தி பல ஆயிரம் மக்களை படுகொலை செய்த ஆர் எஸ் எஸ் பயங்கரவாதி அத்வானியோ ஒரு தண்டனைக்கும் இதுவரை ஆளாகவில்லை. அவர்களது காவி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பரிசாக இந்தியாவின் 'முக்கிய'த் தலைவர்கள் என்ற கௌரவம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.






இது என்னவகையான சிறுபான்மையை குளிர்விக்கும் அரசியல் என்பதை ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள்தான் விளக்க வேண்டும். அத்வானி, மோடி போன்ற தேசத் துரோக காவி பயங்கரவாதிகள் மீது சிறு துரும்பைக் கூட தூக்கிப் போட வக்கில்லாத 'காவி மனிதாபிமானி'கள்தான் தற்போது மரண தண்டனை ஒப்புக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து சிறுபான்மை குளிர்விப்பு அரசியல் என்று ஓநாயைப் போல ஓலமிடுகிறார்கள். இவர்கள் அத்வானி, மோடி போன்றோருக்கு மரண தண்டனை இன்று வரை நிறைவேற்றப்படாததை எதிர்த்தும் ஓலமிட்டிருந்தால் நியாயவான்களாக கருத இடமுள்ளது.

இப்படி எரிப்பது எப்போது?

டைம்ஸ் நௌ போன்ற காவி பயங்கரவாத ஊடகங்களோ அல்லது என் டி டி வி போன்ற அரசு பயங்கரவாத ஊடகங்களோ அத்வானி போன்ற காவி பயங்கரவாதிகளுக்கு தமது ஆதரவையே எப்போதும் தருவார்கள். 'காவி பயங்கரவாதம்' என்ற வார்த்தை சரியா தவறா என்று தேச முக்கியத்துவம் வாய்ந்தவற்றை விவாதிப்பவர்கள்தான் இவர்கள். இத்தகைய காவி பயங்கரவாதிகளை பாதுகாக்கும் அவர்களின் பினாமி அரசா தண்டனை தரப் போகிறது?....

அசுரன்

படியுங்கள், பயம் கொள்ளுங்கள்

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...1 -2

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...3_4

முற்றும் கழண்ட டவுசர்!! அடடே ஆர் எஸ் எஸ் அம்மணக்கட்டை!!!

Sunday, August 29, 2010

இவனுங்க அப்பனுங்க எல்லாம் குதிருக்குள்ளே இல்லையாம், அவனுங்களே சொல்றானுங்க!!!

குதிரு 1:
"நான் ஒன்னும் அமெரிக்காவுக்காக வேலை செய்யல... புலீஸ் நம்புங்க.." - மன்மோகன்சிங்

I'm not working for US, PM tells opposition
Aug 26, 2010, 04.06am IST

அவரே சொல்லிட்டாரு அதனால 'உண்மையாத்தான்' இருக்கும் என்று கட்டாயம் எல்லாரும் நம்பிருங்க.

(ஒபமா அய்யா, இப்படி சொல்லித்தான்யா மெயின்டெய்ன் பன்னிட்டுருக்கேன்!!)


குதிரு 2:

வடிவேலு: எனக்கு கோவம் வராது....

அடிக்கிறவன்: வந்தா?

வடிவேலு: அதான் வராதுன்னு சொல்றேன்ல அப்புறம் ஏன்யா அத எதிர்பாக்குறீங்க....

மூத்திர சந்தில் அடிவாங்கி அலும்பு விடும் வடிவேலு கேரக்டர் பேசும் பிரபல வசனம்தான் மேலே உள்ளது. இதே போல பிரதமர் மன்மோகன்சிங்கும் சமீபத்தில் தான் வாங்கிய அடிமேல் அடிகளுக்குப் பிறகு அலும்பினார்.. பிறகு பம்மினார்...

அலும்பல்:
உயிரிழப்பு ஏற்படுத்தாத முறைகளைக் கொண்டு போராட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும் - 'அலும்பு' மன்மோகன்

பம்மல்:
இந்தியாவை போலிஸ்காரங்களை வைச்சி மேய்க்கிறது வரவர சிரமமாப் போய்க்கினேக்கீது - 'வடிவேலு' மன்மோகன்சிங்

காஷ்மீர், வடகிழக்கு, தண்டகாரன்யா போராட்டங்கள், நாடு முழுவதும் பல்வேறு விவசாயிகள் கிளர்ச்சி என திசை திக்கில்லாமல் வகை தொகையாக மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ள மன்மோகன், உதிர்த்த முத்துக்கள்தான் மேலே உள்ளவை. ஆனாலும், ரொம்ப நல்லவன்யா.....

(பிம்பிலிக்கி பிலாப்பி... மாமா பிஸ்கோத்து....)


குதிரு 3:
"காவி பயங்கரவாதம்னு இல்லாததையும், பொல்லாததையும் சொல்லக் கூடாது, திரும்பத் திரும்பச் சொன்னா... வலிக்குது அழுதுறுவேன்" - பாஜக மற்றும் காங்கிரசில் உள்ள ஆர் எஸ் எஸ் அல்லக்கைகள் புலம்பல்.

(காவி பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த உறுப்பினன் ஒருவன்)

(இந்து பயங்கரவாதி இந்திரேஸ் குமார் - ஆர் எஸ் எஸ் தலைவன்)


ஆர் எஸ் எஸ்ல அப்ரண்டிஸா இருந்து குண்டு வைக்கிறது, நாட்டைக் கூட்டிக் கொடுப்பது போன்ற தேசத் துரோக வேலைகளை கத்துக்கிட்டு பிறகு குண்டு வைத்து மாட்டிக் கொண்டுள்ளனர் காவி ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள். இதக் குறிப்பிட்டு பா. சிதம்பரம் இந்தியாவில் காவி பயங்கரவாதம்னு ஒரு புது போக்கு(??) உருவாகியுள்ளதுன்னு சொன்னதுக்குத்தான் இப்படி அழுது மூக்கு வடிச்சிருக்கு காவி கும்பல்.


குதிரு 4:

"விலைவாசி குறைந்து கொண்டே இருப்பது இனி தொடரும், வருட இறுதியில் பணவீக்கம் 6%த்தை அடைந்துவிடும்" - மாண்டேக் சிங் அலுவாலியா.

இத்த இவர் சொன்னது ஜூலை மாசம் (அதுக்கு முந்தின மாசம், அதுக்கும் முந்தின மாசம்னு எல்லா மாசமும் இந்த டேப்ரிக்கார்டரத்தான் அவரு ஓடவிடுவாரு).

இப்படி விலைவாசி ஒரேயடியாக 'குறைந்ததால்' சல்லிசாக கிடைத்த முட்டை, தக்காளிகளை மொத்தமாக அள்ளிக் கொண்டு போய் மாண்டேக் சிங் அலுவாலியாவிற்கு அபிசேஹம் செய்து மகிழ்ந்துள்ளனர் மேற்கு வங்க மாணவர்கள். சிங்கும் சந்தோசமாக ஏற்றுக் கொண்டார் என்று கேள்வி??

அப்புறம் மக்களே.. நாம எப்போ இதே மாதிரி விலைவாசியைக் கொண்டாடப் போறோம்?

(போட்டோவப் பாத்தா சந்தோசமா இருக்குற மாதிரி தெரியலயே...)


(இங்க வைச்சிதாங்க மூச்சுத் திணறத் திணற முட்டையெறிஞ்சாங்க... அவ்....)



குதிரு 5:

(இதோ போட்டோலக் கீதே இதுதாம்பா உலகின் மிகப் பெரிய ஜனநாயகம்)

உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் இந்தியா அப்படின்னு சொல்றதே அப்பன் குதிருக்குள்ள இல்லனு சொல்ற மாதிரிதான் இருக்கும். அதையும் தூக்கி சாப்புடுற மாதிரி ஒன்னு நடந்துருக்கு.

'எங்க வோட்டு மெசின் ரொம்ப ஸ்டிராங்க், முடிஞ்சா யார்னாலும் அத உடைக்க ட்ரை பன்னலாம்னு' போன தேர்தல் முடிஞ்ச உடனே எலக்சன் கமிசன் ஒரு சவால் விட்டது. சரி அதையுந்தான் பாப்போமேனு ஹரி என்ற ஒருவர் வோட்டு மெசின கொடுங்கன்னு கேட்டாக்க, எலக்சன் கமிசன் கொடுக்க மறுத்துடுச்சி. அவர் அங்க இங்க ஆளப் பிடிச்சு ஒரு மெசின எப்படியோ 'ரெடி' பன்னி அத உடைச்சிட்டார். அத்தோட இல்லாம "அய்யா உங்க ஜனநாயகத்த தூக்கி நிறுத்துற வோட்டு மிசினு பூட்டகேசுங்கோ, டுபாக்கூருங்கோ" அப்படின்னு பப்ளிக்கா அறிவிச்சுட்டார். வோட்டு மெசின் டூபாக்கூருனு ஏற்கனவே தெரிஞ்சனாலதான் சவால் விட்டுட்டு அமைதியா கிடந்தது எலக்சன் கமிஷன். இப்போ இந்த 'ஜனநாயக' உண்மையை ஹரி அம்படுத்தினாலும் படுத்தினார், அவரை ஏழரை நாட்டு சனிகளில் ஒன்றான போலீசு பீடை பிடித்துக் கொண்டு படுத்துகிறது. அது மட்டுமா அடுத்ததா நீதிமன்ற பீடையும் பிடித்துக் கொண்டு அவரை சிறைக்கு அனுப்பி வைத்துள்ளது. இது 'ஜனநாயகத்தை' பாதுகாக்க எடுக்கப்பட்ட 'ஜனநாயகமான' நடவடிக்கையாம். பின்ன? எங்கப்பன் குதிருக்குள்ள இல்லன்னு நான் சொல்லுவேன், அது வேற. அதுவே இன்னொருத்தன் வந்து உங்கப்பன் அந்தக் குதிருக்குள்ள இல்லனு 'நாட்டக்' காட்டிக் கொடுத்தான்னா... ங்..கொய்யால சும்மா விட்டுறுவோமா?

நாங்கலே ரொம்ப நாளா இதத்தான் ஜனநாயகம்னு சொல்லி இவிங்கள நம்ப வைச்சுக்கிட்டு இருக்கோம் திடீர்னு வந்து இப்படி அம்பலப்படுத்தினா பிடிச்சு ராடு அடிச்சுர மாட்டோம்? ஜனநாயகம்னா சும்மாவா?

நடுவால சிரிச்சுகினே போஸ் கொடுக்குறாரே, அவருதாம்பா இந்திய ஜனநாயகத்தின் அந்த 'அபாயகரமான' எதிரி!!


அசுரன்

Tuesday, August 24, 2010

இந்திய ஏழைகளும், குழந்தைகளும் மேற்குலகின் கினியாப் பன்றிகள்!!!

தெற்காசியாவில் சீனாவுடன் வல்லரசுப் போட்டியில் இருப்பதாக கருதிக் கொள்ளும் இந்தியா, உகண்டாவுடன் போட்டியிட்டு ஒரு சாதனை படைத்துள்ளது. அமெரிக்க குழந்தைகளுக்கான புதிய மருந்துகளை பரிசோதனை செய்யும் சோதனைச் சாலை எலிகளாக இந்தியாவின் குழந்தைகளும், உகண்டாவின் குழந்தைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளதை சமீபத்திய ஒரு அமெரிக்க அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இவ்வாறு செய்வது தார்மீக ரீதியாக தவறு என்று அந்த அறிக்கை சொல்கிறது(கவனிக்கவும் இந்திய அரசு அப்படி நினைக்கவில்லை).

""M Nabeel Ghayur, a pharmacologist who worked in drug development in Pakistan before joining McMaster University in Hamilton, Ontario, Canada, said conditions are similar in India and Pakistan.

“People actually have blind trust in their doctor in South Asia. They have no idea what drug development is, they have no idea what clinical trials are,” he said. ""


இதே நேரத்தில், உ.பியில் அம்மை தடுப்பூசி இட்டுக் கொண்ட 4 குழந்தைகள் உடனடியாக மரணமடைந்தனர். முன்பு 2008ல் தமிழகத்தில் இதே தடுப்பூசி படுகொலைகளுக்குக் காரணமான இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் நிறுவனம்தான் உ.பி. படுகொலைகளுக்கும் காரணம் என்பது தெரியவந்துள்ளது. இங்கு அரசின் மருத்துவ இன்சூரன்ஸ் என்ற பெயரில் அப்பாவி ஏழைகளின் உடல் கூறுப் போடப்படுவதும், பெண்களின் கருப்பைகள் கூட கொதறப்பட்டுள்ளதும் முன்பு அம்பலமானதையும், பன்றிக் காய்ச்சல் பீதியை பூதகரமாக பரப்பிட ஐ நாவின் சுகாதாரத் துறையின் முக்கியப் பொறுப்புகளில் உள்ள தமது ஆட்களின் மூலம் மருந்துக் கம்பனிகள் வேலை செய்தன என்பது அம்பலமானதும் நினைவில் கொள்ளத்தக்கது.

கினியாப் பன்றி



இந்தியக் குழந்தை:
அண்ணே, பாரின் பன்னி அளவுக்கு நாங்க வொர்த் இல்லையாண்ணே?





இந்தச் சூழலில் மருத்துவத் துறை தனியார்மயம் அப்பாவி மக்களின் வாழ்வில் இழவு கொட்டுவதை விமர்சித்து எழுதப்பட்ட பழைய செய்தி விமர்சனம் ஒன்று இங்கு மறு பதிப்பு செய்யப்படுகிறது. நாட்டைக் கூட்டிக் கொடுத்தாவது வல்லரசாகலாம் என்று பேசுபவர்கள் தமது வீட்டுக் குழந்தைகளை பலி கொடுத்து வல்லரசு லட்சியக்கனவை நனவாக்கிக் கொள்ளட்டும்.

அசுரன்
###########

கினியா பன்றிகளா இந்தியர்கள்?

பார்ப்பனர்களின் கூடாரமாக கொக்கரிக்கும் புது தில்லியைச் சேர்ந்த AIIMS மருத்துவ கல்வி நிலையத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை உபயோகப்படுத்தி சில தகவல்கள் வெளிக் கொணரப்பட்டுள்ளன(Times of India, ஆகஸ்டு 18 முதல் பக்கம்) . கடந்த இரு வருடங்களில் அங்கு 49 குழந்தைகள் இறந்துள்ளனர். சரியாகச் சொன்னால் கொல்லப்பட்டுள்ளனர். பன்னாட்டு கம்பேனிகள் தமது புதிய மருந்துகளை சந்தைப்படுத்துவதற்க்கு முன்பு குரங்கு, பன்றி உள்ளிட்டவற்றின் மீது சோதித்துப் பார்த்து பிறகு கடைசியாக நான்காவது கட்டமாக மனிதர்கள் மீது சோதித்து பார்ப்பார்கள். இது போல மருந்துக்களை பரிசோதனை செய்வதற்க்காக இந்த குழந்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். அந்த மருந்துகளின் தோல்வி 49 குழந்தைகளின் மரணம். ஏழைக் குழந்தைகள்தானே? குப்பைகள் செத்துத் தொலையட்டும். என்ன வந்தது நமக்கு?






மருத்துவம் அதிகமாக தனியார்மயம் செய்யப்பட்டுள்ள நாடு இந்தியா. குறிப்பாக உலகமயத்திற்கு பிற்பாடு கொஞ்ச நஞ்ச பொது மருத்துவமும் அழிந்து நாசமாகிவிட்டது. இன்னிலையில் விலை அதிகமான மருத்துவம் செய்ய வசதியின்றி வக்கற்று அலையும் இந்திய நோயாளிகள் எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையிலேதான் உள்ளனர். ஒன்றும் செய்ய இயலாமல் நோயுடன் இருப்பதைவிட இலவசமாக கொடுக்கப்படும் இந்த பரிசோதனை மருந்தை எடுத்துக் கொண்டால் என்ன ஆகிவிடப் போகிறது என்பதுதான் அவர்களின் நிலைமை.

எப்படி இந்தியாவின் உழைப்பாளர்களும், இந்திய மூளைகளும், இந்திய வளங்களும் எடுத்துக் கொள்ள ஆளின்றி சந்தையில் மலிவு விலைக்கு கிடைக்கச் செய்யப்படுவதன் காரணமாகவே குறை கூலி பிரதேசமாக இந்தியா அறியப்பட்டு ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாகியுள்ளதோ - அது நியாயப்படுத்தப்படுகிறதோ - அதே போல மருத்துவ பரிசோதனை சாலைகளில் பயன்படும் குறைந்த விலை கினியா பன்றிகளாக இந்திய நோயாளிகள் பன்னாட்டு கம்பேனிகளால் பயன்படுத்தப்படுகின்றனர். மருந்தையும் மருத்துவத்தையும் எட்டாக்கனியாக்கியதன் மூலம் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். இலவசமாக மருந்து கொடுக்கும் தேவதூதர்கள் என்ற பட்டம் வேறு கினியா பன்றிகளிடமிருந்து கிடைக்கும் போது கேட்க்கவா வேண்டும்?

இங்கு பரிசோதனை செய்வது சட்டரீதியாகவும் சிக்கலலில்லதாது, 60% வரை குறைந்த செலவில் செய்ய முடிகிறது என்பதே இந்தியாவை நோக்கி பன்னாட்டு பரமாத்மாக்கள் படையெடுக்கக் காரணம். இதற்கு வசதியாக இரு வருடங்களுக்கு முன்பு சட்டரீதியான சிக்கல்களை எல்லாம் சரி செய்தது இந்திய அரசு. குறைந்த பட்ச பாதுகாப்புகளாக உறுதி செய்யப்பட்டிருந்தவை எல்லாம் குப்பையில் கடாசப்பட்டன, எப்படி அந்த குழந்தைகள் சோதனைச்சாலை பன்றிகளாக கடாசப்பட்டனரோ அப்படி. சர்வதேச காப்புரிமைச் சட்டத்தின் பெயரில் இந்தியாவில் விலை குறைவாக கிடைத்த மருந்துகள் எல்லாம் ராக்கேட் விலைக்கு மாற்றப்பட்டன. கக்கூஸ் போனால் கூட சேவை வரி விதிக்கும் பா சிதம்பரம் இந்தியர்களை கினியா பன்றியாக்கினால் சேவை வரி கிடையாது என்று அறிவித்தார். இதோ கினியா பன்றிகளின் சாவு இன்று வெளி வந்துள்ளது. இது ஒரு இடம் மட்டுமே இன்னும் பல இடங்களில் பல மருந்துகள். தமிழகத்தில் கோவையிலும் கூட குறிப்பான சில மருந்துகள் பரிசோதனை செய்யப்படும் செய்தி முன்பு படித்த ஞாபகம்.

இந்த சோதனைகள் நேர்மையாக செய்யப்படுமா என்பதை கட்டுப்படுத்துவதற்க்கு எந்த சட்டமும் கிடையாது. எந்த அரசு அமைப்போ அல்லது வேறு ஏதேனுமோ கிடையாது. படிக்கத் தெரியாத, படித்தும் பாமரர்களாக உலாவும் பெரும்பான்மை இந்தியனிடம் ஒரு பேப்பரை நீட்டி அதில் கையெழுத்திடச் சொல்லிவிட்டு இந்த மருத்துவ பரிசோதனை அயோக்கியத்தனம் செய்யப்படுகிறது. சட்டப்படி எல்லாம் சரிதான். ஏழை இந்தியக் குழந்தை கினியா பன்றியாக கொல்லப்படுவதும்கூட சட்டப்படி சரிதான். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதற்க்கு காசு கூட கொடுக்கப்படுவதில்லை. இது இலவசம். இலவசமாக கொடுத்தால் இந்தியன் தொலைக்காட்சி பெட்டியிலிருந்து, பினாயில் வரை வாங்கி வைத்துக் கொண்டு பதிலுக்கு தனது உயிரையே நன்றிக்கடனாக தருவானல்லவா? சுதந்திரத்தையே இலவசமாக கத்தியின்றி ரத்தமின்றி ஆங்கிலேயரிடமிருந்து காந்தி தாத்தா வாங்கி தந்தாரல்லவா?


நாய்க் கூட குரல் கொடுக்க ஒரு மேனாக இருக்கு? எங்களுக்கு?

நாயின் கஸ்டங்களை புரிந்து கொண்டு நாய்களைக் கொல்லாதே என்று போராடினார் பாஜகவைச் சேர்ந்த நாய்க்கு பிறந்த மேனகா காந்தி. ஆடு, குதிரைகளையும் கூட பரிசோதனை என்ற பெயரில் கொல்லாதே என்று போராடினார் அந்த மேனகா காந்தி. அவர் பாஜக ஆட்சியில் அமைச்சராக இருந்த போதுதான் நாய்க்கடி மருந்து தயாரிப்பு நிறுவனமான கிங்ஸ் இன்ஸ்டியுட் மேற்சொன்ன காரணங்களைக் காட்டி முடக்கப்பட்டது. ஒரு பக்கம் நாய்க்கடி மருந்து தயாரிப்பை மிருகாபிமானத்தின் பெயரிலும், காப்புரிமையின் பெயரிலும் முடக்கியதுடன், இன்னொரு பக்கம் நாய்களை கொல்வதையும் நிறுத்தினர். விளைவு பெரு நகரங்களில் கினியா பன்றிகள்..... மன்னிக்கவும் ஏழை உழைக்கும் மக்களின் குழந்தைகள் நாய்களால் கொல்லப்படுகின்றனர்.

இன்னொரு பக்கம் கினியா பன்றிகள்... மீண்டும் மன்னிக்கவும்.. ஏழை உழைக்கும் மக்களின் குழந்தைகள் மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் ஏகாதிபத்திய வெறி நாய்களால் கொல்லப்படுகின்றனர். ஆடு, குதிரைகளை மருத்துவ பரிசோதனையிலிருந்து காப்பாற்றிய மேனாகா காந்தி வகையாறாக்களும் வரவில்லை, பசு மாட்டுக்காக கலவரங்கள் நடத்தும் சங் பரிவாரங்களோ அல்லது குழந்தைகளுக்காகவே இன்று வரை தனது சிகை அலங்காரத்தை மாற்றாமல் வைத்து இருக்கும் அரசவை முன்னாள் கோமாளி அப்துல் கலாமுமோ வரவில்லை. மதம் பிடித்த யானைகள், சிக்கன் பிரியானியில் வெந்து சாகும் சிக்கன், ஈ, கொசு இவற்றுக்கு எல்லாம் உச்சு கொட்டி மனஉளைச்சலுக்காளாகும் மென்மையான இதயம் படைத்த மனிதாபிமானத்தின் இலக்கண புத்திரர்கள் இது போன்ற கினியா பன்றிகளின் சாவுக்கு என்ன கொட்டுவார்கள் என்று தெரியவில்லை.

மறுகாலனியாதிக்கம் எதைத்தான் விட்டு வைத்துள்ளது? குறைந்த கூலிக்கு உழைப்பு சக்தி வேண்டும் என்பதற்க்காக விவசாயம் சாகடிக்கப்பட்டு ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை, குறைந்த கூலிக்கு இந்திய மூளைகள் என்பதற்க்காக தன்மானத்தை அடகுவைத்த தற்குறிகளின் தேசம், கூந்தலை விற்று பிழைக்கின்றனர் ஆந்திர பெண்கள், மானத்தை விற்றும்.., சுமங்கலி திட்டத்தில் நவீன கொத்தடிமைகள் கல்யாண கனவுகளுடன், நாய்கள் சுதந்திரமாக அலைந்து தெருக்களில் குதறி தள்ள குழந்தைகளோ கொத்தடிமைகளாக கட்டுமான கூடங்களில், பிரவச வேதனையையும் கூட அவுட் சோர்ஸ் செய்து இந்திய பெண்களை வாடகைத் தாய்களாக்கி விட்டது.... பாரத மாத கி ஜெய். இதோ நமது நோய்களையும், நோயாளிகளையும் கூட அவுட் சோர்ஸ் செய்துவிட்டனர். இது பிணங்களின் நாடாக மாறினால் குறைந்த விலை சுடுகாட்டு கூடமாகவும் இந்திய அவுட் சோர்ஸ் செய்யப்படும். ஏனேனில் இந்தியாவுக்கு அவுட் சோர்ஸ் செய்யும் சுதந்திரம் 1947 ஆகஸ்டு 15ல் இலவசமாக கொடுக்கப்பட்டது. வந்தே மாதரம்......

செய்திரசம்


தொடர்புள்ள கட்டுரைகள்:

மருந்துப் பரிசோதனை: சோதனைச்சாலை எலிகளாக மாற்றப்படும் ஏழைகள்

தெருநாயின் உயிரைவிட மக்களின் உயிர் மலிவானதா?

Clinical Trials in India: ethical concerns

Outsourcing Drugs: Human Guinea Pigs

A Nation of Guinea Pigs

மருந்துப் பரிசோதனை: சோதனைச்சாலை எலிகளாக மாற்றப்படும் ஏழைகள்

பிஞ்சென்றும் பாராது இலாபவெறி

பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் வேட்டைக் காடாகிறது இந்தியா!

பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் வேட்டைக் காடாகிறது இந்தியா!

சுகாதாரத்துறை தனியார்மயம் - தாய்மையை கருவறுக்கும் அவலம்

Related Posts with Thumbnails