TerrorisminFocus

Tuesday, October 23, 2007

பய பீதியில் மோடியும், ஜெயலலிதாவும் - பாசிசம்=கோழைத்தனம்!

பாசிஸ்டுகளின் இயல்பே உண்மையை கண்டால் பயந்து அஞ்சி ஓடி ஒளிந்து கொள்வதுதான். பாருங்களேன் October 2004 ல் ஒரு பாசிஸ்டை ஒரு பொது மேடையில் நிறுத்தி உண்மைகளை கேட்ட பொழுது அது அஞ்சி நடுங்கி மேடையிலிருந்து பயந்து ஓடியது. இ஧தா அதே Octoberல் 2007ல் இன்னொரு பாசிஸ்டை வேறொரு மேடையில் நிறுத்தி உண்மைகளை கேட்ட பொழுதும் அஞ்சி நடுங்கி நா வறண்டு தண்ணீர் தாகமெடுக்க பதறி ஓடியுள்ளது.

இங்கு தமிழ்மணத்திலும், வேறு பல்வேறு இடங்களிலும், சம்பவங்களிலும் கூட பாசிஸ்டுகளின் முன்னால் மறுக்க இயலா உண்மைகளை வைத்த போதெல்லாம் பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடி ஒளிந்ததை பார்த்த அனுபவம் நம்மில் பலருக்கு இருந்திருக்கும். இவர்கள் அனைவருமே பார்ப்பன பயங்கரவாத பாசிஸ்டுகள்.

அந்த அக்டோபர் சம்பவங்களை கீழே பார்ப்போம்.


October 2007-ல் ஒரு பார்ப்பன பயங்கரவாத பாசிஸ்டு - மோடி:

CNN IBN சேனலில் Devilஒs Advocate என்ற நிகழ்ச்சியில்(கலைஞர் கருணாநிதி இவருக்கு முன்பாக இதில் தோன்றியவர். அவர் அஞ்சி நடுங்கி ஓடி விடவில்லை) மோடியை கரன் தப்பார் என்பவர் பேட்டியெடுத்தார். பாசிஸ்டு மோடியிடம் கேட்க்கப்பட்டதெல்லாம் உண்மைகள் குறித்த ரொம்ப ரொம்ப சாதாரணமான கேள்விகள் மட்டுமே. அதற்க்கு பதிலளிக்க பயந்த அந்த கோழை பின்வருமாறு கூறி ஓடி விட்டான். அவர்களிடம் கேட்க்க தகுந்த நியாயமான கேள்விகளை கேட்டால் நெஞ்சு வெடித்து மேடையிலேயே மரணித்துவிடுவார்கள் போல...


KT: Can I point out to you that in September 2003 the Supreme Court said that they had lost faith in the Gujarat government? In April 2004 the Chief Justice of the Supreme Court said that you were like a modern day Nero who looks the other side when helpless children and innocent women were being burnt. The Supreme Court seems to have a problem with you.

Modi: I have a small request to make. Please go through the SC judgment. If there is anything in writing, I ll be happy to know everything.


KT: There was nothing in writing. You are right. It was an observation.

Modi: If it is in the judgment then Ill be happy to give you the answer.


KT: But do you mean a criticism by the Chief Justice in court doesnt matter?

Modi: Its a simple request. Please go through the court judgment. Hand out the sentence you are quoting and let the people know it.

KT: Ok. In August 2004 the Supreme Court reopened some 2,100 cases out of a total of around 4600 almost 40 per cent, and they did so because they believed that justice hadnt happened in Gujarat.

Modi: Ill be happy. Ultimately the court of law will take the judgment.


KT: Ill tell you what the problem is. Even five years after the Gujarat killings of 2002, the ghost of Godhra still haunts you. Why have you not done more to allay that ghost?

Modi: This I give it to the mediapersons like Karan Thapar. Let them enjoy.


KT: Can I suggest something to you?

Modi: I have no problem.


KT: Why cant you say that you regret the killings that happened? Why cant you say that may be the government should have done more to protect Muslims?

Modi: What I had to say I have said at that time, and you can find out my statements.


KT: Just say it again.

Modi: Not necessary that I have to talk about, in 2007, everything you want to talk about.


KT: But by not saying it again, by not letting people hear the message repeatedly you are allowing an image contrary to the interest of Gujarat to continue. Its in your hands to change it.

(Modi takes mike off)

Modi: Ill have to rest. I need some water.

Paani (water).

Modi: Dosti bani rahe bas (Friendship should be maintained, thatஒs all). Iஒll be happy. You came here. I am happy and thankful to you. I cant do this interview. Itஒs ok your things are. Apne ideas hain aap bolte rahiye aap karte rahiye (These are your ideas, you keep talking, keep doing). 3-4 questions Ive already enjoyed. Nahin please.


KT: But Modi saab...

Modi: Nahin, please Karan.


KT: But Modi saab.

Modi: Karan dekho main dostana sambhand rakhna chahta hoon, aap usko koshish kariye (Karan, I want to maintain friendly relations. You make efforts towards that).


KT: Mujhe ek cheez samjhayee sir. I am not talking about doing anything wrong. I am saying why cant you correct your image?

Modi: This is not the time. Uske liye aap mujhe 2002 mein mile hote, 2003 mein mile hote mein sab kar leta (for that, you should have met me in 2002, you should have met me in 2003, I would have done all that).



Thanks: The Hindu



தேசிய நாயகன் மோடி தேசிய காமெடியனாக மாறியதற்க்கு அவனது பாசிஸ இயல்பு தவிர வேறொன்றும் காரணமில்லை. உலகப் புகழ்பெற்ற பாசிஸ்டு ஹிட்லர் அவன் ஹீரோவாக இருந்த காலத்திலேயே காமெடியனாக சித்தரிக்க (The Great Dictator) முடிந்ததற்க்கு சார்லி சாப்ளினின் திறமை மட்டும் காரணமல்ல. அவன்(ஹிட்லர்) பாசிஸ்டு என்பதும் சேர்ந்துதான் அங்கே காமெடிக்கு வலு சேர்க்கிறது. பாசிஸ்டுகள் கோழைகளாக இருப்பது இயங்கியலின் விதி. பயப் பீதியில் இருக்கும் முதலாளித்துவத்தின் கடைசிப் புகலிடம் பாசிசம். அதன஡ல் கோழைத்தனம் என்பது அதன் அடிப்படை இயல்பு.

October 2004-ல் ஒரு பார்ப்பன பயங்கரவாத பாசிஸ்டு - ஜெயலலிதா:

இதே போல அக்டோ பர் 2004ல் ஜெயலலிதா என்ற பாசிஸ்டை மேடையில் உட்கார வைத்து சில சாதாரண கேள்விகள் கேட்டதற்க்கு அது பின்வருமாறு பதில் சொல்லி ஓடி விட்டது.
(http://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/09/040930_jayainterview.shtml)


KT: Except for the fact that many people felt, not just the press this time, but the court was actually saying that legally you were innocent but morally you had a case to answer at least to yourself personally.

JJ: I told you I do not comment on any judgment of the Supreme Court, whether the judgment involves me personally or any other matter of public importance. I never have commented on any judgment of the Supreme Court, I will not do so.


KT: You are a very tough person, Chief Minister.

JJ: People like you have made me so.

KT: You said that you were misunderstood.

JJ: Yes.

KT: Do you think that you are badly treated by the press?

JJ: I do not wish to say anything more on this. Anyway your interview is not doing anything to help matters.

KT: My aim, Chief Minister, was to get to the core of the misunderstanding. You said that the press.

JJ: Your aim seems to have been to put as many unpleasant questions as possible and try to provoke me.

KT: Not to provoke you but to put to you the questions that have been discussed for the last three years and which in many ways may be responsible for the electoral adversityஸ

JJ: Havent you asked all of your questions? Have you got anything more to ask?

KT: I have come very close to the end of this interview, I have only one last question. Are you
confident that you can see your electoral low point over with, and that you will win in 2006?

JJ: Wait and see. I told you already I dont believe in astrology. I cant predict what will happen in the next elections but you will be around I suppose. Wait and see what happens.

KT: Is that a yes, you will win?

JJ: I said wait and see.

KT: Chief Minister, a pleasure talking to you on HARDtalk India.

JJ: I must say it wasnt a pleasure talking to you. Namaste

சாதாரண கேள்விகள் கேட்டால் அது இவர்களை தூண்டிவிடுகிறதாம். இவர்கள் சொல்லும் பொய்களை நம்பும் வெறியேற்றப்பட்ட கூட்டங்களில் பேசி பழகி விட்டார்கள் அல்லவா அதனால்தான் வித்தியாசமாக ஓரளவு சொந்த புத்தியுள்ளவர்கள் மத்தியில் பேசுவதற்க்கு இவர்களால் இயலவில்லை. இப்படி பீதி கொண்டு பயந்து ஓடுவதற்க்கு ஒரு சொறிநாயாக பிறந்திருக்கலாம். அல்லது ஒரு பன்றியாய் பிறந்து மலத்தை தின்று உயிர் வாழ்ந்திருக்கலாம். மானங்கெட்ட பொழப்பு.

அரசு இயந்திரத்தின் பலத்தில் நின்று கொண்டு அடாத ஆட்டம் ஆடும் இது போன்ற பாசிஸ்டுகளை வீதிகளில் சந்தித்து கேள்விகளாலேயே கொன்று விடலாம். அவ்வளவுதான் இவர்கள். ஒரு கரப்பான் பூச்சியை ஒத்ததோரு வாழ்க்கை, மன இயல்பு.

அசுரன்

Related Article:

கரண் தாப்பரிடம் இருந்து தப்பியோடிய மோடி: சீழ்ப் பிடித்து நாறும் இந்துத்துவ முகம்

Friday, October 19, 2007

மாசி என்பவர் ஒரு பொய்யரா?

மாசி(Ma. Sivakumar) என்பவர் பொய்யரா அல்லது காந்தியவாதியா? என்று எனக்கு சந்தேகம் வந்ததில்லை. ஏனேனில் இந்த இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் பெரும்பாலும் இருப்பதில்லை. சமீபத்தில் மாசியினுடைய பொய்கள் இமாலயத்தை விஞ்சி செல்கின்றன.

மாசி சொல்கிறார் இந்தியா ஒரு சோசலிச நாடாக இருந்தது என்று. மாசி சொல்கிறார் கம்யுனிஸ்டுகள் மொட்டையாக பதில் சொல்லி தப்பிக்கிறார்கள் என்று.

இந்தியா ஒரு சோசலிச நாடாக இருந்ததா? அப்படி எந்த காலத்திலும் இருந்ததில்லை. ஆனாலும் கூட இன்றைய உலகமய பொருளாதாரத்தால் வளப்பமுறும் ஒரு சிறுபான்மை மக்கள் விரோத கும்பல் மட்டுமே இப்படி ஒரு பொய்யை முன் வைப்பதன் மூலம் உலகமயத்திற்க்கு புனித வட்டம் கட்டுகின்றனர்(மாசி எந்த கும்பல் என்பதை அவரே முடிவு செய்து கொள்ளட்டும்).

1947 போலி சுதந்திரத்திற்க்குப் பிறகு இந்தியா ஏகாதிபத்திய மூலதனத்திலிருந்து விடுதலை பெற்ற சோசலிசா நாடாக இருந்ததா என்றால் இல்லை. மாறாக பிரிட்டன் மற்றும் அமெரிக்க மூலதனங்கள் இங்கு முகமூடி போட்டுக் கொண்டு வேலை செய்தன அவ்வளவுதான் வித்தியாசம். சில போலச் செய்தல் பாணி சோசலிச நடவடிக்கைகள மட்டுமே இவர்கள் இந்தியாவை சோசலிச நாடு என்று சொல்ல வாய்ப்பளிக்கின்றன(எ-கா: ரேசன் கார்டு, அரசு தொழிற்சாலைகள், கோட்டா உற்பத்தி முறை, பலமான அரசு வங்கிகள் பொது நிறுவனங்கள் etc).

ஆனால் இதே காலகட்டத்தில்தான் பசுமை புரட்சி, வெண்மை புரட்சி என்ற பெயர்களில் ஏகாதிபத்திய நிறுவனங்கள் இங்கு தமது சுரண்டலை விரிவுபடுத்தத் தொடங்கின. யூனியன் கார்பைடு முதல் சுசுகி வரையான நிறுவனங்கள் இந்திய தரகு முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு தமது மூலதன சுரண்டலுக்கு அடித்தளம் அமைத்துக் கொண்டனர். தமது ஆயுதங்களை விற்க்கும் சந்தையாக இந்தியாவை வைத்துக் கொண்டனர். பசுமை புரட்சி என்ற பெயரில் இஸ்ரேல் முதலான நாடுகள் தமது ஆயுத ரசாயனங்களை பூச்சிக் கொல்லி மருந்தாகவும், உரமாகவும் விற்று மண்ணையும், நீரையும் நாசமாக்கினர். பெரிய அணைக்கட்டுகள் உள்ளிட்ட பல்வேறு தே஡ல்விகரமான(தோல்விகரமானது என்று இந்திய அரசே பல்வேறு கட்டங்களில் ஒத்துக் கொண்டுள்ளது) திட்டங்களில் மக்களின் வரிப்பணத்தை முடக்கினர். இதே காலகட்டத்தில்தான் சமூக ஏகாதிபத்தியமான ரஷ்யாவிற்க்கும், அமெரிக்காவிற்க்கும் அல்லக்கை தேசமாக இந்தியா வேலை செய்து கொண்டிருந்தது. ஆனால் தற்போதைய நிலையைப் போல அப்பட்டமாக அடிவருடித்தனம் செய்ய இந்திய அரசாலும் இயலவில்லை, அப்பட்டமாக நாட்டாமைத்தனம் செய்ய அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களாலும் இயலவில்லை என்ற ஒரே காரணம் மட்டுமே 1990 களுக்கு முந்தைய இந்தியாவை சோசலிச இந்தியாவாக கருத ஆதாரம் ஆகி஢விடாது.

இந்தியாவில் அன்னிய மூலதனம் குறித்தும், மாசி உள்ளிட்டவர்கள் பொய்களை அம்பலப்படுத்தவும் கீழே உள்ள கட்டுரை உதவும்: The Transfer of Power: Real or Formal? -- Suniti Kumar Ghosh

சோசலிசம் என்பது தனியுடைமைக்கு எதிரானது (தனியுடைமையை இல்லாதொழிக்கும் வளர்ச்சிப் போக்கு கொண்டது) மாறாக இந்திய஡வில் இவர்கள் இருந்ததாக சொல்லும் சோசலிசம் எந்த காலத்தில் தனியுடைமைக்கு எதிரானதாக இருந்தது? இந்தியாவில் சோசலிசம் இருந்ததாக சொல்லும் இந்த வருடங்களில் டாடா பிர்லா கும்பல்களேல்லாம் ஆணி பிடுங்கிக் கொண்டிருந்தார்களா? காதில் பூ சுற்றுவதற்க்கு ஒரு அளவு வேண்டாம்? ஒரு சிறிய விவசாய சீர்திருத்தம் கூட இந்த காலகட்டத்தில் நடந்து விடவில்லை என்பது ஒன்றே சோசலிசம் என்று இந்தியாவை இவர்கள் சொல்லும் பொய்க்கு ஒரு அத்தாட்சியாகும் (நில உச்ச வரம்பு சட்டமும், நிலங்களை பகிர்ந்து கொடுக்கும் திட்டமும் படு தோல்வி என்பதனை அடுத்தடுத்த ஐந்தாண்டு திட்ட அறிக்கைகளும், வேறு சில ஆய்வறிக்கைகளும் மிகத் தெளிவ஡க எடுத்துரைக்கின்றன. மேலும் விவசாய சீர்திருத்தம், விவசாயத்தில் சோசலிசம் என்ற பொய்களின் அவலம் விவசாயத்தின் தொடர் ஧தால்விகளின் மூலம் உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரியும் ஒரு உண்மை ஆகும்).

இந்தியாவில் உலகமயத்திற்க்கு முன்பு இருந்தது சோசலிச பொருளாதாரம் இல்லையெனில் அது எவ்வகையில் தற்போதைய பொருளாத஡ரத்துடன் மாறுபட்டது? இந்திய சிறு மூலதனத்தை சேகரமாக்கும் ஒரு வளர்ச்சிக் கட்டமாகவும், ஏகாதிபத்தியம் தற்காப்பு நிலையிலிருந்த பொழுது தனது இருப்பை பாதுகாக்க பயன்படுத்திய தந்திரமாகவுமே 1947க்கு பிறகான காலகட்டம் உள்ளது. மேலும் தரகு மூலதனத்தை (டாடா பிர்லா ரிலையன்ஸ் கும்பல்) வளப்படுத்துவதும், தேசிய முதலாளித்துவத்தை தேவைப்படுகின்ற அளவு வளர்த்து விடுவதும஡ன ஒரு போக்கு கொண்டதாகவே இந்த காலகட்டம் முழுவதும் இருக்கிறது. எந்த வகையிலும் சோசலிசம் என்று சொல்லிக் கொள்வதற்க்கான அடிப்படையில்லாத ஒரு பொருளாதார அமைப்பை சோசலிசம் என்று பொய்யாக சொல்வதற்க்கு மாசிக்கு சில தேவைகள் இருக்கலாம்(இருக்கலாம்..). சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நியாயப்படுத்துவதும், அதனை எதிர்ப்பவர்களை அறிவற்றவர்கள் என்பதாக கூற கருத்து அடிப்படைகளை உருவாக்குவதும், சிபொமாவின் கேடுகளுக்கு புனித வட்டம் கட்டவும் என்று பல காரணங்கள் இருக்கலாம்(இருக்கலாம்...).

சீனாவில் சிபொமா ஒரு தோல்வி என்பதை வலியுறுத்தும் பின்வரும் கட்டுரைக்களுக்கு அப்படியே மாசி விளக்க்ம கொடுத்தால் இன்னும் சிறப்பு. சீனாவில் சிபொமா கொத்தடிமை கூடாரமாக இருப்பதை அம்பலப்படுத்தி நாம் மட்டும் கட்டுரை எழுதியதாக் யாரும் எண்ணிவிட வேண்டாம். நண்பர் பத்ரி அவர்கள் கூட சிபொமா பற்றி தமிழ்மணத்தில் விவாதம் பொறி பறந்து கொண்டிருந்த பொழுது சீனாவில் அது தோல்வியடைந்த இந்த அம்சம் குறித்து கட்டுரை எழுதி கேள்வி எழுப்பியிருந்தார். சீனாவில் உலகமயத்திற்க்கு பிறகு மக்களின் போராட்டம் பல மடங்கு அதிகரித்துள்ளது என்று சீன அரசின் அறிக்கையே ஒத்துக் கொண்டுள்ளது. இத்தனைக்கும் சீனாவில் மொத்தமே 6 சிபொமாக்களோ என்னவோதான் உள்ளன. இந்தியாவில் இது வரை அனுமதி கொடுத்துள்ள சிபொமா எண்ணிக்கை 300க்கும் மேல்.

சிபொமா குறித்த பத்ரியின் கட்டுரை:

சிபொமா குறித்து அசுரனில் வந்த கட்டுரை: நவீன கிழக்கிந்திய கம்பேனிகள் - SEZ! சிபொமா குறித்த எந்தவொரு கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல், அதிலுள்ள மோசடிகள் குறித்து எந்தவொரு கேள்வியும் எழுப்பாமல், சீனாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது இங்கு ஏன் முடியவில்லை என்று மட்டும் ஆத
ங்கத்துடன் கேள்வி கேட்டுள்ளார் மாசி. ரொம்ப நோண்டி அவரிடம் கேள்விகள் கேட்டால் நான் ஏங்க அசுரன் அப்படி கேக்க போ஧றன் என்பது போல ஏதாவது மழுப்பலான பதில்களை கைவசம் எப்பொழுதும் வைத்திருக்கிறார் மாசி.

இது தவிர்த்து புஜ(புதிய ஜனநாயகம்)வில் சீனாவின் இன்றைய நிலைமைகள் குறித்து கடந்த மூன்று மாதங்களில் சில கட்டுரைகள் வந்தன. அவற்றின் மென்வடிவம் இன்னும் வலையேற்றப்படவில்லை(தமிழ்சர்க்கிள்). அந்த கட்டுரைகளிலும் சீனா உலகமயத்திற்க்கு பிறகு மக்களின் வாழ்க்கைத் தரம் படு பாதாளத்திற்க்கு சென்றுள்ளது குறித்து பல்வேறு தகவல்கள் உள்ளன.

மாசி தனது பதிவில் கம்யுனிஸ்டுகளிடம் அவரது சிபொமா குறித்த அந்த கேள்வியை கேட்டால் ஒரு நாட்டினுடைய அனுபவத்தை அப்படியே இன்னொரு நாட்டுக்கு பொருத்த முடியாது என்ற ஒற்றை பதிலை மட்டும் சொல்வதாக எழுதியுள்ளார்(கதை விட்டுள்ளார்). எந்த கம்யுனிஸ்டிடம் அவர் விவாதித்தார் என்று சொன்னால் வசதியாக இருக்கும். அல்லது இதோ இங்கு ஒரு கம்யுனிஸ்டு காத்துக் கெ஡ண்டிருக்கிறேன், சி.பொ.மா குறித்து விவாதம் செய்ய. உண்மையில் மாசிதான் எந்தவொரு விவாதத்திலும் தரவு, தர்க்க ரிதியாக ஸ்திரமாக வாதிடாமல் நழுவும் போக்கு கொண்டவர். ஒரு கருத்து சர்வாதிகாரியாக திரும்ப திரும்ப எந்த ஒரு தர்க்க அடிப்படையுமின்றி ஒரே
கருத்தை முன் வைத்து வாதிடும் போக்கு கொண்டவர் அவர். இதனை குறிப்பிட்டு அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களும், அவருடனான எமது முந்தைய விவாதங்களும் இதற்க்கு சாட்சியாக எமது தளத்திலும், அவரது தளத்தில் சில கட்டுரைகளாக கிடக்கின்றன (காந்தி மற்றும் அஹிம்ஸை குறித்தான கட்டுரைகள்).

இது தவிர்த்து அடுக்கடுக்காக பல பொய்களை சொல்லிச் செல்கிறார் மாசி. இந்திய நாடாளுமன்றத்தின் சிறப்பாம், ஜனநாயகமாம்... அதாவது சிபொமா விசயத்தில் மக்களுக்கும் அரசுக்கும் நடந்த மோதலுக்கு காரணம் இந்த அமைப்பை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்தானே தவிர்த்து மற்றபடி இந்த அமைப்பு ஜனநாயகமாகவே உள்ளது என்கிறார் மாசி. அது சரி மாசி.. சிபொமாக்கள் வருவது நின்றுவிட்டதா என்ன? மக்களின் குரல் துப்பாக்கி குண்டில் கறைந்தது மட்டுமே நடந்துள்ளது. மற்றபடி நந்திகிராமிலும், கலிங்காநகரிலும் பன்னாட்டு மூலதனம் பதுங்கு குழியில் பயந்து ஒளிந்திருப்பதிற்க்கு காரணம் மாசி சிலாகிக்கும் போலி ஜனநாயக அமைப்பு அல்ல மாற஡க அந்த குறிப்பிட்ட பகுதி மக்களின் போராட்டம் மட்டுமே காரணம். இந்த போராட்ட உணர்வும் தியாகமும் பிரிட்டிஸ் ஆட்சி செய்த
பொழுதும் இருந்த ஒன்றுதான். உடனே பிரிட்டிஸ் அரசின் ஜனநாயக சிறப்பே சிறப்பு என்று மாசி பதிவு போட்டாலும் போடுவார். அவரது நோக்கம் தனது வர்க்க நலனுக்கேற்ற சமூக அமைப்புக்கு புனிதம் பிம்பம் கட்டும் வேலை. இதே இடத்தில் சீனா குறித்த தனது அறியாமையையும் முன் வைக்கீறார் மாசி. சீனாவில் உலகமயத்திற்க்கு பிறகு மக்களின் போராட்டங்கள் பல மடங்கு அதிகரித்து விட்டன. அங்கும் பிரச்சினைகள் கருக் கொண்டு வளர ஆரம்பித்து விட்டன என்ற உண்மை எந்தளவுக்கு அவருக்கு தெரியும் என்று நமக்கு தெரியவில்லை. குறைந்த பட்சம் சீன அரசின் அதிகாரப்பூர்வ ஆண்டறிக்கைகளை வாசித்தாலே சில தெளிவுகள் கிட்டும் என்று தெரிகிறது.

இந்திய நாடாளுமன்றத்திற்க்கு ஒரு அதிகாரமும் கிடையாது என்பதுதான் உண்மை. எ-காவிற்க்கு 1990 காட்ஸ் ஒப்பந்தமும், தற்போநதய அணு ஆயுத ஒப்பந்தமும் நாடாளுமன்ற ஒப்புதல்(123-agreement - அடிமை ! அடியாள் !! ) இன்றியே நடைமுறைக்கு வந்துள்ளன(இது தவிர்த்து பல்வேறு ஒப்பந்தங்களும் கூட இதே போல). இந்த ஒப்பந்தங்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்கக் கூட நாடாளுமன்றாத்திற்க்கு அதிகாரம் இல்லை என்பது குறித்தாவது மாசிக்கு தெரியுமா? இதுதான் ஜனநாயகம். இவ்வளவுதான் ஜனநாயகம். மாறாக நாடாளுமன்ற அரசியலுக்கு வெளியே மக்கள் செய்துள்ள போராட்டங்களே இந்த அரசை பின்வாங்கச் செய்துள்ளது(சிபொமா முதல் சில்லறை வணிகம் வரை). இப்படிப்பட்ட போலி ஜனநாயகத்தை, நாடாளுமன்ற ரப்பர் ஸ்டாம்பை கேள்வி கேட்டு (அணு அயூத ஒப்பந்தம் சம்பந்தமாக) போடப்பட்ட வழக்கை விசாரிக்கக்கூட எடுக்காமல் நீதிமன்றம தள்ளுபடி செய்து விட்டது. காரணம் கேட்ட பொழுது வந்த பதில்தான் மாசி கட்டியெழுப்பும் புனித போர்வையை கிழிக்கீறது. நீதிமன்றம் சொன்னது: "வழக்கை நிராகரிக்க காரணம் சொல்லும் அவசியம் நீதிமன்றத்திற்க்கு இல்லை. வழக்குகளை எடுப்பதும் நிராகரிப்பதும் நீதிமன்றத்தின் தனிப்பட்ட விருப்பம்(discretion) சார்ந்தது". என்னே உங்கள் ஜனநாயக மான்பு!!! இதே நீதிமன்றம் பார்ப்ப்னியத்திற்க்கு ஆபத்து வந்த ஆதாம் பால பிரச்சினையிலும் சரி, உழைக்கும் மக்களை மாநகரங்களை விட்டு விரட்டியடிப்பது உள்ளிட்ட ஏகாதிபத்திய திட்டங்களிலும் சரி யாரும் கூப்பிடாமலே வந்து தனது அதிகாரத்தை வைத்து மிரட்டியுள்ளது. அரசு என்பது அரசாங்கம் என்பது வெவ்வேறு என்பதாவது மாசிக்கு தெரியுமா என்று தெரியவில்லை. இந்த அரசு தரகு அதிகார வர்க்க அரசு, அரசாங்கம் என்பது அதற்க்கான முகமூடி
அவ்வளவுதான். முகமூடியை மாற்றி/சீர்திருத்தி எந்த பிரயோசனமும் இல்லை.

அப்புறம் அவரது பொய்களிலேயே மிகப் பெரிய பொய் வருகிறது,

//முதலில் நல்ல எண்ணமும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட தலைவர்கள் அரசு கொள்கையை வகுக்கிறார்கள்.//
யாருய்யா இந்த நல்லெண்ணம் கொண்ட ஆத்மாக்கள்.... விவசாயிகள் ஒரு லட்சம் பேர் சாவதை வேடிக்கை பார்த்தவ்ரகளா? அல்லது அவர்கள் சாவுக்கு காரணமான கொள்கைகளை வகுப்பவர்களா? சில்லறை வணிகத்திலும் கூட பன்னாட்டு மூலதனத்தை நுழைத்த அயோக்கிய சிகாமணிகளா? அணு ஆயுத ஒப்பந்தம் முதல் பல்வேறு அடிமை ஒப்பந்தங்களை மக்களிடம் பொய் சொல்லிவிட்டு விமானம் ஏறிப் போய் கள்ளத்தனமாக கையெழுத்து போட்டு வந்தார்களே அவர்களா? வேதாந்த கம்பேனியின் நிர்வாகியாக நேற்று வரை இருந்த பா சிதம்பரமா? அல்லது தான் லீகல் அட்வைசராக வேலை பார்த்த என்ரான் கம்பேனிக்கு தான் நிதிஅமைச்சர் ஆனவுடன் 7000 கோடி ரூபாய் கிடைக்க வழி செய்த பா சிதம்பரமா? கங்கையை கூட்டிக் கொடுத்த வாஜ்பேயியா? ராணுவ ஒப்பந்தம் முதல் அணு ஆயுத ஒப்பந்தம் வரை மக்களிடமும், நாடாளூமன்றத்திடமும் பொய் சொல்லி கையெழுத்திட்டு வந்த மன்மோகன் சிங் உள்ளிட்ட அடிய஡ள் கும்பலா? கேள்வி கேட்க்க கூட பணம் வாங்கிய புண்ணியாத்மாக்களா? ஹவாலா முதல் பல்வேறு கொலை கொள்ளை மாபியா வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 80% மேலான நாடாளுமன்ற உறுப்பினர்களா? அல்லது இத்தனைக்கும் பிறகும் நாடாளுமன்ற மாண்பு காக்கும் சோம்நாத் சேட்டர்ஜியா?

ஏன் மாசி இந்தளவுக்கு தரம்தாழ்ந்து போய்விட்டீர்கள் என்று கேட்க்க மாட்டேன். பூனைக்குட்டி வெளிவந்துவிட்டது என்று வேண்டுமானல் சொல்வேன்.

//நாடாளுமன்றத்தில் பொருளாதார மண்டலம் குறித்த விவாதத்தின் போது எதிர்கட்சிகள் வேறு ஏதாவது தலைப்புச் செய்தியை உருவாக்கும் கலாட்டாவில் இறங்கி மசோதாவை அலசலின்றி நிறைவேற விட்டிருக்கலாம்.//

இப்படி தமது சகோதரர்கள் மீது பலி விழுந்து விடக் கூடாது என்பதற்க்காக யூகங்கள் வேறு. உண்மையில் நாடாளுமன்றத்தில் மாமா வேலை பார்த்துக் கொண்டிருக்கும் யாருக்கும் சிபொமா குறித்து கருத்து வேறுபாடே கிடையாது. அதனால் விவாதமும் தேவைப்படவில்லை. இன்னும் சொன்னால் காட்ஸ் ஒப்பந்தம் முதல் இறக்குமதி சலுகைகள், விவசாய விதை நெல் சீர்திருத்த சட்டம், தண்ணீர் தனியார்மயம் முதலான எந்தவொரு மக்கள் விரோத திட்டமும், உலகமயத் திட்டமும் நாடாளுமன்றத்தில் விவாதம் செய்யப்படவில்லை. செய்ய வேண்டிய தேவை நாடாளுமன்றத்தை அலங்கரிக்கும் மாசியின் ஆதரவு பெற்ற நல்லொழுக்க சீலர்களுக்கும் கிடையாது. அவர்களின் சொந்த சம்பாத்தியம் மற்றும் அதிகார பகிர்வு குறித்த கட்டபஞ்சாயத்து கூடமாகவும், வோட்டு பொறுக்கி சில்லறை நாடக அரங்கமாகவும், அரட்டைமடமாகவுமே இருக்கும் அளவு மட்டுமே அதிகாரம் பெற்ற ஒரு அமைப்பு குறித்துதான் மாசி சிலாகிக்கிறார்.


அசுரன்

Thursday, October 18, 2007

இந்துத்துவம் என்றால் பொய்த்துவம், பித்தலாட்டம், கருங்காலித்தனம் என்று பொருள்!

ந்துத்துவ பயங்கரவாதிகளின் புளூகு மூட்டைகளுக்கு பல்வேறு ஆதாரங்கள் இருக்கின்றன. இங்கு தமிழ்மணத்திலும் கூட நீலகண்டன் போன்ற ஆகாச புளுகர்களும், ஜடாயு போன்ற பொய்யர்களும் பார்ப்பன பயங்கரவாதிகளின் நேர்மையின்மைக்கும், கோழைத்தனத்திற்க்கும் சாட்சியாக கொஞ்ச காலம் இருந்து விட்டு தலைமறைவாக தப்பி ஓடினர். சமீபத்தில் அரசியல் அரங்கை கிடுகிடுக்க வைத்த ஆதாம் பாலம் பிரச்சினையிலும் அவர்களின் பொய்கள் வெகு விமர்சையாகவே அம்பலப்படுத்தப்பட்டன. இது போல வரலாறு நெடுகிலும் இவர்களின் பொய்கள் விரவிக் கிடக்கின்றன. புத்தகங்களை திருத்தி எழுதுவதெல்லா இவர்களின் இன்றைய பண்பாடல்ல. 2000 வருடங்களுக்கு முன்பே அவர்கள் இதனை செய்துள்ளனர். துரதிருஷ்டவசமாக நவீன விஞ்ஞான முறைகள் இந்த போலித்தனங்களை, கருங்காலித்தனங்களை இன்று அம்பலப்படுத்திவிடுகின்றது. இதே போல திண்ணை என்ற இந்துத்துவ பன்றிகளின் தொழுவத்தில் பொய் மன்னர் மலர்மன்னனும் அவரது அல்லக்கைகளும்(நீலகண்டன் உள்ளிட்டோர்) சேர்ந்து கட்டிய பொய் மாளிகைகளை தோழர் கற்பக விநாயகம் வீச்சாக அம்பலப்படுத்தி பல்வேறு கட்டுரைகளை எழுதியிருந்தார். அவற்றில் குறிப்பான இரண்டு பொய்கள் குறித்த கட்டுரைகளை இங்கு மறு பிரசூரம் செய்கிறேன். ஒன்று விவேகானந்தர் மண்டபம் குறித்த பொய், மற்றொன்று கோயில் இடிப்பு குறித்த மலர்மன்னனின் பொய் பிரச்சாரம் குறித்து.

*******************

#1)

கே என் பணிக்கர், தனது நூலில், விவேகானந்தர் நினைவு மண்டபம் குறித்து பின்வருமாறு எழுதுகிறார்.

1963ல் விவேகானந்தர் நூற்றாண்டு விழா கொண்டாடும் முகமாய், கன்னியாகுமரியில் காலம் காலமாய் மீனவர்கள் பயன்படுத்தி வந்த பாறையை மண்டபமாக்க முயற்சித்தார்கள். உள்ளூர் மீனவர்கள் அதை எதிர்த்ததால் அன்றைய காங்கிரசு அரசு அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. உடனே இதை அகில இந்தியப் பிரச்சினையாக ஆக்கினர். 235 எம் பிக்களிடம் இதை தேசியத்தலைவருக்கான மண்டபம் எனும் போர்வையில் கையெழுத்து வாங்கி, பார்லிமெண்டில் பிரச்சினை எழுப்பினர். அப்போது ஆர் வெங்கட்டராமன் போன்ற இந்துத்துவ ஆதரவு காங்கிரசு தலைவர்கள் மாநில அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்து, இம்மண்டப வேலைக்கு அனுமதி வாங்கித் தந்தனர்.

ஆர் எஸ் எஸ் தரும் விவேகாநந்தர் மண்டபம் சாட்சியம்:

****

ஓர் உள்ளூர் கமிட்டியே, இந்நினைவு மண்டபத்தைக் கட்ட முயற்சி எடுத்தது என்பது போன்ற தோற்றத்தை, நீல கண்டனின் கட்டுரை ஏற்படுத்த முயல்வதால் அதன் முழு வரலாறையும் சொல்லி விடுவது இப்போதைக்கு நல்லது.

1948ல் காந்தி ஆர் எஸ் எஸ் காரரால் கொல்லப்பட்டார். உடனடியாக அவ்வமைப்பு இந்தியாவெங்கும் தடை செய்யப்பட்டது.

அனைத்துத் தரப்பிலும் ஆர் எஸ் எஸ் வெறுக்கப்பட்டது. பல இடங்களில் காந்தி கொல்லப்பட்ட அன்று அதன் அலுவலகங்கள் மக்களால் தாக்கப்பட்டன. திருப்பூர் நகரில் அதன் அலுவலகம் நொறுக்கப்பட்டு அதன் உறுப்பினர்களும் தாக்குதலுக்குள்ளானார்கள் என்று திருப்பூர் தியாகி ராமசாமி தனது சுய சரிதையில் தெரிவித்துள்ளார். (இவர் 1970 வரை கம்யூனிஸ்ட் கட்சியிலும் பின்னர் காங்கிரசிலும் இருந்த சுதந்திரப் போர் தியாகி ஆவார்). தமிழ் நாட்டில் சுயமரியாதை இயக்கம் வேர் பிடித்து இருந்ததாலும், காந்தி கொலையாலும் ஆர் எஸ் எஸ் ஆல் தமிழகத்தில் 1950களில் நுழையவே முடியவில்லை.இதனை 'தமிழ் நாட்டில் ஆர் எஸ் எஸ் மற்றும் இந்து எழுச்சியின் கதை ' எனும் ஆர் எஸ் எஸ் வெளியீட்டில் அவர்களே '1980 இன் ஆரம்பம் வரை மிகவும் பலவீனமான மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருந்தது ', என ஒப்புக் கொள்கிறார்கள்.

1949ல் ஆர் எஸ் எஸ் சின் மீதான தடை நீக்கப்பட்டது. அதே நூலில் குறிப்பிடப்பட்டுள்ள விசயம் என்ன என்றால் 'சங்கப் பயிற்சிக்குழுக்கள் மீண்டும் பல இடங்களில் தொடங்கப்பட்டன. ஆனால் அவை விரிவடைய முடியவில்லை. பயிற்சிக்குழுக்கள் பரவவில்லை என்றாலும் சங்க சுயம் சேவக்குகள் பிற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.அவை தேசிய நடவடிக்கைகளை முன்னேற வைத்தன.அப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்று, நமது தாய் நாட்டின் தெற்கு முனைக்கு அப்பால் உள்ள கடலில் விவேகானந்தர் நினைவுப்பாறையை நிர்மாணித்ததாகும்.சுவாமி விவேகானந்தர் அலைந்து திரியும் ஒரு சன்னியாசி என்கிற முறையில் கன்னியாகுமரி கோவிலுக்கு வந்தார். பிரார்த்தனை செய்துவிட்டு கடலில் நீந்திப் போய் கோவிலுக்கு முன்பு, கடலுக்கு நடுவில் எழுந்து நிற்கும் ஒரு பெரும்பாறையில் அமர்ந்தார். 1892 டிசம்பர் 25,26,27 ஆகிய மூன்று நாட்கள் தியானம் செய்தார். இந்தப்பாறை விவேகானந்தர் பாறை எனப் பெயரிடப் பட்டது. சுவாமிஜி பிறந்த நூற்றாண்டில் அதாவது 1963ல் அந்தப் பாறையின் மீது அவருக்கு ஒரு நினைவு மண்டபம் கட்டுவது என்னும் யோசனை ஆர் எஸ் எஸ் இன் பிராந்திய பிரச்சாரகர் சிறீ தாதாஜி திதோல்கருக்குத் தோன்றியது. சங்கம் அந்த யோசனையை ஏற்றுக்கொண்டது. விவேகானந்தா பாறை நினைவகக் கமிட்டி என்று ஒரு தனி அமைப்பு அந்த ஆண்டு நிறுவப்பட்டது '.

ஆக, அந்நினைவுச் சின்னம் அவ்வூர் மக்களின் கோரிக்கையே அல்ல. அது ஆர் எஸ் எஸ் ஆல் தீட்டப்பட்ட திட்டம் என்பதை அவர்கள் வெளியிட்ட நூலே தெளிவாகச் சொல்லி விட்டது. நினைவு மண்டபம் பற்றிய யோசனை சொன்னவரும் கன்னியாகுமரி ஆள் மாதிரி இல்லை. பேரை வைத்துப் பார்க்கையில் மராட்டியர் மாதிரித் தெரிகிறது. பாறைக்கு புதியதாக விவேகானந்தர் பெயரைச் சூட்டியதும் ஆர் எஸ் எஸ் தான்.

ஏற்கெனவே இம்மண்ணில் பார்ப்பனீய எதிர்ப்பு நிலவியதால் (இவ்வெதிர்ப்பையும் அந்நூலே ஒப்புக்கொண்டுள்ளது) அவர்கள் பார்ப்பனர் அல்லாதாரான விவேகாநந்தரை முன்னிறுத்தி நுழைய முயன்றனர். அவர் ஏற்கெனவே, சனாதன தர்மத்துள் பார்ப்பனர் அல்லாதாரையும் உள்ளிழுக்கும் வகையில் தர்மத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும் எனப் பிரச்சாரம் செய்தவர்தாம்.

குமரி மாவட்டத்தில் இந்து நாடார்கள் பெரும்பான்மையாகவும், கிறிஸ்தவ நாடார்கள் சிறுபான்மையாகவும், மீனவர்கள் முழுக்க கிறிஸ்தவர்களாகவும் உள்ளனர். இந்து நாடாருக்கும், கிறிஸ்தவ மீனவர்களுக்கும் இடையிலான வேற்றுமைகளை ஊதிப்பெருக்கிக் குளிர்காய நினைத்த சங் பரிவார், அதற்கு உகந்த இடமாய் குமரியைத் தேர்வு செய்தது. சமீப நூற்றாண்டுகளில்தான் குமரியில் கிறிஸ்தவ மதமாற்றம் பெருமளவில் நடந்துள்ளது. எளிதில் அங்கு கிறிஸ்தவர்களுக்கு எதிராய் இந்து மக்களை அணிதிரட்டிவிட முடியும் என்று கணக்குப் போட்டிருந்தது.

இந்தக்காரணங்களால் விவேகானந்தர் பாறை விசயத்தைக் கையில் எடுத்த ஆர் எஸ் எஸ், அதற்கு முன்பிருந்த பாறையின் நிலைமையை வெளிப்படையாய் பேசுவதைத் தவிர்த்தது. குமரி முனையை அங்குள்ள மீனவர்கள் மீன்பிடித்துறைமுகமாய்ப் பல நூற்றாண்டுகள் பயன்படுத்தி வந்துள்ளனர். அங்கிருந்து வெகு அருகாமையிலுள்ள பாறையை மீன்பிடி வலைகளைக் காயவைக்கவும், கடலுக்குள் சென்று விட்டு வரும் மீனவர்கள் உணவருந்தி ஓய்வெடுக்கவும் பயன்படுத்தி வந்தனர். ஆண்டுக்கொருமுறை நடக்கும் சிலுவை வைத்து வழிபடும் 'குருந்தட்டி ' வழிபாட்டை நடத்தி வந்துள்ளனர். இருந்தும் அப்பாறையை அராஜகமாகக் கைப்பற்றி விவேகானந்தர் மண்டபம் அமைக்கும் பணியில் ஆர் எஸ் எஸ் இறங்கியது. ஆர் எஸ் எஸ் இன் அதே நூல் சொல்கிறது -

'ஆர் எஸ் எஸ் இன் ஓய்வு பெற்ற பொதுச்செயலாளர் மானனீய ஏக்நாத்ஜி ராணடேயிடம் அதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் பெரிதும் சிறிதுமாகப் பல பொதுக்கூட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டன. இந்தக் கூட்டங்களில் சுவாமி விவேகானந்தரின் இந்து தேசியக் கருத்துக்கள் பரப்பப்பட்டன. சென்னை கடற்கரையில் ஒரு பெரிய பொதுக்கூட்டம் நடந்தது. சுவாமி சின்மயானந்தாவோடு, குருஜியும் அக்கூட்டத்தில் பேசினார். தமிழ்நாடு சட்ட மேலவைத் தலைவர் ம.பொ.சிவஞானம் அந்தப் பாறையில் ஒரு கல்வெட்டைத் திறந்து வைத்தார். அதில் 1892 இல் சுவாமிஜி அங்கு தியானம் செய்தார் என்ற அறிவிப்பு இருந்தது.அது, உள்ளூர் கிறித்தவ சபையின் தூண்டுதலின் பேரில் உள்ளூர் கிறித்தவ மீனவர்களால் உடைத்து அழிக்கப்பட்டது. அதோடு அங்கு ஒரு சிலுவையும் நிறுவப்பட்டது. பல தலையீடுகள், பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, சுவாமிஜிக்கு ஒரு மாபெரும் நினைவகம் எழுப்புவதற்காக விவேகானந்தா பாறை நினைவகக் கமிட்டியிடம் அந்தப் பாறையை இறுதியாக அரசாங்கம் ஒப்படைத்தது. நாடு முழுவதிலும் உள்ள முழு சங்கமும் இந்த வேலையில் ஈடுபட்டு, மாபெரும் நினைவகம் எழுப்பப்பட்டது. அது இப்பொழுது ஒரு பெருமைக்குரிய, மதிப்பிற்குரிய சுற்றுலா ஈர்ப்பு மையமாக மாறியுள்ளது '.

தென் கோடியில் உள்ள அந்தப் பாறை மீனவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது மட்டுமல்லாமல், வெவ்வேறு பெயர்களில் முக்கால் வாசி கன்னியாகுமரி ஊரே ஆர் எஸ் எஸ் ஆல் ஆக்கிரமிக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தை ஆண்ட பக்தவச்சலமும், டெல்லியை ஆண்ட லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி போன்றோர் நேரடியாகவும், காஞ்சி சங்கராச்சாரி மறைமுகமாகவும் உதவி புரிந்தனர். எதிர்த்த மீனவர்களை கேரளாவில் இருந்து இறக்கிய ஆர் எஸ் எஸ் காரர்களும் தமிழ்நாடு போலீசும் கவனித்துக் கொண்டனர்.

ஆர் எஸ் எஸ் இன் அதே நூல் 'இந்த நினைவகம் செப். 2, 1970இல் புண்ணியாசனை செய்து வைக்கப்பட்டது. இது பிற்காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து எழுச்சிக்கான விதைகளாஇத் தூவிய ஒரு முக்கியத் திட்டமாக அமைந்தது. ஏக்நாத் ராணடே தலைமையில் விவேகானந்தா கேந்திரம் பரிணமிப்பதற்கு விவேகானந்தா பாறை நினைவகம் நிறுவப்பட்டது அடித்தளமாக அமைந்தது. குறிப்பாக தெற்கில் கிறித்தவ மதத்தின் விரிவாக்கம் மற்றும் ஆக்கிரமிப்புகளை எதிர்ப்பதற்குக்கூட இந்தக் கேந்திரம் பங்களித்துள்ளது ' என்று எல்லா விசயங்களையும் புட்டுப் புட்டு வைத்துவிட்டது. இந்து எழுச்சி என இவர்கள் குறிப்பிடுவது மண்டைக்காட்டில் கலவரம் செய்ததைத்தான்.

கடலும், கடலைச்சார்ந்த இடமும் யாருக்கு சொந்தம் ? நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் ஆண்டு அனுபவித்துக் கொண்டு வாழும் மீனவர்களுக்குத்தானே அவை சொந்தமாகும் ? ஓரிரு நாளில் விவேகானந்தர் சென்று அங்கு தங்கி இருந்து விட்ட ஒரே காரணத்துக்காக அப்பாறையை, அம்மக்களிடம் இருந்து கைப்பற்றி விடுவது என்ன நாகரீகம் எனத் தெரியவில்லை ?

உடல் உழைப்பை உதாசீனம் செய்வது/இழிவுபடுத்துவது என்பது காலம் காலமாய் வைதீக சித்தாந்தத்தால் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. அத்தகைய தன்மையையே இச்செயலிலும் காண முடிகிறது. உடலுழைக்கும் மீனவரின் சொத்தை, அவர்களின் அன்றாட செயல்பாட்டில் இருந்து பறித்து மதவெறிப் பிரச்சார நூல்களை விற்கும் இடமாக்கி இருக்கின்றனர்.

கே என் பணிக்கர், தனது நூலில், விவேகானந்தர் நினைவு மண்டபம் குறித்து பின்வருமாறு எழுதுகிறார்.

1963ல் விவேகானந்தர் நூற்றாண்டு விழா கொண்டாடும் முகமாய், கன்னியாகுமரியில் காலம் காலமாய் மீனவர்கள் பயன்படுத்தி வந்த பாறையை மண்டபமாக்க முயற்சித்தார்கள். உள்ளூர் மீனவர்கள் அதை எதிர்த்ததால் அன்றைய காங்கிரசு அரசு அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. உடனே இதை அகில இந்தியப் பிரச்சினையாக ஆக்கினர். 235 எம் பிக்களிடம் இதை தேசியத்தலைவருக்கான மண்டபம் எனும் போர்வையில் கையெழுத்து வாங்கி, பார்லிமெண்டில் பிரச்சினை எழுப்பினர். அப்போது ஆர் வெங்கட்டராமன் போன்ற இந்துத்துவ ஆதரவு காங்கிரசு தலைவர்கள் மாநில அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்து, இம்மண்டப வேலைக்கு அனுமதி வாங்கித் தந்தனர்.

ஆர் எஸ் எஸ் தரும் விவேகாநந்தர் மண்டபம் சாட்சியம்:

****

ஓர் உள்ளூர் கமிட்டியே, இந்நினைவு மண்டபத்தைக் கட்ட முயற்சி எடுத்தது என்பது போன்ற தோற்றத்தை, நீல கண்டனின் கட்டுரை ஏற்படுத்த முயல்வதால் அதன் முழு வரலாறையும் சொல்லி விடுவது இப்போதைக்கு நல்லது.

1948ல் காந்தி ஆர் எஸ் எஸ் காரரால் கொல்லப்பட்டார். உடனடியாக அவ்வமைப்பு இந்தியாவெங்கும் தடை செய்யப்பட்டது.

அனைத்துத் தரப்பிலும் ஆர் எஸ் எஸ் வெறுக்கப்பட்டது. பல இடங்களில் காந்தி கொல்லப்பட்ட அன்று அதன் அலுவலகங்கள் மக்களால் தாக்கப்பட்டன. திருப்பூர் நகரில் அதன் அலுவலகம் நொறுக்கப்பட்டு அதன் உறுப்பினர்களும் தாக்குதலுக்குள்ளானார்கள் என்று திருப்பூர் தியாகி ராமசாமி தனது சுய சரிதையில் தெரிவித்துள்ளார். (இவர் 1970 வரை கம்யூனிஸ்ட் கட்சியிலும் பின்னர் காங்கிரசிலும் இருந்த சுதந்திரப் போர் தியாகி ஆவார்). தமிழ் நாட்டில் சுயமரியாதை இயக்கம் வேர் பிடித்து இருந்ததாலும், காந்தி கொலையாலும் ஆர் எஸ் எஸ் ஆல் தமிழகத்தில் 1950களில் நுழையவே முடியவில்லை.இதனை 'தமிழ் நாட்டில் ஆர் எஸ் எஸ் மற்றும் இந்து எழுச்சியின் கதை ' எனும் ஆர் எஸ் எஸ் வெளியீட்டில் அவர்களே '1980 இன் ஆரம்பம் வரை மிகவும் பலவீனமான மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருந்தது ', என ஒப்புக் கொள்கிறார்கள்.

1949ல் ஆர் எஸ் எஸ் சின் மீதான தடை நீக்கப்பட்டது. அதே நூலில் குறிப்பிடப்பட்டுள்ள விசயம் என்ன என்றால் 'சங்கப் பயிற்சிக்குழுக்கள் மீண்டும் பல இடங்களில் தொடங்கப்பட்டன. ஆனால் அவை விரிவடைய முடியவில்லை. பயிற்சிக்குழுக்கள் பரவவில்லை என்றாலும் சங்க சுயம் சேவக்குகள் பிற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.அவை தேசிய நடவடிக்கைகளை முன்னேற வைத்தன.அப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்று, நமது தாய் நாட்டின் தெற்கு முனைக்கு அப்பால் உள்ள கடலில் விவேகானந்தர் நினைவுப்பாறையை நிர்மாணித்ததாகும்.சுவாமி விவேகானந்தர் அலைந்து திரியும் ஒரு சன்னியாசி என்கிற முறையில் கன்னியாகுமரி கோவிலுக்கு வந்தார். பிரார்த்தனை செய்துவிட்டு கடலில் நீந்திப் போய் கோவிலுக்கு முன்பு, கடலுக்கு நடுவில் எழுந்து நிற்கும் ஒரு பெரும்பாறையில் அமர்ந்தார். 1892 டிசம்பர் 25,26,27 ஆகிய மூன்று நாட்கள் தியானம் செய்தார். இந்தப்பாறை விவேகானந்தர் பாறை எனப் பெயரிடப் பட்டது. சுவாமிஜி பிறந்த நூற்றாண்டில் அதாவது 1963ல் அந்தப் பாறையின் மீது அவருக்கு ஒரு நினைவு மண்டபம் கட்டுவது என்னும் யோசனை ஆர் எஸ் எஸ் இன் பிராந்திய பிரச்சாரகர் சிறீ தாதாஜி திதோல்கருக்குத் தோன்றியது. சங்கம் அந்த யோசனையை ஏற்றுக்கொண்டது. விவேகானந்தா பாறை நினைவகக் கமிட்டி என்று ஒரு தனி அமைப்பு அந்த ஆண்டு நிறுவப்பட்டது '.

ஆக, அந்நினைவுச் சின்னம் அவ்வூர் மக்களின் கோரிக்கையே அல்ல. அது ஆர் எஸ் எஸ் ஆல் தீட்டப்பட்ட திட்டம் என்பதை அவர்கள் வெளியிட்ட நூலே தெளிவாகச் சொல்லி விட்டது. நினைவு மண்டபம் பற்றிய யோசனை சொன்னவரும் கன்னியாகுமரி ஆள் மாதிரி இல்லை. பேரை வைத்துப் பார்க்கையில் மராட்டியர் மாதிரித் தெரிகிறது. பாறைக்கு புதியதாக விவேகானந்தர் பெயரைச் சூட்டியதும் ஆர் எஸ் எஸ் தான்.

ஏற்கெனவே இம்மண்ணில் பார்ப்பனீய எதிர்ப்பு நிலவியதால் (இவ்வெதிர்ப்பையும் அந்நூலே ஒப்புக்கொண்டுள்ளது) அவர்கள் பார்ப்பனர் அல்லாதாரான விவேகாநந்தரை முன்னிறுத்தி நுழைய முயன்றனர். அவர் ஏற்கெனவே, சனாதன தர்மத்துள் பார்ப்பனர் அல்லாதாரையும் உள்ளிழுக்கும் வகையில் தர்மத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும் எனப் பிரச்சாரம் செய்தவர்தாம்.

குமரி மாவட்டத்தில் இந்து நாடார்கள் பெரும்பான்மையாகவும், கிறிஸ்தவ நாடார்கள் சிறுபான்மையாகவும், மீனவர்கள் முழுக்க கிறிஸ்தவர்களாகவும் உள்ளனர். இந்து நாடாருக்கும், கிறிஸ்தவ மீனவர்களுக்கும் இடையிலான வேற்றுமைகளை ஊதிப்பெருக்கிக் குளிர்காய நினைத்த சங் பரிவார், அதற்கு உகந்த இடமாய் குமரியைத் தேர்வு செய்தது. சமீப நூற்றாண்டுகளில்தான் குமரியில் கிறிஸ்தவ மதமாற்றம் பெருமளவில் நடந்துள்ளது. எளிதில் அங்கு கிறிஸ்தவர்களுக்கு எதிராய் இந்து மக்களை அணிதிரட்டிவிட முடியும் என்று கணக்குப் போட்டிருந்தது.

இந்தக்காரணங்களால் விவேகானந்தர் பாறை விசயத்தைக் கையில் எடுத்த ஆர் எஸ் எஸ், அதற்கு முன்பிருந்த பாறையின் நிலைமையை வெளிப்படையாய் பேசுவதைத் தவிர்த்தது. குமரி முனையை அங்குள்ள மீனவர்கள் மீன்பிடித்துறைமுகமாய்ப் பல நூற்றாண்டுகள் பயன்படுத்தி வந்துள்ளனர். அங்கிருந்து வெகு அருகாமையிலுள்ள பாறையை மீன்பிடி வலைகளைக் காயவைக்கவும், கடலுக்குள் சென்று விட்டு வரும் மீனவர்கள் உணவருந்தி ஓய்வெடுக்கவும் பயன்படுத்தி வந்தனர். ஆண்டுக்கொருமுறை நடக்கும் சிலுவை வைத்து வழிபடும் 'குருந்தட்டி ' வழிபாட்டை நடத்தி வந்துள்ளனர். இருந்தும் அப்பாறையை அராஜகமாகக் கைப்பற்றி விவேகானந்தர் மண்டபம் அமைக்கும் பணியில் ஆர் எஸ் எஸ் இறங்கியது. ஆர் எஸ் எஸ் இன் அதே நூல் சொல்கிறது -

'ஆர் எஸ் எஸ் இன் ஓய்வு பெற்ற பொதுச்செயலாளர் மானனீய ஏக்நாத்ஜி ராணடேயிடம் அதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் பெரிதும் சிறிதுமாகப் பல பொதுக்கூட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டன. இந்தக் கூட்டங்களில் சுவாமி விவேகானந்தரின் இந்து தேசியக் கருத்துக்கள் பரப்பப்பட்டன. சென்னை கடற்கரையில் ஒரு பெரிய பொதுக்கூட்டம் நடந்தது. சுவாமி சின்மயானந்தாவோடு, குருஜியும் அக்கூட்டத்தில் பேசினார். தமிழ்நாடு சட்ட மேலவைத் தலைவர் ம.பொ.சிவஞானம் அந்தப் பாறையில் ஒரு கல்வெட்டைத் திறந்து வைத்தார். அதில் 1892 இல் சுவாமிஜி அங்கு தியானம் செய்தார் என்ற அறிவிப்பு இருந்தது.அது, உள்ளூர் கிறித்தவ சபையின் தூண்டுதலின் பேரில் உள்ளூர் கிறித்தவ மீனவர்களால் உடைத்து அழிக்கப்பட்டது. அதோடு அங்கு ஒரு சிலுவையும் நிறுவப்பட்டது. பல தலையீடுகள், பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, சுவாமிஜிக்கு ஒரு மாபெரும் நினைவகம் எழுப்புவதற்காக விவேகானந்தா பாறை நினைவகக் கமிட்டியிடம் அந்தப் பாறையை இறுதியாக அரசாங்கம் ஒப்படைத்தது. நாடு முழுவதிலும் உள்ள முழு சங்கமும் இந்த வேலையில் ஈடுபட்டு, மாபெரும் நினைவகம் எழுப்பப்பட்டது. அது இப்பொழுது ஒரு பெருமைக்குரிய, மதிப்பிற்குரிய சுற்றுலா ஈர்ப்பு மையமாக மாறியுள்ளது '.

தென் கோடியில் உள்ள அந்தப் பாறை மீனவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது மட்டுமல்லாமல், வெவ்வேறு பெயர்களில் முக்கால் வாசி கன்னியாகுமரி ஊரே ஆர் எஸ் எஸ் ஆல் ஆக்கிரமிக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தை ஆண்ட பக்தவச்சலமும், டெல்லியை ஆண்ட லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி போன்றோர் நேரடியாகவும், காஞ்சி சங்கராச்சாரி மறைமுகமாகவும் உதவி புரிந்தனர். எதிர்த்த மீனவர்களை கேரளாவில் இருந்து இறக்கிய ஆர் எஸ் எஸ் காரர்களும் தமிழ்நாடு போலீசும் கவனித்துக் கொண்டனர்.

ஆர் எஸ் எஸ் இன் அதே நூல் 'இந்த நினைவகம் செப். 2, 1970இல் புண்ணியாசனை செய்து வைக்கப்பட்டது. இது பிற்காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து எழுச்சிக்கான விதைகளாஇத் தூவிய ஒரு முக்கியத் திட்டமாக அமைந்தது. ஏக்நாத் ராணடே தலைமையில் விவேகானந்தா கேந்திரம் பரிணமிப்பதற்கு விவேகானந்தா பாறை நினைவகம் நிறுவப்பட்டது அடித்தளமாக அமைந்தது. குறிப்பாக தெற்கில் கிறித்தவ மதத்தின் விரிவாக்கம் மற்றும் ஆக்கிரமிப்புகளை எதிர்ப்பதற்குக்கூட இந்தக் கேந்திரம் பங்களித்துள்ளது ' என்று எல்லா விசயங்களையும் புட்டுப் புட்டு வைத்துவிட்டது. இந்து எழுச்சி என இவர்கள் குறிப்பிடுவது மண்டைக்காட்டில் கலவரம் செய்ததைத்தான்.

கடலும், கடலைச்சார்ந்த இடமும் யாருக்கு சொந்தம் ? நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் ஆண்டு அனுபவித்துக் கொண்டு வாழும் மீனவர்களுக்குத்தானே அவை சொந்தமாகும் ? ஓரிரு நாளில் விவேகானந்தர் சென்று அங்கு தங்கி இருந்து விட்ட ஒரே காரணத்துக்காக அப்பாறையை, அம்மக்களிடம் இருந்து கைப்பற்றி விடுவது என்ன நாகரீகம் எனத் தெரியவில்லை ?

உடல் உழைப்பை உதாசீனம் செய்வது/இழிவுபடுத்துவது என்பது காலம் காலமாய் வைதீக சித்தாந்தத்தால் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. அத்தகைய தன்மையையே இச்செயலிலும் காண முடிகிறது. உடலுழைக்கும் மீனவரின் சொத்தை, அவர்களின் அன்றாட செயல்பாட்டில் இருந்து பறித்து மதவெறிப் பிரச்சார நூல்களை விற்கும் இடமாக்கி இருக்கின்றனர்.

***********************

#2)

உண்மையைத் தேடியலைந்தபோது

புதுச்சேரி வேதபுரீஸ்வரரும், இடிக்கப்பட்ட கோவிலும், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் ,குழந்தைத் திருமணம், தீண்டாமையும் ஆன்மீகமும்

கற்பகவிநாயகம்



புதுச்சேரி வேதபுரீஸ்வரரும், இடிக்கப்பட்ட கோவிலும்

*****************************************

"புதுச்சேரியில் ஈச்வரன் தர்மராஜா கோவில் இடிக்கப்பட்டு மாதா கோவில் கட்டப்பட்டது" என்றும், "புதுவை ஈச்வரன் தர்மராஜர் கோவில் இடிக்கப்பட்டமைக்கு ஆனந்த ரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பில் ஆதாரமுள்ளது. ஈச்வரன் கோவில் இருந்த இடத்தில் கட்டப்பட்ட கன்னி மேரி மாதாகோவிலின் படிக்கட்டுகளாக ஹிந்துக்கள் வணங்கிய விக்கிரகங்கள் பயன்படுத்தப்பட்டன!" ( அந்த நான்கு பேருக்கும் நன்றி! - மலர்மன்னன் மார்ச்சு 24,2006) என்றும் மலர் மன்னன் சொல்கிறார்.

இவர் குறிப்பிடுவது போல் வேதபுரீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது அந்நாட்குறிப்பில் உள்ளது. ஆனால் அதை இடித்துத்தான் மாதா கோவில் கட்டப்பட்டது என்பதற்கு ஆதாரம் இல்லை.

மலர் மன்னன் சொல்வதைப் போன்றே இந்து முன்னணியும் தனது துண்டுப் பிரசுரம் ஒன்றில் "பாண்டிச்சேரி புனித ஜென்மாக்கினி மாதா கோவில், வேதபுரீச்சுரர் ஆலயத்தை இடித்து விட்டு அதன் மீது கட்டப்பட்டது" என்றும், "1748ல் பிரெஞ்சு கவர்னராக பாண்டிச்சேரியில் இருந்த டியூப்ளேதான் இவ்வாறு கட்டினான்" என்றும் ஆனந்த ரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பை ஆதாரம் காட்டி நீட்டி முழங்குகிறது.

உண்மையில் புதுவையில் அப்போது நடந்தது என்ன என்பதை ஆனந்த ரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள் மூலமே அறிய முயல்வோம்.

1748 இல் இடிக்கப்பட்ட வேதபுரீசுவரர் கோவில் அருகில் ஏற்கெனவே கிறிஸ்தவ ஆலயம் இருந்துள்ளது என்பதனை, ஆனந்த ரங்கம் பிள்ளை, கோவில் இடிக்கப்படுவதற்கு முந்தைய ஆண்டில், 1747 ஆம் ஆண்டின் புது வருஷ ஆசி சொல்ல, சம்பா கோவிலுக்கு (கிறித்துவ கோவில்) போனதன் மூலம் நிரூபணமாகிறது.

ஆகவே, ஈச்சுவரன் கோவிலை இடித்துத்தான் கிறித்துவ ஆலயம் எழுப்பப்பட்டது என்பது உண்மை அல்ல.

துயூப்ளே, மத வெறியுடன் ஈச்சுவரன் கோவிலை இடித்தான் எனச் சொல்லவும் ஆதாரம் இல்லை. ஆனால் அக்கோவிலை அப்புறப்படுத்த சில பாதிரிகள் முனைந்தனர் 1747 ஆம் ஆண்டில். அப்போது துயூப்ளேயிடம் பெரும் செல்வாக்கோடு இருந்த பிள்ளையின் மூலம் சிபாரிசு பெற்றுக்கொண்டு வேதபுரீசுவரர் கோவிலை இடிக்க, காரைக்காலை சேர்ந்த கிறித்துவ மதகுரு முனைந்திருக்கிறார். அதற்கு தூதுவராய் வந்த ஆளின் பெயர் - அன்னபூரணய்யர்.

1747 அக்டய்பர் 8ஆம் தேதி அன்னபூரணய்யர், காரைக்கால் கிறித்துவ மதக்குருவின் தூதராக வந்து வேதபுரீச்வரர் கோவிலை இடித்துப் போடச் சொல்லி, ஆனந்த ரங்கம் பிள்ளையிடம் சிபாரிசு செய்ததை அன்னாரின் டைரி பதிவு செய்துள்ளது. ஆனால், அச்செயலுக்கு பிள்ளை ஒப்பவில்லை.

மாறாக அதற்கு முந்தைய ஆண்டு 1746 செப்டம்பர் 22 ஆம் தேதி, "மக்கள், வேதபுரீஸ்வரன் கோவில் மதில் கட்டுவதற்கு உத்தாரம் கேட்டார்கள். அந்த மதில் கட்டுகிறதற்கு மாத்திரம் கட்டளையிட்டால், வெகு தூரம் கீர்த்தியாய் இருக்குமென்று பின்னையும் தோத்திரமான உபசாரமான வார்த்தைகளாய்ச் சொல்லிக் கேட்டவிடத்திலே நல்லது அப்படியே உத்தாரங் கொடுக்கிறோம் என்கிறதாய்ச் சொல்லிக் கொண்டே நடந்து கணக்கு எழுதுகிற அறையிலே போய் விட்டார்கள்" துயூப்ளே என்று பிள்ளையின் சொஸ்த லிகிதக் குறிப்பு சொல்கிறது.

ஜென்மராக்கினி மாதா கோவிலை புதுவை மக்கள் சம்பா கோவில் என்று அழைத்தல் வழக்கம். இதற்கும் இந்து முன்னணி "அது ஆதியிலே சம்பாலீசுவரர் கோவில்தான்" எனக் கரடி விட்டது. "சாம்பவுலோ" என போர்த்துகீசிய பாதிரிகளை அழைக்கும் சொல்லே மருவி "சம்பா" ஆனது என்பது உண்மை.

(இதே மாதிரி, சென்னையை அடுத்த பரங்கி மலையை 'பிருங்கி முனிவர்' மலை எனக் கயிறு திரித்தனர். பரங்கி என்பது ஐரோப்பியரைக் குறிக்கும் சொல் என்பதும், 18ஆம் நூற்றாண்டு முதல் அம்மலையைச் சார்ந்த இடங்களில் ஐரோப்பிய ராணுவம் பாளையம் அடித்திருந்தது என்பதையும் மத வெறியில் மக்கள் யோசிக்கவா போகின்றனர்? )

சம்பா கோவிலை 1692ஆம் ஆண்டில் பிரான்சு தேசத்தின் மன்னன் உதவியுடன் கட்டியுள்ளனர், புதுவை கிறிஸ்தவர்கள். அடுத்த ஆண்டே டச்சுப் படையெடுப்பில், இக்கோவில் இடிக்கப்பட்டது. அதே இடத்தில் டச்சுக்காரர்களின் சர்ச் கட்டப்பட்டது. 1761 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படையெடுப்பில் மீண்டும் அது இடிக்கப்பட்டது. 1791ஆம் ஆண்டு மீண்டும் கட்டப்பட்டதே இப்போதுள்ள சர்ச்.

1746 ஆம் ஆண்டு, வேதபுரீசுவரருக்கு மதில் கட்ட உத்தாரம் கொடுத்த துயூப்ளே, ஏன் இரண்டே ஆண்டுகளில் இடிக்கச் சொன்னான்?

நாட்குறிப்புகளை வாசிக்கையில் 1746 க்கும், 1748க்கும் உள்ள வேறுபாடு புலனாகின்றது. ஆம். 1748 ஆகஸ்ட் மாதவாக்கில், பிரிட்டிஷ் படைகள் புதுச்சேரியைத் தாக்குவதும், பதிலுக்கு பிரெஞ்சுப் படையின் தாக்குதலும் விலாவாரியாகப் பதிவாகியுள்ளது.

அப்போரில் பீரங்கித் தாக்குதல் இருபக்கத்திலும் நடந்துள்ளது. பிரிட்டிசாரின் பீரங்கிக் குண்டு, தீக்குடுவை போன்றவை புதுச்சேரியுள் குறி தவறாது வீழ்ந்து பலர் கை கால் சிதறி மாண்ட செய்திகளும், பிராஞ்சுப் படையின் குண்டுகள் குறி தவறிப் போய் வீழ்வதும் பிள்ளையின் டைரியில் சொல்லப்பட்டுள்ளன.

இப்போரில், குறி பார்த்துக் குண்டு போட பிரிட்டிஷாருக்கு வேதபுரீச்வரர் கோவில் கோபுரம் நன்கு உதவியுள்ளது.

தூரத்தில் இருந்தே பிரெஞ்சுக் கோட்டையைக் கண்டுபிடிக்கும் வகையில் கோபுரம் இருந்ததால் அது பிரிட்டிஷ் படைக்கு உதவியாய் இருந்தது.

பிரிட்டிஷ் படைகளின் பீரங்கிக் குண்டுகளில் இருந்து புதுச்சேரிக் கோட்டையைக் காக்கவே, கோவில் இடிக்கப்பட்டுள்ளது.

இடிக்கப்பட்டது, அப்போரின்போது வேதபுரீசுவரர் கோவில் மட்டும் இல்லை. கிறித்துவக் கோவில் ஒன்றின் மதிலும் இடிக்கப்பட்டது என்பதனை 1748 ஆகஸ்ட் 25ஆம் தேதி பிள்ளையின் டைரி குறிப்பிடுகிறது.

"இன்றைய தினம் மண்வெட்டி கோடாலி வெட்டுக்கத்தி முதலானதுகளெல்லாம் கொடுத்தனுப்பி அரியாங்குப்பத்துப் பாதிரி கோவில் சமீபத்திலே இருக்கிற மரங்களை எல்லாம் வெட்டித் தள்ளிப் போடச்சொல்லியும் கோவில் மதிலை இடிக்கச் சொல்லியும் கோவிலிலே நானூறு சிப்பாய்களைக் கொண்டு போய் வைக்க சொல்லி உத்தாரம்" என்கிறது டைரி.

செப்டம்பர் 8, 1748 ல் வேதபுரீசுவரர் கோவில் இடிக்கப்பட்டதை எண்ணி மிகவும் வருந்தி பிள்ளை எழுதி இருக்கிறார். அவ்வாறு அவர் வருத்தப்பட்டு எழுதியதிய செய்திகளும், கோவில் இடிக்கப்பட்டதற்கு எவ்வித மத துவேசக் காரணத்தையும் நமக்கு உணர்த்தவில்லை.

(இங்கிலீஷ் படை) "கோவிலைப் பிடித்தால் நூறு பேர் அன்பது பேர் சாவார்கள் யெல்லாரும் வூரைவிட்டுப் போவார்களென்கிற பயமொன்று நாளது வரைக்கும் இருந்ததுதான். போகாமல் மற்றுப்போய் கொளுத்தும்போது இப்படி செய்கிறோமெ யென்னமோ வென்கிற அனுமானத்தினாலே சொல்தாதையும் (soldiers ??) சிப்பாய்களையும் குதிரைக்காரரையும் யேர்க்கனவே கொண்டு போய் வைத்துக் கொண்டு நடத்தினான்" என்று அக்கோவில் இடிப்பின் சூழலை ஆனந்த ரங்கர் கூறுகிறார்.

போரின்போது கோவிலை இடிக்க யாரெல்லாம் ஆதரவாய் இருந்தார்கள் என்பதையும் அவரின் புலம்பலில் இருந்தே கண்டறிய முடியும்.

"ஆறுமுகத்தா முதலியுங் கொலுத்துக்கார வெங்கடாசலம் தம்பி லச்சிகானும், இரண்டொரு பேரும் அன்னபூரணய்யருக்கு சாவடி துபாசித் தனம் கொடுத்தால் வேதபுரீஸ்வரன் கோயிலை இடித்து அப்பாலே கட்டுகிறதற்கு நாங்கள் வூராருக்கு சம்மதி பண்ணிப் போடுகிறோமென்று வந்து சொன்னவர்கள் உங்களுடனே கூட இருக்கிறார்கள். இப்போ இரண்டு மாசமாய் துரை பெண்சாதியண்டைக்குப் போய் பெரிய துபாசித்தனம், தம்பிச்சா முதலி மகன் மலையப்ப முதலிக்கும், தனக்கு சாவடி துபாசித்தனமும் கொடுத்தால் வேதபுரீஸ்வரன் கோயிலை இடித்துப் போடுகிறோமென்று பேசவில்லையா?

இதுவுமல்லாமல் சம்பாவுலு கோவிலு பாதிரிகளண்டைக்கு அன்னபூரணய்யன் போய் ஊராரையெல்லாம் சம்மதி பண்ணினேன். நீங்கள் தனக்கும், மலையப்ப முதலிக்கும் உத்தியோகம் கொடுத்தால் அந்தப்படிக்கு ஈஸ்வரன் கோயிலை இடித்துக் கட்டிக் கொள்ள பண்ணிப் போடுகிறோமென்று பேசவில்லையா?" என்று வேதபுரீஸ்வரர் கோவில் இடிபட உறுதுணையாய் நின்ற இந்துக்களை ஆனந்தரங்கம் பிள்ளை எழுதி வைத்த டைரியே சாட்சி சொல்கிறது.

மலர்மன்னன் சொல்வது உண்மைக்கு மாறானது என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.



வேலூருக்கு ஒரு 'ஜலகண்டேஸ்வரர்' கதை என்றால், புதுச்சேரிக்கு 'வேதபுரீஸ்வரர்' புனைகதையா?

இல்லாத ஒரு விஷயத்தைக் கையில் எடுத்துக் கொண்டு எவ்வாறெல்லாம் கலவர விதை ஊன்றுகிறார்கள் இவர்கள்!





வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் பற்றிப் போகிற போக்கில் ஒரு கதை சொல்லிப் போனார் மலர்மன்னன்.

அது என்னதென்று ஆராய்ந்து பார்த்த பின்னர்தான், மலர்மன்னன் எப்படி எல்லாம் வரலாற்றைத் தன் இஷ்டம் போல் திரிக்கிறார் எனத் தெளிவானது.

வேலூர் நகரக் கோட்டை கோவிலுக்குள் இருந்து 'லிங்கம் ' அகற்றப்பட்டதற்கு முசுலீம் படையெடுப்புதான் காரணமென்றும், அதை மீண்டும் அங்கு நிறுவுவதற்குத் தடையாகத் தொல்லியல் துறை இருந்ததால் அதையும் மீறி அங்கு லிங்கத்தை நிறுவும் தெய்வீகத் தொண்டை தாம் வீரதீரத்தோடு செய்து முடித்ததாக விஸ்வ ஹிந்து பரிசத் தின் மலர்மன்னன் சரடு விடுகிறார்.

முதலாவதாக, வேலூரில் உள்ள கோட்டைகள் மற்றும் நகரக் கோட்டைக்குள் உள்ள கோவில் எப்போது, யாரால் கட்டப்பட்டது என்ற உண்மையை அவர் மூடி மறைக்கின்றார். வேலூர் கோட்டைகளும், கோவிலும் இந்து ஆட்சியாளர்களால் கட்டப்படவில்லை. அப்படி ஓர் இந்து ஆட்சி அங்கு நிலவியதாக வரலாறும் இல்லை. அவை முசுலீம் ஆட்சியாளர் காலத்தில்தாம் கட்டப்பட்டன.

ஆங்கிலேயக் காலனிவாதிகளிடம் சரணடைந்து, ஆட்சி அதிகாரத்தை ஆற்காடு நவாபு அடகு வைத்தபோது, விடுதலைப்போர் தொடுத்த மைசூரை ஆண்டு வந்த டிப்பு சுல்தான் குடும்பத்தினர் ஆங்கிலேயர்களால் பிடிக்கப்பட்டு வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். முசுலீம்களால் கோட்டைக்கோ, கோவிலுக்கோ எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை.

ஆற்காடு நவாப்போடு சேர்ந்து ஆங்கிலேய காலனியவாதிகளுக்கு அடிமை ஊழியம் செய்த புரோகிதர்கள்தாம், 'மைசூரை ஆளும் முசுலீம் மன்னன் படை எடுத்து வருகிறான்; கோவில்களை இடிப்பான்; இந்துக் கடவுள் சிலைகளைத் தாக்கி உடைப்பார்கள்; இந்துக்களைக் கொன்று போடுவார்கள்;பெண்களைக் கற்பழிப்பார்கள் ' என்று புரளி கிளப்பி, கோட்டை கோவில் லிங்கத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டார்கள்.

ஆனால் ஆர் எஸ் எஸ் காரர்கள் வெளியிட்டுள்ள ஒரு நூலிலே அவர்களே ஒப்புக்கொண்டுள்ளபடி 'அந்தக்கோட்டை கோவில் இன்னமும் சிதிலமடையாமல் அழகாக ' இருக்கிறது என்றால் 'படை எடுத்து வந்த ' முசுலீம்கள் அதற்கு எந்தப் பாதிப்பையும் செய்யவில்லை என்றுதானே அர்த்தம் ? மேலும் அவர்களால் இந்துக்களுக்கு எந்தவிதத் தீங்கும் அங்கு நடந்ததாக சிறு வரலாற்று ஆதாரமும் சம்பவமும் கிடையாது.அதற்கு மாறாக, பாழடைந்த பல 'இந்து 'க்கோவில்களைப் புதுப்பிக்கவும் பூசை நடத்தவும் டிப்பு சுல்தான் உதவியதாகத்தான் சரித்திரம் கூறுகிறது.

ஜெர்மனியில் மட்டுமல்லாது, தான் ஆக்கிரமித்த பலதேசக் கலைக் களஞ்சியங்களைச் சூறையாடிய ஹிட்லர் உட்பட பாசிஸ்டுகள் அனைவருமே வரலாற்றுச் சின்னங்களை மாற்றி அமைத்து, பாமர மக்களின் ஆதரவைத்தேடிக்கொள்ள எத்தணிக்கின்றனர்.அது போன்றதொரு செய்கைதான் வேலூர் கோட்டை கோவிலுக்குள் லிங்கத்தை நிறுவிய செயல்.

காஞ்சி மடாதிபதி முதல் மாவட்ட ஆட்சியர் வரை ஆர் எஸ் எஸ் காரர்களோடு சேர்ந்து நிறைவேற்றியிருக்கும் இந்தச் செயலை ஏதோ கடும் எதிர்ப்புக்கிடையே புரிந்த சாதனையைப் போல இங்கே சித்தரிக்கிறார் மலர்மன்னன். திட்டமிட்டு சுற்றுப்புறக்கிராமங்களில் இருந்து கூட்டம் திரட்டி வந்தபோதும், ஏதோ மக்கள் தாமே திரண்டு வந்ததைப் போல் பிலிம் காட்டுகிறார் அவர்.

இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்ன என்றால், இல்லாத ஒரு பிரச்சினையை உருவாக்கி ஊதிப் பெருக்கி பரபரப்பை ஏற்படுத்தியதுதான்.

இதே மாதிரிதான் மண்டைக்காட்டிலும், கடலில் சென்று நீராடிய பிறகே பகவதி கோவிலுக்கு வர வேண்டும் என ஒருப் புதுப் பழக்கத்தைப் புகுத்தி அமைதியைக்கெடுத்தனர் இவர்கள்.

இதன் உள்நோக்கம் என்னவென்றால், கடற்கரையில் பரவி இருக்கும் கிறிஸ்தவ மீனவர்களின் குடியிருப்பு வழியாக ஊர்வலம் விட்டு பதட்டத்தை உருவாக்குவது.

இதே உள் நோக்கத்தில்தான் 1990 வரை தமிழ் நாட்டில் இல்லாத வழக்கமான 'விநாயகர் சதுர்த்தி ' ஊர்வலமும் இவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

நான் ஒருமுறை சென்னையில் இந்து முன்னணியின் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தைப் பார்த்திருக்கிறேன். போகும் வழியில் முஸ்லிம் ஓட்டல் இருந்தால் கல்லை ஓட்டல் உள்ளே எறிவார்கள் (ஸ்டாரன்சு ரோடு, ஓட்டேரியில் உள்ள தாஸ்மக்கான் ஆகிய இடங்கள்)

'நாலும் நாலும் எட்டு; துலுக்கன வெட்டு ' 'மூணும் அஞ்சும் எட்டு; துலுக்கன் பொண்டாட்டியக் கட்டு ' என்று சில திருக்குறள்களை உரக்கக்கத்தி விநாயகருக்கு பக்தி செலுத்துவார்கள் (இரண்டாவதாய் நான் குறிப்பிட்ட குறள் சரியானதுதானா என்பதை மலர்மன்னன் சமூகம் திருத்திக் கொடுத்தால் தேவலாம்)

நன்றி கற்பக விநாயகம்

Thursday, October 11, 2007

கலி முற்றும் பொழுதெல்லாம் நான் அவதரிப்பேன்!!!

“paritranaya sadhunam vinasaya ca duskrtam dharma-
samsthapanarthaya sambhavami yuge yuge”

ராமன் ஒரு கடவுளா? ராமாயணம் என்ற இதிகாசப் புரட்டை முன் வைத்தே காவி(லி) கும்பல் தனது ஒவ்வொரு பயங்கரவாத நடவடிக்கையையும் முன்னெடுத்து வருகீறது. இந்துக்களின் நம்பிக்கை என்ற பெயரிலேயே இவை அனைத்தும் புனிதப்படுத்தப்படுகின்றன. சமீபத்திய ராமேஸ்வரம் மணல் திட்டு பிரச்சினையில் கூட கருணாநிதியை முதல் குற்றவாளியாக்கி தீர்ப்பளித்தன குமுதம் முதலான அனைத்து மக்கள் விரோத ஊடகங்களும். உச்ச நீதிமன்றமோ முற்றிலும் அம்பலமாகி தான் ஒரு பார்ப்பன பாத தாங்கி என்று அம்மணாமாய் கோக்கரித்தது(இதே உச்சநீதி மன்றம் அணூ விவகாரம் தொடர்பான ஒரு பொது நல வழக்கை எடுக்காமல் தள்ளுபடி செய்தது காரணம் கேட்ட பொழுது, நீதிமன்றம் தனது விருப்பம் போல முடிவெடுக்கும் அதிகாரமுள்ளது, காரணங்கள் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று திமிராக பதில் சொல்லியது).

இங்கு தமிழ்மணத்திலும் கூட ராம பக்தர்கள் சிலர் ராமனை திட்டுவது தவறு என்று எழுதியிருந்தனர். ராமன் ஒரு கடவுளா? ராமனை கும்பிடுவது பெரும்பான்மை இந்தியர்களை அவமானப்படுத்துவதாகாதா? அவன் எந்த வகையில் ஒரு கடவுள்? என்பது குறித்தேல்லாம் இவர்களுக்கு என்னவிதமான புரிதல் இருக்கும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். குறைந்த பட்சம் ராமன் என்ற உத்தம புருஷன் குறித்த வந்த தொலைக்காட்சி புரட்டு மற்றும் பல ஊடக வரலாற்று பொய்களை கேள்விக்குள்ளாக்கும் முகமாக சில அடிப்படை கேள்விகளை முன் வைக்கும் ஆர்வம் பலருக்கும் இருந்திருக்கும். அது போன்றதொரு முயற்சியாக பயங்கரவாதம் தளத்தில் ஒரு இ மெயில் கட்டுரை பிரசூரம் செய்யப்பட்டுள்ளது.

ராமன் ஒரு பார்ப்பன சாதி சங்க தலைவன் என்பதையும். அவன் ஒரு மக்கள் விரோத வர்ணாஸ்ரம வெறியன் என்பதையும். சீதாவை ஒரு போகப் பொருளாக கருதிய பிற்போக்கானவன் என்பதையும் அம்பலப்படுத்தியும் மக்கள் மீது காதல் கொண்டவர்கள் உண்மையில் ராமனை குப்பையில் வீசி வெறிய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கேள்விகள் கேட்க்கப்பட்டுள்ளன். படித்து பார்க்கவும். விமர்சனங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

Rama.... Rama....

அசுரன்

Related Posts with Thumbnails