TerrorisminFocus

Monday, March 24, 2008

மானங்கெட்ட சிபிஎம்மும், விடுதலையின் விடிவெள்ளி பகத்சிங்கும்!!

ரலாற்றின் குரலுக்கு சரியாக செவிமடுத்து தனது வரலாற்று கடமையை சிறிது கூட தயக்கமின்றி நிறைவேற்றிய புரட்சிக்காரன் தோழர் பகத்சிங்கும், அவரது தோழர்கள் சுகதேவும், ராஜ்குருவும் தூக்கிலடப்பட்ட நாள் மார்ச் 23. வேறென்றைக்கும் விட இன்றைய மறூகாலனிய தாக்குதல் காலக்கட்டத்தில் இந்திய விடுதலையின் துவக்கமாக முழங்கிய இவர்களின் வரலாற்றுத் தேவை மிக அதிகமாக உணரப்படுகிறது.

தீர்க்கமான தனது பார்வையின் மூலம் தனது கடமையை உணர்ந்து அதற்க்கு நேர்மையாக சிறிதும் சமரசமின்றி வினையாற்றிய பகத்சிங்கை சிறுமைப்படுத்துவது என்பதை ஆளும் வர்க்கம் எப்பொழுதுமே செய்து வருவதுதான். அப்படி செய்யாமல் இருந்தால்தான் ஆச்சர்யம். சமீபத்தில் ஆதவன் தீட்சண்யாவின் புத்தகம் வெளியீட்டு விழாவில் தலித் முரசு ஆசிரியர் பகத்சிங்கை ஏக வசனத்தில் சிறுமைப்படுத்தி பேசியதன் மூலம் தான் யார் என்பதை வெளிப்படையாக வெட்கமின்றி காட்டிக் கொண்டார். அதுவல்ல இங்கு நமது பிரச்சினை. மாறாக அந்த கூட்டத்தை நடத்திய கார்ப்போரேட் கட்சியான, டாடாயிஸ்ட் கட்சியான CPMன் உறுப்பினர்கள் (AKA பங்குதாரர்கள்) இந்த அம்சத்தில் என்ன செய்தார்கள் என்பதும், இதில் அவர்கள் உண்மையாகவே யாராக பரிணமித்துள்ளார்கள் என்பது வெட்கமின்றி வெளிப்படுவதுமே இங்கு பேசப்படவுள்ள விசயம்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற பதிவர் ஏகலைவன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதனை இங்கு மறு பிரசூரம் செய்கிறேன்.

பகத்சிங்கின் மேன்மை, அவர் இந்திய சூழலில் யாருடனும் ஒப்பிட முடியாத அளவு தீர்க்கமான பார்வையும், தனது பார்வைக்கு நேர்மையான செயல்பாடும் கொண்டவர் என்பதை விவாதிக்க விரும்புகிறவர்கள் வரவேற்க்கப்படுகிறார்கள். அப்படியொரு விவாதத்தில் காந்தியின் டவுசர் இதற்க்கு முந்தைய விவாதங்களில் கிழிக்கப்பட்டது போலவே கிழிக்கப்படும் என்ற உத்தரவாததை மட்டும் இப்போதைக்கு கொடுக்க இயலும்.

********************************
சி.பி.எம்.மின் 'கண்ணியத்துக்கு' ஒரு அள‌வே இல்லையா????

சென்ற 19/08/2008 19/03/2008 அன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.எல்.ஏ. அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யாவின் 'நான் ஒரு மநு விரோதன்' எனும் நூல் வெளியீட்டுவிழா நடைபெற்றது.

நாம் உள்ளே நுழைந்தபோது தலித் முரசு ஆசிரியர் புனிதப்பாண்டியன் பேசிக்கொண்டிருந்தார். அரங்கில் சி.பி.எம். கட்சியைச் சார்ந்தவர்கள் திரளாகக் கூடியிருந்தார்கள். சி.பி.எம். மீது புனிதபாண்டியன் சில விமர்சனங்களை முன்வைத்தார்.

"நான் எந்த உள்நோக்கத்தோடும் இதனைச் சொல்லவில்லை" என்று அறிவித்துக் கொண்டே முன்வைத்தார்.

சி.பி.எம்.ன் சாதி எதிர்ப்பு போராட்டம் எனும் பித்தலாட்டங்களையும், அதன் பார்ப்பனச் சார்புத் தன்மையையும் விமர்சணமாக எடுத்துவைத்தார். "அம்பேத்கர் இந்து மதத்தை கடுமையாக எதிர்க்கும் பொருட்டே புத்தமதத்தைத் தழுவினார். எனவே சி.பி.எம். தோழர்களும் ஏன் புத்தமதததிற்கு மாறக்கூடாது?" என்றும் கேள்வி எழுப்பினார். சி.பி.எம். கட்சியினர் பார்ப்பனர்களை பெரும்பாலும் பிராமனர்கள் என்றே குறிப்பிடுகிறாகள். பார்பனர் என்றால் ஒரு தீய சொல்லைப் போல கருதுகிறார்கள் என்றும் இப்படிப்பட்ட போக்கை மாற்றிக் கொண்டு பார்ப்பனர்கள் என்று குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேற்கூறிய விமர்சண‌ங்களின் தொடர்ச்சியாகவும், சொரனையற்ற போலிகளுக்கு சொரனையை ஏற்படுத்தும் விதமாகவும், அரங்கில் யாருமே சற்றும் எதிர்பார்த்திராத வகையிலும், ஏகதிபத்திய எதிர்ப்பு சிங்கம் தியாகத் தோழர் பகத்சிங்கை மிகவும் இழிவான முறையில் விமர்சித்தார். "சும்மா ரெண்டு குண்ட வீசிட்டா அவன் பெரிய ஆளா?" என்றார்.

ஏகாதிபத்தியத்திற்கெதிராக தனது உயிரை துச்சமாக மதித்து இந்த நாட்டு மக்களுக்க்காக மடிந்த மாவீரன் பகத்சிங்கை கீழ்த்தரமாக இழிவுபடுத்தினார். இருந்தும் போலிகளுக்கு சுரனைவராதது துரதிருஷ்டவசமானது தான்.

ப‌க‌த்சிங்கின் ப‌ல‌வித‌மான‌ போராட்ட‌ங்க‌ளை பெரியார் விய‌ந்து பாராட்டிய‌தோடு அத‌ற்கெதிராக‌, ந‌ய‌வ‌ஞ்ச‌க‌மாக‌, கீழ்த்த‌ர‌மாக‌ அர‌சிய‌ல் ந‌ட‌த்திய‌ காந்தியை த‌ன‌து 'குடிய‌ர‌சு' ப‌த்திரிக்கையில் க‌டுமையாக‌ச் சாடி ப‌ல‌முறை எழுதியிருக்கிறார். ஆனால் சிறிதும் கூசாம‌ல், ஒருகையில் துரோகி காந்தியையும் ம‌றுகையில் தியாகி ப‌க‌த்சிங்கையும் உய‌ர்த்திக்காட்டும் சி.பி.எம்.ன் கேவ‌ல‌த்தைக் க‌ண்டிப்ப‌த‌ற்கு ப‌திலாக‌ ப‌க‌த்சிங்கை இழிவுப‌டுத்துவ‌து உள்நோக்க‌முடைய‌து.

இவர்கள் மட்டுமா? மார்க்சிய அறிஞர்கள் என்று தம்மைத்தாமே அழைத்துக் கொள்ளும் சில பிழைப்புவாதிகளும் இங்கே காந்தியைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு உலாவருகிறார்கள். பிர்லா மாளிகையில் இருந்து கொண்டு இந்திய முதலாளிகளின் கைப்பாவையாக, அரை நிர்வாணமாகத் திரிந்த காந்தியை, சமூக போராட்டத்தில் அம்பேத்கரின் பார்வையோடும், ஏகாதிபத்தியத்திற்கெதிரான போராட்டத்தில் பகத்சிங்கின் பார்வையோடும், அனுகியிருந்தால் அவரின் முழுநிர்வானமும் அம்பலமாகியிருக்கும். தனது விமர்சணப் பார்வையைத் தவிர்த்து, வெறும் விசுவாசப்பார்வை பார்பவர்களுக்கு காந்தியின் சுயரூபம் புரிய வாய்ப்பில்லைதான்.

ஏகாதிப‌த்திய‌ம் வீசும் எலும்புத்துண்டுக‌ளுக்காக‌ நாக்கைத் தொங்க‌விட்டுக்கொண்டு அலைப‌வ‌ர்க‌ளை மேடைக்கு அழைத்தால் இப்ப‌டித்தான் க‌டிப‌ட‌ வேண்டியிருக்கும். ஆனால் அரங்கில் கடிபட்ட சத்தமல்ல, ஒரு முனகல் கூட கேட்கவில்லை. போலிக‌ளுக்கு இதுபோன்ற‌ அனுபவ‌ங்க‌ள் நிறைய‌ இருக்கிற‌து. ஆனால் போலிக‌ளை விம‌ர்சிப்ப‌த‌ன் ஊடாக‌ ம‌க்க‌ளுக்காக‌ ம‌டிந்த‌ தியாகிளையும் இழிவுப‌டுத்துவ‌து தான் க‌டைந்தெடுத்த‌ அயோக்கிய‌த்த‌ன‌மான‌ யுக்தி.

இப்படிப்பட்ட கைக்கூலிகள், ஏகாதிபத்தியத்தை சந்தோஷப்படுத்த இவ்வாறு செயல்படுவது ஒன்றும் ஆச்சர்யமான செயல் அல்ல. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் தம்மை மாய்த்துக்கொண்ட போராளிகள் மட்டும் தான் இவர்களின் இலக்கு, அவர்களை இப்படி இழிவுபடுத்துவதற்காகத்தானே ஏகாதிபத்தியம் இவர்களுக்கு பிச்சைபோடுகிறது.

த‌லித் ம‌க்க‌ள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக‌ குர‌ல் கொடுப்ப‌தாக‌வும், எழுதுவ‌தாக‌வும், ப‌த்திரிக்கை ந‌ட‌த்துவ‌தாக‌வும் கூறும் புனித‌ப்பாண்டிய‌னின் 'த‌லித் முர‌சு'க்கு எங்கேயிருந்து ப‌ண‌ம் வ‌ருகிற‌து?

உல‌க‌ம் முழுவ‌தும் கோடிக்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளை ஒடுக்கி, கொண்றொழித்து, அவ‌ர்க‌ளின் இர‌த்த‌த்தைக் குடித்து, சுர‌ண்டிக் கொழுத்த‌ ஏகாதிப‌த்திய‌த்தின் எச்சில் காசுதான் அது. ஏகாதிப‌த்திய‌ம் க‌ழிந்த‌தை கையில் வைத்துக் கொண்டு த‌லித் விடுத‌லை பேசும் இந்த‌ பிழைப்புவாதி, ஏக‌திப‌த்திய‌த்திற்கு எதிராக‌ப் போராடி த‌ன‌து 23 வ‌ய‌தில் ம‌ர‌ண‌த்தை எதிர்கொண்ட‌ ஒரு மாவீர‌னை என்றைக்குமே புரிந்து கொள்ள‌ முடியாதுதான்.

அத‌ன் பிற‌கு த‌.மு.எ.ச. பொதுச் செய‌லாள‌ர் ச‌. த‌மிழ்ச்செல்வ‌ன் பேச‌வ‌ந்தார். "நாங்க‌ள் பார்ப்ப‌ன‌ன் என்ற‌ வார்த்தையைப் ப‌ய‌ன் ப‌டுத்துவ‌தில்லை என்று புனித‌ப்பாண்டிய‌ன் இங்கே குறிப்பிட்டார். க‌ட‌ந்த‌ த‌.மு.எ.ச. மாநில‌ மாநாட்டுத் தீர்ம‌ண‌ங்க‌ளை வாங்கிப் ப‌டித்து பாருங்கள், அதில் ப‌த்து இட‌ங்க‌ளுக்கும் மேலாக‌ 'பார்ப்பான்' என்று குறிப்பிட்டுள்ளோம்" என்று மிக‌ அருமையான‌தொரு ப‌திலை புனித‌ப்பாண்டிய‌ன் மீது அள்ளித் தெளித்தார். அத‌ன் பிற‌கு "'நான் ஒரு ம‌நு விரோத‌ன்' என்ற‌ புத்த‌க‌த்தை வெளியிட்ட‌ பிற‌கும் ஆத‌வ‌ன் தீட்ச‌ண்யா மீது நாங்க‌ள் (அதான் ந‌ம்ம‌ காம்ரேடுக‌ள்!) எந்த‌ ந‌ட‌வ‌டிக்கையும் எடுக்காம‌ல் இருக்கிறோமே" அதிலிருந்தே எங்க‌ள‌து சாதி சார்ப‌ற்ற‌ த‌ண்மையை விள‌ங்கிக் கொள்ளுமாறு புனித‌ப்பாண்டிய‌னைக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார். "இப்ப‌டிப்ப‌ட்ட‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளைச் சும‌த்துவ‌து நாம் வில‌கும் புள்ளியையே உறுதிப்ப‌டுத்துகிற‌து. மாறாக‌ நாம் இணையும் புள்ளி என்று ஒன்று இருக்கிற‌து(!) நாம் அதிலிருந்து தொட‌ங்குவோம்" என்று சொல்லி விவாத‌ங்க‌ளைத் த‌விர்த்துவிட்டு, அதிலிருந்து த‌ப்பித்துக்கொண்டார். புனித‌ப்பாண்டிய‌னின் ப‌க‌த்சிங் மீதான‌ கீழ்த்த‌ர‌மான‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளை அவ‌ர் க‌ண்டுகொள்ள‌வுமில்லை, அத‌ற்காக‌ ப‌தில‌ளிக்க‌வுமில்லை.

பிற‌கு போலிக‌ம்யூனிஸ்ட் க‌ட்சியின் செய‌ற்குழு த‌லைவ‌ர்க‌ளில் ஒருவ‌ரான‌ ச‌ம்ப‌த் பேச‌வ‌ந்தார். அவ‌ரும் த‌ம‌து க‌ட்சி மேடையிலேயே ப‌க‌த்சிங் இழிவுப‌டுத்த‌ப்ப‌ட்ட‌தை சிறிதும் ச‌ட்டை செய்ய‌வில்லை. பிற‌கு பேசிய‌ பிர‌ள‌ய‌னும் ச‌ரி, ஏற்புரையாற்றிய‌ ஆத‌வ‌ன் தீட்ச‌ண்யாவும் ச‌ரி, அ‌தைத் த‌விர‌ ம‌ற்ற அணைத்து வியாக்கியான‌ங்க‌ளையும் பேசின‌ர்.

இறுதியாக பிரகதீஸ்வரன் என்பவர் தனது நன்றியுரையில் "புனிதப்பாண்டியன் இதைப் போன்று சுதந்திரமாக‌ வேறு எந்த மேடையிலும் பேசமுடியாது என்பது எங்களது கண்ணியத்தை எடுத்துக் காட்டுகிறது" என்று கூறினார்.

இத‌னைக் கடுமையாக‌க் க‌ண்டித்து பேசுவார்க‌ள் என்று க‌டைசிவ‌ரைக் காத்திருந்து நொந்து போய்த் திரும்பினோம். அங்கே இழிவு ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து தோழ‌ர் ப‌க‌த்சிங் ம‌ட்டும‌ல்ல‌, இதைக்கூட‌வா எதிர்க்க‌ மாட்டார்க‌ள் என்று எதிர்பார்த்து‌ ஏமார்ந்துபோன‌ என்னைப் போன்ற‌ சில‌ரும்தான் என்ப‌தை உண‌ர்ந்துகொண்டேன்.

இவர்கள் சொரனையோடு பதிலலிக்காதது ஏதோ தற்செயலாக நடைபெற்றது அல்ல. அது தான் போலிகளின் நிஜமுகம். இவர்களுக்குள்ளும் வேர்விட்டிருக்கிற ஏகாதிபத்திய அடிமைப் புத்திதான் இவர்களை பேசவிடாமல் தடுக்கிறது என்பதற்கு இதைவிடச் சிறப்பாக இனி எந்த நிக‌ழ்வையும் எடுத்துக்காட்ட‌முடியாது.

ஏகலைவன்.

Related Articles:
மாவீரன் பகத்சிங் விடுதலை போரின் ஒப்பற்ற தலைவன்
விடுதலைப் போரின் கலங்கரை விளக்கம் பகத்சிங்

Friday, March 07, 2008

தினமணியின் பூணூலில் பொங்கி வழியும் RSS கொழுப்பு!!!

RSS ன் கொழுப்பெடுத்த அயோக்கியத்தனத்தை தனது பத்திரிக்கையில் வாந்தியெடுத்ÐûÇÐ திணமணி எனும் பார்ப்பனமணி பத்திரிகை. இந்து மக்கள் கட்சி எனும் RSS பயங்கரவாதிகளின் அல்லக்கை கட்சி ஒன்றின் அடியாள் படை தாதா நாயான அர்ஜூன் சம்பத என்பவன் பெயரில் வெளி வந்த ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது அந்த பத்திரிகை(ஆன்மிகத்துக்கு விடுக்கப்பட்ட சவால், Friday March 7 2008 00:00 IST, தினமணி). சிதம்பரத்தில் சமீபத்தில் தமிழில் பாடுவதற்க்கு தடையாக இருந்த தீட்சிதர்களை பின் வாங்க வைத்து பாதி கிணறு தாண்டியுள்ள நிலையில் ரொம்ப நல்லவன் போல எழுதுகிறான் இந்த கோயம்புத்துர் கொலைகார பொறுக்கி. ²தோ தீட்சிதர்கள் அங்கு தமிழை எதிர்க்கவில்லை என்பது போலும். இன்னாள் வரை தீட்சிதர்கள் அங்கு வேறு சாதியினரையும் தமிழையும் வளர்த்தே வந்துள்ளன்ர் எனபது போலும் மாறாக மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட திராவிட கம்யுனிஸ்டு கட்சியினர்தான் பிரச்சினை உண்டு பன்னுவதாகவும் கொழுப்பெடுத்து பேசுகிறான் ஒரு பார்ப்பன பயங்கரவாதி. ஆயினும் தீட்சிதர்கள் வரலாறும் சரி இன்றைய நடப்பும் சரி மக்களை அவமதிப்பதாகவே உள்ளது.

ஏதோ இந்துக்கள் எல்லாருக்கும் நான் தான் ஹோல்சேல் பாதுகாப்பு குத்தகை எடுத்துள்ளேன் என்பது போல கதறும் இந்த வெறியர்கள் நேற்று அதாவது 6 மார்ச் 2008 ல் சிதம்பரம் கோயிலில் தமிழில் பாடியததற்க்Ì தீட்டு கழித்து தீட்சிதர்கள் நடத்திய பரிகார பூசையை எந்த லிஸ்டில் சேர்ப்பார்கள்?

தீட்சிதர்களின் வரலாறும் ஆக ஆயோக்கியத்தனமானதுதான். இந்து மக்கள் கட்சி என்ற பெயரில் பெரும்பான்மை இந்துக்களை அவமானப்படுத்தி எழுதியுள்ள இந்த தினமணி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தேவர தமிழ் ஓலைகள் ராஜ ராஜ சோழனால் பூட்டியிருந்த அறையிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட சம்பவமே கூட தீட்சிதர்கள் தமிழை எந்தளவுக்கு அவமானப்படுத்தியுள்ளனர் என்பதற்க்கு ஒரு சான்றாகும். லட்சத்துக்கும் மேற்ப்பட்ட தமிழ் பாடல்களை ஒரு அறையில் பூட்டி நாசம் செய்ததுடன் இல்லாமல். ராஜ ராஜ சோழன் வந்து அந்த அறையை திறக்க சொன்ன போது திறக்க மாட்டேன் என்று அடாவடித்தனமும் செய்தனர் (இன்று தமிழில் பாடுவதற்க்கு செய்வது போலவே). இதில் பாதிக்கும் மேற்ப்பட்ட தேவரப் பாடல்கள் தீட்சிதர்களின் அயோக்கியத்தனத்தால் அழிந்து போய் மீதியுள்ளவைதான் கிடைத்தன. வரலாறு இப்படியிருக்க அர்ஜூன் சம்பத அல்லது அவன் பெயரில் எழுதிய அல்லக்கை வரலாற்றை திரித்து எழுதுகிறது. அன்றாட சம்பவங்களையே திரித்து எழுதுபவர்களுக்கு வரலாற்றை திரிப்பது பெரிய விசயமில்லைதான்.

இது அன்று வரலாறு என்றால் இன்று கடந்த சில வருடங்கÇ¢ல் மட்டும் சிதம்பரம் கோயிலில் வளாகத்திலேயே சில கொலைகளும், பாலியல் வன்புணர்வு குற்றம் ஒன்றும் நடந்துள்ளது. இவற்றில் எல்லாம் தீட்சிதர்கள்தான் சம்பந்தப்பட்டுள்ளனர். இப்படி சிதம்பரம் கோயிலின் புனிதத்தை தமது சொந்த அரிப்புக்காக கெடுத்து வருபவர்கள் பார்ப்பனர்கள் என்ற ஒரே காரணத்தினால் ஆதரிக்கிறது இந்த RSS கும்பல்.

சாளுக்கிய மன்னனுக்கும், சோழப்பேரரசின் இளவரசிக்கும் பிறந்த குலோத்துங்க சோழனுக்கு முடியுரிமை வழங்குவதா கூடாதா என்ற சர்ச்சை எழுந்தபோது, தில்லை தீட்சிதர்கள் சாளுக்கிய வாரிசினை ஆதரித்துப் பட்டம் சூட்டத் துணை நின்றதாகவும், அதன்பேரில் தீட்சிதர்கள் குலோத்துங்கனிடமிருந்து பல உரிமைகளையும் தில்லைக் கோவில் சொத்துக்களையும் பெற்றதாகவும் வரலாறு சொல்கிறது. அதில் இருந்து தீட்சிதர்கள் சாளுக்கிய வம்சத்தில் இருந்து சோழனாக மாறிக்கொண்ட குலோத்துங்கன் காலத்தில் செப்பேடுகளில் மட்டும் தேவாரம் இருக்கட்டும். தினமும் பாடத்தான் வேண்டுமா? என்று தந்திரமாக தமிழை நடராசனிடம் இருந்து அகற்றி விட்டனர். இந்த சதியினை நக்கீரன் பத்திரிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது. ஆனால் தினமணியோ வரலாற்றையே புரட்டிப்போடுகிறது.

பார்ப்பன பயங்கரவாத அமைப்பான RSS என்றைக்கும் பெரும்பான்மை மக்களின் இறை நம்பிக்கைய மதித்ததே கிடையாது. நாட்டார் வழிபாட்டு தெய்வங்களையும் மாமிசம் உண்ணும் கடவுளர்களையும், சிறு தெய்வங்களையும் அவமரியாதையாக கருதி அவற்றை புணீதப்படுத்தி பார்ப்பனமயமாக்குவதுடன் இது போல ஏற்கனவே பார்ப்ப்னியமயமாக்க்கப்பட்ட கோயிலகளில் சதாரண மக்களை அவமரியாதை செய்வதையும் எதிர்த்து குரல் கொடுத்ததில்லை.

தாழ்த்தப்பட்டவர்கள் கருவறைக்குள் நுழைவதாகட்டும், தேர் இழுப்பதில் உரிமை கேட்பதாகட்டும் இவர்கள் ஆதிக்க சாதியினர் பக்கமிருந்தே குரல் கொடுப்பர். அது போலவேதான் இப்பொழுதும் கூட பார்ப்பனியத்தின் பக்கமிருந்து குரல் கொடுக்¸¢றார்கள்.

10.5.2005 அன்று ராமகோபாலன் தனது தொண்டர்களோடு இஸ்லாமியர் வாழும்பகுதியான கோட்டைமேட்டை ஒட்டிய உக்கடம், மதுரைவீரன் கோவிலுக்கு வருகிறார்.1008 கோயில்களுக்கு செல்லும் பயணத்தில். இந்த 10 ஆண்டுகளில் தொய்ந்துபோயுள்ள சங்பரிவாரத்தாருக்கு புத்துணர்ச்சியூட்ட இந்த யாத்திரையை மேற்கொண்டிருக்கிறார்.

அப்பகுதி இளைஞர்கள் அவரைத்தடுக்கிறார்கள். கோயிலில் நுழைய அனுமதி மறுக்கிறார்கள். ஒரு இந்துவான தனக்கு இந்துக்கோயிலில் நுழைய உரிமையுண்டு என்கிறார் ராமகோபாலன்.

'அதே உரிமை எங்களுக்கும் உண்டல்லவா?' 'இங்கிருந்து 10 கி.மீ.தொலைவிலுள்ள காளப்பட்டியில் மாரியம்மன் கோயிலில் நுழைய முயன்றதற்காக அருந்ததியர் காலனி தீவைத்துக் கொளுத்தப்பட்டது தெரியுமா?' என்று கூறி இந்துக்களாகிய நாங்கள் அந்த கோயிலில் நுழைவது குறித்து பேசிவிட்டு இந்த கோயிலில் நுழைந்து கொள் என்று தடுத்துள்ளனர் இளைஞர்கள்.

இந்துக்களிடையேயான பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்கிறார் ராமகோபாலன். 'அப்படியானால் முதலில் காளப்பட்டி போவோம். மாரியம்மனை ஒன்றாக தரிசனம் செய்துவிட்டு பின்பு மதுரைவீரன் கோயிலுக்கு வருவோம்' என்கின்றார்கள் இளைஞர்கள். ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியான தர்மத்திற்கு விரோதமான நிபந்தனை என்று மறுத்துவிட்டுத் திரும்புகிறது காவிப்படை.

ஒருவாரம் கழித்து 24-05-2005 அன்று கோவை ஆவாரம் பாளையத்தில் உள்ள பண்டத்தரசியம்மன் கோவிலுக்கு தகுந்த தயாரிப்புகளோடு வருகிறார் ராமகோபாலன்.

இந்த முறை கோட்டைமேட்டை விட மிகச் சிறந்த வரவேற்பு அவருக்கு. கோவில் இருக்கும் தெருவில் நுழையவே அவர் அனுமதிக்கப்படவில்லை. அதே நிபந்தனை. ஆவாரம்பாளையமே திரண்டுவந்து அவரைத் தடுக்கிறது. தங்கள் இலக்குகளை சரியாக அடையாளம் கண்டுகொண்ட அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அவர்கள். (நன்றி: புதுவிசை)

இன்று இத்தனை வக்கனையாக பேசும் இந்த பொய்யர்கள் ஏன் ஆறுமுகசாமி முதன் முதலில் தமிழில் பாடச் சென்ற பொழுது தாக்கப்பட்டது குறித்து பேச மறுக்கிறார்கள்? கள்ள மௌனம் சாதிக்¸¢றார்கள்?

அப்பொழுது அவருடன் எந்த கம்யூனிஸ்ட் இருந்தான், எந்த மக இகக்காரன் இருந்தான்?

கோவை கலவரத்தில் ரவுடித்தனம் செய்த அர்ஜூன் சம்பத்தை நாளை அவனது மக்கள் விரோத செயல்களுக்காக மக்கள் அவனுக்கு நடு வீதிகளில் தண்டனை கொடுக்கும் போது அவன் அம்மா என்றுதான் கத்தப் போகிறான். மாதாஜி என்றல்ல என்பதை அவன் நியாபகம் வைத்துக் கொள்ளட்டும்.

இத்தனை வக்கனையாக பேசும் RSS மக்கள் விரோத கும்பல் நீதிபதியிடம் ஆறூமுகச்சாமியை விடமுடியாது என்பதற்க்கு மறுப்பாக தீட்சிதருக்கும், சம்ஸ்கிருதத்திற்க்கும் பாரம்பரிய உரிமைகள் இருப்பதாகவும், பிறரை அந்த மண்டபம் வரை அனுமதிப்பது நகைகளுக்கு ஆபத்து என்றும் கூறி வாதாடியதை எதிர்த்து எதேனும் செய்வார்களா?

அதாவது தீட்சிதர் தவிர்த்து, சம்ஸ்கிருதம் தவிர்த்து வேறெதற்க்கும் கோயிலில் உரிமையில்லை என்பதுதான் அவர்களின் வாதமெனில் இந்துக்களின் நலனுக்கு போராடும் RSS கும்பல் இன்னேரம் தீட்சிதர்களின் மண்டையில் தட்டி வழிக்குக் கொண்டு வந்திருக்க வேண்டுமல்லவா?

அதாவது தீட்சிதர் தவிர்த்தும், சம்ஸ்கிருதம் தவிர்த்து வேறெதற்க்கும் உரிமையில்லை என்பது சாதிவெறியில்லையா? மொழி வெறியில்லையா?

தீட்சிதர் தவிர்த்து மற்றயவர்களை கோயிலில் விட்டால் திருட்டு போய்விடும் என்று சூத்திரன் அத்தனை பேரும் திருடன் என்று சொல்வது RSS வெறியர்களுக்கு தேனாக இனிக்கிறது போலும்.

இவையெல்லாம் சாதி வெறி, மொழி வெறி பிடித்து பெரும்பான்மை மக்களை அவமதிப்பவர்கள் RSS உள்ளிட்ட பார்ப்பன வெறீ கும்பலா அல்லது வேறு யாருமா என்பதை தெளிவாக காட்டுகின்றன.

இவற்றையெல்லாம் பிரசூரிப்பதற்க்கு திணமணியின் கழுத்தில் பாயந்து வயிற்றில் ஊடும் பூனூல் அனுமதிக்காது.


இப்படியெல்லாம் பேசினால் உடனே இஸ்லாமில் வேற்று மொழியில் இருக்கிறதே என்று ஒரு வாதம் வைக்கிறார்கள் இவர்கள். மசூதிகளில் அராபியில் ஓதுகிறார்கள்தான். அங்கு தாய்மொழிக்காகக் குரல் எழும்பி, அதற்கு இமாம்கள் தடைபோட்டால் அதற்கும் குரல்கொடுப்போம். ஆனால் கிறித்தவமோ, இசுலாமோ தமிழ் மொழியை நீச பாசை என்றோ, தமிழ்மக்களை-சூத்திரர்களை 'வேசிமக்கள்'என்றோ சொல்வது இல்லை அதுவும் நீதிமன்றம் முதல் இதோ தினமணியில் அறிக்கை வடிவில் வரை தமிழை அவமானப்படுத்திவிட்டு தைரியமாக வலம் வருவதில்லை அவர்கள் என்பதும் உண்மை.

பிறமதத்துக் காரர்களிடம் தமிழில் வழிபாடு நடத்து என்று வலியுறுத்துவார்களா என்று வக்கனையாக கேட்க்கும் இவர்கள் இங்கு கிறித்துவ வழிபட்டு இடங்களில் தமிழில்தான் வழிபாடு நடக்கிறது. மேலும் பைபிளை அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து அதனை வாசிக்கக் கல்வியை அவர்கள் தந்ததால்தான் கல்வியும் கிறித்தவமும் ஒடுக்கப்பட்டமக்களிடையே பரவிற்று. முதலில் இந்துமத வேதங்களையும், உபநிசத்துக்களையும், அப்படியே சங்கரர் எழுதிய சரோஜாதேவி புத்தகத்தையும், சவுந்தர்ய லகரியையும் மொழிபெயர்த்துவிட்டு இதைப் பத்திப் பேசலாம்.

இதே முற்போக்கு புரட்சிகர அமைப்பினர்தான் இஸ்லாமிய பிற்போக்கு தனங்களுக்கு, பெண்ணடிமைத்தனங்களையும், தஸ்லீமா நஸ்ரீனுக்கு ஆதரவாகவும் வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள். அமைதியாக அயோக்கியத்தனம் செய்யும் போதெல்லாம் ஏதோ பார்ப்ப்னிய மதத்தில் ஆக சிறப்பாக பல்வெறு விசயங்கள் இருக்கிறது என்று பூ சுற்றுவதும். அவர்களின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தினால் உடனே இஸ்லாமில் இல்லையா, கிருத்துவத்தில் இல்லையா என்றோ அல்லது பாகிஸ்தானில் இல்லாததா, பங்களாதேசில் இல்லாதாதா என்றும் வேறு மாதிரி பேசுவதும் என்பதாக இரட்டை நாக்கு கொண்டவர்கள் இவர்கள். ஏதோ நாம் இஸ்லாம், கிருத்துவம், பாகிஸ்தான், பங்களாதேஸ் எல்லாம் மிக முற்போக்கானவை என்று சொன்னது போல.

இன்று நாத்திகனுக்கு அங்கென்ன வேலை என்று கேட்க்கும் கோயம்புத்தூர் கொலைகாரன் அர்ஜூன் சம்பத என்ற மனிதகுல விரோதி, ஆத்திகரான ஆறுமுகசாமி தனது உயிருக்கு நாத்திகர்களான மக இகவினர் துணையின்றி தீட்சிதர்களால் ஆபத்து என்று கோர்ட்டில் ஒப்படைத்து சிறை புகுந்த போது அவருக்கு பாதுகாப்பு கொடுக்க முன் வந்திருக்கலாமே? தஸ்லீம நஸ்ரீனுக்கு ஆதரவளிக்க முன் வந்த வாய்களுக்கு ஏன் ஆத்திகரான ஆறுமுகச்சாமிக்கு ஆதரவளிக்க முடியவில்லை?

அதாவது சர்ச்சையின் நோக்கம் ஆன்மிகமாக இல்லாததுதான் இவர்களுக்கு கவலையளிக்கிறதாம். உண்மையில் இவர்களுக்கு கவலையளிப்பது இவர்களின் பார்ப்ப்னிய ஆன்மிக ஆதிகத்திற்க்கு ஆபத்து உருவாகியுள்ளது என்பதே ஆகும். ஆத்திகரான ஆறூமுகச்சாமிக்கெதிராக தமிழுக்கெதிராக வரலாறு நெடுகிலும் தீட்சிதர்கள் சதி செய்த பொழுதெல்லாம் கண்டிக்க வக்கில்லாத முதுகெலும்பற்ற அடிமை கும்பல் தலைவான அர்ஜூன் சம்பத் இன்று தமிழர்களின் உரிமைக்கு போராடும் போது ரொம்ப நல்லவன் போல சதி செய்கிறார்கள் என்று முதலை கண்ணீர் வடிப்பதின் பின்னால் உள்ள சதியை நாம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

என்றைக்கு பெரும்பான்மை மக்களின் பண்பாட்டை அவமதிப்பது என்றும், பெரும்பான்மை மக்களின் உரிமைகளை அவமதித்து மறுப்பதும் என்றும், பிற்போக்குத்தனத்தால் மக்களை முட்டாள் ஆக்குவது என்றும் ஆகிவிட்டதோ அன்றே அங்கு ஆத்திகம் நாத்திகம் என்பதெல்லாம் இல்லை மாறாக மக்களின் உரிமை மட்டுமே முன்னுரிமை பெறுகிறது. அதனால் அதற்க்கான போராட்டத்தின் நியாயத்தைத்தான் நேர்மையானவன் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறவன் பேச வேண்டுமேயொழிய அதை விடுத்து அப்பொழுது வந்து ஆத்திகம் நாத்திகம் என்று பேசினால் உண்மையில் அவன் ஏதோ சூழ்ச்சி செய்கிறான் என்றுதான் அர்த்தம். அர்ஜூன் சம்பத்தும் சரி அவருக்கு இந்த கட்டுரையை எழுதி கொடுத்த கும்பலும் சரி சூழ்ச்சிகள் செய்வதில் விற்பன்னர்கள் என்பது சமீபத்தில் தென்காசி இந்து முன்னணியினர் குண்டு வைத்து கைதான சம்பவத்திலும், கோவையில் குண்டு இருப்பதாக புரளி கிளப்பி அப்பாவிகளை மாட்டி விட்ட வழக்கிலும் சரி தெளிவாகவே அம்பலமாகியுள்ளது.

ஆறுமுகசாமி சிவபக்தர்தான். அவரின் பக்தியை இந்துமக்கள் கட்சியும் தீட்சிதர்களும் மதிக்கிறார்கள். அவர்களே அவரின் பக்தியை மெச்சி, நாத்திகம் பேசுறவாளிடம் இருந்து தனியாகித் தன்னந்தனியனாகி ஆறுமுகசாமி வந்தால் அவரை அரவணைப்போம் என்கிறார்கள். இதை நாம் நம்புவதற்கு நாம் ஒன்றும் நந்தனார் மாதிரி அப்பாவிகள் இல்லை. ஏனெனில் நேற்று போலிஸ் பாதுகாப்புடனும், மனித உரிமை கழகம், மக இக உள்ளிட்ட தோழமை அமைப்பினரின் பாதுகாப்புடன் சென்ற பொழுதே தீட்சிதர்கள் போலிசையும் தாக்கி போராடியவர்களையும் தாக்கினர் எனும் போது தனியாக வந்தால் இவர்களின் அரவணைப்பு எப்படியிருக்கும் என்று தனியாக சொல்ல வேண்டியதில்லை. இவர்கள் அரவணைப்பையும், பின்னர் சோதியில் கலக்கவைக்கும் பித்தலாட்டத்தையும். தில்லைக்கோவிலின் தென்வாயிலே சொல்கிறது. அன்று நந்தன்காலத்தில் ம.க.இ.க. தோழர்கள் இல்லை. நீதிமன்றம் (அநீதியே சொன்னாலும் அதன் பெயரிலாவது) இல்லை. இருந்திருந்தால். நந்தன் கதையை இன்று இருப்பது போல படித்திருக்க நியாயமில்லை.

பார்ப்ப்னியம் அதுவும் குறிப்பாக சிதம்பரம் தீட்சிதர்கள் வேற்று சாதியினரையும், மாற்று கருத்துள்ளவர்களையும் அரவணைக்கும் வரலாறு நந்தன், வள்ளலார் முதல் இன்று ஆறுமுகச்சாமி வரை நன்றாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை நாத்திகர்களான மக இக, மனித உரிமை கழகம் போன்ற அமைப்புகள் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இருந்திருந்தால் ஆத்திகர்களான நந்தனையும், வள்ளலாரையும் இன்னும் சில பல பார்ப்ப்னிய எதிர்ப்பு தியாகிகளின் உயிரையும் பாதுகாத்திருக்கலாம்.

இந்தியாவெங்கும் பொய்யையும் புணை சுருட்டையும் ஆயுதமாக கொண்டு வரலாற்று அவமரியாதை துடைக்க கட்டிடங்களை இடித்து தள்ள புறப்பட்ட வாணர கும்பலின் தலைமை கொலைகார தறுதலையான அர்ஜூன் சம்பத். சிதம்பரத்தின் தெற்கு வாயில் இன்றும் தாழ்த்தப்பட்டவர்களின் அவமரியாதைச் சின்னமாக நிற்கிறதே. இந்து மக்கள் முன்னணி அந்த சுவரை இடிக்க கரசேவை ஆரம்பித்துவிட்டு நியாயவான் போல பேசட்டும்.

இந்த மக்கள் எழுச்சி 19ஆம் நூற்றாண்டில் இருந்திருந்தால், பார்ப்பனியத்தையும், கண்மூடிப்பழக்கங்களையும் மண்மூடிப்போகச் சொன்ன வள்ளலாரையும், பார்ப்பனீயத்தை எதிர்த்துக் கொலையுண்டு வரலாற்றில் மறைக்கப்பட்டு விட்ட பல ஆன்மீகவாதிகளையும் படுகொலையில் இருந்து காப்பாற்றி இருகக் முடியும். வள்ளலாரை ஜோதியில் எரித்த அதே வெறி. நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம் இன்னமும் சிவனடியார் ஆறுமுக சாமியை நோக்கிப் பாய்ந்தபோது. நக்சல்பாரிகள்தான் தமிழைக் காப்பாற்றினர். பார்ப்பனியத்தின் கொலைவெறிச் சதியை முறியடித்தனர். ஏனென்றால், எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ,எங்கெல்லாம் உரிமைகள் நசுக்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் வசந்தத்தின் இடி முழக்கமாய் மக்களுக்கு வெற்றியை கொடுக்க களமிறங்கும் நக்சல்பாரி. அதுதான் சிதம்பரம் தமிழ் வழிபாடு விசயத்திலும் நடந்துள்ளது.

இன்று தமிழ், ஆத்திகம் என்று பேசும் இன்று பார்ப்பன அடியாளும், அவனது கட்டுரையை பிரசூரித்த பார்ப்பன பத்திரிகையும் இது வரை தமிழர் என்ற சொல்லப்படுபவர்களில் பெரும்பான்மையினர் பிரச்சினைக்கும் சரி, இந்துக்கள் எனப்படுபவர்கள் இந்து என்ற பெயரிலேயே அவமாரியதை செய்யப்படும் பிரச்சினையிலு சரி குரல் கொடுத்ததேயில்லை. அங்கெல்லாம் நாம்தான் கொடுத்துள்ளோம். அதே போலத்தான் ஆறுமுகச்சாமி விசயத்திலும்.

சுயமரியாதையுள்ள ஓவ்வொருத்தனும் அர்ஜூன் சம்பத் போன்ற ரவுடிகளின் திமிர்பிடித்த பேச்சுக்களை பிரசூரிக்கும் பார்ப்பன கொழுப்பெடுத்த தினமணியை கடுமையாக கண்டிக்க வேண்டியுள்ளது.

இதனை அனைத்து நண்பர்களுக்கும் அனுப்புங்கள்.

அசுரன்

Wednesday, March 05, 2008

தமிழர் வழிபாட்டுரிமை போரில் வென்ற சிவனடியார் ஆறுமுகச்சாமிக்கும், தோழர்களுக்கும் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்!!!

ன்று காலை சிதம்பரம் திருச்சிற்றம்பல மேடையில் வெற்றிகரமாக தேவாரத்தை பாடி வழிபட்டிருக்கிறார் சிவனடியார் ஆறுமுகச்சாமி.
( திருத்தம்: இன்று காலை சிவனடியார் ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடியதாக செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது, அது தவறான தகவலாகும் ஆறுமுகச்சாமி காவல் துறையால் கைது செய்யப்பட்ட கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் இந்த நிலையில் காலையில் சிதம்பரம் திருச்சிற்றம்பல மேடையில் வேறு சில சிவனடியார்களே தேவாரம் பாடி வழிபட்டனர், அரசை பகைத்துக் கொள்ள விரும்பாத தீட்சித ரவுடிக் கும்பல் அவர்களை மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அந்தர் பல்டி அடித்தது.)

மூன்று நாட்களுக்கு முன்பாக சிதம்பரம் திருக்கோவிலில் தமிழில் பாடி வழிபடலாம் என்று தமிழக அரசு ஆணை வெளியிட்டது, அந்த ஆணையை பெறுவதற்கென, சிவனடியார் ஆறுமுகச்சாமியும் அவருக்கு பக்கத்துணையாக‌ மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான ம.க.இ.க, பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகள் நடத்திய போராட்டம் நெடியதாகும்.

முன்னொரு சமயத்தில் திருச்சிற்றம்பல மேடையில் சிவனடியார் ஆறுமுகச்சாமி தேவாரம் பாடுவதற்கு முயன்ற பொழுது அவரது கையை முறித்து கோயிலுக்கு வெளியே வீசியெறிந்தது பார்ப்பன தீட்சித ரவுடிக் கும்பல், பார்ப்பன கும்பலின் இந்த‌ அடாவடித்தனத்திற்கு பிறகு, தமிழில் பாட முயன்று தாக்கப்பட்ட அந்த முதியவருக்காக களத்தில் இறங்கியது மனித உரிமை பாதுகாப்பு மையம்., அதன் தோழமை அமைப்பான‌ மக்கள் கலை இலக்கிய கழகமும் தமிழ்நாட்டில் தமிழில் வழிபட உரிமையற்ற இந்த கேவலமான நிலையை மக்களிடம் விளக்கி தெருமுனை கூட்டம், சுவரொட்டி பிரச்சாரம், பேருந்து பிரச்சாரம், கையெழுத்து இயக்கம் என்று வீச்சாக இயங்கியது, இந்த பிரச்சார இயக்கங்கள் மக்கள் மத்தியில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தின, அதே சமயத்தில் (மனு)நீதிமன்றமோ மொக்கையான காரணங்களை கூறி தமிழ் வழிபாட்டுரிமையை மறுத்து தீட்சிதர்களுக்கு ஆதரவாக தீர்பளித்தது, "உங்கள் மனதுக்குள்ளேயே பாடிக் கொள்ளுங்கள்" என்று திமிர் வழிய பேசியது நீதிமன்றம்."

தொடர்ந்து செய்யப்பட்ட‌ மேல்முறையீடுகளாலும், மனித உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த வழக்கறிஞர்களின் அயராத உழைப்பு, சிவனடியார் ஆறுமுகச்சாமியின் சமரசமில்லாத போராட்டம் இவற்றின் காரணமாகவும் இறுதியில் அரசும் நீதிமன்றமும் அடிபணிந்தன, சிதம்பரம் திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் வழிபடலாம் என்று தமிழக அரசு ஆணை வெளியிட்டது.,

தமிழக அரசு வெளியிட்ட இந்த ஆணைய நிறைவேற்றுவதற்காக, சிவனடியார் ஆறுமுகச்சாமியும், மனித உரிமை பாதுகாப்பு மையம், மக்கள் கலை இலக்கிய கழக தோழர்களும் இரண்டு நாட்களுக்கு முன்பு கோவிலின் உள்ளே நுழைந்த பொழுது அவர்களை சுற்றி வளைத்து தாக்கியது தீட்சித பொறுக்கி கும்பல், இந்த தாக்குதலில் சிவனடியாரின் மூக்கு கண்ணாடி உடைந்து சிதறியது, இத்தோடு நிறுத்தாமல் அங்கு 'காவ‌லுக்கு' வ‌ந்திருந்த காவ‌ல்துறையின‌ரையும் சேர்த்து தாக்கியதோடு அவ‌ர்க‌ளை க‌டித்து குத‌றிய‌து தீட்சித‌ வெறிநாய்க‌ள், இருப்பினும் இந்த‌ வெறிநாய்க‌ளை அடித்து உதைகாம‌ல், ப‌வ்ய‌மாக‌ தூக்கி வெளியில்விட்ட‌ போலீசு, போராடிய‌ தோழ‌ர்கள் மீது த‌டிய‌டி ந‌ட‌த்தி தீட்சித‌ர்க‌ளை விட‌ தாங்க‌ள் பெரிய‌ வெறி நாய்க‌ள் என்ப‌தை நிரூபித்த‌து. போலீசு வெறிநாய்க‌ள் ந‌ட‌த்திய‌ இந்த‌ தாக்குத‌லில் ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌ க‌ழ‌க‌த்தை சேர்ந்த‌ ஐந்திற்கும் மேற்ப‌ட்ட‌ தோழ‌ர்களின் ம‌ண்டை உடைந்து இர‌த்த‌ம் கொட்டிய‌து, குருதி கொட்ட‌ கொட்ட‌ அவ‌ர்க‌ளை துர‌த்தி துர‌த்தி த‌டியால் தாக்கின‌ போலீசு வெறிநாய‌க‌ள், த‌மிழ்நாட்டில் த‌மிழில் வ‌ழிப‌டும் உரிமை வேண்டி போராடியதற்காக‌ அந்த‌ தோழ‌ர்க‌ள் தாக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர், தாக்க‌ப்ப‌ட்ட‌தோடு ப‌ல‌ தோழ‌ர்க‌ள் கைதும் செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர், ம‌.க‌.இ.க.

ம‌னித‌ உரிமை பாதுகாப்பு மைய‌த்தை சேர்ந்த‌ 35 தோழ‌ர்க‌ளை கைது செய்து சிறையில‌டைத்த‌து போலீசு.

இந்த‌ அராஜ‌க‌த்தை க‌ண்டித்து சுவ‌ரொட்டி ஒட்டிய‌தோடு, சென்னையில் ஆர்ப்பாட்ட‌மும் ப‌த்திரிக்கையாள‌ர் ச‌ந்திப்பினையும் ந‌ட‌த்திய‌து ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌ க‌ழ‌க‌ம். இந்த‌ செய்திக‌ளையெல்லாம் எந்த‌ ப‌த்திரிக்கையும் வெளியிட‌வில்லை, க‌ட்டுப்பாட்டாக இவற்றை இருட்ட‌டிப்பு செய்த‌ன‌. இருப்பினும் தோழ‌ர்க‌ளின் வீச்சான‌ போராட்ட‌த்தின் விளைவாக, தமிழில் வழிபடுவதை தடுக்கும் பொறுக்கி தீட்சித‌ர்க‌ளை நேற்று எச்ச‌ரித்து அறிக்கை வெளியிட்ட‌து த‌மிழ‌க‌ அர‌சு, இந்த‌ நிலையில்தான் இன்று காலையில் சிவனடியார் ஆறுமுக‌ச்சாமி, ம‌னித‌ உரிமை பாதுகாப்பு மைய‌ம் ம‌ற்றும் ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌ க‌ழ‌க‌த்தை சேர்ந்த‌ தோழ‌ர்க‌ள் சித‌ம்ப‌ரம் கோவிலின் உள்ளே நுழைந்தனர், அப்பொழுது திருச்சிற்ற‌ம்ப‌ல‌ மேடையில் ஏறிய‌ ஆறுமுக‌ச்சாமி நெஞ்சுருக‌ தேவார‌ம் பாடி சிதம்பரம் நடராசனை வ‌ழிப‌ட்டார்.

தீட்சித பார்ப்பன வெறிநாய்களின் சதி வேலைகளையும் தாக்குதல்களையும், அரசியல் செல்வாக்கினையும் மக்கள் துணையோடு எதிர்கொண்டு வீழ்த்தி த‌மிழ‌ர்க‌ளின் வ‌ழிபாட்டுரிமைக்கென‌ ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ போரில் வென்ற‌ சிவ‌ன‌டியார் ஆறுமுக‌ச்சாமி, ம‌னித‌ உரிமை பாதுகாப்பு மைய‌ம், ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌ க‌ழ‌க‌ம் ம‌ற்றும் அத‌ன் தோழ‌மை அமைப்புக‌ளை சேர்ந்த‌ தோழ‌ர்க‌ளுக்கு எங்க‌ள் செவ்வ‌ண‌க்க‌ங்க‌ளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இமெயிலில் நந்தன்

Related Posts with Thumbnails