TerrorisminFocus

Thursday, December 25, 2008

புதிய குற்ற பரம்பரைகள்!!!

வெள்ளைக்காரன் காலத்தில் குற்ற பரம்பரை சட்டம் என்ற பெயரில் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த மக்களை ஒடுக்கும் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி தினமும் இரவு காவல் நிலையத்தில் தங்கியிருந்து தான் அந்த இரவில் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை என்று நீருபிக்க வேண்டும் அந்த சாதியைச் சேர்ந்த ஆண்கள். இந்த சட்டம் தற்போது இல்லை. ஆனால் குற்ற பரம்பரைகள் புதிய வடிவில், புதிய தேவைகளுக்காக தற்போது உருவாகி வருகின்றன. சமூகத்தை பாசிச மயமாக்கும் போது சட்டங்களின் தேவை என்பது இல்லாமல் போய் விடுகிறது என்பது ஒன்று மட்டும்தான் குற்ற பரம்பரை சட்டம் என்ற ஒன்றின் தேவையில்லாமல் போனதின் அடிப்படை. ஆனால் அப்படியொன்று வெகு நுட்பமாக நடைமுறையில் உள்ளது.

இன்றைய மறுகாலனியாதிக்க சூழலில் வன்முறையும், ஆளும் கும்பல்களுக்கு எதிரான சமூக/தனிபட்ட வன்முறைகளும் மேலும், மேலும் அதிகமாகி வருகின்ற சூழலிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள ஏதுவாக ஒட்டு மொத்த சமூகத்தையே இன்று குற்ற பரம்பரையாக்கி உள்ளது இந்த அரசு. குண்டு வெடிப்புகள் முதல், மக்களின் போர்குணமிக்க போராட்டங்கள், விவசாயிகள் தற்கொலை, பட்டினி சாவுகள், வேலையிழப்பு வரை மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கான காரணங்களை மறைத்து அரசியல் செய்யும் ஆளும் கும்பல் தன்னை புன்னியாத்மாவாக காட்டிக் கொண்டு மக்களை குற்றவாளியாக்கும் மதி கெட்ட சூழல் நிலவுகிறது.


இது குற்ற பரம்பரைகளின் காலம்:

இணையத்தில் உலாவ இணையக் கடைக்கு செல்கிறாயா, அங்கு உனது அடையாள அட்டை, முகவரி, தொடர்பு எண்ணைக் கொடுக்க வேண்டும். செல்பேசி சிம் கார்டு வாங்குகிறீர்களா உங்களது அனைத்து விவரங்களும் வேண்டும். உங்களது தகவல் தொடர்புகள் அனைத்தும் ஒட்டு கேட்க்கபடும் என்பதை அறிவிக்கும் தேவை கூட இன்றி வெளிப்படையாகவே நம்மை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் நமது படுக்கையறையுள் நுழைவது போல நடைமுறைப்படுத்தும் சூழல் நிலவுகிறது. வாடகை வீடு தேடுகிறீர்களா, உங்களது அடையாள அட்டை, வேலை பார்க்கும் அடையாள அட்டை, வீட்டு முகவரி இத்யாதி விசாரணைகளை ஒரு குற்றவாளியை விசாரிப்பது போலவே விசாரித்து பிற்பாடே கொடுக்கப்படும், எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நான் சோதனையிடப்படலாம், உள்ளாடையணியாமல் வெளியே செல்ல பயப்படும் அளவுக்கு நிலைமை கெடவில்லை என்பது என்னவோ வாஸ்தவம்தான்.



ஹோட்டலில் ரூம் எடுக்கிறீர்களா, உங்களுடன் ஒரு பை இருந்தால்தான் ரூம் கொடுப்போம் ஏனேனில் பை இருந்தால்தான் நீங்கள் வெளியூர்க்காரர் என்று நம்ப முடியும்(இப்படியும் சிலருக்கு அனுபவங்கள்), அப்புறம் வழக்கம் போல பிற விசாரணைகளும். பத்து இளைஞர்கள் கூடி நின்று பேச முடியாது. அப்படி பேசி களைந்த காலங்கள் எல்லாம் தொன்னெடுங்காலத்தைச் சேர்ந்த கதையாக மாறிவிட்டன. RSS ஆட்சி செய்யும் இடங்களிலோ காதலிப்பதும், பார்க்குகளில் தம்பதியர் உலாவுவதும் குற்றம். ஒவ்வொரு முக்குச் சந்திலும் ஒருவன் நின்று கொண்டு அடையாள அட்டை கோரும் காஸ்மீரத்து பாசிச சூழல் ஒன்று நாடு முழுவதும் விரைவில் உருவாகும் என்பதைத்தான் இவையெல்லாம் சொல்லுகின்றன. இப்படி தனிமனிதன் சமூகத்துடன் உறவாட இருக்கும் ஒவ்வொரு புள்ளியிலும் அவனை முதலில் குற்றவாளியாக்கி, நிரபராதி என்று நீரூபிக்க நிர்பந்திப்பதன் மூலம் ஒவ்வொரு தனிமனிதனும் காயடிக்கப்பட்ட மலட்டு எருமையாக சோரனையின்றி ஆக்கப்படுகிறான். ஏரியா விட்டு ஏரியா போகும் ஒரு நாயை அங்குள்ள நாய்கள் மூத்திர மற்றும் பீத்திரக் குழாயை மோந்து பார்த்து அடையாளப்படுத்துவதை ஒத்த அருவெறுக்கத்தக்க சூழலாக இது மாறிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் ஆளும் வர்க்கத்தின் ஏஜெண்டுகளாக, உளவாளியாக மாற்றப்படுகிறான். ஜனநாயகமின்மைக்கும், பாசிசத்திற்க்கும் பழக்கப்படுத்தப்படுகிறான். புத்தகங்கள் படிப்பதே தீவிரவாதமாகவும், உண்மைகளை பேசுவதே பயங்கரவாதமாகவும் பீதியுடன் பார்க்கப்படும் உள்நாட்டு யுத்தங்களின் காலத்திற்க்கான நுழைவாயிலின் வெகு அருகே நெருங்கி விட்டோம் என்பதைப் போன்ற உணர்வையே இவை நமக்கு கொடுக்கின்றன. இந்தியாவே அறிவிக்கப்படாத அவசர காலநிலையை நெருங்கிவிட்டது போல உள்ளது.




டெல்லி பல்கலைகழகத்தில் பேசிய கிலானி மீது எச்சில் துப்புகிறார்கள் RSS குண்டர்கள், புஷ் மீது செருப்பு எறிந்தத விமரிசையாக புகழ்ந்து சுற்றியிருந்தவர்களின் கவனத்தை கவரந்த (அல்லது புண்படுத்திய) குற்றத்திற்காகவும், முஸ்லீமாக பிறந்த குற்றத்திற்காகவும் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் குற்றவாளியாக விசாரிக்கப்படுகிறார். போலீசிடம் அவரை போட்டுக் கொடுத்தது அவருடன் வேலை பார்க்கும் ஒரு நல்ல இந்தியன் அல்லது 'இந்து'யன். கர்நாடகாவில் RSS சமூகத்தையே குற்றபரம்பரையாக்கியுள்ளதன், பாசிசமயமாக்கியுள்ளதன் அடையாளம் இது. மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினால் அடுத்த நிமிடமே போலீசுக்கும், ஊடகங்களுக்கும்(வீட்டுக்குள் இருக்கும் போலீசு இது) தகவல் கொடுக்கும் சேவையை இலவசமாக செய்கிறார்கள் ஆட்டோக்காரர்கள். ஆட்டோக்காரர்களுக்கும், போலீசுக்குமான இந்த வர்க்க பாச??!!! நட்புக்கு, பிணைப்புக்கு CPM கட்சி சாட்சி. இது சமூகத்தை கண்காணியாக, உளாவாளியாக இந்த அரசும், அவர்களது ஏஜெண்டுகளும்(எ-கா:CPM) மாற்றியுள்ளதற்கு அடையாளம்.




சமூகத்திலுள்ள ஒவ்வொரு தனிமனிதனும் மற்றொரு தனிமனிதனை சந்தேகத்துடன் கண்காணிக்கும் ஒரு பேரபாயகரமான சூழலைத்தான் இன்று நாம் காண்கிறோம். சாதி, இனம், மதம், நாடு, தோல், மொழி, ஆடை, வர்க்கம், பாலினம், பிராந்தியம் என்று பார்க்கும் மனிதரையெல்லாம் பிரித்து சுருக்கி சந்தேகத்துடனும், பீதியுடனும், முன் முடிவுடனும் அனுகுவதையே இன்று நாம் பெரு நகரங்களில் பார்க்கிறோம். ஒட்டு மொத்த சமூகத்தையே குற்றவாளியாக்கி, அதே சமூகமே தனது ஒவ்வொரு உறுப்பினரையும் தானே கண்காணிக்கும் சூழலைத்தான் ஆளும் வர்க்கங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த குழப்பத்தில் இந்த குழப்பம் அனைத்திற்க்கும் காரணமான தனது தவறுகளையெல்லாம் மறைத்துக் கொள்கின்றன ஆளும் வர்க்கங்கள். நாமோ ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிமிடமும், நான் குற்றவாளியில்லை என்று நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு நிரூபித்துக் கொண்டே இருக்கும் வெட்கம் கெட்ட, சுயமாரியதையற்ற இழிநிலையில் உழல்கிறோம். இதுதான் குற்ற பரம்பரை என்று ஒன்று இருப்பதாக உணர்வதின் அடிப்படை. இதுதான் சமூகம் தன் மீது தானே பாசிசத்தை திணிக்கும் விதம்.

ஒரு சமூகமே குற்ற பரம்பரையாக, ஒரு நாடே குற்ற பரம்பரையாக காட்டப்பட்டு அந்த குற்றவுணர்வின் பின்னே இந்த சூழலுக்கு காரணமான ஆளும் வர்க்கங்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்கின்றன. அந்த குற்றவுணர்வின் பின்னே இந்த சமூகம் தன் மீதே பாசிசத்தையும், சுய கண்காணிப்பையும் செலுத்திக் கொள்கிறது. சமீபத்திய மும்பை பயங்கரவாத தாக்குதல்களுக்கு பிறகு பரவலாக உலாவும் கருத்துக்களை கவனித்தால் இது புரிபடும். இதனை இன்னும் வீரியமாக்க சட்டங்களும் இயற்றப்படுகின்றன. அதாவது விளக்குமாறுக்கு பட்டு குஞ்சலம்.







இந்த குற்ற பரம்பரை சூழல் இந்த சமூகம் ஒன்றிணைந்து இயங்கும் ஒவ்வொரு புள்ளியிலும் உறுதியாகி உள்ளதா என்றால் இல்லை. இன்னும் அப்படியொரு சூழல் பரவலாகவில்லை என்பதுதான் நேர்மையான பதில். சரியாகச் சொன்னால் குற்ற பரம்பரைச் சூழல் கண்ணையும், கருத்தையும், சுயமரியாதையும் உறுத்தும் அளவுக்கு பரவி இருக்கிறது என்பது மட்டும்தான் தற்போது உண்மை. ஆனால் இந்த குற்ற பரம்பரை சூழல் தனது விசக் கரங்களை மேலும் மேலும் விரிவாக்கி ஜனநாயகமாக மனிதர்கள் இந்த சமூகத்தில் உறவாடிக் கொள்ளும் ஒவ்வொரு புள்ளியையும், ஒவ்வொரு இடைவெளியையும் மிக வேகமாக தன்னுள் விழுங்கி வருகிறது என்பதுதான் நாம் இங்கு மிக கவலையுடன் கவனிக்க வேண்டியுள்ளது. அப்படியொரு சூழல் பரவலாக வலுப்பட வலுப்பட ஆளும் வர்க்கங்களின் வெட்கங்கெட்ட ஏகாதிபத்திய அடிவருடித்தனமும், பாசிச அடக்குமுறையும், இந்துத்துவ கொடுங்கோன்மையும் அதன் உடன் - எதிர் வினைகளும் இன்னும் பருண்மையான, நுட்பமான, ஆழமான வடிவங்களை எடுக்கும் என்பதுதான் நாம் இங்கு கவலைப்பட வேண்டிய முக்கிய அம்சம். இந்த கட்டுரையை படிப்பவர்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புவதும் இவற்றைத்தான்.

சமூகத்தை குற்றபரம்பரையாக்கும் இந்த போக்கை, ஏகாதிபத்தியங்களும், அவர்களின் அடிவருடிகளான ஆளும் வர்க்கங்களும் தமது உலகளாவிய சுரண்டலினாலும், உள்ளூர் அயோக்கியத்தனங்களினாலும் உருவாக்கியுள்ள இந்த சூழலை நாம் மாற்றியமைக்க முடியும். உண்மையான குற்றபரம்பரை யாரோ அவர்கள் ஒவ்வொரு நிமிடமும் மக்களுக்கு தாம் குற்றவாளி இல்லை என்று நீருபிக்க கோரும் ஒரு சூழலை நாம் உருவாக்கினால் அது முடியும். யார் உண்மையில் இந்த படுபயங்கர சூழலுக்கு காரணமோ, அதாவது பெரும் பணக்காரர்கள், ஊரை அடித்து சாப்பிடும் டாடா, அம்பானி போன்ற கொழுத்த தரகு முதலாளிகள், பார்ப்பன கொழுப்பெடுத்த பெரும் ஊடகங்கள், RSS இந்துத்துவ பயங்கரவாதிகள், அவர்களின் ஏஜெண்டுகளான IAS, IPS உள்ளிட்ட பெரும் அதிகாரிகள், வோட்டு பொறுக்கி அரசியல் வியாதிகள், சாதி சங்கங்கள் இவர்களின் அடியாள் படையான கிரிமினல் தாதாக்கள், மபியாக்கள், போலீசு, நீதிபதி போன்றவர்கள், பிற மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் உள்ளிட்டவர்களை நாம் குற்ற பரம்பரையாக மாற்றினால்தான் உழைக்கும் மக்களாகிய நாம் குற்ற பரம்பரையாக கருதப்படுவதிலிருந்து விடுதலை கிடைக்கும்.




அதற்கு முதலில், குற்றபரம்பரையாக நாம் இல்லை என்ற உணர்வை பெற வேண்டும். பிள்ளை பெற்று வளர்க்கும் பன்றிகளாக அல்ல மாறாக சுயமரியாதையுள்ள மனிதர்களாக உணர வேண்டும். விவசாயி, தொழிலாளி, மாணவர்கள், அரசு ஊழியர்கள், தனியார் கம்பேனி ஊழியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் எல்லாருக்கும் பிரச்சினை ஒன்றுதான், எதிரி ஒருவர்தான் என்று உணர்ந்து அந்த அடிப்படையில் ஒன்று திரள வேண்டும். ஜனநாயகத்திற்க்கான ஒவ்வொரு வாய்ப்பையும் விட்டுக் கொடுக்காமல் உறுதிப்படுத்த போராட வேண்டும். தீர்வு தனிமனிதர்களிடம் இல்லை, ஒரு சமூகமாக நம்மிடம்தான் உள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.

அப்படியொரு சூழலில் மக்களை குற்றவாளிகளாக்கி கண்காணித்த பொழுதெல்லாம் கண்டும் காணாமல் களிவெறியாட்டம் போட்ட ஊடகங்களும், ஆளும் வர்க்கங்களும் உண்மையான குற்றவாளிகள் குற்ற பரம்பரையாக நடத்தப்படும் அந்த சூழலில் 'குற்ற பரம்பரை' 'குற்ற பரம்பரை' என்று கதறி கூச்சலிடுவார்கள். அப்படித்தான் ரஸ்யா, சீனாவில் நடந்த பொழுது உலகெங்கும் ஆளும் ஏகாதிபத்திய கும்பல்களும் அவர்களின் ஆசன வாய்களாக செயல்பட்ட ஊடகங்களும் கூச்சலிட்டன. அப்படியொரு முடை நாற்றமெடுக்கும் கூச்சலே நாம் சரியாக செயல்படுகிறோம் என்பதற்கான அளவுகோல். அதுவே மக்களுக்கான புதிய ஜனநாயகம் உறுதிப்பட்டுள்ளதிற்கான அடையாளம்.

அசுரன்

Tuesday, December 23, 2008

ஜனநாயகம் என்பது RSS போன்ற இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு மட்டுமே உரியது - கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] !!!

டந்த மாதம் போரூரில் RSS கும்பலிடம் அடிவாங்கியது CPMன் தமுஎச. அடிவாங்கிய கையோடு அதை எதிர்க்கிறேன் பேர்வழி என்று சொல்லி போய் இன்னொரு முறை அடிவாங்கி வந்தார்கள். இதற்கு முன்பு டெல்லியில் CPM அலுவலகத்தை அடித்து நொறுக்கினார்கள் RSS கும்பல். இன்னும் பல இடங்களில் அடிவாங்கியிருக்கிறார்கள் CPM. ஆயினும் இந்த சம்பவங்களில் எல்லாம் CPM தனது பின்புறத்தையும், முன்புறத்தையும் மூடிக் கொண்டு சொறிநாயைப் போலவே வந்துள்ளது. கேட்டால் ஜனநாயகம் என்று ஒரு பதில் சொல்வார்கள். இவர்களின் சகலப்பாடி CPIயாவது RSS கும்பலின் சஹாவை எதிர்க்க ஜனநாயக முறையிலாவது போராடி அடிவாங்கியது. அந்த நடவடிக்கைகளையும் CPM செய்வதில்லை. நல்லது, இதே ஜனநாயக அனுகுமுறையைத்தான் அல்லது சரியாக சொன்னால் சொறிநாய்த்தனத்தைத்தான் எல்லாரிடமும் மேற்கொள்கிறார்களா CPM பாசிஸ்டுகள்? இல்லை நண்பர்களே.

சில நாட்களுக்கு முன்பு முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு குறித்து பல்லாவரத்தில் பிரச்சாரம் செய்யப் போன ம.க.இ.கவின் தோழமை அமைப்பான புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்தவர்களை CPM தோழர்கள் உருட்டுக் கட்டை ஜனநாயகத்தால் தாக்கியுள்ளனர். பதிலுக்கு வாங்கிக் கட்டிக் கொண்டார்கள் என்பதும், அது CPM ஏரியா என்பதும், அங்கு சமீபத்தில் CPMலிருந்து பிரிந்து வந்து புஜதோமுவில் இணைந்த கடுப்பு அவர்களுக்கு உள்ளது என்பதும் கிளை செய்திகள். இதே போலத்தான் காரப்பட்டில் ம.க.இ.க மீது தாக்குதல் நடத்தி தேமுதிக நண்பர் ஒருவரை கொன்றனர் CPM காலிகள்.

புரட்சிகர அமைப்பினர் மட்டுமல்ல, சிங்கூர், நந்திகிராம், தற்போது மேற்கு வங்க பழங்குடியினர், கேரள பழங்குடியினர், பிற புரட்சிகர-ஜனநாயக அமைப்பினரை CPM அனுகும் விதம் இப்படிப்பட்டதுதான். நமது கேள்வி ஒன்றுதான் RSSயின் அத்வானி என்ற பயங்கரவாதியை நண்பர் என்று புத்ததேவு அன்புடன் கூப்பிடுவதும், அவர்களுடன் பொது மேடைகளில் கூடிக் குலாவுவதும், RSSக்கு மட்டுமே ஜனநாயகம் என்று சொல்லுவதுமான ஒரு கட்சியை இந்துத்துவ அமைப்பின் தொங்கு சதை என்று அழைப்பதா அல்லது வேறு ஏதேனும் பெயரிட்டு அழைப்பதா?

RSSக்கும் இவர்களுக்குமான முரன்பாடு என்பது வோட்டு பொறுக்குவதில் மட்டும்தான். இன்னும் சரியாகச் சொன்னால் புரட்சிகர அமைப்புகளை கண்டுதான் CPM உண்மையில் பீதியடைந்துள்ளனர். நல்லது, உங்களது பய பீதி எங்களுக்கு புரிகிறது. உங்களுக்குள்ளேயே நீங்கள் நொறுங்க தொடங்கிவிட்டீர்கள். இனி அதை வீரியப்படுத்துவது மட்டுமே புரட்சிகர அமைப்புகளின் வேலை.

CPM கட்சியை அவர்களுக்கு புரிந்த மொழியிலேயே அனுகுவது ஒன்றும் பெரிய விசயமல்ல. இன்னும் சரியாகச் சொன்னால் தமிழகத்தின் பெரிய கட்சிகளே கூட ம.க.இ.க. விசயத்தில் எச்சரிக்கையாகவே நடந்து கொள்வர். ஏனேனில் ம.க.இ.க.வின் எதிர்வினை அப்படிப்பட்டதாக இருக்கு. அந்தவகையில் CPMயை சமீபத்திய தாக்குதல்களில் புரட்சிகர அமைப்புகள் அனுகவில்லை. CPM விசயத்தில் உடனடி எதிர்வினை என்பது அவர்கள் தனிமைப்பட ஏதுவானதாக இருப்பதுதான் நல்லது. அதற்கு பின்பு அவர்களை அடித்தால் அது தர்ம அடி என்பதைவிட சாவு மணி என்பதாகவே இருக்கும். கூடிய விரைவில் சாவு மணியை 'சந்திக்க'இருக்கும் சந்திப்பு போன்ற CPM அல்லக்கைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு வினவுவில் வந்த கட்டுரையை இங்கு மறுபிரசூரம் செய்கிறேன்.

சொரனையுள்ள CPM உள்ளங்களை விவாதத்திற்கோ அல்லது CPMயை விட்டு வெளியே வரவோ அழைக்கிறேன்.

பய பீதி வரும் முன்னே!! CPMக்கு சாவுமணி வரும் பின்னே!!!

அசுரன்

நன்றி வினவு

____________________________________________________________

கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] !
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது 24/12/2008 by வினவு

காரப்பட்டில் எமது தோழர்களின் குருதியைச் சுவைத்த சிபிஎம் குண்டர்களின் கோரப்பற்களில் ஒட்டிய உதிரம் உலர்வதற்குள், சென்னை பல்லாவரத்தில், அக்கம்யூனிஸ்டுக் கட்சியின் காலிகள் தமது வெறியாட்டத்தை மீண்டும் அரங்கேற்றியுள்ளனர். போலி கம்யூனிஸ்டுகளான சிபிஎம் கட்சியினர் மாநிலத்திற்கு ஒரு வேசம் போடுவதாக பிற அரசியல் கட்சிகள் அவர்களை குற்றம் சாட்டுவது வழக்கம். ஆனால் எல்லா மாநிலங்களிலும் அவர்களிடம் காணப்படும் ஒரே ஒற்றுமையான அம்சம், பொறுக்கித்தனம். வங்கத்தின் நந்திகிராம் முதல் தமிழகத்தின் காரப்பட்டு வரை தமது கொலை வெறியாட்டத்தை நடத்தி, தமக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் கொடியின் நிறத்தில் மட்டுமே வேறுபாடு என்பதை நாள்தோறும் நிரூபித்து வருகின்றனர்

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, இதுகாறும் காணாத வகையில், ‘தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம்’ எனும் தாரக மந்திரத்தோடு, மத்தியிலும், மாநிலங்களிலும் ஆளும் சகல ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளாலும், கட்சி வேறுபாடின்றி அமல்படுத்தப்பட்டு வரும் புதிய பொருளாதார கொள்கை, நமது நாட்டின் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களது வாழ்க்கையை அழித்து, அவர்களை வீதிகளில் சக்கைகளாக வீசியிருக்கிறது. குறிப்பாக நமது நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தின் மீதான தாக்குதல் ஈவிரக்கமற்றது. நூற்றுக்கணக்கான அரசுடைமை ஆலைகள், தொழில் நிறுவனகங்கள் இழுத்து மூடப்பட்டன. அறுபதாண்டுகளாக தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை, அரசு காலில் போட்டு மிதித்து நசுக்குகிறது. அனைத்து உரிமைகளையும் பறிகொடுத்து வரும் தொழிலாளர்கள் கிளர்ந்து போராடினால்,ஹூண்டாய் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களைப் போல கொலைவெறித் தாக்குதல்களை நடத்தி ஒடுக்கி வருகிறது. மறுபுறமோ சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், நிலக் கையகப்படுத்தல்கள், தொழிற்சங்கச் சட்டங்களை திருத்துதல், வரிச் சலுகைகள் என முதலாளிகளின் தாள் பணிந்து, குறிப்பறிந்து வேசித்தனம் புரிகிறது.

எனவே, நமது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இம்முதலாளித்துவ பயங்கரவாதத்தை எதிர்த்து தொழிலாளி வர்க்கத்தையும், பரந்துபட்ட உழைக்கும் மக்களையும் அணிதிரட்டும் நோக்கத்தோடு, எமது தோழமை அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்ணணி (பு.ஜ.தொ.மு), வரும் ஜனவரி 25ஆம் தேதியன்று சென்னை அம்பத்தூரில் ’முதலாளித்து பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு’ என்ற தலைப்பில் மாநாடொன்றை நடத்த திட்டமிட்டு, மக்களிடையே முழுவீச்சாகப் பிரச்சாரம் செய்து வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை(22-12-08) அன்று, இப்பிரச்சாரத்தையொட்டி தோழர் ஜெயராமன், தோழர் வெற்றிவேல் செழியன் முதலான ஆறு பு.ஜ.தொ.மு தோழர்கள் சென்னை பல்லாவரம் பகுதியில் பிரச்சாரம், நிதிவசூலுக்காக சென்றனர். கொடிகளோடு செஞ்சட்டையணிந்த நமது தோழர்கள் அப்பகுதிக்கு சென்றதுமே அவர்களை எதிர்கொண்ட அப்பகுதியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட சி.பி.எம், DYFI கும்பல், தோழர்களை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் தோழர்கள் மக்களிடையே பிரச்சாரம் செய்து கொண்டிருந்த பொழுது, தோழர்களுடைய சைக்கிளை எட்டி உதைத்து, தகராறில் ஈடுபட்டுள்ளனர். ‘கண்ணியமான’ ஜோதிபாசு, சுர்ஜீத், காரத் வழி வந்த அக்குலக்கொழுந்துகள் கேட்போர் கூசக் கூடிய கெட்ட வார்த்தைகளால் தமது அர்ச்சனையை துவங்கியுள்ளனர்.

“மரியாதையாக பேசுங்கள் தோழர்” என்று சொன்ன தோழர் ஜெயராமனை, “என்னடா தோழர்ரு, பூலுன்னுகிட்டு” (என்ன ஒரு பாட்டாளி வர்க்க பண்பாடு!) என்றவாறு கும்பலாக தாக்கியுள்ளனர். தடுக்க முயன்ற தோழர் வெற்றி வேல் செழியனை ஒருவன் மிகக் கடுமையாக நெஞ்சில் தாக்கியுள்ளான். உருட்டுக் கட்டை கொண்டு ஒருவன் தாக்கியதில், தோழர் ஜெயராமனின் தோள்பட்டை இறங்கியுள்ளது. பொறுத்துக் கொண்டிருந்த இளம் பு.ஜ.தொ.மு. தோழரொருவர் உருட்டுக் கட்டையை பிடுங்கி திருப்பித் தாக்கியுள்ளார்.காயம்பட்ட நிலையிலும் அவரை தடுத்த தோழர் ஜெயராமன், “இவர்கள் வேண்டுமென்றே பிரச்சினை செய்கிறார்கள். திருப்பித் தாக்கினால் பிரச்சினை திசை திரும்பி விடும். வேண்டாம்” எனக் கூற, அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர். உடனடியாக, நேரே பல்லாவரம் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கே தோழர்கள் செல்வதற்கு முன்னரே, பல்லாவரம் பகுதி் சி.பி.எம் செயலாளர் ஜீவா என்பவர் தலைமையில் திரண்டு வந்த காலிக் கும்பல், நக்சலைட்டுகள் தங்களை தாக்கி விட்டதாகப் பொய்ப் புகார் கொடுத்தது. அந்த ஜீவாவிற்கும், இந்த ஜீவாவிற்கும் ஒரு வித்தியாசம்தான். அவர் கம்ப ரசம் குடிப்பார். இவர் எல்லா ரசமும் குடிப்பார். குடித்த கையோடு புரட்சியாளர்களை தேடிப் பிடித்து அடிப்பார். எல்லாம் மக்கள் ஜனநாயகப் புரட்சி நலனுக்காகவே! சப் - இன்ஸ்பெக்டர் பஞ்சாட்சரம் எனும் சி.பி.எம் கைத்தடி அவர்களுக்கு ஒத்தூத, நீண்ட நேரம் வாதங்கள் நடந்துள்ளன. “திருட்டு வசூல் பண்ணி ஏண்டா எங்கத் தாலியறுக்கிறீங்க” என ஒரு பெண் எஸ்.ஐ சலித்துக் கொள்ள, “யார் திருட்டு வசூல் பண்றது, சிக்னலுக்கு சிக்னல் வசூல் பண்ணி பொழப்பு நடத்துறவங்க யாருன்னு ஊருக்கே தெரியும். நாங்கள் நக்சல்பாரிகள். உழைக்கும் மக்களின் நலனுக்காக, அவர்களது கோரிக்கைகளுக்காக, வெளிப்படையாக நிதிவசூல் செய்கிறோம்.” என காவல் நிலையத்தில் வைத்தே செருப்பாலடித்தது போல் பதில் கூறியுள்ளார் நமது தோழர். காலை 8 மணிக்கு தாக்கப்பட்ட தோழர்கள், மதியம் 1 மணி வரை அடிபட்ட நிலையிலேயே, போலிசின் கைக்கூலித்தனத்தை எதிர்த்து வாதிட்டுள்ளனர். பின்னரும் கூட தாக்கியவர்களை கண்டுபிடிப்பது சிரமம் எனக் கூறி, முதல் தகவல் அறிக்கை பதிய மறுத்து விட்டார் கைத்தடி பஞ்சாட்சரம்.

அடிபட்டால் ஓடி விடுவார்கள் எனத் தப்புக் கணக்குப் போட்ட சி.பி.எம், நிலைமை முற்றுவதை உணர்ந்து சமாதானமாகப் போய் விடலாம் எனக் கூறியுள்ளனர். அதனை ஏற்க மறுத்த தோழர்கள், குற்றத்தை பதிவு செய்யாமல் ஓய மாட்டோம், கட்டப் பஞ்சாயத்து செய்யும் போலிசை அம்பலப்படுத்தாமல் விட மாட்டோம் என தீர்மானகரமாக தெரிவித்துள்ளனர். அடுத்த நாளே சென்னை முழுதும் கண்டனச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு விட்டன. மேலும் கண்டன ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. போலீசின் கைக்கூலித்தனத்தை தோலுரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதியப்படவுள்ளது.

குரோம்பேட்டையில் போலி கம்யூனிஸ்டுத் தொழிற்சங்கத்தைப் புறக்கணித்து, பு.ஜ.தொமுவில் உணர்வுள்ள சி.பி.எம் அணிகள் இணைந்ததனால் ஏற்பட்ட எரிச்சலின் விளைவாகவே இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது என அறிய வருகிறோம். “எங்க ஏரியா உள்ள வராதே!” என வெறியாட்டம் போடும் பல்லாவரம் குத்தகையாளர்களுக்கு ஒன்றைக் கூறிக் கொள்கிறோம். நந்திகிராமில் ‘வெளியாட்கள்‘‘ (OUTSIDERS) நடமாட்டத்தை தடுக்க, துப்பாக்கிச் சூடுகளும், குண்டுவெடிப்புகளும், கற்பழிப்புகளும். நடத்தி ஏரியாக்களை கைப்பற்றிய காலித்தனம் இங்கே எடுபடாது. உழைக்கும் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் உள்ள நாங்கள் உங்களைப் புழுக்களைப் போல ஒதுக்கி விட்டு, எங்கள் வேலையை செய்து கொண்டிருக்கிறோம். வழி மறித்து வம்பிழுப்பதே உங்கள் வேலையாக வைத்துக் கொள்வீர்களேயானால், காலால் மிதித்து நசுக்கி விட்டு கடந்து செல்ல கிஞ்சித்தும் தயங்க மாட்டோம். வார்த்தைச் சவடால்களில் எமக்கு நம்பிக்கையில்லை.உங்களை எரிச்சலில் தள்ளும், நீங்கள் புரியாதது போல் நடிக்கும் எமது சமரசமற்ற புரட்சிகர அரசியலோடும், உங்களுக்கு புரியக் கூடிய பொருட்களோடும் களத்தில் சந்திப்போம்.

பின்குறிப்பு:

புரட்சிகரப் பொழுதுபோக்கிற்காக அமைப்பு நடத்தும் சிபிஎம்மின் கலை இலக்கிய கதம்பம் தமுஎச, அதே நாளின் இரவில் சென்னை கோடம்பாக்கத்தில் தனது சினிமா மோகத்தை அடிப்படையாக வைத்து கலை இரவொன்றை நடத்தியுள்ளது. புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்களை விற்பனை செய்வதற்காக ஒரே ஒரு பு.ஜ.தொ.மு தோழர் சாலையில் கடை பரப்பி வைத்துள்ளார். இரவு 12 மணிக்கு அங்கே வந்த பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 10 ‘குடிமகன்கள்’ - DYFI, சி.பி.எம் குண்டர்கள், போதைத் தலைக்கேற, பொதுமக்கள் முன்னிலையிலேயே கெட்ட வார்த்தைகளால் ஏசி, கடையை எடுக்கச் சொல்லி, காலித்தனம் செய்துள்ளனர். தள்ளுமுள்ளை தடுக்க வந்த SFI தோழர்கள், “இவர்களை ஏன் எடுக்கச் சொல்கிறீர்கள்? இவர்கள் பத்திரிக்கைகள் நல்ல பத்திரிக்கைகளாகத்தானே தெரிகின்றன” என்றதற்கு, “இல்லை, இல்லை, இவர்கல் நக்சலைட்டுகள், நமது எதிரிகள்” என ஆவேசக் கூச்சல் போட்டுள்ளன சிபிஎம்மின் குடிமகன்கள். பின்னர் தோழர் பத்திரிக்கைகளை எடுத்தும் கூட ஆத்திரம் அடங்காத கும்பல், தோழர் கையிலிருந்த விலைவாசி உயர்வுக்கு எதிரான 300 துண்டுப் பிரசுரங்களை பிடுங்கி, அங்கேயே தீக்கிரையாக்கியுள்ளது. சாராயம் குடித்து விட்டு சலம்பும் ‘தோழர்களுக்கு’ உழைக்கும் மக்களின் வியர்வையிலிருந்து பெறப்பட்ட நிதியில் தயாரிக்கப்பட்ட பிரசுரங்களின் வாசனை தெரியும் என நம்புவது மடமை. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த, கூடியிருந்த சிபிஎம் அணிகளும், SFI மாணவர்களும் நமது தோழரிடம் பின்னர் தமது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எதிர்வினையில்லாத வருத்தம் குற்றத்திற்கு ஒப்பாகும் என்பதை நேர்மையான சிபிஎம் அணிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

இம்மாதம் போயஸ் தோட்டத்தில் அம்மாவை சந்தித்து பொக்கே கொடுத்து கூட்டணிக்கு அச்சாரம் போட்டுள்ளது மார்க்சிஸ்ட் கட்சி. புரட்சித் தலைவியின் பொற்பாதங்களில் பணிந்து தோழர்கள் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். எல்லாம் காங்கிரசு, பா.ஜ.கவை எதிர்ப்பதற்கான தேர்தல் உத்திகளாம். மதமாற்ற தடைச்சட்டம், ஆடு கோழி பலியிடத் தடை சட்டம், சேதுசமுத்திர திட்டத்திற்கு ராமர் பாலம் என்ற புராணப் புரட்டின் மூலம் எதிர்ப்பு என்று இந்துத்வ வாதிகளை விட அதிக வேகத்தில் செல்லும் அம்மா மதசார்பற்ற சக்தியாம். மேலும் தேர்தல் முடிந்து அம்மா பா.ஜ.க பக்கம் சாயலாம் என்பதையும் “தோழர்கள்” உணர்ந்திருக்கிறார்களாம். அதேபோல தேர்தலுக்கு பின் சி.பி.எம் கட்சி மதவாத சக்திகளை ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்பதற்காக காங்கிரசுக்கு ஆதரவு தருவதையும் தோழர்கள் மறுக்கவில்லை. இடையில் தமிழ்நாட்டில் இரண்டு சீட்டுக்கள் வேண்டும் என்பதற்காக மார்க்சிஸ்ட் கட்சி கொடுக்கும் அரசியல் விளக்கத்தைப் பார்த்தால் சந்தர்ப்பவாதத்தின் இலக்கணத்தை புரிந்து கொள்ளலாம். போயஸ் தோட்டத்தின் ஆசியில் போலிக் கம்யூனிஸ்டுகள் புரட்சியை முடிப்பதற்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம். தலைமையே இப்படி பிழைப்பு வாதத்தில் புரளும் போது அணிகள் ரவுடித்தனம் செய்வதில் என்ன வியப்பு? இல்லையென்று மறுக்கும் நேர்மை உள்ள சி.பி.எம் அணிகள் கட்சியை விட்டு வெளியேறுங்கள், புரட்சிகர அமைப்புக்களில் அணிதிரளுங்கள், இல்லையேல் வரலாற்றில் போலிக்கம்யூனிஸ்டுகள் என்ற பட்டத்தோடு நீங்கள் இடம் பெறவேண்டியிருக்கும்.




Related Articles:

காரப்பட்டு: மார்க்சிஸ்டுகளின் கொலைவெறியாட்டம்: தொண்டர்களாக குண்டர்கள்! தலைவர்களாக கிரிமினல்கள்!
போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி !
உழைக்கும் வர்க்கத்தினரை இரக்கமின்றி வெட்டிக் கொல்வ...
CPIயின் நூதனமான புரச்சிப் பணிகள்!!!
விழுப்புரத்தில் விவிமு தோழர்களை வெட்டிப் படுகொலை ச...
மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல், CPMன் தோல்வி, ரவுட...
நண்பர் அத்வானியும், காம்ரேடு சுஸ்மா சுவராஜும்!!!
மக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் தாண்டா நாங்கள் - CPM...
மானங்கெட்ட சிபிஎம்மும், விடுதலையின் விடிவெள்ளி பகத...

Sunday, December 21, 2008

இங்கு கிழிந்த டவுசருக்கு மாற்றாக புது டவுசர் கிடைக்கும்!! - ரொம்ப நல்லவர்கள் கடை!!

மீபத்துல அதாவது 2008 ஆரம்பத்துல ஏகாதிபத்திய பொருளாதாரம் டவுசர் கிட்டத்தட்ட கழன்று தொங்கிய நிலையில் இருக்கும் போது தனது டவுசரை காப்பாற்றும் கடைசி நிமிட போராட்டத்தின் ஒரு பகுதியாக கையில் கிடைத்த இடத்திலெல்லாம் தனது மூலதனத்தை போட்டு வைத்து சும்மா சுற்றி சுற்றி சூதாடியது(பங்கு சந்தை, முன்பேர வர்த்தகம்). குறிப்பாக முன்பேர வர்த்தகத்தில் சூதாடி அன்றாட பொருட்களின் விலையை சகட்டு மேனிக்கு உயர்த்தியது, பெட்ரோல் விலையை சகட்டு மேனிக்கு உயர்த்தியது, பிறகு தங்கம், பிறகு வெள்ளி இப்படி கடைசியில் மொத்த பன்னாட்டு-தரகு முதலாளிகளின் டவுசரும் கிழிந்து அம்மணக்கட்டையாக ஆகின்ற வரைக்கும் அவர்களின் சூதாட்டம் தொடர்ந்தது.

இந்த சூதாட்ட ஸ்ட்ரிப்டீஸ் டான்ஸ் காலம் முழுவதும் இது குறித்து நாமும் பலமுறை எழுதி எச்சரித்தே வந்தோம். குறிப்பாக பெட்ரோல் விலையேற்றத்தின் போது இது அப்பட்டமான சூதாட்டத்தின் விளைவு என்பதை ஆதாரப் பூர்வமாகவே பல தோழர்கள் எழுதினார்கள். ஆனால் இந்த காலகட்டம் முழுவதும் ஏகாதிபத்திய டவுசரின் பட்டன்களாகவும் திகழ்ந்து பெருமை சேர்த்த அல்லக்கை அடிவருடிகள் இந்த உண்மைகளை மூடி மறைக்க எல்லா மாய்மாலங்களையும் கையாண்டனர். குறிப்பாக பெட்ரோல் விலையேற்றம் குறித்த பிரச்சினையின் போது அதனை பீக் ஆயில் என்ற அரதப் பழசான செத்து சுண்ணாம்பான சித்தாந்தத்தை அதன் கல்லறையிலிருந்து தோண்டி வெளியே எடுத்து விளம்பரப்படுத்தினர்.

பீக் ஆயில் என்பது வேறு ஒன்றும் இல்லை எண்ணைய் இருப்புக்கும், அதன் தேவைக்கும், அது குறைந்த பட்ச எதிர்கால எண்ணைய் பயன்பாடு வளர்ச்சியில் ஏற்படுத்தும் பாதிப்பும் சேர்ந்து எண்ணையின் சந்தை விலையை உயர்த்துவதை குறிக்கும் ஒரு சொல். அதாவது இன்னும் சுலபமாக டிமாண்டு சப்ளை பிரச்சினை. அதாவது தீடீரென்று உலகம் முழுவதும் டிமாண்டு அதிகமாகி சப்ளை கம்மியாக இருந்ததால் பீக் ஆயில் பிரச்சினை முன்னுக்கு வந்து விட்டது என்று குன்சாக ஒரு கதையை ஆதாரமின்றி அளந்து விட்டார்கள் அடிவருடிகள். அப்பொழுது தோழர்கள் பலர் முன் வைத்த வாதங்களுக்கும் அவர்களிடம் பதில் இல்லை.

இதோ இன்று அவர்களின் எஜமான் ஏகாதிபத்தியங்கள் அவர்களுக்கு பதில் சொல்லியுள்ளன. முற்றிலும் டவுசர் கழண்டு, கிழிந்து நார் நாராக, மண்ணோடு மண்ணாக மக்கிய பிற்பாடு அடுத்த டவுசருக்கு அரசாங்கத்திடம் விண்ணப்பமிட்டு உட்கார்ந்திருக்கும் ஏகாதிபத்தியங்களும், அவர்களுக்கு புது டவுசர் எடுத்து கொடுத்து அடுத்த ரவுண்டு சூதாட்ட ஸ்டிரிப்டீஸ்க்கு அனுப்பி வைக்க உழைக்கும் மக்களிடம் பணம் பிடுங்க களம் இறங்கியுள்ள அரசுகளும் என்று விசயம் அப்பட்டமாக தலைகீழாக இருக்கும் இன்றைய நிலையில், உலகமகா பாகாசுர பன்னாட்டு அஸ்கா புஸ்கா கும்தலக்க கம்பேனிகள் எல்லாம் ஆப்டர் ஆல் சதாரண ஜனங்கள் கொடுக்கும் வரிப்பணத்தில் பிச்சை வாங்க எச்சில் ஒழுக நிற்க்கும் இந்த நேரத்தில், நாங்கெல்லாம் வெரி பிரில்லியண்டு, டேலண்டட், ப்ளடி மக்கள் என்னைக்கு என் வேகத்துக்கு வந்து நான் எப்போ முன்னேற அதனால் என்னை Freeயா விடு என்று பிலிம் காட்டி இன்று மூக்கில் ரத்தம் ஒழுக உடைப்பட்டுள்ள ஏகாதிபத்தியமும், எந்த ஜனங்கள் திறைமையற்ற அடி முட்டாள்களோ, அவர்கள் அதி திறைமையான, வேலைவாய்ப்புகளை அள்ளி வழங்கும், உலகின் ரட்சகனான பன்னாட்டு கம்பேனிகளுக்கு படியளக்கும் இன்றைய வெட்கம் கெட்ட சூழலில் சில விசயங்கள் நடந்து வருகின்றன.

ஏகாதிபத்திய ஆண்டவனே அம்மணமாக அலையும் போது அவனது அல்லக்கை முண்டங்கள் ஏகாதிபத்திய அடிவருடிகள் இன்னும் கேவலமான நிலையிலேயே இருப்பார்கள் என்பதை அவர்களது கல்லறை மவுனத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது. ஆயினும் நமக்கு ஒரு சின்ன சந்தேகம் ஒருவேளை அவர்களுக்கு சுரனை இருக்குமோ என்று. அதுதான் இந்த பதிவை எழுதத் தூண்டியது. அல்லக்கைகளை கல்லறையிலிருந்து துயிலெழுப்பும் ஒரு உசாகால பாடலாக இந்த பதிவை எடுத்துக் கொள்ளலாம்.

மக்களிடம் பிச்சையெடுத்துதான் தனது லாபத்தை பராமரிக்க முடியும் என்ற நிலையில் இருந்த ஏகாதிபத்தியங்கள் தமது சூதாட்ட வெறியை குறைத்துக் கொண்டவுடன், விலைவாசி உயர்வு குறைந்தது, பெட்ரோல் விலை குறைந்தது. அதாவது அடிவருடிகள் சொன்னது போல உலகின் பயன்பாட்டு அளவு குறைந்ததால் பெட்ரோல் விலை குறையவில்லை. அல்லது உலகில் உற்பத்தி பொருட்களின், விவசாய பொருட்களின் உற்பத்தி அதிகரித்ததால் விலைவாசி குறையவில்லை. மாறாக சூதாட்ட கும்பலின் டவுசர் கழண்டு கிழிந்ததாலேயே அதாவது ஏகாதிபத்திய மூலதனம் சூதாடுவதை நிறுத்தி கொண்டதாலேயே விலை குறைந்தது. இந்த உண்மையை வலுப்படுத்தும் முகமாக தற்போது ஒபேக் அமைப்பு தனது பெட்ரோல் உற்பத்தியை ஒரு நாளைக்கு 2 மில்லியன் பேரல் அளவுக்கு குறைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோல் விலையை மீண்டும் உயர்த்தும் திட்டத்திலேயே இதனை செய்துள்ளது(தி ஹிந்து முதல் பக்கம், 18 டிசம்பர், 2008). அதாவது டிமாண்டு சப்ளையும் கிடையாது பீக் ஆயில் புண்ணாக்கும் கிடையாது என்பதைத்தான் இவை எல்லாம் நமக்கு சொல்லுகின்றன.

ஏகாதிபத்திய மூலதனம் சூதாடியதால் பெட்ரோல் விலை ஏறியது, சூதாட்டம் நின்றவுடன் பெட்ரோல் விலை அதளபாதாளத்திற்கு சென்றது. விலையை ஏற்ற போலியாக டிமாண்டு உருவாக்கும் முயற்சியாக பெட்ரோல் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. இதுதான் நடந்துள்ளது. நமது பயன்பாடு அதிகரித்து அந்த தேவைக்கு ஏற்ப உற்பத்தியில்லை என்கிற காரணத்தினால் விலையேற்றம் நடக்கவில்லை. விசயம் இப்படியிருக்க விலைவாசி உயர்வுக்கு இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் நுகர்வு அபரி மிதமாக அதிகரித்து விட்டது என்று இந்த அல்லக்கைகள் குற்றம்சாட்டினர். பெட்ரோல் விலை உயர்வுக்கும் நாமதான் கிடைத்தோம் இந்த அடிவருடிகளுக்கு. அடேய் அல்லக்கைகளா இப்போ நடந்துள்ளதே இதுக்கு என்னடா பதில் சொல்லப் போறீங்க. உங்களோட உண்மையான முதலாளித்துவம் பதுங்கியிருக்கிற இடத்துல இருந்து தோண்டி எடுத்து காட்டுங்கடா.

மக்கள் பணத்தில் சூதாடிவிட்டு மக்களையே இகழ்ந்து நோக்கும் இந்த இழிந்த முதலாளித்துவ பொருளாதாரம் இனிமேலும் இந்த உலகில் நீடித்திருப்பதற்க்கு எந்த நியாயமும் இல்லை. மக்களிடம் பிச்சை வாங்கித்தான் வயிறு வளர்க்க வேண்டும் என்ற நிலையில் உள்ள இந்த திமிர்பிடித்த கிழட்டு ஏகாதிபத்தியத்தை கருணை கொலை செய்துவிடுவதே நல்லது. இந்த நிலைமை இனிமேலும் தொடராமல் இருக்க வேண்டுமானால் ஏகாதிபத்தியங்களின், அதன் உள்நாட்டு பிரதிநிதிகளான ஆளும் பிற்போக்கு அரசுகளின், தரகு பன்னாட்டு முதலாளிகளின் டவுசர்கள் நிரந்தரமாக கழட்டப்பட்டு அவை அம்மணமாக, அரை அம்மணமாக அலையும் உழைக்கும் மக்களிடம் கொடுக்கப்பட வேண்டும். ஏனேனில் நாமும் எத்தனை முறைதான் தரகு பன்னாட்டு முதலாளிகள் கிழிக்கின்ற டவுசர்களுக்கு மாற்றாக புது டவுசர் தயாரித்து அவர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்பது.

இனிமேல், நமக்கென்று டவுசர் தயாரிப்போம்!! அதை நாமே அனைவருக்கும் கொடுப்போம்!!

முதலாளித்துவம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!!

அசுரன்

Related Article:

அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது!

ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை!

ஆரவாரத்தில் ஒபாமா ! அவலத்தில் அமெரிக்க மக்கள் !!

அமெரிக்க திவாலும் சில இந்தியத் தற்கொலைகளும் !

திவாலாகும் அமெரிக்காவிற்கு அடிமையாகும் இந்தியா !

உலகை ஒடுக்கி உல்லாசமாக வாழ்ந்த அமெரிக்காவின் இன்றைய இழி நிலை! - அமெரிக்கா வல்லரசின் வஞ்சக வளர்ச்சியும் - வீழ்ச்சியின் தொடக்கமும். பாகம் 1

ஐரோப்பாவில் மீண்டும் கம்யூனிசம் : தீப்பொறி காட்டுத் தீயாக மாறிவருகின்றது

நிதி நெருக்கடியால் புரட்சி வெடிக்குமா?

சிக்காகோ தொழிற்சாலை தொழிலாளர் உடமையாகியது

'முடிந்துவிட்டது எல்லாம். எந்த பொன்னுலகமும் இங்கு வரவில்லை.

வர்க்கப் போர் இட்ட தீ: ஏதென்ஸ் எரிகின்றது

கிரேக்க மாணவர் எழுச்சி, ஏதென்ஸ் நகரம் தீப்பிடித்தது

அமெரிக்க ஊடகங்கள் திவால்!!

Thursday, December 18, 2008

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் NIA பயங்கரவாதிகளை கட்டுப்படுத்துமா?!!!

ன்னாடா அதிசயம், இடதுசாரி அரசியல் பேசுபவன் NIA வீரியம் கம்மி என்று RSS குரலில் கூவுகிறானே என்று யோசிப்பவர்கள் மேலும் படிக்குமாறு வேண்டுகிறேன்.

இந்த சட்டத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்று அதி இடது சக்திகளை முடக்குவது என்பதும் ஆகும் என்பது இங்கு கவனத்தில் கொள்ளத் தக்கது. இந்த சட்டம் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு என்று பெரும்பான்மை மக்கள் நம்ப வைக்கப் படுகிறார்கள். இவர்கள் குறிப்பிடும் பயங்கரவாதிகள் உயிருக்கே அஞ்சாத போது இந்த சட்டத்திற்க்கு அஞ்சியா பின் வாங்க போகிறார்கள். உண்மையில் இந்தியாவில் இருக்கும் கொஞ்ச நஞ்ச ஜனநாயக உரிமைகளை பறிப்பதுதான் இந்த சட்டத்தின் நோக்கம் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இவர்கள் சொல்லுவது போலவே இந்த சட்டத்தின் நோக்கம் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதுதான் எனில் உண்மையான பல பயங்கரவாத சக்திகளை இந்த சட்டம் மோந்து கூட பார்க்காது.

1984லில் போபாலில் இருந்த யூனியன் கார்பைடு என்ற அமெரிக்க உளவு கம்பேனி இங்கு நடத்திய ரசாயன ஆயுத பரிசோதனையின் அங்கமாக கசிய விடப்பட்ட விசவாயு தாக்கி பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். இந்த பயங்கரவாதத்தை நிகழ்த்திய கம்பேனி நிர்வாகிகள் அனைவரையும் பத்திரமாக அமெரிககாவிற்கு அனுப்பி வைத்தது இந்திய அரசு. இப்படிப்பட்ட பயங்கரவாதிகளை தண்டிக்க கோரும் வழக்கு சம்பிரதாயப் பூர்வமாக நீதிமன்றத்தில் தூங்குகிறது. சேது பால பிரச்சினை அதனையொட்டி கருணாநிதியின் வேலை நிறுத்த போராட்ட குறித்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு பார்ப்பன-ஏகாதிபத்திய பிரச்சினைகளுக்கும், மக்களின் போராட்ட உரிமைகளை பறிக்கும் பிரச்சினைகளுக்கும் ஞாயிற்று கிழமை கூட கடையை திறந்து வைத்து வழக்கு நடத்தி வேக வேகமாக முடிக்கும் இந்திய நீதிமன்றம் பாபர் மசுதி இடிப்பு வழக்கு, காவெரி பிரச்சினையில் கர்நாடகாவின் திமிர்த்தனம், போபால் விசவாயு வழக்கு உள்ளிட்ட மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சினைகளில் அதிக பட்ச மௌனத்தையே வெளிப்படுத்துகிறார்கள்.

இன்று வரை போபால் மக்களுக்கு நிவாரணமோ அல்லது அந்த தொழில்சாலை இருந்த பகுதியின் நிலம், நீர், காற்றை மிக மோசமாக பாதித்து வரும் ரசாயன கழிவுகளை அகற்றவோ அந்த கம்பேனியினரை நிர்பந்தித்து இந்திய அரசு ஒரு மசிரைக் கூட பிடுங்கி போட்டதில்லை என்பது ஒரு பக்கம் இருக்க, இதே போபால் யூனியன் கார்பைடு கம்பேனி டௌ(Dow) கெமிக்கல்ஸ் என்ற பெயரில் இந்தியாவுக்குள் மீண்டும் வருவதற்கு இந்திய ஆளும் கும்பல் எல்லாரும் வரிந்து கட்டி கொண்டு சேவகம் செய்கிறார்கள்.

மன்மோகன் சிங் ஒன்னத்துக்கும் உதவாத அடையாளப் பூர்வமான போபால் விசவாயு வழக்கைக் கூட வாபாஸ் வாங்க நடவடிக்கை எடுக்கிறார், பாஜக கட்சியோ தனது கட்சி நிதியை அதிகப்படியாக முன்னாள் யூனியன் கார்பைடு, இன்னாள் டௌ கெமிக்கல்ஸிடம் வாங்கி, வாங்கிய கூலிக்கு ஒரு படி மேலே சேவகம் செய்கிறது. எல்லை தாண்டி பயங்கரவாதம் செய்த டௌ கெமிக்கல்ஸ் கும்பலை ஒப்படைக்கக் கோரி அமெரிக்கா மீது போர் தொடுக்க கோரிக்கை விடவில்லை பாஜக, மாறாக டௌ கெமிக்கல்ஸின் இரண்டு செருப்புகளில் ஒன்றாக சேவகம் செய்கிறது. யூனியன் கார்பைடு விட்டுச் சென்ற கழிவுகளை தூக்கி சுமந்து சுத்தம் செய்ய டாடா கம்பேனி முன் வருகிறது. உழைக்கும் மக்களின் பணத்தில் வயிறு வளர்த்த CPMவோ டௌ கெமிக்கல்ஸிடம் கூலி வாங்கமாலேயே அவனுக்கு தேவையான நிலங்களை விவசாயிகளிடமிருந்து துப்பாக்கி முனையில் மிரட்டி பறித்துத் தருகிறது.

தாஜ் ஹோட்டலில் குண்டு வெடித்தவுடன் ஏதோ ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் ஆபத்து என்று கத்தி கதறி, இந்திய ஆளும் கும்பலும், ஊடகங்களும் தமது மக்கள் விரோத தன்மையை வெட்கமின்றி விளம்பரம் செய்தனர் என்றால், போபால் பிரச்சினையில் கள்ள மௌனம் சாதிப்பதன் மூலமும், போபால் பயங்கரவாதிகளுடன் கூட்டு களவானித்தனம் செய்வதன் மூலமாகவும் இந்த அரசு யாருக்கானது, இந்த அரசாங்கம் யாருக்கானது என்பதை நமக்கு உணர்த்துகிறார்கள். மார்க்ஸ் சரியாகத்தான் சொன்னார் 'முதலாளித்துவ அரசு என்பது முதலாளிகளின் பொது விவகாரங்களை கையாள்வதற்கான ஒரு அமைப்புதானேயன்றி அது மக்களுக்கானது அல்ல' என்று.

இந்த டௌ கெமிக்கல்ஸ் இந்தியாவில் தற்போது மாகாராஸ்டிராவில் பூச்சி கொல்லி மருந்து தாயாரிக்கிறது. மக்களை கொன்ற அனுபவத்தில் பூச்சிகளை கொல்லும் வியாபாரத்தில் இறங்கியுள்ளது போலும். மேலும் ஊனமுற்றவர்களுக்கு செயற்கை கால் வாங்குவதற்கு சில அமைப்புகளுக்கு சமீபத்தில் ஒரு கோடி வரை நிதி கொடுத்துள்ளது. என்னடா அதிசயம் என்று யோசிப்பவர்களுக்கு இது மைக்ரோசாப்ட் கம்பேனி செய்யும் நிதி உதவி எனும் தந்திரம் போன்றதுதான். அதாவது இந்த நிதியின் மூலம் டௌ கெமிக்கல்ஸ் தயாரிக்கும் செயற்கை கால்களைத்தான் அவர்கள் வாங்க வேண்டுமாம். எப்படி நடுத்தர வர்க்கத்துக்கு அதிக சம்பளம் கொடுத்து அவர்களை தனது சந்தையாகவும், சமூக அடிப்படையாகவும் முதலாளித்துவம் உபயோகப்படுத்திக் கொள்கிறது அப்படிப்பட்டதொரு தந்திரம் இது. இந்த செயற்கை கால்கள் எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்டதுடன், அது எரிந்தால் விசவாயு வெளிவரும் என்றும் சொல்லப்படுகிறது. செத்தும் கெடுத்தான் என்று இதைத்தான் சொல்வார்கள் போலும். (ஆதாரம்: தினத் தந்தி 18-டிசம்பர்-2008, பக்கம் 8, சென்னை பதிப்பு)

போபால் விசவாயு பயங்கரவாதிகளின் தாக்குதல் அதனால் கொல்லப்பட்டவர்களுடன் நின்றுவிடவில்லை, பரம்பரை பரம்பரையாக 24 ஆண்டுகள் கழித்தும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இரண்டாம் தலைமுறை குழந்தைகள் கூட பல்வேறு உடல், மனக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்கு பிறகும் 75 ஆயிரம் குழந்தைகள் இந்த விசவாயுவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இப்படிப்பட்ட பயங்கரவாதிகளை NIA போன்ற ஆளும் வர்க்கத்தை பாதுகாக்கும் சட்டங்கள் தண்டிக்காது, கண்டுகொள்ளாது. இப்படிப்பட்ட பயங்கரவாதிகளை எதிர்த்து மக்கள் போராடுவதை தடுப்பதே இந்த NIA போன்ற சட்டங்களின் பிரதான நோக்கமாகும். என்றைக்கு இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் NIAன் இலக்காக மாறுகிறார்களோ அன்றுதான் உண்மையான பயங்கரவாதிகள் தண்டிக்கப்படுவார்கள், அப்படிப்பட்டதொரு தண்டனைகளுக்கு சட்டங்களின் சாத்வீக முகமூடிகளின் தேவையிருக்காது.

அசுரன்

Tuesday, December 16, 2008

CPIயின் நூதனமான புரச்சிப் பணிகள்!!!

ந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை CPI தலைவர் தா. பாண்டியன் ஒரு கூட்டத்தில் விருந்தினராக கலந்து கொண்டு மேடையில் ஏறியிருந்தார். அதிலென்ன சிறப்பு இருந்துவிடப் போகிறது, அவர்தான் தினப்படிக்கு பல கூட்டங்களில் கலந்து கொள்வாரே என்றால், இந்த கூட்டத்தில் இன்னும் இருவர் இவருடன் இணைந்து கொண்டார்கள். ஒருவர் டெரரிஸ்ட் கட்சியான பாஜகவைச் சேர்ந்த திருநாவுக்கரசு, இன்னொருவர் காங்கிரஸ் தங்கபாலு.

எங்கே இந்த சம்பவத்தை வைத்து கிண்டி கிழங்கு எடுத்து விடுவார்களோ என்று பயந்து போன தா. பாண்டியன் ஒரு சல்ஜாப்பு வேறு சொன்னார். அதாவது இவரது இரண்டு எதிரிகளுடன் இவரை ஒன்றாக மேடையேற்றிவிட்டார்கள் என்று மேடையிலேயே அறிவித்தார். அப்படி மேடை ஏறியதற்க்கு காரணம் அது ஒரு கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்பதால்தான் என்றும் கூறினார். அடடா என்னவொரு கொள்கை குன்றாக இருக்கிறார் இந்த அரிதில் வந்த பெருந்தலைவர்.

இது ஒரு கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்பதால்தான் சாதி சங்க கூட்டமாக இருந்தும் கலந்து கொண்டேன் என்றும் கூறினார். அட சாதி சங்க கூட்டம் வேறயா. அப்படி என்ன கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்றால், அகமுடையார் சாதி சங்க கல்வி நிறுவன கூட்டம் அது. அகமுடையர் என்பது மூவேந்தர் தேவர் சாதிப் பிரிவில் ஒரு பிரிவாக உள்ளது.

CPI அவ்வளவு நெட்ட நெடுமரமான கொள்கை சூரர் கட்சி என்றால் சாதி சங்க விழாவுக்கு அதுவும் பாஜக பயங்கரவாதி கலந்து கொள்ளும் விழாவுக்கு என்னை அழைப்பதா என்று ரத்தக் கொதிப்புடன் குமுறி இவர் மறுத்திருக்க வேண்டுமே. சாதி சங்க கும்பல் இவரை அனுகுகிறது என்றால் ஏற்கனவே அப்படியொரு அனுபவம், இவருடன் தொடர்பு இல்லாமலேயா அனுகுகிறார்கள்? உண்மையில், சாதி சங்க கும்பல் அணுகியவுடனே அவர் எல்லாம் வல்ல ஏசு கிருத்துவிற்கு நன்றி தெரிவித்திருந்திருப்பார், அதாவது சோதனையிலும் ஒரு நல்லது வைத்திருக்கிறான் ஆண்டவன், அதனால்தான் இதனை ஒரு கல்வி சம்பந்தப்பட்ட விழாவாக இருக்க செய்து CPIயின் மானத்தை காப்பாற்ற ஒரு கோமணத்துண்டை ரெடி செய்துள்ளான் என்று. (ராஜீவ் காந்தியை வெடிக்க செய்த அந்த நிகழ்வில் இவரும் படுகாயமடைந்தார். இவரது ஆம்புலன்ஸ் ஒரு கிருத்துவ தேவாலயத்தை கடந்த போது அதனையொட்டிய தனது உணர்வுகளை தனது புத்தகம் ஒன்றில் தா. பாண்டியன் எழுதியிருக்கிறார்).

CPIயின் இன்றைய எதிரிகளான பாஜக, காங்கிரஸ் கலந்து கொள்வது மற்றும் இது ஒரு தேவர் சாதி சங்க கூட்டம் என்ற அத்தனை எதிர் நிலைகளையும் கடந்து இந்த விழாவில் கலந்து கொள்வதற்க்கு காரணம் கல்வி என்று இவர் கதை விட்டாலும், நமது கண்களுக்கு சாதி வோட்டு பொறுக்கும் மொள்ளமாறித்தனம்தான் தெரிகிறது. இப்படி சாதி வோட்டு பொறுக்க இவர்களின் அண்ணன் CPM செய்துள்ள இதே பொன்ற மொள்ளமாறித்தனங்களுக்கு இந்த லிங்கு கிளிக்குங்கள்.

இன்றைக்கு காங்கிரஸை எதிரி என்று சொல்லும் இவர்கள் இதே வாயால் நேற்று அதிமுகவை எதிரி என்று சொன்னார்கள். அதுவும் எப்படிப்பட்ட எதிரி என்பதை அந்த சமயத்தில் அவர்கள் வெளியிட்டிருந்த சிறு கையேட்டில் காணக் கிடைக்கிறது:

"மத நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்ற தமிழகத்தை ஆளும் செல்வி ஜெயலலிதா அம்மையார் இன்று சங் பரிவாரங்களின் ஊதுகுழலாக மாறியுள்ளார்"

"இனப் படுகொலைக்கு பின்னரும் நரேந்திர மோடி முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட ஒரே முதல்வர் செல்வி ஜெயலலிதாவாகும்"

"இது பிஜேபிக்கும், அதிமுகவுக்கும் இடையே உள்ள உறவை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்தது"

(ஆதாரம்: இந்தியா: எந்த திசையில்? ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு வாக்கு கேட்க்கும் CPIயின் சிறு கையேடு)

அய்யா CPI பாண்டியன், நீங்க உங்க லெவலுக்கு திருநாவுக்கரசுடன் சாதி சங்க மேடையில ஒன்னா இருக்க முடியும்னா, கொம்மா பஜாரி ஜெயலலிதா அவுங்க லெவலுக்கு மோடியோட விழாவுக்கு போறதுல என்ன தப்புன்னு இப்போ கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் எமக்கு எழவில்லை. ஏனேனில் அதான் ஜெயலலிதாவும், CPIயும் கூட்டணி சேர போறாங்கள்ள. ஜெயலலிதாதான் இனிமே மதசார்பற்ற மூன்றாம் அணியில் ஒருவராக தீடிர் மாற்றம் அடைஞ்சுட்டாருல்ல. அப்போ சங் பரிவார ஊதுகுழல்... அது திருநெல்வேலி பக்கம் திருகோணமலை பக்கம் புதைஞ்சு கிடக்கு.

அடப்பாவிகளா உங்க வோட்டு பொறுக்கித் தனத்துக்கு ஒரு அளவே இல்லையா? நேத்து வரைக்கும் அந்த அக்கா ஜெயலலிதா சங் பரிவார ஊதுகுழலாம் என்றால், இன்னைக்கு அது என்ன பீச்சாங்குழலா.

போன வருசம் இந்து பயங்கரவாத அபாயம் பிரதானமானதுன்னு சொல்லி காங்கிரஸு கும்பலிடம் சோரம் போனீர்கள். இந்த வருசம் ஏகாதிபத்திய பொருளாதார பயங்கரவாதம் அபாயமானது என்று சொல்லி சங் பரிவார பினாமியான ஜெயலலிதாவுடன் சோரம் போகிறீர்கள். எப்போதுமே சாதி பார்த்துதான் வேட்பு மனு தாக்கல் செய்து சோரம் போகிறீர்கள். தூ.. இந்த பொழப்புக்கு தூக்கு மாட்டி சாகலாம் என்று நீங்கள் ஆவேசப்படுவதற்க்கு எந்த அடிப்படையும் இல்லை. நியாயமாக உங்க கட்சியில் இருக்கிற கம்யுனிசத்தை விரும்பும் அணிகள்தான் இந்த வசனத்தைச் தமக்கு தாமே சொல்லிக் கொள்ள வேண்டும்.

அசுரன்

Sunday, December 14, 2008

You dog! A gift from the Iraqis!! The farewell kiss of Iraqis!!!

BUSH SHOE VIDEO IRAQI MAN THROWS SHOES AT PRESIDENT GEORGE W. BUSH

http://binside.typepad.com/binside_tv/2008/12/bush-shoe-video.html






An Iraqi journalist hurled his shoes at Mr. Bush’s head and denounced him on live television as a “dog” who had delivered death and sorrow here from nearly six years of war.
"This is a gift from the Iraqis. This is the farewell kiss, you dog," the man said, according to a pool translation.
Mr. Maliki’s security agents jumped on the man, wrestled him to the floor and hustled him out of the room. They kicked him and beat him.
Bush also called the incident a sign of democracy, saying, “That’s what people do in a free society, draw attention to themselves,” as the man’s screaming could be heard outside.


Hitting someone with a shoe is considered the supreme insult in Iraq. It means that the target is even lower than the shoe, which is always on the ground and dirty.

This incident will be recorded in history as part of President George W. Bush's legacy.

The journalist who threw the shoe has been identified as Muntather Zaidi.

Another friend said Mr. Zaidi often ended his reports by saying, “Reporting from occupied Baghdad, this is Muntader al-Zaidi.”

அசுரன்

Related Articles:

Instant-Mix Imperial Democracy(Buy One, Get One Free)

ஈராக், ஒரு தேசம் விற்பனைக்கு

மரணதண்டனைக்குரிய முதல் குற்றவாளியே புஸ் தான்

வியட்நாம், ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரில் அமெரிக்கச் சதிகள்

தென் அமெரிக்காவை உலுக்கிய புஷ் எதிர்ப்புப் போராட்டம்

சதாம் படுகொலை! அமெரிக்காவின் மேலாதிக்கத் திமிரும் இரட்டை வேடமும்

கொலைகார கொள்ளைக்காரர்களின் கூலிக் கும்பல் வழங்கிய மரண தண்டனை

'சதாமுக்குத் தூக்கு தண்டனை என்றால், 6 இலட்சம் ஈராக் மக்களைக் கொன்றொழித்த பயங்கரவாத புஷ்ஷீக்கு என்ன தண்டனை?" -கண்டன ஆர்ப்பாட்டம்

ஈராக்: மலிவானதோ மக்களின் உயிர்?

அமெரிக்க பயங்கரவாதம் : அமெரிக்க இராணுவம் ஈராக்கில் நடத்தி வரும் பயங்கரவாத போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தும் ஓப்புதல் வாக்குமூலங்கள்

மிதக்கும் சிறைச்சாலைகள்: அமெரிக்க பயங்கரவாதத்தின் புதிய முகம்

உலக கொலைகாரன் அமெரிக்கா

அமெரிக்காவின் போர்க் குற்றங்கள்

கருப்பு ஓபாமாவை வெள்ளை மாளிகை தேர்வு செய்தது ஏன்?

தொட்டில் ஜனநாயகம் தொடர் புரட்சி வரை

ஈராக்கினுள் (Audio/Visuals)

இவ்வருட இறுதிக்குள் ஈரான் மீது தாக்குதல்?

பிணக்காடாகிறது ஈராக் : அமெரிக்க ஆக்கிரமிப்பால் கொல்லபட்ட ஈராக்கியர்களின் எண்ணிக்கை பத்து இலட்சத்தைத் தாண்டிவிட்டது.

Monday, December 08, 2008

சந்தேகமிருந்தால், ஆர்.எஸ்.எஸ் கும்பலே, ஒட்டிப் பாருங்கள் இன்னொரு சுவரொட்டியை!!

இந்து மதவெறி பாசிஸ்டுகளை எதிர்கொள்வது எப்படி?

கடந்த 08-11-08 அன்று சென்னை சேத்துப்பட்டு பகுதிச் சுவர்களில் விநோதமாய்ப் படர்ந்திருந்தது ஒரு விதக் காளான். "இந்து மதவெறிக் கொலைகாரன்" அத்வானிக்கு 82-வது பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள்தான் அவை!

மக்கள் கலை இலக்கிய கழகம், பெரியார் திராவிடர் கழகம் ஆகிய புரட்சிகர ஜனநாயக அமைப்புகள் செயல்படும் இப்பகுதியில், சேவா பாரதி, தலித் இந்துக்கள் சபை, திராவிடர் பறையர் முன்னேற்றக் கழகம், பிரம்ம குமாரிகள் சங்கம் எனப் பல 'அவதாரம்' எடுத்துக் கடந்த காலங்களில் ஆர்.எஸ்.எஸ்.-பாஜக கும்பல் காலூன்ற முயன்று வந்தது. அப்போதெல்லாம் இப்பார்ப்பன பாசிஸ்டுகளின் தந்திரத்தை அம்பலப்படுத்தி, இந்த நச்சுப் பாம்புகளை சேத்துப்பட்டு பகுதியில் அண்டவிடாமல் விரட்டியடித்தனர் இவ்வமைப்பினர்.

இந்நிலையில், அடுத்தகட்ட படையெடுப்புக்கு முன்னறிவிப்பாய், அத்வானியின் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததைக் கண்ட ம.க.இ.க. மற்றும் பெரியார் தி.க.வினர், அச்சுவரொட்டிகளைக் கருப்பு மையிட்டு அழித்து, உடனே எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இப்பிரச்சினையில் ம.க.இ.க., பெரியார் தி.க.வினரை நேருக்கு நேர் சந்திக்க திராணியில்லாத இந்து வெறியர்கள், தோழர்களை தண்டிக்க போலீசிடம் தஞ்சம் புகுந்தனர்.

உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார், ம.க.இ.க., பெரியார் தி.க. தோழர்களை அழைத்து "போஸ்டர் ஒட்ட பி.ஜே.பி.க்கு இருக்கும் ஜனநாயகத்தை"ப் பற்றி வகுப்பெடுத்தனர்.

"அவுங்க கேஸ் கொடுத்திருக்காங்க, சமாதானமா போயிருங்க. மையிட்டு அழித்த சுவரொட்டிகளைக் கழுவிவிட்டு, மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்" - என்றதுதான் தாமதம், "நாண்டுகிட்டு செத்தாலும் சாவேனே தவிர, அழித்த சுவரொட்டியைக் கழுவமாட்டேன்" என முகத்திலறைந்து எதிர்வினையாற்றினார் போலீசு நிலையம் சென்றிருந்த தோழர்களில் ஒருவர்.

"சரி, நீங்கள் அழித்த சுவரொட்டிகள் மீது மீண்டும் அதே சுவரொட்டியையாவது ஒட்டிக் கொள்ளட்டுமே" - என்று போலீசு 'இறங்கி' வந்த போதும், "மீண்டும் ஒட்டினால் மீண்டும் அழிப்போம் சட்டப்படி என்ன செய்கிறீர்களோ செய்து கொள்ளுங்கள்" - என்று உறுதியாய் நின்றனர் தோழர்கள்.

மறுநாள் சுவரொட்டி அழிக்கப்பட்டதன் நோக்கத்தை விளக்கியும், பா.ஜ.க. பார்ப்பன பாசிஸ்டுகளின் கோர முகத்தையும், இதற்கு துணை போகும் போலீசின் கைக்கூலித்தனத்தையும் அம்பலப்படுத்தி, ம.க.இ.க., பெரியார் தி.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து சேத்துப்பட்டு பகுதி முழுவதும் தெருமுனைப் பிரச்சாரங்களை நடத்தி, இந்து மதவெறி பாசிசக் கும்பலுக்கெதிராக மக்களின் ஆதரவைத் திரட்டின.

இதனைக் கண்டு பாசிசக் கும்பலுக்கு ஆத்திரம் தலைக்கேறியது. போலீசுக்கோ இது கௌரவம் சம்பந்தப்பட்ட பிரச்சினையானது. விளைவு, சுவரொட்டிகளை மையிட்டு அழித்தக் 'குற்றத்திற்காக' ம.க.இ.க.வைச் சேர்ந்த தோழர் வாசுதேவன், பெரியார் தி.க.வைச் சேர்ந்த தோழர் ராஜன் ஆகியோர் மீது பிணையில் வரமுடியாத, கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர்ந்து சிறையிலடைத்தது.

சுவரொட்டியில் இருந்த அத்வானியின் முகத்தை மையிட்டு அழித்ததற்கே கொலை முயற்சி வழக்கும் சிறை தண்டனையுமென்றால், குஜராத், மும்பை, பகல்பூர், கோவை எனப் பல இடங்களில் மதக் கலவரம் நடத்தி ஆயிரக்கணக்கான முசுலீம்களைப் படுகொலை செய்த, அரியானா மாநிலம் துலினாவில் ஐந்து தாழ்த்தப்பட்டவர்களை உயிருடன் அடித்துக் கொன்ற "கொலைகாரன்" அத்வானிக்கு தூக்குத் தண்டனை கொடுத்திருக்க வேண்டும். இந்நேரம் அத்வானியின் கல்லறையில் மரமும் வளர்ந்திருக்க வேண்டும்.

ஆனால், நாடறிந்த இந்த கொலைகாரனுக்கு சட்டமும் நீதிமன்றமும் என்ன தண்டனையை வழங்கியுள்ளது? இம்மத வெறி கலவரங்களுக்காக அத்வானி மீது ஒரு 'பெட்டி கேஸாவது' போட்டிருக்கிறதா?

இப்படிப்பட்ட கொலைகாரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுவரொட்டி ஒட்டக் கூடாது என்ற பொதுநோக்கத்தில்தான் அத்வானியின் பிறந்தநாள் சுவரொட்டி மீது ம.க.இ.க.வும், பெரியார் தி.க.வினரும் மையிட்டு அழித்தனரே தவிர, வேறெந்த 'உள்நோக்க'மும் அவர்களுக்குக் கிடையாது.

இப்பார்ப்பன-பாசிச கும்பல், தனக்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பவர்களையெல்லாம் வன்முறையால் மட்டுமே எதிர்கொண்டு வருகிறது. ஆனால், மற்றவர்கள் மட்டும் இவர்களை எதிர்க்கும் போது "சட்டம் சொல்கிறபடி" நடந்து கொள்ளவேண்டும் என உபதேசம் செய்கிறது.




"சாதிக்கொரு நீதி" பேசும் பார்ப்பன-பாசிசக் கும்பலிடம், இப்பித்தலாட்டத்தைத் தவிர, வேறென்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும்?

ஆர்.எஸ்.எஸ்.ஐயும்-பி.ஜே.பி.யையும் மற்ற ஓட்டுக் கட்சிகளைப் போல பார்க்க முடியாது. அடிப்படையிலேயே இவை இந்து மதவெறி பிடித்த, ஆதிக்க சாதிவெறி பிடித்த, ஆயுத பயிற்சி எடுத்துக் கொண்ட ஒரு பாசிச வன்முறைக் கும்பல். இவர்களை ஒழித்துக் கட்டாமல், சமூக அமைதியை பாதுகாக்க முடியாது. எனவே, இப்பாசிஸ்டுகளின் ஒவ்வொரு அசைவையும் - சுவரொட்டிகள் ஒட்டுவதில் தொடங்கி, விளக்கு பூஜை, ஷாகா நடத்துவது அனைத்தையும் கண்காணித்து, மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, இப்பாசிஸ்டுகளுக்கெதிராக மக்களை அணி திரட்டியாக வேண்டும்.

தனது எதிரிவை வன்முறையால் மட்டுமே அணுகும் இக்கும்பலை, சட்டம், ஜனநாயகம் என்ற வரம்பிற்குள் மட்டுமே நின்று கொண்டு எதிர்கொள்ளவும் முடியாது. அவசியமான பொழுது சட்டத்தை மீறியும்தான் எதிர்கொண்டாக வேண்டும். அவாளின் "மொழியில்" சொன்னால்தானே "அவாளுக்குப் புரியும்"!

சிறையிலிருந்து வெளிவந்த தோழர்களை, ம.க.இ.க., பெரியார் தி.க., வி.சி. அமைப்புகளும், பகுதி மக்களும் பெருந்திரளாக அணி திரண்டு வரவேற்றனர். பின்னர், அவர்கள் அங்கிருந்து முழக்கமிட்டபடியே ஊர்வலமாய்ச் சென்று, அருகிலுள்ள அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, "இப்பாசிஸ்டுகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராட"ச் சூளுரைத்தனர்.

பார்ப்பன பாசிசத்தை வேரறுக்க வேண்டிய அவசியத்தை சேத்துப்பட்டு பகுதி மக்கள் உணர்ந்துள்ளனர் என்பதற்க்கு சான்றாக அமைந்தது சிறை சென்று வந்த தோழர்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சி.

சந்தேகமிருந்தால், ஆர்.எஸ்.எஸ். கும்பலே ஒட்டிப் பாருங்கள் இன்னொரு சுவரொட்டியை!

ம.க.இ.க., சென்னை

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2008

Related Posts with Thumbnails