TerrorisminFocus

Wednesday, January 30, 2008

ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!

நன்றி லேமூரியன்


ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!

தாவது நாங்க ஒரு ஆள்தான் பார்ப்ப்னியத்த எதிர்க்குறோம், நாங்கதான் உண்மையான பார்ப்பன எதிர்ப்பாளர்கள் அப்படின்னெல்லாம் மார் தட்டிக் கொண்டு அலைஞ்சவங்க எல்லாம் இப்போ பார்ப்ப்னியம் மேலே ஏறி நின்னு அடிக்கும் போது எங்கியோ போய் ஒளிஞ்சுக்கிட்டாங்க. அது தனிக் கதை.




இப்போ விசயம் என்னன்னா, பார்ப்பனியத்தோட அடியாள் படை, ரவுடி, கழிசடை கும்பல் துப்பாக்கியோட மத்திய பிரதேசத்துல ஊர்வலம் போயிருக்கானுங்க. அது 30ஆம் தேதி இந்தியன் எக்ஸ்பிரசில் செய்தியா வந்திருக்கு. இதே RSS கும்பலோட அல்லக்கை அமைப்பான பஜ்ரங்தள் ஆளுங்க 2007 ஆரம்பத்தில் மஹாராஸ்டிர நாண்டட்டில் குண்டு தயாரிக்கும் போது வெடித்து மாட்டிக்கிட்டாங்க. அப்பொதான் RSS நாக்பூர் ஆபிசுக்கு குண்டு வைச்சது, வெறு சில மசூதிகளில் குண்டு வெச்சது எல்லாம் இவந்தான்னு தெரிஞ்சது. குண்டு வைச்சிட்டு பலிய முஸ்லீம் மேல போட வசதியா முஸ்லீம் குல்லா முதலான தயாரிப்புகளோட நாண்டட்டில் மாட்டிக்கிட்டாங்க.

இது தவிர்த்து சாஹா பயிற்சி முகாம்களில் துப்பாக்கி பயிற்சி எடுப்பது குறித்து பத்திரிக்கைகளில் படங்களுடன் செய்திகள் வந்தது. இதற்க்கெல்லாம் சிகரம் வைச்ச மாதிரி, குஜராத கலவரத்தில் ராக்கெட் லாஞ்சர் டைப் வெடிகுண்டுகள் பயன்படுத்தியதாக தெஹல்கா விடியோவில் பேசினான் ஒரு எம்.எல்.ஏ. இப்போ போதாக்குறைக்கு RSS கும்பல் IT துறையில் வேறு நேரடியாக நுழைந்துவிட்டது.

இப்படி ஒரு அதி பயங்கரவாத கும்பாலா இருந்தாக் கூட இவனுக்கு இந்த அரசு எல்லா பாதுகாப்பும் வழங்கும். ஏன்னா இந்த அரசே ஒரு பார்ப்பனிய அரசுதான். இது தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்கிறாங்க சில பார்ப்பன எதிர்ப்பாளர்கள். அவிங்கள் நினைச்சாதான் பாவமா இருக்கு.

பார்ப்பினியம் தெளிவாக உள்ளது, இந்த அரசாங்க அமைப்பை நம்பி தனது செய்ல்பாடுகள் இல்லை என்பதில். மாறாக இந்த அரசின் இயல்பில்தான் தனது பலத்திற்க்கான ஊற்று மூலம் உள்ளது என்பது அதற்க்கு தெளிவாக தெரிந்த காரணத்தினால்தான் அரசாங்கம் அமைக்கும் விசயத்தில் ஏற்ப்படும் பின்னடைவுகளை அது பொருட்படுத்துவதில்லை.

ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் இந்தியாவில் பார்ப்னியத்தை வீதிகளில் சந்தித்து அடிக்காத வரை பார்ப்பனியத்துக்கு கவலையில்ல.

Indian Express News

Source: Newscap also read செய்தி விமர்சனம்

Related Articles:

"குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பயங்கரவாதிகள்"

இவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான் ...

பில்கிஸ் தீர்ப்பு - சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியும...

Tuesday, January 29, 2008

எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை!! - அந்த RSS ITயில் நுழையுறான் எச்சரிக்கை!

Source: செய்திரசம்
ங்க தொட்டு இங்க தொட்டு கடசீல RSS கும்பல் நேரடியா IT துறையில நுழைய ஆரம்பிச்சுட்டாங்க. அப்படின்னா இதுக்கு முன்ன அங்க இவிங்க கிடையாதான்னு கேக்கக் கூடாது. இதுக்கு முன்ன மட்டுமில்ல எப்பயுமே நல்ல பசையுள்ள இடத்துல எல்லாம் பாப்பான் உக்காந்துக்கிட்டு பார்ப்பனியத்த பரப்புற வேலைய செஞ்சிக்கிட்டேதான் இருந்தான். முக்கியமா RSSனிடைய விசமப் பிரச்சாரங்கள் பல இமெயில்களில் காணக் கிடைக்கும். ஆயிரம் ரவுண்டு வந்த தாஜ்மஹால் ஒரு இந்து கோயில் என்ற புரளியாகட்டும். என்னுறு ரவுண்டு வந்த சேது பால புரளியாகட்டும், ஐநூறு ரவுண்டு வந்த மெக்காலே 1835ல் பிரிட்டிஸ் பாராளுமன்றத்திற்க்கு அனுப்பிய செய்தி என்ற புரளியாகட்டும். சில நூறு ரவுண்டு வந்த கார்க்கில் யுத்தத்தில் செத்த ராணுவவீரர்கள், காங்கிரஸ் பேமிலி கிளை வரைபடம் என்ற பார்ப்பன குத்ரக்க கடிததங்களாகட்டும், இவையெல்லாமே IT துறையில் இருக்கும் யுப்பி வர்க்க பார்ப்பனியவாதிகளால் வெகுவாக ரசித்து பெரு வரவேற்ப்பை பெற்றவையே. இது தவிர்த்து இடஓதுக்கிட்டை எதிர்த்து IT யுப்பிகள் நடத்திய போராட்டங்களின் பின்னே இருந்ததும் பார்ப்ப்னிய யுப்பி வர்க்கம்தான். இந்த விசயங்களை அமைப்பு வடிவமாக்கி இன்னும் சூதானமாக நச்சை பரப்பும் வேலையில் பொதுக்கருத்தை உருவாக்கும் வேலையில் RSS தேச துரோக கும்பல் ஈடுபடத் துவங்கியிருக்கிறார்கள் என்பதுதான் புதிய செய்தி. வாசித்து பாருங்கள்.

Source: TOI

செய்திரசம்


‘Software shakhas’ draw IT pros to RSS
28 Jan 2008, 0214 hrs IST, Gautam Siddharth, TNN

The Rashtriya Swayamsevak Sangh is adding colour to India’s booming IT sector: saffron.


Efforts to induct young, upwardly mobile IT professionals into its fold have gained momentum in “cybercities” across the country: from Pune to Hyderabad, and from Chennai to Noida.

RSS is drawing young professionals in substantial numbers in these cities to events called “IT Milans” with the ultimate aim of using the networking skills of the young to spread its message.

These “software shakhas” contain everything — from power-point presentations on RSS’s community work to yoga. In fact, video conferences will soon be added to this list.

IT professionals gather once a week in these cities and their numbers are rising.

“The first software shakha was held in Bangalore in 2003-04. It’s a new experiment to connect with emerging sections of professionals,” says Ram Madhav, former RSS spokesman.

“At the Pune IT Milan, more than 1,000 turned up, which isn’t a bad number.”

“The number of youths joining IT companies is increasing. We’ve introduced IT Milan to groom professionals towards RSS’s way of thinking,” says Pune-based Katcheshwar Sahane, western Maharashtra prant sanghachalak of RSS.

Monday, January 28, 2008

கோவில்பட்டியில் பீறிட்டோடும் பார்ப்பன இன வெறி!!

நியூஸ்கேப் என்ற புதியதொரு செய்திதொகுப்பு தளத்தில் வந்துள்ள கட்டுரை கீழே உள்ளது. செய்திவிமர்சனம் என்ற புதிய செய்திவிமர்சனம் தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. செய்திகளை வெறுமே வறட்டுத்தனமாக படிக்காமல் பல்வெறு பிற செய்திகளுடன் தொடர்பு படுத்தி தொகுப்பான புரிதலுக்கு வருவதற்க்கு இந்த தளங்கள் உதவும்.


கோவில்பட்டியில் பீறிட்டோடும் பார்ப்பன இன வெறி!!


பார்ப்பன இன வெறி தட்டி போர்டு

மிழ்நாட்டின் மொழியாம் தமிழ்மொழியில் வழிபடு என்று சொன்னால் அது மொழி வெறியாம் ஏனெனில் தமிழ் நம்முடைய மொழியாம் ஆனால் சமஸ்கிருதம் எல்லா நாட்டவர்களுக்கும், உலகத்தவர்களுக்கும், இனத்தவர்களுக்கும் உரிய பொதுவான மொழியாம் அந்த வகையில் அது உயர்ந்ததாம்.கடவுளின் மொழி சமஸ்கிருதம் உலகம் முழுவதற்க்கும் புரிந்த மொழி அதுதான் எனவே அந்த மொழியில் கடவுளிடம் பேசு என்று மொழி வெறியில் அல்ல பார்ப்பன பண்பாட்டு வெறியில் ஒரு தட்டி போர்டு எழுதி அதை தைரியமாக பொது மக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர் கோவில்பட்டியில். எனது மொழி என்பது வெறும் எனது மொழி மட்டும்தானாம் அதில் அதற்க்கு மேல் ஒன்றும் கிடையாதாம். மாறாக சம்ஸ்கிருதம்தான் அதி சிறந்ததாம். ஏன் இந்த தட்டி போர்டையே சம்ஸ்கிருதத்தில் எழுதி வைத்திருக்கலாமே?யாருமே பேசாத மொழியாம் சம்ஸ்கிருதத்தில் வழிபடு என்று தைரியமாக சொல்வதோடல்லாமல் தமிழில் வழிபடு என்று சொல்வது இனதுவேசத்தால் என்கிறார்கள்? அதாவது எனது மொழியில் எனது கடவுளை கும்பிடுவேன் என்று விரும்புவது சம்ஸ்கிருத இனத்தின் மீதான துவேசத்தாலாம். அதாவது எனது மொழியை நான் விரும்பக் கூடாதாம். இனத் துவேசம் என்றால் எந்த இனத்தின் மீதான துவேசத்தால்? அப்படியானால் சம்ஸ்கிருதத்திற்க்கு என்று இனம் உள்ளதா? அப்படியானல் அந்த தட்டி போர்டே சொல்வது போல அது எல்லா இனத்திற்க்குமான மொழியில்லையா? யாருமே பேசாத மொழி எந்த இனத்திற்க்குரியாதாக இருக்க முடியும். பித்தலாட்டக்கார பார்ப்பன பண்பாட்டு வெறியர்களுக்கும் இவையெல்லாம் தெரியாமலில்லை. பார்ப்பன பண்பாட்டு அடிமைகளுக்கோ இவற்றை பகுத்தாராயும் மனிதனுக்குரிய அறிவு இல்லை.

எனது கடவுளை எனக்கு தெரிந்த மொழியில் வழிபடுவது எனது உரிமை என்று கோரினால் அவ்வாறு கேட்பவர்கள் கடவுள் பக்தியில்லாத அரசியல் பிழைப்புவாதிகளாம். சிதம்பரத்தில் தமிழில் வழிபடும் உரிமை கோரி போராடும் ஆறுமுகச்சாமி என்னும் சிவனடியாரும் இவர்கள் கணக்கில் கடவுள் பக்தியில்லாதவர். உண்மையில் அவரை அப்படித்தான் நடத்தினார்கள் தில்லைவாழ் தீட்சிதர்களும், அவர்களின் அல்லக்கையான நீதிமன்றமும். அதாவது பார்ப்பனியத்தின் பண்பாட்டு மேன்மையை ஏற்றுக் கொள்ளாத யாரும் இவர்கள் கணக்கில் கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள்தான். அதாவது பார்ப்பான்தான் கடவுள் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் இந்த வெறியர்கள்.

தமிழ் வழிபடுவதற்க்கான மொழியில்லை என்று வரலாற்றை திரித்துக் கூறும் இந்த பார்ப்பனியர்கள் இதன் மூலம் தமிழ் நீச மொழி என்பதை வேறு வார்த்தைகளில் சொல்கிறார்கள். தமிழ் வழிபாட்டு மொழி என்ற வரலாற்றிற்க்கும் கூட தில்லையே ஆதரமாக இருக்கிறது. சிவாலயங்கள் அங்கு வழிபடும் சைவர்களுக்கு மட்டுமே உரியது என்று கூறும் இவர்கள் சைவர்கள் என்று யாரைச் சொல்வார்கள் எனில் பார்ப்பனியத்தை சுவீகரித்துக் கொண்டவர்களைத்தான். ஏனேனில் பார்ப்பனியத்தை எதிர்த்து நிற்க்கும் ஆறுமுகச்சாமி என்ற சிவனடியாருக்கு இவர்கள் குரல் கொடுப்பதில்லை.

சைவ சமயம் என்பது பாரத தேச மக்கள் அனைவருக்குமான சநாதன தர்மம் என்று வெளிப்படையாக பார்ப்பனியத்தை பேசுகிறது இந்த தட்டி போர்டு.

மானங்கெட்ட இந்த தட்டி போர்டு ஒட்டு மொத்த உழைக்கும் மக்களையும், அவர்களின் மொழியையும், பண்பாட்டையும் அவமானப்படுத்தும் வகையில் பொதுச் சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதை தட்டிக் கேட்பதுடன் அல்லாமல் பார்ப்பன் பண்பாட்டு வெறியர்களையும், அவர்களின் அல்லக்கை அடிமைகளையும் நடு ரோட்டில் வைத்து நையப் புடைக்க வகையின்றி தமிழ் சமுதாயம் இருப்பது ஆக அவமானகரமானது.

இமெயிலில் செய்தி: குருசாமி, கோவில்பட்டி.

செய்திரசம்.


தட்டி போர்டில் உள்ளது:

சைவப்பெரியோர்களே!

சமீப காலமாக தெய்வ நம்பிக்கை சிறிதும் இல்லாத நாத்திகர்கள் சிலர், தமிழ் வேதம் என்ற போர்வையில், சைவ சமயத்துள்ளும், சிவாலயங்களில் செய்யப்பட்டுவரும் ஆகம வழிபாட்டு முறைகளிலும், பல குழப்பங்களைச் செய்து வருகிறார்கள். நம்முடைய சைவ மடாதிபதிகளை வம்புக்கு இழுத்து அவமானப்படுத்தியும் வருகிறார்கள். இவர்கள் கூற்று, தமிழ் மொழியால் மட்டுமே அர்ச்சனை, மற்றும் நித்திய நைமித்திக பூஜைகள், கும்பாபிஷேகங்கள் செய்யப்பட வேண்டும் என்பது. இவர்கள் கூற்று சைவ சமயப்பற்றினாலோ, தமிழ் மொழிப்பற்றினாலோ எழுந்தது அல்ல. சம்ஸ்கிருத மொழி துவேசத்தாலும், இன துவேசத்தாலும் எழுந்தது. தமிழ் மந்திரங்கள் தமிழ் அர்ச்சனை என்பது ஒரு மாயை.

சிவாலயங்கள் அங்கு வழிபாடு செய்யும் சைவர்களுக்கு மட்டுமே உரிமையுடையது. அதில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு தெய்வ நம்பிக்கையே இல்லாத இவர்கள் யார்? அவர்கள் நோக்கமெல்லாம் இது போன்ற குழப்பங்களைச் செய்து, மொழி வெறியைத் தூண்டி, சுய விளம்பரமும், அரசியல் ஆதாயமும் தேடுவது தான். இவர்களிடம் சைவ மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களின் சாதுர்யப் பேச்சுக்களை உதாசீனம் செய்யுங்கள்.

சைவ சமயம் என்பது பாரத தேச மக்கள் அனைவருக்கும் உரிய பொதுவான சநாதன தர்மம், அதைத் தோற்றுவித்தவரும், வேத ஆகமங்களை அருளிச் செய்தவரும், அனாதி மூத்த சித்துரு ஆகிய சிவபெருமானாரே.

சைவம் நம்முடைய சமயம், தமிழ் நம்முடைய மொழி, சமஷ்கிருதம் எல்லா நாட்டவர்களுக்கும், எல்லா உலகத்தவர்களுக்கும், எல்லா இனத்தவர்களுக்கும் உரிய பொதுமொழி, மொழி வெறியைத் தூண்டி நம்முடய சமயத்தை அழிக்க முயலும் வேடதாரிகளை ஒதுக்கித் தள்ளுங்கள்.

இது பற்றிய விரிவான உண்மைகளை அடியோங்கள் 14-4-1998ல் வெளியிட்ட "சைவாலயங்களில் சம்ஸ்கிருத மந்திரங்களே வேண்டும்! ஏன்?" என்ற வெளியீட்டில் கண்டு தெளிக.

இப்படிக்கு
திருமறை மன்றம், கோவில்பட்டி
ஸ்ரீ அப்பரடிகள் சிவாலய உழவரப்பணித் திருக்கூட்டம், கோவில்பட்டி
ஸ்ரீ மாணிக்கவாசகர் சைவ சபை, கோவில்பட்டி



Thursday, January 24, 2008

IBM-ல் fresherஆக எடுக்கப்பட்டவர்கள் லே-ஆஃப் துவங்கி விட்டது!!

IBM-ல் fresherஆக எடுக்கப்பட்டவர்கள் லே-ஆஃப் துவங்கி விட்டது!!

IBM முதலான பன்னாட்டு கம்பேனிகள் இந்தியா முதலான மூன்றாம் உலக நாடுகளில் தொழில் துவங்குவதற்க்கு profit center/Cost center என்ற முறையை பயன்படுத்தி வருகின்றன. அதாவது IBM இந்தியா கம்பேனி என்பது Pvt Ltd ஆக தனி கம்பேனியாக இருக்கும். அது IBM USAவிடமிருந்து புரோஜெக்ட்களை அவுட்சோர்சிங் முறையில் பெருகிறது. அதாவது இந்தியன் IBMன் லாஜிக்கல் கிளையண்ட் IBM USA. இதன் அர்த்தம் என்னவென்றால் இந்தியாவில் இனிமேல் சுரண்டி பெரிதாக எதுவும் தேறாது என்ற நிலை வந்தால் வேறு ஏதாவது நாட்டு IBMக்கு (IBM pakistan Pvt ltd, IBM சிரிலங்கா என்பது போல) தனது பிசினஸை மாற்றிக் கொள்ளுவது வசதி. IBM US அதாவது கார்ப்போரேட் தலைமை லாபம் பெறுவது மட்டும் பாதிக்கவே பாதிக்காது.

தற்போது தனது லாபத்தை உறுதிப்படுத்தும் முகமாக காஸ்ட் கட்டிங் அதாவது செலவீனங்களை குறைக்கும் முயற்சியில் இந்த நிறுவனங்கள் கடந்த சில வருடங்களாக ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக கடந்த வருட(2007) மத்தியில் தனது கம்பேனியில் வேலை பார்த்த ஒப்பந்த ஊழியர்களை வெளியே அனுப்பியது IBM. அவர்களுக்காவது இரண்டு மூன்று மாதம் நேரம் கொடுத்தது. ஆனால் தற்போது வேலை நீக்கம் செய்யப்படும் Freshersகளை ஒரே நாளில் எழுதி வாங்கிக் கொண்டு வேலை நீக்கம் செய்து வருகிறது IBM.

1990க்குப் பிறகு இந்தியா திறந்து விடப் பட்ட பிறகிலிருந்து இது வரை IT/ITES வேலைகள் 16 லட்சம் மட்டுமே உருவாகியுள்ளது. இதே நேரத்தில் சிறு தொழில் துறை என்பது தனது சொந்த காலில் நின்ற நிலைமை போய் பன்னாட்டு தரகு கம்பேனிகளின் ஒப்பந்தக்கார பட்டறைகளாக இன்று உருமாறியுள்ளன இதனால் வேலை இழப்பு 12 லட்சம். இதே நேரத்தில் ஒவ்வொரு வருடமும் கல்லூரிகளின் இருந்து வெளி வரும் பொறியியல் பட்டாதாரிகள் மட்டும் லட்சக்கணக்கில். இந்த லட்சணத்தில் இந்த பன்னாட்டு தரகு கம்பேனிகளுக்கு 100% வருமான வரிச் சலுகை. இதில் Lay off வேறு.

இதே IBM முதலான கம்பேனிகள் தமது அமெரிக்காவில் தமது கம்பேனியில் வேலை பார்த்தவர்களை கருவேப்பிலை போல வீசிவிட்டு வந்தன என்பதையும், அவர்களுக்கே அதுதான் என்றால் இந்திய ஊழியர்கள் எம்மாத்திரம் என்பதையும் இங்கு புரிந்து கொள்ள வேண்டும். இப்படி கேட்க்க நாதியற்ற அனாதை போல IT கம்பேனியில் வேலை பார்ப்பது ஆக அநாகரிகமானது, அவமானகரமானது.

செய்தி ஆதாரம்: இணைய நண்பர்கள்.

நன்றி: செய்திரசம்

***
Freshers - கல்லூரி முடிந்தவுடன் கம்பேனிகளில் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்கள்.


Related Article:

Worker Union in IBM USA

Jobs Flying from India



The Trick called Data theft






Tuesday, January 22, 2008

பில்கிஸ் தீர்ப்பு - சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியுமா எது உள்ளே எது வெளியே என்று?

நீதி நிலைநாட்டப்பட்டுவிட்டது. காலம் கடந்தால்தான் என்ன? குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டது அல்லவா? குஜராத் 2002 இனப் படுகொலையின் போது தனது குடும்பத்தவர் 14 பேரை கண்முன்னால் பறி கொடுத்து, பாலியல் பலாத்காரத்திற்குள்ளான பில்கிஸ் என்ற இஸ்லாமிய பெண்மணி, இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுவதற்க்கு முந்தைய நாள், நீதி நிலைநாட்டப்படும் என்று தான் நம்புவதாகவும், இந்திய நீதித் துறையின் மீது நம்பிக்கை இருப்பதாகவும் கருத்து தெரிவித்திருந்தார்.

இதோ அவரது நம்பிக்கை வெற்றி பெற்றுவிட்டது அல்லவா? 7 பேர் விடுவிக்கப்பட்டால்தான் என்ன? 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுவிட்டது அல்லவா? ஆறு வருடங்கள் தாமதமான தீர்ப்பாயிருந்தால்தான் என்ன? குற்றவாளிகள் சிறை அனுப்பப்படுவது உறுதியாகிவிட்டது அல்லவா? இனி அவர்களின் வாழ்க்கை கம்பிகளுக்கு பின்னால்தான்.

ஆயினும் சிறைச்சாலைக் கம்பிகளுக்கு தெரியவா போகிறது எது உள்ளே எது வெளியே என்று? 'கம்பிகளுக்கு பின்' என்ற சொற்றொடரில் 'பின்' என்பது கம்பிக்கு எந்த பக்கம் வருகிறது என்பதை யார் தீர்மாணிக்கிறார்கள்? எது தீர்மாணிக்கிறது? எப்படி தீர்மாணிக்கப்படுகிறது?

குஜராத் இனப் படுகொலையில் போது தமது சொந்த வீடுகளை விட்டும் கிராமங்களை விட்டும் விரட்டப்பட்ட லட்சக்கணக்கான முஸ்லீம்கள் இன்றும் தமது வீடுகளுக்கு திரும்ப இயலாமல் நிவாரண முகாம்களில் கைதிகளாகத்தான் வைக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியின் யூத கொட்டடிகள் திறந்த வெளிக் கூடங்கள்தான். ஆயினும் அவை சிறைச்சாலையே. அது போன்றதுதான் குஜராத்தின் நிவாரண முகாம்கள். கம்பிகளோ சுவர்களோ இல்லாத மாய சிறைச்சாலை. சிறைச்சாலையைவிட கோடூரமானதொரு வெளி உலகம் இருக்கின்ற பொழுது சிறைச்சாலையே தேவலாம் என்று பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர் தங்கியதில் வியப்பொன்றுமில்லை. அப்படி தங்கிய அப்பாவி கைதிகளில் ஒருவர்தான் பில்கிஸ்.

தீர்ப்பு வழங்கப்படும் முன்பே தண்டனை கொடுக்கப்பட்டது. குற்றமிழைத்தவர்களுக்கு அல்ல. குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு. நிவாரண முகாம் என்ற சிறைக்கூடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனையாக தரப்பட்டது. தண்டனையிலிருந்து சட்டம் தரும் பாதுகாப்பு கவசத்தில் குற்றவாளிகளும், குற்றமயமாக்கப்பட்ட சமூகம் தரும் வன்முறையிலிருந்து பாதுகாத்துகொள்ள பாதிக்கப்பட்டவர்கள் சிறைச்சாலையிலுமாக இருக்கின்றது அங்கு நிலைமைகள். பார்க்கின்றவர்களுக்கு எது சிறை எது வெளியே என்ற தேவையற்ற குழப்பம் வரவேண்டாம் என்று சிறைச்சாலை கம்பிகள் அந்த சமூகத்தின் மனங்களில் பதிக்கப்பட்டுவிட்டன. அவை வெறும் கண்களுக்கு தெரியாது.

சபர்கந்த கிராமத்திலுள்ள நிவாரண முகாமில்தான் தற்போது வாழ்ந்து வருகிறார் பில்கிஸ் சரியாகச் சொன்னால் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சிறைக் கூடத்தின் பாதுகாப்புக்கு சிறப்பு அதிரடிப் படை ஒன்று போடப்பட்டுள்ளது. அவர்களின் அன்புக் குரியவர்களில் 33 பேர் கோடூரமாக கொல்லப்பட்ட சர்தார்பூர் பகுதியிலுள்ள சைய்க் மொஹல்லா பகுதிக்குள் அவர்களால் நுழையக் கூட முடியாது. சிறையில் இருப்பவர்கள் வெளியே வருவதே சிரமம் இதில் அவர்களுக்கு கோடூரம் இழைக்கப்பட்ட பகுதியை பார்ப்பதாவது? இதே போல 70 பேர் கொல்லப்பட்ட குல்பர்க் சொசைட்டி வழக்கில் முக்கிய குற்றவாளிகள் தண்டனையிலிருந்து மட்டுமல்ல குற்றப்பத்திரிகையிலிருந்தே கூட தப்பித்து சென்று விட்டனர். 27 பேர் கொல்லப்பட்ட ஆனந்த் மாவட்டத்தில் 41 குற்றவாளிகள் முன்பினையில் வெளியே வந்தனர். சிறைக்கு வெளியே இருந்தாலும், உள்ளே இருந்தாலும் யாருக்கும் எதுவும் பெரிதாக மாறிவிடப் போவதில்லை. ஏனேனில் சிறைக்கு உள்ளே வெளியே என்பதை தீர்மானிப்பது சிறைக் கம்பியல்லவே?

கடந்த ஆறு வருடங்களாக பயத்தில் வாழ்ந்து வருவதாக கூறுகிறார் பில்கிஸ். இன்னும் பெரும்பாலனவர்கள் மனதிலிருக்கும் வெறுப்பிலிருந்து தனது குழந்தைகளை காப்பதற்க்கு முயற்சி செய்ததாக சொல்கிறார். குஜராத் அரசே நடத்திய இனப் படுகொலையில் பாதிக்கப்பட்ட பிற பெண்களுக்கு கட்டாயம் நியாயம் கிடைக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். ஆயினும் அவரால் தனது சொந்த கிராமத்திற்க்கு திரும்ப முடியாது. தனக்கெதிரான வெறுப்பு மறைய வேண்டும், அமைதியானதொரு வாழ்வை வாழ வேண்டும் என்ற நிறைவேற இயலா ஏக்கத்தை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறார். ஆனால் மக்களின் மனங்களில் விதைக்கப்பட்ட சிறைக்கம்பிகள் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டதை பில்கிஸ் உணர்ந்தது போல தெரியவில்லை. தனது வழக்கில் தீர்ப்புகள் ஆறு வருடங்கள் தாமதாமாக அல்ல மாறாக அடுத்த நிமிடமே 2002 மார்சிலேயே கொடுக்கப்பட்டுவிட்டதை அவர் உணரவில்லை இன்னும். அதனால்தான் இந்த ஏக்கம், எதிர்பார்ப்பு.

இந்த தீர்ப்பிற்க்கு பிறகு குற்றவாளிகளீன் சொந்த ஊரில் பதட்டம் நிலவுவதாக செய்திகள் கூறுகின்றன. பெரும்பான்மை இந்துக்கள் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கப்பட்டதில் கோபமுற்றுள்ளதாக செய்திகள் சொல்கின்றன. சிறைச்சாலை கம்பிகள் இன்னும் வலுவாக கட்டபடுகின்றன. பில்கிஸ் ஒரு நிரந்தரமான சிறைச்சாலையில் இருப்பதை உறுதிப்படுத்துவதைத்தான் இந்த தீர்ப்பு மேலதிகமாக செய்துள்ளது.

தீர்ப்பு குறித்து அத்தனை பார்ப்பன ஊடகங்களும் தலைமேல் வைத்து கொண்டாடுகின்றன. பிறகு இந்தியா மதச்சார்பற்ற நாடல்லவா? இஸ்லாமியர்களுக்கு நீதி வழங்கப்படுகிறது அல்லவா? தெஹல்கா விடீயோக்கள் வெளிவந்த போது இதே ஊடகங்கள் கள்ள மௌனம் சாதித்ததும். இல்லாத நீதி ஏதோ வழங்கப்பட்டுவிட்டதாக தற்போது பரபரப்பு ஊட்டுவதும் தற்செயலான நிகழ்வுகள் அல்ல. இவை பொது கருத்தில் வினையாற்ற ஏதுவாக அவர்கள் செய்யும் திட்டமிட்ட செயல் தந்திரம்.

பார்ப்பனிய பாசிசம் ஆட்சி செய்யும் இந்த போலி ஜனநாயகத்தில் சிறைச்சாலையும் அரசு இயந்திரத்தின் ஒரு பகுதிதான் என்ற உண்மை புரிந்தால் ஆளும் வர்க்கத்திற்க்கு கொடுக்கப்படும் தண்டனைகளின் தராதரம் நமக்கு புரிந்து விடும். ஒடுக்கப்படும் மக்களோ நிரந்தர சிறைக் கூடத்தில் இருக்கும் அவலம் புரிந்து விடும். இந்தியா என்னும் இந்த திறந்த வெளி சிறைக்கூடத்திலிருந்து அன்று விடுதலை கீதங்கள் முழங்கத் துவங்கிவிடும்.

அசுரன்

Monday, January 21, 2008

நடுத்தர வர்க்க யுப்பிகளுக்கு ஆப்பு அடித்த ஸ்டாக் மார்க்கெட்!!!

நடுத்தர வர்க்க யுப்பிகளுக்கு ஆப்பு அடித்த ஸ்டாக் மார்க்கெட் - 6 நாளில் $300 bn!!

பங்கு சந்தை கடந்த ஆண்டு முழுவதும் போலியாக உப்பி பெருக்க வைக்கப்பட்டது. உண்மையான பொருள் உற்பத்திக்கான மூலதனமாக இல்லாமல் வெறும் சூதாட்டத்திற்க்கான மூலதனமாக அன்னிய மூலதனம் இந்திய சந்தைக்குள் வந்து விளையாடியது. இந்த விசயத்தை குறிப்பாக அமெரிக்க வீட்டு கடன் பிரச்சினையைத் தொடர்ந்த உலக நிதி மூலதன பிரச்சினைகளை கணக்கில் கொண்டு பார்க்க வேண்டியுள்ளது.

ஆனால் இந்த ஊதிப் பெருக்க வைக்கப் பட்ட பப்பிள் பொருளாதாரம் இதோ கடந்த சில வாரங்களாக உடைந்து கொண்டே வருகிறது. சமீபத்திய பொருளாதார உப்பலைத் தொடர்ந்து அதில் தமது சேமிப்புகளை முதலீடு செய்த நடுத்தர வர்க்க யுப்பிகள் இப்பொழுது அதன் நஸ்டத்தின் பலனை மட்டும் அனுபவிக்க காத்திருக்கிறார்கள். மேலும் விரிவான பங்கு சந்தை சரிவு பற்றிய தகவல்:

Investors lose over $300 bn in six days

*****************

$300 bn in Six days - Stock Market bubble bursts in to the purses of Middile Class Yuppies!!

Last year saw waves of huge influx of foreign funds, which accounted not for material movement, in to Indian Stock market. Because of which Indian comprador capitalist found a windfall at their hands. This highly speculative bubble economy, a true synonym of gambling, really caused more trouble to the common people. Right from the job losses and national economy break down due to currency appreciation to the price rise aka inflation rate.

Though the entire scenario should be perceived as part of the world fund crisis, a byproduct of Housing loan crisis in USA, the middle class yuppies encouraged by the quick money they earned from the bull driven economy invested their money in to the stock market to stack more quick bugs in to their account. But alas… the drama is over. Now the Capital crisis has bitten the middle class yuppie’s purses.

It is worth considering the fact that last week saw a huge influx of local capital in to stock market to maintain the stock market floating high.

For more on the fall of Indian Stock market:
Investors lose over $300 bn in six days


நன்றி: Not Just News

Related Article

அமெரிக்க குமிழிப் பொருளாதாரம், மிதக்கும் சூக்குமம்

Sunday, January 13, 2008

கு. ராமன் என்ற அக்யூஸ்ட் தெருப் பொறுக்கியா அவதாரமா? - கவிதை

கு. ராமன் என்ற அக்யூஸ்ட் தெருப் பொறுக்கியா தெய்வீகப் பிறவியா? என்ற இந்த கேள்விக்கே இடமில்லை ஏனேனில் பார்ப்பானின் அகராதியில் இரண்டிற்க்கும் அர்த்தம் ஒன்றுதான் என்று நிறுவுகிறது சமீபத்தில் படித்த ஒரு சிறந்த கவிதை.

தோழர் துரை. சண்முகம் கவிதை எழுதுவதில் ஒரு அசுரர். கலை என்பது மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளிலிருந்து அவர்களை மயக்கி ஒரு போதையாக வேலை செய்து ஆளும் வர்க்க சேவை செய்யும் இந்த காலத்தில். இவரிடம் தவழும் கவிதை எனும் கலை இந்த இழிந்த சுரண்டல் சமூகத்தின் உறவுகளை அதன் கூர்மையான உண்மைகளின் மூலம் சதாரண உழைக்கும் மக்களுக்கு புரிய வைக்கும் வேலையைச் செய்கிறது. கலை யாரிடமிருந்து பிறந்ததோ அவர்களுக்கு தேவையானதை செய்கிறது. தனது வாழ்க்கை தேவைகள் அபரிமிதமாக நிறைவேறப்பெற்ற வளப்பமான வெள்ளைக்காரன்கள் தமக்கு தேவையான புதிய உணர்வுகளை கஞ்சாவிலும், காஞ்சியிலும், வேதத்திலும், மகாபலிபுரம் லாட்ஜ்களிலும், ஹோமோவிலும், வாழும் கலைகளிலும், கிருஷ்ணனிடமும், பாபாவிடமும் அகல்வாய்ந்து தேடிக் கொண்டிருக்கும் பொழுது. இந்த கொழுப்பெடுத்த பன்றிகளின் உல்லாச வாழ்க்கைக்கு காரணமான உழைக்கும் வர்க்கத்தின் உணர்வுகளோ வேலை பார்க்குமிடத்தில் முதலாளிக்கும், ஓய்வு நேரத்தில் ரஜினி - ஸ்ரேயா விரசத்திற்க்கும், விஜய் - அஜித் உரசலுக்கும் அடகு கொடுக்கப்படுகிறது. மொத்தத்தில் தனக்கு தேவையான உண்மையான புதிய உணர்வுகளை என்றுமே கிடைக்கப் பெறாமல் அடிமைத் தனத்தால் நிரந்தரமாக ஆசிர்வதிக்கப்படுகிறான். கொழுப்பெடுத்த பன்றிகளுக்கும், உழைத்து நொந்த உள்ளங்களுக்கும் ஒருங்கே புதிய உணர்ச்சிகளை அறிமுகப்படுத்தும் புரட்சியாளர்களின் அந்த அடிப்படை கடமையை தோழரின் கவிதைகள் என்றுமே சிறப்பாக செய்து வருகின்றன.

நமது மூதாதையான நரகாசுரர் கொல்லப்பட்ட நாளையே கொஞ்சம் கூட வெட்கமின்றி தீபாவளியாக கொண்டாடி வரும் போதும் துரை. சண்முகம் எழுதுகிறார் 'இனிய ஏழு' என்ற கவிதையை. பாட்டாளி வர்க்கத்தின் திபாவளியாம் நவம்பர் ஏழு புரட்சி தினத்தை மெச்சி. பிறக்கும் போதே சாக்லேட்டின் சுவையறிந்தா ரசிக்க கற்றுக் கொள்கிறது குழந்தை? புரட்சி நாளாம் ஏழு என்பதும் மனிதனாகப் பிறந்தவனுக்கு இனிமையாக இருப்பதும் அந்த அம்சத்திலேயே என்று எழுதியிருப்பார் அந்த கவிதையில்.

பாரத ரத்னா வாஜ்பேயி இந்தியா ஒளிர்கிறது என்ற எழுதிய போது இவர் இந்தியா பழி வாங்கும் என்று புரட்சி கீதம் பாடினார். கவிதை போட்டிக்கான கல்லூரி விழாவில் தலைமை தாங்கிய வித்தக கவி போன்ற பெயர் தாங்கிகள் தமது சொல் வித்தைகளை விளம்பரப்படுத்திச் செல்ல, இவரோ கவிதை என்றால் என்னவென்று இளம் கவிஞர்களுக்கு அறிமுகப்படுத்தி அதன் நதி மூலம் ரிசி மூலம் கற்றுக் கொடுத்து கவிதை யாருக்கான புதிய உணர்வுகளை அறிமுகப்படுத்த எழுதப்பட வேண்டும் என்று கவிதையாகவும், உரையாகவும் அவர்களது சமூக கடமையை கற்றுக் கொடுத்துவிட்டு வந்தார். வெறுமே வார்த்தைகளில் விளையாட இவர் வித்தக கவி அல்லவே? அல்லது குட்டி முதலாளித்துவ சுய ஆனம் தேடல்களை அவர்களின் தொண்டை குழியில் ஆரம்பித்து குடலின் நுனி தாண்டி மலக் குடல் வரை ஆய்வு செய்ய இவர் பின் நவீனத்துவ புலியும் அல்ல. இவரது வார்த்தைகளில் இவர் ஒரு கவிஞரும் அல்ல. கவிதையை தொழிலாக கொண்டவன் கவிஞன் என்பது உண்மையெனில், கலையை தொழிலாகக் கருத முடியுமா என்ற கிளை உண்மை நமக்குப் பதில் சொல்கிறது. வேதம் ஓதி உழைக்காமல் உண்டி வளர்த்த பார்ப்பானுக்கு என்ன நியாயமோ அதே நியாயம் உற்பத்திக்கு எந்த பங்களிப்பும் செய்யாமல் வெறுமை கலைகளை ஓதி பிழைப்பு நடத்துபவர்களுக்கும் பொருந்தும். நாம் வரலாற்றில் கவிஞர் வள்ளுவரை பார்த்ததில்லை.

தோழரின் சமீபத்திய கவிதை தலைமறைவாய் நேற்று வரை அலைந்து கொண்டிருந்த பார்ப்பன கோமன ராமன் என்ற அக்யுஸ்ட் கிரிமினல் இன்று அவனது ரவுடி கும்பல் வலுப்பெற்ற தைரியத்தில் கொஞ்சம் வெளியே வந்து போதை தலைக்கேற சலம்பி கொண்டு சட்ட ஒழுங்கை கெடுத்து வருகிறான், தனது மறுகாலனியாதிக்க தலைவர்களான இன்றைய
விசுவாமித்திரர்/வச்ஷடர் கும்பலான ஏகாதிபத்தியங்களுக்காக சம்பூகனின் இன்றைய வாரிசுகளான உழைக்கும் மக்களை துன்பப்படுத்தி வருகிறான் என்ற சூழலில் அந்த தெருப் பொறுக்கி கேப் மாறியையும், அவனது ரவுடி சங் பரிவாரங்களையும் எதிர் கொண்டு மண்டை உடைக்க தேவையான புதிய உணர்வுகளை வழங்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது கவிதை.

ராமன் என்பவன் செய்த பழைய தெருப் பொறுக்கித் தனங்களை பட்டியலிட்ட பிறகு கவிதை கேட்க்கிறது:
"ராமன் தேசிய நாயகனா
இல்லை தெருப்பொறுக்கியா?
நீங்களே தெரிவு செய்வீர்!"


அவன் பார்ப்பன சங்க தலைவனாக இருந்த காலத்தில் நடந்த ராமயணத்தில் அவன் உழைக்கும் மக்களுக்கு செய்த சாதி வெறி கொடுமைகளை குறிப்பிட்டு ராமனின் தலையை கேட்கிறார் துரை சண்முகம். ராமன் தலை கிடைக்காவிட்டால் கூட பரவாயில்லை அவனது அல்லக்கைகளான தொகாடியா, அத்வானி, மோடிகளின் தலைகள் கூட எமக்குப் போதும் என்பதை அவருக்கு தெரிவிக்க ஆவலாக உள்ளது.
"இராமாயணம்
கதைதான் என்றால்
எங்களை ஆளை விடு!

இராமாயணம் வரலாறென்றால்
எங்கள் சம்பூகனை கொன்றதற்கு
ராமனின் தலையைக் கொடு!"



ராமன் என்ற ரவுடி தாதாவை வைத்து அரசியல் வியாபாரம் அல்லது விபச்சாரம் செய்யும் மாமாக்களை, மாமிகளையும் கூட அவர் தனது கவிதையில் குறிப்பிட்டு காட்டுகிறார். ராமன் ஒரு ரவுடி கேப் மாறி என்றால் ராமாயணம் ஒரு மாமா தொழில் என்று குறிப்பிடும் வரிகள்:
"மாசாஜ்பார்லர் வைத்து
ஆளைப் பிடித்து இழுத்தால்
அது விபச்சாரம்;

மனு தர்மத்தை வைத்து
ஆளைப் பிடித்து அமுக்கினால்
அது மகாபாரதம்.

மாமனை வைத்து தொழில் செய்தால்
அதற்குப் பெயர் விபச்சாரம்;
ராமனை வைத்துத் தொழில் செய்வதற்க்குப் பெயர்
ராமயாணம்"


கிராமத்து வழக்கில் ராமனையும், அவனது முந்தைய சங் பரிவார கும்பல் தலைமை ரவுடியான அனுமானையும் பீச்சாங்கையால் தள்ளி இகழ்வாக பயன்படுத்தும் சொலவடையை நமக்கு ஞாபகப்படுத்துகிறது கவிதை.

""பிச்சை எடுத்துச்சாம் பெருமாளு
அதையும் புடுங்குச்சாம் அனுமாரு'
என்று
எங்கள் பட்டிக்காடு பழிக்காததா
உன் ராமாயணம்!"


ராமாயணத்தில் உள்ள கிளு கிளுப்பு சுவை குறித்தும் சிறிதே நமக்கு அறிமுகப்படுத்துகிறது கவிதை. சீதாப் பிராட்டியாம் ஜானகியையும், சிவாஜியின் ஸ்ரேயாவையும் ஒப்பிட்டு தீர்ப்பு தர வேண்டிய வேலை நமதல்ல அதற்க்கான தேவையும் நமக்கு இல்லை. அதை ராமாயணம் படிக்கும் பார்ப்பன் குஞ்சுகளே செய்து கொள்ளட்டும். கவிதை குறிப்பிட விரும்புவது ராமாயணம் 'A' சர்டிபிகேட் படத்திற்க்கான தகுதியை விட கொஞ்சம் அதிகம் படைத்த ஒரு கா'ம'வியம் என்பதுதான்.
"ஜானகியின்
ஆரண்ய காண்டத்துச் சங்கதிகளை
அவிழ்த்து விட்டால்
ஆபாசப்படநாயகி 'ஷகிலாவுக்கே'
அப்படி ஒரு கூச்சம் வரும்."


கம்பன் என்ற காவாளி சீதாவின் அங்க அடையாளங்களை ஜொள்ளு வடிய அனுமாருக்கச் சொல்வது கேட்டு குரங்கு கூட வெட்கப்படுவதை கவிதை சுட்டுகிறது.

காட்டுக்குப் போகும் பார்ப்பன கோமன ராமன், தனது மனைவியிடம் சொல்கிறான் பாரதனுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோ என்று:
"தம்பி பரதனுக்குத் தகுந்த மாதிரி
வீட்டிலேயே நீ தங்கு' என்று"


கட்டிய மனைவியை தம்பிக்கு கூட்டிக் கொடுக்கும் புரோக்கர் ராமனை எத்தனை பேருக்குத் தெரியும்.

இப்படி சொன்ன ராமனை அதி கேவலமாக திட்டிய டேம் செல் இன் டிஸ்டெரஸ் நாயகியான ஜானகியை எத்தனை பேருக்கு தெரியும்?

60,000 பெண்டாட்டிகளை ஆண்டானா அல்லது அரசாண்டானா என்று யாருமே கேள்வி கேட்டிராத ரவுடி ராமனின் தந்தை செக்ஸ்வெறியன் தசரதன் தனது பெண்டாட்டிகளில் ஒரு பத்து பேரை கூடியிருந்தால் கூட பத்து குழந்தைகள் பிறந்திருக்கும் ஆனால் சொல்லி வைத்தது போல அசுவமேத யாகத்தில் குதிரையுடனும், பாப்பானுடனும் படுத்தெழுந்த 4 மனைவிமார்களுக்கு மட்டுமே குழந்தை பிறப்பது விந்தையே? ராமன் பாப்பானுக்கு பிறந்தான? அல்லது குதிரைக்கு பிறந்தான என்பதே கேள்வி. கவிதை இதனை சுட்டுகிறது.
"அப்பனுடைய அருமை இப்படி,
அருமை மகனுடைய
பெருமை எப்படி?

கோசலைக்கு
மைந்தன் இவன்
இருந்தாலும்,
குதிரைக்குப் பிறந்ததினால்
கு.ராமன் என்றே குறிப்பிடலாம்."


உடம்பெல்லாம் உடலுறுவுக்கான உறுப்பு தரிக்கும் சாபம் பெற்ற (சாபாமாயா அது?) செக்ஸ் வெறியன் இந்திரந்தானே தேவன். ராமன் மட்டுமென்ன விதிவிலக்கா. செக்ஸ் - மனு தர்மத்தின் படி சூத்திரனுக்கும், பஞ்சமனுக்கும் தானே விலக்கு.
"தலைவிதி என்று
எங்கள் உணர்வுகளை
ஒடுக்கியது பார்ப்பனியம்
தாய் முலைக்கு வரிபோட்டு
எங்கள் உறுப்புகளையும்
ஒடுக்கியது சாதியம்,
இதுதான் இந்துமதம்!"



உழைக்காமல் பார்ப்பானைப் போலவே உண்டி வளர்க்கும் பார்ப்பன ரவுடி கடவுள்களை கவிதை குத்திக் காட்டுகிறது. கிராமத்து நாட்டார் தெய்வங்கள் மக்களோடு மக்களாய் வாழ்வதையும் கவிதை சுட்டிக் காட்டுகிறது.
"நெய்யும் பொங்கலும்
பொய்யும் களவும் கொண்ட
பார்ப்பனச் சாமியோ
பக்கத்தில் இரண்டு
பொண்டாட்டி கேக்குது!
இருந்தும்
வெக்கமே இல்லாமல்
ஊருக்குள் இருந்து கொண்டு
ஒரு கூத்தியாளும் தேடுது!"


ராவணனுக்கு லுக்கு விட்ட சீதாபிராட்டியாம் ஜானகியையும் ஸ்லைட்டாக் நமக்கு அறிமுகப்படுத்துகிறது கவிதை.
"இதை தட்டிக் கேட்க வந்த
இராவணனிடம் - தனிமையில்
"தண்ணி குடியுங்கள்
தங்கிச் செல்லுங்கள்" என்று
சீதை 'லுக்கு விட்டது' மட்டும்
சரியாமா?"



டீசண்டாக ஐ லவ் யூ சொன்னதற்காக சூர்ப்பனகை, அவள் ஒரு சூத்திரப் பெண் என்ற ஒரே காரணத்திற்க்காக முலையறுத்த, மூக்கையறுத்த லட்சுமணன் என்ற ராமயாண காலத்து மோடி, தன்னை சந்தேகப்பட்டு அடாது சொன்ன சீதாபிராட்டியின் முலையறுக்க வேண்டாம், மூக்கையாவது அறுத்து மொக்கையாக்கியிருக்கலாம்.
"ஆர் எஸ் எஸ் கோவிந்தாசார்யாவுக்கு
பாராதிய ஜனதா உமாபாரதி - சன்னியாசி
பாசத்தோடு கொடுத்தால் ஒரு காதல் கடுதாசி
மூக்கை அரியக் காணோமே?"

உமபாரதியின் மூக்கும், முலையும் பத்திரமாகவே இருக்கின்றன இன்று வரை. பார்ப்பன பரிவாரத்தில் சேர்ந்துவிட்டால் தீர்ப்புகள் மாற்றி எழுதப்படுமோ?

பார்ப்பானுக்கு கோமணம் தூக்கும் அல்லக்கைகளான சிவப்பு எம் ஜி ஆர் - விசயகாந்த், நாடார் சங்க நாயகன் சரத்குமார், புரட்சி தெருப் புழுதி வைகை இன்ன பிற இத்யாதி ஆட்களை அறிமுகப்படுத்திய பிறகு ரியல் டைம் சூப்பர் ஸ்டாரை அறிமுகப்படுத்துகிறது கவிதை.
"இத்தனை பார்ப்பன்க் கூலிகளிடமும்
நாம் மல்லு கட்டத் தேவையில்லை
ஒன்று நடந்திருந்தால்!

பேசாமல் சீதையை அழைத்துக் கொண்டு
ராமன்
காஞ்சிமடம் பக்கம் போயிருந்தால்
சீறீரங்கம் உஷாவைப் போல்
சீதை கதை போயிருக்கும்......
அப்புவை வைத்து சங்கராச்சாரி
ராமனை அடித்துத் தூக்கியிருப்பான்
ராமாயணம்
அங்கேயே முடிந்திருக்கும்

நமக்கும் வேறு வேலை நடந்திருக்கும்."



பெரியாரும் அம்பேத்காரும் உரித்து உப்பு கண்டம் போட்டு தொங்க விட்ட உனது ராமனையும், இந்து பார்ப்பனியத்தையும் புதிய மொந்தையில் விற்க்கும் சாராய கடை பார்ப்பன பயங்கரவாதிகளை விரிவாகவே அறிமுகப்படுத்துகிறது கவிதை.
"இன்னொரு பக்கம்
யாருக்கெல்லாம் இதயம் இல்லையோ
யாருக்கெல்லாம் மூளை இல்லையோ
அவனே இந்துவாக இருக்க முடியும்
என்று
அம்பேத்கரும் பெரியாரும்
அறைந்து கூறினர்."

"உனது பிறப்பையே
வேசிமகன் என்று
இழிவுபடுத்தும்.... இந்த மதம்
இந்த இந்து மதம்
உன் சொந்த மதமா?
என்று பெரியாரும் அம்பேத்கரும்
சுரனை கொடுத்த இந்த மண்ணை
பார்ப்பன மலவண்டுகள்
அரிக்கப் பார்க்குது,"


சாதி வெறி கொடுமைகளை சிறிதே சுவைத்து பார்க்க ராமனை அழைக்கிறது கவிதை.
"ஏ! சிறீராமா
சின்ன ஜாதியில் பிறந்து
கவுண்டனிடம் மூத்திரம் குடிக்க
சீக்கிரமாய் வாடா!

பன்றியாய் பிறந்ததனால்
நீ பலமுறை தின்றிருப்பாய்
இந்துவாகத் தோள் தட்டி திண்ணியத்தில்
தேவர் சாதிப் பீ திங்க வாடா!
எடுபட்ட ராமா கோபாலா!
எங்கேடா பி.ஜெ.பீ."


கடவுளை அணுக ஹோல்சேல் உரிமைபெற்ற பார்ப்பன் ஒருவன் கூட இதுவரை ஜோதியில் ஐக்கியமாகாத சரித்திரத்தை நமக்கு நினைவூட்டுகிறது கவிதை.
"சாமி கும்பிடப்போன நந்தன்
சாம்பலாக வெளியே வந்தான்;
குகைக்குள் போன பழனி போகர்
திரும்பவே இல்லை;
அறைக்குள் போன வள்ளலார்
திரும்ப வரவே இல்லை;
வரலாற்றில்
ஒரு பார்ப்பான் கூட ஜோதியில் கலந்ததே இல்லை."


வரலாறு முழுவதும் மாமா தொழில் பார்த்தே பழக்கப்பட்ட பார்ப்பனிய சங் பரிவாரமும், அதன் தலைவன் பார்ப்பன சாதி சங்க தலைவன் ராமன் என்று ரவுடியும், இன்றும் கூட ஏகாதிபத்தியத்திற்க்கு மாமா வேலை பார்த்து பாரத மாதாவையும் அதன் தவப் புதல்வர், புதல்விகளையும் கூட்டி கொடுப்பதை கவிதை எடுத்தியம்புகிறது. சுதந்திர போராட்டத்தில் பிரிட்டிஸ்காரனுக்கு உளவு பார்த்த பாரம்பரியம் அல்லவா?
"எப்பொழுதெல்லாம்
நாம் இழிவுபடுத்தப்படுகிறோமோ
அப்பொழுதெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறது.....
எப்போதெல்லாம்
காவு கொடுக்கப்படுகிறோமோ
அப்போதெல்லாம் ராமனின் நடமாட்டம் தெரிகிறது....

காட் ஒப்பந்தம்
நாட்டை காவு கொண்ட நேரத்தில்
ராமன் ஜென்ம அர்ச்சனை!

இன்று-
அணுசக்தி ஒப்பந்தம்
நாட்டை அடிமையாக்கும் வேளையில்
ராமன் பால பிரச்சினை!"

இது வெறும் சரித்திரமல்ல ''இன்று பலி வாங்குவோம்'' என்று சங் பரிவாரம் போல பொய் தோரணங்கள் கட்ட. இது இன்றும் தொடரும் ராமயணம். நமது அடிமைத்தனத்தின் வரலாறும் இதுதான் இன்றைய நிதர்சனமும் இதுதான் என்பதை கடைசியில் பொட்டில் அடித்தால் போல சொல்லுகிறது கவிதை. வால்மீகி ராமாயணம் முடிந்து கம்ப ராமாயணம் முடிந்து இன்று புதிய அடுத்த ராமாயணம் நடக்கிறது என்று குறிப்பிடுகிறது கவிதை.
"இப்போது நடப்பது
அரசியல் ராமாயணம்
இதில் -
சீதைக்கு ஜெயலலிதா சக்களத்தி
அனுமாருக்கு சோ அண்ணன் முறை
சுக்ரீவனுக்கு விசயகாந்த் சொந்தத் தம்பி
விபீடணனுக்கோ வை.கோ. உடன் பிறப்பு!

இப்போது வருபவன் -
தசரதனுக்குப் பிறந்த ராமனல்ல;
இவன்
தாராளமயம் - தனியார்மயத்துக்குப் பிறந்த
ராமன்."


"உழைத்து வாழும் மக்களை
உழைக்க வேலையின்றி
உண்ணச் சோறின்றி
ஒதுங்க இடமின்றி -
உலகமயக் காண்டீபத்தால்
கொலை செய்யும்
அந்நிய அமெரிக்கா ராமன்களோடு
இந்த அயோத்தி ராமனையும்
சேர்த்து முடிப்போம்!"


புதிய உணர்வுதான் தேவையெனில் இதோ ஒரு கவிதை நூல் படித்து பாருங்கள். இந்த புதிய உணர்வு படுக்கைக்கு அனுப்பும் உணர்வல்ல. இது புரட்சிக்காக நம்மை புத்துணர்வூட்டும் கலை.

அசுரன்

"இந்து என்று சொல்லாதே ராமன் பின்னே செல்லாதே!"
- துரை. சண்முகம்

விலை ரூபாய் 20/-

நூல் கிடைக்குமிடம்:

#1)
ம. லயனல் அந்தோணிராஜ், எம். ஏ.
மதுரை மாவட்டக் கிளைச் செயலாளர்,
HRPC-TN
158, சேதுபதி குறுக்குத் தெரு,
இராமையா தெரு கடைசி,
ஜெய்ஹிந்த் புரம், மதுரை - 11
9443471003

#2)
வழக்கறிஞர் இராஜு, எம்.ஏ., எம்.எல்.
மாநில ஒருங்கிணைப்பாளர், HRPC-TN
702, தொடர்வண்டிச் சந்திப்புச் சாலை,
விருத்தாசலம் - 1
04143 260164

#3)
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு,
எல்லீசு சாலை,
சென்னை - 600002
044 - 28412367

இது தவிர்த்து,

#4) சென்னை புத்தகக் கண்காட்சி கீழைக்காற்று வெளியீட்டகம் ஸ்டாலிலும் கிடைக்கும்.


Related Article:

Rama.... Rama....

குஜராத் விவசாயிகள் தற்கொலை: இதுதான் இந்துராஷ்டிரம்!

"குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பயங்கரவாதிகள்"

மோடியின் ராம ராஜ்ஜியம்Do we have a choice?

கலி முற்றும் பொழுதெல்லாம் நான் அவதரிப்பேன்!!!

வாஜ்பேயிக்கு கட்டாயம் கொடுக்கனும் பாரத ரத்னா!

Thursday, January 10, 2008

வாஜ்பேயிக்கு கட்டாயம் கொடுக்கனும் பாரத ரத்னா!

வாஜ்பேயி - தவறான கட்சியில் இருக்கும் சரியான நபர் என்று சில முற்போக்காளர்களால் (ப்ப்ப்ப்ப்ர்ர்ர்ர்.... :-)) பெருமிதமாக புகழப்பட்டவர். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து தற்போது சர்ச்சைகள் நடந்து வருகின்றன. இது தேவையற்றது என்பது என் கருத்து. எது தேவையற்றது? வாஜ்பேயிக்கு பாரத ரத்னா விருது கொடுப்பதா? கிடையாது. அவருக்கு கொடுப்பது குறித்த சர்ச்சைகள் தேவையற்றது என்பதே என் கருத்து.

பாரத ரத்னா விருதுக்கு வேறு எந்தவொருத்தரையும் விட மிக மிக பொருத்தமானவர், அந்த விருதுக்காகவே பிறந்தவர் என்று சொன்னால் அது வாஜ்பேயிதான். குறிப்பாக பாரத ரத்னாவில் உள்ள பாரத என்ற சொல்லே இப்படி அந்த விருது பிற்காலத்தில் வாஜ்பேயிக்கு கொடுக்கப்படும் என்று தெரிந்தே வைக்கப்பட்ட பெயர் என்று கூறுமளவு அவர் மிகப் பொருத்தமானவர்.

அப்படியென்ன அவர் பொருத்தமானவர்? என்ன கேள்வி இது... சும்மாவா பின்னே... வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்து கொண்டிருந்த பொழுது அதில் போராடியவர்களை காட்டி கொடுத்த காவளிப் பய வேலை பார்த்து தியாகம் செய்தவரல்லவா நம்ம வாஜ்பேயி? இப்படியொரு STD... ஸாரி ஹிஸ்டரி இருக்கும் போதே பாராளுமன்றத்தில் தான் விடுதலை போராட்ட தியாகி என்று உண்மை சொன்னவரல்லவா இந்த குடு குடு கிழட்டு தியாகி. குஜராத் இனப்படுகொலை குறித்து நீலிக் கண்ணீர் வடித்துவிட்டு அந்த பக்கம் போய் அதனை நியாயப்படுத்திய பிரதமரல்லவா இந்த யோக்கியன். இது தவிர்த்து பன்னாட்டு கம்பேனிகளுக்கு பாரத மாதாவை கூட்டிக் கொடுத்த பெருமையென்ன? கங்கா மாதாவை கொப்போடும் குலையோடும் அப்படியே அல்வா சாப்பிடுவது போல தேம்ஸ் வாட்டர்ஸ் கம்பேனிக்கு கூட்டி கொடுத்த பெருமையென்ன?

அவரை வயதான தாத்தா என்று சொல்பவர்களை வன்மையாக கண்டிக்கிறேன். அவர் என்றுமே ஒரு பக்கத்து வீட்டு மாமாதான். வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலிருந்து இன்று மறூகாலனியாதிக்க அரசியல் நடவடிக்கைகள் வரை தான் என்றும் மார்க்கண்டேயனாய் வலம் வரும் ஒரு இளம் மாமா என்று நீரூபித்தவர் இந்த சரியான முடிச்சவுக்கி கட்சியில் இருக்கும் ஆக கேவலமான தவறான நபர் (சரியாத்தான் சொல்லிருக்கேன் ஏன்னா நான் ப்ர்ர்ர்... வகை முற்போக்காளன் அல்ல).

"யோக்கியன் வற்றான் செம்பெடுத்து உள்ள வை"....

இவரைப் போல பாரத ரத்னா விருது பெற்ற இன்னொருவர் தமிழகத்தில் பார்ப்பன பண்பாட்டு புரட்சி ('பயங்கரவாத பொறுக்கி' என்று படிக்கவும்) கும்பலுக்கு மேடையமைத்துக் கொடுத்த புரட்சி தலிவர் எம் சி ஆர் என்பது யாதேச்சையான விசயமல்ல.

வாஜ்பேயிக்கு அந்த விருதை கொடுக்கவில்லை எனில் அது அந்த விருதுக்குத்தான் அவமானம். அந்த விருதென்ன இதற்க்கு முன்பு அவமானப்பட்டதேயில்லையா? அப்படியில்லை நண்பர்களே. வாஜ்பேயி இதுக்கு முன்ன பட்ட அவமானங்களுடன் ஒப்பிடும் போது விருது கிடைக்காத அவமானம் ஒன்றும் கிடையாது. ஆனா விருதுக்கு அப்படியில்ல. அம்புட்டதான்.... ஒழுங்கா கொடுத்துபுடுங்க...

அசுரன்

மரணத்த விக்குறான் மோடி, மானத்த விக்குறார் கிருக்ஷ்ணசாமி!!

ம.க.இ.க. பொதுச் செயலாளர் மருதையன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையை புதிய கலாச்சாரம் பத்திரிகை சார்பில் அனானியாக ஒரு தோழர் பின்னூட்டமிட்டுச் சென்றுள்ளார். காமாரஜர் அரங்கத்தை மோடி என்கிற சொறி நாய்க்கு வாடகைக்கு விடுவதை கண்டித்தும் அது வெறுமே காங்கிரஸ் என்ற கும்பல் சம்பந்தப்பட்டது அல்ல தமிழர்களின் மானம், சுயமரியாதை சம்பந்தப்பட்டது எனவே அதனை பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது என்று அனைத்து ஜனநாயக, முற்போக்கு அமைப்புகளுக்கும் அழைப்பு விடுத்து இந்த அறிக்கை வந்துள்ளது. படித்துப் பார்க்கவும்.

**************************

ம.க.இ.க. பொதுசெயலர் தோழர் மருதையன்
இன்று பத்திரிகைகளுக்கு அளித்த அறிக்கை

"மரண வியாபாரி நரேந்திர மோடி பங்கேற்கும் துக்ளக் ஆண்டு விழா நிகழ்சிக்கு காமராஜ் அரங்கத்தை வாடகைக்கு தரக்கூடாது" என்று காங்கிரஸ் தலைவரிடம் நாங்கள் கோரியிருக்கிறோம் இந்த கோரிக்கையை முன் வைத்து சத்தியமூர்த்தி பவன் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்த எங்களது தோழர்கள் நேற்று கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருக்ஷ்ணசாமியோ "வியாபார ரீதியில் நிர்வகிக்கப்படும் யார் கூட்டம் நடத்துகிறார்கள் என்பதை தமிழக காங்கிரஸ் கண்கானிக்க முடியாது என்றும் இந்த விசயத்தில் தலையிட முடியாது" என்றும் கூறியிருக்கிறார். வியாபார விசத்தில் இவ்வளவு கறாராக நடந்து கொள்ளும் காங்கிரஸ் தலைவர் அரசியல் விசயங்களையும் கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது.

சமீபத்திய குஜராத் தேர்தல் பிரசாரத்தில் மோடி அரசை "மரண வியாபாரிகள்" என்று விமர்சித்ததிற்காக சோனியாவை 'வெளி நாட்டுக்காரி' என்று சாடினார் மோடி. முன்னால் ம.பி முதல்வர் திக் விஜை சிங் மோடியை 'இந்து பயங்கரவாதி' என்று சரியாகவே குறிப்பிட்டார். "அது பிரச்சாரம்-இது வியாபாரம்" என்கிறாரா கிருக்ஷ்ணசாமி? அப்படியானால் லக்ஷ்கர் ஏ தொய்பா தீவிரவாதிகள் பணம் கட்டினால் அவர்களுக்கும் காமராஜ் அரங்கத்தை வாடகைக்கு விடுவாரா?


இனப்படுகொலை குற்றத்திற்காக மோடி மீது அய்ரோப்பாவில் வழக்கு உள்ளது. அவர் அங்கே சென்றால் மறு கனமே கைது செய்யப்படுவார். இனப்படுகொலை குற்றவாளி என்ற காரணத்தினால் தான் "அமெரிக்காவில் கால் வைக்க கூடாது" என்று மோடிக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. வியாபார ஒப்பந்தம் போடுவதற்காக கூட அமெரிக்காவிலோ, அய்ரோப்பாவிலோ மோடி நுழைய முடியாது என்பது தான் இதன் பொருள். அமெரிக்க, அய்ரோப்பிய முதலாளிகளே வியாபாரத்தை பொருட்படுத்தாத போது கிருஸ்ணசாமி வியாபாரத்தில் இவ்வளவு குறியாக இருப்பது ஏன் ?


2002 இனப்படுகொலையின் போது காங்கிரஸ் எம்.பி இஸான் ஜாப்ரியை அவரது வீட்டில் வைத்தே கண்டதுண்டமாக வெட்டிக்கொன்றதும் மோடியின் காவிப்படை தான். இந்த கொலையில் முதல் குற்றவாளி மோடி தான் என்றும், அவரை கைதுசெய்ய வேண்டும் என்றும் ஜாப்ரியின் மனைவி உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். "கொலை வேறு வியாபாரம் வேறு" என்கிறாரா கிருஸ்ணசாமி?

கிருக்ஷ்ணசாமியின் மீது தாக்குதல் நடந்த உடனே "தமிழ் நாட்டின் சட்டம் ஒழுங்கே சீர்குழைந்து விட்டது" என்று குமுறினார் அவரது மகன் விக்ஷ்னு பிரசாத். குஜராத் முசுலீம்கள் கொல்லப்பட்ட போது "அதை கண்டு கொள்ள கூடாது" என்று போலீசுக்கு உத்தரவு பிறப்பித்தவர் தான் இந்த மோடி இதை எதிர்த்த சிரீ குமார் என்ற குஜராத் உளவுத்துறையைச் சேர்ந்தவர் தனது பதவியையே இழந்திருக்கிறார். ஆனால் கிருக்ஷ்ணசாமியோ 'வியாபாரத்தை இழக்க முடியாது' என்கிறார்.


காமராசரை கொலை செய்ய முயன்ற கூட்டம் தான் மோடியின் ஆர்.எஸ்.எஸ் என்ற உண்மையை கிருக்ஷ்ணசாமி மறுக்கிறாரா? காந்தி கொலையை நியாயப்படுத்தும் " நான் கோட்சே பேசுகிறேன்" என்ற நாடகம் மற்ற மாநிலங்களிலெல்லாம் தடை செய்யப்பட்ட போதும் அதை குஜராத் முழுவதும், நடத்திக்காட்டியவர் மோடி. பணம் கொடுத்தால் கோட்சே நாடகத்தை நடத்துவதற்கும் காமராசர் அரங்கத்தை கிருக்ஷ்ணசாமி வாடகைக்கு விடுவார் போலிருக்கிறது.

இது மதச்சார்பின்மை நிலவும் பெரியார் பிறந்த மண். உலகமே காறி உமிழ்ந்த ஒரு மத வெறி கொலைகாரன் இந்த மண்ணில் கால் வைக்க அனுமதிப்பது தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் அவமானம். கிருக்ஷ்ணசாமிக்கு பணம் தான் முக்கியம் என்றால் அவர் நட்டப்பட வேண்டாம்! காமராசர் அரங்கத்திற்கான ஒரு நாள் வாடகையை மக்களிடம் வசூலித்து நாங்கள் அவருக்கு தந்து விடுகிறோம், பணத்தைக் காட்டிலும் மானமும் மனிதாபிமானமும் மதச்சார்பின்மையும் தான் நமக்கு முக்கியம்.

மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு காமராசர் அரங்கை கொடுப்பதற்கு தமிழகத்தின் எல்லா கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மதவெறிக்கு துணை போகும் கிருக்ஷ்ணசாமியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். டில்லியில் உள்ள எமது தோழமை அமைப்புகள் சார்பில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். மதவெறி கொலைகாரன் மோடி தமிழகத்தில் கால் வைக்க அனுமதிக்க மாட்டோம் !

இவன்
மருதையன்
பொதுச்செயலர், ம.க.இ.க. 10.12008



Related Articles:

இவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான் நம்ப விரும்புகிறோம் அல்லவா??!!!

பாஸிஸ்டுகளின் வெற்றி !!

குஜராத் : தோல்வி யாருக்கு?

வர்ணாசிரம கிரிமினலும்! ஹவாலா கிரிமினலும்!

“இறுதித் தீர்ப்பு” குஜராத் படுகொலை :ஆவணப்படம்

வரலாறு பழிக்கிறது நாம் கோமாளிகள் என்று!

மோடியின் ராம ராஜ்ஜியம்Do we have a choice?

இந்துத்துவம் என்றால் பொய்த்துவம், பித்தலாட்டம், கர...

கலி முற்றும் பொழுதெல்லாம் நான் அவதரிப்பேன்!!!

படியுங்கள், பயங்கொள்ளுங்கள்.... 3_4

கோவை மும்பய் குண்டு வெடிப்பு தீர்ப்புகள்: நவீன மனுநீதி!

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில் 1 -2

பய பீதியில் மோடியும், ஜெயலலிதாவும் - பாசிசம்=கோழைத்தனம்!

Rama.... Rama....

Friday, January 04, 2008

இவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான் நம்ப விரும்புகிறோம் அல்லவா??!!!

குஜராத் இனப் படுகொலைகள் அரசே திட்டமிட்டு செயல்படுத்திய ஒன்று என்பதை தெஹல்கா விடியோக்கள் அம்பலப்படுத்தின. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை தமது பத்திரிக்கைகளில் வெளியிடாமல் கள்ள மௌனம் சாதித்தன அனைத்திந்திய பத்திரிக்கைகளும். செத்து சுண்ணாம்பாகிப் போன டாயானாவை பற்றியும், சாகாமலேயே வலம் வந்து கொண்டிருக்கும் உலக அழகி ஐசுவர்யாராய் அவரது கணவர் சகிதம் நகர்வலம் வருவது பற்றியும், இன்ன பிற பிராசாந்த், வரலட்சுமி உள்ளிட்ட உள்குடும்ப விவகாரங்கள் பற்றியும் ருசிக்க ருசிக்க புகைப்படங்களுடன் வெளியிடும் இந்த பத்திரிக்கைகள் தெஹல்கா பற்றி மௌனம் காத்தது காரியப் பூர்வமானது. தற்செயலானது அல்ல.

ஒருவன் எதை பேசுகிறான் என்பது மட்டுமல்ல எதை பேசாமல் மௌனம் காக்கிறான் என்பதும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததே. இது போன்ற குழப்பங்களுக்கும் ஊகங்களுக்கும் அவசியமில்லை என்று குமுதம் பத்திரிகை வெளிப்படையாகவே தனது RSS சார்பை, பார்ப்பன பாசத்தை வெளிப்படுத்தியுள்ளது.

ஜனவரி முதல் வாரத்துக்கான குமுதத்தில் கடைசிப் பக்கங்களில் வந்துள்ள தலையங்கத்திலும், அதற்க்கு அடுத்த பக்கங்களில் இல. கனேசனுடைய கருத்து தொகுப்பு என்ற பெயரிலும் தனது இந்த வர்க்க பாசத்தை விளம்பரப்படுத்தி நமது வேலையை மிச்சப் படுத்தியுள்ளது குமுதம் 'செட்டியார் அன் கோ' பத்திரிகை. குமுதம் பத்திரிகையின் அப்பட்டமான பார்ப்பன கொழுப்பை பேசும் முன்பாக அதனது மறைமுக பார்ப்பன நடவடிக்கைகளை சிறிது பார்த்து விடலாம்.

தமிழர்களை அடித்து மிரட்டி பந்தாடி வரும் அதே மலேசியாவில் அப்படிபட்ட சமபவங்கள் எதுவுமே நடக்கவில்லை என்பது போல செட்டியார் சாதி வெறியர்கள் தமது சாதி பெருமையை பறைசாற்றி மாநாடு நடத்துகிறார்கள். தமிழ், தமிழர்கள் என்று வரிக்கொருமுறை அறிவித்துக் கொண்டு தமது சாதி பாசத்தை தமிழ் முகமுடியில் மறைக்கும்
நரித்தனம் வேறு. ஆயினும் மலேசிய தமிழர்களின் உரிமைகள் குறித்தோ மலேசிய அரசின் பாசிச நடவடிக்கைகள் குறித்தோ எதுவும் காட்டிக் கொள்ளவில்லை இந்த மாநாட்டில். அந்த மாநாட்டில் குமுதம் இதழ் உரிமையாளர் ஜவஹர் பழனியப்பன் என்பவன் பேசுகிறான் தனது சாதி பெருமையை. இதை கட்டுரையாக வெளியிட்டுள்ளனர். இப்படி வெளிப்படையாக சாதி பெருமை பேசும் இழி பண்பை அவர்கள் விளம்பரப்படுத்துவது தற்செயலான நிகழ்வு அல்ல.

இதே இதழில் இதற்க்கு முந்தைய பக்கத்தில் தமிழகத்தை இருளில் தள்ளிய கழக ஆட்சி என்று ஒரு கட்டுரை. தமிழகம் ஏதோ பிறரது ஆட்சியில் பிரகாசமாக ஒளிர்ந்தது போலவும். கழக ஆட்சியில்லாத பிற மாநிலங்கள் எல்லாம் மிக பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டுள்ளது போலும். தமிழகத்தின் சாபக் கேடுகளுக்கு பின்னால் இருப்பது எல்லாம் கழக ஆட்சியே காரணம் என்பது போலும் அர்த்தம் வரும் வகையில் கழகம் என்ற சொல்லை கவாளித்தனமாக பயன்படுத்தும் ஒரே கும்பல் தமிழக பார்ப்பன கும்பல்தான். தலைப்பை பார்த்தவுடன் இந்த சந்தேகம் நமக்கு வந்ததால் எழுதியவர் யார் என்று பார்த்தால் அது 'சாவித்திரி கண்ணன்' என்ற பெண்மனி. பாப்பாத்தியாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதே நமது கருத்து.

ஆதாம் பால பிரச்சினையின் போது கருணாநிதி மீது பழி போட்டு அவரை கண்டனம் செய்து எழுதப்பட்ட குமுதம் கட்டுரையும் கூட பாப்பாத்தி எழுதியதுதான் என்பது தற்செயலான நிகழ்வு அல்ல. இதே இதழின் கடைசிப் பக்கத்தில் பயோடேட்டா பகுதியில் கருணாநிதியின் சமீபத்திய சாதனை என்று 'ராமர் பால பிரச்சினையில் மீண்டு வந்தது' என்று எழுதியுள்ளது இந்த பார்ப்பன குசும்பு பிடித்த மேல்சாதி வெறி பத்திரிகை. இது நமக்குத்தான் அசிங்கம். சூத்திரன் கருணாநிதியை பாப்பான் நாக்கை வெட்டுவேன் என்று மிரட்டுகிறான். நீதிமன்றம் ஞாயிற்றுக் கிழமை கடையை திறந்து வைத்து மிரட்டுகிறது. பத்திரிக்கைகள் எல்லாம் சேர்ந்து மனு நீதியின் அடிப்படையிலேயே பார்ப்பானின் கேடுகெட்ட திமிர்த்தன துடுக்குப் பேச்சை விமர்சனம் செய்யாமல் நியாயமான கேள்வி கேட்ட கருணாநிதியை விமர்சிக்கின்றன. தினமலம் பத்திரிகை முதல் பக்கத்தில் தினமும் கருணாநிதியை கேவலப்படுத்தி எழுதுகிறது. பார்ப்பான் எல்லாம் ஒற்றுமையாக கூடி நின்று ஒப்பாரி வைத்து இதை ஏதோ பொது பிரச்சினை என்று ஆக்கிவிடுகிறார்கள். தீடீரென்று பார்த்தால் கருணாநிதியை தாக்காமல் ராமர் பாலம் குறித்து ஒரு கட்டுரை தினமலம் பத்திரிகையில் உள் பக்கத்தில் அமுக்கி வாசித்து வருகிறது. என்னாடயிதி அதிசயம் என்று பார்த்தால் அதே பத்திரிகையில் பொதுப் பணித்துறை விளம்பரங்கள் பக்கத்துக்கு பக்கம் வாரியிறைத்து நிறைந்து கிடக்கிறது. கருணாநிதியும் ராமன் ஒரு நல்ல இளவரசன் என்பது போல எதையெதையோ சொல்லி பார்ப்பன கும்பலுடன் சமரசம் செய்து கொள்கிறார். இதுதான் பயோடேட்டா பகுதியில் குமுதம் பத்திரிக்கை திமிர்த்தனத்துடன் தனது பார்ப்பன குசும்பை, ஊளை கொழுப்பை ஒழுக விட அடிப்படை.

முன்பொருமுறை குமுதம் பத்திரிகையுடன் அவரது முதல் சண்டையின்(எதிரிகளாக இன்றுவரை இருவரும் செயல்படும் அளவு இந்த சண்டை இருந்தது) போது கருணாநிதி குமுதம் நிருபரை இவ்வாரு மிரட்டினார் 'நான் அடிச்சா நீ தாங்குவயாயா?" என்று. இதோ இன்று பார்ப்பன ஊழை கொழுப்பெடுத்த குமுதம் ஒட்டு மொத்த தமிழக உழைக்கும் மக்களையும், மனிதாபிமானிகளையும் அவமானப்படுத்தி பார்ப்பன திமிரை பத்திரிகையில் எழுதுகிறது. வாசகனோ நமீதாவின் அரைடவுசர் படம் தூக்கத்தை கெடுத்தது என்று வாசகர் கடிதத்தில் ஒப்பாரி வைக்கிறான்.

இந்த குறிப்பிட்ட இதழுக்கு முந்தைய வாரத்தில் வெளிவந்த குமுதம் இணைப்பு இதழ் 'மினி குமுதம் - வீட்டு உபயோக குறிப்புகள்' இதழில் முதல் சில பக்கங்களில் முக்கியமானவர்களாக முன்னிறுத்தப்பட்டவர்கள் அனைவரும் பார்ப்பன பெண்களாக இருந்ததும் கூட தற்செயலான நிகழ்வு அல்ல. அதே இதழில் அரசு பதில்கள் பகுதியில் ஒரு கேள்வி கேட்க்கப்பட்டது, "தெஹல்கா செய்தி பொலியாக இருக்கலாம் என்று சோ சொல்கிறாரே?" என்று. அதற்க்கு அரசு பதில் பின்வருமாறு சொன்னது, "'சோ' பூசனிக்காயை சோற்றில் மறைக்கலாம் ஆனால் யானையை சோற்றில் மறைக்க முயற்சி செய்கிறார்" என்று பகடி செய்தது. அதற்க்கு அடுத்த வாரத்தில் இதே பொய்யை அதாவது தெஹல்கா வீடியோ ஒரு போலி என்று கூறி கட்டுரையில் பேசுகிறார் இல. கனேசன். இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்னவென்பது இருக்கட்டும், 'சோ' என்ன புரிந்து கொள்ளலாம் என்றால் யானையை சொற்றில்தான் மறைக்க முடியாது ஆனால் கட்டுரை முழுவதும் பொய்யாக எழுதுவதன் மூலம் மறைக்கலாம் என்று குமுதம் சோவுக்கு பாடம் எடுக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். சோ என்ற பார்ப்பன இரட்டை நாக்கு மொட்டை குசும்பனுக்கே பாடம் எடுக்கும் அளவு குமுதம் செட்டியார் கும்பல் பார்ப்பன கொழுப்பேறி உள்ளது என்று வேண்டுமானால் நாம் புரிந்து கொள்ளலாம். மோடியின் பெருமை பேசி பார்ப்பன பொய் பரப்பும் அந்த இல கனேசன் கட்டுரைக்கு தலைப்பு 'மோதி மிதித்த மோடி!'.

அரசு பதில்கள் பகுதியில் சோவை காலை வாரியதாக வாசகர் முன்பு நாடகம் ஆடிய அதே குமுதத்தில் பயோடேட்டா பகுதியில் கலைஞருக்கு ஒரு சொட்டு போடுகிறது குமுதம். எதற்க்கு?.... நீண்ட கால சாதனையாக திராவிட கொள்கைகளை விடாமலிருப்பதற்க்காகவாம். அதென்ன கலைஞருடைய அந்த விடாத திராவிட கொள்கை? நேற்று இராமன் எந்த இன்ஞினியரிங் காலேஜ் என்கிற மிகச் சாதாரணமான கேள்வி கேட்டுவிட்டு இன்று ராமன் ஒரு சிறந்த இளவரசன் என்பதை நான் மறுக்கவில்லை என்று சரண்டர் ஆகிவிட்டு, நாளை இந்த விசயத்தை முதல் பக்கத்தில் எழுதி அசிங்கப்படுத்தும் தினமலம் பத்திரிக்கைக்கு பொதுப்பணித்துறை விளம்பரங்களை அள்ளிக் கொடுப்பதன் மூலம் திரை மறைவு ஒப்பந்தம் போட்டுக் கொள்வதுதான் திராவிட கொள்கை என்று குமுதம் சொல்லாமல் சொல்கிறது. ஏனேனில் இந்த சம்பவங்கள் எப்படி நடந்திருக்கும் என்று நம்மால் கற்பனை செய்து கொள்ள முடிகிறது. இவையெல்லாம் குமுதத்திற்க்கு தெரியாமல் இருந்திருக்காது.

நம்ம பையன் ஒரு கதை எழுதிருக்கான் உங்க பத்திரிக்கையில பிரசுரம் செஞ்சுடரேலா என்பதில் ஆரம்பித்து பார்ப்பன உயர் வர்க்க குடும்பங்கள் தமிழக பத்திரிக்கைகளில் ஆதிக்கம் செலுத்தும் விசயம் கொஞ்சம் கூர்மையாக இந்த பத்திரிகைகளை வாசித்தாலே புரியக் கூடிய ஒன்றுதான். தெஹல்கா அம்பலப்படுத்தலை தொடர்ந்து கூட இந்த பத்திரிக்கைகளுக்கு இதே வட்டங்களிலிருந்து தெளிவான இன்ஸ்ட்ரெக்சன்ஸ் வந்திருக்கும் என்பதுதான் நமது அனுமானம். அரசு மற்றும் அரசாங்க வட்டங்களில் இந்த பார்ப்பன பயங்கரவாத கும்பலின் நெருக்கத்திற்க்கு மலர்மன்னன் என்ற பார்ப்பன RSS குண்டனுக்கு அவன் மண்டைக்காடு கலவரத்தை
அரங்கேற்றிக் கொண்டிருந்த பொழுது உதவிய அன்றைய போலீசு துறை அமைச்சர் எம் ஜி ஆர் என்கிற சிகப்பு விஜயகாந்தே நல்லதொரு உதாரணம்.

மோடியின் பெருமை பேசி RSS பத்திரிகையாக தன்னை விளம்பரப்படுத்தியுள்ள ஜனவரி மாத முதல் வார இதழில் அந்த குறிப்பிட்ட தலையங்கத்தில் குமுதம் என்ன எழுதியுள்ளது?

"மத வாதத்திற்க்கு கிடைத்த வெற்றியா என்று கூட விவாதங்கள் நடக்கின்றன. ஆனால் குஜராத் மாநிலத்தில் மோடி ஆட்சியில் உருவான விளைவுகளை மதக் கண்ணாடியைக் கழற்றிவிட்டு பார்த்தாக வேண்டும்." - குமுதம்.

மோடி ஆட்சியில் உருவான முக்கிய விளைவான, சமூகத்தை மதத்தின் அடிப்படையில் பிளவு படுத்தியதையும், வெறும் புரளியின் அடிப்படையிலேயே 3000 முஸ்லீம்களை கொன்று குவித்ததையும், அதை பெருமையாக சொல்லிக் கொண்டு இன்றுவரை திமிராக வலம் வருவதையும் மனிதாபிமானமுள்ளவர்கள் கண்டிப்பதும், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று கோருவதும் குமுதத்தின் அகராதியில் மதக் கண்ணாடி போட்டுக் கொண்டு பார்ப்பதாம். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் கூட மதவெறி துவேசத்தை இன்னும் ஒரு மடங்கு அதிகமாக பேசிய மோடி, தனது வெற்றிக்கு சமூகத்தை மதத்தின் அடிப்படையில் பிளந்ததையே நம்பியுள்ளார் என்பதை சொல்லாமல் சொல்கிறார். ஆனால் பார்ப்பன வெறி பத்திரிகை குமுதமோ இப்படி விமர்சனம் செய்வதை, மனிதாபிமானியாக இருப்பதை மதக் கண்ணாடி அணிந்திருப்பதற்க்கு ஒப்பானது என்று சொல்கிறது. பார்ப்பனியத்திற்க்கு எதிராக பேசினாலே அதை போலி மதச் சார்பின்மை என்று சாணியடிக்கும் RSS கும்பலின் அதே தந்திரம்தான் மனிதாபிமானத்தை மதக் கண்ணாடி என்று சாணியடிக்கும் குமுதத்தின் இந்த கருத்திற்க்கும் பின்னால் உள்ளது.

"76,000 கோடி அளவிற்கு அபாரமாக முதலீடு குவிந்திருப்பதை ரிசர்வ் வங்கியே உறுதிப்படுத்தியிருக்கிறது. பொருளாதாரம் 10.6 % உயர்ந்திருக்கிறது. கிராமங்களுக்கு மின் விநியோகம் சீரமைக்கப்பட்டிருக்கிறது. விவசாயத்திலும் சாதனை நிகழ்ந்திருக்கிறது." - குமுதம்.

இப்படி குஜராத்தின் வளர்ச்சி என்று குமுதல் பட்டியலிடும் எதுவும் அந்த மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததற்க்காக ஆதரமாக இல்லை. இந்த அளவுகோல்களை இந்தியா முழுவதற்க்கும் கூட பொருத்திப் பார்த்து மோடியை விட மன்மோகன் சிங் சூப்பர் என்று நிறுவ முடியும். ஆனால் இவை உண்மையில் மக்களை மிக மோசமான நிலைக்கு தள்ளியுள்ளன என்பதை அங்கு விவசாயத்தில் நிகழ்ந்துள்ள தற்கொலைகளே சாட்சி சொல்லும். இந்தியாவின் தற்கொலை சிறப்பு பொருளாதார மண்டலங்கள் எனப்படும் மாநிலங்களில் ஒன்றாக தகுதி பெறும் நிலையிலேயே குஜராத் உள்ளது. குஜராத் விவசாயிகள் தற்கொலையை மறைத்து விட்டது மோடி அரசு என்று பஜகாவினுடைய விவசாயிகள் சங்கமான கிசான் சபா குற்றம் சாட்டுகிறது. குஜராத்தின் உணவு உற்பத்தி இந்த ஒரு வருடத்தில் மட்டும் 10 லட்சம் டன்களுக்கும் மேல் குறைந்து விட்டது. ஒவ்வொரு குஜராத்க்காரனின் தலை மீதும் 19 ஆயிரத்து சொச்சம் ரூபாய் கடன் இந்த ஒரு வருடத்தில் ஏறி உள்ளது. குஜராத் தனது தகுதியை மீறி கடன்களை குவித்துள்ளது என்று பா சிதம்பரம் குற்றம் சாட்டுகிறார். கேள்வி முறையின்றி குஜராத் வளங்களை சுரண்டுவதற்க்கு பன்னாட்டு கம்பேனிகளுக்கு உரிமை கொடுக்கும் பாசிச சூழலை உருவாக்கியுள்ளதை நாம் விமர்சனம் செய்வதைத்தான் மதக் கண்ணாடி போட்டு பார்க்காதே என்று அவதூறு பேசுகிறது குமுதம். விவசாயம் குறித்து ஒரேயொரு புள்ளிவிவராமவது போட்டு எழுதலாமே குமுதம் பத்திரிக்கை? ஏன் ஒரே வரியில் விவசாயம் வளர்ந்துள்ளது என்ற பொய்யை - ஒரு திமிங்கலத்தையே தனது தலையங்கத்தில் மறைத்துவிட்டது குமுதம்? படிக்கும் வாசகன் நமீதா எந்தளவுக்கு மறைக்காமல் காட்டுகிறாள் என்பதில்தான் ஆர்வமாக இருப்பான் என்று தெரிந்த திமிர்தான் இதற்க்கு அடிப்படை. உண்மையில் குஜராத் இந்தியாவின் பல மாநிலங்களையும் விட சோசியல் இண்டெக்ஸ் எனப்படும் சமூக முன்னேற்றத்திற்க்கான அளவுகோலில் மிக மோசமாகவே செயல்பட்டுள்ளது.

RSS பிரச்சாரமாக வந்துள்ள இந்த தலையங்கத்திற்க்கு முந்தைய பக்கங்களில் வந்துள்ள "தமிழகத்தை இருளில் தள்ளிய கழக ஆட்சிகள்" என்ற கட்டுரையும் இந்த RSS தலையங்கமும் வெவ்வேறல்ல. தலையங்கத்தில் குஜாராத் ஒளிர்கிறது என்ற இந்துத்துவ பிரச்சாரமும், அந்த கட்டுரையில் தமிழகம் இருளில் என்ற திராவிட அரசியல் மீதான வெறுப்பு பிரச்சாரமும் சரியான தாள சுதியில் இணைந்து ஒலிக்கும் வகையில் RSS பார்ப்பன குசும்புக்கு ஏற்ப இசையமைக்கப்பட்டது.

"2002 ல் குஜராத்தில் நடந்த கோத்ரா சம்பவத்துடன் மோடியை தொடர்படுத்தும் சில பதிவுகள் ஊடகத்தில் பரபரப்பாக வெளிவந்தன." - குமுதம்.

அதாவது குஜராத்தில் நடந்தது கோத்ரா என்ற ரயில் எரிப்பு சம்பவம்தானாம். குஜராத்தில் 57 கரசேவக வெறிநாய்கள் இறந்ததுதான் குமுதத்தின் கண்களில் நிற்கிறதா என்றால் இல்லை அன்பர்களே. இந்த வரிகளின் மூலம் குஜராத் முஸ்லீம்கள் மீதான இன அழிப்பு படுகொலை தாக்குதலை கோத்ரா மூலம் நியாயப்படுத்தி பொதுமக்கள் ஆதரவை தக்க வைக்கும் அதே மோசடியான RSS வித்தையைத்தான் குமுதம் செய்கிறது. இவர்கள் யாரும் தப்பித் தவறி கூட கோத்ரா ஒரு விபத்து என்ற பலமுறை நிரூபிக்கப்பட்ட உண்மையை தமது பத்திரிகையில் எழுதியதில்லை. குஜராத் படுகொலை குறித்து பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் கூட இப்படி கோத்ரா சம்பவம் என்றே குறிப்பிட்டு பேசுவார்கள். இதன் மூலம் குஜராத் படுகொலைகளை
நியாயப்படுத்துவதே இவர்களின் நோக்கம். கோத்ராவில் இறந்தவர்கள் மனிதர்களாக மதிக்க தகுதியுடையவர்களா என்பது தனிக் கேள்வி. ஆயினும் இந்த கோத்ரா சம்பவத்தை இவர்கள் பயன்படுத்திக் கொள்வதில் உள்ள மோசடியை சிறிது பார்த்துவிடலாம். காந்தி என்ற மிதவாத பார்பினியவாதியை கொன்ற கோட்சே என்ற கோழைப் பன்றி தனது கையில் ஒரு இஸ்லாமியனின் பெயரை பச்சை குத்தி கொண்டுதான் அதை செய்தான். இதன் மூலம் மக்களிடையே பரவும் முதல் செய்தி என்பது இஸ்லாமியர்கள் மீதான கோபமாக திரும்பி பார்ப்பனியத்தின் ரத்த வெறியை தீர்க்க உதவும் என்ற நரிப்புத்தியின் அடிப்படையிலேயே இதனை செய்தான் கோட்சே. இதே உளவியல் தந்திரத்தைதான் குஜராத்தில் கோத்ரா சம்பவம் நடந்தவுடன் RSS பார்ப்பன பயங்கரவாத கும்பல் செய்தது. இதோ இன்று வரை மக்களிடையே நிலவிவரும் கருத்து என்பது கோத்ரா சம்பவம் ஒரு இஸ்லாமிய/பாகிஸ்தானிய சதி என்பதே ஆகும். உண்மையில்லை என்று மறுக்க இயலாதா தெஹல்கா வீடியோவை பொய் என்றும் போலி என்றும் பேசும் இதே பார்ப்பன கும்பல்தான் கொத்ரா பொய்யையும், பாபர் மசூதி பொய்யையும், சேது பாலம் பொய்யையும் உண்மை என்பது போல பேசி மக்களிடம் வெறியை கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி வளர்க்கின்றனர். குமுதம் அப்படிப்பட்ட கும்பலின் அதிகாரப் பூர்வ ஏடாக தன்னை அறிவித்துள்ளது என்பதுதான் சமீபத்திய செய்தி.

"மாநிலத்தில் நடந்த இந்த மாற்றங்கள்தான் மறுபடியும் மோடி வெற்றி பெற்றதற்கான அடிப்படை காரணம்". - குமுதம்.

உண்மையில் குஜராத்தில் நிகழ்ந்துள்ள மாற்றம் என்பது இந்துத்துவ வெறியர்களின் பொய் பித்தலாட்ட பேச்சுக்களை கண் மூடித்தனமாக நம்பும் வகையில் சிறிது சிறிதாக மூளைச் சலவை செய்யப்பட்ட மக்கள் என்ற விசயமே ஆகும். குறிப்பாக கோத்ரா சம்பவம் நடந்து முடிந்தவுடன் அத்வானி என்ன சொல்கிறான்: "இது ஒரு அந்நிய நாட்டு சதி" என்று. அஹமதாபாத் மீட்டிங்கில் தொகாடியா என்கிற பன்றி பின்வருமாறு பேசுகிறது, "இராமாயணம் கதை உங்களுக்கு தெரியுமில்லையா? அதில் அனுமன் வாலுக்கு யார் தீ வைக்கிறான்?.... ராவணன்... அனுமன் என்ன செய்கிறார்?... லங்காவை எரித்து விடுகிறார்... இப்போ கோத்ராவில் எரிந்த பெட்டிதான் அனுமனுடைய வால். தீ வைத்தது யார்?... முஸ்லீம்கள்... அனுமன் இப்போ பறந்து போறார்... இலங்கையை எரிக்க போறார்.... இலங்கை எது?" இப்படி கூறிய பிற்ப்பாடு இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை பட்டியலிடுகிறான் இந்த பன்றி. இதே போல மோடியினுடைய பேச்சுக்கள் எல்லாமே குஜாராத்திகள் கத்தியால் வயிற்றில் சொருகிறான், எரிக்கிறான் என்று குறிப்பான வன்முறை செயல்பாடுகளை சொல்லி அவற்றை மக்கள் செய்யத் தூண்டும் வகையிலேயே இருந்தது. பழங்குடியினரையும், மலைவாசிகளையும் தனது NGO வேலைகளின் மூலம் லோன் வாங்கி தருவது உள்ளிட்ட விசயங்களால் தனக்கு விசுவாசமாக வைத்துக் கொண்டான். பிறகு கோத்ரா சம்பவம் நடந்தவுடன் அவர்களிடம் சென்று இதே பொய் பிரச்சாரத்தை செய்தால் அவன் இயல்பாகவே கோபம் கொண்டு வெறிச் செயலில் ஈடுபடவே செய்வான். திட்டமிட்டு சிறு சிறு கலவரங்கள் மூலம் ஒவ்வொரு பகுதியாக மக்களை பிளவு படுத்துவதும் பிறகு அந்த பிளவை பயன்படுத்திக் கொண்டு கோத்ரா அல்லது காந்தி கொலை அல்லது மண்டல் கமிசன் கோசுவாமி கோலை போன்று எதையாவது செய்து ஏற்கனவே உள்ள பிளவை வெறுப்பாக அறுவடை செய்து கொள்வதுமான பண்பாட்டு மாற்றம் தான் குஜராத்தில் அரங்கேறியுள்ளது. இதை நம்ப மறுப்பவர்களுக்கு இன்றைய கர்நாடகமும், சமீபத்திய தமிழக - தென்காசி கலவரமும், ஒரிஸ்ஸா கலவரமும் சாட்சியாக இருக்கின்றன. இந்த மாற்றங்கள் குறித்து குமுதம் பேசவில்லை.

இப்படி மக்கள் வெறியூட்டப்பட்டுள்ளதால்தான் படு அல்பத்தனமான பொய்களைக் கூட பார்ப்பன பயங்கரவாதிகளால் அங்கு விற்க முடிகிறது. எ-கா: இஸ்லாமியர்கள் இந்து பெண்களை கடத்திச் சென்று திருமணம் செய்வதன் மூலம் தமது மக்கள் தொகையை கூட்டிக் கொள்கிறார்கள் என்ற பொய்யை அவர்கள் வெகு சீரியசாக விவாதம் செய்வதை காணலாம். இதை தடுப்பதற்க்கென்றே ஒரு பயங்கரவாதி பிரபலமாக குஜராத்தில் உள்ளான். அவனை Frontline பத்திரிகை பேட்டியெடுத்து வெளியிட்டது. இஸ்லாமியனை மணந்த இந்து பெண்களை மட்டுமல்ல, தாழ்த்தப்பட்டவர்களை மணந்த மேல்சாதி பெண்களை மீட்பதும் என் கடமை என்று மார்தட்டுகிறான் அந்த மேல்சாதி வெறி சொறி நாய். மோடி என்கிற சொறி நாயோ மலம் அள்ளுவது தியானம் செய்வது ஆகும் என்று கூறி மலம் அள்ளும் சாதியைச் சேர்ந்தவர்களை தொடர்ந்து மலம் அள்ளச் சொல்கிறான். இதே குஜராத்தில் மலம் அள்ளுபவர்கள் உரிமை கேட்டு போராடிய போது அவர்கள் ஒடுக்கப்பட்டது தற்செயலான நிகழ்வு அல்ல. இப்படி மக்களை மத வெறி பார்ப்பனிய அடிமைத்தன போதையில் ஆழ்த்தியுள்ளதால்தான் குஜராத்தை மோடி கூட்டிக் கொடுப்பதை தட்டிக் கேட்க்க ஆளில்லை. SEZ என்ற பெயரில் அடிமாட்டு விலைக்கு நிலங்கள் பன்னாட்டு தரகு கம்பேனிகளுக்கு விற்க்கப்பட்டுள்ளது இதற்க்கு ஒரு உதாரணம் ஆகும். குஜராத்தின் மறுகாலனிய அடிமைத்தனம் என்கிற பண்பு மாற்றமும், பார்ப்பினிய அடிமைத்தனம் என்கிற பண்பும் தனித்தனியான நிகழ்வுகள் அல்ல. இவை ஒன்றையொன்று சார்ந்த விசயங்கள் அதனால்தான் குமுதம் பத்திரிகை தனது பார்ப்பனிய சார்பை பொருளாதார முன்னேற்றம் என்கிற பொய்யான பிரச்சாரத்தின் பின் நின்று கொண்டு வெளிப்படுத்துகிறது. இதை குமுதம் பத்திரிகை மட்டுமல்ல அனைந்திந்திய பத்திரிகைகளும் செய்கின்றன என்பது தற்செயலான நிகழ்வு அல்ல. இவை அவற்றின் வர்க்க சார்பையே காட்டுகின்றன.

இவையேல்லாவற்றையும் தொகுத்து பார்த்து படிக்கும் வாசகர்கள் இவர்களின் இந்த கள்ள உறவை புரிந்து கொள்ளமாட்டார்களா என்றால் அதற்க்கு குமுதம் வாசகர் கடிதம் பகுதியில் நமீதாவின் அரை டவுசர் படத்தை போட்டு தூக்கத்தை கெடுத்தது குறித்து குறை படும் வாசகரே சரியான பதிலை நமக்கு சூசகமாக சொல்கிறார்.

ஏகாத்மவாதம் என்கிற RSS சித்தாந்தத்தை உருவாக்கியவரை என்கௌன்டரில் போட்டுத் தள்ளிய (இவரை போட்டுத் தள்ளியது பார்ப்பன பயங்கரவாதிகள் என்றும் ஒரு கூற்று உண்டு. அவரை போட்டு தள்ளியது இன்றும் மர்மமாகவே இருக்கிறது, போட்டுத் தள்ளப்பட்டான் என்கிற ஒரு உண்மையை தவிர்த்து) அன்றைய CPMன் இன்றைய வாரிசு புத்ததேவ் பட்டாச்சார்யா அன்றைய RSSன் இன்றைய வாரிசான அத்வானியை நண்பர் என்று விளித்து - "நந்திகிராம் வரை வந்த அத்வானி என்னை சந்திக்காமல் சென்று விட்டாரே" என்று வருத்தப்படுவதும். அதற்கு அத்வானி பதிலுக்கு நண்பர் என்றே விளித்து ஆறுதல் சொல்வதும் தற்செயலானவையல்ல. மறுகாலனிய பொருளாதாரத்திற்க்கு ஏற்ற நிர்வாக வடிவமாக பெரும்பான்மை மக்களை அடிமைத்தனத்தில் வைத்திருக்கும் பார்ப்பனியமே இருக்கிறது என்பதாலேயே மோடிக்கு அனைத்திந்திய பத்திரிக்கைகளும் ஜால்ரா தட்டி 'vibrant குஜராத்' என்று கூவிக் கூவி பார்ப்பன பயங்கரவாதத்தை விற்க்கின்றன. குமுதம் உள்ளிட்ட RSS பத்திரிகைகள் குஜராத் ஒளிர்கிறது என்ற பிரச்சாரத்தின் பின்னே குஜராத் இனப்படுகொலைகளை மறக்க கோருவதும் இந்த அம்சத்திலேயே. ஏனெனில் மறுகாலனியத்தின் பெயரால் பார்ப்பனியம் ஒவ்வொருவர் செவிட்டிலும் அறைந்து கேட்கிறது 'ஒன்று நீ எங்கள் பக்கம் இரு அல்லது புரட்சிகாரனாய் மாறிவிடு' என்று. கலைஞர் சொல்கிறார் 'நான் உங்கள் பக்கம்" என்று. ராமதாசோ, "என்னிடம் இந்த கேள்வி கேட்பதற்க்கு நான் எந்த வகையிலும் தகுதியில்லாதவன் மேலும் கர்நாடகத்தில் தேவகௌடா என்ன செய்கிறாரோ அதையேதான் இங்கு நான் செய்கிறேன் என்னை சந்தேகப்படாதீர்கள்" என்று தாழ்மையுடன் கூறி வாழும் பெரியார் பட்டம் ஒன்றே போதும் என்று பின்வாங்கிக் கொண்டார். அரசியல் அசிங்கம் வைகோ, விஜயகாந்த, சோம பானம் புகழ் சரத்குமார் உள்ளிட்டவர்கள் நாங்கள் அல்ரெடி உங்கள் பக்கம் உள்ளோம் என்று கூறிவிட்டனர். தனது பிறந்த நாளுக்கு ஊரெல்லாம் சுவரெழுத்து எழுதி அசிங்கம் செய்து வைத்து களைத்து போயிருந்த வீரமணியோ மோடியின் தேர்தல் வெற்றிக்கு காரணம் குஜராத கலவரம் குறித்து பேசியதுதான் என்று கூறி தான் சுயமரியாதை இயக்கத்தை சேர்ந்தவனல்ல RSS புரா வைத்து மறுகாலனிய சேவை செய்யும் பார்ப்பன பயங்கரவாதிகளின் சகலப்பாடியான பெரியார் புர டிரஸ்ட் ஓனர் என்பதை வெட்கமின்றி பறைசாற்றினார்.

பார்ப்பனியத்திற்க்கு சரியான அடி கொடுத்து அதை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து விட்டோம் என்று பெருமை பேசித்திரிந்தவர்களே இதோ உங்களது தலைவர்கள் எல்லாம் பார்ப்பனியத்தின் அடி பொடிகளாய் அவதாரமெடுத்து நிற்கின்றனர். பார்ப்பனியமோ விஸ்வரூபமெடுத்து தனது உடம்பெல்லாம பொய்யும் பித்தலாட்டமும் ஒழுக நிற்கிறது. மறுகாலனிய சேவை செய்து கொண்டே பார்ப்பனிய எதிர்ப்பு செய்வதாக பம்மாத்து செய்யும் முற்போக்கு சீமான்களே இப்போது பார்ப்பனியமும் ஏகாதிபத்தியமும் முச்சந்தியில் முத்தமிட்டு சரசம் செய்கின்றனவே? என்ன செய்வதாக உத்தேசம்? அவர்கள் சரசம் செய்ய விளக்கு பிடிப்போமா? சாதிரீதியாக அணி திரண்டு ஒவ்வொருத்தரும் தனித்தனியே உரிமை கோரலாம் என்று பேன்ஸியான செயல் தந்திரம் பகன்ற கனவான்களே பார்ப்பனியத்தின் பலமே சாதி பாசத்தில் ஊறிய அடிமைகளாக மக்கள் இருப்பதுதான் என்ற உண்மை தெரிந்த பின்பு என்ன செய்வதாக உத்தேசம்? இன்னுமொரு பெரியார் அவதாரமெடுப்பார் என்று பகல் கனவு கண்டு கொண்டு பார்ப்பனியத்தின் பாதங்களில் படுத்துறங்குவதாக உத்தேசமா? இன்றைய பார்ப்ப்னியத்தை எதிர்க்க ஒரு பெரியார் போதுமா? சுயமரியாதையிழந்து பார்ப்பினியத்தின் அடிமைகளாய் வாழ்வதை விட, பெரியாரின் ஆவியை நம்முள் இறக்கிக் கொண்டு ஆயிரம், இரண்டாயிரம், லட்சம், கோடி பெரியார்களாய் கோடிக் கால் பூதமாக எழுந்து நின்று பார்ப்பனியத்தை வீதிகளில் சந்தித்து மண்டையொடைக்கலாம் அதற்க்கு தேவைப்படுவதோ பெரியாரியத்தின் சுயமரியாதையும், கம்யுனிசத்தின் மனிதாபிமனமும் அன்றி வேறல்ல.

அசுரன்


Related Articles:

பாஸிஸ்டுகளின் வெற்றி !!

குஜராத் : தோல்வி யாருக்கு?

வர்ணாசிரம கிரிமினலும்! ஹவாலா கிரிமினலும்!

“இறுதித் தீர்ப்பு” குஜராத் படுகொலை :ஆவணப்படம்

வரலாறு பழிக்கிறது நாம் கோமாளிகள் என்று!

மோடியின் ராம ராஜ்ஜியம்

Do we have a choice?

இந்துத்துவம் என்றால் பொய்த்துவம், பித்தலாட்டம், கர...

கலி முற்றும் பொழுதெல்லாம் நான் அவதரிப்பேன்!!!

படியுங்கள், பயங்கொள்ளுங்கள்.... 3_4

கோவை மும்பய் குண்டு வெடிப்பு தீர்ப்புகள்: நவீன மனுநீதி!

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில் 1 -2

பய பீதியில் மோடியும், ஜெயலலிதாவும் - பாசிசம்=கோழைத்தனம்!

Rama.... Rama....

Related Posts with Thumbnails