TerrorisminFocus

Monday, February 09, 2009

கம்முனுஸ்டு மிஸ்டர் மீட்டிங்கு, ஈழப் பிரச்சினைக்கு தீர்வு சொல்றாருடோய்…. !!!

CPM பாசிஸ்டு கட்சியின் இணைய பிரசங்கியான சந்திப்பு வேறு வழியின்றி மார்க்ஸியத்தின் ஒளியில் விசயங்களை பரிசீலிக்கும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுவிட்டார். ஆயினும் அப்படி ஒரு ஆய்வு முறை பயிற்சியின் மூலமே ஒருவருக்கு கைவரும் என்பதும், 'போலச் செய்தல்' என்பது இங்கு சாத்தியமில்லை என்பதும் அவரது கட்டுரையை படிக்கும் போது புலப்படுகிறது. குறிப்பாக முதலாளித்துவ சிந்தனை முறைக்கு பழகிய CPM கும்பல்களால் இயங்கியல் ரீதியில் சிந்தித்து கருத்துக்களை வெளிப்படுத்துவது என்பது இயலவே இயலாத காரியமாகிவிட்டது. பரிதாபம்தான். எனினும், அவரது முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

நிற்க, ஈழம் பிரச்சினையில் புரட்சிகர அமைப்புகளை இலக்காக வைத்தே கட்டுரை எழுதியுள்ளார் திருவாளர் சந்திப்பு. நல்லது ஆனால் பிரச்சினை என்னவென்றால் புரட்சிகர அமைப்புகளின் நிலைப்பாடென்று அவரே ஒன்றை கற்பனை செய்து கொண்டு பேசுகிறார். இது நகைப்பிற்குரியது. அடுத்தவர் மண்டையில் உட்காந்து கொண்டு சிந்திக்கும் இவரது தோழர் கோமாளி வுடுதலையை இவர் ஞாபகப்படுத்துகிறார்.

சந்திப்பு சொன்னது:
""தமிழகத்தில் உள்ள பல இனவாத நக்சலிச அமைப்புகள் உட்பட பலரும் சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். ""

'சுயநிர்ணய உரிமை' என்ற சொல்பதத்தின் மார்க்ஸிய அர்த்தத்தை முதலில் சந்திப்பு புரிந்து கொண்டாரா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். மார்க்ஸியத்திலிருந்து மேற்கோள் காட்டி அவர் விவாதிக்கும் ஒரு பிரச்சினை தனது நாட்டு எல்லைகளை கடந்து உள்ள ஒரு அந்நிய பிரதேசம் பற்றியது என்பதை சுத்தமாக மறைத்து விடுகிறார் அவர். இன்னொரு நாட்டில் நிலவும் தேசிய பிரச்சினைக்கு அடுத்த நாட்டு கம்யுனிஸ்டு கட்சி தனது அரசியல் ஆதரவை மட்டுமே நல்க முடியும், தீர்வுகளை அல்ல என்பதை காமரேடு சந்திப்புக்கும், அவர் சார்ந்த CPM பாசிஸ்டுகளுக்கு ஞாபகப்படுத்த கடமைப் பட்டுள்ளேன்.

மேலும் இந்த விசயத்தில் ம க இ கவினுடைய நிலைப்பாடு என்பது ஒன்றிணைந்த இலங்கை என்பதையே விரும்புகிறது. ஆனால் அதனை முடிவெடுக்கும் தகுதி அந்த மக்களுக்கே சொந்தம். CPMமோ அல்லது இந்திய அரசோ அல்லது இலங்கை அரசோ அல்லது புலிகளோ கூட இதில் முடிவெடுக்க உரிமையற்றவர்கள்.

ஒரு முதலாளித்துவ அரசில், ஏகாதிபத்திய சூழலில் ஒரு பகுதி மக்களின் தேசிய விடுதலைக்கான போராட்டத்திற்கு வேற்று நாட்டு கம்யுனிஸ்டு கட்சி தீர்வுகளை அல்ல மாறாக தனது ஆதரவைத்தான் நல்க முடியும். இப்படி நாடு விட்டு நாடு தாண்டி தீர்வுகளை நல்கும் நாட்டாமைத்தனம் அதிகாரத்துவ இயங்கியலின் ஒரு பதம் எனில் அதன் இன்னொரு எதிர்ப்பதம் 'சரண்டர்'த்தனம்.

ஒன்றுபட்ட போலி கம்யுனிஸ்டு கட்சியாக இவர்கள் இருந்த பொழுது இந்தியாவுக்கான தீர்வைத் தேடி ஸ்டாலினிடம் சென்று 'சரண்டர்' ஆகி அதனை அவர் கண்டித்து உங்களது நாட்டுக்கு ஏற்ப மார்க்ஸியத்தை நடைமுறைப்படுத்துவதை நீங்கள்தான் செய்ய வேண்டும் என்று கூறிய கதையின் இன்றைய மறுஎதிர் ஒளிபரப்புதான் CPM கட்சி சிரிலங்கா பிரச்சினைக்கு தீர்ப்பு சொல்லும் தற்போதைய கதை. என்றைக்குமே ஒவ்வொரு நாட்டு பாட்டாளி வர்க்கமும் அந்தந்த நாட்டு பிரச்சினைக்கான தீர்வுகளை அவர்களே பருண்மையாக கண்டுணர்வதுதான் சாத்தியம். அப்படியில்லாத ஒரு தீர்வு கருத்துமுதல்வாத திரிபே ஆகும்.

இதையெல்லாம் விட மிக முக்கியமானது ஒரு நாட்டில் நடக்கும் தேசிய விடுதலை போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் அதன் பக்கத்து நாட்டு கம்யுனிஸ்டு கட்சியானது அந்த தேசிய விடுதலை போராட்டத்தின் எதிரியாகிய ஏகாதிபத்தியத்தையும், அது சர்வதேச எதிரி என்பதையும், அது ஒடுக்கும் தேசிய இனத்தின் எதிரி என்பதையும் அம்பலப்படுத்தியே அரசியல் செய்ய வேண்டும். மாறாக ஏகாதிபத்தியத்திற்கு புனித முகமூடி போடும் வேலையை செய்யக் கூடாது. இந்த அம்சத்தில் ஈழப் பிரச்சினையில் பிராந்திய ஆதிக்க சக்தியான இந்தியாவின் ஆக்கிரமிப்பு நோக்கங்களை அம்பலப்படுத்துவம், அதன் பின்னே இருந்து கொண்டு சுரண்டும் இந்திய தரகு முதலாளிகளை அம்பலப்படுத்துவதுமே சரியான அரசியலாகும்.

இந்திய மக்களின் வரிப் பணத்தில் ஈழத்தை இந்திய தரகு முதலாளிகள் சுரண்டுவதை எதிர்ப்போம், ஈழ சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்போம் என்ற அடிப்படையிலான அரசியல் முழக்கங்கள்தான் இந்திய, சிங்கள, ஈழத் தமிழர்களை, மற்றும் சர்வதேசிய உழைக்கும் மக்களை ஈழத்திற்கு ஆதரவாக திரட்டும் சரியான அரசியல் வழியாக இருக்க முடியும். ஆனால் CPM கும்பலோ இந்தியாவின் இந்த அரசியல் பொருளாதார நோக்கங்களை பற்றி பேசவே காணோம். இதுதான் இவர்களின் மார்க்ஸியம்.

சொந்த நாட்டிலேயே கூட முதலாளித்துவ அரசின் கீழ் செயல்படும் பொழுது அது அரை காலனிய நாடாக இருக்கும் பட்சத்தில் பரந்துபட்ட மக்களுடன் ஐக்கியப்பட்டு ஆளும் வர்க்கத்தை தனிமைப்படுத்தும் முயற்சிக்கு ஏதுவாக அந்த நாட்டின் தேசிய இன உணர்வுக்கு முதலில் அங்கீகாரம் வழங்குவதும். அதனுடாக அவர்களுடன் ஐக்கியப்பட்டு செயல்படுவதின் மூலம் அதனை பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்திற்கு வளர்ப்பதும் தேவைப்படுகிறது. இதன் அர்த்தம் தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவு என்று ஒருவன் கூறிக் கொண்டால் அவனை மார்க்ஸியவாதி என்று சொல்லுவதற்கு ஒரு அடிப்படையும் இல்லை. ஏனேனில் வைத்தால் முடி சிரைத்தால் மொட்டை என்பதும் இயக்கமறுப்பியல் வகைப்பட்ட சிந்தனைதான். எதையுமே அதன் வளர்ச்சி போக்கில் வைத்து புரிந்து கொள்வதும், பரிசீலிப்பதுமே இயக்கவியல் சிந்தனை முறை.

தேசிய இன பிரச்சினையில் சமரசமின்றி சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதைத்தான் மார்க்ஸியம் வலியுறுத்துகிறது. சந்திப்பு மேற்கோள் காட்டும் குறிப்பிட்ட பகுதியில், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு தேசிய இனம் பிரிந்து செல்ல விரும்பும் போது அது பாட்டாளி வர்க்க நலனுக்கு ஊறாக இருக்கின்ற பட்சத்தில் அனுமதிக்க முடியாது என்ற ஒரு விலக்கு விதியே சொல்லப்பட்டுள்ளது. ஒரு எ-காவுக்கு ஜெர்மனியுடனான ஒரு யுத்த தருணத்தில் ஒரு தேசியம் பிரிந்து செல்ல விரும்புகின்ற பட்சத்தில் அதனை அனுமதிப்பது முடியாது. ஆனால் இதனையே பொது விவரிப்பாக கூறும் சந்திப்பு சுயநிர்ணய உரிமை என்பதையே பிரிந்து செல்வது என்பதாக இன்னும் குறுக்கி சிதைக்கிறார். அதாவது விவாகரத்து உரிமையையே விவாகரத்தாக கருதி அவதூற்றும் பிற்போக்குவாதிகள் போல.

மார்க்ஸியத்தை பருண்மையாக அமுல்படுத்தியதிலிருந்து பல்வேறு நாடுகள் பெற்ற அனுபவங்களில் விதி விலக்கான விசயங்களை மட்டுமே முன்னிறுத்தி தனது திரிபுவாதத்தை நியாயப்படுத்த பயன்படுத்தும் CPM கும்பல் எப்பொழுதும் போலவே இப்பொழுதும் அதையே செய்துள்ளது ஆச்சர்யமான விசயமல்ல. பாராளுமன்றம், ரகசிய கட்சி, ஆயுத புரட்சி, வெகு ஜன அமைப்பு, புதிய ஜனநாயக கோட்பாடு போன்றவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள விதி விலக்கான விசயங்களையே பொது மார்க்ஸியமாக CPM பாசிஸ்டுகள் திரிப்பது முன்பு பலமுறை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தேசியம் குறித்த திரிபும் சேர்கிறது.

சிரிலங்கா பிரச்சினையில் மட்டும்தான் இவர்களது நிலைப்பாடு இது என்றால் அப்படியில்லை. காஷ்மீர் முதல் எல்லா இடங்களிலும் இந்திய ஆளும் வர்க்கங்களின் நிலைப்பாடிற்கு சிங்கி அடிப்பதுதான் இவர்களின் மார்க்ஸியமாக உள்ளது. தரையில் ஊன்றி நடக்கச் சொல்லி நமக்கு அறிவுறுத்தும் இவர்கள் முதலில் இந்திய ஆளும் வர்க்கத்தின் தோள் பட்டையில் உட்கார்ந்து மக்களை காட்டிக் கொடுப்பதை விட்டொழித்து கீழே இறங்கி வரட்டும்.

அசுரன்

சி.பி.எம்.(மோடியிஸ்ட்) கும்பலின் கழிப்பறைக் காகிதம் - தீக்கதிர்!.... மற்றும் ’கோயபல்ஸ்’ செல்வப்பெருமாள்!!... (ஏகலைவனின் அருமையானதொரு கட்டுரை)

சுயநிர்ணயத்தை மறுக்கும் போலி (சி.பி.எம் சந்திப்பு) கம்யூனிஸ்டுகளின் கழுதை அரசியல்

CPM கோயபல்ஸ் பீரோவின் பித்தலாட்ட ஈழ நிலைப்பாடும், டவுசர் கழண்ட சந்திப்பும்!!

யுத்தத்தின் பின், தமிழ்மக்கள் பேரினவாத அரசுக்கு தம் எதிர்ப்பை காட்டுவார்களா?

இந்திய அரசே ஈழத்தில் தலையிடாதே!! CPM பாசிஸ்டே கோயபல்ஸ்தனத்தை நிறுத்து!!

ஒரு இந்தியனாக, சிங்களர்கள் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகிறேன்!!

பாஸிஸ்டு CPMமும், லெனின் சொல்லும் ஜனநாயக புரட்சியும்!!!!

Thursday, February 05, 2009

CPM கோயபல்ஸ் பீரோவின் பித்தலாட்ட ஈழ நிலைப்பாடும், டவுசர் கழண்ட சந்திப்பும்!!

ங்கிலத்தில் உள்ளவை ஜெவிபியின் பினாமி கட்சியான CPM கோயபல்ஸ் பீரோவின் அறிக்கை.

////The government of India should seek the assistance of the United Nations to ensure the safety of the Tamil civilian population in the northern province.////

இலங்கையில் இந்தியா நேரடியாக தலையிடுவது அம்பலமாகியுள்ள இந்த சூழலில், CPMன் குலக்கொழுந்துகளான சந்திப்பு, விடுதலை போன்ற கோயபல்ஸுகளுக்கு ஒரு சவால் விடுகிறேன். இந்தியா ராணுவ வீரர்களும் அதிகாரிகளும் ஈழத்தில் யுத்தத்தில் தலையிட்டு வருவது குறித்து உங்களது கருத்து என்ன? அதனை ஆதரிக்கிறீர்களா? ஏனேனில் இந்தியா தலையிடவில்லை எனில் பாகிஸ்தான், அமெரிக்கா ஆதரிக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளீர்கள் அதனால்தான் கேட்கிறேன்.


//Sri Lankan government immediately take up the provision of genuine autonomy for the Tamil-speaking areas within a united Sri Lanka as promised during the visit of the External Affairs Minister to Colombo.//

சிங்கள அரசு தமிழர்களுக்கு உரிமை கொடுக்கிறேன் என்று உத்தரவாதம் கொடுப்பதும், ஒப்பந்தங்கள் இடுவதும் இது முதல் முறையா? வரலாற்றில் இது போல பலமுறை நடந்துள்ள பொழுது எந்த அடிப்படையில் சிங்கள அரசை CPM நம்புகிறது? ஒருவேளை ஹிந்து ராமின் நண்பர்கள்தான் சிங்கள இனவெறி அரசு என்ற அடிப்படையிலா?

மொத்தத்தில் என்னதான் சொல்ல வருகிறீர்கள்? நாங்கதான் உள்ளூர் ஆளுங்க. நீங்கதான் அகில இந்திய கட்சியாயிற்றே ஏன் பாலஸ்தீன பிரச்சினைக்கு அகில இந்திய அளவில் துடித்த உங்களால் ஈழப் பிரச்சினைக்கு உள்ளூர் அளவில் கூட துடிக்க முடிவதில்லை?

எப்படி புலிகளை எதிர்ப்பதையே ஈழ எதிர்ப்பாக புலி ஆதரவாளர்கள் முத்திரை குத்துகிறார்களோ அதே போல ஈழ ஆதரவையே புலி ஆதரவாக முத்திரை குத்தும் சிங்கள வெறி அரசுக்கும், இந்திய அரசுக்கும், சோ, ஹிந்து ராம், ஜெயலலிதா, சுசுவாமி வகையாறாக்களுக்கும், CPM பாசிஸ்டுகளுக்கும் என்ன வேறுபாடு?

வேறுபாடு இல்லை என்பதுதான் எமது கருத்து. சந்திப்பு போன்ற கூலிக்கு மாரடிப்பவர்கள் தம்மளவில் இந்த உண்மையை ஒத்துக் கொண்டால் எமது வேலை மிச்சம்.

ஜேவிபி இனவெறி கட்சியுடன் உங்களது கள்ள சிநேகிதம் தொடர்வதின் விளைவுதானா இது? அல்லது ஜெவிபியின் பினாமி கட்சியா CPM?

மக்களை சர்வதேச அளவில் அணி திரட்டி அந்தந்த நாடுகளில் உள்ள ஜனநாயக சக்திகளின் துணையுடன் அந்தந்த அரசுகளை ஈழ பிரச்சினையில் அழுத்தம் கொடுக்க கோரி போராடுவது என்பதும், இந்தியாவில் இந்திய அரசு ஈழத்தில் தலையிடுவதை எதிர்த்து மக்களை, ஜனநாயக சக்திகளை திரட்டி போராடுவது என்பதும் ம க இ கவின் நிலைப்பாடு இதற்கு பதிலாக ஜோசியக்காரன் போல ஐநாவை நம்பு, பிராந்திய மேலாதிக்க இந்தியாவை நம்பு, ராஜபக்சேவை நம்பு என்று கதை விட்டுக் கொண்டு சிங்கள இனவெறிக்கு, இந்திய தரகு முதலாளிக்கு முதுகு சொறியும் CPM கட்சி ஜெவிபியின் பினாமி என்பதில் என்ன தவறு உள்ளது என்று சந்திப்பு தெளிவுப்படுத்துவது நலம்பயக்கும்.

நாங்க மக்களை நம்பு என்கிறோம் CPM வழக்கம் போல ஆளும் வர்க்கத்தையும், அரசையும் நம்பு என்கிறார்கள். இதுதான் கம்முனிசமாம். போங்கடா....

அசுரன்

யுத்தத்தின் பின், தமிழ்மக்கள் பேரினவாத அரசுக்கு தம் எதிர்ப்பை காட்டுவார்களா?


இந்திய அரசே ஈழத்தில் தலையிடாதே!! CPM பாசிஸ்டே கோயபல்ஸ்தனத்தை நிறுத்து!!


ஒரு இந்தியனாக, சிங்களர்கள் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகிறேன்!!

Tuesday, February 03, 2009

இந்திய அரசே ஈழத்தில் தலையிடாதே!! CPM பாசிஸ்டே கோயபல்ஸ்தனத்தை நிறுத்து!!

ழத்தில் தமிழர்களை ஒழிக்க நேரடியாக தனது ராணுவத்தினரை இந்தியா அனுப்பியுள்ளது சமீபத்திய சம்பவங்களில் அம்பலமானது. இந்திய அதிகாரிகள் காயமடைந்தது, செத்து ஒழிந்தது உள்ளிட்ட செய்திகள் மற்றும் அணை கட்டு உடைந்த சம்பவத்தில் கணிசமான அளவு இந்திய ராணுவத்தினர் செத்து சின்னா பின்னமானது போன்ற செய்திகள் மற்றும் இது போன்ற தொடர் செய்திகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

விசயம் இப்படியிருக்கு CPM பாசிஸ்டுகளின் இணைய பிரசங்கி சந்திப்பு தனது தளத்தில் படு கேவலமான கருத்தை இட்டுள்ளார்:

""
இந்திய அரசு வல்லாதிக்க மனப்பான்மையுடன் செயல்படுவதாக குற்றம் சுமத்துவது இலங்கையின் சுதந்திரத்தையும் - மக்களையும் கொச்சைப்படுத்துவதாகவே முடியும். எனவே தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் மீதான தாக்குதல் மிக அதிகமான அளவில் வெறியூட்டக்கூடிய முறையில் மிகைப்படுத்தப்படுவதும் நடைபெறுகிறது.
""" (நன்றி: ஏகலைவன்)

ஈழத்தில் சிங்கள இன வெறி அரசு மக்களை கொன்று குவித்து வருவது குறித்து பல்வேறு சர்வதேச நிறுவனங்களும், நார்வோ போன்ற நாடுகளும் கூட சமீபத்தில் தமது கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில் இந்த இணைய கோயபல்ஸ் CPM சந்திப்பு வாய் கூசாமல் பேசுகிறார். கேட்டால் இலங்கையின் இறையாண்மை போய்விடுமாம். போடாங்.....

அப்படிப்பாத்தா குஜாராத் கலவரம் பற்றி பேசினால் குஜராத்தின் இறையாண்மை போய்விடும். இதே போல பாலஸ்தீனம், ஈராக் என்று எல்லா இறையாண்மைகளை பற்றியும் CPM தனது வாய், ஆசன வாய் உள்ளிட்டவற்றை மூடிக் கொண்டால் நமது வேலையாவது மிச்சமாகும்.

மிகைப்படுத்தப்பட்ட செய்தியாம். எது 150 டாங்கிகள் சென்றதா அல்லது இந்தியா அங்கு நேரடியாக தனது ராணுவத்தினரையும், ஆயுதங்களையும், ராணுவ அதிகாரிகளையும் அனுப்பி யுத்தம் செய்து வருவதா? அல்லது இதோ இன்று 48 மணி நேர கெடு என்ற பெயரில் ஒட்டு மொத்தமாக மிச்ச மீதியுள்ள தமிழர்களையும் கொன்றொழிக்கும் வெறியுடன் எறிகணைகளை பொழிந்து வருவதா? எது மிகைப்படுத்தப்பட்ட செய்தி. மிகைப்படுத்தப்பட்ட விசயம் என்று ஒன்று இருந்தால் அது இனிமேலும் உங்களை போலி கம்யுனிஸ்டு என்று அழைப்பதுதான். ஏனேனில் போலியாக கூட இருக்கும் அடிப்படையின்றி பாசிஸ்டின் குரலில் அப்பட்டமாக, வெட்கமின்றி பேசும் ஒருவனை, கட்சியை போலி கம்யுனிஸ்டு என்று அழைப்பதுதான் மிகைப்படுத்தப்பட்டது.

இந்த கும்பல் இப்படி பேசுவது ஒன்றும் ஆச்சர்யமான விசயமல்ல. ஈழத்தின் அவலத்தை எதிர்த்து ஒரு கிளர்ச்சி நிலையை உருவாக்கும் வகையில் முத்துகுமார் தன்னை எரியூட்டி தனது எழுத்தை ஒளியூட்டிய தருணத்தில் அதற்கு மறுநாள் இவர்கள் நாடகம் நடத்தி களிப்புற்றுக் கொண்டிருந்தனர். அந்த வக்கிர நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்து பகன்ற மாமாமனிதர் ஹிந்து ராம். CPMமும், சிங்கள இன வெறி கட்சி ஜேவிபியும், இந்து ராமும் இணையும் புள்ளி இதுதான். மக்களுக்கு பாசிசம். இந்த இந்து ராம்தான் ஈழம் என்ற வார்த்தையைக் கூட தனது பத்திரிகையில் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக தமிழீழ என்று ஆரம்பிக்கும் அமைப்புகளின் பெயரை சிங்கள தமிழ் என்று எழுதும் வக்கிர புத்திக்காரன். இவந்தான் சிங்கள இன வெறி அரசின் இந்திய கைக்கூலி அல்லது ஆசனவாய். இலங்கையில் கழியாமல் அஜீரமானதை இங்கு முடை நாற்றமெடுக்க நசுக்குபவன்.

CPM கும்பல் கொள்கை முரன்பாடின்றி பன்னாட்டு தரகு முதலாளிகளுக்கு காவடி தூக்கி வருகின்றனர். எனவேதான் தமது மாநிலத்தில் நந்திகிராமில் பன்னாட்டு தரகு முதலாளிகளுக்காக மக்களை சுட்டு பொசுக்குவதை செய்த இவர்களால், இந்திய தரகு முதலாளிகளுக்காக இலங்கை எனும் ஒரு நாட்டில் ஒரு இனத்தையே அழித்தொழிக்கும் யுத்தத்தை ஆதரிக்க முடிகிறது. கேட்டால் இறையாண்மை, ஜனநாயகம், சட்டம் என்று நல்லவன் போல பேசவும் முடிகிறது. மக்களின் மீது குண்டுகளும், துப்பாக்கிகளூம் பாயும் போது உனது சட்டமும், ஜனநாயகமும், இறையாண்மையும் எங்கே நக்கிக் கொண்டிருந்தது என்று நியாயமாக நாம் கேட்க வேண்டும். ஆனால் அப்படி கேட்க்கும் அளவு CPM கும்பல் தகுதியானவர்கள் அல்ல.

இந்திய முதலாளிகளின் தெற்காசிய கனவுகளுக்கு ஈழத்தை சுடுகாடாக்காதே! இந்திய அரசே இலங்கையில் தலையிடுவதை நிறுத்திக் கொள்!! CPM கும்பலே உனது மோசடித்தனத்தை மூட்டை கட்டி வைத்துக் கொள்!!!

அசுரன்

மாவீரன் முத்துக்குமாரின் தியாகம் - உணர்வாளர்களின் எழுச்சியும், துரோகிகளின் இகழ்ச்சியும்!...

ஈழம்: இந்தியாவின் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு தமிழ‌கத்தில் பிரச்சாரம்

ஒரு இந்தியனாக, சிங்களர்கள் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகிறேன்!!

பாசிசமும் சர்வதேசியமும் இந்தியத் தோழர்களும்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு, நாம் விடுக்கும் பகிரங்க வேண்டுகோள்

சர்வதேசியத்தை கைவிட்டா ஈழப்போராட்டத்தை அணுக வேண்டும்!?

ஈழமும் முத்துக்குமாரின் தியாகமும் - நமது கடமை என்ன?

Monday, February 02, 2009

சிதம்பரம் கோயில் இனி தீட்சிதருக்கு சொந்தமல்ல! நந்தனை எரித்த அவமானம் ஒழிக்கப்படும்!!

சிதம்பரம் கோயிலில் தமிழில் பாட முற்பட்ட சிவனடியார் ஆறுமுகச்சாமியை பார்ப்பன ரவுடிகளான தீட்சிதர்கள் அடித்ததும், அதனைத் தொடர்ந்து மகஇகவின் தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு கழகம் பல தொடர் போராட்டங்களை பிற ஜனநாயக சக்திகளுடன் இணைந்து நடத்தி தமிழில் பாடும் உரிமையை வென்றதும் அனைவரும் அறிந்ததே. இதனையொட்டி நடந்த வெற்றி விழா கூட்டத்தின் போது நந்தனை எரித்ததன் அடையாளமான அந்த ஆயிரம் வருட அவமானச் சுவரை இடித்து நொறுக்குவதே லட்சியம் என்று சூளுரைக்கப்பட்டது.

அப்படிப்பட்டதொரு லட்சியத்தை நோக்கிய நடவடிக்கையின் முதல் கட்டமாக சிதம்பரம் கோயில், தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல என்பதை நிறுவி அதனை இந்து அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வருவதற்காக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. அதில் அரசாங்கத்துடன் மனித உரிமை பாதுகாப்பு கழகமும் ஒரு அங்கத்தினராக இணைந்து தீட்சிதர்களுக்கு எதிராக வழக்காடினர். அந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளிவந்துள்ளது.

தீர்ப்பின் படி கோயில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமாக வேண்டும். மேலும், ஒரு வாரத்தில் கோயில் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிகிறது. இது சாதரணமான தீர்ப்பு அல்ல. தீட்சிதர்களை எதிர்த்து வரலாறு நெடுகிலும் நடத்தப்பட்ட போராட்டங்களை அவர்கள் ஒழித்துக் கட்டியுள்ளனர். கடந்த 60 வருடங்களில் பல சட்டப் பூர்வ முயற்சிகளையும் அவர்கள் முறியடித்துள்ளனர். சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்களின் அடாவடித்தனம் என்பது யாராலும் கேள்வி கேட்க முடியாத ஒரு சர்வ வல்லமை படைத்த ஒன்றாகவே நம்பப்பட்டது. தீட்சிதர்களை எதிர்த்து கடந்த காலங்களில் நடந்த நிகழ்வுகள் கவனிக்கும் ஒருவருக்கு மலைப்பே ஏற்படும். அப்படிப்பட்டதொரு வெல்ல முடியாத சக்தியாக கருதப்பட்ட தீட்சிதர்களை அவர்களது கோயிலேயே முறியடித்ததுதான் தமிழில் பாடும் உரிமைக்கான அந்த முதல் போராட்டம்.

இதோ இப்போது அதன் அடுத்த கட்டமான இரண்டாவது போராட்டமும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இது முழு வெற்றியல்ல. இதனை அடுத்த கட்டமாக சட்டரீதியாக எதிர் கொள்ள தீட்சிதர்கள் தயராகலாம். அதுவும் முறியடிக்கப்பட வேண்டும் என்பதும் நந்தனை எரித்து கொன்றதன் அவமானச் சின்னமான அந்த சுவர் உடைத்தெறியப்பட வேண்டும் என்பதுமே நமது அவா. இது குறித்து பின்னூட்டத்தில் தகவல் தெரிவித்த முகம் தெரியாத அன்பருக்கு நன்றிகள்.

அசுரன்

சிதம்பரம் நடராஜனை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் தீட்சிதர்களை காவல்துறைக் கட்டுப்பாட்டில் கொண்டுபோக வேண்டும்

தில்லைச் சிற்றம்பலம் ஏறியது தமிழ்! ஆலயத் தீண்டாமை அகலும் வரைஓயாது எமது சமர்!

தில்லையில் வீழ்ந்தது பார்ப்பனிய ஆதிக்கம்! ம.க.இ.க போராட்டம் வெற்றி!!

Related Posts with Thumbnails