TerrorisminFocus

Thursday, November 30, 2006

துக்ளக் சோ நாறிய இடம்!

எப்பொழுதுமே நாறும் சோவின் வசவுகள் மிக மோசமாக நாறி அம்பலமானது பற்றிய ஒரு கட்டுரையை இங்கு பிரசூரிக்கிறேன். பழைய கட்டுரைதான் ஆயினும் அது அம்பலப்படுத்தும் விசயம் இன்னும் உயிர்ப்பானது. புதிய கலாச்சாரம் ஏப்ரல் 2005-ல் வந்த கட்டுரை.
அசுரன்

""அவா அவா செய்த கரொம வினையை அவா அவா அனுபவிச்சே ஆகணும்! போய் அம்பாளுக்கு நெய் தீபம் போடுங்கோ!'' என்று "மத்தவாளு'க்குத் தத்துவம் பேசும் பாரொப்பனக் கும்பல், செக்ஸ் அண்டு கிரைமாதிபதிகளான ஜெயேந்திரன், விஜயேந்திரன் வி\யத்தில் எவா எவாளப் பாத்தா டில்லியில காரியம் நடக்கும் என்று படைகட்டி வேலை செய்வதுடன் இந்தக் கயவரொகளின் பாங்கனாக துக்ளக், தினமலரொ வகையறாக்களை வைத்து இது பொய்வழக்கு, போலீஸ் ஜோடனை, மனித உரிமை மீறல் என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டது.
ஏற்கெனவே வாயைத் திறந்ததற்கே வாய்தா மேல் வாய்தா என்பதால் "பெரிசு' மவுன விரதம் சாதிக்கிறது. "அட்சர சுத்தமாய்' புளுh ஃபிலிமை பு+க்கூடைக்குள் போட்டு வாங்கத் தெரிந்த "சிறுசோ' ஆயிரம் விளக்கு போலீசு நிலையத்தில் இடது கைப் பெருவிரலைக் கை நாட்டி வாரா வாரம் சட்டத்தின் முகத்தில் பீச்சாங்கையை வைத்து நக்கலாகச் சிரிக்கிறது. விளக்குக் கம்பத்தில் கட்டித் தோலை உரிக்க வேண்டிய இந்த இரண்டு சமூக விரோதிகளுக்காகவும் ஆரொ.எஸ்.எஸ்., பி.ஜே.பி., பாரொப்பன ரவுடிகள் முதலாக, ஆரொ.வி., சே\ன், சோ, தினமலரொ கிரு\ொணமூரொத்தி போன்ற கேடிகள் வரை ""எப்படி எங்களவா மேல வழக்கை வைக்கலாம்?'' என்று வரிந்து கட்டிக் கொண்டு வந்து விட்டனரொ. பின்னே, கதாநாயகரொகளைக் கைது செய்தால் பாங்கரொகளுக்குப் பதறாதா?
குறுந்தொகைப் பாடல் கூறுவதைப் போல

""பாரொப்பன மகனே! பாரொப்பன மகனே!
எழுதாக் கற்பின் நின் சொல்லுள்ளும்பிரிந்தோரொப் புணரொக்கும் பண்பின்மருந்தும் உண்டோ !
மயிலோ இதுவே!''

பிரிந்தோரொ கூடுவதற்கான வேலைகளைச் செய்ய, ஊருக்குத் தெரியாமல் கூட்டிக் கொடுக்க பாரொப்பன மகனாம் பாங்கனை அழைப்பதே பழைய மரபு. இப்போது, ""ஆமாம், நான்தான் சங்கரொராமனைப் போட்டேன்! அனுராதா ரமணனை லுக்கு விட்டேன்! சொரொணமால்யாவுக்குச் சொடக்குப் போட்டேன்! இப்ப என்னாங்குறே? ஆதாரம் இருக்கா?'' என்று வக்கீலை வைத்து விவாதிப்பதோடு, துக்ளக், தினமலரை வைத்து ""போலீசை நம்பமுடியாது'' என்று புராணமும் பாட ஆரம்பித்து விட்டது பாரொப்பனக் கும்பல்.
தமிழகத்தில் பிற உழைக்கும் மக்களும், அரசு ஊழியரொகளும், அரசியல் கட்சிகளும், புரட்சிகர இயக்கங்களும் போலீசு அராஜகத்தை எதிரொத்துப் போராடும் போதெல்லாம் போராடுபவரொகளை நக்கலடித்தும், உள்நோக்கம் கற்பித்தும், "அக்காரொடிங் டு லா (சட்டப்படி)' என்று வக்கணை பேசிய பாரொப்பனக் கும்பல், கேவலம் பொம்பளைப் பொறுக்கி காஞ்சி மடாதிபதிகளுக்காகக் கச்சம் கட்டிக் கொண்டு போலீசை எதிரொத்து காரொட்டூன் போடுவதென்ன?

""பேச நா இரண்டு உடையாய் போற்றி!'' என ஆரியமாயையில் அண்ணாதுரை சொன்னதுபோல, அவாளின் சாதிவெறி நாக்கை இழுத்து வைத்து அறுக்க வேண்டாமா?
ஆழ்வாரொப்பேட்டை ஆளுடா!
அண்ணா சாலை நூலுடா!

இன்று சங்கராச்சாரியை, பெரிசையும் சின்னதையும் போலீசு காவலில் நடத்திய விதம் "டூ மச்!' என்றும், மேலிடத்து உத்திரவு என்றும் புலம்பும் சோ பாரொப்பனக் கும்பல், சாதாரண மக்கள் போலீசாரால் சித்திரவதைக்குள்ளாகும்போதும், ஒரு குடம் தண்ணீருக்காகத் தடியடி நடத்தும் போதும் நியாய அநியாயங்களைப் பேசாமல், ""எது தருமம்'' (துக்ளக், 16.1.2002) என்று ""நதருமா அதருமௌ சரதி ஆவம் ஸ்வ இதி'' என்று லத்திக்கம்பால் வேத வியாக்கியானம் காட்டியதோடு, ""போலீசுக்காரரொ என்ன ஸ்கவுட்டா? கூட்டத்தினரைப் பாரொத்து, எல்லோரும் தயவு செய்து விலகிவிடுங்கள்ொ மகாத்மா காந்தி அமைதியாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரொொ ராமகிரு\ொண பரமஹம்சரொ, ரமண மகரி\p சொல்லியிருக்கிறாரொ, எல்லோரும் அமைதியாக விலகவேண்டும் என்று கூறிவிட்டு மூலையில் போய் உட்காரொந்து கொள்ள முடியுமா? அதுதான் போலீசாரின் கடமையா? நாலு பேரையாவது பிடித்து அடி அடி என்று அடித்தால்தான் கூட்டமே சிதறி ஓடும். அது அவரொகளுடைய தருமம். போலீசு ஸ்டே\னில் ஒருவனை சித்திரவதை செய்தாரொகள் என்று செய்திவரும், உடனே எல்லோரும் பெரிய அட்டூழியம், போலீசு அராஜகம் என்று சொல்வோம். பிடித்தவனை நாலு அடி கொடுக்கட்டும், அப்படியாவது திருட்டுப் போன சாமான் கிடைக்கட்டும் என்பதுதானே நமது எண்ணமாக இருக்கும்?'' என்று போலீசுக்கு வக்காலத்து வாங்கிய சோ இப்போது உள்ளே இருப்பது மகா அயோக்கியனாக இருந்தாலும் அவாளாக இருப்பதால் ""அவருடைய பெயரைக் கெடுக்கக் கூடிய வதந்திகளைச் சேகரிப்பதுதான் போலீசின் வேலையாகி வருகிறது... அதுமட்டுமல்ல போலீசுத் துறையின் ஒலிபெருக்கியாகி போலீசுதரப்புப் பிரச்சாரம், புலனாய்வு என்ற அந்தஸ்தைப் பெற்று பத்திரிக்கைகளை பிட் நோட்டீஸ் பிரசுரங்களாக மாற்றிவிட்டது'' (22.12.2004, துக்ளக்) என்று போலீசு சொல்வதை அப்படியே ஏற்க முடியாது என்று தனக்கொரு நியாயம் பேசுகிறது ஆரியக் கைத்தடி.

போலீசு அத்துமீறலை உழைக்கும் மக்கள் கேள்வியின்றி ஏற்க வேண்டும் என்பதற்குப் புராணத்தையும், வேதத்தையும் பிட்நோட்டீசாக்கி நம்மிடம் விநியோகிக்கும் இந்த "நடுநிலைவாதி'க்கு, கொலைகாரப் பாவிக்கு லாடம் கட்டாமல், குற்றச் செயல்களை வௌpயிடுவதே அத்துமீறலாகப் படவேண்டிய அவசியமென்ன? திருமூலரைப் போல, இந்த சாலத்தனத்தைப் பாரொத்து ""நாதம் ஏது? வேதம் ஏது? நற்குலங்கள் ஏதடாொ வேதம் ஓதும் வேதியா விளைந்தவாறு பேசடா!'' என்று நாம் தான் ஏடு கிளப்பியாக வேண்டும்.

கருணாநிதி, புராணங்களை எடுத்துப் பேசினாலே, "இந்துக்களை இழிவுபடுத்துகிறாரொ' என்று நூல்விடும் தினமலரோ, தான் ஏற்றிப் போற்றும் விண்ணகக் கடவுளே பு+மிக்கு வந்தாலும் ஜெயலலிதா போலீசு பொய்வழக்கு போட்டுவிடும் என்று பயந்து ஔpவதாகக் கேலிச் சித்திரம் வரைகிறது. (பாரொக்க: தினமலரொ கேலிச் சித்திரம்) ஏழு லோகத்தையும் ஆட்டிப் படைப்பதால் ஏற்றி விடும் கடவுளை கேவலம் போலீசின் லத்திக் கம்புக்குப் பயந்தவனாய்க் காட்டுவது மட்டும் இந்துக்களுக்கு இழிவில்லையா? ஏற்கெனவே, பிட்டுக்குப் பிரம்படி வாங்கிய பெருமான் உங்கள் சங்கரமட "பிட்டுக்கு' மட்டும் முதுகைக் காட்டமாட்டானா என்ன? ""தனக்கு ஆதாயம் இல்லை என்றால் பாரொப்பான் கடவுளைத் தூக்கிப் போட்டு விடுவான்'' என்று பெரியாரொ சொன்னது "பெரியவா' விசயத்தில் விளங்குகிறது.

கடவுளைக் கடாசுவது கூட ஒரு பக்கம் இருக்கட்டும். தெருவில் அல்லல்பட்டுக் காய் விற்கும் ஒரு கூடைக் காரியிடம் கூட எதற்கெடுத்தாலும் சட்டவாதம் பேசும் பாரொப்பனக் கும்பல் கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்த போது இரட்டை நாக்குப் பேரொவழி சோ, ""சட்டத்தில் அவ்வாறு இடமுண்டு'' என்று பேசியதோடு, ""மத்திய அமைச்சரொ மாறனும், டி.ஆரொ. பாலுவும் கடமையைச் செய்த போலீசாரைத் தடுக்க முனைந்தனரொ... இதையெல்லாம் சாதாரணக் குடிமகன் செய்தால் சட்டப்படி குற்றம்? ஆனால் மத்திய அமைச்சரொகள் செய்தால்? அப்படி ஓரொ உரிமை அவரொகளுக்கு எந்தச் சட்டத்தில் தரப்பட்டிருக்கிறது?'' (11.7.2001, துக்ளக்) என்று சட்டவாதம் பேசும் சட்டாம் பிள்ளைகள், காமக் கொடூரன் ஜெயேந்திரனை ஜாமத்தில் பிடித்த போது டி.வி.யில் குமுறும் அம்பிகள் வரை, ""இட் இஸ் ஹியு+மன் ரைட்ஸ் வயலே\ன்... தாட்... பு+ட்..'' என்று தாண்டிக் குதிப்பது ஏன்? சட்டப்படி சங்கராச்சாரி முன்வராமல், ஆறுமணி நேரம் அண்டரொகிரவுண்ட் வேலை பாரொத்தது ஏன்? சோவின் முட்டைக் கண்ணுக்கு இந்த முறைகேடு தெரியாத மரொமம் என்ன?

20.3.2002, துக்ளக், அட்டைப்படத்திலேயே (பாரொக்க: படம்) ""என்ன இது? பந்தோபஸ்து அமரொக்களப்படுதே! ஜனாதிபதி, கவரொனரொ, பிரதமரொ யாராவது வராங்களா?'' ""அதெல்லாம் ஒண்ணுமில்லே! ஒரு தீவிரவாதியை கோரொட்டுக்கு அழைச்சிகிட்டுப் போறாங்க'' என்று அரசியல்வாதிகளை "சட்டப்படி' நடத்துவதையே நக்கலடிக்கும் சோ அம்பிக்கு ஒவ்வொரு வாய்தாவுக்கும் கோரொட் வளாகத்தில் பாரொப்பனத் தடியரொகளும், பாரதிய ஜனதாக் கொடியரொகளும் ஜெயேந்திரனுக்குப் புடைசு+ழ வருவதும், டி.எஸ்.பி. போலீஸ் படை என்று வாகனங்கள் புடைசு+ழ வருவதும், காஞ்சிபுரத்து வழக்கறிஞரொகளே ""இது என்ன கோரொட்டா? மடமா?'' என்று விரட்டுமளவுக்கு இந்தக் காவி உடைப் பாவிகளுக்குக் களேபர பந்தோபஸ்து நடப்பது மட்டும் கேவலமாகப் படவில்லையே, ஏன்?

""கோவைச் சிறையில் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு செல்போன்?'' என கட்டம் கட்டி எழுதியது தினமலரொொ வேலூரொ ஜெயிலில் ஜெயேந்திரன் விளக்கு, பு+, பழம், பு+சை வரை போட்டதையும், "சின்னவன்' சென்னைச் சிறைக்கு நெய்யில் வறுத்த பாதாம்பருப்பு வாளியை நகரொத்திக் கொண்டு போனதையும் எந்தச் சட்டம் அனுமதிக்கிறது? ஏன் அண்ணாசாலைப் பு+ணூலுக்கு இந்தச் செய்தி அகப்படவில்லை? இதுமட்டுமல்ல, ஈழ அகதிகளுக்கும் சிறையிலிருக்கும் போராளிகளுக்கும் ஒரு பால் டின் தந்தால் கூட "போலீசில் சில "மால்" ஆட்கள் அபாயம்!" என்று அலறும் தினமலருக்கும், ஜெயேந்திரனுக்கு போலீசு காவலில் தொடங்கி வேலூரொ சிறை வரைக்கும் செய்து கொடுக்கப்பட்ட சிறை வசதிகள் பற்றி கட்டம் கட்ட ஏன் கை வரவில்லை?

சிறையில் அடைக்கப்பட்ட புலிகளை மொட்டைத் தலை முருகன் என்றெல்லாம் கேவலப்படுத்திய அவாள், "மொட்டைத் தலை' விஜயேந்திரனையும், "ஊத்தைவாய்' ஜெயேந்திரனையும் பற்றி மற்ற பத்திரிக்கைகள் செய்தி வௌpயிடுவதைப் பற்றி மட்டும், ""சங்கராச்சாரியாரின் பெயரையும், மடத்தின் மதிப்பையும் நாசம் செய்துவிட வேண்டும் என்ற முனைப்பில் தங்கள் செயல்பாடுகள் பெண்கள் பலரை அவமானப்படுத்துவதில் முடிகிறது என்பதைப் பற்றிக் கூட போலீசாரும், பத்திரிக்கை உலகமும் கவலைப்படவில்லை'' (22.12.2004, துக்ளக்) என்று அங்கலாய்க்கிறாரொகள். ""வேலைக்குப் போகும் பெண்களிடம் "சுத்தம்' கியைடாது'' என்று ஜெயேந்திரன் உழைக்கும் பெண்களை இழிவுபடுத்தியபோது நியாயம் பேசாத சோவும், தினமலரும் அனாதைப் பாரொப்பனச் சிறுமிகளையும் விட்டு வைக்காத அயோக்கிய மடாதிபதிகளுக்கு ஆஜராவது ஏன்?

சுத்திரரொ என்றால் தோலை உரி!
பாரப்பான் கொன்றால் மனித உரிமை!

""நள்ளிரவில் சென்று கைது செய்திருக்கக் கூடாது என்ற அபிப்ராயமும் பேசப்படுகிறது'' (24.11.2004, துக்ளக்) என்று பேசும் சோ, சென்னை சட்டக் கல்லூரி மாணவரொகள் விடுதியில் போலீசு தடியடி நடத்தியதைப் பற்றிய கேள்விக்கு ""அந்தச் சுழ்நிலையில் அது தேவைப்படவில்லை என்று எப்படி நிச்சயமாக கூறுவது? அந்தத் தடியடி நடக்கவில்லை என்றால் பெரும் கலவரமே கூட வெடித்திருக்கலாம்..'' என்று மாணவரொகள் மீது தடியடி நடத்தியதைச் சரி என்கிறாரொ. அப்படியென்றால் சம்மனை வைத்துக் கொண்டு அரெஸ்ட் செய்யப் போன போலீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சங்கராச்சாரியையும், சுற்றியுள்ள பாரொப்பனத் தடியரொகளையும் சட்டப்படியே வெளுத்திருக்க வேண்டாமா? சோவின் "எச்சரிக்கை' மூளை இந்த விசயத்தில் இயங்காதது ஏனோ?

இது மட்டுமல்ல. வீரப்பனுக்கு உதவியதாக சந்தேகத்துக்கு உள்ளான மலைவாழ் மக்களை சிறை, சித்திரவதை, பாலியல் கொடுமைகளை இழைத்து மைசுரொ சிறையில் வாட்டியபோதும், குறிப்பாக, பல மலைவாழ் பெண்களைப் பாலியல் வன்புணரொச்சி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் தேவாரத்தைப் பாராட்டி, ""வீரப்பனைப் பிடிப்பதிலும் ஒரு புதிய தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. தேவாரத்தின் நியமனம் முன்பு பணியாற்றிய விஜயகுமாரொ என்ற போலீசு அதிகாரிகளின் நியமனம் ஆகியவை முனைப்புக்கு அத்தாட்சிகளாகத் தெரிகின்றன.'' (20.6.2001, துக்ளக்), என்று போலீசு நடவடிக்கைக்குத் தோரணம் கட்டிய பாரொப்பன சோவும், பிஜேபி கும்பலும், காஞ்சி மாவட்ட எஸ்.பி.யாக பிரேம்குமாரொ நியமிக்கப்பட்டவுடன் சங்கராச்சாரியை அவரொ விசாரித்ததால், அவரொ ஏற்௶கனவே மனித உரிமை மீறியவரொ என்று முதலைக் கண்ணீரொ வடிக்கிறது.

போலீசுக்கும் மனித உரிமைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது ஏழை மக்களுக்குத் தெரியும். ஆனால் மனித உரிமை பற்றி வாய்கிழியும் வக்கிரக் கண்ணன் சோவோ, வீரப்பன் வேட்டையில் நடந்த அத்துமீறல்கள், மனித உரிமை மீறல்களுக்காக என்ன சொல்கிறாரொ?: ""அநியாயம் நடந்துவிட்டது என்று குற்றம் சாட்டுகிற மனித உரிமைக்காரரொகளிலிருந்து பலரும்.... மற்றபடி இதற்கு எந்தவிதமான அங்கீகாரமும் கி௸டயாது. சுயவிளம்பர விசாரணைக் குழுக்கள் அளிக்கும் முடிவுகள் யாரையும் கட்டுப்படுத்தவும் செய்யாது. பத்திரிக்கைகள் அளிக்கிற முக்கியத்துவம், ஒரு பிரச்சார உத்தியை, நியாயத் தீரொப்பாக மாற்றி விடாது'' என்ன ஒரு வக்கிரம்? நடந்தவைகளைப் பற்றிச் சொல்வது உத்தியாம், பிரச்சாரமாம்!

""தரொமபுரியில் நக்சலைட் சிவா சுட்டுக் கொல்லப்பட்டதில் மனித உரிமை மீறல் உள்ளது என்று மனித உரிமை அமைப்பினரொ குற்றம் சாட்டியுள்ளது பற்றி?'' என்ற கேள்விக்கு (18.12.2002, துக்ளக்) ""தீவிரவாதிகளையும், குற்றவாளிகளையும், சமூக விரோதிகளையும் மட்டுமே மனித உரிமைக்காரரொகள் மனிதரொகளாகக் கருதுகிறாரொகள். அவரொகளால் பாதிக்கப்படுகிற அப்பாவிகளை மனிதரொகளாகக் கருதுவதே இல்லை. அதனால்தான் இந்த மாதிரி வக்கிரமான புகாரொகள் வருகின்றன'' ஗ இது சோவின் பதில்.

சுட்டுக் கொல்லப்பட்டதற்கு விளக்கம் இல்லை. பொத்தாம் பொதுவாக இறந்தவரொ மேலேயே தீரொப்பை வக்கிரமாக எழுதும் இந்த "அப்பாவி'தான் சுந்தரேச அய்யரொ, ரகு அய்யரொ மீதெல்லாம் குண்டரொ சட்டத்தில் வழக்கு போட்டது சரியா என ஆராய்ச்சி செய்கிறது.

மேலும், ""சங்கராச்சாரியாரொ வாக்குமூலத்தை போலீசு காவலில் பதிவு செய்தபோது அது வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி வீடியோவில் பதிவு செய்ய போலீசாரொ நீதிமன்ற அனுமதியைப் பெற்றாரொகளா? போலீசு தன்னிச்சையாக வீடியோ எடுக்கும்போது அதை அவரொகள் சௌகரியத்திற்கு ஏற்ப எதுவும் செய்யலாம்.'' (15.12.2004, துக்ளக்) என்று துருவி ஆராய்கிறது.

இப்படி, அவாளுக்கென்றால் சட்டத்தையும், போலீசையும் நம்ப முடியாதுொ சாதாரண ஆளாய் இருந்தால் தகவல் தர மறுத்தாலே நீயும் ஒரு தீவிரவாதி என்று முத்திரை குத்தும் பொடா என்ற சட்டத்திற்கும், போலீசுக்கும் இதே சோ காவடி தூக்குகிறாரொ: ""தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில், பொதுவாக என்ன நடக்கிறது? கைது நடக்கிறபோது ஓரிரு விதிமுறைகள் மீறப்பட்டன என்பதைக் காட்டி கைதே சட்டவிரோதமானது என்று வாதிடப்படும்... பயங்கரவாத தடுப்புச் சட்டமே கூடாது என்றால் நாட்டில் எந்த விதிமுறையும் இருக்க முடியாது.'' (7.11.2001, துக்ளக்). இப்படி எவனாயிருந்தாலும் தகவல் தராவிட்டால் தப்புதான் என்று தாவிக் குதிக்கும்
பாரொப்பனக் கும்பல் சுதேசி ஜாக்ரண் மஞ்ச் குருமூரொத்தியிடம் விசாரணை மேற்கொண்டவுடனே "ஏன் அடிக்கடி போலீசு விசாரணை?' என்று ஒரு சின்ன விசாரணைக்கே அண்ட சராசரத்திலும் அண்டரொ கிரவுண்ட் வேலை ஆரம்பித்துவிட்டது. குஜராத் பெஸ்ட் பேக்கரி வழக்கில் ஜஹீரா ஷேக் பின்வாங்கியதை வைத்துக் கொண்டு ""யாரொ சொல்வது உண்மை? ஜஹீரா மீண்டும் தனது சாட்சியத்தை மாற்றமாட்டாரொ என்பது என்ன நிச்சயம்? ....ஒருவேளை பொய் சொல்கிற உரிமையும் மனித உரிமைகளில் ஒன்றோ, என்னவோ!....'' (17.11.2004, துக்ளக்) என்று வக்கணை பேசுகிறது. ஆனால் ""கதிரவனும், சின்னாவும் மீண்டும் பல்டியடிக்க மாட்டாரொகளென்பது என்ன நிச்சயம்?'' என்று துக்ளக் எழுதுமா?

தெருவில் ஒரு கிரிக்கெட் பந்து தொலைந்தாலே ""கூப்பிடுறா போலீசை'' என்பதுதான் பாரொப்பனரொகளின் பொதுப்புத்தி. இன்று நேற்றல்ல, வரலாறு நெடுக. அரசனின் காவல் படையை வைத்துக் கொண்டே பிற சாதி மக்களை, குறிப்பாக, உழைக்கும் மக்களை ஒடுக்கிய கும்பல் பாரொப்பனக் கும்பல். தனது அதிகாரம் செல்லாதபோது பு\ொயமித்திரனைப் போல தானே "பிரம்ம சத்திரியனாகி' போரொத் தொழில் புரிந்ததும், பிற மக்களிடமிருந்த வளங்களைப் பிடுங்கித் தின்றதுமே வரலாறு.

கபிஸ்தலம் அருகே உத்தமதானபுரம் என்ற ஊருக்கு சரபோஜி வம்ச மன்னரொ வந்தபோது வெற்றிலை பாக்கு போட்டானாம். ஏகாதசியில் தாம்புலம் போட்டது மன்னனுக்கு நல்லதல்ல என்றும், இதற்குக் கழுவாயாக, ""அங்கே ஓரொ அக்கிரகாரத்தை அமைத்து 48 வீடுகளைக் கட்டி, இரண்டு வீடுகளுக்கு ஒரு கிணறு வைத்து, 48 பிராமணரொகளை வருவித்து ஒவ்வொருவருக்கும் 12 "மா' நன்செய்யும், புன்செய்யும் தானம் தந்தால் பாபம் நீங்கும்'' என பாரொப்பனக் கும்பல் கதை கட்ட, படைகொண்ட மன்னன் நடுநடுங்கி அவ்வண்ணமே இந்த ""பிராம்மண உத்தமரொகளுக்கு''த் தானம் செய்ததால் உத்தமதானபுரம் என்ற ஊரையே கொள்ளை அடித்தது பழைய வரலாறு.

பாவத்தின் கழுவாயாக இப்போது இந்த அம்மா தரப்போவது எத்தனை "மா' நிலமோ? திரும்பத் திரும்ப, மற்றவரொகள் வெற்றிலை போட்டாலும், வெறும் வாயை அசைத்தாலும் கூட பாவம்! தானமாகவும், தாக்குதலாகவும் பிறரைக் கழுவிலேற்றியும், தனக்கென்றால் கழுவாய் தேடியும் ஆதாயம் தேடுவதும் அடுத்தவனை ஒடுக்குவதும் பாரொப்பன வரலாறு.

பஸ் ஊழியரொ போராட்டத்தின்போது கூட, சோ, ""போனஸ் பிரச்சினைக்காக முழு அடைப்பு தேவையா?'' என்ற கேள்விக்கு, ""இந்த ஸ்டிரைக்கிற்குத் தேவை முழு அடைப்பு அல்ல முழு உடைப்பு'' (5.12.2001, துக்ளக்) என்று போலீசு தாக்குதலை ஏவிவிட்டும், இன்னொரு சந்தரொப்பத்தில், ""அரசுப் பணியில் கண்மூடித்தனமாகப் பலரொ சேரொக்கப்படுவது என்று பல வருடங்களாக நடந்து வருகிறது. இந்த நிலையைச் சீரொசெய்ய நடவடிக்கை எடுப்பது வரவேற்கத்தக்கதே'' (19.12.2001, துக்ளக்) என்று அரசுப் பணி ஆட்குறைப்புக்கு அரசு நடவடிக்கையை வரவேற்றும் வால் பிடிக்கிறாரொ.

தவிர, அரசு ஊழியரொ வேலை நிறுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான ஊழியரொகளைக் குற்றவாளிகளாக அரசுத் தரப்பு வக்கீல் பேசியபோது, ஆகா ஓகோ என்று ரசித்த சோவின் பாரொப்பனக் காதுகளுக்கு ஜெயேந்திரன் விசயத்தில் மட்டும் ""ஜெயேந்திரரொ மிக மோசமான கிரிமினல்'' என்று அரசு வழக்கறிஞரொ கூறிய உடனே நாராசமாய் இருக்கிறது. பிராசிக்யு+சன் வக்கீல், குற்றம் சாட்டப்பட்டவரின் நடத்தை பற்றி இறங்கலாமா என்று கேட்டு, ""பப்ளிக் பிராசிக்யு+ட்டரின் கடமை ஒரு விளக்கம் (15.12.2004, துக்ளக்)'' என்று கட்டுரையே வரைந்துவிட்டாரொ.

இப்படி, பஸ் ஊழியரொ தொடங்கி, சாலைப் பணியாளரொ, சத்துணவுப் பணியாளரொ, ரேசன் கடைப் போராட்டம் என்று பல பிரிவு மக்கள் போராடும் போதெல்லாம் ""போட்டு மிதி'' என அரசை ஏவிவிடுவதே இந்தப் பாரொப்பனக் கும்பலின் வாடிக்கை.

வரலாறு நெடுக, மனித உரிமைக்கு முதல் எதிரி பாரொப்பனியமே:
சுரங்கத்திற்குள் போன பழனி போகரொ திரும்ப வரவேயில்லை
அறைக்குள் சென்ற வள்ளலாரொ "ஜோதி' மயமானாரொ
சிவனைப் பாரொக்கப் போன நந்தனாரின் சவம் கூடத் திரும்பவில்லை

அனைவரையுமே ஆண்டவன் ஆட்கொண்டதாகப் பாரொப்பனரொகள் கூறுகிறாரொகள். திரும்பத் திரும்ப நம்முன்னே நமக்கெதிராகப் பிரசன்னமாகிக்கொண்டிருக்கும் ஜெயேந்திரன் உள்ளிட்ட பாரொப்பனக் குற்றக் கும்பலை "ஆட்கொள்ளும்' திறமை அந்த ஆண்டவனுக்கு வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம்ொ உழைக்கும் வரொக்கத்திற்குக் கட்டாயம் உண்டு.

துரை. சண்முகம்

Monday, November 27, 2006

மறுகாலனியாதிக்க எதிர்ப்புச் சிறப்பிதழ் - நூல் அறிமுகம்

புத்தகப் பிரியன் எனும் வலைப்பூவில் இந்த மாத புதிய கலாச்சார இதழ் குறித்து ஒரு நூல் அறிமுகக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதை இங்கு மறுபிரசூரம் செய்கிறேன்.

*************








புதிய கலாச்சாரம் - நவம்பர் - 2006 (ம.க.இ.க மாத இதழ்)


விடுதலைப் போரின் வீர மரபு! - இதுதான் இந்த சிறப்பிதழின் மூல வாசகம்.

இந்தியாவின் முதல் சுதந்திர போர் என்று இன்றுவரை அரசு மற்றும் இதர ஊடகங்களில் 1857 சிப்பாய் கலகமே குறிப்பிடப்படுகிறது. கார்ல் மார்க்ஸ¤ம் கூட சிப்பாய் கலகத்தையே முதல் இந்திய சுதந்திரப் போர் என்று வரையறுக்கிறார். ஆனால், வரலாற்றின் பக்கங்களை புரட்டுமிடத்து, தென்னிந்தியா அதற்கு 80, 100 வருடங்களுக்கு முன்பே சிவக்க துவங்கி விட்டதைக் காட்டுகிறது. குறுநில, பெரிய மன்னர்களின் பல்வேறு போராட்டங்கள் என்று அது தொடர்ந்தது. இந்த போராட்டங்கள் எல்லாம் 1700 இன் இறுதியில் வீரியமாகி 1805-ல் வேலூர் சிப்பாய் கலகத்துடன் நிறைவடைகிறது.

இவை அனைத்தையும் பற்றி சுருக்கமாக அன்றைய இந்திய மன்னர்களின் ஆட்சியைப் பிடிக்கும் தன்மான உணர்ச்சியே அவர்களை ஆங்கிலேயருக்கு எதிராக போராட தூண்டியது என்ற அளவில் மட்டுமே இந்த போராட்டங்கள் பற்றிய பார்வை நம்முள் ஊட்டப்படுகிறது. மேலும் இவர்கள் அனைவரும் தனித் தனியாக தன்னெழுச்சியாகப் போராடினார்கள் என்பதாகவும், அஹிம்சா மூர்த்தி காந்திதான் உண்மையில் இந்தியப் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர் என்பதாகவும் நமது பாடத்திட்டங்களும், ஆளும் வர்க்க ஊடகங்களும் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளன. மொத்தத்தில் கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று செய்து விடுதலை பெற்றதாக வலுவானதொரு பொதுக் கருத்து நிறுவப்பட்டுள்ளது. இவையனைத்தும் பெருமிதம் தரும் இந்திய விடுதலைப் போரின் பக்கங்களை மறைத்து விட்டு, அவற்றில் முகிழ்ந்த பெருந்திருள் மக்கள் பங்களிப்பை மறைத்து விட்டு, ஏகாதிபத்திய அடிமைத்தன சமரச வாதத்தையே இந்திய சுதந்திரப் போராக முன்னிறுத்தும் திட்டமிட்ட தந்திரங்களே.

காந்தி இந்திய சுதந்திர போராட்டத்திற்க்கு தலைமை தாங்குவதற்க்கு முன்பும் சரி, இந்திய மக்கள் மீதான அவரது செல்வாக்கு சரிந்து மக்கள் தன்னெழுச்சியாக பிரிட்டிஸை எதிர்த்து போராட துவங்கிய 1940களும் சரி இந்திய வரலாற்றிலிருந்து செம்மையாக மறைக்கப்பட்ட விட்டன.

இந்த வரலாற்று இருட்டடிப்பை தக்க தரவுகளுடன் அம்பலப்படுத்துவதுடன், இந்திய விடுதலை போராட்டம் குறித்த நேர்மையானதொரு சித்திரத்தை தருகிறது இந்த புத்தகம்.

இந்த புத்தகத்தில், பல வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் இந்திய முதல் சுதந்திரப் போர் தென்னிந்தியாவில் மையம் கொண்டிருந்ததையும், இந்துஸ்தானத்திலிருந்து வெள்ளையரை வெளியேற்ற தென்னிந்திய வீரப் போராளிகள் கூட்டணி(தீபகற்ப கூட்டணி) அமைத்து போர் புரிந்ததையும், ஒட்டு மொத்தமாக மக்களின் கண்களிலிருந்து மறைக்கப்பட்ட ஒரு காலச் சூழல் குறித்த ஒரு பாரிய புரிதலுக்கு உதவும் வகையில் எல்லாருக்கும் புரியும் வகையில் தொகுத்து 12 கட்டுரைகளாக தொகுக்கப்பட்டுள்ளது. கீழே இந்த சிறப்பிதழின் தலையங்கத்தின் கடைசி பேராவில் இருந்து சில வரிகளைக் கொடுக்கிறேன்.

"..திப்பு, மருது, 1857 எழுச்சி முதல் வ.உ.சி. பகத்சிங் வரையில் நாம் காணும் மூன்று நூற்றாண்டுகளைச் சேர்ந்த இந்த மண்ணின் அரிய புதல்வர்கள் தமக்குள் அதிசயிக்கத்தக்கதோர் ஒற்றுமையைக் கொண்டிருக்கிறார்கள். இந்த மண்ணின் இறையாண்மையையும் மக்களின் நலனும் பிரிக்கவொண்ணாதவை என்ற கருத்து இவர்கள் அனைவரிடமும் இழையோடுகிறது. தியாகிகளை மட்டுமின்றி சமகால துரோகிகளையும் தெரிந்து கொள்வதன் மூலம்தான் தியாகத்தின் மதிப்பை உணர்ந்துகொள்ள இயலும் என்பதால் துரோகிகளுக்கும் சில பக்கங்கள் ஒதுக்கியிருக்கிறோம். இந்தத் துரோகத்தின் மரபணுக்கள் நிகழ்காலத் துரோகிகளை அடையாளம் காண்பதற்கும் வாசகர்களுக்குப் பயன்படும்.

துப்பாக்கிகளுக்கு எதிராக வேல்கம்புகளையும், பீரங்கிகளுக்கு எதிராக நெஞ்சுரத்தையும் நிறுத்திக் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட இந்த வீரப் புதல்வர்களுக்கு நாம் வேறென்ன காணிக்கை செலுத்த முடியும், மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராகப் போரிடுவதைத் தவிர."




யார் இந்த ஹைதரும் திப்புவும்?

ஒரு சாராசரி வாசகனின் பார்வையில் ஹைதர் அலி ஒரு சாதாரண மன்னன், ஆனால் ஏகாதிபத்திய எதிர்ப்பு போரில் அவரது இன்னொரு பரிணாமம் என்னவென்பது யாருக்கும் தெரியாது. அவரைப் பற்றிய ஒரு கட்டுரை இந்த விசயங்களை சிறப்புற எடுத்தியம்புகிறது(மன்னர் குலம் சாராத மாவீரன்: ஹைதர் அலி).

மாராத்தாக்களையும், நிஜாம்களையும் ஒருங்கிணைத்து ஒரு ஐக்கிய முன்னணி கட்ட தனது கடைசி காலகட்டம் வரை முயன்று தோற்றார் ஹைதர். தனது சாவுக்கு முன்பு எழுதிய கடிதத்தில் கூட தனது மைசூர் ராஜாங்கம் பறிபோவது குறித்து கவலைப்படவில்லை, மாறாக இந்துஸ்தானத்தின் நிலையை எண்ணி கலங்குகிறார் இந்த மாவீரன். குறிப்பாக இவரது பிறப்பு, வளர்ப்பு பின்னணி குறித்த தகவல்களுடன் கூடிய மார்க்ஸிய பார்வை வரலாற்றை வேறுபட்ட வகையில் புரிந்து கொள்ள உதவுகிறது. ஹைதர் குறித்த கட்டுரையின் அனுகுமுறையை கட்டுரையிலிருந்து ஒரு சிறு பகுதியை குறிப்பிட்டு காட்டுவதன் மூலம் அறியலாம்.

"ஆளப்பிறந்த இந்து மேல் வருணத்தினராயினும், அதிகாரம் பறிபோவதைத் தம் கண் முன்னே கண்டு கொண்டிருந்த முகலாய உயர்குடியினராயினும் - மார்க்சின் வார்த்தைகளில் சொல்வதென்றால்- "பழமைக்குரிய கவுரவ மனப்பான்மை கூட இல்லாதவர்கள்". அவர்கள் தம் அதிகாரத்தின் சாசுவதத் தன்மை குறித்த கனவைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு கண்ணை இறுக மூடிக் கொண்டார்கள்.

எனவே 'இந்துஸ்தானத்'தின் கவுரவம் குறித்துக் கவலைப்படுவதென்பது, சுய கவுரவம்கூட இல்லாத இவர்களுடைய யோக்கியதைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. அதற்கு, தன் முயற்சியால் சாம்ராச்சியத்தை உருவாக்க முடிந்த ஒரு வீரன், நிலபிரபுத்துவ உயர்குடிப் பெருமிதங்களால் குருடாக்கப்படாமல் புதுமையைக் கற்றுத் தேர்வதில் வெறி கொண்ட ஒரு வீரன் தோன்ற வேண்டியிருந்தது."


அத்தகையதொரு வீரனாக இந்திய விடுதலைப் போராட்டம் எனும் பிரமாண்டமான மேடையை அலங்கரித்தவர்தான் ஹைதர் என்பதை கட்டுரை நிறுவுகிறது. ஹைதர் குறித்த இந்த கட்டுரையிலிருந்து புத்தகம் தனது வரலாற்று மறுவாசிப்பைத் தொடங்குகிறது. கட்டுரையை எழுதியவர் ஏற்கனவே புதிய கலாச்சாரம் இதழில் பல்வேறு கலாச்சார கட்டுரைகள் எழுதி செழுமையான அனுபவம் உள்ள - சூரியன்.

ஹைதரின் மகன் திப்பு, தந்தை விட்டுச் சென்ற கடமையைச் செவ்வனே தொடர்கிறார். திப்புவைப் பற்றியும் கூட ஒரு வீரஞ்செறிந்த மன்னன் என்பதைத் தவிர்த்து வேறு விசயங்கள் பரவலாக யாருக்கும் தெரிவதில்லை. அவர் முற்போக்கு சிந்தனையுள்ளவர், பிரெஞ்சு புரட்சியால் ஈர்க்கப்பட்டு பிரெஞ்சு புரட்சியாளர்களால் குடிமகன் திப்பு என்று பட்டம் கொடுக்கப்பட்டவர், அமெரிக்க புரட்சிக்கு நிதி உதவி அளித்தவர், சர்வாதிகாரத்தை எதிர்த்தவர், தனது சொந்த மக்கள் அனைவருக்கும் துப்பாக்கி கொடுத்து ஆயுதபாணி ஆக்கச் சொன்ன முற்றிலும் புரட்சிகரமான ஒரு தலைவன், தனது ராஜ்ஜியத்தை முதலாளித்துவ மயமாக்க தலைப்பட்டவர் இப்படி அவரது பல்வேறு ஆளூமைகளை அவரைக் குறித்த இந்தக் கட்டுரை எழுச்சி பொங்க விறுவிறுப்பாக எடுத்தியம்புகிறது.

இயல்பானதொரு முதலாளீத்துவ வளர்ச்சி பற்றிய புள்ளிவிவரத்துடன் கூடிய தகவல்கள், அதன் காரணமாக தலித்துக்கள் சமூக விடுதலையை நோக்கி முன்னேறத் துவங்கியிருந்த நிலை ஆகியவற்றை கட்டுரை சிறப்பாக படம் பிடிக்கிறது. முரன்பாடுகளை அம்பலப்படுத்தியும் அதனூடாக கேள்விகள் எழுப்பி சிந்திக்க செய்வதுமான எழுத்து நடைக்கு சொந்தக்காரராகிய மருதையன் இந்த கட்டுரையைச் சிறப்பாக எழுதியுள்ளார்.

கட்டுரையில் இருந்து சில வரிகள்(விடுதலைப் போரின் விடிவெள்ளி: திப்பு சுல்தான் - மருதையன்)

"துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிக ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார்"

"திப்புவின் படையில் சேருமாறு பிரெஞ்சு மக்களுக்கு அறைகூவல் விடுகிறார்கள் பிரெஞ்சு புரட்சியாளர்களான ஜாகோபின்கள்"

"வரலாற்றின் போக்கை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் முன்கை எடுத்த மன்னர்கள் உலக வரலாற்றில் வெகு சிலரே. அத்தகைய அறிவொளி பெற்ற மன்னர்களில் திப்புவும் ஒருவர்.."

"கிழக்கிந்திய கம்பேனிக்கு போட்டியாக அரசு வணிகக் கம்பேனியைத் துவக்குகிறார்..."

"வேலைவாய்ப்புகளும், பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாத அளவு செயல் துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது - கும்பினி அதிகாரி தாமஸ் மன்றோ"

"திப்புவின் கோட்டைக் கதவுகளை திறந்து நம்பிக்கை துரோகம் செய்த அமைச்சர் சதக் கின் உடல் மீது மக்கள் காறி உமிழ்ந்தனர், புதைத்த உடலை தோண்டி எடுத்து ஒரு வாரகாலம், அதன் மீது சேற்றையும் மலத்தையும் வீசினர். 'சதக்' என்ற பாரசீக சொல் துரோகத்தை குறிக்கும் கன்னட சொல்லாக மாறியது."

"திப்புவின் உடலை நெருஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்கள் மக்கள்...."



தென்னிந்தியாவின் வீரகாவியம், அவமானப்படுத்தும் சாதியம்:

திப்பு என்ற சரித்திர நாயகனுக்கு தோள் கொடுத்த தென்னிந்தியாவில் தீபகற்ப கூட்டினைவில் தீரன் சின்னமலை முக்கியமானவர். திப்பு சார்பாக நெப்போலியனிடம் தூது சென்ற குழுவில் தீரன் சின்னமலையின் பிரதிநிதி இருந்தார் என்ற செய்தி நம்மை வியப்படையச் செய்கிறது. தீரன் சின்னமலையின் படைக்கு ஜக்கோபின் எனப்படும் பிரெஞ்சு புரட்சியாளர்கள் கொரில்லா போர் பயிற்சி கொடுத்தது பற்றிய தகவல்கள் புல்லரிக்கச் செய்கின்றன. அந்த காலத்தில் பிரிட்டிஸ் அரசுக்கு எதிராக ஒரு வலுவான உலக அணியை உருவாக்கு முனைந்த மன்னர் குலம் சாராத இந்த மாவீரர்களின் துணிகர முயற்சிக்கு என்ன கைமாறு செய்ய முடியும் என்பதை எண்ணும் போது இந்த விடுதலைப் போராட்ட மரபை நெஞ்சில் ஏந்தி மீண்டும் ஒரு விடுதலைப் போருக்கு நம்மை அர்ப்பணிக்கும் கடமையை எதிர்கொள்கிறோம்.

மருது சகோதரர்களுடனான போரில்தான் அதிகமான வெள்ளையர்கள் உயிரிழ்ந்ததாக பதிவுகள் உள்ளன. சின்ன மருதுவின் திருச்சி மலைக்கோட்டை பிரகடனம் அவர்கள் குறித்த கட்டுரையுடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது. மக்களை போரிட அரைகூவி அழைக்கும் இந்த பிரகடனம் இன்றைய தரகு வர்க்க அரசியல்வாதிகளின் முகத்தில் காறி உமிழ்வதாக உள்ளது. மருது சகோதரர்களின் படையில் அனைத்து சாதியைச் சேர்ந்தவர்களும் பாகுபாடின்றி அணி திரண்டிருந்தனர். இன்று இவர்கள் ஒரு சாதிக்கு உரித்தவர்களாக அவமானப்படுத்தப்படுவது குறித்தும் கட்டுரை குத்திக் காட்டுகிறது.


"ஓண்டிவீரன், வெண்ணிக்காலடி போன்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வீரர்கள் பூலித்தேவனுடன் இணைந்து போராடியிருக்கிறார்கள். முதல் பாஞ்சாலங்குறிச்சிப் போரில் உயிர் நீத்திருக்கிறார் சுந்தரலிங்கம். காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போரிட்டு நாடு கடத்தப்பட்ட மருதுவின் வீரர்களில் எல்லாச் சாதியினரும் இருக்கிறார்கள்.

ஆனால் இன்று 'தேவர் குருபூசை'யுடன் மருதிருவருக்கும் சேர்ந்து விழா எடுக்கிறார்கள் சாதியப் பிழைப்புவாதிகள். இன்று மறுகாலனியாதிக்கத்துக்கு அடியாட்படையாகச் செயல்படும் இந்தப் பிழைப்புவாதிகள், துரோகி தொண்டைமானின் வாரிசுகள் என்பதே உண்மை."




வீரர்களும், துரோகிகளும்:

கர்நாடகாவின் துந்தாஜிவாக், தமிழகத்தின் கோபால் நாயக்கர் இவர்கள் யாரென்று தெரியாத தலைமுறை நம்முடையது என்று எண்ணும் பொழுது வெட்கித் தலைகுனிய வேண்டியதாக உள்ளது. ஆனால், அன்றைக்கு தீரமுடன் போரிட்டவர்களை காட்டிக் கொடுத்த துரோகிகளின் வாரிசுகள் அமைச்சர்களாகவும், பென்சன் பெற்றும் வாழ்க்கையை அனுபவித்து கொண்டே இன்றைய இந்தியாவின் நவீன தரகர்களாக மாறியிருப்பதை அமப்பலப்படுத்தவும் ஒரு கட்டுரை உள்ளது.

"துரோகமும் பிழைப்புவாதமும் பெற்ற வெற்றியைப் புரிந்து கொள்வதற்கு நுண்ணோக்கி கொண்டு வரலாற்றை ஆய்வு செய்யத் தேவையில்லை. நிகழ்காலத்தைக் கண் திறந்து பார்ப்பதே போதும்."

"இப்படியொரு பதிலைக் கூறிய பின்னரும் காந்தியை மகாத்மாவாகக் கொண்டாட முடிந்த தேசம் தொண்டைமான்களைத் தொடர்ந்து பெற்றெடுப்பதில் என்ன வியப்பு?"

"எட்டயபுர ராஜா இன்றளவும் அரண்மனையில் வாழ்வதும், கட்டபொம்மனின் வாரிசுகள் தொகுப்பு வீடு கேட்டு மனுப் போடுவதும் எட்டப்பனின் வெற்றியைப் பறை சாற்றவில்லை?"

"மருதுவின் கோட்டை பாழடைந்து கிடக்கிறது, கோபால் நாயக்கரையும், தூந்தாஜி வாக்கையும் மக்களுக்கு யாரென்றே தெரியாது. இவர்களுக்கு வரலாற்று நூல்களிலும் இடம் கிடையாது. மைசூர் அரண்மனையில் ஆண்டுதோறும் தசரா நாளன்று, உடையார், தர்பார் நடத்துகிறார். தஞ்சைப் பெரிய கோயிலுக்கு சரபோஜியின் வாரிசுதான் பரம்பரை அறங்காவலர். சுதந்திர தினத்தன்று கவர்னர் மாளிகையின் முக்கிய விருந்தாளி ஆற்காட்டு இளவரசர்.

ஏனென்றால், இது துரோகிகளின் அரசு. விடுதலை வரலாற்று துரோகம் கம்பீரமாக அரியணையில் அமர்ந்திருக்க, தியாகம் புறக்கணிக்கப்படும் இந்த அவலம்,...."


வீரத்தை மட்டுமல்ல தூரோகத்தையும் புரிந்து கொள்வதன் தேவையை தூரோகம் குறித்த கட்டுரை உணர்த்துகிறது.




மதத்தை கடந்த தேசப் பற்றுக்கு சாட்சியாக இந்திய விடுதலைப் போர்:

1906 இந்தியா சுதந்திர போராட்டத்தை மதம் வெற்றிகரமாக விழுங்கிவிட்டதை, பிரித்தாளும் சூழ்ச்சி வெற்றி பெற்றதை அறிவிக்கும் ஒரு கால அடையாளம். 1806, 1857 இந்திய விடுதலைப் போர்களின் போது மத ஒற்றுமையுடன், பெரும்பான்மை இந்துக்கள், முஸ்லீம் அரசர்களை வரவேற்று அரியணை ஏற்றியது பிரிட்டிஸ்க்காரர்களை அதிர்ச்சியுறச் செய்கிறது. பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலம் பிரிட்டிஸ்க்காரனின் அந்த அச்சத்தில் உள்ளது. இந்திய விடுதலை போராட்டத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமையை குறித்து கட்டுரைகள் ஆதாரங்களுடன் எடுத்துரைக்கின்றன.

"முகலாயப் பேரரசை "இந்துஸ்தானத்"தின் அரசாக இந்துக்கள் அங்கீகரித்தார்கள் என்றால், கிளர்ச்சி வெற்றி பெற்ற இடங்களிலெல்லாம் நல்லெண்ண நடவடிக்கையாகப் பசுவதைத் தடையை முசுலீம்கள் அறிவித்தார்கள்." இவ்வாறு சிப்பாய் கலகம் குறித்த கட்டுரை சொல்கிறது.

அன்று மன்னர்களை மக்கள் தைரியமாக பதவியேற்க்கச் சொல்லி அழைத்தார்கள். ஒரு வேளை அந்த போராட்டங்கள் வெற்றிப் பெற்றிருந்தால், இனிமேலும் மன்னர்கள் பழைய மன்னர்களாக இருந்திருக்க முடியாது. அப்படிப்பட்டதொரு புரட்சிகர சமூகத்தின் எதிர்காலம் குறித்த கற்பனையை நம்முள் படரவிட்டு ஏக்க பெருமூச்சு விடச் செய்கிறது ஒரு கட்டுரை.



நவீன இந்தியாவின் வீர தவப் புதல்வர்கள்:

"இதோ கட்டபொம்மன் வீழ்ந்த மண்ணிலிருந்து வ.உ.சி.எழுகிறார். பிரெஞ்சுப் புரட்சியின் முழக்கத்தை இந்த மண்ணில் ஒலித்த திப்புவைத் தொடர்ந்து, ரசியப் புரட்சியின் சோசலிசத்தை முழங்க பகத்சிங் வருகிறார். இந்திய விடுதலைப் போராட்ட மரபில்தான் எத்தனை மின்னல்கள், இடிமுழக்கங்கள்! ஆனால் ஒவ்வொரு முறையும் மழைமேகத்தைக் கலைத்துச் சென்றிருக்கிறது துரோகத்தின் காற்று." - இவை ஒரு கட்டுரையில் வரும் வரிகள். ஆம், பிரெஞ்சுப் புரட்சியின் பாரம்பரியமும், ரஸ்யப் புரட்சியின் பாரம்பரியமும் கூட இந்திய விடுதலைப் போரை வழி நடத்தியிருக்கின்றன. ஆயினும் தூரொகம் எனும் பெருங்காற்று புரட்சி மழையை பெய்ய விடாமல் இன்றளவும் இடைஞ்சல் செய்து வருவதை கட்டுரைகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

ஏகாதிபத்தியத்தின் உயிர் நிலை அதன் மூலதனம் என்பதை உணர்ந்து அந்த இடத்தில் வலுவான அடி கொடுத்தார் வ.உ.சி. அவரது வாழ்வின் மறைக்கப்பட்ட பல பக்கங்களை அவரைப் பற்றிய கட்டுரை எடுத்துக்காட்டுகிறது.

1700 களின் இறுதியில் ஒரு புயலாக நுழைந்து விடுதலைப் போராட்டத்தின் திசை வழியை தீர்மானித்தது திப்பு எனில், துரோகத்தாலும், பிழைப்புவாதத்தாலும் சோம்பியிருந்த 1900 களின் ஆரம்பத்தில் புதிய ரத்தம் பாய்ச்ச தனது இன்னுயிரை ஈந்தவன் பகத்சிங். பகத்சிங்கிடம் நாம் கற்றுக் கொள்ள் வேண்டியவை பல. காலத்தை மீறி சிந்தித்தாக சொல்லப்படும் பாரதியார் தனது சாதி மேன்மையை சொல்லி சிறையிலிருந்து விடுதலை பெற பிரிட்டிஸாரிடம் பேரம் பேசி சோரம் போன காலத்தில்தான், அந்த காலத்திற்க்கான சிந்தனையான கம்யுனிசத்தை உள்வாங்கிக் கொண்டு ஒரு அனுபவம் வாய்ந்த பெரிய மனிதனைப் போல பேசுகிறார் பகத்சிங். கட்டுரையில் வரும் சில வரிகளை இங்கு கொடுப்பது பொருத்தமாக இருக்கும்.

" இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை;
எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதுமில்லை"


உங்களையும் என்னையும் நம்பி தூக்குக் கயிறை முத்தமிட்ட அந்த இளைஞனுக்கு நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம்??



படியுங்கள் - ஒரு புதிய அனுபவம் - ஒரு சுய பரிசோதனை:

இப்படி துணூக்குகளாக தருவது என்றால் முழு புத்தகத்தையும் தரலாம் என்ற அளவில் அதன் ஒவ்வொரு எழுத்துக்களும் அற்புதமான கருத்து செழுமையுடன் உள்ளது.

ஓவியர் முகிலன், திரு, மருது ஆகியோரின் அற்புதமான ஓவியங்களுடன் வந்துள்ளது இந்த சிறப்பிதழ்.

இது போன்ற மாற்று இதழ்கள் கடுமையான நிதி சிக்கலை கடந்தே வருகின்றன. ஆயினும் பிற முதலாளித்துவ பத்திரிக்கைகளை விட சிறப்பானதொரு அட்டை வடிவமைப்புடன் புதிய கலாச்சாரம் இதழ் வெளி வருவது அதன் தனிச் சிறப்பு. இதற்க்கு பின்னால் உள்ள கடுமையான உழைப்பை நாம் உறுதியாக மெச்ச வேண்டியுள்ளது.

ராஜவனஜ் என்ற அன்பர் தனது தளத்தில் இந்த புத்தகம் குறித்த ஒரு அறிமுகக் கட்டுரை வெளியிட்டிருந்தார். அதில் சில வரிகளை இங்கு சேர்ப்பது பொருத்தமான அறிமுகமாக இருக்கும்.

"வரலாற்றின் போக்கில் மக்கள் விடுதலை என்பது கடைச் சரக்கல்ல... இப்படியெல்லாம் தன்னலமற்ற தியாகிகளால், மாபெரும் வீரர்களால் நடத்தப் பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை இன்று ஏன் அகிம்சையாக நடந்த சுதந்திர போராட்டம் என்று ஆளும் வர்க்கங்களால் வலுவுடன் பிரச்சாரம் செய்யப் படுகிறது? இந்த வீரர்களுக்கு கிடைத்த பரிசு என்ன? யாரால் இவர்கள் காட்டிக் கொடுக்கப் பட்டனர்? காட்டிக் கொடுத்தவர்களின் வாரிசுகள் இப்போது எப்படி இருக்கிறார்கள்? கிடைத்ததாக சொல்லப் படும் சுதந்திரத்தின் யோக்கியதை என்ன? தன்னுடைய மூலதனத்தின் விரிவாக்கத்துக்காக புதிய சந்தையைத் தேடி உள்நுழைந்தது வெள்ளை ஏகாதிபத்தியம்.. நம் அடிமைத் தனம் ஏற்பட முக்கிய காரணியான அந்த மூலதனம் சுதந்திரத்திற்குப் பின் என்னவானது? எங்கே போனது? நம்மை கசக்கிப் பிழிந்து விரிவடைந்த ஏகாதிபத்தியத்தின் மூலதனம் நாட்டுடமையாக்கப் பட்டதா?

யாரிடம் ஆட்சியைக் (சுதந்திரத்தையல்ல) கைமாற்றிச் சென்றான் வெள்ளையன்? ஏன் அவனுக்கு அந்த கட்டாயம் ஏற்பட்டது? ஏகாதிபத்தியம் ஆகஸ்டு 15 1947 க்குப் பின் மெய்யாலுமே நம் நாட்டை விட்டு சென்று விட்டதா?

கேள்விகள்.. கேள்விகள்.. கேள்விகள்.. இப்படி ஆயிரம் கேள்விகள்.. உங்களுக்கான விடை இம்மாத புதிய கலாச்சாரத்தில் காத்திருக்கிறது ...."

புத்தகம் வேண்டுபவர்கள் புதிய கலாச்சாரம் அலுவலகத்தை தொடர்பு கொண்டு புத்தகத்தை அனுப்பக் கோரலாம்.


புதிய கலாச்சாரம்:

உள்நாடு:
தனி இதழ்: ரூ. 5.00
ஆண்டு சந்தா: ரூ. 90.00

வெளி நாடுகள் (வான் அஞ்சலில்)
ஆண்டு சந்தா: US$ 9


தொடர்புக்கு:
இரா.சீனிவாசன்,
16,முல்லைநகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை,
(15-வது தெரு அருகில்),
அசோக் நகர்,
சென்னை - 600 083.

தொலைபேசி: 044-23718706

மின் அஞ்சல் முகவரி:
puthiyakalacharam@rediffmail.com



இதழ் தயாரிப்பில் உதவிய நூல்கள்(பின் அட்டையில் குறிக்கப்பட்டுள்ளது):

1. Rajayyan, K., South Indian Rebellion, The first war of Independence 1800 - 1801, Rao and Raghavan, Mysore Publication, 1971.

2. Rajayyan, K. Tamilnadu A Real History, Ratna Publications, Trivandrum, 2005.

3. Firoz Alam, Great Indian Revolutinary Bhagat Singh, A collection of edited articles, Sahni Publications, 2003.

4. B.R. Agarwala, Trials of Independence (1858-1946), National Book Trust, 1991.

5. Bipan Chandra, India's Struggle for Independence, Penguin(India), 1989.

6. Manmathnath Gupta, Bhagat Singh and His times, Lipi Prakashan, Delhi, 1977.

7. Karl Marx, On India, Rhulika Publications, 2006.

8. Indian Independence War, 1857-1859; Progress Publishers, Moscow, 1988.

9. Bipan Chandra, Modern India, A History Textbook for Class XII, NCERT Publication, 2002.

10. P.C. Joshi, 1857 In Folk Songs(A compilation), 1994.

11. S.N. Chanda, 1857: Untold Stories, Sterling Publishers, 1976.

12. Publications Division, Ministry of I&B, Govt. of India, 1857: A Pictorial Presentation, 1997.

13. Denys Forrest, Tiger of Mysore, The Life and Death of Tipu Sultan, Allied Publishers, 1970.

14. Confronting Colonialism: Resistance and Modernization under Haidar Ali and Tipu Sultan, A collection of essays - Edited by Irfan Habib.

15. Saki, Making History: Karnataka's People and Their Past; Volume I, Stone age to Mercantilism, Vimukthi Prakashana, Bangalore, 1998.

16. Nick Robins, The Corporation that changed the World, How the East India Company shaped the Modern Multinational, Orient Longman, 2006.

17. E.J. Hobsbawm, The Age of Capital: 1848-1875, Rupa & Co., Calcutta, 1992.

18. Seema Alavi, The Eighteenth Century in India, OUP, 2002.

19. Dr. Shu Hikosaka and Dr. G John Samuel, General Editors; Dr. M. Shanmugam Pillai, Editor: The First Freedom Fighter, The Story of Pulittevan, Folklore of Tamilnadu Series No.8, Institute of Asian Studies.

20. முனைவர் கு. மங்கையர்க்கரசி, மருது பாண்டியர் வரலாறும் வழிமுறையும், புத்தா பப்ளிகேஷன்ஸ், 2003.

21. பேராசிரியர் ந. சஞ்சீவி, மானங்காத்த மருது பாண்டியர், காவ்யா, 2004

22. பேராசிரியர் ந. சஞ்சிவி, வீரத்தலைவர் பூலித்தேவர், காவ்யா, 2004

23. சிவலை இளமதி, வரலாறு படைத்த வழக்குகள், அலைகள், 1997

24. த.சிவக்குமார், கேளாத செவிகள் கேட்கட்டும்... தியாகி பகத்சிங்கின் கடிதங்கள், கட்டுரைகள், மற்றும் பிற ஆவணங்கள், நெம்புகோல் பதிப்பகம், 2006

25. நாத்திகம்-ப. ராமசாமி, நாத்திகச் சிங்கம் பகத்சிங், நாத்திகம், 1992

26. மாயா குப்தா, டாம் நார்ன், வேலூர்க் கலகம் ஜூலை 1806, விடியல் 2003

27. எஸ்.மித்தல், இர்பான் ஹபீப், விடுதலைப் பாதையில் இந்தியா, பகத்சிங்கின் நவஜவான் பாரத சபை பற்றிய அறிமுகம், கார்க்கி நூலகம், 1981

28. எப்போதாவது எண்ணிப் பாருங்கள்... தியாகச் செம்மல்களின் கடிதங்கள், பப்ளிகேஷன்ஸ் டிவிஷன், 1998

29. எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர், சுதந்திரப் போர், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், 1957

30. வே. மாணிக்கம், தானாபதிப் பிள்ளை வரலாறு, யாதுமாகி, 2005

31. டாக்டர் ஜெ.ராஜாமுகமது, புதுக்கோட்டை மாவட்ட வரலாறு, அரசு அருங்காட்சியகம், 1992

32. கொ.அ.அந்தோனவா, கி.ம.போன்காரத்-லேவின், இந்தியாவின் வரலாறு - மிகத் தொல் காலம் முதல் 18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை, முன்னேற்றப் பதிப்பகம், 1987

33. கால்டுவல் திருநெல்வேலி சரித்திரம், காவ்யா, 2004

34. இந்தியப் பெருமுதலாளி வர்க்கம் - சுனிதி குமார் கோஷ்-தமிழில் வ.கோவிந்தசாமி

35. வ.உ.சி நூல் திரட்டு-தொகுப்பு வீ.அரசு

36. வ.உ.சியும் திருநெல்வேலி எழுச்சியும்-ஆ.இரா.வேங்கடாசலபதி

37. வ.உ.சிதம்பரம் பிள்ளை - என்.சம்பத், பெ.சு.மணி

38. திராவிட இயக்கமும் வேளாளரும்-ஆ.இரா.வேங்கடாசலபதி

39. சிவனடி, இந்திய சரித்திரக் களஞ்சியம், தொகுப்பு நூல்கள்


**********

புத்தகம் வேண்டுபவர்கள் புதிய கலாச்சாரம் அலுவலகத்தை தொடர்பு கொண்டு புத்தகத்தை அனுப்பக் கோரலாம்.

புதிய கலாச்சாரம்:

உள்நாடு:
தனி இதழ்: ரூ. 5.00
ஆண்டு சந்தா: ரூ. 90.00


வெளி நாடுகள் (வான் அஞ்சலில்)
ஆண்டு சந்தா: US$ 9


தொடர்புக்கு:
இரா.சீனிவாசன்,
16,முல்லைநகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, (15-வது தெரு அருகில்),
அசோக் நகர், சென்னை - 600 083.

தொலைபேசி: 044-23718706

மின் அஞ்சல் முகவரி:
puthiyakalacharam@rediffmail.com


Related article:

* படியுங்கள் இந்த மாத ‘புதிய கலாச்சாரம்’!!!

* புத்தகப் பிரியன்

Thursday, November 23, 2006

யாரு சொல்றதுன்னு பாத்தீகளா?

உலகமயம், உலகமயம் அப்படின்னு கம்யுனிஸ்டுகளும், பிற அரசியல் கட்சியினரும் அடிக்கடி உரக்க கூவுகிறார்களே, அதை இந்தியாவில் அமல் படுத்திய பெருந்தகை மெக்காலேயின் புத்திரன் மன்மோகன் சிங்தான். அன்னார், நரசிம்மாராவ் அரசில் நிதியமைச்சராக இருந்த போது இந்தியாவ தொறந்து விட்டாரு. தொறந்த வீட்டில பாகாசுர வெறி நாய்கள் நுழைஞ்சு அழிச்சாட்டியம் பன்றதப் பத்தித்தான் திரும்ப திரும்ப நாங்களும் எழுதி வருகிறோம். சரி, இப்ப அதுக்கு என்ன வந்ததுன்னு கேக்கிறீங்களா? தொடர்ந்து படிங்க.....

உலக மயம் தோற்றுவிக்கும் உலக உண்மை:

* ஏழை பணக்காரன் பிளவு அதிகரித்து வருகிறது.

* ஏழைகள் மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தருவதற்க்கான, அவர்களது பிரச்சனைகளை காது கொடுத்து கேட்ப்பதற்க்கான சக்தியை அரசு இழந்து வருகிறது. மருத்துவம், கல்வி போன்ற அடிப்படை வசதிகளை போதுமான அளவு செய்து தருவதற்க்கு வக்கற்று உள்ளது.

* வளர்ச்சி கிராமங்களை அடைவதில்லை.

* இந்த மேற்சொன்ன காரணங்களால், மக்கள் அரசை வேறுக்க தொடங்கியுள்ளனர். இது மாற்றுமைப்பு தேடும் சக்திகளை வளர்த்தெடுக்கிறது. இது ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தவிடாமல் அரசை தடுக்கிறது.

இப்படித்தான் நாங்க முட்டாப்பயக கம்யுனிஸ்டுகள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இத திரும்ப போட வேண்டிய அவசியமென்ன?.
இத இந்த முறை சொன்னது சாட்சாத் மாமா மன்மோகன் சிங்தான். அதுவும் பிரிட்டிஸ் ஜெண்டில் மேன், மற்றும் லேடிஸ் மத்தில போயி சொல்றாரு.

பாராளுமன்றத்தின் போலித்தனத்தை அம்பலப்படுத்துவது யார்?

ஏன் இதே விசயம் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொல்லி கதை விடப்படும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை?

நியாயமாக அங்குதானே விவாதிக்கப்பட வேண்டும்.

உண்மையிலேயே அதி முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டிய விதை நெல் சீர்திருத்தச் சட்டம், அணு சக்தி ஒப்பந்தம், அமெரிக்க ராணுவ ஒப்பந்தம், VAT, சில்லைறை வியாபாரத்தில் FDI, காப்புரிமைச் சட்டம், தண்ணீர் ஒழுங்குமுறை ஆணயச் சட்டங்கள் இப்படி இன்னும் சில பத்து அடிமை சாசனங்களையே கூட விவாதிக்காமலேயே அனுமதித்து பாராளுமன்றம்.
இதன் மூலம் அப்சல் குண்டு வைத்த இந்திய பாரளுமன்றம் என்பது ஏகாதிபத்தியத்தின் outpost, ரப்பர் ஸ்டாம்பு என்று அம்பலப்படுத்துவது கம்யுனிஸ்டுகளா அல்லது ஏகாதிபத்திய அடிமைகளா?

அல்லது 1947 போலி சுதந்திரத்துக்கு முன்பு இந்தியாவின் ஒவ்வொரு பிரச்சனைகளை பற்றியும் பிரிட்டிஸ்க்காரர்களிடம் கேஞ்சி கேட்டு(லேடிஸ் அண்ட் ஜெண்டில்மேன்..) முறையிடுவோமே, அது போலத்தான் இப்பொழுதும் இந்தியாவின் நிலைமை உள்ளதா? அதாவது இந்தியா இன்னும் அடிமை நாடுதானா?

ஏனெனில் நமது பிரச்சனைகளுக்கு தீர்வு கேட்டு இங்கு எதுவும் பேசாமல் பிரிட்டிஸ் மண்ணில் பேசும் போது இந்த சந்தேகம் உறுதிப் படுகிறது.

இதே மன்மோகன்சிங் தான் போன முறை ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் அவார்டு கொடுத்த பொழுது பிரிட்டிஸ்க்காரர்களின் காலனி ஆதிக்கத்திற்க்கு நன்றி தெரிவித்து தான் ஒரு பச்சை தரகு வர்க்க அரசியல்வாதி என்பதை வெட்கமின்றி பறை சாற்றினார். வேறு எப்படி? மெக்காலே கல்வி முறையின் புதிய வார்ப்பு அல்லவா?

அசுரன்

Friday, November 17, 2006

'ஹே ராம்' விமர்சனமும், காந்தி வாங்கிக் கொடுத்த தந்திரமும்

காந்திதான் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் என்று வெற்றிகரமானதொரு வரலாற்றுப் பொய்யை, ஒரு சார்பு வரலாறை ஆளும் வர்க்கங்கள் பொதுக்கருத்தாக மாற்றி விட்டன. ஆனால், வரலாற்றில் காந்தியின் வருக்கைக்கு முன்பும் , காந்தி செல்வாக்கு குன்றி ஒரு அடையாளாமாக இருந்த 1940களையும் பார்க்குமிடத்து சுதந்திரம் என்பது காந்திக்கு அப்பாற்ப்பட்ட ஒரு விசயமாகவே இருந்துள்ளது தெரிகிறது.
இது குறித்து புதிய கலாச்சாரம் இதழில் வந்த ஹேராம் பட விமர்சனத்தில் ஒரு பகுதியை தருவது சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். ஏனெனில் அது சுருக்கமாக 1940களில் காந்தி மக்களின் குரலாக இல்லாத நிலையையும், தன்னெழுச்சியாக மக்கள் ஆங்காங்கே போராடியதையும், பிரிட்டன் பலவீனமாகியிருந்ததையும், அமெரிக்கா பிரிட்டனை நெருக்கி வந்ததையும் குறிப்பிட்டுக் காட்டுகிறது. மேலும், இந்திய விடுதலை வரலாற்றில் 1906 க்கு முன்பு வரை இந்து முஸ்லீம்கள் மத வேறுபாடுகளை களைந்து ஒன்றாகவே போராடி வந்துள்ளனர். காஸ்மீரில் இந்தியா, பாகிஸ்தானின் தலையீட்டுக்கு முன்பு வரை அது மத சார்பின்மையின் இலக்கணமாக இருந்து வந்துள்ளது.
இந்த உணர்வு, 1940களில் த்லைவர்களற்ற பல் மக்கள் போராட்டங்களிலும் வெளி வருகிறது. இந்த பொது உணர்வை வளர்த்தெடுக்க ஏன் தவறினார்கள் அன்றைய வீரர்களாக நமது பாட புத்தகங்க்ள் சித்தரிக்கும் தலைவர்கள்?
அல்லது இன்னும் சிறப்பாக கேள்வி கேட்டால், மதக் கலவரங்களை மக்கள் விரும்பினார்களா அல்லது தலைவர்களா?

இது போல இன்னும் பல தர்மசங்கடமான(நமக்கல்ல்) கேள்விகளை எழுப்புகிறது நமது விடுதலைப் போராட்டத்தின் உண்மையான வரலாறு.
தமஸ்(இந்திய பிரிவினை குறித்த படம்) படத்தில் ஒரு வசனம் வருகிறது. ஒரு ஆங்கிலேய அதிகாரி அவன் மனைவியிடம் பேசுகிறான்:

"மதக் கலவரங்களால் யார் லாபம் அடைந்தார்களோ அவர்கள்தான் அதற்க்குக் காரணம்"
"ஒரு அரசு தனது நாட்டு மக்கள் எந்த விசயத்தில் ஒன்று படுகிறார்கள் என்பதை விட எந்த விசயத்தில் பிரிந்து முரன்படுவார்கள் என்பதில்தான் கவனம் செலுத்துகிறது."

*********
(சினிமா திரை விலகும் போது..... - ஹே ராம் பட விமர்சனத்தின் ஒரு பகுதி - புதிய கலாச்சாரம் வெளியீடு)

1946 நவீன இந்திய வரலாற்றின் மிகக் கொந்தளிப்பான ஆண்டு. 1945 ஏப்ரலில் இரண்டாவது உலகப் போர் முடிந்தவுடன் பிரிட்டிஸ்ஹ் ஏகாதிபத்தியம் அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பலவீனமடைகிறது. பிரிட்டனுக்கு 'எதிராக' அகிம்சை வழியில் இயக்கம் நடத்திக் கொண்டிருந்த காந்திக்கும் இந்திய மக்கள் மீது இருந்த செல்வாக்கு பலவீனமடைகிறது. நாடெங்கும் பல போராட்டங்கள் வெடிக்கின்றன.

நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தின் தளபதியான ஷா நவாஸ்(முசுலீம்), ஜி.எஸ். தில்லான்(சீக்கியர்), பிரேம் சேகல்(இந்து) ஆகியோரை பிரிட்டிஷ் அரசுக்குத் துரோகமிழைத்ததாகத் தண்டிக்க முற்ப்பட்ட போது, அரசுக்கெதிராக நாடெங்கும் இலட்சுக்கணக்கான மக்க்ள் கிளர்ந்தெழுந்த ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நவம்பர் 1945-இல் கல்கத்தா நகர வீதிகளில் மூன்று நாட்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர் இலட்சக்கணக்கான மக்கள். பிப்ரவரி 1946-இல் அப்துல் ரஷீத் என்ற ஒரு இந்திய தேசிய இராணுவ சிப்பாயை விடுதலை செய்யக் கோரி மீண்டும் கல்கத்தா கிளர்ந்தெழுந்தது. இந்த எல்லாக் கோரிக்கைகளுக்கும் பிரிட்டிஷ் அரசு பணிய நேர்ந்தது.

பிப்ரவரி 1946-இல் பிரிட்டிஷ் கடற்படையின் இந்திய மாலுமிகள் பம்பாயில் கலகம் செய்தனர். கம்யுனிஸ்டுகளால் திரட்டப்பட்ட பம்பாய் நகரமே அவர்களுக்கு ஆதரவாக வேலை நிறுத்தம் செய்தது. 250 பேர் இரண்டே நாட்களில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
விமானப் படையில் வேலை நிறுத்தம், ஜபல்பூர் இராணுவத்தில் வேலை நிறுத்தம், பீகார், டெல்லி போலீசாரின் வேலை நிறுத்தம் என்றூ பிரிட்டிஷ் அதிகாரத்தின் தூண்களாக இருந்த அதிகார வர்க்க இராணுவமே அவர்கள் கையைவிட்டு நழுவிக் கொண்டிருந்தன. வங்காளம், உ.பி., பீகார், மகாராஷ்டிரா போன்ற இடங்களிலும், திருவிதாங்கூர், ஐதரபாத் நிஜாமின் சமஸ்தானங்களிலும் விவசாயிகளின் போராட்டம் ஜமீந்தார்களையும், மன்னர்களையும், பண்ணைகளையும் உலுக்கிக் கொண்டிருந்தது.

மாணவர் போராட்டம் நடைபெறாதா இடமே இல்லை; ஜூலை 1946-இல் தபால் தந்தி ஊழியர்கள் வேலை நிறுத்தம், ஆகஸ்டு 1946-இல் தென்னிந்திய ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறூத்தம் என எல்லாத் தொழில் துறைகளும் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்தால் நிலை குலைந்திருந்தன. ஆனால் இது வரை குறிப்பிட்ட எந்த போராட்டமும் காந்தியோ, ஜின்னாவோ, சவர்க்காரோ அறைகூவல் விடவில்லை. மாறாக, போராட்டங்களை உடைக்கவும், திரும்பப் பெறவும், திசை திருப்பவும் தங்களாலான சேவைகளைத்தான் அவர்கள் செய்தார்கள்.

ஆனால், 1946 பிப்ரவரி மாதத்தில் பிரிட்டிஷ் ஆட்சியை ஒன்றுபட்டு எதிர்த்த கல்கத்தா மக்கள் ஆகஸ்டு மாத்த்தில் ஏன் ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டார்கள் என்ற கேள்விக்கு நமக்கு விடை தேவைப்படுகிற்து.
அதே காலகட்டத்தில் ஐதரபாத் நிஜாம் என்ற முசுலீம் மன்னனையும், ரசாக்கள் என்ற அவனது கோடூரமான (முசுலீம்) படையையும் எதிர்த்துப் போராடிய தெலுங்கானா(இந்து) விவசாயிகளின் போராட்டம் மட்டும் ஏன் மதக் கலவரமாக மாறவில்லை என்பதற்க்கும் விளக்க்ம் தேவைப்படுகீறது.

பல்லாயிரம் மக்கள படுகொலை செய்யப்பட்ட நவகாளீக்கு அருகிலேயே விவசாயிகள் ஜமீந்தார்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தார்கள். அந்த கிராமங்களுக்கு கலவரம் ஏன் பரவவில்லை என்பதற்க்கும் விடை தேவைப்படுகிறது.

அசுரன்

அஹிம்ஸை - ஒரு அபாயகரமான அதி பயங்கர வன்முறையே!

காந்தி குறித்து சில வாரங்களுக்கு முன்பு எனக்கும், நண்பர் மா.சி க்கும் கடுமையானதொரு விவாதம் நடந்தது. அது மிக நீண்டதொரு விவாதமாகிவிட்டபடியால் தொடர்ச்சியை தனிப் பதிவாக இடச் சொல்லி தோழி பொன்ஸ் சுட்டிக் காட்டினார். இடையில் வேறு சில உடனடி விவாதங்கள் வந்து இடைஞ்சல் செய்ததால் இந்த காந்தி விவாதத்தை சிறிது தள்ளிப் போடுவது என்று நானே அராஜகமாக முடிவெடுத்தேன். இப்பொழுது சூழல் சிறிது கெடுபிடியாக இல்லாமல் இருப்பதால் அந்த விவாதத்தை திரும்ப தொடங்கலாம் என்று ஒரு எண்ணம். மிகப் பெரிய விவாதமாகி விட்டபடியால் அதன் மையமான ஒரு அம்சத்தை இங்கு முன்வைத்து மீண்டும் விவாதத்தை தொடங்குகிறேன்.

************
(இந்த பகுதியை வாசிக்க விரும்பாதவர்கள் - நேராக, இந்த பதிவில் மாசிக்கான முதல் கேள்வியை சென்றடையலாம்).

அதற்க்கு முன்பு மா.சியின் நிலைப்பாடுகளாக சில விசயங்கள்:(இதில் ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டால் மா.சி தெரியப்படுத்தலாம்).

#1) பொதுவுடைமை சமுதாயம் தான் மா.சியின் தீர்வும் கூட.
#2) பொதுவுடைமை சமுதாயத்தை எந்த வரலாற்றுக் கட்டத்திலும் நடைமுறைப்படுத்தலாம் - மா.சி.
#3) பொதுவுடைமை சமுதாயம் என்பது மா.சியின் புரிதலில் - 'திறைமைக்கேற்ற ஊதியம், தேவைக்கேற்ப்ப செல்வு செய்வது'.
#4) "ஜனநாயகம் என்பது ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையை சக மனிதனின் உரிமைகளுக்கு நலன்களுக்கு மதிப்பு கொடுத்து அமைத்துக் கொள்ளும் சமூகக் கட்டமைப்பு (என்னுடைய வரையறை)" - மாசி கூறியது.
#5) சமூக பரிணாம ஆய்வு முடிவுகளை அவர் காந்தியின் வாழ்க்கையை ஆய்வு செய்ததன்(அல்லது காந்தியின் வாழ்க்கை அனுபவங்கள் மூலமே) மூலமே வந்தடைந்ததாக மா.சி கூறுகிறார்.
#6) "பொதுவுடைமை என்றால் - தர்மகர்த்தா முறையும் அதேதான் என்று நினைக்கிறேன்." - இதுவும் மா.சி கூறியதுதான். உறுதியாக் குறிப்பிடவில்லை, நினைக்கிறேன் என்றே சந்தேகமாக குறிப்பிட்டுள்ளார்.

மா.சி பதில் சொல்லாமல் விட்டுள்ள சில கேள்விகள்:(இவற்றையும் பிறகு பார்ப்போம்)
#1)
அசுரன்:இந்த நிலையை(பொதுவுடைமையை) நீங்களே(மா.சி) குறிப்பிட்டது போல ஒரே நாளில் அடைந்து விட முடியாது. அந்த இடைக்கட்டத்தில் என்ன விதமான அரசு இருக்கும் காந்தியத்தின் படி?

வேறு சில கேள்விகளும் உள்ளன. அவை இன்னும் முழுமையான வடிவம் பெறாமல் உள்ளன. மாசியுடனான விவாதத்தின் போக்கில் அவை முழு உருவம் பெறும் அப்பொழுது அவற்றை முன்வைக்கிறேன்.

*****************

இப்போ ஸ்டார்ட் செய்வோமா....
கேள்வி:
/////
அசுரன்:இதற்க்கு ஆதாரமாகத்தான் கார்வாலி சிப்பாய்களின் வட மேற்க்கு மாகாண சம்பவத்தையும் அதில் காந்தியின் பாத்திரத்தையும் குறீப்பிட்டுள்ளேன். அதில் தெளிவாக அவர் அஹிம்ஸையை கைகொண்ட வீரர்களை கண்டித்து அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை ஆதரிக்கிறார்.

மா.சி:அப்படி காந்தி ஆதரித்திருந்தால் காந்தியின் கருத்துக்களுடன் ஒவ்வாத ஒன்றாக இதையும் சேர்த்துக் கொள்கிறேன்.
////

எந்த அம்சத்தில் இப்பொழுது காந்தியுடன் ஒவ்வாமல் போயுள்ளீர்கள் என்று தெளிவாக சொல்லவும். ஏனேனில் இந்த அமசத்தில் conclusionயை தெளிவாக கூறீ முடித்துவிடலாம்.

ஏனெனில் இது காந்தி வன்முறையாளர் என்பதற்க்கு ஆதாரமாக கூறியுள்ளேன் எனில், நீங்கள் காந்தி வன்முறையாளர் என்பதை இந்த சம்பவத்தில் அவருக்கு எதிரான நிலையெடுப்பதன் மூலம் நிறுவுகிறீர்கள்.

அதாவது காந்தி வன்முறையாளர் என்கிற எமது நிலைப்பாட்டை நீங்களும் மறைமுகமாக ஆதரிக்கிறீர்கள்.
அசுரன்

Monday, November 13, 2006

உங்களின் இரக்கம் உண்மையானதா?

உங்களின் இரக்கம் உண்மையானதா? ...

Photobucket - Video and Image Hosting





Photobucket - Video and Image Hosting



ஜார்கண்டு மாநிலத்தின் தன்பாத் மாவட்டத்திலுள்ள பாத்திஹ் நிலக்கரிச் சுரங்கத்தில் செப்-6-ந் தேதி முன்னிரவில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில், தரை மட்டத்தில் இருந்து 599 மீட்டருக்கு கீழே நிலக்கரியை வெட்டி எடுக்கச் சென்றிருந்த 50 தொழிலாளர்கள் பரிதாபகரமாக இறந்து போனார்கள். இரண்டு நாட்கள் கழித்துதான் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. அவர்கள் தலையில் அணிந்திருந்த சுரங்க விளக்கில் போடப்பட்டிருந்த எண்ணை வைத்துதான், இறந்து போன தொழிலாளர்களை அடையாளம் காண முடிந்தது. அந்தளவிற்கு அவர்களின் உடல்கள் வெந்து கருகிப் போயிருந்தன.


நான்கு மாதங்களுக்கு முன்பு அரியானா மாநிலத்தில் பிரின்ஸ் சந்தர் என்ற ஆறு வயதுச் சிறுவன் 60 அடி பள்ளத்திற்குள் விழுந்து உயிருக்கும் போராடியதைப் பத்திரிக்கைகள் பரப்பரப்பான தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. இச்சிறுவன் உயிர் பிழைப்பதற்காக பலர் வேண்டிக் கொண்டதை தொலைக்காட்சிகள் திரும்ப திரும்ப ஒளிபரப்பின. நாட்டில் கருணை செத்துப் போய்விடவில்லை எனப் பத்திரிக்கைகள் எழுதின. ஆனால், 500 மீட்டர் ஆழத்தில் மாட்டிக் கொண்ட நிலக்கரிச் சுரங்க தொழிலாளர்களுக்காக, அவர்களின் உறவினர்களைத் தவிர, வேறு யாரும் கண்ணீர் விட்டதாகத் தெரியவில்லை. அச்சிறுவனின் உயிரைவிட, இத்தொழிலாளர்களின் உயிர் எந்த விதத்தில் குறைந்து போய்விட்டது?


அதிகார வர்க்கம் 50 தொழிலாளர்கள் செத்துப் போனதை "விபத்து" என்கிறது. ஆனால், பாத்திஹ் சுரங்கத் தொழிலாளர்களோ இதனைப் படுகொலை என்கிறார்கள். இந்த நிலக்கரிச் சுரங்கம் மிகவும் அபாயகரமான சுரங்கம் என அரசாலேயே வகை பிரிக்கப்பட்டுள்ளது. எனினும், இச்சுரங்கத்தில் உள்ள மின்சாரக் கம்பிகளை மாற்றியே 30 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றால், சுரங்கத்தில் இறங்கும் தொழிலாளியின் உயிருக்கும் என்ன பாதுகாப்பு கிடைத்திருக்கும்?


இந்த 'விபத்து' நடந்த அதே சமயத்தில், வேலை வாய்ப்பில்லாத 30 ஏழை இளைஞர்கள் மேற்கு வங்க மாநிலத்தில் கைவிடப்பட்ட ஒரு நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து நிலக்கரியை எடுத்து வருவதற்க்காகச் சுரங்கத்தினுள் இறங்கியிருக்கிறார்கள். அப்பொழுது சுரங்கத்தினுள் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட இவர்களைக் காப்பாற்ற அதிகார வர்க்கம் பெரிய முயற்சி எதுவும் செய்யவில்லை. மாறாக, இளைஞர்கள் நிலக்கரியைத் திருடுவதற்க்காகச் சட்ட விரோதமாக சுரங்கத்தினுள் இறங்கியிதாகத் திருட்டுப் பட்டம் கட்டித் தங்களின் பொறுப்பைத் தட்டிக் கழித்தார்கள். இப்படிப்பட்ட கல் நெஞ்சுக்காரர்கள் ஏழைகள் மீதும், தொழிலாளர்கள் மீதும் காட்டும் இரக்கம் உண்மையானதாக இருக்க முடியுமா?


அதிகார வர்க்கத்தை விடுங்கள். தொலைக்காட்சித் தொடரைப் பார்த்து கண்ணீர் உருக்கும் உங்களில் எத்தனை பேர், சுரங்கத் தொழிலாளர்கள் செத்துப் போனதற்கு அனுதாபப்பட்டிருப்பீர்கள்? நிழலைப் பார்த்து அனுதாபப்படும் நீங்கள், நிஜத்தைப் பார்த்து மரக்கட்டை போல் இருக்கின்றீர்கள் என்றால், உங்களின் இரக்க குணம் உண்மையானதாக இருக்க முடியுமா?


"நாங்கள் ஒவ்வொரு நாளும் சுரங்கத்தினுள் இறங்கும் பொழுது, உயிரோடு மீண்டு வருவோமா என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது" என்கிறார்கள் பாத்திஹ் சுரங்கத் தொழிலாளர்கள். அவர்கள் தினந்தோறும் உயிரைப் பணயம் வைக்கவில்லையென்றால், நாட்டிற்கு நிலக்கரி கிடைக்காது; நிலக்கரி இல்லையென்றால், மின்சாரம் இருக்காது; தொலைக்காட்சிப் பெட்டியும் இருக்காது; கண்ணீர் வடிக்கும் தேவையும் உங்களுக்கு இருக்காது!


புதிய ஜனநாயகம் (நவம்பர் - 2006) (பின் அட்டைக் கட்டுரை)

(படங்கள்: நன்றி, தி ஹிந்து)

Related Links:
http://www.hinduonnet.com/fline/fl2319/stories/20061006003102800.htm

http://www.rediff.com/news/2006/sep/12mine.htm

Thursday, November 09, 2006

நாய் படும்பாடும், நாகரிகம் படும்பாடும்

'நாய் பிழைப்பு' என்று ஒரு மனிதனின் மோசமான நிலையை சொல்வது வழக்கம். ஆங்கிலத்தில் கூட வெயில் கடுமையாக இருப்பதை dog day என்று குறிப்பிடுவார்கள். இது போன்ற சொற்றொடர்கள், அவை உருவான காலகட்டத்தின் சமூக பண்பாட்டு சூழல் குறித்த தகவல்களையும் மறை பொருளாக தாங்கியே வருகின்றன.


இவை வழக்கத்திற்க்கு வந்த காலத்தில் ஒரு வேளை நாய்களின் பிழைப்பு இந்திய விவசாயிகளின் நிலைக்கு கிட்டே வரும் அளவு மோசமாக இருந்திருக்கலாம். ஆனால், இனிமேலும் அந்த வார்த்தை பிரயோகம் உபயோகப்படுமா என்ற கேள்வி எழுகிறது. இந்தியாவில் அல்ல, அமெரிக்காவில் நாய்களின் வாழ்க்கை இந்த நாய் குறித்த சொற்றொடர்களை வழக்கத்துக்கு ஒவ்வாததாக மாற்றி விட்டது. இந்தியாவில் மேனகா உள்ளிட்ட ஆன்ம-வியாபார பன்றிகள் இன்னும் சில கோடிகளை வாங்கிக் கொண்டு இந்தியா நாய்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பட்சத்தில், நாய்களின் கேவலமான வாழ்க்கையை சுட்டிக் காட்ட 'விவசாயியின் பிழைப்பு' என்ற புது வார்த்தை வழக்கத்திற்க்கு வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

வேலையத்த சாய்நாத்தும், சமூக அரிப்பும்:

சாய்நாத் என்பவர் வேலையத்துப் போய் இந்திய விவசாயிகளின் கஸ்டத்தை, அவர்களின்-இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை ஏகாதிபத்திய வேட்டைக்கு இரையாகியிருப்பதை பல்வேறு தொடர் கட்டுரைகள் மூலம் உலகறியச் செய்தவர்களில் குறிப்பிடத் தகுந்தவர். ஒரு சம்பவம் முதல் முறை நடக்கும் பொழுது அதிக கவனத்தை பெறுவதும் பிறகு போகப் போக இதெல்லாம் சகஜம்தானே பாஸ் என்று ஏற்றுக் கொள்வதும் விழிப்புணர்வற்ற சமூகத்தின் இயல்பு. வழக்கம் போல விவசாயிகளின் விசயத்திலும் அதுவே நடந்தது. அரசு புள்ளி விவரத்தின் படியே 1 லட்சம் பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள் எனில் இதன் வீச்சும் பரவலான பொது அம்சமும் குறைந்த பட்ச மனிதாபிமானம் உடையவர்களையும் அதிர்ச்சியுறச் செய்கிறது.


ஆயினும் சுனாமிக்கு வால் போஸ்டரும் இரண்டு பதிவும் போட்டதுடன் தனது சமூக அரிப்பு தீர்ந்து விட்ட படியால் அந்த கோடூரமான சுனாமியையே பட்டப் பெயராக வைக்கும் அளவு சொரனையின்றி அலையும் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் விவசாயிகளின் பிரச்சனை, இந்தியா எனும் எரிமலை குமுறிக் கொண்டிருப்பது குறித்த பிரக்சை அதிகமாக இருப்பதற்க்கான வாய்ப்புகள் கம்மி. சுனாமி சேகர் என்று பட்டப் பெயர் வைத்துக் கொண்டால் அவரென்ன சில பத்தாயிரம் பேரை கொன்றவரா? அப்படிக் கொண்றிருந்தாலும் அது கொண்டாடக் கூடிய விசயமா என்பதெல்லாம் பகுத்தறிவு உள்ளவர்களுக்கான விசயம். பன்றிகளுக்கு சக உயிரின் துன்பங்களைக் குறித்து கவனமெல்லாம் கிடையாது. ஆகவே அவர்கள் இது குறித்து கவலைப் படுவதில்லை. எங்கு __ கிடைக்கிறோதோ அங்கு சவக் சவக் தான்.


இந்த சாய்நாத், விவசாயிகள் பற்றி, பிரச்சனை பற்றி எழுதுவது மேட்டுக் குடி மக்களுக்கு எரிச்சலை தருகிறது என்று நினைத்தாரா தெரியவில்லை. அல்லது அப்துல் கலாம் நம்மை ரோசிக்க சொல்லி ஒரு மெயில் அனுப்புகிறாரே - அதாவது 'ஏன் நாட்டை குறை கூறிக் கொண்டே இருக்கிறீர்கள்? நாடு என்ன செய்தது என்று பார்க்காதே நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்று யோசி?" என்பது போல. அதை எதுவும் சாய்நாத் படித்து தொலைந்தாரா என்று தெரியவில்லை. பாசிட்டிவ்வான விசயங்களை எழுதுவது என்று முடிவெடுத்து கட்டுரை எழுதத் துவங்கி விட்டார். அதுவும் அல்ட்ரா மாடர்ன் வாழ்க்கை வாழும் ஒரு வர்க்கத்தைப் பற்றி எழுதினால் பத்திரிக்கை அதுவும் ஆங்கிலப் பத்திரிக்கை படிக்கும் அறிவு ஜீவி(சொறிவு ஜீவி என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் இது சமூக விசயங்களை பேசுவது அதிக பட்சம் அது சார்ந்த தனது அறிப்பை சொறிந்து விட்டுக் கொள்ளத்தான்) நடுத்தர சுக போக வர்க்கத்துக்கு காலை நேர சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கும் என்று அவருக்கு தோன்றியதா தெரியவில்லை.


அப்படி ஒரு கட்டுரைதான் அமெரிக்க நாய்கள் பற்றிய அவரது கட்டுரை. துன்பத்துக்கு - கேடு கெட்ட முட்டாப் பய விவசாயி, மகிழ்ச்சிக்கு - புத்திசாலி, திறமைமிக்க கரெக்டாக டார்க்கெட் செய்து ஒரு அமெரிக்க பெண் நாயின் வயிற்றில் பிறந்த, அதுவும் அழகாக பிறந்த நாய்கள். துன்பத்தை எழுதாதே, நல்லதை எழுது என்று கான்சர் வந்த மயிலுக்கு விளக்கு பிடித்த மனிதாபிமான அப்துல் காலாம் சாய்நாத்தின் இந்த நாய்த்தனமான கட்டுரையின் முதல் சில பத்திகளைப் படித்து அவருக்கு ஜனதிபதி அவார்டு கொடுக்க சிபாரிசு செய்ய வாய்ப்புகள் உள்ளதை நான் குறிப்பிட்டே தீர வேண்டும். அப்படி சிபாரிசு செய்வதன் மூலம் சொந்த செலவில் சூனியம் வைத்து அவர் உழைக்கும் மக்கள் முன்பு அம்பலப்பட எல்லாம் வல்ல இறைவனை கன்னத்தில் அறைந்து(அவரோட கன்னத்துலதான். நமக்கு ஒரு கன்னத்த காட்டு இரண்டு கன்னத்த காட்டுங்கற வழிமுறையில் நம்பிக்கை கிடையாது) கேட்டுக் கொள்கிறேன்.


ஆயினும் கட்டுரை எழுதி முடிக்கும் முன்னே சாய்நாத்தின் கேடு கெட்ட பேனாவானது துன்பங்களை மட்டுமே எழுதி பழக்கப்பட்டுள்ளதால் ஆட்டோ மேட்டிக்காக மக்களின் துன்பத்தை எழுதத் துவங்கி விடுகிறது கடைசிப் பேராவில்.

புல்சிட்... நாய குளிப்பாட்டி நடு வீட்டில வைச்சாலும் அது தெருவுக்குத்தான ஓடுது... க்ளைமாக்ஸ்ல வந்து கெடுத்தான்டா....


சாய்நாத் ஆயிரம் அப்துல காலாம் லெட்டரப் படிச்சாலும் அவர் புத்தி திரும்பவம் எலி பிடிக்கிறவங்க பின்னத்தானே ஓடுது.


நல்லா, பாசிட்டிவ்வான, அப்துல் கலாமுக்கு பிடிச்ச - ஒரு நாடே நாய்களுக்கு பிஸ்கெட்ட் வாங்கி போடும் அழகை எழுதிக் கொண்டிருக்கும் பொழுதே ஏன் இவர் எழுத்து அந்த கேடு கெட்ட எலிக் கறி தின்னும் விவசாயிகளைப் பற்றி பேசுகீறது? சீட்... (Shitத்தான் அப்படி பேரிக்கன் பாணில நீட்டி முழக்கி சொன்னேன்).


விவசாயிகளும், நாயும்:

நாயும் விவசாயியும் ஏறக்குறைய ஒன்னு. இது சும்மா பொழுது போகாம சொல்லவில்லை. வயிறெரிந்து சொல்கிறேன். பக்கத்தில் ஒரு பெரும்பான்மை வர்க்கத்தினன், சக மனிதர்கள் - இந்த சமூகத்தின் முதுகெலும்பாய் இருந்து கூனிக் குறுகி தேய்ந்து போய் வயல்களில் தொலைந்த தனது வாழ்வை நகரங்களின் தெருக்களில் நாய்களுடன் நாயாக தங்கியிருந்து தேடிக் கொண்டிருக்கிறானே, அவனின் அன்றாடப் பிரச்சனைகள் குறித்து பேசுவதை விட கேலி கிண்டல் கேளிக்கைகள் பேசுவதில் அதிக ஆர்வமாக இருக்கும் சுரனையற்ற கூட்டத்தின் தடித்த தோல்கள் என்னை இவ்வாறு பேசச் சொல்கிறது.


தடித்த தோல்காரர்களே தயவு செய்து வாருங்கள் - நாய்களைப் பற்றியும், நாய்களை ஒத்த வாழ்க்கை வாழும் திறமையில்லாதா மூடர்களான விவசாயிகள் பற்றியும் பேசுவோம். பிறகு பிறப்பால் விவசாயிகளான, மூடர்களான விவசாயிகள் சமூக அழுத்ததின் கோபத்தை அணி திரண்டு வெளிப்படுத்தும் போதும், பிறப்பால் நாய்களான தெரு நாய்கள் வெறி பிடித்து அலையும் போதும் எப்படி கையாளுவது, சுட்டுக் கொல்வதா, அல்லது தற்கொலைக்கு தள்ளுவதா என்பது குறித்து பேசுவோம்.

நாய்கள் என்றால் ப்ளு க்ராஸ் வரும், வந்தால் பிரச்சனையில்லை சில வெள்ளிப் பணத்தை விட்டெறிந்தால் பன்றிகளைப் போல மொய்த்து பொறுக்கிச் சென்று விடுவார்கள். விவசாயிகளுக்கோ பிரச்சனையேயில்லை கேட்க நாதி கிடையாது. அடித்து துவைக்கலாம். வாருங்கள் தடித்த தோல்காரர்களே விவாதிப்போம்.... இந்த திறமையற்ற முட்டாள் கூட்டம் நமது ரசனை மிக்க வாழ்வை பொறாமை கொண்டு கெடுத்து விடாமல் இருப்பதற்க்கு என்ன செய்யலாம் என்று மெக்டவல்லின் பொன்னிற சிக்கன் வறுவலை சப்பிக் கொண்டே பேசுவோம்.


அல்லது இவர்கள் அணி சேருவதை தடுப்பதற்க்கான அனைத்து வழி வகைகளையும், ஜனநாயக முறைகளையும் மன்மோகன் சிங் பிரிட்டனில் பேசும் போது ஒத்துக் கொண்டதைப் போல நடைமுறைப்படுத்தி நமது ரசனைமிக்க களி வெறி வாழ்வின் உன்னத சுகங்களை கோக் கோலாவின் தில் மாங்கே மோர் சுவையுடன் சேர்ந்து ருசிப்போம்.


இடையில் நமது காட் பாதர்களான தரகு வர்க்க, பன்னாட்டு முதலாளிகள் நம்மை நட்டாற்றில் விட்டு விட்டு வேறு குறை கூலி தூர தேசங்களுக்கு தோணியேறிவிடாமல் இருப்பதற்க்கான பொறுப்பை எல்லாம் வல்ல இறைவனின் பாதங்களில் சமர்பித்து, சிறிது உற்சாக பானம் குடித்து இளைப்பாறுவோம்.


சுகமே சிறப்பு!

சக மனிதனோ பன்றி!

துன்பங்கள் வரும் பொழுது உ.பாவும் க.பாவும் துணை!

சமுகமோ அரிப்பை சொறிய நல்லதொரு சொறி கட்டை!

வாழ்க ஏகாதிபத்திய தனிமனித நுகர்வு கலாச்சாரம்!

வளர்க நின் யுப்பியின் பண்பாட்டு புரட்சிகள்!

************
அசுரன்


உ.பா - உற்சாக பானம்
க.பா - கடவுள் பாராயணம்.

பின்குறிப்பு:சாய்நாத் தொடர்ந்து விவசாயிகள் பற்றிய கட்டுரைகள் எழுதி ஒரு கட்டத்தில் அது குறித்து மேட்டுக் குடி அறிவு ஜீவிகளிடம் ஒரு வெறுப்புணர்வு மெதுவே உருவாகத் துடங்கியதை உணர்ந்துதானொ என்னவோ(இது எனது அனுமானம்), சந்தையின் அடிப்படை விதியான 'பழைய கள்ளாக இருந்தாலும் புதிய மொந்தையில் கொடு' என்பதின் அடிப்படையில். மக்கள் பிரச்சனை குறித்து வேறு வடிவங்களில் பேசும் நிர்ப்பந்தத்திற்க்கு தள்ளப்பட்டுள்ளாரோ என்று ஐய்யம் ஏற்ப்பட்டது. அவரது இந்த கட்டுரை முழுவதும் அமெரிக்க நாய்களின்(நிஜ நாய்) வசதி வாய்ப்புகள் குறித்து பேசுகிறார். கடைசிப் பேராவில் மக்கள் பிரச்சனையை பேசுகிறார். ஆயினும் நடுத்தர வர்க்கத்திடம் இந்த மேற் சொன்ன சலித்துக் கொள்ளும் உணர்வு(சிட்...) இருப்பதை நானும் உணர்ந்ததால் அதை கடுமையாக குத்திக் காட்ட வேண்டும் என்ற வேகத்தில் மேற்சொன்ன கட்டுரை வஞ்ச புகழ்ச்சி அணி பாணியில் எழுதியுள்ளேன்.

சாய்நாத்தின் கட்டுரை: http://www.hindu.com/2006/10/25/stories/2006102504411100.htm

Related Posts with Thumbnails