TerrorisminFocus

Showing posts with label இந்து பயங்கரவாதி. Show all posts
Showing posts with label இந்து பயங்கரவாதி. Show all posts

Wednesday, August 03, 2011

அம்மானா சும்மாயில்லாடா....

பாசிச வெறியும், மனிதப் பண்புகள் கிஞ்சித்துமற்ற ஆணவமும் கலந்த பேய்தான் ஜெயா என்பதை அனைவரும் அறிவோம். இந்தப் பாசிச பேயின் வாயாலேயே பாசிசச் சட்டம் என்று ஒரு சட்டம் வசவு வாங்கியுள்ளது. ஜெயலலிதா வாயால் பேர் பெற்ற அச்சட்டம்தான் மத வெறி வன்முறை தடுப்புச் சட்டம், 2011.



ஒரு மாநிலத்தில் சிறுபான்மையினரான முஸ்லீம், சீக்கியர், கிருத்துவர்கள் மீதும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் மீதும், மொழிச் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் வன்முறைகளின் போது மத்திய அரசு நேரடியாக அதிகாரத்தை தனது கையில் எடுத்துக் கொள்ள இச்சட்டம் வகை செய்கிறது. இதன் மூலம் சிறுபான்மை சமூகத்தினர் காக்கப்படுவர் என்பதை இச்சட்டத்தின் நோக்கமாக மத்தியில் ஆளும் காங்கிரசு அரசு சொல்லுகிறது.



இச்சட்டம் உண்மையிலேயே ஆர்எஸ்எஸ் இந்து பயங்கரவாதிகளின் தேசத் துரோக சதிகளையும், கலவரங்களையும் தடுத்துவிடும் என்பது பகல் கனவே. ஆயினும், பேரளவில் கூட இந்து பயங்கரவாதிகளுக்கு எதிரானதொரு செயல்பாடு நடப்பதை ஜெயலலிதா கொதித்தெழுந்து எதிர்ப்பதுதான் இங்கு கவனிக்கத்தக்கது.

இதற்கு முன்பு மாநில அரசின் அதிகாரத்தை தூக்கியெறியும் சட்டங்கள் பல மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ளன. வாட் வரி விதிப்பு முதல் வட கிழக்கு-காஷ்மீர் மாநிலங்களில் உள்ள ஆயுதப் படை சிறப்புச் சட்டம் வரை பல இவ்வாறானவையே. இவற்றையெல்லாம் பாசிசப் பேய் ஜெயா உளப்பூர்வமாகவே ஆதரித்தவர்தான். மதவெறி வன்முறை தடுப்புச் சட்டத்தை பாசிசம் எனக் குறிப்பிடும் இந்த பூதம்தான் 'பொடா', 'உபா', பசு வதை தடுப்புச் சட்டம், மதமாற்றத் தடைச் சட்டம், எஸ்மா, டெஸ்மா போன்ற பாசிச சட்டங்களை எல்லாருக்கும் முந்திக் கொண்டு ஆதரித்துள்ளதுடன், தமிழ்நாட்டில் கொண்டு வந்து அமுல்படுத்தியும் உள்ளார்.



சோழியான் குடுமி சும்மா ஆடுமா என்ன? தான் ஒரு பச்சைப் பாப்பாத்தி என்று சட்டசபையிலேயே ஓலமிட்டவர்தான் இந்த பாசிசப் பாப்பாத்தி. இவர் இன்றைக்கு முதலமைச்சர் ஆனதில் ஊர்த் திருடன் கலைஞரின் அராஜக ஆட்சிக்கெதிரான மக்களின் வெறுப்பு ஒரு பக்கமெனில், இன்னொரு பக்கம் ஆர்எஸ்எஸ் பார்ப்பன தேசத் துரோக கும்பல் திட்டமிட்டு எல்லா வலது சாரி(வலது-இடது கம்யூனிஸ்டு வலதுசாரிகளையும் சேர்த்து) சக்திகளையும் பாசிச ஜெயாவின் பின்னே திரட்டியது முக்கியக் காரணமாக உள்ளது.

போன ஜெயலலிதா ஆட்சிகளைப் போல ஜெயாவின் தனிப்பட்ட அகங்காரமும், சசிகலா குடும்பத்தின் அவசரமும் மட்டுமே கூத்தாடும் ஆட்சியல்ல இது. கல்லு குடித்த சொறிக் குரங்கின் ஆட்டத்தைப் போல பாசிச ஜெயாவின் ஆணவத் திமிரும், ஆர்எஸ்எஸ் பயங்கரவாதக் கூட்டத்தின் திட்டமிட்ட சதியாலோசனைகளும் சேர்ந்து களமிறங்கும் புதுவகைப்பட்ட ஆட்சி இது.



எனவேதான் மிகச் சரியாக மதவெறி வன்முறை தடுப்புச் சட்டத்தின் இலக்கு எதுவாக இருக்க முடியும் என்பதை புரிந்து முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது இந்த முகமூடி ஆட்சி. சமச்சீர் கல்வி வெறுப்பு, ஈழத் தமிழ் ஆதரவு வேசம், இந்து மதவெறி ஆதரவு, போலீஸு ரவுடித்தனம் என ஆரம்பித்த ஒரிரு மாதங்களிலேயே தான் யார் என்பதையும், தனக்குப் பின்னே இருக்கும் காவி நோய் பீடித்த மூளை எந்த வகைப்பட்டது என்பதையும் காட்டியுள்ளார் அம்மையார். இன்னும் ஐந்து வருடங்கள் உள்ளன. பாசிச முகமுடிக்கு பின்னே இருந்து ஆடும் ஆர்எஸஎஸ் இந்து மதவெறி கும்பலின் சதிகள் எல்லாம் ஒவ்வொன்றாய் அரங்கேறும். ஈழத்தாயின் கரங்களை வலுப்படுத்தியவர்கள் எல்லாம் வறுத்தெடுக்கப்படுவார்கள். இருண்ட காலம் பாகம் 3ன் இலக்கு பரிபூரண பார்ப்பன பாசிச தமிழகம் என்பது அப்போதாவது மரமண்டைகளுக்கு உரைக்குமா தெரியவில்லை.


அசுரன்

Thursday, October 07, 2010

தீபாவளி, நவராத்தியின் போது பயங்கரவாதிகளின் தாக்குதல் அபாயம் உள்ளது எச்சரிக்கை!!

வெடிகுண்டு 1:

கடந்த தீபாவளியைப் போலவே இந்த தீபாவளிக்கும் பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்பு தாக்குதல் அபாயம் உள்ளதென்று உளவுத் துறை எச்சரிக்கை செய்துள்ளது. அதுவும் குறிப்பாக கோவாவில் அபாயம் அதிகமாம்.

போன வருடம் உளவுத் துறை எச்சரிக்கை செய்ததைப் போலவே காவி பயங்கரவாதிகள் கோவாவில் இந்துக்கள் மீது குண்டு வைக்கும் முயற்சியிலிருந்த பொழுது, அந்த சதியில் தாமே பலியாகி வெடித்துச் சிதறினர்.

ஆகவே ஜனங்களே, அதே போல இந்த தீபாவளிக்கும் இந்துக்கள் மீது இந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாலும். போன தடவை செய்து மாட்டிக் கொண்டது போலல்லாமல், இந்த முறை திறம்படச் செய்து முஸ்லீம்கள் மீது பலி போட்டு, அவ்வகையான தாக்குதலைக் காரணம் காட்டி மதவெறி தூண்டி மக்களை துண்டாடி, ரத்தம் குடிக்கும் அபாயம் இருப்பதாலும் அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், இந்து காவி பயங்கரவாதிகளின் பிரித்து மோதவிடும் அரசியலுக்கான ரத்த பலி சூத்திர/தாழ்த்தப்பட்ட இந்துக்களின் உடலிலிருந்தே எடுக்கப்பட வேண்டியுள்ளதை அவர்களின் முந்தைய நடவடிக்கைகள் பல நிரூபித்துள்ளன என்பதால், இந்த எச்சரிக்கைகளை இந்துக்கள் எனச் சொல்லப்படுபவர்கள் தகுந்த கவனத்துடன் பரிசீலிக்க வேண்டுகிறேன். இந்து என்றால் யார் என்று சந்தேகமுள்ளவர்களுக்கு கீழ்கண்ட சட்ட விளக்கம்:

"யார் முஸ்லீம், கிருத்துவ, சீக்கிய மதங்களைச் சேர்ந்தவரில்லையோ அவர் இந்து".**


இந்த பதிவை படித்து எழுச்சியுற்ற இந்துக்களுக்கான பாடல்(கிளிக்கி பாடலைக் கேட்க்கவும்):

எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை....
அந்த ஆர் எஸ் எஸுக்காரன் வற்றான் எச்சரிக்கை...

எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை....
கையில் தீவட்டிய எடுத்து வற்றான் எச்சரிக்கை...



**இந்து குறித்த இந்த சட்ட விளக்கம் அப்படியே அயோத்தி தீர்ப்பு நகலைப் போல டாமால் டூமீலாக இருப்பதற்கு கொம்பேனி பொறுப்பல்ல.

அசுரன்

Monday, September 06, 2010

அக்சார்தம் கோயிலை தாக்கியவர்களுக்கு மரணதண்டனை, பாபர் மசூதியை தாக்கிய காவி பயங்கரவாதிகளுக்கு?

இந்தியாவின் அதி பயங்கர உள்நாட்டு அச்சுறுத்தல் - தேசத் துரோக காவி பயங்கரவாதி அத்வானி

ல்லாயிரம் பேரை கொன்றுவிட்டு, கோயிலை இடித்துவிட்டு, கலவரங்கள் செய்துவிட்டு இந்தியாவில் பாதுகாப்பாக, பெருந்தலைவர்களாக வலம் வர முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டியவன்தான் அத்வானி என்ற காவி பயங்கரவாதி. இவனது அடியொற்றிய அதி பயங்கரவாதிதான் மோடி என்பவன்.













இன்று அக்சார்தம் கோயிலைத் தாக்கியவர்களுக்கு மரண தண்டனை இடை-நிறுத்தி வைக்கப்பட்டதாக செய்தி வெளிவந்துள்ளது. குஜராத் உயர் நீதிமன்றத்தில் மரண்தண்டனை வழங்கப்பட்ட பயங்கரவாதிகள்தான் இவர்கள். ஏனேனில், இவர்கள் சிறுபான்மை முஸ்லீம்கள் என்பதால், 'சிறுபான்மையை குளிர்விக்கும்' நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், இதற்கும் முன்பே பாபர் மசூதியை இடித்ததுடன், ரத யாத்திரைகள், கலவரங்கள் நடத்தி பல ஆயிரம் மக்களை படுகொலை செய்த ஆர் எஸ் எஸ் பயங்கரவாதி அத்வானியோ ஒரு தண்டனைக்கும் இதுவரை ஆளாகவில்லை. அவர்களது காவி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பரிசாக இந்தியாவின் 'முக்கிய'த் தலைவர்கள் என்ற கௌரவம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.






இது என்னவகையான சிறுபான்மையை குளிர்விக்கும் அரசியல் என்பதை ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள்தான் விளக்க வேண்டும். அத்வானி, மோடி போன்ற தேசத் துரோக காவி பயங்கரவாதிகள் மீது சிறு துரும்பைக் கூட தூக்கிப் போட வக்கில்லாத 'காவி மனிதாபிமானி'கள்தான் தற்போது மரண தண்டனை ஒப்புக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து சிறுபான்மை குளிர்விப்பு அரசியல் என்று ஓநாயைப் போல ஓலமிடுகிறார்கள். இவர்கள் அத்வானி, மோடி போன்றோருக்கு மரண தண்டனை இன்று வரை நிறைவேற்றப்படாததை எதிர்த்தும் ஓலமிட்டிருந்தால் நியாயவான்களாக கருத இடமுள்ளது.

இப்படி எரிப்பது எப்போது?

டைம்ஸ் நௌ போன்ற காவி பயங்கரவாத ஊடகங்களோ அல்லது என் டி டி வி போன்ற அரசு பயங்கரவாத ஊடகங்களோ அத்வானி போன்ற காவி பயங்கரவாதிகளுக்கு தமது ஆதரவையே எப்போதும் தருவார்கள். 'காவி பயங்கரவாதம்' என்ற வார்த்தை சரியா தவறா என்று தேச முக்கியத்துவம் வாய்ந்தவற்றை விவாதிப்பவர்கள்தான் இவர்கள். இத்தகைய காவி பயங்கரவாதிகளை பாதுகாக்கும் அவர்களின் பினாமி அரசா தண்டனை தரப் போகிறது?....

அசுரன்

படியுங்கள், பயம் கொள்ளுங்கள்

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...1 -2

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...3_4

முற்றும் கழண்ட டவுசர்!! அடடே ஆர் எஸ் எஸ் அம்மணக்கட்டை!!!

Sunday, July 18, 2010

முற்றும் கழண்ட டவுசர்!! அடடே ஆர் எஸ் எஸ் அம்மணக்கட்டை!!!

(இந்து பயங்கரவாத அமைப்பின் கொடி)





(அயோத்தியில் பஜ்ரங்தள் சிறார்களுக்கு ஆயுதப் பயிற்சி)

சி
பிஐ வசம் இருக்கும் சில முக்கிய விடியோக்களை போன வாரம் ஹெட்லைன்ஸ் டுடே என்ற செய்தித் தொலைக்காட்சி சேவை நிறுவனம் ஒலிஒளி பரப்பியது (6 விடியோக்கள்) . அவை அனைத்தும் பட்டாசு ரகங்கள். ஆர் எஸ் எஸ்ன் முக்கியத் தலைவர்கள் பயங்கரவாதிகள் என்ற உண்மை வெளிவந்தது. இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியை கொல்வதற்கான திட்டங்களையும் வகுத்துள்ளனர் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள்.

இந்த பயங்கரவாத கும்பலை இயக்கியவர்களில் ஒருவன் இந்திரேஸ் குமார். இவர் ஆர் எஸ் எஸ்ல் பல முக்கியப் பொறுப்புகள் வகிப்பவர். இவன் தான் காஷ்மீர் அமர்நாத் நிலப் பிரச்சினையை தூபம் போட்டு வளர்த்தவர்களில் ஒருவன். இவன் தான் நேபாள் மாவோயிஸ்டுகளுக்கு எதிராகவும் வேலை செய்துள்ளான். குறிப்பாக ஆர் எஸ் எஸ்ன் முஸ்லீம் பிரிவின் தலைவரே இவர்தான். என்னவொரு முரன்நகை? ஆர் எஸ் எஸ் கும்பல் முஸ்லீம் வேசம் போட்டு குண்டு வைக்கும் போது அதன் தலைவர்களோ முஸ்லீம்களுக்கு அமைப்பு ஏற்படுத்தி அதற்கு தலைமை வகிக்கிறார்கள்.

கடந்த சில வருடங்களில் நடந்த பல குண்டு வெடிப்புகளில் ஆர். எஸ். எஸ்ன் பாத்திரம் மீண்டும் மீண்டும் ஊர்ஜிதமாகி வந்துள்ளது. குறிப்பாக, மலேகான் குண்டு வெடிப்பு கைதுகள் விரிவாக நடந்து அதில் ஆர் எஸ் எஸ்ன் நேரடி பாத்திரம் மறுக்க இயலாத அளவு அம்பலமானது. ஆயினும் ஆர் எஸ் எஸை தடை செய்யவோ அதன் அலுவலகங்களை சோதனையிட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்யவோ அரசு தயாராக இல்லை (இந்த இடத்தில் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் மீது நடத்தப்பட்டுள்ள அரசு தாக்குதல்களை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளவும்).
(மலேகான் குண்டு வெடிப்பில் இந்து பயங்கரவாதிகள்)


(இந்து பயங்கரவாதி இந்திரேஸ் குமார் - ஆர் எஸ் எஸ் தலைவன்)


ஆர் எஸ் எஸ் இந்து பயங்கரவாதிகளும் மிகத் தைரியமாக பேசி வருவதும், ஏதோ முஸ்லீம் குண்டு வைச்சான் அதனால் நான் திருப்பி குண்டு வைக்கிறேன் என்பது போலவும் நியாயப்படுத்தி வந்துள்ளது. ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் முஸ்லீம் வேசம் போட்டுக் கொண்டு இந்துக்கள் கூடும் இடங்களில் குண்டு வைத்து மாட்டிக் கொண்டுள்ளனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. மேலும் இதுவரை இவர்கள் மாட்டிக் கொண்டுள்ள குண்டு வெடிப்புகள் எதிலுமே அவை முஸ்லீம்கள் மீது பலி போடும் வகையிலேயே செய்துள்ளனர். ஆக இவர்களின் நோக்கம் மக்களை மத அடிப்படையில் மோத விட்டு ரத்தம் குடிக்க வேண்டும் என்பதே ஆகும். இஸ்லாம் பயங்கரவாதிகள் ஆர் எஸ் எஸ்ன் எதிர்பார்ப்புக்கு பொறுத்தமான அளவு அதிகமான குண்டு வெடிப்புகளை நிகழ்த்தவில்லை என்பதே இவர்களின் வருத்தம். வருத்தத்தை தீர்க்கும் வகையில் முஸ்லீம் வேசம் கட்டி ஆர் எஸ் எஸ் கும்பலே குண்டுகள் வைக்கத் தொடங்கிவிட்டனர்.

(இந்து பயங்கரவாதிகள் குண்டு வைத்துள்ள இடங்கள்)

ஆதாரம்: outlook india

மாட்டிக் கொண்டவர்களின் இன்னொரு பயங்கரவாத தலைவன், பாஜகவின் முன்னாள் இருமுறை எம்பி பி. எல். சர்மா. இவனும் மாலேகான் குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளிகள் தாயனந்த் பாண்டே மற்றும் லெப்டினண்டு ஸ்ரீரிகாந்த் புரோகித் ஆகியோர் இந்தியா முழுவதும் குண்டு வைத்து லட்சக்கணக்கில் மக்களைக் கொல்வது குறித்து பேசுகின்ற விடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. ஆர் எஸ் எஸ்ன் முகமுடி அமைப்பான அபினவ் பாரத் என்ற பயங்கரவாத குழுவே முக்கிய குண்டு வெடிப்பு குற்றவாளி ஆகும். இந்த அமைப்புடன் பல விவாதங்களில் பங்கெடுத்துள்ளான் பாஜக முன்னாள் எம்பி சர்மா.

ஜனவரி 2008ல் பரிதாபாத்தில் நடந்த இவர்களின் கூட்டத்தில் (சர்மா மற்றும் பிற பயங்கரவாதிகள்) இந்திய குடியரசுத் துணைத்தலவரை கொல்லும் திட்டம் தோல்வியடைந்தது குறித்து விவாதித்துள்ள விடியோவும் அம்பலமாகியுள்ளது.

(பயங்கரவாதிகளின் அணிவகுப்பு)
ஆர் எஸ் எஸ் தலைவன் பயங்கரவாத கும்பலின் வழிகாட்டி இந்திரேஸ் குமார் பேட்டி எடுத்தது ஹெட்லைன்ஸ் டுடே. ஆர் எஸ் எஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்ற உண்மைகளை சொல்லி அவனிடம் பேசிய பொழுது மறுக்க வழியின்றி ஒடிவிட்டான் பயந்தாக்கொள்ளிப் பயல்.

உண்மைகளை வெளிப்படுத்திய குற்றத்திற்காக ஹெட்லைன்ஸ் டுடே நிறுவனத்தை வெள்ளிக்கிழமை 2000 ஆர் எஸ் எஸ் ரவுடிகளை அனுப்பி தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதல் குறித்தும் ஆர் எஸ் எஸ் அம்பலமானது குறித்தும் பிற இந்திய ஊடகங்கள் அதிகபட்ச மௌனம் காத்தன (தெஹல்காவிற்கு காட்டியது போலவே).

இவர்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை போய்விட்டதாம் எனவே இந்து ராஷ்டிரம் அமைக்கப் போகிறார்களாம். இதே போல கூறிய 'குற்றத்திற்'காகத்தான் தியாகத் தோழர் ஆசாத்தின் படுகொலை நியாயப்படுத்தப்பட்டது. இந்திய அரசு ஆர் எஸ் எஸ் தலைவர்களை நாயைச் சுடுவது போல சுட்டுக் கொல்லுமா? நாய்க்கும் தன் குட்டி பொன் குட்டி, எனவே அவர்கள் செய்ய மாட்டார்கள்......

அசுரன்

தரவுகள் ஆதாரம்: ஹெட்லைன்ஸ் டுடே

தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!

வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!


ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!



சிபிஐயிடம் மாட்டிக் கொண்டனர் இந்து பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்ன் முக்கியத் தலைவர்கள்!



Hindu Rashtra: Saffron terror's hall of shame



The Headlines Today sting




Vedio-Saffron goons attack HT Delhi office


Saffron goons attack Headlines Today office


Hindu terror is a reality, yet India refuses to utter its name

Saturday, July 10, 2010

சிபிஐயிடம் மாட்டிக் கொண்டனர் இந்து பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்ன் முக்கியத் தலைவர்கள்!




ஜ்மீர் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள இந்து பயங்கரவாதி தேவேந்திர குப்தா சிபிஐ அதிகாரிகளிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளான். அதன்படி, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இரு ஆர் எஸ் எஸ் முன்னணித் தலைவர்களான அசோக் வார்செனே மற்றும் அசோக் பெரே ஆகியோர் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து லக்னோ சித்தாப்பூர் பகுதிகளில் தங்க வசதி செய்து கொடுத்துள்ளனர். இது குறித்து சின் என் என் ஐபிஎன் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு இங்கே.




(பயங்கரவாதிகளின் அணிவகுப்பு)

ஏற்கனவே, தேவேந்தர் குப்தா தீவிரமான ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்று ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் சாந்தி தாரிவால் தெரிவித்திருந்தார். ஏதோ தனது அணிகள்தான் உணர்ச்சிவசப்பட்டு குண்டு வைத்துவிட்டார்கள் விடுங்கள் என்பது போல கதை விட்டு வந்த ஆர் எஸ் எஸ் பயங்கரவாத கும்பல் இப்போது தனது முன்னணி தலைவர்களே மாட்டிக் கொண்டுள்ளது பற்றி வாயை மூடி மௌனம் காக்கிறார்கள்.

இதே அஜ்மீர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தவுடன் அரசு சொன்னது என்ன தெரியுமா? முஸ்லீம் பயங்கரவாதிகளே காரணம் என்று சொன்னது. Ajmer blast trail leads to Hurriyat


(மலேகான் குண்டு வெடிப்பில் இந்து பயங்கரவாதிகள்)

ஏற்கனவே, 2009ல் தீபாவளிக்கு முந்தைய நாள் கோவாவில் இந்துக்கள் கூடும் இடத்தில் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் இருவர் குண்டு வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது அது தவறுதலாக வெடித்து கொல்லப்பட்ட சம்பவத்தை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளவும். கடந்த சில வருடங்கள் முஸ்லீம்கள் மீது பலி போடும் வகையில் வேசமிட்டுக் கொண்டு ஆர் எஸ் எஸ் இந்து பயங்கரவாதிகள் நடத்திய பல்வேறு குண்டு வெடிப்புகள் தொடர்ந்து வெளிப்பட்டு வருகின்றன. அவற்றில் இதுவும் ஒன்று. ஆனாலும், ஆர் எஸ் எஸ் ஒரு கலாச்சார அமைப்புதான் என்று இன்னமும் சில நல்லவர்கள் சொல்லி வருகிறார்கள். இந்துவோ அல்லது வேறு எதுவோ மத அடிப்படைவாத பயங்கராவாதிகள் யாராயிருந்தாலும் நிராகரிக்கப்பட வேண்டும், சமூகப் புறக்கணிப்பு செய்யப்பட வேண்டும்.

அசுரன்

தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!

வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!


ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!

Related Posts with Thumbnails