TerrorisminFocus

Monday, January 08, 2007

பெரியார் சிலை - மானமிகு கலைஞரும், மான்புமிகு ஆசிரியரும்!!

பெரியார் சிலை உடைப்பு:

மண்டைச் சுரப்பை உலகு தொழும்!
மானமிழ்ந்தால் மதவெறியில் தமிழகமும் விழும்!

டிசம்பர் 6, பாபர் மசுதி இடிக்கப்பட்ட கருப்பு நாளன்று சீறீரங்கம் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்பதுதான் பார்ப்பன இந்து மதவெறியர்களின் திட்டம். "டிசம்பர் 6 இந்தியாவின் அடிமைச் சின்னம் அகற்றப்பட்ட நாள்! இந்துக்களின் வெற்றித்திருநாள்!" என்று அறிவிக்கும் சுவரொட்டிகள் முன்னெப்போதும் இல்லாத அளவு திருச்சியைச் சுற்றிலும் ஒட்டப்பட்டிருந்தன. இது ஒரு வகையில் சிலை இடிப்புக்கு எதிரிகள் வழங்கிய முன்னறிவிப்பு.

1973-இலேயே சிறீரங்கம் நகர மன்றம், பெரியார் சிலைக்காக 144 சதுர அடி நிலத்தை ஒதுக்கிக் கொடுத்து, அந்த இடம் பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் பெயரில் பட்டா செய்யப்பட்டுள்ள போதிலும், 33 ஆண்டுகளாக அங்கே சிலை நிறுவப்படவில்லை. இந்த 33 ஆண்டுகளில் பெரியாரின் பெயரில் டஜன் கணக்கிலான நிறுவனங்கள் பல நூறு ஏக்கர் பரப்பில் தமிழகமெங்கும் எழும்பியிருக்கின்றன. ஆனால், இந்த 144 சதுர அடியில் பெரியார் சிலை மட்டும் எழும்பவில்லை. இந்தத் தாமதத்திற்கு பகுத்தறிவு சார்ந்த விளக்கம் எதுவும் நமக்குப் புலப்படவில்லை.

ஆனால், சிலை எழும்பவிருக்கிறது என்று தெரிந்ததும் பார்ப்பன கும்பல் ஒரு கணமும் தாமதிக்கவில்லை. நவம்பர் 28-ஆம் தேதியன்று, திருவரங்கத்தின் புனிதம் காப்போர் கூட்டமைப்பு என்ற பெயரில் பார்ப்பன இந்து மதவெறி அமைப்புகள் ஒன்றீணைந்தன, டிசம்பர் 5-ஆம் தேதியன்று கோவையில் பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்த இந்து ஆசார்ய சபாவின் தலைவர் தயானந்த சரஸ்வதி, "பெரியார் சிலைக்கு ஸ்ரீரங்கம் பாதுகாப்பான இடம் அல்ல" என்று பகிரங்கமாக மிரட்டினார். டிசம்பர் 6-ஆம் தேதி பின்னரவில் கோவையிலிருந்து அனுப்பப்பட்ட இந்துமதவெறிக் காலிகள் பெரியார் சிலை உடைத்தனர்.

இதற்குப்பின அங்கே நடைபெற்ற சம்பவங்கள், பெரியாருக்கு எதிரிகள் செய்த அவமதிப்பைக் காட்டிலும் கொடிய அவமதிப்பாக இருந்தன. சிலை உடைப்பு பற்றீய செய்தி கேள்விப்பட்டு, திருச்சி நகரத்திலிருந்து மக்கள் கலை இலக்கிய கழகத் தோழர்களும் புரட்சிகர மாணவர் இளைஞர் அணித் தோழர்களும் சிறீரங்கத்திற்கு வந்து சேர்ந்த போது சிறீரங்கம் இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தது. விபத்து நடந்த இடத்தைப் போல ஒரு கூட்டம் பெரியார் சிலையைச் சுற்றி நின்று கொண்டிருக்க, கருப்புச் சட்டைத் தொண்டர்கள் நடந்ததை விளக்கிக் கொண்டிருந்தார்கள். மகிழ்ச்சியை மறைத்துக் கொண்டு முகத்தில் அதிர்ச்சியைத் தேக்கியவாறு நின்று கொண்டிருந்த பார்ப்பனர்களும் கேதம் கேட்க வந்த இந்தக் கூட்டத்தில் அடக்கம்.

இந்த மானக்கேட்டைக் காணப் பொறுக்காத ம.க.இ.க தோழர்கள், தி.க. தொண்டர்களைக் கடிந்து கொண்ட பிறகுதான் சாலை மறீயல் தொடங்கியது. கடைகள் அடைக்கப்பட்டன. சாலை மறீயலைத் திமிர்த்தனமாக மீற முயன்ற சில தனியார் பேருந்துகள் நொறுக்கப்பட்டன. "ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி அமைப்புகளைத் தடைசெய்! சிலை உடைப்பைத் தூண்டிய அதன் தலைவர்களைக் கைது செய்!" என்று முழங்கியபடி ம.க.இ.க. மாவட்டச் செயலர் தோழர் இராமதாசு தலைமையில் கோயில் ராஜகோபுரத்திலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. தி.க. தி.மு.க. அணிகளும் பொதுமக்களும் ஊர்வலத்தில் இணைந்து கொண்டனர்.

போராட்டம் பரவத் தொடங்குகிறது என்று அறிந்தவுடனே தி.மு.க., தி.க. கரை வேட்டிகள் களத்தில் இறங்கினார்கள். "நடப்பது நம்ம ஆட்சி. சிலை உடைத்தவர்கள் கைது செய்யப்பட்டு விட்டனர். இந்த சிலை இல்லாவிட்டால் வேறு சிலை. எல்லாவற்றையும் கலைஞர் பார்த்துக் கொள்வார்" என்று சொல்லி, கருஞ்சட்டைத் தொண்டர்களை கலைத்துவிட்டார்கள். மானக்கேடான சகஜநிலைக்கு மீண்டும் திரும்பியது.

எனினும், பெரியார் சிலையை திருட்டுத்தனமாக உடைத்த பார்ப்பன மதவெறியர்களுக்கான பதிலடி அன்று மாலையே பகிரங்கமாகக் கொடுக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்.-இன் தேசிய நாயகனான இராமனின் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து, செருப்பால அடித்தபடியே, சிறீரங்கம் பேருந்து நிலையத்திலிருந்து பெரியார் சிலையை நோக்கி ஊர்வலமாக முழக்கமிட்டு வந்தார்கள் ம.க.இ.க., பு.மா.இ.மு. தோழர்கள். பெரியார் பற்றாளர்கள் பலர் தாமகவே ஊர்வலத்தில் இணைந்து கொண்டனர். இருபுறமும் நூற்றுக்கணக்கான மக்கள் நின்று இந்தக் காட்சியைத் தரிசித்தனர். பரவசமடைந்த ஒரு முதிய தி.க. தொண்டர் தம் கால் செருப்பைக் கழற்றி அடித்து இராமபிரானுக்கு அஞ்சலி செலுத்தினார்.

வருணாசிரமத்தில் பாதுகாவலனான இராமனின் படத்தை, சேதமடைந்த பெரியாரின் சிலையின் காலடியிலேயே தீ வைத்துக் கொளுத்தினார்கள் தோழர்கள். படத்தை பிடுங்க முயன்ற போலீசை நெருங்கவிடாமல் தடுத்தார்கள் தி.க. இளைஞர்கள். தோழர்களைக் கைது செய்தவுடனே விடுதலை செய்யக் கோரி விண்ணதிர முழங்கினர்கள். பிரச்சினை பெரிதாகிவிடும் என்று உணர்ந்த கொண்ட போலீசு தோழர்களை அன்றிரவே விடுவித்தது.

"உங்களுக்கெல்லாம் ரொம்ப நன்றிம்மா, நீங்களாவது மானத்தக் காப்பத்தீனீங்க" என்று பெண் தோழர்களிடம் நா தழுதழுக்க நன்றீ கூறினார், ஒரு முதிய தி.க. தொண்டர். திராவிடர் கழகத்தின் மாநில நிர்வாகியோ, "தயவு செய்து இதற்கு மேலும் எதையாவது செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கி விடாதீர்கள்" என்று தோழர்களைக் கைகூப்பிக் கேட்டுக் கொண்டார். சொரணையுள்ளவர்களால் இந்தக் கோரிக்கைக்கு செவி சாய்க்க முடியாதென்பதால் போராட்டம் தொடர்ந்தது. மாநிலமெங்கும் கண்டனச் சுவரொட்டிகள் அன்றிரவே ஒட்டப்பட்டன.

மறுநாள் ஓசூரில் பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்தின் எதிரில் இராமனின் படத்தை தீக்கிரையாக்கினார்கள் பு.ஜ.தொ.மு. தோழர்கள். நூற்றுக்கணக்கான மக்கள் பார்த்து நிற்க, நகரின் மையப்பகுதியில் நடைபெற்றது இந்த போராட்டம். போராட்டம் முடிந்து அரைமணி நேரத்துக்குப் பின், பா.ஜ.கவின் மாநிலப் பொருளாளார் நரேந்திரன் தலைமையிலான 20 பேர் கொண்ட கும்பல், அந்த வழியே தன் மனைவி குழந்தையுடன் சென்று கொண்டிருந்த பு.ஜ.தொ.மு. வின் செயலர் தோழர் பரசுராமனை சுற்றி வளைத்துக் கொண்டது. "இவனைக் கொலைச் செஞ்சாத்தாண்டா நாம் நிம்மதியா இருக்க முடியும்" என்று கூச்சலிட்டுக் கொண்டே அவரை உருட்டுக் கட்டைகளால் தாக்கியது. ஆர்.எஸ்.எஸ். பேடிகள் நடத்திய இந்தக் கோழைத்தனமான தாக்குதலைத்தான் "இந்துக்களின் கோபம்" என்று பொய்யாகச் சித்தரித்தன சில நாளேடுகள்.



மான்புமிகு மானமிகுக்கள் என்ன செய்தார்கள்?

மண்டை பிளந்து மயங்கி விழுந்த பரசுராமனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார் அவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. ஒரு மணி நேரத்திற்குள் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் கூறவே, ஆம்புலன்சில் தருமபுரிக்கு அவரை கொண்டு செல்ல முயன்றபோது வழிமறித்து அனைவரையும் கைது செய்தது போலீசு. இரவு முழுவதும் தோழர் பரசுராமனையும் அவரது மனைவியையும் ஆம்புலன்சிலேயே பூட்டி வைத்தது. பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தார், சதி செய்தார் என்று பல பிரிவுகளில் பொய் வழக்கு பதிவு செய்து, விடிந்ததும் சேலம் சிறைக்குக் கொண்டு சென்றனர். கடும் போராட்டத்துக்குப் பின்னர்தான் சேலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அங்கேயும் கால்களில் விலங்கு மாட்டி வைத்தனர். கொலைவெறித் தாக்குதல் நடத்திய பா.ஜ.கவினர் கைது செய்யப்படவில்லை என்பதுடன், பரசுராமனைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறை வைக்கப் போவதாக அறிவித்திருக்கின்றார், மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் தேன்மொழி.

இதேபோல, சிவகங்கையில் சிலை உடைப்புக்கு எதிராகக் கண்டனச் சுவரொட்டி ஒட்டியதற்க்காகத் தோழர் எழில் மாறன், சுவரொட்டியை அச்சிட்ட அச்சக உரிமையாளர், வழக்குரைஞர் ஆகியோர் மீது வகுப்பு மோதலைத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திருச்சியில் கணடனச் சுவரொட்டி ஒட்டிய இளம் தோழர் கார்க்கி ஒரு வாரம் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.

பெரம்பலூர், சங்கராபுரம், ஈரோடு போன்ற பல இடங்களில் பூணூல் அறுப்பு, சாமி சிலை உடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்க்காகப் பெரியார் தி.க.வைச் சேர்ந்த தொண்டர்கள் பலர் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். சென்னை அயோத்தியா மண்டபத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக பெரியார் தி.க.வினர் மீது பொய் வழக்கு போடப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் பெரியார் சிலை உடைப்பை எதிர்த்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக சிறையில் இருப்பவர்கள் ம.க.இ.க.வைச் சேர்ந்த தோழர்களும் பெரியார் தி.க. தோழர்களும் மட்டுமே.

16.12.06 அன்று சிறீரங்கத்தில் வெண்கலத்தினாலான பெரியார் சிலை திறக்கப்பட்டு விட்டது. அந்த நிகழ்ச்சியில் பேசிய தி.க. பொதுச்செயலாளர் வீரமணி, எதிர்த்துப் போராடிக் கைது செய்யப்பட்ட தோழர்களை விடுவிக்க வேண்டுமென வாய்தவறிக் கூடப் பேசவில்லை. கலைஞர் ஆட்சியை காப்பாற்றும் விதத்தில் போராட்டம் ஏதும் செய்யாமல் அமைதி காத்த தொண்டர்களுக்கு மட்டும் நன்றி கூறினார்.

பெரியார் சிலை உடைப்பின் நோக்கம் என்ன? கலைஞர் அரசுக்கு களங்கம் கற்பிப்பதும், நெருக்கடி கொடுப்பதும்தான் இந்த சிலை உடைப்பின் நோக்கமாம். வீரமணி, திருமா போன்றோரின் கண்டுபிடிப்பு இது. சிலையை உடைத்தால் கட்டுப்பாடில்லாத பெரியார் தொண்டர்கள் பூணூல் அறுப்பு, இராமன் எரிப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களாம். இதைக் காட்டி நம்மாளின் ஆட்சியைக் கலைத்து விடலாம் என்று திட்டம் போட்டுத்தான் அவாள் சிலையை உடைத்தார்களாம்.

கேட்பதற்கே கேவலமாக இருக்கும் இந்த விளக்கத்தைச் சொல்வதற்கு தி.க., தி.மு.க.வினர் கூச்சப்படவில்லை. 2000 மூஸ்லீம்களின் ஈரக்குலையறுத்த மோடியின் ஆட்சியே கலையவில்லையே, கேவலம் பத்தாம் நம்பர் நூலை அறுத்தால் ஆட்சி கவிழ்ந்துவிடுமா என்று கேள்வி அவர்களுடைய பகுத்தறிவுக்கு எட்டவில்லை போலும்!

இவர்களுடைய விளக்கத்தின்படி நம்மாளின் ஆட்சியைக் காப்பாற்ற வேண்டுமானால், அவாளின் பூணூலையும், இராமனையும் காப்பாற்றியாக வேண்டும். அதற்கு கருப்புச் சட்டைகளைத்தான் காவலுக்கு நிறுத்த வேண்டும். கிட்டத்தட்ட அதுதான் நடந்தது. பூணூல் அறுப்பும் இராமன் எரிப்பும் நடக்கத் தொடங்கிய பின்னர்தான் தேசியப் பாதுகாப்பு சட்டம் பற்றிப் பேச ஆரம்பித்தார் டி.ஜி.பி. பெரியார் சிலை உடைப்புக்கு சதி திட்டம் தீட்டித் தூண்டிவிட்ட தயானந்த சரஸ்வதி மீது வழக்கு இல்லை. ஓசூர் தோழர் பரசுராமன் மீது 120 ஏ சதி வழக்கு. பாபர் மசூதி இடிப்பைக் கொண்டாடி சுவரொட்டி ஒட்டிய ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மீது வழக்கு இல்லை. பெரியார் சிலை உடைப்பைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டிய சிவகங்கை தோழர் மீது வகுப்பு மோதலைத் தூண்டியதாக வழக்கு!

"பெரியார் ஆட்சி"யின் நடவடிக்கையைப் பார்ப்பன கும்பலின் நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டு பாருங்கள்! "பெரியார் சிலையைச் சட்டப் பூர்வமான முறையில்தான் அகற்றியிருக்க வேண்டும். சட்டவிரோதமான முறையில் உடைத்திருக்கக் கூடாது" என்று பாபர் மசூதி இடிப்புக்கு அத்வானி வருத்தம் தெரிவித்த அதே தோரனையில், பார்ப்பனக் கும்பலைச் சேர்ந்த அனைவரும் சொல்லி வைத்தாற் போல அறிக்கை விட்டனர்.

பாபர் மசுதி இடித்தபின். "சர்ச்சைக்குரிய இடம்" என்று அதற்கு ஆர்.எஸ்.எஸ். பெயர் மாற்றம் செய்ததைப் போல, "சர்ச்சைக்குரிய பெரியார் சிலை" என்று எழுதத் தொடங்கியது தினமலர். பெரியார் சிலைக்கு இரும்புக் கூண்டு போடச் சொன்னார் இராம. கோபாலன். "இராமன் எரிப்பையும் பூணூல் அறுப்பையும் தூண்டுவதே கருணாநிதிதான்" என்று மிரட்டினார் எச்.ராஜா, வைகுந்த ஏகாதசிக்கு சிறீரங்கம் வரும் பக்தர்கள் பெரியார் மீது கல்லெறிந்து காறித் துப்புமாறு தலைமறைவாய் இருந்தபடியே அறிக்கை விட்டார் அர்ஜூன் சம்பத. "சிலை உடைப்பைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்துவிடும்" என்று கவலை தெரிவித்தார் கார்ப்பரேட் பார்ப்பான் ரவிசங்கர்ஜி. "பெரியார் சிலையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்" என்று கூறி வெளிப்படையாகவே களம் இறங்கினார் ஜெயலலிதா. திண்டுக்கல்லில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை, தூத்துக்குடியில் தார்பூச்சு, பட எரிப்பு... என ஆங்காங்கே இந்து வெறியர்கள் மேலேறித் தாக்கினர்.

பெரியாரின் தொண்டர்கள் என்று கூறிக் கொள்வோர் என்ன செய்தார்கள்? "இனி பொறுப்பதற்கில்லை; நெருப்புடன் விளையாடாதே" என்று 2 நாள்கள் கழித்து அறிக்கை விட்டார் வை.கோ. இதேநிலை தொடர்ந்தால் நாடு தழுவிய போராட்டம் என்று 3 நாள் கழித்து அறிக்கை விட்டார் திருமா. பூணூல் அறுப்பு, இராமன் எரிப்பு போன்ற நடவடிக்கைகளைப் பற்றி பெரிதும் கவலைப்பட்ட 'மார்க்ஸிஸ்டு' கட்சி கவனத்துடன் செயல்படுமாறு காவல்துறையைக் கேட்டுக் கொண்டது. "இந்து பாசிச அமைப்புகள் தலைதூக்குகின்றன. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று பயமுறுத்தியது வலது கம்யுனிஸ்டுகளின் கலை இலக்கியப் பெருமன்றம். இதுதான் பெரியார் பிறந்த மண்ணின் யோக்கியதை! பெரியாரிஸ்டுகள் எனப்படுவோர் சோளக்கொல்லைப் பொம்மைகளாக இருக்கும்போது, பெரியார் வெண்கலத்தில் உருக்கி வார்த்து என்ன பயன்?


சுயமரியாதைச் சுடர்களே கவனியுங்கள்!!

சிலையை உடைத்ததன் மூலம் பெரியாரை தமிழகம் முழுவதும் கொண்டு செல்வதற்கான ஒரு அற்புதமான வாய்ப்பைத் தங்கத்தட்டில் வைத்து வழங்கினார்கள் இந்து மதவெறியர்கள். உடைக்கப்பட்ட பெரியாரின் தலையை தமிழகம் முழுவதும் ஒரு வெடிகுண்டைப் போல ஏந்தி சென்றிருக்கலாம். தன் வாழ்நாள் முழுவதும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து மறைந்த அந்தக் கிழவனை, இன்னொரு முறை மக்கள் மத்தியில் பிரச்சாரம் பயணம் அழைத்துச் சென்றிருக்கலாம். "மண்டைச் சுரப்பை உலகு தொழும்" என்றூ பாவேந்தர் பாடினாரே, அந்த தலையிலிருந்து தோன்றிய சிந்தனையை இளம் தலைமுறையினர் மத்தியில் தீயைப் போலப் பற்ற வைத்திருக்கலாம். சாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணடிமை எதிர்ப்பு எனப் பன்முகம் காட்டிய அந்தத் தலையை பார்ப்பன மதவெறிக்கெதிரான விடுதலையின் வித்தாய் தமிழகமெங்கும் விதைத்திருக்கலாம்.

பேசாத கல்லையும், களிமண்ணையும் வைத்து அரசியல் நடத்தும் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு, பகுத்தறிவுக் கல்லைப் பேச வைத்துக் காட்டியிருக்கலாம். இரும்புக் கூண்டுக்குள் பதுங்க வேண்டியவர் பெரியார் அல்லர். இராம. கோபாலன்தான் என்பதை அந்தப் பார்ப்பனக் கும்பல்பட்டுத் தெரிந்து கொள்ளுமாறு விட்டிருக்கலாம். சிறீரங்கம் கோயிலென்ன, எல்லாக் கோயில் வாசல்களுலும் சாதியையும் மடமையையும் வழிமறிக்கும் தடையரணாகப் பெரியாரின் சிலையை நிறுவியிருக்கலாம்.

இவையணைத்தும் கொள்கை உறுதி கொண்டவர்களின் செயல்முறை. ஆட்சியைக் காத்துக் கொள்ளவும் அதன் உதவியுடன் சிலையைக் காப்பாற்றிக் கொள்ளவும் சிந்திப்பவர்கள், கான்கீரிட்... வெண்கலம்.... இரும்பு என்றூ உலோகத்தை உறுதிப்படுத்தும் திசையில்தான் சிந்திக்க முடியும். இறுதியில் அது இரும்புக் கூண்டில் தான் போய் முடியும்.

டிசம்பர் 7-ஆம் தேதியன்று பெரியார் சிலையைப் பாதுகாக்கத் தவறிய பரிதாபத்துக்குரிய 4 போலீசுக்காரர்களைக் கடமை தவறீய குற்றத்துக்காகத் தற்காலிக நீக்கம் செய்திருக்கிறது தமிழக அரசு. தங்கள் கடமையிலிருந்து தவறிய பெரியார் தொண்டர்கள் எனப்படுவோருக்கு யார் தண்டனை விதிப்பது?

இதோ, தண்டனை எதிர் கொள்வதற்குத் தன்னந்தனியாக அங்கே அமர்ந்திருக்கிறார் பெரியார். அவரது சிலையை சட்டபூர்வமாகவே அகற்றுவதற்கான வழக்கைத் தக்க தருணத்தில் விசாரனைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதி மன்றம் கூறியிருக்கிறது. பக்தர்கள் என்ற போர்வையில் கும்பலோடு கும்பலாகச் சேர்ந்து சிலையின் மீது கல்லெறிய தக்க தருணத்திற்காகத் காத்திருக்கிறார்கள் பார்ப்பன இந்து வெறியர்கள். சுயமரியாதை இயக்கத்தின் துவக்கக் காலத்தில் தன்னந்தனியாக சாதி, மத எதிர்ப்பு பிரச்சாரம் செய்து கல்லடியும், சொல்லடியும் வாங்கி, மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தமிழகத்தில் உருவாக்கி நிலைநிறுத்திய பின்னரும், அந்தோ, பெரியார் இன்றும் தனியாகத்தான் அமர்ந்து கொண்டிருக்கிறார். சிறீரங்கம் கோயிலுக்கு எதிரே அரங்கநாதனுக்கு சவால் விட்டபடி!

சூரியன்

புதிய ஜனநாயகம் ஜனவரி 2007



அறுப்பதும் எரிப்பதும்தான் வன்முறையா?

"ஆத்திகர்கள் திரளும் கோயில் வாசலில் ஒரு நாத்திகரின் சிலையை வைக்கலாமா?" - இது பெரியார் சிலைக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்.இன் முக்கியமான வாதம். ஆத்திகர்கள் திரளும் இடத்தில் நாத்திகம் பேசக் கூடாது என்று கூறுவது கருத்துரிமையை மறுக்கும் பாசிசம். "குடி குடியைக் கெடுக்கும்" என்று சாரயக் கடை வாசலில் எழுதி வைக்காமல், சர்பத் கடை வாசலிலா எழுதிப் போட முடியும்? ஆத்திகர்கள் கூடுமிடத்தில் நாத்திகப் பிரச்சாரம் செய்வதுதான் பொருத்தமானது. சிறீரங்கம் கோயிலைச் சுற்றி பிராந்திக் கடைகளும், ஆபாசப் பத்திர்க்கைகளும், நீலப்பட வியாபாரமும் நடக்கிறதே, அவையெல்லாம் ஆத்திகப் பிரச்சார நடவடிக்கைகளா என்ன?

மேலும், பெரும்பான்மை என்பதனாலேயே ஒரு கருத்து நியாயமாகிவிடாது. பாப்பாபட்டியில் "தலித்துக்கள் ஊராட்சித் தலைவராகக் கூடாது" என்று தடுத்தவர்கள் கூடப் பெரும்பான்மை பலத்தைக் காட்டித்தான் தங்கள் சாதிவெறியை நியாயப்படுத்தினார்கள். "பெரும்பான்மை இந்துக்கள் வாழும் இடத்தில் சர்ச், மசூதி கட்டக்கூடாது" என்ற ஆர்.எஸ்.எஸ்.இன் வாதத்திற்க்கும், "பெரியார் சிலை கூடாது" என்பதற்க்கும் அடிப்படையில் எவ்வித வேறுபாடும் இல்லை. இது ஆத்திக வேடம் போடும் பார்ப்பன மதவெறி, இறை நம்பிக்கை உள்ள பெரும்பான்மை தமிழக மக்கள், பிள்ளையாரையும், பெருச்சாளியையும் காட்டிக் கட்சி நடத்தும் பா.ஜ.க.வை நிராகரித்திருக்கும் போது, தன்னைப் பெரும்பான்மையின் பிரதிநிதியாகக் கூறிக் கொள்வதற்க்கு அவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை.

"தமிழ் வழிபாடு கூடாது, பார்ப்பனரல்லாதார் அர்ச்சகராகக் கூடாது" என்று பெரும்பான்மை மக்களை அவமதிக்கும் இந்து முன்னணிக் கும்பல், பெரும்பான்மை ஆத்திகர்களுக்காகக் கவலைப்படுவது போல நடிக்கீறது. ஆனால், பெரும்பான்மையான சூத்திர-பஞ்சம சாதி மக்களைக் கோயிலுக்குள் விட மறுத்த இந்த பார்ப்பன, சாதிவெறியர்களை எதிர்த்துக் கோயில் நுழைவு உரிமைக்காகப் போராடியவர் பெரியார். அவர் சிலையை எல்லாக் கோயில் வாசல்களிலும் வைக்க வேண்டும். அதுதான் பொருத்தம்.

"சர்ச் வாசலில் பெரியார் சிலை வைப்பதுதானே!" என்கிறார் இராம. கோபாலன். ஆசையிருந்தால் அவரே வைக்கட்டும். பெரியார் சிலைக்கு கீழே இந்துக் கடவுள் இல்லை என்றா எழுதியிருக்கிறது? எந்த கடவுளும் இல்லை என்றுதானே சொன்னார் பெரியார். எனவே, எந்த கடவுளும் இல்லாத ஒரு தூணையோ துரும்பையோ இராம. கோபாலன் காட்டட்டும் அங்கே சிலை வைத்து விடுவோம்.

"பெரியார் சிலையை உடைத்தால் அதற்காக இராமபிரானின் படத்தை ஏன் கொளுத்துகிறார்கள்? அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?" என்று கேட்கிறார் இராம.கோபாலன். இராமன் எல்லா இந்துக்களுக்குமான கடவுளல்ல. பார்ப்பன உயர் வருணத்தினரின் சாதிச்சங்க தலைவன். இதற்கு ஆதாரம் வால்மீகி இராமயணம், வருணதருமத்தை நிலைநாட்டும் இராமராச்சியத்தை நடத்தியதற்காகத்தான் அவன் கொண்டாடப்படுகிறான். மேலும், இராமன்ஜி என்பவர் அத்வானிஜி, வாஜ்பாயிஜி ஆகியோரைக் காட்டிலும் மூத்தவர். எல்லாத் தேர்தல்களிலும் தாமரைச் சின்னத்துக்கு ஓட்டு வேட்டையாடும் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர். இராமன் தேசிய நாயகன் என்பதால் முஸ்லீம்களும் அவனை வணங்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்.இன் நிலைப்பாடு. எனவே, அவர்கள் கூற்றுப்படியே இராமன் இந்துக் கடவுள் அல்ல என்று ஆகிறது. பெரியாரின் சிலையை அவாள் உடைக்கும்போது, அவாளுடைய கட்சித் தலைவரின் படத்தை செருப்பால் அடித்துக் கொளுத்துவதுதான் பொருத்தமான எதிர்ப்பு நடவடிக்கையாக இருக்க முடியும். இராமனைக் கடவுளாகக் கருதும் பக்தர்கள் ஒருவேளை மனம் வருந்தினால், சாதியைப் பாதுகாக்கும் இந்தக் கடவுளைக் கைவிட்டு விடுமாறு அவர்களுக்கு நாம் புத்தி சொல்லலாம். புத்தி வந்தால் பக்தி தானே போய்விடும்.

"பூணூலை அறுப்பது தனிநபரின் உரிமையையும் மத உரிமையையும் மீறும் வன்முறை" என்று அலறுகிறது பாரதிய ஜனதாக் கும்பல். அறுப்பதும் எரிப்பதும் எதிர் வன்முறைதான். பூணூல் அணீவதுதான் முதல் வன்முறை. பூணூல் என்பது அவரவர் விருப்பப்படி அணியும் கலர் சட்டையோ, அல்லது ஒரு மதத்தினர் அனைவரும் அணியும் சிலுவை போன்ற சின்னமோ அல்ல. பூணூல் - பெரியாரின் மொழியில் சொன்னால், ஒரு தெருவில் ஒரேயொரு வீட்டுக் கதவில் "இது பத்தினி வீடு" என்று எழுதிப் போட்டுக் கொள்வதற்கு ஒப்பான நரித்தனம். பெயருக்குப் பின்னால் இருந்த சாதிவாலை நறுக்கியவர் பெரியார். அய்யர், அய்யங்கார் என்ற பட்டங்களை ஃபாஷனுக்காகத் துறந்தவர்கள், பூணூலையும் துறந்துவிட்டால் அவர்களை நாகரிகப்படுத்தும் வேலை மிச்சம்!

39 பின்னூட்டங்கள்:

said...

Test

said...

சிலை உடைப்பு அராஜகவாதிகளுக்கு அவர்களுக்குப் புரியும் மொழியிலேயே தமிழகமெங்கும் எதிர்வினை செய்யப்பட்டிருப்பதைப் படிக்க சந்தோஷமாக இருக்கிறது..

ஆயினும் பெரியாரிஸ்டுகளின் வீரியம் நீர்த்துப் போயிருப்பது மிகவும் கவலைக்குறிய விஷயம் :(
மேலும் இது விவாதத்திற்குறிய ஒன்று என கருதுகிறேன்.

மிக நல்ல பதிவைக் கொடுத்ததற்கு அசுரனுக்கு நன்றி!

ராஜாவனஜ்

said...

பெரியாரிஸ்டுகளில் பெரியார் திக வைத் தவிர பெரியாரின் மானம் காக்க மற்ற போலி பெரியாரிஸ்டுகளுக்கு தைரியமில்லை. ஏனெனில் பிழைப்புவாதம் தடுத்துவிட்டது. பெரியாரின் சீடர்கள் இந்த போலிகளின் சுயரூபத்தை நன்கு உணர்ந்து சம்பவம் இது.

அசுரன்

said...

//ஆயினும் பெரியாரிஸ்டுகளின் வீரியம் நீர்த்துப் போயிருப்பது மிகவும் கவலைக்குறிய விஷயம் :(
மேலும் இது விவாதத்திற்குறிய ஒன்று என கருதுகிறேன்.

மிக நல்ல பதிவைக் கொடுத்ததற்கு அசுரனுக்கு நன்றி!

ராஜாவனஜ்
//
உடன்படுகிறேன்.

said...

Periyarism is the money making slogan in Tamilnadu. Veeramani and his asociates are building colleges and uiversity for making money only. Not to propagate Periyarism in the society. dont expect these type of socalled Samooga Netehhi kavalarkal will save Periyar and his Image in tamilandu. Parppana aadhikkam virumbinalum, virumbavittaalum irndhey therum.. Periyarin unmai thondarkal thondraadhavarai.. jeyakumar

said...

மிக நல்ல பதிவைக் கொடுத்ததற்கு அசுரனுக்கு நன்றி!

ராஜாவனஜ்
//
உடன்படுகிறேன்

பாமரன்

நானும் ஜால்ரா தட்டுகிறேன் . ஹிஹி

போலியல்லாத கம்யீனிஸ்டு .

said...

மிக நல்ல பதிவைக் கொடுத்ததற்கு அசுரனுக்கு நன்றி!

ராஜாவனஜ்
//
உடன்படுகிறேன்

பாமரன்

நானும் ஜால்ரா தட்டுகிறேன் . ஹிஹி

போலியல்லாத கம்யீனிஸ்டு .


அப்படியே நானும்!

பெரியார் இங்கு சிலருக்கு அரசியலுக்காகத் தேவைப்படுகிறார் என்பது வெள்ளிடைமலை.

said...

//"பெரியார் சிலையை உடைத்தால் அதற்காக இராமபிரானின் படத்தை ஏன் கொளுத்துகிறார்கள்? அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?" என்று கேட்கிறார் இராம.கோபாலன். இராமன் எல்லா இந்துக்களுக்குமான கடவுளல்ல. பார்ப்பன உயர் வருணத்தினரின் சாதிச்சங்க தலைவன். இதற்கு ஆதாரம் வால்மீகி இராமயணம், வருணதருமத்தை நிலைநாட்டும் இராமராச்சியத்தை நடத்தியதற்காகத்தான் அவன் கொண்டாடப்படுகிறான். மேலும், இராமன்ஜி என்பவர் அத்வானிஜி, வாஜ்பாயிஜி ஆகியோரைக் காட்டிலும் மூத்தவர். எல்லாத் தேர்தல்களிலும் தாமரைச் சின்னத்துக்கு ஓட்டு வேட்டையாடும் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர். இராமன் தேசிய நாயகன் என்பதால் முஸ்லீம்களும் அவனை வணங்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்.இன் நிலைப்பாடு. எனவே, அவர்கள் கூற்றுப்படியே இராமன் இந்துக் கடவுள் அல்ல என்று ஆகிறது. பெரியாரின் சிலையை அவாள் உடைக்கும்போது, அவாளுடைய கட்சித் தலைவரின் படத்தை செருப்பால் அடித்துக் கொளுத்துவதுதான் பொருத்தமான எதிர்ப்பு நடவடிக்கையாக இருக்க முடியும். இராமனைக் கடவுளாகக் கருதும் பக்தர்கள் ஒருவேளை மனம் வருந்தினால், சாதியைப் பாதுகாக்கும் இந்தக் கடவுளைக் கைவிட்டு விடுமாறு அவர்களுக்கு நாம் புத்தி சொல்லலாம். புத்தி வந்தால் பக்தி தானே போய்விடும்.
//
அப்படிபோடு அருவாள

said...

இந்த வீரர்கள் கண்டதேவியிலும்,நாட்டாமங்கலத்திலுக்கும் தலித்களை எதிர்க்கும் ஆதிக்க சாதியினரை எதிர்த்து தங்கள் வீரத்தை ஏன் காட்டவில்லை.பார்ப்பனரல்லாத ஆதிக்க சாதியினருடன் மோதினால் பதிலடி கிடைக்கும்,
கை,கால் உடைக்கப்படும் என்ற பயமா.இல்லை உயிர் குறித்த பயமா.இந்து மக்கள் கட்சி ஒரு சிறிய கட்சி,உங்களுக்கு அதனுடன் பிரச்சினை என்றால் ஏன் பிற இந்துக்களுடன் தகராறு செய்கிறீர்கள்.

said...

இந்த பதிவு பெரியார் சீடரர்கள் எனக்கூறிக் கொண்டே அவருக்கு ஆகக் கேடான அவமரியாதை செய்தவர்களையும், பெரியார் சிலை உடைப்பில் இந்துத்துவ வெறியர்களின் கோழைத்தனம் மற்றும் அதை அடுத்த நிகழ்ந்த சம்பவங்கள் குறித்தே உள்ளது.

//இந்த வீரர்கள் கண்டதேவியிலும்,நாட்டாமங்கலத்திலுக்கும் தலித்களை எதிர்க்கும் ஆதிக்க சாதியினரை எதிர்த்து தங்கள் வீரத்தை ஏன் காட்டவில்லை.பார்ப்பனரல்லாத ஆதிக்க சாதியினருடன் மோதினால் பதிலடி கிடைக்கும்//

இங்கு நீங்கள் வீரர்கள் என்று குறிப்பிடுவது பெரியார் சிலை உடைப்பை அடுத்து அதை எதிர்த்து வினையாற்றியவர்களை எனில் அது ம.க.இ.க மற்றும் பெரியார் தி.க வைக் குறிக்கும்.

இதில் ம.க.இ.க.வினர் தலித் பிரச்சனைகளுக்காக களமிறங்கி கவுண்டர் வன்னிய தேவர் சாதி வெறியர்களுடன் பல இடங்களில் மோதியுள்ளனர். இன்னும் சொன்னால் பாப்பாட்ட கீரிப்பட்டியில் கள்ளர் சாதி வெறியர்களை சமூக புறக்கணிப்பு செய்யக் கோரி அந்த சாதியை சேர்ந்த ஜனநாயக சக்திகளான இளைஞர்களைக் கொண்டே பொதுக் கூட்டங்க்ள், பிரசூர விநியோகம் இவற்றை அந்த பகுதியிலேயெ செய்தனர். இவை உயிருக்கு பயந்தவர்கள் செய்யக் கூடியவை இல்லை.

உயிருக்கு பய்ந்த கோழைகள்தான் இரவோரு இரவாக குண்டு வைக்கும் தீவிரவாதி போல பெரியார் சிலையை உடைத்தனர்.


//இந்து மக்கள் கட்சி ஒரு சிறிய கட்சி,உங்களுக்கு அதனுடன் பிரச்சினை என்றால் ஏன் பிற இந்துக்களுடன் தகராறு செய்கிறீர்கள்.
//

யார் பிற இந்துக்கள்? உங்களை கோயிலுக்குள் கருவறைக்குள் விடமாட்டேன் என்று கோர்ட்டில் கேஸ் போட்டபோது உங்க சுயமரியாதை எங்கே போயிற்று?

இந்து என்றூ சர்டிபிகேட்டில் எழுதியவர்களுக்கு எல்லாம் நீங்கதான் கொத்தகையா? இல்லை ராம்ன் தான் குத்தகையா?

இல்லை இந்து என்பவர் பார்ப்பனியம் சம்பந்தப்பட்ட்வன் என்று சொல்கிறீர்களா? ஏன்னெனில் இந்த இரு அமைப்புகளும் பார்ப்ப்னியம் சம்பந்தப்பட்டதைத்தான் எதிர்த்தார்கள்.

அசுரன்

said...

யாரையும் நாகரிகப்படுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை. கலைஞர் உரிய நடவடிக்கை எடுத்திருக்கிறார். இன்றைய தினமணியில் அவர் பேச்சினைப் படியுங்கள்.தேவையானால் அமைப்புகளை தடையும் செய்வார்.ஆகவே அசுரன் போன்ற இளைஞர்கள் இந்த இயக்கங்களை ஆதரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதுதான் அவர்களுக்கு நல்லது.இடதுசாரி தீவிரவாதத்திற்கு பலியாக வேண்டாம்.

said...

//யாரையும் நாகரிகப்படுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை.//

ஒ... அதனால்தான் சிறைச்சாலை, காவல்துறை இவற்றையெல்லாம் களைத்து விட்டீர்களோ?
அவையெல்லாம் அநாகரீகமானவர்களை நாகரீகப்படுத்ததானே?


//தேவையானால் அமைப்புகளை தடையும் செய்வார்.//

யாருபா அது... தடை செய்றதுக்கு முன்னேயே அனானியா வந்து கருத்து சொல்லிட்டு போறாரு.....

தேவையான இந்துத்துவ அமைப்புகளை தடை செய்யட்டும்... ஏன் தேசப் பாதுகாப்பு சட்டத்தை பெரியார் சிலை உடைத்த உடனே அமலப்படுத்தவில்லை? ஏன் இன்று வரை பரசுராமனை தாக்கிய குண்டர்களை கைது செய்யவில்லை? அவர்கள் மீது தேசப்பாதுகாப்பு சட்டம் இல்லை? சிலை உடைப்பை தூண்டிய சாமியார் மீது ஒரு நடவடிக்கையும் இல்லை? இதையெல்லாம் செய்யும் தைரியம் நேர்மை அவருக்கு உண்டா?

இடதுசாரி தீவிரவாதம் என்பது என்ன? நான் பேசுவது இடதுசாரி தீவிரவாதமா?
அல்லது மக்களை அணி திரண்டு அநீதி எதிர்த்து போராடு என்று சொல்வது இடது சாரி தீவிரவாதமா? அப்படியெனில் பெரியாரும் அதைத்தான் செய்தார். கலைஞரும் தனது ஆரம்பகால அரசியலில் அதைத்தான் செய்தார். சும்ம ஜல்லியடிப்பதை நிறுத்திவிட்டு, ஏதாவது உருப்படியாக இருந்தால் பேசவும்.

அசுரன்

said...

There is nothing wrong in protesting by peaceful means.
When you indulge in violence
against private persons,damage
public property or private
property you are giving ample
excuse for the state to repress
you.No court or public will come
to your rescue then. It is eay to shout in blogs but difficult to
withstand repression in real life.
The adeventures of naxalites
in the form of elimination of class
enemies resulted in state repression and setback to the
movement.Try to mobilize public
opnion but avoid violence.Attacking
individuals or temples wont take
you anywhere except to prison
and courts.In the initial years
many young persons joined ML
movement but paid a heavy price
for the adventurism.It took them
no where even as the ML movement
underwent splits.They spent years
in jail/underground in vain.
As you are a young man
think thrice before reacting emotionally and weigh the consequences of any action.
So dont support such causes
and actions.

said...

இங்கு மாவோயிஸ்டுகளினுடைய இடது சந்தர்ப்பவாதத்தை தேவையில்லாமல் தொடர்பு ப்டுத்தி பேசுவதன் காரணம் என்னவென்று தெரியவில்லை. அவர்களின் வழிமுறையில் எமக்கு நம்பிக்கை கிடையாது என்பதை மட்டும் கூறிக் கொள்கிறேன். மற்றபடி வன்முறை என்பதில் அரசு என்பதன், மக்கள் என்பதன் பாத்திரங்களை குறித்து புரிதல் இன்றி ஒரேயடியாக இது போல பேசுவது சுலப்ம்.

இந்த் வேறுபாட்டை குறிக்கத்தான் மனித பன்றி மோடி குஜராத்தில் நடத்திய வெறியாட்டத்தை ஒப்பிட்டு காட்டியுள்ளது கட்டுரை.

மக்களிடம் பொதுக் கருத்தை உருவாக்குவதை செய்யாமல் இது போன்ற நேரடி நடவடிக்கைகளில் இறங்குவது தவறுதான். ஆனால் தாடிக்கார கிழவர் பெரியார் ஏற்கனவே உருவாக்கியுள்ள ஒரு மரபை கண்முன்னே அவரது சீடர்கள் என்றூ சொல்லிக் கொள்பவர்களில் ஒரு பகுதியினர் சீரழித்துக் கொண்டிருக்கும் போது சுரனை வரச் செய்வதற்க்கும்/நம்பிக்கையிழந்துள்ளவர்களுக்கு நம்பிக்கை வரச் செய்வதற்க்கும் இது போன்ற சில நடவடிக்கைகள் மிக முக்கியமாக தேவைப்படுகிறது. அதுவும் அவரது கோட்டை எனப்படும் இடத்திலேயே இது போன்ற நடவடிக்கைகள் செய்து விட்டு சும்மா போக முடியாது என்பதை நிருபிக்க வேண்டியுள்ளது. இவையெல்லாம் இல்லாமல் நீதிமன்றத்திலும், சட்டமன்றத்திலுமே நாங்கள் எதிர்ப்பை காட்டுவோம், அந்த இடங்களிலேயே காதும் காதும் வைத்தாற்போல் பேசி முடித்துக் கொள்வோம் என்று சொல்வது அந்த மேற்சொன்ன அமைப்புகளின் மான்பைக் காக்கும் சிலருக்கு தேவையான ஒன்றாக இருக்கலாம். எமக்கு மக்கள் மீதுதான் நம்பிக்கை. அவர்களிடம் விவாதத்தை கிளப்புவதுதான் தேவை. ஒரு சொட்டு தியாகம் கூட செய்யாமல் சும்மாவே உரிமையும் சுந்தந்திரமும் கிடைத்துவிடும் என்று கதை விட்டால் ஏற்றுக் கொள்வது இன்றைய சூழலில் மிக கடினம். ஒரு வேளை காந்தி காலத்தில் சாத்தியமாக இருந்திருக்கலாம்.

பொதுக் கருத்தை உருவாக்கும் கடமையை தனதாக சொல்லிக் கொண்டவர்கள் அதை செய்யாமல் இருந்ததோடு மட்டுமல்லாமல், வோட்டு வாங்கும் அளவிலும் டிரஸ்டு சொத்தை காப்பது என்ற அளவிலும் மட்டுமே செயல்ப்பட்டத்தைத்தான் இந்த கட்டுரை கேள்வி எழுப்புகிறது.

மக்களை மாக்களாக கருதி இந்த பெரியார் சிலை உடைப்பு சம்பவத்தை மக்களிடம் வீச்சாக கொண்டு செல்ல வேண்டிய கடமையிலிருந்து அவர் சீடர்கள் தவறிய பொழுது ஒரு உந்து சக்தியாக, கிரியா ஊக்கியாக இந்த நடவடிக்கைகள் தெவைப்படுகிறது. இந்த இடத்தில் இதே ம.க.இ.க கோக் பிரச்சனையில் கையாண்ட போராட்ட முறை ஒப்பிட்டுப் பார்க்கவும்.

"அரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம், யுத்தம் என்பது ரத்தம் சிந்தா அரசியல்" அது என்னவிதமான் நோக்கத்திற்க்கு எந்த சூழ்நிலையில் செய்கிறோம் என்பதைப் பொறுத்தது.

மற்றபடி அமைதி வழியில் போராடுவது, சட்டமன்றத்தில் பேசியே நிலைநாட்டிவிடுவோம் என்று உதார் விடுவது எல்லாம் CPM, CPI பாணி வோட்டு அரசியலுக்கு உதவும் தந்திரங்கள்தான். அப்படியெதுவும் தீர்வு இது வரை யாருக்கும் கிடைத்ததில்லை.


அசுரன்

said...

//.Try to mobilize public
opnion//

I belive in this. But the strategy to harvest this Publich opinion is where we differ.


"நமது ஆயுதம் என்னவென்பதை நமது எதிரி தீர்மானிக்கிறான்." கோக் பிரச்சனையில் சுவரெழுத்துக்களும், பிரசூரங்களும் மக்களை திரட்டி அரசியல் விழிப்புணர்வுட்டுவதும் ஆயுதமாக இருந்தது.

இந்த பிரச்சனையில் இந்துத்துவ சக்திகளுக்கு ஜனநாயகம் என்ற சுவாசத்தைக் கூட கொடுக்காமல் ஏறி அடிக்க வேண்டியதாக இருக்கிறது. ஏனேனில் இந்துத்துவம் தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் இயக்கம் அல்ல. மேலும் பெரியார் பெயரை வைத்துக் கொண்டு போலித்தனம் செய்ப்வர்களின் கீழ் அணி திரண்டுள்ளவர்களையும் விழிப்படையச்/நம்பிக்கை கொள்ள செய்ய வேண்டியுள்ளது. அது இது போன்ற பரபரப்பு சாகச நடவடிக்கை மூலம் மட்டுமே சாத்தியம்

அசுரன்

said...

அருமையான பதிவு அசுரன்! புதிய ஜனநாயகத்தில் வெளி வந்த கட்டுரையும், அதனையொட்டி இங்கே நடந்த விவாதங்களும், உங்களது தெளிவான, தீர்க்கமான பதில்களும் அருமை.
தொடரட்டும் உங்கள் போர்க்குரல்!

//When you indulge in violence against private persons,damage public property or private property you are giving ample excuse for the state to repress you.No court or public will come to your rescue then.//

when did the public came to protect the struggles that were staged peacefully? what about kalinganagar tribal people struggle against Land acquisition? what about the ongoing singur and nandigram struggle? what about irom sharmila's ongoing unbelievable, unrepentant six year fast? is india stood as one in support of Manipur? why did the 11 mothers of manipur were arrested under NSA for staging a nude protest condemning thangjam manorama's murder and rape? as marx said, my instrument for the struggle is not determined by me but its the enemy who determines it.if the ruling class deals issues with dialougues instead of lathis,bullets and tearbombs, no genuine mass movement will indulge in violence. peace is synonymous with justice and without justice there can never be peace.if someone insist on peace when injustice is on stride, then however naive and whole-hearted his call may be but he indirectly supports injustice.
imagine of a 'peaceful' protest in Iraq in support of saddam hussain or think of a peaceful protest in gujarat for rehabilation of the ghettoised moslem people and how 'peacefully' they would be received.

said...

Periyar never indulged in this type of violence.He never ordered his followers to attack
places of worship or brahmins.
Was he a fool.

said...

//Periyar never indulged in this type of violence.He never ordered his followers to attack
places of worship //

Dear Anonymous,

Periyaar always advocated violence. Beard is not the only common link between Periyaar and Bin Laden.At the core he was a terrorist. He also suggested that among others,communists also should be attacked and shunned.This is probably the only sensible thing Periyaar ever said.

bala

said...

அவர்கள் தரப்பு வாதம்

பெரியார் சிலை உடைப்பினைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில்நடைபெற்ற வன்முறை தாக்குதல்கள் குறித்து ஒரு கட்டுரை, ஒரு பேட்டியைஇங்கே இடுகிறேன்.வன்முறைகளை நியாயப்படுத்தும் முயற்சிகள்தான் இவை.தாங்கள்தான் உண்மையான பெரியாரியவாதிகள் என்பதை 'நிரூபிக்கும்' முயற்சிகளாகவும் இதைப் புரிந்து கொள்ளலாம்.

http://ravisrinivas.blogspot.com

said...

அப்படி சொன்ன பெரியார்தான் ரஸ்யா சென்று அதன் பெருமைகளை பறை சாற்றினாரோ? அவர் குறிப்பாக இந்திய வோட்டுக் கம்யுனிஸ்டுகள் வோட்டு சீட்டு அரசியல் செய்ய மக்களை தூண்டிவிடுவதாக கருதி செய்த விமர்சனங்கள் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறீர்கள் போலும்...

அசுரன்

said...

அசுரன்,

அருமையான பதிவு. மிகச்சிறந்த கட்டுரையை பதிந்ததற்கு நன்றி. இந்த கட்டுரை பலரின் வேசங்களையும் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

// பெரியார் சிலையை உடைத்தால் அதற்காக இராமபிரானின் படத்தை ஏன் கொளுத்துகிறார்கள்? அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?" என்று கேட்கிறார் இராம.கோபாலன். இராமன் எல்லா இந்துக்களுக்குமான கடவுளல்ல. பார்ப்பன உயர் வருணத்தினரின் சாதிச்சங்க தலைவன். இதற்கு ஆதாரம் வால்மீகி இராமயணம், வருணதருமத்தை நிலைநாட்டும் இராமராச்சியத்தை நடத்தியதற்காகத்தான் அவன் கொண்டாடப்படுகிறான். மேலும், இராமன்ஜி என்பவர் அத்வானிஜி, வாஜ்பாயிஜி ஆகியோரைக் காட்டிலும் மூத்தவர். எல்லாத் தேர்தல்களிலும் தாமரைச் சின்னத்துக்கு ஓட்டு வேட்டையாடும் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர். இராமன் தேசிய நாயகன் என்பதால் முஸ்லீம்களும் அவனை வணங்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்.இன் நிலைப்பாடு. எனவே, அவர்கள் கூற்றுப்படியே இராமன் இந்துக் கடவுள் அல்ல என்று ஆகிறது. பெரியாரின் சிலையை அவாள் உடைக்கும்போது, அவாளுடைய கட்சித் தலைவரின் படத்தை செருப்பால் அடித்துக் கொளுத்துவதுதான் பொருத்தமான எதிர்ப்பு நடவடிக்கையாக இருக்க முடியும். இராமனைக் கடவுளாகக் கருதும் பக்தர்கள் ஒருவேளை மனம் வருந்தினால், சாதியைப் பாதுகாக்கும் இந்தக் கடவுளைக் கைவிட்டு விடுமாறு அவர்களுக்கு நாம் புத்தி சொல்லலாம். புத்தி வந்தால் பக்தி தானே போய்விடும். //

அருமையான பதில்.

நன்றி
வசந்த்

said...

நல்ல பதிவு , மக்களுக்கு அரசியலால் விடிவு ஒரு போதும் கிடைக்கப்போவதில்லை. பெரியாரை வைத்து பிழைப்பு நடத்தும் அரசியல் கட்சிகள் ஓட்டு அரசியலுக்காக அவரை முன் நிருத்த தயங்குகின்றன. கருணாநிதி, திருமா போன்ற அரசியல் வாதிகளால் பரசுராமன் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்களை காப்பற்ற முடியாத போது, நியாயமான சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத போது, சமரசம் என்ற பெயரில் கோழைகளாக மாறும்போது என் கோபம் யாரை என்ன செய்யும் ? பரசுராமனைப் போல் சிறை செல்ல நேரிடும், அரசியல் கட்சியில் இல்லாததால் யாருக்கும் தெரியாமல் போகும், தெரிந்தாலும் உங்கள் பதிவுகளில் இடம்பெறுவதை தவிற வேறு பயன் என்ன இருக்க முடியும். தோழர் பரசுராமனின் நிலை என்ன?

said...

//There is nothing wrong in protesting by peaceful means.
When you indulge in violence
against private persons,damage
public property or private
property you are giving ample
excuse for the state to repress
you.No court or public will come
to your rescue then. It is eay to shout in blogs but difficult to
withstand repression in real life.
The adeventures of naxalites
in the form of elimination of class
enemies resulted in state repression and setback to the
movement.Try to mobilize public
opnion but avoid violence.Attacking
individuals or temples wont take
you anywhere except to prison
and courts.In the initial years
many young persons joined ML
movement but paid a heavy price
for the adventurism.It took them
no where even as the ML movement
underwent splits.They spent years
in jail/underground in vain.
As you are a young man
think thrice before reacting emotionally and weigh the consequences of any action.
So dont support such causes
and actions.//
From aasath to anonymous:

i think that type of struggle in seventy times. i can't understand that the point which is in the failure area. It is not the adventure. i become change as a CATALYST of the be changing society.

For your so-called changing, you need lathies like court and police station like slaves.

i know the real life and its' problems. If you solve this problem through scientific process, you need not lathis. From lathis you can't invent any medicines to the injured society.

do you criticise the youngsters of seventies. no. We haven't rights to criticise about their sacrifice. We can criticise their mis-understanding of the political vies and scenerio of the society.

One simple question:
can you proove that any ml movement spilit for without any ideological/plan problem.
At the same time, do you proove any Parlimentarian parties split for any ideology/plan?


If you want to change this society as per your wishes (if to be forward or backward), you should fight at street against your material enemies, not till blog as a ideological struggle.

said...

ஒப்பாரியின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

ப்ரசுராமன் தொழிற்சங்க தலைவர். பரசுராமன் சார்ந்த அமைப்பு மற்றும் அவரைப் போலவே இந்த நடவடிக்கையில் வீரம் செறிந்து செயல்பட்ட பெரியார் திக அமைப்பு இரண்டும் அரசியல் அமைப்புகள்தான். அதனால்தான் இது ஒரு விவாதப் பொருளாக இன்றூ இங்கு உள்ளது.

வோட்டுக் கட்சி அரசியலின் இழிநிலையை கண்டனம் செய்யும் ஒப்பாரிக்கு வாழ்த்துக்கள். ஆனால் மாற்று அரசியலை பேச செயல்படுத்த தயங்கிக் கொண்டு வோட்டு அரசியலை விமர்சிப்பது சரியான் முடிவை எட்ட உதவாது.

இந்த விசயம் எனது பதிவில் மட்டும் இடம்பெறவில்லை. அரசியல் ரீதியாக இந்த எதிர்வினை தமிழகத்தில் கிளப்பியுள்ள விவாதச் சூழல்(பெரிய அளவில் இல்லையெனினும்) இங்கும் பிரதிபலிக்கிறது. அவ்வளவுதானேயொழிய இது மட்டுமே ஒரே விளைவு என்று எண்ணுவது இதர விளைவுகளை நீங்கள் உள்வாங்கத் தவறுகிறீர்கள் என்பதைத்தான் காட்டுகிறது.(கருணாநிதியின் மேடைப் பேச்சு).

அசுரன்

said...

///
do you criticise the youngsters of seventies. no. We haven't rights to criticise about their sacrifice. We can criticise their mis-understanding of the political vies and scenerio of the society.

One simple question:
can you proove that any ml movement spilit for without any ideological/plan problem.
At the same time, do you proove any Parlimentarian parties split for any ideology/plan?


If you want to change this society as per your wishes (if to be forward or backward), you should fight at street against your material enemies, not till blog as a ideological struggle.
///

தோழர் அசாத்தின் வெகு சிறப்பான எதிர்வினை....

வாழ்த்துக்கள்..
அசுரன்

said...

தேசப் பாதுகாப்பு சட்டமா? அல்லது பூணூல் பாதுகாப்பு சட்டமா?:

ஈரோட்டை சேர்ந்த பெரியார் திக தொண்டர்கள் ராம.இளங்கோவன், குமரகுருபரன் உள்ளிட்டோ ர் மீது ராகவேந்திரா மடம் தாக்குதல், பூணூல் அறுப்பை அடுத்து தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. இச்சட்டத்தை அமுல்படுத்தக்கோரி கலெக்டர் எழுதிய ஆவணத்தில் அத்தொண்டர்கள் கடந்த காலத்தில் செய்த பின்வரும் கேடான நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.
1) ஈரோட்டில் நடைபெற இருந்த விஷ்வ ஹிந்து பரிஷத் மாநாட்டைத் தடை செய்யக் கோரி அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2) பிற்பட்டோ ருக்கு 27% இட ஒதுக்கீட்டை மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் கொண்டு வருவதை எதிர்த்து டெல்லி உயர் சாதி மாணவர்கள் நடத்திய போராட்டங்களைக் கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் செய்து கைதாகினர்.
3) பிற்பட்டோ ருக்கான இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்தும் வீரப்ப மொய்லி அறிக்கையை எரித்தனர்.

(மூன்று செயல்களும் கேடான நடவடிக்கை என்று கலெக்டர் குறிப்பு எழுதி உள்ளார்)


பெரம்பலூர் மாவட்டம் பெரியார் திக தொண்டர்கள் லச்சுமணன், தாமோதரன் ஆகியோர் இரண்டு பூணூல்களை அறுத்ததால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.

அதற்கு அம்மாவட்ட கலெக்டர் எழுதிய குறிப்பில் "புனித நூலான பூணூலை இவர்கள் கத்தரித்ததால், பெரம்பலூர் வட்டாரம் மட்டுமல்லாமல் இந்திய தேசம் முழுக்க பதட்டம் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டது" என்று எழுதப்பட்டுள்ளது.


ஈரோட்டில் நடந்த ஒரு படிப்பகத் திறப்பு விழாவில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன் "நாலு முழ நூலை அறுத்தால் தேசப்பாதுகாப்பு போய் விட்டதா? கேவலம் ஒரு நூலுக்குள்ளேதான் இந்த தேசத்தோட பாதுகாப்பு இருக்குதா? அப்படி என்றால் ஏன் லட்சக்கணக்கான ராணுவத்தினரை காஷ்மீரில் போய்க் குவித்திருக்கிறாய்? பூணூலைப் போட்டு தேசத்தைக் காப்பாத்த வேண்டியதுதானே!" என்று ஒரத்த கைதட்டல்களுக்கு மத்தியில் வினவினார்



கட்டபொம்மன்

said...

ஈரோட்டில் நடந்த ஒரு படிப்பகத் திறப்பு விழாவில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன் "நாலு முழ நூலை அறுத்தால் தேசப்பாதுகாப்பு போய் விட்டதா? கேவலம் ஒரு நூலுக்குள்ளேதான் இந்த தேசத்தோட பாதுகாப்பு இருக்குதா? அப்படி என்றால் ஏன் லட்சக்கணக்கான ராணுவத்தினரை காஷ்மீரில் போய்க் குவித்திருக்கிறாய்? பூணூலைப் போட்டு தேசத்தைக் காப்பாத்த வேண்டியதுதானே!" என்று ஒரத்த கைதட்டல்களுக்கு மத்தியில் வினவினார்

Then he will go to Arivalayam
and give an interview praising
the government and Karunanidhi.
The Karunanidhi govt. refused to
withdraw the POTA case against the
naxalites.Pandian will not open his
mouth about this.

said...

eh‹ ïªj neu¤âny ïªj ÉHhit¥ ga‹gL¤â¡ bfh©L jÄHf Kjyik¢r® v‹w KiwÆny x‹iw¢ brhšy ÉU«ò»nw‹. ï¥-nghJ áy ehŸfshf, V‹ áy khj§fshf bgÇahU¡F v⮥ò, mij¡ f©L Jo¡»‹w bgÇahUila Mjuths®fŸ, v§fis¥ ngh‹wt®fŸ gL»‹w nfhg«, mªj¡ nfhg¤jhš V‰gL»‹w vâbuhÈ, Éisî, ïUòw¤âY« + xUòw¤âny bgÇahUila áiy cil¡f¥g£lhš, mšyJ nrj¥gL¤j¥g£-lhš mšyJ fs§f¥gL¤-j¥g£lhš mj‰F khwhf, ï‹bdhU òw¤âš ntbwhU M‹ÄfthâÆ‹ áiy, xU g¡jDila áiy mšyJ xU flîË‹ áiy nrj¥-gL¤j¥gL»wJ v‹whš eh‹ ïªj ïu©L Ãiy-iaí« MjÇ¡fÉšiy.
v¥go bgÇahUila áiy¡F xU nrj« tU»‹w neu¤âny nrj¥gL¤âat®-fis njr ÉnuhâfŸ v‹W milahs« fh£l¥g£L, r£l¥go mt®fis¤ j©o¡»nwhnkh mij¥ nghynt jh‹ xU M‹Äf-thâÆDila, X® M©l-tDila áiyia ahuhtJ nrj¥gL¤âdhš, mjdhš V‰gL»‹w mªj muh#-f§fŸ, mikâÆ‹ik ïj‰F fhuzf®¤jhth»a mt®fS« nrj Énuhj r£l¥go j©o¡f¥gl nt©oat®fŸjh‹ v‹-gij eh‹ V‰bfdnt m¿É¤âU¡»nw‹. vdnt, ïªj neu¤âš mij eh‹ R£o¡fh£l ÉU«ò»nw‹. ahuhf ïUªjhY« bgÇah® mikâia¤ jh‹ ÉU«ã-dh®.
j‹Dila òu£áfukhd fU¤Jfis¡ Tl mikâ-ahf¤jh‹ brhšy nt©L-bk‹W fUâdh®. mt® vªj neu¤âš r£l¤ij Û¿-dhY§Tl, r£l¤ij Û¿ el¥ng‹ v‹W brh‹dh-Y§Tl, m¥go ÛW»‹w f£l« tiuÆnyjh‹ brhšth®. mªj¡ f£l« tU»‹w neu¤âš mjdhš ghâ¥òfŸ V‰gl¡ TlhJ, mjdhš eh£oš ehr fhÇ-a§fŸ Éisªâl¡ TlhJ, ïij¥ ga‹gL¤â¡ bfh©L ÉõÄfŸ eh£il nt£ilaho Él¡ TlhJ v‹W bgÇah® fUâdhš, mªj¡ »s®¢áia¡ Tl mt® âU«g¥ bg‰W¡ bfhŸth®.
c§fS¡F¢ brhš»nw‹. bgÇa òuhz¤ij¡ bfhS¤j, f«g uhkhaz¤-ij¡ bfhS¤j bgÇah® ehŸ F¿¤jh®. ehŸ F¿¤j mj‰-fhd ïlK« nj®ªbjL¤-jh®, m¿É¤jh®. ehL KG-tJ« ïUªj bgÇahÇ‹ bjh©l®fŸ mªj kheh£-ony âu©lh®-fŸ. filá neu¤âš bgÇ-ahU¡F M®.nf. r©Kf« br£oah-ÇlÄUªJ jftš tªjJ. ïjdhš V‰gL»‹w Éisî-fis v©Â¥ ghU§fŸ v‹W. m›tsî-jh‹, v©-Â¥ gh®¤jh®. k‰wt®fis v©Â¥ gh®¡f¢ brh‹d bgÇah®, mjdhš V‰gl¡ Toa Éisîfis v©-Â¥ gh®¤jh®. k‰wt®fis v©Â¥ gh®¡f¢ brh‹d bgÇah®, mjdhš V‰gl¡ Toa Éisîfis v©-Â¥ gh®¤jh®. jh‹ bfh©l bfhŸifÆny cWâahf ïUªJ, f«guh-khaz¤ij¡ bfhS¤âna ÔUnt‹ v‹W ïšyhkš, ï¥go bfhS¤âdhš v‹d MF« v‹w Éisî-fis všyh« v©Â¥ gh®¤J eh£oš mikâ-jh‹ K¡»a«, mikâahd KiwÆny jh‹ m¿th®ªj bfhŸiffis k¡fS¡F¢ brhšy Koí« v‹W mt® j‹Dila nghuh£l¤-ijna Éy¡»¡ bfh©lh® v‹whš, bgÇahU¡F j‹-Dila bfhŸifÛJ ïUªj g‰iwÉl, k¡fË-l¤âny V‰gl¡ Toa muh-#f¡ FH¥g¤ij¤ jÉ®¡f nt©L« v‹gâny ïUªj F¿ jh‹ K¡»akhf ïUª-jJ. vdntjh‹ eh‹ brhš-È¡ bfhŸs ÉU«ò»nw‹.
vªj¥ bgÇahUila bfhŸiffËny mG¤jkhf ïU¡»‹w Ãiy xU g¡f« ïUªjhY«, mij v⮡-»‹w M¤âf®fSila mÂtF¥ò ï‹bdhU òw¤-âny ïUªjhY« ïu©L ngiuí« eh‹ nf£L¡ bfhŸtJ, ïUtU¡F« K¡»a« c§fŸ bfhŸif-fis mikâahf¢ brhš-Y§-fŸ, mt®fŸ bfhŸif-fis mikâahf brhš-y£L«, fU¤J¡F fU¤J, bfhŸif¡F¡ bfhŸif, ïy£áa¤â‰F ïy£áa« v‹W vL¤J ití§fŸ, ïj‰F¥ gâyhf t‹Kiw, muh#f« Éisªjhš mJ bgÇahU¡F« ešyjšy, mtUila bfhŸif¡F« ešyjšy, bgÇahiu v⮡-»‹wt®fS¡F« ešyjšy, eh£o‰F« ešyjšy v‹gij eh‹ vL¤J¤ bjÇɤJ ïâny r£l¥go elªJbfhŸs ïªj muR ja§fhJ v‹gij ïªj ešy ÉHhÉny eh‹ m¿É¤J¡ bfhŸs¡ flik¥g£oU¡-»‹-nw‹. + ï›thW Kjšt® fiyP® mt®fŸ ciuah‰-¿dh®.
http://viduthalai.com/20070109/thalai.html

said...

http://viduthalai.com/20070109/thalai.html

இதே எரிப்புப் போராட்டத்தை பெரியார் மூன்று முறை நடத்தில் அதில் ஒரு முறை வாபஸ் வாங்கியதை நினைவுகூறும் கலைஞர். ஏன் மற்ற இரண்டை மறந்து விட்டார்?

தேசப் பாதுகாப்புச் சட்டம் பெரியார் சிலை உடைப்புக்கு எதிர்வினை தொடங்கிய பிறகுதானே நடைமுறைப்படுத்தப்பட்டது ஏன்?
தேசப்பாதுகாப்பு சட்டம் பார்ப்னியத்திற்க்கா அல்லது பார்ப்னிய எதிர்ப்பிற்க்கா? கலைஞருக்கு பார்ப்ப்னியத்தின் மீது வெறுப்பா அல்லது அதை எதிர்த்து நடத்தப்படும் எதிர்ப்பின் மீது வெறுப்பா?

ஏன் பெரியார் சிலை உடைப்பு, அதன் எதிர்வினை இரண்டையும் ஒன்றாக பார்க்கும் கலைஞர் அதில் நேரடியாக சம்பந்தப்படாத பரசுராமனை தாக்கிய் குண்டர்களை கைது செய்ய ஒரு சிறு துரும்பைக் கூட நகற்றவில்லை. ஏன் போலிசு துறை ஓசுரில் R.S.S கூலிகளின் கையாள்படையாக செயல்பட்டதை குறித்து இது வரை ஒரு நடவடிக்கைக் கூட இல்லை?

போலிஸ் மீது நடவடிக்கை எடுப்பதை விடுங்கள், பரசுராமன் மீது கேஸ் போட்டு உள்ளே தள்ளிய போலிஸு ஏன் உண்மையிலேயே சிலை உடைப்பைத் தூண்டிய சாமியாரை கைது செய்யவில்லை?

பெரியார் சிலை உடைப்பை கண்டித்து போஸ்டர் ஒட்டியவர்களைக் கூட தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளே தள்ளிய மானமிகு கலைஞரின் அரசு, பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்தி மத வெறி தூண்டும் போஸ்டர்கள் ஒட்டி தமிழகத்தை மத வெறி ரத்த சகதியில் பிறட்ட யத்தனிக்கும் இந்துத்துவ வெறியார்களையும், அமைப்புகளையும் தேசப்பாதுகாப்பு சட்டத்தை விடுங்கள், ஒரு சாதாரண பெட்டி கேசில் கூட கைது செய்யவில்லை?

ஏன் பெரியாரையும், ராமனையும் ஒரே நிலையில் வைத்து அசிங்கப்படுத்துகிறார்? ஆட்சிக்கும் வரும் பொழுதே பிராமன சங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இதுவும் ஒரு அங்கமா?

பேசியதை விடுங்கள், ஏன் பெரியார் சிலை உடைப்புக்கு எதிர்ப்பு என்ற அம்சத்தை வைத்து மக்களிடம் மீண்டும் இந்து/பார்ப்ப்னிய பண்பாட்டு எதிர்ப்பு இயக்கத்தை கொண்ட செல்ல கலைஞரும், ஆசிரியரும் முயற்சி செய்யவில்லை? அவருக்கு தரகு முதலாளி தயாநிதியின் தாத்தா பதவியும், இவருக்கு பெரியார் அறக்கட்டளை அறங்காவலர் பதவியும் நிரந்தரமாகிவிட்டதாலா?

சொல்லுங்கள் தன்மானச் சிங்கங்களே சொல்லுங்கள்?

கலைஞரின் நிலைப்பாடு என்பது பார்ப்பனியத்தின் எக்ஸ்டென்ஸன் என்பதைத் தவிர்த்து வேறு என்னவாக உள்ளது? என்ன விதத்தில் இது வித்தியாசமாக உள்ளது?

சொல்லுங்கள் தன்மான்ச் சிங்கங்களே சொல்லுங்கள்?


அந்த கலக்கரா கிழவர் பெரியார் வாழ் நாள் முழுவதும் போராடி இறந்த பிற்ப்பாடும், இன்றும் பெரியாரின் பாரம்பரியத்தை தமிழகத்தில் சொல்வத்ற்க்கு பெரியாரின் பெரியாரின் சட்டப் பூர்வ வாரிசுகளே தடையாக இருப்பதும். பெரியாரின் ஜென்ம விரோதிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதும்... சத்யராஜ் எனும் பிழைப்புவாதியின் சினிமா கவர்ச்சியை மூலதனமாகக் கொண்டு படம் எடுத்தால் கழுவிடப்படும் பாவக் கறைகள் அல்ல இவை.......

மறுகாலனியாதிக்க சூழலில், நிலபிரபுத்துவ பார்ப்பினியத்திற்க்கும், ஏகாதிபத்திய அடிவருடித்தனத்தும் இடையே இருப்பது போல தெரியும் ஒரு சின்ன முகமூடி கறைந்து வருகிறது... ஒரு கட்டத்தில் பார்ப்ப்னிய எதிர்ப்பு நிலைப்பாடு என்பது தவிர்க்க இயலாமல் ஏகாதிபத்திய எதிர்ப்புடன் பொருதும் வரலாற்று நிகழ்வு நடக்கும்.... அப்போழுது உங்களது இந்த பாவக் கறைகள் உங்களைப் பார்த்து பல்லிளிக்கும்...
அந்தோ.... பரிதாபம்.... பாவமன்னிப்புக்கு கொடுக்க பலியாடுகள் இல்லாமல் தவிப்பீர்கள் அப்பொழுது.... வோட்டுப் பெட்டிகள் காலிக் குடங்களாய் காற்று வாங்கி ஒப்பியிருக்கும்....


அசுரன்

said...

In 2002 when there was genocide in Gujarat DMK,PMK and MDMK were happy with NDA and did not even
issue a threat to NDA.When Modi
was chosen again by BJP to be C.M
they did not protest.Veeramani
supported Jayalalitha when she
dismissed T.N.govt. employess.
He shook hands with Uma Bharathi
when she visited Periyar Thidal
and declared that both would work
together for welfare of OBCs.What is happening now is a logical extension of all these. So dont
expect anything radical from DMK
or DK. Dayanithi Maran is related to 'The Hindu' family by marriage. In the past Stalin had visited Kanchipuram and had met Shankaracharya with
his family.So how will they be anti-brahmin or anti-Hindutva.

Relax and be cool.Perhaps you expected too much from them.

said...

பு.ஜ கட்டுரையின் எதிர்வினை பல விடையத்தை எடுத்துக்காட்டுகின்றது. ஒரு சமூக அமைப்பின் செயலற்ற தன்மையை, பெரியாரின் பெயரில் சோரம் போகும் வக்கிரத்தையும், இந்து பார்ப்பனீய எதிர்ப்பு நாடகமாடும் கட்சிகளின் அரசியல் விபச்சாரத்தையும் எடுத்துக்காட்டுகின்றது.

ஒரு அரசும் அதன் இயந்திரமும் ஒரு வர்க்கத்தின் வன்முறை கருவி என்பதையும், இது ஆளும் பார்ப்பனீய கழிசடைகளின் கோமனமாக இருப்பதையும் எடுத்துக்காட்டுகின்றது. அனைவருக்கும் பொது நிதி, அனைவருக்கும் பொதுச் சட்டம் என்று எதுவும், சாதாரண மக்களுக்கு கிடையாது என்பதை துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது. மனுதர்மம் தான், கருணாநிதியினது திராவிடமாக இருப்பதை, மறுபடியும் உதைத்து உறுதிசெய்து விடுகின்றது.

இக்கட்டுரை பார்ப்பனீயத்தை எப்படி எதிர் கொள்ளும் வேண்டும் என்ற நடைமுறை சாhந்த சொந்த ஆற்றலை ஒருங்கே வெளிப்படுத்தி நிற்கின்றது. இதைவிடுத்த இதை விவாதத்துக்குரிய ஒரு பொருளாக்குவது, அதைவைத்து அரசியல் செய்வது என அனைத்தையும், அவர்கள் போராட்டத்தின் ஊடாகவே எள்ளிநகையாடிவிடுகினார்.

மக்கள் போராட்டம் என்றால் என்ன என்பதையும், மக்கள் என்றால் என்ன என்பதையும் இக்கட்டுரை இயல்பான கோபத்துடன் எமக்கு இடித்துரைக்கின்றது.

இக்கட்டுரை எமத பதிவில் நாம் முதலீட்ட போது யாரும் விவாதிக்க முன்வரவில்லை. ஏன் என்பது புரியவில்லை. விரையில் பு.க வெளிவந்த விடுதலைப் போராட்டத்pன் வீர மரபு தொடராக வெளியிட உள்ளோம். பார்க்காதவர்கள் அதை படிக்க முடியும்.

said...

Understand one thing.Today DMK has allied with Congress.Tomorrow it may ally with BJP.Hence Karunanidhi will not take severe action against BJP or RSS.He may
take some symbolic action against them or warn them.It was he who
participated the Village Poojaris
Conference organised by VHP
in Tamil Nadu.To expect that
such a person would ban VHP
or RSS or put restrictions
on them is a day dream.
For him naxalites and ML
groups are always enemies.
For all states and Centre
they are enemies.So he will
have no qualms in joining with
anyone in suppressing them.
BJP may not be an ally today
but not an enemy to be crushed
by his power.The same applies
to RSS,VHP and Kanchi Mutt.
Hence you are expecting too much from him or DK.Periyar has to be saved first from his 'followers'
and 'disciples'.

said...

///
பு.ஜ கட்டுரையின் எதிர்வினை பல விடையத்தை எடுத்துக்காட்டுகின்றது. ஒரு சமூக அமைப்பின் செயலற்ற தன்மையை, பெரியாரின் பெயரில் சோரம் போகும் வக்கிரத்தையும், இந்து பார்ப்பனீய எதிர்ப்பு நாடகமாடும் கட்சிகளின் அரசியல் விபச்சாரத்தையும் எடுத்துக்காட்டுகின்றது.

ஒரு அரசும் அதன் இயந்திரமும் ஒரு வர்க்கத்தின் வன்முறை கருவி என்பதையும், இது ஆளும் பார்ப்பனீய கழிசடைகளின் கோமனமாக இருப்பதையும் எடுத்துக்காட்டுகின்றது. அனைவருக்கும் பொது நிதி, அனைவருக்கும் பொதுச் சட்டம் என்று எதுவும், சாதாரண மக்களுக்கு கிடையாது என்பதை துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது. மனுதர்மம் தான், கருணாநிதியினது திராவிடமாக இருப்பதை, மறுபடியும் உதைத்து உறுதிசெய்து விடுகின்றது.
///

உண்மையில் இந்த கட்டுரை படிக்கும் பெரியார் கொள்கை பிடிப்புள்ள திமுக திக ஆதரவாளர்கள் ஆழ்ந்த மௌனம் சாதிக்கிறார்கள். இது அவர்களின் எதிர்ப்பை அல்ல மாறாக அவர்கள் இந்த கருத்துக்களுடன் ஒத்துப் போவதையே காட்டுவதாக கருதுகிறேன்.

தமிழ் சர்க்கிளின் வருகைக்கு நன்றி...

தங்களது வருகை உற்சாகமளிக்கிறது


// ஏன் என்பது புரியவில்லை//
தலைப்பு, விளம்ப்ரம்(அதிக நேரம் இணையத்தில் செலவழிக்க முடிவதால்) காரணமாக இருக்கலாம். மேலும் தமிழ் சர்க்கிளில் விவாதிப்பது குறித்த ஒரு தயக்கம் இருக்கலாம். ஏனெனில் வெற்றி வாய்ப்பு இருக்கும் இடத்தில்தானே போட்டியிட வருவார்கள். இது ஓரளவு முதிர்ச்சியடைந்த எழுத்துக்களை கொண்டவர்களின் தளங்களில் காணக் கிடைக்கும் விசயம்தான். இந்த கட்டுரை தமிழ் சர்க்கிளில் இடப் பட்டதை ரவிசிரினிவாசின் கட்டுரை படித்த போதுதான் தெரிய்வந்தது.



// பு.க வெளிவந்த விடுதலைப் போராட்டத்pன் வீர மரபு தொடராக வெளியிட உள்ளோம். பார்க்காதவர்கள் அதை படிக்க முடியும். //

ஆவலுடன் காத்திருக்கிறோம்.

அசுரன்

said...

//when did the public came to protect the struggles that were staged peacefully? what about kalinganagar tribal people struggle against Land acquisition? what about the ongoing singur and nandigram struggle? what about irom sharmila's ongoing unbelievable, unrepentant six year fast? is india stood as one in support of Manipur? why did the 11 mothers of manipur were arrested under NSA for staging a nude protest condemning thangjam manorama's murder and rape? as marx said, my instrument for the struggle is not determined by me but its the enemy who determines it.if the ruling class deals issues with dialougues instead of lathis,bullets and tearbombs, no genuine mass movement will indulge in violence. peace is synonymous with justice and without justice there can never be peace.if someone insist on peace when injustice is on stride, then however naive and whole-hearted his call may be but he indirectly supports injustice.
imagine of a 'peaceful' protest in Iraq in support of saddam hussain or think of a peaceful protest in gujarat for rehabilation of the ghettoised moslem people and how 'peacefully' they would be received.
//

தோழர் அரசுபால்ராஜ் அவர்களின் அருமையான எதிர்வினைக்கு வாழ்த்துக்கள்

அசுரன்

said...

வனக்கம்,புதிய ஜனனாயகம் கட்டுரை மிகவும் சிற்பாக இருந்தது.திகா வற்ட்டு நாத்திகவாதிகளின் கையாலாகாதனத்தை கட்டுரை கிழித்தெறிந்துள்ள்து.பெரியார் சிலையை தகர்தது தமிழகத்திற்கு மாபெரும் அவமானம்,பாப்பன வெறியர்களோடு வற்ட்டு நாத்திகர்களையும் மக்களிடம் அம்பலப்படுத்த வேன்டும்

said...

//மக்களை மாக்களாக கருதி இந்த பெரியார் சிலை உடைப்பு சம்பவத்தை
மக்களிடம் வீச்சாக கொண்டு செல்ல வேண்டிய கடமையிலிருந்து அவர்
சீடர்கள் தவறிய பொழுது //

சிலை உடைப்பு சம்பவத்தை நீங்கள் மக்களிடம் கொண்டு சென்றிருக்கலாமே!
இந்த வாய்ப்பை நழுவவிட்டு வன்முறையில் இறங்கியதால், இன்று
சிலை உடைப்பைப் பற்றி பேசாமல் நயமாக அயோத்யா மண்டபத்தைப்
பற்றி கதை எழுதுகிறார்கள். முதலில் வம்புக்கிழுத்தவர்கள் நல்லவர்களாக
மாறி எதிர்த்தவர்களை ரவுடிகளாக காட்டுகிறார்கள். அவர்கள் விரித்த
வலையில் விழுந்துவிட்டீர்கள் என்றே தோன்றுகிறது.

said...

'தாய்' மற்றும் 'வீரம் விளைந்தது' புதினங்களின் கதாநாயகன் பாவெலின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றீ

அசுரன்

*********


மக்களிடம் விவாதத்தை கிளப்பியதே இந்த எதிர்வினைதான். மேலும் இந்த எதிர்வினை என்பது மக்களிடம் வீச்சான பிரச்சாரத்தையும் உள்ளடக்கியேதே. மக்களிடம் சிலை உடைப்பின் அரசியல் குறித்து எந்த பிரச்சாரமும் செய்யாமல் இருந்ததின் மூலம் இந்து மத வெறீயர்களின் கருத்துக்கும் பலம் சேர்க்கும் வேலையைத்தான் திமுக, திக கட்சி பெரியாரிஸ்டுகள் செய்தார்கள். எதிர்வினை இல்லையெனில் பெரியார் சிலை உடைப்பபு பத்தோடு பதினொன்றாவது சம்பவம், ஆயினும் அது சொல்லும் இந்து மத வெறிஅரசியலான 'பெரியார் சிலையை அங்கு வைக்க வேண்டிய அவசியமென்ன' என்ற விசயம் மட்டும் மிக தெளிவாக மக்கள் மனதில் இறங்கியிருக்கும். இப்பொழுது அப்படி ஒரு பொதுக் கருத்து கருக் கொள்ளவில்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

இந்த அம்சத்தை, அதாவது மக்களை அரசியல் படுத்த வேண்டும் என்ற அம்சத்தை ஏன் உங்க மானமிகுக்கள் செய்யவில்லை? ஏனேனில் இவர்களின் பதவி(தரகு வர்க்க தாத்தா, அறக்கட்டளை தலைவர்) வோட்டு சீட்டு போதும், கொள்கை கோட்பாடு எல்லாம் அடகு கடையில் வைத்து பல வருடம் ஆகிவிட்டது. இதைத்தான் இந்த கட்டுரை பேசுகிறது.

இது தவிர்த்து பார்ப்ப்னியத்துக்கு மிக ஓப்பனாக சட்டி தூக்கும் வெட்கக் கேடான கேவலத்தை என்னவென்று சொல்வது? இது குறித்து அனானி எந்த கருத்தும் சொல்லவில்லையே ஏன்?

அசுரன்

said...

///முதலில் வம்புக்கிழுத்தவர்கள் நல்லவர்களாக
மாறி எதிர்த்தவர்களை ரவுடிகளாக காட்டுகிறார்கள்.////


அப்படியாரும் காட்டுவதாக தெரிய்வில்லை, அப்படி காட்டுப்வர்கள் இல்லையென்ற அர்த்தத்தில் இதை சொல்லவில்லை.

சரி... காட்டுபவர்க்ள் யார்? நம்ம கலைஞர் மான்புமிகு கருணாநிதியும், மானமிகு வீர?மணியுமே இந்த வேலையை செய்கிறார்கள்.

ஏனேனில் ஓட்டு அரசியலுக்கும், ஏகாதிபத்திய தரகு அரசியலுக்கும் பார்ப்ப்னியம் இவர்களின் உற்ற நண்பனாக இருந்து உதவுகிறது. ஆனால் இந்த அம்சங்களில் ம.க.இ.க, பெரியார் திக அமைப்புகள் இவர்களின் பிழைப்புக்கு வேட்டு வைக்கும் அரசியலை செய்கிறார்கள் - அதனால் எதிரிகள்...

அசுரன்

said...

Capitalism is encouraging the Nazi BJP's Ram to finish off Marxist-Periyarist anti-Ram parochial crusaders. However, Capitalism will then have to handle the neo-nazi nationalism that will turn against its globalization crusade. It will then need left-wing crusade to rescue it from nationalism. In the end they will become friends as that between China and US. Even Chavez of Venezuela will join hands with moderate capitalists like the Democrat Party in the US...

Related Posts with Thumbnails