TerrorisminFocus

Tuesday, January 27, 2009

ஒரு இந்தியனாக, சிங்களர்கள் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகிறேன்!!

லங்கை அணியுடன் கிரிக்கெட் விளையாட உள்ள இந்திய அணி தோல்வியடைந்து சிங்கள அணி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இந்தியர்கள், இந்தியர்களாக அங்கீகரிக்கப்படும் தகுதியுடையவர்கள், சிங்களர்கள் வெற்றியடையவே விரும்பும் போது ஒரு இந்தியனாக நானும் சிங்களர்களின் வெற்றியை விரும்புவது தவறில்லை என்று நம்புகிறேன்.

எனது ஜெய் ஹிந்த் வெறியை இங்கு பறைசாற்றுவதில் பெருமையடைகிறேன்.

தேச பக்தியுள்ள இந்தியர்களின் நல்லாதரவையும் இங்கு வேண்டுகிறேன்.

அங்கே படுகொலை செய்யப்படும் ஒவ்வொரு குழந்தையின், ஒவ்வொரு மகனின்/மகளின், ஒவ்வொரு கனவனின்/மனைவியின் உடலிலும் இந்திய துப்பாக்கி தோட்டாக்களும், பீரங்கி குண்டு சில்லுகளும் இருக்கும் என்பதை எண்ணி நாம் புளங்காகிதப்பட வேண்டிய நேரமிது.

இந்தியர்களாகிய நாம் இல்லாத இடமே இல்லை என்பதை எண்ணி பெருமைப்பட வேண்டிய நேரமிது. சந்திரனில் மட்டுமா நமது கருவிகள் தரையிறங்கியுள்ளன?

இதோ சிங்களர்களின் கைகளிலிருந்த இந்திய துப்பாக்கிகளின் கத்திகள்கூட ஈழத் தமிழ் பெண்களின் மார்புகளையும், யோனிகளையும் பதம் பார்த்து நமது இந்திய கருவிகளின் அடையாளத்தை சதையிறக்கிச் சென்றுள்ளன. ஜெய் ஹிந்த்!!

*****************

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது பிரதேச ஆதிக்கத்தை நோக்கமாக கொண்டதே ஆகும். இது தெரிந்திருந்தும் இந்தியாவிடமிருந்து எதையாவது பெற்று தப்பித்துவிடலாம் என்பது போல மாயையை உருவாக்கும் ஈழ ஆதரவு ஆட்களை இங்கு கடுமையாக விமர்சிக்கிறேன்.

உலகளவில் விடுதலை போராட்டங்களின், தேசிய விடுதலையின் எதிரி ஏகாதிபத்தியம் எனில் தெற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்க அடிவருடியான இந்தியாதான் எதிரி. அப்படியிருக்கு அமெரிக்க, இந்திய ஆதரவை வேண்டி நிற்பது ஏமாற்றே ஆகும்.

இந்த உண்மையை உற்று நோக்கும் திரணியற்ற, உரக்க அறிவுக்கும் துணிவற்ற ஈழ ஆதரவு ஆட்களை மிகக் கடுமையாக விமர்சிக்கிறேன். புலம்பி திரிவதில் எந்த பிரயோசனமும் இல்லை. பின் மண்டையில் துப்பாக்கி வைத்து மிரட்டும் ஆண்டையிடம் நியாயம் பேசுவதற்கு ஒத்த நாய்த்தனம் இது. சாவின் விளிம்பில் நம்மிடம் தெரிக்க வேண்டியது தார்மீக அவேசம்தானேயொழிய கழிவிரக்கமல்ல.

ஈழ விடுதலை என்பது மக்களை சார்ந்து நின்று மக்களால் பெறப்படவேண்டும். மாறாக மக்களின் சார்பில் நாம் பினாமி யுத்தம் நடத்தி பெற முடியாது. விடுதலை புலிகளின் அரசியல்லற்ற ஆயுத சாகச வழிபாடு இன்று ஈழ விடுதலையை கரை சேர்த்துள்ள இடம் இதுதான்.

இந்த வாழ்வா சாவா தருணத்திலாவது தமது தவறுகளை பரிசீலனை செய்து விடுதலை புலிகள் சரியான நிலைப்பாட்டுக்கு வருவார்கள் என்ற நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில் சந்தர்ப்பவாதத்தின் கடை கோடி எல்லைக்கு சென்றனர் புலிகள்.

சங்காராச்சாரியாரிடமும், RSS கும்பலிடமும், இந்து பார்ப்பன பயங்கரவாதிகளிடமும் ஆதரவு கோரிப் பெற்றது புலிகளை இன்னும் இன்னும் பலவீனமாக்கவே செய்யும். புலிகளுக்கு ஆதரவான ஜனநாயக சக்திகளை விரட்டியடிப்பதாகவே இந்த நடவடிக்கை இருக்கும்.

இந்திய மேலாதிக்க கனவுகளுக்கும் அதில் பொதிந்துள்ள இந்திய தரகு முதலாளிகளின் பேராசைகளுக்கும், ஏகாதிபத்திய நலன்களுக்கும் எதிராக இந்திய மக்களின் கருத்தை ஆதிக்கம் செய்யவல்ல அரசியல் கொண்ட ஒரு செயல்பாடே இந்திய ஆளும் வர்க்கங்களை ஈழ போராட்டத்தில் பின்னடையச் செய்யும். மாறாக இந்திய ஆளும் வர்க்கங்களிடையே உள்ள சிற்சில முரன்பாடுகளை மட்டும் வைத்தே ஒட்டு மொத்தமாக அவர்களை பின்னடையச் செய்ய முடியும் என்று நம்புவது படு முட்டாள்தனமானது.

ஆனால் அப்படிப்பட்ட நம்பிக்கையைத்தான் ஈழ விடுதலையின் ஒட்டு மொத்த தமிழக பிரதிநிதிகளாக முன்னிறுத்திக் கொள்ளும் பிழைப்புவாதிகள் மக்கள் மனதில் விதைத்து வருகிறார்கள்.

இந்திய அரசை விமர்சனம் செய்வதில் அவர்களுக்கு இத்தனை தயக்கம். அதன் நோக்கங்களை அம்பலப்படுத்துவதற்கு இத்தனை பயம். கிசு கிசு போல பேசுகிறார்கள். ஆணித்தரமாக அடித்து பேச தொண்டை குழி தயங்குகிறது.

ஆனால் இதே வாயால்தான் கூசாமல் தமிழனின் தலைகுனியத்தக்க மோன நிலையை விமர்சிக்கிறார்கள். இது தலைகுனியத்தக்கதுதான் ஆனால் இந்த மோனநிலைக்கு காரணம் மேற்சொன்ன ஆட்களுடைய சந்தர்ப்பவாத, மோசடி அரசியல்தான் என்பதையும், ஏகாதிபத்தியத்தின் நுகர்வு கலாச்சாரம்தான் என்பதையும் விமர்சனம். சுயவிமர்சனம் செய்து கொண்டு தமிழனை விமர்சிப்பதே தகும்.

புலிகளை சிங்களர்கள் அழித்துவிடுவார்கள் என்பதை நான் நம்பவில்லை. அது நடக்கவே நடக்காது. ஆனால் புலிகள் இதே போல செயல்படுவதை தொடர்ந்தால் ஈழ மக்களே அவர்களை வரலாற்றின் பக்கங்களில் கரைத்துவிடுவார்கள். உணர்ச்சிவசப்படும் புலி ஆதரவாளர்கள் யாதார்த்தத்தை கண் கொண்டு நோக்க வேண்டப்படுகிறார்கள்.

இதோ கண் முன்னே ஒரு சமூகம் அழிகப்படுகிறது. இன்றைக்கு சிங்களர்களின் கைக்கு வந்துள்ள பிரதேசங்களில் பன்னாட்டு மூலதனம் வெறி கொண்டு இறங்கும். நுகர்வு கலாச்சாரம் பரப்பப்படும். பல ஆண்டுகளாக யுத்தம் ஏற்படுத்திய காயங்களை ஏகாதிபத்திய நுகர்வு கலாச்சார போதையில் மூழ்கி மக்கள் மறக்க முயலுவார்கள். இதனை எதிர்கொள்ளூம் சரியான அரசியலை கொண்டிராத ஒரு இயக்கமோ ஏகாதிபத்தியத்தின் இந்த தாக்குதலில் பழம் பொருள் காட்சியகத்தின் பெட்டகங்களில் முடங்கிவிடும்.

ஏனேனில் மக்களின் பினாமிகள் வரலாற்றில் அடையாளம் இழப்பதுதான் எப்போதுமே நடந்துள்ளது.

ஆனால் ஈழ விடுதலை? அது வரலாற்றின் தேவை. அது இன்றைக்கு இல்லாவிடிலும் என்றைக்காவது தனக்கான சரியான வாகனத்தை தேர்ந்தெடுத்து கரை சேர்ந்துவிடும்.

அசுரன்

ஈழம்: தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் போராட்டம் !

கருணாநிதியின் இறுதி நாடகம்?

ஈழம் - இந்தியா முதுகில் குத்துவது ஏன்?

கருத்துப்படங்கள்

விடுதலைப்புலிகள் தவறுகளை உணர்ந்து திருந்தி விட்டார்கள்!?

தமிழீழம் என்ற கோரிக்கை அரசியல் ரீதியாகவே மரணித்துவிட்டது

இந்தியாவும் தமிழீழமும்

3 பின்னூட்டங்கள்:

said...

ஈழம் பற்றி கவிதை
எழுதியுள்ளேன்!!
நேரமிருப்பின்
கருத்துரை
தரவும்

அன்புடன்
தேவா...

said...

துரோகத்தை மொத்தமாய் குத்தகை எடுத்த இவ்வரசின் கட்டிடங்கள் உடைபடுவதற்கு கலகக்குரல்களின் எண்ணிக்கை ஆயிரமல்ல லட்ச,கோடிகளாக பெருகவேண்டும்,இன்னும் நாம் பார்வையாளராகவே இருந்தால் ஈழத்தில் மட்டுலல்ல இங்கேயும் தமிழினம் மொத்தமாய் அழிக்கப்படும்.ஒப்பாரிகளோ ஈழத்தமிழனின் கதறல்களை பார்த்து கண்ணை கசக்குவது மட்டும் பலன் தராது, ஈழத்தில் போரினை நடத்திக்கொண்டு இரூக்கும் இந்திய அரசினை எதிர்க்காத நமது கண்ணீர் செத்துக்கொண்டிருக்கும் அம்மக்களை சுட்டெரிக்கவே துணை போகும்.

said...

சென்னையில் ஈழத்தமிழருக்காக தீக்குளித்த பத்திரிகை ஊழியர் மரணம்!

ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடியை சேர்ந்த வாலிபர் சென்னையில் தீக்குளித்த சம்பவம் தமிழகத்தைத் தாண்டியும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அருகே புலியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன். இவருடைய மகன் முத்துக்குமரன். இவர் பாமக நிறுவனர் ராமதாஸ் மகள் கவிதா நடத்தும் பெண்ணே நீ மாத இதழில் டி.டீ.பி. ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்தார்.

இவர் இன்று காலை 10.45 மணி அளவில் நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரிபவன் அலுவலகம் அருகே 10 லிட்டர் மண்ணென்ணெய்யோடு சென்றார். அப்போது 10 லிட்டர் மண்ணென்ணெய்யையும் தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. விஜயலட்சுமி, தீக்குளித்த முத்துக்குமரனை தடுத்து நிறுத்தி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

ஆனால் முத்துக்குமரனின் உடல் தீக்குளித்ததில் பெரும் காயங்கள் ஏற்பட்டு, தீவிர சிக்கிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முத்துக்குமரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

முத்துக்குமரனின் இந்த தீக்குளிப்புச் சம்பவம் ஈழத்தமிழர்களுக்காக போராடும் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தமிழகத்தில் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், பொதுமக்கள், மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பிலும் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் முத்துக்குமரனின் தீக்குளிப்புச் சம்பவம் தமிழகத்தைத் தாண்டியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், பெரும் அதிர்ச்சியையும் தந்திருக்கிறது.


ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் தீக்குளித்த தூத்துக்குடி வாலிபர் மரணம்

இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் முத்துக்குமரன் சென்னையில தீக்குளித்தார்.

இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஈழத்தமிழர்கள் படுகொலையை கண்டித்தும் தூத்துக்குடியை சேர்ந்த் வாலிபர் முத்துக்குமரன் என்பவர் சென்னை சாஸ்திரி பவன் அருகே (பாஸ்போர்ட் அலுவலகம்), ஈழத்தமிழர்களுக்காக ஆதவான கோஷங்களை எழுப்பிக்கொண்டே மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. விஜயலட்சுமி அவரை காப்பாற்றி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டது. முத்துக்குமரன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார்.


செய்தி: நக்கீரன்

Related Posts with Thumbnails