TerrorisminFocus

Thursday, June 28, 2007

மாமாவுக்கு சோப்பு போடும் அடிவருடி - வீரமணி தொடர்கிறார்

டாலர் செல்வன் பலமுறை தனது புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு நம்மிடம் அம்பலமானவர்தான். ஒரு கட்டத்தில் இதற்க்கு மேல இவரை அவமானப்படுத்த, அம்பலப்படுத்த ஒன்றுமில்லை என்றாகிய பிற்ப்பாடு அவரது புரளி பதிவுகளுக்கு எல்லாம் பின்னூட்டங்களிலேயே எதிர்வினை செய்வதே அதிகம் என்று புரிந்து கொண்டு அதையே அதிக பட்சம் செய்து வந்தேன்.

ஆனால் தற்போது நட்பு சக்திகளடையே ஏற்ப்பட்டுள்ள கருத்து வேறுபாட்டில் தனது அடிவருடி வேலைக்கு மீண்டும் அடித்தளம் அமைத்துக் கொள்ளும் முயற்சியாக பெரியார் புரா குறித்து மீண்டும் ஒரு அகாசப் புளுகை அவிழ்த்து விட்டுள்ளார் டாலர் செல்வன். இதற்க்கு முக்கியத்துவம் கொடுத்து பதிவிடுவதே நலம் என்று கருதியதால் தனிப்பதிவு.

ஏதோ பெரியார் புரா நடந்து வரும் இடங்கள் எல்லாம் பட்டினியில் தவித்தது போலவும், அங்கு பிழைப்புக்கு வழியே இல்லாமல்தான் பல நூறாண்டு காலமாக மக்கள் வாழ்ந்து வருவது போன்றும், வீரமணி கும்பல் அவர்களுக்கு வாழ்வளிக்க வந்த அவதாரங்கள் போலும் புனித வட்டம் கட்டி உடன்பிறப்புகளை புளங்காகிதப் பட வைத்துள்ளார் டாலர். துரதிருஷ்டவசமாக சில எளிய உண்மைகளை பார்க்கும் போதே டாலரின் வழமையான வார்த்தை ஜாலங்களுக்கு பின்னால் உள்ள அடிவருடியின் மோடி மஸ்தான் வித்தை கண்ணுக்கு புலப்படுகிறது.

குறிப்பாக, ஏற்கனவே புதிய ஜனநாயகத்தில் வந்திருந்த கட்டுரையும் சரி, அதனையொட்டி அசுரனில் பிரசூரமான சில கட்டுரைகளும் - இந்திய வளங்களை ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாக மாற்றி, இந்திய கிராம வளங்களை சுரண்டும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே புரா திட்டங்கள செயல்படுவதை விரிவாக அம்பலப்படுத்தியிருந்தன. அந்த அம்சத்தில் எந்தவொரு எதிர்வாதமும் வைக்க திராணியில்லாத டாலர் அடிவருடி, புரா திட்டம் ஏழை விவசாயிகளின் வாழ்வை மலர வைக்கும் அற்புதம் என்ற மாற்றுப் பிரச்சாரத்தை முன்னுக்குக் கொண்டு வந்துள்ளார். இந்த பிரச்சாரத்திற்க்கு அடிப்படையாக அந்த கிராமங்கள் எல்லாம் பிழைக்க வழியற்ற பாலைவன பூமிகள் போல ஒரு சித்திரத்தை புகைப்படங்கள் உள்ளிட்ட சாத்யமான வித்தைகள் அனைத்தையும் உபயோகித்து நிறுவ முற்பட்டுள்ளார்.

ஆனால் உண்மை வேறாக உள்ளது என்று இன்னொரு தோழர் பின்னூட்டத்தில் ஒரு கட்டுரையை விட்டுச் சென்றுள்ளார். அவரது பெயர் புல்டோசராம். வாங்க புல்டோசர்... வந்து சமூக ஏற்றத்தாழ்வுகளை உபயோகித்து கூட்டிக் கொடுக்க அலையும் டாலர் அடிவருடிகளை உடைத்து நொறுக்குங்கள்....

இது சம்பந்தப்பட்ட ஒரு முந்தைய கட்டுரையில் சில வரிகள் வரும் அதனை இங்கு ஞாபகப்படுத்துவது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

@@@@@
ஆம் லாபம் வருமென்றால் மூங்கில் பயிரிட வேண்டியதுதானே. பிழைப்புவாதம் பேசும் டாலர் கண்மணிகளே உங்கள் வீட்டுப் பெண்களை கொஞ்சம் கூட்டிக் கொடுங்களேன் சில எச்சில் டாலர்களை உங்கள் மணம் குளிரும் அளவு மலையாய் அள்ளி குவிக்கிறேன். செய்வீர்களா அடிவருடிகளே?
@@@@@

புதிய ஜனநாயகத்தில் வந்ததொரு விரிவான கட்டுரை: பெரியார் புரா : தி.க.வீரமணியின் ஏகாதிபத்திய சேவை


புரா திட்டத்தில் உள்ள அடிப்படையான பிரச்சனையை மட்டும் பேசும் கட்டுரை:
ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னொருவன் கன்னத்தை காட்டிக் கொடு - புதிய புரா

இந்த அத்தனை விவாதத்திற்க்கும் காரணமான கட்டுரை:
வீர'Money' - சுயமரியாதை பிரச்சாரமா? மாமா வேலை விபச்சாரமா?

இத்துடன் அவர்களிடம் சில அடிப்படைக் கேள்விகள், ஏன் ஏகாதிபத்தியத்திற்க்கு தூக்கு தூக்கியே இந்திய விவசாயம் பிழைக்க வேண்டும் என்ற நிலையை அரசு உறுதிப்படுத்துகிறது? இஸ்ரேல் எனும் கட்டாந்தரையில் பயிர் செய்ய துணிந்தவர்கள் எங்கே ஏற்கனவே போகம் விளைந்த, தண்ணீர் வசதியிருக்கும் இடங்களையும் SEZக்களுக்கும், மூங்கில், கட்டாமணக்கு, அவுரி, பூ என்று மண் வளத்தை அழிக்கும் பயிர்களை பயிரிட மாமா வேலை செய்யும் புராக்கள் எங்கே?

அல்லது இந்திய விவசாயத்தின் வளர்ச்சிதான் தன்னிறைவை அடைந்து உபரியை விற்க்கும் நிலையில் உள்ளோமா? தரங்கெட்ட கோதுமையை ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்த கேவலத்தையும் இங்கு நினைவு கூற விரும்புகிறேன்.


இப்போ டாலரின் புளுகு மூட்டைகளுக்குள் நம்மை புல்டோ சரில் வைத்து அழைத்துச் செல்ல வருகிறார் தோழர் புல்டோ சர்.

***********************

மைனர் கெட்டால் மாமா; மாமா கெட்டால்?

தளபதி கெட்டால் தமிழர் தலைவர்; த.தலைவர் கெட்டால்?



பெரியார் புரா எனும் ஏகாதிபத்திய சதியை 'புதிய ஜனநாயகம்' பத்திரிக்கை ஏற்கெனவே அம்பலப்படுத்தி இருக்கிறது. அதனை இணைப்பில் காண்க.

மாமா வீரமணியின் புரா- அடியாள் சேவை முப்போகம் நெல் விளையும் (விளைவது அரிசி அல்ல) நிலத்தில்தான் தொடங்கப்பட்டுள்ளது என்று நாம் எவ்விடத்திலும் சொல்லவில்லை. அதே நேரத்தில் அந்த 65 புரா கிராமங்களில் இருக்கும் நிலங்கள் வறண்ட பொட்டல்களும் அல்ல. காவிரி டெல்டாவை ஒட்டி இருப்பதனால் மண்வளமும் நிலத்தடி நீரும் உள்ளது. மழைக்காலத்தில் நெல்லும், கோடையில் உளுந்து, காய்கறிகளும் பயிரிடப்பட்ட நிலங்கள்தான் புராவின் 65 கிராமங்களும்.

பழையபட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் பெரியார் மருந்தியல் கல்லூரி மூலிகைப்பயிர் பிரச்சாரம் செய்யும் முன்னர் அவ்வூர்களில் இரு போகம் விளைச்சல் செய்து வந்ததை அவ்வூர் மக்களும், பிரச்சாரம் செய்யப்போனவர்களும் ஒத்துக்கொண்டுள்ளனர்.

என்ன வகை மூலிகைகள் வளர்க்கிறார்கள்? அவுரி.. அவுரி எதற்கு? வெளிநாட்டாருக்கு இயற்கை சாயம் தயாரிக்கவும், பேதி மாத்திரை உள்ளிட்ட சில வகை மருந்துகள் பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கவும். ஆக வெளிநாட்டில் பேதி எடுக்க உள்நாட்டில் பட்டினி போடுகிறது புரா. வெள்ளைக்காரன் 19 ஆம் நூற்றாண்டில் பஞ்சங்களை உருவாக்க பயிரிடச் சொன்ன அவுரியை, உள்ளூர் மாமா வீரமணி பயிரிடச் சொல்கிறார், அவரின் கல்லாவை ரொப்ப.

அச்சம்பட்டி மக்கள் சாப்பாட்டுக்கே திண்டாடும் வகையில் அவ்வூரில் சகாரா பாலைவனமும் இல்லை. அங்கு புரா திட்டத்தில் பெரியார் மணியம்மை கல்லூரி முதல்வர் ராமச்சந்திரனின் உறவினர்கள் லாபம் சம்பாதிக்க என்றே தொடங்கப்பட்ட கயிறு தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான மூலப்பொருளை வழங்கும் தென்னைகள் எனக்குத் தெரிந்தவரை வளமான இடத்தில்தான் பயிராகும்.

மேலும் புரா திட்டப்படி பெ.ம.பொ.கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகளைக் கொண்டு எடுக்கப்பட்ட சர்வேக்களின்படி,

குமாரபுரத்தில் ஏதேனும் தொழில் ஒன்றை செய்வதாகச் சொல்லி இருக்கும் 577 பேர்களில் 485 பேர் விவசாயிகள்.
பழையபட்டியில் 261 பேர்களில் 206 பேர் விவசாயிகள்.
அச்சம்பட்டியில் 137 பேரும் ராயமுண்டன்பட்டியில் 160 பேர்களும் வீரமரசன்பேட்டையில் 116 பேர்களும் விவசாயிகளே. எஞ்சிய மக்கள் தொழிலாளிகள் என்கிறது அந்த சர்வே.

இந்தத் தகவல்களையும் அதே பெரியார்புரா இணையதளம் தான் சொல்கிறது. இவ்வாறு பெருவாரியாக விவசாயம் செய்பவர்களே இருக்கும் ஊரை ஏதோ விவசாயமும் தொழிலும் இல்லாத ஊராகச் சித்தரித்துப் புளுகுவதன் மூலம் நம் மீது அவதூறு செய்ய முயலும் கூமுட்டைத்தனத்தை விட்டு விட்டு யோசிக்க வேண்டும். அதாவது பகுத்தறிவை பயன்படுத்த வேண்டும்.

நெல்விளைச்சலில் லாபம் இல்லைதான். அதற்கு என்ன செய்ய வேண்டும்? அதிக விலை நிர்ணயிக்க சொல்லி அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். அதை விட்டு விட்டு டாலருக்காக எதை வேண்டுமானாலும் செய்யச் சொல்வது எப்படி புத்திசாலித்தனமாகும்? நெல்லை விட்டுவிட்டால் நாளை உண்ண என்ன செய்வது? கப்பலுக்காக காத்திருப்பதா?

பொண்டாட்டியும் புருஷனும் இன்னைக்கு வேலைக்கு போனால்தான் ஏதோ வாழ்க்கையை ஓட்ட முடிகிறது. கூலியைக் குறைத்து ஒட்டச்சுரண்டுகிறார்கள். இச்சுரண்டலை எதிர்த்துப் போராடுகிறார்கள். போராட்டத்தில் இணைவது நேர்மையான செயல் என்கிறோம் நாம். வீரமணி போன்றவர்கள் சொல்வது என்ன என்றால்.."கூலி குறைவாகத்தான் இருக்கும். வேலைக்கு போவதை விட்டு விடு.. பவுடர் பூசி சிங்காரி..கிராக்கி பிடித்து தருகிறேன்" என்கிறார். இதைத்தான் மாமா வேலை என்கிறோம்.

புல்டோசர்


Related Articles:

மாமா வீரமணியும் மயங்கிக் கிடக்கும் மாப்பிள்ளைகளும்

24 பின்னூட்டங்கள்:

said...

இதுக்குப் பேர் தான் கும்மாங்குத்தா?

எலி பதுங்க இருக்கும் எல்லா ஓட்டைகளையும், சந்து பொந்துகளையும் அடைத்து வைத்துக் கொண்டு போட்டு ரவுண்டு கட்டிக் கொண்டு சாத்துவது போல் இருக்கிறது :))))))

//தரங்கெட்ட கோதுமையை ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்த கேவலத்தையும் இங்கு நினைவு கூற விரும்புகிறேன்//

இப்போது அமெரிக்கா இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய முயற்சி செய்து வரும் கோதுமையில் 21 வகையான ஆபத்தான விஷக் களைகள் இருப்பதும் இந்த வகை தான்.. ஆகக் கூடி டாலரும் அவரது புதிய ஆதரவாளரான உடன்பிறப்பு லக்கியும் ஆசைப்படுவது இதைத் தான் போலிருக்கிறது..

டாலர் புளுகியது..

//. இந்த கிராமங்கள் அனைத்திலும் உள்ள நிலங்கள் தரிசு நிலங்கள். இதுவரை வெள்ளாமையே செய்யப்படாதவை//

புல்டோசர் தோழர் போட்டு கிழித்தெரிந்தது..

//
குமாரபுரத்தில் ஏதேனும் தொழில் ஒன்றை செய்வதாகச் சொல்லி இருக்கும் 577 பேர்களில் 485 பேர் விவசாயிகள்.
பழையபட்டியில் 261 பேர்களில் 206 பேர் விவசாயிகள்.
அச்சம்பட்டியில் 137 பேரும் ராயமுண்டன்பட்டியில் 160 பேர்களும் வீரமரசன்பேட்டையில் 116 பேர்களும் விவசாயிகளே. எஞ்சிய மக்கள் தொழிலாளிகள் என்கிறது அந்த சர்வே.

இந்தத் தகவல்களையும் அதே பெரியார்புரா இணையதளம் தான் சொல்கிறது. இவ்வாறு பெருவாரியாக விவசாயம் செய்பவர்களே இருக்கும் ஊரை ஏதோ விவசாயமும் தொழிலும் இல்லாத ஊராகச் சித்தரித்துப் புளுகுவதன் மூலம் நம் மீது அவதூறு செய்ய முயலும் கூமுட்டைத்தனத்தை விட்டு விட்டு யோசிக்க வேண்டும். அதாவது பகுத்தறிவை பயன்படுத்த வேண்டும்.//


இப்போ நம்ம நன்பர் லக்கிலுக் அவருடைய தலைவர் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தையான பகுத்தறிவைப் பயன்படுத்தி தமது கொள்கையை விமர்சிக்கும் போதுஏன் ஏகாதிபத்திய பூட்ஸ்நக்கிகளிடம் போய் சரண்டராக வேண்டிய நிலை ஏற்படுகிறது என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பார் என்று நம்புகிறேன்

அருமையான பதிலடி

வாழ்த்துக்கள் அசுரன்

said...

டாலர் இருக்காரே அவரது கொள்கைபடி அது அதாவது பெரியார் புரா செய்வது சரிதான் .

ஆனா லக்கியின் கொள்கை என்னனுதான் எனக்கு சந்தேகம்

said...

அசுரன் கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறியும் போது எச்சரிக்கையுடன் தான் இருக்க வேண்டும். உடைந்ததை நாம் சரி பண்ணுவதற்கு முன் எதிரிகள் கண்ணாடிகளை பொறுக்கி ஒட்டவைத்து விரிசல் இருப்பதை நிரந்தரமாக்க முயல்வார்கள்.

said...

Comments for This Post will be moderated Strictly. Because I would like to target only our Enemies. Not our friends.

So the Wolves waiting outside... Please leave the place :-)))

You may not able to taste our blood

Asuran

said...

//Because I would like to target only our Enemies. Not our friends.

So the Wolves waiting outside... Please leave the place :-)))

You may not able to taste our blood
//

ஹஹ நல்லா சொல்லியிருக்கீங்க

said...

வலைப்பதிவர்கள் ஒரு குழுவாய் சென்று ஒரு நேரடி ஆய்வறிக்கை தயார் செய்யலாம். சிறப்பாயிருக்கும்.

எதிர் கருத்துக்களை கொஞ்சம் திட்டாமல் வைத்தீர்கள் என்றால் நல்லாயிருக்குமே. நீங்கள் திட்டிவிட்டதாலேயே செல்வனின் கருத்துக்கள் குறைந்துவிடப்போவதில்லை.

So please stop name calling. You can do far better than that.

said...

அட அந்த தேவர்ஜாதி திருட்டு நாயை விட்டுத்தள்ளுங்க அசுரன் அண்ணே!

said...

அசுரன்

உணவு பொருள்கள் இவ்வளவு விளைவித்த பின்னால் தான் பணப்பயிர்களை விளைவிக்க முடியும் என்பது போல சட்டங்கள் நமது நாட்டில் இல்லையா?

இங்கே நடக்கும் விவாதங்களை பார்த்தால், இந்த (so called பணப்பயிர்கள் பயிரிடுதல்) மாதிரி பெருவாரியாக நடக்க ஆரம்பித்தால், எதிர்காலத்தில் நம்மிடம் பணம் இருக்கும்.(சரியாக சொல்வதானால் அரசியல்வாதிகளிடம் நிறைய, பயிரிட்டவனுக்கு கொஞ்சம்).

ஆனால் உள்நாட்டில் போதிய உணவு பொருள் இருக்காது.

உணவு பொருள்களை மேலை நாடுகளில் இருந்து தான் வாங்க வேண்டியிருக்கும்.அப்போது அவர்கள் சொல்வது தான் விலை...

நாம் பணப்பயிர்களை ஏற்றுமதி செய்து சம்பாதித்த பணத்தையும் அதற்கு மேலும் செலவு செய்து அவர்கள் விற்கும் உணவு பொருள்களை வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாவோம்...

இப்போது வல்லரசாக இருக்கும் நாடுகள் எல்லாம் முதலில் உணவு பொருள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து தொழிற்புரட்சியில் பணம் ஈட்டி, அதை வைத்து இன்னும் மிகுதியாக உணவு பொருள் உற்பத்தி செய்கிறார்கள்... அதை விற்க சந்தை தேடி அலைந்து நாடுகளின் உண்வு பொருள் உற்பத்தியை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்...

பணப்பயிர்கள் லாபம் தரும்..ஏன் அதை அவர்கள் பயிரிடுவதில்லை?.. ஏனெனில் உலகெங்கிலும் பெருவாரியாக விற்பனை ஆவது உணவு பொருள்களே

said...

//அதே நேரத்தில் அந்த 65 புரா கிராமங்களில் இருக்கும் நிலங்கள் வறண்ட பொட்டல்களும் அல்ல. காவிரி டெல்டாவை ஒட்டி இருப்பதனால் மண்வளமும் நிலத்தடி நீரும் உள்ளது. மழைக்காலத்தில் நெல்லும், கோடையில் உளுந்து, காய்கறிகளும் பயிரிடப்பட்ட நிலங்கள்தான் புராவின் 65 கிராமங்களும்.//

அசுரன்,

நான் அறிந்த வரையில் இந்த நிலங்கள் நல்ல நிலங்களே.

வேண்டுமானால் நெல்/கரும்பு/வாழை பயிரிட ஏற்ற நிலங்களாக இல்லாமல் மாறியிருக்கலாம். (மக்களின் தண்ணீர் பயன்பாடு/சேமிப்பு முறைய்ல் மாற்றம் வேண்டும்) ஆனால் அவுரி மட்டுமே வளர்க்க முடியும் என்ற அளவிற்கு சீரழிந்துவிடவில்லை என்றே நினைக்கிறேன். :-(((

******

செல்வனின் கட்டுரையில் நான் சொன்னது.....


//அந்த கிராமங்கள் சிலவற்றின் தொழில்களை பாருங்கள். இதுவா முப்போகம் அரிசி விளையும் பூமி?

அச்சம்பட்டி - தேங்காய் நார் உரிப்பது
பூதலூர் - செங்கல் சுடுவது
கொமாரபுரம் - மூங்கில் வெட்டுவது
பலையபட்டி - மூலிகை வளர்ப்பது
வல்லம் - சாண எரிவாயு

//

:-))))


சாண எரிவாயு:

சாணம்- மாடு-மேய்ச்சல் நிலம் இருந்தால் மட்டுமே இது நடக்கும்.

மேய்ச்சல் நிலம் என்பது என்ன என்று தெரியுமா?

இராமநாதபுர மாவட்டங்களில் ஆடு அதிகமாக ஏன் வளர்க்கிறார்கள் என்று தெரியுமா?

இல்லை சாணியை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்து சாண எரிவாயு தாயாரிக்கிறார்களா?

***

கொமாரபுரம் - மூங்கில் வெட்டுவது:

மூங்கில் எங்கு வளரும் என்று தெரியுமா?

இராமநாதபுர மாவட்டத்தில் ஏன் கருவேலம்மரங்கள் வளர்க்கும் பிசினஸ் அமோகமாக உள்ளது தெரியுமா?

*****

பலையபட்டி - மூலிகை வளர்ப்பது

எந்த வகையான மூலிகைகள்?
பெரும்பாலன மூலிகைகளுக்கு நல்ல தண்ணீர் வளம் வேண்டும்.

வேப்ப மரம்கூட தண்ணீர் இல்லாத பாலையில் வளராது.

****

பூதலூர் - செங்கல் சுடுவது:

செங்கல் சுடுவது வேண்டுமானால் அதிக அளவு தண்ணீர் தேவை இல்லாத ஒன்று என்று சொல்லலாம்.

***********************

செல்வன்,
மக்கள் வாழும் இடத்தில் என்ன வளங்கள் இருந்தது?

அது ஏன் அழிந்தது?
அதை திரும்ப கொண்டுவர முடியுமா?
முடியும் என்றால் எப்படி?
முடியாது என்றால் ஏன்?

இப்படி கேள்வி கேட்டுவிட்டுத்தான் மாற்று முறைகளை செய்ய வேண்டும்.

சும்மா வெள்ளைக்காரனுக்கு வேணும் அதனால் செய் என்ற அளவிலேயெ சிந்திக்கூடாது.

தரிசு நிலததை (wasteland) profit centre ஆக மாற்றுவதற்கு முதலில் தரிசு நிலம் என்றால் என்ன எனப்து தெரிய வேண்டும்.

நேரம் கிடைத்தால் goodnewsindia D V Sridharan ஐ தொடர்பு கொள்ளுங்கள்.
http://goodnewsindia.com/pointreturn/online/mission/

♦Demonstrate techniques to reclaim wasteland
♦Demonstrate conservation and optimal use of natural resources, ecological sensitivity and sustainable consumption for living well
♦Become a profit centre

மேலே உள்ளது செல்வனின் கட்டுரையில் நான் சொன்னது .....

said...

ஆத்தாடி உண்மையிலேயே தோழர் புல்டோசர்தான், மாமா வீரமணி சாமாச்சாரத்துல வந்த ஏகாதிபத்திய ஆதரவு கருத்துக்கள் ச்சும்மா நிரவி தள்ளியிருக்காரு.. இணையதளத்தில ஏகாதிபத்தியங்களும் மாமா வீரமணி போன்ற அதன் கைக்கூலிகளும் என்ன சொல்லியிருங்கானுங்களோ அத அப்படியே படிச்சுட்டு வந்து வாந்தியெடுக்குற நம்ம புரளிதலைவர் புள்ளிவிவர புலி டாலர் செல்வனை அவர் பதிவுலேயே வைச்சு சில நண்பர்கள் நிரவிக்கிட்டிருக்காங்க, திருடனுக்கு தேள் கொட்டினா ரியாக்சன் எப்படியிருக்கும்னு பார்க்க விரும்பும் நண்பர்கள், அங்கு சென்று நெளிந்து கொண்டிருக்கும் டாலரை பார்த்துக் தெரிந்துகொள்க..

said...

சிறில் அலெக்ஸ் மற்றும் இதர நண்பர்கள், தோழர்கள் எனது வார்த்தை பய்ன்பாடுகள் குறித்து கருமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். அவை நியாயமாகவே படுகின்றன. ஆயினும் வார்த்தைகளை கடுமையாக பயன்படுத்துவதும் பல நேரங்களில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது எனது அனுபவமாக இருக்கீறது. விரைவில் இந்த குழப்பத்தில் இருந்து விடுபடுவேன் என்று நம்புகிறேன்.

வார்த்தைகளை தேவையான வடிவில் தேவையான வலுவில் பயன்படுத்தும் கலையை கற்றுக் கொள்வேன் என்று நம்புகிறேன்.

அடிக்கடி சளைக்காமல் சுட்டிக் காட்டி விமர்சித்த நண்பர்களுக்கு நன்றிகள் பல......

அசுரன்

said...

சில நண்பர்களின் கருத்துக்களும் மட்டுறுத்தலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சூழ்நிலையை புரிந்து கொண்டு தவறாக எதுவும் எடுத்துக் கொள்ளாமல் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் விரைவில் பின்னூட்டங்கள் வெளியிடப்படும்.

அசுரன்

said...

இரு தினங்களுக்கு முன் விடுதலையில் தி.க. பிரமுகர் ஒருவர் எழுதி இருக்கும் 'தமிழர் தலைவருக்கு பவளவிழா காண்போம்' என்ற கட்டுரையில் வீரமணியின் சிறப்புக்கள் பட்டியல் இடப்பட்டுள்ளது. அவை 1) அவரின் ஆசிரியரால் பயிற்றுவிக்கப்பட்ட பேச்சுத் திறன் 2) பெரியார் பன்னாட்டு மையம் நிறுவி அமெரிக்கா,இங்கிலாந்து,மலேசியா,சிங்கப்பூர் முதலிய நாடுகளிலும் அதன் கிளைகளை நிர்மாணித்தும் வருகிறார். 3) பெரியார் கல்வி நிறுவனங்களை மாற்றாரும் மலைக்கும் அளவிற்கு வளர்த்து வருகிறார் 4) பெரியார் பெயரில் பல்கலைக்கழகம் உருவாகும் அளவிற்கு அதன் வளர்ச்சி வானோங்கி நிற்கிறது. 5) பிரச்சாரத்தை 'பெரியார்' படம் மூலம் உச்சத்தை எட்டி இருக்கிறார்.

நன்றாகக் கவனித்தால் இக்கட்டுரையே மறைமுகமாக வீரமணியைக் கிண்டல் செய்வது புரிபடும். அவரின் சிறப்புகள் எனப்பட்டியல் இடப்பட்ட அனைத்துமே அவரை தேர்ந்த வியாபாரியாகவே தூக்கி நிறுத்தி உள்ளன. மருந்துக்காவது கொஞ்சூண்டு 'தியாகம்', 'சித்திரவதை', 'போராட்டம்' என்பதெல்லாம் அவரின் சிறப்பம்சத்திலே குறிப்பிடப்படவே இல்லை. அப்படி என்னதைத்தான் சொல்ல முடியும்? சட்ட எரிப்புப்போராட்டத்தை பெரியார் நடத்தியபோது, சட்டத்தை எரித்தால் வழக்கறிஞர் உரிமை பறிபோய்விடுமோ என்று அதில் கலந்துகொள்ளாமல் சுற்றிக்கொண்டிருந்ததையா சொல்ல முடியும்?

இவரின் சிறப்புக்களாகக் குறிப்பிடும் அத்தனை சாதனைகளையும் அமெரிக்கா,இங்கிலாந்து,சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வியாபாரம் செய்யும் கோபால் பல்பொடியும், சரவண பவன் அண்ணாச்சியும் சாதித்து இருக்கிறார்களே.. அவர்கள் ரேஞ்சுக்கு வியாபாரி கி வீரமணியை வைத்து 'அளகு' பார்க்கிறது அவர்களே நடத்தும் விடுதலை.. இன்னமும் என்னத்தப் போயி சொல்ல இருக்கு.. அந்த வியாபாரியப்பத்தி..

புல்டோ சர்...

said...

கல்வெட்டு உங்களது கருத்துக்களூக்கு எதிர்வினை செய்யாமல் மௌனமாக செல்வன் நழுவிக் கொண்டிருக்கிறார்.

இந்திய கிராமங்களை பிரச்சனையில் சிக்க விட்டு, விளை பொருட்களை வாங்க வழியின்றி அழிவுக்கு தள்ளிவிட்டு அதனை வலுக்கட்டாயமாக ஏகாதிபத்தியங்களுக்கு தேவைப்படும் கட்டாமனக்கு, அவுரி போன்ற பயிர்களை விளைவிக்க ஏற்பாடு செய்வதே புரா போன்ற திட்டங்களின் உண்மையான நோக்கம்.

கிராம வளங்களை கையகப்படுத்துவது என்பது நீர் வளங்களை கையகப்படுத்துவது உள்ளிட்ட உலக வங்கியின் மிகப் பெரிய திட்டங்களில் ஒன்று.

இதன் சில அம்சங்கள்தான் கிராம பஞ்சாயத்துக்களுக்கு அதிக அதிகாரம் கொடுத்து உலக வங்கியை நேரடியாக பஞ்சாயத்து அளவில் டீல் செய்ய வழி ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டம்(இது வேறு ஒன்றும் செய்யாது, ஏற்கனவே அதிகாரத்தில் இருக்கும் அந்த பகுதி ஆதிக்க சாதி பிரதிநிதியை ஏகாதிபத்திய புரோக்கராக மாற்றிவிடும்), இதே நோக்கத்தில்தான் சுய உதவிக் குழுக்களும் வலம் வருகின்றன. இதே நொக்கத்துடன் தான் புரா போன்ற திட்டங்களும் வலம் வருகின்றன.

யோக்கியவான் என்றால் என்ன செய்ய வேண்டும்? இந்திய விவசாயத்தின் பிரச்சனை என்னவென்பதை பேசி அதற்க்கு காரணமாக இருப்பது எது என்று சொல்லி அதற்க்கு எந்த வகையில் புரா திட்டங்கள் தீர்வு கொடுக்கின்றன என்று சொல்ல வேண்டும். மாறாக பிரச்சனை இருப்பதை காட்டியே கூட்டிக் கொடுக்க அலைபவர்களை எப்படிப் பார்ப்பது? நாம் இந்திய விவசாயிகளின் பிரச்சனைகளை பேசும் போது காரணங்களையும் சேர்த்தே குறிப்பிட்டு பேசியுள்ளோம். தீர்வுகளையும், தற்காலிக தீர்வுகளின் வீச்சையும் சேர்த்தே குறிப்பிடுகிறோம்.

சிறில் அலெக்ஸ் குறித்து இங்கு ஒரு கருத்துச் சொல்ல வேண்டியுள்ளது. நீலக்ண்டன்களும் டால்ர்களும் கொடுக்கும் பொய் தகவல்கள் எல்லாம் அவருக்கு நல்ல தகவலகளாக தெரியும் போது அவற்றை பொய் என்று நிறுவி நாம் கொடுக்கும் தகவல்கள அவர் கண்ணில் படுமால் இருப்பது ஆச்சர்யமே. ஒருவேளை செலக்டிவ் விசன் சின்ட்ரோம் போன்ற் வியாதி எதுவும் அவரை பீடித்திருக்குமோ என்று அஞ்சுகிறேன்.

அவர் என்மீது வைத்த விமர்சனத்திற்க்கு பொறுப்பாக நான் பதில் சொன்னது போல அவரும் பதில் சொல்வார் என்று எதிர்பார்க்கிறேன்.

அசுரன்

said...

டாலர் செல்வனின் காழ்ப்புணர்ச்சியில் தூக்கி நிறுத்தப்பட்ட மொன்னை வாதங்களை இடித்து தரைமட்டமாக்கியிருக்கிறார் புல்டோசர்.
அசுரனுக்கும், புல்டோசருக்கும்(இந்தப் பதிவுக்கு கனகச்சிதம், ஆனா பேர மாத்தலாமே) வாழ்த்துக்கள்!

said...

$சல்வன் இடத்தே இட்ட பதிவின்
------------------------------
நகல் இதோ:--
---------------------
கண் தெரியாதவர்கள் யானையைத் தடவிப்பார்த்த கதையாக இருக்கிறது, செல்வன் புரா திட்டத்தைப் பார்க்கும் விதம். புரா என்பது வெறுமனே பணப்பயிருக்கு மாறச்சொல்லும் திட்டம் போலவும் அதனை ஒட்டி, உணவுப்பயிரா பணப்பயிரா என்று சாலமன் பாப்பையா கெணக்கா அரட்டை மடம் நடத்துகிறார். இதுவரை அவர் புதிய ஜனநாயகம் கட்டுரை அலசி ஆராய்ந்திருந்த புராவின் பிரம்மாண்டத்தினைப் பற்றி பேசவே காணோம். அதைப் பற்றி கள்ள மவுனம் சாதித்து விட்டு சோறா, கயிறா விளையாட்டு நடத்துகிறார்.

இந்தியாவின் விவசாயம் சீரழிந்தது எதனாலே? அதன் காரணத்தைப் புரா எப்படி சரி செய்யும்? இந்திய விவசாயத்தை சீரழித்த அதே சக்திகள்தான் புரா வடிவம் எடுத்து வந்திருக்கின்றனவா? என்பதை எல்லாம் செல்வன் ஏன் ஆய்வு செய்வதில்லை?

இந்திய நெல் விளைச்சலை லாபம் இல்லாமல் ஆக்கியது இடுபொருள் விலை உயர்வா? பசுமைப்புரட்சியா? ஐ எம் எப் தொடுத்த மானிய வெட்டா?
இப்பிரச்சினைகள் எதற்கும் பதில் சொல்லாமல் புராவை மட்டும் சர்வ ரோக நிவாரணி ஆகக்கருதுவது எப்படி?

தஞ்சை மாவட்டத்தில் (வறண்ட பிரதேசம்!!) நெல் பயிரிட வேண்டாம் என அறிவுரை சொல்லும் ஏகாதிபத்தியம் வியட்நாமிலும், பிலிப்பைன்சிலும் தான் சொல்லும் நெல்லை ஏகபோகமாக விளைக்க ஏன் சொல்கிறது? அங்கு மட்டும் அது நஷ்டப்பயிர் இல்லையா?

தஞ்சை விவசாயிகள் எலிக்கறி திங்கத் தொடங்கியது நெல் விலை நட்டத்தாலா? காவிரியில் கன்னட வெறியர்கள் நீர் தர மறுத்ததாலா? என்பதில் உண்மை எதுவென்று செல்வனுக்குத் தெரிந்தும் ஏன் இங்கு உண்மைக்குப் புறம்பானதைச் சொல்கிறார்?

பு.ஜ.வின் கட்டுரை புராவின் நோக்கம் என்ன என்பதை சரியாகவே கிராமங்களின் கல்வி,சாலை,குடிநீர்,விவசாயம் போன்ற அனைத்துவிதமான அரசின் பொறுப்புகளையும் தன்னார்வக்குழுக்கள் கையிலும், ஏகாதிபத்திய நிறுவனங்கள் கையிலும் ஒப்படைப்பதே என்பதையும் அதன்மூலம் அக்காலத்து ஜமீன்கள் போன்று இந்தியத் துணைக்கண்டம் முழுக்க புரா பாணி ஜமீன்களைக் கட்டி அதன் மூலம் ஏகாதிபத்திய நலனுக்கு உகந்த வண்ணம் உள்நாட்டின் வேளாண்மை,தொழிலை மாற்றுவதையும் அம்பலப்படுத்தி இருந்தது. செல்வன் இவற்றைப்பற்றி ஏன் பேசுவதில்லை?

ஜெட்ரோ எனும் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் எடுபிடியே பெரியார் புரா என்பது தெரியுமா?

பூதலூரில் குடிநீர் கஷ்டம் என்றால் பியூர்-ஓ, கலிபோர்னியா கம்பெனி வருந்துவது ஏன்? இந்திய அரசால் குடிநீர் தர முடியாதா?

வெள்ளைக்காரனுக்காக பருத்தி போட்டதால்தானே 19ஆம் நூற்றாண்டு பஞ்சங்கள் ஏற்படுத்தப்பட்டன! இதற்கு செல்வனின் பதில் என்ன? பருத்திக்கு நல்ல விலை இருக்குதென்று செல்வனின் மூதாதைகள் பிரச்சாரம் செய்து அதன் பலனாக தாது வருச பஞ்சத்தை அனுபவித்தவர்கள் யார்?

இயற்கை சீற்றமே 1877-79 பஞ்சம் என்று நம்புபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் மூணு வேளை மூக்கு முட்ட தின்று விட்டு இங்கிலீசு மொழி வளர்க்க 'தி ஹிந்து' பத்திரிக்கையை அதே பஞ்ச காலத்தில்தான் ஏகாதிபத்திய தாசர்கள் ஆரம்பித்தார்கள். பஞ்சத்தில் தாறுமாறாகி விட்ட விலைவாசியை அறுவடை செய்ய புதிதாய் 2 வங்கிகளை சென்னை மாகாணத்தில் வெள்ளையர்கள் ஆரம்பித்தார்கள், அதே பஞ்ச காலத்தில்.

அந்த தாது வருச பஞ்சம் தான் நம்மவர்களை பிஜிக்கும்,மொரிசியசுக்கும்,தென்னாப்பிரிக்காவுக்கும்,இலங்கை தேயிலைத்தோட்டத்டுக்கும் நாடுகடத்தியது. அது காலனியக் கொடுமை.

புரா போன்ற மறுகாலனி ஆதிக்க திட்டங்கள் மேலும் மேலும் நம்மை ஓட்டாண்டிகளாக்கி பஞ்சத்தால் அகதிகளாக்கி நாடு கடத்த உள்ளது. இது மறுகாலனியக் கொடுமை.

அன்று துபாஷிகளும் பார்-அட்-லாக்களும் பாரிஸ்டர்களும் வெள்ளையனுக்கு வால்பிடித்து அவனின் பஞ்ச காலத்திலும் வசதியாக இருந்தார்கள். (பஞ்சகாலத்தில் மக்கள் பட்டினி பற்றி வள்ளலார் உருகி உருகி அவர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்கிறார். அதே பஞ்ச காலத்தில் வாழ்ந்த உ.வே.சா. போன்ற ஆட்சி விசுவாசிகளோ, தி ஹிந்து பத்திரிக்கையோ பஞ்சம் என்பதைப் பற்றியே பேசவில்லை.)

இன்றும் அந்த பாரிஸ்டர்களின், துபாஷிகளின், தி ஹிந்துக்களின் தொடர்ச்சிகள் வலைத்தளங்களிலும், பெரியார் திடலிலும் ஒட்டிக்கொண்டு ஏகாதிபத்திய எடுபிடி வேலைகள் செய்கின்றன.

செல்வன், புராவின் மறுகாலனிய சேவை பற்றி கள்ளத்தனமாக மவுனம் சாதிப்பது ஏன்?

--புல்டோ சர்-

said...

நண்பர் மகேந்திரனின் வருகைக்கு நன்றிகள்.

said...

1) இந்தியாவின் விவசாயம் சீரழிந்தது எதனாலே?

2) அதன் காரணத்தைப் புரா எப்படி சரி செய்யும்?

3) இந்திய விவசாயத்தை சீரழித்த அதே சக்திகள்தான் புரா வடிவம் எடுத்து வந்திருக்கின்றனவா?

4) தஞ்சை மாவட்டத்தில் (வறண்ட பிரதேசம்!!) நெல் பயிரிட வேண்டாம் என அறிவுரை சொல்லும் ஏகாதிபத்தியம் வியட்நாமிலும், பிலிப்பைன்சிலும் தான் சொல்லும் நெல்லை ஏகபோகமாக விளைக்க ஏன் சொல்கிறது?

அங்கு மட்டும் அது நஷ்டப்பயிர் இல்லையா?


5) இந்திய நெல் விளைச்சலை லாபம் இல்லாமல் ஆக்கியது இடுபொருள் விலை உயர்வா? பசுமைப்புரட்சியா? ஐ எம் எப் தொடுத்த மானிய வெட்டா?

6) இப்பிரச்சினைகள் எதற்கும் பதில் சொல்லாமல் புராவை மட்டும் சர்வ ரோக நிவாரணி ஆகக்கருதுவது எப்படி?

7)தஞ்சை விவசாயிகள் எலிக்கறி திங்கத் தொடங்கியது நெல் விலை நட்டத்தாலா? காவிரியில் கன்னட வெறியர்கள் நீர் தர மறுத்ததாலா?


8) ஜெட்ரோ எனும் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் எடுபிடியே பெரியார் புரா என்பது தெரியுமா?

9) பூதலூரில் குடிநீர் கஷ்டம் என்றால் பியூர்-ஓ, கலிபோர்னியா கம்பெனி வருந்துவது ஏன்? இந்திய அரசால் குடிநீர் தர முடியாதா?

10) செல்வன், புராவின் மறுகாலனிய சேவை பற்றி கள்ளத்தனமாக மவுனம் சாதிப்பது ஏன்?

மேற்கண்ட கேள்விகளுக்கு செல்வன் பதில் தந்தால்தான் புரா பற்றிய தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

புல்டோசர்--

said...

//செல்வன், புராவின் மறுகாலனிய சேவை பற்றி கள்ளத்தனமாக மவுனம் சாதிப்பது ஏன்//

செல்வன் அமெரிக்காவுல இருக்காரு , அதான் அந்த நாட்டுக்கு விசுவாசமா இயங்குறாரு ;)

இந்தியா தேசியம் என பேசுவது சும்மா ஒரு பேச்சு துணைக்கு ஆள்வேணுமேன்னுதான் தோழர் புல்டோசர்

said...

//மேற்கண்ட கேள்விகளுக்கு செல்வன் பதில் தந்தால்தான் புரா பற்றிய தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.//

தோழர்,
இதற்கெல்லாம் செல்வனின் பதில் என்னவாக இருக்கும் என்று நான் சொல்கிறேன்...

"அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு என்னால் வீரமணி அங்கிளின் சைட்டை வச்சி, ஏதோ இந்த அளவுக்குத் தான் எளுத முடியும்.

நான் சொன்னதில் வேறு ஏதாவது தப்பு இருந்தா சொல்லுங்க இன்னுமொரு முறை திருத்தி எளுதுறேன்.. (பத்து தடவை திருத்தித் திருத்தி, எம்புட்டுத் தெளிவான கட்டுரை எளுதுறாரைய்யா!)

மத்தபடி, இதுக்கு மேலயும் யாராச்சும் கேள்வி கேட்டால் அங்க இந்தியாவில் உள்ளவைங்க தான் போய் பார்த்துவிட்டு வந்து சொல்லவேண்டும்.. "

அப்புறம், புரா பத்தி பேசத் தெரியாம பெண்ணுரிமை பத்தி ரெண்டு வார்த்தை ரவுசு;

நடுவுல ஏழைகளை ஏழைகளாவே வச்சிருக்க விரும்பும் தோழர்கள்னு ஒரு ஒப்பாரி.. அவ்வளவு தான் பதிலு...
ஒரே டெம்பளேட்டுப்பா!

said...

அசுரன்

இந்த இடுகையில் உங்கள் கருத்துகளை எதிர்ப்பார்கிறேன்...

said...

தோழர் உங்களின் மடல் பார்த்தேன் சரியான அனுகுமுறை என்றே தோன்றுகிறது ஆனால் வீரமணியை சென்று பார்த்து நண்பர்கள் நம்மை பற்றி புகார் தெரிவிக்கிறார்கள் என்றால் இந்த பொது எதிரி, நட்பு சக்தி போன்றவற்றுக்கு சரியான பொருள் புரியவில்லை, அதுமட்டுமில்லாது இவர்கள் தமது செல்வாக்கை காட்டிவிட்டதாக புளகாங்கிதம் அடைந்திருக்கும் இந்த தருணத்தில் நாம் தாக்காமல் இருப்பது நம்மை குறைவாக எடைபோடவே பயன்படும் என்பது என் கருத்து, வேண்டுமானால் மென்மையாக நண்பர்களை அதாவது அவர்களின் தற்போதைய புனித பிம்பம் வீரமணியை அம்பலப்படுத்தி கொண்டே அவர்களோடு நட்புறவாடலாம். சுகுணாவை பொறுத்த வரையில் அந்த பதிவு வந்த தருணத்தை கணக்கில் கொள்ள வேண்டும் தோழர் நம் மீது எந்த விமர்சணமும் வைக்க இயலாமல் திராவிட நண்பர்கள் கைபிசைந்து நின்ற தருணத்தில்தான் சுகுணா சில குறிப்புகளோடு அந்த பதிவிட்டார், பார்ப்பதற்கு நடுநிலையானது போல காட்சியளிக்கும் அப்பதிவு, திராவிட தலைமை பற்றி மொன்னையான வாதங்களை வைக்கிறது நம்மை பற்றி பேசும் போது இடஒதுக்கீட்டை பற்றி பேசி விவாதத்தை திசைதிருப்பி நம்மிடம் கேள்வியும் எழுப்புகிறது.. வீரமணியை நமது நண்பர்கள் சந்தித்த போது "இடஒதுக்கீட்டை பற்றி பேசினால இவர்கள் ஓடிவிடுவார்கள்" என்று அவர் கூறியதை இதனோடு ஒப்பிட்டு பாருங்கள், சுகுணாவின் நீண்ட நாள் வன்மம் புரியும். சுகுணா ஆதரவு சக்திதான் என்றாலும் கூட அவரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து. வரவனை செந்திலின் அறை நண்பன் மற்றும் உற்ற நண்பன் எனும் முறையில் செந்திலுக்கு மருதையன் தோழர் பார்ப்பனர் என்பதை சொன்னது கூட சுகுணாவாகத்தான் இருக்குமோ என்று நான் சந்தேகிக்கிறேன்.. நமது தோழர்களை சந்தித்து விவாதிப்பதாக கூறியிருந்த செந்தில் சுகுணா பதிவிட்டு மக.இக தோழர்களை கண்டித்த பிறகு வீரமணியை சந்தித்து புகார் தெரிவித்திருக்கிறார். வீரமணி பதிவர்களை அழைத்து கருத்தரங்கம் நடத்துவதாக கூறியிருக்கிறாராம்.. ஆக நாம வெகு கவனமாக இவர்களை கையாளவேண்டியிருக்கிறது சுகுணா உட்பட, இதில் நட்பு சக்தி பொது எதிரி என்று எப்படி வரையறுத்து செயல்படுவது..

தோழமையுடன்
ஸ்டாலின்

said...

அசுரன் ,

வரவானை தன்னுடைய பிளாக்கில் அசுரனை சந்திச்சேன்னு "மாமா" வீரமணியை அசுரன்னு சொல்லி தான் அவரோட நிக்கிற போட்டோவ போட்டு இருக்கார் .

பாவம் வீரமணிக்கு உங்க பேரில வெளிவரும் நிலமை ஏற்பட்டு போச்சு
:)

வீரமனியிடமிருந்து தி.கவை காப்போம் எனும் கட்டுரைகள் உங்களிடம் இருக்கும் என நினைக்கிறேன் அவற்றை வெளியிடுங்கள் .

said...

Not for publication

Veeramani or DK whatever they may say , once in a while, against globalisation, will only end up as serving the forces that support/behind globalisation as their ideology is not rooted in political economy or radical understanding of global political system and political economy. Their
objective is not to bring in a
socialist society. This is equally true of DMK or PMK or MDMK.It is better to address this fundamental issue and analyze the views and projects undertaken by NGOs sponsored by institutions
controlled by DK/Veeramani.

Related Posts with Thumbnails