சுஜாதா என்ற சில்லறை பொறுக்கி!
ரஜினிகாந்த்திற்க்கு எதிர் பாத்திரமான வில்லன் ஆதி ஸ்டைலாக ரஜினியை
நோக்கி சொல்கிறார் "டேய்! நான் ஆதி..ய்ய்ய்ய்" என்று. உடனே உடனிருக்கும் நடிகர் விவேக்கோ "போடா..." என அடுத்து வாயைத் திறக்கும் முன் ரஜினி அவரின் வாயைப் பொத்தி விடுகிறார்.
உடனே "போடா கபோதின்னு சொல்ல வந்தேன்ப்பா" என்கிறார் விவேக்.
*********************
சுஜாதா எனும் சிரீரங்கம் ரங்கராஜன் எனும் விஞ்ஞானியைப் பாராட்டுவோம் வாரீர்!!

வயசாயிருச்சின்னா புத்தி மங்கிப் போயிரும் என்று சொல்வார்கள். அது போன்று சொல்வது தவறு என்று சுஜாதா நிரூபிக்கிறார். வயசான பிற்பாடுதான் இவர் புத்தி மழுங்கி இப்படி எழுதுகிறார் என்று யாரேனும் எண்ணினால் அதை பொய்யென்று சொல்லி நாங்கெல்லாம் எழுதத் துவங்கிய காலத்தில் இருந்தே வக்கிரமாக எழுதிவருகிறோம் என்கிறார். அதுவும் குறிப்பாக வெகு சனங்களின் பொதுப் புத்தியில் இருக்கும் கசடுகளை ஊக்குவித்து வியாபாரம் செய்பவர்களில் இது போன்ற கழிசடைகள் வெகு திறமையானவர்களாக இருக்கிறார்கள். ஆணாதிக்கம் என்பது இயல்பாக நமது ஒவ்வொரு நடவடிக்கைகளிலும், சொற்களிலும் வெளிபடுகிறது. இன்றைக்கு பெண்களின் சம உரிமை குறித்து பேசும் யுகத்தில் இருக்கும் நாம் ஆணாதிக்க வக்கிரங்களை நமது நடைமுறையிலிருந்து நீக்குவதே சரியாக இருக்கும். அல்லது குறைந்த பட்சம் பொதுவில் நிலவுகின்ற ஆணாதிக்க
வக்கிரங்களை ஊக்குவிப்பதோ அல்லது அது நியாயமானது, அதுதான் பொதுவாக நிலவும் பண்பாடு என்று சொல்வதோ போன்ற சீர்குலைவு நடவடிக்கைகளாவது நிறுத்திக் கொள்வதே சரி.
சுஜாதாவோ தமது கல்லாவை நிரப்பிக் கொள்வதற்க்கு பொதுப் புத்தியில் படிந்த இந்த பலஹீனங்களை பயன்படுத்திக் கொள்கிறார். இவரின் கழிசடைத்தனம் கொஞ்சம் நாகரிகமான கழிசடைத்தனமாக இருப்பது இன்னும் வீரியமான சமூக விரோத சக்தியாக இவரை மாற்றி விடுகிறது. வாரமலர் கிசு கிசு போன்ற படித்த நடுத்தர வர்க்கம் அருவெறுப்போடு ஒதுக்கும் தரத்திலில்லாமல் கொஞ்சம் உயர்ந்த ப்ளேபாய் தரத்தில் எழுதுவதற்க்காக மட்டுமே இவர் போன்றவர்களுக்கு இலக்கிய வாசிப்பனுபவங்கள் உதவுகின்றன. இது தவிர்த்து சில மேட்டுக் குடி தடித்தனங்களை நியாயப்படுத்தும் தர்க்கங்களையும் வெகு நைச்சியாக தமது
எழுத்தின் ஊடாக வாசகனின் மூளைக்குள் செலுத்தும் திறமைக்காகவும் இவர்களின் இலக்கிய வாசிப்பனுபவம் கை கொடுக்கிறது.
இவர் பெண்களை இழிவுபடுத்தி எழுதுவதற்கு இவரது கணேஷ் வசந்த்
கதாபாத்திரங்களே சாட்சி. தண்ணீர் கொட்டிய சேலையுடன் கண்ணீர் சிந்தி
விம்மி விம்மி விசனப்படும் அபலை பெண்ணை எப்படி ரசிப்பது என்று இவரது வசந்த் நமக்கு சொல்லித் தருகிறார். இது ஒரு சாம்பிள் மட்டுமே. படிக்கும் வாசகனுக்குள் ஜேம்ஸ்பாண்டுகளும், ஆங்கிலப் பட டேம்செல் இன்
டிஸ்டெரஸ் (Damsel in Distress) எபெகக்டும் தமிழ் மொழியிலேயே கிடைத்து
விடுகிறது. இழிவான சிந்தனைவயப்பட்டோமே என்ற குற்றவுணர்வுக்கு ஆட்படும் தேவையும் இல்லாமல் இவரது எழுத்து நடை செய்து விடுகிறது.
இவரது வக்கிரத்திற்க்கு கீழே இன்னொரு சான்று உள்ளது படித்து பாருங்கள்:
விக்ரம் படம் வெளிவருவதற்கு முன் அதைக் குமுதம் இதழில் தொடராக
எழுதிவந்தார் சுஜாதா. அதில் கணேஷ் இன்னொரு பெண்ணிடம் பேசும் வசனம்.
"ஆணும் பெண்ணும் சமமெல்லாம் கிடையாது. நாங்களெல்லாம் நின்னுக்கிட்டே சுவரில் மூத்திரம் அடிப்போம்"
இந்த மூத்திர வசனத்திற்கு சுஜாதாவிற்கு எந்த இடத்தில் டைனமட் வைப்பது என்று பெண்கள்தான் முடிவுசெய்யவேண்டும் என்று கோபப்பட்டு எழுதுகிறார் சுகுணா திவாகர் என்ற எழுத்தாளர். இங்கு உண்மையிலேயே வக்கிரமாக எழுதிய சுஜாதாவின் எழுத்து படித்த மேல்தட்டு ஆட்களால் புகழ்ப்படுவதும் அதிலிருந்த வக்கிரத்தை கடுமையாக விமர்சித்து எழுதிய சுகுணா திவாகரின் எழுத்து சீ... இப்படி மோசமாக எழுதுறானே என்று தூற்றப்படுவதற்கும் அடிப்படையாக இருக்கும் உளவியல் என்னவென்பதை அவரவரே பரீசீலித்துக் கொள்ளட்டும். எனக்கென்னவோ சுகுணா திவாகர் இன்னும் மோசமாக திட்டி எழுதியிருந்தால் கூட சரியே என்று படுகிறது.
இவரது பிற சேவைகள் என்ன என்று பார்த்தால் பாய்ஸ் படம் இவரது
வக்கிரங்கள் எல்லாவற்றையும் தொகுத்து கொடுத்த படமாக நிற்கிறது. அந்த
படத்தில் பொடா சட்டம் பற்றி எழுதி கிழித்திருப்பார் சுஜாதா. அதான் அவர்
அதிமேதாவியாயிற்றே என்று ரசிக சிஸ்ய கோடிகளும் புழங்காகிதப்பட்டிருப்பார்கள். இதே சுஜாதா நக்கீரன் கோபால் பொடா
சட்டத்தில் கைது செய்யப்பட்ட பொழுது அதனை எதிர்த்து பத்திரிகையாளர்கள் நடத்திய போராட்டத்தின் போது பொடா குறித்து நேக்கு எதுவும் தெரியாது என்று கூறி பேச மறுத்த பொழுது அவரது அறிவுப்புலமை தொலைந்து போன இடம் தெரியவில்லை. அது அறிவு நாணயமற்றவர்களின் காரியப் பூர்வமான கள்ளமௌனம் ஆகும்.
இது தவிர்த்து அதே பாய்ஸ் படத்தில் விபச்சாரியுடன் சல்லாபம் செய்யும்
காட்சியில் வரும் வசனங்கள், பெண்ணின் மார்புகளை பெரிதாக்கும் வித்தைகளை சொல்லும் வசனங்கள் என்று கிளை பரப்பி சென்றது அவரது வக்கிரம். ரொம்ப சோசியலாக பழகுகிறார்களாம் இன்றைய மாணவர்கள். நமக்கு தெரிந்து பள்ளி கல்லூரிகளில் பழகும் மாணவ மாணவிகள் எல்லாம் பொதுவாக பேசி கலந்து கொள்வதுதான் நடக்கிறதே அன்றி இவர் சொல்வது போல எப்போ பார்த்தாலும் செக்ஸ் சம்பந்தப்பட்ட விசயங்களை மட்டுமே பகிர்ந்து கொண்டிருப்பதில்லை. ஆயினும் அது போன்ற அடி மனது குறு குறுப்புகளை குற்றவுணர்வின்றி செயல்படுத்த தார்மீக பலம் கொடுக்கும் வேலையை தனது எழுத்து சேவையின் மூலம் செய்கிறார். இயல்பான பால் கடந்த நட்புணர்வு என்று ஏதேனும் இருந்தால் கூட அதனை இயல்பற்றதாக மாற்றி இழிவுபடுத்த தேவையான கருத்தியல் களைகளை விதைக்கும் வேலையை இவரது எழுத்துக்கள் உறுதிப்படுத்துகீறது. இதில் Easy Money வேறு. இந்த இழவைத்தான் அறிவு ஜீவித்தனம் என்று சொல்கிறார்கள் பல நடுத்தர வர்க்க வாசகர்கள்.
இவரது அறிவுஜீவித்தனத்தின் இன்னொரு முக்கிய அம்சம் அடிக்கடி புரியாத
ஆங்கில, தமிழ் மொழிபெயர்ப்பு வார்த்தைகளை போட்டு எழுதும் இவரது பாணி. இதில் மயங்கித்தான் நடுத்தர வர்க்க வாசகர்கள் இவரைப் போன்ற
அரைகுறைகளின் வார்த்தைகளிலிருந்து தமது உலக அறிவை வளர்த்துக் கொள்ள முயல்கீறார்கள். இப்படி ஒரு பகுத்தறிவற்ற அறியாமையின்பாற்ப்பட்ட வாசகன் - எழுத்தாளன் உறவினுடைய ஆபத்தின் ஒரு அம்சம்தான் அவரது சமூக விரோத, ஆணாதிக்கம் உள்ளிட்ட பிற வக்கிரமான எழுத்துகள் வாசகனிடம் ஏற்படுத்தும் விளைவு.
சரி வேறு என்ன விளைவுகள் உள்ளன? அவரை அரைகுறை என்று விமர்சனம் செய்யும் போது அவரது அரைகுறை புலமை வாசகனிடம் கொண்டு செல்லும் தவறான வரலாற்று, அறிவியல் விசயங்களை முன்னிட்டே அவ்வாறு விமர்சிக்கிறோம். ஏனேனில் வெகு சன பத்திரிக்கைகள் இவர் சொல்லும் அரைகுறைகளுக்கு வலுவான மறுப்புகள் அதே வெகு சன பத்திரிக்கைகளில் பிரசூரமாவதில்லை. இவரது அரைகுறை அறிவின் விளைவுக்கு ஒரு எடுத்துக்காட்டு சமீபத்தில் மரபணு ஆராய்ச்சி என்பது ஆரியர்கள் என்ற கருத்தாக்கத்தை இல்லையென்றாக்கிவிட்டது என்று ஆனந்த விகடனில் எழுதிய புரளி ஆகும்.
உண்மை என்னவெனில் ஆரியர் என்ற இனக் குழு இந்தியாவிற்குள் வந்ததில் வரலாற்று, தொல்லியல் ஆய்வாளர்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அவர்களிடையே உள்ள கருத்து வேறுபாடு எல்லாம் ஆரியருக்கு முன்பு
இங்கிருந்த நாகரிகம் திராவிட நாகரிகமா என்பதிலும், அந்த நாகரிகத்தை
ஆரியர்கள் அழித்தனரா அல்லது அந்த நாகரிகத்துடன் கலந்து ஒன்றாகினரா
என்பதிலுமே கருத்து வேறுபாடு. அதாவது அவர்களின் கருத்து வேறுபாடு
எல்லாம் திராவிடம் குறித்த விசயங்களில்தானேயொழிய ஆரியர் குறித்த
விசயத்தில் அல்ல.
அப்படியிருக்கையில் பொதுவாக மனித சமூகத்தின் பரிணாம வளர்ச்சி குறித்த விசயங்களை வெளிக் கொணர செய்யப்பட்ட ஆய்வுகளை இது போன்றவர்கள் தமது சொந்த அரசியல் தேவைக்காக திரித்து பயன்படுத்தும் பொழுதுதான் இந்த வாசக- எழுத்தாளன் உறவின் அபாயம் மிக பெரிதாக உருவெடுக்கீறது.
இது போல அறிவியலை திரித்து வரலாற்றை சிதைத்து அரசியல் செய்யும்
அமைப்புகள் எதுவென்று பார்த்தால் இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகளும்,
அதன் ஆதரவாளர்களுமே இதனை செய்கின்றனர். அப்படியென்றால் சுஜாதா ஒரு இந்துத்துவ ஆதராவாளரா என்று கேள்வி எழுப்பினால் பதில் ஆம் என்றே கிடைக்கிறது. அது மட்டுமல்ல அவரது இந்துத்துவா ஆதரவிற்கு பின்னணியில் அவரது சொந்த சாதி பெருமை நிற்பதும் சாதாரண வாசகனால் சீரணிக்க இயலாத பேருண்மையாக நிற்க்கிறது.
இவர் பார்ப்பன சாதி சங்க மாநாட்டில் கலந்து கொண்டு பார்ப்பனர்கள் தமது
உரிமைக்காக போராட வேண்டும் என்று ஆனந்த விகடன் பத்திரிக்கையிலேயே வெளிப்படையாக தனது சாதி வெறியை எழுதினார். பார்ப்பனர்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு நாம் சாதிரீதியாக அணி திரள வேண்டும் என்று சாதி சங்க தலைவனைப் போல பேசினார் இந்த எழுத்தாளர். இவர்தான் தமிழகத்து நடுத்தர வர்க்க வாசகர்களுக்கு ஆதர்சமான எழுத்தாளர்.
இவரது சாதி வெறி இன்னும் வக்கிரமாக வெளிப்பட்டது அயோத்தி மடம் என்ற பெயரில் பார்ப்பன சாதியினர் தமிழகத்தில் மிகக் கோடுரமாக ஒடுக்கப்படுவதாக எழுதிய கதை. இந்த கதையை போஸ்டமார்ட்டம் செய்து அதில் உள்ள இவரது சாதி கொழுப்பெடுத்த புரளிகளை அம்பலப்படுத்தி பலரும் விமர்சித்தனர். அவையெல்லாம் சம்பந்தப்பட்ட வெகு சன பத்திரிக்கையில் வரவில்லை.
இதுதான் சுஜாதா - தனது சொந்த வியாபாரத் தேவைக்காக பொது மக்களின்
பலஹீனங்களை ஹைடெக்காக எழுதி சுரண்டுவதுடன் அல்லாமல், தனது சொந்த அரசியலுக்காக பொய்களையும், புரளிகளையும் கூட கடை பரப்புகிறவாராக இருக்கிறார்.
இவரது ஆணாதிக்கக் கண்ணோட்டத்துடன், நிறவெறியும், சாதி வெறியும்
சேர்ந்தால் என்னவாக வெளிப்படும்?
சொந்த சாதிவெறிக் கொழுப்பெடுத்த சுஜாதா தனது இனவெறியை 'சிவாஜி'
படத்தில் சாலமன் பாப்பையா எனும் பட்டிமன்ற வியாபாரி மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். கன்னங்கரேல் எனும் நிறம் பூசிய தனது இரண்டு பெண்களிடமும் ரஜினியை 'பழகிப்பாருங்கள்' எனச் சொல்லும் தந்தையாக வருகிறார் சாலமன் பாப்பையா. இப்பெண்களின் கறுப்பைக் கண்டு ஓடிவிடுகிறார் ரஜினி. தமிழர்களின் இயல்பான நிறமான கறுப்பை நிற ரீதியில் இழிவுபடுத்தி இருக்கும் சுஜாதா இப்பெண்களுக்கு வைத்திருக்கும் பெயரோ அங்கவை, சங்கவை. பாரியின் மகளிர் பெயரைச் சூடிய இவரின் புத்திக்குள் இருப்பது என்ன? தமிழைப் பழி தீர்க்கும் புத்திதானே!
தமிழுக்கும், பெண் குலத்துக்கும் இவ்வாறு இலக்கியத் தொண்டு செய்து
கொண்டிருக்கும் - இரண்டு முறை இதய வலிப்புக்கு ஆட்பட்டிருக்கும் சுஜாதா எனும் எழுத்தாளரை எல்லாரும் பாராட்டி விட வேண்டும் எனும் ஆர்வத்தில்
நாம் உள்ளோம்.
செருப்போ விளக்குமாறோ ... அன்பர்களே அது உங்கள் சாய்ஸ்...
பாராட்டத் திரள வேண்டிய முகவரி:
சுஜாதா என்ற ரங்கராஜன்,
#10 ஜஸ்டிஸ் சுந்தரம் சாலை,
2, முதல் தளம், மயிலாப்பூர்,
சென்னை - 4
மின்னஞ்சலில் திட்டுவோர்கள் வசதிக்காக:
writersujatha@hotmail.com
பாராட்ட இயலாதவர்கள் என்ன செய்யலாம்?
இந்த எலக்கிய யாவாரியின் பெருமையை தமிழ் நாடெங்கும் பரப்பிக்கொண்டிருக்கும் ஒரு கவிப்பேரரசருக்கு தங்கள் பாராட்டை அனுப்பலாம்.
கவிப்பேரரசர் பெயர்: மனுஷ்யபுத்திரன்
முகவரி: uyirmmai@gmail.com
உயிர்மை,
11/29 சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம்
சென்னை 18
Phone(044) 2499 3448
Mobile: (0) 98402 71561
கட்டுரைக்கான கரு பின்னூட்டத்தில் புல்டோசர்
எதிர்வினைகளுக்கு ஒரு நல்ல எதிர்வினை:
சுஜாதாவிற்கு செருப்படி தேவையா? http/paalveli.blogspot.com/2007/07/blog-post_22.html