TerrorisminFocus

Tuesday, October 03, 2006

காந்தி நல்லவரா? கெட்டவரா?

வெட்டிபயல் என்ற நண்பர் பகத்சிங் பிறந்த நாளை ஒட்டி பதியப்பட்ட ஒரு காட்டுரையில் காந்தியை விமர்சித்து வரும் வரிகள் குறித்து தனது மாற்றுக் கருத்தை தெரிவித்திருந்தார்:

//நீங்க காந்தியை பற்றி தவறாக சொல்வதை என்னால் ஏற்று கொள்ள முடியாது...
காந்தி உயர்ந்தவரா, பகத் சிங் உயரந்தவரானு கேட்டா எனக்கு ரெண்டு பேரையும் பிரிச்சு பாக்க தெரியாது. தன் நாட்டு மக்களுக்காக உயிரை விட்ட இருவருமே ஒன்றுதான். தங்களின் நம்பிக்கையின் விளைவில் அவர்கள் போராடினார்கள்.//
அவருக்கு விளக்கம் கொடுக்கும் முகமாக் காந்தி குறித்து ஒரு விவாதத்தை ஆரம்பிக்கலாம் என்று பிரியப்பட்டேன். இங்கு வலியுறுத்துவது ஒன்றே ஒன்றுதான் பகத்சிங்கின் தீர்க்கமான பார்வைக்கு முன்பு காந்தியின் வறட்டு பழமைவாத தத்துவம் ஒன்றுமே கிடையாது. அவர்(காந்தி) முற்றிலும் உணர்வுப் பூர்வமான ஒரு மனிதர். அந்த உள்ளுணர்வை தீர்மானித்ததோ அவரது வர்ணாஸ்ரம பிடிப்பு.

**************
முன்பொருமுறை
மா.சிவகுமாருடன் காந்தி குறித்து ஒரு விவாதம் நடந்தது. அதன் பகுதிகளை தருகிறேன்.

நான் மா.சிவகுமாரிடம் கேட்டிருந்த கேள்விகள்:


1. காந்தி ரெயிலிலிருந்து தள்ளி விட்ட பின்புதான் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டும் என்று விரும்பினார் என்பதன் மர்மம் என்ன? இந்த சம்பவம் பற்றிய காந்தியின் சுயசரிதையில் உள்ள அவரது எழுத்துக்களை படித்தால் சில விசயங்கள் புரிபடும்.அதற்கு முன்பு வசதியான தனது இந்திய இங்கிலாந்து வழ்க்கையில் மக்கள் கஸ்டப்படுவது தெரியாமலேயே இருந்ததின் மர்மம் என்ன?

2. பெரும்பாலான மக்கள் போராட்டங்களில் அவர் நிலபிரபுத்துவ(இந்த வார்த்தை உங்களுக்கு அந்நியமான வார்த்தையில்லை என்று கருதுகிறேன். சிலருக்கு இந்த வார்த்தை பிடிப்பதில்லை) ஆதரவாக நிலைப்பாடு எடுத்துள்ளது ஏன்?

3. வன்முறையைக்கூட அரசு நடத்தினால் சரிதான் என்று பல நேரங்களில் முரன்பட்டதேன்?

4. சுபாஸ் சந்திர போஸ் தலைமை பதவிக்கு வர விடமால் மிரட்டல் நாடகம் நடத்தியது ஏன்?

5. அம்பேத்காரால் பலமுறை அம்பலப்படுத்தப்பட்டது ஏன்?

6. நான் ஆய்வு செய்த வகையில் அவர் பிரிட்டிஸாருக்கு தேவைப் பட்ட ஒரு முகமூடி என்பதாகத்தான் தெரிகிறது. when the mask was no more required, that is freedom struggle gone out of the mask, british gave freedom to us. and in this the role of USA should be mentioned.


மா.சி யின் பதிலில் உள்ள ஒரு பகுதி:

***//தென்னாப்பிரிக்காவிலும் ரயிலில் இருந்து வெளியே எறியப்பட்ட போது, தனது பெருமைக்கு விளைந்த பங்கம் என்றே பொருமும் அவர், இதைச் சகித்துக் கொண்டு வந்த வேலையைப் பார்த்துக் கொண்டு போகலாமா அல்லது இதை மாற்ற ஏதாவது செய்யலாமா என்று சிந்திக்கிறார்.//***


***//சாதி தருமத்தை முற்றிலும் ஒதுக்க மனமில்லாத அவரது உயர்ந்த சாதிப் போக்கு சாதி சமூகத்தின் இருண்ட பக்கங்களைப் பார்த்து வந்த அம்பேத்காருக்கு கசப்பாக இருந்தது இயற்கையே.//***


ஆக, இதுதான் காந்தி. இந்த பெருமையை, பழைய காலத்தை ஆங்கிலேயனிடம் இருந்து மீட்ப்பதுதான் அவரது இயங்கியல். இதை தவிர்த்து அவர் மக்கள் விடுதலை என்று பேசியவை எல்லாம் அன்றைக்கு நிலவிய கருத்துக்களால் தாக்கப்பட்டு அவற்றையும் பிரதி நிதித்துவ படுத்த வேண்டிய கட்டாயமே அன்றி வேறல்ல. அப்பொழுதும் அவர் நிலபிரபுத்துவத்தின் நலனில் ஒரு சிறு அளவு கூட சமரசம் செய்து கொள்ளவில்லை. ஏனெனில், எப்படி கீழே தள்ளிவிடப்பட்ட காந்தி விசனமுற்றாரோ அதே போலத்தானே உடமைகள் பிடுங்கப்படும் கொழுத்த சுரண்டல் நிலபிரபுவும் விசனப்படுவான் என்பதை அவரால பொருத்திப் பார்க்க முடிந்தது. ஆனால், எந்த உடமையும் இன்றி அந்த காலத்தில் அடிமையைவிட கேவலாமான வாழ்க்கை வாழ்ந்தவர்களின் போராட்டங்களை அவரால் அவ்வாறு பொருத்திப் பார்த்து உணர முடியவில்லை.


மா.சிக்கு சின்னக் கட்ட பொம்மன் என்பவர் கொடுத்த சில பதில்கள்:


*****

காந்தி வைக்கம் போராட்டத்தைச் சிதைத்திடச் செய்த ஈனத்தனமான செய்கையை, தூர்தர்சனில் ஒளிபரப்பப்பட்ட, ஞானி இயக்கிய 'அய்யா' எனும் தொடர் அம்பலமாக்கியுள்ளது. அப்போராட்டத்தில், பெரியாருடன் இணைந்து போராடிய காங்கிரசுப் பிரமுகர் ஜார்ஜ் ஜோசப்பை, அப்போராட்டத்தினை விட்டு விலகிடுமாறு காந்தி கடிதம் எழுதினார். வைக்கம் போராட்டத்தில் ஜோசப் ஈடுபட்டபோது திருவிதாங்கூர் அரசு அவரை சிறையில் அடைத்தது. அப்போது சிறைக்குள் இருந்த ஜோசப்பிற்கு காந்தியின் வேண்டுகோள் வந்து சேர்ந்தது. "கிறிஸ்தவரான தாங்கள், இந்து மதத்தின் உள்விவகாரத்தில் அக்கரை காட்ட வேண்டாம். விலகிடுங்கள்" என்று. ஜோசப் மனம் நொந்து போனார். மனித உரிமை மீறலை எதிர்த்துத்தான் அவர் பெரியாருடன் இணைந்து வைக்கம் வந்தவர். அவரின் செயலை, இந்த பாவ ஆத்மாவோ, மதரீதியாய்த் தனிமைப்படுத்திடும் இழிவான செயலில் இறங்கியது.

தற்காலத்தில் இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள், ராம கோபாலன் எனும் வானரக் கூட்டத்தினர் என்பதை எண்ணிப்பார்க்கலாம். கோவிலிலே தமிழில் வழிபாடு என்று கேட்டால், நாத்திகர்களுக்கு இதைச் சொல்ல உரிமை ஏது? என்று நரித்தனமாய்க் கேட்பார்கள்? ராமகோபாலன் கூட்டத்தின் முன்னோடியாக மோகன் தாசு இவ்வாறாக வெளிப்படுகிறார் பார்த்தீர்களா?

பிற்பாடு ஜார்ஜ் ஜோசப் காங்கிரசை எதிர்க்கும் ஜஸ்டிஸ் கட்சிக்குப் போய்ச் சேரும் வேலையை காந்தியே செய்தார் என்று வ.ரா. எழுதி இருக்கிறார்.

மதமாற்றம், கோமாதாவைப் பிரியாணி போடுவது பற்றி, நால்வகை வர்ணம் பற்றி காந்தி மஹ்ஹ்ஹ்ஹான் என்ன கருதினார்?

*****

*****

காந்தியின் எளிமை பற்றிய புரட்சிகர மயக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது.

செல்வந்தராகவும், பிறப்பில் மேம்பட்ட வைசிய வர்ணத்தவராகவும் பிறந்த காந்தி, எளிய உடை உடுத்துவது என்பது அவ்வர்க்கத்தால் எளிதில் செய்யக்கூடிய செயல் என்பதையும், ஆனால் தூய்மையான உடையோ, ஆடம்பரமான உடையோ மறுக்கப்பட்ட மகர் சாதியில் பிறந்த அம்பேத்கர், கோட் சூட் அணிந்து அதை மறுப்பதுதான் இங்கு புரட்சிகரமான விசயம் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது.

காந்தியின் மற்ற எளிமைகளைப் பற்றி சரோஜினி நாயுடு கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலம்:-

"அவரின் எளிமைக்காக காங்கிரசுக் கட்சி நிறைய செலவு செய்ய வேண்டி இருக்கிறது".

பின்னே. இருக்காதா? மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில் இவுக போகணும்னா, 72 டிக்கட்டையும் (பாதுகாப்பு கருதி) காங்கிரசு அல்லவா புக் செய்து மொய் எழுதியது! கூடவே பால் கறவையில் இருக்கும் ஆடுகளுக்கும் டிக்கட் எடுக்கணும்.

இந்த மாதிரி வெளி வேசம் போட்ட ஆசாமி எவ்வாறு தன்னிகரில்லா தலைவனானான்?

*****

*****

இந்த தன்னிகரில்லா தலைவலியால், நமது நாடு சந்தித்த இடையூறுகளைப் பின்வருமாறு தொகுக்கலாம்.
1) வெள்ளையனை எதிர்த்துப் போர் முரசு கொட்டி மாண்ட லட்சுமிபாய்,திப்பு சுல்தான்,கட்டபொம்மன்,பூலித்தேவன்,அழகுமுத்துக் கோன் ஆகிய வீரர்களின் வாட்களோ, இந்த ஆசாமியால் சர்வோதயா/கதர் காரியாலயத்தில் 'கதர் சோப்பு' வெட்டிக்கொண்டிருந்தது.

தோழர் ஜீவானந்தம், 1920களில் காந்தி பக்தராக இருந்த காலத்தில் காரைக்குடியில் காந்தி ஆசிரமம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது அவ்வாசிரமத்திற்கு விஜயம் செய்த வ.உ.சி. சினத்துடன் சொன்ன வார்த்தை "வாளெடுத்துப் போர் புரிய வேண்டிய கைகளைப் போயும் போயும் கைராட்டை சுற்ற வைத்து விட்டாயேப்பா".

2) சௌரி சௌரா போலீஸ் ஸ்டேசனை மக்கள் கொளுத்தித் தம் கோபத்தைக் காட்டியதும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் தீராக்காதலர் காந்திக்கு பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உடனே போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தார்.

பின்னே! செய்ய மாட்டாரா என்ன? கொஞ்ச நாளைக்கு முன்னர்தான் முதல் உலகப்போரில், பிரிட்டிசாருக்கு ராணுவத்தில் சேர்ந்து தொண்டு செய்ய மக்களிடம் அரும்பாடுபட்டிருந்தார். அதற்கு சற்று முன்னர், தென் ஆப்பிரிக்க போயர் யுத்தத்தில், வெள்ளையனுக்கு கங்காணி வேலை செய்து விட்டுத்தானே இங்கே கப்பல் ஏறி வந்தார்?

3)புரட்சிக்காரன் பகத்சிங்கைத் தூக்கிலிடுவதாக இருந்தால், அதனை, லாகூர் காங்கிரசுக்கு முன்னரே செய்து விடுங்கள் என்று இர்வினிடம் பேரம் பேசி 'காந்தி-இர்வின்'ஒப்பந்தம் போட்ட துரோகத் தலைவனாச்சே!

4)ஆங்கிலேயனை, அவன் வந்திறங்கிய இந்திய வாசலான பம்பாயிலேயே துரத்தி அடிக்கும் பாய்ச்சலோடு 1946லே இந்தியக் கடற்படையினர் 'தல்வார்' கப்பலில் செய்த ராணுவப் புரட்சியைக் காட்டிக் கொடுத்த இவரல்லவா தலைவர்?

5) சக இந்தியரை சுட மறுத்த (வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில்) கூர்க்கா ராணுவப் படையினரின் செயலைக் கண்டித்த தேசத்தலைவரல்லவா?

6)தெலுங்கானா, புன்னப்புரா, வயலார், வயநாடு ஆகிய விவசாயிகள் புரட்சியை ரத்தச் சேற்றில் நிலப்பிரபுத்துவ சக்திகள் நசுக்கிக் கொண்டிருந்தபோது 'தர்மகர்த்தா' முறை மூலம் நமது உழைக்கும் வர்க்கத்துக்கு விடிவு வரும் என கிலோக்கணக்கில் அல்வா கொடுத்த ஜென்மம் அல்லவா?

காந்தியின் சாதனைகள் தொடரும்..

*****

*****

அஹிம்சைக்கு இவ்வளவு தூரம் வக்காலத்து வாங்கும் நீர், கீழ்க்கண்ட விசயம் பற்றி என்ன கருதுகிறீர்?

தலித்களின் இரட்டை வாக்காளர் தொகுதியை அம்பேத்கர் ஆதரித்தபோது, அது இந்து தர்மத்தைப் பிளவுபடுத்தி விடும் என்று சொல்லி, அம்முறையைக் கைவிடக் கோரி உண்ணாவிரதம் இருந்த காந்தியின் பிளாக்மெயில் அணுகுமுறையும் அஹிம்சைதானா?(உண்ணாவிரதம் என்பதால் அஹிம்சைதானே)உயிரை ஊசலாட வைத்துக்கொண்டு அம்பேத்கரை மிரட்டி 'பூனா ஒப்பந்தத்தில்' கையெழுத்திடச் செய்து, தலித்களின் நலன்களுக்கு எதிராக காந்தி நடந்துகொண்ட அம்முறை, காந்தியின் பக்தர்களான தங்களுக்கு உவப்பானதா?

அவர் உண்ணாவிரதம் இருந்தபோது, ஐரோப்பாவில் சுற்றுப்பயணத்தில் இருந்த பெரியார், அம்பேத்கருக்கு 'அவர் சாகட்டும். அவரின் உயிருக்காகப் பணிந்து போய் தாழ்த்தப்பட்டவர்களின் நலனைப் பலி கொடுக்காதீர்கள்' என்று தந்தி கொடுத்ததையும் இங்கு நினைவுகூர்கிறேன்.

அஹிம்சையை காந்தி யாருக்கு வலியுறுத்தினார்? ஒடுக்கப்படும், சுரண்டப்படும் வர்க்கத்துக்கு மட்டுமே. அரசின் பயங்கரவாதத்தை அவர் எப்போதுமே ஆதரித்துள்ளார். நிலப்பிரபுக்களின் சுரண்டல் அவர் கண்ணுக்குத் தெரியவே இல்லை. அந்தச் சுரண்டல் எல்லாம் என்ன அஹிம்சைப் பரம்பொருளா என்ன?

பசுவைக் கொல்லக் கூடாது என எந்த அடிப்படையில் சொல்ல வருகிறீர்கள்?
பசுவின் கறியே மலிவு விலையில் (கிலோ 60 ரூபாய் இருக்கும். 3 வருடங்களுக்கு முன் சென்னையில் 55ரூபாய்க்கு வாங்கினேன்) ஏழை மக்களுக்குக் கிடைக்கும் அதிகப் புரதம் நிறைந்த உணவு. மேலும் பசுவைக் கொல்வதால் நமக்குக் கிடைக்கும் செல்வம் சொல்லி மாளாது. பேட்டா செருப்பு, கைப்பை, ஜெர்க்கின் என்று தோல்பொருட்களும், மாருதி காரின் சீட்டு, சர்க்கரை வியாதி மருந்து, செல்லப் பிராணிகளின் தீனி, சர்க்கரை சுத்திகரிப்புத் தொழிலில் முக்கிய இடுபொருள், என அதன் பயன்பாடு எண்ணிலடங்கா. பார்ப்பனர்களின் சடங்குகளில் முக்கிய பங்கு வகிக்கும் பஞ்சகவ்யத்தில் கூட பசுவின் கோரோசனம் ஒரு பங்காகும்.

உபயோகமில்லா மாட்டை எந்த ஏழையாலும் தீனி போட்டுப் பராமரிப்பதென்பது ஏலாத காரியம்.

உயர்சாதி மனோபாவத்துடனும், முசுலீம் எதிர்ப்பு இந்து வெறியாலுமே, பசு வந்தனை பஜனைகள் பாட முடியும்.

*****

*****

காந்தியின் பசு வதை எதிர்ப்பும், சுரண்டும் வர்க்கத்தின் பண்பாடுதான்.அவர் எப்போதுமே ஆளும் வர்க்கக் கருத்தியலுக்கு ஊறு விளைவித்திடாத வகையில் மக்கள் அடங்கிக் கிடக்க வேண்டும் என்பதனால்தான் அஹிம்சையை எப்போதுமே உழைக்கும் வர்க்கத்திடம் இருந்து மட்டும் எதிர்பார்த்தார்.

அஹிம்சையால் எதிராளியின் மனசை மாற்றுவது எனும் கற்பனையின் விஸ்தாரம் இருக்கட்டும். இப்போது நடைமுறையில் இருக்கும் சில நிகழ்வுகளைப் பேசுவோமே.

தாமிரபரணி ஆற்று நீரை அந்நிய நாட்டு கோக் நிறுவனம் ஒட்ட உறிஞ்சி நம்மைக் குடிநீர்ப் பஞ்சம் நோக்கித் துரத்த ஆரம்பித்துள்ளது. இது கண்டிப்பாக எதிர்க்கப்பட வேண்டியது. நம் நாட்டில் இத்தகைய எதிர்ப்புகளை அஹிம்சை வழியில் செய்ய அரசியல் சட்டம் வழிவகை செய்துள்ளது.

போராடும் மக்கள், இதற்காக ஊர்வலம் நடத்திப் பிரச்சாரம் செய்திட முனைகிறார்கள். ஆனால் கோக்கிடம் காசு வாங்கிய காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் கோக் பற்றி நீங்கள் உங்கள் பிரச்சாரத்தில் பேசக் கூடாது என மறுக்கிறது. பாருங்கள்! இங்கே அஹிம்சை வழி மறுக்கப்படுகிறது. அதே நேரத்தில் கோக் ஆலை அமைய இருக்கும் ஊரின் பஞ்சாயத்துத் தலைவர் கம்சன் என்பவர் அந்த நிறுவனம் தொடங்க அனுமதியை ரத்து செய்து தீர்மானம் போடுகிறார். உடனே, கோக்கின் ஆட்களால் கடத்தப்பட்டு, மர்மமான முறையில் சாகிறார். இது ஹிம்சை. அரசோ கோக் மீது ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எதிரி, ஹிம்சையைக் கையாள அரசு மவுனசாட்சியாக நிற்கும்போது, மக்கள் போராடுவதற்குக் கூட அஹிம்சை வழி மறுக்கப்படுகிறது.

மக்கள், கோக் ஆலைக்காரன் மனசை மாற்றிட ஏதாவது ஜெபமோ, பஜனையோ பாடிக் கொண்டிருக்க முடியுமா?

நமது ஆயுதத்தை (கத்தியோ, உண்ணாவிரதமோ) நாம் தீர்மானிப்பதில்லை. தீர்மானிப்பது நமது எதிரி.

காந்தியின் சிந்தனைப்படி பார்த்தால், அவனை ஏன் எதிரியாக நினைக்க வேண்டும். அவன் அறியாமல் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்ள நாம் நம்மை வருத்திக் கொள்ளவேண்டும் என்பது 100% எதிரியின் நலன் காப்பதில்தான் போய் முடியும். இல்லையா?

நிலப்பிரபுத்துவம் உச்சிக்குப் போய் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த தெலங்கானாவில் ஒவ்வொரு பண்ணையாளருக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும், அவர்களின் அதீத சுரண்டலும், உழைக்கும் விவசாயக் கூலிகளுக்கோ ஒட்டிய வயிறே சொத்தாக இருந்ததுமே அவர்களைப் புரட்சியை நோக்கி உந்தித் தள்ளியது.

இந்த இடத்தில் பண்ணையார்கள் துப்பாக்கியால் விவசாயிகளைக் கொன்றுகொண்டிருக்கும்போது அவ்விவசாயிகளுக்கு அஹிம்சையை உபதேசிப்பது எவ்விதத்திலும் அவர்களை மேம்படுத்திட உதவி செய்யாது. இல்லையா?

விவசாயிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் வழி நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டத்தில் பங்கு கொண்டு போராடி பல மாவட்டங்களில் பண்ணையார்களின் நிலங்களைப் பறிமுதல் செய்தார்கள். நிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. பண்ணையார்கள் ஹைதராபாத்துக்குள் ஓடி ஒளிந்து கொண்டார்கள். காந்தி ஏழை விவசாயிகளின் இச்செயலை ஏற்றுக் கொள்ளவில்லை.

உடனே அவரின் சீடர் வினோபா தலைமையில் பூமிதான இயக்கம் தோன்றிட விதை போட்டார். அதாவது நிலப்பிரபுக்களே மனசு மாறி உபரி நிலங்களை ஏழைகளுக்குத் தானமாய்த் தந்து விடுவது. இதன் மூலம் விவசாயிகளுக்கு கத்தி இன்றி நிலம் சொந்தமாகி விடும். இதன் நீட்சியாக தமிழ் நாட்டில் கூட பின்னாளில் காங்கிரசு அரசு எந்த ஒரு பண்ணையாருக்கும் 45 ஏக்கருக்கு மேல் நிலம் இருக்கக் கூடாது என சட்டம் போட்டது. காந்தியின் சீடர்கள்தான் கில்லாடிகளாச்சே. பினாமி பேரில் 45, 45 ஏக்கர்களாய் மாற்றிக் கொண்டார்கள். உதாரணமாக கோவிந்தசாமி மூப்பனார்(கருப்பையா மூப்பனாரின் அப்பா) தனக்கு சொந்தமாய் இருந்த 1000 ஏக்கர் நிலங்களில் பெரும்பாலானவற்றை டிரஸ்ட் ஒன்றின் கீழ் மாற்றி ஏய்த்தார். சிலவற்றை பினாமிகளாய் தனக்கு சாராயத்தில் சோடா கலந்து தரும் வேலை செய்த எடுபிடி 'சோடா மாணிக்கம்' என்பவரது பேரில் கூட 45 ஏக்கர் எழுதி வைத்தார்.

இவ்வாறு நிலப்பிரபுக்களின் நலன் சரிந்து விடாதபடிக்குத்தான் காந்தியின் 'தர்மகர்த்தா' பொருளாதார முறை விளங்கியது. காந்தியின் மனப்பான்மை எப்போதுமே உழைக்கும் வர்க்கத்தின் நலனுக்கானதில்லை.

*****

மா.சிக்கு அசுரனின் சில பதில்கள்:

*****

ஒவ்வொரு சமூக கட்டங்களையும் இயக்கும் பிரதான முரன்பாடு என்ன? காந்தி எந்த வர்க்கம்? அவரது பின்புலமாக உள்ள சமூக கட்டங்கள் என்ன? அவர் மீது ஆளுமை செலுத்திய தத்துவங்கள் என்ன? அன்றைய காலகட்டத்தின் புரட்சிகர நிலைமைகள் என்ன என்று பல்வேறு விசயங்களை கண்க்கில் எடுத்து ஆய்வு செய்தால் மிஞ்சுவது காந்தி சமூக விடுதலைக்கான ஒரு தலைவர் அல்ல. அவரிடம் தீர்வு என்று சொல்லுவதற்கான விசயங்கள் ஒன்றும் கிடையாது, அவர் சமூகத்தை பின்னுக்கிழுக்க முயற்சி செய்தவஎ என்பதுதான் முடிவாக வருகிறது. மேலும் நீங்களே சொல்லுவது போல் அவரை நிலபிரபுத்துவ பிற்போக்குத்தனம் ஆளுமை செலுத்துகிறது.

*****

*****
சிவகுமார்:

உண்மையின் தேடுபவராக வாழ்ந்த அவரது பங்களிப்பு இங்குதான் ஆரம்பிக்கிறது. உலகில் என்ன கோளாறு என்பதைப் புரிந்து கொள்ள தனது வாழ்க்கையை சோதனைக் களமாக்கி, தன்னுள்ளே நடக்கும் போராட்டங்களில் வெற்றி பெற்றால்தான் வெளிப் போராட்டங்களை நடத்த முடியும் என்று வாழ்ந்து காட்டிய தகைமைதான் அவரை மகாத்மாவாக்குகிறது.


அசுரன்:

இதை நான் மறுக்கவே இல்லை. இன்னும் இந்த விசயத்தை மனதில் கொண்டுதான் எனது மாப்ளா கலகம் கட்டுரையில் கூட காந்தி பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால் இவை ஒரு தனிமனிதனுக்கு நல்ல முன்னுதாரணம். இவை ஒரு நல்ல மனித சமுதாயத்தில் தன்னலம் கருதாமல் சமூகத்தின் நலம் கருதி வாழ்வதற்க்கு நல்ல முன்ணுதாரனம். இவற்றை கட்டாயம் எந்த ஒரு சமூகப் போராளியும், தலைவரும் தனது பண்பாடாக சுவிகரித்துக் கொள்ள வேண்டும். ஆனால் இவை எந்த காலத்திலும் அடிமைப்பட்ட மக்களுக்கு விடுதலை வாங்கி கொடுத்து விடாது.

காந்தியின் நேர்மையை அவரது 'அறிவியல் பூர்வமான சித்தாந்தமில்லா' சுய தேடலை இப்படித்தான் அன்றைய ஏகாதிபத்தியம் தனக்கு முகமூடியாக பயன்படுத்திக் கொண்டது. அதனால்தான் எனது மாப்ளா கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டு இருந்தேன்: ""பிறகு பாவம் காந்தி நிரந்தர முகமூடி ஆகிவிட்டார்""

இங்கு "பாவம்" என்ற சொல்லை - அவர் ஏகாதிபத்திய சதிகளுக்கு நீங்கள் அவரிடம் இருப்பதாக(//சாதி தருமத்தை முற்றிலும் ஒதுக்க மனமில்லாத அவரது உயர்ந்த சாதிப் போக்கு//) சொன்ன பல்வேறு நிலபிரபுத்துவ தத்துவ தாக்கங்கள் காரணமாக பலியானார் - என்பதை உண்ர்ந்து பயன்படுத்தினேன்.

*****

*****
சிவகுமார்:

எனக்குப் புரிந்த வரை காந்தி போராட்டங்களின் நலிந்தவர்களின் பக்கமே சார்ந்திருந்தார். நில உரிமையாளருக்கு எதிராக ஏழை விவசாயிகளுக்கும், தொழிற்சாலை உரிமையாளருக்கு எதிராக தொழிலாளருக்கும், சாதி இந்துக்களுக்கு எதிராக அரிசனங்களுக்கும், இந்துக்களுக்கு எதிராக முஸ்லீம்களுக்கும் ஆதரவாக அவர் பல முறை வாதாடியிருக்கிறார், போராடியிருக்கிறார் என்றுதான் என்னுடைய புரிதல்.


அசுரன்:

அவர் எப்பொழுதுமே சூழ்நிலைக் கைதிதான்(may be some exceptional examples be exist). இதை நேரு பல இடங்களில் பதிவு செய்துள்ளார். நேரு கூறுவதை தொகுப்பாக கூறினால் "அவர் எப்பொழுதும் குழப்பமான மனநிலையில் முடிவுகள் தெளிவாக எடுப்பதில் குளறுபடிகளுடனேயே இருந்தார்" என்பதாக நாம் புரிந்து கொள்ளலாம்.

இது மிக எடுப்பாக வெளிவந்தது இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் அவரிடம் ஏற்பட்ட தடுமாற்றங்களின் போது. காந்திக்கும் அன்றைய கம்யூனிஸ்டு கட்சிக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்தும் இவ்விசயத்தில் சில புரிதல்களுக்கு உதவும்.

அவர் பெரும்பாலான நேரங்களில் போராடும் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக நடந்துள்ளார் சில நேரங்களில் மக்களின் கடும் கண்டனத்துக்கும் ஆளாகியுள்ளார் (வைக்கம் போராட்டம், தெலுங்கான போராட்டம்- மேலும் பல எடுத்துக்காட்டுகள் ஞாபகம் இல்லை). ஆனால் மிக பெரும்பாலான நேரங்களில் ஆளூம் வர்க்கத்தின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க சொல்லி மக்களை கேட்கிறார்.

நிலபிரபுக்களிடமிருந்து பறிமுதல் செய்த நிலங்களை திருப்பி கொடுக்க சொல்லி மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். துப்பாக்கி சூடு நடத்த மறுத்த காவலர்களை கண்டித்து, தனது அரசு வரும் பொழூதும் இதே போல் நீங்கள் அடிபணியாமல் போக வாய்ப்புள்ளது என்று கண்டிக்கிறார். அவர்களுக்கு(57 வீரர்கள்) தண்டனை கொடுத்ததை சரி என்றவர். இவற்றின் மூலம் ஒரு அரசு என்ற அளவில் தானும் கூட வன்முறையை பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பதை உணர்த்துகிறார்.

அவர் என்றைக்குமே existing system-த்தை மாற்றக் கோரியதில்லை. அதாவது நிலபிரபுத்துவ setup-ல் மாற்றம் வருவதை விரும்பவில்லை. அவர் போராட்டத்தில் இறங்க காரணமானதாக நீங்கள் மேற்சொன்ன அதே இயங்கியல் இங்கும் அவரை உந்தித் தள்ளுகிறது.

(//தனது பெருமைக்கு விளைந்த பங்கம் என்றே பொருமும் அவர், //

//இந்தக் கட்டத்தில் அவரது உயர் குலத் தன்மானமும் தன்னுடைய கல்வித் தகுதியில் இருந்த பெருமையும், போராட்ட வழியில் அவரைச் செலுத்தின.//)


அவரது பெருமை குலைந்த பொழுது அவர் பட்ட கஸ்டம் போல்தானே மற்ற அந்தஸ்த்தில் கூடியவர்களும்(நிலபிரபுக்கள், பிரிட்டிஸார்) அவர்களிடமிருந்து அந்தஸ்த்து பிடுங்கப்படும் போது பாதிக்கப்படுவார்கள் என்று அவர் எண்ணியதாலேயே உழைக்கும் மக்களின் அப்படிப்பட்ட போரட்டங்களை அவரால் ஆதரிக்க முடியவில்லை. அப்படி ஆதரித்தாலும் அது தன்னியல்பான பெரும் மக்கள் பங்களிப்பின் நிர்பந்தத்தால் எடுத்த முடிவுகளாகத்தான் உள்ளன.

அவர் எல்லாவற்றையும் தனது சொந்த அனுபவத்தின் முடிவிலிருந்து நோக்கினார் அதனால்தான் அவரது முடிவுகளை அவரது பிற்போக்கத்தனங்கள்(நீங்களே குறிப்பிட்ட) ஆளுமை செலுத்தின.

நான் மேலே சொல்லியிருந்தேனே காந்தியை ஆய்வு செய்வதில் உங்களுக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு என்று, அது இந்த விசயம்தான்:
அதாவது காந்தியை போராட்டதுக்கு இழுத்த விசயத்தை அடையாளம் கண்ட தங்களால் அதுதான் அவரது ஒவ்வொரு முடிவையும் தீர்மானிக்கும் காரணியாக இருந்ததை கவனிக்காமல் விடுகிறேர்கள்.

## வன்முறையை ஆதரித்தாக சொல்லுவது அந்த துப்பாக்கி சூடு நடத்த மறுத்த காவலர் பிரச்சனையிலும், பகத்சிங் பிரச்சனையிலும் அரசு பயங்கரவாதத்தை ஆதரித்ததை. குறிப்பாக துப்பாக்கி சூடு நடத்த மறுத்த காவலர் பிரச்சனையில் வன்முறையில் ஈடுபடமாட்டேன் என்ற வீரர்களை கண்டிக்கிறார்.

*****

*****

சிவகுமார்:

காந்தி இல்லாவிட்டாலும், வேளை வந்ததும் இங்கிலாந்து மூட்டை கட்டியிருக்கும், அவரை ஒரு முகமூடியாகத்தான் அரசு பயன்படுத்தியது, அரசின் கைப்பாவைதான் காந்தி என்ற வாதம் கொஞ்சம் அதிகப்படியாகவேப் படுகிறது

அசுரன்:

இது உண்மை. அன்றைய வரலாற்றுச் சூழலை ஆய்வு செய்யுங்கள். சந்தைக்கான பகுதிகள் முற்றிலுமாக ஒரு சில ஏகாதிபத்தியங்களின் கையில் மாட்டிக்கொண்டு. சந்தைக்கு புதிதாக நாடுகள் இன்றி ஏகாதிபத்தியங்கள் நேரடியான ஒரு மோதலுக்கான சூழல். இவற்றை அன்றைய லெனினுடைய பல்வேறு புத்தகங்களில் காணலாம். அமேரிக்கா தனக்கு சந்தையில் பங்கு வேண்டி அரசியல் செய்தது, ரஸ்யா என்ற தத்துவம் நிதர்சனமான நிலை, ஜப்பானின் வளர்ச்சி, ஜெர்மனியின் தொழிற்புரட்சி, இந்தியாவில் ஒரு கம்யூனிச எழுச்சிக்கான சூழல் இப்படி இந்தியாவுக்கு கிடைத்த போலி சுதந்திரத்தில் உலக, உள்ளூர் நடப்புகள் பெரும்பங்கு ஆற்றுகின்றன. இதில் காந்தியின் பங்கு நிச்சயமாக நெகடிவ்தான்.

காந்தியின் நடவடிக்கைகள் அனைத்தையுமே தொகுத்துப் பார்த்தால் மக்கள் போராட்டம் வெடித்துக் கிளம்பும் போதெல்லாம் இவர் மக்களின் குரலாக முன்வந்து பிசுபிசுத்துப் போகும் போராட்ட வழிமுறைகளை சொல்லுவார். பிறகு பின்வாங்குவார் . இதன் மூலம் தற்காலிகமாக மக்கள் மீண்டும் போராடும் மனநிலைக்கு வர இன்னும் ஒரு 5 அல்லது 10 வருட அவகாசம் கொடுப்பார். இதற்க்காக பல்வேறு போராட்டங்களில் பிரிட்டிஸ் அரசால் நன்றியுடன் நினைவுகூறப்பட்டுள்ளார்.

காந்தி உண்மையில் சுதந்திரம் என்ற விசயத்தை தள்ளிப் போட்டார். இது காந்தி என்ற தனிமனிதரை மட்டும் பார்க்காமல் அவரது காலகட்டத்தின் முக்கிய நிகழ்வுகளை பகுத்தாய்வு செய்தால் புரியும்.

காங்கிரஸ் என்ற கட்சியை ஆங்கிலேயனே உருவாக்கியது ஏன்?"வெடி மருந்துகள் நிரப்பட்ட பீரங்கி திரி கொழுத்தப்பட்ட நிலையில் இருப்பதாக" அன்றைய பிரிட்டிஸ் அரசு இந்தியாவின் நிலையை சொல்லுகிறதே அப்பொழுது காந்தி சிறுவன்தான்.

எதிர்ப்பை நிறுவனப்படுத்தி அழிக்கும் பழைய தந்திரம் தான் அது(இன்றைக்கு WSF அதுபோன்ற ஒரு அமைப்புதான்). பிரிட்டிஸ் அரசு விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தியா தனக்கான அமைப்பை தானே கட்டிக்கொள்ளும் சூழல் அன்று நிலவியதால். பிரிட்டிஸ் அரசே அப்படி ஒரு அமைப்பை உருவாக்கியது. அதுதான் காங்கிரஸ்.

காங்கிரஸ் பத்தாத பொழுது பாராளுமன்ற செட்டப், தேர்தல் என்று சலுகைகளை கொடுத்து கொடுத்து போராட்டத்தை தள்ளிப் போட்ட பிரிட்டிஸ் அரசுக்கு காந்தியும் அப்படித்தான் பயன்பட்டார் என்பது பல்வேறு போராட்டங்கள் கிளர்ந்தெழுந்து சூழல், அவற்றை காந்தி சுவிகரித்து நிர்முலமாக்கியதை பார்க்கும் பொழுது தெளிவாக தெரிகிறது.

முதலுக்கே மோசமாக பம்பாய் தொழிலாளர் கலகம், தெலுங்கானா விவசாயிகல் கிளர்ச்சி, இரண்டாம் உலக்ப்போரால் பலவீனமான பிரிட்டிஸ் அரசு, அமேரிக்க பொருளாதார உதவி வேண்டி நிற்க்கும் பிரிட்டிஸ் அரசின் நிலை, சந்தையில் பங்கு கேட்கும் அமேரிக்கா.....

இச்சூழலில் ஏற்கனவே அவர்களது ஏஜன்டுகளாக, முகமூடிகளாக இருந்த காங்கிரஸ் பிற்போக்கு கோஸ்டிகளிடம் நாட்டை ஒப்புடைத்துவிட்டு. தங்களது தொடர் சுரண்டலுக்கு உறுதி செய்துகொண்டு கிளம்பிவிட்டனர்.(இது பற்றிய எனது ஆங்கில பதிவை பார்க்கவும் அதில் ஒரு தமிழ் கட்டுரை உள்ளது:http://kaipulla.blogspot.com/2006/06/indian-freedom-and-imperialism.html )

காமராசர் விசயத்தில் ராஜாஜிக்கு ஆதரவாக காந்தி செய்ததை எந்த லிஸ்டில் சேர்க்க. அதில் அவரது மேல்சாதி தாக்கம் வேலை செய்யவில்லை என்று கூறுகிறேர்களா?

மேலும் நீங்கள் சொல்லுவது போல் தீண்டாமை போராட்டத்தை காந்தி தொடங்கவில்லை. வைக்கம் போராட்டத்திற்க்கு தீர்மானம் இயற்றக்கூட தாயாராயில்லை அன்றைய காங்கிரஸ்.

அவரது தீண்டாமை எதிர்ப்பும்கூட புற நிலையில் நிலவிய நிர்பந்தத்தால் அவர் தள்ளப்பட்டதுதான்.

அதனால்தான் எந்த தலித் கட்சியும் காந்தியை தலைவராக சொல்ல விரும்புவதில்லை.

காந்தி ஒரு தனிமனிதராக நேர்மை, தியாகம், சகிப்புத்தன்மை, இன்ன பிற விசயங்களுக்கு முன்னுதரனமான தலைவர் ஆனால் அவர் சமூக மாற்றத்துக்கான தலைவர் அல்ல. அவரது முடிவுகளை வைத்து இந்தியாவின், உலகின் எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்காது.

*************


யாருக்கு அஹிம்சை:
இவை தவிர்த்து அஹிம்சா தத்துவத்தின் மூல வேர் எங்குள்ளது என்று தேடினால், அது வர்ணாஸ்ரம தர்மத்தின் கீழ் அடிமைப்படுத்தப்பட்டு நிலபிரபுத்துவ மயக்கத்தில் அதன் பின்பு அணி திரண்ட பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நத்தை மனோபாவத்தில்(அடக்குமுறையைக் கண்டால் கூட்டுக்குள் தலையை இழுத்துக்கொண்டு விதியை நொந்து மருகும் மனோபாவம்), அடிமை மனோபாவத்தில் உள்ளது.

ஆக, மக்கள் தங்களை உணர்ந்து கிளர்ந்து போராட வேண்டுமானால் வர்ணாஸ்ரம கட்டமைப்பிலிருந்து வெளி வர வேண்டும். இது குறித்து காந்தியிடம் ஆழ்ந்த அறிவு, வியாக்கியானமெல்லாம் ஒன்றும் இல்லை. ஆகவே இந்த நிலவுகின்ற வர்ணாஸ்ரம கட்டமைப்பு உருவாக்கிய, நிலபிரபுத்துவத்தின் பின்னே அணி திரள்கிற மக்களின் மந்தை மனோபாவத்தை காந்தி புரிந்து கொள்கிறார், அதற்க்கேற்ற தத்துவம்தான் அஹிம்சை என்கிற ஆளும் வர்க்கத் தத்துவம்.


அசுரன்

**********

related article: மறுகாலனியாதிக்கமும், மாவீரன் பகத்சிங்கும்

103 பின்னூட்டங்கள்:

said...

I pity you. You have lost the capacity to think and understand
as you have blind faith in communism.

said...

Dear Annony,

I pity you on having lost your ability to argue with me. I don't know why you people seem to drop your opinions with out any analytical justifications, like a buffalo excreting....

If you have cuts please come and explode my arguments....

And help me come out of my blindness.. :-))


Asuran.

said...

நல்ல பதிவு.

நன்றி.

said...

அசுரன், உங்களின் கம்யூனிச மற்றும் பெரியாரிய கொள்கையில் எனக்கு உடன்பாடில்லை ஆனால் காந்தியைப் பற்றிய உங்கள் பார்வையில் உடன் படுகிறேன்.

அவர் செய்த இன்னொரு தவறு நேரு ஜின்னா ஆகியவரை அனாவசியமாக ஏற்றி விட்டு துணைக் கண்டத்தின் தீர தலைவலிகளான பாகிஸ்தான் தோன்றுவதற்கும் காங்கிரஸ் வளர்வதற்கும் வித்திட்டது

said...

//
If you have cuts please come and explode my arguments....
//

If you have "Guts"...

said...

கால்கரி சிவா,

தங்கள் வருகைக்கு நன்றி,

எனது கட்டுரையை படித்து விட்டுத்தான் பதில் போடுகிறேர்களா?

//ஆனால் காந்தியைப் பற்றிய உங்கள் பார்வையில் உடன் படுகிறேன்.
//

ஏனெனில் காந்தியை அவர் பார்ப்பினியத்தின் இன்னொரு பிரதிபிம்பமாகவும் இருந்தார் என்பதுதான் கட்டுரையின் மையக் கருத்து. இதை தாங்களும் ஏற்றுக் கொள்கிறீர்கள் எனும் பொழுது பெரு மகிழ்ச்சியாயிருக்கிறது. :-)'



அசுரன்

said...

அசுரன்,

இன்னொரு முனையைத் தொடங்கி விட்டீர்களா :-)

காந்தியின் வாழ்க்கையைப் புரிந்து கொண்டது வரை அவர் பெரிய இயக்கம், புரட்சி என்று போகாமல், தனி மனித மாற்றங்களில் சமூகச் சீர்திருத்தம் (புரட்சி) காண விழைந்தார் என்று நினைக்கிறேன்.

டால்ஸ்டாயின் போரும் அமைதியும் படித்திருக்கிறிர்களா? பெரிய தலைவர், பெரிய இயக்கங்கள் எல்லாம் தனி நபர்களின் தன்னிச்சையான நடவடிக்கைகளின் தொகுப்பே என்று நிறுவ முயன்றிருப்பார். அது முற்றிலும் சரி என்று சொல்ல முடியாவிட்டாலும், பெரும்பகுதி அப்படித்தான் நடக்கிறது என்று கருதுகிறேன்.

சீனப் புரட்சி, சோவியத் புரட்சி எல்லாம் உண்மையான மக்களின் இயக்கங்கள். மக்கள் தயாராக இருந்தால்தான் புரட்சி வரும். தலைவர்களும், புரட்சியாளர்களும் என்னதான் கத்தினாலும், எழுதினாலும் மக்களின் வாழ்க்கையோடு ஒன்றி சேவை செய்தால்தான் மாற்றங்கள் வரும். அதற்கு தலைவர் தன்னைச் சீர்திருத்திக் கொண்டு சமூகத்துக்கு முன் மாதிரியாக வாழ வேண்டும். ரஷ்யாவிலிருந்தோ சீனாவிலிருந்தோ இறக்குமதி செய்யப்பட்ட கொள்கைகள் நமக்குப் பொருந்தும் என்றிருப்பதுதான் இயக்கம் சார்ந்த கம்யூனிஸ்டுகளின் தவறு.

நானும் என்னளவில் ஒரு கம்யூனிஸ்டுதான், செங்கொடி குத்திக் கட்சி உறுப்பினர் ஆக விரும்பாத, கட்சி வரையறைக்குள் அடங்கி விட விரும்பாத கம்யூனிஸ்டு. அதனால்தான் காந்தி வழியில் எனக்கு நம்பிக்கை அதிகம். கட்சிக் கட்டுப்பாடு என்று ஒரு குழுவினர் சொல்வதை வாயை மூடிக் கொண்டு கேட்க வேண்டிய சர்வாதிகாரம் காந்தீயத்தில் இல்லை. ஒவ்வொவரும் மார்க்ஸ் சொன்ன அறிவியல் வழியில் அலசி ஆராய்ந்து தனது பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

அன்புடன்,

மா சிவகுமார்.

said...

ஏங்க அசுரன்,

உங்களுக்கு எங்கே பார்த்தாலும்,யாரைப் பார்த்தாலும் "பார்பனீயத்தின்" பிரதிபிம்பம் தான் தெரியுது..

பாலா

said...

Hey.
This is the first time I am writing to this blog site.
My name is Boopathi…
FYI I am not a Brahmin. I am an Ambalakkaran.
I have lot of Brahmin friends and other friends...i find no problem with them. People like you and some fundamentalist higher cast people (Brahmin, Mukkulathor...Kallar etc) all messed up the country. Tamil Nadu is not ruled by Brahmin. Even admk govt...it was looted by Thevar (kallar) people. DMK/Congress/ADMK all looted(ing) the country. That is our current real problem. The worst kinds of people are in all community. You think about only about past. Even Periyar started the movement after he was ill-treated by Brahmin in Kaasi. Same way Gandhi started fighting after S.Africa incident.

My Brahmin friends never even think about they are Brahmins. People like you remind them about the past and try to just do the time pass. Are you doing anything to country/Poor people/so called low cast people/ or any good…..
If I ask you that, I know you are going to lie, saying you are doing this & that….
World is changed a lot…not because of periyar / anna /Gandhi / Karunaneethi/ JJ/MGR/ or any Stinking people.

“World is changing because that is the property of it”

If you have guts publish this.

I will crate a user id login sooner and write more.

said...

அசுரன், பார்பணீயம், இஸ்லாமீயம், கம்யூனீயம் ஆகிய எல்லா ஈயங்களின் எதிரான கருதுள்ளவன் தான் நான்.

said...

அசுரன்,

எந்த ஒரு அடிமைபடுத்தலையும் நான் எதிர்க்கிறேன். அதில் பார்பணீயமும் அடக்கம்.

கருத்துகளை முன் வையுங்கள் எடுத்துக் கொள்பவர்கள் எடுத்துக் கொள்ளட்டும் அதுவே என் கொள்கை

said...

நல்ல பதிவு.

நன்றி.

கரும்பலகை

said...

அசுரன்,

சொல்ல வார்த்தைகள் வரவில்லை. அற்புதமான ஒரு அலசல்.

said...

அசுரன்,

மிகச் சிறப்பான பதிவு.. தொடரட்டும் உங்கள் பணி..

வாழ்த்துக்கள்

said...

hey,
if youare trying to talk on gandhi
try to atleast behave like a real human,
you are creating lot of hatred among people.
shut your mouth
do something to the society and then u can correct the world.
you are doing nothing just sitting whole day infront of computers and making a noise on gandhian philosophy
rubbish

said...

அசுரன்,

உணர்வுபூர்வமாக அல்லாமல் அறிவுபூர்வமாக ஆராய்ந்துள்ளீர்கள்.

// 3)புரட்சிக்காரன் பகத்சிங்கைத் தூக்கிலிடுவதாக இருந்தால், அதனை, லாகூர் காங்கிரசுக்கு முன்னரே செய்து விடுங்கள் என்று இர்வினிடம் பேரம் பேசி 'காந்தி-இர்வின்'ஒப்பந்தம் போட்ட துரோகத் தலைவனாச்சே! //

காந்தியின் துரோகங்களில் முதன்மையானதும், மன்னிக்க முடியாததும்--கூடாததும் ஆகும் இது.

காந்தியின் அக்கறையெல்லாம் இந்துக்களுக்கு நல்ல பிள்ளையாய் இருப்பதே. தாழ்த்தப்பட்டவர்களின் அரசியல் கோரிக்கைகள் இந்துக்களுக்கு எதிரானவை எனக் காந்தி நினைத்ததால் அவற்றையும் எதிர்த்தார். தாழ்த்தப்பட்டவர்கள் ஓர் அமைப்பாவதை காந்தி விரும்பவில்லை. அவர்கள் அமைப்பானால் இந்துக்களிடமிருந்து விடுபட்டுச் சொந்தக் கால்களில் நிற்பார்கள். இந்துக்களின் அணியைப் பலவீனப்படுத்திவிடுவார்கள் என அச்சப்பட்டார்.

said...

//
காந்தி நல்லவரா? கெட்டவரா?
//

தெரியல்லியேப்பா......தெரியல்லியே..

said...

//"கிறிஸ்தவரான தாங்கள், இந்து மதத்தின் உள்விவகாரத்தில் அக்கரை காட்ட வேண்டாம். விலகிடுங்கள்" என்று. ஜோசப் மனம் நொந்து போனார். மனித உரிமை மீறலை எதிர்த்துத்தான் அவர் பெரியாருடன் இணைந்து வைக்கம் வந்தவர். அவரின் செயலை, இந்த பாவ ஆத்மாவோ, மதரீதியாய்த் தனிமைப்படுத்திடும் இழிவான செயலில் இறங்கியது.
//
//"அவரின் எளிமைக்காக காங்கிரசுக் கட்சி நிறைய செலவு செய்ய வேண்டி இருக்கிறது".

பின்னே. இருக்காதா? மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில் இவுக போகணும்னா, 72 டிக்கட்டையும் (பாதுகாப்பு கருதி) காங்கிரசு அல்லவா புக் செய்து மொய் எழுதியது! கூடவே பால் கறவையில் இருக்கும் ஆடுகளுக்கும் டிக்கட் எடுக்கணும்.

//

//வ.உ.சி. சினத்துடன் சொன்ன வார்த்தை "வாளெடுத்துப் போர் புரிய வேண்டிய கைகளைப் போயும் போயும் கைராட்டை சுற்ற வைத்து விட்டாயேப்பா".
//
தெலுங்கானா, புன்னப்புரா, வயலார், வயநாடு ஆகிய விவசாயிகள் புரட்சியை ரத்தச் சேற்றில் நிலப்பிரபுத்துவ சக்திகள் நசுக்கிக் கொண்டிருந்தபோது 'தர்மகர்த்தா' முறை மூலம் நமது உழைக்கும் வர்க்கத்துக்கு விடிவு வரும் என கிலோக்கணக்கில் அல்வா கொடுத்த ஜென்மம் அல்லவா?
//
//அஹிம்சையை காந்தி யாருக்கு வலியுறுத்தினார்? ஒடுக்கப்படும், சுரண்டப்படும் வர்க்கத்துக்கு மட்டுமே. அரசின் பயங்கரவாதத்தை அவர் எப்போதுமே ஆதரித்துள்ளார். நிலப்பிரபுக்களின் சுரண்டல் அவர் கண்ணுக்குத் தெரியவே இல்லை. அந்தச் சுரண்டல் எல்லாம் என்ன அஹிம்சைப் பரம்பொருளா என்ன?

//
//நமது ஆயுதத்தை (கத்தியோ, உண்ணாவிரதமோ) நாம் தீர்மானிப்பதில்லை. தீர்மானிப்பது நமது எதிரி.

காந்தியின் சிந்தனைப்படி பார்த்தால், அவனை ஏன் எதிரியாக நினைக்க வேண்டும். அவன் அறியாமல் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்ள நாம் நம்மை வருத்திக் கொள்ளவேண்டும் என்பது 100% எதிரியின் நலன் காப்பதில்தான் போய் முடியும். இல்லையா? //

//
அவர் என்றைக்குமே existing system-த்தை மாற்றக் கோரியதில்லை. அதாவது நிலபிரபுத்துவ setup-ல் மாற்றம் வருவதை விரும்பவில்லை. அவர் போராட்டத்தில் இறங்க காரணமானதாக நீங்கள் மேற்சொன்ன அதே இயங்கியல் இங்கும் அவரை உந்தித் தள்ளுகிறது.

//

காந்தி

வெள்ளைக்காரனின் முகமுடியாகவும் ,
பார்பனியத்தை உயர்த்தி பிடித்தார் என்பதையும்

எவ்வாறு என அறியவும் - பிறருக்கு தெரியப்படுத்தவும் இந்த கட்டுரை
உதவும் விதத்தில் இருப்பது சிறப்புக்குரியது.

நன்றி.

கரும்பலகை

said...

சிவபாலனின் வருகைக்கு நன்றி,
அசுரன்

said...

ஆங்கில எழுத்துப் பிழை அவர்களே!... வருக வருக....
உங்கள் சேவையை தருக தருக!...

நன்றி
அசுரன்

said...

அன்பு மா.சிவகுமார்,

//சீனப் புரட்சி, சோவியத் புரட்சி எல்லாம் உண்மையான மக்களின் இயக்கங்கள். மக்கள் தயாராக இருந்தால்தான் புரட்சி வரும். தலைவர்களும், புரட்சியாளர்களும் என்னதான் கத்தினாலும், எழுதினாலும் மக்களின் வாழ்க்கையோடு ஒன்றி சேவை செய்தால்தான் மாற்றங்கள் வரும். //

இதை கம்யுனிஸ்டுக் கட்சி மறுப்பதில்லை. இன்னும் சொன்னால் காந்திதான் மறுக்கிறார். கம்யுனிஸ்டு கட்சி தெளிவாக ஒவ்வொரு சமூகத்தின் புரட்சிகரமான அம்சத்தை கண்டுபிடிக்கும் சமூக விஞ்ஞானத்தைக் கொண்டுள்ளது. அதன் மூலம், வளரும் அந்த சக்திக்கு ஆதரவாக வேலை செய்யும்.

மற்றபடி மக்கள் தயாராக இருந்த பொழுதுதான் காந்தி காலை வாரி விட்டுள்ளார் என்பதைத்தான் பதிவு செய்துள்ளேன்.

ஏன் அப்பொழுது காந்தி மக்களின் குரலாக ஒழிக்கவில்லை? பகத்சிங் விசயத்தில் மக்களின் குரலாக ஒழிக்கவில்லை?

அது குறித்து தங்களது கருத்துக்களை அறிய விரும்புகிறேன். அல்லது மக்கள் தயாராக இருப்பது என்பது தங்களது பார்வையில் ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்வதா?

சமூகத்தில் எப்பொழுதுமே அடிப்படையில் இரு வித கருத்துகள் நிலவும், ஆளும் வர்க்க கருத்து, அதை எதிர்த்து வளருகின்ற புரட்சிகர கருத்து. இரண்டில் யார் எதை ஆதரிக்கிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் விசயம்.

காந்தி இதில் உறுதியாக ஆளும் வர்க்க கருத்தை தாங்கிப் பிடித்தவர்தான். இதைத்தான் கட்டுரையும் சொல்கிறது, நீங்களும் ஏற்கனவே ஏற்றுக் கொண்டுள்ளீர்கள்.

மக்கள் தயாராவது என்பது சமூகத்தின் பரிணாம வளர்ச்சிப் போக்கில் நடந்தேறும்(அதற்க்கு எந்த ஒரு தனிமனிதரும் தேவையில்லை), ஆனால் ஒரு அமைப்பு உருவாவது தடுக்கப்பட்டால்(பரிணாம வளர்ச்சியில் அமைப்பும்கூட உருவாகும்) தயாராக இருக்கும் மக்களால் கூட புரட்சி செய்ய முடியாது.

இந்த மாதிரியெல்லாம் காந்தி ஆராய்ச்சி செய்தது கிடையாது. அவரது அதிக பட்ச ஆராய்ச்சி பகவத் கீதை என்னும் மக்கள் விரோத தத்துவத்தை சிறந்ததது என்று விளம்பரப்படுத்தியதுதான்.



//அதற்கு தலைவர் தன்னைச் சீர்திருத்திக் கொண்டு சமூகத்துக்கு முன் மாதிரியாக வாழ வேண்டும். ரஷ்யாவிலிருந்தோ சீனாவிலிருந்தோ இறக்குமதி செய்யப்பட்ட கொள்கைகள் நமக்குப் பொருந்தும் என்றிருப்பதுதான் இயக்கம் சார்ந்த கம்யூனிஸ்டுகளின் தவறு.
//

இறக்குமதி செய்யப்பட்ட எதையுமே சிவகுமார் உபயோகப்படுத்தமாட்டாரா? கம்யுனிஸம் ரஸ்யா, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதல்ல என்பதை பல முறை சொல்லியாயிற்று. அதுவும் இந்தியாவுக்கான வழி என்பதைக் குறித்தும் சில பதிவுகளே போட்டாயிற்று. இன்னும் அதே பல்லவியை பாடிக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?

ஒரு விஞ்ஞானத்தை மார்க்ஸ் கண்டுபிடிக்கிறார். அதை லெனின் ரஸ்யாவில் பயன்படுத்தினார். அந்த அனுபவங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு மாவோ பயன்படுத்தினார். இது தவிர்த்து உலகில் உள்ள பல சமூக விஞ்ஞான அனுபவங்களை கணக்கில் எடுத்து இந்தியாவில் பயன்படுத்த வேண்டும், அதை செய்யும் அமைப்புகள் இந்தியாவில் இருக்கின்றன.

மின்சாரத்தை மேற்குலகில் கண்டுபிடித்ததால் நாம் அதை பயன்படுத்தக் கூடாதா? சிவக்குமார், பாரம்பரியமான தீப்பந்தத்தை உபயோகப்படுத்த சொல்கிறாரா?

சமூக பரிணாம வளர்ச்சியில் மேற்குலகம் சென்ற பாதை அங்கு விரைவான வளர்ச்சிதை மாற்றங்கள் ஏற்ப்பட்டது. அதனால் உலகின் பல வித முதலாளித்துவ விஞ்ஞானங்கள் மேற்குலகில் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் மார்க்ஸின் சமூக விஞ்ஞானமும் ஒன்று. அந்த விஞ்ஞானத்தின் அடிப்படையில் இந்தியாவிலும் ஆய்வு செய்வதில் என்ன தவறு என்று மா. சிவகுமார் விளக்க வேண்டும். இதே போல மனித சமூகத்துக்கு காந்தியின் அன்பளிப்பு என்ன என்றும் கூற வேண்டும்.

எந்த ஒரு கருத்தும் ஒரு தனிமனிதரிடம் உருவாவதில்லை. இன்னும் சொன்னால் பல நேரங்களில் ஒரு குறிப்பிட்ட தனிமனிதர் அந்த சமூகத்தின் கருத்தை தொகுத்துக் கொடுக்கும் வேலையைத்தான் செய்கிறார்(மார்க்ஸ், நபி, ஏசு, பகத்சிங் etc). நீங்கள் உங்களது தளத்தின் முகப்பில் எழுதி வைத்திருப்பது போல இன்றைக்கு சரி என்பதேல்லாம நாளை தவறாகிவிடும்(சமூக மாற்றத்திற்க்கு ஏற்ப கருத்துகளும் மாறும்). இந்த சமூக கருத்துக்களின் உற்பத்தி கேந்திரம் எது? அதை கண்டுபிடிக்க ஆய்வு செய்ய உங்களது காந்தியின் அறிவியல் பூர்வமான வழி என்ன?

கம்யுனிஸத்தை படித்து விட்டு விமர்சனம் செய்யலாமே? நான் காந்தியை படித்து விட்டுத்தான் விமர்சனம் செய்கிறேன்.

அப்படியில்லையெனில் என்ன வகையில் நான், காந்தி ஒரு தீர்வு கிடையாது என்று கூறினேனோ அதேபோல குறைந்த பட்ச லாஜிக் உடன் ஒரு சிறிய கட்டுரையாவது எழுதி கம்யுனிசம் இந்தியாவுக்கு ஏற்ற கொள்கையல்ல என்று எழுதுங்கள். நான் வந்து அக்குவேறு ஆணி வேறாக பிடுங்கி எறிகிறேன்.
:-)

சீர்திருத்தம் என்று எதை கூறுகிறேர்கள்? ஏனெனில் ஒரு ஆண்டான் அடிமை சமுதாயத்தில் அடிமைகளை விடுவிப்பது சீர்திருத்தம், அதற்க்குப் பதிலாக நிலப்பண்ணையாரிடம் பண்ணையடிமையாய் வைத்திருப்பது சீர்திருத்தம். ஆனால் இன்றைய ஏகதிபத்திய உலகில் சீர்திருத்தம் என்பது பண்ணையடிமையாய் வைப்பது அல்ல மாறாக உழைக்காத நில உடைமையாளர்களிடம் இருந்து நிலத்தைப் பிடுங்குவதுதான் சீர்திருத்தம்.

இதில் காந்தி எந்த சீர்திருத்தத்தை செய்தார்? உறுதியாக அவர் பண்ணையடிமையாக்கும் சீர்திருத்தத்தை ஆதரித்தார்(தெலுங்கானா, வைக்கம் etc). அதாவது சீர்குலைப்பதை ஆதரித்தார். ஆக அவரே தன்னளவில் ஒரு பிற்போக்கான ஆசாமி. அவரிடம் எப்படி சமூக மாற்றத்துக்கான விசயம் இருக்கும்.

சரி விடுங்கள், இந்திய உழைக்கும் மக்களின் விடுதலைக்கு கம்யுனிசம் தீர்வு கிடையாது என்கிறீர்கள், காந்தியின் தீர்வு என்ன?


//நானும் என்னளவில் ஒரு கம்யூனிஸ்டுதான், செங்கொடி குத்திக் கட்சி உறுப்பினர் ஆக விரும்பாத, கட்சி வரையறைக்குள் அடங்கி விட விரும்பாத கம்யூனிஸ்டு. //


நீங்கள் ஒரு கம்யுனிஸ்டு கிடையாது. கம்யுனிஸ்டு(கம்யுனிசம் தெரியாவிட்டாலும் பரவாயில்லை) என்பதே குறைந்த பட்சம் தனிமனிதனாக இல்லாமல் ஒரு குழுவாக ஒலிக்கும் ஜன நாயக தன்மை கொண்டிருக்க வேண்டும். நிலவுகின்ற அதிகார அடக்குமுறை அமைப்பை சமரசமின்றி எதிர்க்க வேண்டும்(by deed). இவை இரண்டும் உங்களிடம்/உங்கள் தத்துவத்திடம் கிடையாது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். அமைப்பு ரீதியாக செயல்படாத ஒருவன் கம்யுனிஸ்டாக இருக்கவே முடியாது(குறைந்த பட்சம் அதற்க்கான விருப்பம்), நீங்களோ செங்கொடி எனக்கு பிடிக்காது, கட்சி வரையறை எனக்கு பிடிக்காது என்று பல 'க்காது'களை சொல்கிறேர்கள். பிறகு எப்படி கம்யுனிஸ்டாக இருக்க முடியும்?

தயவு செய்து கம்யுனிசத்தை படிக்க முயற்சி செய்யுங்கள்.... அல்லது இது போல அடிப்படையற்ற கருத்துக்களை வைக்காதீர்கள்.


நன்றி,
அசுரன்

said...

//ஆக, மக்கள் தங்களை உணர்ந்து கிளர்ந்து போராட வேண்டுமானால் வர்ணாஸ்ரம கட்டமைப்பிலிருந்து வெளி வர வேண்டும். இது குறித்து காந்தியிடம் ஆழ்ந்த அறிவு, வியாக்கியானமெல்லாம் ஒன்றும் இல்லை. ஆகவே இந்த நிலவுகின்ற வர்ணாஸ்ரம கட்டமைப்பு உருவாக்கிய, நிலபிரபுத்துவத்தின் பின்னே அணி திரள்கிற மக்களின் மந்தை மனோபாவத்தை காந்தி புரிந்து கொள்கிறார், அதற்க்கேற்ற தத்துவம்தான் அஹிம்சை என்கிற ஆளும் வர்க்கத் தத்துவம்.//

said...

அசுரன் இது தான் முதல் முறையாக நான் உங்கள் கட்டுரையைப் படிப்பது, காந்தியைப் பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் பலக் கருத்துக்கள் சிந்தனையைத் தூண்டினால்.. காந்தியை முழுமூச்சாக விமர்சிக்க வேண்டும் என்ற எண்ணம் தங்கள் எழுத்துக்களில் மேலோங்கி இருப்பது ஒரு சின்ன நெருடல். மற்றபடி கட்டுரை அற்புதம். வாழ்த்துக்கள்.

said...

அசுரன், அப்படியே, இந்த பதிவையும் ஒருமுறை தொட்டுக்கோங்க..

http://tvpravi.blogspot.com/2006/10/blog-post_05.html

said...

அசுரா.. என்னென்னவோ சொல்றியெப்பா.. எனக்கு இதுவரை தெரிஞ்சது எல்லாம் பொஸ்தகத்துல படிச்சதுதான்...காந்தி நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தவர்.. எளிமையானவர்... அஹிம்சையை போதித்தவர்...இப்படி.

ஆனா.. இப்ப குழப்பமா இருக்குது.. நீ சொல்றது உண்மையா இருக்கும் போலத்தான் தெரியுது.. யாரும் எதிர்த்து விவாதம் பன்னினால் இன்னும் உண்மை தெளிவாகும்.. பார்க்கலாம் யாராவது வருகிறார்களா என்று..

எப்படியோ, இது என்னை ( போல் பலரையும்) யோசிக்க வைத்த பதிவு..எவ்வாறு இப்படியெல்லாம் ஆணித்தரமாக தகவல்கலுடன் எழுதுகிறீர்கள்? ஆச்சரியமாக உள்ளது.. உங்கள் கட்டுரைகளும் அதனை தெளிவாக விவாதிக்கும் முறையும் அருமை.. வளரட்டும் உங்கள் தொண்டு..

said...

//ஏங்க அசுரன்,

உங்களுக்கு எங்கே பார்த்தாலும்,யாரைப் பார்த்தாலும் "பார்பனீயத்தின்" பிரதிபிம்பம் தான் தெரியுது..

பாலா
//

பாலா,

பார்ப்பினியத்தை விமர்சித்து எழுதினால் பார்ப்பினியம்தான் இருக்கும். உங்களுக்காக நமிதா, மல்லிகா ஷெராவத் பற்றியெல்லாம எழுத முடியாது. அதற்க்கு வேறு பதிவுகளைப் பார்க்கவும்.

அசுரன்

said...

//Hey.
This is the first time I am writing to this blog site.
My name is Boopathi…
FYI I am not a Brahmin. I am an Ambalakkaran.
I have lot of Brahmin friends and other friends...i find no problem with them. People like you and some fundamentalist higher cast people (Brahmin, Mukkulathor...Kallar etc) all messed up the country. Tamil Nadu is not ruled by Brahmin. Even admk govt...it was looted by Thevar (kallar) people. DMK/Congress/ADMK all looted(ing) the country. That is our current real problem. The worst kinds of people are in all community. You think about only about past. Even Periyar started the movement after he was ill-treated by Brahmin in Kaasi. Same way Gandhi started fighting after S.Africa incident.

My Brahmin friends never even think about they are Brahmins. People like you remind them about the past and try to just do the time pass. Are you doing anything to country/Poor people/so called low cast people/ or any good…..
If I ask you that, I know you are going to lie, saying you are doing this & that….
World is changed a lot…not because of periyar / anna /Gandhi / Karunaneethi/ JJ/MGR/ or any Stinking people.

“World is changing because that is the property of it”

If you have guts publish this.

I will crate a user id login sooner and write more.
//

அன்பு அனானி,

பார்ப்பினியம் என்பதும் பிறப்பால பார்ப்பனர் எனப்தும் வேறு வேறு. இதை பல முறை இந்த தளத்தில் விளக்கியாயிற்று. நீங்கள் கொஞ்சம் லேட்டா வர்றீங்க. பார்ப்பினியத்தை கடுமையாக விமர்சிக்கும் பிறப்பால் பார்ப்பனரானவர்களான பலரை காமிக்க முடியும். இங்கேகூட கால்கரி சிவா என்பவர் பார்ப்பினியம்(எந்த அடக்குமுறைத் தத்துவமும்) தவறு என்பதை ஆதரித்து பின்னூட்டமிட்டுள்ளதைப் பார்க்கவும். அவர் பிறப்பால ஒரு பார்ப்பனர் என்றுதான் நினைக்கிறேன்(உறுதியாக தெரியவில்லை).

எனக்கும் கூட பல பார்ப்பன நண்பர்கள் இருக்கிறார்கள் எனது சிறு வயதில் எனக்கு வேதங்கள் சொல்லிக் கொடுத்த பார்ப்பன குடும்பம் இன்றும் எங்களது குடும்ப நண்பர்கள். எனது பதிவுகளை அனுப்பும் மெயிலர் லிஸ்டில் பல பிறப்பால பார்ப்பனரான நண்பர்கள் இருக்கிறார்கள்.

ஞானி முதலான பிறப்பால் பார்ப்பனரான பார்ப்பினிய எதிர்ப்பை தூக்கிப் பிடிக்கும் சமூக ஆர்வலர்களைப் பற்றி தங்களுக்கு அறீமுகம் இருக்காது என்று நினைக்கிறேன். கொஞ்சம் வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். கீற்று என்னும் இணைய இதழில் பெரும்பாலான் முற்போக்கு இதழ்கள் பிரசூரிக்கப் படுகின்றன. படியுங்கள்(www.keetru.com).

நாங்கள் தத்துவத்தை விமர்சனம் செய்கிறோம். நீங்களோ அதை பிறப்பின் அடிப்படையில் பார்த்து பார்ப்பினிய கட்டமைப்புக்குள் மாட்டிக் கொள்கிறேர்கள்.

தேவரைப் பற்றியும் கூட கட்டுரை எழுதியிருக்கிறோம். படித்துப் பார்க்கவும். ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு எழுதியது போல இருக்கிறது. கொஞ்சம் அசுவாசப் படுத்திக் கொண்டு சமூகத்தை கண்களை அகலத் திறந்து பாருங்கள்.

சரி, பார்ப்பினியம் ஏன் விமர்சிக்கப் படவேண்டும்? ....
இதற்க்கான பதில் ஏற்கனவே 'திரு' என்பவரின் தளத்தில் நடந்த விவாதங்களில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் சுட்டி தருகிறேன். படித்துப் பார்த்து அங்கு விவாதத்தை தொடங்குங்கள் நானும் இணைந்து கொள்கிறேன்.
http://aalamaram.blogspot.com/2006/09/blog-post_06.html

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி,
எனது மற்ற கட்டுரைகளையும் படித்து கருத்து சொல்லுங்கள்

அசுரன்

said...

//அசுரன்,

எந்த ஒரு அடிமைபடுத்தலையும் நான் எதிர்க்கிறேன். அதில் பார்பணீயமும் அடக்கம்.

கருத்துகளை முன் வையுங்கள் எடுத்துக் கொள்பவர்கள் எடுத்துக் கொள்ளட்டும் அதுவே என் கொள்கை
//

கால்கரி சிவா அவர்களே,

நல்ல விசயம்தான். ஆனால் பார்ப்பினியம் என்பதை எப்படிப் புரிந்து கொண்டு எதிர்க்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனாலும் தங்களது நிலைப்பாட்டை பாராட்டுகிறேன்(எந்த ஒரு அடிமைபடுத்தலையும் நான் எதிர்க்கிறேன்).


//அசுரன், பார்பணீயம், இஸ்லாமீயம், கம்யூனீயம் ஆகிய எல்லா ஈயங்களின் எதிரான கருதுள்ளவன் தான் நான்.//

என்னையும் இசத்தில் ஒன்றாக சேர்த்து கிச்சு கிச்சு மூட்டு கிறேர்கள் (சும்மா...) :-))..

தமாஸ் இருக்கட்டும்.

பார்ப்பினியம், இஸ்லாமியம் சரி... ஏன் கம்யுனியத்தை எதிர்க்கிறேர்கள்? இது குறித்து கம்யுனிசம்(any) சம்பந்தப்பட்ட பதிவில் தங்களது கருத்துக்களை பதிவு செய்தால் விவாதம் செய்யலாம். இந்த பதிவில் வேண்டாம்.

தங்களது கருத்துக்களுக்காக ஆவலுடன்,

அசுரன்

said...

கரும்பலகை, ராஜவனஜ், விடாது கருப்பு,

தங்களது வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி,
அசுரன்

**********


சபாபதி சரவணன்,

//காந்தியின் துரோகங்களில் முதன்மையானதும், மன்னிக்க முடியாததும்--கூடாததும் ஆகும் இது.
//

இது ஆகக் கேடான துரோகம். மிகச் சரியாகவே அடையாளப்படுத்தியுள்ளீர்கள்.

அவரது தலித் எதிர் நிலைப்பாட்டின் மூல வேர் அவரது சனதான பற்றில் புதைந்துள்ளது.

தங்களது வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி,
அசுரன்

said...

வரதராஜ முதலியார்,

//தெரியல்லியேப்பா......தெரியல்லியே.. //

வருகைக்கு நன்றி, உங்கள் பெயரின் பிற்பகுதியில் வரும் அந்த முதலியார் யார்?..... :-)

அசுரன்

***********

//காந்தி

வெள்ளைக்காரனின் முகமுடியாகவும் ,
பார்பனியத்தை உயர்த்தி பிடித்தார் என்பதையும்

எவ்வாறு என அறியவும் - பிறருக்கு தெரியப்படுத்தவும் இந்த கட்டுரை
உதவும் விதத்தில் இருப்பது சிறப்புக்குரியது.

நன்றி.

கரும்பலகை//

விளக்கமாக இன்னொரு பின்னூட்டமிட்ட கரும்பலகைக்கு நன்றி,
அசுரன்

said...

//ஆக, மக்கள் தங்களை உணர்ந்து கிளர்ந்து போராட வேண்டுமானால் வர்ணாஸ்ரம கட்டமைப்பிலிருந்து வெளி வர வேண்டும். இது குறித்து காந்தியிடம் ஆழ்ந்த அறிவு, வியாக்கியானமெல்லாம் ஒன்றும் இல்லை. ஆகவே இந்த நிலவுகின்ற வர்ணாஸ்ரம கட்டமைப்பு உருவாக்கிய, நிலபிரபுத்துவத்தின் பின்னே அணி திரள்கிற மக்களின் மந்தை மனோபாவத்தை காந்தி புரிந்து கொள்கிறார், அதற்க்கேற்ற தத்துவம்தான் அஹிம்சை என்கிற ஆளும் வர்க்கத் தத்துவம்.//

எனது கட்டுரையின் ஒரு பகுதியை மட்டும் மேற்கோள் காட்டியுள்ள அனானி அவர்களுக்கு நன்றி

**********
//அசுரன் இது தான் முதல் முறையாக நான் உங்கள் கட்டுரையைப் படிப்பது, காந்தியைப் பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் பலக் கருத்துக்கள் சிந்தனையைத் தூண்டினால்.. காந்தியை முழுமூச்சாக விமர்சிக்க வேண்டும் என்ற எண்ணம் தங்கள் எழுத்துக்களில் மேலோங்கி இருப்பது ஒரு சின்ன நெருடல். மற்றபடி கட்டுரை அற்புதம். வாழ்த்துக்கள். //

பாராட்டுக்கு நன்றி தேவ், எனது மற்ற கட்டுரைகளையும் படியுங்களேன்.

அசுரன்
********
செந்தழல் ரவி,

வருகைக்கு நன்றி, கட்டுரையையும் படித்து கருத்து சொல்லுங்களேன்.

அசுரன்

said...

//ஆனா.. இப்ப குழப்பமா இருக்குது.. நீ சொல்றது உண்மையா இருக்கும் போலத்தான் தெரியுது.. யாரும் எதிர்த்து விவாதம் பன்னினால் இன்னும் உண்மை தெளிவாகும்.. பார்க்கலாம் யாராவது வருகிறார்களா என்று..//

வாங்க மனதின் ஓசை,

மா. சிவகுமாரைத் தவிர்த்து யாரும் எதிர் வாதம் வைக்கவில்லை.

அவருக்கு ஒரு பதில் போட்டுள்ளேன். அவரது எதிர் வினைக்காக காத்திருக்கிறேன்.


//உங்கள் கட்டுரைகளும் அதனை தெளிவாக விவாதிக்கும் முறையும் அருமை//

எல்லாம் கம்யுனிசத்துக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். dialectics-அதாவது இயக்கவியல் என்பது ஒரு விவாத முறை, எதிர் மறைக் கருத்துக்களை மோத விட்டு அதனூடக தீர்வை நோக்கி செல்வது. அந்த சொற்றொடர் தான் பிறகு இயக்கவியல் பொருள்முதல்வாதத்திற்க்கும் பயன்பட்டது. அதாவது முரன்பாடுகள் பற்றிய தத்துவம். ஆகவே விவாதம் செய்வதை பொறுத்த வரை கம்யுனிஸ்டு என்று சிறப்பாக செய்வார்கள். அவர்களை விவாதத்திலும் கூட தோற்கடிப்பது கடினம்... :-))

தங்களது வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி,
அசுரன்

said...

அடியாத்தி இது நெசமா? ந்ம்பவேமுடியல?

அப்பிடீனா இவர் சொன்ன ஒத்துழையாமையை கேட்டு நாங்ள்லாம் இங்லீஷ் படிச்சா பாவமுனு சொல்லி பார்த்த வேலையையும் விட்டுட்டு பள்ளிகூடத்திற்க்கும் போகாமல் (அன்று ஆங்கில வழி கல்விதான் போதிக்கப்பட்டதால்) ஆங்கிலேயனுக்கு ஒத்துழைக்காமல் போராட்டம் பன்னியாதால்(அவாள்கள் பன்னினார்களா என்று கேட்கப்படாது அது தேச துரோகம் அப்பிடீன்னு அவா சொல்றா ஆனால் அவாள்கள் மட்டு காக்கா பிடித்து மேலே வந்தார்கள் இது தான் இன்றைய இந்தியாவில் தேசப்பற்று) கல்வி வேலைவாய்ப்பு போன்றா அனைத்திலும் இன்று பின் தங்கி இருகிறோமே இன்று 27 ச்தவிகத்திற்க்கு போராடக்கூடிய அவலநிலையில் உள்ளோமே. ஆங்கிலேயனுக்கு ஒத்துழைக்காமல் போராடி எங்கள் வாழ்க்கையை இழந்ததால் நாங்கள் தேச துரோகிகளாகிவிட்டோம். என்ன செய்ய இதுதான் இந்திய நீதி

அப்ப வளர்த்த கடா தான் மார்பில் பாய்ந்ததா?

said...

அசுரன்,
நல்ல பதிவு... இது ஒருமுகவாகவே இருப்பதால் எதையும் தீர்மானிப்பதற்கில்லை. நல்ல ஒரு விவாதம் நடை பெற்றால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்!!!

said...

//இன்னும் சொன்னால் காந்திதான் மறுக்கிறார்.//

காந்தியத்தின் அடிப்படையே தனிமனித சீர்திருத்தம்தான். ஒவ்வொரு மனிதனும் மனம் மாறினால்தான் சமூகம் மாறும். அதை விடுத்து ஆயுதம் தாங்கிய புரட்சி செய்து ஒரு சிறுபான்மை பெரும்பான்மை மீது புரட்சியை சுமத்தினால் எதிர்மறை விளைவுதான் மிஞ்சும். எப்படி காந்தி மக்கள் சார்ந்த மாற்றத்தை காந்தி மறுக்கிறார் என்று சொல்கிறீர்கள்?

எப்போது மக்கள் தயாராக இருந்தார்கள்? நாட்டின் ஒரு கணிசமான பகுதியை தீண்டத்தகாதார் என்று ஒதுக்கி வைத்திருந்ததா மக்களின் தயார் நிலை? இரு பெரும் மதத்தைச் சார்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு சாக நின்றதா மக்களின் தயார் நிலை?

தீண்டாமை என்ற முகப்புண், மதச் சண்டைகள் என்ற புற்றுநோய் இவற்றைச் சரி செய்யாமல் துப்பாக்கி ஏந்தி சண்டை போட்டு தன்னாட்சி பெற்றால், அதன் பிறகு அதே ஆயுதங்கள் நம்முடைய உள்சண்டைக்குத்தான் திரும்பியிருக்கும். அதைத் தவிர்த்து இந்தத் நெருப்புகளை தணித்து நிலையான ஒரு தேசத்தை உருவாக்கிய பெருமை காந்திக்குரியது.

துப்பாக்கியால் உருவான சோவியத்தும் செஞ்சீனாவும் எத்தனை உயிர்களை உள்நாட்டுப் போரில் பலி கொடுத்தன என்று உங்களுக்கும் தெரியும்.

//அதற்க்கு எந்த ஒரு தனிமனிதரும் தேவையில்லை//

ஒரு தனி மனிதர்தான் எந்தச் சமூகச் சூழலுக்கும் வினைவேக மாற்றி என்பதில் என்ன ஐயம்? கம்யூனிச தத்துவம் கூட மார்க்ஸ் வடிவம் கொடுத்த பிறகுதானே வேகம் பெற்றது?

இங்குதான் நாம் வேறுபடுகிறோம்? நம்முடைய சிந்தனையை கொன்று போட்டு விட்டு, கட்சியின் பின்னால் போக வேண்டும் என்பது இன்றைய கம்யூனிஸ்டு கட்சிகளின் நிலைப்பாடு. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பேன் என்பது என்னுடைய நிலைப்பாடு.

//கம்யுனிசம் இந்தியாவுக்கு ஏற்ற கொள்கையல்ல என்று எழுதுங்கள். //

நான் ஏன் அப்படி எழுதுவேன்! கம்யூனிசம் எல்லா இடத்துக்கும் எல்லா காலத்துக்கும் பொருந்தும் கொள்கை என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை.

அதை அடையும் வழி இந்த வறட்டு கட்சி சார்ந்த முறை அல்ல, தனிமனித சீர்திருத்தம் என்பது அதே அளவு உறுதியான நம்பிக்கை. அதனால் கம்யூனிஸ்டு கட்சிகளின் வால் பிடிக்காமலேயே கம்யூனிசம் இந்தியாவில் மலரும். நம்முடைய வாழ்நாளிலேயெ நாம் அதைப் பார்க்க முடியும் என்பது என்னுடைய கனவு.

//கம்யுனிஸத்தை படித்து விட்டு விமர்சனம் செய்யலாமே?//

கம்யூனிசம் பற்றி வேண்டிய அளவுக்குப் படித்தும் பார்த்தும் தெரிந்து கொண்டிருக்கிறேன், அசுரன். மனிதனை இயந்திரமாக முடுக்கி விட்டு விடலாம் என்ற சோவியத் சீன மாதிரிகளின் சொதப்பலையும் அறிந்து கொண்டிருக்கிறேன். சீனாவில் நான்கு ஆண்டுகள், சாதாரண மனிதர்கள், அரசியல் வட்டாரங்கள், தொழில் வட்டங்களில் பழகியும் பார்த்திருக்கிறேன்.

நான் என்ன சொல்கிறேன் என்பதைத் தெரிந்துதான் சொல்கிறேன். மார்க்ஸின் கண்டுபிடிப்பில் எல்லோரும் அடிமைகளாக கட்சியின் பின் போக வேண்டும் என்று எங்கும் சொல்லவில்லை.

//இதில் காந்தி எந்த சீர்திருத்தத்தை செய்தார்?//

நாடெங்கும் தீண்டாமை ஒழிப்புக்கு வழி வகுத்தது யார்? தீண்டாமை ஒரு அவமானம் என்று பெரும்பான்மை மக்களின் மனதில் விதைத்தது யார்? தள்ளாத வயதிலும் இந்து, முஸ்லீம் ஒற்றுமைக்காக தெருக்களில் நடந்து கொண்டிருந்தது யார்? காந்தி.

//குறைந்த பட்சம் தனிமனிதனாக இல்லாமல் ஒரு குழுவாக ஒலிக்கும் ஜன நாயக தன்மை கொண்டிருக்க வேண்டும்.//

அதற்குப் பெயர் கம்யூனிசம் இல்லை அசுரன். அது சர்வாதிகாரம். அதிகாரத்தைக் கையில் குவித்துக்கொண்டு பெரும்பான்மை மக்களின் முதுகில் சிறுபான்மை கட்சித் தலைவர்கள் ஏறி சவாரி செய்வது சோவியத், சீன முறை, அது கம்யூனிசத்தின் வடிவம் இல்லை. இந்தியாவில் மட்டும் இல்லை, உலகில் வேறு எங்கும் பொருந்தாத முறை.

அன்புடன், சற்றே கோபத்துடன் :-)

மா சிவகுமார்

said...

தோழர் அசுரன்,
மிக நல்ல பதிவு, அடிபடுபவரை நோக்கி போதிக்கப்பட்ட அகிம்சையை அம்பலப்படுத்தும் பதிவு... காந்திய சிந்தனைகளால் மாற்றம் நிகழும் என்ற மயக்கத்தை நீக்கும் பதிவு.. அகிம்சையை பற்றியும் அரசு வன்முறையை பற்றியும் நிகழ்கால உதாரணங்களோடு நீங்கள் நிறைய எழுத வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். முன்னாபாய் எனும் இந்தி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்து காந்திய சிந்தனைகளால் சமூக மாற்றத்தை நிகழ்த்த முடியும் எனும் மயக்கத்தை பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் நேரத்தில் அதனை பற்றிய பேச்சுகள் பரவலாக நடந்து கொண்டிருக்கும் சூழலில் சரியான நேரத்தில் இந்த பதிவை போட்டிருக்கிறீர்கள். இந்த கட்டுரையின் இரண்டாம் பாகத்தையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். இங்கு பின்னுட்டங்களில் இரண்டு இடங்களில் ஞானி அவர்களைப்பற்றி பேசப்பட்டிருந்தது.. ஞானி அவர்கள் இயக்கிய 'அய்யா" நாடகத்தில் வைக்கம் போராட்டத்தில் காந்தியின் துரோகம் காட்டப்பட்டிருந்ததாக நண்பர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். சென்ற வார ;ஆனந்ந விகடனில்; ஞானி அவர்கள் முன்னாபாய் திரைப்படத்தின் மூலமாக காந்தியம் குறித்து மறுபார்வை ஏற்படுத்தப்பட்டிருப்பது கண்டு சிலாகித்து எழுதியிருப்பதோடு அந்த படத்தை தமிழில் இயக்க தான் ஆசைப்படுவதாகவும், அதன் மொழிமாற்ற உரிமைச் செலவு 60 கோடி ரூபாய் என்றும் தயாரிக்க யாரும் முன்வருவார்களா என்றும் மனு போட்டிருந்தார். பெரியாரையும் காந்தியையும் ஒரே சமயத்தில் தூக்கி பிடிக்கும் அவரது முரண்பாடு எனக்கு புரியவில்லை. அதனை சற்று விளக்கவும். மற்றும் அத்திரைப்படத்தின் விமரிசனத்தையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். காந்தி மேலும் மேலும் புனிதமாக்கப்பட்டு அவரை விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவராக மாற்றும் பணி தொடர்ந்து நடக்கிறது... நாம் எல்லாவிதமான புனிதங்களையும் உடைத்தாக வேண்டும். தோழர் தொடர்ந்து எழுதுங்கள் மிக சிறப்பாக இருக்கிறது. வெற்றி நமதே!!

said...

ஒடுக்கப்பட்டவன் சொன்னது,

"நாம் எல்லாவிதமான புனிதங்களையும் உடைத்தாக வேண்டும். தோழர் தொடர்ந்து எழுதுங்கள் மிக சிறப்பாக இருக்கிறது. வெற்றி நமதே!! "

அப்படியே கார்ல் மார்க்ஸ்,லெனின்,Mao,Stalin போன்ற புனிதங்களையும் போட்டு உடைங்க.

வெற்றி உமதே.

பாலா

said...

எனக்கும் வருத்தமாக இருக்கிறது, சிறு வயதில் என் மனதில் இருந்த காந்தி மகாத்மா என்ற பிம்பம் கலைந்து போய் வெகு நாளாகிறது.

பாரதி, தேவர், காந்தி எனத்தொடரும் உங்கள் வரிசை, விமர்சனத்திற்கு யாரும்/எதுவும் அப்பார்பட்டவர்கள் அல்ல என்ற எனது கருத்துடன் ஒத்துப்போகிறது.

"எந்த ஒரு அடிமைபடுத்தலையும் நான் எதிர்க்கிறேன்" என்ற் கால்கரி சிவாவின் கருத்துதான் எனதும்.

said...

PART -I
*********

மா. சிவகுமார்,

மீண்டும் அதேதான், தங்களது கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்வது என்ற சர்வாதிகாரத்தை விவாதத்திலும் நீங்கள் பிரயோகிக்கிறீர்கள்.

நான் இது வரை வைத்த எந்த ஒரு கருத்தும் ஆதரப்பூர்வமாக பல தகவல்களை உள்ளடக்கி வைக்கிறேன்.

நீங்களோ வெறுமே கருத்துக்களை மட்டும் வைத்து ஏற்றுக் கொள் என்பது போல வாதிடுவது என்ன முறை என்று யோசிக்கவும்.

தங்களது கருத்துகளுக்கு வலு செர்க்கும் முகமாக ஏதேனும் ஆதரங்களை, analytical வாதங்களை வைத்து வாதாடுங்கள், எனக்கும் எதிர் வினை புரிய வசதியாக இருக்கும்.

அப்புறம் இன்னொரு விசயம், டார்வின் என்ற ஒருவர் பிறக்காவிட்டால் பரிணாம வளர்ச்சி நின்றூவிடுமா? கிடையாது அதை மனித சமூகம் புரிந்து கொள்வதற்கு இன்னும் கொஞ்சம் காலம் எடுத்திருக்கும் அவ்வளவுதான். பிற்ப்பாடு வேறு ஒரு கார்வின் என்பவர் கண்டுபிடித்து சொல்லியிருப்பார். விசயம் என்னவென்றால், எந்த தனிமனிதரையும் நம்பி இந்த உலக இயக்கங்கள் இல்லை. இதில் மனித சமூகத்தின் இயக்கமும் சேர்ந்துதான். அதனால் காந்தி, கார்ல் மார்க்ஸ் இவர்கள் எல்லாம் பிறந்திருக்காவிட்டாலும்கூட மனித சமூகம் கம்யினிச சமூகமாக பரிணாம வளர்ச்சியடையும் அல்லது அழியும்.

இதை, சமூக விஞ்ஞானத்தை நமக்கு போதித்த கார்ல் மார்க்ஸின் விஞ்ஞானப்படி பகுத்தறிந்து வினையாற்றுவது பகுத்தறிவுள்ள மனிதன் செய்யக் கூடிய விசயமாக இருக்கும்.



#Question 1:

ஒருவர் இரண்டில் ஒரு நிலைப்பாடு எடுக்கலாம். ஒன்று மார்க்ஸின் சமூக விஞ்ஞானம் சரி என்றால், அதன் ஊடாக குறைந்த பட்ச சேதாரங்களுடன் கம்யுனிச சமூகத்தை அடையும் வழியைச் சொல்ல வேண்டும்

அல்லது மார்க்ஸ் வியாக்கியானம் செய்த சமூக விஞ்ஞானம் தவறு என்று நிலைப்பாடு எடுக்க வேண்டும்.

இதில் நீங்கள் எந்த கேட்டகிரி?

*********

நிற்க,

சில கேள்விகளுக்கு நீங்கள் பதிலே சொல்லவில்லை.


#Question 2:
சீர்திருத்தம் பற்றி எடுத்துக்காட்டுடன் ஒரு கருத்து வைத்தேன். அதற்க்கு பதில் இல்லை உங்களிடமிருந்து. அதாவது சீர்திருத்தம் என்று கூறுகிறேர்களே அது என்ன விதமான சீர்திருத்தம்?


#Question 3:
பல ஆயிரம் வருடங்கள் மக்கள் அடிமைப்பட்டு கிடப்பதன் காரணம் என்ன?


#Question 4:
பல ஆயிரம் வருடங்களாக அடிமைப்பட்டு கிடக்கும் உழைக்கும் மக்களுக்கு விடுதலை கொடுக்கும் வழி என்ன தங்களது தீர்வில்?


இது extra கேள்வி:

#Question 5:
விஞ்ஞான கம்யுனிசம் என்றால் என்ன?(நீங்கதானே சொன்னீங்க கம்யுனிசம் தெரியும் என்று)


அசுரன்

said...

PART II
*******


//காந்தியத்தின் அடிப்படையே தனிமனித சீர்திருத்தம்தான். ஒவ்வொரு மனிதனும் மனம் மாறினால்தான் சமூகம் மாறும். அதை விடுத்து ஆயுதம் தாங்கிய புரட்சி செய்து ஒரு சிறுபான்மை பெரும்பான்மை மீது புரட்சியை சுமத்தினால் எதிர்மறை விளைவுதான் மிஞ்சும். எப்படி காந்தி மக்கள் சார்ந்த மாற்றத்தை காந்தி மறுக்கிறார் என்று சொல்கிறீர்கள்?
//

அதேல்லாம் சரிதான். வன்முறையை காந்தி எதிர்த்தார் என்பது டூபாக்கூர் என்பதைத்தான் 57 வீரர்க்ளை தண்டித்த போது காந்தி விடுத்த Statement சொல்கிறது. அவர் தெளிவாக சொல்கிறார், 'இதே போலத்தானே நாளை எமது ஆட்சியிலும் வீரர்கள் அடிபணியாமல் இருப்பீர்கள்' என்று. இதன் பொருள் என்ன?

அரசு என்ற பாத்திரத்தை வகிக்கும் போது காந்தியும் வன்முறையை பயன்படுத்துவாராம்.

அவர் என்றைக்குமே அதிகார வர்க்கத்தின் வன்முறையை ஆதரித்தவர். அவர் இருந்த காலத்திலேயே அவரால் தனது அஹிம்சை கொள்கையை ஆளும் வர்க்கத்துக்கு ஊட்ட முடியவில்லை. அடிமைப்பட்ட மக்களுக்கு தலையில் மிளகாய் அரைக்க பயன்படுத்தப்பட்டது.


//எப்போது மக்கள் தயாராக இருந்தார்கள்? நாட்டின் ஒரு கணிசமான பகுதியை தீண்டத்தகாதார் என்று ஒதுக்கி வைத்திருந்ததா மக்களின் தயார் நிலை? இரு பெரும் மதத்தைச் சார்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு சாக நின்றதா மக்களின் தயார் நிலை?
///

தெலுங்கானா புரட்சி என்னவென்று தங்களுக்கு தெரியுமா? இல்லையெனில் இந்திய வரலாறை கொஞ்சம் ஆழமாக படிக்கவும்.

இது தவிர்த்து சிறிய அளவில் பல போராட்டங்கள் நடந்ததை, பேசவார் நகரை சில நாட்கள் மக்கள் கட்டுப்பாட்டில் வைத்து கம்யுன்கள் அமைத்ததை. 1805-ல் ஆரம்பித்த தென்னிந்திய புரட்சியை. 'வெடி குண்டுகள் நிரப்பப்பட்ட பீரங்கி' என்று பிரிட்டிஸ் உளவு நிறுவனம் இந்தியாவை வர்ணித்தெல்லாம் காந்தியை மனதில் வைத்து அல்ல.

மக்கள் தயாராக இருந்ததால்தான் பிரிட்டிஸ்காரர்கள் காங்கிரஸை ஆரம்பிக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி காந்தியின் கோரிக்கையா?

பிரிட்டிஸ் இந்திய அரசமைப்பில் செய்யப்பட்ட எந்த மாற்றமும் காந்தியின் கோரிக்கையால் விளைந்தவை இல்லை(பாரளுமன்ற வடிவம், தேர்தல்).

இவையெல்லாம் மக்களின் கோபத்தை வடிகட்டும் பிரிட்டிசாரின் தந்திரங்கள்தான். வாய்ப்பிருந்தால் east indian companyயின் வரலாறைப் படிக்கவும்.

மக்கள் தயாராக இருந்ததால்தான் பொடிப்பையன் பகத்சிங்கின் குரலுக்கு அன்று இந்தியா ஆடியது. காந்திக்கும் சில அழுகிய தக்காளிகள் கிடைத்ததாக சில நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வருகிறது :-)).


மற்றபடி சாதி வெறி பிரச்சனைகள் இந்திய சமூகத்தில் புரையோடிப் போன விசயம் இந்த பிரச்சனை இருப்பதே மக்கள் புரட்சிக்கு தயாரில்லை என்பதன் அர்த்தம் கிடையாது(நேபாளத்தைப் பார்க்க). ஏனெனில் புரட்சிக்கு பின்பு பிரச்சனை தீரும். புரட்சி நடப்பதற்க்கே பிரச்சனை தீர வேண்டும் என்ற ஒரு பகல் கனவாக இருக்கிறது தங்களது இந்த எடுத்துக்காட்டு.

மத பிரச்சனையை பொறுத்த மட்டில் அது சாதி பிரச்சனையின் இன்னொரு பரிணாமமாக இருக்கிறது(ஆனந்த மடம் - நாவல்). இதை பிரிட்டிஸ்க்காரன் தயாராயிருந்த மக்களை திசை திருப்ப பயன்படுத்திக் கொள்கிறான்.

ஆக மதப் பிரச்சனை(பிரித்தாளும் சூழ்ச்சி, வாங்காளப் பிரிவினை) காட்டுவது கூட மக்கள் தயாராயிருந்ததைத்தான்.



//தீண்டாமை என்ற முகப்புண், மதச் சண்டைகள் என்ற புற்றுநோய் இவற்றைச் சரி செய்யாமல் //

இதை சரி செய்ய காந்தியின் தீர்வு என்ன? இவை ஏற்ப்பட காரணம் என்ன? காந்தியால் இவை தீர்க்கப்பட்ட ஒரேயொரு எடுத்துக்காட்டு கொடுக்கவும்.


//துப்பாக்கியால் உருவான சோவியத்தும் செஞ்சீனாவும் எத்தனை உயிர்களை உள்நாட்டுப் போரில் பலி கொடுத்தன என்று உங்களுக்கும் தெரியும்.
//

துப்பாக்கியில்லாமல் உருவானதாக உங்களைப் போன்றவர்கள் மட்டும் சொல்லிக் கொள்ளும் இந்தியா அதை விட அதிகமாக உயிர் பலிகளை கொண்டுள்ளது. இந்திய பிரிவினைதான் உலகில் அதிகப்படியான மக்கள் ஒரே நேரத்தில் இடம்பெயர்ந்த நிகழ்வு... வாழ்க அஹிம்சை.

உலக விசயங்களை கொஞ்சம் கூட உள்வாங்காமால் இந்தியா ஏதோ அந்தரத்தில் தனித்து நிற்பது போல பேசக் கூடாது சிவக்குமார்.

கம்யுனிசம் வேகம் பிடிக்கத் தொடங்கிய காலத்தில் மார்க்ஸ் பிறந்ததால்தான் அவர் கம்யுனிசம் பற்றி வியாகியானம் செய்தார். அதே மார்க்ஸ் ஒரு 200 வருடம் முந்தி பிறந்திருந்தார் என்றால் கம்யுனிசம் ஒரு வறட்டு கனவு என்று தூக்கிப் போட்டிருப்பார். ஐரோப்பிய சமூகத்தின் பரிணாம வளர்ச்சி, தத்துவ பரிணாம வளர்ச்சி பற்றி படிக்கவும். மார்க்ஸை பெற்றது கம்யுனிசம், கம்யுனிசத்தை மார்க்ஸ் பெற்றெடுக்கவில்லை.

இங்கும் கூட வர்ணாஸ்ரம அடிமைத் தத்துவத்தின் சாரமான அடக்கப்பட்டவர்க்கு அஹிம்சை எனும் தத்துவம்தான் காந்தியைப் பெற்றெடுத்தது, காந்தி அஹிம்சையை பெற்றெடுக்கவில்லை. he is just gave new shape to that already existing old world philosophy.


//நான் ஏன் அப்படி எழுதுவேன்! கம்யூனிசம் எல்லா இடத்துக்கும் எல்லா காலத்துக்கும் பொருந்தும் கொள்கை என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை.//

கம்யுனிசம் என்று இங்கு நீங்கள் 'எல்லாருக்கும் எல்லாம்' என்பதை சொல்வதாக் கருதுகிறேன். அப்படியெனில் அது எல்லாக் காலத்துக்கும் எல்லா இடத்துக்கும் பொருந்தாது. இதைப் புரிந்து கொள்ள சமூக பரிணாம வளர்ச்சி விஞ்ஞான அறிவை வளர்த்துக் கொள்ளவும். ஒரு ஆண்டான் அடிமை சமுதாயத்தில் கம்யுனிசம் செல்லாது.


//கம்யூனிசம் பற்றி வேண்டிய அளவுக்குப் படித்தும் பார்த்தும் தெரிந்து கொண்டிருக்கிறேன் //

நீங்கள் படித்ததில்லை என்பதைத்தான் உங்களது பதில்கள் காட்டுகிறது. கம்யுனிசம் என்பது தங்களைப் பொறுத்தவரை ஒரு கட்சி, சில துப்பாக்கிகள், எங்களைப் போல சில கற்பனவாத தோழர்கள் என்பதாகத்தான் தங்களது பதில்களில் இருந்து புரிந்து கொள்கிறேன்.

உண்மை அதுவல்ல. கம்யுனிசம் என்றால் என்னவென்றும் அதைப் படிப்பதற்க்கான வழிகளையும் உங்களுக்கு சில மாதங்கள் முன்பு சொல்லியிருந்தேன். அதை consider செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


//நாடெங்கும் தீண்டாமை ஒழிப்புக்கு வழி வகுத்தது யார்? தீண்டாமை ஒரு அவமானம் என்று பெரும்பான்மை மக்களின் மனதில் விதைத்தது யார்? ///

இது மிகப் பெரிய காமெடி, தீண்டாமை ஒழிப்பில் காந்தியின் பங்கு அறவே கிடையாது. உண்மையில் தீண்டமை ஒழிப்பிற்க்கான குரல் அந்த சமூகத்திலிருந்தே ஓங்கி ஒழித்த பொழுது அதை நிர்மூலமாக்கும் வேலையை, சாதி இந்துக்களின் பாதுகாப்பு கேடயமாக அவர் செயல் பட்டார் என்பதை அம்பேத்காரும், பெரியாரும் பல இடங்களில் அம்பலப்படுத்தியுள்ளனர்.


//அது சர்வாதிகாரம். அதிகாரத்தைக் கையில் குவித்துக்கொண்டு பெரும்பான்மை மக்களின் முதுகில் சிறுபான்மை கட்சித் தலைவர்கள் ஏறி சவாரி செய்வது சோவியத், சீன முறை, அது கம்யூனிசத்தின் வடிவம் இல்லை//

இதற்க்கும் பதில் சொல்லலாம். சர்வாதிகாரம் என்றால் என்ன? குழு என்றால் என்ன? அதிகாரம் என்றால் என்ன? சோவியத், சீனா மாடல் அரசமைப்பு என்ன? கம்யுனிச வடிவம் என்பது என்ன? இப்படி ஆக்குவேறா பிரித்து ஆராய்ச்சி செய்யலாம். ஆனால் சில அடிப்படை விசயஙகளிலேயே நீங்கள் படுபாதாள புரிதலில் இருந்து பேசுகிறேர்கள் ஆகவே அவற்றை தெளிவுபடுத்திய பிற்ப்பாடு இவற்றை பேசலாம்.


அசுரன்

said...

Unfortunately Gandhi was a role model for Martin Luther King,
Nelson Mandela and many others.
Even now he inspires youth and
old alike.Communists who defend
Stalin and Mao will never understand Gandhi.

said...

அப்பிடீனா இவர் சொன்ன ஒத்துழையாமையை கேட்டு நாங்ள்லாம் இங்லீஷ் படிச்சா பாவமுனு சொல்லி பார்த்த வேலையையும் விட்டுட்டு பள்ளிகூடத்திற்க்கும் போகாமல் (அன்று ஆங்கில வழி கல்விதான் போதிக்கப்பட்டதால்) ஆங்கிலேயனுக்கு ஒத்துழைக்காமல் போராட்டம் பன்னியாதால்(அவாள்கள் பன்னினார்களா என்று கேட்கப்படாது அது தேச துரோகம் அப்பிடீன்னு அவா சொல்றா ஆனால் அவாள்கள் மட்டு காக்கா பிடித்து மேலே வந்தார்கள் இது தான் இன்றைய இந்தியாவில் தேசப்பற்று) கல்வி வேலைவாய்ப்பு போன்றா அனைத்திலும் இன்று பின் தங்கி இருகிறோமே இன்று 27 ச்தவிகத்திற்க்கு போராடக்கூடிய அவலநிலையில் உள்ளோமே. ஆங்கிலேயனுக்கு ஒத்துழைக்காமல் போராடி எங்கள் வாழ்க்கையை இழந்ததால் நாங்கள் தேச துரோகிகளாகிவிட்டோம். என்ன

Not all muslims abandoned education or career.A good
section of the muslims got
themselves well educated.
The founders of AMU, Jinnah
and may others acquired education.
Upper caste hindus who fought against british lost property.
Many became too poor to support their families.Many gave up jobs,
career and profession for freedom
struggle.

said...

Read this first

http://www.epw.org.in/showArticles.php?root=2006&leaf=05&filename=10069&filetype=html

said...

//Unfortunately Gandhi was a role model for Martin Luther King,
Nelson Mandela and many others.
Even now he inspires youth and
old alike.Communists who defend
Stalin and Mao will never understand Gandhi.
//

Annony,


காந்தியைப் பற்றி எழுதினால் அதை defend செய்வதற்க்கு இதுவரை மூவர்தான் வந்துள்ளீர்கள்.

ஏன் ஒரு கருத்தைப் பற்றி பரிசீலிப்பதில் உங்களுக்கு இவ்வளவு தயக்கம். ஏதாவது ஆதாரப் பூர்வமாக வாதிடுங்களேன்.

அதை விடுத்து வெறுமனே உங்கள் அபிப்ராயங்களை வைத்துச் சென்றால் அதை எப்படி எடுத்துக் கொள்வது?

குறைந்த பட்சம் நான் எழுப்பியுள்ள் கேள்விகளில் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டுங்கள். நான் திருந்திக் கொள்கிறேன்.

அதைச் செய்யாமல்......??

இதே தளத்தில்தான் கம்யுனிசத்தைப் பற்றி அவதூறு கிளப்பியதற்க்கு என்னவிதமான எதிர்வினை நிகழ்ந்தது என்பதை இங்குள்ளவர்கள் சாட்சியாக இருந்து பார்த்தனர். இன்றும் உலகம் முழுவதும் கம்யுனிசத்துக்குத்தான் மக்கள் கூடுகிறார்கள். மன்மோகன் போல உலகம் முழுவதும் இருக்கும் சில ஆளும் வர்க்க அடிவருடி மாமா பசங்க மட்டுமே காந்தி காந்தி என்று கூவிக் கொண்டிருக்கிறார்கள். அவர் பௌதீக சக்தியாக கடைசியாக எழுந்தது தென் அமெரிக்காவில் அந்த அனுபவம் போதும் மக்களுக்கு இனி அதை(காந்தியத்தை) பௌதீக சக்தியாக மக்கள் மாற்ற மாட்டார்கள்.

உங்களது காந்தியின் தத்துவம் இன்றும் கூட அமெரிக்க கறுப்பர்களுக்கும், தென் ஆப்பிரிக்க கறுப்பர்களுக்கும் ஒன்ரு (சில சீர்திருத்தங்களைத் தவிர்த்து) பிடுங்கிப் போடவில்லை. (அமெரிக்காவில் சிறையில் அதிகம் அடைபட்டிருப்பவர்கள் கறுப்பர்கள், அவர்க்ளின் வாழ்க்கை சேரிகளில் படு மோசம், கேத்ரீனா புயலின் போது கறுப்பர் இனப் பிரச்சனை முன்னுக்கு வந்து அமெரிக்க சமூகத்தின் இன அடக்குமுறை நாறியது. தென்னாப்பிரிக்க பற்றி சொல்லவே வேண்டாம், போலி சட்டமன்ற நாடாளுமன்றம் வெள்ளையர்களின் உடமைகளை பிடுங்கவில்லை. அதன் விளைவு கறுப்பர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஒன்றும் ஏற்ப்படவில்லை. வறுமை, திருட்டு, வேலையில்லாத் திண்டாட்டம் etc).

அதனால், ஒன்று - நான் காந்தியத்தின் போலித்தனங்களாக கூறியுள்ளதை இல்லை என்று மறுத்து வாதாடுஙக்ள், மக்களின் விடுதலைக்கு மாற்று வழி சொல்லுங்கள், அல்லது நான் மற்றும் இங்கே எழுதியுள்ள எமது தோழர்கள் சொல்லுவது சரி என்று எங்கள் பக்கம் வாருஙக்ள் :-)).

அசுரன்

said...

//ஒன்று - நான் காந்தியத்தின் போலித்தனங்களாக கூறியுள்ளதை இல்லை என்று மறுத்து வாதாடுஙக்ள், மக்களின் விடுதலைக்கு மாற்று வழி சொல்லுங்கள், அல்லது நான் மற்றும் இங்கே எழுதியுள்ள எமது தோழர்கள் சொல்லுவது சரி என்று எங்கள் பக்கம் வாருஙக்ள் :-)).

//

சரியான ..நேர்மையான..வாதம் இது.
தொடரட்டும் உங்கள் பணி..

வாழ்த்துக்கள்

said...

//Read this first

http://www.epw.org.in/showArticles.php?root=2006&leaf=05&filename=10069&filetype=html //


காந்தி பற்றிய இன்னொரு பரிணாமத்தை கூறும் இந்த கட்டுரையின் சுட்டிக்கு நன்றி.

//If the caste Hindus would become bhangis of their own free will, the distinction between harijans and caste Hindus would automatically disappear. There are various divisions amongst the harijans too. They should all go. All should be of one caste, that is, the bhangi.ஔ19 //

இதுதான் அந்த கட்டுரையின் சாரம் அதாவது காந்தி 1940களில் மிகத் தெளிவாக நால் வர்ண கோட்பாடு தவறு என்ற நிலைப்பாட்டிற்க்கு வருகிறார் என்று கட்டுரை சொல்கிறது. அதாவது பார்ப்பினியத்தின் ஆணி வேருக்கு எதிர் வேரான கருத்தைக் கொள்கிறார் என்று கட்டுரை சொல்கிறது.

ஆனால் 1947-ல் இந்துயிசம் என்று ஒன்றை சொல்கிறாரே அது என்ன?

************

ஒரே வர்ணம்தான் அது சூத்ர அல்லது அதி சூதர வர்ணம்தான் என்று கூறும் அவர்,
வேலைப் பிரிவினையை ஆதரிக்கிறார்:

//ஓThere was room for varna, as a duty.ஔ According to him: ஓThis was true of all religions whether the name used was other than varna. What was a Muslim ஑maulviஒ or a Christian priest but a brahmin if he taught his flock its true duty, not for money but because he possessed the gift of interpretation? And this was true of the other divisions.ஔ21 Significantly, the position of a maulvi in Islamic society does not indicate any inherent superiority and does not necessarily pass hereditarily.
//

இந்தியாவில் மனித சமூதாயத்தின் பரிணாம வளர்ச்சியை ஆராய்ச்சி செய்தால் அதில் நமக்கு கிடைக்கும் விடை வர்ணாஸ்ரம கொள்கையின் ஆரம்பம் என்பது வேலைப் பிரிவினைதான். இதை பிற்ப்பின் அடிப்படையில் உறுதிப் படுத்தும் தத்துவமாக வளர்ந்ததுதான் பார்ப்பினியம்.

ஆக, பிரச்சனையின் உண்மையான அம்சமான பொருளாதார ரீதியாக பார்ப்பினியத்திற்க்கு அடி கொடுப்பதில் காந்தி எந்த முன்னேற்றமும் காட்டவில்லை(அதில்(பொருளாதார) ஒரு சில சீர்திருத்தங்களையாவது செய்யலாம் என்று முனைந்த அம்பேத்காரையும் அவர் ஆதரிக்கவில்லை). இதற்க்கு ஆதாரமாகத்தான் தெலுங்கான புரட்சியில் காந்தியின் நிலைப்பாடு நிற்கிறது(1947). ஆக, இப்பொழுதும் கூட அவரை பொது வாழ்க்கைக்கு உந்தித் தள்ளிய அவரது மேல்சாதி பெருமை என்பதுதான்(subtle-உணர்வு தளத்தில்) இங்கும் வேலை செய்கிறது. அதாவது:

"'
அவரது பெருமை குலைந்த பொழுது அவர் பட்ட கஸ்டம் போல்தானே மற்ற அந்தஸ்த்தில் கூடியவர்களும்(நிலபிரபுக்கள், பிரிட்டிஸார்) அவர்களிடமிருந்து அந்தஸ்த்து பிடுங்கப்படும் போது பாதிக்கப்படுவார்கள் என்று அவர் எண்ணியதாலேயே உழைக்கும் மக்களின் அப்படிப்பட்ட போரட்டங்களை அவரால் ஆதரிக்க முடியவில்லை. அப்படி ஆதரித்தாலும் அது தன்னியல்பான பெரும் மக்கள் பங்களிப்பின் நிர்பந்தத்தால் எடுத்த முடிவுகளாகத்தான் உள்ளன.

அவர் எல்லாவற்றையும் தனது சொந்த அனுபவத்தின் முடிவிலிருந்து நோக்கினார் அதனால்தான் அவரது முடிவுகளை அவரது பிற்போக்கத்தனங்கள்(நீங்களே குறிப்பிட்ட) ஆளுமை செலுத்தின.
""

""ஆக, மக்கள் தங்களை உணர்ந்து கிளர்ந்து போராட வேண்டுமானால் வர்ணாஸ்ரம கட்டமைப்பிலிருந்து வெளி வர வேண்டும். இது குறித்து காந்தியிடம் ஆழ்ந்த அறிவு, வியாக்கியானமெல்லாம் ஒன்றும் இல்லை. ஆகவே இந்த நிலவுகின்ற வர்ணாஸ்ரம கட்டமைப்பு உருவாக்கிய, நிலபிரபுத்துவத்தின் பின்னே அணி திரள்கிற மக்களின் மந்தை மனோபாவத்தை காந்தி புரிந்து கொள்கிறார், அதற்க்கேற்ற தத்துவம்தான் அஹிம்சை என்கிற ஆளும் வர்க்கத் தத்துவம்""

இந்த முரன்பாடு, பிரச்சனைகளின் அடிப்படை அம்சங்களை புரிந்து கொள்ளாதா எல்லாரிடத்திலும் இருப்பதுதான் அது காந்தியிடத்திலும் வெளிப்படுவதில் ஆச்சரியமில்லை.

அசுரன்

said...

//அடியாத்தி இது நெசமா? ந்ம்பவேமுடியல?
//

இப்படி தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ள இறையடியானுக்கு நன்றிகள்
அசுரன்.

************
//நல்ல பதிவு... இது ஒருமுகவாகவே இருப்பதால் எதையும் தீர்மானிப்பதற்கில்லை. நல்ல ஒரு விவாதம் நடை பெற்றால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்!!!//

எங்கேடா சண்ட நடக்கும் என்று ஆவலுடன் பார்க்கும் நம்ம வெட்டிபயல் அண்ணாச்சிக்கு நன்றி(சும்மா கொஞ்சம் காமெடியா ஏதாவது எழுதுவோமேன்னு ;-)))

வெட்டிபயல் அவர்களின் விருப்பத்திற்க்கு இணங்க நமது மா.சி அவர்கள் கோதாவில் இறங்கிவிட்டார். அவருக்கு ஆதரவாக ஒரு அனானியும் இறங்கியுள்ளார்.

விவாதம் எப்படிப் போகுதுன்னு பார்ப்போம். தீர்ப்பை கடசில நம்ம அண்ணாச்சி சொல்வாரு.... :-)))

அசுரன்

said...

Dear Asuran,
Every man has their own root. May be it is Mahathma or a normal person. Based on this point, I don't want to talk abt Gandhi's passion towards Hinduism & Castism.

ஆக, இதுதான் காந்தி. இந்த பெருமையை, பழைய காலத்தை ஆங்கிலேயனிடம் இருந்து மீட்ப்பதுதான் அவரது இயங்கியல்.

Every human-being's views, it may be fundamentalism or rationalism, starts from him. Even Periyar, was not the exception. Periyar's action were the outcome of his feeling that that the culture-rich dravidian had fallen prey for the superstitiuous beliefs. This feeling came for him only after his visit to Kasi. There he was insulted by a Brahmin. On this basis, Even periyar's actions may be viewed in the same angle of yours.

இதை தவிர்த்து அவர் மக்கள் விடுதலை என்று பேசியவை எல்லாம் அன்றைக்கு நிலவிய கருத்துக்களால் தாக்கப்பட்டு அவற்றையும் பிரதி நிதித்துவ படுத்த வேண்டிய கட்டாயமே அன்றி வேறல்ல.

for this point, u will never have a strong reason.

Incase if u r right, I want to stress one point, what ever the "ism's", that prevail, is not the idea of a single individual. Even Communism, I came to know that, well before Karl Marx alot of people had talked abt the idea. But only it was Karl Marx to stage it world-wide. Likewise, even well before Gandhi lot of people were talking abt the indian freedom but none were able to make it a collective effort. It was Gandhi who did that. The reason behind his actions may be justified on other basis, but the final outcome was the collective effort, that no one was able to make it.

நமது ஆயுதத்தை (கத்தியோ, உண்ணாவிரதமோ) நாம் தீர்மானிப்பதில்லை. தீர்மானிப்பது நமது எதிரி.

ofcourse, I agree, but this idea cannot be applied in IPC while a judgement is to be given against a well-proven criminal.

The same idea can be said as follows:


காந்தியின் அஹிம்சை கோட்பாடை தீர்மானித்தது கூட எதிரியின் படை பலம் தான்



காந்தியின் சிந்தனைப்படி பார்த்தால், அவனை ஏன் எதிரியாக நினைக்க வேண்டும். அவன் அறியாமல் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்ள நாம் நம்மை வருத்திக் கொள்ளவேண்டும் என்பது 100% எதிரியின் நலன் காப்பதில்தான் போய் முடியும். இல்லையா?


Definetly not. I want to quote one instance in British parliment. Once one British MP asked Mr.Churchill, why the British Army can't take control over Mr.Gandhi. Churchill replied that, "British Army may have Guns & Cannons, but Gandhi has the most powerful weapon, the Ahimsa".

Take for instance, why the British never killed Gandhi? Is it bcoz, they didn't get any chance? They feared that, Gandhi's assasination may fuel up the freedom fight among Indians. So, they cunningly, encouraged Hindu-Muslim conflict to weaken the Gandhi's actions.

Finally, to be precise, Gandhi would have been favour of Hinduism, Brahminsm, Capitalism. But these things shouldn't be given importance.

Personnaly, I feel this is a good post & I encourage ur post.

said...

ஒடுக்கப்பட்டவன் அவர்களே,


//மிக நல்ல பதிவு, அடிபடுபவரை நோக்கி போதிக்கப்பட்ட அகிம்சையை அம்பலப்படுத்தும் பதிவு... காந்திய சிந்தனைகளால் மாற்றம் நிகழும் என்ற மயக்கத்தை நீக்கும் பதிவு//

மிக்க நன்றி...


//அகிம்சையை பற்றியும் அரசு வன்முறையை பற்றியும் நிகழ்கால உதாரணங்களோடு நீங்கள் நிறைய எழுத வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்//

கட்டாயமாக, நீங்களும் பங்களிப்பு செய்ய வேண்டும். ஊர் கூடி தேரிழுப்போம்.... :-))



//முன்னாபாய் எனும் இந்தி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்து காந்திய சிந்தனைகளால் சமூக மாற்றத்தை நிகழ்த்த முடியும் எனும் மயக்கத்தை பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் நேரத்தில் அதனை பற்றிய பேச்சுகள் பரவலாக நடந்து கொண்டிருக்கும் சூழலில் சரியான நேரத்தில் இந்த பதிவை போட்டிருக்கிறீர்கள். இந்த கட்டுரையின் இரண்டாம் பாகத்தையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.//

கட்டுரையின் இரண்டாம் பாகம் என்னவாக இருக்கலாம்?..... இன்றைய சூழலுக்கு காந்தியின் relevance என்ற அம்சத்தைப் பேசலாமா? அல்லது வேறு ஏதேனும் கருத்து இருந்தால் தெரிவியுங்கள்(தனி மடலிலும் சொல்லலாம் : asurann@indiatimes.com)


//ஞானி, பெரியாரையும் காந்தியையும் ஒரே சமயத்தில் தூக்கி பிடிக்கும் அவரது முரண்பாடு எனக்கு புரியவில்லை. //

அடிப்படையில் அவர் ஒரு பிழைப்புவாதி, நிலவுகின்றன கட்டமைப்பை கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் ஒரு சமுக அடித்தளத்தை பெறுவது, அந்த ஆதரவை காட்டி பேரம் பேசி பிழைப்பு நடத்துவது(ஓ போடு). ஆனால் இந்த விமர்சனம் எந்த காலத்திலும் மக்களிடம் எதிரியை தெளிவாக அடையாளப்படுத்தவிடாதபடி இதை செய்வது. அதனால் இப்படி ஆளுக்கேத்த வேசம், மேடைக் கேத்த வசனம் பேசுவது சகஜம்.



// அத்திரைப்படத்தின் விமரிசனத்தையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். //

எப்படியும் புதியகாலாச்சாரத்தில் இது போன்ற டூபாக்கூர் படங்களை அமபலப்படுத்தி எழுதுவார்கள். அதனால் அந்த விமர்சனத்தையே நாமும் மறுபிரசூரம் செய்யலாம் ;-))


தங்களது கருத்துக்களுக்கு மிக்க நன்றி,

இந்த கம்யுனிஸ்டின் பறை என்றைக்கும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக அதிர அதிர ஒலிக்கும்

தோழமையுடன்,
அசுரன்

said...

அசுரன்

இங்கே நடக்கும் விவாதங்களை ஓரளவு புரிந்துகொள்ளமுடிகிறது.. முழுமையாக இல்லா விட்டாலும்..

எனக்கு சில சந்தேகங்கள்..

காந்தியால் எப்படி மக்களை ஒன்று கூடி போரட வைக்க முடிந்த்து.?

ஏன் வேறு யாரும் மக்களால் கவரப்படவில்லை..

நன்றி.

said...

//Every human-being's views, it may be fundamentalism or rationalism, starts from him. Even Periyar, was not the exception. Periyar's action were the outcome of his feeling that that the culture-rich dravidian had fallen prey for the superstitiuous beliefs. This feeling came for him only after his visit to Kasi. There he was insulted by a Brahmin. On this basis, Even periyar's actions may be viewed in the same angle of yours. //

காந்தி விரும்பியது பிரிட்டிஸ்க்காரன் வருவதற்க்கு முன்பு இந்திய மேல்சாதியினர் வாழ்ந்த அமைதியான சுக வாழ்க்கை. பெரியார் விரும்பியது பெரும்பான்மை மக்களுக்கு மறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை.

ஆம், உண்மைதான் எந்த மன உந்துதலும் ஒரு தனிப்பட்ட provocation இல்லாமல் வருவதில்லை (exceptions are there). ஆனால் அந்த ப்ரொவொக்கேசனின் நோக்கம் என்ன என்பதுதான் எமது மக்களுக்கு நன்மையா தீமையா என்பதை பார்க்க உதவுகிறது.

ஹிட்லர் கூட யூதர்களின் வளர்ச்சிக் கண்டு பொறுக்காமல் அவர்களை விரட்ட செய்த கொடுமை நமக்கு தெரியும்.

இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்? மன உந்துதலால் செலுத்தப்படும் எல்லா ஜீவராசிகளும் ஒன்று என்றா? அப்படி நான் எங்குமே சொல்லவில்லையே....


//even well before Gandhi lot of people were talking abt the indian freedom but none were able to make it a collective effort. It was Gandhi who did that. The reason behind his actions may be justified on other basis, but the final outcome was the collective effort, that no one was able to make it.
//

முதலில் காந்தி இந்திய விடுதலையைப் பற்றீ பேசவில்லை என்பதை மனதில் கொள்க. இன்னும் சொன்னால் அப்படி ஒரு தீர்மானத்தைக் கூட அவர் காங்கிரஸில் நிறைவேற்ற விடவில்லை. ரொம்பக்காலம் கழித்துதான் அப்படி ஒரு நிலைப்பாட்டையே எடுக்கிறார்.

இரண்டு நீங்கள் இதற்க்கு முந்திய பாயிண்டில் சொல்லியிருந்தது சமூகத்தின் குரலாக தலைவர்கள் ஒலிக்கிறார்கள் என்று. இதை பிரிட்டிஸ்க்காரன் உணர்ந்து இந்திய சமூகத்தின் குரலான விடுதலை என்பது தனாக அமைப்பாவதை தடுக்கத்தான் காங்கிரஸை ஆரம்பிக்கிறான்.

ஏகாதிபத்தியத்தின் ஒரு சூழ்ச்சி எதிர்ப்புகளை நிறுவனப்படுத்தி அழிப்பது. இது பார்ப்பினியத்தின் வரலாற்று சூழ்ச்சியும் கூட. இதே தந்திரத்தைத்தான் இந்தியாவில் பிரிட்டிஸ்க்காரன் செய்கிறான்.

காந்தி, காங்கிரஸ் என்று இவர்க்ள் இல்லாவிட்டாலும் கூட இந்தியர்கள் அமைப்பாகியிருப்பார்கள் அப்படி ஆகியிருந்தால் அது உறுதியாக பிரிட்டிஸாருக்கு தலைவலிதான்.

இதை தவிர்க்கத்தான் அவனே ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்கிறான்(WSF-World Social Forum போல) அதில் ஊசாலாட்ட மனோபாவம் உடையா நிலபிரபுக்கள், தேசிய முதலாளிகள், தரகு முதலாளிகளை உள்ளிழுத்து அவர்களுக்கான சலுகைகளை வேண்டிப் பெறுவதற்க்கான ஏற்ப்பாட்டை செய்தான். இதன் மூலம் இவர்களின் கீழ் அணி திரண்ட மக்கள் சக்தி அமைப்பாகாமல், பிரிட்டிஸ்க்கு எதிரான ஒரு கலெக்டிவ் குரலாக ஒலிக்காமல் தடுத்தான்.

பிறகு, காந்தி வந்த பொழுது சுதந்திர முழு வீச்சில் எரிந்து கொண்டிருந்தது ஆகையால் பிரிட்டிஸாரின் சலுகைகளை மீறி மக்கள் கிளார்ச்சி அதிகரிக்கும் போதெல்லாம் காந்தி ஆபத்பாந்தவனாக வந்து சில போராட்டங்களை அறிவிப்பார். ஆக, ஏற்கனவே நிறுவனப்படுத்தப்பட்ட காங்கிரஸின் கீழி வெகு சுலபமாக மக்கள் அணி திரண்டு போராடுவார்கள், போராட்டம் எல்லை மீறும் போது அஹிம்சையை காரணம் காட்டி காந்தி பின்வாங்குவார். இதில் ஒட்டு மொத்த சமூகத்தின் உத்வேகமும் நீர்த்துப் போய ஒரு ஐந்து அல்லது 10 வருட அமைதி கிடைக்கும்.

காந்தி போராட்டம் அறிவிக்கும் காலகட்டங்களில் நிலவிய பல்வேறு மக்கள் கிளர்ச்சிகளை ஆய்வு செய்தால் இந்த தொடர்பு பிடிபடும்.


இது போன்ற போராட்ட வழிமுறைகளுக்காக காந்தியை பிரிட்டிஸார் பலமுறை புகழ்ந்து பாராட்டியுள்ளனர். இந்த கண் டெக்ஸ்டில்(context) தான் காந்தியை புகழும் சர்ச்சிலை பார்க்கவேண்டும்.

காந்தியைவாது சமாளித்து விடலாம். ஆனால் தன்னெழுச்சியாக மக்கள் அமைப்பாவது என்பது பிரிட்டிஸாருக்கு ஆப்படிக்கும் நிகழ்வு என்பதை சர்ச்சில் மட்டுமல்ல பிரிட்டிஸ் சமூகமும் நன்கு உணர்ந்திருந்தது(1800 களின் கடைசி கட்டத்தில் உளவு நிறுவனம் சமர்பித்த அறிக்கைகள், இந்தியர்கள் ஆயுதம் தயாரிக்கும் திறமை பெற்றதை அறிந்து அதிர்ச்சியடைந்து, இந்த போக்கை இப்படியே விட்டால் அகில இந்திய அமைப்பு உருவாகுவதற்க்கான வாய்ப்பு இருப்பதைப் பற்றி அச்சம் தெரிவிக்கிறது).

ஆக, காந்தி எந்த காலத்திலும் மக்களின் கலெக்டிவ் வாய்ஸ் கிடையாது. பிரிட்டிஸ் காரன் போட்டு வைத்த தண்டவாளத்தில் ஒடிய ஒரு ரயில் அவ்வளவுதான்.

ஏன், இரண்டாம் உலகப் போரில் மாற்றி மாற்றி முடிவெடுக்கீறார். வெள்ளையனே வெளியேறு இயக்கம் காங்கிரஸ் அறிவித்தது அல்ல என்று ஏன் பின்வாங்கினார்?

வெள்ளையனே வெளியேறு இயக்கம்தான் பிரிட்டிஸாருக்கு ஒரு பலத்த அடி கொடுத்தது எனில் அதை காந்தி காட்டிக் கொடுத்தார் என்பதை மனதில் கொள்க.



//நமது ஆயுதத்தை (கத்தியோ, உண்ணாவிரதமோ) நாம் தீர்மானிப்பதில்லை. தீர்மானிப்பது நமது எதிரி.

ofcourse, I agree, but this idea cannot be applied in IPC while a judgement is to be given against a well-proven criminal
///

கிரிமினல் என்பதை யார் முடிவு செய்கிறார்? இந்திய புரட்சிக்காரன் பகத்சிங்கை கிரிமினல் என்றுதான் பிரிட்டிஸ் அரசு முடிவு செய்திருக்கும்...

இது மாதிரி அந்தரத்தில் தொங்கும் அபிப்ராயங்களில் எந்த விவாதமும் நடத்த இயலாது.



//காந்தியின் அஹிம்சை கோட்பாடை தீர்மானித்தது கூட எதிரியின் படை பலம் தான்//

அதே எதிரியின் படைபலம்தான் இங்கு மேலும் தங்கியிருக்க வழியின்றி, மக்களின் போராட்டத்தை சமாளிக்கவும், ஏகாதிபத்திய நெருக்கடியை சமாளிக்கவும் 1947-ல் வெளிக்கிளம்பியது. இந்த இடத்தில் காந்தியின் அஹிம்சை எதிரியை விரட்டவில்லை. அதாவது எதிரியின் படைபலத்தை கருத்தில் கொண்டு காந்தி அஹிம்சையை தேர்ந்தெடுத்தாக கொண்டால் அவரது தேர்வு தவறு என்றாகிறது. தவறான வழிகாட்டியிருக்கிறார் என்றாகிறது.

மீண்டும் வெறும் அபிப்ராயங்களையே வைக்கிறேர்கள். ஏதேனும் ஆதரங்களை வையுங்கள். எதை ஆதாரமாகக் கொண்டு காந்தி எதிரியின் படைபலத்தை கருத்தில் கொண்டு அஹிம்சையை தீர்மானித்தார் என்று நீங்கள் கருதுகிறேர்கள். அதை சொல்லுங்கள் அப்புறம் அந்த காரணத்தை ஆராய்ந்து காந்தியைப் பற்றி இன்னும் தெளிவான முடிவுக்கு வரலாம்.

இல்லாத காந்திக்கும் சேர்த்து அனுமானித்து விவாதம் நடத்த முடியாது. அவர் விட்டுச் சென்றுள்ள ஆதரங்களின் அடிப்படையிலேயே விவாதம் செய்ய முடியும். அதனால் காந்திக்கும் சேர்த்து யோசிப்பதை நிறுத்திவிட்டு, அவர் ஏற்கனவே யோசித்து எழுதி வைத்துள்ள, செய்துள்ள விசயங்களை ஆதாரமாகக் கொண்டு விவாதிக்கலாம்.


மக்களுக்கு அஹிம்சையை பிரிட்டிஸின் ஆயுதத்தைக் கண்டு முடிவெடுத்தவர், அரசுக்கு (தான் அமைக்கப் போகும் அரசுக்கும் கூட) ஆயுதமாக வன்முறையை தீர்மானித்தது யாரை கண்டு பயந்து(57 வீரர்களுக்கு தண்டனை கொடுத்தது பற்றி கருத்துக் கேட்ட பொழுது காந்தி சொன்னது)?

காந்தி அப்படி எதிரியின் படைபலத்தை கணக்கில் கொண்டு அஹிம்சையை எடுக்கவில்லை என்பதை அவரது பல்வேறு வன்முறை எதிர்ப்பு சொல்லாடலின் ஊடாக உண்ரலாம்.

அவர் தெளிவாக சொல்கீறார், இந்தியாவின் விடுதலை, புரட்சியின் மூலம் நடக்க விடமாட்டேன் என்று... இதன் பொருள் என்ன? அவர் பிரிட்டிஸ்க்காரனின் ஆயுதத்தைக் கண்டு பயப்படவில்லை, மாறாக மக்கள் அணி திரண்டு நிலபிரபு வர்க்கத்திடமிருந்து பிடுங்கி விடுவார்களோ என்று பயப்பட்டார். அதாவது தான் விரும்பிய பழைய சமுதாயத்துக்கு செல்ல முடியாமல் ஆகிவிடுமோ என்றுதான் பயப்பட்டார்(ஆசிய கிராம பொருளாதாரம்). அதுதான் அஹிம்சையை அவர் தேர்வு செய்யக் காரணம்.



//Definetly not. I want to quote one instance in British parliment. Once one British MP asked Mr.Churchill, why the British Army can't take control over Mr.Gandhi. Churchill replied that, "British Army may have Guns & Cannons, but Gandhi has the most powerful weapon, the Ahimsa".//

இப்படில்லாம் சப்பைக்கட்டு கட்டி காந்தியை பெரிய மனிதர் ஆக்கவில்லையெனில் வேறு ஒரு உண்மையான தலைமை உருவாகிவிடும், அது தெரிந்துதான் சர்ச்சில் பேசுகிறார். இதெல்லாம் சுலபமான தந்திரங்கள். காந்தியின் அஹிம்சையை பார்த்து பயந்துதான் அவருக்கு பல்வேறு விருதுகளைக் கொடுத்து கௌரவிக்கிறதோ பிரிட்டிஸ் அரசு?

ரொம்ப வெள்ளேந்திய யோசிக்கிறீர்கள்.



//why the British never killed Gandhi? Is it bcoz, they didn't get any chance? They feared that, Gandhi's assasination may fuel up the freedom fight among Indians. So, they cunningly, encouraged Hindu-Muslim conflict to weaken the Gandhi's actions.
//


காந்தியை யாரும் கொண்று விடக்கூடாது என்று பாதுகாப்பு கூட கொடுத்தவ்ர்கள்தான் பிரிட்டிஸார். ஏனெனில் இருக்கிற ஒரு முகமுடியும் உடைந்துவிட்டால் இன்னோரு முகமூடி அதுவும் காந்தி போன்ற முகமூடி கிடைப்பது கடினம் என்பதே.

அப்புறம் இந்து முஸ்லீம் விரோதத்தை பிரிட்டிஸார் ஊக்குவிக்க துவங்கியது 1906யை ஒட்டி. அந்த சமயத்தில் காந்தி ஒரு அரசியல் சக்தியே கிடையாது. எனவே காந்தியை counter செய்யத்தான் பிரிவினை தந்திரத்தை பிரிட்டிஸ்க்காரன் செய்தான் என்பது வரலாற்றை சரியாக உள்வாங்காமல் வைக்கப்படும் வாதம்.



//Finally, to be precise, Gandhi would have been favour of Hinduism, Brahminsm, Capitalism. But these things shouldn't be given importance.
//

காந்தி இந்துயிசம் என்ற பிரமனிசத்திற்க்கு ஆதரவாக இருந்தார், அவர் முதலாளித்துவத்திற்க்கு எதிரியாக இருந்தார். ஏகாதிபத்தியத்திடம் வேறு வழியின்றி நண்பராக இருந்தார், ஏனெனில் அவர் நிலபிரபுத்துவத்தின் பிரதினிதி.




//But these things shouldn't be given importance. //

இவை மிக மிக முக்கியமாக பார்க்கவேண்டிய விசயம். காந்தி விரும்பியோ விரும்பாவிடிலோ இந்திய சமூகத்தின் அன்றைய சிந்தனையை ஓரளவு ஆளுமை செய்யும் வல்லமை படைத்த தலைவராக உருவாவதற்க்கான சூழலை பிரிட்டஸாரே உருவாக்கியிருந்தனர். எனவே காந்தியை இயக்கிய விசை என்ன என்பதை கணக்கில் கொண்டுதான் அவர் ஏன் இந்திய விடுதலைக்கு முட்டுக் கட்டை போட்டார் என்பதற்க்கு விடை தேட வேண்டியுள்ளது.


//Personnaly, I feel this is a good post & I encourage ur post. //

Thanks a lot for your genuine intentions of argument.

தங்களது எதிர்வினையை எதிர்ப்பார்க்கிறேன்.

என்னால் சில விவரங்களை தெளிவாக ஞாபகப்படுத்தி சொல்ல முடியவில்லை. காந்தியை ஆய்வு செய்து வெகு நாளாகிவிட்டதுதான் காரணம். அந்த விவரங்களும் இருந்தால் இன்னும் சுவையான விவாதம் நடந்தேறும் :-))

அசுரன்

said...

//எனக்கு சில சந்தேகங்கள்..

காந்தியால் எப்படி மக்களை ஒன்று கூடி போரட வைக்க முடிந்த்து.?

ஏன் வேறு யாரும் மக்களால் கவரப்படவில்லை..
//


சிவபாலன்,

மிக நல்ல கேள்வி கேட்டுள்ளீர்கள்.

காரணம்,

ஒன்று: ஏற்கனவே இந்தியா ஏகாதிபத்திய எதிர்ப்பணி அமைப்பாவது(ORGANIZATION FOR Anti imperialism, feudalism), காங்கிரசின் பிறப்பால் தள்ளிப் போடப்பட்டது. காங்கிரசின் போலித்தனம் அம்பலமாகி மக்கள் அமைப்பாகும் அடுத்த அலை வீச்சாகும் போது காந்தி வருகிறார்.

இரண்டு: பார்ப்பினியம் உருவாக்கியிருந்த பொது அபிப்ராயமான, உழைக்கும் மக்கள் (தாழ்ந்த சாதியினர்) எந்த அடக்குமுறையையும் எதிர்க்கக் கூடாது என்னும் நத்தை மனோபாவம்(அடக்குமுறை கண்டால் எதிர்க்காமல் உள்ளுக்குள்ளேயே புளுங்கும் விதியை நொந்து கொள்ளும் மனோபாவம்). இந்த மனோபாவத்தின் வெற்றி, நிலபிரபுத்துவத்தை மக்கள் எதிர்க்கவில்லையென்பதில் தெரிகிறது. அப்படி எதிர்க்கும் போக்கு(எ-கா மாப்ளா கலகம்) ஆரம்பித்து அது ஒரு அகில இந்திய வடிவம் பெறும் சூழ்னிலையில் காந்தி ஒரு பெரிய சக்தியாக திரைக்கதைக்குள் வருகீறார்(1921)(இங்கு நான் குறிப்பிடுவது அவரது அரசியல் பிரவேசம் கிடையாது, மாறாக மக்கள் மீதான் செல்வாக்கை). அந்த எதிர்ப்புகள் நிலபிரபுத்துவ மனோபவத்தை அழித்து வேரறுக்கும் முன்பாக தான் சுவிகரித்துக் கொள்கிறார்.

அவர் ஏற்கனவே நிலவிய அந்த மனொபாவத்துக்கு ஏற்ற போராட்ட வடிவங்களை மேற்கொள்கிறார். இது போன்ற போராட்டங்களின் அனுகூலத்தை அறிந்த பிரிட்டிஸார் சலுகைகளை கொடுத்து இந்த போராட்ட வடிவங்களை ஊக்குவிக்கிறார்கள். ஆக, உடனடி சலுகைகளும், ஏற்கனவே நிலவிய பொதுக் மனோபாவத்துக்கு ஏற்ற போராட்ட வடிவமும், இதற்க்கு பிரிட்டிஸார் செய்த மறைமுக ஒத்துழைப்பும் காந்தியை சுலபமாக ஒரு தலைவராக்கியது.

அசுரன்

said...

சிவபாலன்,

இன்னொரு பார்வை:

தனது ஐரோப்பிய கண்டத்தில் ஒரு முன்னேறிய அரசியல் விளையாட்டில் ஈட்டிய(சோசலிச புரட்சியை நடைபெறாமல் செய்த தந்திரம்) வெற்றியின் அனுபவம், இங்கு பிந்தங்கிய இந்தியாவில் அவன் நினைத்த மாதிரி ஆட்டிபடைக்கும் ஒரு அரசியல் விளையாட்டை நடத்த ஏதுவாக்கியது. அதில் ஒரு பகடைக்காய்த்தான் காந்தி.

அவரது உள்ளுணர்வு, நோக்கம் இவையெல்லாவற்றையும் தனக்கு சாதகமாக வெகு அருமையாக பயன்படுத்திக் கொண்டான்.

இது எனது அபிப்ராயம்தான் ஏனெனில் இதற்க்கு கால அலைவரிசைப் பிரகாரம் ஆதரங்கள் தரும் அவகாசம் இல்லை. எனவே இதை எடுத்து பரிசீலிக்க விரும்புகிறவர்கள் தங்களது சொந்த முயற்சியில் எடை போட்டுக் கொள்ள வேண்டுகிறேன்.

அசுரன்

said...

// உடனடி சலுகைகளும், ஏற்கனவே நிலவிய பொதுக் மனோபாவத்துக்கு ஏற்ற போராட்ட வடிவமும், இதற்க்கு பிரிட்டிஸார் செய்த மறைமுக ஒத்துழைப்பும் காந்தியை சுலபமாக ஒரு தலைவராக்கியது. //

நல்ல விளக்கம்..

நன்றி..

said...

விவாதம் செய்து கொண்டிருக்கும் மா. சிவக்குமாருக்கு நன்றி,

**********

பாலாவுக்கு நன்றி,
***********


//எனக்கும் வருத்தமாக இருக்கிறது, சிறு வயதில் என் மனதில் இருந்த காந்தி மகாத்மா என்ற பிம்பம் கலைந்து போய் வெகு நாளாகிறது.

பாரதி, தேவர், காந்தி எனத்தொடரும் உங்கள் வரிசை, விமர்சனத்திற்கு யாரும்/எதுவும் அப்பார்பட்டவர்கள் அல்ல என்ற எனது கருத்துடன் ஒத்துப்போகிறது. //

//"எந்த ஒரு அடிமைபடுத்தலையும் நான் எதிர்க்கிறேன்" என்ற் கால்கரி சிவாவின் கருத்துதான் எனதும். //

இப்படி அடிமைப்படுத்துதலை எதிர்க்க அணி சேரத் தயாரான 'யாரோ ஒருவன்'னுக்கு நன்றி :-))

*********

இறையடியானுடன் விவாதம் செய்த அனானிக்கு நன்றி,

*********

கம்யுனிஸ்டுகளுக்கு காந்தி புரியமாட்டார் என்று குற்றம் சொன்ன அனானிக்கு நன்றி,

***********

காந்தியின் கடைசிக் கால மாற்றங்கள பற்றிய இன்னொரு பார்வையை அளிக்கும் சுட்டி கொடுத்த அனானிக்கு நன்றி,

********

தொடர்ந்து வந்து ஆதரவு கொடுத்த 'கரும்பலகை'க்கு ஒரு பலத்த நன்றி, :-))

******

காந்தியை ஒரேடியாக இப்படி கவுத்தது சரியில்லை என்ற தனது தரப்பு வாதங்களை வைத்த ஹரிக்கு நன்றி,

*********

காந்தி எப்படி மக்கள் தலைவரானார் என்ற தனது சந்தேகத்தை கேட்டு பதில் பெற்ற சிவபாலனுக்கு நன்றி,

இது ஒரளவு ஆக்கப் பூர்வமான விவாதமாகவே சென்றது என்று கருதுகிறேன். சிவக்குமார் இன்னும் எதிர்வினை தொடுக்கவில்லை. ஒருவேளை எனது பதில்கள் கொஞ்சம் காட்டமாக இருந்ததால் இருக்கலாம்.

தற்பொழுது வெட்டிப்பயல் அவர்களின் கருத்து என்ன என்பதும் தெளிவானால் இன்னும் சிறப்பாக இருக்கும்


அசுரன்

said...

இத்தனை வருடமும் நான் பார்த்த காந்தியின் புன்சிரிப்பு கொஞ்சம் (கோரமாய்) பல்லிளிப்பது போல் தெரியுதே! ஏன் ணா?

said...

அசுரன் அண்ணா,

நம்ம சுல்தான் அவர்கள் சொன்னதை
"இத்தனை வருடமும் நான் பார்த்த காந்தியின் புன்சிரிப்பு கொஞ்சம் (கோரமாய்) பல்லிளிப்பது போல் தெரியுதே! ஏன் ணா?
commented by சுல்தான், "
போட்டீங்க..
நான் போட்ட பின்னூட்டத்தை வெட்டி
எறிஞ்சிட்டீங்க..

அன்புடன்,

பாலா

said...

பாலா,

உங்களோட பின்னூட்டத்திலே இந்த விவாதத்துக்கு சம்பந்தமா என்ன கருத்து இருந்தது என்று தெரியப்படுத்தவும்...

என்னை குறிப்பாக விமர்சனம் செய்துதான் அதில் இருந்தது.
அது தேவையில்லாதது என்பதால் பிரசுரிக்கவில்லை(உங்களது மற்றைய எல்லாக் கேள்விகளும் பிரசுரிக்கப்பட்டுள்ளதே).

வேறு ஏதேனும் உருப்படியாக வாதம் வையுங்கள் கட்டாயம் பிரசுரித்து பதில் சொல்லுவேன்.

***********

இது விசயமாக வேறு ஏதுவும் விவாதம் செய்வது ஊக்குவிக்கப்படாது

அசுரன்.

said...

அசுரன் அவர்களே,

ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன்..
அதில் உங்களை ஒரு நோபல் பரிசு பெற்றவருடன் ஒப்பிட்டு எழுதியிருக்கிறேன தவிர தரக் குறைவாக தங்களை விமரிசிக்கவில்லை என்பதை விளக்கி விடுகிறேன்..
நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அன்புடன்,

பாலா

said...

பாலா,

தரக்குறைவாக நீங்கள் எதுவும் சொல்லவில்லை என்பதை நீங்கள் தெரிவிக்க உங்களுக்கு வாய்ப்பளிப்பதற்க்காக இந்த பின்னூட்டத்தை பிரசுரிக்கிறேன். ஆம் அதில் தரக்குறைவாக எதுவும் இல்லை.

என்னை குறித்த விவாதஙக்ள் இங்கு தேவையில்லாதது என்பதால்தான், தங்களது அந்த பின்னூட்டம் அது போல ஒரு விவாதத்திற்க்கு இட்டுச் சென்று இந்த பதிவின் நோக்கத்தை சிதைக்கும் என்பதால்தான் அதை பிரசுரிக்கவில்லை.

ஆகவே, இதையொட்டி ஏதேனும் தவறான அபிப்ராயம் ஏற்பட்டிருக்குமெனில் தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள்

முன் வந்து இந்த விசயத்தை தெளிவுபடுத்திக் கொண்டமைக்கு/தெளிவுபடுத்த வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி :-))

அசுரன்

said...

காந்தி இருந்திருந்தா என்ன? இல்லாமலிருந்தாதான் என்ன? வெறும் வீண் பேச்சு!

said...

அசுரன்,

என்னை நானே தாழ்த்திக் கொண்டு ஒரு குழுவிற்கு அடிபணிய வேண்டும் என்ற இயக்கமும் எனக்கு சம்மதம் கிடையாது. அது மதமாக இருந்தாலும் சரி, அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி, வணிக நிறுவனமாயிருந்தாலும் சரி. அதைத்தான் காந்தியின் வாழ்க்கை எனக்கு வழி காட்டுறது.

என்னுடைய கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் எங்கும் சொல்லவில்லை, எப்படிச் சொல்லுவேன் என்று நினைக்கிறீர்கள்?

இதற்கு மேல் வாதாட வேண்டுமானால் உங்களை நேரில் சந்தித்துதான் முடியும். எழுதுவதும் படிப்பதும் ஒரு அளவுக்குத்தான் புரிதலைத் தருகிறது. சமகாலத்தில் வாழும் நாம் ஏன் நேரில் சந்தித்து உரையாட முடியாமல் இருக்கிரது?

இரண்டு கேள்விகள்:

1. டால்ஸ்டாயின் புத்தகங்களைப் படித்திருக்கிறீர்களா?
2. சீனாவின் லூ ஷுன் என்பவரின் எழுத்துக்களைப் படித்திருகிறீர்களா?

அன்புடன்

மா சிவகுமார்

said...

சிவக்குமார்,

//என்னை நானே தாழ்த்திக் கொண்டு ஒரு குழுவிற்கு அடிபணிய வேண்டும் என்ற இயக்கமும் எனக்கு சம்மதம் கிடையாது. அது மதமாக இருந்தாலும் சரி, அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி, வணிக நிறுவனமாயிருந்தாலும் சரி. அதைத்தான் காந்தியின் வாழ்க்கை எனக்கு வழி காட்டுறது.//

என்ன ஆதரங்களை வைத்து இதை சொல்கிறேர்கள்? எதாவது Logical conclusion ஆவது முன்வையுங்கள். இது வரை நீங்கள் முன்வைத்துள்ளவை எல்லாம் உங்களது அபிப்ராயங்கள். அவற்றை நிரூபிக்க எந்த வித வாதமும் வைக்கவில்லை.

மேலும் இந்த விசயத்தைத்தான் இப்பொழுது விவாதிக்க வேண்டாம் என்று கூறி அதற்க்கான காரணத்தையும் கூறியிருந்தேன். அது தவிர்த்து இந்த பதிவின் மையமான விசயத்தை ஒட்டி சில அடிப்படை கேள்விகளையும், வாதங்களையும் வைத்திருந்தேன். அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு மீண்டும் மீண்டும் அதே உங்களது ஆதரபூர்வமற்ற, வாத முறையற்ற சொந்த அபிப்ராயங்களை வைத்தால் அதை நான் தங்களது கருத்தை என் மீது திணிக்கும் சர்வாதிகாரம் என்று கருதாமல் வேறு எப்படி கருத முடியும்.

மேலும் கம்யுனிஸ்டு எல்லாம் அடிமை என்கிற உங்களது கருத்து உண்மையில் என்னை அதிர்ச்சிக் குள்ளாக்குகிறது. இந்த அளவுக்கு ஒரு குழப்பகரமான ஒரு முடிவுக்கு எந்த அடிப்படையில் வந்தீர்கள் என்று தெரியவில்லை.

இது குறீத்து மேலும் எந்த விவாதங்களையும் நான் நடத்த விரும்பவில்லை. இந்த இடத்தில் நிறுத்திக் கொள்ளலாம்.



//என்னுடைய கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் எங்கும் சொல்லவில்லை, எப்படிச் சொல்லுவேன் என்று நினைக்கிறீர்கள்? //

அப்படி வெளிப்படையாக சொல்லிதான் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. எந்த வித justificationனும் இன்றி எனது கருத்துக்கள் வெறும் வன்முறையை மட்டுமே ஆதரிப்பதாக ஒரு அபிப்ராயம்(இதற்க்கு பல முறை பதில் கொடுத்தாயிற்று).

கம்யுனிசம் என்பதே ஒரு கட்சி, சில தலைவர்கள், அதன் சர்வாதிகாரம் என்ற படுபாதாள புரிதலின் பாற்ப்பட்ட இன்னொரு அபிப்ராயம். இது தவிர்த்து வேறு சில அபிப்ராயங்கள். இவையணைத்துக்கும் என்ன அடிப்படைக் காரணம் என்று ஒரு இடத்திலும் சொன்னதில்லை. இவற்றையே வெவ்வேறு வார்த்தைகளில் மீண்டும் மீண்டும் வைத்து அதை நான் வாதமாக் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னால், அதன் அர்த்தம் நீங்கள் கருத்து சர்வாதிகாரி என்பதை தவிர்த்து வேறென்ன. தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இந்த விமர்சனத்தை பலமுறை வைத்த பிற்ப்பாடும் மீண்டும் மீண்டும் அதையே செய்கிறீர்கள்.

ஏன் நான் எழுப்பிய கேள்விகளுக்கு இது வரை ஒரு இடத்திலும் கூட பதில் சொல்லவில்லை(தனி மடலிலும் கூட)?

இதை வேறுவிதமாக எப்படி பார்ப்பது என்று நீங்களே சொல்லுங்கள். மற்றபடி கோபமெல்லாம் ஒன்றும் கிடையாது.




//இதற்கு மேல் வாதாட வேண்டுமானால் உங்களை நேரில் சந்தித்துதான் முடியும். எழுதுவதும் படிப்பதும் ஒரு அளவுக்குத்தான் புரிதலைத் தருகிறது. சமகாலத்தில் வாழும் நாம் ஏன் நேரில் சந்தித்து உரையாட முடியாமல் இருக்கிரது?
//

இது வரை நீங்கள் வாதமே செய்யவில்லை என்று கருதுகிறேன். ஏனெனில் உங்களது சொந்த அபிப்ராயங்களை மட்டுமே வைத்துள்ளீர்கள், அதன் மீது நான் என்ன வாதம் செய்ய முடியும். உங்களது அபிப்ராயங்கள் எதன் அடிப்படையில் வந்தடைந்தீர்கள் என்பதற்க்கான ஏதேனும் வாதங்களை வையுங்கள். அந்த காரணங்களை ஆராய்ந்து நீங்கள் வந்த முடிவு சரியா தவறா என்று வாதம் செய்யலாம். இதுவரை அப்படி ஒன்றையுமே நீங்கள் முன்வைக்கவில்லை.

சரி நீங்கள் முன்வைக்காவிட்டால் பரவாயில்லை, நாமே அவரது நிலைப்பாடுகளின் அடிப்படையை அறியும் முகமாக ஒரு விவாத தளத்தை உருவாக்குவோம் என்று கேள்விகள் கேட்டால் அதற்க்கு பதில் சொல்லாமல் தனியாக வாதம் செய்வோம் என்று கூறுகிறீர்கள்.

தனியாக வாதம் செய்த முந்தைய அனுபவம் கூறுவது என்னவென்றால் அப்படியொரு வாதம் வீண் நேர விரயம் என்று. மேலும் இங்கு பொது தளத்தில் வாதம் செய்வது எல்லாருக்குமான விசயமாக இருக்கும். அதைத்தான் இப்பொழுது விரும்புகிறேன். ஆகவே, தனி விவாதத்திற்க்கு வரமுடியாததற்க்கு மன்னிக்க வேண்டுகிறேன்.




//இரண்டு கேள்விகள்:

1. டால்ஸ்டாயின் புத்தகங்களைப் படித்திருக்கிறீர்களா?
2. சீனாவின் லூ ஷுன் என்பவரின் எழுத்துக்களைப் படித்திருகிறீர்களா?//

இந்த கேள்விகள் என்ன காரணத்திற்க்காக கேட்க்கப்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாமா?

கம்யுனிசத்தைப் பற்றிய விவாதத்திற்க்கு எனில் இக்கேள்விகளை கம்யுனிசம் பற்றிய எனது பதிவுகளில் ஒன்றில் பின்னூட்டினால் அங்கு விவாதம் செய்யலாம்.

இங்கு காந்தி பற்றி விவாதம் நடக்கிறது. அவர் கெட்டவர் என்ற அடிப்படையில் நான் வைத்துள்ள வாதங்களுக்கு எதிர் வினை தொடுத்தால் ஒரு நல்ல விவாதமாக இருக்கும்

***************

இதற்க்கு முன்பு தங்களின் பார்வைக்காக நான் வைத்த இரண்டு பகுதியான கேள்விகளுக்கு எதிர்வினை புரிந்து விவாதத்தை ஆரம்பிக்க உதவுங்கள்


அன்புடன்
அசுரன்.

said...

*//Not all muslims abandoned education or career.A good
section of the muslims got
themselves well educated.
The founders of AMU, Jinnah
and may others acquired education.//*

உங்களின் வாதமே அனைத்து முஸ்லீம்களும் நிம்மதியாக வாழவில்லை என்று ஒத்துக்கொள்கின்றன. சில முஸ்லீம்கள் நல்ல பொருலாதார நிலையில் இருப்பது மறுப்பத்ற்க்கில்லை அது சில முஸ்லீம்கள் தான் பெரும்பாலான முஸ்லீம்கள் இன்று கல்வியை கூட பெற முடியாமல் உள்லனரே இதற்க்கு என்ன சொல்கிறீகள்

*//Upper caste hindus who fought against british lost property.
Many became too poor to support their families.Many gave up jobs,
career and profession for freedom
struggle. //*

அப்படி இருந்தால் அறியத்தரவும் மாற்றிக்கொள்கிறேன். எத்தனை பேர் பார்த்த வேலையை விட்டார்கள் எத்தனை பேர் கல்வியை விட்டார்கள் இன்று 'அவர்கள்' யாரை தேசபக்தர்களாக காட்டமுயலுகிறார்கள் என் தாய்மன்னை ஒரு பிடியை கூட அன்னியனுக்கு விடமாட்டேன் என்று கூறி வீரமரணம் அடைந்தாரே அந்த திப்புசுல்தானையா அல்லது தன் மகனின் தலையை வெட்டி தாம்பூழ்த்தில் வைது கொடுத்தபோதும் சிங்கள் அழுவதில்லை என்று சுதந்திரபோரில் தன் உயிரையும் விடானே அந்த பகதூர் ஷாவையா அல்லது வீரன் புலித்தேவனையா கட்டபொம்மனையா அம்பேத்காரையா வெள்ளையனின் அடிப்பொடிகலயல்லவா தேசபக்தர்களாக் காட்டுகிறார்கள்.
சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவரின் கொலை வழக்கில் அந்தமான் சிரையிலிருந்த சவார்கர் தேசியவாதி முஸ்லீம்களை அவர்களின் வழிபாட்டுத்தளங்களை தரைமட்டமாக்கியவர்கள் இன்று தேசியவாதிகள் நல்ல கூத்தையா
ஆங்கிலேயனை வரவேற்று பாடிய பாடலை பாடவில்லையென்றால் தேசதுரோகி முஸ்லீம்கள் மட்டும் அல்ல உண்மயான தேசபக்தி கொண்டவன் எவனும் அதைபாட மட்டான். அதை பாடிவிட்டால் அவர்கள் செய்த தேசதுரோகம் மறைந்துவிடும் என்னய்யா இந்திய நீதி அதிகாரவ்ர்கத்திற்க்கு வீட்டு நாயாக இருக்கும் இந்திய நீதி

said...

என்னுடைய கருத்துக்களையே சார்ந்த ஒரு பதிவு. உங்களையும் விமர்சித்துள்ளேன்.

http://ezhuththu.blogspot.com/2006/10/blog-post_08.html

அன்புடன்,

மா சிவகுமார்

said...

//என்னுடைய கருத்துக்களையே சார்ந்த ஒரு பதிவு. உங்களையும் விமர்சித்துள்ளேன்.

http://ezhuththu.blogspot.com/2006/10/blog-post_08.html//


சிவக்குமார்,

மீண்டும் உங்களது பழைய பல்லவி. ஏற்கனவே பல முறை விளக்கம் கொடுத்தாயிற்று. என்னை எனது கருத்துக்களை கிஞ்சித்தும் உள்வாங்காமால் ஒரே பல்லவியை பாடினால் எனக்கு அலுப்பு ஏற்ப்படுகிறது. அல்லது உங்களது பல்லவிக்கு ஏதேனும் தர்க்க ரீதியான justification முன்வையுங்கள். அதுவும் செய்வதில்லை. வார்த்தை தோரணங்களால் கருத்துக்களை நிலை நாட்ட முனைகிறேர்கள்.

உங்களது கருத்துக்களில், கொஞ்சம் கூட ஆதரமின்றி தவறாக இருப்பதாக நான் கருதும் சில. இவற்றில் சிலவற்றுக்கு நான் பலமுறை விளக்கமும் கொடுத்திருக்கிறேன்.

#1)
// துப்பாக்கி எடுத்து புரட்சி செய்தும் தன் சித்தாந்தத்தை நிலை நாட்ட முனைகிறார்கள்? //

வன்முறை பற்றி ஆயிரம் முறை விளக்கம் சொல்லி அலுத்து விட்டது.

உங்களுக்கோ அதை உள் வாங்கமலேயே ஒரே பல்லவியை பாட இன்னும் அலுக்கவில்லை. அய்யா, நான் சொல்வது தவிர்க்க இயலாத வன்முறை பற்றி. கம்யுனிஸ்டுகள் முன்னறிந்து சொல்வது தவிர்க்க இயலாத வன்முறை பற்றி. அதை குறைக்கும் வழி பற்றி. நீங்களோ அஹிம்சை என்று பொய் சொல்லி அரசு வன்முறை, அதிகார வர்க்க வன்முறை ஆதரிக்கிறீர்கள். உங்கள் அஹிம்சைதான் இருப்பதிலேயா ஆகக் கொடுமையான வன்முறைக்கு வித்திடுகிறது என்று என் பதிவிலும் பதில் சொல்லியுள்ளேன். அதற்க்கு எந்த பதிலையும் காணோம். இன்னொரு முறை இதே போல நீங்கள் எதிர் வினை புரிந்தால் நான் கண்டுகொள்ளப் போவதில்லை.


#2)
//மனிதனை ஒரு இயந்திரமாக்கி, தொழிற்சாலையில், பண்ணையில் ஒரு எண் கொடுத்து பொருளாதாரக் கருவியாக நடத்திய நாகரீகங்கள் உருத்தெரியாமல் அழிந்து விட்டன. //

அமெரிக்காவை சொல்கிறீர்களா? ஆம் அது அழிந்து கொண்டுதான் இருக்கிறது. ஏகாதிபத்தியம் ஏற்கனவே அழுகி முடை நாற்றம் எடுக்கத் துவங்கி விட்டது. அதற்க்கு ஈமக் கிரியை செய்து மனிதனை இயந்திரங்களிடமிருந்து மீட்போம்.


#3)
//சோவியத் யூனியனாக, சீன கம்யூனிசமாக உருத்தெரியாமல் அமெரிக்க முதலாளித்துவத்தின் முன் மண்டியிட வேண்டியதுதான்.
//

கம்யுனிசம் மண்டியிட்டதாக் நீங்கள் கூறினால், அதற்க்கான ஆதரங்களை நான் கோரவேண்டியிருக்கும். ஏற்கனவே நான் உங்கள் மீது வைத்த விமர்சனம்தான், அதாவது கம்யுனிசம் என்றால் என்ன என்பது பற்றி உங்களுக்கு அடிசுவடு கூட தெரியாது என்பதை மீண்டும் மீண்டும் நிருபிக்கிறீர்கள். இது குறித்த நான் கரடியாக கத்தினால் கூட என்னை ஒரு பன்றியாக கூட மதிக்காமல் உங்களது அவதூறுகளை சொல்லிக் கொண்டே இருக்கீறீர்கள்.

இந்த அம்சத்தில் உங்களுக்கு இது வரை நேரடியாக பதில் சொன்னதில்லை. ஆனால் எனது தளத்திலும் வேறு தளங்களிலும் பல முறை பதில் சொல்லியுள்ளேன். ரஸ்யா, சீனாவில் தோற்றவை மண்டியிட்டவை முதலாளித்துவம் என்பதை இங்கு மீண்டும் கூறுகிறேன். இது உங்கள் காதில் விழும் பாக்கியம் பெற்றதா என்று தெரியவில்லை. விழுந்தால் எனது சக்தி கொஞ்சம் மிச்சமாகும். சோசலிசம் பெற்றது இது வரை வெற்றி மட்டுமே.



#4)
//அமெரிக்க தனிமனித மதிப்பிலான சமூகத்திலிருந்துதான் உலகின் மிகப்பெரும் கூட்டுச் சமூகம் (commune) இணையம் உருவாகியுள்ளது. மேற்கத்திய தனிமனித முனைப்பில்தான் கூட்டுப் படைப்புகளான எல்லோருக்கும் எல்லாம் தரக் கூடிய open source மென்பொருட்கள் உருவாகியுள்ளன.
//

அது முதலாளித்துவத்தின் படைப்பு அவ்வளவுதான். இதே போல வேறு சில எடுத்துக்காட்டுகளை, நீங்கள் இங்கு சோசலிச அரசுகளை குறீப்பிடுவதாக கொண்டால், அவை சாம்பலிருந்து சாதனைகளை படைத்திருக்கின்றன. முதலில் வின்வெளிக்கு ஆள் அனுப்பியது ரஸ்யா. இது போன்ற ஆதாரமற்ற கூற்றுகளை இன்றைய ஆன்மீக தந்தைகள்தான் பிரச்சாரம் செய்து காசு பன்னிக் கொண்டிருக்கிறார்கள்.



//அமெரிக்க தனிமனித மதிப்பிலான சமூகத்திலிருந்துதான் உலகின் மிகப்பெரும் கூட்டுச் சமூகம் (commune) இணையம் உருவாகியுள்ளது. மேற்கத்திய தனிமனித முனைப்பில்தான் கூட்டுப் படைப்புகளான எல்லோருக்கும் எல்லாம் தரக் கூடிய open source மென்பொருட்கள் உருவாகியுள்ளன.
//

ஆம், முதலாளித்துவம் பெற்றெடுக்கும் பிள்ளைதான் சோசலிசம். சமூக விஞ்ஞானத்தின் அடிப்படைகள் புரிந்தவர்களுக்கு இது ஆச்சரியமான விசயம் அல்ல.



#5)

//மேற்கத்திய நாடுகளில்தான், நலிந்தோரையும் தாங்கிச் செல்லும் சமூகத் திட்டங்கள். மனிதனை முறித்துப் போட்டு முதுகெலும்பை உடைத்து ஒரு சிறு குழுவின் ஊழல் வாழ்க்கைக்கு வித்திட்ட சோவியத் கனவுகளும் சீன பரிசோதனைகளும் கனவாகவே போய் விட்டன.
//

ஆமாம், உங்கள் அமெரிக்க சகோதரர்களின் அந்த கன்வுகளை அரைகுறையாகவாவது நனவாக, இங்கு திருப்பூரிலும், தஞ்சையிலும், விதர்பாவிலும், சுரங்கங்களிலும், மாநகரங்களிலும் எமது தொழிலாளர்களின், விவசாயிகளின் எலும்புகளை முறீத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க சகோதரர்களின் ரத்தம் அமெரிக்க மண்ணை வளமாக்க உரமாக்கப்படுகிறது, இராக், மத்திய ஆசியாவின் மனித தசைகள் அவர்களின் மாலை விருந்துகளுக்கு இரையாகிறது. இதுதான் வளர்ச்சி. இதுதான் மா. சிவகுமார் விரும்பிய வன்முறையற்ற சமுதாயம். இதோ இதுதான் மா. சிவகுமார், கடைசியில் அவரது வர்க்கத்தின் பண்பு அவரது போலியான காந்திய முகமூடியை கிழித்து வெளி வருகிறது.

ஆனால், சொசலிச நாடுகளின் அதே கனவுகளை மெய்யாக்கின, எந்த நாட்டையும் அடிமைப்படுத்தாமல். கம்யுனிச முன்னோர்களின் கணிப்பின்படி அங்கு முதலாளீத்துவம் திரும்ப வந்தது. இந்த அலை வடிவ செயல் முறை உலகம் முழுமையும் சோசலிசமாகும் வரை நடந்து கொண்டே இருக்கும், தவிர்க்க முடியாது.



#6)
//சீனாவில், கள்ளச்சாராயம் காய்ச்சிப் பிடிபட்ட ஏழுபேரின் புகைப்படம் நாளிதழில் வெளி வந்த பத்து நாட்களுக்குப் பிறகு அந்த ஏழு பேரும் விசாரிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி.
//

இந்தியாவில், இயற்கை வளத்தை சுரண்டும் கம்பேனிக்கு எதிராக போராடிய 12 பேர் விசாரணை கூட இன்றி அன்றே சுட்டுக் கொல்லப்பட்டனர். தண்ணீர் கேட்ட விவசாயிகள் 8 பேர் அன்றே விசாரனையின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர். நாளும், கிழக்கு இந்திய, காஷ்மீர் மாநிலங்களில் மக்கள் சுட்டுக்கொல்லப்படுகின்றனர். இது போல பல அரசு பயங்கரவாத அடக்குமுறைகளை தோரணம் கட்டி தொங்க் விட்டிருக்கிறது உங்களது அரசு.

எந்த குற்றமும் இது வரை நிருபிக்கப்படமலேயே இராக்கின் 8 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு மருத்துவ வசதிகளை கிடைக்கவிடாமல் தடை செய்து கொன்றது உலகின் ஜன நாயகமான மா. சிவகுமார் வர்க்கத்தின் ஆசை தேசமான அமெரிக்கா.

உலகில் அதிகமான ஆட்கலை சிறையில் வைத்துள்ள நாடு, மனித உயிருக்கு உலகிலேயே அதிக மதிப்புக் கொடுக்கும் அமெரிக்காதான். வாழ்க காந்தியின் அஹிம்சை. அந்த சிறைகளில் கூட அஹிம்சை முறைகளில் மலம் போன்றவற்றை பயன்படுத்தி குற்றவாளிகளிடம் உண்மைகளை கேட்கிறார்கள்.

இராக் யுத்தத்திற்க்கு எதிரா போராடியவர்களுக்கு(அமெரிக்கர்களுக்கு) தேவையான ஜன நாயகத்தை விமான நிலையங்களிலேயே வழங்கியது அமெரிக்கா.

சுமத்தப்பட்ட குற்றத்திற்க்காக இராக்கிற்க்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டது, ஆனால் குற்றம் இதுவரை நீருபிக்கப்படவில்லை. ஆமாம், காந்தி தேசம் இதுதான் என்று நாமும் சொல்கிறோம், மா. சிவகுமாரும் சொல்கிறார். இதில் எம் இருவரிடமும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

அதாவது காந்தி தேசம் = அரசு வன்முறை, ஆளும் வன்முறை என்றைக்குமே சரியானது.....



#6)
//அரசாங்கம் என்றால் கிரெம்ளின்னில் மரணக் கூட்டணியின் மூலமாக சைபீரியாவை சிறைச்சாலையாகக் கொண்டு மக்களை அடக்கி ஆண்டதுதான் நினைவுக்கு வரும் அசுரனுக்கு காந்தி சொன்ன அரசாங்கம் புரியாது.//

கம்யுனிச அரசாங்கம் பற்றி பல பதிவுகள், பல விளக்கங்கள் கொடுத்துள்ளேன். உங்கள் காந்தியின் அரசாங்கம் பற்றி இது வரை ஒரு துரும்பு கூட எடுத்துப் போட்டதில்லை நமது மா. சிவகுமார். இது குறித்து கேள்விகள் கேட்டால் எந்த பதிலும் சொல்லாமல் வேறு இடங்களுக்கு இழுப்பது அவரது பாணி விவாத முறை(போன முறை மெயில் விவாதத்திற்க்கு இழுத்தார், இந்த முறை எனது தளத்திலிருந்து தனது தளத்திற்க்கு இழுத்துள்ளார். எனது கேள்விகளோ ஆங்காங்கே, காப்பாற்ற மா. சிவகுமார் வருவார் என்ற நம்பிக்கையுடன் மோட்டு வளையை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கின்றன, என்னைப் போலவே.)

அரசு என்பது சிறைச்சாலைகளை உடையதுதான். மற்றபடி பெரும்பான்மை உழைக்கும் மக்களை அடக்கியாண்டது என்பதெல்லாம் வடிந்து கட்டிய பொய என்பதை அன்றைக்கு ரஸ்யா சென்ற பெரியார், கலைவானர் இன்னும் சில தலைவர்கள் தெளிவாக சொல்லியுள்ளனர். இது குறித்து 1970 களில் குங்குமத்தில் ஒரு வருட பயணக்கட்டுரை கூட வந்திருந்தது. எழுதிய பிரமண எழுத்தாளர் கடைசியில் என்ன சொல்லியிருப்பார் எனில், கம்யுனிசம் உண்மையிலேயே மிகச் சிறந்த ஒரு அரசியல் முறை இந்தியாவில் அதை அமல்படுத்தும் போது இந்திய கலாச்சாரத்தையும் சேர்த்து செய்ய வேண்டும் என்று பார்ப்பினியத்தையும் உள்ளே சேர்க்க சொல்லி சிபாரிசு செய்திருப்பார்.(அவரது பெயர் ஞாபகம் இல்லை. பழைய புத்தக கோப்பு, வாய்ப்பிருந்தால் பார்த்து சொல்கிறேன்).

நமது அஹிம்சாவாதி மா.சிவகுமாரோ எந்த கருத்தையும் ஆதாரமின்றி வைத்து அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று காந்தியைப் போலவே சர்வாதிகாரமாக அடம் பிடிப்பார். ஆம் இதுதான் அஹிம்சை.




#7)
//ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை ஆண்டு கொள்வது. பக்கத்து வீட்டுக்காரனுடன் சேர்ந்து செயல்பட வேண்டியதற்கு குடியிருப்போர் நலச் சங்கம். தெரு முழுதும் சேர்ந்து செய்ய வேண்டிய பணிகளுக்கு மட்டும் உள்ளாட்சி வட்டம். ஊரே சேர்ந்து செய்யக் கூடியதற்கு மட்டும் ஊராட்சி என்று போய் நாட்டின் தலைநகரில் மிகச் சில பணிகளே நடைபெறுவதுதான் உண்மையான பொதுவுடமை அரசு.
//


வட்டார அளவில் மக்களே மக்களை ஆள்வதுதான் பொதுவுடைமை என்று சரியாகவே சொல்கீறீர்கள். இறுதியில் அரசு என்பது அதன் முழுமையான வடிவத்தில் மடிந்து(dead by expiration) இருக்கும். வெறும் co-ordination செய்வதற்க்கான ஒரு அமைப்பு மட்டும் எஞ்சி இருக்கும். இதை படிப்படியாக சாதிப்பதற்க்காகத்தான் லெனினும், ஸ்டாலினும், மாவோவும் பண்பாட்டு புரட்சிக்கு அறைக் கூவல் விடுக்கிறார்கள். சீனாவில் இது ஒரளவு சாத்தியமாயிற்று. இந்த கட்டம் பரிணாம வளர்ச்சியில் சிறுக சிறுக நடந்தேறும்.

காந்தி இதை எப்படி சாதிக்கப் போகிறார். அதை சொல்லுங்கள். அதில்தான் வித்தியாசம், பெரிய ஓட்டை உள்ளது.

இன்றைக்கு, பல ஆயிரம் வருடங்கள் உழைக்கும் மக்கள் உரிமையின்றி கஷ்டப்படுகிறார்களே அதற்க்கு என்ன தீர்வு சொல்கீறார் காந்தி?

அதை தீர்க்காமல் நீங்கள் சொல்லுவதை சாதிப்பது என்பது உட்டோ பியன் கனவுதான்.

தர்மகர்த்தா முறையா?



#8)

//நீங்கள் என்னதான் உலகின் உற்பத்தி மையமாக இருந்தாலும் நூற்று முப்பது கோடி மக்கள் தொகை கொண்டிருந்தாலும், //

சீனாவை சொல்கிறீர்களா? முதலாளித்துவ சீனா எந்த காலத்திலும் எனது நாடு கிடையாது.

இன்றைய முதலாளித்துவ சீனா உங்களது சகோதரன், எனது எதிரி.

சோசலிச சீனாவும் கூட எனது நாடு கிடையாது. ஆனால் அது எனது நாடு குறீத்து கனவுகளுக்கான விளை நிலம்.



#9)
//பெரிய கணினிகளின் மூலம் நாட்டின் நூறு கோடி மக்களும் யார் என்ன வேலை செய்ய வேண்டும், யாருக்கு என்ன கிடைக்க வேண்டும் என்று திட்டம் போட்டுக் கொள்ளும் சோவியத் சர்வாதிகாரத்துக்கும் கம்யூனிசத்துக்கும் தொடர்பே கிடையாது.//

பரிணாம வளர்ச்சி பற்றி பேசும் மா. சிவகுமார். சமூக பரிணாம வளர்ச்சி பற்றி பேசுவதில்லை. அதை தெரிந்து கொள்வதற்க்கும் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்வதில்லை.

முந்தைய சமூகத்திலிருந்து அடுத்தக்கட்ட வளர்ச்சி என்பது படிப்படியாகத்தான் நடந்து ஒரு புள்ளியில் ஒரு வெடிப்பு போன்ற மாற்றத்தில்(புரட்சி) அடுத்த கட்டத்தை அடையும். இந்த வரலாற்றுக் கட்டம் முழுவதும் சில பொதுவான அம்சங்கள் இருப்பது தவிர்க்க முடியாது. அதுவும் மக்கள் முழுமையாக அரசு நிர்வாகத்தில் பொறுப்பெடுத்துக் கொள்வதற்க்கான கலாச்சார மாற்றத்தை அடையும் வரை சில முந்தைய சமுதாய எச்சங்கள் இருந்து கொண்டுதான் இருக்கும். அதுவும் உலகில் பிற நாடுகள் அடக்குமுறை சமுதாயங்களாக இருக்கும் வரை அரசு என்பது தேவையாக இருக்கிறது.

இதெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் கற்பனையாக மா. சிவகுமார் ஒரு தீர்வு சொல்லுவார். அதுவும் உலகில் இதுவரை எங்குமே நிருபிக்கப்படாத ஒரு தீர்வு(அதற்க்கான நடைமுறை தந்திரம் குறித்து எதுவும் சொல்லமாட்டார்). அதற்க்கு எந்த ஒரு ஆதரப்பூர்வ வாதஙக்ளையும் வைக்க மாட்டார். ஆனால் நாம் அதை நம்ப வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார். இது குறித்து நாம் எழுப்பும் கேள்விகளையும் கொஞ்சம் கூட சட்டை செய்யமாட்டார். அதனால் தான் முன்பொருமுறை அவரை கருத்து சர்வாதிகாரி என்று கூறினேன்.

இப்போதைய அமெரிக்கா, இந்திய அரசுகள் சர்வாதிகாரம் உள்ளவை கிடையாதா?

அரசு என்ற ஒன்று இருப்பதே சர்வாதிகாரம் இருப்பதன் அர்த்தம்தான். அரசு ஒன்று இருப்பதே வர்க்க பகைமை இருப்பதன் அடையாளம்தான். ஆகவே ஒரு வர்க்கம் இன்னோரு வர்க்கத்தை அடக்குவதற்க்கு அது சர்வாதிகாரமாக செயல்படத்தான் செய்யும்.

சொவியத் சர்வாதிகாரம் வெளினாட்டும் தரகர்கள், உள்வாளிகள், பழைய அதிகார வர்க்க இவற்றுக்கு சர்வாதிகாரமாக இருந்தது. ஆனால் அது பெரும்பானமை மக்களுக்கு- உழைக்கும் மக்களுக்கான சர்வாதிகாரம் கிடையாது.

சோவியத் சர்வாதிகாரம் கம்யுனிசம் கிடையாது என்பது உண்மைதான். அதனால்தான் அதை சோசலிசம் என்கிறார்கள் மார்க்ஸிய அறிஞர்கள். ஆனால் கம்யுனிசத்தை அடைய அந்த கட்டத்தை கடந்து தான் செல்ல வேண்டும் என்பது தவிர்க்க இயலாத வரலாற்று சமூக பரிணாம வளர்ச்சியின் விதி.

************

அப்புறம் உங்களது கருத்துக்களில் உள்ள உண்மை ஒன்றை இங்கு சுட்டிக் காட்டுகிறேன்:

//இப்படி எதிர்துகளும், துகளும் சேர்ந்து உள்ளே வெளியாக நிற்பதுதான் நாமும்.//

இதுதான் இந்த பிரபஞ்சம் முழுமைக்குமான எல்லா விசயங்களுக்கும் (குறைந்த பட்சம் இதுவரையான அறிவியல் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில்). இதுதான் இயக்கவியலின் ஒரு அம்சமும் கூட.

அசுரன்

said...

//இது குறித்த நான் கரடியாக கத்தினால் கூட என்னை ஒரு பன்றியாக கூட மதிக்காமல் உங்களது அவதூறுகளை சொல்லிக் கொண்டே இருக்கீறீர்கள். //

:-)))

அசுரன்,
நீங்கள் ஏன் ஒரு புத்தகம் எழுதக் கூடாது? நிறைய தவல்கள் உள்ளது உங்களிடம்.

said...

***///
//இது குறித்த நான் கரடியாக கத்தினால் கூட என்னை ஒரு பன்றியாக கூட மதிக்காமல் உங்களது அவதூறுகளை சொல்லிக் கொண்டே இருக்கீறீர்கள். //

:-)))

அசுரன்,
நீங்கள் ஏன் ஒரு புத்தகம் எழுதக் கூடாது? நிறைய தவல்கள் உள்ளது உங்களிடம்.

///***


எது? நான் பன்றி என்கிற தகவலா? அல்லது கரடி போல கத்தும் பன்றி என்கிற தகவலா?.... அடப் போங்க கல்வெட்டு..... இதெல்லாம் போயிட்டு விளம்பரபடுத்திக்கிட்டு :-)))

அசுரன்

said...

//எது? நான் பன்றி என்கிற தகவலா? அல்லது கரடி போல கத்தும் பன்றி என்கிற தகவலா?.... அடப் போங்க கல்வெட்டு..... இதெல்லாம் போயிட்டு விளம்பரபடுத்திக்கிட்டு :-)))//

:-))))

நான் சொன்னது உங்களின் கம்யூனிச,காந்திய,சமூகப்...etc கருத்துகளை.உங்களின் பதிவில் இருந்து சமுதாயம்/மனிதர்களின் மறுபக்கங்கள் பற்றிய பல புதுத்தகவல்களைத் தெரிந்து கொள்கிறேன்.

said...

உண்மையில் நான் ஒரு அரைகுறை என்பதால் கொஞ்சம் அதிகப்படியாக தளும்புகிறேன். மற்றபடி வெகுஜன ஊடகங்களில் பிரசூரமாகும் அளவு எனது எழுத்துக்கள் தரமான எழுத்துக்கள் கிடையாது. அதனால் எனது எழுத்துக்களுக்கு இது போல NICHE சந்தைகள்தான் சரி.... . அது போன்ற பெரிய பொது சந்தைகளில் எழுதி அதிர்வுகளை கிளப்ப பல தரமான எழுத்தாளர்கள் உள்ளனர்.

மேலும் அங்கெல்லாம் நான் எழுதினால் பிரித்து பேன் பார்த்து விடுவார்கள்..... ;-))

அசுரன்

said...

//மேலும் கம்யுனிஸ்டு எல்லாம் அடிமை என்கிற உங்களது கருத்து உண்மையில் என்னை அதிர்ச்சிக் குள்ளாக்குகிறது. இந்த அளவுக்கு ஒரு குழப்பகரமான ஒரு முடிவுக்கு எந்த அடிப்படையில் வந்தீர்கள் என்று தெரியவில்லை.//

//கம்யுனிஸ்டு(கம்யுனிசம் தெரியாவிட்டாலும் பரவாயில்லை) என்பதே குறைந்த பட்சம் தனிமனிதனாக இல்லாமல் ஒரு குழுவாக ஒலிக்கும் ஜன நாயக தன்மை கொண்டிருக்க வேண்டும்.//

கம்யூனிசம் தெரியாவிட்டாலும், தனி மனித உரிமையை விட்டுக் கொடுத்து குழுவுக்கு அடி பணிய வேண்டும் என்று சொன்னதைத்தான் அடிமைத்தனம் என்று சொல்கிறேன்.

எங்கோ யாரோ சொன்னதை மேற்கோளிட்டால்தான் நான் சொல்வதற்கு வலு சேருமா? நான் படித்ததை, புரிந்ததை, உணர்ந்ததை பேசித்தான் நான் வாதம் செய்கிறேன். இதற்காக புத்தகங்களையும், இணையத்தளங்களையும் அலசி சுட்டிகளைக் கொடுக்க நேரம் போதவில்லை அசுரன் :-)

//என்ன விதமான சீர்திருத்தம்?//

வாழ்க்கை என்பது ஒரு ஆரம்பப் புள்ளியில் ஆரம்பித்து இலக்கை நோக்கிப் பாயும் பேராறு போன்றது. அதன் வழியில் பிற மனிதர்களை வளப்படுத்தும், போற்றும் ஒவ்வொன்றும் முன்னோக்கிய சீர்திருத்தம், பிற மனிதர்களை துன்புறுத்தும், சிறுமைப்படுத்தும் ஒவ்வொன்று பின்னடைவு.

இது ஒவ்வொரு தனிமனிதனிலிருந்து தொடங்க வேண்டும். ஒரு குழுவினர் மற்றவர்களை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மிரட்டுவதால் வருவது அன்று.

//பல ஆயிரம் வருடங்களாக அடிமைப்பட்டு கிடக்கும் உழைக்கும் மக்களுக்கு விடுதலை கொடுக்கும் வழி என்ன தங்களது தீர்வில்?//

நான் என்னைச் சீர்திருத்திக் கொள்கிறேன். ஒவ்வொருவரும் சீர்திருந்தி விட்டால், அடிமைப்படுத்துவரும் இருக்க முடியாது, அடிமைப்படுபவரும் இருக்க மாட்டார்.

//விஞ்ஞான கம்யுனிசம் என்றால் என்ன?//

ஒவ்வொருவரும் தனக்கு மகிழ்வளிக்கும், தனது திறமைக்கு உகந்த பணியை பலன் எதிர்பாராது செய்ய வேண்டும். ஒவ்வொருவருக்கும் அவரது தேவைப்படுபவை சக மனிதர்களால் முழு விருப்பத்துடன் கிடைக்கும். இதுதான் எனக்குப் புரிந்த சமவுடைமை சமூகம்.

//மக்கள் தயாராக இருந்ததால்தான் பிரிட்டிஸ்காரர்கள் காங்கிரஸை ஆரம்பிக்கிறார்கள்.//

மக்கள் தயாராக இருந்தது பல்வேறு காரணங்களுக்காக ஆயுதம் ஏந்த. உள்ளுக்குள்ளேயே இருக்கும் நோய்களைச் சரி செய்யாமல் ஆயுதம் செலுத்திப் போராடினால் ஆங்கிலேயர் போன பின்பு, நிலப்பிரபுக்கள் விவசாயிகளையும், விவசாயிகள் நகரவாசிகளையும், சுட்டுக் கொண்டு அழிந்திருப்பார்கள். அந்த உள்நோய்கள் சரியாகாமல் இருந்த நிலைதான் மக்கள் தயாராகாததைக் காட்டியது.

//1. டால்ஸ்டாயின் புத்தகங்களைப் படித்திருக்கிறீர்களா?
2. சீனாவின் லூ ஷுன் என்பவரின் எழுத்துக்களைப் படித்திருகிறீர்களா?//

//இந்த கேள்விகள் என்ன காரணத்திற்க்காக கேட்க்கப்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாமா? //

இவர்களும் தனிமனித உரிமையை நேர்மையை வலியுறுத்தியவர்கள். டால்ஸ்டாய்தான் காந்திக்கு முன்னோடியாக இருந்தவர்கள்தான் என்று தெரிந்து கொள்ள படியுங்கள்.


//அரசு வன்முறை, ஆளும் வன்முறை என்றைக்குமே சரியானது.....
//

அதைத்தான் நானும் தவறு என்று சொல்கிறேன். காந்திய இந்தியாவாக இருந்தாலும், முதலாளித்துவ அமெரிக்காவாக இருந்தாலும், "கம்யூனிச" புரட்சிப் படைகளாக இருந்தாலும் சரி, அடுத்தவன் மீது வன்முறை செலுத்துவது தவறு. அதில் தவிர்க்க முடிந்த தவிர்க்க முடியாத வன்முறை, சரியான வன்முறை, தவறான வன்முறை கிடையாது. ஒருவனுக்கு தீவிரவாதி, இன்னொருவனுக்கு விடுதலைப்போராளி. ஒருவனுக்கு அரசாங்கம், இன்னொருவனுக்கு அடக்குமுறை.

//உங்கள் காந்தியின் அரசாங்கம் பற்றி இது வரை ஒரு துரும்பு கூட எடுத்துப் போட்டதில்லை//
//காந்தி இதை எப்படி சாதிக்கப் போகிறார். அதை சொல்லுங்கள்.//

ஏற்கனவே பல சொல்லி விட்டேன். ஒவ்வொருவரும் தனக்கு மகிழ்வளிக்கும், தனது திறமைக்கு உகந்த பணியை பலன் எதிர்பாராது செய்ய வேண்டும். ஒவ்வொருவருக்கும் அவரது தேவைப்படுபவை சக மனிதர்களால் முழு விருப்பத்துடன் கிடைக்கும். இதுதான் எனக்குப் புரிந்த சமவுடைமை சமூகம்.

இது தனிமனித சீர்திருத்தம் மூலம்தான் நடக்கும். ஒரு குழு (தொழிலாளி, விவசாயி) மற்றொரு குழுவின் மீது ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் நடக்காது.

கடைசியாக ஒன்று அசுரன். உங்களுடன் அயர்வைத்தரும் ஒன்று, எதிராளியை குறைத்து மதிக்கும் போக்கு. நான் எதையுமே படிக்கவில்லை, எதையுமே எழுதவில்லை, காந்தி எந்தத் தீர்வையுமே முன் வைக்கவில்லை என்று எள்ளி நகையாடுவது ஆரோக்கியமான விவாதத்துக்கு வழி வகுக்காது. நீங்கள் காந்தி பற்றி என்ன படித்தீர்களோ அந்த அளவாவது எனக்கு கம்யூனிசம் பற்றியும் தெரியும்.

இந்தக் காரணத்துக்குத்தான் நேரில் சந்தித்து பேச நினைத்தேன். எதையும் பூசி மெழுக வேண்டும் என்றோ பொதுப்பார்வையிலிருந்து மறைக்க வேண்டும் என்றோ நோக்கம் கிடையாது.

என்னுடைய வாழ்வும், பெயரும், நடவடிக்கைகளும், எண்ணங்களும் என்னால் முடிந்த வரை பிறரை புண்படுத்தாத வரை வெளிப்படையாகத்தான் உள்ளது. என்னுடைய பின்னணி என்ன என்று உங்களுக்கு நன்கு தெரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. நீங்கள் மட்டும் ஒரு போர்வைக்குள் ஒளிந்து கொண்டு நிழல் குத்து விடுவது சரியா?

அன்புடன்,

மா சிவகுமார்

said...

மா. சிவக்குமார்,

தாங்கள் சொன்ன ஒவ்வொரு கருத்தையும் அப்படியே வழிமொழிகிறேன், ஒன்றே ஒன்றைத் தவிர. பின்வருகின்றது:

அதில் தவிர்க்க முடிந்த தவிர்க்க முடியாத வன்முறை, சரியான வன்முறை, தவறான வன்முறை கிடையாது.

வன்முறையை அதன் எல்லா வடிவங்களிலும் அழித்துவிடமுடியும் என்று நம்புகிறீர்களா?

said...

கரும்பலகை யின் சிறிய விளக்கம்
------
நமது பிரச்சினைகள் சமுக ரீதியிலானது.

இதுல தனிமனித மாற்றம், சீர்திர்த்தம் எப்படி தீர்வாகும்?
ஓவ்வொரு மனிதனாக மாறி சமுகம் மாறியதாய் வரலாறு இல்லை....
...
பெரும்பாண்மை மக்கள் நலன் சார்த்து சிந்திக்கும் போது தான் புரிந்து கொள்ள முடியும்.
------

நன்றி.

said...

மூயுஸ்,

தங்களது வருகைக்கு நன்றி.

முந்தைய கம்யுனிச பதிவில் எனது எதிர்வினையை தங்கள் மீதான தனிப்பட்ட தாக்குதலாக கருதவில்லை என நம்புகிறேன்.

இதை ஒரு வாய்ப்பாக கருதி, காந்தி குறித்த விவாதத்தில் பங்கு பெற்று ஒரு நல்ல விவாதத்துக்கு வித்திடுமாறு அழைக்கிறேன்.

அசுரன்.
***************

கரும்பலகையின் கேள்வி சரியான இடத்தில் அடிக்கிறது. சமூகத்தின் பிரச்சனைக்கு சமூக ரீதியான தீர்வு ஒத்து வருமா? அல்லது தனிப்பட்ட தீர்வு ஒத்து வருமா?

இது ஒரு விவதமாக கிளைத்து போகும் தன்மை கொண்டுள்ளது. இந்த இழையையும் யாரேனும் தொடரலாம்.

அசுரன்.

said...

கால்கரி சிவா செளராஷ்ட்ரா பார்ப்பனர் தான். பூணூல் போடுவார் என்று நினைக்கிறேன்.பொதுவாக செளராஷ்ட்ரர்கள் வடமொழி பேசுபவர்கள் என்ற அடிப்படையில் பார்ப்பன ஈயத்திற்கு அடிவருடுவது வழக்கம்.வாதத்திற்காக நான் பார்ப்பான் இல்லை என்பார்கள்.நடுநிலைவாதிகளாம்.

said...

அப்பாவித்தமிழன்,
//.வாதத்திற்காக நான் பார்ப்பான் இல்லை என்பார்கள்//

He didn't say that he is not so and so. I just not clear about this and raised a doubt. that's all.

And as far as the opinion he put forward here in this post, he didn't show his affiliation to parpaniyam.

Thanks and Regards,
Asuran

said...

அசுரன்,

தாங்கள் இதுவரை யாரையுமே தனிப்பட்டுத் தாக்கியதாக எனக்குத் தெரியவில்லை.

மாறுபடும் கருத்தெல்லாம் தனிப்பட்ட தாக்குதல் என்று கருதுவதும் தவறே.

மற்றபடி, அகில உலக சோம்பேறிகள் சங்கத் தலைவரான நான் அடிக்கடி பின்னூட்டமிடாமலிருப்பது பற்றியெல்லாம் பெரிதுபடுத்தாதீர்கள்.

said...

மக்கள் தயாராக இல்லாத போது வெளியிலிருந்து ஆயுதம் தாங்கிய புரட்சியின் மூலம் கம்யூனிசத்தை திணிக்க முயன்றால் என்ன நடக்கும் என்பதை அழகாகப் படம் பிடித்துக் காட்டும் A True Story of A Q என்ற Lu Xun கதையைப் படித்துப் பாருங்கள்.

ஆயுதப் போராட்டத்தில் சேரும் ஒவ்வொருவரும் கம்யூனிசத்துக்காக சேராமல், வேறு நோக்கங்களுக்காக (கிராமத்தில் தனது எதிரிக்கு பாடம் கற்பிக்க வேண்டும், வீட்டில் மரியாதை கிடைக்க வேண்டும், பணம் சம்பாதிக்கவேண்டும்) சேர்ந்தால், போராட்டம் முடிந்ததும் தமக்கு வரும் பொறுப்புகளை சரி வர கடைபிடிக்காமல் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்த ஆரம்பித்து விடுவார்கள். சீன, ரஷ்ய பரிசோதனைகள் சொல்லும் பாடம் அதுதான்.

நீங்கள் 'அரசாங்கம் எப்படி உதிர வேண்டும், சமதர்ம சமூகம் எப்படி செயல்பட வேண்டும்' என்று சொல்வதை நான் முதலில் கற்றுக் கொண்டது காந்தியின் எழுத்துக்களிலிருந்துதான் என்றால் நம்புவீர்களா? இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த சமவுடைமைவாதி காந்தி என்று நம்புகிறேன். முடிந்தால் இன்னும் படித்துப் பார்க்கும்படி வேண்டுகிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

said...

கரும்பலகை,

சமூகம் என்பது தனிமனிதர்களின் தொகுப்புதானே. தனிமனிதர்கள் சீர்திருந்தினால் சமூகம் ஏன் திருந்தாது? பெரும்பான்மையினர் மாறுவது கூட ஒவ்வொருவராக அல்லது அதிகபட்சம் ஒவ்வொரு சிறு குழுவாகத்தான் மனம் மாறுமே ஒழிய, ஒட்டு மொத்தமாக ஒரே இரவில் மந்திரம் போட்டது போல சிந்தனைகள் மாறுவது சாத்தியமா?

நம்முடைய சமூகப் பிரச்சனைகள் எல்லாமே தனிமனித நேர்மைக்குறைவினால் வருபவைதான். எந்த சமூகப் பிரச்சனையையும் எடுத்துக் கொண்டு அதன் பின்னணி என்ன என்று நினைத்துப் பாருங்கள்.

ம்யூஸ்,

நன்றி.

//வன்முறையை அதன் எல்லா வடிவங்களிலும் அழித்துவிடமுடியும் என்று நம்புகிறீர்களா? //

வன்முறையை எல்லா வடிவங்களிலும் அழித்து விட முடியாது. பண்பட்ட, நாகரீக மனிதன் தனது அடிப்படை உணர்வுகளை அடக்கிச் சரியாகச் செலுத்துவது போல, வன்முறையைத் தவிர்ப்பது நாகரீகத்தின் அடையாளமாகும்.

சிறுகுழந்தையாக தவழ்வது, சாப்பிடும்போது உணவை சிதற விடுவது இயற்கை. வளர்ந்த பின்பு முற்றிலும் ஒழிக்க முடியாவிட்டாலும், எல்லோருமே தவழ்வதையும், உணவு சிதறுவதையும் தவிர்ப்பதோடு அப்படி தவறி நடந்து விட்டால் உடனேயே வருந்தி அதைத் திருத்திக் கொள்கிறோம். அது போலத்தான் வன்முறையும் என்பது எனது கருத்து.

அன்புடன்,

மா சிவகுமார்

said...

கரும்பலகை,

சமூகம் என்பது தனிமனிதர்களின் தொகுப்புதானே. தனிமனிதர்கள் சீர்திருந்தினால் சமூகம் ஏன் திருந்தாது? பெரும்பான்மையினர் மாறுவது கூட ஒவ்வொருவராக அல்லது அதிகபட்சம் ஒவ்வொரு சிறு குழுவாகத்தான் மனம் மாறுமே ஒழிய, ஒட்டு மொத்தமாக ஒரே இரவில் மந்திரம் போட்டது போல சிந்தனைகள் மாறுவது சாத்தியமா?

நம்முடைய சமூகப் பிரச்சனைகள் எல்லாமே தனிமனித நேர்மைக்குறைவினால் வருபவைதான். எந்த சமூகப் பிரச்சனையையும் எடுத்துக் கொண்டு அதன் பின்னணி என்ன என்று நினைத்துப் பாருங்கள்.

ம்யூஸ்,

நன்றி.

//வன்முறையை அதன் எல்லா வடிவங்களிலும் அழித்துவிடமுடியும் என்று நம்புகிறீர்களா? //

வன்முறையை எல்லா வடிவங்களிலும் அழித்து விட முடியாது. பண்பட்ட, நாகரீக மனிதன் தனது அடிப்படை உணர்வுகளை அடக்கிச் சரியாகச் செலுத்துவது போல, வன்முறையைத் தவிர்ப்பது நாகரீகத்தின் அடையாளமாகும்.

சிறுகுழந்தையாக தவழ்வது, சாப்பிடும்போது உணவை சிதற விடுவது இயற்கை. வளர்ந்த பின்பு முற்றிலும் ஒழிக்க முடியாவிட்டாலும், எல்லோருமே தவழ்வதையும், உணவு சிதறுவதையும் தவிர்ப்பதோடு அப்படி தவறி நடந்து விட்டால் உடனேயே வருந்தி அதைத் திருத்திக் கொள்கிறோம். அது போலத்தான் வன்முறையும் என்பது எனது கருத்து.

அன்புடன்,

மா சிவகுமார்

said...

டால்ஸ்டாய் படித்ததில்லை(புத்துயிர்ப்பு(resurection) படித்து சிறிது
அலுப்பாகிவிட்டதால் தொடர்ந்து படிக்கவில்லை). மற்றபடி டால்ஸ்டாய் அன்றைய
ரஸ்ய விவசாயிகளின் குரல் என்று லேனின் கூறுகிறார். காந்தி டால்ட்ஸ்டாயின்
பாதிப்பில் அஹிம்சை தழுவினார் என்ற கருது கோளும் அறிந்ததுதான்.
பாரதியார் டால்ஸ்டாயின் வன்முறையாளர்கள் பற்றிய கட்டுரையை தனது
பத்திரிகையில் மொழிபெயர்த்து பிரசூரிக்கிறார். அதை படித்ததில் காந்தி டால்ஸ்டாயின் பாதிக்கப்பட்டவர் என்ற கருது கோள் உண்மையாக இருக்கலாம் என்று அபிப்ராயத்துக்கு வந்தேன். அவ்வளவுதான் காந்தி டால்டாய் உறவு பற்றிய எனது புரிதல். இதுவும் திட்டமிட்டு செய்யவில்லை. பாரதி பற்றிய பார்வைக்காக படித்த பொழுது இது உள்ளே வந்து மாட்டிக் கொண்டது. ஆனால் விசயம், காந்தி என்ற அளவிலேயே அஹிம்சையின் முரன்பாடுகள் பல்லிளித்ததால் அதைத் தாண்டி போவதற்க்கான தேவையெழவில்லை. அப்படிப்பட்ட ஆய்வு காந்தியின் சீடர்களுக்கு தேவைப்படலாம்(எப்படி மார்க்ஸ் ,
லெனின் இவர்களின் வள்ர்ச்சிதை மாற்றம் குறித்த ஆய்வு எங்க்ளுக்கு
தேவைப்படுகிறதோ அப்படி).


***************
உங்களை எள்ளி நகையாடும் தேவையை நீங்களே ருவாக்கினீர்கள்,
காந்தியின் முரன்பட்ட நடவடிக்கைகளுக்கான அடிப்படைகளை ஒத்துக் கொண்ட
நீங்கள் அது தொடர்ந்து அவரிடம் வினையாற்றுவது குறீத்த எங்களது
பார்வையை வசதியாக கணக்கில் எடுக்காமல் வாதிடுகிறேர்கள், காந்தியின்
கொள்கையை அவரே சரியாக பயன்படுத்தவில்லை தன்னெழுச்சியாக
வினையாற்றுகிறார் என்ற கருத்து குறித்து மௌனம் சாதிக்கிறீர்கள். எனது
எதிர்வினைகளுக்கு ஆரம்ப கால விவாதத்தில் பதில் கொடுத்ததோடு சரி
அதற்க்கு பிறகு ஒரு தடவைகூட உருப்படியாக பதில் சொல்லாமல், உங்கள்
தரப்பு விசயங்களையே மீண்டும் வைத்து, எனது எதிர்வினைகளை அந்தரத்தில்
தொங்க விட்டீர்கள்.

வன்முறை குறித்து சொல்லும் கருத்துக்கு இதுவரை(இந்த எதிர்வினையிலும்
கூட) நீங்கள் முழுமையான எனது கேள்விக்கு பதில்
சொல்லவில்லை(காந்தியின் அஹிம்சை வன்முறையற்று இருந்ததா? என்ற
கேள்வி.). வன்முறையின் மூலவேரை காண மறுக்கும் சமூக விஞ்ஞான பார்வை
குறித்தும் நீங்கள் கருத்து சொல்வதில்லை. நான் கூறுகிறேன் காந்தி's way is
more voilent than any other way. இது குறித்தும் உங்களிடம் கருத்து
இல்லை(atleast ஒரு மறுப்பு). உங்களது, காந்தியினது தனிப்பட்ட
விருப்பங்களுக்காக இந்த உலகம் இயங்கவில்லை.

ஆனால் தொடர்ந்து எனது கருத்துக்கள் மீது முத்திரை குத்தி வந்தீர்கள், இந்த
சூழ்னிலையில் provocative argument தவிர்த்து எனக்கு வேறு வழி
புலப்படவில்லை(for the sake OF let you engagae in an analytical way
of argument). அவ்வளவுதான். மற்றபடி உங்களது துறையில், வேறு சில
மாற்று துறைகளில் நீங்கள் அதிகம் படித்தவர் என்பதேல்லாம் உங்களது
எழுத்துக்களில் இருந்து புரிகிறது.



//நீங்கள் மட்டும் ஒரு போர்வைக்குள் ஒளிந்து கொண்டு நிழல் குத்து விடுவது
சரியா?
//

அப்படி எதுவும் நான் குத்து விட்டமாதிரி தெரியவில்லை. வர்க்கம் பற்றிய ஒரு
விமர்சனம் மட்டும் அதுபோல தெரிந்தாலும் அதன் முடிவுகள் முழுமையாக
உங்களது வாதத்தின் மூலமே வந்தடைந்து நான் வைத்தேன்(வேண்டுமானால்
அந்த வாத பகுதிகளை உங்கள் வசதிக்காக மீண்டும் அதன் சரியான வடிவில்
தருகிறேன்). தங்களை பற்றிய சொந்த விவரங்களின் அடிப்படையில் இது வரை
எந்த வாதமும் நான் வைக்கவில்லை. இதை என்னால் உறுதியாக கூறமுடியும்.
அப்படி வைத்ததாக கூறினால் அதை பரிசீலனை செய்து ஒரு முடிவை எட்டலாம்.
நீங்கள் தான் ஆரம்பத்திலிருந்து எனது முகவரியை வெளிப்படுத்துவதை முதல்
கோரிக்கையாக கொண்டு விவாதம் செய்து என்னை எரிச்சலூட்டியது(உங்களது
ஒவ்வொரு பதிலிலும் இந்த அம்சம் இருக்கும். இந்த பதிலிலும்).


//கம்யூனிசம் தெரியாவிட்டாலும், தனி மனித உரிமையை விட்டுக் கொடுத்து
குழுவுக்கு அடி பணிய வேண்டும் என்று சொன்னதைத்தான் அடிமைத்தனம்
என்று சொல்கிறேன். //
//எங்கோ யாரோ சொன்னதை மேற்கோளிட்டால்தான் நான் சொல்வதற்கு வலு
சேருமா? நான் படித்ததை, புரிந்ததை, உணர்ந்ததை பேசித்தான் நான் வாதம்
செய்கிறேன். இதற்காக புத்தகங்களையும், இணையத்தளங்களையும் அலசி
சுட்டிகளைக் கொடுக்க நேரம் போதவில்லை அசுரன் :-)
//
எங்கோ யாரோ சொன்னதை மேற்கோளிட்டு நானும் வாதாட விரும்பவில்லை.
அதே நேர விரய காரணத்தால் சுட்டிகள எதுவும், அல்லது லாஜிக்கல் வாதம்
எதும் முன்வைக்க மனம் இன்றி, உங்களது இந்த கருத்து எந்த அடிப்படையுமற்ற
ஒரு வதந்தி என்று நான் கூறுகிறேன். ஏனெனில் உங்களைவிட அதிகமாக
கம்யுனிசத்தை கற்றவன் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை :-))

ஆனால் காந்தி ஒரு வன்முறையாளர் என்பதை ஆதரங்களுடன்
சொல்லியுள்ளேன். நீங்கள் மறுக்க வேண்டுமென்றால் எனது ஆதாரங்களை
வாதாடி மறுக்க வேண்டும்.

அஹிம்ஸை என்பது என்ன?

தனி மனித உரிமை என்பது என்ன? அதன் வரம்பு என்ன?

காந்தி கூட அம்பெத்கர் முதலானோரின் தனிமனித உரிமைகளை புண்படுத்தி வன்முறையாக தனது கருத்துக்களை பல முறை நிலை நிறுத்தினார். அதாவது ப்ளாக் மெயில் செய்து. ஆக, குழுவின் அல்லது சமூகத்தின் நலனுக்காக ஒரு தனிமனிதன் தனது சொந்த நலனை தியாகம் செய்வதை அடிமைத்தனம் என்று சொல்லும் மா. சிவகுமார். ஒரு தனிமனிதரான காந்தி ப்ளாக் மெயில் செய்து சாதிப்பதை அஹிம்சை என்று எப்படி சொல்கிறார்.


கம்யுனிச சமூகத்தில் எந்த ஒரு விசயமும் முதலில் மக்களின் ஒப்புதலைப் பெற வேண்டும். அதற்க்கு கட்சி அமைப்பினர் பிரச்சாரம் செய்வார்கள். 'கன்னி நிலம்' படித்துப் பாருங்கள் அதில் எப்படி கூட்டு பண்ணைகள் கட்ட மக்களிடம் சென்று அவர்களது தேவையில்லாத அச்சத்தை களைந்து பிறகு அவர்களை கூட்டுப் பண்ணை கட்ட ஒப்புக்கொள்ளவைப்பார்கள் என்று. அதனால் நீங்கள் சொல்லுவது போல அடிமைத்தனமாக ரஸ்யா, சீனா சமூகம் இருந்தது என்பது வடிகட்டிய பொய். அப்படி அடிமைத்தனமாக இருந்த மக்கள் கலாச்சார புரட்சி செய்திருக்க வாய்ப்பேயில்லை. உண்மையில் காந்தியின் காங்கிரசுதான் அடிமைத்தனமாக இருந்தது என்பதை பக்த்சிங் குண்டு போட்டதை கண்டித்து இயற்றப்பட்ட காங்கிரஸ் தீர்மானம் பற்றிய ஒரு பெண் தலைவரின் கருத்து வெளிப்படுத்துகிறது. அவரது பெயர் ஞபகம் இல்லை. ஆனால் 1767 சொச்சம் உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் சபையில் வெறும் 86 வோட்டு வித்தியாசத்தில் பகத்சிங் எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது. அதிலும் பலர் தீர்மானம் இயற்றிய பிறகு, காந்தியின் மீதான பிரியத்திலேயே அப்படி ஆதரவாக வோட்டு போட்டதாக் கூறினார்கள். சொந்த புத்தியில்லாத அடிமைகள் இவர்களதான்.

நீங்கள் கூறும் அஹிம்சை சமூகமும் இப்படித்தான் இருக்கும். மக்களின் பண்பாட்டு மாற்றிறத்திற்க்கு எந்த திட்டமும் கிடையாது?

மக்களின் பொருளாதார வாழ்க்கையின் மாற்றத்திற்க்கு எந்த திட்டமும் கிடையாது?

மக்களின் பிரச்சனை என்ன என்பது குறித்தும் சரியான பார்வை கிடையாது?

ஆனால் தீர்வு மட்டும் இதுதான் இதுதான் என்று திரும்ப திரும்ப கூறுகிறேர்கள்.







////விஞ்ஞான கம்யுனிசம் என்றால் என்ன?//

ஒவ்வொருவரும் தனக்கு மகிழ்வளிக்கும், தனது திறமைக்கு உகந்த பணியை
பலன் எதிர்பாராது செய்ய வேண்டும். ஒவ்வொருவருக்கும் அவரது
தேவைப்படுபவை சக மனிதர்களால் முழு விருப்பத்துடன் கிடைக்கும். இதுதான்
எனக்குப் புரிந்த சமவுடைமை சமூகம்.
//

விஞ்ஞான கம்யுனிசம் இதுவல்ல. இது பொதுவுடைமை சமூகத்தின் இயல்பு
என்ற அளவில் சரிதான். ஆனால் இது கற்பனாவாத கம்யுனிசம், உங்களது
காந்திய, அஹிம்சா, பொதுவுடமை ஏற்ப்பு, மறுப்பு முரன்பாடுகளின் விதை
இந்த கற்பனாவாத புரிதலில் உள்ளது. ஏனேனில் எந்த சமூகத்திலும் பலன்
எதிர்பார்க்காமல் யாரும் எதுவும் செய்வதில்லை. ஆனால் அவர்கள்
எதிர்பார்க்கும் பலன் ஒட்டு மொத்த மனித குலத்திற்க்கான பலன் என்று விரிந்த பார்வை கம்யுனிச சமூகத்தின் பண்பு. அது இன்றைய பலன் என்பதின் மிக விரிந்த வடிவம். உயர்ந்த வடிவம். இந்த உணர்வின் தோற்றுவாய் எது(பொதுவுடைமை உணர்வின்)? இது எப்படி ஒரு சமூகமாக மீண்டும் பரிணமிக்கும் என்பது பற்றிய சமூக பரிணாமத்துவ ஆய்வுதான் விஞ்ஞான கம்யுனிசம்.




////என்ன விதமான சீர்திருத்தம்?//

வாழ்க்கை என்பது ஒரு ஆரம்பப் புள்ளியில் ஆரம்பித்து இலக்கை நோக்கிப்
பாயும் பேராறு போன்றது. அதன் வழியில் பிற மனிதர்களை வளப்படுத்தும்,
போற்றும் ஒவ்வொன்றும் முன்னோக்கிய சீர்திருத்தம், பிற மனிதர்களை
துன்புறுத்தும், சிறுமைப்படுத்தும் ஒவ்வொன்று பின்னடைவு.

இது ஒவ்வொரு தனிமனிதனிலிருந்து தொடங்க வேண்டும். ஒரு குழுவினர்
மற்றவர்களை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மிரட்டுவதால் வருவது
அன்று.

//பல ஆயிரம் வருடங்களாக அடிமைப்பட்டு கிடக்கும் உழைக்கும் மக்களுக்கு
விடுதலை கொடுக்கும் வழி என்ன தங்களது தீர்வில்?//

நான் என்னைச் சீர்திருத்திக் கொள்கிறேன். ஒவ்வொருவரும் சீர்திருந்தி
விட்டால், அடிமைப்படுத்துவரும் இருக்க முடியாது, அடிமைப்படுபவரும் இருக்க
மாட்டார். //


காந்தி விஞ்ஞானம் நமது வாழ்வை சீரழித்து விட்டது என்கிறார். இயற்கை
வாழ்வுக்கு போவோம் என்கிறார். இன்னொரு முறை ஒரு பேட்டியில் நான்
அரசாங்கம் அமைத்தால் முதலில் அமெரிக்காவிடமிருந்து இயந்திரங்களை
இறக்குமதி செய்வேன் என்கீறார். ஆக, அவரும் அரசு ஒன்றை அமைத்து ஆட்சி
செய்வதை தனது மனதில் கொண்டிருந்தார். இதே அரசு அமைக்கும் கருத்தை
56 வீரர்களுக்கான தண்டனையை நியாயப்படுத்தும் போதும் சொல்கிறார்.
அப்படி அவர் அமைக்கும் அரசு யாருக்கான சர்வாதிகாரம்? இதற்க்கான பதிலில்
அடங்கியுள்ளது வன்முறை குறித்த காந்தியத்தின் சுய முரன்பாடு.

அதாவது அரசு என்பது போலிசு, ராணுவம், நீதிமன்றம், அதிகார வர்க்கம்
அடங்கிய ஒரு இயந்திரம். ஒரு வேளை காந்தி அமைக்கப் போகும் அரசு இந்த
அம்சங்கள் இல்லாமல் இருக்குமா? அப்படி ஒரு அரசு எப்படி உருவாகும்? ஒரு
பக்கம் சுரண்டிக் கொழுக்கும் பன்றிகளும் அவர்களால் கடுமையாக
சுரண்டப்படும் மக்களும் இருக்க அவர்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில்
அஹிம்சையை போதித்து அவர்கள் அதை ஏற்றுக் கொண்டு.... சொத்துக்களை
பொதுவுடைமையாக்கி இது உண்மையில் சாத்தியம் என்று கருதினால் கூட மிக
மிக மிக மிக மிக மிக,..... நீண்ட காலம் எடுக்கும் ஒரு செயல் முறை
அதுவும் இன்றைக்கு உலக நாடுகள் பொருளாதார எல்லைகளால் பிரிக்கப்பட்டு
வாழ்வா சாவா என்று மூக்கை உரசி முரன்பட்டு நின்று கொண்டிருக்கும் சூழலில்
ஒரு நாட்டில் இந்த விசயம் நடந்தால் அந்த நாடு இழிச்சவாய நாடாக
மாற்றப்பட்டு கும்மாங் குத்துக்கு ஆளாகும். அதுவும் அப்படியொரு சமூகமும்
மலரும் முன்பாக பின்வரும் இரண்டில் ஒன்று நடந்துவிடும், ஒன்று: மனித
சமூகத்தின் உள்முரன்பாடும், இயற்கையுடனான முரன்பாடும் சேர்ந்து சவக்குழி
தோண்டி அதில் மனித சமூகம் மூடப்பட்டு புல் முளைத்து அது நிலக்கரியாக
மாறிவிடும். இரண்டு: வர்க்க பகைமைகள் சரியான வழியில் தன்னியல்பில்
தீர்ந்து ஒரு பொதுவுடமை சமுதாயம் மலரும்(யாரும் மிரட்டடினாலும் மிரட்டாவிட்டாலும் நடந்தேறும் :-)).

ஆக காந்தியின் அஹிம்சா சமூகத்தை அவர் சொன்ன வழியில் சென்று
பார்ப்பதற்க்குள் நமது எச்சமான நிலக்கரி மட்டுமே எஞ்சியிருக்கும்(ஒரு வேளை அது சாத்தியம் என்று கருதினால்).

இதில் இன்னோரு விசயத்தையும் கவனிக்க வேண்டும். இந்தியாவின்
பெரும்பான்மை மக்கள் காந்தியின் வருகைக்கு முன்பும் அஹிம்சையைத்தான்
கடைபிடித்தார்கள்.தலித்துக்கள் மேல்சாதி நிலபிரபுத்துவத்தை எதிர்த்து எந்த
கலகமும் செய்யாமல் காந்தி வழியில் சகித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.
அது என்ன விதமான சமூகம், அஹிம்சை இந்தியாவுக்கு புதுசு அல்ல(காந்தி
Just gave a new shape). அது உலகின் எந்த பகுதியிலும் மக்களின்
விடுதலையாக நடந்தேறியது இல்லை. காந்தியின் அஹிம்சையை அவர்
காலத்திலேயே கடைபிடித்து திருந்திய சில கொழுத்த வர்க்கத்தினரை
மா.சிவக்குமார் காட்ட கடைமைப்பட்டுள்ளார். பிர்லாவின் மாளிகையில் அமர்ந்து
வேர்க்கடலை சாப்பிட்ட அதே நேரத்தில் அந்த தரகு முதலாளி இந்தியாவை
காட்டிக் கொடுத்து பணம் செர்த்தார். அது இன்று வரை தொடர்கிறது(அவிங்க்
ப்ராண்ட் சட்டை ஒன்னை என்னோட தம்பி கொஞ்ச நாள் முன்ன
வாங்கினான்).

சரி ஒரு சின்ன எடுத்துக்காட்டு சொல்லுவோம். அது ஔரங்கசிப் ஆட்சிக்காலம்
அவர் காந்தியாக மாறி எல்லாவற்றையும் பொதுவுடைமை ஆக்கிவிடுகிறார்.
இப்பொழுது அந்த சமூகம் இன்றைய தொழில் நுட்பத்தில் வளர்ந்த சமூகமாக
மாறுமா? இங்கு ஐரோப்பாவில் விஞ்ஞான வளர்ச்சி ஏற்ப்பட்டதும் அப்படி ஒன்று
ஆசியாவில் ஏற்ப்படாததற்க்கும் காரணமான ஆசிய கிராம பொருளாதாரம்
என்பதை பொருத்திப் பாருஙக்ள். அதாவது இதிலிருந்து என்ன தெரிகிறது
என்றால், பொதுவுடைமை சமுதாயம் எல்லா வரலாற்றுக் கட்டங்களுக்கும் ஏற்ற
ஒரு சமூக அமைப்பு அல்ல. அது முற்றிய முதலாளித்துவ உற்பத்தி
முறை(மையப்படுத்தப்பட்ட உற்பத்தி, அதாவது சமூக உற்பத்தி, தனிமனித
சுவிகரிப்பு), தொழில் நுட்ப வளர்ச்சி அதி உயர்ந்த கட்டத்தை அடைந்த ஒரு
சமூகத்திற்க்கு அடுத்த சமூகமாகவே வரும். அப்படியெனில்
காந்தியின்(ஏனேனில் காந்தி பொதுவுடைமை சமூகத்தை கூறுகிறார் என்று நீங்கள்தான் கூறுகிறீர்கள்) அஹிம்சை எந்த சமூகத்திற்க்கான ஒரு தீர்வு?,

அப்படி எந்த சமூகத்திற்க்கான தீர்வு எனில் அதில் வரும் சீர்திருத்தம் என்பதன் அர்த்தம் என்ன? (ஏனெனில் வார்த்தைகளுக்கு வர்க்கமும், சமூக வரலாற்றுக் கட்டமும் அர்த்தம் கொடுக்கின்றன)


சமூக வரலாற்று ஆராய்ச்சியும் அதை தோல்வியுறச் செய்கிறது. தத்துவ
ஆராய்ச்சியும் அதில் ஒன்றுமில்லை என்கிறது. பிறகு எந்த அடிப்படையில் நான்
அஹிம்சை சரி என்று சொல்ல?

அஹிம்சா என்பது தன்னளவில் வன்முறையின் பிறப்பிடமாக உள்ளது. ஆனால்
வன்முறை என்று நீங்கள் குற்றம்சாட்டும் விசயமோ உண்மையில் அஹிம்சையின்
உருவமாக உள்ளது.(இதைத்தான் பகத்சிங் குழுவினர் 'வெடிகுண்டின் தத்துவம்'
எனும் நூலில் அருமையாக விளக்கியிருப்பர்).



//அதில் தவிர்க்க முடிந்த தவிர்க்க முடியாத வன்முறை, சரியான வன்முறை, தவறான வன்முறை கிடையாது. ஒருவனுக்கு தீவிரவாதி, இன்னொருவனுக்கு விடுதலைப்போராளி. ஒருவனுக்கு அரசாங்கம், இன்னொருவனுக்கு அடக்குமுறை.
//

அதாவது கற்பனையில் வன்முறை என்பதே நடக்காது என்று நம்பிக்கொண்டு வினையாற்றச் சொல்கிறீர்களா?

கண் முன்னே இந்த உலகின் பல்வேறு சம்பவங்கள் மிகத் தெளிவாக காட்டுகிறது காந்தியின் அஹிம்சை ஆகக் கொடுமையான வன்முறையாக இருப்பதை.

வன்முறை வேண்டாம் என்பது அஹிம்சை. அது எனது, உங்களது விருப்பம். ஆனால் வன்முறை இயற்கையின் இயல்பாய் இருக்கீறதே அதை தவிர்க்க காந்தியின் வழியில் என்ன திட்டம் உள்ளது?

அப்படியே நீங்கள் பதில் சொல்லாமல் விட்டிருந்த இந்த முந்தைய கேள்விகளுக்கும் பதில் சொல்லி விடுங்கள்.

#Question 1:

ஒருவர் இரண்டில் ஒரு நிலைப்பாடு எடுக்கலாம். ஒன்று மார்க்ஸின் சமூக விஞ்ஞானம் சரி என்றால், அதன் ஊடாக குறைந்த பட்ச சேதாரங்களுடன் கம்யுனிச சமூகத்தை அடையும் வழியைச் சொல்ல வேண்டும்

அல்லது மார்க்ஸ் வியாக்கியானம் செய்த சமூக விஞ்ஞானம் தவறு என்று நிலைப்பாடு எடுக்க வேண்டும்.

இதில் நீங்கள் எந்த கேட்டகிரி?


#Question 3:
பல ஆயிரம் வருடங்கள் மக்கள் அடிமைப்பட்டு கிடப்பதன் காரணம் என்ன?



Important Question #4:
மா. சிவகுமார், உங்களிடம் ஒரே ஒரு அடிப்படை கேள்வி கேட்க வேண்டியுள்ளது.

மனிதனின் சிந்தனையை தீர்மானிப்பது எது?


*********

காந்தி ஒரு உள்முரன்பாடுடைய ஒருவர் என்பதும் அவரது கருத்துக்கு அவர் காலத்திலேயே அவர் செயல்படுத்துவதில் முரன்பட்டிருந்தார் என்பது குறித்தும் வைத்துள்ள ஆதாரங்களுக்கு இது வரை பதில் சொல்லவில்லை. ஆகவே காந்தி கெட்டவர் என்ற எமது கருது கோளுக்கு எந்த ஒரு வாதமும் தங்களால் வைக்கப்படவில்லை.

அசுரன்

said...

டால்ஸ்டாய் படித்ததில்லை(புத்துயிர்ப்பு(resurection) படித்து சிறிது
அலுப்பாகிவிட்டதால் தொடர்ந்து படிக்கவில்லை). மற்றபடி டால்ஸ்டாய் அன்றைய
ரஸ்ய விவசாயிகளின் குரல் என்று லேனின் கூறுகிறார். காந்தி டால்ட்ஸ்டாயின்
பாதிப்பில் அஹிம்சை தழுவினார் என்ற கருது கோளும் அறிந்ததுதான்.
பாரதியார் டால்ஸ்டாயின் வன்முறையாளர்கள் பற்றிய கட்டுரையை தனது
பத்திரிகையில் மொழிபெயர்த்து பிரசூரிக்கிறார். அதை படித்ததில் காந்தி டால்ஸ்டாயின் பாதிக்கப்பட்டவர் என்ற கருது கோள் உண்மையாக இருக்கலாம் என்று அபிப்ராயத்துக்கு வந்தேன். அவ்வளவுதான் காந்தி டால்டாய் உறவு பற்றிய எனது புரிதல். இதுவும் திட்டமிட்டு செய்யவில்லை. பாரதி பற்றிய பார்வைக்காக படித்த பொழுது இது உள்ளே வந்து மாட்டிக் கொண்டது. ஆனால் விசயம், காந்தி என்ற அளவிலேயே அஹிம்சையின் முரன்பாடுகள் பல்லிளித்ததால் அதைத் தாண்டி போவதற்க்கான தேவையெழவில்லை. அப்படிப்பட்ட ஆய்வு காந்தியின் சீடர்களுக்கு தேவைப்படலாம்(எப்படி மார்க்ஸ் ,
லெனின் இவர்களின் வள்ர்ச்சிதை மாற்றம் குறித்த ஆய்வு எங்க்ளுக்கு
தேவைப்படுகிறதோ அப்படி).


***************
உங்களை எள்ளி நகையாடும் தேவையை நீங்களே ருவாக்கினீர்கள்,
காந்தியின் முரன்பட்ட நடவடிக்கைகளுக்கான அடிப்படைகளை ஒத்துக் கொண்ட
நீங்கள் அது தொடர்ந்து அவரிடம் வினையாற்றுவது குறீத்த எங்களது
பார்வையை வசதியாக கணக்கில் எடுக்காமல் வாதிடுகிறேர்கள், காந்தியின்
கொள்கையை அவரே சரியாக பயன்படுத்தவில்லை தன்னெழுச்சியாக
வினையாற்றுகிறார் என்ற கருத்து குறித்து மௌனம் சாதிக்கிறீர்கள். எனது
எதிர்வினைகளுக்கு ஆரம்ப கால விவாதத்தில் பதில் கொடுத்ததோடு சரி
அதற்க்கு பிறகு ஒரு தடவைகூட உருப்படியாக பதில் சொல்லாமல், உங்கள்
தரப்பு விசயங்களையே மீண்டும் வைத்து, எனது எதிர்வினைகளை அந்தரத்தில்
தொங்க விட்டீர்கள்.

வன்முறை குறித்து சொல்லும் கருத்துக்கு இதுவரை(இந்த எதிர்வினையிலும்
கூட) நீங்கள் முழுமையான எனது கேள்விக்கு பதில்
சொல்லவில்லை(காந்தியின் அஹிம்சை வன்முறையற்று இருந்ததா? என்ற
கேள்வி.). வன்முறையின் மூலவேரை காண மறுக்கும் சமூக விஞ்ஞான பார்வை
குறித்தும் நீங்கள் கருத்து சொல்வதில்லை. நான் கூறுகிறேன் காந்தி's way is
more voilent than any other way. இது குறித்தும் உங்களிடம் கருத்து
இல்லை(atleast ஒரு மறுப்பு). உங்களது, காந்தியினது தனிப்பட்ட
விருப்பங்களுக்காக இந்த உலகம் இயங்கவில்லை.

ஆனால் தொடர்ந்து எனது கருத்துக்கள் மீது முத்திரை குத்தி வந்தீர்கள், இந்த
சூழ்னிலையில் provocative argument தவிர்த்து எனக்கு வேறு வழி
புலப்படவில்லை(for the sake OF let you engagae in an analytical way
of argument). அவ்வளவுதான். மற்றபடி உங்களது துறையில், வேறு சில
மாற்று துறைகளில் நீங்கள் அதிகம் படித்தவர் என்பதேல்லாம் உங்களது
எழுத்துக்களில் இருந்து புரிகிறது.



//நீங்கள் மட்டும் ஒரு போர்வைக்குள் ஒளிந்து கொண்டு நிழல் குத்து விடுவது
சரியா?
//

அப்படி எதுவும் நான் குத்து விட்டமாதிரி தெரியவில்லை. வர்க்கம் பற்றிய ஒரு
விமர்சனம் மட்டும் அதுபோல தெரிந்தாலும் அதன் முடிவுகள் முழுமையாக
உங்களது வாதத்தின் மூலமே வந்தடைந்து நான் வைத்தேன்(வேண்டுமானால்
அந்த வாத பகுதிகளை உங்கள் வசதிக்காக மீண்டும் அதன் சரியான வடிவில்
தருகிறேன்). தங்களை பற்றிய சொந்த விவரங்களின் அடிப்படையில் இது வரை
எந்த வாதமும் நான் வைக்கவில்லை. இதை என்னால் உறுதியாக கூறமுடியும்.
அப்படி வைத்ததாக கூறினால் அதை பரிசீலனை செய்து ஒரு முடிவை எட்டலாம்.
நீங்கள் தான் ஆரம்பத்திலிருந்து எனது முகவரியை வெளிப்படுத்துவதை முதல்
கோரிக்கையாக கொண்டு விவாதம் செய்து என்னை எரிச்சலூட்டியது(உங்களது
ஒவ்வொரு பதிலிலும் இந்த அம்சம் இருக்கும். இந்த பதிலிலும்).


//கம்யூனிசம் தெரியாவிட்டாலும், தனி மனித உரிமையை விட்டுக் கொடுத்து
குழுவுக்கு அடி பணிய வேண்டும் என்று சொன்னதைத்தான் அடிமைத்தனம்
என்று சொல்கிறேன். //
//எங்கோ யாரோ சொன்னதை மேற்கோளிட்டால்தான் நான் சொல்வதற்கு வலு
சேருமா? நான் படித்ததை, புரிந்ததை, உணர்ந்ததை பேசித்தான் நான் வாதம்
செய்கிறேன். இதற்காக புத்தகங்களையும், இணையத்தளங்களையும் அலசி
சுட்டிகளைக் கொடுக்க நேரம் போதவில்லை அசுரன் :-)
//
எங்கோ யாரோ சொன்னதை மேற்கோளிட்டு நானும் வாதாட விரும்பவில்லை.
அதே நேர விரய காரணத்தால் சுட்டிகள எதுவும், அல்லது லாஜிக்கல் வாதம்
எதும் முன்வைக்க மனம் இன்றி, உங்களது இந்த கருத்து எந்த அடிப்படையுமற்ற
ஒரு வதந்தி என்று நான் கூறுகிறேன். ஏனெனில் உங்களைவிட அதிகமாக
கம்யுனிசத்தை கற்றவன் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை :-))

ஆனால் காந்தி ஒரு வன்முறையாளர் என்பதை ஆதரங்களுடன்
சொல்லியுள்ளேன். நீங்கள் மறுக்க வேண்டுமென்றால் எனது ஆதாரங்களை
வாதாடி மறுக்க வேண்டும்.

அஹிம்ஸை என்பது என்ன?

தனி மனித உரிமை என்பது என்ன? அதன் வரம்பு என்ன?

காந்தி கூட அம்பெத்கர் முதலானோரின் தனிமனித உரிமைகளை புண்படுத்தி வன்முறையாக தனது கருத்துக்களை பல முறை நிலை நிறுத்தினார். அதாவது ப்ளாக் மெயில் செய்து. ஆக, குழுவின் அல்லது சமூகத்தின் நலனுக்காக ஒரு தனிமனிதன் தனது சொந்த நலனை தியாகம் செய்வதை அடிமைத்தனம் என்று சொல்லும் மா. சிவகுமார். ஒரு தனிமனிதரான காந்தி ப்ளாக் மெயில் செய்து சாதிப்பதை அஹிம்சை என்று எப்படி சொல்கிறார்.


கம்யுனிச சமூகத்தில் எந்த ஒரு விசயமும் முதலில் மக்களின் ஒப்புதலைப் பெற வேண்டும். அதற்க்கு கட்சி அமைப்பினர் பிரச்சாரம் செய்வார்கள். 'கன்னி நிலம்' படித்துப் பாருங்கள் அதில் எப்படி கூட்டு பண்ணைகள் கட்ட மக்களிடம் சென்று அவர்களது தேவையில்லாத அச்சத்தை களைந்து பிறகு அவர்களை கூட்டுப் பண்ணை கட்ட ஒப்புக்கொள்ளவைப்பார்கள் என்று. அதனால் நீங்கள் சொல்லுவது போல அடிமைத்தனமாக ரஸ்யா, சீனா சமூகம் இருந்தது என்பது வடிகட்டிய பொய். அப்படி அடிமைத்தனமாக இருந்த மக்கள் கலாச்சார புரட்சி செய்திருக்க வாய்ப்பேயில்லை. உண்மையில் காந்தியின் காங்கிரசுதான் அடிமைத்தனமாக இருந்தது என்பதை பக்த்சிங் குண்டு போட்டதை கண்டித்து இயற்றப்பட்ட காங்கிரஸ் தீர்மானம் பற்றிய ஒரு பெண் தலைவரின் கருத்து வெளிப்படுத்துகிறது. அவரது பெயர் ஞபகம் இல்லை. ஆனால் 1767 சொச்சம் உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் சபையில் வெறும் 86 வோட்டு வித்தியாசத்தில் பகத்சிங் எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது. அதிலும் பலர் தீர்மானம் இயற்றிய பிறகு, காந்தியின் மீதான பிரியத்திலேயே அப்படி ஆதரவாக வோட்டு போட்டதாக் கூறினார்கள். சொந்த புத்தியில்லாத அடிமைகள் இவர்களதான்.

நீங்கள் கூறும் அஹிம்சை சமூகமும் இப்படித்தான் இருக்கும். மக்களின் பண்பாட்டு மாற்றிறத்திற்க்கு எந்த திட்டமும் கிடையாது?

மக்களின் பொருளாதார வாழ்க்கையின் மாற்றத்திற்க்கு எந்த திட்டமும் கிடையாது?

மக்களின் பிரச்சனை என்ன என்பது குறித்தும் சரியான பார்வை கிடையாது?

ஆனால் தீர்வு மட்டும் இதுதான் இதுதான் என்று திரும்ப திரும்ப கூறுகிறேர்கள்.







////விஞ்ஞான கம்யுனிசம் என்றால் என்ன?//

ஒவ்வொருவரும் தனக்கு மகிழ்வளிக்கும், தனது திறமைக்கு உகந்த பணியை
பலன் எதிர்பாராது செய்ய வேண்டும். ஒவ்வொருவருக்கும் அவரது
தேவைப்படுபவை சக மனிதர்களால் முழு விருப்பத்துடன் கிடைக்கும். இதுதான்
எனக்குப் புரிந்த சமவுடைமை சமூகம்.
//

விஞ்ஞான கம்யுனிசம் இதுவல்ல. இது பொதுவுடைமை சமூகத்தின் இயல்பு
என்ற அளவில் சரிதான். ஆனால் இது கற்பனாவாத கம்யுனிசம், உங்களது
காந்திய, அஹிம்சா, பொதுவுடமை ஏற்ப்பு, மறுப்பு முரன்பாடுகளின் விதை
இந்த கற்பனாவாத புரிதலில் உள்ளது. ஏனேனில் எந்த சமூகத்திலும் பலன்
எதிர்பார்க்காமல் யாரும் எதுவும் செய்வதில்லை. ஆனால் அவர்கள்
எதிர்பார்க்கும் பலன் ஒட்டு மொத்த மனித குலத்திற்க்கான பலன் என்று விரிந்த பார்வை கம்யுனிச சமூகத்தின் பண்பு. அது இன்றைய பலன் என்பதின் மிக விரிந்த வடிவம். உயர்ந்த வடிவம். இந்த உணர்வின் தோற்றுவாய் எது(பொதுவுடைமை உணர்வின்)? இது எப்படி ஒரு சமூகமாக மீண்டும் பரிணமிக்கும் என்பது பற்றிய சமூக பரிணாமத்துவ ஆய்வுதான் விஞ்ஞான கம்யுனிசம்.




////என்ன விதமான சீர்திருத்தம்?//

வாழ்க்கை என்பது ஒரு ஆரம்பப் புள்ளியில் ஆரம்பித்து இலக்கை நோக்கிப்
பாயும் பேராறு போன்றது. அதன் வழியில் பிற மனிதர்களை வளப்படுத்தும்,
போற்றும் ஒவ்வொன்றும் முன்னோக்கிய சீர்திருத்தம், பிற மனிதர்களை
துன்புறுத்தும், சிறுமைப்படுத்தும் ஒவ்வொன்று பின்னடைவு.

இது ஒவ்வொரு தனிமனிதனிலிருந்து தொடங்க வேண்டும். ஒரு குழுவினர்
மற்றவர்களை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மிரட்டுவதால் வருவது
அன்று.

//பல ஆயிரம் வருடங்களாக அடிமைப்பட்டு கிடக்கும் உழைக்கும் மக்களுக்கு
விடுதலை கொடுக்கும் வழி என்ன தங்களது தீர்வில்?//

நான் என்னைச் சீர்திருத்திக் கொள்கிறேன். ஒவ்வொருவரும் சீர்திருந்தி
விட்டால், அடிமைப்படுத்துவரும் இருக்க முடியாது, அடிமைப்படுபவரும் இருக்க
மாட்டார். //


காந்தி விஞ்ஞானம் நமது வாழ்வை சீரழித்து விட்டது என்கிறார். இயற்கை
வாழ்வுக்கு போவோம் என்கிறார். இன்னொரு முறை ஒரு பேட்டியில் நான்
அரசாங்கம் அமைத்தால் முதலில் அமெரிக்காவிடமிருந்து இயந்திரங்களை
இறக்குமதி செய்வேன் என்கீறார். ஆக, அவரும் அரசு ஒன்றை அமைத்து ஆட்சி
செய்வதை தனது மனதில் கொண்டிருந்தார். இதே அரசு அமைக்கும் கருத்தை
56 வீரர்களுக்கான தண்டனையை நியாயப்படுத்தும் போதும் சொல்கிறார்.
அப்படி அவர் அமைக்கும் அரசு யாருக்கான சர்வாதிகாரம்? இதற்க்கான பதிலில்
அடங்கியுள்ளது வன்முறை குறித்த காந்தியத்தின் சுய முரன்பாடு.

அதாவது அரசு என்பது போலிசு, ராணுவம், நீதிமன்றம், அதிகார வர்க்கம்
அடங்கிய ஒரு இயந்திரம். ஒரு வேளை காந்தி அமைக்கப் போகும் அரசு இந்த
அம்சங்கள் இல்லாமல் இருக்குமா? அப்படி ஒரு அரசு எப்படி உருவாகும்? ஒரு
பக்கம் சுரண்டிக் கொழுக்கும் பன்றிகளும் அவர்களால் கடுமையாக
சுரண்டப்படும் மக்களும் இருக்க அவர்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில்
அஹிம்சையை போதித்து அவர்கள் அதை ஏற்றுக் கொண்டு.... சொத்துக்களை
பொதுவுடைமையாக்கி இது உண்மையில் சாத்தியம் என்று கருதினால் கூட மிக
மிக மிக மிக மிக மிக,..... நீண்ட காலம் எடுக்கும் ஒரு செயல் முறை
அதுவும் இன்றைக்கு உலக நாடுகள் பொருளாதார எல்லைகளால் �

said...

நல்ல உழைப்பு;

நல்ல கட்டுரை;

வாழ்த்துக்கள் பல வரலாற்று உண்மைகளையும் அறிய தந்தமைக்கு நன்றி..

said...

Part IV
--------

// மக்கள் தயாராக இல்லாத போது வெளியிலிருந்து ஆயுதம் தாங்கிய புரட்சியின் மூலம் கம்யூனிசத்தை திணிக்க முயன்றால் என்ன நடக்கும் என்பதை அழகாகப் படம் பிடித்துக் காட்டும் A True Story of A Q என்ற Lu Xun கதையைப் படித்துப் பாருங்கள்.//

வெளியிலிருந்து ஆயுதாம் தாங்கி என்று மீண்டும் கம்யுனிசம் பற்றி புரட்சி பற்றிய உங்களது படுபாதாள புரிதலை வெளிப்படுத்துகிறீர்கள்.

வெளியிலிருந்து ஆயுதம் தாங்கி எனில் நாங்கள் என்ன சீனா, சிரிலங்காவிலிருந்து ஆயுதம் தாங்கிய குழுக்களை வந்து விடுதலை வாங்கித்தா என்று கூப்பிடுகிறோமா?

நான் சொல்லாத விசயத்துக்கு எதுக்கு ஆதாரம் கொடுத்து வீண் வாதம் செய்கிறீர்கள்.

எனது பல கட்டுரைகளில் தெளிவாக சொல்கீறேன். மக்களே அணி திரண்டு போராடுங்கள் என்று....

மக்கள்தான் போராட வேண்டும். தான் இருக்கும் ஒவ்வொரு இடத்திலும் பிற்போக்கு தனத்தை எதிர்த்து அணி திரண்டு போராட வேண்டும். அந்த பிற்போக்கு தனத்தில் காந்தி கோஸ்டிகளும் உள்ளனர் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

எங்களது ஆயுதம் தத்துவம் மட்டுமே... அதை தவிர்த்து வேறு ஒன்றும் கிடையாது.





//ஆயுதப் போராட்டத்தில் சேரும் ஒவ்வொருவரும் கம்யூனிசத்துக்காக சேராமல், வேறு நோக்கங்களுக்காக (கிராமத்தில் தனது எதிரிக்கு பாடம் கற்பிக்க வேண்டும், வீட்டில் மரியாதை கிடைக்க வேண்டும், பணம் சம்பாதிக்கவேண்டும்) சேர்ந்தால், போராட்டம் முடிந்ததும் தமக்கு வரும் பொறுப்புகளை சரி வர கடைபிடிக்காமல் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்த ஆரம்பித்து விடுவார்கள். சீன, ரஷ்ய பரிசோதனைகள் சொல்லும் பாடம் அதுதான். ///

சீனா, ரஸ்ய புரட்சியில் இந்த அம்சத்தில் நீங்கள் படித்த பாடத்தை கொடுத்தால் எனக்கு எதிர் வாதம் செய்ய வசதியாக் இருக்கும்.

மாறாக காந்தியின் அஹிம்சை தத்துவத்துக்கு ஆட்டுப் பாலும், வேர்க்கடலையும் கொடுத்த தரகு வர்க்க பன்றி பிர்லாவும், அவருக்கு விருதுகள் கொடுத்து கௌரவித்த பிரிட்டிஸ் அரசும் மறைமுகாமாக் கூறுவது என்னவெனில், அஹிம்சை தத்துவத்தை ஆளும் வர்க்கத்தின் ஆடம்பரங்களை அனுபவிப்பவர்தான் வந்து சேருவார்கள் என்று ஆதாரப் பூர்வமாக கூறியுள்ளேன். ஆக, காந்தியின் போலி அஹிம்சையின்(உண்மையான அஹிம்சை கிடையாது) வெற்றிக்கு நடைமுறை எடுத்துக்காட்டுகள் இல்லை.

சீன, ரஸ்ய பற்றியதோ புரளிகளாக அடிப்படையற்ற வாதமாக உள்ளது.


//நீங்கள் 'அரசாங்கம் எப்படி உதிர வேண்டும், சமதர்ம சமூகம் எப்படி செயல்பட வேண்டும்' என்று சொல்வதை நான் முதலில் கற்றுக் கொண்டது காந்தியின் எழுத்துக்களிலிருந்துதான் என்றால் நம்புவீர்களா? இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த சமவுடைமைவாதி காந்தி என்று நம்புகிறேன். முடிந்தால் இன்னும் படித்துப் பார்க்கும்படி வேண்டுகிறேன். //

இல்லை, மா. சிவக்குமார். ஏற்றத்தாழ்வான ஒரு சமூகத்தில் சமவுடமைவாதி என்பவன் அடக்குமுறைக்காட்ப்பட்ட சமூக கூட்டத்தின் குரலாக ஒலிக்க வேண்டும். காந்தி அப்படி ஒலிக்கவில்லை என்பதை பல முறை சொல்லியாயிற்று. ஆக, அவரை சமவுடைமைவாதி என்று கூறி சமவுடைமைவாதிகளை கேவலப்படுத்தாதீர்கள்.

அவரை உங்களவுக்கு ஆழமாக படித்தேனே தெரியவில்லை. ஆனால் படித்த அளவில் கோர்வைப் படுத்தி ஒரு புரிதலுக்கு வந்திருக்கிறேன். அதை இங்கு வைத்திருக்கிறேன். அதை உடைக்க ஏதேனும் முயற்சி செய்யுங்களேன்.

அன்புடன்,
அசுரன்

said...

அசுரன்,

//நீங்கள் தான் ஆரம்பத்திலிருந்து எனது முகவரியை வெளிப்படுத்துவதை முதல்
கோரிக்கையாக கொண்டு விவாதம் செய்து என்னை எரிச்சலூட்டியத//

உங்கள் விளக்கம் சரிதான்.

//ஆனால் காந்தி ஒரு வன்முறையாளர் என்பதை ஆதரங்களுடன் சொல்லியுள்ளேன். //

இதுவரை அப்படி எனக்கு நம்பும்படியாக வாதம் வரவில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பாக இருக்கும் வன்முறை காந்திக்கும் கண்டிப்பாக இருந்திருக்கும். வன்முறை பற்றி மேலே ம்யூஸுக்கு சொன்னது ஏற்றுக் கொள்ளும்படியாக இருக்கிறதா?

//ஒரு தனிமனிதரான காந்தி ப்ளாக் மெயில் செய்து சாதிப்பதை அஹிம்சை என்று எப்படி சொல்கிறார்.//

எப்படி பிளாக்மெயில் செய்தார்? பிறரது தலையில் துப்பாக்கி பிடித்தா? இல்லை என்றால் அவரது செயல்களால் ஏன் பிறர் கட்டாயப்படுத்தப்பட வேண்டிடியிருந்தது?

//மக்களின் பொருளாதார வாழ்க்கையின் மாற்றத்திற்க்கு எந்த திட்டமும் கிடையாது?//

எப்படிச் சொல்கிறீர்கள்? காந்தீய பொருளாதார திட்டங்களைப் பற்றி படித்திருப்பீர்கள். அதில் பல குறைகள் இருக்கலாம். ஆனால் திட்டமே கிடையாது என்று எப்படிச் சொல்ல முடியும்?

/இது எப்படி ஒரு சமூகமாக மீண்டும் பரிணமிக்கும் என்பது பற்றிய சமூக பரிணாமத்துவ ஆய்வுதான் விஞ்ஞான கம்யுனிசம்.//

அந்த ஆய்வைச் செய்ய காந்திக்கும் உரிமை உண்டு. சிவகுமாருக்கும் உரிமை உண்டு. அது ஒரு தரப்பினருக்கு மட்டுமான உரிமை கிடையாது. அதைத்தான் காந்தி செய்ததாக உணர்கிறேன். கீதை, இந்துஸ்தானி, சாதிமுறை, இந்து மத நம்பிக்கைகள் என்று காந்தியின் பார்வைகளில் எனக்குக் கேள்விகள் இருந்தாலும், தனிமனித சீர்திருத்தம் மூலம் சமூகத்தை சீர்திருத்திக் காட்டிய நடைமுறை தத்துவம் காந்தீயம்.

//ஒரு வேளை காந்தி அமைக்கப் போகும் அரசு இந்த அம்சங்கள் இல்லாமல் இருக்குமா? அப்படி ஒரு அரசு எப்படி உருவாகும்?//

ஏற்கனவே சொன்னது போல காந்தி அரசு அமைத்திருந்தால் அது உண்மையான சமவுடைமை சமூக அரசாக இருந்திருக்கும். வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்ற பாணி அரசில் அவருக்கு நம்பிக்கை கிடையாது. தில்லியிலிருந்து நாகர்கோவிலை ஆளும் கொடுங்கோன்மைக்கும் அவருக்கு ஒப்புதல் கிடையாது. இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் உயிரோடு இருந்திருந்தால் இந்திய மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்திருப்பார்.

சமூக, அரசமைப்பு பற்றிய காந்தியின் எழுத்துக்களைப் படித்ததில் வந்த புரிதல் மேலே சொன்னது

//இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் காந்தியின் வருகைக்கு முன்பும் அஹிம்சையைத்தான் கடைபிடித்தார்கள்.//

காந்தியின் வாழ்க்கை அகிம்சை என்ற செயல்படா தன்மை சார்ந்தது அல்ல. எதிரிக்கு இன்னொரு கன்னம் காட்டும் கையாலாகத்தனம் கிடையாது. முனைப்பெடுத்து மனஉறுதியின் நேர்மையின் பேரில் எதிரியின் வன்முறையை செயலற்றுப் போகச் செய்யும் 'சத்தியாக்கிரகம்' என்று அழைக்கப்படும் முறைதான் காந்தீயம்.

கொடுமைகளைப் பார்த்து சகித்துக் கொண்டு விதியே என்று இருப்பது காந்தியின் வாழ்வில் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு அடியிலும், மிகச் சிறிய விஷயங்களிலும் தன்னால் முடிந்த மாறுதல்களை கொண்டு வரவேண்டும் என்று முனைப்பான வாழ்க்கை அவருடையது.

//மை சமுதாயம் எல்லா வரலாற்றுக் கட்டங்களுக்கும் ஏற்ற ஒரு சமூக அமைப்பு அல்ல.//

இதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இருபத்தியொன்றாம் நூற்றாண்டிலும் பொதுவுடைமை அடிப்படையில் வாழ முடியும். பதினெட்டிலும் முடிந்திருக்கும். இருபத்தியிரண்டிலும் முடியும்.

காலம் வந்தால் கனியும் என்று கையைப் பிசைந்து கொண்டிருக்க அவசியம் இல்லாமல் இன்றே ஆரம்பித்தால் நம்மளவில் பொதுவுடைமை சமூகம் பார்க்கலாம். இன்று முதல் நீங்கள் பொதுவுடைமை வாழ்க்கை வாழ்வதை யார் தடுத்து நிறுத்தி விட முடியும்? கொஞ்சம் யோசித்து விபரமாகச் சொல்லுங்கள்.

//காந்தி கெட்டவர் என்ற எமது கருது கோளுக்கு எந்த ஒரு வாதமும் தங்களால் வைக்கப்படவில்லை.//

காந்தி நல்லவரா, கெட்டவரா, அசுரன் நல்லவரா கெட்டவரா என்ற விடைகள் எனக்குத் தேவையில்லை. காந்தியின் வாழ்க்கை, கருத்துக்கள், அசுரனின் கருத்துக்கள் என்னை எப்படி சீர்திருத்த முடியும் என்பது மட்டும்தான் எனக்கு ஆர்வம் உடையது.

//மக்களே அணி திரண்டு போராடுங்கள் என்று.... //

இந்த மக்களில் நிலப்பிரபுக்களும் அடங்குவார்களா? இதற்குத்தான் Lu Xunன் A True Store of Ah Q என்ற கதையைப் படிக்கக் கேட்டுக் கொண்டேன். புரட்சிக்குப் பிறகு எப்படி அரசியல் நடக்கிறது என்பதை Liu Zhenyun என்பவரின் Corridors of Power என்ற நூலைப் படியுங்கள். (இந்த நூலுக்கு இணையப் பதிப்பு இல்லை. அச்சில் வாங்க வேண்டியிருக்கும். என்னுடைய பிரதி இப்போது கைவிட்டுப் போயிருக்கிறது. )

//காந்தி அப்படி ஒலிக்கவில்லை என்பதை பல முறை சொல்லியாயிற்று.//

அப்படி ஒலித்தார் என்று நான் நம்புகிறேன். அதுதான் வரலாற்று உண்மையும் என்பதை நடுநிலையிலான பல வரலாற்றாளர்கள் பதிந்துள்ளார்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

said...

//ஆக, அவரை சமவுடைமைவாதி என்று கூறி சமவுடைமைவாதிகளை கேவலப்படுத்தாதீர்கள்//

அசுரன் அண்ணா,

நம்ம ஊர்லே யார் மிகவும் போற்றப்படுகிற சமவுடமைவாதி என்று அடையாளம் காட்டினால் நாங்க அவர் வகுத்த பாதையிலெ நடக்கிறதுக்கு கொஞ்சம் உபயோகமா இருக்கும்.

பாலா

இது மெய்யாகவே உங்கள் கருத்தை அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தில் எழுந்த வினா.

said...

Part V
--------

//சமூகம் என்பது தனிமனிதர்களின் தொகுப்புதானே. தனிமனிதர்கள் சீர்திருந்தினால் சமூகம் ஏன் திருந்தாது? பெரும்பான்மையினர் மாறுவது கூட ஒவ்வொருவராக அல்லது அதிகபட்சம் ஒவ்வொரு சிறு குழுவாகத்தான் மனம் மாறுமே ஒழிய, ஒட்டு மொத்தமாக ஒரே இரவில் மந்திரம் போட்டது போல சிந்தனைகள் மாறுவது சாத்தியமா?
//


ஒரே இரவில் மந்திரம் போட்டது போல மாறும் என்று நாங்கள் கூறவில்லை. சமூக பரிணாம வளர்ச்சி பற்றி இந்த விவாதத்தின் ஆரம்பம் முதல் குறிப்பிட்டு வருகிறேன். பிறகு எப்படி ஒரே இரவில் மாறும் என்று கம்யுனிஸ்டுகள் கூறுவார்கள்.


சமூகம் என்பது வெறும் தனி மனிதர்களின் தொகுப்பு மட்டும் இல்லை. ஏனெனில் தனி மனிதர்கள் புரதான பொதுவுடைமை சமுதாயத்திலும் இருந்தார்கள், நிலபிரபுத்துவ ச்முதாயத்திலும் இருந்தார்கள், இன்றைய நவீன ஏகாதிபத்திய சமுகத்திலும் இருக்கிறார்கள்.

ஆனால் இந்த சமூகங்கள் எல்லாம் ஒரே சமூகங்கள் கிடையாது. எனில், சமூகம் என்பது உறுதியாக தனிமனிதர்களின் தொகுப்பு மட்டும் கிடையாது என்ற முடிவு கிடைக்கிறது. அப்படியெனில் மனித சமூகம் என்பது என்ன வென்பதை மா. சிவகுமார் விளக்க கடமைப் பட்டுள்ளார்.


//நம்முடைய சமூகப் பிரச்சனைகள் எல்லாமே தனிமனித நேர்மைக்குறைவினால் வருபவைதான். எந்த சமூகப் பிரச்சனையையும் எடுத்துக் கொண்டு அதன் பின்னணி என்ன என்று நினைத்துப் பாருங்கள்.////

ஏன்? மனித குலத்தின் வரலாற்றுக் கட்டம் முழுமைக்கும் ஒரே விதமான பிரச்சனைகள் இருந்ததில்லை?

1800 க்கு முன்பு வரை சாதி ஒரு பிரச்சனை கிடையாது, இப்பொழுது அது ஒரு பிரச்சனை. 1900 முன்பு வரை சுற்று சூழல் மாசுபாடு ஒரு பிரச்சனை கிடையாது ஆனால் இப்பொழுது பிரச்சனை.

பாசிசம் 1800 முன்பு கிடையாது. ஜன நாயகம் ஒரு 600 வருடமாகவே கிடையாது. பிறகு மீண்டும் முதலாளித்துவத்தில் வந்து சேர்ந்தது.

இவையெல்லாம் எந்த தனிமனிதர் சிந்தித்து வந்தது?

இவையெல்லாம் உலகம் முழுவதும் ஒரேமாதிரி நடக்கிறதே எப்படி?

அதாவது அடிமை சமுதாயம், நிலபிரபுத்துவம், அரசன், படை, பெண்ணடிமைத்தனம், வர்க்க வேறுபாடு, கடவுள், மதம், பூசாரி, ஆடை, தனியுடைமை, குடும்பம் etc.

இவையெல்லாம் உலகின் அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரி எப்படி உருவானது?

இவ்விடத்தில் ஏற்கனவே கேட்ட கேள்வியை மீண்டும் வைக்கிறேன்,

சிந்தனையை தீர்மானிப்பது எது?

காந்தியா? மா. சிவகுமாரா? கார்ல் மார்க்ஸா? அல்லது வேறு எதுவுமா?

அப்படி சிந்திக்க தூண்டும் காரணிதான் பிரச்சனைகளின் மூலதாரமானதாகவும் இருக்கும். அது உறுதியாக தனிமனிதன் இல்லை. ஒரு தனிமனிதன் தவறு செய்வதற்க்கான காரணி இந்த சமூகத்தில் இருக்கிறது எனில் அந்த காரணியை நாம் அடையாளம் காணாமல் எந்த தனிமனிதரையும் திருத்த முடியாது. சில பலிகாடாக்களை வேண்டுமானால் உருவாக்கலாம்.

அதாவது எந்த ஒரு தனிமனிதனும் ஒரு சமூகத்தின் பிரச்சனைக்கு காரணமல்ல என்பதுதான் இவையெல்லாம் காட்டும் விசயம்.


நேர்மை என்றால் என்ன?

செத்துப் போன சங்காராச்சாரி தனக்கு நேர்மையாகத்தான் இருந்தார். ஆனால் பொதுவில் அவர் மனித குல விரோதி என்பதுதான் உண்மையாக உள்ளது.

ஹிட்லர் கூட தான் கொண்ட கொள்கைக்கு நேர்மையாக இருந்தான். அவனும் தனிமனிதனாக நல்லவன் தான்.

காந்திகூட நேர்மையானவராகத்தான் - அவருக்கும், காந்தியின் ஆதரவாளர்களுக்கும் தோன்றுகிறார் எங்களுக்கோ அவர் மக்களை காட்டிக் கொடுத்தவராக தோன்றுகிறார்.

இப்படி நேர்மையான பலபேர் அவர்களிடையே ஒற்றுமை என்றூ சொல்லிக் கொள்வதற்க்கு சிலவிசயங்களை தவிர்த்து ஒன்றுமேயில்லாமல் இருக்கிறார்கள். ஆக நேர்மை என்ற சொல்லாடல் எதையோ சார்ந்துதான் இருக்கிறது. அதைப் பொறுத்துத்தான் அதன் அர்த்தம் மாறுகிறது. அந்த 'எதோ ஒன்று' எது?

மீண்டும் சொல்கிறேன். சமூகத்தின் இயக்கத்துடன் ஒவ்வொரு விசயமும் பின்னி பிணைந்து உள்ளது. நீங்களோ அதை புரிந்து கொள்ள எந்த முயற்சியும் எடுக்காமல் பொதுவான் வார்த்தைகளை வைத்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.


//வன்முறையை எல்லா வடிவங்களிலும் அழித்து விட முடியாது. பண்பட்ட, நாகரீக மனிதன் தனது அடிப்படை உணர்வுகளை அடக்கிச் சரியாகச் செலுத்துவது போல, வன்முறையைத் தவிர்ப்பது நாகரீகத்தின் அடையாளமாகும்.

சிறுகுழந்தையாக தவழ்வது, சாப்பிடும்போது உணவை சிதற விடுவது இயற்கை. வளர்ந்த பின்பு முற்றிலும் ஒழிக்க முடியாவிட்டாலும், எல்லோருமே தவழ்வதையும், உணவு சிதறுவதையும் தவிர்ப்பதோடு அப்படி தவறி நடந்து விட்டால் உடனேயே வருந்தி அதைத் திருத்திக் கொள்கிறோம். அது போலத்தான் வன்முறையும் என்பது எனது கருத்து.
//

வன்முறையைத் தவிர்ப்பது நாகரீகத்தின் அடையாளமாகும். ஆமாம் உண்மைதான்.

இங்கு மீண்டும் ஒரு பழைய கேள்வி:

வன்மூறை இந்த சமூகத்தின் இயல்பாய் இருக்கும் பொழுது நாம் என்ன செய்யலாம்? வன்முறை தவிர்க்க இயலாமல் இருக்கும் பொழுது (இதை பல முறை கூறிவிட்டேன் - குறைந்தது வன்முறை தவிர்க்க கூடியது என்று கூறி அதற்க்கான காந்திய வழி எடுத்துக்காட்டு கூறுங்கள்) நாம் மட்டும் கற்பனையாக, நான் ரொம்ப நாகரிகமானவன் அதனால் வன்முறையை தவிர்க்கிறேன் என்று வினையாற்றுவது அந்த ஒரு தனிமனிதனுக்கு ஆளும் வர்க்கம் பல நல்ல பட்டங்களைக் கொடுப்பதற்க்கு உதவி செய்யும், எந்த வகையிலும் மனித குலத்திற்க்கு உதவி செய்யாது.



சரி வன்முறை என்றால் என்ன? மா. சிவகுமாருக்கு ரத்தம். எங்களைப் போன்ற கம்யுனிஸ்டுகளுக்கு இயலாதவர்களின் மீது காட்டப்படும் அதிகார துஸ்பிரயோகம் அதாவது arogance of the previllaged section of the soceity against the opperessed people. இந்த அம்சத்தில் பார்த்தால் காந்திதான் உலகின் ஆக கேவலமான் வன்முறைவாதி.

ஏனில் மா. சிவகுமாரின் வாதப்படி பார்த்தால் கூட இந்த வன்முறையும் அதற்க்கு இணையான் எதிர்வினையை கொண்டுள்ளது.
So his ahimsha also indirectly giving birth to violence.

வன்முறை என்பது என்னவெனில்(எமது பார்வையில்), விடுதலை கிடைக்கும் என்று நம்பியிருந்த மக்களை ஏமாற்றி வெள்ளையனே வெளியெறு இயக்கத்தை காட்டிக் கொடுத்த காந்தியின் நடவடிக்கையே ஆகும்.

வன்முறை என்பது என்னெவெனில், விடுதலையை மீட்டெடுத்த தெலுங்கானா புரட்சிக்காரர்களை நிலபிரபுக்களுக்கு வரி கொடுங்கள் என்று கட்டளையிட்ட காந்தி ஆவார். அதாவது பிரிட்டிஸ்க்காரன் வன்முறை செலுத்தினால் அமைதியாக இருக்கும் காந்தி, ஏழை விவசாயி ஆட்சிக்கு வந்த் வன்முறை செலுத்தினால் பாய்ந்து வந்த் கண்டிப்பார். ஆக காந்தியின் வன்முறை(அதாவது அஹிம்சை) இதுதான்.

வன்முறை என்ப்து என்னவெனில் அம்பேத்காரை மிரட்டி ஒப்பந்தங்களில் கையெழுத்திட வைத்த காந்தியின் நடவடிக்கையே ஆகும்.

வன்முறை என்பது என்னவெனில், புரட்சிக்காரர்களின் கையால் இந்த சமூகம் விடுதலை பெற எந்த காலத்திலும் விடமாட்டேன் என்று ஆளும் வர்க்கத்தின் குரலாக ஒலித்த காந்தியின் குரலாகும்.

இவையெல்லாம் சிறுபிள்ளை சோற்றை தவறவிட்ட சம்பவங்களல்ல. ஒரு பெரிய பிள்ளை தன்னெழுச்சியாக அந்த சமூகத்தின் ஆளும் வர்க்க தத்துவத்தின் பிரதி பிம்பமாக நின்றதன் சாட்சிகள்.

உலகில் எல்லாமே எதிர்மறை கூறுகளால் ஆனது என்று கூறிய மா. சிவகுமார் அவர்களே, வன்முறை என்பதின் இரு எதிர்மறை உட்கூறுகள் எவை?

அசுரன்

said...

மூயுஸ்,

தங்களது புரிந்துணர்வுக்கு மிக்க நன்றி, இப்ப கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கு.


*********

லிவிங் ஸ்மைல்,

தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றீ,

அசுரன்

**********

அப்பாவித்தமிழன்,

வருகைக்கு நன்றி,
அசுரன்

said...

//நம்ம ஊர்லே யார் மிகவும் போற்றப்படுகிற சமவுடமைவாதி என்று அடையாளம் காட்டினால் நாங்க அவர் வகுத்த பாதையிலெ நடக்கிறதுக்கு கொஞ்சம் உபயோகமா இருக்கும்.

பாலா
//


நக்கலுக்கு கேட்டிருந்தாலும் தப்பில்லை...

கம்யுனிஸ்டுகள்தான் சமவுடைமைவாதி.. ஏன் ஒரு தனிமனிதரை முன்மாதிரியாகக் கொண்டு உங்கள் வாழ்வை அமைக்க விரும்புகிறீர்கள். உலகில் பல தனிமனிதர்கள் இந்த சமூகத்தின் குரலாய் ஒலித்துள்ளனர் அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை, கண்டுபிடிப்புகளை எடுத்துக் கொண்டு அதை பகுத்தறிந்து அறிவுப் பூர்வமாக உள்வாங்கினால், எந்த தனிமனித பிரமையும் இன்றி நீங்கள் ஒரு நல்ல வாழ்வை தேர்ந்தெடுக்க முடியும்.

அசுரன்

said...

//அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை, கண்டுபிடிப்புகளை எடுத்துக் கொண்டு அதை பகுத்தறிந்து அறிவுப் பூர்வமாக உள்வாங்கினால், எந்த தனிமனித பிரமையும் இன்றி நீங்கள் ஒரு நல்ல வாழ்வை தேர்ந்தெடுக்க முடியும். //

+1

said...

//கொடுமைகளைப் பார்த்து சகித்துக் கொண்டு விதியே என்று இருப்பது காந்தியின் வாழ்வில் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு அடியிலும், மிகச் சிறிய விஷயங்களிலும் தன்னால் முடிந்த மாறுதல்களை கொண்டு வரவேண்டும் என்று முனைப்பான வாழ்க்கை அவருடையது. //

மா.சிவகுமார் அவர்களே
அடி வாங்குவதில் எப்படி மாறுதல்களை கொண்டு வர முடியும்?

விளக்கவும்.....

said...

//வன்மூறை இந்த சமூகத்தின் இயல்பாய் இருக்கும் பொழுது நாம் என்ன செய்யலாம்? வன்முறை தவிர்க்க இயலாமல் இருக்கும் பொழுது (இதை பல முறை கூறிவிட்டேன் - குறைந்தது வன்முறை தவிர்க்க கூடியது என்று கூறி அதற்க்கான காந்திய வழி எடுத்துக்காட்டு கூறுங்கள்) நாம் மட்டும் கற்பனையாக, நான் ரொம்ப நாகரிகமானவன் அதனால் வன்முறையை தவிர்க்கிறேன் என்று வினையாற்றுவது அந்த ஒரு தனிமனிதனுக்கு ஆளும் வர்க்கம் பல நல்ல பட்டங்களைக் கொடுப்பதற்க்கு உதவி செய்யும், எந்த வகையிலும் மனித குலத்திற்க்கு உதவி செய்யாது.



சரி வன்முறை என்றால் என்ன? மா. சிவகுமாருக்கு ரத்தம். எங்களைப் போன்ற கம்யுனிஸ்டுகளுக்கு இயலாதவர்களின் மீது காட்டப்படும் அதிகார துஸ்பிரயோகம் அதாவது arogance of the previllaged section of the soceity against the opperessed people. இந்த அம்சத்தில் பார்த்தால் காந்திதான் உலகின் ஆக கேவலமான் வன்முறைவாதி.

ஏனில் மா. சிவகுமாரின் வாதப்படி பார்த்தால் கூட இந்த வன்முறையும் அதற்க்கு இணையான் எதிர்வினையை கொண்டுள்ளது.
So his ahimsha also indirectly giving birth to violence.

வன்முறை என்பது என்னவெனில்(எமது பார்வையில்), விடுதலை கிடைக்கும் என்று நம்பியிருந்த மக்களை ஏமாற்றி வெள்ளையனே வெளியெறு இயக்கத்தை காட்டிக் கொடுத்த காந்தியின் நடவடிக்கையே ஆகும்.

வன்முறை என்பது என்னெவெனில், விடுதலையை மீட்டெடுத்த தெலுங்கானா புரட்சிக்காரர்களை நிலபிரபுக்களுக்கு வரி கொடுங்கள் என்று கட்டளையிட்ட காந்தி ஆவார். அதாவது பிரிட்டிஸ்க்காரன் வன்முறை செலுத்தினால் அமைதியாக இருக்கும் காந்தி, ஏழை விவசாயி ஆட்சிக்கு வந்த் வன்முறை செலுத்தினால் பாய்ந்து வந்த் கண்டிப்பார். ஆக காந்தியின் வன்முறை(அதாவது அஹிம்சை) இதுதான்.

வன்முறை என்ப்து என்னவெனில் அம்பேத்காரை மிரட்டி ஒப்பந்தங்களில் கையெழுத்திட வைத்த காந்தியின் நடவடிக்கையே ஆகும்.

வன்முறை என்பது என்னவெனில், புரட்சிக்காரர்களின் கையால் இந்த சமூகம் விடுதலை பெற எந்த காலத்திலும் விடமாட்டேன் என்று ஆளும் வர்க்கத்தின் குரலாக ஒலித்த காந்தியின் குரலாகும்.

இவையெல்லாம் சிறுபிள்ளை சோற்றை தவறவிட்ட சம்பவங்களல்ல. ஒரு பெரிய பிள்ளை தன்னெழுச்சியாக அந்த சமூகத்தின் ஆளும் வர்க்க தத்துவத்தின் பிரதி பிம்பமாக நின்றதன் சாட்சிகள்.

உலகில் எல்லாமே எதிர்மறை கூறுகளால் ஆனது என்று கூறிய மா. சிவகுமார் அவர்களே, வன்முறை என்பதின் இரு எதிர்மறை உட்கூறுகள் எவை?
//

அசுரன்...
மிகச் சிறப்பான பதிவு

said...

Asuran,
The view-point of urs is fully based on Communism but I am seeing Gandhi as a very normal person. For a normal person, it is enough for him to know that, "Gandhi is a person who followed Truth & Honesty". That is the point, now every normal human-being knows and being inspired by Gandhi bcoz of it. Even If it is true that Gandhi supported Capitalists, it is not neccessary to be exposed. Bcoz, Gandhi is known for his Ahimsa, honesty & truth. It is not that, As Gandhi was against Communist every one will against communist. Every one has their own views of Communism & Capitalism.

Finally, My point is, being a normal Indian, I wish India to be a well-developed country. For that, every Indian has to be inspired by Gandhi's ideas on Honesty & Truth.

I know, u won't accept the above point, bcoz being a Communist u won't be a Nationalist.

Still, I expect alot more post of this kind from you.

said...

தீரமிக்க கார்வாலிப்படைவீரர்கள் மக்களைச் சுட மறுத்த 'அஹிம்சை'ச் செயலுக்காக கார்வாலிப் படையினரை காந்தி கண்டித்தார்:-

"சுடுமாறு ஆணையிடப்பட்ட படைவீரன் அதற்குக் கீழ்ப்படிந்து நடக்க மறுத்தால், அவன் தான் செய்த பிரமாணத்துக்கு எதிராக நடப்பதோடு, கீழ்ப்பணிய மறுத்த பெரும் குற்றமும் செய்தவனாவான். அதிகாரிகளையும், வீரர்களையும் கீழ்ப்பணிய மறுக்குமாறு நான் ஒருபோதும் கூறமாட்டேன். ஏனெனில், நான் அதிகாரத்தில் இருக்கையில் அதே அதிகாரிகளையும் படை வீரர்களையும் பயன்படுத்திக் கொள்ள நேரலாம். கீழ்ப்படிந்து நடக்க மறுக்குமாறு நான் அவர்களுக்குக் கற்பித்தால், அதே மாதிரி நான் அதிகாரத்தில் இருக்கும்போதும் செய்யக்கூடும் என அஞ்சுகிறேன்."

(பிரெஞ்சுப் பத்திரிக்கையாளர் சார்லஸ் பெட்ராஷ், கார்வாலிப் படைவீரர்களைப் பற்றிக் கேட்ட கேள்விக்கு காந்தியின் பதி: மாண்ட்,பிப்ரவரி 20, 1932)

said...

ஹரி,

The view-point of urs is fully based on Communism but I am seeing Gandhi as a very normal person. For a normal person, it is enough for him to know that, "Gandhi is a person who followed Truth & Honesty". That is the point, now every normal human-being knows and being inspired by Gandhi bcoz of it.

காந்தியைப் பற்றிய இந்த பதிவில், அவரது சுய முரன்பாடுகளுக்கான எடுத்துக்காட்டுகளை கொடுத்துள்ளோம்.

அந்த சுய முரன்பாடுகளின் காரணம் என்ன என்பதை மட்டுமே கம்யுனிச சமூக விஞ்ஞான முறை கொண்டு ஆய்வு செய்துள்ளேனே தவிர்த்து. காந்தி தான் கூறிய விசயங்களுக்கே முரன்பட்டு பல முறை நடந்து கொண்டார் என்பதை அவரது எழுத்துக்கள், அம்பேத்கர், பெரியார், எழுத்துக்கள், பிரிட்டிஸாரின் ஆவணங்கள், வ.உ.சியின் அனுபவங்கள் இவற்றின் அடிப்படையில் கொடுத்துள்ளோம்.

இந்த ஆதாரங்களை கொண்டு அவர் ஒரு முரன்பட்ட மனிதர் என்பதையும், அவர் கூறிய தத்துவம் என்பது முற்றிலும் போலியான ஒன்று என்ற முடிவுக்கும் வருவதற்க்கு ஒருவர் கம்யுனிஸ்டாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

பாரபட்சமின்றி விசயங்களை பரிசீலிக்கும் மனப் பக்குவம் இருந்தால் போதும்

ஹரி, தங்களது உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. காந்தியின், பாரதியின் மிகப் பெரிய ரசிகனாக இருந்து வந்தவந்தான் நானும். ஆனால் அவர்கள் பற்றிய முரன்பட்ட தகவல்களை கண்ட பொழுது என்னை கூட்டுக்குள் வைத்து பூட்டிக் கொள்ளாமல் அவற்றின் நம்பகத்தன்மையை ஆய்ந்து அதிலிருந்து எனது புரிதலை வளர்த்துக் கொண்டேன்.

இங்கு நாங்கள் கொடுத்துள்ள தகவல்களை(வன்முறையை அப்பட்டமாக ஆதரித்தது, அஹிம்சை என்ற பெயரில் மற்றவர்களை தார்மீக ரீதியாக மிரட்டி பணிய வைப்பது, கட்சிக்குள்ளே ஜன நாயக மரபுகளை காலில் தூக்கிப் போட்டு மிதித்தது, தான் அரசு அமைத்தால் அரசு பயங்கரவாதத்தை நடத்தும் வாய்ப்பு பற்றி சுசசமாக சொன்னது, தன்னெழுச்சியான உயர் சாதி-இந்துத்துவ ஆதரவு etc). இவற்றுக்கும் கம்யுனிசத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

எனது ஆய்வை விட்டு விடுங்கள். தகவல்களை நீங்களே ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வாருங்கள். அதை எங்களுக்கும் தெரியப்படுத்தி எங்களது தவறான புரிதலை செம்மைப்படுத்துங்கள்.



Even If it is true that Gandhi supported Capitalists, it is not neccessary to be exposed. Bcoz, Gandhi is known for his Ahimsa, honesty & truth. It is not that, As Gandhi was against Communist every one will against communist. Every one has their own views of Communism & Capitalism.

அவர் முதலாளீத்துவ ஆதரவாளர் கிடையாது என்பதை மீண்டும் குறிப்பிடுகிறேன்.
அவர் உண்மையில் முதலாளித்துவ எதிர்ப்பாளர். காந்தியின் அஹிம்சையின் போலித்தனம், அவர் truth என்பது அவரது தன்னேழுச்சியான செய்லபாடுகளால எப்படி திரிந்து போனது என்பனவற்றை ஆதரங்களுடன் கொடுத்துள்ளோம்.

நீங்கள் ரொம்ப நாள் ஒரு விசயத்தை நம்புவாதாலேயே அதன் பொய்மையை நாங்கள் களைக்ககூடாது என்பது சரி கிடையாது. ஏனெனில் இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் விடுதலையை கெடுத்ததில் காந்தியின் பாத்திரம் மிக முக்கியமாக உள்ள பொழுது , அந்த மயக்கத்தை தெளிவிக்க வேண்டிய கடமை முதன்மையாகிறது.


It is not that, As Gandhi was against Communist every one will against communist. Every one has their own views of Communism & Capitalism.

காந்தி கம்யுனிசத்துக்கு எதிர் என்பதால் எல்லாரும் எதிர் என்பது மாதிரி புரிதல் எனக்கும் கிடையாது. மேலும், ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கே உரிய கம்யுனிச, முதலாளித்துவ பார்வை உண்டு என்பது தவறு. ஒவ்வொருவருக்கும் அவனது வர்க்கம் சார்ந்துதான் இந்த பார்வைகள் உருவாகிறது. மேலும் இந்தியாவை பொறுத்தவரை ஒரு கம்யுனிஸ்டு, முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சிக்குத்தான் போராட வேண்டியுள்ளது, ஆகவே இங்கு கம்யுனிஸ்டுகளின் எதிரி முதலாளி கிடையாது.

இன்னும் சொன்னால் தேசிய முதலாளி - கம்யுனிஸ்டுகளின் நேச அணியாக இருக்கும் வாய்ப்புதான் இந்தியாவில் அதிகம். எனவே கம்யுனிஸம் என்றால் முதலாளித்துவ எதிர்ப்பு பிரதானம் என்ற புரிதல் தவறு.

கம்யுனிஸ்டு பற்றிய வெகு சுலபமான வரையறை - அவர்கள் என்றைக்குமே அடக்கப்படுபவர்களின் குரலாக ஒலிப்பர். இங்கு, இந்தியாவில் தேசிய முதலாளியும் அடக்கப்படுபவன்தான்.



Finally, My point is, being a normal Indian, I wish India to be a well-developed country. For that, every Indian has to be inspired by Gandhi's ideas on Honesty & Truth.

காந்தி சொல்லிய நேர்மை, உண்மை என்பதை ஒவ்வொரு மனிதனும் கடைபிடிக்க வேண்டும் என்பதை நானும் வழிமொழிகிறேன். ஆனால் அதற்க்கான முன்னுதாரனமான புருஷ்னாக காந்தி இல்லை என்பதைத்தான் இங்கு பல தகவலகளின் அடிப்படையில் நாங்கள் வைக்கிறோம்.

இந்தியா வளர வேண்டும் என்கிற தங்களது ஆசை நானும் பகிர்ந்து கொள்கிறேன். அதற்க்கு தடையாக இருக்கும் விரோதிகளை எதிர்க்க இந்த ஆசையை உரமாக இடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.



I know, u won't accept the above point, bcoz being a Communist u won't be a Nationalist.

தங்களது பார்வையை முழுவதுமாக ஏற்ப்பது, மறுப்பது இல்லை இங்கே கேள்வி. அதிலுள்ள நல்ல நோக்கங்களை ஆங்கீகரிப்பதும், ஆனால் சரியான பார்வை இன்றியிருப்பதை சுட்டிக்காட்டி விமர்சிப்பதுமே எனது கடமை என்று கருதுகிறேன்.

கம்யுனிஸ்டாக இந்தியாவில் இருப்பவன் தேசியவாதியாகவும் இருக்க வேண்டியது தவிர்க்க முடியாது. எனவே எங்களை தேசியவாதி இல்லை என்று கூறினீர்கள் எனில் தேசியம் பற்றிய உங்களது பார்வையில் தவறு உள்ளது என்பதுதான் எமது பதிலாக இருக்கும்.

இந்திய புரட்சியில் தேசிய விடுதலையை முன்னிறுத்தும் தேசிய விடுதலைப் போராட்டம் மிக முக்கிய பங்கு வகிப்பதை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.



Still, I expect alot more post of this kind from you.

உங்களிடமிருந்தும் இது போல வெளிப்படையான விமர்சனங்களை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன். ஏனெனில் இவை கம்யுனிஸ்டுகளைப் பற்றிய பல தவறான ஆளும் வர்க்க கருத்துக்களை மறுப்பதற்க்கு எனக்கு வாய்ப்பளிக்கீறது.

உங்களது கருத்துக்களை அறிய ஆவலுடன்,
அசுரன்

said...

மா சிவகுமார்,


அசுரன் சொன்னது:
//ஆனால் காந்தி ஒரு வன்முறையாளர் என்பதை ஆதரங்களுடன் சொல்லியுள்ளேன். //


மா.சி சொன்னது:
இதுவரை அப்படி எனக்கு நம்பும்படியாக வாதம் வரவில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பாக இருக்கும் வன்முறை காந்திக்கும் கண்டிப்பாக இருந்திருக்கும். வன்முறை பற்றி மேலே ம்யூஸுக்கு சொன்னது ஏற்றுக் கொள்ளும்படியாக இருக்கிறதா?


அசுரன் பதில்:
இதற்க்கு ஆதாரமாகத்தான் கார்வாலி சிப்பாய்களின் வட மேற்க்கு மாகாண சம்பவத்தையும் அதில் காந்தியின் பாத்திரத்தையும் குறீப்பிட்டுள்ளேன். அதில் தெளிவாக அவர் அஹிம்ஸையை கைகொண்ட வீரர்களை கண்டித்து அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை ஆதரிக்கிறார்.

மேலும், ஜாலியன்வாலாபாக் படுகொலையை ஒட்டி உடனடியாக அவர் எழுதிய கடிதம் ஒன்று குறித்து நக்சல்பரி(liberation) எழுத்தாளர் ஒருவரின் புத்தகத்தில் சில பகுதிகள் வருகிறது. அதில் ஜாலியன்வாலாபாக்கை தற்பொழுது கண்டிக்க தயார் நிலையில் இல்லை என்று எழுதுகிறார். ஜெனரல் டையரை இதுவரை காந்தி கண்டித்ததே இல்லை, இந்த பார்வை அவர் ஆயுதமற்ற போராட்டக்காரர்களை சுட மறுத்த கார்வாலி ப்டை வீரர்களை கண்டிக்கும் சம்பவத்திலும் வெளிவருகீறது. அதாவது do the duty as state. அரசு என்பதின் பாத்திரத்தை ஜெனரல் டையர் செய்தான் ஆகவே அவனை கண்டிப்பதில் எந்த நியாயமும் இல்லை. ஆனால் அரசு என்ற பாத்திரத்தை அந்த 57 வீரர்கள் செய்யவில்லை. ஆகவே அவர்கள் கண்டிக்க படவேண்டியவர்கள் என்ற காந்தியின் புரிதலில் வன்முறை எங்குள்ளது(யாரிடம்) என்பது தெளிவாக தெரிகிறது.




அசுரன் சொன்னது:
//ஒரு தனிமனிதரான காந்தி ப்ளாக் மெயில் செய்து சாதிப்பதை அஹிம்சை என்று எப்படி சொல்கிறார்.//


மா.சி சொன்னது:
எப்படி பிளாக்மெயில் செய்தார்? பிறரது தலையில் துப்பாக்கி பிடித்தா? இல்லை என்றால் அவரது செயல்களால் ஏன் பிறர் கட்டாயப்படுத்தப்பட வேண்டிடியிருந்தது?


அசுரன் ப்தில்:
தார்மீக ரீதியான ப்ளாக் மெயிலும் வன்முறைதான். ஏனெனில் அதுவும் எதிர் வன்முறையை தோற்றுவிக்கிறது. வன்முறையை கைகொள்ளாததாக உங்களால் சொல்லப்படும் காந்தி ஏன் வன்முறையால் இறந்தார் என்றூ ஆய்ந்தால். அவரது செய்கைகள் அந்த பிற்போக்கு பன்றிகளுக்கும் ஏதோ ஒரு வகையில்(நல்ல வகையிலா கெட்ட வகையிலா என்பது இங்கு பேசப்படவில்லை) வன்முறையாக இருந்தது என்பது வருகிறது.

வன்முறை என்பது ஒருவரின் ஜனநாயக உரிமையை மறுப்பதுதான். அது எந்த வகையில் வேண்டுமானாலும் இருக்கலாம்.



அசுரன் சொன்னது:
//மக்களின் பொருளாதார வாழ்க்கையின் மாற்றத்திற்க்கு எந்த திட்டமும் கிடையாது?//


மா.சி சொன்னது:
எப்படிச் சொல்கிறீர்கள்? காந்தீய பொருளாதார திட்டங்களைப் பற்றி படித்திருப்பீர்கள். அதில் பல குறைகள் இருக்கலாம். ஆனால் திட்டமே கிடையாது என்று எப்படிச் சொல்ல முடியும்?


அசுரன் பதில்:
தர்மகர்த்த பொருளாதார திட்டம்தான் தங்களது பொருளாதார திட்டமுமா?

திட்டமே கிடையாது என்பதை அது மக்களின் பொருளாதார வழ்க்கையின் மாற்றத்திற்க்கான திட்டம் கிடையாது என்ற அர்த்தத்தில் சொன்னேன்.



அசுரன் சொன்னது:
/இது எப்படி ஒரு சமூகமாக மீண்டும் பரிணமிக்கும் என்பது பற்றிய சமூக பரிணாமத்துவ ஆய்வுதான் விஞ்ஞான கம்யுனிசம்.//

மா.சி சொன்னது:
அந்த ஆய்வைச் செய்ய காந்திக்கும் உரிமை உண்டு. சிவகுமாருக்கும் உரிமை உண்டு. அது ஒரு தரப்பினருக்கு மட்டுமான உரிமை கிடையாது. அதைத்தான் காந்தி செய்ததாக உணர்கிறேன். கீதை, இந்துஸ்தானி, சாதிமுறை, இந்து மத நம்பிக்கைகள் என்று காந்தியின் பார்வைகளில் எனக்குக் கேள்விகள் இருந்தாலும், தனிமனித சீர்திருத்தம் மூலம் சமூகத்தை சீர்திருத்திக் காட்டிய நடைமுறை தத்துவம் காந்தீயம்.


அசுரன் பதில்:
சமூக பரிணாம ஆய்வை எந்த தனிஒரு குழுவுக்குமான உரிமை என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை.

இன்னும் சொன்னால் நீங்கள் அப்படி ஒரு ஆய்சு செய்யவில்லை என்பதைத்தான் நான் குற்றச்சாட்டாக வைத்து, உங்களை ஆய்வு செய்ய சொல்லி கட்டாயப்படுத்தினேன்.

ஒருவேளை ஆய்வு செய்திருந்தால் தயவு செய்து அதன் முடிவுகளை வைத்து காந்திய சிந்தனையின் இன்னொரு பரிணாமத்தை வெளிச்சம் போட்டுக் காமிக்கும் நல்ல வேலையை செய்து எமது அறிவு வளர உதவுங்கள்.

அதாவது, "தனிமனித சீர்திருத்தம் மூலம் சமூகத்தை சீர்திருத்திக் காட்டிய நடைமுறை தத்துவம் காந்தீயம்." என்ற முடிவுக்கு சமூக பரிணாம ஆய்வு மூலம் வந்தடைந்தது பற்றி ஒரு சின்ன சித்திரம் வரைந்து காட்டி எமது கண்களை திறங்கள்.



அசுரன் சொன்னது:
//ஒரு வேளை காந்தி அமைக்கப் போகும் அரசு இந்த அம்சங்கள் இல்லாமல் இருக்குமா? அப்படி ஒரு அரசு எப்படி உருவாகும்?//


மா.சி சொன்னது:
ஏற்கனவே சொன்னது போல காந்தி அரசு அமைத்திருந்தால் அது உண்மையான சமவுடைமை சமூக அரசாக இருந்திருக்கும். வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்ற பாணி அரசில் அவருக்கு நம்பிக்கை கிடையாது. தில்லியிலிருந்து நாகர்கோவிலை ஆளும் கொடுங்கோன்மைக்கும் அவருக்கு ஒப்புதல் கிடையாது. இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் உயிரோடு இருந்திருந்தால் இந்திய மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்திருப்பார்.

சமூக, அரசமைப்பு பற்றிய காந்தியின் எழுத்துக்களைப் படித்ததில் வந்த புரிதல் மேலே சொன்னது.


அசுரன் பதில்:
ஆம், அவரது எழுத்துக்களில் பல இடங்களில் அவரது பொதுவுடமை சமூக கனவுகள் வருகின்றன. ஆனால் அதை அடையும் தத்துவத்தில் அது ஒரு சமூக யாதர்த்தத்தை, வரலாற்றை புறக்கணித்த கற்பானவாத சோசலிசமாக உள்ளது. செயலிலோ அது ஆளும் வர்க்க சேவை செய்கிறது.


"நாகர்கோவிலை ஆளும் கொடுங்கோன்மைக்கும் அவருக்கு ஒப்புதல் கிடையாது. "

இதில் எமக்கும் ஒப்புதல் கிடையாது. ஆனால், இந்த நிலையை நீங்களே குறிப்பிட்டது போல ஒரே நாளில் அடைந்து விட முடியாது. அந்த இடைக்கட்டத்தில் என்ன விதமான அரசு இருக்கும் என்பது பற்றி காந்தியின் பார்வைதான் எமது பார்வையுடன் மாறுபடுவதுடன். அது அவரது பிற்போக்குவாதங்களால் ஆளுமை செலுத்தப்பட்டதாக உள்ளது.


"இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் உயிரோடு இருந்திருந்தால் இந்திய மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்திருப்பார். " இது ஓரளவு உண்மையாக இருந்தால் கூட இது போன்ற அடிப்படையற்ற கற்பனைகளின் பாற்ப்பட்டு எந்த ஒரு வாத, எதிர்வாதமும் வைக்க முடியாது. ஆனால் அவர் இருந்த வரையில் உழைக்கும் மக்களின் தலைவலியாக இருந்தார்.



அசுரன் சொன்னது:
//இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் காந்தியின் வருகைக்கு முன்பும் அஹிம்சையைத்தான் கடைபிடித்தார்கள்.//

மா.சி சொன்னது:
காந்தியின் வாழ்க்கை அகிம்சை என்ற செயல்படா தன்மை சார்ந்தது அல்ல. எதிரிக்கு இன்னொரு கன்னம் காட்டும் கையாலாகத்தனம் கிடையாது. முனைப்பெடுத்து மனஉறுதியின் நேர்மையின் பேரில் எதிரியின் வன்முறையை செயலற்றுப் போகச் செய்யும் 'சத்தியாக்கிரகம்' என்று அழைக்கப்படும் முறைதான் காந்தீயம்.

கொடுமைகளைப் பார்த்து சகித்துக் கொண்டு விதியே என்று இருப்பது காந்தியின் வாழ்வில் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு அடியிலும், மிகச் சிறிய விஷயங்களிலும் தன்னால் முடிந்த மாறுதல்களை கொண்டு வரவேண்டும் என்று முனைப்பான வாழ்க்கை அவருடையது.


அசுரன் பதில்:
இந்த இடத்தில் உங்களது பதில் சரியாகவே உள்ளது. அவரது தென்னாப்பிரிக்க அனுபவம் காட்டுவதும் அதைத்தான். கடைசி வரை சென்று முட்டி இரண்டில் ஒன்று பார்க்கும் போர்க்குணம் அவரிடம் இருந்தது உண்மையே.




அசுரன் சொன்னது:
//மை சமுதாயம் எல்லா வரலாற்றுக் கட்டங்களுக்கும் ஏற்ற ஒரு சமூக அமைப்பு அல்ல.//


மா.சி சொன்னது:
இதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இருபத்தியொன்றாம் நூற்றாண்டிலும் பொதுவுடைமை அடிப்படையில் வாழ முடியும். பதினெட்டிலும் முடிந்திருக்கும். இருபத்தியிரண்டிலும் முடியும்.

காலம் வந்தால் கனியும் என்று கையைப் பிசைந்து கொண்டிருக்க அவசியம் இல்லாமல் இன்றே ஆரம்பித்தால் நம்மளவில் பொதுவுடைமை சமூகம் பார்க்கலாம். இன்று முதல் நீங்கள் பொதுவுடைமை வாழ்க்கை வாழ்வதை யார் தடுத்து நிறுத்தி விட முடியும்? கொஞ்சம் யோசித்து விபரமாகச் சொல்லுங்கள்.


அசுரன் பதில்:
ஹா...ஹா... இங்குதான் உங்களது சமூக பரிணாமத்துவ பார்வையின் deficiency வெளிவருகிறது.

இந்தியா அல்லது ஒரு சுரண்டல் சமூக அமைப்பில் வாழும் ஒருவன் சுரண்டித்தான் வாழ முடியும். அவனது சாப்பாடு, உடை, இருப்பிடம், அன்றாட அத்தியாவசிய தேவைகள் இவற்றுக்கு யாரேயேனும் சுரண்டித்தான் வாழ வேண்டும்.

ஒரு எ-கா வுக்கு நீங்கள் சாப்பிடும் அரிசியை விளைவித்தவனுக்கு சரியான விலையை கொடுப்பேன் என்று முயற்சி செய்து பாருங்கள். ஏனெனில் இது சமூகம், மனிதன் அதன் ஒரு அங்கம். நீங்கள் சொல்லுவது போல அப்படி தனியாக பிரித்து சுலபமாக பார்ப்பது இயலாத காரியம். இந்த இடத்தில்தான் தங்களது தனிமனித வாதம் தோல்வியுறுகிறது.

அல்லது எனது பார்வை தவறு எனில், எந்த வகையில் இந்த சமூகத்திலும் பொதுவுடைமை வாழ்க்கை வாழ முடியும் என்று கூறுங்கள். அதை பரிசீலிக்கலாம்.



அசுரன் சொன்னது:
//காந்தி கெட்டவர் என்ற எமது கருது கோளுக்கு எந்த ஒரு வாதமும் தங்களால் வைக்கப்படவில்லை.//

மா.சி சொன்னது:
காந்தி நல்லவரா, கெட்டவரா, அசுரன் நல்லவரா கெட்டவரா என்ற விடைகள் எனக்குத் தேவையில்லை. காந்தியின் வாழ்க்கை, கருத்துக்கள், அசுரனின் கருத்துக்கள் என்னை எப்படி சீர்திருத்த முடியும் என்பது மட்டும்தான் எனக்கு ஆர்வம் உடையது.


அசுரன் பதில்:
காந்தி நம்பியதை வைத்தோ, அல்லது அவரது சீடர்கள் அவரைப் பற்றி சொன்னதை வைத்தோ இந்த முடிவு அல்ல. மாறாக அவரது செய்கைகள், அவரது சுயமுரன்பாடு பதிவுகள் இவற்றின் மூலம் வந்தடைந்தது(னாங்கள் கொடுத்துள்ள சொற்ப எ-காக்கள். இன்னும் பல தேவைப்பட்டால் தேடி எடுத்துக் கொடுக்கலாம்).

காந்தியின் வாழ்க்கை மட்டுமல்ல இன்னும் பல மனிதர்களின் வாழ்க்கையை படித்து அதன் சாரங்களை தொகுத்து, தனிமனித சீர்திருத்தம் மட்டுமல்ல, சமூகத்தை மாற்றும் முடிவுகளுக்கும் வந்து சேர வேண்டும்.



அசுரன் சொன்னது:
//மக்களே அணி திரண்டு போராடுங்கள் என்று.... //

மா.சி சொன்னது:
இந்த மக்களில் நிலப்பிரபுக்களும் அடங்குவார்களா? இதற்குத்தான் Lu Xunன் A True Store of Ah Q என்ற கதையைப் படிக்கக் கேட்டுக் கொண்டேன். புரட்சிக்குப் பிறகு எப்படி அரசியல் நடக்கிறது என்பதை Liu Zhenyun என்பவரின் Corridors of Power என்ற நூலைப் படியுங்கள். (இந்த நூலுக்கு இணையப் பதிப்பு இல்லை. அச்சில் வாங்க வேண்டியிருக்கும். என்னுடைய பிரதி இப்போது கைவிட்டுப் போயிருக்கிறது. )


அசுரன் பதில்:
மக்கள் என்பதில் ஆளும் வர்க்கம் கிடையாது. இதை சுலபமாக புரிந்து கொள்ள ஒரு சொல்லாடலை தருகிறேன்.

ஜனநாயகம் என்பது என்ன? இதன் பொருளை கூறுங்கள் அதிலிருந்து மக்கள் என்பதன் பொருள் என்ன என்பதை கூறுகிறேன். மீண்டும் இங்கு ஒரு விசயம் வார்த்தைகளின் பொருள சமூக கட்டங்களை பொறுத்தும் வர்க்கங்களை பொறுத்தும் மாறுபடும்.


வன்முறையை 'று குழந்தை தவற விடும் செயல்' எனும் ஒரு அனிச்சை செயலோடு ஒப்பிடுவது தவறு ஏனெனில், தனியுடைமை சமூகத்தில் மனிதன் என்ற மிருகத்தின் வன்முறை இயல்பு, அதற்க்கான தத்துவத்துடனேயே உள்ளது. அதாவது ஒவ்வொரு சமூக கட்டதிலும் பரிணாம வளர்ச்சியடைந்து வந்துள்ளது. ஆகவே இது போன்ற சாதரண எடுத்துக்காட்டுகள் எல்லாம் வேலை செய்யாது. And I have given my veiw points on violence in my previous reply.


அசுரன் சொன்னது:
//காந்தி அப்படி ஒலிக்கவில்லை என்பதை பல முறை சொல்லியாயிற்று.//


மா.சி சொன்னது:
அப்படி ஒலித்தார் என்று நான் நம்புகிறேன். அதுதான் வரலாற்று உண்மையும் என்பதை நடுநிலையிலான பல வரலாற்றாளர்கள் பதிந்துள்ளார்கள்.


அசுரன் பதில்:
பல நேரங்களில் மக்களின் குரலாக அவர் ஒலிக்க வைக்கப்பட்டதால்தான் அவரால் தலைவராக முடிந்தது. ஆனால் அதன் மூலமாக அவர் மக்களின் தீர்வுக்கான குரலாக ஒலிக்கவில்லை என்பதைத்தான் இங்கு குறிப்பிட்டேன். அவரது எல்லா வெகு ஜன போராட்டங்களிலும் அவர் சமரசமாகவே சென்றார்(exceptions are there). மேலும் தலித் பிரச்சனைகள், விவாசாயிகள் பிரச்சனைகளில் முற்றீலும் ஆளும் வர்க்க குரலாக ஒலித்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஜனநாயகமாகதா-மக்களின் தலைவராக புறவாசல் மூலமாக வந்து(காங்கிரஸ்) அதை மக்களின் குரல் என்று திரிப்பது தவறு.

************

தங்களது பதிலுக்காக காத்திருக்கும்,
அசுரன்

said...

அதிகார வர்க்கத்தின் கருத்துருவாக்கத்தை கேள்விகளுக்கு வாய்ப்பின்றி மக்களிடம் திணிப்பதற்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வார்த்தைதான் புனிதம்.அந்த பட்டியலில் காந்தியையும் புனிதராக சேர்த்து,வெகு நாளாகிவிட்டது.ஆனால் பள்ளிகூட பாட வகுப்புகளில் இன்னமும் 'காந்தி நம் நாட்டுக்கு
சுதந்திரம் வாங்கிதந்தார்..'என்றே சொல்லித்தரப்படுகிறது.அந்த பிம்பம் பொய்யானது என அறிந்துகொள்ளும் தருணங்கள் பெரும்பாலான இந்தியனுக்கு வாய்ப்பதில்லை அல்லது தருணங்களை புரிந்துகொள்ளும் புத்தி கை கூடுவதில்லை.காந்தியை ஒரு மகானாக புரிந்துகொள்ளும் பொதுபுத்தி மாறவேண்டுமானால் அடிப்படை கல்வியில் மாற்றம் வேண்டும்.

said...

சிவகுமார் & அசுரன்,
நல்ல பதிவு மற்றும் விவாதத்துக்கும் நன்றி..

அசுரன்,
இந்தக் கடைசி பின்னூட்டத்தைத் தனிப்பதிவாக்கி புது இழையாகத் தொடங்கலாமே.. இந்தப் பதிவும் மிக நீளமாகிவிட்டதே!

1. இயக்கவியல் பொருள்முதல்வாதம் = என்றால் என்ன? ஆங்கிலப் பதம் கொடுக்க முடியுமா?

2. //கம்யுனிசம் என்றால் என்னவென்றும் அதைப் படிப்பதற்க்கான வழிகளையும் உங்களுக்கு சில மாதங்கள் முன்பு சொல்லியிருந்தேன். //
சுட்டி ப்ளீஸ்..

3. //மற்றபடி வெகுஜன ஊடகங்களில் பிரசூரமாகும் அளவு எனது எழுத்துக்கள் தரமான எழுத்துக்கள் கிடையாது.//
பாரதி பதிப்பகத்தின் ஏதோ ஒரு புத்தகத்தில் ஆசிரியராக உங்கள் பெயரையும் பார்த்த நினைவு.. நிஜமாகவே நீங்கள் புத்தகம் எழுதியதில்லையா?

said...

//இதற்க்கு ஆதாரமாகத்தான் கார்வாலி சிப்பாய்களின் வட மேற்க்கு மாகாண சம்பவத்தையும் அதில் காந்தியின் பாத்திரத்தையும் குறீப்பிட்டுள்ளேன். அதில் தெளிவாக அவர் அஹிம்ஸையை கைகொண்ட வீரர்களை கண்டித்து அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை ஆதரிக்கிறார்.//

அப்படி காந்தி ஆதரித்திருந்தால் காந்தியின் கருத்துக்களுடன் ஒவ்வாத ஒன்றாக இதையும் சேர்த்துக் கொள்கிறேன்.

//வன்முறை என்பது ஒருவரின் ஜனநாயக உரிமையை மறுப்பதுதான். அது எந்த வகையில் வேண்டுமானாலும் இருக்கலாம்.//

அந்த தார்மீக வலிமை காந்திக்கு எப்படிக் கிடைத்தது? அவர் சொல்வதில் இருந்த வாய்மைதானே அவருக்கு வலிமை கொடுத்தது? இல்லையென்றால் எத்தனையோ ஆயரத்தில் ஒன்று என்று உதறித் தள்ளி விட்டுப் பிற தலைவர்கள் போயிருக்கலாமே!

//திட்டமே கிடையாது என்பதை அது மக்களின் பொருளாதார வழ்க்கையின் மாற்றத்திற்க்கான திட்டம் கிடையாது என்ற அர்த்தத்தில் சொன்னேன்.//

கிட்டத்தட்ட அதேதான். ஒவ்வொரு தனிமனிதனும் தன் திறமைகளை முழுமையாகப் பயன்படுத்தி வந்து சேரும் செலவத்தை பொது நலனுக்காக பயன்படுத்துவது (பொது நலனில் அவன் நலனும் அடக்கம்) பொதுவுடைமை என்றால் தர்மகர்த்தா முறையும் அதேதான் என்று நினைக்கிறேன்.

//அதாவது, "தனிமனித சீர்திருத்தம் மூலம் சமூகத்தை சீர்திருத்திக் காட்டிய நடைமுறை தத்துவம் காந்தீயம்." என்ற முடிவுக்கு சமூக பரிணாம ஆய்வு மூலம் வந்தடைந்தது பற்றி ஒரு சின்ன சித்திரம் வரைந்து காட்டி எமது கண்களை திறங்கள்.//

காந்தியின் வாழ்க்கை வரலாறுதான் அதற்கு அடிப்படை அசுரன். தான் பார்க்க விரும்பிய மாற்றமாக தனது வாழ்க்கையை மாற்றி வாழ்ந்த அவரது வாழ்க்கை வரலாற்றை எதன் மூலம் நீங்கள் படித்தீர்கள்? நான் அவரது சத்தியசோதனை, தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம், லூயிஃபிஷர் எழுதிய வாழ்க்கைக் கதை, மற்றும் சில பெயர் நினைவில் இல்லாத புத்தகங்கள் மூலம் இந்த அடிப்படையைத் தெரிந்து கொண்டேன்.

//ஆம், அவரது எழுத்துக்களில் பல இடங்களில் அவரது பொதுவுடமை சமூக கனவுகள் வருகின்றன. ஆனால் அதை அடையும் தத்துவத்தில் அது ஒரு சமூக யாதர்த்தத்தை, வரலாற்றை புறக்கணித்த கற்பானவாத சோசலிசமாக உள்ளது. செயலிலோ அது ஆளும் வர்க்க சேவை செய்கிறது.//

பொதுவுடமை சமூகக் கனவுகளை நனவாக்க இதுதான் வழி என்று யாரும் வரைபடம் போட்டுக் கொடுத்து விடவில்லை இன்னும். காந்தியின் பரிசோதனைகளும் தோற்றுப் போன பல முயற்சிகளுக்கிடையே, தளிர் விட்டு வளர்ந்தவை.

//இதில் எமக்கும் ஒப்புதல் கிடையாது. ஆனால், இந்த நிலையை நீங்களே குறிப்பிட்டது போல ஒரே நாளில் அடைந்து விட முடியாது. அந்த இடைக்கட்டத்தில் என்ன விதமான அரசு இருக்கும் என்பது பற்றி காந்தியின் பார்வைதான் எமது பார்வையுடன் மாறுபடுவதுடன். அது அவரது பிற்போக்குவாதங்களால் ஆளுமை செலுத்தப்பட்டதாக உள்ளது.//

இலக்கு ஒன்றுதான், அதை அடைவதில்தான் மாறுதல் என்று புரிதலுக்கு வந்துள்ளோம்.

//அல்லது எனது பார்வை தவறு எனில், எந்த வகையில் இந்த சமூகத்திலும் பொதுவுடைமை வாழ்க்கை வாழ முடியும் என்று கூறுங்கள். அதை பரிசீலிக்கலாம்.//

'இன்று முதல் என்னுடைய திறமைக்கு ஏற்ப முழு ஊதியமும் பெற்று, என்னுடைய தேவைக்கு மட்டும் செலவழிப்பேன்' என்று ஆரம்பியுங்கள். யார் தடுப்பார்கள்?

//காந்தியின் வாழ்க்கை மட்டுமல்ல இன்னும் பல மனிதர்களின் வாழ்க்கையை படித்து அதன் சாரங்களை தொகுத்து, தனிமனித சீர்திருத்தம் மட்டுமல்ல, சமூகத்தை மாற்றும் முடிவுகளுக்கும் வந்து சேர வேண்டும்.//

இதை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

//ஜனநாயகம் என்பது என்ன? இதன் பொருளை கூறுங்கள் அதிலிருந்து மக்கள் என்பதன் பொருள் என்ன என்பதை கூறுகிறேன். மீண்டும் இங்கு ஒரு விசயம் வார்த்தைகளின் பொருள சமூக கட்டங்களை பொறுத்தும் வர்க்கங்களை பொறுத்தும் மாறுபடும்.//

ஜனநாயகம் என்பது ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையை சக மனிதனின் உரிமைகளுக்கு நலன்களுக்கு மதிப்பு கொடுத்து அமைத்துக் கொள்ளும் சமூகக் கட்டமைப்பு (என்னுடைய வரையறை)

//பல நேரங்களில் மக்களின் குரலாக அவர் ஒலிக்க வைக்கப்பட்டதால்தான் அவரால் தலைவராக முடிந்தது. ஆனால் அதன் மூலமாக அவர் மக்களின் தீர்வுக்கான குரலாக ஒலிக்கவில்லை என்பதைத்தான் இங்கு குறிப்பிட்டேன். அவரது எல்லா வெகு ஜன போராட்டங்களிலும் அவர் சமரசமாகவே சென்றார்(exceptions are there). மேலும் தலித் பிரச்சனைகள், விவாசாயிகள் பிரச்சனைகளில் முற்றீலும் ஆளும் வர்க்க குரலாக ஒலித்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.//

எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள்? ஒவ்வொரு சத்தியாக்கிரக போராட்டமும் ஆளும் வர்க்கத்துக்கு எதிராக நலிந்தவர்களுக்கு ஆதரவாக நடந்தவைதானே? எந்த வரலாற்று நூலைப் படித்து இப்படி சொல்கிறீர்கள்? வைக்கம் போராட்டத்துக்கு, வைக்கம் சத்தியாக்கிரகம் என்று ஏன் பெயர் வந்தது?

அன்புடன்,

மா சிவகுமார்

said...

//அதிகார வர்க்கத்தின் கருத்துருவாக்கத்தை கேள்விகளுக்கு வாய்ப்பின்றி மக்களிடம் திணிப்பதற்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வார்த்தைதான் புனிதம்.அந்த பட்டியலில் காந்தியையும் புனிதராக சேர்த்து,வெகு நாளாகிவிட்டது.ஆனால் பள்ளிகூட பாட வகுப்புகளில் இன்னமும் 'காந்தி நம் நாட்டுக்கு
சுதந்திரம் வாங்கிதந்தார்..'என்றே சொல்லித்தரப்படுகிறது.அந்த பிம்பம் பொய்யானது என அறிந்துகொள்ளும் தருணங்கள் பெரும்பாலான இந்தியனுக்கு வாய்ப்பதில்லை அல்லது தருணங்களை புரிந்துகொள்ளும் புத்தி கை கூடுவதில்லை.காந்தியை ஒரு மகானாக புரிந்துகொள்ளும் பொதுபுத்தி மாறவேண்டுமானால் அடிப்படை கல்வியில் மாற்றம் வேண்டும்.

//

ஆழியூரான்,


பிரிட்டிஸாருக்கு விளக்குப் பிடிக்கும் அடிமைகளை உருவாக்கும் நோக்கத்துடன் புகுத்தப்பட்ட மெக்காலே கல்வி முறையை இந்த அரசு மாற்றிவிடும் என்று நம்புகிறீர்கள்?

அதுவும், இந்தியாவின் சிறந்த மெக்காலே அடிமையாக மாமா மன்மோகன் சிங் என்ற நிதர்சன உதாரணம் இருக்கும் பொழுது?...

இதற்க்கே ஒரு புரட்சி செய்ய வேண்டிய நிலைமையில்தான் இந்தியா உள்ளது.

அசுரன்

said...

செந்தாமரை,

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஆம், காந்தியின் அஹிம்ஸை பகத்சிங் போன்ற எமது ரத்தங்களை பலி கொடுக்கத் தயார் ஆனால் ஆளும் வர்க்கத்தின் ஒரு துளி ரத்தத்தையும் சிந்தவிட தயாராயில்லை. அதனால்தான் காந்தியின் அஹிம்ஸை என்பது ஆளும் வர்க்க வன்முறை என்று கூறுகிறோம்.

பொன்ஸ், மா.சி, உங்கள் இருவருக்கும் பதில் தருகிறேன்.

அசுரன்

said...

அன்புள்ள அசுரன்,

காந்தி விசயத்தில்எனக்கு ஒரு கருத்து உண்டு.உலகின் ஆகப்பெரும் தத்துவஞானிகளில் இரண்டு வகைகள் உண்டு (உங்களுக்கு தெரியும்)அதில்
கருத்துமுதல்வாதிகள்எப்போதுமே
இரு விசயத்தை தனிமனிதனில் இருந்தே தொடங்கு கிறார்கள் அவர்களுக்கு தனிமனிதன்தான் சமுதாயம் ஒரு தனிமனிதன் திருந்த அவன் உண்மையாக இருக்கவேண்டும் என்ற இடத்தை தொடக்க புள்ளியாக வைத்துஎல்லாவற்றையும் சிந்திக்கிறார்கள் ( உதாரணம் ஜெ.கிருஷ்ணமூர்த்தி ,ரமணர்)

மாறாக பொருள்முதல் வாதிகள் அனைவரும் (மார்க்ஸ்,எங்கெல்ஸ் , லெனின் ,மாவோ) ஒரு தனிமனித பிரச்சனைக்கு சமூகத்தின் மூலம் தீர்வு தேடுகிறார்கள் ஆந்த சமூகத்தின் நிலவும் காரணிகளே அவனின் சிந்தனையை நல்ல அல்லது தீய செயல்களை தீர்மானிப்பதாக கருதுகிறார்கள்.
காந்தி ஒரு கடவுள் நம்பிக்கையாளர் ராம ராஜ்ஜியம் பற்றி கனவு கண்டவர்
அவரின் கருத்துப்படி அவரது போராட்டம் நடந்தது !
அதில் பகத்சிங் தூக்கின் போது அவர் அமைதி காத்தது மாபெரும் தவறுதான்.(சத்திய சோதனையில் இதற்கு விளக்கம் இல்லை 1920உடன் அது முடிவடைகிறது)
வருணாசரமத்தை ஆதரித்ததுஎல்லாம் அவர் சார்ந்த மதத்தின் பால் அவர்கொண்ட நம்பிக்கைதான்.

இந்த இடத்தில் புரட்சி அதுஎந்தவகையில் இருந்தாலும் அது தனிமனிதனில் இருந்து தொடங்கவேண்டுமா அல்லது சமூகத்தில் இருந்து தொடங்க வேண்டுமா உங்கள் கருத்துஎன்ன
தனிமனித மாற்றம் ஒரு சிறந்த சமூதாயத்துக்கு வழிகோலுமா
சமூக மாற்றம் அதை செய்யுமா
-தியாகு

said...

நான் இன்னும் உங்கள் பதிவினையும் பின்னூட்டங்களையும் படிக்கவில்லை.
இருந்தாலும் நான் சொல்ல வருவது என்னவென்றால்,
காந்தி இருந்த அச்சமயத்தில் அவர் இல்லாமல் இருந்திருந்தால், கட்டாயம் அந்த இடத்தில் வேறு ஏதாவது ஒரு பூந்தியோ, கீந்தியோ இருந்து காந்திக்குப்பதில் நடப்புகளை வழி நடத்தி சென்று இருந்திருப்பர். ஏந்தான் தனிமனித வழிபாடு நடத்தி காலத்தை வீண்டிக்கிறோம் என்று புரியவில்லை.
காந்தி கதையெல்லாம் பழைய கதை. எடுத்து பறனையில் செருகிவைத்துவிட்டு வேறு வேலைகளை பார்க்கவேண்டியதுதான் இப்போது அவசியம்.
ஆமாம் தெரியாம்ல்தான் கேட்கிறேன், காந்தி, நேரு, பூந்தி... இவங்கெல்லாம் லண்டன் சென்று படித்து வந்துவிட்டால் நாட்டை ஆள்வதற்கு தகுந்த புத்திசாலிகள் ஆகிவிடுவார்களா? அதென்னய்யா அது நியாயம்?

Related Posts with Thumbnails