TerrorisminFocus

Tuesday, February 03, 2009

இந்திய அரசே ஈழத்தில் தலையிடாதே!! CPM பாசிஸ்டே கோயபல்ஸ்தனத்தை நிறுத்து!!

ழத்தில் தமிழர்களை ஒழிக்க நேரடியாக தனது ராணுவத்தினரை இந்தியா அனுப்பியுள்ளது சமீபத்திய சம்பவங்களில் அம்பலமானது. இந்திய அதிகாரிகள் காயமடைந்தது, செத்து ஒழிந்தது உள்ளிட்ட செய்திகள் மற்றும் அணை கட்டு உடைந்த சம்பவத்தில் கணிசமான அளவு இந்திய ராணுவத்தினர் செத்து சின்னா பின்னமானது போன்ற செய்திகள் மற்றும் இது போன்ற தொடர் செய்திகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

விசயம் இப்படியிருக்கு CPM பாசிஸ்டுகளின் இணைய பிரசங்கி சந்திப்பு தனது தளத்தில் படு கேவலமான கருத்தை இட்டுள்ளார்:

""
இந்திய அரசு வல்லாதிக்க மனப்பான்மையுடன் செயல்படுவதாக குற்றம் சுமத்துவது இலங்கையின் சுதந்திரத்தையும் - மக்களையும் கொச்சைப்படுத்துவதாகவே முடியும். எனவே தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் மீதான தாக்குதல் மிக அதிகமான அளவில் வெறியூட்டக்கூடிய முறையில் மிகைப்படுத்தப்படுவதும் நடைபெறுகிறது.
""" (நன்றி: ஏகலைவன்)

ஈழத்தில் சிங்கள இன வெறி அரசு மக்களை கொன்று குவித்து வருவது குறித்து பல்வேறு சர்வதேச நிறுவனங்களும், நார்வோ போன்ற நாடுகளும் கூட சமீபத்தில் தமது கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில் இந்த இணைய கோயபல்ஸ் CPM சந்திப்பு வாய் கூசாமல் பேசுகிறார். கேட்டால் இலங்கையின் இறையாண்மை போய்விடுமாம். போடாங்.....

அப்படிப்பாத்தா குஜாராத் கலவரம் பற்றி பேசினால் குஜராத்தின் இறையாண்மை போய்விடும். இதே போல பாலஸ்தீனம், ஈராக் என்று எல்லா இறையாண்மைகளை பற்றியும் CPM தனது வாய், ஆசன வாய் உள்ளிட்டவற்றை மூடிக் கொண்டால் நமது வேலையாவது மிச்சமாகும்.

மிகைப்படுத்தப்பட்ட செய்தியாம். எது 150 டாங்கிகள் சென்றதா அல்லது இந்தியா அங்கு நேரடியாக தனது ராணுவத்தினரையும், ஆயுதங்களையும், ராணுவ அதிகாரிகளையும் அனுப்பி யுத்தம் செய்து வருவதா? அல்லது இதோ இன்று 48 மணி நேர கெடு என்ற பெயரில் ஒட்டு மொத்தமாக மிச்ச மீதியுள்ள தமிழர்களையும் கொன்றொழிக்கும் வெறியுடன் எறிகணைகளை பொழிந்து வருவதா? எது மிகைப்படுத்தப்பட்ட செய்தி. மிகைப்படுத்தப்பட்ட விசயம் என்று ஒன்று இருந்தால் அது இனிமேலும் உங்களை போலி கம்யுனிஸ்டு என்று அழைப்பதுதான். ஏனேனில் போலியாக கூட இருக்கும் அடிப்படையின்றி பாசிஸ்டின் குரலில் அப்பட்டமாக, வெட்கமின்றி பேசும் ஒருவனை, கட்சியை போலி கம்யுனிஸ்டு என்று அழைப்பதுதான் மிகைப்படுத்தப்பட்டது.

இந்த கும்பல் இப்படி பேசுவது ஒன்றும் ஆச்சர்யமான விசயமல்ல. ஈழத்தின் அவலத்தை எதிர்த்து ஒரு கிளர்ச்சி நிலையை உருவாக்கும் வகையில் முத்துகுமார் தன்னை எரியூட்டி தனது எழுத்தை ஒளியூட்டிய தருணத்தில் அதற்கு மறுநாள் இவர்கள் நாடகம் நடத்தி களிப்புற்றுக் கொண்டிருந்தனர். அந்த வக்கிர நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்து பகன்ற மாமாமனிதர் ஹிந்து ராம். CPMமும், சிங்கள இன வெறி கட்சி ஜேவிபியும், இந்து ராமும் இணையும் புள்ளி இதுதான். மக்களுக்கு பாசிசம். இந்த இந்து ராம்தான் ஈழம் என்ற வார்த்தையைக் கூட தனது பத்திரிகையில் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக தமிழீழ என்று ஆரம்பிக்கும் அமைப்புகளின் பெயரை சிங்கள தமிழ் என்று எழுதும் வக்கிர புத்திக்காரன். இவந்தான் சிங்கள இன வெறி அரசின் இந்திய கைக்கூலி அல்லது ஆசனவாய். இலங்கையில் கழியாமல் அஜீரமானதை இங்கு முடை நாற்றமெடுக்க நசுக்குபவன்.

CPM கும்பல் கொள்கை முரன்பாடின்றி பன்னாட்டு தரகு முதலாளிகளுக்கு காவடி தூக்கி வருகின்றனர். எனவேதான் தமது மாநிலத்தில் நந்திகிராமில் பன்னாட்டு தரகு முதலாளிகளுக்காக மக்களை சுட்டு பொசுக்குவதை செய்த இவர்களால், இந்திய தரகு முதலாளிகளுக்காக இலங்கை எனும் ஒரு நாட்டில் ஒரு இனத்தையே அழித்தொழிக்கும் யுத்தத்தை ஆதரிக்க முடிகிறது. கேட்டால் இறையாண்மை, ஜனநாயகம், சட்டம் என்று நல்லவன் போல பேசவும் முடிகிறது. மக்களின் மீது குண்டுகளும், துப்பாக்கிகளூம் பாயும் போது உனது சட்டமும், ஜனநாயகமும், இறையாண்மையும் எங்கே நக்கிக் கொண்டிருந்தது என்று நியாயமாக நாம் கேட்க வேண்டும். ஆனால் அப்படி கேட்க்கும் அளவு CPM கும்பல் தகுதியானவர்கள் அல்ல.

இந்திய முதலாளிகளின் தெற்காசிய கனவுகளுக்கு ஈழத்தை சுடுகாடாக்காதே! இந்திய அரசே இலங்கையில் தலையிடுவதை நிறுத்திக் கொள்!! CPM கும்பலே உனது மோசடித்தனத்தை மூட்டை கட்டி வைத்துக் கொள்!!!

அசுரன்

மாவீரன் முத்துக்குமாரின் தியாகம் - உணர்வாளர்களின் எழுச்சியும், துரோகிகளின் இகழ்ச்சியும்!...

ஈழம்: இந்தியாவின் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு தமிழ‌கத்தில் பிரச்சாரம்

ஒரு இந்தியனாக, சிங்களர்கள் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகிறேன்!!

பாசிசமும் சர்வதேசியமும் இந்தியத் தோழர்களும்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு, நாம் விடுக்கும் பகிரங்க வேண்டுகோள்

சர்வதேசியத்தை கைவிட்டா ஈழப்போராட்டத்தை அணுக வேண்டும்!?

ஈழமும் முத்துக்குமாரின் தியாகமும் - நமது கடமை என்ன?

11 பின்னூட்டங்கள்:

said...

தோழரே அசுரன் அவர்களே அவர்களே உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்க விரும்பிகிறேன். இலங்கை பிரச்சனையில் இலங்கை சகோதரர் பி.இரயாகரன் அவர்களின் குற்றச்சாட்டை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? எனக்கும் யாழ்பாணம் பல்கலைகழக மாணவர்களுக்கு, முஸ்லிம் சகோதரர்களுக்கும் நேர்ந்த துன்பத்தை அறிந்துள்ளேன்.

said...

சிங்களவனுக்கு மாமா வேலை செய்யும் மாமாவான‌ இந்தியாவிற்கு மாமா வேலை செய்யும் இந்த கேடுகெட்ட பிறவிகளை தமிழ் மக்க‌ளிடம் சிண்டைப் பிடித்து இழுத்துச் சென்று ஈழத்திற்கு இந்த பாஸிஸ்ட் கும்பல் செய்யும் துரோகத்தை அம்பலமாக்கி விளக்குமாத்தாலேயே அடித்து வெளுக்க வேண்டும்.
கம்யூனிஸ்ட்கள் என்கிற‌ பெயரில் ஊரை ஏமாற்றி வரும் இந்த துரோக கும்பலை தமிழக‌ தமிழர்கள்,
தமிழ் உணர்வுள்ள
மாணவர்கள்‍-இளைஞர்களும் ஈழத்தமிழர்களும் அடையாளம் கண்டு ஒதுக்கித் தனிமைப்படுத்த வேண்டும்.

said...

//இலங்கை பிரச்சனையில் இலங்கை சகோதரர் பி.இரயாகரன் அவர்களின் குற்றச்சாட்டை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?//

அவரது குற்றச்சாட்டுகள் எவையென்று நீங்கள் கருதுகிறீர்கள் ரூபகாந்தன்?

யார் மீதான குற்றச்சாட்டுகள் ரூபகாந்தன் அவர்களே?

வெறுமே குற்றச்சாட்டு என்றால் எதை என்று நான் கருதுவது?

அல்லது ரயாகரனின் ரசிகனாக இருந்து கருத்து சொல்ல கோருகிறாரா ரூபகாந்தன்? அப்படிப்பட்ட ஒன்றை ரயாகரனே செருப்பால் அடிப்பார். :-)

அசுரன்

said...

வணக்கம் அசுரரே

தேசிய இன விடுதலைப்போராளி முத்துக்குமரனை தேசிய இன விடுதலையை எதிர்க்கும் தாங்கள் எப்படி ஏற்றுக்கொண்டீர்கள் எனக்கு புரியவில்லை. மேலும் எனக்கு தெரிந்தவகையில் அவர் புரட்சிகர இளைஞர் முன்னணி யினரின் போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர்.

புலிகளை ஆதரிப்பவர் அவர். அவரது கடிதத்தின் நோக்கமும் அதுவே. ஆனால் புலிகளை பாசிஸ்டுகள் என்றுக்கூறும் நீங்கள் எப்படி அவரை ஏற்றுக்கொள்கிறீர்கள். என்பதை எனக்கு விளக்கமாக சொல்லமுடியுமா நண்பரே?

said...

தோழர் வணக்கம்
இப்பதிவை மீள் பதிவிட்டுள்ளேன்.

said...

//அவரது கடிதத்தின் நோக்கமும் அதுவே. //

அப்படியா? கடிதத்தை படித்தீர்களா? கடிதத்தின் ஒரு பகுதிதான் புலி அரசியல்.

இங்கு கேள்வி எழுப்பியுள்ள நண்பர்கள் ரயாகரனுடைய விமர்சனம் எது என்று கூட தெரியாமலேயே கேள்வி எழுப்புவது நமக்கு நகைப்பையே வரவழைக்கிறது. தயை கூர்ந்து ராயாகரனுடைய விமர்சன கட்டுரையை படித்துவிட்டு கேள்விகள் எழுப்புங்கள்.

அப்படியே முத்துக்குமாரின் தியாகத்தை அடுத்து வினவு மற்றும் இதர தளங்களில் இடப்பட்ட கட்டுரைகள் அந்த பிரச்சினையில் முன்னிறுத்தும் அரசியல் எதுவென்று தெளிவாக படித்துவிட்டு வருமாறு நண்பர்களை வேண்டுகிறேன் :-)

said...

//னக்கும் யாழ்பாணம் பல்கலைகழக மாணவர்களுக்கு, முஸ்லிம் சகோதரர்களுக்கும் நேர்ந்த துன்பத்தை அறிந்துள்ளேன்.//

ரூபகாந்தன்,

நல்ல கவர்ந்திழுக்கும், வடிவான பெயர். நல்லது. புலிகள் குறித்து இதே பதிவில் தொடர்புள்ள கட்டுரையாக வந்துள்ள கட்டுரையில் உள்ளது. படித்து பார்க்கவும்.

http://poar-parai.blogspot.com/2009/01/blog-post.html

said...

சந்திப்பு என்கிற CPM பாசிஸ்டு விட்டுள்ள சரடுகள்.

//இலங்கையில் கிழக்கு மாகாணத்திலும், மத்தியில் உள்ள மலையகத் தமிழர்களும், இசுலாமிய தமிழர்களும் பாதுகாப்பாகத்தான் உள்ளனர். இவர்கள் மீது இராணுவ மோதல்கள் எதுவும் நடைபெறவில்லை. ஏன் மீட்கப்பபட்ட கிளிநொச்சியில் உள்ள மக்கள் கூட பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள். அப்படியிருக்கையில் இதனை இனஅழிப்பு என்று கோயபல்ஸ் போல பிரச்சாரம் செய்வதின் நோக்கம் என்ன?//

சிங்கள அரசு இன வெறி அரசு அல்ல, அங்கே தமிழர்கள் மீது எந்த ஒரு அழித்தொழிப்பும் நடைபெறவில்லை, இன்னும் சொன்னால் அங்கே தமிழர்கள் போராடுவதே கொழுப்பெடுத்துதான் என்று சொல்ல வருகிறாரா இந்த இணைய கோயபல்ஸ்?

மருத்துவமனையில் குண்டு வீசியுள்ளது, பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் கொத்து கொத்தாக குண்டுகள் வீசியுள்ளது எல்லாம் ஏதோ வேற்று நாட்டவர்கள் மீது வீசப்பட்டது போல இந்த கோயபல்ஸ் நடிக்க முற்படும் போது புரட்சிகர அமைப்புகள் எதை செய்தாலும் எதிர்க்கும் பொறாமைதான் நம் கண்ணுக்கு தெரிகிறது. அய்யோ பாவம்.

கிழக்கில் துரோகி கருணாவுக்கு பதவி கூட கொடுக்கப்பட்டுள்ளது இதன் அர்த்தம் இப்போதைக்கு வன்னி பகுதியை முடித்துவிட்டு பிறகு உங்களை கவனிக்கிறேன் என்பதுதான். சிங்கள இன வெறி ராணுவ தளபதி வெளிபப்டையாகவே சொல்லியுள்ளான், தமிழர்கள் இனிமெல் இரண்டாம் தர குடிமகன்களாக வாழ பழகிக் கொள்ளுங்கள் என்று.

அது சரி, ஒரு நியயமான போரை நடத்தும் சிங்கள இன வெறி அரசை எதிர்த்து ஏன் சிங்கள ஜனநாயகவாதிகளே போராட/எழுத வேண்டும்? அதனை ஏன் ராஜபக்ஷெ அழித்தொழிக்க வேண்டும்?

இதற்க்கெல்லாம் சந்திப்பிடம் பதில் இருக்காது. ஹிந்து ராம் வாந்தியெடுத்ததை திருப்பி எடுக்கும் இந்த ஜந்துவிடம் அதனை எதிர்பார்க்க முடியாது.


///
தற்போது இலங்கை அரசின் இராணுவம்தான் புலிகளுக்கு எதிராக மோதல் தொடுத்து வருகிறது. அங்குள்ள சிங்கள மக்களுக்கும் - தமிழ் மக்களுக்கும் எந்தவிதமான மோதலும் நடைபெற்றதாக எந்தச் செய்தியும் வராத நிலையில் இப்படி கயிறு திரித்து தமிழ் இனவாத குளிரில் பிழைப்பு நடத்தலாமா? பெரும்பான்மை சிங்கள மக்கள் சோராம் போயிருந்தால் ஒட்டுமொத்த இலங்கை தமிழ் மக்களும் அல்லவா தற்போது பாதிக்கப்பட்டிருப்பார்கள். அப்படியிருக்கையில் அங்குள்ள யாழ்பாணத் தமிழர்கள் எல்லாம் ஏன் புலிகளிடம் இருந்து தமிழர்களை காப்பாற்றுங்கள் என்று போராட வேண்டும். உண்மையை பேசுங்கள் அய்யா!//

மீண்டும் அதேதான் சிங்கள இனவெறி என்று ஒன்று இல்லைவேயில்லை என்று நம்மை நம்ப சொல்கிறார் இந்த கோயபல்ஸ். சிங்கள இனவெறியின் பின்னே மறைந்து கொண்டுதான் இலங்கையை கூட்டிக் கொடுக்கும் வேலையையே அங்குள்ள ஆளும் வர்க்கம் செய்து வருகிறது.


//
மூன்றாவது பொய்: புலிகளோ சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவு வேண்டும் என்பதைப் பற்றி எப்போதும் கவலைப்பட்டதில்லை. மாறாக அவர்களிடமிருந்து அன்னியப்பட்டே இருக்கிறார்கள்.

அங்கே சிங்கள பேரினவாதம் தூண்டப்பட்டது என்றால் இது சிறுபான்மை தமிழ் இனவாதம். அப்படியிருக்கையில் புலிகள் எப்படி சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவை கோருவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள். இது புலிகள் மீதான விமர்சனம் அல்ல. கரிசனம். அதாவத புலிகளை எதிர்கொள்ள முடியாத கோழைத்தனம். தமிழகத்தில் எழுந்துள்ள இனவாத இரைச்சலில் குளிர் காயும் ஓநாய்த்தனம் என்றுதான் இதனை உரைக்க முடியும்.
///

இதுக்கு என்ன அர்த்தமென்றே புரியவில்லை. புலிகளை மிகக் கடுமையாக விமர்சனம் செய்பவர்கள் ம க இகவினர். ராஜிவ் படுகொலையின் போது புலிகள் ம க இகவினர் மீதுதான் பலி போட்டனர், CPM மீது அல்ல. பிறகு எப்படி கரிசனம் கிரிசனம் என்று அவரால் உளற முடிகிறது என்று தெரியவில்லை. நிற்க, சிங்கள உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் வகையிலான ஒரு அரசியல் திசை வழி குறித்தே அந்த குறிப்பிட்ட வினவு கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது. சந்திப்புவின் CPM சிந்தனை முறை இப்படி விசயங்களை ஆக எளிமை படுத்தி சிறுமைப்படுத்தி புரிந்து கொள்ள வழி ஏற்படுத்திவிடுகிறது.

அதற்கு பிறகு இருப்பது எல்லாம் ஒரே ஒரு பொய்யின் அடிப்படையில் செய்யப்பட்ட அவரது பிதற்றல்கள்தான். புலிகளை ம க இக ஆதரிக்கிறது என்ற அடிப்படையிலானதே அது. உண்மையில் இன்று வரை புலிகளை மிகக் கடுமையாக விமர்சித்து வருபவர்கள் ம க இகவினர் CPM அப்படி எதுவும் செய்த மாதிரி எனக்கு தெரியவில்லை.

அடுத்த CPMனுடைய சமீபத்திய நிலைப்பாடு(ஐநாவுக்கு போவோம் என்பதற்கு முன்பு வரை) இந்தியாவே தலையிடு என்பதுதான். உண்மையில் இந்தியா தலையிடாதே என்பதுதான் நியாயமான கோரிக்கையாக இருக்கும். அப்படி ஒரு கோரிக்கை வைத்த பொழுது அது இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் என்று குன்சாக ஒரு கதை விட்டார் இந்த இணைய கோயபல்ஸ்.

இப்போது இந்தியா தலையிடுவது தெரிந்துவிட்டது. அதுவும் எதிர்மறையில் தமிழர்களை கொல்வதற்கு நேரடியாக ராணுவம் அனுப்பி தலையிடுவது தெரிந்துவிட்டது என்றவுடன் இப்போது சந்திப்பு குரலை மாற்றி பேசுகிறார், அதாவது இந்தியா உதவவில்லை என்றால் பாகிஸ்தான், அமெரிக்கா உதவுமாம்.

போடாங்... இந்த பொழப்புக்கு.....



marxistindia : news from the cpi(m): February 5, 2009

Press Statement

The Polit Bureau of the Communist Party of India (Marxist) has issued the following statement:

Safeguard Tamil Civilians in Sri Lanka

The Polit Bureau of the CPI(M) expresses serious concern at the continuing reports of casualties among the Tamil civilian population who are trapped in the war zone in Mullaithivu district of Sri Lanka. The latest report from the United Nations representative confirmed that 52 people were killed and 80 wounded in the fighting in a day. There are incidents of two hospitals being shelled or bombed.

There are over two lakh civilians who are trapped in the areas where the fighting is going on. Both the Sri Lankan government and the LTTE have to ensure that the civilians are given safe passage into areas where there are no hostilities or safe zones.

The CPI(M) is also disappointed that the Sri Lankan government is not making any progress in working out a political settlement on the Tamil question, despite assurances.

The government of India should seek the assistance of the United Nations to ensure the safety of the Tamil civilian population in the northern province. It should also step up its diplomatic and political efforts to ensure that the Sri Lankan government immediately take up the provision of genuine autonomy for the Tamil-speaking areas within a united Sri Lanka as promised during the visit of the External Affairs Minister to Colombo.

eom

said...

//The government of India should seek the assistance of the United Nations to ensure the safety of the Tamil civilian population in the northern province.//

இத்த சொல்லிருக்குறது CPMனுடைய தலைமை கோயப்ல்ஸான காரத். இந்தியாதான் அங்க நேரடியாக யுத்தம் நடத்துவது அம்பலமாகியுள்ளதே பிறகு எப்படிடா அதே இந்தியா யுத்தத்தை நிறுத்த சொல்லி ஐநாவுல போய் முறையிடும்?

இதெல்லாம் கரத்துக்கு தெரியாதது அல்ல. ஆனால் கொடுத்த கூலிக்கு எதாவது செய்யனுமில்லையா அதான் இப்படி.

said...

முழு டிக்கெட்


மனித அவலத்தை விதைத்து, அதில் அறுவடை செய்யும் பிழைப்புவாதிகளும், சந்தர்ப்பவாதிகளும், தற்கொலையையும் தம் பிழைப்புக்காகத் தான் ஊக்குவிக்கின்றனர். இந்திய விஸ்தரிப்புவாத பொருளாதார நலனை கேள்விக்குள்ளாக்காத பிழைப்புவாத நாய்களுக்கு, முத்துக்குமரன் போன்ற அப்பாவிகள் மரணம் அரசியல் ரீதியாக அவசியமாகிவிட்டது. புலிகளுக்கு தமிழ் மக்களின் மரணங்கள் எப்படி அரசியல் ரீதியாக அவசியமாகி அதுவே அவர்கள் அரசியலாகிவிட்டதோ, அப்படியே முத்துக்குமரன் மரணம் இந்திய போலி தமிழினவுணர்வு பிழைப்புவாத கழிசடைகளுக்கும் மகஇக அயோக்கியர்களுக்கும் அவசியமாகிவிட்டது.

said...

//இந்திய விஸ்தரிப்புவாத பொருளாதார நலனை கேள்விக்குள்ளாக்காத பிழைப்புவாத நாய்களுக்கு,//

அம்பி நீ யாருன்னு தெரியல ஆனா மேலேயுள்ள விசயத்தை இந்தியாவில் பேசி வரும் ஒரே அமைப்பு ம க இ க தான்.

கட்டுரைல என்ன சொல்லிருக்கோ அதுக்கு பதில் சொல்லுங்கடா.. ஏன் ஒரே டேப்ரிக்கார்டர திரும்ப திரும்ப போடூறீங்கன்னு தெரியல

Related Posts with Thumbnails