TerrorisminFocus

Thursday, September 27, 2007

அத்வானி, இல.கணேசன், ராம.கோபாலன் ஆகியோர் சமூகத்துக்கு தலித் 'இந்து' எழுதும் கடிதம்!

அத்வானி, இல.கணேசன், ராம.கோபாலன் ஆகியோர் சமூகத்துக்கு தலித் இந்து எழுதும் கடிதம்:

அய்யா! எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே எங்கள் வீட்டில் சுடலைமாடனத்தான் கும்பிட்டுக் கொண்டு வருகிறோம். எனது பெயரும் கூட சுடலைமணிதான். 15 ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் ஊருக்கு கொஞ்சம் பேர்கள் வந்தார்கள்.

இராமனுக்குக் கோவில் கட்ட வேண்டும் என்றார்கள். செங்கல்கள் எல்லாம் எடுத்துக்கொண்டு வந்து பூசைகள் எல்லாம் போட்டார்கள்.

எங்களை எல்லாம் இந்துக்கள் என்று சொன்னார்கள்..

அதற்கு பிறகுதான் கொடியங்குளம் ஊரில் எங்கள் ஆட்களை தேவமார்களும், போலீசும் சேர்ந்து கைகால்களை உடைத்துப் போட்டார்கள்.. குடிதண்ணீர்க்கிணத்தில் பீ அள்ளிப்போட்டெல்லாம் அநியாயம் பண்ணினார்கள்... எங்கேயோ உத்திரப்பிரதேசத்துக்கு செங்கல் அனுப்பனும் என்று எங்களை இந்து என்று சொல்லி ஆள் பிடிக்க வந்த நீங்கள் யாரும் கொடியங்குளத்துக்கு ஏனய்யா வரவில்லை? யார் யாரெல்லாமோ ஆறுதல் சொன்னார்கள்.. சாதி வெறியர்களைக் கண்டித்துப் பேசினார்கள்... ஏனய்யா!... அப்போது உங்கள் வாயில் என்ன வைத்திருந்தீர்கள்?

அதே மாதிரி எங்காட்கள் குறிஞ்சாங்குளத்தில் கல்லால் சிலை வடித்து அம்மனைக் கும்பிட முடிவு பண்ணியபோது நாயக்கர் சாதி வெறியர்கள் எங்காட்களின் குலையை அறுத்து வெறியாட்டம் நடத்திய போது எதைப் பிடுங்கப் போயிருந்தீர்கள்?


மேலவளவிலே பஞ்சாயத்துத் தேர்தலில் நின்னு ஜெயிச்சதைப் பொறுக்க முடியாத சாதி இந்துக்களான தேவர் சாதி வெறியர்கள் முருகேசனுடன் சேர்த்து 4 தலித்துகளின் தலையைச் சீவி எறிந்தார்களே! ராமனின் பேரைச் சொல்லி இந்துக்களின் ஒட்டுமொத்தக் குத்தகை எடுத்திருக்கும் பார்ப்பனப் பதர்களே! அப்போது எங்கே போயிருந்தீர்கள்?

பானையிலே குடிக்க நீர் எடுத்தாள் எனும் குற்றத்திற்காக ஒன்றாம் வகுப்பு தலித் மாணவி தனத்தின் கண்ணைத் தாக்கிப்பார்வையைப் பறித்தானே ஓர் ஆசிரிய மிருகம்! அப்போது எந்தக் கிரகத்தில் இருந்தீர்கள்?

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் நியாயமான கோரிக்கைக்காக ஊர்வலம் போனபோது தேவர்சாதிப் போலீசால் அடித்தே ஆற்றில் வீசப்பட்டு 17 பேர்கள் துடிதுடிக்கக் கொல்லப்பட்டார்களே தெரியுமா? அவர்களில் 2 வயது சிறுவன் விக்னேசும் ஒரு ரத்த சாட்சி தெரியுமா? அவர்களின் பிணங்களுக்காவது கண்ணீர் அஞ்சலி செலுத்த மனசு வந்ததா உங்களுக்கு?

கண்ணகி எனும் வன்னிய சாதி மங்கையைக் காதலித்ததற்காக முருகேசன் எனும் தலித்தையும் அந்தப்பெண்ணையும் நஞ்சு புகட்டிக் கொன்றதே ஆதிக்க வன்னிய இந்து சாதி வெறி! அதைக் கண்டிக்க வந்தீர்களா?

நாட்டார் மங்கலம், கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி ஆகிய ஊர்களில் தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்கள் எனக்காத்த சாதி வெறியன் முத்துராமலிங்கத்தின் அடிப்பொடிகள் 10 ஆண்டுகளாக பஞ்சாயத்துத் தேர்தலைக் கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருந்தபோது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

கூத்தரப்பாக்கத்தில் சாமி எங்கள் தெருவழியாக வர வேண்டும் என நாங்கள் கேட்டபோது ஊத்தவாயன் சங்கராச்சாரி "நீங்கள் சுத்தபத்தமாய் இருந்தால் சாமி உங்கள் தெரு வழியே வரும்" என நரகல் வார்த்தை உதிர்த்தபோது வாயில் என்ன வைத்திருந்தீர்கள்? அதே சாதிவெறியன் கொலைக்குற்றத்தில் உள்ளே இருந்தபோது ஜெயில் வாசலில் விழுந்து கும்பிடத் தெரிந்த உங்களுக்கு கண்டதேவியில் நாங்கள் தொட்டிழுக்க முடியாத தேருக்காக உரிமைக்குரல் கொடுக்க மனசு இருந்ததா?

கீழ்வெண்மணியில் கருகினோம்..விழுப்புரத்தில்,புளியங்குடியில்,போடி நாயக்கனூரில், ஊஞ்சனையில் வெட்டுப்பட்டு செத்தோமே...ஒப்பாரி வைத்து அழவாவது வந்தீர்களா?

மகாராஷ்டிரத்தில் உங்கள் சாதி வெறி தாளமுடியாமல் புத்தமதத்துக்கு ஓடிய பின்னர்கூட உங்கள் இந்து வெறியர்கள் குடும்பத்தையே நிர்வாண ஊர்வலம் விட்டு தாய்,மகள், கண் பார்வையற்ற மகனை அடித்தே கொன்றார்களே! அய்யா! ராமனின் வாரிசுகளே! அக்கொடுமையைக் கண்டிக்கவாவது செய்தீர்களா?

மாட்டுக்குப் பிறந்தவர்களே! (பசு மாட்டை 'மாதா' என்பவர்களை அப்படி அழைக்கலாம்தானே!) செத்த மாட்டின் தோலை உரித்துப் பிழைத்தவர்களை ஹரியாணாவில் உயிருடன் அடித்தே கொன்றீர்களே! அதை எங்களால் மறக்க முடியுமா?

கோவையில் முசுலீம்களைக் கொல்வதற்கு குவார்ட்டர் பாட்டிலைக் கொடுத்தே எங்கள் அருந்ததியர்களைக் கூலிப்படைகளாக மாற்றி நரவேட்டை ஆடினீர்களே! அதே அருந்ததியர்களின் வாயில் காய்ந்த பீயைத் திணித்தார்களே திண்ணியத்தில். (மலம் என்று தேவ பாஷையில் கூறினால்தான் புரியுமா?) அத்வானியே! ராமகோபாலனே! பீயின் சுவையை நீ அறிந்திருக்கிறாயா? அக்கொடுமையை எதிர்த்து மனச்சாட்சியுள்ள மனிதர்கள் அனைவரும் கொதித்தெழுந்தபோது எந்த நாட்டில் நீங்கள் இருந்தீர்கள்?

இன்னமும் பட்டிதொட்டி எங்கும் எங்களுக்கு தனிக்குவளை,தனிச்சுடுகாடு என ஒவ்வொரு நொடியிலும் அவமானப்படுத்தப்ப்டுகின்றோம். (கடைகளின் பட்டியலை கடிதத்துடன் இணைத்துள்ளேன்.) ராமர் பாலத்தை உடைக்கக்கூடாது, பாபர் மசூதியை உடைக்க வேண்டும் என வெறியேற்றும் இந்துக்காவலர்களே! என்றைக்கு இரட்டை டம்ளர்களை உடைக்க வருவீர்கள்?

நீங்கள் முன்னிருத்தும் ராமன் எங்களுக்கு ஒருநாளும் நாயகனாக முடியாது. சூத்திரனாகிய சம்புகனைக் கொன்ற அவன் தான் எங்களது (சூத்திர, பஞ்சம மக்களுக்கு) ஜென்ம விரோதி என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்.

தசாவதாரம் எடுத்த உங்கள் விஷ்ணு மீனாகப்பிறந்தான்..ஆமையாகப் பிறந்தான்..பீ தின்னும் பண்ணியாகப் பிறந்தான்..பாப்பானுக்கு பிறந்த ராமனாகப் பிறந்தான்..ஒரு தலித்தாக ஏன் அவன் பிறக்கவில்லை? என்பதற்கு உங்களிடம் பதில் இருக்கிறதா?

இன்றைக்கு இந்துக்களின் மனது புண்பட்டு விட்டது என்று தினமலத்திலும் (தினமலர்தான்) தினமணியிலும் ஊளையிடும் மிருகங்களே! இரண்டாயிரம் ஆண்டுகளாய் அடிமையாக்கி வைத்திருந்த கொடுமையிலிருந்து எங்கள் சகோதரர்கள் தப்பித்து இசுலாமிலும் கிறித்துவத்திலும் அடைக்கலமானார்கள் எனும் வரலாறு எமக்குத் தெரியும்...உனது 'இந்து'மதவெறிக்குப் பலியாகி எமது சகோதரர்களை வெறுக்க நாங்கள் இனியும் இளிச்சவாயர்களோ கேணையர்களோ கிடையாது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கவே இந்தக்கடிதம்.

அம்பேத்கர் உங்களைப்பற்றி மிக அழகாகச் சொல்லி இருக்கிறார்.

"இவர்கள் நாவிலே ராமனையும் கைகளிலே கூர்வாளையும் வைத்திருப்பார்கள். யோகிகளைப்போன்று பேசுவார்கள். ஆனால் கொலைகாரர்களாக நடந்து கொள்வார்கள்.கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறான் என்பார்கள். ஆனால் விலங்கிலும் கேவலமாய் மனிதனை நடத்துவார்கள். இவர்களுடன் சேராதீர்கள். இவர்கள் மிகக் கொடிய வஞ்சனையாளர்கள். எறும்புக்கு சர்க்கரை உணவிடுவார்கள். ஆனால் இங்குள்ள மனிதர்கள் குடிப்பதற்கு - நீரெடுக்கத் தடை விதிப்பார்கள். இவர்களுடன் தொடர்பு கொள்ளாதீர்கள்"





இணைப்பு:

தமிழகத்தில் தலைவிரித்தாடும் தீண்டாமை வெறி:‘இரட்டைக் குவளை’ அமுலிலுள்ள தேனீர் கடைகள் பட்டியல் - பாரீர்!

ஈரோடு, கோவை, திண்டுக்கல், தென்னாற்காடு மாவட் டங்களில் ‘இரட்டைக் குவளை’ முறை அமுலி லுள்ள தேனீர்க் கடைகள் மற்றும் தலித் மக்களை அனுமதிக்காத கோயில்களின் பட்டி யலை - பெரியார் திராவிடர் கழகத் தோழர் கள் தயாரித்துள்ளனர். அந்தப் பட்டியலை, இங்கு வெளியிடுகிறோம்.


பாபு, த/பெ. ராமசாமி, பாபு டீ ஸ்டால், முருகன் கோவில் திடல், கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி வட்டம் - 638503.

முருகேஷ், த/பெ. ரங்கசாமி, முருகன் டீ ஸ்டால், முருகன் கோவில் திடல், கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி வட்டம்௬38 503.

அழகிரிசாமி (கண்ணன்), கண்ணன் டீ ஸ்டால், முருகன் கோவில் திடல், கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல் சத்தி வட்டம் - 638 503.

வெங்கடேஷ், த/பெ. செட்டியார், வெங்கடேஷ் டீ ஸ்டால், கடைவீதி சாலை, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல்,சத்தி வட்டம் - 638 503.

சுந்தரமூர்த்தி, த/பெ. வெள்ளேகவுண்டர், சுந்தரமூர்த்தி டீ ஸ்டால், அம்மன் கோவில் வீதி, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி வட்டம் - 638 503.

ராமசாமி, த/பெ. கருப்பண முதலியார், ராமசாமி டீ ஸ்டால், பாரஸ்ட் ரோடு, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி வட்டம் - 638 503.

சஞ்சீவி, சஞ்சீவி டீ ஸ்டால், கடைவீதி ரோடு, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி வட்டம் - 638 503.

இராசு, இராசு டீக்கடை, புது மேட்டூர், ஆயில் மில் அருகில், சத்தி ரோடு, தவிட்டுப்பாளையம், அந்தியூர் அஞ்சல், பவானி வட்டம்.

சம்பத் தேனீர்க் கடை, சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

கிரி தேனீர்க் கடை, சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

மல்லிகா டீ ஸ்டால், சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம். (உணவு பரிமாறுவதற்கு இரண்டு பெஞ்சுகள் உள்ளன)

இராயப்பன் தேனீர்க் கடை, சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

சிவாயாள் தேனீர்க் கடை, சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம். (உணவு பரிமாறுவதற்கு இரண்டு பெஞ்சுகள் உள்ளன)

முருகபவன் தேனீர்க் கடை, சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

ஆசனூர்க்காரர் டீக்கடை, சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

பாய் டீக்கடை, மசூதி பின்புறம், சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

தங்கவேல், தங்கவேல் தேனீரகம், முதன்மைச் சாலை, அளுக்குளி அஞ்சல், கோபி வட்டம்.

முத்துசாமி டீக்கடை, செங்கோட்டையன் நகர், குள்ளம்பாளையம் வழி, நாதிபாளையம் ஊராட்சி, கோபி வட்டம்.

கந்தசாமி டீக்கடை, செங்கோட்டையன் நகர், குள்ளம்பாளையம் வழி, நாதிபாளையம் ஊராட்சி, கோபி வட்டம்.

வேலன் டீக்கடை, குள்ளம்பாளையம் பிரிவு, ஈரோடு மெயின் ரோடு, குள்ளம்பாளையம்,கோபி வட்டம்.

ஜெயராணி டீக்கடை, வேலன் டீக்கடை எதிரில், ஈரோடு மெயின் ரோடு, குள்ளம்பாளையம், கோபி வட்டம்.

சுப்ரமணியம் டீக்கடை, ஈரோடு மெயின் ரோடு, பொலவக்காளிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

பி.எஸ். கிருஷ்ணன் டீக்கடை, ஈரோடு மெயின் ரோடு, பொலவக்காளிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

பாரியூர் அம்மன் மகளிர் சுயஉதவிக்குழு டீக்கடை, ஈரோடு மெயின் ரோடு, பொலவக்காளிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

கார்மேகம் டீக்கடை, ஈரோடு மெயின் ரோடு, பொலவக்காளிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

அசோக் டீ ஸ்டால், தாசம்பாளையம், ஈரோடு மெயின்ரோடு, கோபி வட்டம்.

முருகேசன், த/பெ. சின்னப்ப உடையார், முருகேசன் டீக்கடை, காராப்பட்டி,
கரட்டுப்பாளையம் அஞ்சல், குருமந்தூர் வழி.

சின்ன அம்மணி டீக்கடை, க/பெ. கே.பி. ராஜா, கரட்டுப்பாளையம் அஞ்சல், குருமந்தூர் வழி.

நாச்சிமுத்து டீக்கடை, எலத்தூர் மெயின்ரோடு, எலத்தூர் செட்டிப்பாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

சங்கீதா டீக்கடை, பேரூராட்சி அலுவலகம் அருகில், எலத்தூர் மெயின்ரோடு, எலத்தூர் செட்டிப்பாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

காளியப்பன் டீக்கடை, தெற்குப் பகுதி, அரிசி ஆலை அருகில், எலத்தூர் மெயின்ரோடு, எலத்தூர்,செட்டிப்பாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

பொன்னுச்சாமி டீக்கடை, தெற்குப் பகுதி, அரிசி ஆலை அருகில், எலத்தூர் மெயின்ரோடு, எலத்தூர் செட்டிப்பாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

சின்னப்பன் (எ) காளையன், மாரனூர், ஊத்தண்டியூர் ஊராட்சி, மாரனூர் மேடு, செண்பகபுதூர் அஞ்சல், சக்தி தாலுக்கா.

சிந்து உணவகம் (தேனீர்க்கடை), குமாரசாமி, செண்பகப்புதூர் ஊராட்சி, செண்பகபுதூர் அஞ்சல், சத்தியமங்கலம் வட்டம்.

பாலன் உணவகம் (தேனீர்க்கடை), மாரனூர், உத்தண்டியூர் ஊராட்சி, மாரனூர் மேடு, செண்பகபுதூர் அஞ்சல், சத்தியமங்கலம் வட்டம்.

ராஜேந்திரன் தேனீரகம், வேடச்சின்னானூர் (பேருந்து நிறுத்தம் அருகில்) வேடச்சின்னானூர் ஊராட்சி செண்பகபுதூர் அஞ்சல், சத்தி வழி.

கோபால் தேனீர்க் கடை, விண்ணப்பள்ளி ஊராட்சி, பாலிபாளையம் அஞ்சல், சத்தி வட்டம்.

மாகாளி நாய்க்கர் தேனீர்க்கடை, புதுரோடு (பேருந்து நிலையம் அருகில்), செண்பகபுதூர் அஞ்சல், விண்ணப்பள்ளி ஊராட்சி, சத்தி
வழி.சிக்கரசம்பாளையம் (ஊராட்சி)

பொன்னம்மா உணவகம், சிக்கரசம்பாளையம் புதுகாலனி, பேருந்து நிலையம் அருகில், சிக்கரசம்பாளையம் அஞ்சல்சக்தி வட்டம் - 638 401. சிக்கரசம்பாளையம் ஊராட்சி

ராமசாமி தேனீரகம், குளத்தூர் பிரிவு, சிக்கரசம்பாளையம் அஞ்சல், சக்தி வட்டம் - 638 401.அரியப்பம்பாளையம் பேரூராட்சி

சின்னப்பன் டீ, உணவகம், மூலக்கிணறு, அரியப்பம்பாளையம் அஞ்சல், சக்தி வட்டம் - 638 402.

பழனிசாமி டீ, உணவகம், மூலக்கிணறு, அரியப்பம்பாளையம் அஞ்சல்,சக்தி வட்டம் - 638 402.

தனலட்சுமி டீ, உணவகம், கொத்துக்காடு, அரியப்பம்பாளையம் அஞ்சல், சக்தி வட்டம் - 638 402.

மணி, டீ, உணவகம், கொத்துக்காடு, அரியப்பம்பாளையம் அஞ்சல், சக்தி வட்டம் - 638 402.

தமிழரசு டீ, உணவகம், (கோவில் அருகில்), பெரியூர், அரியப்பம்பாளையம் அஞ்சல், சக்தி வட்டம் - 638 402.

ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், பெரியூர், அரியப்பம்பாளையம் அஞ்சல், சக்தி வட்டம் - 638 402.

சிவகாமி டீ, உணவகம், (காலனி அருகில்), சதுமுகை அஞ்சல், தா.க. புதூர் வழி, சக்தி வட்டம் - 638 503.

முருகேசன், டி, உணவகம், காலனி அருகில், கெம்மநாய்க்கன்பாளையம் அஞ்சல், தா.க.புதூர் வழி, சக்தி வட்டம் - 638 503.

கோபால் டீ ஸ்டால் (பட்டரை ஸ்டாப் கூடக்கரை), ராஜகோபால், கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி - 638 454.

பாலாஜி டீ ஸ்டால் (பட்டரை ஸ்டாப் கூடக்கரை), பழனியப்பன், கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி - 638 454.

ரவி டீ ஸ்டால் (மேற்கு பகுதி கூடக்கரை),ரத்தினசாமி, கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி தாலுக்கா - 638 454.

லட்சுமி டீ ஸ்டால் (கூடக்கரை மேற்கு), மணி பண்டாரம், கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி தாலுக்கா - 638 454.

தங்கராசு டீ ஸ்டால் (கூடக்கரை மேற்கு), இராமலிங்கம், கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி தாலுக்கா - 638 454.

கொண்டையம்பாளையத்துக்காரன் டீ ஸ்டால், (கூடக்கரை மேற்கு), சுப்பிரமணியம், கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி - 638 454.

கிட்டுசாமி டீ ஸ்டால், (கூடக்கரை மேற்கு), சுப்பிரமணியம், கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி - 638 454.

சரவணன் புரோட்டா ஸ்டால், உணவகம், கூடக்கரை மேற்கு, உரிமை : சரவணன், இவர் அரியப்பம்பாளையத்தை சார்ந்தவர்.

குறிப்பு: அனைத்துக் கடை களிலும் செயற்கைக் குவளை (பிளா°டிக் கப்) அதிகம் பயன்படுத்தப்படு கிறது.

முடி திருத்தக் கடைகள்

சுப்பிரமணி சலூன் கடை, கடைவிதி, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி வட்டம் - 638 503.

வெள்ளியங்கிரி சலூன் கடை, முருகன் கோவில் திடல், கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல்,சத்தி வட்டம் - 638 503.

சுப்பிரமணி சலூன் கடை, பெரியசாமி கோவில் வீதி, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல்,சத்தி வட்டம் - 638 503.

பெரியசாமி சலூன் கடை (சின்னப்பையன்), முருகன் கோவில் திடல், கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல்,சத்தி வட்டம் - 638 503.

பெரியசாமி சலூன் கடை, நரசஸ்சாபுரம் பிரிவு, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல்,சத்தி வட்டம் - 638 503.

செல்வம், யுவராஜ் முடித்திருத்தகம், எலத்தூர் மெயின்ரோடு, எலத்தூர்,செட்டிப்பாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

செல்வன் சலூன் கடை, உரிமை: செல்வன், லோகு சலூன் கடை, உரிமை: லோகநாதன், லிங்கேஸ் சலூன் கடை, உரிமை: லிங்கேஸ்ரன்,

லைட் (எ) ஆறுமுகம், அயனிங்கடை, கூடக்கரைமேற்கு, கூடக்கரை.
(இங்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முடி வெட்டுவதில்லை)

கோயில் அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் கூடக்கரை (வடக்கு).


கோவை மாவட்டம்



கோவை புறநகர்

மோளப்பாளையம், சித்திரைச்சாவடி, வடிவேலம்பாளையம், விராலியூர், நரசிபுரம், அஜ்ஜனூர், கண்டப்பாளையம், காளப்பநாயக்கன் பாளையம், ஜாகீர் நாயக்கன் பாளையம், வெள்ளருக்கம் பாளையம், சிலம்பனூர்.பெரியநாயக்கன் பாளையம், காரமடை மேற்கு - புஜ்ஜனூர், திம்மம்பாளையம், கே.புங்கம்பாளையம், புன்னையூர், வெள்ளியங்காடு, கண்டியூர், சின்னப்புத்தூர், பெரிய புத்துர்,மங்களக்கரை புதூர், மூலத்துறை, பாலப்பட்டி, வச்சினப்பாளையம், கிட்டாம்பாளையம், புதூர்.

அன்னூர் :

மோக்கனூர், எ°. புங்கம்பாளையம், பகத்தூர், பல்லேபாளையம். இரும்பொறை : கவுண்டன்பாளையம், மீனம்பாளையம், கனுவக்கரை, கள்ளப்பட்டி, சின்னரங்கம்பாளையம், பெரியரங்கம்பாளையம்.

அவிநாசி

சேவூர், நம்பியாம்பாளையம் (கருவலூர் சாலை),ராணியம்பாளையம், தண்டுக்காரன்பாளையம்.

ஈரோடு உட்கோட்ட எல்லை

காவிரி பாளையம், குப்பன் துறை, உக்கரம், கடத்தூர்,பனையம்பாளையம்.

பல்லடம்


பாப்பம்பட்டி, கண்ணம்பாளையம், சித்தநாயக்கன்பாளையம், லட்சுமி நாயக்கன்பாளையம், கரடிவாவி, பருவாய்,ஆராக்குளம், அனுப்பட்டி, லட்சுமி மில்ஸ், ஐயம்பாளையம், 11 சென்னிபாளையம், அப்பம்பாளையம், காளிகாளப்பட்டி,வேலம்பட்டி, மடுகபாளையம், எளவந்தி, துத்தாரிபாளையம்,கேத்தனூர், வெங்கிட்டாபுரம், பணப்பட்டி, பிரண்டம்பாளையம், சிக்கனத்தூர்.

மேட்டு கடை டீ கடை, பாரதியார் நகர், குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.

ராமாத்தாள் டீ கடை, பாப்பம்பட்டி, பாப்பம்பட்டி அஞ்சல், சுல்தான்பேட்டை ஒன்றியம், கோவை - 641 016.

ஆசாரி மணி கடை, கரும்புரவிபாளையம், வடவேடம்பட்டி அஞ்சல், கேத்தனூர் வழி, பல்லடம் தாலுக்கா, கோவை மாவட்டம்.

பாலு உணவகம், கரடிவாலி, பல்லடம் , கோவை மாவட்டம்.

வஞ்சியம்மன் உணவகம், லட்சுமி உணவகம், செம்மிபாளையம் அஞ்சல்,
பல்லடம் தாலுக்கா, கோவை மாவட்டம்.

குமார் உணவகம், சுக்கம்பாளையம், சுக்கம்பாளையம் அஞ்சல், பல்லடம், கோவை மாவட்டம்.

அமாசையப்பன் கவுண்டர் உணவகம், காமராசர் நகர், கண்ணம்பாளையம் அஞ்சல், சூலூர் ஒன்றியம், பல்லடம் தாலுக்கா, கோவை மாவட்டம்.

கவுண்டர் தேனீர் நிலையம், சிக்கனூத்து, சுல்தான் பேட்டை ஒன்றியம், கோவை மாவட்டம்.

தெற்குப்பாளையம், பொங்கலூர் ஒன்றியம், கோவை மாவட்டம்.

புத்தரச்சல் டீ கடை, குண்டடம் ஒன்றியம், தாராபுரம் தாலுக்கா.

நடுகவுண்டர் பெரிய பாப்பா கடை, வடவேடம்பட்டி, வடவேடம்பட்டி அஞ்சல், கேத்தனூர் வழி, சுல்தான்பேட்டை, பல்லடம் தாலுக்கா, கோவை.

சுப்பையா கவுண்டர் டீ கடை, கிருஷ்ணா நகர், கரடிவாலி, பல்லடம் தாலுக்கா, கோவை.

முத்தக்கா டீ கடை, அனுப்பட்டி, பல்லடம் தாலுக்கா, கோவை.

பழனிச்சாமி கவுண்டர் டீ கடை, வெங்கிட்டாபுரம், பல்லடம் தாலுக்கா, கோவை.

நடராஜ் டீ கடை, குள்ளம்பாளையம் மேற்கு, சுல்தான்பேட்டை, பல்லடம் தாலுக்கா, கோவை.

சுப்ரமணி டீ கடை, குள்ளம்பாளையம் மேற்கு, சுல்தான்பேட்டை, பல்லடம் தாலுக்கா, கோவை.

செந்தில் நாயக்கர் டீ கடை, துத்தாரிபாளையம் பிரிவு, பொங்கலூர் ஒன்றியம், பல்லடம் தாலுக்கா, கோவை.

எலவந்தி வடுகபாளையம், மூன்று டீ கடை, பொங்கலூர் ஒன்றியம், பல்லடம் தாலுக்கா, கோவை.

மாரப்பன் கவுண்டர் டீ கடை, காளிவேலம்பட்டி, சுக்கம்பாளையம் அஞ்சல், பல்லடம் தாலுக்கா, கோவை.

கீர்த்திகா டீ கடை, வடவேடம்பட்டி, வடவேடம் பட்டி அஞ்சல், கேத்தனூர் வழி, சுல்தான்பேட்டை, பல்லடம் தாலுக்கா, கோவை.

தனி சுடுகாடு உள்ள இடங்கள்:


இராஜீவ்காந்தி நகர் வடவள்ளி, கணுவாய், நாதேகவுண்டன்புதூர், மேட்டுக்காடு, முல்லைநகர்,புதூர் புதுக்காலனி, போளுவாம்பட்டி, தெனமநல்லூர், ஆலாந்துறை, செம்மேடு, ஆறுமுகனூர், பச்சாபாளையம், கோவைப்புதூர், இடையர்பாளையம், லிங்கனூர் ஆதி தமிழன் நகர்.

பெருமநாயக்கன் பாளையம். பெருமாநாயக்கன்புதூர்,

குண்டடம் ஒன்றியம்

எடையபட்டி, குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.

பாரபாளையம், கொடுவாய் ஒன்றியம், காங்கயம் வட்டம்.

வலையபாளையம், குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.

வெல்லநத்தம் கிழக்கு.வெல்லநத்தம் வடக்கு, குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.

சாத்தநாயக்கன்பாளையம், குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.

தீண்டாமை கடைபிடிக்கும் பொது கோவில் :

காளப்பட்டி மாரி அம்மன் கோயில்
மாகாளியம்மன் வீரமாத்தியம்மன் கோயில், பாப்பம்பட்டி, பாப்பம்பட்டி அஞ்சல், சுல்தான்பேட்டை ஒன்றியம், கோவை

சலூன்

வளர்மதி சலூன் - மல்லேஸ்வரி சலூன்,பாப்பம்பட்டி, பாப்பம்பட்டி அஞ்சல், சுல்தான்பேட்டை ஒன்றியம், கோவை.

ஹீராட் சலூன், சித்நாயக்கன்பாளையம், சுல்தான்பேட்டை, கோவை

நிலா நிரோஷா ஹேர் லைன்ஸ், குப்புசாமி நாயுடுபுரம், பல்லடம் தாலுக்கா, கோவை.


விழுப்புரம் மாவட்டம்


அப்பு (ஆறுமுகம்), அருத்தங்கொடி, திருக்கோவிலூர் வட்டம்.
குமார் (செகதீசன்), லக்கிநாயக்கம்பட்டி, சங்கராபுரம் வட்டம்.

ஆதி திராவிடர்களை அனுமதிக்காத கோயில்கள்

சிவன் கோயில் - கடுவனூர், சங்கராபுரம் வட்டம்.துரோபதி அம்மன் - தொழுவந்தாங்கல், சங்கராபுரம் வட்டம்.

துரோபதி அம்மன் - கள்ளிப்பட்டு, சங்கராபுரம் வட்டம்.

ஈசுவரன் கோயில் - கூவனூர், திருக்கோவிலூர் வட்டம்.

கல்வராயன் கோயில் - கோமனூர், கள்ளக்குறிச்சி வட்டம்.

வினாயகர் கோயில் - நாகந்தூர், செஞ்சி வட்டம்.


திண்டுக்கல் மாவட்டத்தில் இரட்டைக்குவளை, இரட்டை இருக்கை முறைகள் உள்ள கிராமங்களின் பட்டியல்

பழனி ஒன்றியம்


1. மிடாப்பாடி2. மயிலாபுரம் 3. நல்லெண்ணக்கவுண்டன்புதூர்4. பாப்பாகுளம்5. அய்யம்பாளையம்6. சின்னாக்கவுண்டன்புதூர்7. வேலாயுதம்பாஇளையம் புதூர்8. காவலப்பட்டி 9. போடுவார்பட்டி10. கரடிக்கூட்டம்


ஓட்டன்சத்திரம் ஒன்றியம்

11. திருவாண்டபுரம்,12. மோதுப்பட்டி,13. அப்பியம்பட்டி,14. நால்ரோடு,15. கூத்தம்பூண்டி,16. கழுத்தறுக்கன்பாளையம்,17. கரியாம்பட்டி,18. அம்மாபட்டி,19. குத்திலிப்பை,20. ஓடைப்பட்டி,21. சக்கம்பட்டி,22. சிந்தலப்பட்டி.23. சவ்வாதுபட்டி24. கோ.கீரனூர்25. புதுஅத்திக்கோம்பை26. அரசப்பிள்ளைபட்டி27. காவேரியம்மாபட்டி28. சின்னக்கரட்டுப்பட்டி29. பெரிய கரட்டுப்பட்டி30. பெரியகோட்டை31. தேவத்தூர்32. கொத்தயம்33. கந்தப்பகவுண்டன்வலசு34. 16 புதூர்35. கிலாங்குண்டல்36. கப்பல்பட்டி37. புலியூர்நத்தம்38. முத்துநாயக்கன்பட்டி39. நவாலூத்து40. இ.கல்லுப்பட்டி41. புளியமரத்துக்கோட்டை42. பி.என்.கல்லுப்பட்டி43. குளிப்பட்டி44. சின்னக்குளிப்பட்டி45. மறுநூத்துப்பட்டி46. சிறுநாயக்கன்பட்டி47. வடகாடு 48. பால்கடை49. வண்டிப்பாதை50. கொசவபட்டி51. தங்கச்சியம்மாபட்டி52. மேட்டுப்பட்டி (அம்பிளிகை)53. வளையபட்டி ( இடையகோட்டை 54. வெரியப்பூர்55. சீரங்கக்கவுண்டன்புதூர்56. கொல்லபட்டி57. குட்டில்நாயக்கன்பட்டி

தொப்பம்பட்டி ஒன்றியம்


58. கோவில்அம்மாபட்டி 59. இராஜம்பட்டி 60. அத்திமரத்துவலசு 61. பணம்பட்டி 62. அக்கரைப்பட்டி 63. சரவணப்பட்டி 64. ஆலாவலசு 65. பூலாம்பட்டி 66. வாகரை 67. மரிச்சிலம்பு 68. கொழுமங்கொண்டான் 69. சங்கஞ்செட்டிவலசு 70. கல்துரை 71. கோட்டத்துரை 72. பெரியமொட்டனூத்து 73. தாளையூத்து 74. நாச்சியப்பக்கவுண்டன்வலசு75. புங்கமுத்தூர்,76. அப்பனூத்து,77. குமராசாமிக்கவுண்டன்வலசு,78. அரண்மனைவலசு79. தீத்தாக்கவுண்டன் வலசு80. திருமலைக்கவுண்டன்வலசு81. பருத்தியூர்,82. வடபருத்தியூர்,83. பொருளூர்84. மேட்டுப்பட்டி (கள்ளிமந்தையம்)85. ஒத்தையூர்( கள்ளிமந்தையம் 86. வேலம்பட்டி87. புளியம்பட்டி


இவண்
சுடலைமணி

16 பின்னூட்டங்கள்:

said...

hi asuraaa...

super ma unnai pool oruvan vendum..

indha bloggi parthu pinbu ramagopalan, thuklak asiriyar choo.ramasamy .... etc..

anaivaram pooi..... peeeee(Malam)
thinga vendum.......

said...

Guys,

If you are a member of any Indian websites, please forward this: (we can make India better!)

This is mine:

http://www.ibmmainframes.com/viewtopic.php?p=99702

said...

When 19 people were killed in police firing MK was the CM. Periyar did not condemn the
massacre in Keezh Venmani. In any case it was the CPI(M) which you dsiike so much mobilized the poor laborers there and not the DK headed by Periyar. In how many of the labor struggles from 1952-1973
did Periyar intervene or support.

When Modi's governent was abetting genocide in Gujrat DMK kept mum. So whom are you trying to oppose and whom are you
opposing. Both BJP and its opponents are sides of the same
coin or different portions of the same rotten apple. Sethusamudram
project will only help the big business and rich while the poor will get few crumbs.

said...

சாதீய இந்துக்களின் கொடுமைகளை தோலூரித்துள்ளீர்கள். BJP,VHP..இந்தக் கூட்டத்தில் பெரும்பாலனாவர்கள் இவர்களே.

said...

சரியான நேரத்தில் எழுதப்பட்டிருக்கும் சாட்டையடிக் கட்டுரை

said...

இது அவர்கள் காதில் விழப்போவதில்லை என்கிற போதும், குரல் கொடுப்பதை நிறுத்தவே கூடாது என்கிற அடிப்படையில், இப்பதிவை வரவேற்கிறேன். இந்த இடுகையின் பின் இணைப்பு - தேனீர்க்கடைகளில் சாதிவெறி- குறித்து சில கேள்விகள் உள்ளன. விளக்கவேண்டும். இது ஒரு தனிப்பதிவாக சுகுணாதிவாகர் பதிவில் வந்த போதே கேட்க வேண்டும் என்று நினைத்து, நேரமின்மையால் முடியாமல் போய்விட்டது.

இடதுசாரிச் சிந்தனையாளர்களின் நிறுவனமயமாக்கப்பட்ட பல்வேறு அமைப்புகள் குறித்தோ, கிளை அமைப்புகள், அவற்றின் ரிஷி/நதிமூலம் குறித்தோ, அவர்களுக்கு இடையே இருக்கும் இன்டேர்னல் பாலிட்டிக்ஸ் பற்றியோ கிஞ்சித்தும் எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ள வேண்டிய அவ்சியமும் ஏற்படவில்லை. ஆனால், எல்லோரும் ஒரே நோக்கத்துக்காகத்தான் பாடுபடுகிறார்கள் என்பது மட்டும் புரிகிறது.

இப்போது கேள்விகள் :

நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கம் உட்பட, பல இடதுசாரி அமைப்புகளும், ரூரல் பிரதேசங்களை மையமாக வைத்து, தலித் , பிற்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் என்பது என் நம்பிக்கை. அப்படி இயங்கும் அமைப்புகள், கிராமப்புறங்களில் நடைமுறையில் இருக்கும் இரட்டைக் குவ்ளை என்கிற அராஜகத்தை எதிர்த்து செய்யக் கூடிய அதிகபட்ச நடவடிக்கை, வலைப்பதிவில் போஸ்ட் ஒன்றைப் போட்டு ஆதரவு திரட்டுவது என்பதை நம்ப முடியவில்லை.

உள்நாட்டுத் தொழிலைச் சிதைக்க முயலும் பன்னாட்டுக் கம்பெனிகளின் வியாபார உத்தி என்கிற பெயரிலான அராஜகத்தை, கொடி, கோஷம் என்று தடபுடலாக எதிர்க்கும் இடது சாரி அமைப்புகள் ( அது வரவேற்கவேண்டிய விஷயம்) , இப்படிப் பட்ட தேனீர்க்கடைகளை கல்லைக் கொண்டு விட்டெறிந்து கலாட்டா செய்து கலகலக்க வைத்திருந்தால் , பரவலாக அனைவருக்கும் தெரிய வந்து, அரசு நடவடிக்கை எடுக்க வசதியாக இருந்திருக்குமே. அரசியல் பிச்சைக்காரர்களுக்கு சாதி இந்துக்களின் ஓட்டு முக்கியம். உங்களுக்கு என்ன? பயமா?

வலைப்பதிவில் இது பற்றி எழுதி, சாதிச் சண்டை, தலித்கள் மீதான வன்கொடுமை பற்றி சுத்தமாக ஒன்றுமே தெரியாத 'பொட்டி தட்டுகிற' இளையதலைமுறையிடம், அவேர்னஸ் ஏற்படுத்துகிறீர்கள் என்றே வைத்துக் கொள்வோம், ஆனால் எனக்குத் தெரிய வேண்டியது, உங்களால் இவ்வளவுதான் முடியுமா?

மீதம் உங்கள் மறுமொழிக்குப் பிறகு, if you have anything to say, that is :-)

said...

என்ன இது, ஒரே தலைப்பில் இரண்டு இடுகைகள் உள்ளன. இங்கே ஒரு அனானி வெண்மணிச் சம்பவம் குறித்துத் தவறான தகவலைத் தந்துள்ளார். வெண்மணிப்படுகொலை நடந்தபோது அண்ணாதுரைதான் முதலமைச்சர். படுகொலைகளையும் பெரியார் கண்டித்தார். (ஆனால் அந்தக் கண்டிப்பிற்கான வீரியம் போதாது என்பது எனது தனிப்பட்ட கருத்து.)

said...

வெண்மணிப் படுகொலையில் பெரியாரின் நிலைப்பாடு கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டியது. விமர்சனமின்றி வர்ணாஸ்ரமத்தையும், பழம் பெருச்சாளி சம்பிரதாயங்களையும் ஏற்றுக் கொள்ளும் சிலர்(நம்ம ரவி சிரினிவாஸ் மாதிரி) வேண்டுமானால் பெரியாரின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்பவர்கள் அவரை விமர்சனமின்றி ஏற்றுக் கொள்வதாக புரிந்து கொள்ளலாம். ஆனால் நிதர்சனம் அப்படியில்லை. பெரியார் வெண்மணிப் படுகொலையில் வோட்டுக் பொறுக்கி கம்யுனீஸ்டுகளீன் சந்தர்ப்பவாத நிலைப்பாட்டை சரியாகவே விமர்சிக்கிறார். பெரியார் அந்த சம்பவத்தை கடுமையாக கண்டிக்காமல் இருப்பதில் அவருக்கென்று சில தர்க்க அடிப்படையும் உள்ளது. ஆயினும் இவையெல்லாம் பெரியாரின் வெண்மணியை ஒட்டிய செயல்பாட்டை சரி என்று நாம் ஏற்றுக் கொள்வதாக் ஆகிவிடாது. அவை கடுமையாக விமர்சிக்கபட வேண்டியவையே.

மேலும் பெரியாரை வைத்து CPMக்கு புனித வட்டம் கட்ட முற்படுகீறார். அவர் CPM ஆதரவாளரும் கிடையாது. உண்மையில் இந்த கட்டுரையின் விவாத போக்கை சிதைப்பதே அவரின் நோக்கம். எனவே இந்த அம்சத்தில் முன்னெடுக்கப்படும் வெட்டி விவாதங்கள் ஊக்குவிக்கப்படாது.

கட்டுரை இரண்டாக பதிவு செய்தது ஒரு டெக்னிகல் தவறினால். அதை சரி செய்ய நேரம் இல்லை(இணையம் செத்த வெகத்தில் இயங்குகிறது).

அசுரன்

said...

prakash,

இந்தியாவில் சாதியம் என்பது பகுதி சார்ந்த ஏற்றத்தாழ்வான தன்மை கொண்டதாகவே இருக்கிறது. இதனாலேயே பெரும்பாலும் சாதிய எதிர்ப்பு போராட்டம் என்பது குறிப்பிட்ட பிரச்சனை சார்ந்தும் குறிப்பிட்ட பகுதி சார்ந்துமே முன்னெடுத்துச் செல்லப்படுகிறது(தண்ணீருக்கான உரிமை, நில மீட்பு, கூலி உயர்வு, தீண்டாமை எதிர்ப்பு, இரட்டை குவளை எதிர்ப்பு etc). பெரியார் திக சமீபத்தில் கூட இரட்டை குவளை, தீண்டாமையை எதிர்த்து தமிழகம் எங்கும் போராடினர். ம க இக உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகளும் தொடர்ந்து பல பகுதி அளவிலான போராட்டங்களை நடத்தியே வருகின்றனர். இது போன்ற போராட்டங்களின் போது சாதி வெறியர்களால கோடூரமாக தாக்கப்படும் நிகழ்வுகளும் அடிக்கடி நடந்தே வருகின்றன. நண்பர் பிரகாஷ் அவர்கள் இந்த அமைப்புகளின் பத்திரிக்கைகளை தொடர்ந்து வாசித்தால் அவற்றின் செய்ல்பாடுகள் குறித்து ஓரளவு புரிதல் கிட்டும்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது, நிலபிரபுத்துவ(சாதியம்) எதிர்ப்பு என்பதும் இணையாக எடுத்துச் செல்ல வேண்டியதாகினும் இரண்டும் வெவ்வேறு தளங்களில் முற்றிலும் வேறு பட்ட போராட்ட முறைகளில் முன்னெடுத்து செல்லப்பட வேண்டியவை.

ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று வரும் பொழுது அங்கு சாதிய வேறுபாடு குறித்த விவாதம பெரிதாக முன் வருவதில்லை(பார்ப்பினியத்துடனான கள்ள உறவு குறித்து பேசும் போது தவிர்த்து). மாறாக சாதியம் குறித்த் களப் பணி செய்யும் போது ஒவ்வொரு இடத்திலும் ஆதிக்க சாதிகளே பெரும்பான்மையாக இருக்கிறார்கள் எனும் போது சாதி கடந்து எல்லா தரப்பு ஜனநாயக சக்திகளையும் வென்றெடுக்கும் முகமான போராட்ட முறையே பலனளிக்கும். சாதி வெறியர்களை சிறுபான்மையாக மாற்றி அவர்களை தனிமைப்படுத்தி இருக்கும் ஒரு கட்டத்தில் வேண்டுமானால் நீங்கள் சொல்லுவது போல தாக்கியழிக்கும் போராட்டத்தை முன்னெடுக்கலாம். அப்படியில்லாமல் வெறுமே டீக்கடையில் கல்லெடுத்து அடித்தால் அது சாதி கலவரமாக வெகு சுலபமாக ஆளும் வர்க்கத்தால் திசை திருப்பப்படும்.

இணையம் தனது வரம்பிற்க்குட்ப்பட்ட அளவே ஒரு வெகு சனத் தளமாக உள்ளது. ஆயினும் இது ஒரு சக்தி வாய்ந்த தளம் என்பது மறுக்க இயலாதது. இணையத்தில் புரட்சிகர கருத்துக்களை பேச வாய்ப்பிருக்கும் பொழுது அவற்றை பேசுவதில் என்ன தவறு? அப்படி பேசுவது ஒன்றே நடைமுறை செய்ல்பாடுகள் இல்லை என்று அர்த்தமாகிவிடாது. tamilcircle.net மற்றும் tamilarangam.blogspot.com தளங்களில் மக இக உள்ளிட்ட அமைப்புகள் குறீத்த கட்டுரைகள் காணக்கிடைக்கும் படித்து பார்க்கவும்.

//இளையதலைமுறையிடம், அவேர்னஸ் ஏற்படுத்துகிறீர்கள் என்றே வைத்துக் கொள்வோம், ஆனால் எனக்குத் தெரிய வேண்டியது, உங்களால் இவ்வளவுதான் முடியுமா?//

இது எனது செய்ல்பாடுகள் குறித்த கேள்வி எனில் இதில் பதில் சொல்வது அவசியமில்லை என்று கருதுகிறேன். மாறாக இங்கு நான் ஆதரித்து எழுதும் புரட்சிகர, ஜனநாயக அமைப்புகள் குறித்து இந்த கேள்வி எனில் ஏற்கனவே இந்த பதிலில் முதல் சில பத்திகளில் விளக்கியுள்ளேன்.

அசுரன்

said...

சரியான விளக்கம் அசுரன்.

said...

super ma unnai pool oruvan vendum..

sathiyamaga Asuran - ellorum (after attaining good position that means got good job in govt.)
never bother their brothers/sisters facing problem in the villages..) this being the case, though u are a good educated persan, can settle yourself well.. but u are struggling for the downtrodden people exposing the reality - good - we should be thankful to you

said...

"இயல்பு வாழ்க்கை"

மணல் திட்டு விவகாரத்தில் அக்டோ பர் ஒன்றாம் தேதி நடந்த உடன் பிறப்புக்களின் போராட்டத்தை மறைமுக பந்த் என்று சொல்லி, அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு விட்டதாக நீலிக் கண்ணீர் வடித்தபடி வடநாட்டு ஆங்கில பார்ப்பன ஊடகங்கள் கதறிக் கொண்டிருக்கிறது இப்போது. உச்ச நீதிமன்றத்துக்கோ என்றுமில்லாத திருநாளாய் இப்போது பார்த்து மக்களின் மேல் கள்ளக் காதல் பீறிட்டு அடிக்கிறது.


இதன் மைய்யப்புள்ளிகளை விடுத்து இப்போது இவர்கள் விட்டுக் கொண்டிருக்கும் புதுக்கரடியான "இயல்பு வாழ்க்கை" பற்றியும் அதன் மேல் இவர்கள் வைத்திருக்கும் மாறாத க.காதலையும் பற்றி மட்டும் பார்த்தால் இவர்கள் எப்பேர்பட்ட அயோக்கியர்கள் என்பது தெரிகிறது.

ஒரு மாநிலத்தின் முதல்வரைப் பார்த்து ஒரு பண்டாரம் பரதேசி நாயி தலையை எடுப்பேன் நாக்கை அறுப்பேன் என்று சொன்னதே, அப்போது இதே பார்ப்பன ஊடகங்கள் அந்த நாதாரியுன் அறிக்கையை "alleged fatwa" என்று பூசி மொழுகிய போதே தெளிவாகத் தெரிந்து விட்டது இவர்களின் யோக்கியதை என்னவென்று.

"இயல்பு வாழ்க்கையைக்" குறித்தான இவர்களின் அக்கறை நாளும் நாளும் பசி பட்டினியால் அவதியுறும் விவசாயிகள் பற்றி கவலைப் படாத மர்மம் என்ன? கடன் தொல்லையால் செத்துக் கொண்டிருக்கும் விவசாயிகள் நெசவாளிகள் பற்றி என்றைக்காவது குறைந்த பட்சம் போலிக் கண்ணீராவது வடித்திருப்பார்களா? பிள்ளையின் கல்லூரிக் கட்டனத்தைக் கட்டமுடியாமல் தூக்கில் நாண்டு கொண்டவரின் "இயல்பு வாழ்க்கை" பற்றி இவர்களுக்கு என்றைக்காவது அக்கறை இருந்திருக்குமா? பன்னாட்டு அங்காடிகளாலும் ரிலையன்ஸ் மெகா மளிகைக் கடைகளினாலும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பறிக்கப்பட்டதே அப்போது எங்கே பதுங்கிக் கிடந்தது இவர்களின் அக்கறை மயிர்?

உச்ச நீதிமன்றத்துக்கோ இவர்களை விட அக்கறையும் அறச்சீற்றமும் பொங்கிப் பிதுங்கி வழிகிறது. இன்றைக்கு மனுவின் காவலன் ராமன் அம்மனமாக ஒரு விவாதப்பொருளாக மக்கள் மத்தியில் நிற்பதைக் கண்டவுடன் வாரிச் சுருட்டிக் கொண்டு ஓடி வருகிறதே.. ஆயிரக்கணக்கான முஸ்லீம்களைப் படுகொலை செய்த ஒரு கொலைகாரன் ஒரு மாநில முதல்வராக தொடர்வதைப் பற்றி இதுவரையில் வாயைத் திறந்திருக்குமா? ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் படுகொலைக்கும் பேரளவிலாவது இருந்த மதச்சார்பின்மை குலைந்து ஒட்டுமொத்த மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட காரணமான அத்வானியின் ஒரு மசிரையாவது அசைக்க முடிந்திருக்கிறதா?
காவிரிப் பிரச்சினையில் ஒவ்வொரு தீர்ப்பு நகலையும் கக்கா துடைக்க மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்ததே கருநாடக அரசு..... அப்போது வராத அவமதிப்பு இப்போது பீச்சிக் கொண்டு பாய்வது ஏன்?

வடகிழக்கிலும் காசுமீரத்திலும் கோடி கோடியான மக்களின் இயல்பு வாழ்க்கை பலபத்தாண்டுகளாக பாதிக்கப்பட்டுக் கிடக்கிறதே இதே நீதிமன்றங்களுக்கும் பத்திரிக்கைகளுக்கும் அவர்களைப் பார்க்கும் போது மட்டும் கண் அவிந்து விடுகிறதா? சிங்கூரிலும் நந்திகிராமிலும் இன்று வரையில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லையே; இப்போது ராமனுக்கு பாதிப்பு என்றவுடன் "தானாடவில்லையம்மா தசையாடுது" என்று "மக்கள் நலன்" என்கிற முகமூடியுடன் பம்மாத்து பன்னுகிறீர்களே அந்த மக்களெல்லாம் உங்கள் பார்வையில் மக்களாகத் தெரியவில்லையா?

தீர்ப்பை கருணாநிதி அவமதிக்கவில்லை. அப்படிச் செய்யும் துணிவும் அவருக்கில்லை. மாறாக ஒரு மாநிலத்தின் பெரும்பான்மையான மக்கள் அவமத்திருக்கிறார்கள். உங்களால் என்ன செய்து விடமுடியும் குடுமிகளே? உங்கள் தீர்ப்பின் மீது சூடு சொரனை உள்ள தமிழகர்களெல்லாம் ஒன்று கூடி ஒன்னுக்கடித்து விட்டார்கள். எல்லோருக்கும் தாக்கீது அணுப்ப காகிதங்களுக்கு எங்கே போகப்போகிறீர்கள்?

இத்தனைக்கும் பிறகு கருணாநிதியின் வெளக்கென்னைத்தனமான அணுகுமுறை கடுமையாக ஏமாற்றமளிக்கிறது. ஊடகங்களின்/நீதிமன்றங்களின் இந்த இரட்டை நிலைப்பாடுகளை மக்கள் மத்தியில் ஒரு பெரும் விவாதமாக அவர் முன்னெடுத்திருக்கலாம். தன்னெழுச்சியாக தங்கள் உணர்வுகளை மக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.. அந்த ஒரு போராட்ட உணர்வை செழுமைப் படுத்தும் என்னம் கருணாநிதிக்கு இல்லாமல், உச்சா நீதிமன்றம் சொன்னவுடன் அரக்கப் பறக்க தலைமைச் செயலகத்துக்கு ஓடிப் போகிறார். போராடும் மக்களோடு போராளி போல் நின்று இருக்கலாம்; ஒரு வீரனைப் போல் எதிர்கொண்டிருந்திருக்கலாம்.

தன்மானமும் சூடு சொரனையும் கொண்ட உடன்பிறப்புக்கள் அரசு அமைப்பின் இந்த முரண்பாட்டை இனிமேலாவது உணர்ந்து கொள்ள வேண்டும். கருணாநிதி சொல்வது போல் "சட்டத்துக்கு உட்பட்டெல்லாம்" ஒரு மயிரையும் புடுங்க முடியாது. இந்த சட்டமும் நீதி அமைப்பும் பூணூலால் பின்னப்பட்ட ஒரு சரம். இதோ மக்கள் உங்களைப் பார்த்து தெளிவாகச் சொல்லி விட்டார்கள் ஓநீங்கள் பெரியாரின் பாதையில் போங்கள்; நாங்களிருக்கிறோம் உங்களோடுஔ என்று. என்ன செய்யப்போகிறீர்கள்?

கார்க்கி

said...

Eap Drugs http://www.indebleudc.com/ - xanax alprazolam I being the plaintiff had to give testimony and it had to be accurate the defense attorney was purposely trying to confuse me and through me off but the xanax helped me to feel calm. [url=http://www.indebleudc.com/]buying xanax online[/url] I being the plaintiff had to give testimony and it had to be accurate the defense attorney was purposely trying to confuse me and through me off but the xanax helped me to feel calm. cheap xanax no prescription Buy Xanax (Alprazolam) at reputable online pharmacy and save extra money! No prescription! No hidden fees!

said...

Drug Abuse Dsm Iv Definition http://wisinyyandelfanclub.com/ - order ativan online It was really getting me frustrated I would go to bed wondering if I would be able to fall asleep and sometimes I wondered if it was all in my head. [url=http://wisinyyandelfanclub.com/]purchase lorazepam online[/url] I thought, am I ever going to get rid of this and sleep like a normal person. buy lorazepam online Ativan worked for me so far it is the best sleeping medicine that I have tried and I didn’t have any side effects either.

said...

Free Medication For Leukima buy propecia During the clinical test, some of the men experienced side effects like having less desire for sex, difficulty in achieving erection, or decreased amount of semen. [url=http://www.midtomid.com/]propecia without prescription[/url] The medicine will only recover some and would stop further hair loss. http://www.midtomid.com/ - buying propecia online The good news is there is a drug that can be used to treat it.

said...

Drug Label Image http://www.4bigvalues.com/ - cheap generic lasix Potassium is excreted in excess when you take a loop diuretic like Lasix that causes you to excrete more minerals than you normally do. [url=http://www.4bigvalues.com/]purchase lasix[/url] Pregnant women should consult doctors before taking it. lasix 40 mg Instead, just take the single dose at your next regularly scheduled dose time.

Related Posts with Thumbnails