TerrorisminFocus

Wednesday, May 30, 2007

இத எப்படி புரிஞ்சிக்கலாம்னு நீங்களே சொல்லுங்க!

அடங்க மறு! அத்து மீறு! என்று சொன்னவர். சட்டமன்றத்தை சாக்கடையுடன் ஒப்பிட்டு கண்டனம் செய்தவர். அதே கேடு கெட்ட பாதையில் விழுந்து இன்று ஒரு NGOவாக, ஒரு செட்டில்மெண்ட் குழுவாக திரிந்துவிட்டதை எப்படி பார்ப்பது?

பார்ப்பனியத்தை எதிர்த்து களத்தில் போராடிய கரங்கள், கும்பமேளா மரியாதையை சிரம் தாழ்த்தி வாங்கிய பெருமை என்ன.


ஊருக்கு குறைந்தது ஒரு தலித் என்ற அளவில் ரத்தம் சிந்தி புடம் போட்டு வளர்த்த சிறுத்தைகளின் பாசறை இன்று ரவுடிகளின் தொழுவம் ஆன சீரழிவு என்ன.


இந்தியா முழுவதும் தலித் தலைவர்கள் பார்ப்பனிய பீடத்தை அலங்கரிக்க - தலித் மக்களோ.... மறுகாலனியாதிக்க பீடையில் மாட்டி விழி பிதுங்குகிறார்கள்.


தலித்தியம்? அதன் வரம்புகள் என்ன? அதன் உண்மையான சித்தாந்த சார்பு என்ன?


அம்பேத்காரின் கறுப்பு பார்ப்பனர்கள் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறார்கள்.


நன்றி கீற்று


தமிழக சிறுத்தைகள் காதை:

""""

அய்யாசாமி: இதுக்கிடையில விடுதலை சிறுத்தையில இருக்குற எங்க சொந்தக்காரன் ஊத்தங்கால் சண்முகம் ஒருநாள் வந்தான். இந்தாங்க அண்ணன் (திருமாவள வன்) பேசறார்னு செல்போனை என்கிட்ட கொடுத்தான். கேஸ் அதுஇதுன்னு விசயத்தை பெருசு பண்ணாதீங்க. படையாச்சிங்க ரொம்பக் கோவமா இருக்காங்க. நாளைக்கு அவங்களுக்கு எதிரா எதாச்சும் தீர்ப்பாயிட்டா அது காலத்துக்கும் பகையாயிரும்னார். எனக்கு திகீர்னு ஆயிருச்சு. என்ன இப்படி சொல்றீங்கன்னு கேட்டேன். அன்புமணி மூலமா ரொம்ப பிரஷர் தர்றாங்க... நீங்கதான் பக்குவமா முடிவெடுக்கனும்னு அவர் சொன்னதை என்னால நம்பவே முடியல. நான் போனை எங்கண்ணன் சாமிக்கண்ணுகிட்ட கொடுத்தேன்.


சாமிக்கண்ணு: வழக்கை வாபஸ் வாங்கிடுங்கன்னார் திருமாவளவன். அதெல்லாம் வக்கீல் ஐயாதான் முடிவெ டுக்கனும்னு சொன்னேன். வழக்கு போட்டது நீங்க. இதுல வக்கிலுக்கு என்ன வேலை நடுவுல? நீங்க முடி வெடுங்க. ஒத்துக்கிட்டா பணம்கூட கணிசமா தர்றதா சொல்றாங்கன்னார் அவர். காசு வரும். எம்புள்ள வரு மான்னு கேட்டுட்டு போனை கட் பண்ணிட்டேன். அப்புறம் ஐயாவுக்கு போன்போட்டு விசயத்த சொன் னோம். அவர் இந்தப்பையன் சண்முகத்தைப் பிடித்து சத்தம் போட்டார். இந்த மாதிரி கட்டப்பஞ்சாயத்து வேலை செய்யற நெனப்பிருந்தா சொந்தக்காரன்னும் பாக்கமாட்டம்னு நாங்களும் திட்டி அவனை தொரத்தியுட்டடீம்.

""""


""""

அய்யாசாமி: அதுக்கப்புறம் விசாரிச்சதுல தெரிஞ்சது என்னன்னா, எங்காளுங்க நாலுபேர் மேலயும் கேஸ் போடறதுக்கு ஐடியா கொடுத்ததே விடுதலை சிறுத்தை கடலூர் மாவட்ட அமைப்பாளர் கருப்புசாமிதானாம். எங்க மேலயும் கேஸ்போட்டாத்தான் பயந்துபோய் பேச்சுவார்த்தைக்கு வருவோம்னு இந்த ஏற்பாடு. அப்பு றம் ஒருநாள் வி.சி. மாநில விவசாய அணி செயலாளர் திருச்சி கிட்டு கோர்ட்டுக்கே வந்து எங்ககிட்ட சமாதா னமா போகச் சொல்லி பேசினார். நாங்க முடியாதுன்னு சத்தம் போட்டு அனுப்பிட்டடீம். பிறகு நெய்வேலி சிந்தனைச் செல்வன்.

"""


ஒரு வேளை இந்த கட்டுரை உதவலாம்:

கயரலாஞ்சி காட்டும் பேருண்மைகள் - உலகமயம் - தலித்தியம் - தலித் விடுதலை


அசுரன்

0 பின்னூட்டங்கள்:

Related Posts with Thumbnails