TerrorisminFocus

Thursday, October 19, 2006

அப்சலும் - அரசியல் ஓட்டாண்டிகளும் - அடிவருடிகளும்

கேள்விகள் கேட்பதே தவறு, புனிதம் போன்ற கற்பிதக் கோட்பாடுகளின் உறைவிடமாய் இருப்பவர்களுக்கு இந்த பதிவு ஆத்திரமூட்டுவதாகவே இருக்கும்.


ஆனால், கேள்விகளிலிருந்துதான் விடை பிறக்கிறது எனும் இயங்கியலை நம்புகிறவர்கள் கம்யுனிஸ்டுகள்.


நாட்டின் பாராளுமன்றத்தின் மீது குண்டு வீசப்பட்டுள்ளது, அதற்க்கு உதவியவர் என்பதாக ஒருவர் அரசால் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளார், அவருக்கு ஆதரவாக அவரது மாநில மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள், ஆட்சியிலிருக்கும் அரசோ தனது கைக்கூலி தனத்துக்கும், மொள்ளமாறித்தனத்துக்கும் பெயர் போனது, குண்டு வீச்சு சம்பவத்திற்க்கு பின்னணியான அரசியலோ சிக்கல் மிகுந்தது.


இன்னிலையில் வெகு ஜன மக்களின், குறிப்பாக குட்டி முதலாளித்துவ அறிவுஜிவிக்களின் கடமையாக - ஆளும் வர்க்கத்தின் பின்னால், தேச பக்தி என்று கோசமெழுப்பி வால் பிடிப்பதா? அல்லது எதிர்ப்பு அரசியலின் மனிதாபிமானம் என்ற பெயரில் இன்னொரு வாலைப் பிடித்து வழி நடப்பதா? அல்லது சம்பவத்தை பிரேத பரிசோதனைக்குட்ப்படுத்தி அதன் உண்மையான பொருளில் புரிந்து கொள்வதா? என்ற முடிவுகளில் ஒன்றை எடுக்க வேண்டியதாய் உள்ளது.

அப்சல் இதை செய்தார, செய்யவில்லையா என்பதை இங்கு நான் விவாதிக்கவில்லை. ஒரு வேளை செய்திருந்தால், அதை எப்படி கையாளுவது என்பதை இங்கு விவாதிக்க விரும்புகிறேன். அந்த அம்சத்தில் சில அடிப்படை கேள்விகளை வைத்துள்ளேன். அவற்றில் விவாதம் செய்ய விருப்பமுள்ளவர்கள் வரவேற்க்கப்படுகிறார்கள்.

மேலும், அப்சல் மற்றும் அவரை ஒத்த குழுக்களின் வழி சரி, தவறு என்ற விசயமும் இங்கு விவாதிக்கப்படவில்லை. இஸ்லாம் அடிப்படைவாதம் சரி தவறு என்கிற விசயமும் இங்கு விவாதிக்கப்படவில்லை. For that, இஸ்லாம் அடிப்படைவாதமும் கம்யுனிஸ்டுகளின் ஆகக் கேடான எதிரி என்பதை இங்கு கூறிக் கொள்கிறேன்.


*************


#1)

ஏன் அப்சல் ஒரு தீவிரவாதி?

#2)

ஏன் பாராளுமன்றத்தில் அவர்கள் குண்டு வைத்தார்கள்?

#3)

குண்டு வைத்திருந்தால் எனில் எந்த வகையில் அவர் பகத்சிங்கிடம் இருந்து வேறுபடுகிறார்?

#4)

இது போல ஒருவர் நாட்டின் பாராளுமன்றத்தில் குண்டு வைத்து - இறையாண்மையை தகர்த்திருக்கும் பட்சத்தில், ஒரு மக்கள் நலனை முன்னிறுத்தும், ஜனநாயகமான அரசு என்ன செய்ய வேண்டும்?

#5)
ஒரு மக்கள் நல, ஜனநாயக அரசின் நோக்கம், அப்சலை கொல்லும் விசயத்தில் என்னவாக இருக்க முடியும்?

#6)

காஸ்மீரில் அவருக்கு ஆதரவாக போராட்டம் நடக்கிறதே அதை எப்படி எடுத்துக் கொள்வது?

#7)

தேசப்பற்று என்றால் என்ன?



****

இங்கு ஒரு சின்ன எச்சரிக்கை அப்சலுக்கு ஆதரவாக வாதாடுவதா அல்லது அவரை எதிர்த்து வாதாடுவதா என்ற நிலைப்பாட்டைப் பொறுத்து இந்த கேள்விகள் கேட்க்கப்படவில்லை. இவை அனைத்தும் ஜனநாயகம் என்று நான் நம்பிக் கொண்டிருக்கும் விசயத்தை அடிப்படையாக கொண்டு இது போன்ற எதிர்கால சம்பவங்களில் பொதுவாக எப்படி அனுகுவது என்ற பொது புரிதலை உருவாக்கவே கேட்க்கப்பட்டுள்ளது.

அசுரன்

76 பின்னூட்டங்கள்:

said...

Test

said...

"இஸ்லாம் அடிப்படைவாதமும் கம்யுனிஸ்டுகளின் ஆகக் கேடான எதிரி என்பதை இங்கு கூறிக் கொள்கிறேன்."

are you too islamophobic? you could have posted avoiding this sentence. remove it.

said...

இந்த பதிவில் விவாதம் செய்ய வருபவர்கள் இந்த பிரச்சனையை மிக சுலபமாக இஸ்லாம் மத அடிப்படைவாதத்திற்க்கு ஆதரவாக இருப்பதாக திசை திருப்பும் வாய்ப்பு உள்ளதால், விவாத கருப்பொருளை தெளிவாக அறிவிக்கும் முகமாகவே அந்த வரிகள்.

விமர்சனத்திற்க்கு நன்றி, goodhumanbeing

அசுரன்

said...

அசுரன்,

இன சுத்திகரிப்பு செய்யும் தீவிரவாத
இனக்குழுக்களை சனநாயகம் என்ன முறையில் கையாள வேண்டும் என்பதையும் தெரிவியுங்கள்.

அரசு மற்றும் அரசியலமைப்பை ஏற்ற காரணத்தினால் சாதாரண மனிதன் இனக்குழுக்களால் வேட்டையாடப்படும் இலக்காக மாற்றப்படும் நேரத்தில் அன்றாட செயல்களுக்கு தேவையான அடிப்படை பாதுகாப்பை அரசு என்பது எப்படி வழங்க இயலும்

said...

அசுரன்

பொதுவாக தீவிரவாதி என்றால் அவனுக்கு இந்திய தண்டனைச் சட்டத்தில் அதிகபடசம் கிடைக்கவேண்டும்.

ஆனால் அபசல் பொருத்த வரையில் ஒரு தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை.

நீதி மன்றத்தின் தீர்பின் சில வரிகளாவது கிடைத்தால் ஏதாவது புரியும் என நினைக்கிறேன்.

மற்றபடி நல்லதொரு விவாத்ததை தொடங்கியுள்ளீர்கள்..

நன்றி

said...

1)ஏன் அப்சல் ஒரு தீவிரவாதி?

அவர் இருக்கும் நாட்டிற்கு எதிராக (உதாரணம் பாகிஸ்தானில் ஆயுதப் பயிற்சி) செயல்பட்டதால் அந்த நாட்டின் பார்வையில் அவர் ஒரு தீவிரவாதி.

எந்த ஒரு நாட்டிற்கும் எதிராக செயல்படுபவர்கள் அந்த நாட்டினால் தீவிரவாதியாகத்தான் பார்க்கப்படுவார்கள். இது இயல்பு.


2)ஏன் பாராளுமன்றத்தில் அவர்கள் குண்டு வைத்தார்கள்?

அவர்கள் நம்பும் ஒரு பிரதேச விடுதலை அல்லது அது சார்ந்த இந்தியாவின் நிலைக்கு எதிர்ப்பு காட்ட....


3)குண்டு வைத்திருந்தால் எனில் எந்த வகையில் அவர் பகத்சிங்கிடம் இருந்து வேறுபடுகிறார்?

உலகில் ஒரு நாட்டையோ அல்லது ஒரு அமைப்பையோ எதிர்த்து செயல்படும் யாரும்....

அவர்களின் ஆதரவாளர்களால் -- போராட்டக்காரனாகவும்

எதிர்த்தரப்பினரால் -- தீவிரவாதியாகவும் பார்க்கப்படுகிறார்கள்.

குண்டுவைப்பவனை எல்லாம் பகத்சிங்கிடம் ஒப்பிட்டுப்பார்ப்பது என்று முடிவெடுத்துவிட்டால்... ஏன் அப்சலுடன் மட்டும் நிற்க வேண்டும்?

இரயிலில் குண்டுவைப்பவன்...தெருவில் குண்டுவைப்பவன்..கொலை செய்பவன் எல்லோரையும் ஏதாவது ஒரு சுதந்திரப் போராட்டக்காரனுடன் ஒப்பிட்டுக் கொண்டே போகலாம்.

இதற்கு ஒரு சிறிய புரிதல் அவசியம்.....

உதாரணம்:

Finding Nemo:
இந்தப் படத்தில் பார்வையாளர்கள் அனைவரும் மீனின் சார்பாக படம் பார்க்க வைக்கப்படுகின்றனர். மீன் தப்ப வேண்டும் என்றே அனைவரும் நினைப்பார்கள்.

Brother Bear:
இந்தப் படத்திலும் மீன்கள் உண்டு.யாராவது அதைப் பற்றிக் கவலைப் பட்டார்களா? கேளுங்கள். ஏன் என்றால் படம் கரடி (bear)யின் கதை.
பார்வையாளர்கள் கரடி சார்பாக பார்க்க வைக்கப்படுவர்.
கரடி மீனைப் பிடிக்க முயற்சித்து தோற்கும் போது அது பிடித்துவிடாதா..என்றே பலரும் கவலை கொள்வார்கள்.
கரடிகள் ஒக்காந்து மீன் சாப்பிட்டு வம்பளக்கும் போது பார்வையாளர்களுக்கு போன வருடத்தில் Finding Nemo வில் மீன்களுக்காக வருத்தப்பட்டது ஞாபகம் இருப்பதில்லை.

ஒரு புலி மானை அடித்து உண்ணும் போது நீங்கள் யாரின் சார்பாக அந்த நிகழ்ச்சியைப் பார்க்கின்றீர்கள் என்பதைப் பொறுத்தே அதன் காட்சி தெரியும்.




4)இது போல ஒருவர் நாட்டின் பாராளுமன்றத்தில் குண்டு வைத்து - இறையாண்மையை தகர்த்திருக்கும் பட்சத்தில், ஒரு மக்கள் நலனை முன்னிறுத்தும், ஜனநாயகமான அரசு என்ன செய்ய வேண்டும்?

//ஒரு மக்கள் நலனை முன்னிறுத்தும், ஜனநாயகமான அரசு // :-)))

ஒரு மக்கள் நலனை முன்னிறுத்தும், ஜனநாயகமான அரசு அரசு (உலகத்தின் எந்த பாகத்தில் இருந்தாலும்) அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கும்.

5)ஒரு மக்கள் நல, ஜனநாயக அரசின் நோக்கம், அப்சலை கொல்லும் விசயத்தில் என்னவாக இருக்க முடியும்?

கொல்லும் :-)) இது கொலை அல்ல (சட்டத்தின் பார்வையில்) தண்டனை.
இங்கே தண்டனை தூக்காக ஆகிவிட்டது.

சட்டம் சரியில்லை என்றால் அதை மாற்றத்தான் நாம் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் இருக்கிறார்களே. :-)))

அரசின் நிலை என்று ஒன்று இல்லை. சட்டத்தின் நிலை அவ்வளெவே.

(சட்டம் அரசுக்கு துணை போனதா /இல்லையா என்பது இங்கே விவாதம் அல்ல)

6)காஸ்மீரில் அவருக்கு ஆதரவாக போராட்டம் நடக்கிறதே அதை எப்படி எடுத்துக் கொள்வது?

:-)))

மறுபடியும் 3 ஆம் கேள்விக்கான விடையைப் பார்க்கவும். நீங்கள் யருக்காக எங்கிருந்து பர்க்கின்றீர்கள் என்பதைப் பொருத்து உங்களுக்கு நீங்களே எடுத்துக் கொள்ளலாம். :-)))

7)தேசப்பற்று என்றால் என்ன?

முதலில் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

பற்றுக்கள் எல்லாமே ஒரு கட்டமைப்புதான்.
அந்த கட்டமைப்புகளை எந்த அளவுக்கு உடைக்கமுடியும்..?

உறவு என்ற கட்டமைப்பு......>இந்தக் கட்டமைப்பை சாமியராகி (அல்லது சந்நியாசியாகி) உடைக்கலாம்.

குடும்பம் என்ற கட்டமைப்பு ....>சாமியாராகி விட்டால் பின்பு குடும்பம் ஏது.


தெரு/ஊர் என்ற கட்டமைப்பு ...> வேறு தெருவிற்கோ அல்லது ஊருக்கோ சென்றுவிடலாம்.

மேற்கூறிய மூன்றும் யார் வேண்டுமானலும் செய்யலாம்.

ஆனால்...
நாடு என்ற கட்டமைப்பு ....> பெரிய ஆளாக இருந்தால் பிற நாடுகள் உங்களுக்கு இருக்க இடம் தரும்.

மற்றவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தக் கட்டமைப்பை உடைக்க முடியாது.

இருக்கும் நாட்டை எத்தனை நாடுகளாக பிரித்தாலும் ..உடைத்த பிறகு வரும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும்.

அதுவும் பிடிக்கவில்லையா அதையும் உடை...அந்த உடைப்பினால் வரும் புது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படவேண்டும்....

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நாட்டின் குடிமகன்களே.

அப்படி இருக்கும் பட்சத்தில் அவன் தான்/மனமுவந்து தனது தேசமாக என்னும் (கவனிக்க அவன் அவனாக நம்பினால்தான் உண்டு) அந்த நாட்டின் நல்லது/கெட்டதுகளில் பங்கேற்று வாழ்வது அவன் கடமைகளில் ஒன்று.

இல்லையா பாஸ்போர்ட்டை தூக்கி குப்பையில் போட்டு விட்டு ஒரு International Airpot -ல் செட்டிலாகி விட வேண்டும்.

அப்படி இல்லாமல் பிடிக்காத ஒரு நாட்டின் அடையாளங்களை தாங்குவது விரும்பாத மனைவியுடன் (அல்லது கணவனுடன்) ஊருக்காகச் சேர்ந்து வாழ்வது போல ஆகிவிடும்.

ஒருவன் தனக்கு முதலில் உண்மையாக இருக்க வேண்டும்.தன்னையே நேசிக்கத் தெரியாதவனின் எந்தப் பற்றும் (குடும்பம்,தெரு,ஊர்,மாநிலம்,நாடு,உலகம்...) போலியானது.

முதலில் ஏதாவது ஒரு நாட்டைத் தன் நாடு என்று ஒருவன் நம்பினால்தான் இந்தக் கேள்வி பொருந்தும்.

தனக்கு நாடு என்ற வரைமுறைகளில் நம்பிக்கை இல்லை. சும்மாங்காட்டியும் நாட்டோட இருக்கேன்.என்றால் இந்தக் கேள்வி அர்ததம் அற்றது.

நாடு என்று புவியியல் ரீதியாகவாது நம்பினால்தான் பதில்... :-))))

அப்படி ஒரு நாட்டை நீங்கள் உங்கள் நாடு என்று நீங்களாக நினைக்கும் பட்சத்தில் ...எது தேசப்பற்று இல்லை என்று அட்டவணை போடுங்கள்.மற்றது எல்லாம் சுலபமாக வந்துவிடும்.

குருட்டுத்தனமாக எதன் மீதும் அம்மா சொல்லிக் கொடுத்தாள், மத குரு சொல்ல்லிக் கொடுத்தார், வாத்தியார் சொல்லிக் கொடுத்தார் ...என்று சொல்லாமல் சுயமாக சிந்தித்து வர வேண்டியது.

இப்போது உங்களின் கேள்விக்கு பதில் ...simple

தேசப்பற்று என்றால் என்ன?

ஒரு வீட்டை உங்கள் வீடு என்று நம்பும் பட்சத்தில் (அய்யா நீங்களாக நம்பும் பட்சத்தில்) என்ன செய்ய மாட்டிர்களோ/செய்வீர்களோ அது எல்லாம் ...நீங்கள் உங்கள் நாடு என்று நம்பும் (அய்யா நீங்களாக நம்பும் பட்சத்தில் தான்) நாட்டிற்கும் பொருந்தும்.

ஒன்று வீட்டுப்பற்று (கடமை) மற்றது நாட்டுப் பற்று (கடமை).

உங்கள் வீடாக இருந்தாலும் சமூத்தில் (தெரு,பஞ்சாயத்து..) இருந்து நீங்கள் விலக முடியாது (காட்டிற்கு போனால்தான் உண்டு..அங்கேயும் கூட்டம் வரும் போது இதே பிரச்சனைதான்) அது போல் நாட்டின் சட்டதிட்டங்களில் இருந்தும் விலக முடியாது.

சட்டம் சரியா?
இருக்கும் நாடு சரியா?
அரசாங்கம் உருப்படியா?
...போன்ற பலவகை..யாக்கள் இங்கே விவாதப் பொருள் இல்லையாதலால்...ஜூட்... :-))

said...

பாம்பிற்கு பால் வார்க்கும் தங்கள் சேவை தொடரட்டும்.

said...

Asuran,

I think This post and questions raised by you would stimulate a healthy debate.. I am right now on travel.. I will join this debate by tomorrow..

(Sorry for english)

said...

pople will lose faith in democracy
jawahar

said...

//ஆனால், கேள்விகளிலிருந்துதான் விடை பிறக்கிறது எனும் இயங்கியலை நம்புகிறவர்கள் கம்யுனிஸ்டுகள்//

அசுரன் அண்ணா,

சரிதான். ஆனால் கேள்வி கேட்பவனுக்கு உதை கொடுப்பது தான் உண்மையான கம்யூனிஸ்டின் கடமை என்று கம்யூனிச அறிஞர்கள் சொல்றாங்களே.நிசமா?
இந்த கேள்விக்கு என்ன பதில்?
உதைக்காம சொல்லுங்கய்யா..

பாலா

said...

///
//ஆனால், கேள்விகளிலிருந்துதான் விடை பிறக்கிறது எனும் இயங்கியலை நம்புகிறவர்கள் கம்யுனிஸ்டுகள்//

அசுரன் அண்ணா,

சரிதான். ஆனால் கேள்வி கேட்பவனுக்கு உதை கொடுப்பது தான் உண்மையான கம்யூனிஸ்டின் கடமை என்று கம்யூனிச அறிஞர்கள் சொல்றாங்களே.நிசமா?
இந்த கேள்விக்கு என்ன பதில்?
உதைக்காம சொல்லுங்கய்யா..

பாலா
///


பாலா,

அப்படியாரும் சொல்லியிருந்தா சொல்லுங்க....என்னன்னு பார்ப்போம்.

இதற்க்கு ஆதரப்பூர்வ பதில் சொல்லவில்லையெனில் தங்களை புரளிப் பாண்டியர் என்றுதான் சந்தேகப்பட வேண்டியிருக்கும்(வேறு என்ன செய்வது).

கிருத்துவத்தின் பைபிளில் கேள்விகேட்க்காதே, சந்தேகப்படாதே என்று வருகிறது. இதை எதிர்த்த பாரம்பரியத்தையும் உள்ளடக்கிய கம்யுனிஸம் எதையும் சந்தேகப் பட்டு கேள்வி எழுப்பு என்கிறது. மாவோவின் கலாச்சார புரட்சியும் கூட அப்படித்தான்.

அசுரன்

said...

//மாவோவின் கலாச்சார புரட்சியும் கூட அப்படித்தான்.//

அசுரன் அண்ணா,

மாவோவின் கலாசாரப் புரட்சியில் நம்ம gang of four பூந்து விளையாடி சுமார் 1.5 மில்லியன் கேள்வி கேட்பவர்களை அதாங்க intellectuals ன்னு சொல்வாங்களே ,போட்டு தள்ளினாங்க..
சமீபத்திலே falun gong ஆளுங்களை அடிச்சி நிமித்தினாங்க..டினன்மன் சதுரத்தில் கேள்வி கேட்டவங்களை பெரிய tank எல்லாம் கொண்டு வந்து ஜனநாயக முறையிலே சுட்டு தள்ளினாங்க..
ஸ்டாலின் அய்யா ரஷ்யாவிலே கேள்வி கேட்ட ஆயிரக்கணக்கான மக்களை செர்பியாவுக்கு அனுப்பி புண்ணியம் செஞ்சாரு.

நீங்க இதுக்கெல்லாம் ஒரு ஸ்டாக் பதில் வெச்சிருப்பீங்க..
1) அவங்கள் எல்லாம் உண்மையான கம்யூனிஸ்ட்கள் கிடையாது.

2)இதெல்லாம் அமெரிக்க ஏகாதிபத்தியம் எட்டுக்கட்டிய புரளி.

பாலா

said...

அப்ஸல், அவன் சார்ந்திருக்கும் இயக்கத்தின் கண்ணோட்டத்தில் பகத்சிங் தான்.

ஆனால், அவன் குண்டுவைத்து கொல்ல நினைத்தது, என் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என் மக்களின் பிரதிநிதிகளை (அவர்கள் நல்லவர்களா/கெட்டவர்களா என்பது இங்கு வேண்டாம்).

அவன் செய்ய வந்ததை முழுமையாக செய்திருந்து நமது மந்திரிகளோ, தலைவர்களோ இறந்திருந்தால் அதனால் மிகப் பெரிய அளவில் கலவரங்களும் மதச் சண்டைகளும் அரங்கேறி இருக்கும்.

To stop further activists from creating a mis-adventure, அப்ஸலுக்கு மரண தண்டனை கொடுத்தே தீர வேண்டும்.
(hoping he really committed the crime)

said...

என்ன சொல்ல வர்றீங்க பாலா,

கம்யுனிஸ்டு ஒருத்தன் இங்க எல்லா பிற்போக்கு பன்றிகளையும் வூடு கட்டி அடிச்சிக்கிட்டு இருக்கானே அப்படின்னு வயித்தெறிச்சல்தான் உங்க எதிர்வினைகளில் தெரியுது.

ஏற்கனவே தெளிவாக பதில் சொன்னதையே திரும்ப திரும்ப வடிவேலு மாதிரி பேசுனா என்ன அர்த்தம்? அல்லது உங்களுக்கு மிகவும் நேர்மை அதிகமென்றால் இதே குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் சொன்ன பொழுதே எதிர்வினை செய்திருக்கலாமே? அல்லது இப்பொழுது கூட அந்த எனது பதில்கள் இதே தளத்தில் இருக்கும் பொழுது அங்கு உங்க எதிர்வினைகளை தொடரலாமே?

ஏன், அப்படியில்லாமல் எனது ஒவ்வொரு புதிய பதிவிலும் வந்து ஒரே கேள்விகளைக் கேட்க்கும் உத்தியை கையாளுகிறேர்கள்?(பதிவுக்கு சம்பந்தமில்லாமல்).

இதன் நோக்கம் ஒன்றுதான், கோயபல்ஸின் டெக்னிக். ஒரே விசயத்தை திரும்ப திரும்ப பேசுவது. பொய்யை, அவதூறை உண்மை என்று நிறுவுவது.

விசயம் இதுதான். கம்யுனிச பாணி பொருளாதாரம் மக்களின் வாழ்க்கை துயரங்களை விரட்டி ஒட்டு மொத்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தியாதா, எந்த நாட்டையும் சுரண்டாமல்?, ஆம் செய்தது.

கம்யுனிச நாடுகளில் அது பிற்போக்குவாதிகளின் கையில் அகப்பட்டு மீண்டும் முதலாளித்துவ பாதைக்கு திரும்பியதா? ஆம், திரும்பியது. இது ஏற்கனவே மாவோ, லெனின், ஸ்டாலின் இவர்களின் கணிப்பும் கூட. ஏனெனில் உலக முழுவதும் சோசலிசம் வரும் வரை தனியொரு நாட்டில் சோசலிசம் சிதைக்கப்படுவது சாத்தியமே என்று இவர்கள் பல முறை எச்சரிக்கிறார்கள்.

முந்தைய ரஸ்ய, சீன சோசலிச சமூகங்களில் தவறு இருந்ததா? ஆம், இருந்தது. இவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு இவற்றை களையும் முறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

ஆனால், உறுதியாக ஒரு சோசலிச சமூகத்தின் கால் தூசிக்கு இணையாகக் கூட அநீதி, அடக்குமுறை ஒன்றையே தனது தத்துவமாக கொண்டுள்ள இன்றைய சமூக அமைப்பு வராது.

குழந்தைப் பருவ சோசலிச சமூகங்களின் தவறுகளுக்கும், முதலாளித்துவ பிற்போக்குவாதிகள் சோசலிசத்தின் பெயரில் செய்த தவறுகளுக்கும் பல முறை விளக்கம் கொடுத்தாயிற்று. எனது பிந்தைய பதிவுகளை படியுங்கள் புரியும்.

மேலும், 'லாஸ்ட் எம்பெரர்'(9 ஆஸ்கார் அவார்டு வாங்கிய ஹாலிவுட் படம்) படம் பார்த்தால் கம்யுனிச சீர்திருத்த முகாம் பற்றிய பல்வேறூ பாலா வர்க்கத்தின் அவதூறுகளுக்கு விடை கிடைக்கும். அவை புரளிகள், வதந்திகள் என்பதும் அவர்களின் நேர்மையின் உண்மை முகமும் தெரியவரும்.

பாலா, தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் பேசுவதை எப்பொழுது விடுவதாக உத்தேசம். அல்லது உங்களது கம்யுனிச கேள்விகளை, அவதூறுகளை கம்யுனிசம் பற்றிய எனது பதிவுகளில் இடவும். அங்கு விவாதிப்போம்.

இங்கு அது குறித்த எந்த விவாதமும் அனுமதிக்கப்படாது. அப்புறம் பின்னூட்டத்தை வெளியிடவில்லை என்று வருத்தப்பட்டு பிரோயசனம் இல்லை.

அசுரன்

said...

அசுரன்,
எட்டாவதாக இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்...

#8)பாராளுமன்ற தாக்குதலில் 7 இந்தியர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

said...

////
1)ஏன் அப்சல் ஒரு தீவிரவாதி?

அவர் இருக்கும் நாட்டிற்கு எதிராக (உதாரணம் பாகிஸ்தானில் ஆயுதப் பயிற்சி) செயல்பட்டதால் அந்த நாட்டின் பார்வையில் அவர் ஒரு தீவிரவாதி.

எந்த ஒரு நாட்டிற்கும் எதிராக செயல்படுபவர்கள் அந்த நாட்டினால் தீவிரவாதியாகத்தான் பார்க்கப்படுவார்கள். இது இயல்பு.


2)ஏன் பாராளுமன்றத்தில் அவர்கள் குண்டு வைத்தார்கள்?

அவர்கள் நம்பும் ஒரு பிரதேச விடுதலை அல்லது அது சார்ந்த இந்தியாவின் நிலைக்கு எதிர்ப்பு காட்ட....

////

கல்வெட்டு,

விரிவான பதிலுக்கு நன்றி. முதல் இரண்டு கேள்விகள் சரிதான்.

*************


////
3)குண்டு வைத்திருந்தால் எனில் எந்த வகையில் அவர் பகத்சிங்கிடம் இருந்து வேறுபடுகிறார்?

உலகில் ஒரு நாட்டையோ அல்லது ஒரு அமைப்பையோ எதிர்த்து செயல்படும் யாரும்....

அவர்களின் ஆதரவாளர்களால் -- போராட்டக்காரனாகவும்

எதிர்த்தரப்பினரால் -- தீவிரவாதியாகவும் பார்க்கப்படுகிறார்கள்.

குண்டுவைப்பவனை எல்லாம் பகத்சிங்கிடம் ஒப்பிட்டுப்பார்ப்பது என்று முடிவெடுத்துவிட்டால்... ஏன் அப்சலுடன் மட்டும் நிற்க வேண்டும்?

இரயிலில் குண்டுவைப்பவன்...தெருவில் குண்டுவைப்பவன்..கொலை செய்பவன் எல்லோரையும் ஏதாவது ஒரு சுதந்திரப் போராட்டக்காரனுடன் ஒப்பிட்டுக் கொண்டே போகலாம்..........
...........

ஒரு புலி மானை அடித்து உண்ணும் போது நீங்கள் யாரின் சார்பாக அந்த நிகழ்ச்சியைப் பார்க்கின்றீர்கள் என்பதைப் பொறுத்தே அதன் காட்சி தெரியும்.
////


ஒரு ஜனநாயகவாதியாக பார்ப்பவனுக்கு எந்தப் பக்கமிருந்து பார்க்க வேண்டும் என்பதில் என்ன குழப்பம் வேண்டிகிடக்கிறது என்று எனக்கு புரியவில்லை.

இந்த இடத்தில்,

மான்-சிங்கம் எ-காவுக்கும் அப்சல்-பக்த்சிங் எ-காவுக்கும் ஒரு அடிப்படை வித்தியாசம். முதல் விசயம் உயிரியல், இரண்டாவது விசயம் அரசியல்.

நீங்கள் அந்த அரசியல் விசயத்தைப் கணக்கில் எடுக்கமாலேயே பதில் சொல்கிறீர்கள்.

ஆகவே, இந்த பதிலை இன்னும் ஒரு முறை பரிசீலனை செய்து. தெளிவான இன்னோரு பதில் கொடுத்து உதவுங்களேன் :-))


***************

/////
4)இது போல ஒருவர் நாட்டின் பாராளுமன்றத்தில் குண்டு வைத்து - இறையாண்மையை தகர்த்திருக்கும் பட்சத்தில், ஒரு மக்கள் நலனை முன்னிறுத்தும், ஜனநாயகமான அரசு என்ன செய்ய வேண்டும்?

//ஒரு மக்கள் நலனை முன்னிறுத்தும், ஜனநாயகமான அரசு // :-)))

ஒரு மக்கள் நலனை முன்னிறுத்தும், ஜனநாயகமான அரசு அரசு (உலகத்தின் எந்த பாகத்தில் இருந்தாலும்) அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கும்.
/////



வழக்கு தொடர்ந்து?.... இந்தியா அரசும் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்திய அரசு மக்கள் நல அரசு இல்லை என்பதைத்தான் ஆணித்தரமாக எனது ஒவ்வொரு பதிவும் நிருபிக்கிறது. இந்த விசயம் உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.

இன்னும் சொன்னால் எல்லா அரசு ஊரை ஏமாற்ற வழக்கு தொடர்ந்து சில சம்பிரதாய நடைமுறைகளை கடைபிடித்தே தீரும்(Even, Omar mukthar of libya).

விசயம், இங்கு மக்கள் நலனை முன்னிறுத்தும் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதுதான்.

அது வழக்கு தொடராமலேயே அப்சலை சுட்டுக் கொல்வதாக இருக்கட்டும். அது வேறுவிதமாக விவாதிக்க வேண்டிய விசயம்.

ஆனால், இவை அனைத்தும் அப்சலின் பிரச்சனைகள்(வழக்கு போடுவது, சுட்டுக் கொல்வது etc) இதில் எனக்கோ அல்லது எனது மக்களுக்கோ என்ன வித்தியாசம் வந்துவிடும்(குறைந்த பட்சம் இது போன்ற இன்னோரு அட்டாக் நடக்காது என்று யாரலேயும் சொல்ல முடியுமா? உறுதியாக அந்த குழுவினர் இது போன்ற இன்னுமோரு அட்டாக் வாய்ப்பு கிடைத்தால் செய்வார்கள்).

ஆக, இவை எந்த வகையிலும் மக்கள் நலனை முன்னிறுத்தும் நடவடிக்கைகள் அல்ல. இங்கு நான் இந்த நடவடிக்கைகள் சரி தவறு என்ற அம்சத்தில் சொல்லவில்லை. மாறாக, மக்கள் நனலை முன்னிறுத்தும் ஏதோ ஒன்று நடக்கவில்லை. அது என்ன என்பதை விவாதத்தின் மூலம் கண்டடையலாம் என்று விருப்பபட்டேன்.

*****************


/////
5)ஒரு மக்கள் நல, ஜனநாயக அரசின் நோக்கம், அப்சலை கொல்லும் விசயத்தில் என்னவாக இருக்க முடியும்?

கொல்லும் :-)) இது கொலை அல்ல (சட்டத்தின் பார்வையில்) தண்டனை.
இங்கே தண்டனை தூக்காக ஆகிவிட்டது.

சட்டம் சரியில்லை என்றால் அதை மாற்றத்தான் நாம் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் இருக்கிறார்களே. :-)))

அரசின் நிலை என்று ஒன்று இல்லை. சட்டத்தின் நிலை அவ்வளெவே.

(சட்டம் அரசுக்கு துணை போனதா /இல்லையா என்பது இங்கே விவாதம் அல்ல)
////



""சட்டம் சரியில்லை என்றால் அதை மாற்றத்தான் நாம் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் இருக்கிறார்களே. :-)))""

இந்த மேற்சொன்ன வரிகள் நீங்கள் சொல்வதுதானா? :-)

என்ன கல்வெட்டு இப்படி? சரி விடுங்கள்.

அப்சலை கொல்வதன்(அது தண்டனையாக இருந்தாலும் கொல்வதுதான். எல்லா அரசுக்கும் இதுதான். சோசலிச அரசுக்கும் கூட) மூலமாக மக்கள் நலனுக்கு என்ன செய்து விடும் இந்த அரசு என்பதே கேள்வி. மாறாக, அப்சலை கொல்லலாமா, கொல்லக் கூடாதா என்பதல்ல.

விசயம் அப்சலை பற்றியது அல்ல. விசயம் அப்சல் பிரச்சனையை கையாள்வதில் மக்கள் நலனை எப்படி உறுதிப்படுத்துவது என்பது பற்றி. எனவே அப்சல் சரி, அரசு சரி என்ற வாதங்கள் தேவையற்றது.

for the sake of argument, அப்சல் கண்டிக்கப்பட வேண்டிய கடும் குற்றவாளி, அரசு மிக நல்ல அரசு(ஒரு சோசலிச அரசு:-)) என்று ஒரு கற்பனை செய்து கொள்வோம்.

இப்போ இந்த அரசுக்கு அதன் நடவடிக்கைகள் குறித்து நீங்கள் ஆலோசனை சொல்ல வேண்டும். என்ன செய்வீர்கள்.

*************

//////
6)காஸ்மீரில் அவருக்கு ஆதரவாக போராட்டம் நடக்கிறதே அதை எப்படி எடுத்துக் கொள்வது?

:-)))

மறுபடியும் 3 ஆம் கேள்விக்கான விடையைப் பார்க்கவும். நீங்கள் யருக்காக எங்கிருந்து பர்க்கின்றீர்கள் என்பதைப் பொருத்து உங்களுக்கு நீங்களே எடுத்துக் கொள்ளலாம். :-)))

/////

அப்போ ஒரு ஐரோப்பியராக இருந்த மார்க்ஸும், ஏங்கெல்ஸும் கால்னியாதிக்கத்தை கண்டிக்க மாட்டார்களா?

அடிப்படை ஜனநாயகமும், மனிதாபிமானமும் கொண்டு இந்த விசயத்தை ஆய்வு செய்து இந்திய மக்களின் பிரச்சனையான இதற்க்கு விடை கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும்.

காஸ்மீரில் ஆதரவாக போராட்டம் நடக்கிறது எனில் ஒரு ஜனநாயகவாதி முதலில் அந்த பெரும்பான்மையின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பிறகுதான் அந்த உணர்வுகளுக்கான அடிப்படை சரியா, தவறா என்பது பற்றி அவர்களுக்கு போதிக்க முடியும்.

அப்போதான் அவர்களும் அதை காது கொடுத்துக் கேட்பார்கள். ஆகவே இந்த அம்சத்தில் உங்கள் கருத்தை சொல்லுங்களேன்.


********************

////
7)தேசப்பற்று என்றால் என்ன?

முதலில் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

பற்றுக்கள் எல்லாமே ஒரு கட்டமைப்புதான்.
அந்த கட்டமைப்புகளை எந்த அளவுக்கு உடைக்கமுடியும்..?

உறவு என்ற கட்டமைப்பு......>இந்தக் கட்டமைப்பை சாமியராகி (அல்லது சந்நியாசியாகி) உடைக்கலாம்.

குடும்பம் என்ற கட்டமைப்பு ....>சாமியாராகி விட்டால் பின்பு குடும்பம் ஏது.


தெரு/ஊர் என்ற கட்டமைப்பு ...> வேறு தெருவிற்கோ அல்லது ஊருக்கோ சென்றுவிடலாம்.

மேற்கூறிய மூன்றும் யார் வேண்டுமானலும் செய்யலாம்.

ஆனால்...
நாடு என்ற கட்டமைப்பு ....> பெரிய ஆளாக இருந்தால் பிற நாடுகள் உங்களுக்கு இருக்க இடம் தரும்.

மற்றவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தக் கட்டமைப்பை உடைக்க முடியாது.

இருக்கும் நாட்டை எத்தனை நாடுகளாக பிரித்தாலும் ..உடைத்த பிறகு வரும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும்.

அதுவும் பிடிக்கவில்லையா அதையும் உடை...அந்த உடைப்பினால் வரும் புது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படவேண்டும்....

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நாட்டின் குடிமகன்களே.

அப்படி இருக்கும் பட்சத்தில் அவன் தான்/மனமுவந்து தனது தேசமாக என்னும் (கவனிக்க அவன் அவனாக நம்பினால்தான் உண்டு) அந்த நாட்டின் நல்லது/கெட்டதுகளில் பங்கேற்று வாழ்வது அவன் கடமைகளில் ஒன்று.

இல்லையா பாஸ்போர்ட்டை தூக்கி குப்பையில் போட்டு விட்டு ஒரு International Airpot -ல் செட்டிலாகி விட வேண்டும்.

அப்படி இல்லாமல் பிடிக்காத ஒரு நாட்டின் அடையாளங்களை தாங்குவது விரும்பாத மனைவியுடன் (அல்லது கணவனுடன்) ஊருக்காகச் சேர்ந்து வாழ்வது போல ஆகிவிடும்.

ஒருவன் தனக்கு முதலில் உண்மையாக இருக்க வேண்டும்.தன்னையே நேசிக்கத் தெரியாதவனின் எந்தப் பற்றும் (குடும்பம்,தெரு,ஊர்,மாநிலம்,நாடு,உலகம்...) போலியானது.

முதலில் ஏதாவது ஒரு நாட்டைத் தன் நாடு என்று ஒருவன் நம்பினால்தான் இந்தக் கேள்வி பொருந்தும்.

தனக்கு நாடு என்ற வரைமுறைகளில் நம்பிக்கை இல்லை. சும்மாங்காட்டியும் நாட்டய்ட இருக்கேன்.என்றால் இந்தக் கேள்வி அர்ததம் அற்றது.

நாடு என்று புவியியல் ரீதியாகவாது நம்பினால்தான் பதில்... :-))))

அப்படி ஒரு நாட்டை நீங்கள் உங்கள் நாடு என்று நீங்களாக நினைக்கும் பட்சத்தில் ...எது தேசப்பற்று இல்லை என்று அட்டவணை போடுங்கள்.மற்றது எல்லாம் சுலபமாக வந்துவிடும்.

குருட்டுத்தனமாக எதன் மீதும் அம்மா சொல்லிக் கொடுத்தாள், மத குரு சொல்ல்லிக் கொடுத்தார், வாத்தியார் சொல்லிக் கொடுத்தார் ...என்று சொல்லாமல் சுயமாக சிந்தித்து வர வேண்டியது.

இப்போது உங்களின் கேள்விக்கு பதில் ...simple

தேசப்பற்று என்றால் என்ன?

ஒரு வீட்டை உங்கள் வீடு என்று நம்பும் பட்சத்தில் (அய்யா நீங்களாக நம்பும் பட்சத்தில்) என்ன செய்ய மாட்டிர்களோ/செய்வீர்களோ அது எல்லாம் ...நீங்கள் உங்கள் நாடு என்று நம்பும் (அய்யா நீங்களாக நம்பும் பட்சத்தில் தான்) நாட்டிற்கும் பொருந்தும்.

ஒன்று வீட்டுப்பற்று (கடமை) மற்றது நாட்டுப் பற்று (கடமை).

உங்கள் வீடாக இருந்தாலும் சமூத்தில் (தெரு,பஞ்சாயத்து..) இருந்து நீங்கள் விலக முடியாது (காட்டிற்கு போனால்தான் உண்டு..அங்கேயும் கூட்டம் வரும் போது இதே பிரச்சனைதான்) அது போல் நாட்டின் சட்டதிட்டங்களில் இருந்தும் விலக முடியாது.

சட்டம் சரியா?
இருக்கும் நாடு சரியா?
அரசாங்கம் உருப்படியா?
...போன்ற பலவகை..யாக்கள் இங்கே விவாதப் பொருள் இல்லையாதலால்...ஜூட்... :-))
/////////



உங்களின் இந்த நீண்ட கருத்திலிருந்து தெரியவருவது, நாடு என்பது புவியியல் பரப்பில், சட்ட திட்டங்களால் ஏற்ப்படுவது ஆகும் என்று.

எனில் இந்தியா எனது நாடுதான், ஆனால் இதன் சட்ட திட்டங்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது. எனக்கு நாட்டுப் பற்று கிடையாதா?

விசயம் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களின் நலம் என்பதில் உள்ளது. டாலர் செல்வன் ஒரு முறை குறிப்பிட்டது போல தேசப்பற்று என்பது புவிப்பரப்பின் மீதான காதல் அல்ல. குறிப்பிட்ட கலாச்சார, வரலாறு, அரசு, புவியியல் ரீதியாக அடையாளப்படுத்தப்படும் எனது மக்கள் மீதான காதல்.

சரி, காஸ்மீரிகளின் அப்சல் விசயத்திலான எதிர்ப்பு தேசப்பற்றா இல்லையா?

அசுரன்

said...

சரியாக கேள்வி எழுப்பியுள்ளார் அனானி,

//இன சுத்திகரிப்பு செய்யும் தீவிரவாத
இனக்குழுக்களை சனநாயகம் என்ன முறையில் கையாள வேண்டும் என்பதையும் தெரிவியுங்கள்.//

இந்த விசயத்தில் ஒரு முடிவை எட்டவே இந்த விவாதம். எனவே விவாதத்தின் போக்கில் விடை தெரியும்.

மீண்டும் ஒரெ விசயம்தான். மக்கள் விரோதிகளுக்கு ஜனநாயகமா இல்லையா என்பது அல்ல பிரச்சனை. ஆனால் அவர்களை எப்படி கையாளுகிறோம் என்பதில் அடங்கியுள்ள மக்கள் நலனே பிரச்சனை.




//அரசு மற்றும் அரசியலமைப்பை ஏற்ற காரணத்தினால் சாதாரண மனிதன் இனக்குழுக்களால் வேட்டையாடப்படும் இலக்காக மாற்றப்படும் நேரத்தில் அன்றாட செயல்களுக்கு தேவையான அடிப்படை பாதுகாப்பை அரசு என்பது எப்படி வழங்க இயலும் //

இந்த வேலையை அரசே செய்யும் பட்சத்தில் அந்த அரசை என்ன செய்ய? (இந்தியா, காஸ்மீரில் -NORTH EASTல் செய்வது).

மேலும், அரசு தனது நடவடிக்கைகளை மையப்படுத்துக்கிறது. ஏனெனில் இது சிறுபான்மை அரசு, பெரும்பான்மையை சுரண்டி வாழும் அரசு. எனவே இந்த பெரும்பான்மையின் கையில் அதிகாரத்தைக் கொடுப்பதில் அதற்க்கு பாதகமான அம்சம்தான் எஞ்சியுள்ளது. அதனால்தான் பிரச்ச்னை.

உண்மையில் இந்த அரசு மக்களையா பாதுகாக்கிறது(42 வெள்ள நிவாரணப் பணி, பஞ்சம் பட்டினி சாவுகள், தற்கொலைகள், ஆக்கிரமிப்பு எனக் கூறி விட்டை இடித்து லட்சக்கணககானோரை நடுத்தெருவில் நிறுத்துவது)?

இல்லை. அது தனது இருப்பை பாதுகாக்க ஆயுதப் படை கொண்டு தனது பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பை வலுப்படுத்துகிறது.

இந்த தீவிரவாத பயத்தை தொடர்ந்து தானே உற்பத்தி செய்து அதன் மூலம் எஞ்சியுள்ள சொற்ப ஜனநாயக இடைவேளிகளையும் தகர்க்கிறது. ஒட்டு மொத்த சமூகத்தையே, மக்களையே குற்றவாளியாக்குகிறது.

மக்கள் விரோதி நம்மிடையேதானே உள்ளான்...? மக்களின் கையில் அதிகாரத்தைக் கொடு. பிறகு பார்ப்போம் மக்கள் அரசை காக்கிறார்களா? அல்லது அரசு மக்களை காக்கிறதா என்று.

அதை செய்வதற்க்கான நேர்மை இந்த அரசுக்கு கிடையாது.

அசுரன்

said...

அசுரா

அருமையான விவாதம் .. அடிச்சு ஆடும்மா:))

said...

//பொதுவாக தீவிரவாதி என்றால் அவனுக்கு இந்திய தண்டனைச் சட்டத்தில் அதிகபடசம் கிடைக்கவேண்டும்.

ஆனால் அபசல் பொருத்த வரையில் ஒரு தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை.

நீதி மன்றத்தின் தீர்பின் சில வரிகளாவது கிடைத்தால் ஏதாவது புரியும் என நினைக்கிறேன்.

மற்றபடி நல்லதொரு விவாத்ததை தொடங்கியுள்ளீர்கள்..
//

சிவபாலன் வருகைக்கு நன்றி,

அப்சல் தீவிரவாதியா, அவனை தண்டிக்கலாமா கூடாதா என்பதை இங்கு பேசவில்லை.

அந்த சம்பவத்தை கையாள்வதன் மூலம் எப்படி மக்கள் நலனை உறுதிப்படுத்துவது என்பதுதான் இங்கு விவாதம்.

forget அப்சல் for the time being. Thus நீதிமன்ற தீர்ப்பின் சரத்துக்களையும் கூட. அவை எந்த வகையிலும் நமக்கு உதவப் போவதில்லை.

அசுரன்

said...

//ஆனால், கேள்விகளிலிருந்துதான் விடை பிறக்கிறது எனும் இயங்கியலை நம்புகிறவர்கள் கம்யுனிஸ்டுகள்////
//விசயம் இதுதான். கம்யுனிச பாணி பொருளாதாரம் மக்களின் வாழ்க்கை துயரங்களை விரட்டி ஒட்டு மொத்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தியாதா, எந்த நாட்டையும் சுரண்டாமல்?, ஆம் செய்தது.//

அசுரன் அண்ணா,

நீங்கள் இந்த விவாதத்திற்கு சம்பந்தமில்லாமல் கம்யூனிச துதி பாடியதால் நானும் கேள்வி கேட்டேன்.

சரி இந்த பதிவுக்கு வருவோம்..

முதலில் சில கேள்விகள்..

1) சுப்ரீம் கோர்ட் என்ற அமைப்பு தேவையா?
2)இந்த அஃப்சல் கேசில் சுப்ரீம் கோர்ட் சரியான தீர்ப்பை வழங்கியதாக கருதுகிறீர்களா?
3)சுப்ரீம் கோர்ட் தேவையில்லை என்று நீங்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் பரிந்துரைக்கும் மாற்றமைப்பு என்ன?
ப்ராகஷ் கரத் அல்லது நம்ம சுகுமாரன்/அருந்ததி ராய் அவங்க சொல்றது தான் தீர்ப்பு என்ற அமைப்பு தான் சிறந்ததா?

பாலா

said...

we the people தளத்தில் நான் கேட்டிருந்த கேள்விகளை இங்கும் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கருதினேன்.

http://wethepeopleindia.blogspot.com/2006/10/blog-post_18.html

********

கேள்வி ரொம்ப சுலபம், அதை மறைமுகமாக குமரண் எண்ணம் கேட்கிறார். ஆனால் We the People வோ, அப்சலை நியாயப்படுத்த விளைவதாக தவறாக எண்ணி எதிர்வினை புரிகீறார்.

கொஞ்சம் தெளிவு படுத்திக் கேட்க்கலாம் என்று தோன்றுகிறது.

* அப்சலை தண்டிப்பது நோக்கமா? அல்லது மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பது நோக்கமா?

* இரண்டுக்கும் என்ன தொடர்பு உள்ளதா? இருந்தால் அது என்ன?

* அப்படி தொடர்பு இல்லையெனில் தீர்வு என்ன?

* ஜனநாயகம் என்பது என்ன? காஸ்மீரிகளின் மீது இந்திய இறையாண்மையை திணிப்பதா?

***********

இது இங்கு நான் சேர்த்த பிற்சேர்க்கை:

இன்னும் தெளிவாக,

அப்சலை தண்டிப்பதா இல்லையா என்பதை நான் கேள்விக்குள்ளாக்கவில்லை அதன் மூலம் யார் என்ன சாதிக்க விரும்புகிறார்கள் என்பதை கொஞ்சம் ஆராய்ச்சி செய்வோமே என்பதைத்தான் வலியுறுத்துகிறேன்.

தேசபகத தேச விரோதிகளுக்கு அரசியல் ஆதாயம், தரகு வர்க்க மாமாக்களுக்கு சிறுபான்மை வோட்டு அரசியல், மக்களுக்கு மாலை நேர கிசு கிசு.

ஆனால் இந்த ஒட்டு மொத்த நிகழ்ச்சிப் போக்கில் who is the looser? அப்சலா? அப்சலை இயக்கிய அரசியல் தீர்வா?

ஒரே விருப்ப குழுவைச் சேர்ந்த இரு தரப்பட்ட மக்களிடையே(இந்தியா, காஸ்மீர்) ஒரு போலியான முரன்பாட்டை உருவாக்கி அதில் கிடைக்கும் அரசியல் இடைவெளியில்(பயங்கரவாதம், மத அடிப்படைவாதம்) தனது அராஜக செயல்பாடுகளுக்கு ஆதரவான பொதுக் கருத்தை உருவாக்குவதில் இந்த ஆளும் வர்க்கம் வெற்றி பெற்றுள்ளதே?

பொடா வைவிட கொடியதொரு அடுத்த சட்டத்துக்கு அடித்தளம் போட்டுள்ளதே(பிரதமர் அலுவலகத்தின் சமீபத்திய ஒரு பத்திரிக்கை அறிக்கை)?

இதன் மூலம் ஒட்டு மொத்த குடிமக்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற ஆதரவு கோரும் மனநிலையை உருவாக்கி உள்ளதே இந்த அரசு?

அப்சல் தூக்கிலிடப்படுவார், நாமும் நீதி நிலைநாட்டப்பட்டு விட்டதாக அசுவாசப்படுத்திக் கொள்ளலாம், ஆனால் பிரச்சனை மட்டும் அதே நிலையில் உள்ளதே? அதாவது ஏதோ பிரச்சனை என்பது அப்சலுடன் ஆரம்பித்து அப்சலுடன் முடிந்தது போல.

புதிய பிரச்சனைகளும் உருவாகியுள்ளதே?

வெற்றி பெற்றவர்கள் யார் என்பதில் சந்தேகமில்லை. பாரளுமன்ற பன்றிகளும், மத அடிப்படைவாதிகளுமே.

சரி, தோல்வியுற்றவர்கள் யார்? உறுதியாக அப்சலோ அவரது குழுவோ, அரசோ, மத பிற்போக்குவாதிகளோ அல்ல.

இந்த கேள்விகளுக்கு யார் பதில் சொல்லுவது?

வேறுயார் நாம்தான்.....

***************

//அசுரா

அருமையான விவாதம் .. அடிச்சு ஆடும்மா:))

//

தி ராஸ்கோலு,

வருகைக்கும் ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்கும் நன்றி

அசுரன்

said...

அசுரன் அவர்களே: கேள்விகளின் சுருக்கம் என்ன செய்தால் மக்களுக்கு உபயோகமாக இருக்கும். அப்சல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டிருப்பதால் நமக்கு இரண்டு அல்லது மூன்று பதில்களே உள்ளன.
1. அப்சலுக்கு தண்டனை குறைப்பு - 14 வருட கடுங்காவல் (ஆயுள்). இதனால் பாதகங்கள் - (அ) தண்ட பராமரிப்புச் செலவு (ஆ)மற்றுமொரு விமானம் கடத்தப்படும் (முப்தியின் மகளோ, அல்லது தற்போதைய முதல்வரின் மகனோ) பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டு, இந்த அரசு அப்சலையும் விடுவித்து, இவர்களையும் மீட்கும். (இ)இந்திய உயிர்களின் மதிப்பிற்கு விலை இல்லை என்பதை தீவிரவாதிகள் நன்கு உணர்வார்கள் (ஈ)மற்றுமொரு தாக்குதல் மிக சாதாரணமாகப் பார்க்கப்படும் - தவறான முன்னுதாரணமாகி விடும். (உ) உலக அரங்கில் நம் கையாலாகாத்தனம் பட்டவர்த்தனமாகி, சிறிய நாடுகள் கூட வாலாட்ட யோசிக்கும்.
சாதங்கள்: ஒன்றுமில்லை.

2. அப்சலுக்குத் தூக்கு - மேற்கூறிய பாதகங்கள் அனைத்தும் சாதகங்கள் ஆகும். நம்மைத் தாக்க நினைப்பவர்கள் யோசிப்பார்கள். அதுவே நமக்கு பெரிய வெற்றி.
பாதங்கள்: அப்சலின் சொந்த ஊர்காரர்கள் கொஞ்ச நாட்களுக்கு கடை அடைப்பார்கள். அது காஷ்மீருக்குப் புதிதல்ல. இயல்பு வாழ்கையே. பிறகு தங்கள் பிழைப்பைப் பார்க்க ஓடுவர். ஓரிருவர் பாகிஸ்தான் சென்று இன்னும் கடுமையாக பயிற்சி எடுப்பர். அதனால் பாகிஸ்தானிற்கு கூடுதல் செலவு. மறுபடியும் இங்கு வந்து வாலாட்ட நினைத்து உயிர் இழப்பர்.

3. நமது திராவிட பாரம்பரியப்படி அவனுக்கும் பொது மன்னிப்பு வழங்கி அரசு செலவிலேயே ஹஜ் புனித பயணம் அனுப்பலாம் :-)

3.

said...

அசுரன்,

உங்க கேள்வி எதுக்காவது அந்த தேசிய தறுதலைங்க பதில் கொடுத்திருக்காங்களா?

said...

கிருஷ்ணா மாதிரி பாப்பார குஞ்சுகள் காமகேடி சங்கரனுக்கு தூக்கு தண்டனை கொடுத்தா என்னா பேசுவானுங்க தெரியுமா?

said...

பாலா,

என்னுடைய கட்டுரையில் எனது பாணியில்தான் விசயங்களை சொல்ல முடியும். அதை வரிக்கு வரி பேசுவது என்றால் விவாத தலைப்பு எதற்க்கு? மையக் கருத்து எதற்க்கு? கம்யுனிசம் என்ற வார்த்தை இருந்தாலே அந்த பதிவில் கம்யுனிசத்தை விவாதிக்க வேண்டுமா?

அல்லது கம்யுனிசம் பற்றி நான் எல்லா இடத்திலும் பேசுவது உங்களுக்கு எரிச்சல் தருகிறதா?

மேலும் இரண்டாவதாக நீஙக்ள் கொடுத்துள்ளது, எனது பின்னூட்டத்தில் உள்ள கருத்து அதுவும் உங்களுக்கான எதிர்வினையாக கொடுத்தது. அதை பதிவில் உள்ள கருத்து என்று உணர்வு வருவது போல இட்டு ஏன் திரித்தல் வாதம் செய்கிறீர்கள்?

சரி விடுங்கள், ஓரளவு உருப்படியான கேள்விகள் கேட்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள். இதே மாதிரி கன்டினியு செய்யுங்கள். ஏனெனில் ஒரே பதிவில் இரண்டு சம்பந்தமில்லா விசயங்களை விவாதம் செய்வது எனக்கும் அயற்ச்சியை தரும். படிப்பவர்களுக்கும் எதுவும் விசயம் உருப்படியாக போய் சேராது.

அண்ணா என்று கூப்பிட வேண்டாம்... ஏனெனில் I am also youth :-)))(just 18years old சும்மா...) .

நண்பர் என்று கூப்பிடுங்கள், அசுரா என்று கூப்பிடுங்கள், தோழர் என்று கூப்பிடுங்கள்.

**************

//1) சுப்ரீம் கோர்ட் என்ற அமைப்பு தேவையா?//

இந்த பதிவில் விவாதிக்கும் விசயத்தை பொறுத்த வரை இந்த கேள்விக்கான நேரம் வரவில்லை. ஏனெனில், இன்னும் அப்சல் விசயத்தில் சரியான அனுகுமுறை என்ன என்பதை தெளிவாக்கவில்லை. அதை தெளிவுபடுத்தி பிறகு அந்த அனுகுமுறையைத்தான் சுப்ரீம் கோர்ட் செய்ததா என்பதைப் பார்த்து, பிறகு வேறு சில பிரச்சனைகளிலும் சுப்ரீம் கோர்ட்டின் பொதுவான நடைமுறை என்ன என்பதை பார்த்து முடிவு செய்ய வேண்டிய விசயம். அந்த கட்டத்தை இந்த விவாதம் எட்டும் பொழுது விடை தானே வெளிவரும்.

எனது தனிப்பட்ட கருத்து அது ஒரு ஆளும் வர்க்க அடக்குமுறைக் கருவி.



////2)இந்த அஃப்சல் கேசில் சுப்ரீம் கோர்ட் சரியான தீர்ப்பை வழங்கியதாக கருதுகிறீர்களா?///

அப்சல் விசயத்தில் வழங்கப்படும் தீர்ப்பு குறித்து எந்த விவாதமும் பயனளிக்கப் போவதில்லை. இந்த தீர்ப்பின் மூலமும், இந்த சம்பவத்தை இந்த அரசு கையாண்டதன் மூலமும் யார் பலனடைந்தார்கள்? மக்களின் உண்மையான பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தா? என்பதை ஆய்வு செய்வதுதான் நமக்கு முக்கியமான விசயமாக உள்ளது.




//
3)சுப்ரீம் கோர்ட் தேவையில்லை என்று நீங்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் பரிந்துரைக்கும் மாற்றமைப்பு என்ன?///

மக்கள் நீதிமன்றங்கள்தான். இது உடனடி சாத்தியமான விசயமில்லை. இது மக்கள் தங்களுக்கான விசயங்களை தாங்களே போராடி பெறுவதன் மூலமும், அரசு அதிகாரத்தை தஙக்ள் கையில் எடுத்து நிர்வாகம் செய்வதை வளமையாக்கிக் கொள்ளும் அனுபவத்திலும் சிறிது காலம் எடுத்தே வரும் ஒரு அமைப்பு. அதுவரை என்னவிதமான அமைப்பு என்பது குறித்து இங்கு விவாதப் பொருளாக இல்லை.




//
ப்ராகஷ் கரத் அல்லது நம்ம சுகுமாரன்/அருந்ததி ராய் அவங்க சொல்றது தான் தீர்ப்பு என்ற அமைப்பு தான் சிறந்ததா?//

இல்லை. ப்ராக்ஸ் காரத்தின் அமைப்பான CPMயை கம்யுனிஸ்ட் கட்சியாகக் கூட கருதவில்லை.

மற்றபடி அருந்ததி, சுகுமாரனின் கருத்து தெரியவில்லை. ஆனால் அவர்(சுகுமாரன்) தேசிய இன பிரச்சனை ரீதியாக இந்த விசயத்தை அனுகியிருப்பார் என்று யூகிக்கிறேன். அப்படியிருக்கும் பட்சத்தில் அதை உள்வாங்கி பரிசீலிப்பதில் எதுவும் குறைந்து விடப் போவதில்லை. ஏன், சிந்திப்பதால் ஏதேனும் மூளையில் குண்டு வெடித்து விடுமா? சுகுமாரனோ, அருந்ததியோ யாருடைய கருத்தையும் பரிசீலனைக்கு எடுப்பதில் என்ன பிரச்சனை வந்து விடப் போகிறது? இங்கே கூட பாலா முதல் அசுரன் வரை அனைவரின் கருத்துக்களுக்கும் வழி கொடுக்கப்பட்டது ஒரு பிரச்சனையின் பன்முகத்தன்மையை தெரிந்து கொள்ளவே.

அசுரன்

said...

//அசுரன்,
எட்டாவதாக இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்...

#8)பாராளுமன்ற தாக்குதலில் 7 இந்தியர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
//

பாராளுமன்ற தாக்குதலுக்கு காரணமான காஸ்மீர் பிரச்சனை அரசியலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி காஸ்மீரி இந்தியர்களும், அப்பாவி இந்திய ராணுவ வீரர்களும், பார்ப்பன பண்டிட்களும் கொல்லப்பட்டுள்ளனரே? அது குறித்து ஏன் பேசாமல் மௌனம் சாதிக்கிறீர்கள் அனானி?

ஏன் மேற்சொன்ன லிஸ்டில் உள்ளவர்கள் எல்லாம் இந்தியர்கள் கிடையாதா அல்லது பாரளுமன்ற புனித பூமியில் இறக்கும் ஒருவன் மட்டுமே இந்தியன் என்ற மேன்மையை பெறுவானா?

அது குறித்து எந்த தேசியவாத ஜல்லி கும்பலும் பேசவில்லையே அந்த செவிட்டுத்தனத்தைத்தான் கேள்விக்குள்ளாக்க வேண்டியுள்ளது. அதுதான் எட்டாவது கேள்வியாக இருக்க வேண்டும்.

அதாவது எங்கே குண்டு போட்டால் இந்திய உழைக்கும் மக்களின், நடுத்தர வர்க்க அறிவு ஜீவிக்களின் போலி தேசிய செவிப்பறை ஓடு கிழிந்து மக்கள் கேட்க்கும் சக்தி பெறுவார்கள் என்ற கேள்வி(பகத்சிங் பாராளுமன்றத்தில் போட்டது போல).

அசுரன்

said...

//Anonymous said...
கிருஷ்ணா மாதிரி பாப்பார குஞ்சுகள் காமகேடி சங்கரனுக்கு தூக்கு தண்டனை கொடுத்தா என்னா பேசுவானுங்க தெரியுமா?
//
அசுரன்: தங்களுடைய கேள்விகளுக்கு என்னுடைய கருத்துக்களை பதிலாக வைத்துள்ளேன். இதில் தங்களுக்கு ஒப்புமை இல்லாதிருந்தால், என்னுடைய பின்னூட்டத்தை பிரசுத்திருக்கத் தேவையில்லை. அது தங்களுடைய கருத்தாக இருக்காது என்பதே என் நம்பிக்கை. மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளித்து பதிலளிக்கும் தாங்கள் மேலே சுட்டப்பட்டிருக்கும் விதமான தனிமனித தாக்குதல்களால் தங்கள் பதிவு தரமிழப்பதை எப்படி அனுமதிக்கிறீர்கள் என்பது புரியவில்லை.

அன்பு அனானி: நான் தூக்கு தண்டனைக்கு எதிரி தான். ஆனால் சில இந்தியர்களின் உயிரைப் பறித்த ஒருவன் வாழ்ந்து சாதிக்கப் போவது என்ன? காஞ்சியோ அல்லது பிஷப்போ அல்லது மெளல்வியோ - இப்படி ஒரு குற்றம் புரிந்தால் தூக்கிலிடப் பட வேண்டும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.

said...

//அப்ஸல், அவன் சார்ந்திருக்கும் இயக்கத்தின் கண்ணோட்டத்தில் பகத்சிங் தான்.

ஆனால், அவன் குண்டுவைத்து கொல்ல நினைத்தது, என் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என் மக்களின் பிரதிநிதிகளை (அவர்கள் நல்லவர்களா/கெட்டவர்களா என்பது இங்கு வேண்டாம்).

அவன் செய்ய வந்ததை முழுமையாக செய்திருந்து நமது மந்திரிகளோ, தலைவர்களோ இறந்திருந்தால் அதனால் மிகப் பெரிய அளவில் கலவரங்களும் மதச் சண்டைகளும் அரங்கேறி இருக்கும்.

To stop further activists from creating a mis-adventure, அப்ஸலுக்கு மரண தண்டனை கொடுத்தே தீர வேண்டும்.
(hoping he really committed the crime) //



bad news India,

தங்கள் வருகைக்கு நன்றி,

பாராளுமன்ற தாக்குதல் நிறைவேறியிருந்தால் என்னவாகியிருக்கும் என்ற தங்களது யூகம் சரியே.

இதைத்தான் அவர்களும் எதிர்பார்த்தார்கள். ஒரு வகையில் ஆளும் வர்க்கமும் கூட(BJP - மத அரசியல், காங்கிரஸ் etc - எதிர் கட்சி அரசியல்).

அப்சலை தூக்கில் போடுங்கள், அல்லது வேறு எங்காகிலும் போடுங்கள் அது இங்கே விவாதிக்க விரும்பவில்லை. ஆனால், அப்சலை தூக்கில் போடுவது தீர்வா என்பதுதான் எனது கேள்வி.

எந்த அடிப்படையில் மீண்டும் இதே போன்றோ அல்லது இதை விட மோசமான விளைவுகளை உருவாக்கும் தாக்குதலோ இருக்காது என்று நினைக்கிறீர்கள்?

அதை தவிர்ப்பதில் இன்றைய ஆளும் வர்க்கதின் நேர்மை என்ன?

அசுரன்

said...

கிருஷ்ணா, மற்றூம் அனானி,

இருவரும் தனிமனித தாக்குதலில் பிரச்சனைக்கு சம்பந்தமில்லாமல் இறங்கினீர்கள். ஹஜ் பயணம் இத்தியாதி என்று கூறி மறைமுகமாக குத்திப் பேசினார் கிருஷ்ணன். அதை நான் உள்வாங்காமல் அனுமதித்தேன். அனானியின் பின்னூட்டம் பார்த்த பிறகு, அவரது தனிமனித தாக்குதலுக்கு ஏதேனும் provocation உள்ளதா என்று மீண்டும் படித்துப் பார்த்தேன்.

அது அவ்வாறே இருந்த காரணத்தால், எனக்கு அனானியின் பின்னூட்டத்தை அனுமதிப்பது தவிர்த்து வேறு வழி தெரியவில்லை.

இதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு இது போன்ற விவாதங்களை தவிர்ப்போம். நானும் எச்சரிக்கையாக இருந்து இது போன்ற பின்னூட்டங்களை எடிட் செய்து வெளியிடுகிறேன்.

இப்பொழுது மூவருமே இதில் பாடம் கற்றவர்களாயிருக்கிறோம். கிருஷ்ணன், அனானி தவறுதலாக அந்த பின்னூட்டங்களை பிரசூரித்து மனதை புண்படுத்தியதை மறக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இனி பதிவின் மையக் கருத்துக்கு வழி விட்டு அதில் ஐக்கியமாவோம்.

அசுரன்

said...

கிருஷ்ணா அவர்களே,

//அசுரன் அவர்களே: கேள்விகளின் சுருக்கம் என்ன செய்தால் மக்களுக்கு உபயோகமாக இருக்கும். அப்சல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டிருப்பதால் நமக்கு இரண்டு அல்லது மூன்று பதில்களே உள்ளன.///

அப்சல் குற்றாவாளியாகவே இருக்கட்டும், அவருக்கு மரணதண்டனை கொடுப்பதே சரி என்றும் இருக்கட்டும்.

ஆனால், இது எவ்வகையில் மக்கள் பிரச்சனையின் தீர்வு?

இதை இந்த அரசு செய்வதின் நோக்கம் என்ன?



///1. அப்சலுக்கு தண்டனை குறைப்பு - 14 வருட கடுங்காவல் (ஆயுள்). இதனால் பாதகங்கள் - (அ) தண்ட பராமரிப்புச் செலவு (ஆ)மற்றுமொரு விமானம் கடத்தப்படும் (முப்தியின் மகளோ, அல்லது தற்போதைய முதல்வரின் மகனோ) பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டு, இந்த அரசு அப்சலையும் விடுவித்து, இவர்களையும் மீட்கும். (இ)இந்திய உயிர்களின் மதிப்பிற்கு விலை இல்லை என்பதை தீவிரவாதிகள் நன்கு உணர்வார்கள் (ஈ)மற்றுமொரு தாக்குதல் மிக சாதாரணமாகப் பார்க்கப்படும் - தவறான முன்னுதாரணமாகி விடும். (உ) உலக அரங்கில் நம் கையாலாகாத்தனம் பட்டவர்த்தனமாகி, சிறிய நாடுகள் கூட வாலாட்ட யோசிக்கும்.
சாதங்கள்: ஒன்றுமில்லை.///

அப்சல் பற்றியதே அல்ல வாதம். அவருக்கு தூக்குதண்டனையோ அல்லது தண்டனை குறைப்போ நிர்ணயிக்கும் காரணி. அந்த அப்சல் சம்பவத்தின் பின்னால் உள்ள பிரச்சனையா? வேறு எதேனும் extra அரசியலா?



//2. அப்சலுக்குத் தூக்கு - மேற்கூறிய பாதகங்கள் அனைத்தும் சாதகங்கள் ஆகும். நம்மைத் தாக்க நினைப்பவர்கள் யோசிப்பார்கள். அதுவே நமக்கு பெரிய வெற்றி. ///

இல்லை, இது தவறான அடிப்படையற்ற நம்பிக்கை. அப்படியெல்லாம் கற்பனை செய்து கொள்ளலாம். இது போல ஆயிரம் அப்சல்களின் ஊற்று மூலத்தின் தேவை அரசுக்கும் உள்ளது அப்சலின் பின்னால் உள்ள அரசியல் பிரச்சனையில் ஜீவிதம் நடத்தும் பிற்போக்கு அடிப்படைவாதிகளுக்கும்(botha islam and hindu) உள்ளது.


இந்த ஊற்று மூலத்தை இந்த பிரச்சனை குறித்த எந்த பகுதியிலாவது எந்த ஆளும் வர்க்கமாவது பேசியதா?


//பாதங்கள்: அப்சலின் சொந்த ஊர்காரர்கள் கொஞ்ச நாட்களுக்கு கடை அடைப்பார்கள். அது காஷ்மீருக்குப் புதிதல்ல. இயல்பு வாழ்கையே. பிறகு தங்கள் பிழைப்பைப் பார்க்க ஓடுவர். ஓரிருவர் பாகிஸ்தான் சென்று இன்னும் கடுமையாக பயிற்சி எடுப்பர். அதனால் பாகிஸ்தானிற்கு கூடுதல் செலவு. மறுபடியும் இங்கு வந்து வாலாட்ட நினைத்து உயிர் இழப்பர்.//

கொஞ்ச நாளைக்கு அல்ல கடந்த 50 வருடங்களாக பல இடங்களில் குண்டு வெடிப்பு, lots of Anti people laws in the pretext of this terrorism actually intended to cull the sparse democratic space, பல்லாயிரக்கணக்கான அப்பாவி காஸ்மீர் முஸ்லீம்கள், பாண்டிட்கள், கூலி ராணுவ வீரர்களை பலி கேட்க்கும் costlyயான அரசியல் விளையாட்டு.
************

நடந்த சம்பவங்களை மறந்து தொடர்ந்து விவாதம் செய்ய அன்போடு அழைக்கிறேன்.

அசுரன்

said...

//அவன் செய்ய வந்ததை முழுமையாக செய்திருந்து நமது மந்திரிகளோ, தலைவர்களோ இறந்திருந்தால் அதனால் மிகப் பெரிய அளவில் கலவரங்களும் மதச் சண்டைகளும் அரங்கேறி இருக்கும்//

அசுரரே,

இப்படி எடுத்த காரியத்தை சரியாக முடிக்க துப்பு இல்லாதவனுக்கு தூக்கு தண்டனை ஒரு சரியான முடிவு என்பது என் தாழ்மையான கருத்து.
நம்ம சினிமாவில் எல்லாம் கூட Boss வில்லன், சரியாக செயல்படாத தொண்டனை இப்படித்தான் முடிச்சுடுவாரு.
சுப்ரீம் கோர்ட் கூட இதனால் தான் தூக்கு தண்டனை வழங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன்.

இந்த லாஜிக்கை நீங்களும் ஒத்துப்பீங்க என்ற நம்பிக்கையுடன்..

பாலா

said...

How would have Stalin/Mao appraoched such an issue.
What they would have
done to someone like
Afzal.
Why is that capital
punishment is still
there in socialist
societies.
Why is that naxal
groups also give
and implement death
sentence.how they
treat traitors and
informers to police

said...

அசுரன்,

தக்க தருணத்தில் இத்தகைய விவாதம் தொடங்கியது,,,,சிறப்புக்குரியது.

//ஆனால், இவை அனைத்தும் அப்சலின் பிரச்சனைகள்(வழக்கு போடுவது, சுட்டுக் கொல்வது etc) இதில் எனக்கோ அல்லது எனது மக்களுக்கோ என்ன வித்தியாசம் வந்துவிடும்(குறைந்த பட்சம் இது போன்ற இன்னோரு அட்டாக் நடக்காது என்று யாரலேயும் சொல்ல முடியுமா? உறுதியாக அந்த குழுவினர் இது போன்ற இன்னுமோரு அட்டாக் வாய்ப்பு கிடைத்தால் செய்வார்கள்).

ஆக, இவை எந்த வகையிலும் மக்கள் நலனை முன்னிறுத்தும் நடவடிக்கைகள் அல்ல. இங்கு நான் இந்த நடவடிக்கைகள் சரி தவறு என்ற அம்சத்தில் சொல்லவில்லை. மாறாக, மக்கள் நனலை முன்னிறுத்தும் ஏதோ ஒன்று நடக்கவில்லை. அது என்ன என்பதை விவாதத்தின் மூலம் கண்டடையலாம் என்று விருப்பபட்டேன்.
//

//மேலும், அரசு தனது நடவடிக்கைகளை மையப்படுத்துக்கிறது. ஏனெனில் இது சிறுபான்மை அரசு, பெரும்பான்மையை சுரண்டி வாழும் அரசு. எனவே இந்த பெரும்பான்மையின் கையில் அதிகாரத்தைக் கொடுப்பதில் அதற்க்கு பாதகமான அம்சம்தான் எஞ்சியுள்ளது. அதனால்தான் பிரச்ச்னை.

உண்மையில் இந்த அரசு மக்களையா பாதுகாக்கிறது(42 வெள்ள நிவாரணப் பணி, பஞ்சம் பட்டினி சாவுகள், தற்கொலைகள், ஆக்கிரமிப்பு எனக் கூறி விட்டை இடித்து லட்சக்கணககானோரை நடுத்தெருவில் நிறுத்துவது)?

இல்லை. அது தனது இருப்பை பாதுகாக்க ஆயுதப் படை கொண்டு தனது பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பை வலுப்படுத்துகிறது.

இந்த தீவிரவாத பயத்தை தொடர்ந்து தானே உற்பத்தி செய்து அதன் மூலம் எஞ்சியுள்ள சொற்ப ஜனநாயக இடைவேளிகளையும் தகர்க்கிறது. ஒட்டு மொத்த சமூகத்தையே, மக்களையே குற்றவாளியாக்குகிறது.

மக்கள் விரோதி நம்மிடையேதானே உள்ளான்...? மக்களின் கையில் அதிகாரத்தைக் கொடு. பிறகு பார்ப்போம் மக்கள் அரசை காக்கிறார்களா? அல்லது அரசு மக்களை காக்கிறதா என்று.

அதை செய்வதற்க்கான நேர்மை இந்த அரசுக்கு கிடையாது.

//

அருமையான கருத்துக்கள் ....பல புரிதல்கள்....

வாழ்த்துக்கள் அசுரன்.

said...

//bad news India,
அப்சலை தூக்கில் போடுங்கள், அல்லது வேறு எங்காகிலும் போடுங்கள் அது இங்கே விவாதிக்க விரும்பவில்லை. ஆனால், அப்சலை தூக்கில் போடுவது தீர்வா என்பதுதான் எனது கேள்வி.

எந்த அடிப்படையில் மீண்டும் இதே போன்றோ அல்லது இதை விட மோசமான விளைவுகளை உருவாக்கும் தாக்குதலோ இருக்காது என்று நினைக்கிறீர்கள்?
அதை தவிர்ப்பதில் இன்றைய ஆளும் வர்க்கதின் நேர்மை என்ன?
//

மரண தண்டனை உருவாக்கப்பட்டது, தவறு செய்தவர்களை இந்த உலகை விட்டு முழுவதுமாக களைந்து, அவர்கள் இனி மேலும் தவறுகள் செய்யாமல் தடுப்பதர்க்கு மட்டுமல்ல.

அவனுக்கு கொடுக்கும் தண்டனையை பார்த்து மற்றவர்கள் தவறு செய்வதை கைவிடத்தான்.

கற்பழிப்பு/கொலைக்கு பல பேர் மரண தண்டனை பெற்றிருந்தாலும், இந்த தவரெல்லாம் இன்னும் அரங்கேரிக் கொண்டுதான் இருக்கிறது.
ஆனால் அதே சமையத்தில், மரண தண்டனை ஒரு deterrent ஆக இருப்பது உண்மையே.

அப்ஸல் விஷயத்தில் அது ஒரு deterrent ஆக இல்லாமல் அவனுக்கு தியாகி பட்டம் கொடுத்து மேலும் ஒரு கும்பல் அவன் வழியை பின்பற்றவும் வழி இருக்கிறது.

இதர்க்கெல்லாம் பயந்து நாம் அரசாள முடியாது. We will deal with one enemy at a time!

( 2. சஞ்சய் தத், உண்மையில் தவறு செய்திருந்தால் அவருக்கும் மரணமே வழங்க வேண்டும். அதைப் பார்த்தால்தான் மற்ற தத் கள் பயப்படுவார்கள். உண்ட வீட்டில் ரண்டகம் செய்யும் இந்த பேய்கள் ஒழிய வேண்டும்)

என்ன சொல்றீங்க அசுரன்? இந்த விவாதம் முடிந்ததும் உங்கள் நிலையையும் கட்டாயம் சொல்லி விடுங்கள்.

said...

அன்புள்ள bad news India,

இது போன்ற இன்னுமொரு தாக்குதலோ அல்லது இதை விட மோசமாக மக்களை நேரடியாக பாதிக்கும் விசயங்களோ அப்சலின் தண்டனையால் தடைபடுமா(ஒரு 5% மாவது). அதற்க்கு உறுதி கொடுக்க முடியுமா?

அப்சல் விசய்த்தின் பின்னால் உள்ள அரசியல் அப்சலுடன் ஆரம்பித்து அப்சலுடன் முடிகிறதா? so, that when afsal killed the problem will also killed?

அப்சல்(விவாதத்திற்க்காக அவர் குற்றவாளி என்றே வைத்துக் கொள்வோம்) போன்றவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடும் பொழுது மரணத்துக்கு பயந்தா ஈடுபடுகிறார்கள்? அப்படியிருக்கும் பொழுது பிரச்சனையை உண்மையில் களையும் நடவடிக்கை என்பது அவரது மரணதண்டனை மட்டும் கிடையாது, அந்த நடவடிக்கை என்னவாக இருக்கலாம்? அதை இந்த அரசு செய்கிறதா? அதை குறித்து பரிசீலிக்கவாவது செய்கிறதா இந்த அரசு?

மீண்டும் அதேதான், அப்சலை தூக்கில் போடுங்கள் அல்லது எங்கேயும் போடுங்கள் அதை இப்பொழுது விவாதிக்க தயாராயில்லை. எனது விவாத கருப் பொருள் வேறு. அதில் தங்களது கருத்துக்களை வையுங்களேன்.

அசுரன்

said...

இன்னும் நீங்கள் ஒரு விசயத்தை புரிந்து கொள்ளவே இல்லை. எனது வாதம் அப்சலுக்கு தூக்கு கொடுக்கலாமா கூடாதா என்பதைப் பற்றியது அல்ல. நான் தூக்கு தண்டனை(capital punishment) கூடாது என்று கூறும் குழுவைச் சேர்ந்தவனும் அல்ல.

தயவு செய்து நான் பின்னூட்டங்களிலும், பதிவுகளிலும் எந்த விசயத்தை விவாதம் செய்ய மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன் என்பதை படித்து எதிர்வினை புரியுங்கள்.

**********

சோசலிச நாடுகளில் மரணதண்டனை உண்டா? என்றால் உண்டு. மீண்டும் இங்கு விவாதம் மரணதண்டனை குறித்தோ அல்லது அப்சல் குறித்தோ அல்ல. அந்த சம்பவத்தை ஒரு மக்கள் நல அரசு எப்படி நிரந்தர தீர்வை அடையும் நோக்கத்துடன் கையாள வேண்டும் என்பது குறித்துத்தான்.

சோசலிச நாடுகளில் சீர்திருத்த சிறைகள் எப்படியிருக்கும் என்பது குறித்து நான் சொன்னால் நம்ப மாட்டேர்கள். ஹாலிவுட்காரன் சொன்னால் நம்பூவீர்கள் அல்லவா?

'தி லாஸ்ட் எம்பெரர்' என்ற 9 ஆஸ்கார் அவார்டுகள் வாங்கிய படத்தில் சீனாவின் கடைசி மஞ்சூரிய வம்ச அரசர் பற்றிய கதை. படம் முழுவதும் இணையாக சொசலிச சீர்திருத்த சிறையில் இந்த அரசர் ஜப்பான் போர்க்கைதியாக கைது செய்யப்பட்டு சீர்திருத்தப்படும் காட்சிகள் வரும். அதில் உங்களது ஆளும் வர்க்க அவதூறுகள் அனைத்துக்கும் பதில் உள்ளது. சிறையிலிருந்து விடுதலையடைந்து (10 வருடங்கள்) பிறகு ஒரு நாவல் எழுதினார் இந்த அரசர் அதில் இந்த மூகாம் எப்படி தன்னை ஒரு மனிதனாக சீர்திருத்தியது என்று எழுதுகிறார்(இது குறித்த ஒரு பதிவு தோழர் கரும்பலகையின் தளத்தில் உள்ளது - http://www.blogger.com/profile/27658665).

லோக்கல் பேட்டை ரௌடி முன்னாள் அல்லக்கை சதாம் உசேனை தூக்குவதற்க்கே ஆயிரத்தேட்டு பொய்களை பரப்பி இன்றுவரை அவற்றில் ஒன்றைக்கூட நிறுவ வக்கின்றி அம்மணாம நிற்க்கும் ஏகாதிபத்தியங்கள் ஸ்டாலின், மாவோ விசயத்தில் என்ன செய்திருப்பார்கள் என்ப்தை உங்கள் கற்பனைக்கே விடுகிறேன்.

இது கம்யுனிசம் குறித்த விவாதம் அல்ல. ஆகவே இந்த அளவில் இதை முடித்துக் கொள்ளலாம்.

அசுரன்

said...

//////////////
அசுரன்,

தக்க தருணத்தில் இத்தகைய விவாதம் தொடங்கியது,,,,சிறப்புக்குரியது.

//ஆனால், இவை அனைத்தும் அப்சலின் பிரச்சனைகள்(வழக்கு போடுவது, சுட்டுக் கொல்வது etc) இதில் எனக்கோ அல்லது எனது மக்களுக்கோ என்ன வித்தியாசம் வந்துவிடும்(குறைந்த பட்சம் இது போன்ற இன்னோரு அட்டாக் நடக்காது என்று யாரலேயும் சொல்ல முடியுமா? உறுதியாக அந்த குழுவினர் இது போன்ற இன்னுமோரு அட்டாக் வாய்ப்பு கிடைத்தால் செய்வார்கள்).

ஆக, இவை எந்த வகையிலும் மக்கள் நலனை முன்னிறுத்தும் நடவடிக்கைகள் அல்ல. இங்கு நான் இந்த நடவடிக்கைகள் சரி தவறு என்ற அம்சத்தில் சொல்லவில்லை. மாறாக, மக்கள் நனலை முன்னிறுத்தும் ஏதோ ஒன்று நடக்கவில்லை. அது என்ன என்பதை விவாதத்தின் மூலம் கண்டடையலாம் என்று விருப்பபட்டேன்.
//

//மேலும், அரசு தனது நடவடிக்கைகளை மையப்படுத்துக்கிறது. ஏனெனில் இது சிறுபான்மை அரசு, பெரும்பான்மையை சுரண்டி வாழும் அரசு. எனவே இந்த பெரும்பான்மையின் கையில் அதிகாரத்தைக் கொடுப்பதில் அதற்க்கு பாதகமான அம்சம்தான் எஞ்சியுள்ளது. அதனால்தான் பிரச்ச்னை.

உண்மையில் இந்த அரசு மக்களையா பாதுகாக்கிறது(42 வெள்ள நிவாரணப் பணி, பஞ்சம் பட்டினி சாவுகள், தற்கொலைகள், ஆக்கிரமிப்பு எனக் கூறி விட்டை இடித்து லட்சக்கணககானோரை நடுத்தெருவில் நிறுத்துவது)?

இல்லை. அது தனது இருப்பை பாதுகாக்க ஆயுதப் படை கொண்டு தனது பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பை வலுப்படுத்துகிறது.

இந்த தீவிரவாத பயத்தை தொடர்ந்து தானே உற்பத்தி செய்து அதன் மூலம் எஞ்சியுள்ள சொற்ப ஜனநாயக இடைவேளிகளையும் தகர்க்கிறது. ஒட்டு மொத்த சமூகத்தையே, மக்களையே குற்றவாளியாக்குகிறது.

மக்கள் விரோதி நம்மிடையேதானே உள்ளான்...? மக்களின் கையில் அதிகாரத்தைக் கொடு. பிறகு பார்ப்போம் மக்கள் அரசை காக்கிறார்களா? அல்லது அரசு மக்களை காக்கிறதா என்று.

அதை செய்வதற்க்கான நேர்மை இந்த அரசுக்கு கிடையாது.

//

அருமையான கருத்துக்கள் ....பல புரிதல்கள்....

வாழ்த்துக்கள் அசுரன்

//////////////


கரும்பலகையின் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி,

அசுரன்

said...

அசுரன்,

எம்முடைய பார்வையில் காஷ்மீரில் நடப்பது அப்பட்டமான உள்குத்து அரசியல். முதலில் காஷ்மீரிகளின் தேசிய இன எழுச்சியை இந்திய மேலாதிக்க அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. ஏழு லட்சம் இராணுவ வீரர்களைக் கொண்டு அம்மக்களின் நியாயமான போராட்டங்களை அடக்கி ஒடுக்கியதற்கு பதிலடியாகவே இதில் அந்நிய நாடுகளின் உதவியை காஷ்மீரிப் போராளிகள் நாடினர்..
(எல்லைக்கு அப்பாலும் இதே போன்ற இன ஒடுக்குதல் உள்ளதென்பதும் கருத்தில் கொள்ளத் தக்கது)

இப்போது அப்சல் என்ற தனி மனிதனின் சாவு என்ற ஒரே கல்லில் இருவருமே மாங்காய் அடிக்க முயல்கிறார்கள்..இவரின் மரண தண்டனைக்குப் பின் காஷ்மீரிகள் மேலும் தங்கள் பக்கம் சாய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எல்லைக்கு அப்பாலும்.. அப்படி நேர்ந்தால் அதையே காரணமாக்கி மேலும் தேசிய வெறியை தூண்டி குளிர் காயலாம் என்று இந்திய அரசும் ஆவலோடு காத்திருக்கிறது..

இது காஷ்மீர் விடுதலைப் போராட்டம், இன எழுச்சி என்ற கட்டத்தைத் தாண்டி மத சார்பு அடையும் அவலம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

said...

#1)ஏன் அப்சல் ஒரு தீவிரவாதி?
வன்முறையை ஆயுதமாக எடுத்தவன் எல்லாருமே தீவிரவாதி தான்.
அதுவும் தேசத்தின் அமைதியை குலைக்க முற்பட்டவன் அப்ஸல்.

#2)ஏன் பாராளுமன்றத்தில் அவர்கள் குண்டு வைத்தார்கள்?
பாராளுமன்றத்தில் மட்டுமா வைத்தார்கள்? முடிந்தால் உங்கள் வீட்டிலும் என் வீட்டிலும் கூட வைப்பார்கள். ரயிலிலேயும் வைத்தார்கள் - பீதியை கிளப்பி attention gain பண்ணுவதே நோக்கம்.

#3)குண்டு வைத்திருந்தால் எனில் எந்த வகையில் அவர் பகத்சிங்கிடம் இருந்து வேறுபடுகிறார்?
வேறு பட்டவர் அல்ல. இவரும் பகத் சிங் தான், தீவிரவாதிகளின் பார்வையில். அன்று பகத் சிங் ஐ என்ன செய்தார்களொ, இன்று நாம் இவனை!

#4)இது போல ஒருவர் நாட்டின் பாராளுமன்றத்தில் குண்டு வைத்து - இறையாண்மையை தகர்த்திருக்கும் பட்சத்தில், ஒரு மக்கள் நலனை முன்னிறுத்தும், ஜனநாயகமான அரசு என்ன செய்ய வேண்டும்?
இது போல் நடக்காமல் தடுக்க வேண்டும். அப்ஸலை தூக்கில் போட்டு ஒரு deterrent உருவாக்க வேண்டும். மேலும் இது போல் நடவாமல் இருக்க ஆலோசிக்க வேண்டும்.

#5)
ஒரு மக்கள் நல, ஜனநாயக அரசின் நோக்கம், அப்சலை கொல்லும் விசயத்தில் என்னவாக இருக்க முடியும்?
அவரவர் இஷ்டத்திர்க்கு கும்பல் சேர்த்துக் கொண்டு தனி நாடு கோறுவது முட்டாள்தனம். ஊருடன் ஒத்துவாழ பழகிக்கோ.


#6)காஸ்மீரில் அவருக்கு ஆதரவாக போராட்டம் நடக்கிறதே அதை எப்படி எடுத்துக் கொள்வது?
என்னத்தை சொல்ல. பிரிவினை என்ற தீய சக்தி தான் நம் எல்லோருள்ளும் விதைக்கப்ட்டு இருக்கிறதே. they are brain-washed, like we are.

#7) தேசப்பற்று என்றால் என்ன?
அடுத்தவனை கெடுக்காமல் ஊருடன் கூடி சந்தோஷமாக இருப்பது. அதை கெடுக்க நினைப்பவனை வெறுப்பது.

hope I made sense.
அப்படியே நம்ம side வந்து இதுக்கு உங்அ கருத்த சொல்லிட்டு போங்க. -

http://badnewsindia.blogspot.com/2006/10/blog-post_23.html

நன்றி!

said...

bad news India,


//#1)ஏன் அப்சல் ஒரு தீவிரவாதி?
வன்முறையை ஆயுதமாக எடுத்தவன் எல்லாருமே தீவிரவாதி தான்.
அதுவும் தேசத்தின் அமைதியை குலைக்க முற்பட்டவன் அப்ஸல்.
//

இந்த கேள்வியை பிறகு டீல் செய்வோம்.


//
#2)ஏன் பாராளுமன்றத்தில் அவர்கள் குண்டு வைத்தார்கள்?
பாராளுமன்றத்தில் மட்டுமா வைத்தார்கள்? முடிந்தால் உங்கள் வீட்டிலும் என் வீட்டிலும் கூட வைப்பார்கள். ரயிலிலேயும் வைத்தார்கள் - பீதியை கிளப்பி attention gain பண்ணுவதே நோக்கம்.
//

ஏன் attention gain செய்ய வேண்டும்? யாருடைய அட்டன்ஸன்? எதன் மீதான அட்டன்சன்?



//
#3)குண்டு வைத்திருந்தால் எனில் எந்த வகையில் அவர் பகத்சிங்கிடம் இருந்து வேறுபடுகிறார்?
வேறு பட்டவர் அல்ல. இவரும் பகத் சிங் தான், தீவிரவாதிகளின் பார்வையில். அன்று பகத் சிங் ஐ என்ன செய்தார்களொ, இன்று நாம் இவனை!
//

இந்த அம்சத்தில் பயங்கரவாதிகளின் பார்வை பற்றி namakkuன்ன கவலை. உங்களுடைய பார்வையைத்தான் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

எப்படி, அப்சல் சம்பந்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற குண்டு வெடிப்பு பகத்சிங்கிடம் இருந்து வேறுபடுகிறது? (அதாவது ஆட்களை கொல்ல வேண்டும் என்கிற நோக்கம் தவிர்த்து).



//
#4)இது போல ஒருவர் நாட்டின் பாராளுமன்றத்தில் குண்டு வைத்து - இறையாண்மையை தகர்த்திருக்கும் பட்சத்தில், ஒரு மக்கள் நலனை முன்னிறுத்தும், ஜனநாயகமான அரசு என்ன செய்ய வேண்டும்?
இது போல் நடக்காமல் தடுக்க வேண்டும். அப்ஸலை தூக்கில் போட்டு ஒரு deterrent உருவாக்க வேண்டும். மேலும் இது போல் நடவாமல் இருக்க ஆலோசிக்க வேண்டும்.
//

தூக்கில் போடுவது மட்டும் deterrentஆ?

மேலும் இது போல நடவாமல் இருக்க ஆலோசிக்க வேண்டும் என்கிற தங்களது கருத்துக்களுக்கு பாராட்டுக்கள். அந்த ஆலோசனை என்ன என்பதுதான் இங்கு மையமான பிரச்சனை. அது குறித்து தங்களது கருத்துக்களை வைத்தால் சிறப்பாக இருக்கும்.



//
#5)
ஒரு மக்கள் நல, ஜனநாயக அரசின் நோக்கம், அப்சலை கொல்லும் விசயத்தில் என்னவாக இருக்க முடியும்?
அவரவர் இஷ்டத்திர்க்கு கும்பல் சேர்த்துக் கொண்டு தனி நாடு கோறுவது முட்டாள்தனம். ஊருடன் ஒத்துவாழ பழகிக்கோ.
///

இது வெறும் கும்பல் அல்ல. அப்படியெனில், அரசு தகவல்களின் அடிப்படையில் 1,200 சொச்சம் பயங்கரவாதி ஊடுரவல்காரர்களை பிடிக்க 7 லட்சம் ராணுவ வீரர்கள் தேவையில்லையே. உண்மையில் அங்கு யாருடன் இந்தியா சண்டையிடுகிறது?

காஸ்மீர் இந்தியாவுடன் இணைந்த வரலாற்றை சிறிது பொறுமையாக படித்து அதில் உள்ள பல்வேறு கோரிக்கைகளின் நியாயத்தை புரிந்து கொள்ளுங்களேன். இந்தியாவுடன் காஸ்மீர் இருப்பதைத்தான் நானும் விரும்புகிறேன். ஆயினும், அதை உள்ளே திணிக்க முற்ப்பட்டால் பதிலுக்கு குண்டு வெடிப்பது குறித்து நான் ஒன்றும் சொல்ல முடியாது.

மேலும், அது- இந்திய அரசும், ஆளும் வர்க்கமும், இந்துத்துவ வெறியர்களும் கிளப்பும் புரளி போல, பாகிஸ்தானால் சேர்க்கப்பட்ட கும்பல்கள் அல்ல.

இதை காஸ்மீருடனான இணைப்பு ஒப்பந்தம் ஒன்றை வரைந்த கையெழுத்திட்ட ஹரிசிங்கின் அந்த கடித்தத்திலுள்ள சரத்துக்களிலிருந்தும், சேக் அப்துல்லாவின் அரசியல் நிலைப்பாடுகளை ஆய்வு செய்யும் பொழுதும் தெரியவரும்.




//#6)காஸ்மீரில் அவருக்கு ஆதரவாக போராட்டம் நடக்கிறதே அதை எப்படி எடுத்துக் கொள்வது?
என்னத்தை சொல்ல. பிரிவினை என்ற தீய சக்தி தான் நம் எல்லோருள்ளும் விதைக்கப்ட்டு இருக்கிறதே. they are brain-washed, like we are.///

எப்பொழுதிலிருந்து brain-wash செய்யப்பட்டார்கள்? யாரால் செய்யப்பட்டார்கள்?
ஏன் செய்யப்பட்டார்கள்?


இந்துக்கள் மீதான தாக்குதலும் அவர்களை மிரட்டி வெளியே அனுப்பும் நடைமுறையும் மிகச் சரியாக எப்பொழுதிலிருந்து ஆரம்பிக்கிறது?

இதற்க்கான விடைகளை தேடுங்கள், காஸ்மீர் பிரச்சனையின் பரிணாமம் புலப்படும்.


//
#7) தேசப்பற்று என்றால் என்ன?
அடுத்தவனை கெடுக்காமல் ஊருடன் கூடி சந்தோஷமாக இருப்பது. அதை கெடுக்க நினைப்பவனை வெறுப்பது.
//

சரி, கிழக்கு பாகிஸ்தானுக்கு கிட்டத்தட்ட காஸ்மீர் போலவே ராணுவத்தை அனுப்பிய இந்தியா அதை இந்தியாவுடன் ஏன் சேர்க்கவில்லை.

உங்களது கூற்றுதான் தேசப்பற்று(அடுத்தவனை கெடுக்காமல் ) எனில் இந்தியா அங்கு(காஸ்மீரில்) செய்துள்ள அயோக்கியத்தனங்களுக்கு பதிலடியாக அவர்கள் தேசப்பற்றை இந்தியா மீது குண்டு வீசி காட்டுகிறார்கள் என்று கொள்ளலாமா?


அசுரன்

said...

அன்புள்ள அசுரன்,

அவர் இருக்கும் நாட்டிற்கு எதிராக (உதாரணம் பாகிஸ்தானில் ஆயுதப் பயிற்சி) செயல்பட்டதால் அந்த நாட்டின் பார்வையில் அவர் ஒரு தீவிரவாதி.

எந்த ஒரு நாட்டிற்கும் எதிராக செயல்படுபவர்கள் அந்த நாட்டினால் தீவிரவாதியாகத்தான் பார்க்கப்படுவார்கள். இது இயல்பு.

சரி அனைத்து வகைஎதிர்ப்பையும் அதன் தரப்பில் நியாயம் உள்ளதாக கொண்டால்எல்லாமே சரியாகத்தான் தெரியும் இங்கே விசயம் அப்சல் சம்பந்தப்பட்டது மட்டும் அல்லவே
ஜனநாயக ரீதியில் தேந்தெடுக்கப்பட்ட(நீங்கள் இதை போலி ஜனநாயகம்என சொல்வது இருக்கட்டும்)மக்கள் மன்றத்தை தகர்ப்பதை யாரும் நியாயப்படுத்த முடியாதே .இந்த ஜனநாயகம் சரியல்ல அல்லது மாற்று அமைப்பு தேவைஎன்ற நிலை சரியென கொண்டாலும் அதையும் இந்த மக்களையும் அதன் கருவிகளையும் (கோர்ட், சட்டம்,மக்கள் மன்றாம்)கொண்டுதானே செய்ய முடியும்
மக்களிடம் நமது (கம்யூனிசமோ அல்லது இஸ்லாம் அடிப்படை வாதமோ ) செல்லுபடியாக வேண்டும் அல்லவா ?
அதுவரையில் அந்த கருவிகள் சரியானவையே மாற்றம் செய்யவேண்டுவது மக்களிடமேஎன்பதுஎனது கருத்து
உதாரணமாக பகத்சிங்கும் அவரை
தூக்கில் போட்டவரும் இந்தியரே
இருவருக்கும் இருந்த புரிதல்தான் வேறு !
புரிதலை மாற்றத்தாந் இத்தனையும் என்று நீங்கள் சொல்வீராயின் சரியே
-தியாகு

said...

////அசுரன்,

எம்முடைய பார்வையில் காஷ்மீரில் நடப்பது அப்பட்டமான உள்குத்து அரசியல். முதலில் காஷ்மீரிகளின் தேசிய இன எழுச்சியை இந்திய மேலாதிக்க அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. ஏழு லட்சம் இராணுவ வீரர்களைக் கொண்டு அம்மக்களின் நியாயமான போராட்டங்களை அடக்கி ஒடுக்கியதற்கு பதிலடியாகவே இதில் அந்நிய நாடுகளின் உதவியை காஷ்மீரிப் போராளிகள் நாடினர்..
(எல்லைக்கு அப்பாலும் இதே போன்ற இன ஒடுக்குதல் உள்ளதென்பதும் கருத்தில் கொள்ளத் தக்கது)
////



ராஜவனஜ்,

உங்களது இந்த புரிதல் சரிதான். இந்திய ஆளும் வர்க்கத்துக்கு ஆரம்பத்திலிருந்தே காஸ்மீரை அமுக்க வேண்டும் என்பதுதான் ஆசை.

இது நியாயமான ஆசையாகக் கூட இருக்கலாம். ஆனால் இதை சாதிக்க அந்த மக்களின் நன்மதிப்பை பெறும் முயற்சிகள், அதை அவர்களின் கோரிக்கையாக மாற்றும் அரசியல் போராட்டத்தை அல்லவா ஒரு நல்ல மக்கள் அரசு மேற்கொண்டிருக்க வேண்டும்.

அதை இந்த அரசு செய்யவில்லை மாறாக, பிரிட்டிஸ்காரன் காலத்திலேயே அதன் அடக்குமுறைக்கு சிங்கி அடித்து பழகிய மாமா கூட்டத்திற்க்கு புறவாசல் வழியாக அதே அடக்குமுறையைப் பயன்படுத்தி காஸ்மீரை இணைக்கும் பேராயாபமான கிறுக்கு யோசனை மூளையில் உதித்தது.

இந்த இடத்தில் காஸ்மீரிகள் தங்கள்து தேசிய இனப் பிரச்சனைக்கு அந்நிய உதவி நாடினார்கள் என்பது தவறான புரிதல். ஆரம்பத்த்லிருந்தே சுயநிர்ணயத்துக்காக குரல் கொடுத்த குழுக்கள் பாகிஸ்தானை வெறுத்தே வந்தனர்.

குறிப்பாக சேக் அப்துல்லாவின் கைது, 1985 தேர்தல் தில்லு முல்லு இவையே அங்கு பிற்போக்கு இஸ்லாம அடிப்படைவாத சக்திகள் வேரூன்ற வழி வகுத்தது(பாகிஸ்தான் துணையுடன்). அதன் பிறகு தேசிய இனக் கோரிக்கை இரு பக்கமிருந்தும் தாக்குதலுக்காளானது.

இந்த பிரச்சனை முழுவதும் பார்த்தால் இவர்கள்(India and Pak) எந்த இடத்திலும் மக்களிடம் நம்பிக்கை வைத்து ஜனநாயக மரபுகளை பின்பற்றி எதுவும் செய்ததில்லை என்பது தெரியவரும். இப்போ அதன் எதிர்வினையாக நடக்கும் முட்டாள் தனங்களின் போது மட்டும் ஜனநாயகம், நேர்மை, மனிதாபிமானம் என்ற உயர்ந்த வார்த்தைகளை பயன்படுத்தி ஜல்லி அடிக்கிறார்கள், ரொம்ப வசதியாக வரலாற்றை குழி தோண்டி புதைத்து விட்டு.


**********************

/////
இப்போது அப்சல் என்ற தனி மனிதனின் சாவு என்ற ஒரே கல்லில் இருவருமே மாங்காய் அடிக்க முயல்கிறார்கள்..இவரின் மரண தண்டனைக்குப் பின் காஷ்மீரிகள் மேலும் தங்கள் பக்கம் சாய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எல்லைக்கு அப்பாலும்.. அப்படி நேர்ந்தால் அதையே காரணமாக்கி மேலும் தேசிய வெறியை தூண்டி குளிர் காயலாம் என்று இந்திய அரசும் ஆவலோடு காத்திருக்கிறது..

இது காஷ்மீர் விடுதலைப் போராட்டம், இன எழுச்சி என்ற கட்டத்தைத் தாண்டி மத சார்பு அடையும் அவலம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

//////


அது ஏற்கனவே மத அடையாளத்தை பூசிக் கொண்டு விட்டது.

இது, அவர்களின் மண்ணை நாசாமாக்கும் ஏகாதிபத்திய பகுதி அளவிலான தரகு வர்க்க அரசியல் பன்றிகளின், தங்கள் சொந்த மாநிலத்தின் தரகு அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி நடக்கும் ஒரு அரசியல் போராட்டத்தின் ஊடாகத்தான் சரியாக்க முடியும். அதற்க்கான கருவை(பொதுக் கருத்து) இந்தியாவின் பல வருட ஆக்கிரமிப்பு அங்கு உருவாக்கியுள்ளதாக தெரிகிறது.

இந்த பாராளுமன்ற தாக்குதல், அப்சல் தூக்கு சம்பவம் நீங்கள் சொன்னது போல காஸ்மீரை கைமா செய்து நாஸ்டா சாப்பிட்டுக் கொண்டிருக்கும் எல்லா வர்க்கங்களுக்கும் லாபம் தரும் ஒரு சிறந்த முதலீடு. இன்னும் சொன்னால் 'பொடா' போன்ற அடுத்த கொடூரமான சட்டமியற்ற மாமா மன்மோகன் சிங் தயாராகிவிட்டார்(போன வார ஹிந்து நாளேட்டின் முதல் பக்கத்தில் செய்தி வந்துள்ளது).

ஆகா, ஜனநாயகத்துக்கான போராட்டங்களை காரணம் காட்டியே ஜனநாயகத்தை இன்னும் கிடுக்கிப் பிடி போடும் நடவடிக்கைகளைத்தான் இந்த அரசு செய்கிறது. அதை பேசுவதை கவனமாக தவிர்க்கிறார்கள் எல்லாரும்.

அசுரன்

said...

//அன்புள்ள அசுரன்,

அவர் இருக்கும் நாட்டிற்கு எதிராக (உதாரணம் பாகிஸ்தானில் ஆயுதப் பயிற்சி) செயல்பட்டதால் அந்த நாட்டின் பார்வையில் அவர் ஒரு தீவிரவாதி.

எந்த ஒரு நாட்டிற்கும் எதிராக செயல்படுபவர்கள் அந்த நாட்டினால் தீவிரவாதியாகத்தான் பார்க்கப்படுவார்கள். இது இயல்பு.

சரி அனைத்து வகைஎதிர்ப்பையும் அதன் தரப்பில் நியாயம் உள்ளதாக கொண்டால்எல்லாமே சரியாகத்தான் தெரியும் இங்கே விசயம் அப்சல் சம்பந்தப்பட்டது மட்டும் அல்லவே
ஜனநாயக ரீதியில் தேந்தெடுக்கப்பட்ட(நீங்கள் இதை போலி ஜனநாயகம்என சொல்வது இருக்கட்டும்)மக்கள் மன்றத்தை தகர்ப்பதை யாரும் நியாயப்படுத்த முடியாதே .இந்த ஜனநாயகம் சரியல்ல அல்லது மாற்று அமைப்பு தேவைஎன்ற நிலை சரியென கொண்டாலும் அதையும் இந்த மக்களையும் அதன் கருவிகளையும் (கோர்ட், சட்டம்,மக்கள் மன்றாம்)கொண்டுதானே செய்ய முடியும்
மக்களிடம் நமது (கம்யூனிசமோ அல்லது இஸ்லாம் அடிப்படை வாதமோ ) செல்லுபடியாக வேண்டும் அல்லவா ?
அதுவரையில் அந்த கருவிகள் சரியானவையே மாற்றம் செய்யவேண்டுவது மக்களிடமேஎன்பதுஎனது கருத்து
உதாரணமாக பகத்சிங்கும் அவரை
தூக்கில் போட்டவரும் இந்தியரே
இருவருக்கும் இருந்த புரிதல்தான் வேறு !
புரிதலை மாற்றத்தாந் இத்தனையும் என்று நீங்கள் சொல்வீராயின் சரியே
-தியாகு
//




தோழமையுள்ள தியாகு,

அப்சலின் அந்த நடவடிக்கை சரியா? தவறா? என்பதை எங்குமே விவாதம் செய்யவில்லை. ஆனால், அப்சலை பொது மாத்து போட முண்டியடித்துக் கொண்டு வரும் கும்பல் எதுவும் அதன் பின்னே உள்ள அரசியலை பரிசீலிக்க முன்வருவதில்லையே? அதைத்தான் இங்கு விவாதம் செய்கிறேன். அந்த பொருளை நேரடியாக வைக்காமல் விட்டதுதான் வித்தியாசம்.

உண்மையில் அப்சலை விவாதிக்கும் பொழுது அவரை இயக்கிய அரசியல் அடித்தளத்தையல்லவா முக்கியமாக விவாதிக்க வேண்டும். அதை யாரும் செய்யவில்லையே?

அந்த அரசியலை பரிசீலித்து அதற்க்கான தீர்வு குறித்து விவாதிக்க முன்வருவதில்லையே?

காஸ்மீரில் 50 வருடங்கள் அந்த மக்களுக்கு விரோதமாக இந்தியா செய்துள்ள் ஆக்கிரமிப்பை யாரும், நீங்கள் அப்சலின் நடவடிக்கைக்கு பொருத்திக் காட்ட முற்ப்படும் ஜனநாயகம், மக்கள் மன்றம் போன்ற கருத்துருக்களின் துணை கொண்டு பார்க்க தயாராயில்லையே? ஏன் இந்த விசயங்கள் எல்லாம் இந்தியாவுக்கு மட்டும்தானா? காஸ்மீர் மக்களுக்கு இவை சொந்தமில்லையா?

காஸ்மீரில் 7 லட்சம் ராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளது உறுதியாக அங்குள்ள 1200 சோச்சம்(அரசு புள்ளிவிவரமாக பரவலாக சொல்லப்படும் எண்ணிக்கை) ஊடுருவல்காரர்களை அடிக்க அல்ல. அங்கு அரசு வெளிப்படையாகவே மக்கள் மீது யுத்தம் தொடுத்துள்ளது.

இதன் மூலம் காஸ்மீர் மக்களை இந்தியாவிடமிருந்து அதிகப்படியாக அன்னியப்படுத்தும் வேலையை செம்மையாக செய்துள்ளனர்.

இது எனக்கு ஒப்புதலில்லாத விசயம். ஏனெனில் இது both against my moral understadngin(Democracy) and to my personal interest(அதாவது இந்தியாவுடன் காஸ்மீர் இணையும் எனது விருப்பம்).

நான் பதிவில் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில் சொல்ல முற்படுங்கள் சில விசய்ங்கள் புரிபடும் என்று நம்புகிறேன்.


//இந்த ஜனநாயகம் சரியல்ல அல்லது மாற்று அமைப்பு தேவைஎன்ற நிலை சரியென கொண்டாலும் அதையும் இந்த மக்களையும் அதன் கருவிகளையும் (கோர்ட், சட்டம்,மக்கள் மன்றாம்)கொண்டுதானே செய்ய முடியும்
மக்களிடம் நமது (கம்யூனிசமோ அல்லது இஸ்லாம் அடிப்படை வாதமோ ) செல்லுபடியாக வேண்டும் அல்லவா ?
//

உங்களது இந்த கருத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் எந்த அமைப்பை மாற்ற விரும்புகிறீர்களோ அந்த அமைப்பை அப்படியே எடுத்துக் கொண்டு மாற்ற முடியாது. இந்த அம்சத்தில் உங்கள் கருத்திலிருந்து ஒரே அம்சம் சரியே. அதாவது ""இந்த மக்களையும்"' என்று குறிப்பிட்டுள்ளீர்களே அது மிகச் சரி. அதாவது எந்த ஒரு மாற்றமும் மக்களிடம் அதற்க்கான அரசியல் போராட்டம் நடத்தாமல் செய்ய முடியாது என்பது மிகச் சரி.

சரி இந்த வகையிலான அனுகுமுறையை (DEMOCRATIC OR POPULACE) உங்களது அரசு காஸ்மீரில் செய்ததா?

இல்லையே.....


அசுரன்

said...

அன்புள்ள தோழா ,

ஆணித்தரமான வாதங்களை வைத்துள்ளத்ற்கு , காஸ்மீரிலுள்ள விசயங்கள் முற்றிலும் இந்தியா அரசாண்மைக்கு இந்திய மக்களின் நலன் களுக்கு விரோதமானதுஎன
கூவி கொண்டுள்ள மீடியாக்களை பார்க்கும்எந்த ஒரு சாதாரண நபரும்
அப்சல் தூக்கிலிடப்பட வேண்டும்என்ற
நினைப்புக்குத்தான் வருவான்

அது அவன் தவறல்ல மக்களிடம் நிலைமையை விளக்காத கம்யூனிஸ்டுகளின் தவறு மார்க்ஸ் பெயரை சொல்லி மண்டியிட்டு ஓட்டு வாங்குபவர்களே துல்லியமாக நிலைமையை மக்களிடம் கொண்டு செர்த்திருக்க வேண்டும் .
துப்பாக்கி தூக்குபவன்எல்லாம் தீவிரவாதி ய்ல்ல பகத்சிங்குக்கு உள்ள
நியாயம் இவனுக்கும் இருக்கும் என புரிய வைத்து இருக்க வேண்டும்
(இந்த பிரச்சனை ஆரம்பித்தது இன்றல்ல ) அன்றிலிருந்து பேசிய இடது சாரிகளின் கட்டுரையை பாருங்கள் .
கருத்துஎதுவாக இருந்தாலும் மக்கள்
மத்தியில் கொண்டுசெல்ல வேண்டும்
அவர்களை திரட்ட அவர்களை
வர்க்கபடுத்த வேண்டும் (இதுதான் ஒரே வழி ) மாறாக வேறுஎந்த வேலையும் பலன் தராது

தொடர்ந்து சிந்தாந்த புரிதல்களை நீங்கள் மக்களிடம் இம்மாதிரியான
ஊடகங்கள் வாயிலாவது கொண்டு செல்ல வேண்டும்என நினைத்து செயல்படுவது மிகவும் மகிழ்வளிகிறது

"மன்றம் போன்ற கருத்துருக்களின் துணை கொண்டு பார்க்க தயாராயில்லையே? ஏன் இந்த விசயங்கள் எல்லாம் இந்தியாவுக்கு மட்டும்தானா? காஸ்மீர் மக்களுக்கு இவை சொந்தமில்லையா?"

காஸ்மீரிகள் தங்களது நிலையை மக்களைடம் கொண்டு செல்லும்முன்
பாகிஸ்தானிடம் கொண்டு சென்று விட்டார்களோஎன அஞ்சுகிறேன்

-தியாகு

said...

சரி இந்த வகையிலான அனுகுமுறையை (DEMOCRATIC OR POPULACE) உங்களது அரசு காஸ்மீரில் செய்ததா?

அரசு செய்யாது இந்த அரசல்லஎந்த
அரசும் செய்யாது

இந்த அரசு மக்களால் தேந்த்டுக்கப்பட்டு மக்களால் நடத்தப்பட்டு மக்களை அடக்கும் அரசு

-தியாகு

said...

///எந்த அமைப்பை மாற்ற விரும்புகிறீர்களோ அந்த அமைப்பை அப்படியே எடுத்துக் கொண்டு மாற்ற முடியாது. இந்த அம்சத்தில் உங்கள் கருத்திலிருந்து ஒரே அம்சம் சரியே. அதாவது ""இந்த மக்களையும்"' என்று குறிப்பிட்டுள்ளீர்களே அது மிகச் சரி. அதாவது எந்த ஒரு மாற்றமும் மக்களிடம் அதற்க்கான அரசியல் போராட்டம் நடத்தாமல் செய்ய முடியாது என்பது மிகச் சரி.
///

சரியான விளக்கம்......

said...

////
அன்புள்ள தோழா ,

ஆணித்தரமான வாதங்களை வைத்துள்ளத்ற்கு , காஸ்மீரிலுள்ள விசயங்கள் முற்றிலும் இந்தியா அரசாண்மைக்கு இந்திய மக்களின் நலன் களுக்கு விரோதமானதுஎன
கூவி கொண்டுள்ள மீடியாக்களை பார்க்கும்எந்த ஒரு சாதாரண நபரும்
அப்சல் தூக்கிலிடப்பட வேண்டும்என்ற
நினைப்புக்குத்தான் வருவான்

அது அவன் தவறல்ல மக்களிடம் நிலைமையை விளக்காத கம்யூனிஸ்டுகளின் தவறு மார்க்ஸ் பெயரை சொல்லி மண்டியிட்டு ஓட்டு வாங்குபவர்களே துல்லியமாக நிலைமையை மக்களிடம் கொண்டு செர்த்திருக்க வேண்டும் .
துப்பாக்கி தூக்குபவன்எல்லாம் தீவிரவாதி ய்ல்ல பகத்சிங்குக்கு உள்ள
நியாயம் இவனுக்கும் இருக்கும் என புரிய வைத்து இருக்க வேண்டும்
(இந்த பிரச்சனை ஆரம்பித்தது இன்றல்ல ) அன்றிலிருந்து பேசிய இடது சாரிகளின் கட்டுரையை பாருங்கள் .
கருத்துஎதுவாக இருந்தாலும் மக்கள்
மத்தியில் கொண்டுசெல்ல வேண்டும்
அவர்களை திரட்ட அவர்களை
வர்க்கபடுத்த வேண்டும் (இதுதான் ஒரே வழி ) மாறாக வேறுஎந்த வேலையும் பலன் தராது
////

ஆம்.. மக்களிடம் செய்யும் அரசியல் போராட்டம் மட்டுமே எந்த ஒரு பலனையும் தரும். அதை இந்திய பாசிச மக்கள் விரோத அரசு காஸ்மீரிலும் கடைபிடிக்கவில்லை. அதன் விளைவை நாம் அனுபவிக்கிறோம்.




////
"மன்றம் போன்ற கருத்துருக்களின் துணை கொண்டு பார்க்க தயாராயில்லையே? ஏன் இந்த விசயங்கள் எல்லாம் இந்தியாவுக்கு மட்டும்தானா? காஸ்மீர் மக்களுக்கு இவை சொந்தமில்லையா?"

காஸ்மீரிகள் தங்களது நிலையை மக்களைடம் கொண்டு செல்லும்முன்
பாகிஸ்தானிடம் கொண்டு சென்று விட்டார்களோஎன அஞ்சுகிறேன்

-தியாகு
//////




இல்லை இது அரைகுறையான புரிதல். காஸ்மீர் பிரச்சனை மதச் சாயம் பூசத் தொடங்கியதும், பாகிஸ்தானின் ஆதிக்கம் இந்திய ஆக்கிரமிப்பு பகுதியில் வலுப்படத் துவங்கியதும் 1985 தேர்தலில் இந்திய அரசு செய்த தில்லு முல்லுக்களுக்கு பிறகு அங்கு எழுந்த ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்க்கு பிறகுதான். ஆக, அந்த 30 வருடங்கள் அங்கு என்ன நடந்தது?

அங்கு ஜனநாயகப் பூர்வமான போராட்டங்களுக்கு என்ன கதி நேர்ந்தது என்பதற்க்கு காஸ்மீர் பிரதமர் சேக் அப்துல்லாவின் பதவியிறக்கமும், அவரை கைது செய்து, 10 வருடங்கள் என்று நினைக்கிறேன், சிறை வைத்திருந்ததும் பதில் சொல்லும்.


மேலும், காஸ்மீரின் வரலாற்றை 1950 வரை எடுத்துப் பார்த்தல் அதன் மத வேறுபாடற்ற கலாச்சார, அரசியல் பன்முகத்தன்மை வெளிப்படும். இந்த விசயத்தை இன்றைக்கு RSS போன்ற மத வாத அமைப்புகளுடன் இணைந்து செய்லபடும் காஸ்மீர் பண்டிட்கள் கூட மறுப்பதில்லை.

இந்த செழுமையான பாரம்பரியத்தை குழி தோண்டி புதைத்த பெருமை யாரை சேரும்?

இதற்க்கு விடை தேடினால் அதன் பதில் நீங்கள் குறிப்பிடுவது போல காஸ்மீர் மக்கள் பாகிஸ்தானின் துணையை நாடியதாக வரவில்லை. மாறாக, காஸ்மீரின் நியாயமான கோரிக்கைக்கான குரலை இந்திய அரசும், பாகிஸ்தான் பயங்கரவாதிகளும் கோடூரமாக நசுக்கினர், விளைவு பாகிஸ்தான் ஆதரவு சக்திகளும், இந்திய ஆதரவு சகதிகளும் மட்டும் வலுப்பெற்றன. (The whole drama of 'The kashmir' is being sponsered both by India and Pakishtan in colloboration)

அசுரன்.

said...

அன்புள்ள தோழர் ,

காஸ்மீரிகள்என்ன கேட்கிறார்கள் (விரும்புகிறார்கள்), தனிநாடா அல்லது சுய ஆட்சியா
அல்லது பாகிஸ்தானுடன் இணையும்
முயற்சியா,
ஊடகங்களும் , இந்திய அரசும் அங்கே நடப்பதுஎல்லை தாண்டிய பயங்கர வாதம்என்று மட்டுமே சொல்லி வந்துள்ளன .( இந்திய இளைஞர்களை அழைத்துபோய் ஆயுதபயிற்சி தந்து இந்தியாவில் போராட சொல்வது )என்ன த்ந்தாலும்
ஒருவன் தார்மீக காரணம்எதுவுமின்றி
ஆயுதம்ஏந்தவோ தன் குடும்பத்தையும் , உயிரையும் இழக்க
விளைவானா?
அப்படியானால் அவர்களிடம் நம்முன்னே மறைக்கப்பட்ட விண்ணப்பங்கள் , கோரிக்கைகள் இருக்கலாம் -(தீயை போர்வை போட்டு மறைக்க முடியுமா )

உங்களுக்கு தெரிந்ததைஎங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

தியாகு



-தியாகு

said...

அசுரன்,
முதலில் ஒரு நீள முன்னுரை. உங்கள் பதிவிகளில் சிலவற்றையும் பின்னூட்டங்களையும் படித்திருக்கிறேன். உக்கிரமாக விவாதம் புரிகிறீர்கள். அதை நேர்மையாகவும் கண்ணியமாகவும் நடத்துகிறீர்கள். வெகு வெகு சிலருக்கே (நான் அதில் சேர்த்தி இல்லை) உங்களுடன் அறிவுபூர்வமாக விவாதம் செய்யும் பொறுமையும் திறமையும் விஷய ஞானமும் staying power உம் இருக்கிறது என நினைக்கிறேன். அதனால்தான் கேள்விகள் குத்தினாலும், தொடர்ந்து பதில் சொல்ல இயலுமா என்று தெரியாவிட்டாலும், நல்ல விவாதத்தை தொடர்வதற்க்கு வருகிறேன்.
//#1) ஏன் அப்சல் ஒரு தீவிரவாதி?//
Polls ல் சொல்வது போல் கேள்வியை பொருத்து பதில் மாறும் என்பதால் கேள்வியை சற்றே மாற்றி பதில் அளிக்கிறேன். "யாருக்கு, ஏன் அப்சல் ஒரு தீவிரவாதி?" எனக்கு அப்சல் தீவிரவாதிதான். ஆயுதம் ஏந்தினான். வன்முறையால் என் நாட்டில் பெரும் குழப்பம் விழைவிக்க துணை போனான். எனக்கு மட்டுமல்ல, பண்டிட்களோ, லடாக் Budhistsஓ, குறைகளிருந்தாலும் குற்றங்களிருந்தாலும் உள்ளிருந்து களைவோம் அனால் இந்தியா என் நாடு அதற்கு ஊறு விளைவிக்கும் எந்த முயற்சிக்கும் துணை போக மாட்டேன் என நினைக்கும் எல்லா இந்தியர்களும் அவ்வாறே கருதுவர் என நினைக்கிறேன். Srinagarல் இருக்கும் முஸ்லீம் மதத்தவர் அப்சலை விடுதலை வீரராக கருதலாம். இந்தியாவில் இருக்கும் வெகு சில முஸ்லீம் மத்தவர் (தயக்கத்துடன் கூறுகிறேன்) அவரை தீவிரவாதியாக கருதினாலும், மற்ற இந்தியரை விட அப்சலை சூழ்நிலை கைதி என்ற அபிமானத்துடன் அணுகலாம். யார் கண்டா, அப்சலின் பெற்றோர், அப்சலை தீவிரவாதியாகவும் அல்லாமல், சுதந்திர வீரராகவும் அல்லாமல், வெறும் நிரபராதியாக கருதலாம்.
//2)ஏன் பாராளுமன்றத்தில் அவர்கள் குண்டு வைத்தார்கள்?//
இப்போது அப்சலை விட்டு Kashmir Seperatists பற்றி கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். Revenge, Justice, Big Bang Effect. You screw with my country? Now we take it to your turf. பிரச்சனையின் தீவிரத்தை இந்தியாவிற்கும் உலகிற்கும் (read 'USA') உணர்த்தவும் தான்.
#3) குண்டு வைத்திருந்தால் எனில் எந்த வகையில் அவர் பகத்சிங்கிடம் இருந்து வேறுபடுகிறார்?
ரொம்ப contraversial ஆன கேள்வி! இருவரும் ஆயுதம் ஏந்தினர், ஆயுதம் ஏந்தியதற்கு காரணம் மாற்றான் நம்மிடம்/நம் நாட்டிடம் அடக்குமுறை புரிந்தான் என்ற நினைப்பு, சண்டையை எதிரியின் களத்திற்கே எடுத்து சென்றது என்ற மூன்று parameters படி மட்டும் பார்த்தால் வித்தியாசம் இல்லை. அப்படி மட்டும் பார்க்கும் பொழுது, ஒஸாமாவொ, twin towers தகர்த்தவர்களோ, இஸ்ரேலியர்களோ, பாலஸ்தீனியர்களோ, அல்லது நீங்கள் உலகில் வெறுக்கும் ஆயுதம் எந்தி போராடும் எந்த குழுவினரும், பகத் சிங்கோடு வேறுபடவில்லை. அனால் உலகில் எதுவுமே கறுப்பு/வெள்ளை என்று ஆக பாகுபடுத்த முடியாதே. இருந்தாலும் முயற்ச்சிக்கிறேன். நீங்கள் சொல்லும் ஜனநாயகவாதியாக. நம் கோணத்தில் நியாயம் இருக்கிறதா என்பதை பொருத்தது இது. அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமப்பதற்க்கும்/இஸ்ரேல் லெபனானை தாக்குவதற்க்கும்/சைனா திபெத்தையும் தாய்வானையும் தன் நாடாக கருதுவதற்க்கும்/புலிகள் இலங்கை அரசை எதிர்த்து போராடுவதற்கும்/காஷ்மீர் முஸ்லீம்கள் இந்தியாவை எதிர்த்து போராடுவதற்கும் சில வேறுபாடுகள் சில ஒற்றுமைகள் பார்க்கிரீர்களா இல்லா ஆயுதம் ஏந்தி establishment ஐ எதிர்த்து போராடும் எல்லோரும் ஒன்றுதான் என நினைக்கிரீர்களா? Unlike some of these conflicts, I see a basis and justice on the Indian side.
//#4) இது போல ஒருவர் நாட்டின் பாராளுமன்றத்தில் குண்டு வைத்து - இறையாண்மையை தகர்த்திருக்கும் பட்சத்தில், ஒரு மக்கள் நலனை முன்னிறுத்தும், ஜனநாயகமான அரசு என்ன செய்ய வேண்டும்?//
தண்டனைதான். வேறு என்ன? சட்டத்தின் படி மட்டுமல்ல, எல்லா படியும் தான். என்ன தண்டனை என்பதில் எனக்கு வேறு பாடு உண்டு. மரண தண்டனையில் எனக்கு ஒப்புதல் இல்லை. அது யாராயிருந்தாலும், எவ்வளவு பெரிய குற்றமாயிருந்தாலும். தண்டனையின் காரணம் மறுபடி குற்றம் நடப்பதை தடுப்பதோ, குற்றத்தின் incentive ஐ குறைப்பதோ மட்டுமல்ல. தவறு செய்தாயா? Pay the price. Keep going. Next one on the line, Know the price. You will pay.
//5)ஒரு மக்கள் நல, ஜனநாயக அரசின் நோக்கம், அப்சலை கொல்லும் விசயத்தில் என்னவாக இருக்க முடியும்? //
முன்னால் சொன்னதுதான். ராஜதுரையும் தன் பதிவில் சட்டம் தண்டனை கொடுப்பதற்கான காரணத்தையும் நோக்கத்தையும் அழகாக விளக்கியுள்ளார்.
//#6) காஸ்மீரில் அவருக்கு ஆதரவாக போராட்டம் நடக்கிறதே அதை எப்படி எடுத்துக் கொள்வது?//
Like a medicine . ஏன் என இந்தியாவில் நம்புவர்கள் சிந்திக்க வேண்டும். மாற்ற வேண்டியதை மாற்ற வேண்டும். இந்தியாவில் நம்பாதவர்களும் சிந்திக்க வேண்டும். இந்த போராட்டங்களுக்கு பின்னால் இந்தியாவின் தவறுகள் மட்டுமல்ல, காஷ்மீர் முஸ்லீம்களின் தவறுகளும், பாகிஸ்தானின் அரசியலும் இருக்கிறது என.
#7) தேசப்பற்று என்றால் என்ன?
விவாததிற்கு தேவையான கேள்வியாக எனக்கு தோண்றவில்லை. Pass.

PS: என்னை போல் சும்மா இருப்பவர்களையும், கொத்து பரோட்டோ போடுபவர்களையும் (I love the posts though), கலவரத்தையும் கொலை வெறியை தூண்டுபவர்களையும் எல்லா பக்கத்தையும் கருத்து சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

said...

முத்தமிழ் குழமத்தில், இங்கு விவாதம் செய்த நண்பர் Bad News India அங்கும் என்னுடன் விவாதம் செய்ய வந்தார். இருவரும் இரு துருவங்களைப் போல வேறுபட்ட கருத்துக் கொண்டிருந்தாலும் கூட, மக்களின் நலன், ஜனநாயகம் என்று வரும் பொழுது ஒரளவு ஒத்த கருத்துடையவர்களாய் இருப்பதாகவே தோன்றியது. ஏனேனில் அவர் இந்தியாவையும் கூட ஓரளவு கிரிட்டிக்கலாக பார்ப்பது போன்று ஒரு எண்ணம். அதை லாஜிக்கலாக பார்த்து உள்வாங்கி சொன்னாரா என்று தெரியவில்லை. ஆயினும் அங்கு ஒரு நல்ல விவாதம் தொடங்கியுள்ளது. அதற்க்கு அவருக்கு நன்றி சொல்லிவிட்டு. எங்களது முதல் ரவுண்ட் விவாதத்தை இங்கு இடுகிறேன்.

*************************

Bad News India இது நல்ல வாதம். பாராட்டுக்கள்.

//////

அசுரன் சார்,

//என்னுடைய தளத்தில்
விவாதம்
செய்தீர்களே? அங்கு
எதேனும் ஒரு இடத்திலாவது
காஸ்மீர் தனியாக போவதுதான்


தீர்வு என்று நான்
கூறினேனா//

நான் எழுதியது, நீங்கள்
இப்படி சொன்னீர்கள்
என்றல்ல. நீங்கள் அப்படி
நினைக்கிறீர்களா என்று
அறியத்தான்.
////////

அப்படி ஒரு தீர்வை நான் நினைக்கவில்லை என்பது எனது பதிலில் இருந்து தெரிய வந்திருக்கும் என்று நம்புகிறேன். :-))



**********

//////////
anyway, மக்கள் & தலைவன் என்று
இரண்டு இனம் உண்டு. தலைவன்
கூடுமானவரை அவனுக்கு கீழ்
இருக்கும் மக்களின் மன
ஓட்டத்தையும், வாழ்க்கை
ஓட்டத்தையும் அமைக்கிறான்.
/////////

இது தவறான புரிதல் வரலாற்றை தலைவர்கள் உருவாக்குவதில்லை மக்கள், மக்கள் மட்டுமே உருவாக்கிறார்கள். ஒரு சமூகம் தனக்கான தலைமையை தானே பெற்றெடுக்கும். ஆக மக்களுக்கேற்ற தலைவர்தானேயொழிய, தலைவனுக்கேற்ற மக்கள் அல்ல. இன்னும் சொன்னால் ஒரு புதிய தலைமை அது வரும் பொழுது மக்களின் ஏகோபித்த ஆதரவுடந்தான் வரும். அதாவது புதிய தலைமையின் தேவை அந்த மக்களின் பொதுக் கருத்தாக இருக்கும் பட்சத்தில்தான் ஒருவன் புதிய தலைமையாக வர முடியும். பிறகு அது தனது உண்மையான வர்க்க சார்பை காட்டி மக்கள் விரொதத்தை சிறுக சிறுக சம்பாதிக்கும், ஒரு கட்டத்தில் அந்த குறிப்பிட்ட சமூகத்தினுடைய பொருளாதார அமைப்பு அந்த மக்களுக்கு கடுமையான பிரச்சனைகளை உருவாக்குகிறது எனில் அந்த தலைவன் ஒரு தலைவன் என்ற முறையில் கலாவதி ஆகிவிட்டான் என்று பொருள். இது தலைவனுக்கு மட்டுமல்ல. ஒட்டு மொத்த அரசியல் பொருளாதார அமைப்புக்கும் பொருந்தும். இந்த அம்சத்தில் எப்படி கம்யுனிசம் வேறுபடுகிறது என்பது நமது விவாத பொருள் அல்ல(இதுவே கூட நமது விவாத பொருள் அல்ல).

ஆக, நான் சொல்ல வந்தது தலைவன் மக்களின் வாழ்வை தீர்மானிப்பதில்லை. மாறாக ஒருவன் குறிப்பிட்ட தலைவனாக இருப்பது என்பதே அந்த மக்களின் எண்ண ஓட்டத்தை ஏமாற்றியாவது திருப்திபடுத்துவது போல நடிக்க வேண்டும் என்பதுதான். இங்கு தலைவனின் எந்த ஒரு நடவடிக்கையையும் தீர்மானிப்பது மக்கள்தான்.

******************



/////
காஷ்மீரை பொறுத்தவரை ஹரி
சிங் என்ற தலைவன், தனக்கு
இந்தியாவும் வேண்டாம்,
பாகிஸ்தானும் வேண்டாம்,
காஷ்மீர் தனி நாடாக
இருக்கட்டும் என்று
எண்ணினான். ( அது அவன் பதவி
வெறியா, அல்ல வேறு நல்ல
எண்ணமா என்று முழுதாக
தெரியவில்லை ).
//////

ஹரிசிங் ஒரு மன்னர். தலைவர் அல்ல.



/////////
காஷ்மீர் மக்களுக்கு பல
நல்ல முன்னேற்றங்கள்
ஏற்பட்டது ஹரி சிங்கின்
ஆட்சியில் தான். குழந்தைத்
திருமணம் தடுப்பு, தாழ்ந்த
ஜாதி யை சேந்தவனுக்கு (almost) equal
rights, என்று 1947 க்கு முன்னரே
புரட்சி செய்தவன் அவன்.
/////////

இது எப்படி என்பது பற்றி என்னிடம் எந்த தகவலும் இல்லை. ஆயினும் அன்றைய இந்திய துணைக் கண்டத்தில் இது போன்ற சீர்திருத்தங்கள் பரவலாக நடந்து வந்த வேலை ஆகவே அதன் பாதிப்பு காஸ்மீரிலும் இருந்திருக்கலாம். ஆனால், ஹரிசிங்கின் மன்னராட்சியை எதிர்த்து மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் போராடியவர் காஸ்மீர் சிங்கம் என அறியப்படும் ஷேக் அப்துல்லா. இவரை 1947 சுதந்திரத்தின் தருவாயில் மன்னர் சிறை வைக்கிறார். இதிலிருந்து தெரிய வருவது என்னெவென்றால் மக்கள் அந்த மன்னருக்கு விரோதமாகவே இருந்துள்ளனர் என்பதுதான். அதனால்தான் இணைப்பு ஒப்பந்ததை ஷேக் அப்துல்லாவின் ஒப்புதலும் கோரப்பட்டது.

********************



/////////////
80% க்கும் மேல்
இஸ்லாமியர்களை கொண்ட அவன்
இப்படி இருந்தது
பாகிஸ்தானுக்கு
பிடிக்கவில்லை.
///////////

இது அடிப்படையற்ற தகவல். ஏனெனில் இது பற்றி எதுவும் ஜின்னா குறிப்பாக சொன்னாரா என்று தெரியவில்லை. இப்படி நான் சொல்லுவதன் அர்த்தம் இதை நான் மறுப்பது என்பதுஅல்ல.

*************************


/////////////
ஜின்னா
என்ற பதவி வெறிக்காரன், ஹரி
சிங்கிடம் 80% இஸ்லாமியர்
கொண்ட உன் நாட்டை
பாகிஸ்தானுடன் சேர்த்து
விடு என்றான்.
அங்கு வாழும் மக்களிடம்
ஓட்டு போட சொல்லி, அவர்கள்
விருப்பத்தை அவர்களே
தெளிவு செய்யட்டும் என்று
அறிவுரை கூறினான்.
இதர்க்கு அடிபணியாத ஹரி
சிங் நாட்டின் மீது
'விடுதலை வீரர்கள்'
(காஷ்மீருக்குள் mujahideens
முதல்ல அனுப்பி வச்சவர்
நம்ப ஜின்னாதான்) என்ற
போர்வையில்
பட்டாளத்தார்களை ஏவி
விட்டான்.
இதைப் பார்த்து கடுப்பான
ஹரி சிங் master plan போட்டு
ஷேக்குடனும், மாமா வுடனும்
ஐக்கியமானார்.
//////////

ஹரிசிங் மாஸ்டர் பிளான் போட்டது என்னவோ உண்மை, ஜின்னா பதவி வெறியர் எனில் அவருக்கு இணையாக காஸ்மீரை பார்த்து நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு அழைந்த இந்தியாவும் அப்படித்தான். என்ன இந்திய ஆளும் வர்க்கம் கொஞ்சம் நரித்தனம் ஜாஸ்தியான பார்ட்டிகள் அதனால் சட்ட வரம்புகளிலுள்ள ஓட்டைகளை வைத்தே தான் நினைத்த மாதிரி அந்த பாதுகாக்க ஆளற்ற இளம் பெண்ணை பலாத்காரம் செய்தது. பாகிஸ்தான் முரட்டு முட்டாள் அதனால் அது லூசுத்தனமாக ராணுவ சாகச வழியை எடுத்து மூக்குடைப்பட்டது.


அது சரி, கிழக்கு பாகிஸ்தானுக்கு நம்ம இந்தியா ராணுவத்த அனுப்பும் முன்ன அதை இந்தியாவுடன் இணைக்க சொல்லி கேட்டுட்டுத்தான் அனுப்பினோமா?

காஷ்மீருக்கு மட்டும் என்ன சிறப்பு சலுகை......

உண்மையில் இந்த முழு விவகாரத்துக்கும் பின்னே உள்ள - தான, பேத, தண்ட முறை பேச்சு வார்த்தைகள் பற்றிய விவரங்கள் இல்லையென்பதைத்தான் அனுமானிக்க முடிகிறது. ஏனெனில், இணைப்பு ஒப்பந்தத்தின் 7வது சரத்தில் இந்தியாவுடனான காஷ்மீரத்தின் இணைப்பு என்பது எதிர் காலத்தில் அது சுதந்திரமாக முடிவெடுப்பதை எந்த முறையிலும் தடுக்கக் கூடாது என்கீறார் ஹரிசிங்(அதாவது இணைப்பு என்பது தற்போதைய சூழலை சமாளிக்கவே என்கிறார்). இந்தியாவின் மீது நம்பிக்கையில்லாமல்தான் இந்த வரிகளை அவர் சேர்த்திருப்பார்.


*************************


//////
உள்ளே வந்தவர்கள் புரட்சி
வாதிகள், சில பல
மத்ராஸாஸில் தவறாக
போதிக்கப் பட்டவர்கள்.
இஸ்லாமிய மண்ணில்
ஆக்கிரமம் செய்தவனின்
ரத்தம் பாராமல் வராதே என்ற
கோட்பாடை நம்புகிறவன்.
/////////

உள்ளே வந்தவர்களுக்கு பரவலான மக்கள் ஆதரவு இல்லையென்பதை முதலில் உணருங்கள்(1987 வரை). 1987 வரை காஷ்மீரின் பிரச்ச்னை தேசிய இனப் பிரச்சனைதானேயொழிய இஸ்லாம் மத அடிப்படைவாத கோரிக்கை கொண்ட பிரச்சனை கிடையாது. நீங்கள் சொல்லுவது போல அன்றி மக்கள் மத ஒற்றுமையுடனே இருந்தார்கள். இதை ஷேக் அப்துல்லாவின் தேசின இனக் கோரிக்கை பேச்சுக்களின் போது எல்லா மதஙக்ளைச் சேர்ந்தவர்களையும் அரைகூவி அழைக்கும் போது உணரலாம். அவரது கட்சிக்கு 1947க்கு முன்பு முஸ்லீம் கான்பிரன்ஸ் என்று பெயர் வைத்து பிறகு தேசிய இனத்தை முன்னிறுத்தும் வகையில் நேசனல் கான்பிரன்ஸ் என்று பெயர் மாற்றம் செய்ததில் உணரலாம்(இவையனைத்தும் 1947க்கு முன்பே நடந்தவை).

உங்களது அரசின் மொள்ள மாறித்தனத்தை மேனன் என்ற செயலாளரை அனுப்பி ஷேக் அப்துல்லா அரசை கவிழ்த்து அவரை சிறையில் அடைத்து தனி காஷ்மீர் கோரிக்கையை மிரட்டி முடக்கியதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இங்குதான் நீங்க்ளும் இந்தியா ஆளும் வர்க்கமும் ஒரு விசயத்தில் ஒன்று படுகிறீர்கள். அதாவது தலைவர்களை அட்ஜஸ்ட் செய்து விட்டால் புறவாசல் வழியாக எந்த விசயமும் கூட செய்யலாம் என்பது. உண்மையில் ஷேக் அப்துல்லா என்பவர் மக்களின் மனநிலையை பிரதிபலித்த ஒரு அறிகுறி, ஒரூ அறிகுறியை அழிப்பது என்பது அறிகுறிக்கான மூல காரணத்தை அழிப்பதாகாது. அதாவது ஷேக் அப்துல்லாவை உருட்டி மிரட்டி அடிபணிய வைப்பது(10 வருட சிறை) அந்த மக்களின் தேசிய இனக் கோரிக்கை எனும் மூல காரணத்தை அடிபணிய வைப்பது அல்ல.

இது போல அறிகுறியை சரியாக கையாளாத போது, மூல காரணத்தை சரியாக கையாளாத போது அது வேறுவிதமான அறிகுறீகளுக்கு(பரிணாம வளர்ச்சி) இட்டுச் செல்கிறது. அதுதான் 1987 தேர்தலுக்கு பிறகு அங்கு ஆதிக்கம் செலுத்த துவங்கிய பாகிஸ்தானும் காஷ்மீர் உள்ளேயே அதன் உடன் விளைவாய் தோன்றிய இஸ்லாம்வாதமும்.

இது யாருடைய தவறு..? 35 வருடங்கள்(1987 வரை) இந்த பிரச்சனை இல்லையே? காஸ்மீரின் வரலாறும் கூட மத அடிப்படைவாதத்துக்கு எதிரான மனோபாவம் உடையாதாகத்தானே இருந்தது. வெளியேற எண்ணீய காஸ்மீர் பண்டிட்டுகளிடம் நீங்க்ள் இங்கேயே இருக்கலாம், நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோ ம், ஆனால் வெளியிலிருந்து யாரேனும் வந்து தாக்கினால் எங்களால் காப்பாற்ற முடியாது என்றுதான் பெரும்பாலான முஸ்லீம்கள் சொன்னதாக பல பண்டிட்களும் பதிவு செய்துள்ளனர்(இணையத்தில் தேடினால்கூட கிடைக்கும்).

ஆக, Bad News India சொல்லுவது போல காஸ்மீர் பிரச்சனையை ஆரம்பத்திலிருந்து தீர்மானித்தது பாகிஸ்தான் மட்டும்தான் என்ற கூற்று தவறான புரிதல். காஸ்மீர் பிரச்சனையால் கடுமையாக பதிக்கப்பட்டுள்ள பண்டிட்கள் கூட அதன் சமீப காலத்து மதச் சார்பற்ற பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்தை வாஞ்சையுடன் நினைவு கூறுகிறார்கள். இந்தியா ஆக்கிரமித்துள்ள பகுதியில் பாகிஸ்தானின் ஆதிக்கம் ஓரளவு வளர்ந்ததே 1987க்கு பிறகுதான்.

***************************


////////////////
நேரு மாமா அனுப்பிய நம்
வீரர்களும் ஊரை விட்டு,
உறவை விட்டு பல காலம் அந்த
குளிர் பிரதேசத்தில்
இருக்க வேண்டிய சூழல்.
இவனும் அவ்வப்போது வழி
தவறி சில தவறுகள் செய்து
விடுகிறான் (கற்பழிப்பு,
கொலை, racism, ...)
////////////

நேரு மாமாவின் புத்திரர்கள் இங்கே சென்னை , பெங்களூர், டெல்லியிலும்தான் உள்ளனர் அங்கு இதே போன்ற எதோ மன்னிக்கக்கூடியது போல BNI அவ்ர்கள் சொல்லும் குற்றத்தை செய்யவில்லையே? ஏன்?

ரொம்ப குளிர அடித்தால் அம்மாவையும் படுக்கைக் கூப்பிடுவனோ உங்கள் நேர்மையான், வீரமான, சுயமரியாதை உள்ள ராணுவ பன்றிகள்?


*******************************

////////////
அவனை இவன் அடிக்க, இவனை அவன்
அடிக்க, ஒரு முடிவில்லாமல்
இன்று வரை தொடர்கிறது.


பிரச்சனையை அவ்வப்போது
பெரிதாக்கி, பார்லிமெண்ட்,
ரயில், பஸ் என்று குண்டு
வைத்து ரத்தம் காட்டினால்
வெளியில் இருக்கும்
international-police தலையிட்டு
அவர்களுக்கு ஏதாவது
இந்தியாவிடம் இருந்து
பிய்த்து கொடுப்பார்கள்
என்ற நப்பாசை.
/////////////////

இதில் தலையிடுவதற்க்கு உண்மையிலேயே இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கு தகுதி கிடையாது. இது உண்மையிலேயே சர்வதேச பிரச்சனைதான்.


*****************

///////////
உள்ளே புகுந்த தீவிரவாதி
உள்ளூரிலேயே தன் தீவிரவாத
எண்ணங்களை விதைக்கத்
தொடங்கினான்.
இந்த பிரச்சனை வெடித்த
நாளிலிருந்து, நன்றாக
செழிக்க வேண்டிய
காஷ்மீரும் மேலே வராமல்,
அங்கு இருக்கும்
இளைஞர்களுக்கு வேலை
கிடைக்காமல் விரக்தி
நிலையிலேயே இருக்கிறது.


எலும்புத் துண்டும்
எழுச்சி வார்த்தையும்
தீவிரவாதிகள் கொடுத்தால்,
கண்ணை மூடிக்கொண்டு அவன்
பின்னே சென்று
விடுகிறார்கள்.


தீவிரவாதிகள் எப்படி
எலும்புத் துண்டும்,
எழுச்சி வசனமும் பேசி
வசீகரிக்கிறானோ, அது போல
மாமா வின் சந்ததிகள்,
காஷ்மீர் இளைஞர்களுக்கு
எலும்பும் தரவில்லை,
எழுச்சியும் தரவில்லை.


அதனால் தான் இந்தப்
பிரச்சனை சீழ் பிடித்து
அப்படியே இருக்கிறது.


முல்லா ஓமர் போன்றவன்
குழம்பிய நிலையில்
இருக்கும் தீவிரவாதி. அவனை
பொறுத்தவரை அவன் சாராத
மற்ற மதத்தவர் அனைவரும்
அவன் இருக்கும் இடத்தில்
இருக்கக் கூடாது.


இந்தப் பரதேசியின்
பேச்சில் நம் இளைஞர்கள்
மாட்டாமல் இருந்து,
காஷ்மீரில் பிரச்சனை குறைய
வேண்டுமானால், நாம்
காஷ்மீர் சகோதரனுக்கு வேலை
வாய்பை அதிகரிக்க
வேண்டும். ஊரை மேலெழுப்ப
வேண்டும். அதிகார துஷ்
பிரயோகங்கள் குறைந்து,
அந்த சகோதரன் நம்மை
சகோதரனாக காண வேண்டும். brain-wash
செய்யப்பட்டிருக்கிறான்
அவன். அந்த மயக்கத்தை
கலைக்க வேண்டும்.
/////


மற்றபடி மேலேயுள்ள உங்கள் கருத்துக்கள் எல்லாம் காஸ்மீர் பிரச்சனையை ஏதோ இஸ்லாமீய அடிப்படைவாதம்தான் என்ப்து போல பார்க்கும் முயற்சியே. மேலே கொடுத்துள்ள எனது எதிர்வினையே இதற்க்கும் பொருந்தும்.

முதலில் காஸ்மீரிகளின் நம்பிக்கையை பெறும் முகமாக அவர்களின் ஜனநாயகக் கோரிக்கைகளை இந்தியா நிறைவேற்றியிருக்க வேண்டும். பிறகு இந்தியாவின் பிற மாநிலங்களில் அது நடைமுறைப்படுத்தும் மக்கள் நலத் திட்டங்கள் மூலம் அவர்களின் நம்பிக்கையை பெறும் முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும். பிறகு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் அவர்கள் உறுதியாக இங்கு வந்து சேர்ந்திருப்பார்கள்.

இந்திய சுதந்திர போராட்டத்தின் போதே சுதந்திரத்தை(அதாவது ஆளும் வர்க்கத்துக்கான சுதந்திரத்தை என்று புரிந்து கொள்ள் வேண்டும்) பேரம் பேசியே வாங்கிவிடலாம் என்று நம்பிய பச்சையான அடிவருடிகளுக்கு காஸ்மீர் விசயத்திலும் அதே போன்ற அதிகாரத்துவ தீர்வுகள் மட்டுமே கண்ணில் தெரிந்தது ஆச்சரியமான விசயமல்ல.

ஆக, 50 வருட காலத்தில் இந்தியாவுக்கும் காஸ்மீர் விசயத்தில் எந்த ஒரு நேர்மையான அணுகுமுறை கிடையாது என்பதை அழுந்த பதிய வைத்தாகிற்று.

மற்றபடி இப்பொழுதைக்கு சர்வதேச சபையின் கட்டுப்பாட்டில் வாக்கெடுப்பு நடத்தி முடிவு நெகடிவ்வாக வரும் பட்சத்தில் காஸ்மீரை சர்வதேச படைகளின் கட்டுப்பாட்டில் ஒப்படைப்பதும் பிறகு அதன்(காஸ்மீரிகளின்) நல்லெண்ணத்தை பெற முயற்சிப்பதுமே சிறந்த தீர்வு.

இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்க் கெதிரான் பொராட்டமும் தற்பொழுது தேவையாக இருப்பது வாஸ்தவம்தான். ஆனால் அது இடையில் வந்த பிரச்சனைதானேயொழிய மூல பிரச்சனை என்பது தேசிய இன பிரச்சனைதான் அதுதான் ஊற்று மூலம் அதை விட்டு விட்டால் ஒன்றும் தீர்வு கிடைக்காது. ஆனால் தேசிய இனங்களின் சுதந்திரத்தை போற்றும் அளவு இந்தியா ஜனநாயகமான நாடு அல்ல. ஆக, காஸ்மீரின் தீர்வு என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் இந்திய அதிகார வர்க்க எதிர்ப்பு மற்றும் பாகிஸ்தான் அடிப்படைவாத எதிர்ப்பு என்ற தன்மையைப் பெறுகிறது. இதன் ஊடாக இந்திய உழைக்கும் வர்க்கத்துடன் ஐக்கியமாகும் தீர்வு நிரந்தர தீர்வாகும்.


ஏனேனில் அதற்க்கு மாற்று என்று சொல்லப்படும் தீர்வுகள் அதைவிட மிகக் கடுமையான வன்முறையையும், வரலாறு முழுவதும் தழும்புகளை விட்டுச் செல்லும் மோசமானதுமான தீர்வாக உள்ளது.


*******************************

////////
short-term க்கு, இப்போதிருக்கும்
பிரச்சினைகளை அவ்வப்போது
அமுக்கி விட வேண்டும், while also
parallely bringing up Indian occupied Kashmir just like every other
state.


அப்ஸல் போன்ற mis-adventure
செய்யும் நபர்களை
அவ்வப்போது களை எடுக்க
வேண்டும்.


எஞ்சி இருக்கும்
அப்ஸல்களின் கவனத்தை
வேலையிலும் அவர்கள்
குடும்பத்திலும் செலுத்த
வைக்க வேண்டும்.


ரொம்ப பெருசாயிடுச்சோ?


ஜம்மு காஷ்மீர் அழகான
ஊராமே? இந்த மக்களின்
பிரச்சனையை தீர்க்க
வேண்டும் என்ற உண்மையான
எண்ணம் இரு அரசுக்கும்
இருந்தால், காஷ்மீரில்
positive-air படரச் செய்ய வேண்டும்.
பாகிஸ்தான்
தீவிரவாதத்தையும், நாம்
தவறு செய்யும்
அதிகாரிகளையும் அகற்ற
வேண்டும்.
கராச்சியிலிருந்தும்,
கன்யாகுமரியிலிருந்தும்
மக்கள் அனைவரையும் வரச்
சொல்ல வேண்டும்.
Tax-free benefits பல கொடுத்து
சுற்றுலா பெருக்கி, வளம்
பெற செய்ய வேண்டும்.


மக்கள் மகிழ்ச்சியா
இருந்தா துப்பாக்கி ஏன்
தூக்க போறான். அதுவும் அழகு
பூமி காஷ்மீர்ல.


யோசிப்பாங்களா?
/////////

இதுக்கு ஒரே பதில், இந்தியாவின் ஏற்கனவே மாநிலமாக இருக்கும் பகுதிகளே இந்த அரசை வெறுத்து துப்பாக்கி தூக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான். அதாவது இது எந்த மாநிலத்திலேயுமே மக்கள் நல அரசாக இல்லாத பொழுது காஸ்மீருக்கு மட்டும் எப்படி இருக்க முடியும். Bad News India சொல்லும் அடக்குமுறை தீர்வுகள் முரன்பாடுகளை வேறு பரிணாமத்துக்குத்தான் கொண்டு செல்லுமேயொழிய தீர்க்காது(அதாவது 1985 முன்பு வரை தேசிய வாதம் பிரதானமான அரசியல் கோரிக்கை. இன்றும் கூட அதுதான் முக்கிய கோரிக்கை ஆனால் அதன் மேல் ஓடாக இஸ்லாம் அடிப்படைவாதம் இடம் பிடிப்பதில் குறிப்பிடத்தகுந்த வேற்றிப் பெற்றுள்ள பரிணாம வளர்ச்சி BNIயின் தீர்வின் விளைவு(அதாவது அடக்குமூறை)).

மாறாக, அதே BNI, இந்தியாவின் மற்ற மாநில வளர்ச்சிகளை காட்டி காஸ்மீருக்கும் அதே போன்றவற்றை செய்து அந்த மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் எனும் தீர்வு அருமையானதொரு தீர்வுதான் ஆனால் அதை செய்யும் தகுதியோ விருப்பமோ இந்த அரசுக்கு கிடையாது. அது அடக்குமுறையைத்தான் முழுமையாக நம்பியுள்ளது. மேலும் அது இந்தியாவின் இதர மாநிலங்களிலும் அழிவைத்தான் பரப்பி வருகிறது. அதாவது இன்றைய நிலையில் அது தனது சொந்த மாநிலத்து மக்களின் நம்பிக்கையை பெருவதற்க்கான போராட்டத்தை நடத்துவதற்க்கே வக்கற்று உள்ளது.

*******************

தனது புரிதலை தெளிவாக எடுத்து வைத்தமைக்கு BNIக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.(இதை எனது தளத்தில் பிரசூரிக்கிறேன். poar-parai.blogspot.com)


BNIயின் எதிர்வினைக்காக காத்திருக்கும்,
அசுரன்





Bad News India wrote:
> அசுரன் சார்,
>
> //என்னுடைய தளத்தில்
> விவாதம்
> செய்தீர்களே? அங்கு
> எதேனும் ஒரு இடத்திலாவது
> காஸ்மீர் தனியாக போவதுதான்
>
> தீர்வு என்று நான்
> கூறினேனா//
>
> நான் எழுதியது, நீங்கள்
> இப்படி சொன்னீர்கள்
> என்றல்ல. நீங்கள் அப்படி
> நினைக்கிறீர்களா என்று
> அறியத்தான்.
>
> anyway, மக்கள் & தலைவன் என்று
> இரண்டு இனம் உண்டு. தலைவன்
> கூடுமானவரை அவனுக்கு கீழ்
> இருக்கும் மக்களின் மன
> ஓட்டத்தையும், வாழ்க்கை
> ஓட்டத்தையும் அமைக்கிறான்.
>
>
> காஷ்மீரை பொறுத்தவரை ஹரி
> சிங் என்ற தலைவன், தனக்கு
> இந்தியாவும் வேண்டாம்,
> பாகிஸ்தானும் வேண்டாம்,
> காஷ்மீர் தனி நாடாக
> இருக்கட்டும் என்று
> எண்ணினான். ( அது அவன் பதவி
> வெறியா, அல்ல வேறு நல்ல
> எண்ணமா என்று முழுதாக
> தெரியவில்லை ).
> காஷ்மீர் மக்களுக்கு பல
> நல்ல முன்னேற்றங்கள்
> ஏற்பட்டது ஹரி சிங்கின்
> ஆட்சியில் தான். குழந்தைத்
> திருமணம் தடுப்பு, தாழ்ந்த
> ஜாதி யை சேந்தவனுக்கு (almost) equal
> rights, என்று 1947 க்கு முன்னரே
> புரட்சி செய்தவன் அவன்.
>
> 80% க்கும் மேல்
> இஸ்லாமியர்களை கொண்ட அவன்
> இப்படி இருந்தது
> பாகிஸ்தானுக்கு
> பிடிக்கவில்லை. ஜின்னா
> என்ற பதவி வெறிக்காரன், ஹரி
> சிங்கிடம் 80% இஸ்லாமியர்
> கொண்ட உன் நாட்டை
> பாகிஸ்தானுடன் சேர்த்து
> விடு என்றான்.
> அங்கு வாழும் மக்களிடம்
> ஓட்டு போட சொல்லி, அவர்கள்
> விருப்பத்தை அவர்களே
> தெளிவு செய்யட்டும் என்று
> அறிவுரை கூறினான்.
> இதர்க்கு அடிபணியாத ஹரி
> சிங் நாட்டின் மீது
> 'விடுதலை வீரர்கள்'
> (காஷ்மீருக்குள் mujahideens
> முதல்ல அனுப்பி வச்சவர்
> நம்ப ஜின்னாதான்) என்ற
> போர்வையில்
> பட்டாளத்தார்களை ஏவி
> விட்டான்.
> இதைப் பார்த்து கடுப்பான
> ஹரி சிங் master plan போட்டு
> ஷேக்குடனும், மாமா வுடனும்
> ஐக்கியமானார்.
>
> உள்ளே வந்தவர்கள் புரட்சி
> வாதிகள், சில பல
> மத்ராஸாஸில் தவறாக
> போதிக்கப் பட்டவர்கள்.
> இஸ்லாமிய மண்ணில்
> ஆக்கிரமம் செய்தவனின்
> ரத்தம் பாராமல் வராதே என்ற
> கோட்பாடை நம்புகிறவன்.
>
> நேரு மாமா அனுப்பிய நம்
> வீரர்களும் ஊரை விட்டு,
> உறவை விட்டு பல காலம் அந்த
> குளிர் பிரதேசத்தில்
> இருக்க வேண்டிய சூழல்.
> இவனும் அவ்வப்போது வழி
> தவறி சில தவறுகள் செய்து
> விடுகிறான் (கற்பழிப்பு,
> கொலை, racism, ...)
>
> அவனை இவன் அடிக்க, இவனை அவன்
> அடிக்க, ஒரு முடிவில்லாமல்
> இன்று வரை தொடர்கிறது.
>
> பிரச்சனையை அவ்வப்போது
> பெரிதாக்கி, பார்லிமெண்ட்,
> ரயில், பஸ் என்று குண்டு
> வைத்து ரத்தம் காட்டினால்
> வெளியில் இருக்கும்
> international-police தலையிட்டு
> அவர்களுக்கு ஏதாவது
> இந்தியாவிடம் இருந்து
> பிய்த்து கொடுப்பார்கள்
> என்ற நப்பாசை.
>
> உள்ளே புகுந்த தீவிரவாதி
> உள்ளூரிலேயே தன் தீவிரவாத
> எண்ணங்களை விதைக்கத்
> தொடங்கினான்.
> இந்த பிரச்சனை வெடித்த
> நாளிலிருந்து, நன்றாக
> செழிக்க வேண்டிய
> காஷ்மீரும் மேலே வராமல்,
> அங்கு இருக்கும்
> இளைஞர்களுக்கு வேலை
> கிடைக்காமல் விரக்தி
> நிலையிலேயே இருக்கிறது.
>
> எலும்புத் துண்டும்
> எழுச்சி வார்த்தையும்
> தீவிரவாதிகள் கொடுத்தால்,
> கண்ணை மூடிக்கொண்டு அவன்
> பின்னே சென்று
> விடுகிறார்கள்.
>
> தீவிரவாதிகள் எப்படி
> எலும்புத் துண்டும்,
> எழுச்சி வசனமும் பேசி
> வசீகரிக்கிறானோ, அது போல
> மாமா வின் சந்ததிகள்,
> காஷ்மீர் இளைஞர்களுக்கு
> எலும்பும் தரவில்லை,
> எழுச்சியும் தரவில்லை.
>
> அதனால் தான் இந்தப்
> பிரச்சனை சீழ் பிடித்து
> அப்படியே இருக்கிறது.
>
> முல்லா ஓமர் போன்றவன்
> குழம்பிய நிலையில்
> இருக்கும் தீவிரவாதி. அவனை
> பொறுத்தவரை அவன் சாராத
> மற்ற மதத்தவர் அனைவரும்
> அவன் இருக்கும் இடத்தில்
> இருக்கக் கூடாது.
>
> இந்தப் பரதேசியின்
> பேச்சில் நம் இளைஞர்கள்
> மாட்டாமல் இருந்து,
> காஷ்மீரில் பிரச்சனை குறைய
> வேண்டுமானால், நாம்
> காஷ்மீர் சகோதரனுக்கு வேலை
> வாய்பை அதிகரிக்க
> வேண்டும். ஊரை மேலெழுப்ப
> வேண்டும். அதிகார துஷ்
> பிரயோகங்கள் குறைந்து,
> அந்த சகோதரன் நம்மை
> சகோதரனாக காண வேண்டும். brain-wash
> செய்யப்பட்டிருக்கிறான்
> அவன். அந்த மயக்கத்தை
> கலைக்க வேண்டும்.
>
> long-term solution idhudhaan.
>
> short-term க்கு, இப்போதிருக்கும்
> பிரச்சினைகளை அவ்வப்போது
> அமுக்கி விட வேண்டும், while also
> parallely bringing up Indian occupied Kashmir just like every other
> state.
>
> அப்ஸல் போன்ற mis-adventure
> செய்யும் நபர்களை
> அவ்வப்போது களை எடுக்க
> வேண்டும்.
>
> எஞ்சி இருக்கும்
> அப்ஸல்களின் கவனத்தை
> வேலையிலும் அவர்கள்
> குடும்பத்திலும் செலுத்த
> வைக்க வேண்டும்.
>
> ரொம்ப பெருசாயிடுச்சோ?
>
> ஜம்மு காஷ்மீர் அழகான
> ஊராமே? இந்த மக்களின்
> பிரச்சனையை தீர்க்க
> வேண்டும் என்ற உண்மையான
> எண்ணம் இரு அரசுக்கும்
> இருந்தால், காஷ்மீரில்
> positive-air படரச் செய்ய வேண்டும்.
> பாகிஸ்தான்
> தீவிரவாதத்தையும், நாம்
> தவறு செய்யும்
> அதிகாரிகளையும் அகற்ற
> வேண்டும்.
> கராச்சியிலிருந்தும்,
> கன்யாகுமரியிலிருந்தும்
> மக்கள் அனைவரையும் வரச்
> சொல்ல வேண்டும்.
> Tax-free benefits பல கொடுத்து
> சுற்றுலா பெருக்கி, வளம்
> பெற செய்ய வேண்டும்.
>
> மக்கள் மகிழ்ச்சியா
> இருந்தா துப்பாக்கி ஏன்
> தூக்க போறான். அதுவும் அழகு
> பூமி காஷ்மீர்ல.
>
> யோசிப்பாங்களா?
>
> -BNI

said...

///////அன்புள்ள தோழர் ,

காஸ்மீரிகள்என்ன கேட்கிறார்கள் (விரும்புகிறார்கள்), தனிநாடா அல்லது சுய ஆட்சியா
அல்லது பாகிஸ்தானுடன் இணையும்
முயற்சியா, //////


பாக் மற்றும் இந்தியாவின் 50 வருட காலத்திற்க்கும் மேலான சீர்குலைவு வேலைகளுக்குப் பிறகு இந்த கேள்வி உண்மையில் கடினமான கேள்வியாகிவிட்டது. முதலில் அங்கு வாக்கெடுப்பு நடத்துங்கள் அதுதான் முதல் தேவை. அவர்களுக்கு பகுதி ரௌடிகளான இந்தியா, பாகிஸ்தான் இரண்டிலிருந்தும் பாதுகாப்பு கொடுப்பது இரண்டாவது அம்சம். ஒரு இந்தியனாக அவர்களிடையே அரசியல் போராட்டம் நடத்தி அவர்களை இந்தியாவுடன் இணைப்பதற்க்கு சம்மதிக்க வைப்பது மூன்றாவது விசயம். இந்த மூன்றாவது போராட்டம் இந்திய ஆளும் வர்க்கஙக்ளையும் வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்துடன் இணைந்தே நடந்தேறும். இதில் அவர்களின் உண்மையான நிலைப்பாடு இன்றைய நிலையில் தெளிவாக தெரியவில்லை.



////ஊடகங்களும் , இந்திய அரசும் அங்கே நடப்பதுஎல்லை தாண்டிய பயங்கர வாதம்என்று மட்டுமே சொல்லி வந்துள்ளன .( இந்திய இளைஞர்களை அழைத்துபோய் ஆயுதபயிற்சி தந்து இந்தியாவில் போராட சொல்வது )என்ன த்ந்தாலும்
ஒருவன் தார்மீக காரணம்எதுவுமின்றி
ஆயுதம்ஏந்தவோ தன் குடும்பத்தையும் , உயிரையும் இழக்க
விளைவானா?
அப்படியானால் அவர்களிடம் நம்முன்னே மறைக்கப்பட்ட விண்ணப்பங்கள் , கோரிக்கைகள் இருக்கலாம் -(தீயை போர்வை போட்டு மறைக்க முடியுமா )

உங்களுக்கு தெரிந்ததைஎங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

தியாகு
/////////



எனக்கு தெரிந்ததைத்தான்(காஸ்மீரின் 1950 முதல் 1990கள் வரையான வரலாறு குறித்த ஒரு சிறிய பார்வை) இங்கு முந்தைய சில பதில்களில் குறிப்பிட்டுள்ளேன். இப்பொழுது என்ன நடக்கிறது என்பதற்க்கு இந்த அக்டோ பர் மாதத்திலேயே இரண்டு முறை ராணுவம் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி படுகொலைகளைச் செய்துள்ளது சாட்சியாக உள்ளது. இந்த அடிப்படையில் இப்பொழுது அப்சல் விசயத்தில் என்ன செய்யலாம் என்பதை விவாதிப்பதுதான் இந்த பதிவின் தலைப்புக்கு நமது நேர்மையை காட்டுவதாகும் :-)))


அசுரன்.

said...

அசுரன்,

இரானுவ விஷயங்களை பற்றி பேசியதால் எனது மனதில் எழுந்த கேள்விகளை கேட்டுவிடுகிறேன்.

1.இரானுவத்திற்க்கு அப்பாவிகளை கொல்வதால் என்ன பலன் ஏற்படபோகிறது? ஒரு மாநிலம் முழுக்க இருக்கும் மக்களை கொன்றுவிட முடியாது, மேலும் அப்படி நாம் கொல்லும் பட்சத்தில் உலக வல்லரசுகள் இந்தியாவுக்கு எதிராக அதை பயன்படுத்தி நம்மை அழிக்க முயல்வார்கள் என்ற நிலையில் இந்திய இரானுவத்திற்க்கு அப்பாவிகளை கொல்வதால் என்ன பயன் என்பதை விளக்குவீர்களா?

Is the killing intentional and if so, what are the benefits ?

2. அப்படி அப்பாவிகளை கொல்லும் அரசு பத்திரிக்கைளையும், சுற்றுலா செல்பவர்களையும் அந்த பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்குமா?
(நீங்களும் நானும் காஷ்மீருக்கு போகலாம், ஒரு சாதாரன் ரஷ்ய பிரஜை செசென்யாவுகு போக முடியாது)

3. பூகம்பம் ஏற்பட்ட போது கூட அரசியல்வாதிகளை விட்டுவிட்டு ஏன் இந்திய ஆர்மி வந்து உதவ வேண்டும் என்று கிராம் மக்கள் கேட்டுக்கொண்டார்கள் ? அவர்களை இரானுவம் கொன்றுவிடும் என்பதாலா?

4. நிஜமாகவே 50 வருடங்களாக காஷ்மீரில் குண்டுவெடிப்பு நடக்கிறதா? Operation Topac என்று பாகிஸ்தானிய இரானுவம் என்பதுகளில் ஒரு ஆப்ரேஷன் ஆரம்பித்து போராளிகளை என்பதுகளின் கடைசியில் அனுப்ப ஆரம்பித்த பின்னர் தானே வன்முறை வெடித்தது ? அப்படி இல்லையா? ஆப்ரேஷன் topac பற்றி நீங்கள் இதற்க்கு முன்னர் படித்தது உண்டா? இல்லையென்றால் நீங்கள் காஷ்மீரில் பயங்கரவாதத்தை பற்றி தகுதியில்லாதவர் என்று கூட சொல்லலாம். (85 தேர்தலுக்கும் வன்முறைக்கும் முடிச்சு போடுவதால் சொல்கிறேன்.)

இங்கே காஷ்மீரில் இந்திய இரானுவம் இருப்பது சரியா தவறா போன்ற விவாதங்களில் நான் ஈடுபட விரும்பவில்லை. அது அரசியல். எனக்கு அதில் அதிகம் பரிச்சயம் இல்லை.இரானுவத்தை பற்றி நீங்கள் கருத்துகள் சொன்னதால் தான் நான் உள்ளே நுழைய வேண்டியதாயிற்று.

சும்மா உட்கார்ந்துகொண்டு இரானுவம் கொல்கிறது என்று சொல்லாதீர்கள் அய்யா.

இன்றைய நிலையில் காஷ்மீரில் மிக அதிக அளவில் ராஷ்ட்ரிய ரைப்பிள்ஸ் பிரிவினர் பனியில் அமர்த்தபட்டுள்ளனர். அவர்கள் யார் தெரியுமா? மன்னின் மைந்தர்கள். காஷ்மீரிகள். தமிழ் நாட்டில் இருந்தோ, பஞ்சாபில் இருந்தோ காஷ்மீருக்கு படைகளை அனுப்பி மக்களை யாரும் கொன்று குவிக்கவில்லை.மெதுவாக நிதானமாக காஷ்மீரிகளே தீவிரவாதிகளை எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.

இந்திய இரானுவம் தவறே செய்யவில்லை என்று யாரும் எப்போழுதும் சொல்லவில்லை. ஆனால் தவறுகள் நடந்த போது விசாரனைகள் நடந்திருக்கின்றன. குற்றவாளிகள் தண்டிக்கபட்டுள்ளனர். ஏன் இரண்டொரு மாதங்களுக்கு முன்பு கூட பெரிய அதிகாரிகள் கூட கோர்ட் மார்ஷல் செய்யபட்டு தூக்கிஎறியபட்டனர்.

இந்த நிலையில் இன்னொறையும் இங்கே சொல்லிவிடுகிறேன். எதிரிகளுக்கு இரானுவத்தை பற்றி தவறான என்னம் ஏற்படசெய்ய இந்த மாதிரி "இரானுவ தாக்குதலில் அப்பாவிகள் பலியாகிறார்கள்" போன்ற செய்திகள் மிகவும் வசதி.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஏரியில் இரானுவ படகுகளில் கஷ்மீர் குழந்தைகள் உல்லாச பயனம் சென்றனர்.அப்போது எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து கிட்டதட்ட ஐம்பது குழந்தைகளை பலியாயினர்.உடனே ஐம்பது பென்களை மானபங்கபடுத்த முயன்றதால் தான் படகில் களேபரம் ஏற்பட்டு கவிழ்ந்ததாக செய்திகள் வெளியாயின. ஐம்பது பென்கள் - இரண்டு வீரர்கள்!!! நம்ப முடிகிறதா? பச்சிளம் பிள்ளைகள் என்று கூட பாராமல் பினங்களின் மீது அரசியல் செய்யும் கேவலமான பிரச்சாரம் தான் நடந்துவருகிறது. பனமும் நிறைய புழங்குகிறது. ஒரு சாதாரன் தீவிரவாதியின் வருட சம்பளம் இரண்டு லட்ச ருபாய். இதையெல்லாம் மறைத்து விட்டு தான் அருந்ததி ராய் போன்றோர் ஜல்லியடித்து கொண்டு இருக்கிறார்கள்.

அருந்ததி ராயின் மற்றொரு famous phrase கஷ்மீரில் இந்திய 7 லட்சம் வீரர்களை குவித்து இருக்கிறது என்பது. உன்மையில் அங்கே வெறும் இரண்டு லட்சம் வீரர்கள் கூட இருக்க மாட்டார்கள்.இந்திய படைகளில் எத்தனை காலாட்படை வீரர்கள் இருக்கிறார்கள் என்று சாதாரன் கூக்கிள் மூலம் தெரிந்துகொள்ள முடியும் என்ற நிலையில் யாரை திருப்திபடுத்த இந்த கேவலமான பொய் பிரச்சாரம் ?

ஸோ, இரானுவத்தை பற்றி பேசும் முன்னர் தீர விசாரித்து தெரிந்துகொண்டு பேசுவது நலம். சும்மா போகிற போக்கில் ஜல்லியடித்தல் யாருக்கும் எந்த பயனையும் தராது.

//ராணுவ பன்றிகள்?//

வலிமையான வார்த்தை பிரயோகம் யார் வேண்டுமானாலும் செய்யலாம். அதனால் ஏற்படும் பயன் என்ன?

said...

சுவாமியின் வருகைக்கும் நீளமான கருத்துக்கும் நன்றி, விவாத முறை குறித்த உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி.

தாமதமான எதிர்வினைக்கு என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.


/////////////
//#1) ஏன் அப்சல் ஒரு தீவிரவாதி?//

Polls ல் சொல்வது போல் கேள்வியை பொருத்து பதில் மாறும் என்பதால் கேள்வியை சற்றே மாற்றி பதில் அளிக்கிறேன். "யாருக்கு, ஏன் அப்சல் ஒரு தீவிரவாதி?" எனக்கு அப்சல் தீவிரவாதிதான். ஆயுதம் ஏந்தினான். வன்முறையால் என் நாட்டில் பெரும் குழப்பம் விழைவிக்க துணை போனான். எனக்கு மட்டுமல்ல, பண்டிட்களோ, லடாக் Budhistsஓ, குறைகளிருந்தாலும் குற்றங்களிருந்தாலும் உள்ளிருந்து களைவோம் அனால் இந்தியா என் நாடு அதற்கு ஊறு விளைவிக்கும் எந்த முயற்சிக்கும் துணை போக மாட்டேன் என நினைக்கும் எல்லா இந்தியர்களும் அவ்வாறே கருதுவர் என நினைக்கிறேன். Srinagarல் இருக்கும் முஸ்லீம் மதத்தவர் அப்சலை விடுதலை வீரராக கருதலாம். இந்தியாவில் இருக்கும் வெகு சில முஸ்லீம் மத்தவர் (தயக்கத்துடன் கூறுகிறேன்) அவரை தீவிரவாதியாக கருதினாலும், மற்ற இந்தியரை விட அப்சலை சூழ்நிலை கைதி என்ற அபிமானத்துடன் அணுகலாம். யார் கண்டா, அப்சலின் பெற்றோர், அப்சலை தீவிரவாதியாகவும் அல்லாமல், சுதந்திர வீரராகவும் அல்லாமல், வெறும் நிரபராதியாக கருதலாம்.
//////////////

இந்த கேள்வியை அப்புறம் டீல் செய்யலாம். சொன்னவரை சரிதான் அவரவர் பார்வையைப் பொறுத்துத்தான் புரிதல். அவரவர் பார்வையை தீர்மானிக்கும் அரசியல் என்ன என்பதை பிறகு டீல் செய்யுவோம்.


*************************


/////////////////

//2)ஏன் பாராளுமன்றத்தில் அவர்கள் குண்டு வைத்தார்கள்?//
இப்போது அப்சலை விட்டு Kashmir Seperatists பற்றி கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். Revenge, Justice, Big Bang Effect. You screw with my country? Now we take it to your turf. பிரச்சனையின் தீவிரத்தை இந்தியாவிற்கும் உலகிற்கும் (read 'USA') உணர்த்தவும் தான்.
///////////////////////

அப்படி அவர்கள் உணர்த்த முற்ப்படுகிறார்கள் எனில், அதன் உண்மையான அரசியல் அம்சத்தை பரீசிலிப்பது தேவையா தேவையில்லயா?

அல்லது வெறுமனே அதிகாரம் கையில் இருக்கும் திமிரில் சாகடித்து விட்டால் போதுமா?

************************


//////////////////
#3) குண்டு வைத்திருந்தால் எனில் எந்த வகையில் அவர் பகத்சிங்கிடம் இருந்து வேறுபடுகிறார்?
ரொம்ப contraversial ஆன கேள்வி! இருவரும் ஆயுதம் ஏந்தினர், ஆயுதம் ஏந்தியதற்கு காரணம் மாற்றான் நம்மிடம்/நம் நாட்டிடம் அடக்குமுறை புரிந்தான் என்ற நினைப்பு, சண்டையை எதிரியின் களத்திற்கே எடுத்து சென்றது என்ற மூன்று parameters படி மட்டும் பார்த்தால் வித்தியாசம் இல்லை. அப்படி மட்டும் பார்க்கும் பொழுது, ஒஸாமாவொ, twin towers தகர்த்தவர்களோ, இஸ்ரேலியர்களோ, பாலஸ்தீனியர்களோ, அல்லது நீங்கள் உலகில் வெறுக்கும் ஆயுதம் எந்தி போராடும் எந்த குழுவினரும், பகத் சிங்கோடு வேறுபடவில்லை. அனால் உலகில் எதுவுமே கறுப்பு/வெள்ளை என்று ஆக பாகுபடுத்த முடியாதே. இருந்தாலும் முயற்ச்சிக்கிறேன். நீங்கள் சொல்லும் ஜனநாயகவாதியாக. நம் கோணத்தில் நியாயம் இருக்கிறதா என்பதை பொருத்தது இது. அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமப்பதற்க்கும்/இஸ்ரேல் லெபனானை தாக்குவதற்க்கும்/சைனா திபெத்தையும் தாய்வானையும் தன் நாடாக கருதுவதற்க்கும்/புலிகள் இலங்கை அரசை எதிர்த்து போராடுவதற்கும்/காஷ்மீர் முஸ்லீம்கள் இந்தியாவை எதிர்த்து போராடுவதற்கும் சில வேறுபாடுகள் சில ஒற்றுமைகள் பார்க்கிரீர்களா இல்லா ஆயுதம் ஏந்தி establishment ஐ எதிர்த்து போராடும் எல்லோரும் ஒன்றுதான் என நினைக்கிரீர்களா? Unlike some of these conflicts, I see a basis and justice on the Indian side.
//////////////////

இல்லை நீங்கள் சொல்லும் ட்வின் டவர் கோஸ்டிகள் பகத்சிங்கிடமிருந்து வேறுபடுகிறார்கள். வெறும் நடவடிக்கைகள் தீர்மானிப்பதில்லை அதன் பின்னே உள்ள அரசியல் தீர்மானிக்கிறது.

நீங்கள் துப்பாக்கி எடுத்து ஒருவனை சுடுவதும், ஒரு நீதி மன்றம் தூக்கு தண்டனை கொடுப்பதும் இரு விதமாக பார்க்கப்படுவதன் காரணம் இரண்டின் பின்னால் உள்ள அரசியல்தான்.

கழிசடை பொறுக்கி வர்க்க சினிமா பன்றிகள் சுரண்டிக் கொழுத்து உல்லாசா சல்லாப வாழ்க்கை வாழ்வதை அங்கீகரிக்கும் சமூகம், ஜெயலலிதா போன்ற அரசியல்வாதிகளின் கண்ணீருக்கும் மயங்கி அவர்களின் படுபாதக செயல்களை மன்னிக்கும் சமூகம், ஒரு ஆட்டோ டிரைவர் தனது வாழ்க்கை தேவைக்காக செய்யும் சில்லறைத் தவறுகளை பெரிது படுத்துவம் அரசியல்தான்.

ஆக, இங்கு பகத்சிங்கின் அரசியல் தான் மற்றவர்களிடமிருந்து அவரை வேறுபடுத்திக்காட்டுகீறது.

அப்படியெனில், அப்சலின் எந்த அரசியல் அவரை தூக்கு தண்டனைக்கும், ஒட்டு மொத்த இந்திய தேசிய உணர்வின் எதிரி என அவரை தீர்மானிப்பதற்க்கும் அடித்தளமாக இருக்கிறது என்பதை உங்களது //I see a basis and justice on the Indian side. /// என்ற கருத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இப்பொழுது எனது கேள்வி , அந்த Basis என்ன என்று உங்களை விளக்கச் சொல்லுவதுதான்.

In what basis do you thing that India is right?

*************************************

/////////////////
//#4) இது போல ஒருவர் நாட்டின் பாராளுமன்றத்தில் குண்டு வைத்து - இறையாண்மையை தகர்த்திருக்கும் பட்சத்தில், ஒரு மக்கள் நலனை முன்னிறுத்தும், ஜனநாயகமான அரசு என்ன செய்ய வேண்டும்?//
தண்டனைதான். வேறு என்ன? சட்டத்தின் படி மட்டுமல்ல, எல்லா படியும் தான். என்ன தண்டனை என்பதில் எனக்கு வேறு பாடு உண்டு. மரண தண்டனையில் எனக்கு ஒப்புதல் இல்லை. அது யாராயிருந்தாலும், எவ்வளவு பெரிய குற்றமாயிருந்தாலும். தண்டனையின் காரணம் மறுபடி குற்றம் நடப்பதை தடுப்பதோ, குற்றத்தின் incentive ஐ குறைப்பதோ மட்டுமல்ல. தவறு செய்தாயா? Pay the price. Keep going. Next one on the line, Know the price. You will pay.
//////////////////

தண்டனையின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்?

வெறும் தண்டனை எந்த வகையில் மக்களின் நலனுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதையும் சேர்த்து விளக்கினால் நன்றாக இருக்கும்.

அதாவது எனது கேள்வி, தண்டனை என்பது ஒரு எதிர்வினை அவ்வளவுதான் அதை தாண்டி மக்கள் நலனை முன்னிறுத்தும் தீர்வு என்பது அதுதானா என்பதுதான் எனது கேள்வி.

*******************


//////////////

//5)ஒரு மக்கள் நல, ஜனநாயக அரசின் நோக்கம், அப்சலை கொல்லும் விசயத்தில் என்னவாக இருக்க முடியும்? //
முன்னால் சொன்னதுதான். ராஜதுரையும் தன் பதிவில் சட்டம் தண்டனை கொடுப்பதற்கான காரணத்தையும் நோக்கத்தையும் அழகாக விளக்கியுள்ளார்.
////////////////
சட்ட வாதங்களை பற்றி எனக்கு கவலை கிடையாது. மக்களுக்கு நல்லது எனில் இந்த அரசையும், சட்டத்தையும் உடைத்து தூக்கி அடுப்பில் போடு என்பதுதான் எனது நிலைப்பாடு.

எனது கேள்வி உங்கள் மனசாட்சிக்கு வைக்கும் கேள்வி. உங்கள் மனசாட்சி எந்த வர்க்கத்தின் சித்தாந்த்தால் ஆளுமை செய்யப்படுகிறது என்பதை ஆராய்ச்சி செய்யும் கேள்வி இது.


**************************************

/////////////////
//#6) காஸ்மீரில் அவருக்கு ஆதரவாக போராட்டம் நடக்கிறதே அதை எப்படி எடுத்துக் கொள்வது?//
Like a medicine . ஏன் என இந்தியாவில் நம்புவர்கள் சிந்திக்க வேண்டும். மாற்ற வேண்டியதை மாற்ற வேண்டும். இந்தியாவில் நம்பாதவர்களும் சிந்திக்க வேண்டும். இந்த போராட்டங்களுக்கு பின்னால் இந்தியாவின் தவறுகள் மட்டுமல்ல, காஷ்மீர் முஸ்லீம்களின் தவறுகளும், பாகிஸ்தானின் அரசியலும் இருக்கிறது என.
/////////////////


அப்படி சிந்திக்க சொல்லுவதுதான் இந்த பதிவின் கேள்விகளின் நோக்கம்.

இப்பொழுது சில விசயங்களை தெளிவுபடுத்தும் கேள்விகளை கேட்ப்பது சிறப்பாக இருக்கும்.

இந்தியாவின் தவறுகள் என்ன?

காஷ்மீர் முஸ்லீம்களின் தவறுகள் என்ன?

பாகிஸ்தானின் அரசியல் என்ன?

இந்த இந்திய வீரொத மக்கள் உணர்வை தீர்ப்பது எப்படி. அப்சலின் செயலுக்கும் அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனைக்கும் இந்த தீர்வு குறித்த சிந்தனைக்கும் தொடர்பு இருக்கீறதா இல்லையா?


*********************

//////////
#7) தேசப்பற்று என்றால் என்ன?
விவாததிற்கு தேவையான கேள்வியாக எனக்கு தோண்றவில்லை. Pass.
/////////
okay நானும் இப்போதைக்கு pass.
***************


/////
PS: என்னை போல் சும்மா இருப்பவர்களையும், கொத்து பரோட்டோ போடுபவர்களையும் (I love the posts though), கலவரத்தையும் கொலை வெறியை தூண்டுபவர்களையும் எல்லா பக்கத்தையும் கருத்து சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்!
////////

வழிமொழிகிறேன் :-))

அசுரன்

said...

பதிலுக்கு நன்றி, அசுரன். உங்கள் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்கும் முன் நீங்கள் எழுதிய இதை ஒரு முறை படித்துக்கொள்கிறேன்.
//இவை அனைத்தும் ஜனநாயகம் என்று நான் நம்பிக் கொண்டிருக்கும் விசயத்தை அடிப்படையாக கொண்டு இது போன்ற எதிர்கால சம்பவங்களில் பொதுவாக எப்படி அனுகுவது என்ற பொது புரிதலை உருவாக்கவே கேட்க்கப்பட்டுள்ளது.//

2) //அப்படி அவர்கள் உணர்த்த முற்ப்படுகிறார்கள் எனில், அதன் உண்மையான அரசியல் அம்சத்தை பரீசிலிப்பது தேவையா தேவையில்லயா?//
தேவைதான். பரிசீலிக்க வேண்டும். இந்தியாவின் நன்மைக்காக.

//அல்லது வெறுமனே அதிகாரம் கையில் இருக்கும் திமிரில் சாகடித்து விட்டால் போதுமா?//
'திமிர்', 'சாகடிப்பது' இரண்டும் உங்கள் bias ஐயும் இறுதி முடிவையும் காண்பிக்கிறது. பரிசீலிப்பதும் இதுவும் mutually exclusive இல்லையே. Political process பரிசீலிக்க வேண்டும். Legal process சட்டம் நீதிமண்றங்களுக்கு கொடுத்திருக்கும் அதிகாரத்தின் படி செய்த குற்றதிற்க்கு தண்டனை வழங்கட்டும். Executive process அப்சலை விடுவிப்பதால், நாளை காஷ்மீர் முஸ்லீம்களிடன் இந்தியாவிற்கு பெரும் நன்மதிப்பு கிடைக்குமென்றாலோ, காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமென்றாலோ, interfere செய்து தீர்ப்பை மாற்றட்டும் (இரண்டுமோ, இரண்டில் ஒன்றோ நடக்கும் என்று எனக்கு தோன்றவில்லை).

3)//இல்லை நீங்கள் சொல்லும் ட்வின் டவர் கோஸ்டிகள் பகத்சிங்கிடமிருந்து வேறுபடுகிறார்கள்.//
வேறுபடுத்துவதற்கு மகிழ்ச்சி.

//வெறும் நடவடிக்கைகள் தீர்மானிப்பதில்லை அதன் பின்னே உள்ள அரசியல் தீர்மானிக்கிறது.//
அதுமட்டுமல்ல. அந்த அரசியல் பின் நாம் (as an indivual) ஒரு நியாயத்தை (perceived justice) பார்க்கிறோமா என்பதை பொருத்திருக்கிறது என நினைக்கிறேன். அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமிப்பதன் அரசியல் எனக்கு சரியாக படவில்லை. இஸ்ரேல் பாலஸ்தீனியரை ஆக்கிரமிப்பதன் அரசியல் எனக்கு சரியாக படவில்லை (I like the courage with which Israel came into being. I just don't like what it has become). இந்தியாவில் கோத்ரா கொடுமைகளுக்கு எதிர்த்து நேர் வழியில் நியாயம் கிடைக்காமல் முஸ்லீம்கள் ஆயுதம் எடுத்தால் நியாயமக படுகிறது.

//நீங்கள் துப்பாக்கி எடுத்து ஒருவனை சுடுவதும், ஒரு நீதி மன்றம் தூக்கு தண்டனை கொடுப்பதும் இரு விதமாக பார்க்கப்படுவதன் காரணம் இரண்டின் பின்னால் உள்ள அரசியல்தான்.//
தவறான உதாரணம். ஒப்புக்கொள்ள முடியவில்லை. நீதிமன்றத்தில் என்ன அரசியல். சில நீதிபதிகளின் பின், சில case களின் பின் அரசியல் இருக்கலாம். ஒட்டு மொத்தமாக நீதிமன்றம் என்ற அமைப்பின் பின் அரசியல் இருப்பதாக நினைக்கவில்லை.

//அப்படியெனில், அப்சலின் எந்த அரசியல் அவரை தூக்கு தண்டனைக்கும், ஒட்டு மொத்த இந்திய தேசிய உணர்வின் எதிரி என அவரை தீர்மானிப்பதற்க்கும் அடித்தளமாக இருக்கிறது என்பதை உங்களது //I see a basis and justice on the Indian side. /// என்ற கருத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இப்பொழுது எனது கேள்வி , அந்த Basis என்ன என்று உங்களை விளக்கச் சொல்லுவதுதான்.

In what basis do you thing that India is right?//

6). //இப்பொழுது சில விசயங்களை தெளிவுபடுத்தும் கேள்விகளை கேட்ப்பது சிறப்பாக இருக்கும்.

இந்தியாவின் தவறுகள் என்ன?

காஷ்மீர் முஸ்லீம்களின் தவறுகள் என்ன?

பாகிஸ்தானின் அரசியல் என்ன?//


முன்னே சொன்ன perceived justice தான். கஷ்டமான் கேள்விகள். விஷயம் அறிந்த நிறைய பேர் பதிலளித்த, பதிலளிக்க முயற்ச்சித்த கேள்விகள். அப்சல் உப்பு தின்னான். தண்னி குடிகிறான் என்ற எளிமையான நிலையிலிருந்து காஷ்மீர் பிரச்சினையின் complicated பின்புலத்திற்கு தவ்வுகிறோம். எனக்கு தெரிந்தது/தோண்றுவது.

- : பிரிட்டிஷ் அப்போது வைத்த எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட process படி, majority/minority பார்க்காமல், அந்த அந்த பிரதேங்களின் rulers முடிவின்படி இந்தியாவிலோ பாகிஸ்தானிலோ சேரலாம் (ஐதராபாதை பற்றி கேட்காதீர்கள்). காஷ்மீரின் ruler இந்தியாவிடம் சேர்ந்தார்.
அதற்கு பாகிஸ்தானின் ஆயுத response, மற்றும் அதை தொடர்ந்து நடந்த கொடுமைகள் இந்தியாவின் moral standing ஐ வலுபடித்துகிறது.
Contiguous state
இந்தியா கொடுக்க தேவையில்லை என்றாலும், காஷ்மீருக்கு கொடுத்த special status.

- இந்தியாவின் தவறுகள் : UN க்கு போனது. உடனே அப்போது இந்தியாவிடம் இருந்த காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்தாது. ரொம்ப பிறகு நடந்த தேர்தல்களை நியாயமாக நடத்தாது, அடக்குமுறையால் காஷ்மீர் முஸ்லீம்களின் போராட்டத்தை வெல்ல முயற்ச்சித்தது, காஷ்மீர் முஸ்லீம்களை முட்டாளாக நடத்துவது
காஷ்மீர் முஸ்லீம்களின் தவறுகள் : பாகிஸ்தானின் உதவியை நாடியது, இன போராட்டத்தை மத போராட்டமாய் மாற்றியது, தன் பலம் என்ன எதிரியின் பலன் என்ன என்று ஆராயாமல், எல்லா சுதந்திர போராட்டம் போலேயும் காஷ்மீர் போராட்டமும் வெற்றி பெரும் என நினைத்தது.
பாகிஸ்தானின் அரசியல் : இந்தியாவை எதிரியாக, வெல்ல வேண்டிய humiliate செய்ய வேண்டிய ஒரு நாடாக பார்த்தது , காஷ்மீர் முஸ்லீம்களை முட்டாளாக நடத்துவது

4). //அதாவது எனது கேள்வி, தண்டனை என்பது ஒரு எதிர்வினை அவ்வளவுதான் அதை தாண்டி மக்கள் நலனை முன்னிறுத்தும் தீர்வு என்பது அதுதானா என்பதுதான் எனது கேள்வி.//
தவறு செய்தாயா? Pay the price. Keep going. இது எதிர்வினை.
Next one on the line, Know the price. You will pay. இது மக்கள் நலனுக்கான் தீர்வு¢. இந்திய மக்கள் நலனுக்கான. பிரச்சனையின் root cause ஐ கண்டு permenant தீர்வு கொள்வது மிகவும் நல்லது. அதுவரை, நடக்கும் குற்றங்களுக்கு கொடுக்கும் தண்டனைகள் பிரச்சனையின் தீவிரத்தை குறைக்கும் என்றே நினைக்கிறேன். On the contrary, குற்றங்களுக்கு தண்டனை கொடுக்காமல் விடுவது, மக்கள் நலனுக்கு எதிரானது.
5)//ஒரு மக்கள் நல, ஜனநாயக அரசின் நோக்கம், அப்சலை கொல்லும் விசயத்தில் என்னவாக இருக்க முடியும்? //
//சட்ட வாதங்களை பற்றி எனக்கு கவலை கிடையாது. மக்களுக்கு நல்லது எனில் இந்த அரசையும், சட்டத்தையும் உடைத்து தூக்கி அடுப்பில் போடு என்பதுதான் எனது நிலைப்பாடு.

எனது கேள்வி உங்கள் மனசாட்சிக்கு வைக்கும் கேள்வி. உங்கள் மனசாட்சி எந்த வர்க்கத்தின் சித்தாந்த்தால் ஆளுமை செய்யப்படுகிறது என்பதை ஆராய்ச்சி செய்யும் கேள்வி இது.//

ஒரு நாடு தனது இறையான்மையை பாதுகாக்கவே முயலும். A nation state is an organism. It will try to survive. Protect itself. Respond when harmed. அப்சலின் தூக்கு தண்டனையும் இதன் வெளிப்பாடுதான். அரசை தேர்ந்தெடுப்பதும் மக்கள்தான். சட்டங்களை இயற்றுவதும் மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட பிரதிநிதிகள்தான். இவை இரண்டிலும் இருந்து தனிபட்டு மக்கள் நலன் என்று யார் தீர்மானிப்பது? ஒவ்வொரு தீர்ப்பிற்கும் ஒட்டெடுப்போ, மக்கள் நலன் என்ற barometer ல்லோ வைத்தா பார்க்க முடியும்? Majority மக்கள் நலனா? அடக்க படுவதாக நீங்கள் நினைக்கும் மக்கள் நலனா? நலிந்திருப்பதாக majority மக்கள் நினக்கும் மக்கள் நலனா?
நியாயம், நீதி என்றால் அரசையும், சட்டத்தையும், மக்கள் நலனையும் எல்லாம் சேர்த்து அடுப்பில் போடு என்கிறேன்.
இதிலிருந்து என் மனசாட்சி பற்றி ஏதும் தெரிந்தால் சொல்லுங்கள். ரொம்பவே குழம்பியிருக்கிறேன்.

said...

சுவாமி,

#1)
*******
பதிலுக்கு நன்றி, அசுரன். உங்கள் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்கும் முன் நீங்கள் எழுதிய இதை ஒரு முறை படித்துக்கொள்கிறேன்.
//இவை அனைத்தும் ஜனநாயகம் என்று நான் நம்பிக் கொண்டிருக்கும் விசயத்தை அடிப்படையாக கொண்டு இது போன்ற எதிர்கால சம்பவங்களில் பொதுவாக எப்படி அனுகுவது என்ற பொது புரிதலை உருவாக்கவே கேட்க்கப்பட்டுள்ளது.//
*******

இது நிரம்பவும் முக்கியமான பகுதி. அதை தாங்களும் அங்கீகரிக்கிறீர்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.



#2)
**********
2) //அப்படி அவர்கள் உணர்த்த முற்ப்படுகிறார்கள் எனில், அதன் உண்மையான அரசியல் அம்சத்தை பரீசிலிப்பது தேவையா தேவையில்லயா?//
தேவைதான். பரிசீலிக்க வேண்டும். இந்தியாவின் நன்மைக்காக.
***********
தேவை எனில் இந்தியா அந்த அரசியல் அம்சத்தை பரிசிலித்தா? அதை மக்கள் முன்பு வைத்துள்ளதா?

அப்படி வைத்துள்ளது எனில் அந்த தீர்வு குறித்த விவாதம்தான் அப்சல் குறித்த நமது முடிவுக்கு திறவுகோல்



#3)
*********
//அல்லது வெறுமனே அதிகாரம் கையில் இருக்கும் திமிரில் சாகடித்து விட்டால் போதுமா?//
'திமிர்', 'சாகடிப்பது' இரண்டும் உங்கள் bias ஐயும் இறுதி முடிவையும் காண்பிக்கிறது. பரிசீலிப்பதும் இதுவும் mutually exclusive இல்லையே. Political process பரிசீலிக்க வேண்டும். Legal process சட்டம் நீதிமண்றங்களுக்கு கொடுத்திருக்கும் அதிகாரத்தின் படி செய்த குற்றதிற்க்கு தண்டனை வழங்கட்டும். Executive process அப்சலை விடுவிப்பதால், நாளை காஷ்மீர் முஸ்லீம்களிடன் இந்தியாவிற்கு பெரும் நன்மதிப்பு கிடைக்குமென்றாலோ, காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமென்றாலோ, interfere செய்து தீர்ப்பை மாற்றட்டும் (இரண்டுமோ, இரண்டில் ஒன்றோ நடக்கும் என்று எனக்கு தோன்றவில்லை).
************
இல்லை எனது அபிப்ராயம் காஸ்மீர் பிரச்சனைப் பற்றிய எனக்கு தெரிந்தது, மற்றும் இந்த அரசின் மக்கள் விரோத தன்மை குறித்து எனக்கு தெரிந்தது என்ற அடிப்படையில்தான் வருகிறது. அதனால்தான் எனது முடிவான 'திமிரில் சாகடித்துவிடுவது தீர்வாகுமா' என்று கேள்வி எழுப்புகிறேன். நீங்கள் அது குறித்து நான் வைத்துள்ள் வாதங்களின் நமபகத்தனமை மற்றும் நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் விசய்த்திற்க்கான ஆதாரம் இவற்றின் அடிப்படையில் எதிர்வினை தொடுக்க வேண்டும். I am not neutral person. I am biased towards the Working people.

எதுவுமே அரசியலுக்கு அப்பாற்ப்பட்டு இல்லை. உங்களது நீதிமன்றமும் கூட. அது ஒன்றும் சுத்தமாக சமூகத்தின் எந்த பாத்ப்பும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கும் அகல் விளக்கு அல்ல. இந்த சமூகத்தின் அதிகாரத்தில் உள்ள அனைத்து பிற்போக்குத் தனங்களும் நீதிமன்றத்திலும் அதிகாரத்தில் உள்ளன். இது நமது தலைப்புக்கு சம்பந்தமில்லாதது.

இங்கு குறிப்பிட்டது என்னவெனில் அரசியலுக்கு அப்பாற்ப்பட்டு எதுவும் கிடையாது என்பதைத்தன். ஆக, அந்த அரசியல் பரிசீலனைதான் நீதிமன்றத்தின் முடிவையும் தீர்மானிக்கும். ஒரு வேளை அரசியல் பரிசீலனையின் முடிவு அப்சல் விசய்த்தில் இந்தியாவின் மீதுதான் தவறு என்ற முடிவுக்கு வருகிற படசத்தில் அப்சலை தூக்கில் போட்ட தண்டனையை திரும்ப பெற முடியுமா?(செத்தவனை எப்படி மீட்டுக் கொண்டு வர).





#4)
*********
3)//இல்லை நீங்கள் சொல்லும் ட்வின் டவர் கோஸ்டிகள் பகத்சிங்கிடமிருந்து வேறுபடுகிறார்கள்.//
வேறுபடுத்துவதற்கு மகிழ்ச்சி.
********
:-))





#5)
****************
//வெறும் நடவடிக்கைகள் தீர்மானிப்பதில்லை அதன் பின்னே உள்ள அரசியல் தீர்மானிக்கிறது.//
அதுமட்டுமல்ல. அந்த அரசியல் பின் நாம் (as an indivual) ஒரு நியாயத்தை (perceived justice) பார்க்கிறோமா என்பதை பொருத்திருக்கிறது என நினைக்கிறேன். அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமிப்பதன் அரசியல் எனக்கு சரியாக படவில்லை. இஸ்ரேல் பாலஸ்தீனியரை ஆக்கிரமிப்பதன் அரசியல் எனக்கு சரியாக படவில்லை (I like the courage with which Israel came into being. I just don't like what it has become). இந்தியாவில் கோத்ரா கொடுமைகளுக்கு எதிர்த்து நேர் வழியில் நியாயம் கிடைக்காமல் முஸ்லீம்கள் ஆயுதம் எடுத்தால் நியாயமக படுகிறது.
*******************
"As an individual, perceived justice, பின்னே உள்ள நியாயம் "- இவை எல்லாமே அதற்கேயுரிய அரசியலைக் கொண்டுள்ளது. அதாவது நீஙக்ள் சொல்லுவதைத்தான் நானும் சொல்கிறேன்.

ஒரு தொழிலாளி அவனை சுரண்டும் ரஜினிக்கு ஆதரவாக என்னை அடிக்கிறான் எனில் அவனிடம் குடிகொண்டுள்ள ஆளும் வர்க்க அரசியல் கண்ணோட்டம்தான் காரணம்.

அரசியல் என்பது அரசு என்ற இயந்திரம் குறித்த இயல். அது குறித்து பல்வேறு நேர்மறை எதிர்மறை கருத்துருக்களை ஆளும் அரசு எப்பொழுதுமே ஏற்படுத்தும்.

நேர்மறையான விசயத்திற்க்கு(ரஜினியின் உழைப்பு, திறமை என்பது போன்ற பிரச்சாரம்) பலியான ரஜினி ரசிகன்,
எதிர்மறையில்(மக்கள் கஸ்டப்பட்டு சம்பாதிப்பதை கூத்தாடி பறிக்கும்) புரிந்து ரஜினியை எதிர்க்கும் இன்னொருவனை தாக்குகிறான். இதை குறிப்பிட்டதன் காரணம், அரசு என்ற சமூக அடக்குமுறை இயந்திரம் இருக்கும் வரை அது உருவாக்கும் அரசியலின் தாக்க்ம்தான் சமூகத்தின் ஒவ்வொரு கருத்தையும் தீர்மானிக்கும்.

நீங்களும் இந்த கருத்தைத்தான் சிறிது மேலெழுந்தவாரியாக சொல்ல வருகிறீர்கள் என்று உணர்கிறேன்.




#6)
*****************
//நீங்கள் துப்பாக்கி எடுத்து ஒருவனை சுடுவதும், ஒரு நீதி மன்றம் தூக்கு தண்டனை கொடுப்பதும் இரு விதமாக பார்க்கப்படுவதன் காரணம் இரண்டின் பின்னால் உள்ள அரசியல்தான்.//
தவறான உதாரணம். ஒப்புக்கொள்ள முடியவில்லை. நீதிமன்றத்தில் என்ன அரசியல். சில நீதிபதிகளின் பின், சில case களின் பின் அரசியல் இருக்கலாம். ஒட்டு மொத்தமாக நீதிமன்றம் என்ற அமைப்பின் பின் அரசியல் இருப்பதாக நினைக்கவில்லை.
*******************
மேற்சொன்ன பதிலே அரசியல் குறித்து சிறு புரிதலை ஏற்படுத்தியிருக்கும் என்று நம்புகிறேன். என்ரானுக்கு ஆதரவாக தீர்ப்பு கொடுத்த நீதிமன்றத்தின் அரசியல் என்ன? சுத்தம் , சத்தம் குறித்து யாரும் கேட்க்காமலேயே வந்து கருத்து சொல்லும் நீதிமன்றம், மக்கள் லட்சக்கனக்கில் காவு கொடுக்கும் பொருளாதார தீட்டஙகாள் குறித்தோ அல்லது ஏழை விவசாயிகளை சுரண்டும் மாநகர தொழில் மற்றும் கட்டுமாணக் கூடங்கள் பற்றியோ கருத்து சொல்வதில்லையே? ஒரு ஏழையின் உடையை வைத்து அவனுக்கு கீழ்த் தரமான மரியாதை தரும் நீதிமன்றம், சங்கராச்சாரிக்கு பீ அள்ள இலை கொடுப்பதையும், சிறைக்குள் பூசை செய்யும் மனித உரிமையை கொடுப்பதையும் ஒன்றும் செய்வதில்லை. நீதிமனறத்தின் ஆசனங்களில் உட்கார்ந்திருப்பதும் உங்க்ளைப் போல என்னைப் போல இந்த சமூகத்தின் உற்பத்திப் பொருளான ஒரு மனிதந்தான்.அவனும் உங்க்ளைப் பொல என்னைப் போல அரசியல்(அரசு குறித்த இயல்) கருத்துக்களால பாதிக்கப்பட்ட்வர்தான். அவரும் அந்த பார்வை கொண்டே விசயஙகளைப் பார்க்கிறவர்தான். அந்த பதவிக்கு ஆளும் வர்க்க பார்வை கொண்ட ஆட்களே வரும் வகையில்தான் அந்த அமைப்பின்(நீதிமன்றம்) பரிணாம வளர்ச்சி இருக்கும். ஆக, நீதிமன்றம் என்பது எந்த காலத்திலும் ஆளும் வர்க்கத்தின் நலனுக்கு மாறாக தீர்ப்பு சொன்னதாக் உலக வரலாற்றில் எங்குமே சரித்திரம் கிடையாது.

உங்களது நீதிமன்றம் எந்த வகையிலும் சட்டமன்றத்தைவிட பெரியது கிடையாது. உங்க்ளது சட்டமன்றமோ ஏகாதிபத்தியத்துக்கு பல்லக்கு தூக்குவது என்று ஆகிய பின்பு நீதிமன்றத்தின் வேலை பக்கத்திலேயே கிண்ணத்தை துக்கிக் கொண்டு அலைவதுதான்.

மீண்டும் ஒரு விசயம்தான். அரசு என்ற இயந்திரம் இருக்கும் வரை அது குறித்த இயல்தான் சமூகத்தின் ஒவ்வொரு கருத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தும். அரசியல் இல்லா கருத்து என்று எதுவும் கிடையாது. அது எதன் சார்பாக உள்ளது என்பது வேண்டுமானால் பரிசீலனை செய்யலாம்.


ஆக, நீதிமன்றம் தூக்கில் போட்டு பகத்சிங்கை கொல்வது அன்றைய பிரிட்சாரை ஆதரித்த ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகளின் பார்வையில் நல்ல விசயம்(அது ஆளும் வர்க்க சார்பு பிழைப்புவாத அரசியல்), மாறாக ஸ்ண்டர்சனை கொல்ல தூப்பாக்கி பிடித்த பகத்சிங்கை போற்றுவது எமது சுயமரியாதை அரசியல்.

இப்போ இந்தியா காஸ்மீரில் செய்த அட்டுழியங்களை பார்த்து பரிசிலித்து, அதனுடன் அப்சல் சம்பவத்தை கோர்த்து உங்களது முடிவை அறிவியுங்கள் நான் கூறுகிறேன் உங்களை இயக்கும் அரசியல் எதுவென்று. :-))

**********************



#7)
*********************
//அப்படியெனில், அப்சலின் எந்த அரசியல் அவரை தூக்கு தண்டனைக்கும், ஒட்டு மொத்த இந்திய தேசிய உணர்வின் எதிரி என அவரை தீர்மானிப்பதற்க்கும் அடித்தளமாக இருக்கிறது என்பதை உங்களது //I see a basis and justice on the Indian side. /// என்ற கருத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இப்பொழுது எனது கேள்வி , அந்த Basis என்ன என்று உங்களை விளக்கச் சொல்லுவதுதான்.

In what basis do you thing that India is right?//

6). //இப்பொழுது சில விசயங்களை தெளிவுபடுத்தும் கேள்விகளை கேட்ப்பது சிறப்பாக இருக்கும்.

இந்தியாவின் தவறுகள் என்ன?

காஷ்மீர் முஸ்லீம்களின் தவறுகள் என்ன?

பாகிஸ்தானின் அரசியல் என்ன?//


முன்னே சொன்ன perceived justice தான். கஷ்டமான் கேள்விகள். விஷயம் அறிந்த நிறைய பேர் பதிலளித்த, பதிலளிக்க முயற்ச்சித்த கேள்விகள். அப்சல் உப்பு தின்னான். தண்னி குடிகிறான் என்ற எளிமையான நிலையிலிருந்து காஷ்மீர் பிரச்சினையின் complicated பின்புலத்திற்கு தவ்வுகிறோம். எனக்கு தெரிந்தது/தோண்றுவது.
**************

ஆம், அந்த பின்புலத்தை ஆய்வு செய்தால் குற்றாவாளிக் கூண்டில் அபசல் இருக்கிறாரா அல்லது வேறு யாருமா என்பது தெளிவாகிவிடும். அதனால்தான் பலரும், அப்சல் விசயம் தனி, காஸ்மீர் பிரச்ச்னை தனி என்று நேர்மையற்ற ஒரு வாத முறைக்கு வேக வேகமாக தாவி ஓடுகிறார்கள்.

இதுவரையான உங்களது வாதத்திற்க்கு இந்த இடத்தில் வாழ்த்துச் சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.






#8)
**********************

//
- : பிரிட்டிஷ் அப்போது வைத்த எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட process படி, majority/minority பார்க்காமல், அந்த அந்த பிரதேங்களின் rulers முடிவின்படி இந்தியாவிலோ பாகிஸ்தானிலோ சேரலாம் (ஐதராபாதை பற்றி கேட்காதீர்கள்). காஷ்மீரின் ruler இந்தியாவிடம் சேர்ந்தார்.
அதற்கு பாகிஸ்தானின் ஆயுத response, மற்றும் அதை தொடர்ந்து நடந்த கொடுமைகள் இந்தியாவின் moral standing ஐ வலுபடித்துகிறது.
Contiguous state
இந்தியா கொடுக்க தேவையில்லை என்றாலும், காஷ்மீருக்கு கொடுத்த special status.

- இந்தியாவின் தவறுகள் : UN க்கு போனது. உடனே அப்போது இந்தியாவிடம் இருந்த காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்தாது. ரொம்ப பிறகு நடந்த தேர்தல்களை நியாயமாக நடத்தாது, அடக்குமுறையால் காஷ்மீர் முஸ்லீம்களின் போராட்டத்தை வெல்ல முயற்ச்சித்தது, காஷ்மீர் முஸ்லீம்களை முட்டாளாக நடத்துவது
///

காஸ்மீர் குறித்த உங்களது இந்த புரிதல், அடிப்ப்டையில் தவறு செய்கிறது. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பை கண்டு அஞ்சிய மன்னர் ஹரி சிங் இந்தியாவின் உதவியை நாடினார். கிழக்குப் பாகிஸ்தானிடம் இணைப்பு ஒப்ப்ந்தம் கோராமலேயே படையனுப்பி உதவி செய்த இந்தியா காஸ்மிருக்கு மட்டும் இணைப்பு ஒப்ப்ந்தத்தி கொரியதில் அதன் உண்மையான நோக்கம் அம்பலமாகிறது.

இந்த இணைப்பு ஒப்பந்தம் த்ற்காலிகமானது என்பதை மௌண்ட்பேட்டனும் சொல்கிறார். மன்னர் ஹரிசிங்கும் ஒப்பந்தத்தின் 7வது சரத்தில் - இப்போதைய் இந்த இனைப்பானது எந்த வகையிலும் எதிர்காலத்தில் காஸ்மீர் எந்த நாட்டுடன் இருக்க வேண்டும் என்பதை தீர்மாணிப்பதில் ஆளுமை செலுத்தக் கூடது என்று சொல்கீறார். காஸ்மீர் மன்னர் இனைப்பு ஒப்பந்தம் கொடுப்பதற்க்கு முன்பு வரை எந்த நாட்டுடன் இணைவது என்பது குறித்து முடிவு செய்யவில்லை என்று பல இடங்களில் சொல்கீறார். ஆக, விசயம் வெகு தெளிவு ஒரு சூழ்நிலையின் நிர்பந்தம் காரணாமாக இந்தியாவுடன் இனைப்பை கோருகிறார். விவசாயியின் கஸ்ட நிலைமையை வைத்து அவனுக்கு கடன் கொடுக்கும் கந்து வட்டிக்காரன் நிலத்தை அடமானமாக எழுதிக் கொள்வது போல.(இங்கும் இந்திய ஆளும் வர்க்கம் மக்களை நிராகரித்து, புறவாசல் மூலமாக, அதிகாரத்துவமாக நினைத்தை சாதிக்கும் கேவலமான எண்ணம் அம்பலமாகிறது).

அதனால்தான் இந்தியா இதை UNOக்கு கொண்டு சென்றது. ஆயினும் ஐ,நாவில் ஒப்புக் கொண்டப்டி அது கருத்துக் கோரும் வாக்கெடுப்பு நடத்தாமல் பல மொள்ளமாறித்தனங்களை செய்தது. அதை எதிர்த்த காஸ்மீர் சிங்கம் - சேக் அப்துல்லாவை (பிரதமர் பதவியிலிருந்து கட்சியை உடைத்து கீழிறக்கி) சிறையில் அடைத்தது. இந்த சதியை செய்தவர் பிரதமரின்(நேரு) அதிகாரிகளில் ஒருவரான மேனன். இதை அவரது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

ஆக, முதல் விசயம் - காஸ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை தேசிய வெறியின் மூலம் இந்திய மக்களுக்கு ஊட்டினார்கள். ஆனால், காஸ்மீர் மக்களுக்கு அதை ஊட்டுவதில் அதிகாரத்தின் மூலம் செய்யலாம் என்ற புறாவாசல் கதவு வழியை தேர்ந்தெடுத்து மாட்டிக் கொண்டார்கள்(பிரிட்டிஸ்க்காரனிடமே வேண்டிக் கேட்டு சுதந்திரம் பெற்று விடலாம் என்று மக்களை எந்த காலத்திலும் ந்ம்பாத கோஸ்டிகள் காஸ்மீர் விசயத்தில் மக்கள் வழி தீர்வை முன்வைக்காதது ஆச்சரியமான விசயம்ல்ல).




////
காஷ்மீர் முஸ்லீம்களின் தவறுகள் : பாகிஸ்தானின் உதவியை நாடியது, இன போராட்டத்தை மத போராட்டமாய் மாற்றியது, தன் பலம் என்ன எதிரியின் பலன் என்ன என்று ஆராயாமல், எல்லா சுதந்திர போராட்டம் போலேயும் காஷ்மீர் போராட்டமும் வெற்றி பெரும் என நினைத்தது.
பாகிஸ்தானின் அரசியல் : இந்தியாவை எதிரியாக, வெல்ல வேண்டிய humiliate செய்ய வேண்டிய ஒரு நாடாக பார்த்தது , காஷ்மீர் முஸ்லீம்களை முட்டாளாக நடத்துவது
////

காஸ்மீர் முஸ்லீம்கள் 1980கள் வரை ஏன் பாகிஸ்தானின் ஆதரவை நாடவில்லை? பிறகும் கூட பெரிய அளவிலெல்லாம் ஒன்றும் நாடவில்லை.

அங்கு நடக்கும் எல்ல இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் சதி என்று திரித்து கூறுவது இந்திய ஆளும் வர்க்கத்து சாதகமான ஒரு தந்திரம்.

இங்கும் கூட பாகிஸ்தான்-இந்திய எதிர்ப்பு சக்திகள், இரண்டு நாடுகளின் அடக்குமுறைகளுக்கும் ஆளாகி சக்தியிழந்துள்ளனர்.




#9)
**************
4). //அதாவது எனது கேள்வி, தண்டனை என்பது ஒரு எதிர்வினை அவ்வளவுதான் அதை தாண்டி மக்கள் நலனை முன்னிறுத்தும் தீர்வு என்பது அதுதானா என்பதுதான் எனது கேள்வி.//
தவறு செய்தாயா? Pay the price. Keep going. இது எதிர்வினை.
Next one on the line, Know the price. You will pay. இது மக்கள் நலனுக்கான் தீர்வு஢. இந்திய மக்கள் நலனுக்கான. பிரச்சனையின் root cause ஐ கண்டு permenant தீர்வு கொள்வது மிகவும் நல்லது. அதுவரை, நடக்கும் குற்றங்களுக்கு கொடுக்கும் தண்டனைகள் பிரச்சனையின் தீவிரத்தை குறைக்கும் என்றே நினைக்கிறேன். On the contrary, குற்றங்களுக்கு தண்டனை கொடுக்காமல் விடுவது, மக்கள் நலனுக்கு எதிரானது.
*************

root cause யை கண்டு தீர்வு காண்பது சரி என்று நம்புவது நல்ல் விசயம், பாராட்டுக்கள். அதை முடிவு செய்யாமல் கொடுக்கப்படும் தண்டனை என்பது அநீதியாகத்தான் இருக்க முடியும், ஏனெனில் பிரச்சனை என்னவென்றே தெரியாமல் எப்படி தண்டனை கொடுக்க முடியும்?

ஒரேயொரு விசயம்தான், இது போல hald baked தண்டனைகளை நியாயப்படுத்தும் - அது ஏற்கனவே அரசுக்கு ஆதரவாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய் வெறி மன உணர்வு.

மற்றபடி இந்த தண்டனை பிரச்சனையின் தீவிரத்தை குறைக்கும் என்பது வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்ளாமல் வைக்கும் வாதம். ஏனெனில் இப்படி அதிகாரத்துவமான தீர்வு உறுதியாக வேலை செய்யும் என்று ந்மபித்தான் கஸ்மீரில் அராஜகமாக 1950களில் பெருந்தவறு செய்தனர் இந்திய ஆளும் வர்க்கத்தினர். அதன் விலையை இன்றுவரை மிக வீரியமாக இந்திய உழைக்கும் மக்கள் கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் மக்கள் மீது குண்டு போடாமல் நாடாளுமன்றத்தில் குண்டு போட முற்ப்பட்டவர்களை நான் பாராட்டுகிறேன். ஏனெனில் காஸ்மீர் பிரச்சனை மேலதிகமாக இந்தியா பாரளுமன்றத்திற்க்கும் மற்றும் பாகிஸ்தான் ப்யங்கரவாத குடில்களுக்கும், காஸ்மீர் மக்களுக்கும்,இடையிலான பிரச்சனையே.





#10)
************
5)//ஒரு மக்கள் நல, ஜனநாயக அரசின் நோக்கம், அப்சலை கொல்லும் விசயத்தில் என்னவாக இருக்க முடியும்? //
//சட்ட வாதங்களை பற்றி எனக்கு கவலை கிடையாது. மக்களுக்கு நல்லது எனில் இந்த அரசையும், சட்டத்தையும் உடைத்து தூக்கி அடுப்பில் போடு என்பதுதான் எனது நிலைப்பாடு.

எனது கேள்வி உங்கள் மனசாட்சிக்கு வைக்கும் கேள்வி. உங்கள் மனசாட்சி எந்த வர்க்கத்தின் சித்தாந்த்தால் ஆளுமை செய்யப்படுகிறது என்பதை ஆராய்ச்சி செய்யும் கேள்வி இது.//

ஒரு நாடு தனது இறையான்மையை பாதுகாக்கவே முயலும். A nation state is an organism. It will try to survive. Protect itself. Respond when harmed. அப்சலின் தூக்கு தண்டனையும் இதன் வெளிப்பாடுதான். அரசை தேர்ந்தெடுப்பதும் மக்கள்தான். சட்டங்களை இயற்றுவதும் மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட பிரதிநிதிகள்தான். இவை இரண்டிலும் இருந்து தனிபட்டு மக்கள் நலன் என்று யார் தீர்மானிப்பது? ஒவ்வொரு தீர்ப்பிற்கும் ஒட்டெடுப்போ, மக்கள் நலன் என்ற barometer ல்லோ வைத்தா பார்க்க முடியும்? Majority மக்கள் நலனா? அடக்க படுவதாக நீங்கள் நினைக்கும் மக்கள் நலனா? நலிந்திருப்பதாக majority மக்கள் நினக்கும் மக்கள் நலனா?
நியாயம், நீதி என்றால் அரசையும், சட்டத்தையும், மக்கள் நலனையும் எல்லாம் சேர்த்து அடுப்பில் போடு என்கிறேன்.
இதிலிருந்து என் மனசாட்சி பற்றி ஏதும் தெரிந்தால் சொல்லுங்கள். ரொம்பவே குழம்பியிருக்கிறேன்.
*****************


தேர்தல் என்பதின் போலித்தனம் குறித்து ஒரு வரியில் சொல்லிவிடுகிறேன். நாட்டின் பெரும்பான்மை மக்கள் இன்னும் ஜனநாயகப்படுத்தப்படாமல் வைக்கப்படும் எந்த தேர்தலும் ஆளும் வர்க்க கருத்தின் வெற்றியைத்தான் குறிக்கும். அதாவது தேவகௌடா என்ற நிலபிரபுவின் நிலங்களை பாதுகாக்க மைசூர் ஹைவே ப்ரொஜெக்டை எதிர்த்து மக்கள் அணிதிரள்வார்கள். அதில் எந்த இடத்திலும் ம்க்கள் நலனை புரிந்து அவர்கள் அணி திரள்வதில்லை. விஜயகாந்த் எனும் கழிசடையும், ஜெயலலீதா எனும் ரௌடியும் தேர்ந்தெடுக்கப்பட்டுதான் ஆட்சிக்கு வருகீறார்கள்(இந்த பெரும்பான்மை என்பது டூபாக்கூர் என்பதை தனியாக வோட்டு சத்வீத கணக்குப் போட்டு பிறகு பேசலாம்).

அதனால்தான் 50 வருட ஆட்சி மக்களின் வாழ்வை கடை கோடி எல்லைக்குத் தள்ளியுள்ளது. இப்பொழுது SEZ அதை இன்னும் கடை கோடி எல்லைக்கு கொண்டு செல்லவிருக்கீறது.


ஒரு நாடு என்பது எது? அதை ஆளும் பாராளுமன்றமா? உறுதியாக கிடையாது. அங்குள்ள் மக்கள், அதன் வரலாறு, கலாச்சாரம். புவியியல் ரீதியான வர்லாற்று பிணைப்புகள், வணிக ரீதியான வரலாற்று பிணைப்புகள்.

ஆக, இந்த புரிதலுக்கு ஊறாக செல்லும் எதுவும் நாட்டு விரோதம்தான். அப்படியெனில் இன்றைக்கு நம்து பாரளுமன்ற ரப்பட் ஸ்டாம்பு அரசுதான் ஆகக் கேடான நாட்டு விரோதி, அப்சல் கிடையாது. உங்களது அரசு, நாட்டின் நலனுக்கு எதிராக இன்னொரு இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் பட்சத்தில், அந்த அரசு நாட்டு விரோதி ஆகிறது. அந்த ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் இந்த அரசு மீது எதிர்வினை தொடுக்கும் பொழுது என்னாகிறது என்பதை நீங்களே சொல்லுங்கள்.

மற்றப்டி உஙக்ளிடம் ஆளும் வர்க்க கருத்துக்களின் தாகக்ம் அதிகம் ஆளுமை செலுத்தினாலும், விசயங்களில் உண்மை இருக்கும் படசத்தில் அதை உள்வாங்கி மூளையில் செறித்துக் கொள்ளும் நல்ல ஜனநாயகப் பண்பு இருப்பதாக க்ருதுகிறேன். இந்த சமூகத்தில் பிறந்த யாருமே அதை ஆளுமை செலுத்தும் கருத்துக்களை உள்வாங்கி பிறகுதான் வேறுபட்ட பாரவையைப் பெறுகிறார்கள். அது போன்ற பார்வையைப் பெறுவதில் உஙகளுக்கு தடையொன்றும் இருக்காது என்பது எனது கருத்து.


வாழ்த்துக்கள்

அசுரன்

said...

///
அசுரன்,

இரானுவ விஷயங்களை பற்றி பேசியதால் எனது மனதில் எழுந்த
கேள்விகளை கேட்டுவிடுகிறேன்.

1.இரானுவத்திற்க்கு அப்பாவிகளை கொல்வதால் என்ன பலன்
ஏற்படபோகிறது? ஒரு மாநிலம் முழுக்க இருக்கும் மக்களை கொன்றுவிட
முடியாது, மேலும் அப்படி நாம் கொல்லும் பட்சத்தில் உலக வல்லரசுகள்
இந்தியாவுக்கு எதிராக அதை பயன்படுத்தி நம்மை அழிக்க முயல்வார்கள்
என்ற நிலையில் இந்திய இரானுவத்திற்க்கு அப்பாவிகளை கொல்வதால்
என்ன பயன் என்பதை விளக்குவீர்களா?

Is the killing intentional and if so, what are the benefits ?
/////

சமுத்ரா தங்கள் வருகைக்கு நன்றி,

இராணுவத்திற்க்கு அப்பாவிகளை கொல்வதால் என்ன பயன் என்று நீங்கள்
ராணுவத்திடம் கேட்டுச் சொல்ல வேண்டும். இது எம்மிடம் கேட்க்க வேண்டிய
கேள்வி அல்ல.

அல்லது, ராணுவம் இதுவரை அப்பாவிகளை கொன்றதே இல்லை(Not as an
exceptional case but as an usual practice) என்று ஏதேனும் கருத்து
வைத்திருந்தால், காஸ்மீரில் காணமல் போனவர்களின் தாய்மார்கள்
சங்கத்தை அணுகவும். அல்லது இந்த அக்டோ பர் மாதத்தில் மட்டும் இருமுறை
அப்பாவிகளை கொன்றது ஏன் என்பதை தெளிவுபடுத்தவும் அல்லது வட
கிழக்கு மாகாணங்களில் போராடிக் கொண்டிருக்கும் லூசுகளிடம் சென்று
உண்மையை உரக்கக் கூறவும். அல்லது காஸ்மீர் மற்றும் வட கிழக்கு மாகாணங்களில் இன்றுவரை இந்திய ராணுவம் செய்துள்ளது குறித்த மனித உரிமை கமிசன்களின் அறிக்கைகளை பற்றி கருத்துக் கூறவும்(அம்னெஸ்டி இன்டெர்னேசனல் கூட இது குறித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளது)

ஒரு மந்தையில் ஆடுகளை கட்டுப்படுத்த ஆடுகள் முழுவதையும் கொல்ல
வேண்டாம். ஒரு ஆடை மட்டும் நல்லா தோலைஉரித்து அவர்கள் முன்னால
காட்டினால் மற்ற ஆடுகள் வலை சுருட்டி வைத்துக் கொண்டு சொன்னதை
செய்வார்கள். உங்களது ராணுவத்தின் புனித தன்மையை ஏதேனும் தேசிய
வெறி ஊட்டப்பட்ட சாதரண ஆட்களிடம் சொல்லலாம். ஓரளவு இந்திய
ராணுவத்தின் சங்கதிகள் தெரிந்தவர்களிடமுமா சொல்ல வேண்டும்?

அல்லது வட கிழக்கு மாகாணங்களில், காஸ்மீரில் ராணுவத்தை எதிர்த்து
நடக்கும் பெரிய அளவிலான போராட்டத்திற்க்கு என்ன காரணம் என்று
சொல்லுங்கள்?

உலக வல்லரசுகளைப் பற்றி மிகவும் அப்பாவித்தனமான கருத்து
வைத்திருக்கீறீர்கள். சதாம் உசைன் குர்த் இன மக்களை நாசம் செய்து
கொண்டிருந்த பொழுதுதான் உங்களது வல்லரசுகள் அவனுக்கு ஆயுதம்
கொடுத்து உதவின.

காஸ்மீர் பிரச்சனையின் ஆரம்பத்திலிருந்தே அமெரிக்க, பிரிட்டன் தலையீடு அதிகப்படியாகவே இருந்தது(ஐ.நாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாடுகள்)

வல்லரசுகள் என்றைக்குமே மற்ற நாடுகளில் உள்ள அனைத்து அரசியல்
பிரிவினருக்கும் ஊட்டம் கொடுத்து வளர்த்து விடுவார்கள். க்யுபாவின் பிடல்
காஸ்ட்ரோவ் குழுவுக்கும் ஆயுத பண உதவி செய்தவர்கள்தான் உங்கள்
வல்லரசுகள்(ஏனெனில் அப்பொழுது அவர்கள் கம்யுனிஸ்டு என்று
வெளிப்படையாக அறிவிக்கவில்லை).


/////////
2. அப்படி அப்பாவிகளை கொல்லும் அரசு பத்திரிக்கைளையும், சுற்றுலா
செல்பவர்களையும் அந்த பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்குமா?
(நீங்களும் நானும் காஷ்மீருக்கு போகலாம், ஒரு சாதாரன் ரஷ்ய பிரஜை
செசென்யாவுகு போக முடியாது)
////////

சமீபத்தில்தான் இப்படி ஒரு தளர்வை இந்திய அரசு கைகொண்டது, அதற்க்கு முன்பெல்லாம் காஸ்மீருக்குள் சர்வதேச பிரதிநிதிகள், பத்திரிக்கைகள் செல்வதற்க்கு தடை இருந்தது.

மேலும் இப்படி அனுப்புவதில் ஒரு டிப்ளோமேட்டிக் அட்வாண்டேஜும் உள்ளது.
அதாவது இது போல ஜல்லிக் காரணஙக்ளைக் காட்டி அங்கு அமைதி திரும்பி
விட்டது என்று புரளி கிளப்ப ஏதுவாக இருக்கும் என்பதால். அது சரி
இவ்வள்வு பாதுகாப்பான இடத்திற்க்கு எதற்க்கு 2 லட்சம் ராணுவ வீரர்கள்?

செசன்யாவைப் பற்றி என்னிடம் எதற்க்கு சொல்லுகிறீர்கள் என்று
தெரியவில்லை.:-))


இந்த சுட்டியில் காஸ்மீரில் ராணுவம் செய்த அட்டுழியங்களைப் பற்றி கட்டுரை
உள்ளது (http://www.indiatogether.org/peace/kashmir/articles/indhr.htm)

காஸ்மீரில் இந்திய ராணுவம் செய்ததை ஒத்துக் கொண்டு முன்னாள் பாரத
பிரதமர் - சிரிலங்கா சிங்கம் துரொகி ராஜீவ் குறிப்பிட்டுள்ளது குறித்தும் இந்த கட்டுரையில் வருகிறது(அது தவிர்த்து ராணுவ அதிகாரிகள் கூறுவதும்).



////////
3. பூகம்பம் ஏற்பட்ட போது கூட அரசியல்வாதிகளை விட்டுவிட்டு ஏன் இந்திய
ஆர்மி வந்து உதவ வேண்டும் என்று கிராம் மக்கள் கேட்டுக்கொண்டார்கள் ?
அவர்களை இரானுவம் கொன்றுவிடும் என்பதாலா?
///////

உங்க ராணுவத்தினரின் உண்மை முகம் உரிமை கேட்டு போராடும் மக்களை
அணுகும் பொழுது வெளிவருகிறது.

ராணுவத்தில் உள்ளவர்கள் அடிமைகள் என்றுதான் சொன்னேயொழிய அவர்களிடன் சமூக உணர்வு கிஞ்சித்தும் இல்லை என்று சொல்லவில்லையே?

உதவி என்று கேட்டு வந்தால் ஏதேனும் செய்து தனது சமூக உணர்வையும்
மேலாண்மையையும் காட்டுவது எல்லாருடைய இயல்பும்தான். அதுவும்
குறிப்பாக அதிகார வெறியும் ஆணவமும் பிடித்தவர்கள் உதவி கோரி வந்தால்
விழுந்து விழுந்து உதவி செய்வார்கள் - தங்களது மேலண்மையை காட்டும்
சந்தர்ப்பம் என்பதால்.

ராணுவமும் அப்படித்தான், இதை ரயில் பெட்டிகளில் அவர்கள் செய்யும்
அட்டுழியங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம்(அதாவது ஏதோ இந்த
நாட்டுக்கு அவர்கள்தான் பொறுப்பு என்பது போல சிறப்பு சலுகைகள்
வசதிகளை அனுபவிக்க நமது நியாயமான வசதிகளை பிடுங்கி பிரச்சனை
செய்வார்கள்). இதன் விளைவுதான் சமீபத்தில் டெல்லி அருகில் ஒருவ்ரை
ரயிலில் இருந்து தூக்கி விசிக் கொன்ற ராணுவத்தினர்.

ஏனெனில் அடிமையாகவெ வளர்க்கப்படும் வளர்ப்புப் பிராணிகளான இந்த
கூண்டு பறவைகளுக்கு நியாயமான உரிமை கேட்டுப் போராடும் ஒரு சாதரண
மனிதனின் சுதந்திரத்தைப் பார்க்கும் பொழுது கோபம் பொத்துக் கொண்டு
வருகிறது. அது அவனுக்கு ராணுவத்தில் கொடுக்கும் பயிற்சியின் விளைவு.
அடிமைத்தனத்தைத்தானே உள்ளே சொல்லித் தருகிறீர்கள்?
ஜனநாயகத்தையா சொல்லித் த்ருகிறீர்கள்?

அதனால்தான் ஆயுதமின்றி போராடும் வறிய வயிறு ஒட்டிய உலர்ந்த கன்னங்களை உடைய விவசாயிகளை மனித தன்மையின்றி சுட்டுக் கொல்ல முடிகிறது. அப்பாவிகளை சில பத்துக் கணக்கில் சுட்டு சூரையாட முடிகிறது.

சரி வட கிழக்கில் உங்க சகோதரர்கள் செய்த அட்டுழியங்களுக்கு இதுவரை
என்ன பரிகாரம் செய்துள்ளீர்கள்?

கடந்த ஆறு வருடங்களாக ராணுவ சட்டத்தை நீக்கக் கோரி உண்ணாவிரதம்
இருந்து வரும் மிசோரமின் இளம் பெண்ணின் ஜனநாயக உரிமைகளைப்
பறித்து அவரை ஜெயிலில் வைத்துள்ளது இந்த நாட்டில் நியயாமான
உரிமைகளை சாத்வீகமாக போராடி வாங்கலாம் என்று கதை விடுபவர்,
டுபாக்கூர் பேசுபவன் மூஞ்சியில் காறி உமிழ்வது போல உள்ளதே?

மனோரமா வன்புணர்ச்சி அநியாயத்துக்கு நீதி கேட்டு நிர்வாணமாக
போராடிய தாய்மார்களை பார்த்த பொழுது உங்களது சுயமரியாதை எங்கே
ஓடிப் போய் ஒழிந்தது? அல்லது பிரதமர் திரு மாமா மன்மோகன் அடிமை
நாய், அவர்களை சந்தித்து போலி நாடகம ஆடிய மறு நிமிசம் அவர்களை
கைது செய்து சிறையில் அடைத்த பொழுது உங்களது தார்மீக ஆவேசம்
எங்கே ஓடி ஒளிந்தது?

ராணுவம் ரொம்ப நல்லவர்களாம்? அடிமை நாய்கள் எஜமானின் குரலுக்கு
சேவை செய்யாதாம்?

யாரிடம் பூ சுற்றுகிறீர்கள்?

ராணூவம் மக்களுடன் நின்று போராடும் காலம் வரும், அது அவர்களின்
சொந்த குடும்பங்களூம் கூட இங்கு மக்களுடன் இணைந்து அரசை எதிர்த்து
போராடும் புரட்சியின் கடைசி தருணங்களில் நடக்கும். 1940 களில் கப்பல்
படை, ராணுவம், போலிஸ் என அனைத்து அடக்குமுறை சாதனங்களிலும்
அரசை எதிர்த்து கிளர்ச்சி நடந்ததே அது போல.

புரட்சிகள் அரசின் ஆயுதப் படையில் ஏற்ப்படும் கலகங்களுடந்தான் முற்றுப் பெறுகின்றன.

அப்பொழுது இதே சமுத்ரா அவர்களை கண்டனம் செய்து பேசுவார்.


/////
4. நிஜமாகவே 50 வருடங்களாக காஷ்மீரில் குண்டுவெடிப்பு நடக்கிறதா?
Operation Topac என்று பாகிஸ்தானிய இரானுவம் என்பதுகளில் ஒரு
ஆப்ரேஷன் ஆரம்பித்து போராளிகளை என்பதுகளின் கடைசியில் அனுப்ப
ஆரம்பித்த பின்னர் தானே வன்முறை வெடித்தது ? அப்படி இல்லையா?
ஆப்ரேஷன் topac பற்றி நீங்கள் இதற்க்கு முன்னர் படித்தது உண்டா?
இல்லையென்றால் நீங்கள் காஷ்மீரில் பயங்கரவாதத்தை பற்றி
தகுதியில்லாதவர் என்று கூட சொல்லலாம். (85 தேர்தலுக்கும்
வன்முறைக்கும் முடிச்சு போடுவதால் சொல்கிறேன்.)

////

காஸ்மீர் பிரச்சனை குறித்து எல்லா விசயங்களும் எனக்கு தெரியும் என்று
எங்குமே சொன்னதில்லை ஆயினும் 1980க்கு முன்பு வரை உங்களது அரசு
அங்கு என்ன செய்து கொண்டிருந்தது என்பதையும், சேக் அப்துல்லாவை
சிறையில் அடைத்து ஜனநாயகத்தை இந்தியா பாரளுமன்றத்தின்
எக்ஸ்டென்சனாக மாற்றியதன் காரணம் என்னவென்பதையும் நீங்கள்
கூறினால் சிறப்பாக இருக்கும்.


காஸ்மீரில் பாகிஸ்தானின் பயங்கரவாதம் சுத்தமாக இல்லை என்று எங்குமே
நான் சொன்னதில்லை. இன்றுவரை காஸ்மீர் பிரச்சனைக்கும் இந்தியாவின்
அரசு பயங்க்ரவாதமும், பாகிஸ்தானின் மத அடிப்படைவாத
பயங்கரவாதமும்தான் மூல வேர் என்பதை பல இடங்களில்
வலியுறுத்துகிறேன். நீங்களோ நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே
பார்ப்பேன் என்று அடம் பிடித்து இந்தியாவின் எல்ல
அயோக்கியத்தனங்களுக்கும் புனிதஒளி வட்டம் பிடிக்க முற்ப்படுகிறீர்கள்.

பாகிஸ்தானின் அயோக்கியத்தனம் நீங்கள் குறிப்பிடும் 1980களுக்கு முன்பே ஆரம்பித்து விட்டது. 60கள் 70 களிலேயே POK யிலிருந்து ஆட்களை அனுப்பி உள்ளே வேண்டாத வேலைகள் செய்வது தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.



/////
இங்கே காஷ்மீரில் இந்திய இரானுவம் இருப்பது சரியா தவறா போன்ற
விவாதங்களில் நான் ஈடுபட விரும்பவில்லை. அது அரசியல். எனக்கு அதில்
அதிகம் பரிச்சயம் இல்லை.இரானுவத்தை பற்றி நீங்கள் கருத்துகள்
சொன்னதால் தான் நான் உள்ளே நுழைய வேண்டியதாயிற்று.

சும்மா உட்கார்ந்துகொண்டு இரானுவம் கொல்கிறது என்று சொல்லாதீர்கள்
அய்யா.

இன்றைய நிலையில் காஷ்மீரில் மிக அதிக அளவில் ராஷ்ட்ரிய ரைப்பிள்ஸ்
பிரிவினர் பனியில் அமர்த்தபட்டுள்ளனர். அவர்கள் யார் தெரியுமா? மன்னின்
மைந்தர்கள். காஷ்மீரிகள். தமிழ் நாட்டில் இருந்தோ, பஞ்சாபில் இருந்தோ
காஷ்மீருக்கு படைகளை அனுப்பி மக்களை யாரும் கொன்று
குவிக்கவில்லை.மெதுவாக நிதானமாக காஷ்மீரிகளே தீவிரவாதிகளை
எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.
/////

ஏன் இந்தியாவில் இருந்த இங்கிலாந்தின் படைகளில் பெரும்பகுதி
இந்தியர்கள்தான் இருந்தார்கள். போலிசில் இருந்ததும் இந்தியர்கள்தான்.
அரசின் பண பலமும் ஆயுத பலமும் எதையும் விலைக்கு வாங்கும்.

அது சரி ஏன் இந்தியாவின் பிற பகுதிகளில் பாகிஸ்தானியர்களால் வாலாட்ட
முடியவில்லை என்பதற்க்கு விடை வேண்டியுள்ளது. உண்மையில் பாகிஸ்தான்
இந்திய எதிர்ப்பு மனோநிலையை தனது அரசியல் தேவைக்கு
பயன்படுத்துகிறது. நியாயமான போராட்டங்களுக்கு என்ன மரியாதை
என்பதைக் காட்டிய இந்திய பயங்கரவாதிகளுக்குப் ப்யந்து காஸ்மீரிகளும்
பாகிஸ்தானை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

1980 அல்லது 90(வருடம் ஞாபகம் இல்லை) JKLF அனைத்து தரப்பினரையும் கூட்டி காஸ்மீர் பிரச்சனை குறித்து முடிவெடுக்க ஒரு கூட்டத்தை ஏற்ப்பாடு செய்து அதற்க்கு இந்தியா, பாகிஸ்தான் பகுதிகளிலிருந்து ஆட்களை வரவேற்று, அவர்களுக்கு அனுமதி கொடுக்குமாறு இந்திய, பாகிஸ்தான் அரசுகளை கேட்டுக் கொண்டது. ஆனால் இரண்டு பேரும் சொல்லி வைத்தமாதிரி சில நாட்களுக்கு முன்பு அனுமதி மறுத்தனர்(இந்த பேச்சுவார்த்தைக்கு 85 முஸ்லீம், 40 இந்து பண்டிட்கள், சில புத்த சீக்கிய மத பிரதினிதிகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.).

வட கிழக்கு மாகாணங்களில் பாகிஸ்தானியர்களை முடிச்சு போட
முடியவில்லை ஏனெனில் அதை மதம் என்று அடையாளம் காட்டி பிரிக்கும்
தந்திரம் செல்லுபடியாகது என்பதால்.




/////////////
இந்திய இரானுவம் தவறே செய்யவில்லை என்று யாரும் எப்போழுதும்
சொல்லவில்லை. ஆனால் தவறுகள் நடந்த போது விசாரனைகள்
நடந்திருக்கின்றன. குற்றவாளிகள் தண்டிக்கபட்டுள்ளனர். ஏன் இரண்டொரு
மாதங்களுக்கு முன்பு கூட பெரிய அதிகாரிகள் கூட கோர்ட் மார்ஷல்
செய்யபட்டு தூக்கிஎறியபட்டனர்.
//////

ஆமாம், ஆமாம், மனோராம என்ற ஒரு பெண்ணை மிசோரமில் பாலியல்
பலாத்காரம் செய்து கொன்றனர் உங்களது சகொதரர்கள் அதற்க்கு எப்படி
விசாரணை நடந்தது என்று எல்லாருக்கும் தெரிந்ததுதான்.

இன்றூம் காஸ்மீரில் தினம் காணாமல் போன பல
ஆயிரக்காணக்கானவர்களுக்கு என்ன விசாரனையை செய்தது உங்கள்
கோர்ட் டிகால்டக்கடி மார்ஷல் என்று கூறவும்.

கல்யாண் வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது கேட்டால் கூட்டம்
கூடுவதற்க்கு தடை செய்யப்பட்டுள்ளது என்று சட்டவாதம் பேசுவது. எந்த
திருடனும் சந்தர்ப்பவசமாக திருடுவதில்லை. அது போல உங்க ஆளும்
வர்க்க பன்றிகளும்கூட தங்களது அனைத்து மக்கள் விரோத
நடவடிக்கைகளை செய்யும் முன்னர் அதற்க்கு சாதகமான சட்டங்களை
சும்மா பெயரளவில் ஜனநாயகம் என்று காமிக்கும் வசதிக்கா இயற்றி
விட்டுத்தான் செய்கிறார்கள்.




////////////////
இந்த நிலையில் இன்னொறையும் இங்கே சொல்லிவிடுகிறேன். எதிரிகளுக்கு
இரானுவத்தை பற்றி தவறான என்னம் ஏற்படசெய்ய இந்த மாதிரி "இரானுவ
தாக்குதலில் அப்பாவிகள் பலியாகிறார்கள்" போன்ற செய்திகள் மிகவும்
வசதி.
/////////

யாருடைய எதிரிகளுக்கு? ராணுவத்தினுடைய எதிரிகளுக்கு. பெரும்பாலான
நேரங்களில் ராணுவத்தின் எதிரிகள் மக்கள்தான்.



//////
சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஏரியில் இரானுவ படகுகளில் கஷ்மீர்
குழந்தைகள் உல்லாச பயனம் சென்றனர்.அப்போது எதிர்பாராதவிதமாக
படகு கவிழ்ந்து கிட்டதட்ட ஐம்பது குழந்தைகளை பலியாயினர்.உடனே
ஐம்பது பென்களை மானபங்கபடுத்த முயன்றதால் தான் படகில் களேபரம்
ஏற்பட்டு கவிழ்ந்ததாக செய்திகள் வெளியாயின. ஐம்பது பென்கள் - இரண்டு
வீரர்கள்!!! நம்ப முடிகிறதா? பச்சிளம் பிள்ளைகள் என்று கூட பாராமல்
பினங்களின் மீது அரசியல் செய்யும் கேவலமான பிரச்சாரம் தான்
நடந்துவருகிறது. பனமும் நிறைய புழங்குகிறது. ஒரு சாதாரன் தீவிரவாதியின்
வருட சம்பளம் இரண்டு லட்ச ருபாய். இதையெல்லாம் மறைத்து விட்டு தான்
அருந்ததி ராய் போன்றோர் ஜல்லியடித்து கொண்டு இருக்கிறார்கள்.

அருந்ததி ராயின் மற்றொரு famous phrase கஷ்மீரில் இந்திய 7 லட்சம்
வீரர்களை குவித்து இருக்கிறது என்பது. உன்மையில் அங்கே வெறும் இரண்டு
லட்சம் வீரர்கள் கூட இருக்க மாட்டார்கள்.இந்திய படைகளில் எத்தனை
காலாட்படை வீரர்கள் இருக்கிறார்கள் என்று சாதாரன் கூக்கிள் மூலம்
தெரிந்துகொள்ள முடியும் என்ற நிலையில் யாரை திருப்திபடுத்த இந்த
கேவலமான பொய் பிரச்சாரம் ?

//////

சரி இரண்டு லட்சம் என்பது குறைந்த எண்ணிக்கை என்று சொல்கிறீர்களா?




//
ஸோ, இரானுவத்தை பற்றி பேசும் முன்னர் தீர விசாரித்து தெரிந்துகொண்டு
பேசுவது நலம். சும்மா போகிற போக்கில் ஜல்லியடித்தல் யாருக்கும் எந்த
பயனையும் தராது.
//


இராணுவத்தைப் பற்றி - போலி மோதல் மூலம் விருது வாங்கவதற்க்காக
செய்த தந்திரங்கள். நித்தம் அப்பாவிகளை கொல்லும் செய்திகள் என்று
நாளும் வரும் செய்திகளை நாங்களும் படித்துக் கொண்டுதான்
இருக்கிறோம்.

அதில் ஒன்றுக்குக் கூட இதுவரை எதுவும் நீதி வழங்கியது போல
தெரியவில்லை.

அதனால் இராணுவத்தைப் பற்றி புனித ஜல்லி அடிக்கும் பொழுது நீங்களும்
தரவுகளை நன்கு ஆராய்ந்து விட்டு வந்து அடிக்கவும்.



////////
//ராணுவ பன்றிகள்?//

வலிமையான வார்த்தை பிரயோகம் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
அதனால் ஏற்படும் பயன் என்ன?
////////


ஒரே ஒரு பயன்தான் பன்றிகள் யார் என்ற உண்மை எல்லாருக்கும் தெரியும்
என்பதுதான்.


இந்த பன்றிகளும் உணர்ந்து தங்களது அடிமைத்தனத்தை களைந்து மனித உணர்வு பெறும் போழுது நீங்கள் அவர்களை பன்றிகள் என்று கண்டனம் செய்வீர்கள்.

அசுரன்

said...

அப்சலை தூக்கில் பொடச் சொல்லி பதிவிடும் போலி தேசபக்தி அமெரிக்க கொட்டை தாங்கிகள், அப்சலால் நாடு அழிந்து விடும் எனவே தூக்கில் போடுங்கள் என்று கூறி, இந்தியாவை அழிக்க முற்ப்படுபவர்களுக்கு தூக்குதான் தண்டனை என்கிறார்கள்.

நான் சொல்கிறேன்: நீஙக்ள் சொல்லுவது சரிதான். இந்தியாவை அழிக்க முற்ப்படுபவர்களுக்கு தூக்குதான் தண்டனை. யார் அந்த இந்தியாவை அழிக்க முற்ப்படுபவர்கள்,

* மன்மோகன், பா.சி முதலான மாமா பசங்க

* மாமா வாஜ்பேயி, சின்ன மச்சான் அத்வானி முதலான மாமா பன்றிகள்

* ஆயுத பேர ஊழல் முதல் சவப் பெட்டி ஊழல் வரை செய்த இராணுவ தலைமையினர்.

* பிற எம்பி எஎல்ஏ க்கள்.

ஆக, இவர்கள் எல்லாம் கூடி இருந்த இடத்தில் குண்டு போட்டு அப்சல் சரியான வேலையையே செய்துள்ளார்.

**********

தூ... வெட்க்ங்கெட்ட சும்பன்காளா....

நாட்ட காட்டிக் கொடுத்து தேவாடியாத்தனம் செய்றவங்களுக்கு விளக்கு பிடிக்கற வேசி மகன்கள், அப்சல் குண்டு வீசும் பொழுது மட்டும் தேசப் பற்று பொத்துக்கிட்டு வருதோ?

உண்மையில் அது அவர்களின் மதப் பற்றையே காட்டுகிறது...(அதாவது நடுத்தர வர்க்க வால் பிடிப்பு கோஸ்டியினர் தவிர்த்து)

அசுரன்

said...

சமுத்ரா என்பவர் கூகிளில் தேடி அவருக்குப் பிடித்தமான வகையில் கிடைக்கும் விஷயங்களை உண்மை என நம்புபவர். நம்மையும் அதே போல் அறிவாளி ஆக்க முயல்பவர். எனவே அவர் தனது இப்படி ஜல்லிகளைக் கொட்டுவதால் நாம் நடந்து போகும் பாதையில் இடையூறு ஏற்படுகிறது.

காமெடி வேணுமென்றால் அவரது ஜல்லிகளைப் படித்து சிரித்துவிட்டுப் போகலாம்.

மற்றபடி இவருக்கு மெனக்கெட்டு பதில் சொல வேண்டுமா?

said...

அசுரன்,

யோசிச்சு பதில் சொல்ல இத்தனை நாளா ? :))

சரி, நானும் கொஞ்சம் டைம் எடுத்துகிட்டு தான் பதில் சொல்லனும். ஒரு ரெண்டு மூனு நாள் காத்திருங்க.

சாம்பிளுக்கு :

//மனோரமா வன்புணர்ச்சி //

இது நடக்கவில்லை என்பதற்க்கு ஆதாரங்கள் இருக்கின்றன.

டி.என்.ஏ சோதனைகள் நடத்தப்பட்டன. குற்றம் நிருபிக்கபடவில்லை.

Refer செப்.17 மவுண்ட் ரோடு மாவோவின் ஹிந்து பத்திரிக்கை.

:)

புகழ்பெற்ற கோட்டை ஒன்றில் நடந்தது இந்த விசாரனை. அதன் பெயர் தெரியுமா உங்களுக்கு ?

said...

மனோரமா விஷயத்தில் Meiti கூட்டத்தினருக்கு உள்ள சம்பந்தத்தை பற்றி ஒரு சின்ன ஆராய்ச்சி செய்து பாருங்கள் உன்மை தெரியும்.

said...

///கேள்விகளிலிருந்துதான் விடை பிறக்கிறது எனும் இயங்கியலை நம்புகிறவர்கள் கம்யுனிஸ்டுகள். ///

:)))))))))

said...

//இது எம்மிடம் கேட்க்க வேண்டிய
கேள்வி அல்ல.
//

ஸாரி, motive இல்லாமல் crime நடக்காது.

//அல்லது இந்த அக்டோ பர் மாதத்தில் மட்டும் இருமுறை
அப்பாவிகளை கொன்றது ஏன் என்பதை தெளிவுபடுத்தவும் அல்லது வட //

விபத்து, தெரியாமல் நடந்தது. இரானுவம் மன்னிப்பு கேட்டுள்ளது, court of inquiry நடக்கும். நீதி நிலை நாட்டப்படும்.

ஆக, இதில் வேண்டுமென்றே யாரும் யாரையும் கொலை செய்ததற்க்கான ஆதாரம் இல்லை.

//அல்லது வட கிழக்கு மாகாணங்களில், காஸ்மீரில் ராணுவத்தை எதிர்த்து
நடக்கும் பெரிய அளவிலான போராட்டத்திற்க்கு என்ன காரணம் என்று
சொல்லுங்கள்?//

பெரிய அளவில் என்றால் எத்தனை லட்சம் பேர் கலந்துகொண்டார்கள் ?

அப்பாவிகளை கொன்றுகுவிக்கும் இரானுவமாக இருந்தால் ஆர்பாட்டங்களே நடக்க முடியாமல் சுலபமாக செய்துவிட முடியுமே.

அதுவும் இதுவரை நான் பார்த்த ஆர்பாட்டங்களில் மிக மிக அதிகமாக இரண்டாயிரம் பேர் தான் கலந்துகொண்டார்கள். ஒரே மாநிலமே எதிர்க்கிறது என்றால் இரண்டாயிரம் பேர் தான் வருவார்களா ?

(மிச்சம் இன்னொரு நாள், தனிப்பதிவில் சொல்கிறேன். சொல்ல நிறைய இருக்கிறது என்பதால் இங்கே பதில் சொல்லி நேரத்தை வீனாக்க வேண்டாம். தனிப்பதிவு போட்டுவிட்டு சொல்கிறேன்..அப்புறம் வாருங்கள், சரியா ?)

said...

இந்தியாவில் எந்தவொரு போராட்டமும் மிகப் பெரிய அளவில் மக்கள் நேரடியாக பங்களிப்புடன் நடப்பதில்லை என்பதை மனதில் கொள்க. வெகு அரிதாகவே அது போல நடக்கிறது. அதுவும் விவசாயிகள் பிரச்சனைகளில்தான் பெரும்பாலும் இது போல பெரும் எண்ணிக்கையில் 50,000, லட்சம் எண்ணிக்கைகளில் போராட்டம் நடக்கும். பிற பிரச்சனைகளில் சில ஆயிரம் நூறுகளில்தான் மக்கள் கூடி போராடுவது இங்குள்ள நிலபிரபுத்துவ ஜனநாயக வளர்ச்சி குறைந்த சமூக நிலையின் காரணம். இதுதான் சுதந்திர போராட்ட கால நிலையும் கூட. ஆக, பெரும்திரள் போராட்டத்திற்க்கு முதலில் மக்களிடம் ஜனநாயக வளர்ச்சிக்கான போராட்டம் அவசியமாகிறது. இது இங்கு தேவையில்லாத விசய்ச்ம் என்பதால் இங்கேயே விட்டுச் செல்வோம்.

நான் எனது பின்னூட்டத்தில் கொடுத்துள்ளதில் ஒரு கட்டுரை சுட்டியில் உங்க ஆட்கள் செய்த அநியாயங்களின் ஒரு பகுதி பட்டியலிடப்பட்டுள்ளன அவற்றுக்கு என்ன பதில் சொல்லப் போகிறேர்கள். ராஜிவ் காந்தி முதற்கொண்டு உஙக்ளுடைய ஆட்களே ஒத்துக் கொண்டுள்ளார்கள் ராணுவத்தின் அசிங்கங்களை அதற்க்கு என்ன செய்ய போகிறீர்கள். ஐ.நா. சபை, இதர சர்வதேசிய மனித உரிமை கழகங்கள்(பாகிஸ்தான் ஆதரவு கழகஙக்ள் அல்ல) காஸ்மீரில், வட கிழக்கில் நடந்த நடக்கும் பல்வேறு கொடுமைகள் குறித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன அதற்க்கு என்ன சொல்லுகிறீர்கள். காஸ்மீரில், வட கிழக்கில் காணமல் போனவர்கள் ராணுவத்தினரால்தான் கூட்டிச் செல்லப்பட்டுள்ளனர். அப்படியே பாஸ்போர்ட் எடுத்து ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி விட்டதா உங்கள் ராணுவம்.

சரி மனோரமாவை வன்புணர்ச்சி செய்யவில்லை உங்கள் ராணுவம் என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம், சுட்டு கொன்றது யார்?

என்கௌன்டர் சாவு என்று தினம் செய்திகள் வடகிழக்கிலும், காஸ்மீரிலும் வருகிறதே அதன் நம்பகத்தனமைக்கு நான் எதை அடிப்படையாகக் கொள்வது? போலியாக மோதல்களை சித்தரித்து அவார்டு வாங்கும் முயற்சி செய்த ராணுவத்தின் திறமையையா? அல்லது சகல துறைகளிலும் ஊழல் மலிந்து, ரயில் பெட்டிகளிலும் ரவுடித்தனம் செய்யும் ராணுவத்தினரைப் பார்த்தா? அல்லது ராணுவத்தினர் விமர்சினத்திற்க்கு அப்பாற்ப்பட்ட கடவுள்கள் என்று உங்களைப் போல கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டா?

ஏன் உங்களுக்கு அவ்வள்வு தைரியம் அந்த மாநில மக்கள் ராணுவத்தின் மீது காதல் கொண்டுள்ளனர் என்று இருந்தால், ராணுவ சட்டங்களை கலைத்து, ஜனநாயகத்துக்கு சிறிது அவகாசம் கொடுத்துப் பாருங்களேன். இதை உங்களால் செய்ய முடியாது. அதை விடுத்து வேறு மோசமான சட்டங்களை கொண்டு வர உங்கள் அரசு யோசித்துக் கொண்டுள்ளது.

அது சரி நிர்வாணமாக போராடியவர்களை பிரதமரை சந்தித்த மறுநொடி கைது செய்ய்வதன் அவசியம் என்ன?

ஏன் உங்கள் அரசு அதி பயஙகர ஜனநாயக விரோத ராணுவ சிறப்பு சட்டத்தை இரண்டு மாநிலத்திலும் அமல் படுத்தியுள்ளது. உங்கள் பார்வையில் மக்கள் ஆதரவு இல்லையெனில் மக்களை அடக்கி ஒடுக்கும் அந்த சட்டமும் தேவையில்லையே?

நீதி விசாரணை நேர்மை இவை எல்லாம் ராணுவ அமைப்புகளுடன் ஒப்பிடும் பொழுது ஜனநாயகமாக இருக்கீற சட்டமன்ற நாடாளுமன்ற வடிவங்களிலேயே சந்தி சிரித்து நாறுகிறது. இதில் உங்களது உள்விவகார்ர அளவில் நடக்கும் விசாரனைகளின் நம்பகத்தன்மை, இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்கிய கதை போலத்தான் இருக்கும்.

இந்த பதிவில் காஸ்மீர் குறித்த விவாதம் நடப்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்வோம். நீங்களே குறிப்பிட்டது போல, ஒரு பதிவிடுங்கள் எதிர் பதிவு நானிடுகிறேன்.
***********

தாமதம் அல்ல, அந்த சமயத்தில் பல தளங்களிலும் நான் விவாதத்தில் ஈடுபட்டிருந்தேன். எனது priority வரிசையில் உங்களுடையது இல்லை. உங்களுக்கு முன்பே கேள்வி கேட்டு இன்னும் நான் எதிர்வினை புரியாதவை உள்ளன. அவை வரும் வாரங்களில் கவனத்தில் எடுக்கப்படும். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், ராணுவத்தின் கேடு கெட்ட நிலையைச் சொல்ல அதிக காலம் எடுத்து ஆராய்ச்சி செய்வதற்க்கு ஏதுமில்லை என்பதைக் குறிப்பிடவே. கைப் புண்ணுக்கு கண்ணாடி எதற்க்கு.

அசுரன்

said...

தி ராஸ்கோல்,

வருகைக்கு நன்றி,

பிற்போக்கு வாதங்கள் அனைத்து வடிவங்களிலும் வருகிறது. அவற்றை எல்லா மட்டங்களிலும் உடைத்தெறிய வேண்டிய கடமை நமக்குள்ளது.

அசுரன்

said...

செந்தழலின் வருகைக்கு நன்றி

said...

//அப்சலும் - அரசியல் ஓட்டாண்டிகளும் - அடிவருடிகளும் //

அசுரன் அய்யா,

இந்த பதிவிலே விவாதம்/எதிர் வாதம் எல்லாம் சூபரா நடக்குது..முற்போக்கு சிந்தனைகளலெல்லாம் பிரமாதமாக எடுத்து சொல்றீங்க..
ஆனா உங்க தலைப்பு கொஞ்சம் குழப்புது.

நீங்க கடைசிலே என்ன சொல்ல வரீங்க?
அஃப்சலுக்கு அடி வருடினா அரசியல் ஓட்டாண்டி ஆயிடுவாங்கன்னு சொல்றீங்களா? இல்லை அடியை வருடலைன்னா ஓட்டாண்டி ஆயிடுவாங்களா?
கட் அண்ட் ரைட்டா சொல்லிடுங்கய்யா..
நிறைய பேருக்கு இந்த குழப்பம் இருக்கிறதால் சீக்கிரம் சொல்லுங்கய்யா..
தப்பான முடிவுக்கு யாரும் போகக்கூடாதல்லவா.

பாலா

said...

//இந்த பதிவில் காஸ்மீர் குறித்த விவாதம் நடப்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்வோம். நீங்களே குறிப்பிட்டது போல, ஒரு பதிவிடுங்கள் எதிர் பதிவு நானிடுகிறேன்.//

சரிங்க அசுரன்.
பதிவு போட்டுவிட்டு சொல்கிறேன். ஒரு வாரம் ஆகலாம்.

said...

//சரிங்க அசுரன்.
பதிவு போட்டுவிட்டு சொல்கிறேன். ஒரு வாரம் ஆகலாம். //

ஓகே சமுத்ரா....

அசுரன்

said...

///அஃப்சலுக்கு அடி வருடினா அரசியல் ஓட்டாண்டி ஆயிடுவாங்கன்னு சொல்றீங்களா? இல்லை அடியை வருடலைன்னா ஓட்டாண்டி ஆயிடுவாங்களா?///

அதெ நீங்கதேன் புரிஞ்சுக்கவேண்டும் பாலா..என்ன அசுரன் நான் சொல்வது !!

said...

செந்தழல் ரவி மற்றும் பாலாவின் வருகைக்கு நன்றி
அசுரன்

said...

அசுரன்,
நீங்கள் இட்ட பின்னூட்டத்தை இரு தினங்கள் முன் தான் பார்த்தேன் (அத்தோடு வேறு ஒருவரிடம் இருந்து சில 'ஆசிர்வாத' பின்னூட்டங்களும்!). மன்னியுங்கள். தமிழில் எழுதுவதற்கு மிக நேரமெடுப்பதாலும், உங்கள் நிலைப்பாடை நானோ, என் நிலைப்பாடை நீங்களோ விவாதித்து மாற்றப் போவதில்லை என்பதாலும், கருத்து பரிமாற்றத்தில் இருவரும் ஓரளவிற்க்கு புரிந்து போனதாலும், பதிலளிக்க வில்லை. சுருக்கமாக இதோ.
காஷ்மீர் பிரச்சனையை பற்றி சில சமயம் பேசுவதற்கே வெட்கமாக இருக்கிறது. இதில் எந்த வகையிலும் நேரிடையாக பாதிக்க படாமல் சொகுசாக arm chair theorist போல் பேசுவதற்கு. என் புரிதல் கம்மிதான். மத அடிப்படையில் பாகிஸ்தானிடம் சேருவதை விட இந்தியாவில் காஷ்மீர் இருப்பதே நல்லது (எல்லோருக்கும்) என்று நினைக்கிறேன். கிழக்குப் பாகிஸ்தானிற்கும் காஷ்மீருக்கும் ஒரே அளவுகோள் இல்லை என நினைக்கிறேன். Srinagar ஐ தனியாக விடுவதால் இந்தியா முன்னேறுமென்றால், விட்டு விடலாம் என்கிறேன்.
செய்த குற்றத்திற்கு தண்டனை கொடுப்பதற்கும், பிரச்சனை என்னவென்று தெரிவதற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. Root Cause தெரியும் வரை எந்த குற்றதிற்கும் எந்த தண்டனையும் கொடுக்க கூடாது என்று சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன்.
வாழ்த்துக்களுக்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள். இராணுவத்தினர் செய்யும் நன்மைகளையும் பாராட்டுங்கள்!

சுவாமி

PS : பின்னூட்டம் இடுவது T.V பார்ப்பது போல். ரொம்ப சிரமப்பட வேண்டாம். அடுத்தடுத்து பதிலளிப்பது புத்தகம் படிப்பது போல். பதிவு எழுதுவது நாமே புத்தகம் எழுதுவது போல். Involvement ம் அதிகம். Risk ம் அதிகம். பின்னூட்டப் புலவராயிருப்பதே வசதியாக இருக்கிறது!மனது உறுத்தினால் எழுதிகிறேன்.

said...

சுவாமி,

மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்தாலும் நல்ல விவாதத்தை முன்னெடுத்து சென்றமைக்கு மிக்க நன்றி.

அடிக்கடி வந்து இது போல விவாதம் செய்ய அன்புடன் அழைக்கிறேன்.

மற்றபடி சில விளக்கங்களை மட்டும் கொடுத்து விடுகிறேன்.

காஷ்மீர் இந்தியாவுடன் இருக்க வேண்டும் என்ற உங்களது விருப்பம்தான் எனது விருப்பமும்.

அதை அங்கே பிச்சி இங்கே பிச்சி என்பது போல நீங்கள் கொடுத்துள்ள் சின்ன சின்ன விசயங்களில் கூட எனக்கு ஒப்புதல் கிடையாது,.
ஆனால், இது அந்த மக்களின் விருப்பமா? என்பதும் அதை அந்த மக்களின் விருப்பமாக்க என்ன செய்ய வேண்டும் என்பதும், அதற்க்கு இந்த அரசுக்கு தகுதி உள்ளதா இல்லையா என்கிற இந்த அம்சங்களில்தான் எனக்கும் உங்களுக்கு வேறுபாடு.

தண்டனையைப் பொறூத்தவரை: அப்சல் ஒரு விளைவு. அவனை எய்த அம்புகள் குறித்து பேசுவதற்கே ஒரு பதிவு போட்டு 71 கமெண்ட்ஸ் வரை விவாதம் செய்ய வேண்டியுள்ளது. விளைவுகளை அரசியல் ரீதியான வீசாரணை இன்றீ வெட்டியெறீவது அநீதி என்பதும், அந்த விளைவுக்கு பின்னால்லள்ள் அரசியல் மக்கள் விரோதமானது(Ex: பாபர் மசுதி இடிப்பு, மும்பை குண்டு வெடிப்பு - இரண்டும் மத அடிப்படைவாத பாசிசம்) எனில் மரண தண்டனை கொடுப்பதிலும் எனக்கு ஆட்சேபனை இல்லை. அது அப்சல் விசயத்தில் நடக்க வில்லை. அப்படி ஒன்றை நடத்தும் எண்னமும், தகுதியும், தேவையயும் அரசுக்கு இல்லை. இதுதான் எனது நிலைப்பாடு.

நீங்க்ளோ தண்டனை கொடு அப்புறம் காரணி குறித்து யோசிக்கலாம் என்பது போல நிலைப்பாட்டிற்க்கு வருகிறீர்கள். தண்டனை என்பது த்வறூ நடப்பதற்க்கான சூழலை களைவதற்க்குத்தான் எனில் அப்சலுக்கு கொடுக்கப்படும் தண்டனை இந்திய, பாகிஸ்தான் ஆளும் வர்க்கங்களின் தவறை மறைப்பதற்க்காக கொடுக்கப்படுகிறது. அதை நீங்களும் ஆதரிக்கிறீர்கள்...

அசுரன்

said...

வழக்கம் போல அறிவு ஜீவி செல்வன் தனது அரைகுறை உண்மைகளின் அடிப்படையிலான ஜல்லிகளை தமிழ்மணத்தில் அடிக்கத் துவங்கி விட்டார். அப்சலும் தர்மபுரி மச்சான்களும் ஒன்று என்று பார்ப்பதே படு கேவலமான அவருடைய புத்தியை காட்டுவது என்பதிருக்க, அவரது வாதம் எந்தளவுக்கு உண்மைகளை புறக்கணித்துவிட்டு வெறும் சேறு வாரியிறைக்கும் நோக்கத்துடன் உள்ளது என்பதை இந்த பதிவின் பின்னூட்டங்களில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

விளைவுகளை மட்டும் விமர்சிக்கும் $சல்வன் மூல காரணத்தில் உள்ள அரசியலையும் அதில் பின்னி பிணைந்துள்ள பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையும் பற்றி கவலைப்பட வேண்டிய நிர்பந்தம் அவருக்கில்லை. அதைப் பற்றிய கேள்விகளுக்கும் இவரைப் போன்ற ஆன்மாவை அமெரிக்கனிடம் அடகு வைத்த அடிவருடிகள் இன்று வரை பதில் சொன்னதில்லை.

ஆயினும் தொடர்ந்து சேறு வாரியிறைக்கும் வேலையை மட்டும் செவ்வெனே செய்து வருகிறார்கள்.

அப்சலையும், தர்மபுரியையும் வெகு வசதியாக ஒப்பிட்டு எழுதியுள்ள டாலர்,
அதே கையோடு, காஷ்மீரையும் ஜெயலலிதா ஊழலையும் ஒப்பிட்டால் அவரது வாதம் எந்தளவுக்கு சாக்கடையை மேயும் பன்றியின் தரத்திற்க்கு கேவலமானது என்பது அம்பலமாகியிருக்கும்.

செய்வாரா? செய்யும் நேர்மை அவருக்குண்டா? இது வரை அப்படியொரு நேர்மையான அறச் சீற்றத்தை என்னுடம் நடந்த எந்தவொரு விவாதத்திலும் அவர் காட்டியதில்லை. எனவே அப்படியொரு வினையை அவரிடம் இந்த முறையும் எதிர்ப்பார்ப்பதற்க்கு எந்த மூகாந்திரமும் இல்லை.

இதையும் படிக்கவும்,
மறைக்கப்பட்ட செக்குலர் காஸ்மீரின் வரலாறு,
http://kaipulla.blogspot.com/2007/02/secular-kashmir-hiden-history.html

அசுரன்

said...

//அப்சலும் தர்மபுரி மச்சான்களும் ஒன்று என்று பார்ப்பதே படு கேவலமான அவருடைய புத்தியை காட்டுவது என்பதிருக்க//

அப்சலையும் , பகத்சிங்கையும் ஒன்னாபாத்த உங்க புத்திதான்.

said...

அப்சநலும், பகத்சிங்கும் ஒன்னு என்று எங்காவது சொல்லியிருக்கேனா?

ஏன் அனானி இவ்வளவு அவசரம் ;-)))

எதிர்கருத்துக்களைக் கண்டா கோபம் வரதில்ல தப்பில்ல ஆனா அத கொஞ்சம் அறிவுப்பூர்வமா தர்க்கரீதியா உடைக்கிறதுக்கு முயற்சி செய்யனும்... :-))

அது சரி ஏதோ ஒரு வகையில் $சல்வனோட படு கேவலமான புத்தியை ஒத்துக்கீட்டிங்கன்னு மட்டும் தெரியுது. :-))

அசுரன்

said...

Anybody hear this?.....


வழக்கம் போல அறிவு ஜீவி செல்வன் தனது அரைகுறை உண்மைகளின் அடிப்படையிலான ஜல்லிகளை தமிழ்மணத்தில் அடிக்கத் துவங்கி விட்டார். அப்சலும் தர்மபுரி மச்சான்களும் ஒன்று என்று பார்ப்பதே படு கேவலமான அவருடைய புத்தியை காட்டுவது என்பதிருக்க, அவரது வாதம் எந்தளவுக்கு உண்மைகளை புறக்கணித்துவிட்டு வெறும் சேறு வாரியிறைக்கும் நோக்கத்துடன் உள்ளது என்பதை இந்த பதிவின் பின்னூட்டங்களில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

விளைவுகளை மட்டும் விமர்சிக்கும் $சல்வன் மூல காரணத்தில் உள்ள அரசியலையும் அதில் பின்னி பிணைந்துள்ள பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையும் பற்றி கவலைப்பட வேண்டிய நிர்பந்தம் அவருக்கில்லை. அதைப் பற்றிய கேள்விகளுக்கும் இவரைப் போன்ற ஆன்மாவை அமெரிக்கனிடம் அடகு வைத்த அடிவருடிகள் இன்று வரை பதில் சொன்னதில்லை.

ஆயினும் தொடர்ந்து சேறு வாரியிறைக்கும் வேலையை மட்டும் செவ்வெனே செய்து வருகிறார்கள்.

அப்சலையும், தர்மபுரியையும் வெகு வசதியாக ஒப்பிட்டு எழுதியுள்ள டாலர்,
அதே கையோடு, காஷ்மீரையும் ஜெயலலிதா ஊழலையும் ஒப்பிட்டால் அவரது வாதம் எந்தளவுக்கு சாக்கடையை மேயும் பன்றியின் தரத்திற்க்கு கேவலமானது என்பது அம்பலமாகியிருக்கும்.

செய்வாரா? செய்யும் நேர்மை அவருக்குண்டா? இது வரை அப்படியொரு நேர்மையான அறச் சீற்றத்தை என்னுடம் நடந்த எந்தவொரு விவாதத்திலும் அவர் காட்டியதில்லை. எனவே அப்படியொரு வினையை அவரிடம் இந்த முறையும் எதிர்ப்பார்ப்பதற்க்கு எந்த மூகாந்திரமும் இல்லை.

இதையும் படிக்கவும்,
மறைக்கப்பட்ட செக்குலர் காஸ்மீரின் வரலாறு,
http://kaipulla.blogspot.com/2007/02/secular-kashmir-hiden-history.html

அசுரன்

Related Posts with Thumbnails