TerrorisminFocus

Monday, July 19, 2010

வேலிக்கு ஓணான் சாட்சி!!

(ஓணான்)

(வேலியில் ஒணான்)


ணானின் சாட்சியம்:
ரெட்டி சகோதரர்கள் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை-எதியூரப்பா

(இப்போ சொல்றேண்டா தீர்ப்ப்பு...!!)


வேலிக்கு சாட்சி சொல்வதற்காக டெல்லி சென்ற ஓணான் அங்கு பச்சோந்திகளை சந்தித்து பேசியது. அப்பொழுது வேலியை காக்கும் பொருட்டு 'மொத்தமாக இரும்பு கனிமங்களை ஏற்றுமதி செய்வதை தடை செய்தால்தான் சுரங்க மாபியாவை தடுக்க இயலும்' என்று ஓணான் பச்சோந்திகளை மிரட்டியது. ஏற்றுமதியை தடுத்தால் தமது பிழைப்புக்கும் ஆப்பு ஆகிவிடும் என்பதால், பச்சோந்திகளும் தமது வாலைச் சுருட்டி பொருத்தமான இடத்தில் செருகிக் கொண்டு ஓணானுக்கு சிங்கி அடித்து அனுப்பி வைத்தனர். திரும்பி வந்த ஓணான் பத்திரிகையாளர்களை சந்தித்து வேலிக்கு சாட்சி சொன்னதைத்தான் பதிவின் முதல் வரிகளில் படித்தீர்கள்.

(பச்சோந்தி)

(பச்சோந்தி)

வேலிக்கு சாட்சி சொல்ல வேண்டிய நிர்பந்தம் உருவான சூழல்:

வேலியும் ஓணானும் சேர்ந்து லோக்காயுக்தா எனும் அரசு நீதி விசாரணை அமைப்பு இரும்புச் சுரங்க மாபியா குறித்து விசாரணை செய்வதை முடக்குகிறார்கள் - இதனை முறையிட்டு அதன் தலைவர் முன்னாள் நீதிபதி ஹெக்டேவின் தெஹெல்கா பேட்டி



சீனாவுக்கு கோமணம் துவைக்கும் காதை:

கூட்டணி - வேலி, ஓணான் மற்றும் பச்சோந்திகள்.

""
India is China's second largest supplier of iron ore and exported 68.5 million tonnes to that country in 2005-06. Many of those shipments contained the famous high-quality ore (65%+ Fe content) from Bellary. As the country looks to increase annual domestic steel production from the current 38 million tonnes to 100 million tonnes by 2020, many worry that the best iron ore will have already been spent.

Unscrupulous trade

With the cost of production at Rs.100 a tonne, the region's mine owners made a total profit estimated at Rs.3,100 crores last year. Yet government royalties have remained shockingly low, rising from Rs.24 to just Rs.27 a tonne in October 2004, well after the China boom had begun. According to the DMG, Karnataka collected Rs.80 crores in royalties in 2004-05, less than 2 per cent of what the ore was worth in the market.
""


(இன்னுமாடா நம்மள நம்புறாய்ங்க... அது அவிங்க தல விதி....!!)


இமெயில் தகவல் மற்றும் பதிவுக்கான கரு கொடுத்த தோழர் இரணியனுக்கு வாழ்த்துக்கள்

அசுரன்


உள்நாட்டுப் போருக்கு தயாராகிறது இந்திய அரசு !!

அன்னைக்கே சொன்னாய்ங்க!!!

பார்ப்பினிய பயங்கரவாத பாசிஸ்டு கோமாளிகள் I - எடியூரப்பா

ஒகேனாக்கல் - எச்சப் பொறுக்கி RSS எடியூரப்பாவும், மொள்ளாமாறி பாஜகவும்!!

சீமான் கைது - இது ஆரம்பம் மட்டுமே!!!


சீமான் மீண்டும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் பிணையில் வர இயலாத சிறைத் தண்டனைக்கு ஆளாகியுள்ளார். பிரிவினையைத் தூண்டும் வகையில் அவர் பேசினாராம். ஆர் எஸ் எஸ் இந்து பயங்கரவாதிகள் மத அடிப்படையில் நாட்டைத் துண்டாடும் பேச்சுக்களை எந்த பயமும் இன்றி பேசி வரும் வேளையில், சீமானுடைய பேச்சு ஒரு பெரிய விசயமே இல்லை. ஆனால், இதற்கு முன்பு கோக்கை எதிர்த்து போஸ்டர் ஒட்டிய தேசத் துரோகம், பெரியார் சிலை உடைப்பை எதிர்த்த குற்றம் போன்றவற்றிற்காக 'மட்டுமே' தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ள நிலையில் சீமான் மீது அதே சட்டம் பாய்ந்துள்ளது ஆச்சர்யமானது அல்ல.

ஆனால், அச்சட்டம் சீமான் மீது பாய்ந்துள்ள நேரம் சில விசயங்களை முன்னறிவிக்கின்றன. அது இந்திய அரசு பாசிசமயமாகிவிட்டது என்பதைத்தான். இந்திய அரசை எதிர்க்கும் அதன் நடவடிக்கைகளை விமர்சிக்கும் எந்தவொரு பேச்சுக்களும் கடுமையான சிறைவாசத்தையே எதிர்கொள்ளும் என்பதே சீமான் கைது அறிவிக்கும் செய்தி.

இம் என்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம் என்ற காட்டு பாசிச நிலையை நோக்கி உலகின் மிகப் பெரிய 'ஜனநாயகம்' சென்று கொண்டுள்ளது. மாவோயிஸ்டுகளை ஒடுக்குவது என்ற பெயரில் மத்திய இந்தியாவின் இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு கூட்டிக் கொடுக்கும் மாமா வேலையும், இலங்கையில் இன அழிப்புப் போரின் மூலமாக இந்திய மூலதனத்தின் வன்புணர்ச்சிக்கு களம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள நிலையும் இங்கு ஒப்பிட்டு நோக்கத்தக்கது. மேலும், விலைவாசி உயர்வு, நாட்டின் மிகப் பெரும்பான்மை மக்களின் வறுமை, உணவுத் தட்டுப்பாடு, பெட்ரோல் விலையுயர்வு, காஷ்மீர் விடுதலைப் போராட்டம், வடகிழக்கில் கிளர்ச்சி என பல சிக்கல்கள் முன்னுக் வந்துள்ள சூழல் இங்கு கவனிக்கத்தக்கது. மொத்த நாட்டின் பெரும் பகுதி உள்நாட்டு போர் சூழலை நோக்கி சென்று கொண்டுள்ளதையே இவை காட்டுகின்றன.

பசுமை வேட்டையின் முன்னறிவிப்பான சல்வாஜூடுமின் அட்டூழியங்களை அமபலப்படுத்திய 'குற்றத்தி'ற்காக பினாயக் சென் ஒரு வருடம் விசாரணையின்றி சிறை வைக்கப்பட்டார். பல மனித உரிமை ஆர்வலர்கள் இதே போல ஒடுக்கப்பட்டனர். பசுமை வேட்டையின் கொடூரங்களை அம்பலப்படுத்திய 'குற்றத்திற்காக' ஹிமேஸு குமார் என்ற காந்தியவாதியின் ஆசிரமம் நொறுக்கப்பட்டது, அவரது உதவியாளர் மீது வழக்கு, சிறைவாசம். லிங்கராம் என்ற பத்திரிகைத் துறை மாணவர் டெல்லியில் படிக்கிறார். அவர்தான் ஆசாத்தின் இடத்தை நிரப்ப இருக்கும் மாவோயிஸ்டு தலைவர் என்று கூறி அவருடன் தொடர்புள்ளவர்கள் என்று அருந்ததி ராய் உள்ளிட்ட பல முக்கிய மனித உரிமையாளர்களை குறி வைத்தது அரசு. இவையனைத்தும் தமக்கு எதிரான எதிர்ப்புகளை அனைத்தையும் மிரட்டி பணிய வைக்கும் தந்திரமாகவே அரசு செய்தது.

இன்னிலையில், இறையாண்மை பாதுகாப்புச் சட்டம் என்ற ஒன்றை கொண்டு வர உள்ளனர். அத்துடன் பசுமை வேட்டையையும் விரிவுபடுத்தி ராணுவம், விமானப் படையை இறக்கி விரிவானதொரு உள்நாட்டு யுத்தம் தொடுக்க உள்ளனர். எனவே கொஞ்சம் நஞ்ச எதிர்ப்புக் குரல்களையும் கிள்ளியெறியும் தேவை அரசுக்கு உள்ளது. ஒரு பக்கம் சட்டப் பூர்வமாக பாசிசமயமாகி வரும் அரசு, இன்னொரு பக்கம் அரசியல் கட்சிகளின் அணிகளின் சட்டத்தை மீறிய ரவுடித்தனங்களுக்கு ஆசி வழங்கி சிவில் சமூகத்தையும் பாசிச மயமாக்கி வருகிறது. கர்நாடகா- மாஹாராட்டிரா எல்லைப் பிரச்சினை குறித்து தொலைக்காட்சியில் விவாதிக்க நாக்பூர் சென்ற கர்நாடாக ரக் சன வேதிகே அமைப்பின் தலைவர்(முஸ்லீம்) இந்து பயங்கரவாத- தமிழர் விரோத சிவசெனா ரவுடிகளால் எல்லார் முன்னிலையிலும் தாக்கப்பட்டு காதுகள் கிழிக்கப்பட்டு அடித்து நொறுக்கப்பட்டார். ஆர் எஸ் எஸ் ரவுடிகள் தமக்கு எதிரான சிறு குரலையும் தமது குரங்குப் படையை கூட்டிக் கொண்டு சென்று தாக்கி ஒடுக்குகின்றனர். குஜராத்தில் மாவோயிஸ்டு பீதியைக் காட்டி பல பத்து மனித உரிமையார்வளர்கள் கைது. டெல்லியில் தொழில்சங்க தலைவர்கள் மாவோயிஸ்டுகளாக சித்தரிக்கப்பட்டு கைது. மதுரையில் தமிழக அரசுக்கு எதிராக வால்போஸ்டர் அடித்தால் ரவுடி அழகிரியின் மிரட்டல். இந்திய அரசும், சமூகமும் பாசிச மயமாகி வருகிறது. பிணையில் வர இயலாத சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்ட போபால் ஆண்டர்சன் பாதுகாப்புடன் விடுதலை, ஆர் எஸ் எஸ் பயங்கரவாதி தாராசிங், அத்வானி போன்றோருக்கு தண்டனையில்லை, கயர்லாஞ்சி சாதி வெறியர்களுக்கு கரிசனம் - தண்டனைக்குரியவர்களுக்கு அன்பையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனையும் தருகின்ற இன்றைய சூழலில், இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு முழுமையாக பாசிச மயமான ஒரு அரசே தேவையாக உள்ளது. சீமானின் கைது சொல்லும் செய்தி இதுதான்.

உலகின் மிகப் பெரிய 'ஜனநாயக' நாட்டின், வசதி படைத்த குடிகளே.. .இதோ உங்களது நாட்டுப்பற்றை விளம்பரப்படுத்த அற்புதமானதொரு வாய்ப்பு. இந்திய அரசின் பாசிச நடவடிக்கைகளை எதிர்த்து களமிறங்குங்கள்.

அசுரன்

உள்நாட்டுப் போருக்கு தயாராகிறது இந்திய அரசு !!

Sunday, July 18, 2010

முற்றும் கழண்ட டவுசர்!! அடடே ஆர் எஸ் எஸ் அம்மணக்கட்டை!!!

(இந்து பயங்கரவாத அமைப்பின் கொடி)





(அயோத்தியில் பஜ்ரங்தள் சிறார்களுக்கு ஆயுதப் பயிற்சி)

சி
பிஐ வசம் இருக்கும் சில முக்கிய விடியோக்களை போன வாரம் ஹெட்லைன்ஸ் டுடே என்ற செய்தித் தொலைக்காட்சி சேவை நிறுவனம் ஒலிஒளி பரப்பியது (6 விடியோக்கள்) . அவை அனைத்தும் பட்டாசு ரகங்கள். ஆர் எஸ் எஸ்ன் முக்கியத் தலைவர்கள் பயங்கரவாதிகள் என்ற உண்மை வெளிவந்தது. இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியை கொல்வதற்கான திட்டங்களையும் வகுத்துள்ளனர் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள்.

இந்த பயங்கரவாத கும்பலை இயக்கியவர்களில் ஒருவன் இந்திரேஸ் குமார். இவர் ஆர் எஸ் எஸ்ல் பல முக்கியப் பொறுப்புகள் வகிப்பவர். இவன் தான் காஷ்மீர் அமர்நாத் நிலப் பிரச்சினையை தூபம் போட்டு வளர்த்தவர்களில் ஒருவன். இவன் தான் நேபாள் மாவோயிஸ்டுகளுக்கு எதிராகவும் வேலை செய்துள்ளான். குறிப்பாக ஆர் எஸ் எஸ்ன் முஸ்லீம் பிரிவின் தலைவரே இவர்தான். என்னவொரு முரன்நகை? ஆர் எஸ் எஸ் கும்பல் முஸ்லீம் வேசம் போட்டு குண்டு வைக்கும் போது அதன் தலைவர்களோ முஸ்லீம்களுக்கு அமைப்பு ஏற்படுத்தி அதற்கு தலைமை வகிக்கிறார்கள்.

கடந்த சில வருடங்களில் நடந்த பல குண்டு வெடிப்புகளில் ஆர். எஸ். எஸ்ன் பாத்திரம் மீண்டும் மீண்டும் ஊர்ஜிதமாகி வந்துள்ளது. குறிப்பாக, மலேகான் குண்டு வெடிப்பு கைதுகள் விரிவாக நடந்து அதில் ஆர் எஸ் எஸ்ன் நேரடி பாத்திரம் மறுக்க இயலாத அளவு அம்பலமானது. ஆயினும் ஆர் எஸ் எஸை தடை செய்யவோ அதன் அலுவலகங்களை சோதனையிட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்யவோ அரசு தயாராக இல்லை (இந்த இடத்தில் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் மீது நடத்தப்பட்டுள்ள அரசு தாக்குதல்களை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளவும்).
(மலேகான் குண்டு வெடிப்பில் இந்து பயங்கரவாதிகள்)


(இந்து பயங்கரவாதி இந்திரேஸ் குமார் - ஆர் எஸ் எஸ் தலைவன்)


ஆர் எஸ் எஸ் இந்து பயங்கரவாதிகளும் மிகத் தைரியமாக பேசி வருவதும், ஏதோ முஸ்லீம் குண்டு வைச்சான் அதனால் நான் திருப்பி குண்டு வைக்கிறேன் என்பது போலவும் நியாயப்படுத்தி வந்துள்ளது. ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் முஸ்லீம் வேசம் போட்டுக் கொண்டு இந்துக்கள் கூடும் இடங்களில் குண்டு வைத்து மாட்டிக் கொண்டுள்ளனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. மேலும் இதுவரை இவர்கள் மாட்டிக் கொண்டுள்ள குண்டு வெடிப்புகள் எதிலுமே அவை முஸ்லீம்கள் மீது பலி போடும் வகையிலேயே செய்துள்ளனர். ஆக இவர்களின் நோக்கம் மக்களை மத அடிப்படையில் மோத விட்டு ரத்தம் குடிக்க வேண்டும் என்பதே ஆகும். இஸ்லாம் பயங்கரவாதிகள் ஆர் எஸ் எஸ்ன் எதிர்பார்ப்புக்கு பொறுத்தமான அளவு அதிகமான குண்டு வெடிப்புகளை நிகழ்த்தவில்லை என்பதே இவர்களின் வருத்தம். வருத்தத்தை தீர்க்கும் வகையில் முஸ்லீம் வேசம் கட்டி ஆர் எஸ் எஸ் கும்பலே குண்டுகள் வைக்கத் தொடங்கிவிட்டனர்.

(இந்து பயங்கரவாதிகள் குண்டு வைத்துள்ள இடங்கள்)

ஆதாரம்: outlook india

மாட்டிக் கொண்டவர்களின் இன்னொரு பயங்கரவாத தலைவன், பாஜகவின் முன்னாள் இருமுறை எம்பி பி. எல். சர்மா. இவனும் மாலேகான் குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளிகள் தாயனந்த் பாண்டே மற்றும் லெப்டினண்டு ஸ்ரீரிகாந்த் புரோகித் ஆகியோர் இந்தியா முழுவதும் குண்டு வைத்து லட்சக்கணக்கில் மக்களைக் கொல்வது குறித்து பேசுகின்ற விடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. ஆர் எஸ் எஸ்ன் முகமுடி அமைப்பான அபினவ் பாரத் என்ற பயங்கரவாத குழுவே முக்கிய குண்டு வெடிப்பு குற்றவாளி ஆகும். இந்த அமைப்புடன் பல விவாதங்களில் பங்கெடுத்துள்ளான் பாஜக முன்னாள் எம்பி சர்மா.

ஜனவரி 2008ல் பரிதாபாத்தில் நடந்த இவர்களின் கூட்டத்தில் (சர்மா மற்றும் பிற பயங்கரவாதிகள்) இந்திய குடியரசுத் துணைத்தலவரை கொல்லும் திட்டம் தோல்வியடைந்தது குறித்து விவாதித்துள்ள விடியோவும் அம்பலமாகியுள்ளது.

(பயங்கரவாதிகளின் அணிவகுப்பு)
ஆர் எஸ் எஸ் தலைவன் பயங்கரவாத கும்பலின் வழிகாட்டி இந்திரேஸ் குமார் பேட்டி எடுத்தது ஹெட்லைன்ஸ் டுடே. ஆர் எஸ் எஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்ற உண்மைகளை சொல்லி அவனிடம் பேசிய பொழுது மறுக்க வழியின்றி ஒடிவிட்டான் பயந்தாக்கொள்ளிப் பயல்.

உண்மைகளை வெளிப்படுத்திய குற்றத்திற்காக ஹெட்லைன்ஸ் டுடே நிறுவனத்தை வெள்ளிக்கிழமை 2000 ஆர் எஸ் எஸ் ரவுடிகளை அனுப்பி தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதல் குறித்தும் ஆர் எஸ் எஸ் அம்பலமானது குறித்தும் பிற இந்திய ஊடகங்கள் அதிகபட்ச மௌனம் காத்தன (தெஹல்காவிற்கு காட்டியது போலவே).

இவர்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை போய்விட்டதாம் எனவே இந்து ராஷ்டிரம் அமைக்கப் போகிறார்களாம். இதே போல கூறிய 'குற்றத்திற்'காகத்தான் தியாகத் தோழர் ஆசாத்தின் படுகொலை நியாயப்படுத்தப்பட்டது. இந்திய அரசு ஆர் எஸ் எஸ் தலைவர்களை நாயைச் சுடுவது போல சுட்டுக் கொல்லுமா? நாய்க்கும் தன் குட்டி பொன் குட்டி, எனவே அவர்கள் செய்ய மாட்டார்கள்......

அசுரன்

தரவுகள் ஆதாரம்: ஹெட்லைன்ஸ் டுடே

தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!

வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!


ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!



சிபிஐயிடம் மாட்டிக் கொண்டனர் இந்து பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்ன் முக்கியத் தலைவர்கள்!



Hindu Rashtra: Saffron terror's hall of shame



The Headlines Today sting




Vedio-Saffron goons attack HT Delhi office


Saffron goons attack Headlines Today office


Hindu terror is a reality, yet India refuses to utter its name

Thursday, July 15, 2010

ஏரியா பிரிக்க அடித்துக் கொள்ளும் சிபிஎம் குண்டர் படை!!

'CPM = Corporate Party of Murderers'



நன்றி டைம்ஸ் ஆப் இந்தியா

நேற்று டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட விடியோ படத்தில் மேற்கு வங்க சிபிஎம், திரிணாமூல் காங்கிரஸ் கு(தொ)ண்டர்கள் துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு சகிதம் மோதிக் கொண்டது காட்சிப்படுத்தப்பட்டது. ராஜாக்கள் தங்களுக்குள் ஏரியா பிரிக்க சண்டையிடுவது போல மேற்கு வங்கத்தில் சிபிஎம் ரவுடிப் படை தமது ஏரியாக்களை மீட்டுக் கொள்வதற்கு ராணுவ முற்றுகை போல சண்டையிடுகிறார்கள்.

ஏற்கனவே லால்கர், நந்திகிராம் பகுதிகளில் சிபிஎம் ரவுடிப் படைகளின் இத்தகைய தாக்குதல்கள் நடந்துள்ளது குறித்தும் அவற்றில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டது குறித்தும் முன்பு அம்பலமான போதெல்லாம் யோக்கியன் வேசம் போட்டனர் சிபிஎம் அல்லக்கைகள். இன்றோ விடியோ ஆதாரமாகவே இவை வெளிவந்துள்ளன. மேற்கு வங்கத்தில் சிபிஎம்யை எதிர்க்க வேண்டுமெனில் ஆயுதம் தாங்க வேண்டும் என்பதே நிதர்சனமாக உள்ளது தெரிய வருகிறது. இதுதான் முற்போக்கு சிபிஎம் மேற்கு வங்கத்தில் செய்த சாதனையாகும். இன்னொரு சாதனை ஆப்பிரிக்காவின் மிக வறிய 26 நாடுகளின் மொத்த மக்கள்தொகையை விட அதிக தொகையில் வறுமையில் வாடும் மக்களைக் கொண்ட 8 மாநிலங்களின் ஒன்றாக மேற்கு வங்கம் தகுதி பெற்றது ஆகும்.

வாழ்க போலி ஜனநாயகம், வாழ்க போலி கம்யூனிசம், வளர்க பிழைப்புவாதம்

அசுரன்

மக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் தாண்டா நாங்கள் - CPM!!

கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] !

காரப்பட்டு: மார்க்சிஸ்டுகளின் கொலைவெறியாட்டம்: தொண்டர்களாக குண்டர்கள்! தலைவர்களாக கிரிமினல்கள்!

விழுப்புரத்தில் விவிமு தோழர்களை வெட்டிப் படுகொலை செய்த பாசிச CPM

உழைக்கும் வர்க்கத்தினரை இரக்கமின்றி வெட்டிக் கொல்வதற்கு அரிவாள்! அவர்களுடைய உடைமைகளைக் கொள்ளையிடும் பொருட்டு பூட்டை உடைப்பதற்குச் சுத்தியல்!

போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி !

மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல், CPMன் தோல்வி, ரவுடியிசம், உத்தபுரம்


கடைசியில் கோவிந்சாமி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்!!!


லால்கார் மேற்கு வங்கத்தில் ஒரு புரட்சி பூமி!!

பாஸிஸ்டு CPMமும், லெனின் சொல்லும் ஜனநாயக புரட்சியும்!!!!

Wednesday, July 14, 2010

இது துரோகத்தின் விளைநிலம் - 2


போபால் வழக்குத் தீர்ப்பு மற்றும் இந்திய மக்களுக்கு இந்த அரசு செய்த மாபெரும் துரோகம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இந்த துரோகத்திற்கு உள்ளேயே இன்னொரு உப துரோகம் உள்ளது.




போபால் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக நீக்கப்படாமல் சேர்த்து வைக்கப்பட்டிருந்த யூனியன் கார்பைடு ஆலையின் நச்சுக் கழிவுகள் அந்தப் பகுதியில் கடுமையான உடல் நலக் குறைபாடுகளையும், காற்று, நிலம், நீர் மாசுபாட்டையும் ஏற்படுத்தி வந்தது. இதனை எதிர்த்து மக்களும் தொடர்ந்து போராடி வந்தனர். போபால் கழிவுகளை சுத்தப்படுத்தி அப்புறப்படுத்தும் பொறுப்பு அசுத்தப்படுத்திய யூனியன் கார்பைடு (இன்றைய டௌ கெமிக்கல்ஸ்) நிறுவனத்துக்கே சொந்தம் என்பது மக்களின் முக்கியக் கோரிக்கை. ரத்தன் டாடா சில வருடம் முன்பு மாமா வேலை பார்க்கும் முகமாக நான் வேண்டுமானால் சுத்தம் செய்கிறேன் என்று சொல்லிப் பார்த்தார். அதனை எதிர்த்தும் மக்கள் போராடினார்கள். இனி உலகில் போபால் போல ஒன்று நடைபெறாமல் இருக்க வேண்டுமெனில் சுத்தப்படுத்தும் பொறுப்பு யூனியன் கார்பைடிற்கே செல்ல வேண்டும் என்று உறுதியுடன் நின்று போராடி வருகிறார்கள் மக்கள்.



இன்னிலையில் போபால் வழக்குத் தீர்ப்பு வந்தது. தீர்ப்பு எனும் துரோகம் கிளப்பிய சந்தடி அடங்கும் முன்பே அடுத்தக்கட்ட துரோகம் ஒன்றும் வெளி வந்துவிட்டது. யூனியன் கார்பைடு ஆலையின் நச்சுக் கழிவுகளில் 40 டன்களை ரகசியமாக பிதாம்பூர் என்ற கிராமத்தில் கொண்டு போய் கொட்டியுள்ளது அரசு. இதை 2008லேயே செய்துள்ளனர். அதாவது ரத்தன் டாடா மாமா வேலை பார்க்கிறேன் என்று சொன்னார் அல்லவா? அதற்கு எதிர்ப்பு வந்தது அல்லவா? எனவே வெளிப்படையா செய்தால்தான் பிரச்சினை என்று ரகசியமாக செய்துள்ளனர். இப்போது அம்பலமாகியுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சர் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

எந்தளவுக்கு மக்களை கிள்ளுக் கீரையாக எண்ணியிருந்தால் இந்த அரசு இந்தத் துரோகத்தைச் செய்திருக்கும்? போபால் மக்கள் எக்கேடு கெட்டால் என்ன என்று டௌ கெமிக்கல்ஸுக்கு ஆதரவாக நின்று அந்த மக்களை இன்று வரை வதைத்து வருகிறது எனில், இன்னொரு பக்கம் அதே டௌ கெமிக்கல்ஸை தப்பிக்க வைக்க, திருப்திப்படுத்த ரகசியமாக நச்சுக் கழிவுகளை இன்னொரு கிராமத்தில் சென்று பதுக்குகிறது. அந்தக் கிராம மக்களுக்கும் பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் ஏற்படுமே, அங்கும் நீர், நிலம், காற்று பாதிகப்படுமே என்பது பற்றியெல்லாம் இவர்களுக்கு கவலையில்லை. இந்தியாவில் கம்பனி ஆரம்பிக்கும் அமெரிக்க நிறுவனங்கள் தாம் ஏற்படுத்தும் விபத்துக்களுக்கு பொறுப்பேற்க வேண்டாம் என்றும் சட்டம் கொண்டு வர ஏற்பாடு செய்த அரசுதானே இது. கீழே தள்ளிய குதிரை குழியும் பறித்ததாம்.

இப்படி மக்களை காட்டிக் கொடுத்து கழுத்தறுப்பதைப் பற்றி ஒரு துளியளவு கூட கவலைப்படாத, பன்னாட்டு கம்பனிகளுக்கு பாதசேவை செய்யும் ஒரு துரோக அரசை தாங்கி நிற்கின்ற அமைப்பின் பெயர் ஜனநாயகம் என்றால் நம்மால் வாயால் சிரிக்க இயலவில்லை.

தயவு செய்து உன்னோட ஜனநாயக உளறல்களைத் தூக்கி கக்கூஸில் போடு.....

(போபால் பற்றிய விரிவான செய்திகள் கட்டுரைகள் ஜூலை மாத புதிய ஜனநாயகம் சிறப்பிதழில் கிடைக்கும்)

அசுரன்

Air, Water, Earth And The Sins Of The Powerful

Ramesh apologises for dumping of Carbide waste

End Of Bhopal Protests?

The Night Bhopal Was Poisoned In Its Sleep

Timeline: The Toxic Trail

அணு உலை விபத்து இழப்பீடு மசோதா: அமெரிக்காவின் இலாபவெறிக்கு இந்திய மக்கள் பலிகிடா!

போபால் படுகொலை: ஆண்டர்சனை தூக்கில் போடு!

முள்ளிவாய்க்கால் – போபால்

புதிய ஜனநாயகம்,போபால் – சிறப்பிதழ், ஜூலை-2010, மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

இது துரோகத்தின் விளை நிலம்!








துரோகம் 1:
கயர்லாஞ்சி (2006 செப்) என்ற பெயர் பலருக்கு மறந்திருக்கும். ஞாபகம் இல்லாதோர் இந்த சுட்டியில் படித்துக் கொள்ளவும்.

கயர்வாஞ்சி தாழ்த்தப்பட்டோர் படுகொலை : சாதிவெறியர்களின் வக்கிரம்-கொடூரம்!

கயர்லாஞ்சி சாதிவெறிப் படுகொலை இந்தியாவைவே உலுக்கியது. ஏனென்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்திய மாதக்கணக்கிலான வீரம் செறிந்த போராட்டத்தின் காரணமாக இந்தியா குலுங்கியது. பத்திரிகைகள் இந்தப் படுகொலையை போராட்டங்கள் வீரியமாக மாறிய ஒரு மாதம் முழுவதும் வெளியிடமால் ரகசியமாகவே வைத்திருந்தன. ஆனந்த் தெல்தும்பெடே அவர்கள் இந்தப் படுகொலையை ஒட்டி உலகமய அரசியல் சாதியத்தை எத்தகைய பரிணாமத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது என்று விரிவானதொரு ஆய்வுக் கட்டுரையையும் எழுதினார். உலகமயம் அடிப்படையில் உழைக்கும் மக்களை ஒடுக்குகிறது என்ற வகையில் தாழ்த்தப்பட்டவர்களும் கடுமையாக ஒடுக்கப்படுகிறார்கள் என்பதே அதன் சாரம். கயரலாஞ்சி காட்டும் பேருண்மைகள் - உலகமயம் - தலித்தியம் - தலித் விடுதலை

இந்தப் படுகொலை வழக்கை கையிலெடுத்த சிபிஐ வழக்கம் போல தனது துரோகத்தை அரங்கேற்றத் துவங்கியது. சிபிஐ கேட்டுக் கொண்டதன் பேரில் பிப்ரவரி 2007ல் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 46 பேரில் 35 பேர் விடுவிக்கப்பட்டனர்.

செப் 2008ல் குற்றம்ச்சாட்டப்பட்ட 11பேரில் 6 பேருக்கு மரண தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும் மூவரை விடுவித்தும் தீர்ப்பானது.

ஆனால் தண்டனைக்கான காரணங்களாக சாதிவெறி வன்கொடுமையோ, பெண் மீதான பாலியல் அத்துமீறலோ, திட்டம்மிட்ட படுகொலை முயற்சி என்பதோ சொல்லப்படவில்லை. அதாவது மொத்தத்தில் கயர்லாஞ்சி படுகொலை ஒரு படுகொலை மட்டுமே. அதில் சாதியோ, பெண்ணடிமைத்தனமோ இல்லை இல்லை இல்லைவேயில்லை என்பதே செப் 2008 தீர்ப்பின் சாரம்.

கயாலாஞ்சி வன்கொடுமையும் நீதிமன்றத்தின் சாதிப் பாசமும்

இவ்வாறாக, வழக்கு அடுத்தக்க்கட்ட நீர்த்துப் போதலுக்குச் சென்றது. சாதிவெறிப் படுகொலை வெறும் 'கொலை வழக்காக' மாறியது. மேல் முறையீடு செய்யப்பட்ட இந்த நீர்த்துப் போன வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் நடந்துவந்தது. இதோ இன்று அந்தக் 'கொலை வழக்கில்' தீர்ப்பு வந்துள்ளது. ஆறு சாதி வெறியர்களுக்கும் வழங்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுவிட்டது.

இதே போலத்தான் கிருத்துவர்கள் மீது ஒரிஸ்ஸாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தி வந்த பஜ்ரங் தள் இந்து பயங்கரவாதி தாராசிங்ன் மீதான வழக்கும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளது. போபால் வழக்கு பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

துரோகம் 2, 3.. என்று பட்டியலிட கீழ் வெண்மணியிலிருந்து, போபால் வரை பெரிய பட்டியலே உள்ளது.

இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாம். உலகின் மிகப் பெரிய துரோகிகளின் நாடு என்று பெயர் மாற்றுங்கள் அதுவே பொருத்தமாக இருக்கும்.

அசுரன்

தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வன்கொடுமைகளின் தொகுப்பு

நீதித்துறையை ஆள்கிறது இந்து மனச்சாட்சி!

காவிக் கறை படிந்த தீர்ப்புகள்

பில்கிஸ் தீர்ப்பு - சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியுமா எது உள்ளே எது வெளியே என்று?


சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்... அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்

Monday, July 12, 2010

கடைசியில் கோவிந்சாமி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்!!!

டைசியில் கோவிந்சாமி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். யார் இந்த கோவிந்சாமி? திருப்பூர் சி பி எம் கட்சியின் எம் எல் ஏதான் இந்த கோவிந்சாமி. பின்னலாடை நிறுவனத்தின் முதலாளி என்பது உபதொழில்.

எதற்கு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்? இதுக்கு முன்ன திருப்பூர் முதலாளிகளுக்கு தொழிலாளர் நலச் சட்டக் கெடுபிடிகளிலிருந்து சலுகை வாங்கித் தருவதாக சொல்லி அவர்களிடம் வசூல் வேட்டை நடத்தி மாட்டிக்கொண்டதால் அவர் நீக்கப்பட்டாரா? இல்லை. திமுகவிற்கு பாராட்டு விழா நடத்த முற்பட்ட குற்றத்திற்காகவே நீக்கப்பட்டுள்ளார்.

அப்போ இதுவரை அவர் திருப்பூர் முதலாளிகளுக்கு கோவணம் கட்டியதற்கு? தோழரே சி பி எம் ஒரு கம்யூனிஸ்டு கட்சியல்ல என்று சி பி எம்முக்கே தெரியும் என்பதால் முதலாளிகளுக்கு கோவணம் கட்டிய குற்றத்திற்கெல்லாம் கட்சியிலிருந்து நீக்க மாட்டோம். அப்படி நீக்குவதாயிருந்தால் செத்துப் போன ஜோதிபாசுவிலிருந்து இன்றைய கரத் வரைக்கும் மொத்த கட்சியையும் நீக்க வேண்டியிருக்கும், எனவே, எங்களது எதிர்கட்சிக்கு கோவணம் கட்டினால் மட்டுமே நீக்குவோம் என்று ஒரு மனசாட்சியின் குரல் கேட்கிறது….. எங்கேயோ கேட்ட குரல்….

சிபிஎம்-ன் பரிணாம வளர்ச்சி - படங்கள் நன்றி கலகம்:








திமுக அரசுக்குப் பாராட்டு விழா-சிபிஎம்மிலிருந்து கோவிந்தசாமி எம்.எல்.ஏ நீக்கம்

ஓவர் டூ திருப்பூர் கோவிந்சாமி:

சி.பி.எம்: புரோக்கர்களின் புகலிடம்
புதிய ஜனநாயகம் 2008

சி.பி.எம். கட்சியின் திருப்பூர் எம்.எல்.ஏ.வான கோவிந்தசாமி, பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தின் முதலாளி. திருப்பூரில் முதலாளிகள் வசிக்கும் அமர்ஜோதி கார்டன் பகுதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டைக் கட்டியுள்ள கோடீசுவரர். ""பாட்டாளிகளின் தோழர்'' என்று இவரை சி.பி.எம். கட்சியினர் சித்தரித்தாலும், கோடீசுவர கோவிந்தசாமியின் வர்க்கப் பாசம் எப்போதுமே முதலாளிகள் பக்கம்தான்.


எட்டு மணி நேரத்துக்கு மேல் ஒரு தொழிலாளியை வேலை வாங்கக் கூடாது என்று சட்டம் இருந்தாலும், திருப்பூரில் இச்சட்டமெல்லாம் செல்லுபடியாகாது. இச்சட்ட விரோதக் கொத்தடிமைத்தனத்தைத் தடுப்பது என்ற பெயரில், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அவ்வப்போது தொழிற்கூடங்களில் திடீர் சோதனை நடத்திப் பீதியூட்டுவதும், உரிய "கவனிப்பு'க்குப் பின் இச்சட்டவிரோதச் செயலைக் கண்டும் காணாமல் இருப்பதும் இங்கு வாடிக்கையாக நடக்கிறது.


தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளின் "தொல்லை'யிலிருந்து முதலாளிகள் நிரந்தரமாக விடுபட, தொழிலாளர் நலத்துறை அமைச்சரான அன்பரசனிடம் பேசுவதாகவும், அமைச்சருக்கு ஒவ்வொரு கம்பெனியும் ஒரு லட்ச ரூபாய் வீதம் கொடுக்குமாறும் சி.பி.எம். எல்.எல்.ஏ. கோவிந்தசாமி திருப்பூர் பனியன் கம்பெனிமுதலாளிகளிடம் பேரம் பேசி வசூல் வேட்டை நடத்தியுள்ளார். முதலாளிகளில் சிலரை அழைத்துக் கொண்டு அமைச்சரிடமும் பேசியுள்ளார். அதன் பின்னரும் அதிகாரிகளின் ரெய்டுகளும் "தொல்லை'களும் தொடரவே, முதலாளிகள் இதுபற்றி தி.மு.க. பிரமுகர்களிடம் விசாரித்தபோது, வசூலித்த பணம் அமைச்சருக்குப் போய்ச் சேரவில்லை என்பதையும், கோவிந்தசாமியே அதை அமுக்கி விட்டதையும் அறிந்து அதிர்ச்சியடைந்தனர். உடனே சி.பி.எம். கட்சித் தலைமையிடம் புகார் செய்தனர்.


கட்சித் தலைமை இதுபற்றி விசாரித்ததில், கோவிந்தசாமியின் புரோக்கர் வேலையும் கையாடலும் நிரூபணமானதால், வேறு வழியின்றி சி.பி.எம். கட்சியின் சட்டமன்றப் பேரவைத் தலைவர் பொறுப்பிலிருந்து அவரை நீக்கிவிட்டு, திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினரான பாலபாரதியை அப்பதவிக்கு நியமித்துள்ளது. சி.பி.எம். கட்சியின் மாநிலக் குழுவிலிருந்தும் கோவிந்தசாமி நீக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணத்தை கட்சி அணிகளிடமும் மக்களிடமும் விளக்காமல், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் கோவிந்தசாமி இப்பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சி.பி.எம். கட்சித் தலைமை பூசி மெழுகுகிறது.


இதுதவிர, கைத்தறி விற்பனைக்காக அரசு தரும் ஊக்கத் தொகையில் சுமார் 40 கோடிக்கு மேல் பொய்க்கணக்கு எழுதி தமிழக அமைச்சர் ராஜா சுருட்டியதாகவும், இதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து மாநில அரசிடம் கேள்வி எழுப்ப, தனக்குச் சாதகமான தணிக்கையாளரை நியமிக்குமாறு முதல்வர் கருணாநிதியிடம் பேசுமாறு அமைச்சர் ராஜா, கோவிந்தசாமியைத் தூது அனுப்பியதாகவும், இந்த புரோக்கர் வேலைக்காக கோவிந்தசாமிக்கு உரிய கமிஷன் தரப்பட்டதாகவும் செய்திகள் மெதுவாகக் கசிந்துள்ளன.


திருப்பூரில் கொத்தடிமைகளாக உழலும் தொழிலாளிகளின் அவலத்தைப் போக்க இந்த எம்.எல்.ஏ. அமைச்சரிடம் பேசவில்லை. எட்டுமணி நேரத்துக்கு மேல் வேலை வாங்கும் முதலாளிகளின் சட்டவிரோதச் செயல்களுக்கு எதிராகப் போராடவுமில்லை. மாறாக, தனது வர்க்கப் பாசத்தோடு முதலாளிகளின் கோரிக்கைகளுக்காக ""ரேட்'' வைத்து பேரம் பேச்சுவார்த்தை நடத்துகிறார் இந்த "காம்ரேடு'.


திருப்பூர் எம்.எல்.ஏ.வின் யோக்கியதை இப்படியிருக்க, கோவையில் நில மோசடி செய்து அம்பலப்பட்டு வழக்கு மன்றத்துக்கு நடந்து கொண்டிருக்கிறார் சி.பி.எம். கட்சியின் கவுன்சிலரான பத்மனாபன். இவர் நிலங்களை வாங்கி அவற்றை வீட்டுமனைகளாக்கி விற்கும் ரியல் எஸ்டேட் தொழிலைச் செய்து வரும் லட்சாதிபதி. கோவை வடக்கு மண்டலத் தலைவராக உள்ள இவர், மூன்று முறை கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முக்கியப் புள்ளி.


கோவை அருகே காளப்பட்டியிலுள்ள மருதாசலம் என்பவரது நிலத்தை வீட்டுமனைகளாக்கி விற்றுத் தருவதாகக் கூறி, தன் பெயருக்கு அதிகாரப் பத்திரம் எழுதிக் கொண்டு, சார் பதிவாளர் அலுவலகத்தில் நிலத்தின் மதிப்பைக் குறைத்துக் காட்டி தன் பெயரிலும் தனது மனைவி மற்றும் உறவினர்கள் பெயரிலும் கிரய சாசனம் செய்து கொண்டு, மனைகளைப் பல லட்சங்களுக்கு விற்று மருதாசலத்தை மோசடி செய்துள்ளார் பத்மனாமன். இதற்கெதிராக மருதாசலம் வழக்குத் தொடுக்க, பத்மனாபன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் வழக்கு மன்றத்துக்கு நடந்து கொண்டிருக்கின்றனர். கம்யூனிஸ்ட் கட்சிக்காரரே இப்படி மோசடியில் ஈடுபட்டதைக் கண்டு கோவை நகர மக்களே காறி உமிழ்கின்றனர். ஆனாலும், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது, சி.பி.எம். கட்சித் தலைமை.


சி.பி.எம். கட்சிக்குள் இன்னும் ஏராளமான கோவிந்தசாமிகளும் பத்மனாபன்களும் தலைவர்களாகவும், பிரமுகர்களாகவும் உள்ளனர். இத்தகையோர் மீது பாரதூரமாக நடவடிக்கை எடுத்தால் கட்சியே கலகலத்துப் போய் விடும் என்று கட்சித் தலைமை அஞ்சுகிறது. எனவேதான், குறிப்பிட்ட வரம்புக்கு மேல் நடவடிக்கை எடுக்க முடியாமல் கட்சித் தலைமை தடுமாறுகிறது.


மே.வங்கம் சிங்கூர் நந்திகிராமத்தில் மக்கள் மீதே பயங்கரவாத வெறியாட்டம்; சமூக விரோதிகளே கட்சியின் பிரமுகர்கள்; முதலாளிகளும் ஊழல் பெருச்சாளிகளுமே உள்ளூர் தலைவர்கள் என்று சீரழிவில் புதிய பரிமாணத்தை எட்டி மே.வங்க சி.பி.எம். கட்சி "புரட்சி' செய்து கொண்டிருக்கிறது. அதையும் விஞ்சும் வகையில் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருக்கிறது, தமிழக சி.பி.எம். கட்சி.

· தனபால்

அசுரன்

மானங்கெட்ட சிபிஎம்மும், விடுதலையின் விடிவெள்ளி பகத்சிங்கும்!!

பாஸிஸ்டு CPMமும், லெனின் சொல்லும் ஜனநாயக புரட்சியும்!!!!

கம்முனுஸ்டு மிஸ்டர் மீட்டிங்கு, ஈழப் பிரச்சினைக்கு தீர்வு சொல்றாருடோய்…. !!!

லால்கார் மேற்கு வங்கத்தில் ஒரு புரட்சி பூமி!

நண்பர் அத்வானியும், காம்ரேடு சுஸ்மா சுவராஜும்!!!

மகளிர் சுய உதவிக் குழுக்களா? கந்துவட்டி புரோக்கர்களா?






வீட்டு வேலை செய்யும் அக்கா ஒருவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவரது குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை, குழந்தைகளின் படிப்பு என பல கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தேன். கடுமையாக உழைக்கும் அந்தப் பெண் எனக்குத் தெரிந்து காலையில் 7 மணிக்கு அவரை அந்தப் பகுதியில் பார்த்தால் இரவு பத்து பத்தரை வரை கூட அங்குதான் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருப்பார். மூன்று/நான்கு வீடுகளில் வேலை செய்யும் அந்தப் பெண் மாதம் 3000திலிருந்து 4000ரூபாய் வரை சம்பாதிக்கிறார். அவரது சம்பத்தியத்தை நம்பியே அவரது குடும்பம் உள்ளது. இதில்தான் படிப்புச் செலவு, வீட்டு வாடகை, மருத்துவச் செலவு என அனைத்தையும் செய்து கொள்கிறார்கள்.



இவர்களின் அன்றாடச் செலவுகளுக்கும், தீடீர்ச் செலவுகளுக்கும் இவர்களது சம்பாத்தியம் போதுவதில்லை. வங்கிகளோ இவர்களுக்கு கடன் கொடுப்பது இல்லை. இவர்களின் ஒரே புகலிடமாக சமீப காலம் வரை இருந்து வந்தது ஏலச் சீட்டுக்கள் எனப்படும் சிட்பண்ட்ஸ். அதற்கும் இப்போது ஏகப்பட்ட போடி என்று ஆகிவிட்டது. இன்னிலையில் இது போன்ற எளிய உழைக்கும் மக்களின் உடனடித் தேவைகளுக்கு கடன் கொடுத்து அவர்களது உழைப்பை வட்டியின் மூலம் சுரண்டுவதற்கு என்றே உலக வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டது மகளிர் சுய உதவிக் குழுக்கள். இது தவிர்த்து கிராம சந்தையை அபகரிக்கும் திட்டங்கள், மகளிர் சுய உதவிக் குழு மூலம் அமைப்பாக உள்ள பெண்களை அந்தப் பகுதி தொழிலாளர்களுக்கு எதிராக திருப்பி விடுவது (ஓசூர் டி வி எஸ்) உள்ளிட்ட உலக வங்கியின் பல்வேறு பயன் நோக்குகளை மகளிர் சுய உதவிக் குழு கொண்டுள்ளது.

இதன் மூலம் கடன் பெறுவது இவர்களுக்கு கிடைக்கும் எளிய வடிவிலான கடனாக உள்ளது. ஆனால் வட்டியோ கந்துவட்டியை மிஞ்சுகிறது. அந்த அக்கா சொன்ன கணக்குப்படி 10,000 ரூபாய்க்கு ஒன்றரை வருடம் வாரத் தவணை முறையில், வாரம் ஒன்றுக்கு 250 ரூபாய் கட்டுகிறார்கள். அதாவது வட்டியும் அசலும் சேர்த்து ஒரு மாதத்திற்கு 1000 ரூபாய்(4*250). ஒரு வருடத்திற்கு 12000 ரூபாய். ஆஹ, ஒன்றரை வருடத்திற்கு 18000 ரூபாய் வட்டியும் அசலுமாகக் கட்டுகிறார் அந்த உழைக்கும் பெண். இந்தப் பகுதியில் மட்டும் பத்துக் கணக்கில் சுய உதவிக் குழுக்கள் உள்ளன. அவற்றின் ஒரே தொழில் வட்டிக்கு விடுவது மட்டுமே. ஆரம்பத்தில் உழைக்கும் பெண்களின் தொழில் முனைவுக்கான ஒரு அமைப்பு என்று சொல்லப்பட்டது இன்று அவர்களின் குருதி குடிக்கும் வடிவமாக தன்னை வெளிப்படுத்தியுள்ளது.

10,000 ரூபாய் என்பது இந்த பதிவைப் படிக்கும் பலருக்கு வெகு சொற்பமான ஒரு தொகை. ஆனால் இந்தத் தொகையை அந்தப் பெண் ஒன்றரை வருடங்கள் உழைத்து, 8000 ரூபாய் வட்டி கட்டி அடைக்கிறார். இதுதான் இந்திய உழைக்கும் மக்களின் நிலை. சப் பிரைம் கடன்கள் மூலம் அமெரிக்க ஏழை மக்களை அதிக வட்டிக்குச் சுரண்டின நிதி மூலதன நிறுவனங்கள். இங்கு, இந்திய உழைக்கும் பெண்களை சுரண்டுவதற்காகத்தான் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பின்னிருந்து கொண்டு தமது வட்டித் தொழிலை நடத்துகின்றன பெரிய பெரிய வங்கிகளும், நிதி நிறுவனங்களும்.

இந்தியா பழி வாங்கும்*!! வட்டியும் முதலுமாக...

*(இந்தியா பழி வாங்கும் - துரை. சண்முகம் கவிதை ஒன்றின் தலைப்பு மற்றும் மையக் கருத்து)

அசுரன்

மகளிர் சுய உதவிக் குழுக்கள் : பலனடைந்தது யார் பன்னாட்டு நிறுவனங்களா? அடித்தட்டுப் பெண்களா?



நுண்கடன் மிகப்பெரும் கொள்ளை


நுண்கடன் - நுண்தொழில் : ஏழைகளைக் கொள்ளையிடும் ஏகாதிபத்திய சதி!

இந்திய அரசியலின் இழிநிலை: ஆ.விகடனில் தோழர் மருதையன் !

பெருந்தொழில் நிறுவனங்களின் 'சமூகப் பொறுப்புணர்வு" ஓநாய்களின் திடீர் கரிசனை

வட்டமிடும் பன்னாட்டு நிறுவனங்கள் இரையாகும் கிராமப் பொருளாதாரம்

பெரியார் புரா : தி.க.வீரமணியின் ஏகாதிபத்திய சேவை

தேர்தல் கூட்டணிகள்:சிகரத்தைத் தொடும் பொறுக்கி அரசியல்

Saturday, July 10, 2010

சிபிஐயிடம் மாட்டிக் கொண்டனர் இந்து பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்ன் முக்கியத் தலைவர்கள்!




ஜ்மீர் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள இந்து பயங்கரவாதி தேவேந்திர குப்தா சிபிஐ அதிகாரிகளிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளான். அதன்படி, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இரு ஆர் எஸ் எஸ் முன்னணித் தலைவர்களான அசோக் வார்செனே மற்றும் அசோக் பெரே ஆகியோர் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து லக்னோ சித்தாப்பூர் பகுதிகளில் தங்க வசதி செய்து கொடுத்துள்ளனர். இது குறித்து சின் என் என் ஐபிஎன் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு இங்கே.




(பயங்கரவாதிகளின் அணிவகுப்பு)

ஏற்கனவே, தேவேந்தர் குப்தா தீவிரமான ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்று ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் சாந்தி தாரிவால் தெரிவித்திருந்தார். ஏதோ தனது அணிகள்தான் உணர்ச்சிவசப்பட்டு குண்டு வைத்துவிட்டார்கள் விடுங்கள் என்பது போல கதை விட்டு வந்த ஆர் எஸ் எஸ் பயங்கரவாத கும்பல் இப்போது தனது முன்னணி தலைவர்களே மாட்டிக் கொண்டுள்ளது பற்றி வாயை மூடி மௌனம் காக்கிறார்கள்.

இதே அஜ்மீர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தவுடன் அரசு சொன்னது என்ன தெரியுமா? முஸ்லீம் பயங்கரவாதிகளே காரணம் என்று சொன்னது. Ajmer blast trail leads to Hurriyat


(மலேகான் குண்டு வெடிப்பில் இந்து பயங்கரவாதிகள்)

ஏற்கனவே, 2009ல் தீபாவளிக்கு முந்தைய நாள் கோவாவில் இந்துக்கள் கூடும் இடத்தில் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் இருவர் குண்டு வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது அது தவறுதலாக வெடித்து கொல்லப்பட்ட சம்பவத்தை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளவும். கடந்த சில வருடங்கள் முஸ்லீம்கள் மீது பலி போடும் வகையில் வேசமிட்டுக் கொண்டு ஆர் எஸ் எஸ் இந்து பயங்கரவாதிகள் நடத்திய பல்வேறு குண்டு வெடிப்புகள் தொடர்ந்து வெளிப்பட்டு வருகின்றன. அவற்றில் இதுவும் ஒன்று. ஆனாலும், ஆர் எஸ் எஸ் ஒரு கலாச்சார அமைப்புதான் என்று இன்னமும் சில நல்லவர்கள் சொல்லி வருகிறார்கள். இந்துவோ அல்லது வேறு எதுவோ மத அடிப்படைவாத பயங்கராவாதிகள் யாராயிருந்தாலும் நிராகரிக்கப்பட வேண்டும், சமூகப் புறக்கணிப்பு செய்யப்பட வேண்டும்.

அசுரன்

தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!

வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!


ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!

Wednesday, July 07, 2010

கௌரதைக்கு கொலை செய்வது மற்றும் அதைத் தடுப்பதற்கொரு குன்சான திட்டம்!



கௌரதைக்கு கொலை செய்வது என்றால் என்ன? சாதி மீறி திருமணம் செய்து கொள்ளும் காதலர்களை, சாதி வெறி பிடித்தவர்கள் தமது கௌரவத்தை காக்கும் பொருட்டு 'வேறு வழியின்றி' கொடூரமாக கொல்வதற்குப் பெயர்தான் கௌரவக் கொலைகள்(honor killing). 'வேறு வழியின்றி' செய்யப்படும் இப்படிப்பட்ட கொலைகளுக்கு எதிராக சட்டம் கொண்டு வரப் போகிறார்களாம் (அடக் காலக் கொடுமையே... இதுக்கெல்லாம தண்டன?).




'கௌரவக் கொலைகள்' இப்படித்தான் உச்ச நீதிமன்றத்திலிருந்து, ஊடகங்கள் வரை அனைத்தும் எழுதுகின்றன (கரெக்டாத்தான் சொல்றாய்ங்க...). இவர்கள் அத்தனை பேரும் ஒரு விசயத்தை மிகத் தெளிவாக பேசுகிறார்கள். இது போல கொலை செய்வதுதான் தவறு, மற்றபடி சாதி வெறிப்பிடிப்புடன் இருப்பது என்பது கௌரவமான ஒரு பண்பாடு என்பதை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறார்கள் (நல்ல விசயந்தான..). சமீபத்தில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றில் கூட தனது சகோதரி சாதி மீறி திருமணம் செய்து கொண்டதற்காக கொலை செய்த சகோதரன் குடும்ப கௌரவத்திற்க்காகவே வேறு வழியின்றி அவ்வாறு செய்தான் என்று அவனை மறைமுகமாக பாராட்டியது இதற்கு ஒரு உதாரணம் (சரியான தீர்ப்புய்யா...).





ஆகவே மக்களே, அரசும், 'ஜனநாயகத்தின்' இன்னொரு தூணான ஊடகங்களும், மக்களின் கடைசிப் புகலிடமாம்(??) நீதிமன்றங்களும் அறிவித்துள்ளபடி சாதி வெறியை பறை சாற்றி நீங்களும் ஒரு 'கௌரவ'மான குடிமகன் என்ற தகுதியை பெருமையுடன் அறிவிக்க வேண்டும். மேலும், உங்களது 'கௌரவ'த்தின் அடையாளமான சாதி வெறியை கொலை செய்வது போன்ற கொடூரமான நடவடிக்கைகள் மூலம் அல்லாமல், நாசூக்கான பல்வேறு வழிமுறைகள் மூலம் வெளிப்படுத்த வேண்டும் (கொஞ்சம் கஷ்டம்தான் பழகிக்கிறோம்...).


(தப்பா எடுத்துக்காதீங்க.. பூனூல் கசங்கிறக் கூடாதுன்னு எந்திரிச்சி நிக்குறாரு...)

ஒரு வேளை உங்களிடம் வெளிப்படுத்தத் தகுதியான அளவிற்கு சாதி வெறி இல்லை என்றாலோ, அல்லது நீங்கள் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்ற வகையில் சாதிப் பெருமை என்று எதையும் சொல்லிக் கொள்ள இயலாத துரதிருஷ்டசாலி 'அகௌரவ'க் குடிமகனாகவோ இருப்பின், அதுதான் உங்களது தலைவிதி என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும், 'கௌரவ' சாதி வெறியர்களின் சாதிப் பெருமைகளுக்கு தலை வணங்கி அவற்றை மதித்து நடக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் 'கௌரவக்' கொலைகளையும் நாம் தடுத்து விடலாம் அல்லவா? மேலும் 'கௌரவக்' கொலைகளை சாதி வெறிக் கொலைகள் என்று சொல்பவர்களையும், சாதி வெறிப் பண்பாடுகளை தட்டிக் கேட்பவர்களையும் களையெடுக்கும் சட்டங்களையும் கொண்டு வர வேண்டும் (இது மாதிரி உருப்படியான ஐடியாவக் கொடுக்கிறத விட்டுப்பிட்டு சட்டம் போடுறாய்ங்களாம்...)

படங்கள் நன்றி: திங்கள் சத்யா

'அகௌரவ'க் குடிமகன் அசுரன்

Related Links
தலித் வன்கொடுமைகள்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்

மொசக்குட்டிகளும், கழுதைபுலிகளும் - சந்துத்துவத்தின் கதை

Related Posts with Thumbnails