TerrorisminFocus

Tuesday, December 06, 2011

அகண்ட பாரதம் பேசும் ஆர் எஸ் எஸ் சொறிநாய்கள் முல்லைப் பெரியாறு என்றால் மூடிக் கொண்டு போவதேன்?


யப்பனை தரிசிக்கச் சென்ற தமிழக பக்தர்கள் கேரளாவில் தாக்கப்பட்டுள்ளார்கள். தாக்கியவர்களை தண்டிக்க ஐயப்பன் அவதாரம் எடுத்து வரவேண்டாம், குறைந்த பட்சம் இந்துக்களுக்கு, இந்து ராஜ்யம் காண அகண்ட பாரதம் பேசும் ஆர் எஸ் எஸ் அடிமடையர்களாவது குரல் கொடுத்திருக்க வேண்டாமா?கொடுக்கவில்லையே? ஏன்? இவர்களின் அகண்ட பாரதத்தில் தமிழர்களுக்கு இடமில்லையா? அல்லது கேரளாவில் தமிழர்களை தாக்கியதே ஆர் எஸ் எஸ் கோமாண்டிகள் என்பதால் வாயை மூடிக் கொண்டார்களா?

‘இந்து’ பக்தர்களை தாக்கியவர்களை எதிர்க்க வக்கற்ற இந்த சொறிநாய்கள் பாபர் மசூதி இடித்த இடத்தில் ராமர் கோயில் கட்டு என்று ஆர்பாட்டம் செய்து கைதாகியுள்ளனர். ‘இந்து’ தமிழ் பக்தர்களின் வழிபடும் உரிமையை தடுத்ததை எதிர்க்க வக்கற்றவர்கள் சிரிரங்கம் பார்ப்பனர்களின் வர்ணாஸ்ரம் கொழுப்பேறிய கோயில் உலா சடங்கிற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டுகின்றனர். ஆக, ஆர் எஸ் எஸ்ன் அகண்ட பாரத கோமனத்தின் அடிமடி ஓட்டையிலே கேரள முல்லை பெரியாறு கிழிந்து தொங்குகிறது அதை மூடி மறைக்கக் கூட முயற்சி செய்யாமல் மதவெறி, சாதி வெறி பேசி வளம் வருகிறார்கள் சொறிநாய்கள்.

இங்கு ஒரு விசயம் கவனிக்க வேண்டியுள்ளது. கேரளாவில் வாழும் தமிழர்களையோ அல்லது தமிழகத்தில் வாழும் கேரள மக்களையோ யாரும் தாக்கவில்லை. சாதாரண மக்கள் பல்வேறு சமூக நடவடிக்கைகளின் ஊடாக மொழி, இன, மத பேதமின்றி இயல்பாக பழகியே வருகிறார்கள். இவற்றை உடைத்து ஒரு மோதல் நடக்க வேண்டுமென்றால் அது அமைப்பு வழிப்பட்ட முறையினால் மட்டும்தான் நடக்க இயலும். அப்படித்தான் குஜராத்-ஒரிஸ்ஸா-மும்பை இனவெறி தாக்குதல்களாகட்டும், அல்லது காங்கிரசு நடத்திய பஞ்சாப் படுகொலைகளாகட்டும் நடந்துள்ளன.

அத்தகைய அமைப்புகளாக அங்கு மொழி வெறி கிளப்பி சதி வேலைகள் செய்வதில் முன்னணியில் இருப்பவர்கள் ஆர் எஸ் எஸ் இந்து பயங்கரவாதிகளும், காங்கிரசும். இவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு சி பி எம்மு மொழி வெறி கிளப்பி வருகிறது. தமக்கு வோட்டுப் பொறுக்க வசதியான கேரளாவில் மொழி வெறி கிளப்பி தமிழர்களை தாக்கும் இக்கட்சிகள், இங்கு தமிழர்களின் நலன் என்று ராமர் கோயிலையும், கூடங்குளம் அணு உலையையும் முன்னிறுத்தி ஏய்க்கின்றனர்.

மதவெறியும், சாதிவெறியும், மொழி வெறியும் தான் ஆர் எஸ் எஸ் போன்ற இக்கட்சிகளின் மூலமந்திரம். மக்களை பிரித்து ஏய்க்க இது போல தகிடு தத்தம் செய்யும் தேசிய கட்சிகளையும், மத வெறி பயங்கரவாதிகளையும் ஆப்படித்து அடித்து விரட்டினால் மட்டும்தான் முல்லை பெரியாறு விசயத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முடியும். அதை செய்ய முதுகெலும்புள்ளவர்கள் அணி திரள வேண்டியுள்ளது.

அசுரன்

முல்லைப் பெரியாறு: காங் – பா.ஜ.க – சி.பி.எம் கும்பல்களை முறியடிப்போம்!

முல்லைப் பெரியாறு அணை: வரலாறும், உண்மையும் – வீடியோ!

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்று கேரள அரசு வழக்கறிஞர் அறிக்கை

Mullai Periyaru – Environmental impact of Dams and Kerals’s PR Machine

Friday, November 18, 2011

அப்பன் குதிருக்குள் இல்லை - ஆர் எஸ் எஸ்ன் சுய வாக்குமூலம்!!!

குண்டு வைத்து கலவரம் உருவாக்கி, நாட்டை கூறு போட்டு, மக்களை மோத விட்டு ரத்த ஆற்றில் அரசியல் ஆதாயம் தேட சதி செய்த ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள்தான் மாலேகான் உள்ளிட்ட பேர்வாதி குண்டு வெடிப்புகளை செய்தவர்கள் என்பது கடந்த சில ஆண்டுகளில் அம்பலமானது. எங்கே தன் பெயர் தான் கெட்டுவிட்டது, வழக்குகளிலிருந்தாவது தப்பிவிடுவோம் என்று பயந்த ஆர் எஸ் எஸ் பயங்கரவாத அமைப்பு மாட்டிக் கொண்டவர்களுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று பொய் சொல்லி எஸ்கேப் ஆனது அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆயினும் பிற்பாடு முதலில் சிவசேனாவும், பிறகு பாஜகவும், பிறகு ஆர் எஸ் எஸ்ம் ஒவ்வொருவாராக குண்டு வைத்தவர்களுக்கும், குண்டு வைக்கும் போது செத்தவர்களுக்கும் ஆதரவு(சம்பந்தமில்லை ஆனா ஆதரிப்போம் – இப்படி சொல்வதற்குப் பதில் ரெண்டு சட்டி #$#% சாப்பிடலாம்) தெரிவித்தனர்.

பொய் குற்றச்சாட்டின் அடிப்படையில் முஸ்லீம் அமைப்புகளும் கூட தடை செய்யப்பட்டன. ஆனால் ஆர் எஸ் எஸ்ன் நேரடி தொடர்பு பல குண்டு வெடிப்புகள், சதிகளில் பல்வேறு ஆதரங்களுடனும், சுய வாக்குமூலங்களாவும் வெளி வந்துள்ளன என்ற போதும் இந்த பயங்கரவாத அமைப்பு இன்னும் தடை செய்யப்படவில்லை. இந்நிலையில், உண்மையான சதிகாரர்கள் (குண்டு வைத்த சுவாமி அசெமானந்தாவின் வாக்குமூலம்) இந்து பயங்கரவாதிகள் என்பதால் மலேகான் குண்டு வெடிப்பு நடந்தவுடனே வழக்கம் போல கைது செய்யப்பட்டு 5 வருடம் சிறையில் வைக்கப்பட்டிருந்த முஸ்லீம்களை இப்போது பெயிலில் விடுவித்தது நீதிமன்றம்.

நேற்று வரை குண்டு வைத்த இந்து பயங்கரவாதிகளுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று கூறி வந்த ஆர் எஸ் எஸ் பயங்கரவாத அமைப்போ இப்போது கைது செய்யப்பட்ட இந்து பயங்கரவாதிகளையும் வெளியே விடுங்கள் என்று சொல்கிறது. அப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு சொல்வாங்களே அது மாதிரி இல்லை?

நல்லவன் எனில் என்ன செய்ய வேண்டும்? நாட்டுக்கு நேர்மையானவன் எனில் என்ன செய்ய வேண்டும்? மக்கள் மீது அன்புள்ளவன் எனில் என்ன செய்ய வேண்டும்? குண்டு வைத்து மாட்டிக் கொண்டுள்ளவனை நொங்கை பிதுக்கி உண்மையை வரவைத்து தண்டனை கொடுங்கள் என்றுதானே சொல்ல வேண்டும்? ஆனால் ஆர் எஸ் எஸ் காவி சொறிநாய் என்ன சொல்கிறான் என்றால், குற்றம் செய்தவனையும் வெளியே விடு என்கிறான். உண்மையில் இவனை வெளியே விட்டு வைத்திருப்பதுதான் நாம் செய்கின்ற பெரிய தப்பாக போய்க்கொண்டிருக்கிறது.


அசுரன்

இந்தியா ஒரு கார்பரேட், இந்து அரசு ! – அருந்ததிராய், கரண் தபார் நேருக்குநேர் !

மாட்டிக் கொண்ட திருடனும், சந்தைக் கடை ரவுடியும் - ஒரு ஆர்எஸ்எஸ் காவி பயங்கரவாதியின் கதை!!

முற்றும் கழண்ட டவுசர்!! அடடே ஆர் எஸ் எஸ் அம்மணக்கட்டை!!!

தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!

வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!

ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!

சிபிஐயிடம் மாட்டிக் கொண்டனர் இந்து பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்ன் முக்கியத் தலைவர்கள்!

நாட்டை ஆள்வது ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகளே மற்றுமொரு நிரூபணம்!!

Tuesday, August 09, 2011

நாட்டை ஆள்வது ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகளே மற்றுமொரு நிரூபணம்!!

(இந்து-காவி பயங்கரவாத கும்பலின் கொடி)

ஒருவனது மூளை ஆர்எஸ்எஸ் நோயால் பீடிக்கப்பட்டுள்ளதா என்பதை சில வசனங்களின் மூலம் புரிந்து கொள்ளலாம். அவை 'இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் இந்துக்களுக்கு நீதியில்லையே', 'சிறுபான்மையினரை குளிர்விக்கும் அரசியல் செய்கிறார்கள்', 'பொலிடிகலி இன்கரக்ட்', 'இந்துக்களை கொன்ற கஷாபை இன்னும் கொல்ல முடியவில்லை? இங்கு மறைமுகமாக ஆட்சி செய்வது முஸ்லீமே'.

இந்த வசனங்களுக்கு எதிர் கேள்வியாக சில விவரங்களை முன் வைத்தால் மேற்படி நபர்கள் காற்றில் கரைந்து காணாமல் போய்விடுவார்கள். இந்து என்று இவன் சொல்லுபவர்களில் நாடு முழுவதும் வியாபித்துள்ள பெரும்பான்மை தாழ்த்தப்பட்ட மக்களை சாதியின் பெயரால் ஒடுக்குவதும் இழிவுபடுத்தும் ஆர்எஸ்எஸ்ன் உயிர்நாடியாய் விளங்கும் ஆதிக்க சாதிவெறியர்கள்தான் என்பதையோ, அத்வானி, மோடி போன்ற பயங்கரவாதிகள் நாட்டின் தலைவர்களாகவே உலா வரும் போது கஷாப் குறைந்த பட்சம் சிறையில் இருப்பதுதான் இங்கு ஒப்பிடத்தக்கது என்பதையோ கூட பேசத் தேவையின்றி சமீபத்தில் சில விசயங்கள் நடந்துள்ளன.

குஜராத்தில் முஸ்லீம் மக்களை இனப்படுகொலை செய்தான் நரவெறி பிடித்த பாசிசப் சொறிநாய் மோடி. இப்படுகொலையை விசாரிக்க பல அமைப்புகள் பல மட்டங்களில் உருவாக்கப்பட்டு கடைசியில் அது சிறப்பு புலனாய்வு குழுவிடம்(SIT) கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இக்குழுவோ இப்படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆர்எஸ்எஸ் காவி பயங்கரவாதிகளுக்கு விசாரணை விவரங்களை அவ்வப்போது அனுப்பி வைத்துள்ளது. இதன் மூலம் சாட்சிகளையும், ஆதாரங்களையும் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள் அழிப்பதற்கும், ஒழிப்பதற்கும் உதவியுள்ளது.

பெரிய யோக்யவான் போல வேசம் போடும் காவி சாக்கடையான் குருமூர்த்திக்கும் இதில் தொடர்பு உள்ளது. சிறப்பு புலனாய்வுக் குழு தனது விசாரணை விவரங்களை இந்த சொறிநாய்க்கும் அனுப்பியுள்ளது. அவன் இதை வழக்கறிஞர் ராம் ஜெத்மாலினிக்கு அனுப்பி வைத்து குஜராத் இனப்படுகொலை குற்றவாளியான அமித் ஷாவிற்கு உதவியுள்ளான். பெரிய நன்னூல் போல ஹிந்துவிலும், துக்ளக்கிலும் கழிந்து தள்ளும் குருமூர்த்தி சொறிநாய்தான் இப்படி கிரிமினல்தனமாக செயல்பட்டுள்ளான். இப்படியெல்லாம் விசாரணை நடத்திதான் இவர்கள் யார் பயங்கரவாதி யார் நல்லவன் என்று தீர்ப்பு வழங்குகிறார்கள்.

குஜராத் வழக்கு விசாரணை சிறப்பு புலனாய்வுக் குழு நீர்த்து போகச் செய்கிறது என்றும், இனப் படுகொலையின் போது இந்து மதவெறியர்களை போலீஸு கண்டுகொள்ள வேண்டாம் என்று மோடி ஆணையிட்டதையும் ஐஏஎஸ் அதிகாரி பாட் (இனப்படுகொலையின் போது அவர் உளவுத் துறையில் இருந்தார்) அம்பலப்படுத்தினார் முன்பு. அதற்காக அவர் இப்போது சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மீது கிரிமினல் வழக்கும் பதிவு செய்துள்ளது மோடி அரசு.

இவையெல்லாமே காங்கிரசு மத்தியில் ஆளும் போதுதான் நடக்கின்றன. காங்கிரசாகட்டும், பாஜகாவாகட்டும் இவர்கள் கட்சி வேறுபாடின்றி ஆர்எஸ்எஸ் இந்து வெறி சித்தாந்திகளாகத்தான் உள்ளனர் என்பதும், இந்திய அரசு அமைப்பு என்பதே ஆர்எஸ்எஸ்ன் மனசாட்சிதான் என்பதையும் பல முற்போக்கு, ஜனநாயக, புரட்சிகர சக்திகள் தொடர்ந்து சொல்லி வருகின்றன. அதுதான் இப்போது இன்னும் வலுவாக நிரூபணமாகியுள்ளது.

அன்று 'இரும்பு' மனிதன் வல்லபாய் படேல் என்கிற நேருவின் அல்லக்கை தன்னை ஆர்எஸ்எஸ் வெறியனாக அறிவித்துக் கொண்டான். இன்றோ நரசிம்மராவ் இந்தியா என்பது இந்து தேசம்தான் என்று ஆர்எஸ்எஸ் குரலில் கூவிய செய்தி வெளிவருகிறது. பாபர் மசூதி தீர்ப்பு, ஒரிஸ்ஸா கந்தமால் பஜ்ரங்தள் பயங்கரவாதி தாராசிங் வழக்கு, மும்பை இனப்படுகொலை வழக்கு, குஜராத் இனப் படுகொலை வழக்கு, ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள் நேரடியாக தொடர்பு கொண்டுள்ள பல்வேறு குண்டு வெடிப்பு வழக்குகள், ஆர்எஸ்எஸ் பாஸ் இந்திரேஸ் குமார் குண்டு வெடிப்புகளில் தொடர்பு கொண்டுள்ளது பற்றிய வழக்கும் இன்னும் பல்வேறு வழக்குகளில் இந்து மதவெறி பயங்கரவாத அமைப்பான ஆர்எஸ்எஸ்ஐ இந்த அரசு சுட்டு விரல் நீட்டிக் கூட கண்டித்ததில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

ஏனேனில் நாட்டை ஆள்வது ஆர்எஸ்எஸ் காவி சொறி நாய்கள்தான். இவர்களின் நோக்கம் நாட்டை பன்னாட்டு முதலாளிகளுக்கு கூறு போட்டுக் கொடுத்துவிட்டு கமிஷன் காசில் பெரும்பான்மை மக்களைச் சுரண்டி வாழ்வதே ஆகும். இந்த 'நல்ல' நோக்கத்தைத்தான் 'இந்து' என்றும் 'தேசம்'என்றும் 'பாரத மாதா'என்றும் சொல்லி ஏய்க்கிறார்கள். மாமா வேலை செய்யும் இந்த தேசத் துரோக காவி வெறியர்களுக்கு சட்டமும், அரசும், நீதிமன்றமும் தண்டனை வழங்கிவிடும் என்று நம்புவது காக்கா உட்கார பனம் பழம் விழும் என்று நம்பி காத்திருப்பது போலத்தான்.எனவே, வீதிகளில் சொறிநாய்களுக்கு கிடைப்பது என்னவோ அதனை இவர்களுக்கு கொடுக்கும் வகையில் மக்களை அணிதிரட்டுவதே இப்போது அவசர அவசியத் தேவையாய் உள்ளது.

அசுரன்


இந்தியா ஒரு கார்பரேட், இந்து அரசு ! – அருந்ததிராய், கரண் தபார் நேருக்குநேர் !
  
மாட்டிக் கொண்ட திருடனும், சந்தைக் கடை ரவுடியும் - ஒரு ஆர்எஸ்எஸ் காவி பயங்கரவாதியின் கதை!!

 முற்றும் கழண்ட டவுசர்!! அடடே ஆர் எஸ் எஸ் அம்மணக்கட்டை!!!

தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!

வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!

ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!



சிபிஐயிடம் மாட்டிக் கொண்டனர் இந்து பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்ன் முக்கியத் தலைவர்கள்!


18 வருசமா ஆட்டையப் போட்டவங்களும், கடைசியா மாட்டிக்கிட்டவனும்!!

அவனவன் எடுக்குற முடிவு - வாயில ஈ போனா எனக்கென்ன பீ போனா எனக்கென்ன?

Thursday, August 04, 2011

அவனவன் எடுக்குற முடிவு - வாயில ஈ போனா எனக்கென்ன பீ போனா எனக்கென்ன?

வெளிய போற எடியூரப்பாவுக்கு பதில் அவனோட அல்லக்கை கர்நாடகா 'பன்னீர்செல்வம்' சதானந்த கௌடா என்ற ஒரு விளக்கெண்ணைய் மண்டையன் முதலமைச்சராகப் போறானாம். அவன் வந்து உக்காரதுக்கு முன்னாடியே அவன பத்தின ஊழல் செய்தி வந்திருச்சி.

ஆன வரும் பின்னே மணியோச வரும் முன்னேங்கற மாதிரி, பிக்காலிப் பசங்க அத்தனை பேரும் பொறுக்கிகளா இருக்கானுங்க இதுல நல்ல பொறுக்கியாப் பாத்து பொறுக்கி எடுத்து வோட்டுப் போடனும் என்று சில பேரு பொறுக்கித்தனமா சொல்லிட்டுத் திரியுறானுங்க.

ரப்பர் ஸ்டாம்பும் அதன் மேனுபேக்சரரும்


இது ஒரு பக்கமென்றால் இன்னொரு பக்கம், கல்மாடி என்ற களவாடிய காமென்வெல்த் பொறுப்புள உக்கார வைச்சது பிரதமர்னு சொல்லி பாஜக குத்தாட்டம் போட்டது, பதிலுக்கு பாஜக எம்.பி. கல்மாடிய ரெகமண்டு பன்னதயும், பதிலுக்கு அந்த எம்.பி.ய கல்மாடி ரெகமெண்ட் செஞ்சதையும் அம்பலப்படுத்தியது காங்கிரசு.

திருடா... திருடா...

சுருக்கமாச் சொல்லனும்னா, பிரதமர் மன்னு மோகன் சிங்கோட வார்த்தயத்தான் கடன் வாங்கனும். இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நாக்கப் பிடுங்கற மாதிரி பாஜகவினர் கேள்வி கேப்பாங்களே என்ன செய்யப் போறீங்க என்று மன்னுவிடம் கேட்டதற்கு அவன் சொன்னான், "பாஜக மட்டும் யோக்யமா, அவனும் என்ன மாதிரி ஊரக் கொள்ளையடிச்ச நாதாரிதாங்கறத பேசுவோம்" என்று. இதுதான் உண்மை. இத நேரடியச் சொல்லாம அத்தன பேரும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நடிக்கிறாய்ங்க.

மன்னுவோட மேற்படி கருத்துக்கு பதிலா பெரிசா புடுங்கப் போறதா சீன் போட்ட பாஜக ஒரு மண்ணையும் செய்யல. ஆஹ, ரெண்டு பேரும் எதோ அக்கிரிமெண்டு போட்டுக்கிட்டு அமைதியாப் போயிட்டாங்க. நடுவில லோக்பால் பேப்பர எரிச்சி இந்த அக்கப்போருக்கு விளக்குப் பிடிச்சிட்டு இருக்காரு நம்ம அன்னா ஹசாரே என்ற அகில இந்தியா டிராபிக் ராமசாமி.

விளக்குப் பிடிச்ச மன்னாரு அகில இந்திய டிராபிக் ராமசாமி


கூட்டுக் களவானிங்க. அவிங்க என்னவோ தெளிவாத்தான் இருக்காங்க. பாருங்க இத்தன அமளிக்கும் காரணம் பன்னாட்டு, உள்நாட்டு தரகு முதலாளிகளின் பகற் கொள்ளையே. மேற்படி விவகாரங்கள் அனைத்திலும் இதுதான் அம்பலமாகியுள்ளது. 2ஜி மோசடியில் 20கோடி டாடா லஞ்சம் கொடுத்தது, கர்நாடக ரெட்டி சகோதரர்கள் கொள்ளையிடவும், ஜிண்டால் (நம்ம ஊரு திருவண்ணாமலை கிட்ட ஒரு மலைய ஆட்டயப் போட்டுருக்காங்க இவிங்க), அதானி போன்ற நிறுவனங்களின் ஆட்டயப் போடவும்தான் கர்நாடகாவில் சர்வகட்சி அயோக்கியர்களும் ஊழல் செய்துள்ளனர். இன்னும் இதுவரையான அனைத்து ஊழல் கொள்ளைகளும் நாட்டின் வளங்களை கொழுத்த முதலாளிகள் கொள்ளையிடவே செய்யப்பட்டுள்ளன என்ற உண்மையும் இந்த அமளி துமளி நாடகத்தில் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றது. அன்னா ஹசாரே பிடித்த விளக்குக் கூட பாராளுமன்ற அக்கப் போருக்குத்தானேயொழிய அதன் அடிகொள்ளியான பன்னாட்டு-தரகு முதலாளிகளின் பகற் கொள்ளையை வெளிச்சமிட்டு காட்ட அல்ல.

ஏனேனில் இவர்கள் அனைவருமே மேற்படி முதலாளிகளின் ஏவல் நாய்கள்தான். ஏவல் நாய்களுக்கேயுரிய மனோபாவத்துடன் ஒருத்தனை ஒருத்தன் போட்டுக் கொடுக்கிறார்கள் அவ்வளவுதான் விசயம்.  இந்த நாடகத்துக்கு  முடிவு கட்ட வகையின்றி வாயில் ஈ போவது தெரியாமல் வேடிக்கைப் பாக்குது சனம் இதுதான் சகிக்க இயலாததாக உள்ளது....

அசுரன்

ஸ்பெக்ட்ரம் ஊழல் : மறுகாலனியாக்கத்தின் “பம்பர் பரிசு”!

ரூ 3,74,937 கோடி ஊழல்!

ஊழல் சிறப்பிதழ்!!


Wednesday, August 03, 2011

அம்மானா சும்மாயில்லாடா....

பாசிச வெறியும், மனிதப் பண்புகள் கிஞ்சித்துமற்ற ஆணவமும் கலந்த பேய்தான் ஜெயா என்பதை அனைவரும் அறிவோம். இந்தப் பாசிச பேயின் வாயாலேயே பாசிசச் சட்டம் என்று ஒரு சட்டம் வசவு வாங்கியுள்ளது. ஜெயலலிதா வாயால் பேர் பெற்ற அச்சட்டம்தான் மத வெறி வன்முறை தடுப்புச் சட்டம், 2011.



ஒரு மாநிலத்தில் சிறுபான்மையினரான முஸ்லீம், சீக்கியர், கிருத்துவர்கள் மீதும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் மீதும், மொழிச் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் வன்முறைகளின் போது மத்திய அரசு நேரடியாக அதிகாரத்தை தனது கையில் எடுத்துக் கொள்ள இச்சட்டம் வகை செய்கிறது. இதன் மூலம் சிறுபான்மை சமூகத்தினர் காக்கப்படுவர் என்பதை இச்சட்டத்தின் நோக்கமாக மத்தியில் ஆளும் காங்கிரசு அரசு சொல்லுகிறது.



இச்சட்டம் உண்மையிலேயே ஆர்எஸ்எஸ் இந்து பயங்கரவாதிகளின் தேசத் துரோக சதிகளையும், கலவரங்களையும் தடுத்துவிடும் என்பது பகல் கனவே. ஆயினும், பேரளவில் கூட இந்து பயங்கரவாதிகளுக்கு எதிரானதொரு செயல்பாடு நடப்பதை ஜெயலலிதா கொதித்தெழுந்து எதிர்ப்பதுதான் இங்கு கவனிக்கத்தக்கது.

இதற்கு முன்பு மாநில அரசின் அதிகாரத்தை தூக்கியெறியும் சட்டங்கள் பல மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ளன. வாட் வரி விதிப்பு முதல் வட கிழக்கு-காஷ்மீர் மாநிலங்களில் உள்ள ஆயுதப் படை சிறப்புச் சட்டம் வரை பல இவ்வாறானவையே. இவற்றையெல்லாம் பாசிசப் பேய் ஜெயா உளப்பூர்வமாகவே ஆதரித்தவர்தான். மதவெறி வன்முறை தடுப்புச் சட்டத்தை பாசிசம் எனக் குறிப்பிடும் இந்த பூதம்தான் 'பொடா', 'உபா', பசு வதை தடுப்புச் சட்டம், மதமாற்றத் தடைச் சட்டம், எஸ்மா, டெஸ்மா போன்ற பாசிச சட்டங்களை எல்லாருக்கும் முந்திக் கொண்டு ஆதரித்துள்ளதுடன், தமிழ்நாட்டில் கொண்டு வந்து அமுல்படுத்தியும் உள்ளார்.



சோழியான் குடுமி சும்மா ஆடுமா என்ன? தான் ஒரு பச்சைப் பாப்பாத்தி என்று சட்டசபையிலேயே ஓலமிட்டவர்தான் இந்த பாசிசப் பாப்பாத்தி. இவர் இன்றைக்கு முதலமைச்சர் ஆனதில் ஊர்த் திருடன் கலைஞரின் அராஜக ஆட்சிக்கெதிரான மக்களின் வெறுப்பு ஒரு பக்கமெனில், இன்னொரு பக்கம் ஆர்எஸ்எஸ் பார்ப்பன தேசத் துரோக கும்பல் திட்டமிட்டு எல்லா வலது சாரி(வலது-இடது கம்யூனிஸ்டு வலதுசாரிகளையும் சேர்த்து) சக்திகளையும் பாசிச ஜெயாவின் பின்னே திரட்டியது முக்கியக் காரணமாக உள்ளது.

போன ஜெயலலிதா ஆட்சிகளைப் போல ஜெயாவின் தனிப்பட்ட அகங்காரமும், சசிகலா குடும்பத்தின் அவசரமும் மட்டுமே கூத்தாடும் ஆட்சியல்ல இது. கல்லு குடித்த சொறிக் குரங்கின் ஆட்டத்தைப் போல பாசிச ஜெயாவின் ஆணவத் திமிரும், ஆர்எஸ்எஸ் பயங்கரவாதக் கூட்டத்தின் திட்டமிட்ட சதியாலோசனைகளும் சேர்ந்து களமிறங்கும் புதுவகைப்பட்ட ஆட்சி இது.



எனவேதான் மிகச் சரியாக மதவெறி வன்முறை தடுப்புச் சட்டத்தின் இலக்கு எதுவாக இருக்க முடியும் என்பதை புரிந்து முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது இந்த முகமூடி ஆட்சி. சமச்சீர் கல்வி வெறுப்பு, ஈழத் தமிழ் ஆதரவு வேசம், இந்து மதவெறி ஆதரவு, போலீஸு ரவுடித்தனம் என ஆரம்பித்த ஒரிரு மாதங்களிலேயே தான் யார் என்பதையும், தனக்குப் பின்னே இருக்கும் காவி நோய் பீடித்த மூளை எந்த வகைப்பட்டது என்பதையும் காட்டியுள்ளார் அம்மையார். இன்னும் ஐந்து வருடங்கள் உள்ளன. பாசிச முகமுடிக்கு பின்னே இருந்து ஆடும் ஆர்எஸஎஸ் இந்து மதவெறி கும்பலின் சதிகள் எல்லாம் ஒவ்வொன்றாய் அரங்கேறும். ஈழத்தாயின் கரங்களை வலுப்படுத்தியவர்கள் எல்லாம் வறுத்தெடுக்கப்படுவார்கள். இருண்ட காலம் பாகம் 3ன் இலக்கு பரிபூரண பார்ப்பன பாசிச தமிழகம் என்பது அப்போதாவது மரமண்டைகளுக்கு உரைக்குமா தெரியவில்லை.


அசுரன்

Tuesday, July 26, 2011

18 வருசமா ஆட்டையப் போட்டவங்களும், கடைசியா மாட்டிக்கிட்டவனும்!!



நேற்று நீதிமன்றத்தில் 2G ஊழல் பற்றி ஆ. ராசா சில விசயங்களை போட்டுடைத்துள்ளார். கேபினெட் அமைச்சகம் அலைக்கற்றையை ஏலம் விடக் கூடாது என்று முடிவெடுத்ததினால்தான், அலைக்கற்றை உரிமத்தை ஏலத்தில் விடாமல் கையளித்ததாக ஆ. ராசா சொல்லியுள்ளார்.

மேலும், "நான் பின்பற்றிய முறை தவறானது எனில், 1993லிருந்து தொலைத் தொடர்புத் துறை அமைச்சர்களாக இருந்த அத்தனை பேரும் இதைத்தான் செய்துள்ளனர், அவர்களும் சிறையிலிருக்க வேண்டியவர்கள்தான்" "பாஜகாவின் அருன் சோரி 26 உரிமங்களையும், தயாநிதி மாறன் 25 உரிமங்களையும், நான் (ஆ, ராசா) 122 உரிமங்களையும் கொடுத்துள்ளோம். இவையனைத்துமே ஏலம் விடப்பட்டு கொடுக்கப்பட்டவையல்ல. அவர்கள் செய்தது தவறில்லை என்றால், என்னை மட்டும் விசாரிப்பது ஏன்?" என்று கேட்டுள்ளார்.

இதைத்தான் பல முறை நாமும் சொல்லி வருகிறோம். உலகமயக் கொள்கைகளின் அடிப்படையில் நாட்டின் வளங்கள் எல்லாம் அடி மாட்டு விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொள்ளையடிக்கக் கொடுக்கப்படுகிறது என்று. இதில் பாஜக, காங்கிரசு, சிபிஎம், டி எம் சி என்ற பேதம் கிடையாது. அனைவரும் மாமாக்கள் என்று சொல்லி வருகிறோம்.

2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் மாட்டிக் கொண்டது ஆ. ராசா எனில் இதே போல அரசு சொத்துக்களை, உரிமங்களை பாஜக காலத்திலிருந்து குறைந்த விலைக்கு விற்றது, இலவசமாகக் கொடுத்தது, கரும்பு தின்னக் கூலி போல தனியார் கையில் காசையும் கொடுத்து அரசு நிறுவனத்தையும் ஒப்படைத்தது போன்ற அயோக்கியத்தனங்களைச் செய்வதற்கு டிஸ்இன்வெஸ்ட்மெண்ட் அமைச்சகத்தையே வைத்திருந்தார்கள் பாஜக மாமாக்கள்.

இவர்களின் ஆட்சியில் அம்பானி, டாடா உள்ளிட்ட தரகு முதலாளி கும்பல் ஆட்டயப் போடாத எண்ணைய் வயலா(உதா: பன்னா மெத்தா, கோதாவரி)? தொலைத் தொடர்புத் துறை உரிமங்களா (உதா: சிடிஎம்ஏ மோசடி, ISD மோசடி)? இவர்கள் ஆட்சியில் டாடா உள்ளிட்ட கொள்ளைக் கும்பல் ஆட்டயப் போடாத நிறுவனங்களா (BSNL, மாடர்ன் பிரட்)?



அது மட்டுமா, டாடா, அம்பானி போன்ற 'கொழுத்த' ஏழைகளுக்கு கொள்ளையடிக்க வசதி செய்து கொடுப்பதில் எதிர்கட்சி, ஆளும் கட்சி பேதமின்றி தோழமையுணர்வுடன் பாஜக-காங்கிரசு கூட்டணி செயல்பட்டுள்ளதற்கு உதாரணங்கள் ஒன்றா இரண்டா?

பாஜக-காங்கிரசு புனித கூட்டணிக்கு அப்படியொரு உதாரணம் நீராராடியா டேப் விவகாரத்தில் வெளிவந்தது. முகேஷ் அம்பானிக்குத் தாரை வார்க்கப்பட்ட எரிவாயு வயல்களின் உற்பத்தியின் மீது முன் தேதியிட்டு 91,000 கோடி ரூபாய் வரித்தள்ளுபடி செய்வதற்கு 2009 – ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சிதம்பரம் வைத்த முன்மொழிதலை, எதிர்க்கட்சித் தலைவர் வெங்கையா நாயுடு தீவிரமாக ஆதரித்துப் பேசுகிறார். ‘தேசிய நலனுக்காக’ ஆளும் கட்சியுடன் ஒன்றுபட்டு நிற்கும்படியான இத்தகைய ‘தேசிய உணர்வை’ பா.ஜ.க.வுக்கு ஊட்டியவர் நீரா ராடியாதான் என்ற உண்மையை புட்டு புட்டு வைத்தது நீராராடியா டேப்.

கடந்த 18 வருடங்களில் இவர்கள் அனைவரும் சேர்ந்து அள்ளிக் கொடுத்து கொள்ளையிடப்பட்ட நாட்டின் சொத்துக்கள், 73 லட்சம் கோடிகளுக்கும் மேல். இவர்களின் கூட்டுக் களவானித்தனத்துக்கு ஒரு சின்ன உதாரணம்தான் கிருஷ்ணா-கோதாவரி எண்ணைய் வயல் ஊழல். 2G ஊழலுக்கு இணையான இந்த ஊழலை கணக்குத் தணிக்கைத் துறை அம்பலப்படுத்தியது. ஆயினும் பாஜகவோ, சிபிஎம்மோ அல்லது வேறெந்த எதிர்கட்சியுமோ இதனை மக்களரங்கிற்கு கொண்டு வந்து காங்கிரசை அம்பலப்படுத்தும் வேலையைச் செய்யவில்லை.விவகாரம் அத்தோடு முடிவுக்கு வந்தது. ஏனெனில் இவர்கள் அனைவருமே கூட்டுக் களவானிகள்.

இதே போல, போன வாரம் கர்நாடக முதலமைச்சர் கோமாளி எடியூரப்பாவின் மெகா ஊழலை அம்பலப்படுத்தினார் லோகாயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே. பல கோடி ரூபாய்க்கு சுரங்க ஊழலிலும், நில ஊழலிலும் எடியூரப்பா நேரடி தொடர்பிருப்பதை அவரது அறிக்கை அம்பலப்படுத்தியது. இதை வைத்து கர்நாடக எதிர்க்கட்சிகள் பெரும் கலகத்தை உருவாக்கினார்களா என்றால் இல்லை. ஏனெனில் ஹெக்டேவின் அறிக்கை எடியூரப்பாவை மட்டுமல்ல, காங்கிரசின் எஸ். எம். கிருஷ்ணா, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி போன்றோரையும் சேர்த்து அம்பலப்படுத்தியிருந்தது. மேலும், எடியூரப்பா மாட்டிக் கொள்வது இது முதல்முறையும் அல்ல. நிலபேர ஊழலிலும், சுரங்க மோசடி ஊழலிலும், சட்டமன்ற குதிரை பேர ஊழலிலும், தேவ கவுடாவின் நாற்காலி சண்டை நாடகங்களில் கோமாளியாகவும் இன்னும் பல கோமாளித்தனமாக செயல்பாடுகளிலும் அவமானப்பட்டவன்தான் இந்த எடியூரப்பா. இதற்கு முன்பே சில முறை நீதிபதி ஹெக்டே இவனை அம்பலப்படுத்தி ஒன்றும் வேலைக்காகவில்லை என்று பத்திரிகையாளர்களிடம் அழுததும் உண்டு. இத்தனை நடந்தும் கோமாளி எடியூரப்பா வெட்கமின்றி சிரித்துக் கொண்டேதான் வலம் வருகிறான். இதே காலகட்டத்தில் பயங்கரவாத கட்சியான பாஜகவின் தலைவன் நிதின் கட்காரியின் மகன் வீட்டில் வருமான வரி ரெய்டு நடக்கிறது(கொஞ்ச காலம் முன்புதான் மிக ஆடம்பரமான திருமணம் ஒன்றை கட்காரி நடத்தியிருந்தான்).








(இன்னுமாடா நம்மள நம்புறாய்ங்க... அது அவிங்க தல விதி....!!)


இவையெல்லாம் காங்கிரசைப் பொறுத்தவரை ஒரேயொரு அம்சத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது என்னவென்றால், 'நீ மட்டும் யோக்கியமா' என்று வாயடைக்கும் கருணாநிதி டெக்னிக்தான் அது. ஏனேனில், பாஜக மத்தியில் ஆட்சி செய்த போதும் சரி, மாநிலத்தில் ஆட்சி செய்யும் போதும் சரி ஊழல், மோசடி புகாரில் மாட்டிக் கொண்ட யாரொருவரையும் பொறுப்பிலிருந்து நீக்கியதில்லை. இது தவிர்த்து இந்த விவகாரங்களில் அத்தனை பேறும் ஒன்றாக கை நனைத்து பன்னாட்டு, உள்நாட்டு கொள்ளைக்கார முதலாளிகளுக்கு திருட்டு சேவகம் செய்துள்ளதால் வாயை மூடிக் கொண்டு விவகாரங்களை குழி தோண்டி புதைக்கவே செய்கின்றனர். சிரித்து கொண்டே வலம் வருவது எடியூரப்பா மட்டுமா? ஆ. ராசா, ஜெயலலிதா, அத்வானி, வாஜ்பேயி, வெங்காய நாயுடு, பா. சிதம்பரம், மன்மோகன், பிரகாஷ் கரத், புத்ததேவு, மோடி என அத்தனை அயோக்கியன்களும்தான் வெட்கமின்றி சிரித்துக் கொண்டே வலம் வருகிறார்கள்.

மாட்டிக் கொண்ட திருடர்களும், கொள்ளையர்களும் வெட்கமின்றி சிரித்துக் கொண்டே வலம் வருவது எதனால்? அது சுற்றியிருக்கும் மக்கள் அவர்களுக்கு கொடுக்கும் அங்கீகாரத்தால்தான். இங்கு நாம் கடிந்தது கொள்ள வேண்டியது திருட்டு கும்பலின் வெட்கங்கெட்ட நகைப்பையா அல்லது அதை அங்கீகரிக்கும் மக்களின் அரசியல் மொன்னைத்தனத்தையா?

அசுரன்

ஸ்பெக்ட்ரம் ஊழல் : மறுகாலனியாக்கத்தின் “பம்பர் பரிசு”!


ரூ 3,74,937 கோடி ஊழல்!


ஊழல் சிறப்பிதழ்!!



Friday, May 27, 2011

பாலாறும், தேனாறும் ஓடுதாம் குஜராத்தில்!!

குஜராத்து ஒளிருகிறது என்றும், ரத்தக் கறை படிஞ்ச கைனாலும் ஊழலற்ற ஆட்சி கொடுக்கும் உத்தமரய்யா நம்ம மோடி, அவர்தான் இந்தியாவ வாழ வைக்கப் போற தெய்வம்மய்யா என்றும் வெளக்கமாத்து மோடிக்கு பார்ப்பன பட்டுக் குஞ்சலங்கள் காவடி எடுத்து ஆடின. இவர்களின் பிரச்சாரத்தையும் உண்மை என்று நம்பி ரொம்ப நல்லவர்களாம், பாசிட்டிவ் திங்கிங் 'எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பர' பிரிவு ஒன்றும் கூத்தாடியது.

இந்தியாவின் டிராபிக் ராமசாமி(நன்றி பாரதி தம்பி) அன்னா ஹசாரே வேறு தனது உண்ணாவிரத நாடகத்தின் முடிவில் மோடியின் குஜராத்து ஒளிருது, அங்கு நடக்கும் ஆட்சி வடிவை பிற மாநிலங்களும் பின்பற்றனும் என்று வெறும் உரலை இடித்துக் கொண்டிருந்த பட்டுக் குஞ்சலங்களுக்கு சிறிது அவலை எடுத்துப் போட்டார். இதில் மோடிக்கு விளம்பரம் கிடைத்ததோ இல்லையோ ஹசாரேயின் டவுசர் கழண்டு காவி கோமணம் பல்லிளித்து விட்டது.

இதோ, சுதாரித்துக் கொண்ட ஹசாரே குஜராத்து வளர்ச்சியின் அருகதை என்னவென்று சொல்லியுள்ளார். 'குஜராத்தில் ஊழல் மலிந்து கிடக்கிறது என்றும் மது விலக்கு சட்டமிருந்தும் கூட சாராய வெள்ளம் ஓடுகிறது என்றும், ஏழை விவசாயிகளிடமிருந்து நிலத்தை அபகரிக்கும் மோசடி கோலோச்சுகிறது' என்று போட்டுடைத்துள்ளார்.

கூடப் போன அக்னிவேஷ் அவர்கள், குஜராத்து ஒளிர்வதற்கு சிரியல் பல்பு போட்டு கரண்டு சப்ளை பன்னுபவர்கள் யார் என்று நேற்று சொல்லியுள்ளார். 'அமெரிக்க ஊடக மாமாக்களின் உதவியுடன் குஜராத்தின் வளர்ச்சி பற்றி பொய்யான சித்திரத்தை முன்னிறுத்துகிறார்கள்' என்றுள்ளார் அக்னிவேஷ் (மாமா - வார்த்தை உதவி நாம்). இவிங்களோட போன கெஜ்ரிவால்னு ஒருத்தர், இப்படியே நிலத்த புடுங்கினு இருந்தா குஜராத்தில் உள்நாட்டுப் போர் வெடிக்கும் என்றுள்ளார்.

ஏற்கனவே குஜராத்து வளர்ச்சியின் தராதரம் என்னவென்பதை பலரும் தொடர்ந்து அம்பலப்படுத்தி எழுதி வருகிறார்கள். ஆயினும் ஏகாதிபத்திய சுரண்டல் வேட்கைக்கு பொருத்தமாக திட்டங்களை மின்னல் வேகத்தில் நடைமுறைப்படுத்த குஜராத்து போன்று அரசு பாசிசம் இருக்குமிடங்கள் வசதியாக இருக்கின்றன. எனவேதான் இதனை ஒரு மாடலாக அனைத்து ஊடகங்களும் முன்னிறுத்துகின்றன. ஆனால் அங்கோ உண்மையில் விவசாயிகள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், பெண்கள், முஸ்லீம் சிறுபான்மையினர் என பல மக்கள் பிரிவினரும் அரசியல்-பொருளாதார-கலாச்சார ரீதியாக ஒடுக்கப்பட்டு சுரண்டப்படுகிறார்கள். தொழிலாளர்கள் உரிமைகள் ஏதுமற்று அற்பமான உரிமைகளை கோருபவர்கள் கூட பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறார்கள். இந்து மதவெறி பயங்கரவாதமும், அரசு-ஏகாதிபத்திய பயங்கரவாதமும் சேர்ந்து ஒடுக்குகின்றன குஜராத்தில்.

குஜராத்தில் சாராய ஆறு மட்டும் ஓடவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களின், முஸ்லீம் சிறுபான்மையினரின் ரத்த ஆறும், விவசாயிகளின், தொழிலாளர்களின் கண்ணீர் ஆறும் சேர்ந்தே ஓடுகிறது. இதனைத்தான் வளர்ச்சி என்கிறார்கள் மக்கள் விரோதிகள். இதற்கு இசைப் பாட்டு பாடுகிறார்கள் யுப்பி வர்க்க அல்பைகள்.

அசுரன்

Thursday, March 17, 2011

நன்றி விக்கிலீக்ஸ், நல்ல இந்திய ஜனநாயகம்!

விக்கிலீக்ஸ் இந்தியா கேட் எப்போ ரிலீஸ் ஆவும்னு ஆவலா ரொம்ப நா காத்திருந்தேன். சரியா தேர்தல் நெருங்கி வற்ற நேரமாப் பாத்து ரிலீஸ் பன்னிருக்காய்ங்க. இதுல அம்பலமாயிருக்கிற விசயங்கள் எல்லாம் யாருக்கும் தெரியாதவை அல்ல. ஆனால் அவை அவர்களின் சொந்த வாக்குமூலங்களாக ஆணித்தரமாக அம்பலமாகியிருக்கின்றன என்பதுதான் இங்கு விசயம். என்னென்ன அம்பலமாகியிருக்கின்றன?

1) இந்திய அமைச்சரவையை அமெரிக்காவின் விருப்பத்திற்கு இணங்க மாற்றியுள்ளனர். இந்தியாவை அமெரிக்காரன் தான் ஓட்டிட்டு இருக்கான்.




2) அமெரிக்காவுடனான அணு ஒப்பந்த்தத்தை பாரளுமன்ற பன்றித் தொழுவத்தில் நிறைவேற்றிட அனைத்து எதிர்கட்சிகளுக்கும் பணம் கொடுத்துள்ளனர் காங்கிரசு கட்சியினர் . அமுக்கான் பாண்டியன் பிரதமரிலிருந்து அத்தனை அயோக்கியனும் இதற்காக அலைஞ்சிருக்கானுங்க.

வாஜ்பேயியோட மருமகப் பிள்ளை மூலம் பாஜக ஓட்டுக்களை வாங்கவும் முயற்சி நடந்துள்ளது. பாஜகக்காரன் வருவான்னு காங்கிரசுக்கு முன் அனுபவம் இருந்தனாலத்தான் அவிங்க முயற்சி செஞ்சிருக்கானுங்க. அந்த முன் அனுபவம்: பவர் புரோக்கர் நிராராடியாவின் கைங்காரியத்தால் ரிலையன்ஸ் அம்பானிக்காக முன்பு ஆதரவு ஓட்டுப் போட்டது எதிர்கட்சி பாஜக(நிரா ராடியா டேப்). ஆனால், அணு ஒப்பந்த்தின் போது பாஜக நல்லவன் வேசம் கட்டிக் கொண்டதற்கு பின்னணி எனன்வென்பது இன்னும் தெரியவில்லை (நாம எதிர்த்தாலும் பாஸ் ஆயிரும்னு தெரிஞ்சனாலக் கூட இருக்கலாம்). இங்கு கவனிக்க வேண்டிய விசயம், அமெரிக்காரனுக்காக காங்கிரசுக்காரன் நூற்றுக்கணக்கான கோடிகளை வாரியிறைத்து ஓட்டு வாங்குகிறான் எனில் இது பேரு ஜனநாயகமாய்யா? அன்றைய பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கு உட்பட்ட இந்திய பாராளுமன்றக் கிளைக்கும், இன்றைக்கு அமெரிக்கா செனட்டுக்கு உட்பட்டு வேலை செய்யும் இந்திய பாராளுமன்றக் கிளைக்கும் என்ன வித்தியாசம்?

3) இலங்கையில் ஈழ இன அழிப்புப் போரின் இறுதிக் காலங்களில் இலங்கைக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களையெல்லாம் திசைதிருப்பி இலங்கை சிங்கள இனவெறி அரசைப் பாதுகாக்கும் வேலையை செய்திருப்பவர் திருவாளர் 'உலகின் மிகப் பெரிய ஜனநாயகம்' இந்தியா அவர்கள் என்று அமெரிக்கத் தூதரக கேபிள் உரையாடல் பதிவுகள் அம்பலமாக்கியிருக்கின்றன.


இது மட்டுமில்லாமல் விளக்குப் பிடிக்கும் மூன்றாம் தர மாமா வேலையும் பார்த்துள்ளது நமது பெருமை மிகு பாரத மாதா கி ஜே. விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலில் இருந்து இலங்கையைப் பாதுகாக்க இந்திய ராடார்களுக்கு வலுவில்லை என்பதால் அமெரிக்காவின் உதவியைக் கேட்டுள்ளனர் சிரிலங்காப் படையினர் அந்தத் தகவலும் விக்கிலீக்கில் வெளிவந்துள்ளது. இதன் அர்த்தம் இந்தியா அங்கு ராடார் கொடுத்து உதவியுள்ளது என்பதுதான்.



4) நேபாளத்தில் மாவோயிஸ்டுகளின் வெற்றியை முறியடிக்க அமெரிக்க இந்திய கூட்டுச் சதிகள், உள்ளடி வேலைகள் விக்கிலீக்ஸால் அம்பலமாகியிருக்கின்றன. ஏற்கனவே நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட (அப்சலூயுட் மெஜாரிட்டி, ரிப்பெரசன்டேட்டிவ் ஒதுக்கீடு கொண்ட அரசியலமைப்புச் சட்டம் இயற்றும் தேர்தல் அங்கு நடந்துள்ளது. இந்தியாவில் அப்படி ஒன்று நடக்கவேயில்லை ஆயினும் நாம் ஜனநாயகமாம்) நேபாள அரசை சீர்குலைக்க அங்குள்ள இந்தியத் தூதரகம் சதி வேலை செய்தது சமீபத்தில் இதே 'தி இந்து'ப் பத்திரிக்கையில் அம்பலமானது கவனத்தில் கொள்ளத்தக்கது.



5) மியான்மாரில் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராடும் தலைவர் ஆங் சன் சூ கிய் வீட்டுச் சிறையில் இருந்தார். அவரை கைவிட்டு விட்டு அங்குள்ள ராணுவ சர்வாதிகார கும்பலுக்கு முட்டுக் கொடுக்கும் வேலையைச் செய்கிறது 'ஜனநாயக இந்தியா' அரசு.



6)
 தேச பக்த வேசம் போடும் பயங்கரவாத கட்சியான பாஜகவின் அமெரிக்க எதிர்ப்பு ஏமாற்றும் விக்கிலீக்ஸில் அம்பலமாகி சிரிப்பாய் சிரிக்கிறது. அயோக்கியக் கிரிமினல் புணந்தின்னி சொறிநாய் அத்வானி தனது ஹிட்லர் மீசையில் மட்டுமல்ல பொய், மோசடி, சுத்துமாத்துக்களிலும் ஹிட்லருக்குக் குறைவில்லாத 420  என்பதையும், ரெட்டை நாக்குப் பீப் பொறுக்கி என்பதையும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. வெளிய தேசபக்த வீறாப்புப் பேசி அமெரிக்காவை  எதிர்த்துவிட்டு உள்ள போயி அவனோட கால்ல விழுந்து கதறிருக்கானுங்க இந்த காவி டவுசர் டப்பா மண்டையங்க.

இத விட அசிங்கம் நம்ம ஆர்எஸ்எஸ் கியிஞ்ச கோமனம் வாஜ்பேயிய பத்தின விசயம்.

நாம என்னவோ மன்னுமோகன் சிங்தான் பெரிய பூட்ஸ் நக்கினு நினைச்சுட்டு இருக்கோம், ஆனா அவன விட பெரிய பூட்ஸ் நக்கி வாஜ்பேயின்னு அமெரிக்காரனே  சர்டிபிகேட் கொடுக்கிறான். அத்தோட நில்லாம, காங்கிரசுக்காரன விட பாஜகக்காரன் இருந்தா இந்த நாட்ட இன்னும் சீக்கிரமாக் கூட்டிக் கொடுத்துறுப்பானுங்களேன்னு வருத்தப்படறான் அமெரிக்காக்காரன். இதுதாம்பா ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள் சொல்லும் இந்து தேசியம்.

ரெட்டை நாக்கு காவி கும்பலின் அமெரிக்க தேசபக்தி
 


இது  தவிர பிரதமர் அலுவலகத்தில் மலையாள மாபியா(அதிகாரிகள்தான்) கோட்டமும் அம்பலமாகியுள்ளது.


இன்னும் நிறைய வரும். நண்பர் மா. சிவக்குமார் போன்றோர் இங்கு ஏதோ ஜனநாயகம் நிலவுவது போல அவ்வப்போது திடீர் மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் அருள்வாக்குக் கொடுப்பது வழக்கம். அவர்களின் சிந்தனைக்கு இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன்.

இன்னொருவருக்கும் இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன். பெயரில் கம்யூனிசத்தை வைத்துக் கொண்டு வாழ்நாள் முழுவதும், தனது வரலாறு முழுவதும் கட்சி மாறி கட்சி மாறி காவடி தூக்குவதற்கு மயிர் பிளக்க வியாக்கியானம் கொடுப்பதை மட்டுமே செய்துள்ள சிபிஎம்யைச் சேர்ந்த தோழர் மாதவராஜ் அவர்களுக்கும் இந்தப் பதிவு சமர்ப்பனம்.

நல்ல காலம் பொறக்குது

நல்ல காலம் பொறக்குது

இந்தியாவில் ஜனநாயகம் நிலவுது... ஜனநாயகம் நிலவுது....

இந்த மொற நாங்க காவடி தூக்குற கட்சிக்கே ஓட்டுப் போட்டா

இந்த தடவயாவது.. நல்ல காலம் பொறக்குது.. நல்ல காலம் பொறக்குது...


ஸார் டேப்பு அந்து ரொம்ப நேரம் ஆச்சி....


நன்றி தி இந்து

அசுரன்

Thursday, January 20, 2011

உச்சிக் குடுமி மன்றத்தின் ஆர் எஸ் எஸ் தீர்ப்பு - தாராசிங்

ச்சரிக்கை செய்திருந்தது போலவே உச்சிக்குடுமி நீதிமன்றம் ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை வழக்கில் தாராசிங்கிற்கு மரண தண்டனையை நிராகரித்துள்ளது. மேலும், 11 ஆர் எஸ் எஸ் கிரிமினல்களின் விடுதலையையும் உறுதி செய்துள்ளது.

""
1998இல் பஜ்ரங்தள் கிரிமினல் தாராசிங்கால் பாதிரியார் ஸ்டெயின்ஸம் அவரது இரு பச்சிளம் குழந்தைகளும் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கின் நிலை அதைவிடக் கேவலமானது. தாராசிங்கிற்கு மரணதண்டனையும் 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து 2003 இல் தீர்ப்பளித்தது சி.பி.ஐ. நீதிமன்றம். பாதிரியை எரித்த கையோடு சையிக் ரஹ்மான் என்ற வியாபாரியை எரித்துக் கொன்றது பாதிரியார் அருள்தாஸை வெட்டிக் கொன்றது ஆகிய வழக்குகளும் தாராசிங்கின் மீது உள்ளன. ஆனால் சி.பி.ஐ. நீதிமன்றமோ ஸ்டெயின்ஸ் பாதிரியார் எரிக்கப்பட்ட சம்பவம் அரிதிலும் அரிதானதொரு சம்பவம் என்றது. சங்கப் பரிவாரங்களுடன் தாராசிங்கிற்கு உள்ள தொடர்புகள் குறித்து ஆதாரங்கள் நீதிமன்றத்தின் முன்பு வைக்கப்பட்டன. ஆனால் இந்த படுகொலையில் எந்த அமைப்புக்கும் தொடர் பில்லையென்று கூறியது சி.பி.ஐ. நீதிமன்றம்.

இந்த விளக்கங்களுக்குப் பொருத்தமானதொரு தீர்ப்பாக தாராசிங்கின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும் 11 பேரை விடுதலை செய்தும் 2005இல் தீர்ப்பு வழங்கியது ஒரிசா உயர்நீதிமன்றம். பாதிரியாரைக் கொலை செய்யும் வகையில் தாராசிங் தாக்கியதற்கு ஆதாரமில்லை என்று வேறு உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
"" (புதிய ஜனநாயகம் 2010)

2005ல் இப்படியென்றால், 2010ல் உச்சிக்குடுமி மன்றம் இன்னும் ஒரு படி மேலே சென்று, மத மாற்றம்தான் இந்தப் படுகொலைக்குக் காரணம் என்ற அரியதொரு ஆர் எஸ் எஸ் கண்டுபிடிப்பை மக்களுக்கு வழங்கியுள்ளது.

"We hope Mahatma Gandhi's vision of religion playing a positive development integrating into a prosperous nation will be realized. There is no justification from interfering in someone's belief through force, conversion or false premise that one religion is better than the other."

இதைத்தானே ஆர் எஸ் எஸ்ம் சொல்லுது? அதாவது இனிமே எவனாவது மதமாற்றத்திற்கு பிரச்சாரம் செய்தால் கொலைகள் நிகழும் என்று ஆர் எஸ் எஸ்ன்  குரலில் சொல்கிறது உச்சிக்குடுமி மன்றம்.

தாராசிங் திட்டமிட்டு படுகொலைகள் செய்கிறவன் என்பதும், ஆர் எஸ் எஸ்-பஜ்ரங்தள்ளின் தலைவன் என்பதும் மறுக்க இயலாத அளவு நிருபிக்கப்பட்டுள்ள போதும் அவற்றை நீதிமன்றம் ஏற்கவில்லை எனவே அவனுக்கு ஆயுள் தண்டனை. அதே நேரத்தில் பினாயக் சென்னுக்கோ அவர் அரசின் அயோக்கியத்தனத்தை அமைதி வழியில் தட்டிக் கேட்டார் என்பதற்காகவே அவருக்கெதிராகக் கொடுக்கப்பட்ட எல்லாமே பொய் ஆதாரங்கள் என்ற போதும் ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அயோக்கியத்தனத்துடன் ஒப்பிடும் போது பிரிட்டிஷ்காரன் கூட கொஞ்சம் நேர்மையா இருந்தானே?

இப்படி, நீதிமன்றங்களே ஆர் எஸ் எஸ்ன் பினாமிகளாக இருக்கும் போது ஆப்டர் ஆல் பத்ரி சேஷாத்ரியின் கிழக்குப் பதிப்பகமும், பா.ராகவனும் ஆர் எஸ் எஸ் பினாமிகளாக இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

தங்களை நடுநிலைவாதிகள் என்றும், இந்தியாவில் ஜனநாயகம் என்ற ஏதோ ஒன்று, எங்கோ ஒளிந்து கொண்டிருப்பதாகவும் அதனைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் இந்த இடத்தில் சிந்திக்க வேண்டும்.

அசுரன்


காவிக் கறை படிந்த தீர்ப்புகள்



இது துரோகத்தின் விளை நிலம்!


பினாயக் சென்னை விடுதலை செய்! சென்னையில் HRPC மறியல், 90 பேர் கைது!!


பினாயக்சென் விடுதலை: அரசை எதிர்த்ததால் இரண்டாண்டு சிறைவாசம்!!


டீச்சர்.. அருந்ததி ராய் என்னக் கிள்ளிட்டா - நிர்மலா சீதாராமன்!!


சீமான் கைது - இது ஆரம்பம் மட்டுமே!!!


அயோக்கியா: தீர்ப்பும், வரலாறும்!!

Related Posts with Thumbnails