TerrorisminFocus

Showing posts with label பார்ப்பனிய பாசிசம். Show all posts
Showing posts with label பார்ப்பனிய பாசிசம். Show all posts

Wednesday, January 30, 2008

ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!

நன்றி லேமூரியன்


ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!

தாவது நாங்க ஒரு ஆள்தான் பார்ப்ப்னியத்த எதிர்க்குறோம், நாங்கதான் உண்மையான பார்ப்பன எதிர்ப்பாளர்கள் அப்படின்னெல்லாம் மார் தட்டிக் கொண்டு அலைஞ்சவங்க எல்லாம் இப்போ பார்ப்ப்னியம் மேலே ஏறி நின்னு அடிக்கும் போது எங்கியோ போய் ஒளிஞ்சுக்கிட்டாங்க. அது தனிக் கதை.




இப்போ விசயம் என்னன்னா, பார்ப்பனியத்தோட அடியாள் படை, ரவுடி, கழிசடை கும்பல் துப்பாக்கியோட மத்திய பிரதேசத்துல ஊர்வலம் போயிருக்கானுங்க. அது 30ஆம் தேதி இந்தியன் எக்ஸ்பிரசில் செய்தியா வந்திருக்கு. இதே RSS கும்பலோட அல்லக்கை அமைப்பான பஜ்ரங்தள் ஆளுங்க 2007 ஆரம்பத்தில் மஹாராஸ்டிர நாண்டட்டில் குண்டு தயாரிக்கும் போது வெடித்து மாட்டிக்கிட்டாங்க. அப்பொதான் RSS நாக்பூர் ஆபிசுக்கு குண்டு வைச்சது, வெறு சில மசூதிகளில் குண்டு வெச்சது எல்லாம் இவந்தான்னு தெரிஞ்சது. குண்டு வைச்சிட்டு பலிய முஸ்லீம் மேல போட வசதியா முஸ்லீம் குல்லா முதலான தயாரிப்புகளோட நாண்டட்டில் மாட்டிக்கிட்டாங்க.

இது தவிர்த்து சாஹா பயிற்சி முகாம்களில் துப்பாக்கி பயிற்சி எடுப்பது குறித்து பத்திரிக்கைகளில் படங்களுடன் செய்திகள் வந்தது. இதற்க்கெல்லாம் சிகரம் வைச்ச மாதிரி, குஜராத கலவரத்தில் ராக்கெட் லாஞ்சர் டைப் வெடிகுண்டுகள் பயன்படுத்தியதாக தெஹல்கா விடியோவில் பேசினான் ஒரு எம்.எல்.ஏ. இப்போ போதாக்குறைக்கு RSS கும்பல் IT துறையில் வேறு நேரடியாக நுழைந்துவிட்டது.

இப்படி ஒரு அதி பயங்கரவாத கும்பாலா இருந்தாக் கூட இவனுக்கு இந்த அரசு எல்லா பாதுகாப்பும் வழங்கும். ஏன்னா இந்த அரசே ஒரு பார்ப்பனிய அரசுதான். இது தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்கிறாங்க சில பார்ப்பன எதிர்ப்பாளர்கள். அவிங்கள் நினைச்சாதான் பாவமா இருக்கு.

பார்ப்பினியம் தெளிவாக உள்ளது, இந்த அரசாங்க அமைப்பை நம்பி தனது செய்ல்பாடுகள் இல்லை என்பதில். மாறாக இந்த அரசின் இயல்பில்தான் தனது பலத்திற்க்கான ஊற்று மூலம் உள்ளது என்பது அதற்க்கு தெளிவாக தெரிந்த காரணத்தினால்தான் அரசாங்கம் அமைக்கும் விசயத்தில் ஏற்ப்படும் பின்னடைவுகளை அது பொருட்படுத்துவதில்லை.

ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் இந்தியாவில் பார்ப்னியத்தை வீதிகளில் சந்தித்து அடிக்காத வரை பார்ப்பனியத்துக்கு கவலையில்ல.

Indian Express News

Source: Newscap also read செய்தி விமர்சனம்

Related Articles:

"குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பயங்கரவாதிகள்"

இவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான் ...

பில்கிஸ் தீர்ப்பு - சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியும...

Tuesday, January 22, 2008

பில்கிஸ் தீர்ப்பு - சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியுமா எது உள்ளே எது வெளியே என்று?

நீதி நிலைநாட்டப்பட்டுவிட்டது. காலம் கடந்தால்தான் என்ன? குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டது அல்லவா? குஜராத் 2002 இனப் படுகொலையின் போது தனது குடும்பத்தவர் 14 பேரை கண்முன்னால் பறி கொடுத்து, பாலியல் பலாத்காரத்திற்குள்ளான பில்கிஸ் என்ற இஸ்லாமிய பெண்மணி, இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுவதற்க்கு முந்தைய நாள், நீதி நிலைநாட்டப்படும் என்று தான் நம்புவதாகவும், இந்திய நீதித் துறையின் மீது நம்பிக்கை இருப்பதாகவும் கருத்து தெரிவித்திருந்தார்.

இதோ அவரது நம்பிக்கை வெற்றி பெற்றுவிட்டது அல்லவா? 7 பேர் விடுவிக்கப்பட்டால்தான் என்ன? 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுவிட்டது அல்லவா? ஆறு வருடங்கள் தாமதமான தீர்ப்பாயிருந்தால்தான் என்ன? குற்றவாளிகள் சிறை அனுப்பப்படுவது உறுதியாகிவிட்டது அல்லவா? இனி அவர்களின் வாழ்க்கை கம்பிகளுக்கு பின்னால்தான்.

ஆயினும் சிறைச்சாலைக் கம்பிகளுக்கு தெரியவா போகிறது எது உள்ளே எது வெளியே என்று? 'கம்பிகளுக்கு பின்' என்ற சொற்றொடரில் 'பின்' என்பது கம்பிக்கு எந்த பக்கம் வருகிறது என்பதை யார் தீர்மாணிக்கிறார்கள்? எது தீர்மாணிக்கிறது? எப்படி தீர்மாணிக்கப்படுகிறது?

குஜராத் இனப் படுகொலையில் போது தமது சொந்த வீடுகளை விட்டும் கிராமங்களை விட்டும் விரட்டப்பட்ட லட்சக்கணக்கான முஸ்லீம்கள் இன்றும் தமது வீடுகளுக்கு திரும்ப இயலாமல் நிவாரண முகாம்களில் கைதிகளாகத்தான் வைக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியின் யூத கொட்டடிகள் திறந்த வெளிக் கூடங்கள்தான். ஆயினும் அவை சிறைச்சாலையே. அது போன்றதுதான் குஜராத்தின் நிவாரண முகாம்கள். கம்பிகளோ சுவர்களோ இல்லாத மாய சிறைச்சாலை. சிறைச்சாலையைவிட கோடூரமானதொரு வெளி உலகம் இருக்கின்ற பொழுது சிறைச்சாலையே தேவலாம் என்று பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர் தங்கியதில் வியப்பொன்றுமில்லை. அப்படி தங்கிய அப்பாவி கைதிகளில் ஒருவர்தான் பில்கிஸ்.

தீர்ப்பு வழங்கப்படும் முன்பே தண்டனை கொடுக்கப்பட்டது. குற்றமிழைத்தவர்களுக்கு அல்ல. குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு. நிவாரண முகாம் என்ற சிறைக்கூடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனையாக தரப்பட்டது. தண்டனையிலிருந்து சட்டம் தரும் பாதுகாப்பு கவசத்தில் குற்றவாளிகளும், குற்றமயமாக்கப்பட்ட சமூகம் தரும் வன்முறையிலிருந்து பாதுகாத்துகொள்ள பாதிக்கப்பட்டவர்கள் சிறைச்சாலையிலுமாக இருக்கின்றது அங்கு நிலைமைகள். பார்க்கின்றவர்களுக்கு எது சிறை எது வெளியே என்ற தேவையற்ற குழப்பம் வரவேண்டாம் என்று சிறைச்சாலை கம்பிகள் அந்த சமூகத்தின் மனங்களில் பதிக்கப்பட்டுவிட்டன. அவை வெறும் கண்களுக்கு தெரியாது.

சபர்கந்த கிராமத்திலுள்ள நிவாரண முகாமில்தான் தற்போது வாழ்ந்து வருகிறார் பில்கிஸ் சரியாகச் சொன்னால் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சிறைக் கூடத்தின் பாதுகாப்புக்கு சிறப்பு அதிரடிப் படை ஒன்று போடப்பட்டுள்ளது. அவர்களின் அன்புக் குரியவர்களில் 33 பேர் கோடூரமாக கொல்லப்பட்ட சர்தார்பூர் பகுதியிலுள்ள சைய்க் மொஹல்லா பகுதிக்குள் அவர்களால் நுழையக் கூட முடியாது. சிறையில் இருப்பவர்கள் வெளியே வருவதே சிரமம் இதில் அவர்களுக்கு கோடூரம் இழைக்கப்பட்ட பகுதியை பார்ப்பதாவது? இதே போல 70 பேர் கொல்லப்பட்ட குல்பர்க் சொசைட்டி வழக்கில் முக்கிய குற்றவாளிகள் தண்டனையிலிருந்து மட்டுமல்ல குற்றப்பத்திரிகையிலிருந்தே கூட தப்பித்து சென்று விட்டனர். 27 பேர் கொல்லப்பட்ட ஆனந்த் மாவட்டத்தில் 41 குற்றவாளிகள் முன்பினையில் வெளியே வந்தனர். சிறைக்கு வெளியே இருந்தாலும், உள்ளே இருந்தாலும் யாருக்கும் எதுவும் பெரிதாக மாறிவிடப் போவதில்லை. ஏனேனில் சிறைக்கு உள்ளே வெளியே என்பதை தீர்மானிப்பது சிறைக் கம்பியல்லவே?

கடந்த ஆறு வருடங்களாக பயத்தில் வாழ்ந்து வருவதாக கூறுகிறார் பில்கிஸ். இன்னும் பெரும்பாலனவர்கள் மனதிலிருக்கும் வெறுப்பிலிருந்து தனது குழந்தைகளை காப்பதற்க்கு முயற்சி செய்ததாக சொல்கிறார். குஜராத் அரசே நடத்திய இனப் படுகொலையில் பாதிக்கப்பட்ட பிற பெண்களுக்கு கட்டாயம் நியாயம் கிடைக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். ஆயினும் அவரால் தனது சொந்த கிராமத்திற்க்கு திரும்ப முடியாது. தனக்கெதிரான வெறுப்பு மறைய வேண்டும், அமைதியானதொரு வாழ்வை வாழ வேண்டும் என்ற நிறைவேற இயலா ஏக்கத்தை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறார். ஆனால் மக்களின் மனங்களில் விதைக்கப்பட்ட சிறைக்கம்பிகள் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டதை பில்கிஸ் உணர்ந்தது போல தெரியவில்லை. தனது வழக்கில் தீர்ப்புகள் ஆறு வருடங்கள் தாமதாமாக அல்ல மாறாக அடுத்த நிமிடமே 2002 மார்சிலேயே கொடுக்கப்பட்டுவிட்டதை அவர் உணரவில்லை இன்னும். அதனால்தான் இந்த ஏக்கம், எதிர்பார்ப்பு.

இந்த தீர்ப்பிற்க்கு பிறகு குற்றவாளிகளீன் சொந்த ஊரில் பதட்டம் நிலவுவதாக செய்திகள் கூறுகின்றன. பெரும்பான்மை இந்துக்கள் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கப்பட்டதில் கோபமுற்றுள்ளதாக செய்திகள் சொல்கின்றன. சிறைச்சாலை கம்பிகள் இன்னும் வலுவாக கட்டபடுகின்றன. பில்கிஸ் ஒரு நிரந்தரமான சிறைச்சாலையில் இருப்பதை உறுதிப்படுத்துவதைத்தான் இந்த தீர்ப்பு மேலதிகமாக செய்துள்ளது.

தீர்ப்பு குறித்து அத்தனை பார்ப்பன ஊடகங்களும் தலைமேல் வைத்து கொண்டாடுகின்றன. பிறகு இந்தியா மதச்சார்பற்ற நாடல்லவா? இஸ்லாமியர்களுக்கு நீதி வழங்கப்படுகிறது அல்லவா? தெஹல்கா விடீயோக்கள் வெளிவந்த போது இதே ஊடகங்கள் கள்ள மௌனம் சாதித்ததும். இல்லாத நீதி ஏதோ வழங்கப்பட்டுவிட்டதாக தற்போது பரபரப்பு ஊட்டுவதும் தற்செயலான நிகழ்வுகள் அல்ல. இவை பொது கருத்தில் வினையாற்ற ஏதுவாக அவர்கள் செய்யும் திட்டமிட்ட செயல் தந்திரம்.

பார்ப்பனிய பாசிசம் ஆட்சி செய்யும் இந்த போலி ஜனநாயகத்தில் சிறைச்சாலையும் அரசு இயந்திரத்தின் ஒரு பகுதிதான் என்ற உண்மை புரிந்தால் ஆளும் வர்க்கத்திற்க்கு கொடுக்கப்படும் தண்டனைகளின் தராதரம் நமக்கு புரிந்து விடும். ஒடுக்கப்படும் மக்களோ நிரந்தர சிறைக் கூடத்தில் இருக்கும் அவலம் புரிந்து விடும். இந்தியா என்னும் இந்த திறந்த வெளி சிறைக்கூடத்திலிருந்து அன்று விடுதலை கீதங்கள் முழங்கத் துவங்கிவிடும்.

அசுரன்

Related Posts with Thumbnails