TerrorisminFocus

Friday, January 30, 2009

உயிரை கொடுத்து உணர்வை வளர்த்தாய், நீ இட்ட தீ எரிந்து சமைக்கும் முத்துக்குமரா!!

தோழர் முத்துக்குமார் தன்னை எரித்து தமிழகத்தின் உண்ர்வை எழுப்பியுள்ளார். சரியான அரசியல் தலைமை இன்றி தடுமாறிய அவல தமிழகத்திற்கு சரியான அரசியல் திசை வழி காட்டும் ஒளி விளக்காக தன்னை எரித்து மாண்டு போனான் முத்துக்குமாரன்.

இந்த தீயின் வெம்மையில் ஈழத் தமிழரின் விடுதலைக்கு ஒரு புதிய அத்தியாயம் திறக்கப் பட வேண்டும். துரோகிகள் பொசுக்கப்பட வேண்டும். இந்திய தரகு முதலாளிகளுக்கு சாமரம் வீசி ஈழத்தில் எறிகணைகளை மழை போல் பொழியும் இந்திய மேலாதிக்க கனவுகள் பொசுக்கப்பட வேண்டும்.

முத்துக்குமார் இட்ட தீ தமிழ் சிந்தனை வெளி எங்கும் பற்றி படர்ந்து அரசியல் களத்தை சுற்றி சூழ்ந்து எரிக்கும் இந்த வேளையில், அவர் குறித்து வந்த பதிவுகள், பின்னூட்டங்களில் தெரித்த கருத்து முத்துக்களை இங்கு இடுவது நாம் அவரது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல உரமாக அமையும் என்று நம்புகிறேன்.

முத்துகுமாரின் இறுதி அறிக்கை!

ஈழமும் முத்துக்குமாரின் தியாகமும் - நமது கடமை என்ன?

ஈழம்: முத்துக்குமாரை கொன்ற தீ சுரணையற்ற மனங்களை சுடட்டும்!

கொதித்தெழு, புது உலக வாழ்வினை சமைத்திட…!

***************




""
த‌ற்கொலைகள் செய்துகொள்வது கோழைத்தனமான முடிவா ?
தற்போது சிலர் இதைப் போன்று முனகிக்கொண்டிருக்கிறார்கள். பொதுவாகவே தற்கொலைகள் அனைத்தும் கோழைத்தனமானவை அல்ல.அவை அனைத்தும் சமூகத்திற்கெதிரான விமர்சன‌ங்கள்.
ஒருவ‌ன் உயிரை இழக்க முன் வருவது அவ்வளவு சாதாரன காரியமா என்ன? அதிலும் ஒரு அர‌சியல் பிரச்சனைக்காக உயிரை இழக்க முன் வருவது சாதாரண செயல் அல்ல‌ அது ஒரு வீரச்செயலாகும்.முத்துக்குமார் தீக்குளித்து இறந்து போயிருப்பது என்பது கோழைப்பயல் சோதாராமன் காலத்திலிருந்தே நம்பியவரை முதுகில் குத்தி,குத்தியே பழக்கப்பட்ட‌ இந்திய பயங்கரவாத கும்பலுக்கு எதிரான ஒரு கலகமாகும்.
""
superlinks

*************


""முத்துக்குமார் உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிக்கவில்லை. உணர்வுப்பூர்வமாக சிந்தித்து, தனது மரணம் தோற்றுவிக்கக்கூடிய அரசியல் எழுச்சியை கற்பனை செய்து, அது நிச்சயம் நிறைவேறும் என்ற கனவுடன் தன்னைப் பொசுக்கியிருக்கிறார். மரணத்துக்கு முந்தைய சில மணித்துளிகளுக்கு முன்னால் கூட மருத்துவர்களிடமும், போலீசிடமும் தனது அரசியல் கோரிக்கைகளை நிதானமாக பேசியிருக்கிறார்.""
வினவு
*************

""ஒவ்வொரு தற்கொலையும் அநீதியான இந்த சமூக அமைப்பிற்கு எதிராக நடத்தப்படும் கலகம் என்றார் மாவோ. ""
வினவு
*************


""
இந்த சமூக அமைப்பின் அநீதிகளை எதிர்த்துப் போராடும் போராளிகளோ தமது உயிரை முன்னறிந்து இழப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். ஒடுக்குமுறைகளைக் கண்டு குமுறும் உள்ளம் தனது உயிரை துச்சமென மதித்து துறப்பதற்கு மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறது. தனிப்பட்ட வாழக்கைப் பிரச்சினைகளுக்காகவும், சமூகக் காரணங்களுக்காகவும் தற்கொலை செய்வதில் பாரிய வேறுபாடு இருக்கிறது. அதே சமயம் இரண்டுமே தன்னுயிரை வதைக்கும் சமூகக் கொடுமைகளை இறப்பதன் மூலம் தண்டிக்க நினைக்கிறது.
""
வினவு
*************

purachi, மேல் ஜனவரி 30th, 2009 இல் 15:29 சொன்னார்:

//முத்துக்குமார் உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிக்கவில்லை. உணர்வுப்பூர்வமாக சிந்தித்து, தனது மரணம் தோற்றுவிக்கக்கூடிய அரசியல் எழுச்சியை கற்பனை செய்து, அது நிச்சயம் நிறைவேறும் என்ற கனவுடன் தன்னைப் பொசுக்கியிருக்கிறார்.//

விசயம் இப்படியிருக்க எப்பொழுதும் போலவே நல்லவர்கள் சிலர் முத்துகுமாரை மூடனாகவும், உணர்ச்சிவசப்பட்டவராகவும், மூர்க்கனாகவும் சித்திரிக்க முயல்கிறார்கள்.

தனது பிரேதத்தையே ஒரு குறியீடாக பயன்படுத்தி ஈழ விடுதலை போருக்கான அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க சொன்ன, அந்த போராட்டத்திற்கு இந்திய சிறைக்கூடத்தில் வாடும் பிற தேசிய இனங்களின் ஆதரவை கோரிய ஒரு சீரிய சிந்தனை கொண்ட இளைஞனை இந்தளவுக்கு அவர்கள் கொச்சை படுத்துவது மன வேதனையளிக்கிறது.

பகத்சிங்கை மூடன் என்று சொன்ன அன்றைய இந்திய பெருந்தலைவர்கள் போலவே இன்றும் உள்ளனர்.

*************


வினவு, மேல் ஜனவரி 29th, 2009 இல் 23:50 சொன்னார்:

மேலதிக தகவல்
உயிருக்கு போராடிய அவரை சிகிக்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மருத்துவர்களிடம் பேசிய முத்துக்குமரன், தீக்குளித்த தன்னை யாரும் காப்பாற்றி விடக்கூடாது என்பதற்காக, பெட்ரோல் கேனில் பெரிய அளிவில் ஓட்டை போட்டு, மண்ணென்ணெய்யை தன் மீது ஊற்றிக்கொண்டதாக தெரிவித்தார்.

இப்படி புத்திசாலித்தனமாக இருக்கும் ஏன் தீக்குளித்தாய் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு, என்னைவிட புத்திசாலியான குழந்தைகள், சிறுவர்கள், வாலிபர்கள், பெண்கள் அனைவரும் இலங்கையில் கொல்லப்படுகிறார்கள். போர் முனையில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திதான் நான் தீக்குளித்தேன் என முத்துக்குமரன் தெரிவித்தார்.

மேலும் பேசிய முத்துக்குமரன், எங்கள் ஊரில் போருக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் அதிகம். உலக அமைதிக்காக போராடுபவர்கள் அதிகப் பேர் இருக்கிறார்கள். ‘கொள்கை நல்லூர்’ என்றே எங்கள் ஊரை சொல்லுவார்கள் என்றார். அந்த ஊரில் பிறந்த நான் ஈழத்தமிழர்களுக்காக உயிர் விடுவதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன் என்றார்.

இன்று காலை முத்துக்குமரன் தூத்துக்குடியில் இருக்கும், தனது தந்தை குமரேசனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது குடும்பத்தாரின் நலம் பற்றி விசாரித்த முத்துக்குமரன், தீக்குளிக்கும் சம்பவம் பற்றி தனது தந்தையிடம் எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார்.

26 வயதான முத்துக்குமரன், இலங்கை தமிழர்களுக்காக சென்னையில் எங்கு கூட்டம் நடந்தாலும், தவறாமல் கலந்து கொள்வார். பத்திரிக்கையில் தட்டச்சு பணியில் இருந்தாலும், தமிழ் உணர்வுள்ளவர் என்றும், ஈழத்தமிழர்களைப் பற்றி அன்றாடம் வேதனையுடன் பேசி வந்தவர் என்றும் முத்துக்குமரனுடைய நண்பர்கள் தெரிவித்தனர்.

செய்தி: நக்கீரன்

*************


""இந்தப் போராட்டத்தினூடாக நல்ல தலைவர்கள் உருவாவார்கள் என்ற நம்பிக்கையையும் விவரிக்கும் அந்தக் கடிதத்தை படிக்கும்போது நம் நெஞ்சம் பதைக்கிறது.""
வினவு
*************


""
வெள்ளைக்கார வேசிம‌க‌ன் பெத்தெடுத்த‌ ‌காங்கிர‌சு கும்ப‌ல் அவ்வ‌ப்போது மிர‌ட்ட‌ல் விட்டு வ‌ருகிற‌து.த‌மிழ் பிஞ்சுக‌ள் தாயிட‌ம் குடித்த‌ பால் எல்லாம் தெருக்க‌ளில் இர‌த்த‌மாக‌ ஓடி உறைகிற‌து.இன்றைக்கு ம‌ட்டும் ஈழ‌த்தில் முன்னூறு உயிர்க‌ளை பிடுங்கி எடுத்திருக்கிற‌து சிங்கள இந்திய‌ பாஸிச‌ம்.அவ‌னுக்கு கூட்டிக்கொடுத்து இந்த இன‌ப்ப‌டுகொலையை மிருக‌த்தினுடைய‌ மூர்க்க‌த்த‌ன‌மான‌ வேக‌த்துட‌ன்‌ ந‌ட‌த்திக்கொண்டிருக்கும் இந்திய‌ ப‌ய‌ங்க‌ராவாதிக‌ளை இங்கே [தமிழகத்தில்] எவ‌னும் ச‌ட்டைக்காலரை பிடித்து கேட்பதில்லை,எம்மக்களின் ப‌டுகொலைக‌ளுக்கு ப‌தில் சொல்ல‌டா நாயே என்று செவுள்களில் அறைந்து கேட்ப‌தில்லை
""
superlinks
*************

""த‌ன்னுடைய‌ ஓட்டுப்பொறுக்கி ப‌த‌விக‌ளை விட்டுவிட்டு இவ‌ர்க‌ள் ஈழ‌த்த‌மிழ‌னுக்காக‌ போராட முன் வ‌ர‌மாட்டார்க‌ள்.அப்ப‌டி வந்தால் என்ன‌ ந‌ட‌க்கும் என்பதும் இவ‌ர்க‌ளுக்கு ந‌ன்றாகத் தெரியும். ""
superlinks
*************

""அவரது கடிதம் ஈழமக்களைக் காப்பாற்ற முடியாமல் இருக்கும் சிக்கலை எல்லாக் கோணங்களிலும் விவரிக்கிறது. துரோகம் செய்யும் இந்தியாவைக் கண்டித்தும், அமைதியாக வேடிக்கைப் பார்க்கும் சர்வதேச சமூகத்தை கேள்வி கேட்டும், சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களை போர்க்குணமிக்க போராட்டத்தை துவங்குமாறு கோரியும், இந்தப் போராட்டத்தினூடாக நல்ல தலைவர்கள் உருவாவார்கள் என்ற நம்பிக்கையையும் விவரிக்கும் அந்தக் கடிதத்தை படிக்கும்போது நம் நெஞ்சம் பதைக்கிறது.""
வினவு
*************


""தீக்காயங்களால் கருகியிருக்கும் தனதுஉடலை புதைக்காமல் அதை ஒரு அரசியல் குறியீடாக்கி போராடுமாறு மாணவர்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்.""
வினவு
*************

""விடுதலைப் போராட்டம் என்பது தேதி குறிப்பிட்டுத் தொடங்குவதல்ல, தேதி குறிப்பிட்டு நிறைவுசெய்யப்படுவதுமல்ல என்றும், தங்களது போராட்டமும் தொடருமென அறிவித்தார். ஆம், கிளிநொச்சி வீழ்ந்தாலும், முல்லைத்தீவு வீழ்ந்தாலும், ஏன், பிரபாகரனுக்குப் பிறகும்கூட அங்குள்ள மக்களின் உரிமைப்போராட்டம் என்பது தொடர்ந்து கொண்டேதான் இருக்குமென்ற உறுதியான நம்பிக்கையுடன் அங்கிருந்து கிளம்பினேன்.""
அங்கூ.... அங்கூ...
*************


""இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தோழர்.மருதையன் அவர்களின் உணர்ச்சிகரமான பேச்சிலிருந்து நான் புரிந்துகொண்ட செய்திகள்:
இந்திய அரசு வர்த்தகரீதியாக இலங்கை அரசை ஆதரிக்கும் நிலைப்பாட்டைப் போட்டுடைத்தார். தமிழக அரசியல்கட்சிகளால் பரவலாகப் பேசப்படும், தவறான வழிகாட்டுதலால்தான் மன்மோகன்சிங் இலங்கைக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்ற கருத்து தவறென்பதை எடுத்துரைத்தார்.""
அங்கூ.... அங்கூ...
*************


""சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்புக்கான போரில் சுடுவதற்கென்றே இந்திய பீரங்கிகள் தமிழகம் வழியே அனுப்பப்பட்ட மண்ணில் எந்த ஆயுதமின்றி தனது உயிரை அழித்து ஒரு மாபெரும் ஆயுதத்தை தமிழக மக்களுக்கு வழங்கியிருக்கிறான் ஒரு வீரன். ""
வினவு
*************

purachi, மேல் ஜனவரி 30th, 2009 இல் 12:36 சொன்னார்:
//இன்று சென்னையில் எமது தோழமை அமைப்பான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அனைத்துக் கல்லூரி மாணவர்களையும் அணிதிரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இந்தப் போராட்டச் செய்திகளையும், படங்களையும் வரும் நாட்களில் வெளியிடுகிறோம்.//

வாழ்த்துக்கள். தன்னையே எரிபொருளாக்கி முத்துகுமரன் இட்ட தீ துரோகிகளையும், சிங்கள பாசிசத்தையும், இந்திய மேலாதிக்கத்தையும் சுட்டெரித்து சாம்பாலாக்கும் வரை கொழுந்து விட்டு எரியட்டும். மக்களின் செயலூக்கத்தை இது கட்டவிழ்த்துவிடட்டும்.

*************


""முத்துக்குமார் எனும் போராளியின் உடலைக் கருக்கிய தீயின் நாக்குகள் சுரணையற்றிருக்கும் மனங்களை சுட்டுப்பொசுக்கி திருத்தட்டும்.""
வினவு
*************

முத்து said...கருத்து;

இன்று முத்துகுமரன் என்னும் விதை விதைக்கபட்டு இருக்கிறது .விரைவில் அது ஆலமரமாய் வளர்ந்து உங்களை வேரறுக்கும்

*************


யாழ் - ஈச‌ன், மேல் ஜனவரி 29th, 2009 இல் 18:46 சொன்னார்:

தொப்புள் கொடி உறவு என்பதன் அர்த்தம் இதுதானா ?

உணர்வற்ற தமிழகமே என்று ஒருமுறை தெரியாமல் திட்டிவிட்டேன்.

ஐயனே, என்னை மன்னித்துவிடு.

*************


""முத்துக்குமார் தனது கடைசிக்கடிதத்தில்..

‘என் பிரேதத்தை உடனே எரித்து விடாதீர்கள். துருப்புச் சீட்டாக வைத்துக்கொண்டு முடிந்தவரை போராடுகள்’ என்று சொல்லியிருக்கிறார்.

அதனால் சீக்கிரத்தில் உடல் அடக்கம் செய்ய மாட்டோம் என்று மாணவர்கள் பிடிவாதமாக உள்ளனர். அவர்கள் மேலும், முத்துக்குமார் உடல் அடக்கம் செய்வதை பொறுத்தவரை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அரசியல் வாதிகள் தலையிடாதீர்கள் என்று சொல்லிவருகின்றனர்.

""

நங்கூரம்
*************

Voice on Wings said...கருத்து;

ஒரு சேர வரலாறு, இலக்கியம் எல்லாம் படைத்து விட்டுச் சென்று விட்டார் இந்த வீரச் சகோதரர். இது போன்ற ஒரு தெளிவான ஆவணத்தை இது வரை தமிழில் வாசித்ததில்லை. அவருக்கு எனது வீர வணக்கங்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது அஞ்சலிகள்.

பலரும் குறிப்பிட்டது போல், இது பல மொழிகளில் (முடிந்தால் இந்தியிலும்) மொழிபெயர்க்கப்பட்டு பரவலாகச் சென்றடைய வேண்டும். எல்லா முக்கிய தேசிய / பிராந்திய அரசியல் கட்சித் தலைமைகள், தொலைக்காட்சிகள், அச்சு ஊடகங்கள் ஆகிய எல்லாருக்கும் அனுப்பப் பட வேண்டும்.

*************


""ஆம் மரத்துப்போயிருக்கும் தமிழுலகில் ஒரு இளைஞன் ஈழத்திற்காக தன்னுயிரைப் பலிதானம் செய்திருக்கிறான். அவனுக்கு அஞ்சலி செலுத்த விரும்புகிறவர்கள் என்ன செய்யப் போகிறீர்கள் ?""
வினவு
*************


""சிங்கள அரசுக்கும், இந்திய மேலாதிக்க அரசுக்கும் எதிரான பிரச்சாரத்தையும் போராட்டத்தையும் மக்கள் மத்தியில் முடுக்கி விடுவதுதான் நமது பணி. முடங்க வேண்டிய நிர்ப்பந்தம் சந்தரப்பவாதிகளுக்கும் ஓட்டுக் கட்சி பிழைப்புவாதிகளுக்குமதான் இருக்கிறது. இது நாம் செயல்பட வேண்டிய தருணம். சிங்கள இனவெறி அரசுக்கும், அதனுடன் கைகோர்த்து நிற்கும் இந்திய அரசுக்கும் எதிரான பிரச்சாரத்தையும் போராட்டங்களையும் நாம் தீவிரமாக நடத்த வேண்டும். எமது அமைப்புக்கள் தமிழகமெங்கும் மக்களி மத்தியில் விரிவான பிரச்சாரத்தை எடுத்துச் செல்வதோடு ஆர்ப்பாட்டங்களையும் நடத்துகின்றன.""
வினவு
*************

Tuesday, January 27, 2009

ஒரு இந்தியனாக, சிங்களர்கள் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகிறேன்!!

லங்கை அணியுடன் கிரிக்கெட் விளையாட உள்ள இந்திய அணி தோல்வியடைந்து சிங்கள அணி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இந்தியர்கள், இந்தியர்களாக அங்கீகரிக்கப்படும் தகுதியுடையவர்கள், சிங்களர்கள் வெற்றியடையவே விரும்பும் போது ஒரு இந்தியனாக நானும் சிங்களர்களின் வெற்றியை விரும்புவது தவறில்லை என்று நம்புகிறேன்.

எனது ஜெய் ஹிந்த் வெறியை இங்கு பறைசாற்றுவதில் பெருமையடைகிறேன்.

தேச பக்தியுள்ள இந்தியர்களின் நல்லாதரவையும் இங்கு வேண்டுகிறேன்.

அங்கே படுகொலை செய்யப்படும் ஒவ்வொரு குழந்தையின், ஒவ்வொரு மகனின்/மகளின், ஒவ்வொரு கனவனின்/மனைவியின் உடலிலும் இந்திய துப்பாக்கி தோட்டாக்களும், பீரங்கி குண்டு சில்லுகளும் இருக்கும் என்பதை எண்ணி நாம் புளங்காகிதப்பட வேண்டிய நேரமிது.

இந்தியர்களாகிய நாம் இல்லாத இடமே இல்லை என்பதை எண்ணி பெருமைப்பட வேண்டிய நேரமிது. சந்திரனில் மட்டுமா நமது கருவிகள் தரையிறங்கியுள்ளன?

இதோ சிங்களர்களின் கைகளிலிருந்த இந்திய துப்பாக்கிகளின் கத்திகள்கூட ஈழத் தமிழ் பெண்களின் மார்புகளையும், யோனிகளையும் பதம் பார்த்து நமது இந்திய கருவிகளின் அடையாளத்தை சதையிறக்கிச் சென்றுள்ளன. ஜெய் ஹிந்த்!!

*****************

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது பிரதேச ஆதிக்கத்தை நோக்கமாக கொண்டதே ஆகும். இது தெரிந்திருந்தும் இந்தியாவிடமிருந்து எதையாவது பெற்று தப்பித்துவிடலாம் என்பது போல மாயையை உருவாக்கும் ஈழ ஆதரவு ஆட்களை இங்கு கடுமையாக விமர்சிக்கிறேன்.

உலகளவில் விடுதலை போராட்டங்களின், தேசிய விடுதலையின் எதிரி ஏகாதிபத்தியம் எனில் தெற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்க அடிவருடியான இந்தியாதான் எதிரி. அப்படியிருக்கு அமெரிக்க, இந்திய ஆதரவை வேண்டி நிற்பது ஏமாற்றே ஆகும்.

இந்த உண்மையை உற்று நோக்கும் திரணியற்ற, உரக்க அறிவுக்கும் துணிவற்ற ஈழ ஆதரவு ஆட்களை மிகக் கடுமையாக விமர்சிக்கிறேன். புலம்பி திரிவதில் எந்த பிரயோசனமும் இல்லை. பின் மண்டையில் துப்பாக்கி வைத்து மிரட்டும் ஆண்டையிடம் நியாயம் பேசுவதற்கு ஒத்த நாய்த்தனம் இது. சாவின் விளிம்பில் நம்மிடம் தெரிக்க வேண்டியது தார்மீக அவேசம்தானேயொழிய கழிவிரக்கமல்ல.

ஈழ விடுதலை என்பது மக்களை சார்ந்து நின்று மக்களால் பெறப்படவேண்டும். மாறாக மக்களின் சார்பில் நாம் பினாமி யுத்தம் நடத்தி பெற முடியாது. விடுதலை புலிகளின் அரசியல்லற்ற ஆயுத சாகச வழிபாடு இன்று ஈழ விடுதலையை கரை சேர்த்துள்ள இடம் இதுதான்.

இந்த வாழ்வா சாவா தருணத்திலாவது தமது தவறுகளை பரிசீலனை செய்து விடுதலை புலிகள் சரியான நிலைப்பாட்டுக்கு வருவார்கள் என்ற நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில் சந்தர்ப்பவாதத்தின் கடை கோடி எல்லைக்கு சென்றனர் புலிகள்.

சங்காராச்சாரியாரிடமும், RSS கும்பலிடமும், இந்து பார்ப்பன பயங்கரவாதிகளிடமும் ஆதரவு கோரிப் பெற்றது புலிகளை இன்னும் இன்னும் பலவீனமாக்கவே செய்யும். புலிகளுக்கு ஆதரவான ஜனநாயக சக்திகளை விரட்டியடிப்பதாகவே இந்த நடவடிக்கை இருக்கும்.

இந்திய மேலாதிக்க கனவுகளுக்கும் அதில் பொதிந்துள்ள இந்திய தரகு முதலாளிகளின் பேராசைகளுக்கும், ஏகாதிபத்திய நலன்களுக்கும் எதிராக இந்திய மக்களின் கருத்தை ஆதிக்கம் செய்யவல்ல அரசியல் கொண்ட ஒரு செயல்பாடே இந்திய ஆளும் வர்க்கங்களை ஈழ போராட்டத்தில் பின்னடையச் செய்யும். மாறாக இந்திய ஆளும் வர்க்கங்களிடையே உள்ள சிற்சில முரன்பாடுகளை மட்டும் வைத்தே ஒட்டு மொத்தமாக அவர்களை பின்னடையச் செய்ய முடியும் என்று நம்புவது படு முட்டாள்தனமானது.

ஆனால் அப்படிப்பட்ட நம்பிக்கையைத்தான் ஈழ விடுதலையின் ஒட்டு மொத்த தமிழக பிரதிநிதிகளாக முன்னிறுத்திக் கொள்ளும் பிழைப்புவாதிகள் மக்கள் மனதில் விதைத்து வருகிறார்கள்.

இந்திய அரசை விமர்சனம் செய்வதில் அவர்களுக்கு இத்தனை தயக்கம். அதன் நோக்கங்களை அம்பலப்படுத்துவதற்கு இத்தனை பயம். கிசு கிசு போல பேசுகிறார்கள். ஆணித்தரமாக அடித்து பேச தொண்டை குழி தயங்குகிறது.

ஆனால் இதே வாயால்தான் கூசாமல் தமிழனின் தலைகுனியத்தக்க மோன நிலையை விமர்சிக்கிறார்கள். இது தலைகுனியத்தக்கதுதான் ஆனால் இந்த மோனநிலைக்கு காரணம் மேற்சொன்ன ஆட்களுடைய சந்தர்ப்பவாத, மோசடி அரசியல்தான் என்பதையும், ஏகாதிபத்தியத்தின் நுகர்வு கலாச்சாரம்தான் என்பதையும் விமர்சனம். சுயவிமர்சனம் செய்து கொண்டு தமிழனை விமர்சிப்பதே தகும்.

புலிகளை சிங்களர்கள் அழித்துவிடுவார்கள் என்பதை நான் நம்பவில்லை. அது நடக்கவே நடக்காது. ஆனால் புலிகள் இதே போல செயல்படுவதை தொடர்ந்தால் ஈழ மக்களே அவர்களை வரலாற்றின் பக்கங்களில் கரைத்துவிடுவார்கள். உணர்ச்சிவசப்படும் புலி ஆதரவாளர்கள் யாதார்த்தத்தை கண் கொண்டு நோக்க வேண்டப்படுகிறார்கள்.

இதோ கண் முன்னே ஒரு சமூகம் அழிகப்படுகிறது. இன்றைக்கு சிங்களர்களின் கைக்கு வந்துள்ள பிரதேசங்களில் பன்னாட்டு மூலதனம் வெறி கொண்டு இறங்கும். நுகர்வு கலாச்சாரம் பரப்பப்படும். பல ஆண்டுகளாக யுத்தம் ஏற்படுத்திய காயங்களை ஏகாதிபத்திய நுகர்வு கலாச்சார போதையில் மூழ்கி மக்கள் மறக்க முயலுவார்கள். இதனை எதிர்கொள்ளூம் சரியான அரசியலை கொண்டிராத ஒரு இயக்கமோ ஏகாதிபத்தியத்தின் இந்த தாக்குதலில் பழம் பொருள் காட்சியகத்தின் பெட்டகங்களில் முடங்கிவிடும்.

ஏனேனில் மக்களின் பினாமிகள் வரலாற்றில் அடையாளம் இழப்பதுதான் எப்போதுமே நடந்துள்ளது.

ஆனால் ஈழ விடுதலை? அது வரலாற்றின் தேவை. அது இன்றைக்கு இல்லாவிடிலும் என்றைக்காவது தனக்கான சரியான வாகனத்தை தேர்ந்தெடுத்து கரை சேர்ந்துவிடும்.

அசுரன்

ஈழம்: தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் போராட்டம் !

கருணாநிதியின் இறுதி நாடகம்?

ஈழம் - இந்தியா முதுகில் குத்துவது ஏன்?

கருத்துப்படங்கள்

விடுதலைப்புலிகள் தவறுகளை உணர்ந்து திருந்தி விட்டார்கள்!?

தமிழீழம் என்ற கோரிக்கை அரசியல் ரீதியாகவே மரணித்துவிட்டது

இந்தியாவும் தமிழீழமும்

Wednesday, January 14, 2009

முதலாளித்துவம் கொல்லுது - சத்யம் IT ஊழியரின் தற்கொலை

தற்கொலை செய்து கொண்ட சத்யம் ஊழியர்


த்யம் கம்பேனி 420 வேலை செய்து மாட்டிக் கொண்ட கதை இப்போது அனைவருக்கும் தெரிந்த விசயமாகிவிட்டது. இதே போல ஊழல் குற்றச்சாட்டில் விப்ரோ நிறுவனமும் அசிங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை ஒட்டிய கிளைக் கதையில் இன்போசிஸ் நாராயணமூர்த்தி கும்பலை சேர்ந்தவரின் பாலியல் வக்கிர கதைகள் மீண்டும் அரங்கிற்கு வந்து அசிங்கப்பட்டது.

இத்தனை அயோக்கியத்தனமும் செய்யும் இந்த பகாசுர சூதாட்ட முதலாளிகள், 420 பேர்வழிகள் எந்த தண்டனையும் அனுபவிப்பது இல்லை. ஆனால் எந்த தவறும் செய்யாதா அந்த நிறுவனங்களில் பணி புரிபவர்கள்தான் இதன் கஸ்டங்களை அனுபவிக்கிறார்கள். இந்திய தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி கொழுத்த பணம் சேர்த்த தொழில்துறை முதலாளிகள் அந்த பணத்தை சூதாடி தோற்றனர். இன்று சூதாட்டத்தின் நஸ்டத்தை தொழிலாளர் தலையில் சுமத்தி வேலையை விட்டு நீக்குகிறார்கள், வயிற்றில் அடிக்கிறார்கள்.

அது போலவே இந்திய IT துறை சுதாடிகளும், 420 களும் செய்கிறார்கள். கடந்த சில மாதங்களில் பல ஆயிரக்கணக்கானவர்கள் வேலையை விட்டு தூக்கப்பட்டுள்ளனர் IT துறையில். IT துறை சூப்பரு சூப்பரு என்று சொல்லி எல்லாரையும் அதனையே படிக்க சொல்லி ஊக்கப்படுத்திய அரசுகளோ இன்று IT துறை கவிழ்ந்து கிடக்கும் நேரத்தில் முதலாளிகளுக்கு அறிவுரை வழங்கி காப்பாற்றுகிறது. இந்த அரசை நம்பி IT படித்தவர்களைப் பற்றியோ அல்லது விவசாயம் செத்து போனதால் நகரத்துக்கு வந்த தொழில்சாலை தொழிலாளி பற்றியோ இந்த அரசுக்கு கவலையில்லை. வாழ்வையிழந்த, எதிர்காலம் நிச்சயமற்ற சதாரண மக்களுக்கு வாய்க்கரிசி போட வருகிறது அரசு. முதலாளிகளுக்கோ சின்ன எறும்பு கடி என்றால் கூட பெயில் அவுட் எடுக்கிறது.

வெட்கமின்றி கொஞ்சம் கூட பயமின்றி சத்யம் கம்பேனியில் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய சொல்லி அறிவுரை செய்துள்ளது இந்திய அரசு. இதன் மூலம் அதனது லாபம் 20% அதிகமாகும் என்று இந்த அறிவுரையை சொல்லியுள்ளது. இந்த அறிவிப்பு நடைமுறைக்கு இன்னும் வரவில்லை என்று நாம் எண்ணியிருந்த வேளையில் மேலே பதியப்பட்டுள்ள சத்யம் ஊழியரின் தற்கொலை செய்தி வெளி வந்துள்ளது. அவரை வேலையை விட்டு தூக்கியதால் அவர் தற்கொலை செய்துள்ளார் என்று தெரியவருகிறது.

எந்தளவுக்கு இந்த அரசு IT ஊழியர்களையும், இந்திய தொழிலாளர்களையும் கேவலமாக, முதுகெலும்பு அற்றவர்களாக நினைத்திருந்தால் 10,000 பேரை வேலையை விட்டு தூக்கிவிட அறிவுரை சொல்லியிருக்கும். மோசடி செய்தவனெல்லாம் சொகுசாக வலம் வருகிறான். வயிற்றுப் பிழைப்புக்கு கிடைத்த வேலையை செய்யும் சதாரணம் மக்களோ இப்படி உடனுக்குடன் தண்டனை அனுபவிக்கிறார்கள்.

ஒரு படத்தில் வடிவேலு சொல்லுவார், ஓரமா நின்னு பாத்தத்துக்கு தண்டனையாடா என்று அது போல முதலாளிகளின் மோசடிகளை நாம் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்ததற்கு நமக்கு தண்டனையா? இனிமேலும் இதை அனுமதிக்க முடியாது. இவர்கள் இனிமேலும் இந்த நாட்டை அதன் உற்பத்தியை நிர்வாகிக்கும் தகுதியை கொண்டிருக்க முடியாது. நாம்தான், மக்கள்தான் அனைத்தையும் உருவாக்குகிறோம் இதனை நாமே நிர்வாகிப்போம்.

தனிமனித லாப வெறியில் வித விதமாக சூதாடி, மோசடி செய்து, சதி திட்டம் தீட்டி நாட்டை நாசமாக்கும் பன்னாட்டு, தரகு பாகசுர முதலாளிகளை நாட்டை விட்டு விரட்டினால்தான் அனைவருக்கும் விடுதலை. வருத்தபப்ட்ட பாரம் சுமந்தது போதும் IT ஊழியர்களே. உங்களது சகோதரர்கள் உங்களுடன் தான் இருக்கிறார்கள். சிறிது கண் திறந்து பாருங்கள்.

முதலாளித்துவம் கொல்லும்! கம்யுனிசமே வெல்லும்!!

அசுரன்

ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா !!

விப்ரோ, சத்யம் போன்ற கம்பேனிகள் மோசடி 420 பேர்வழிகள் - உலக வங்கி அறிவிப்பு!!

வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் IT ஊழியர்களே! உங்கள் பாரங்களை (முன்னாள்)சத்யம்-ன் பிராபாத்திடம் இறக்கி வையுங்கள்!!

இங்கு கிழிந்த டவுசருக்கு மாற்றாக புது டவுசர் கிடைக்கும்!! - ரொம்ப நல்லவர்கள் கடை!!

அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது!

ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை!

Monday, January 12, 2009

விப்ரோ, சத்யம் போன்ற கம்பேனிகள் மோசடி 420 பேர்வழிகள் - உலக வங்கி அறிவிப்பு!!

லக வங்கி இனிமேல் விப்ரோ கம்பேனியுடன் எந்த ஒரு வர்த்தக தொடர்பும் வைத்துக் கொள்ளாது என்று தடை செய்து விட்டது. இது போல தடை செய்யப்பட்ட கம்பேனிகள் சத்யம், விப்ரோ, மற்றும் மெகா சாப்ட். தடை செய்யக் காரணம் இவை மோசடியான நடைமுறை கொண்டவை, உலக வங்கி ஊழியர்களை ஊழல்படுத்துகின்றன இந்த கம்பேனிகள், வெளிப்படையான நடைமுறை இல்லாதவர்கள், தகவல்களை சரியாகக் கொடுக்காமல் ஏமாற்றுபவர்கள். இந்த கம்பேனிகள் மோசடி மற்றும் ஊழல் குறித்த உலக வங்கியின் கொள்கைகளின் அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ளன. பட்டியலை விரைவில் வெளியிட இருக்கிறது உலக வங்கி.

இது குறித்து விப்ரோ கம்பேனி சம்பந்தமில்லாமல் கருத்து சொல்லியுள்ள நிலையில் உலக வங்கியானது தெளிவாக குறிப்பிட்டுவிட்டது, அதாவது தனது ஊழியர்களுக்கு கிடைத்த நியாயப்படுத்தமுடியாத அணுகூலகங்கள்தான் இந்த கம்பேனிகளை தடை செய்ய காரணம் என்று. இந்த நியாயப்படுத்த முடியாத அணுகூலம் என்ற வார்த்தை ஊழல், லஞ்சம் என்பதின் நாகரிகமான வடிவமேயன்றி வேறல்ல.


""
However, the World Bank said the ban was for improper benefits to its staff.
""

கீழே கொடுக்கப்பட்டுள்ள சரத்துதான் சத்யம், விப்ரோ போன்ற திறமையாளர்களை தடை செய்ய உலக வங்கி கூறும் காரணம்.


Fraud and Corruption

1.14 It is the Bank’s policy to require that Borrowers (including beneficiaries of Bank loans), as well as bidders, suppliers, and contractors and their subcontractors under Bank-financed contracts, observe the highest standard of ethics during the procurement and execution of such contracts. [18] In pursuance of this policy, the Bank:

(a) defines, for the purposes of this provision, the terms set forth below as follows:

(i) “corrupt practice” [19] is the offering, giving, receiving or soliciting, directly or indirectly, of anything of value to influence improperly the actions of another party;

(ii) “fraudulent practice” [20] is any act or omission, including a misrepresentation, that knowingly or recklessly misleads, or attempts to mislead, a party to obtain a financial or other benefit or to avoid an obligation;

(iii) “collusive practice” [21] is an arrangement between two or more parties designed to achieve an improper purpose, including to influence improperly the actions of another party;

(iv) “coercive practice” [22] is impairing or harming, or threatening to impair or harm, directly or indirectly, any party or the property of the party to influence improperly the actions of a party;

(v) "obstructive practice" is

(aa) deliberately destroying, falsifying, altering or concealing of evidence material to the investigation or making false statements to investigators in order to materially impede a Bank investigation into allegations of a corrupt, fraudulent, coercive or collusive practice; and/or threatening, harassing or intimidating any party to prevent it from disclosing its knowledge of matters relevant to the investigation or from pursuing the investigation; or

(bb) acts intended to materially impede the exercise of the Bank’s inspection and audit rights provided for under par. 1.14 (e) below.

இது குறித்த தகவல் தந்த பிராக்னோஸ்டிக் சேஜ் க்கு நன்றி. பிராக்னோஸ்டின் பின்னூட்டம்(சுருக்கப்பட்டது):


""""
விப்ரோ கம்பேனியுடன் பிசினஸ் செய்வதை 2011 வரை தடை செய்துள்ளது உலக வங்கி. ஏற்கனவே இது போல போன வாரம் சத்யம் கம்பேனியை தடை செய்தது உலக வங்கி. இப்போழுத் விப்ரோ இத்துடன் சேர்ந்து இன்னொரு கம்பேனியும். இது போல உள்ள கம்பேனிகளின் லிஸ்டை வெளியிட இருக்கிறார்கள்.

இவர்களை தடை செய்வதற்கு உலக வங்கி சொல்லும் காரணம்:
"Improper benefits to Bank staffs".

இந்த கம்பேனிகள் தமது கிளையண்டை பிடிக்க எல்லா வகை மோசடிகளீலும் ஈடுபடுவார்கள். வெளியே ரொம்ப யோக்கிய கனவான்கள் போல வேசமிடம் இவர்கள் (நீல்கேனி போன்றவர்கள்) உண்மையில் இப்படிப்பட்ட 420 கும்பல்கள்தான். அவர்கள் கிளையண்டை பிடிக்க செய்யும் மோசடிகள்

ஊற்றிக் கொடுப்பது முதல் கூட்டிக் கொடுப்பது வரை அடங்கும்.

சமீபத்தில் வினிதா என்கிற நடிகை மாட்டிக் கொண்ட சம்பவத்தில் அவருடன் இருந்த வெளிநாட்டு கிளையண்டும், இந்திய கம்பேனியும் சேர்ந்து அம்மணமாக நின்றனர்.

அது போல ஊழல்படுத்தி உலக வங்கி ஊழியர்களை தன் வசப்படுத்தினார்கள் என்பதே இவர்களை தடை செய்ய உலக வங்கி சொல்லும் குற்றச்சாட்டு.

அவர்கள் சொல்லும் இன்னொரு குற்றச்சாட்டு இவர்கள் வெளிப்படையான நடைமுறை கொண்டவர்கள் அல்ல என்பது.


http://web.worldbank.org/WBSITE/EXTERNAL/NEWS/0,,contentMDK:22030864~pagePK:64257043~piPK:437376~theSitePK:4607,00.html
""
This change was made in the interest of fairness and transparency.
""

இப்படிப்பட்ட கம்பேனிகளை பிராடு அன்டு கரப்பசன் (மோசடி மற்றும் ஊழல்) பக்கத்தில் இட்டுள்ளது உலக வங்கி.


""""


""""
இப்படி பொய் சொல்லி மோசடி செய்து மாமா வேலை செய்யும் இந்த கம்பேனிகளும், முதலாளிகளும் தான் இந்தியாவை வளர்க்கிறார்களாம், திறமையானவர்களாம்.

விவசாயியும், மக்களும் திறமையற்றவர்களாம் மோசடிக்காரர்களாம். போங்கடாங்....

இந்த பச்ச புள்ளகளத்தான் நம்ம அரசியல்வியாதிங்க கெடுத்துட்டாங்களாம்... ஏதோ ஒரு படத்துல சத்யராஜ் சாராயம் குடித்ததற்கு கவுண்டமணியை திட்டும் மனோராமா அது மாதிரி, இந்த ஊழல் சிகாமணிகள்தான் அரசியலையும், அரசையும் ஊழல்படுத்தி தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.


////புகுந்த(அரசியல்) கொஞ்ச நாட்களிலேயே சத்யம் அப்படிங்கிற மிகப்பெரிய கம்பெனியை காலி பண்ணிட்டாங்க. ////

தகவல் தொழில்நுட்பத் துறை மட்டுமல்ல ஒட்டு மொத்த கார்போரேட் முதலாளித்துவ கும்பலே ஊழல் கும்பல்தான்.

"முதலாளித்துவம் இயங்குவதே இந்த அரசை ஊழல் படுத்துவதன் மூலம்தான்"

முக்காலமும் உணர்ந்த முனிவன்


""""


அசுரன்

தொடர்புடைய பதிவுகள்:

ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா !!

ராமலிங்க ராஜூ கோவிந்தா, கோவிந்தா

வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் IT ஊழியர்களே! உங்கள் பாரங்களை (முன்னாள்)சத்யம்-ன் பிராபாத்திடம் இறக்கி வையுங்கள்!!

Tuesday, January 06, 2009

வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் IT ஊழியர்களே! உங்கள் பாரங்களை (முன்னாள்)சத்யம்-ன் பிராபாத்திடம் இறக்கி வையுங்கள்!!

பொருளாதார சீர்குலைவு சில சமயம் மேட்டுகுடியினரையும் பாதித்து விடுகிறது. சத்யம் கம்பேனியின் இயக்குனர் ராஜு வரவு செலவு கணக்கில் மோசடி செய்ததை ஒப்புக் கொண்டு பதவி விலகியுள்ளார். பாகசுர கம்பேனிகள் தமது வரவு செலவில் எப்போதுமே மோசடிதான் செய்கின்றன என்பது இங்கு கவனிக்க வேண்டிய விசயம். இது ஒரு பக்கம் இருக்க. அசுரன் தளத்தில் டிசம்பர் 2006ல் IT ஊழியர்களுக்காக ஒரு கட்டுரை இடப்பட்டது. அது இங்கே மறு பிரசூரம் செய்யப்படுகிறது.

சத்யம் கம்பேனி கவிழ்ந்து கிடப்பதற்கும் பழைய IT ஊழியர் கட்டுரையை மறுபிரசூரம் செய்வதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?

இருக்கிறது நண்பர்களே. சத்யம் கம்பேனியின் நிறுவனர்களில் ஒருவராகிய, இன்றைக்கு வேறு ஒரு கம்பேனியின் இயக்குனராக இருக்கும் G. B. பிரபாத், உலகமயம், முதலாளித்துவ பொருளாதாரம், மிக குறிப்பாக IT துறை குறித்து கடுமையான விமர்சனங்களுடன் எழுதிய ஒரு நாவலை முன்னிட்டே இந்த பதிவு எழுதப்பட்டிருந்தது.

வெறுமனே நாம் IT துறை குறித்து பேசுவதற்கும் அதே உண்மைகளை அந்த துறையின் தலைமை சக்திகளில் ஒருவரின் வாயிலிருந்தே கேட்பதற்கும் வித்தியாசம் உள்ளது என்பதால் பிரசூரிக்கப்படுகிறது. IT ஊழியர்களின் கருத்தை அறியும் ஆர்வத்தில் அது அப்பொழுது பிரசூரிக்கப்பட்டது. இதோ மீண்டும் அந்த கட்டுரையின் தேவை எழுந்துள்ளது. எனவே மறுபிரசூரம்.

ஆரோக்கியமான விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதனையும் படிக்கவும்:
ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா !!

வாழ்த்துக்களுடன்,
அசுரன்

__________________________________




லேஆப்ஃ(Lay Off), லேஆப்ஃ குறித்த பயம், சந்தையின் உத்திரவாதமின்மை மற்றும் பங்கு சந்தை சரிவு குறித்த பயம், தாரளமாக சகட்டு மேனிக்கு முதலீடு செய்தல், வார இறுதி நாட்களில் தலையை அடகு வைத்தாவது இன்பம் நுகர எத்தணிப்பது, வீட்டுக்கள் ஒருவர் வேலை முடித்து வரும் பொழுது இன்னொருவர் வேலைக்கு கிளம்பும் ஒரு விதமான உறவு முறை இயல்பாக மாறிப் போனது, நுகர்வு வெறி, தனக்கு முடியாத அளவுக்கும் அதிகமாக விசயங்களை இழுத்துப் போட்டுக் கொள்வது, தன்னையே சந்தேகப்படுவதும், தன்னைச் சுற்றி உள்ளவர்களை சந்தேகப்படுவதும் - இவையெல்லாம் உலகமயம் இந்தியாவுக்கு கொடுத்த பரிசுகள் என்று நாங்கள் சொல்லவில்லை. சத்யம் நிறுவனத்தின் இணை நிறுவனர் G.B. பிரபாத் சொல்கிறார்.

இந்த விசயங்கள் எல்லாம் சேர்ந்து உலகமய பொருளாதார அமைப்பில் பின்னி பிணைந்துள்ள அனைத்து வர்க்கங்களையும், அனோமிய் என்ற மனோநோய்க்கு இட்டுச் செல்கிறது. இந்த அனோமிய் பின்புலமாக கொண்டு ஏகாதிபத்திய சமூக அமைப்பை கலாச்சார, பண்பாட்டு தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்து ஒரு நாவல் எழுதியுள்ளார் பிரபாத்.

அதாகப்பட்டது, உலகமய பொருளாதாரத்தின் உடன் விளைவாக அது சார்ந்த உற்பத்தி உறவுகளில் ஈடுபட்டுள்ள மனிதர்களுக்கு வரும் மனோவியாதியை அடிப்படையாகக் கொண்டு சத்யம் கம்யுட்டரின் இணை நிறுவனர்(Co Founder) G.B. பிரபாத் ஒரு நாவல் எழுதியுள்ளார். அது குறித்து இந்து பத்திர்க்கையின் மெட்ரோப்ளஸ் அவரை அணுகி ஒரு சிறிய உரையாடல் ஒன்றை நடத்துகிறது. அந்த அனுபவம் ஒரு சிறு கட்டுரையாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.

உலகமயத்தின் பலன்களை அனுபவித்தவர்களில் ஒருவரான அவர், உலகமயம் சார்ந்த சுரண்டல் பொருளாதாரத்தின் அடிப்படையில் இந்தியாவின் முகத்தை மாற்றியவர்களில் முக்கியமானவரான அவர், அதன் பின் விளைவுகள் அவருடன் உற்பத்தி ரீதியாக நெருங்கிய தொடர்புள்ள வர்க்கத்தினரையே(IT employee etc) பாதிப்பதை உணர்கிறார். ஆக, அந்த அம்சத்தில் உலகமயத்தின் மோசமான பக்கங்களை அம்பலப்படுத்துகிறார். உலகமய ஏகாதிபத்திய பொருளாதாரத்தை அவர் படு மோசமான அளவு விமர்சிப்பதாக மெட்ரோ ப்ளஸ் சொல்லுகிறது.

தரகு வர்க்க பிரபாத் சொல்கிறார்: "நான் பங்களித்து உருவாக்கிய ஒரு உலகம் எனது மனதை கவர்தாக இல்லை". "சில நேரங்களில் நம் நோக்கத்திற்க்கு மாறான விசயங்களை உருவாக்கி விடுகிறோம்".

யுப்பி கலாச்சாரமும், தனி மனித நுகர்வு வெறியும், ஒட்டு மொத்த சமூகத்தின் உயர் பண்புகள் அதலபாதளத்தில் புதைக்கப்பட்டும் உள்ள சூழலில் (இது பொதுவாக புரட்சிகர சூழலுக்கு முந்தைய சூழல்தான்) இது போன்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதில் அவரது தொழில் துறையின் பங்களிப்பை மதிப்பிட்டு கூறியவைதான் மேலெயுள்ள அவரது வரிகள்.

வேலைவாய்ப்பு, ஐந்திலக்க சம்பளம், சராசரியை விட சிறிது(சிறிது மட்டுமே) சுகமான(சுகாதாரமான அல்ல) வாழ்க்கை இவற்றை காரணம் காட்டி உலகமயத்திற்க்கு ஆதரவாகவும், தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்களின் உரிமைகளுக்கான குரல்களுக்கு எதிராகவும் கோசமிடும் IT தொழிலாளர்களை இங்கு விவாதம் செய்ய அழைக்கிறேன். உங்களது துறையைச் சேர்ந்த முன்னணி வீரர் ஒருவர் வாயிலிருந்துதான் நாங்கள் சுட்டிக் காட்டும் அதே பிரச்சனைகள் பற்றிய அங்க்லாய்ப்பு வந்துள்ளது.

நாங்க சொன்னாக்க நம்ப மாட்டீங்க. இவர் சொல்றாரே என்ன சொல்லப் போறீங்க....?

'அமெரிக்காவின் மிகபரவலான நோய் - தனிமை' இது இந்தியாவில் இப்பொழுது பரவி வருகிறது என்கிறார் இவர். மேலும், 'இங்கு தனிமையில் இருப்பவர்கள் பெரும்பான்மையாகவும், பிறர் அவர்களிடமிருந்து துண்டிக்கப்பட்டும் உள்ளன்ர். இந்த புதிய சூழலுக்கு சரியான பெயர் வைக்க விரும்புகிறேன்' என்கிறார். தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள் யாரேனும் இந்த பெயர் வைப்பு வைபவத்திலும் அவருக்கு உதவலாம்.

பொருள் நுகர்வு நாட்டம், கட்டவிழ்த்து விடப்பட்ட முதலாளித்துவம், தொழில்நுட்ப சாதனங்களைச் சார்ந்த ஒரு வாழ்க்கை இவை அனைத்தும் சேர்ந்து உருவாக்கும் ஒரு நிச்சயமற்ற சமுதாயம் குறித்த நிலையை சித்த்ரிக்கிறது அந்த நாவல். ஆயினும் இன்றைய இந்தியாவின் இளைய சமுதாயம் அப்படிப்பட்ட ஒரு சமூக வாழ்வை அடைவதைத்தான் லட்சியமாகக் கொண்டுள்ளனர்.

"ஆனால் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது. அப்படி ஒரு நிலை இருப்பதை நாம் உணர்வதில்லை அல்லது அதிலிருந்து ஓடி ஒளிய விரும்புகிறோம். முரன்நகையாக, தகவல் தொடர்பின் உச்சத்தில் உள்ள ஒரு உலகத்தில், தனிமையும், அதீத அச்சமும், மனச் சஞ்சலுமும்தான் அதிகப்படியாக உணரப்படுகிறது. எந்த ஒரு உறவும் உத்திரவாதப்படுவதாக இல்லை." இப்படி சொல்வது நாம் அல்ல. ஏகாதிபத்தியத்தின் குலக் கொழுந்து திருவாளர் பிரபாத், சத்யம் இணை-நிறுவனர் கூறுகிறார்.

"அதிகப்படியான தனிமனித வாதம் நிலவுகிறது, முற்றுமுதலாக நாம் தனி மனித மோக வயப்பட்டுள்ளோம், நாம் இணையத்தின் மூலமாக ஒரே ஒரு நபரிடம் மட்டுமே தொடர்பு கொள்கிறோம் அது நாம்தான்' - இப்படி ஏகாதிபத்திய தனிமனித வாதத்தின் அவலத்தை அம்பலப்படுத்துகிறார் பிரபாத்.

"எனது தாத்தாவோ அல்லது உங்களது தாத்தாவோ தனது வேலையை இழந்து விடுவது குறித்தோ அல்லது தனது மனைவி தன்னைவிட்டு விலகிவிடுவது குறித்தோ கவலைப்பட்டதுண்டா?" இப்படி கேட்ப்பது நாமல்ல. இது போன்ற நிலையிலுள்ள வர்க்கத்தை சுரண்டி, கொழுத்த லாபம் சேர்க்கும் தரகு வர்க்க முதலாளி பிரபாத் கேட்க்கிறார்.

சொல்லுங்கள் IT தொழிலாளர்களே என்ன பதில் சொல்லலாம் என்று? பிரபாத் உங்களுக்கு உலகமயத்தின் நன்மைகள் பற்றி தெரியாது என்று அறீவுரை பகர்வோமா? தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு சாலவும் சிறந்த் ஒரு எதிர்காலம் ஒளிமயமாக காத்திருக்கிறது, உங்களது பயம் ஒரு துர் கனவு என்று ஆலோசனை சொல்லுவோமா? வேலை வாய்ப்பு குறித்து RBIயும் சொல்கிறது, உலகமயத்தின் சாரதிகளில் ஒருவரும் சொல்கிறார் இன்னுமா மயக்கம்?

அவர் தொழில்நுட்பம் முதலாளித்துவ/ஏகாதிபத்தியத்தின் கையில் மாட்டிக் கொண்டு படும் பாடு குறித்தும் குத்திக் காட்டுகிறார், "தொழில்நுட்பத்தை நாம் எப்படி கையாளுகிறோம் என்பதிலும் அதை வைத்து என்ன செய்ய விரும்புகிறோம் என்பதிலும் தான் விசயம் உள்ளது. தொழில்நுட்பம் என்பதை பொருத்தளவில் தன்னளவில் எந்த ஒரு நல்லது கெட்டதுகளை கொண்டிருப்பதில்லை."

முதலாளித்துவத்தின் இழி நிலை குறித்து அவர் மேலும் குறிப்பிடுகிறார். "முதாலாளித்துவத்தால் செலுத்தப்படும் தொழில் நுட்பம் குறித்து யாரேனும் எச்சரிக்கை செய்து கொண்டிருக்க வேண்டும்". "முதலாளித்துவம் நமது உள்ளுணர்வுகளை கட்டவிழ்த்து விடுகிறது, நாமோ நம்மைச் சுற்றியுள்ள எல்லாமே நம்க்கு தீங்கு விளைவிக்கும் என்றூ பார்க்கிறொம்'. இதே விசயத்தைத்தான் இயற்கையுடன் முரன்படும் ஏகாதிபத்தியம் என்ற தலைப்பில் இரு கட்டுரையாக இங்கு பிரசுரிக்கப்பட்டது.

பிரபாத்தின் இந்த கட்டுரை கூட தனிமனித வாதத்தின் அடிப்படையில்தான் பிரச்சனையை அணுகுகிறது. அது எந்த அம்சத்திலும் உலகமய பொருளாதாரத்தில் ஆதாயமடையும் துறைகளில் ஏற்ப்படும் விளைவுகளை சித்தரிப்பதைத் தாண்டி, இதே பொருளாதாரம் இந்தியாவின் இதர பெரும்பான்மை மக்களின் வாழ்வை சுனாமியாக சூறையாடி இருப்பது குறித்து எதுவும் சொல்லுவதாக தெரியவில்லை.

நாம் எதை இழந்து எதை பெறுகிறீர்கள்? கணிணியுடன் இணைந்து அதன் ஒரு உறுப்பாக மாறி சொந்த வாழ்க்கையை இழப்பதுடன், சமூக வாழ்க்கையையும் இழந்து திக்கற்ற நிற்கிறோம். எந்த ஒரு தொழிலில் ஈடுபடுபவனுக்கும், அந்த தொழிலில் ஈடுபடும் உடல் உறுப்பு(கை, கால், விரல் etc) செய்யும் வேலைக்கேற்ற பாதிப்பை அடையும். அப்படியெனில் கணிணியின் ஒரு அங்கமாக மாறிப் போன நமது மூளைக்கு என்னவிதமான பாதிப்பு ஏற்ப்படுகிறது?
பெங்களூரில் போன வருடம் தற்கொலை செய்து கொண்டவர்களில் பெரும் சதவீதத்தனிர் IT துறையினர் என்ற விசய்ம் நமக்கு எதை உணர்த்துகிறது? மனோ தத்துவ நிபுனர்களை அணுகுபவர்களில் அதிகம் பேர் IT துறையினர் என்ற் தகவல் எதைக் காட்டுகிறது? நமது மன அழுத்தத்தை குறைக்க நம்மை சுரண்டிக் கொழுக்கும் தரகு வர்க்க முதலாளிகள் அரங்கேற்றும் கேளிக்கைகள் எதைக் காட்டுகிறது?

குறைந்த கூலி என்ற அம்சமும், இந்திய பணத்தின் மதிப்பு டாலருக்கு நிகராக குறைவாக இருப்பது இந்த அம்சங்கள் உண்மையாக இருக்கும் காலம் மட்டுமே நமது வேலை உத்திரவாதப்படுத்துகிறது. நமது மென்பொருள் தயாரிக்கும் திறமையல்ல மாறாக அவனுக்கு லாபம் தயாரித்துக் கொடுக்கும் திறமை-அதாவது குறைந்த கூலி- இதுதான் மதிக்கப்படுகிறது. இது தவிர்த்து உலக பொருளாதார சூழல், நம்மைவிட குறை கூலி உழைப்பை வழங்க தயாராயிருக்கும் வேறு நாடுகள், உள்நாட்டிலேயே வெளி நாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த வழி வகுக்கும் SEZ. இப்படி கண் முன்னே நமது உரிமைகளை குழி பறிக்க தேவையான விசயங்கள் நடக்கும் போது கூட சுகநாட்ட வாதத்தில் மூழ்கி திளைத்து நிதர்சனத்தை உள்வாங்கும் திறன் இழந்து நிற்கிறோமே என்ன செய்யலாம்?

வார இறுதி நாட்களிலும் வேலை, IBM-ன் யுட்டலிசேசன் டார்கெட்(90% மேல் ஒவ்வொரு நபரும் billable ஆக இருக்க முயற்சி செய்ய வேண்டும்), விப்ரோவின் மாணவ தொழிலாளர்கள், இப்படி நமது உழைப்பை சுரண்டி கோடிகளில் குளீர் காயுபவர்கள், கம்பேனியின் ஒரு துறையில் லாபம் இல்லையென்றவுடன் சம்பளத்தை குறைப்பதும் நடக்கிறது. கம்பேனி ஒட்டு மொத்தமாக லாபம் எடுக்கும் போதே இவ்வாறு எனில் இந்திய தொழிலாளர்கள் இனிமேலும் அவர்களின் டார்லிங்குகள் கிடையாது என்ற நிலை வரும் பொழுது என்ன செய்வார்கள்? இது தவிர்த்து பல்வேறு உடல் உபாதைகள் வேறு.

நம்மை விட அதிக உரிமைகளை சட்ட ரீதியாக பெற்றுள்ள அமெரிக்க தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் கூட இந்த கம்பேனிகளின் அநியாயங்களை எதிர்த்து போரிடுவதற்க்கு சங்கமாக திரண்டுள்ளனர். அதுவும் அமெரிக்க கார்ப்போரேட் வரலாற்றில் முதல் முறையாக IBM IT (Alliance@IBM) தொழிலாளர்கள் சங்கமாக திரண்டு பென்சன் பணத்தில் அவன் கைவைப்பதை எதிர்த்து போராடி வெற்றி பெற்றுள்ளனர். உரிமைகள் உத்திரவாதமான அவர்களுக்கே சங்கம் தேவைப்படுகிறது, நமக்கு?

IT தொழிலாளிக்கு எதிராக எப்படியெல்லாம் ஆப்பு வைப்பது, சுரண்டலை அதிகப்படுத்தி எப்படியெல்லாம் லாபத்தை அதிகப்படுத்துவது என்பது குறித்து கலந்து பேசி ஒரு பொது முடிவுக்கு வருவதற்க்கு IT முதலாளி சங்கமாக திரள்கிறான்(NASCOM, CII). National Skills Registry என்ற பெயரில் நமக்கு அடையாள எண் கொடுத்து மையப்படுத்தப்பட்ட ஒரு தகவல் கிடங்கை ஏற்படுத்தியுள்ளான். தேவைப்பட்டால் இந்தியாவின் எந்த ஒரு IT தொழிலாளி மீதும் கரும் புள்ளி குத்தி இந்தியாவில் அவனுக்கு எந்த இடத்திலும் வேலை கிடைக்க விடாமல் செய்யலாம். ஆக, எதிர்காலத்தில் IT தொழிலாளி மீது அவனுக்கு ஆதிக்கம் தேவைப்படும் என்பதை உணர்ந்து இப்பொழ்து தயாராகிறான் அவன். நாமோ பலி ஆடுக்கு நல்லா தீவனம் கிடைக்கிறது என்று தேமேவென்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

எதை இழந்து எதை பெறுகிறோம்? நமது பெற்றோர்கள் அரசு நிறுவனங்களில் வேலை பார்த்து ரிடையர் ஆகி வெளி வரும் பொழுது பெண்ணின் திருமணம், பையனின் படிப்பு, அது போக குறிப்பிடத் தகுந்த பென்சன், கையில் ஒரு பெரிய தொகை, இவை தவிர்த்து வீடு வாசல் அமைதியான வாழ்க்கை, உடல் ஆரோக்கியம் என்று இருந்தார்கள். நமது நிலைமை?

இந்த அம்சங்களையேல்லாம் விளக்கி ஒரு கட்டுரை ஆறேழு மாதங்களுக்கு முன்பு வந்து மிகப் பரவலாக அனைவராலும் மெயிலில் அனுப்பட்டது.

இதை விடுங்கள் ஒரு சமூகமே சீரழிந்து கொண்டிருக்கும் பொழுது, நாம் மட்டும் நல்லதொரு வாழ்க்கை வாழ்ந்திட முடியுமா? கார்போரேட் லெசன் என்ற பெயரில் சிறு கதைகள் அடங்கிய ஒரு இமேயிலை பெரும்பாலனவர்கள் படித்திருப்பீர்க்ள். அதில் குழுவில் ஒருவருக்கு பிரச்சனை வரும் பொழுது நாம் கண்டு கொள்ளாமல் இருப்பது நமக்கும் ஆபத்து வரும் பொழுது பேரிடராக இருக்கும் என்பதை வலியுறுத்தி ஒரு கதை வரும். இந்த சமூகம் ஒரு குழுவாக இணைந்து ஒவ்வோரு மனிதனின் தேவைகளை நிவர்த்தி செய்ய உற்பத்தி செய்கிறது. இதில் சமூகத்தில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெரும்பகுதி துன்பத்தில் துவளும் பொழுது நாம் மட்டும் எப்படி ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்திட முடியும்?

என்ன செய்யலாம்? க்ளையண்டின் பிரச்சனைகளை ஆய்வு செய்து தீர்வு சொன்ன நேரம் போக நமது பிரச்சனைகளையும் ஆய்வு செய்து தீர்வு குறித்து யோசிக்கலாம். After all, மற்ற யாரையும் விட சிந்திக்கும் திறமையிலும், அதற்க்கு தேவையான தகவலகளின் அருகாமையிலும் நாம் ஒரு சிறப்பான இடத்தில் இருக்கிறோம். பிரச்சனை நம்மை பற்றி சிந்திக்க நமக்குக் கிடைக்கும் சொற்ப நேரம்தான்......

என்ன செய்யலாம்?.....

அசுரன்



***********


அனோமிய் நோய் குறித்து:

ஒவ்வொரு சமூகமும், மனிதனும் தான் ஈடுபட்டுள்ள உற்பத்தியின் தன்மையைப் பொறுத்த அறிவு, மனவள முதிர்ச்சி அடைகிறான். இதுதான் சமூக பரிணாமத்துவம் குறித்த மார்க்ஸிய பொருள்முதல்வாதப் பார்வை. ஆக, ஏகாதிபத்திய சமூகத்தில் ஒரு பக்கம் நுகர்வு வெறி மூலமாகவும், இன்னொரு பக்கம் அதிகப்படியான சுரண்டல் மூலமாகவும்(12 மணீ நேரம் வேலை) சமூகத்துடனான தொடர்பை இழக்கிறான் மனிதன். அதே நேரத்தில் நுகர்வு வெறியை நியாயப்படுத்தவும், சமுகமாக தன்னை உணர்ந்து கூட்டுச் சேர்வதற்க்கான அடிப்படைகளை அடித்து நொறுக்கவும் தேவையான பல்வேறு பொதுக் கருத்துக்களை அவனது ஊடக பலத்தின் மூலம் உறுதிப் படுத்துகிறான். அப்படி ஒன்றுதான் தனிமனித வாதம். இதன் காரணமாக முந்தைய சமூகத்தின் மதிப்புவாயந்த பண்புகள் இன்று இழிச்சவாயத்தனமாகவும், முட்டாள்தனமாகவும் பார்க்கப்படுகிறது. விளைவு, இந்த சூழலிலான உற்பத்தியில் ஈடுபடும் ஒரு மனிதன் தனது பழைய உயர் மதிப்புகளை இழக்கிறான். இவை தவிர்த்து இந்த சூழல் உருவாக்கும் கலாச்சார பிரச்சனைகளும், தொழில் ரீதியான பிரச்சனைகளும், உடல், மன உபாதைகளும் சேர்ந்து உருவாக்கும் ஒரு மனோ வியாதிதான் - அனொமிய்.

"Alienation and purposelessness experienced by a person or a class as a result of a lack of standards, values, or ideals" - Anomie(அனொமிய்)

"தரம் தாழ்ந்த நிலை, உயர் பண்புகளை இழத்தல் இவற்றின் விளைவாக ஏற்ப்படும் அந்நியப்படுதலும், எந்த ஒரு குறிப்பிட்ட லட்சியமோ/நோக்கமோ அற்ற வாழ்க்கையும் ஏற்ப்படுத்தும் மனவியல் பிரச்சனை" - அனோமிய் எனப்ப்டுகிறது.

Must Read articles:

IBM IT union
software_job_india
workers-of-cyber-world-uniteatleast

corporate-lesson-secret-of-dreaming
it-survivors-staying-alive-in-software
are-we-living-at-mercy-of-their-profit
still-sleaping-jobs-started-flying
இயற்கையின் அழிவில் இன்பம் காண்போம் - பாகம் 1
அழிவில் லாபமும், லாபத்தால் அழிவும் - பாகம் II
கணிணி தொழில்நுட்ப வல்லுனர்களே !

ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை!

இது குறித்து கருத்துக்களை ஆலோசனைகளை எனக்கு தனிமடலிலும் அனுப்பலாம்:

asuran07@gmail.com

Related Posts with Thumbnails