TerrorisminFocus

Showing posts with label சில்லறை வணிகம். Show all posts
Showing posts with label சில்லறை வணிகம். Show all posts

Tuesday, May 01, 2007

சற்றுமுன் - சென்னையில் ரிலையன்ஸ் எதிர்ப்பு முற்றுகைப் போராட்டம் - மகஇக மற்றும் தோழமை அமைப்புகள்

ன்று காலை சென்னை, சின்மயா நகர், ரிலையன்ஸ் பிரஷ் பல்பொருள் அங்காடிக்கு அருகே மக்கள் கலை இலக்கிய கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி இவர்களின் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடந்தது. சில்லறை வியாபாரிகள், கோயெம்பேடு தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


இந்த போராட்டம் குறித்து ஏற்கனவே தமிழகம் முழுவதும் சுவரொட்டிகள், சுவரெழுத்துக்கள் மூலம் இந்த அமைப்புகள் விரிவாக பிரச்சாரம் செய்து அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


சில்லறை வணிகத்தில் பன்னாட்டு, தரகு கம்பேனிகள் நுழைந்து உள்நாட்டு அண்ணாச்சிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் தோராயமாக இரண்டாயிரம் பேருக்கு மேல் கலந்து கொண்டு கைதானதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.


இது குறித்தான செய்திகள் சன், ஜெயா, மக்கள் தொலைக்காட்சிகளில் மகஇக வின் தலைவர் தோழர் மருதையனின் பேட்டியுடன் ஒலி/ஒளி பரப்பப்பட்டது.


அசுரன்

Related Posts:

சில்லறை வணிகத்தில் ரிலையன்ஸ்

மே 1 சென்னையில் ரிலையன்ஸ் பிரஷ் முற்றுகை

சில்லறை வணிகம் எனும் பெருங்காதை!

கருணாநிதியின் அரிசியும், ஹிட்லரின் ரொட்டித் துண்டும்....

Related Posts with Thumbnails