TerrorisminFocus

Showing posts with label பாசிசம். Show all posts
Showing posts with label பாசிசம். Show all posts

Tuesday, October 26, 2010

டீச்சர்.. அருந்ததி ராய் என்னக் கிள்ளிட்டா - நிர்மலா சீதாராமன்!!

ருந்ததிராய் மற்றும் கிலானி இருவரையும் அரசுக்கு எதிராக சதி செய்ததாகக் கூறி கைது செய்ய வேண்டும் என்று மதச்சார்புள்ள பாஜகவும், 'போலி கம்யூனிஸ்டுகளின் அக்மார்க் முத்திரையுடன்' மதசார்பற்றதாக காட்டப்படும் காங்கிரசும் ஒரே களேபாரம் செய்தன நேற்று. பிரச்சினை என்னவென்றால், 'விடுதலை ஒன்றுதான் தீர்வு' (Azadi - The Only Way) என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்ற பேருண்மையை அவர்கள் இருவரும் பேசிவிட்டார்கள். அதுவும் டெல்லியில். குறிப்பாக அருந்ததிராய் சொன்னது #$த்தில் சுண்ணாம்பு தடவியது போலாகிவிட்டது: "காஷ்மீர் எந்த காலத்திலும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை. இது வரலாற்று உண்மை. இதனை இந்திய அரசாங்கமும் ஏற்றுக் கொண்டுள்ளது".

இந்தக் கருத்தரங்கம் நடந்த முடிந்தவுடன், உள்துறை அமைச்சரை சந்திக்க ஓடி வந்தனர் எதிர்கட்சி பாஜகவினர். உள்துறை அமைச்சரும் விடியோ ஆதாரங்களைப் பார்த்து நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கொடுத்துள்ளதாக பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுத்தார் பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன்.


டீச்சர்.. அவன் என்னக் கிள்ளிட்டான் - கோள் மூட்டும் துஸ்டத்தனமான சிறுமி


மனித உரிமை என்ற பெயரில் பிரிவினைவாதிகளையும், நக்சல்களையும் ஆதரிக்கிறார்கள் அருந்ததி ராய் போன்றோர் என்று மதவாதிகளையும், காவி பயங்கரவாதிகளையும், தேச விரோதிகளையும், நாட்டின் எதிரிகளையும் வைத்து கட்சி நடத்தும் பாஜக குதியோ குதி என்று குதிக்கிறது.

வரலாறு முழுவதும் இந்துத்துவத்திற்கு பக்கவாத்தியம் வாசிக்கும் பாத்திரம் ஏற்றுள்ள காங்கிரசு, இதற்கும் வாசித்துள்ளது. காங்கிரசுத் தலைவர் சத்யப் பிரகாஷ் மால்வியா அருந்ததிராய் தனது கருத்துக்களை வாபஸ் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று மிரட்டுகிறார். சட்ட அமைச்சர் மொய்லி, 'ரெண்டு பேரும் இப்படிச் சொன்னது ரொம்ப துரதிருஷ்டமானது' என்று சொல்கிறார். யாருக்கு துரதிருஷ்டம்? யாருக்கோ.... என்று வடிவேலு பாணியில் மனதுக்குள் பேசிக் கொள்வார் போல என்று நினைத்தால் அடுத்த வரியில் சொல்கிறார், 'பேச்சு சுதந்திரமெல்லாம் இருக்கத்தான் செய்யுது.. ..அதுக்காக மக்களோட தேசப் பற்றுணர்வை புண்ணாக்கும் விதமாகப் பேசக் கூடாது' என்று தொடர்கிறார். யாருக்கு துரதிருஷ்டம் என்று தெளிவாகவே எச்சரிக்கை செய்து விட்டார்.

பேச்சு சுதந்திரம் பற்றி மொய்லி சொல்வது இருக்கட்டும், ஜான் ஸ்டுவர்ட் மில் என்ன சொல்கிறார் என்று முதலில் பார்ப்போம். ஜான் ஸ்டுவர்ட் மில் யாரென்று தெரியாதவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன், எனக்கும் அவர் யாரென்று தெரியாது. பேச்சு சுதந்திரம் என்பது என்னவென்றால், 'ஒருவருடைய கருத்தினால் பலருக்கு துன்பம் ஏற்படுவதை தடுப்பது என்ற நோக்கத்தில் மட்டுமே அவருடைய வாயை பலவந்தமாக அடைப்பதை நியாயப்படுத்த முடியும்' என்கிறார்(நன்றி: தி இந்து - அக்டோபர் 27, 2010 தலையங்கம்). எடுத்துக்காட்டுக்கு நம்ம நண்பர் அதியமானின் கருத்துக்களில் எனக்கு ஒப்புதல் இல்லாவிடினும் அதை அவர் பேசும் உரிமை அவருக்கு உண்டு என்ற உண்மையை நான் அங்கீகரிப்பதாகும். இதைத்தான் அருந்ததி ராயும் வேறு வார்த்தைகளில் சொல்கிறார், 'மதவெறி படுகொலையாளர்களாயும், மொத்த மொத்தமாக படுகொலைகள் செய்தவர்களையும், ஊழல்வாதிகளையும், கொள்ளையர்களையும், பாலியல் வன்புணர்வாளர்களையும், ஏழைகளைச் சுரண்டி கொழுப்பவர்களையும் சுதந்திரமாக அலைய விட்டு விட்டு, நீதி வேண்டும் என்று கேட்க்கும் என்னைப் போன்றவர்களை சிறையிலடைக்க முயலும் இந்த தேசத்தை நினைத்து பரிதாபப்படுகிறேன்' என்று. கிலானி இன்னும் ச்ஜிம்பிளாக முடித்துக் கொண்டார், 'எம்மேல ஏற்கனவே 70 கேசு இருக்கு இது 71வ்து' என்று.


இந்த லாவணிகள் எல்லாம் முடிவதற்குள்ளாக அருந்ததி ராயையும், கிலானியையும் கைது செய்வது பற்றிய பரிசீலனைகளை காங்கிரசு முடித்துக் கொண்டு ரிசல்டை அறிவித்துவிட்டது. இதுக்கெல்லாம் கைது செய்ய முடியாது என்று. சரி, உண்மையிலேயே காங்கிரசு பேச்சு சுதந்திரத்தை மதித்துத்தான் இந்த முடிவை எடுத்ததா? இல்லை நண்பர்களே, அத்வானி, மோடி போன்ற கிரிமினல் பாசிஸ்டுகளை பெருமைமிக்க தலைவர்களாக அலைய விடும் காங்கிரசு, எளிய உண்மைகளை உரக்க பேசிய குற்றத்திற்காக சீமான், பினாயக் சென், ஹிமான்சு குமார், ஐரோம் சர்மிளா உள்ளிட்ட பலரை சிறையிலடைத்தும், அடித்து மிரட்டியும் ஒடுக்கியுள்ளது.

அருந்ததிராய், கிலானி இருவரையும் சதி செய்ய முயன்றதாகக்(124A) கூறி கைது செய்யவே டெல்லி போலிசுக்கு முதலில் மத்திய காங்கிரசு அரசு பரிந்துரைத்துள்ளது. பிறகுதான் பின் வாங்கியுள்ளது.

அருந்ததிராய் விசயத்தில் அவரை முடக்கிப் போட நடந்த முயற்சிகளில் இதுவும் ஒன்று என்பதைத் தாண்டி இதில் காங்கிரசின் ஜனநாயக முகம் எதுவும் இல்லை. காஷ்மீர் மக்களின் போர்க்குணமிக்க போராட்டங்களும், அருந்ததிராயின் செல்வாக்குமே காங்கிரசை பதுங்கித் தாக்க அறிவுறுத்துகிறது. சுருக்கு இறுகுகிறது, வாயை அடைத்துக் கொள் என்று சாத்வீகமாக அருந்ததிராயை மிரட்டுவது ஒன்றுதான் இந்த விசயத்தை பொறுத்த வரை காங்கிரசின் அதிகபட்ச இலக்கு. மிரட்டல் அருந்ததிக்கு மட்டுமல்ல, மனசாட்சியுள்ள எல்லாருக்கும்தான்.

மக்களின் வெறுப்பை மேலும், மேலும் சம்பாதித்து நாடு முழுவதும் அம்பலப்பட்டுப் போயுள்ளது இந்திய அரசு. இந்நிலையில் பெரும் பீதியுற்றுள்ள அரசு தனது பாசிச அஸ்திரங்களைத்தான் ஒரேயடியாக நம்பியுள்ளது. எனவேதான் தன்னை நோக்கிய சிறு சலசலப்பையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கிறது. அதை தேசப் பற்று என்று நியாயம் பேசுகிறது. இந்தியா முழுவதும் மக்கள் பிரச்சினைகளுக்காக களம் இறங்கிப் போராடிய பல்வேறு ஜனநாயக சக்திகளை சமீப காலங்களில் கைது செய்தும், மிரட்டியும் முடக்கிப் போட்டுள்ளது இந்திய அரசு(தெஹல்கா). சீமான் கைதின் போது இந்தத் தளத்தில் எழுதப்பட்ட கட்டுரையின் மையக் கருவும் இதுதான், 'சீமான் கைது - இது ஆரம்பம் மட்டுமே'.

பன்னாட்டு கம்பனிகளுக்காக அரசியலமைப்புச் சட்டத்தை மீறி மக்களைக் கொல்லும், காங்கிரசும், சிபிஎம்மும் ஒரு பக்கம் என்றால், அதே அரசியலமைப்புச் சட்டத்தை மீறி மக்களை மதத்தின் பெயரால் கொல்லும் பாஜக இன்னொரு பக்கம். இதுதான் இந்திய 'ஜனநாயகம்'. இப்படி அரசியலமைப்புச் சட்டம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இந்துத்துவத்திற்கும் மீறப்படுமானால் அது தேசப்பற்றுக்கு விரோதமானது அல்ல என்பதே இவர்களின் நியாயம். தேசப்பற்று என்றால் என்னவென்று இந்தச் சிறுபிள்ளைகளுக்கு சரியான வகையில் பாடம் புகட்டுவதே ஜனநாயக சக்திகளின் இன்றைய பெரும் கடமையாக முன்னெழுந்துள்ளது.

அசுரன்

Wednesday, August 18, 2010

உமாசங்கரின் வியக்கத்தக்க உறுதிக்கு ஆதரவு, அவர் மீதான அரசு ஒடுக்குமுறைக்கு கடும் கண்டனங்கள்!!

உமாசங்கரை ஆதரிப்போம்! அரசு ஒடுக்குமுறை ஒழிக!!
(படம் நன்றி: செந்தழல் ரவி)

உமாசங்கருக்காக -- ஒரு விண்ணப்பம்

உமாசங்கரின் வியக்கத்தக்க உறுதி! கருணாநிதி அரசின் வெறுக்கத்தக்க கயமை!


உமாசங்கர் ஐ.ஏ.எஸ்


சீமான் கைது - இது ஆரம்பம் மட்டுமே!!!


உமாசங்கர் ஐ.ஏ.எஸ் சஸ்பெண்ட் ! பதிவர் “சவுக்கு” சங்கர் கைது !!

அசுரன்

Monday, July 19, 2010

சீமான் கைது - இது ஆரம்பம் மட்டுமே!!!


சீமான் மீண்டும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் பிணையில் வர இயலாத சிறைத் தண்டனைக்கு ஆளாகியுள்ளார். பிரிவினையைத் தூண்டும் வகையில் அவர் பேசினாராம். ஆர் எஸ் எஸ் இந்து பயங்கரவாதிகள் மத அடிப்படையில் நாட்டைத் துண்டாடும் பேச்சுக்களை எந்த பயமும் இன்றி பேசி வரும் வேளையில், சீமானுடைய பேச்சு ஒரு பெரிய விசயமே இல்லை. ஆனால், இதற்கு முன்பு கோக்கை எதிர்த்து போஸ்டர் ஒட்டிய தேசத் துரோகம், பெரியார் சிலை உடைப்பை எதிர்த்த குற்றம் போன்றவற்றிற்காக 'மட்டுமே' தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ள நிலையில் சீமான் மீது அதே சட்டம் பாய்ந்துள்ளது ஆச்சர்யமானது அல்ல.

ஆனால், அச்சட்டம் சீமான் மீது பாய்ந்துள்ள நேரம் சில விசயங்களை முன்னறிவிக்கின்றன. அது இந்திய அரசு பாசிசமயமாகிவிட்டது என்பதைத்தான். இந்திய அரசை எதிர்க்கும் அதன் நடவடிக்கைகளை விமர்சிக்கும் எந்தவொரு பேச்சுக்களும் கடுமையான சிறைவாசத்தையே எதிர்கொள்ளும் என்பதே சீமான் கைது அறிவிக்கும் செய்தி.

இம் என்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம் என்ற காட்டு பாசிச நிலையை நோக்கி உலகின் மிகப் பெரிய 'ஜனநாயகம்' சென்று கொண்டுள்ளது. மாவோயிஸ்டுகளை ஒடுக்குவது என்ற பெயரில் மத்திய இந்தியாவின் இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு கூட்டிக் கொடுக்கும் மாமா வேலையும், இலங்கையில் இன அழிப்புப் போரின் மூலமாக இந்திய மூலதனத்தின் வன்புணர்ச்சிக்கு களம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள நிலையும் இங்கு ஒப்பிட்டு நோக்கத்தக்கது. மேலும், விலைவாசி உயர்வு, நாட்டின் மிகப் பெரும்பான்மை மக்களின் வறுமை, உணவுத் தட்டுப்பாடு, பெட்ரோல் விலையுயர்வு, காஷ்மீர் விடுதலைப் போராட்டம், வடகிழக்கில் கிளர்ச்சி என பல சிக்கல்கள் முன்னுக் வந்துள்ள சூழல் இங்கு கவனிக்கத்தக்கது. மொத்த நாட்டின் பெரும் பகுதி உள்நாட்டு போர் சூழலை நோக்கி சென்று கொண்டுள்ளதையே இவை காட்டுகின்றன.

பசுமை வேட்டையின் முன்னறிவிப்பான சல்வாஜூடுமின் அட்டூழியங்களை அமபலப்படுத்திய 'குற்றத்தி'ற்காக பினாயக் சென் ஒரு வருடம் விசாரணையின்றி சிறை வைக்கப்பட்டார். பல மனித உரிமை ஆர்வலர்கள் இதே போல ஒடுக்கப்பட்டனர். பசுமை வேட்டையின் கொடூரங்களை அம்பலப்படுத்திய 'குற்றத்திற்காக' ஹிமேஸு குமார் என்ற காந்தியவாதியின் ஆசிரமம் நொறுக்கப்பட்டது, அவரது உதவியாளர் மீது வழக்கு, சிறைவாசம். லிங்கராம் என்ற பத்திரிகைத் துறை மாணவர் டெல்லியில் படிக்கிறார். அவர்தான் ஆசாத்தின் இடத்தை நிரப்ப இருக்கும் மாவோயிஸ்டு தலைவர் என்று கூறி அவருடன் தொடர்புள்ளவர்கள் என்று அருந்ததி ராய் உள்ளிட்ட பல முக்கிய மனித உரிமையாளர்களை குறி வைத்தது அரசு. இவையனைத்தும் தமக்கு எதிரான எதிர்ப்புகளை அனைத்தையும் மிரட்டி பணிய வைக்கும் தந்திரமாகவே அரசு செய்தது.

இன்னிலையில், இறையாண்மை பாதுகாப்புச் சட்டம் என்ற ஒன்றை கொண்டு வர உள்ளனர். அத்துடன் பசுமை வேட்டையையும் விரிவுபடுத்தி ராணுவம், விமானப் படையை இறக்கி விரிவானதொரு உள்நாட்டு யுத்தம் தொடுக்க உள்ளனர். எனவே கொஞ்சம் நஞ்ச எதிர்ப்புக் குரல்களையும் கிள்ளியெறியும் தேவை அரசுக்கு உள்ளது. ஒரு பக்கம் சட்டப் பூர்வமாக பாசிசமயமாகி வரும் அரசு, இன்னொரு பக்கம் அரசியல் கட்சிகளின் அணிகளின் சட்டத்தை மீறிய ரவுடித்தனங்களுக்கு ஆசி வழங்கி சிவில் சமூகத்தையும் பாசிச மயமாக்கி வருகிறது. கர்நாடகா- மாஹாராட்டிரா எல்லைப் பிரச்சினை குறித்து தொலைக்காட்சியில் விவாதிக்க நாக்பூர் சென்ற கர்நாடாக ரக் சன வேதிகே அமைப்பின் தலைவர்(முஸ்லீம்) இந்து பயங்கரவாத- தமிழர் விரோத சிவசெனா ரவுடிகளால் எல்லார் முன்னிலையிலும் தாக்கப்பட்டு காதுகள் கிழிக்கப்பட்டு அடித்து நொறுக்கப்பட்டார். ஆர் எஸ் எஸ் ரவுடிகள் தமக்கு எதிரான சிறு குரலையும் தமது குரங்குப் படையை கூட்டிக் கொண்டு சென்று தாக்கி ஒடுக்குகின்றனர். குஜராத்தில் மாவோயிஸ்டு பீதியைக் காட்டி பல பத்து மனித உரிமையார்வளர்கள் கைது. டெல்லியில் தொழில்சங்க தலைவர்கள் மாவோயிஸ்டுகளாக சித்தரிக்கப்பட்டு கைது. மதுரையில் தமிழக அரசுக்கு எதிராக வால்போஸ்டர் அடித்தால் ரவுடி அழகிரியின் மிரட்டல். இந்திய அரசும், சமூகமும் பாசிச மயமாகி வருகிறது. பிணையில் வர இயலாத சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்ட போபால் ஆண்டர்சன் பாதுகாப்புடன் விடுதலை, ஆர் எஸ் எஸ் பயங்கரவாதி தாராசிங், அத்வானி போன்றோருக்கு தண்டனையில்லை, கயர்லாஞ்சி சாதி வெறியர்களுக்கு கரிசனம் - தண்டனைக்குரியவர்களுக்கு அன்பையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனையும் தருகின்ற இன்றைய சூழலில், இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு முழுமையாக பாசிச மயமான ஒரு அரசே தேவையாக உள்ளது. சீமானின் கைது சொல்லும் செய்தி இதுதான்.

உலகின் மிகப் பெரிய 'ஜனநாயக' நாட்டின், வசதி படைத்த குடிகளே.. .இதோ உங்களது நாட்டுப்பற்றை விளம்பரப்படுத்த அற்புதமானதொரு வாய்ப்பு. இந்திய அரசின் பாசிச நடவடிக்கைகளை எதிர்த்து களமிறங்குங்கள்.

அசுரன்

உள்நாட்டுப் போருக்கு தயாராகிறது இந்திய அரசு !!

Thursday, July 15, 2010

ஏரியா பிரிக்க அடித்துக் கொள்ளும் சிபிஎம் குண்டர் படை!!

'CPM = Corporate Party of Murderers'



நன்றி டைம்ஸ் ஆப் இந்தியா

நேற்று டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட விடியோ படத்தில் மேற்கு வங்க சிபிஎம், திரிணாமூல் காங்கிரஸ் கு(தொ)ண்டர்கள் துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு சகிதம் மோதிக் கொண்டது காட்சிப்படுத்தப்பட்டது. ராஜாக்கள் தங்களுக்குள் ஏரியா பிரிக்க சண்டையிடுவது போல மேற்கு வங்கத்தில் சிபிஎம் ரவுடிப் படை தமது ஏரியாக்களை மீட்டுக் கொள்வதற்கு ராணுவ முற்றுகை போல சண்டையிடுகிறார்கள்.

ஏற்கனவே லால்கர், நந்திகிராம் பகுதிகளில் சிபிஎம் ரவுடிப் படைகளின் இத்தகைய தாக்குதல்கள் நடந்துள்ளது குறித்தும் அவற்றில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டது குறித்தும் முன்பு அம்பலமான போதெல்லாம் யோக்கியன் வேசம் போட்டனர் சிபிஎம் அல்லக்கைகள். இன்றோ விடியோ ஆதாரமாகவே இவை வெளிவந்துள்ளன. மேற்கு வங்கத்தில் சிபிஎம்யை எதிர்க்க வேண்டுமெனில் ஆயுதம் தாங்க வேண்டும் என்பதே நிதர்சனமாக உள்ளது தெரிய வருகிறது. இதுதான் முற்போக்கு சிபிஎம் மேற்கு வங்கத்தில் செய்த சாதனையாகும். இன்னொரு சாதனை ஆப்பிரிக்காவின் மிக வறிய 26 நாடுகளின் மொத்த மக்கள்தொகையை விட அதிக தொகையில் வறுமையில் வாடும் மக்களைக் கொண்ட 8 மாநிலங்களின் ஒன்றாக மேற்கு வங்கம் தகுதி பெற்றது ஆகும்.

வாழ்க போலி ஜனநாயகம், வாழ்க போலி கம்யூனிசம், வளர்க பிழைப்புவாதம்

அசுரன்

மக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் தாண்டா நாங்கள் - CPM!!

கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] !

காரப்பட்டு: மார்க்சிஸ்டுகளின் கொலைவெறியாட்டம்: தொண்டர்களாக குண்டர்கள்! தலைவர்களாக கிரிமினல்கள்!

விழுப்புரத்தில் விவிமு தோழர்களை வெட்டிப் படுகொலை செய்த பாசிச CPM

உழைக்கும் வர்க்கத்தினரை இரக்கமின்றி வெட்டிக் கொல்வதற்கு அரிவாள்! அவர்களுடைய உடைமைகளைக் கொள்ளையிடும் பொருட்டு பூட்டை உடைப்பதற்குச் சுத்தியல்!

போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி !

மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல், CPMன் தோல்வி, ரவுடியிசம், உத்தபுரம்


கடைசியில் கோவிந்சாமி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்!!!


லால்கார் மேற்கு வங்கத்தில் ஒரு புரட்சி பூமி!!

பாஸிஸ்டு CPMமும், லெனின் சொல்லும் ஜனநாயக புரட்சியும்!!!!

Thursday, December 25, 2008

புதிய குற்ற பரம்பரைகள்!!!

வெள்ளைக்காரன் காலத்தில் குற்ற பரம்பரை சட்டம் என்ற பெயரில் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த மக்களை ஒடுக்கும் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி தினமும் இரவு காவல் நிலையத்தில் தங்கியிருந்து தான் அந்த இரவில் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை என்று நீருபிக்க வேண்டும் அந்த சாதியைச் சேர்ந்த ஆண்கள். இந்த சட்டம் தற்போது இல்லை. ஆனால் குற்ற பரம்பரைகள் புதிய வடிவில், புதிய தேவைகளுக்காக தற்போது உருவாகி வருகின்றன. சமூகத்தை பாசிச மயமாக்கும் போது சட்டங்களின் தேவை என்பது இல்லாமல் போய் விடுகிறது என்பது ஒன்று மட்டும்தான் குற்ற பரம்பரை சட்டம் என்ற ஒன்றின் தேவையில்லாமல் போனதின் அடிப்படை. ஆனால் அப்படியொன்று வெகு நுட்பமாக நடைமுறையில் உள்ளது.

இன்றைய மறுகாலனியாதிக்க சூழலில் வன்முறையும், ஆளும் கும்பல்களுக்கு எதிரான சமூக/தனிபட்ட வன்முறைகளும் மேலும், மேலும் அதிகமாகி வருகின்ற சூழலிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள ஏதுவாக ஒட்டு மொத்த சமூகத்தையே இன்று குற்ற பரம்பரையாக்கி உள்ளது இந்த அரசு. குண்டு வெடிப்புகள் முதல், மக்களின் போர்குணமிக்க போராட்டங்கள், விவசாயிகள் தற்கொலை, பட்டினி சாவுகள், வேலையிழப்பு வரை மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கான காரணங்களை மறைத்து அரசியல் செய்யும் ஆளும் கும்பல் தன்னை புன்னியாத்மாவாக காட்டிக் கொண்டு மக்களை குற்றவாளியாக்கும் மதி கெட்ட சூழல் நிலவுகிறது.


இது குற்ற பரம்பரைகளின் காலம்:

இணையத்தில் உலாவ இணையக் கடைக்கு செல்கிறாயா, அங்கு உனது அடையாள அட்டை, முகவரி, தொடர்பு எண்ணைக் கொடுக்க வேண்டும். செல்பேசி சிம் கார்டு வாங்குகிறீர்களா உங்களது அனைத்து விவரங்களும் வேண்டும். உங்களது தகவல் தொடர்புகள் அனைத்தும் ஒட்டு கேட்க்கபடும் என்பதை அறிவிக்கும் தேவை கூட இன்றி வெளிப்படையாகவே நம்மை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் நமது படுக்கையறையுள் நுழைவது போல நடைமுறைப்படுத்தும் சூழல் நிலவுகிறது. வாடகை வீடு தேடுகிறீர்களா, உங்களது அடையாள அட்டை, வேலை பார்க்கும் அடையாள அட்டை, வீட்டு முகவரி இத்யாதி விசாரணைகளை ஒரு குற்றவாளியை விசாரிப்பது போலவே விசாரித்து பிற்பாடே கொடுக்கப்படும், எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நான் சோதனையிடப்படலாம், உள்ளாடையணியாமல் வெளியே செல்ல பயப்படும் அளவுக்கு நிலைமை கெடவில்லை என்பது என்னவோ வாஸ்தவம்தான்.



ஹோட்டலில் ரூம் எடுக்கிறீர்களா, உங்களுடன் ஒரு பை இருந்தால்தான் ரூம் கொடுப்போம் ஏனேனில் பை இருந்தால்தான் நீங்கள் வெளியூர்க்காரர் என்று நம்ப முடியும்(இப்படியும் சிலருக்கு அனுபவங்கள்), அப்புறம் வழக்கம் போல பிற விசாரணைகளும். பத்து இளைஞர்கள் கூடி நின்று பேச முடியாது. அப்படி பேசி களைந்த காலங்கள் எல்லாம் தொன்னெடுங்காலத்தைச் சேர்ந்த கதையாக மாறிவிட்டன. RSS ஆட்சி செய்யும் இடங்களிலோ காதலிப்பதும், பார்க்குகளில் தம்பதியர் உலாவுவதும் குற்றம். ஒவ்வொரு முக்குச் சந்திலும் ஒருவன் நின்று கொண்டு அடையாள அட்டை கோரும் காஸ்மீரத்து பாசிச சூழல் ஒன்று நாடு முழுவதும் விரைவில் உருவாகும் என்பதைத்தான் இவையெல்லாம் சொல்லுகின்றன. இப்படி தனிமனிதன் சமூகத்துடன் உறவாட இருக்கும் ஒவ்வொரு புள்ளியிலும் அவனை முதலில் குற்றவாளியாக்கி, நிரபராதி என்று நீரூபிக்க நிர்பந்திப்பதன் மூலம் ஒவ்வொரு தனிமனிதனும் காயடிக்கப்பட்ட மலட்டு எருமையாக சோரனையின்றி ஆக்கப்படுகிறான். ஏரியா விட்டு ஏரியா போகும் ஒரு நாயை அங்குள்ள நாய்கள் மூத்திர மற்றும் பீத்திரக் குழாயை மோந்து பார்த்து அடையாளப்படுத்துவதை ஒத்த அருவெறுக்கத்தக்க சூழலாக இது மாறிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் ஆளும் வர்க்கத்தின் ஏஜெண்டுகளாக, உளவாளியாக மாற்றப்படுகிறான். ஜனநாயகமின்மைக்கும், பாசிசத்திற்க்கும் பழக்கப்படுத்தப்படுகிறான். புத்தகங்கள் படிப்பதே தீவிரவாதமாகவும், உண்மைகளை பேசுவதே பயங்கரவாதமாகவும் பீதியுடன் பார்க்கப்படும் உள்நாட்டு யுத்தங்களின் காலத்திற்க்கான நுழைவாயிலின் வெகு அருகே நெருங்கி விட்டோம் என்பதைப் போன்ற உணர்வையே இவை நமக்கு கொடுக்கின்றன. இந்தியாவே அறிவிக்கப்படாத அவசர காலநிலையை நெருங்கிவிட்டது போல உள்ளது.




டெல்லி பல்கலைகழகத்தில் பேசிய கிலானி மீது எச்சில் துப்புகிறார்கள் RSS குண்டர்கள், புஷ் மீது செருப்பு எறிந்தத விமரிசையாக புகழ்ந்து சுற்றியிருந்தவர்களின் கவனத்தை கவரந்த (அல்லது புண்படுத்திய) குற்றத்திற்காகவும், முஸ்லீமாக பிறந்த குற்றத்திற்காகவும் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் குற்றவாளியாக விசாரிக்கப்படுகிறார். போலீசிடம் அவரை போட்டுக் கொடுத்தது அவருடன் வேலை பார்க்கும் ஒரு நல்ல இந்தியன் அல்லது 'இந்து'யன். கர்நாடகாவில் RSS சமூகத்தையே குற்றபரம்பரையாக்கியுள்ளதன், பாசிசமயமாக்கியுள்ளதன் அடையாளம் இது. மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினால் அடுத்த நிமிடமே போலீசுக்கும், ஊடகங்களுக்கும்(வீட்டுக்குள் இருக்கும் போலீசு இது) தகவல் கொடுக்கும் சேவையை இலவசமாக செய்கிறார்கள் ஆட்டோக்காரர்கள். ஆட்டோக்காரர்களுக்கும், போலீசுக்குமான இந்த வர்க்க பாச??!!! நட்புக்கு, பிணைப்புக்கு CPM கட்சி சாட்சி. இது சமூகத்தை கண்காணியாக, உளாவாளியாக இந்த அரசும், அவர்களது ஏஜெண்டுகளும்(எ-கா:CPM) மாற்றியுள்ளதற்கு அடையாளம்.




சமூகத்திலுள்ள ஒவ்வொரு தனிமனிதனும் மற்றொரு தனிமனிதனை சந்தேகத்துடன் கண்காணிக்கும் ஒரு பேரபாயகரமான சூழலைத்தான் இன்று நாம் காண்கிறோம். சாதி, இனம், மதம், நாடு, தோல், மொழி, ஆடை, வர்க்கம், பாலினம், பிராந்தியம் என்று பார்க்கும் மனிதரையெல்லாம் பிரித்து சுருக்கி சந்தேகத்துடனும், பீதியுடனும், முன் முடிவுடனும் அனுகுவதையே இன்று நாம் பெரு நகரங்களில் பார்க்கிறோம். ஒட்டு மொத்த சமூகத்தையே குற்றவாளியாக்கி, அதே சமூகமே தனது ஒவ்வொரு உறுப்பினரையும் தானே கண்காணிக்கும் சூழலைத்தான் ஆளும் வர்க்கங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த குழப்பத்தில் இந்த குழப்பம் அனைத்திற்க்கும் காரணமான தனது தவறுகளையெல்லாம் மறைத்துக் கொள்கின்றன ஆளும் வர்க்கங்கள். நாமோ ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிமிடமும், நான் குற்றவாளியில்லை என்று நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு நிரூபித்துக் கொண்டே இருக்கும் வெட்கம் கெட்ட, சுயமாரியதையற்ற இழிநிலையில் உழல்கிறோம். இதுதான் குற்ற பரம்பரை என்று ஒன்று இருப்பதாக உணர்வதின் அடிப்படை. இதுதான் சமூகம் தன் மீது தானே பாசிசத்தை திணிக்கும் விதம்.

ஒரு சமூகமே குற்ற பரம்பரையாக, ஒரு நாடே குற்ற பரம்பரையாக காட்டப்பட்டு அந்த குற்றவுணர்வின் பின்னே இந்த சூழலுக்கு காரணமான ஆளும் வர்க்கங்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்கின்றன. அந்த குற்றவுணர்வின் பின்னே இந்த சமூகம் தன் மீதே பாசிசத்தையும், சுய கண்காணிப்பையும் செலுத்திக் கொள்கிறது. சமீபத்திய மும்பை பயங்கரவாத தாக்குதல்களுக்கு பிறகு பரவலாக உலாவும் கருத்துக்களை கவனித்தால் இது புரிபடும். இதனை இன்னும் வீரியமாக்க சட்டங்களும் இயற்றப்படுகின்றன. அதாவது விளக்குமாறுக்கு பட்டு குஞ்சலம்.







இந்த குற்ற பரம்பரை சூழல் இந்த சமூகம் ஒன்றிணைந்து இயங்கும் ஒவ்வொரு புள்ளியிலும் உறுதியாகி உள்ளதா என்றால் இல்லை. இன்னும் அப்படியொரு சூழல் பரவலாகவில்லை என்பதுதான் நேர்மையான பதில். சரியாகச் சொன்னால் குற்ற பரம்பரைச் சூழல் கண்ணையும், கருத்தையும், சுயமரியாதையும் உறுத்தும் அளவுக்கு பரவி இருக்கிறது என்பது மட்டும்தான் தற்போது உண்மை. ஆனால் இந்த குற்ற பரம்பரை சூழல் தனது விசக் கரங்களை மேலும் மேலும் விரிவாக்கி ஜனநாயகமாக மனிதர்கள் இந்த சமூகத்தில் உறவாடிக் கொள்ளும் ஒவ்வொரு புள்ளியையும், ஒவ்வொரு இடைவெளியையும் மிக வேகமாக தன்னுள் விழுங்கி வருகிறது என்பதுதான் நாம் இங்கு மிக கவலையுடன் கவனிக்க வேண்டியுள்ளது. அப்படியொரு சூழல் பரவலாக வலுப்பட வலுப்பட ஆளும் வர்க்கங்களின் வெட்கங்கெட்ட ஏகாதிபத்திய அடிவருடித்தனமும், பாசிச அடக்குமுறையும், இந்துத்துவ கொடுங்கோன்மையும் அதன் உடன் - எதிர் வினைகளும் இன்னும் பருண்மையான, நுட்பமான, ஆழமான வடிவங்களை எடுக்கும் என்பதுதான் நாம் இங்கு கவலைப்பட வேண்டிய முக்கிய அம்சம். இந்த கட்டுரையை படிப்பவர்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புவதும் இவற்றைத்தான்.

சமூகத்தை குற்றபரம்பரையாக்கும் இந்த போக்கை, ஏகாதிபத்தியங்களும், அவர்களின் அடிவருடிகளான ஆளும் வர்க்கங்களும் தமது உலகளாவிய சுரண்டலினாலும், உள்ளூர் அயோக்கியத்தனங்களினாலும் உருவாக்கியுள்ள இந்த சூழலை நாம் மாற்றியமைக்க முடியும். உண்மையான குற்றபரம்பரை யாரோ அவர்கள் ஒவ்வொரு நிமிடமும் மக்களுக்கு தாம் குற்றவாளி இல்லை என்று நீருபிக்க கோரும் ஒரு சூழலை நாம் உருவாக்கினால் அது முடியும். யார் உண்மையில் இந்த படுபயங்கர சூழலுக்கு காரணமோ, அதாவது பெரும் பணக்காரர்கள், ஊரை அடித்து சாப்பிடும் டாடா, அம்பானி போன்ற கொழுத்த தரகு முதலாளிகள், பார்ப்பன கொழுப்பெடுத்த பெரும் ஊடகங்கள், RSS இந்துத்துவ பயங்கரவாதிகள், அவர்களின் ஏஜெண்டுகளான IAS, IPS உள்ளிட்ட பெரும் அதிகாரிகள், வோட்டு பொறுக்கி அரசியல் வியாதிகள், சாதி சங்கங்கள் இவர்களின் அடியாள் படையான கிரிமினல் தாதாக்கள், மபியாக்கள், போலீசு, நீதிபதி போன்றவர்கள், பிற மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் உள்ளிட்டவர்களை நாம் குற்ற பரம்பரையாக மாற்றினால்தான் உழைக்கும் மக்களாகிய நாம் குற்ற பரம்பரையாக கருதப்படுவதிலிருந்து விடுதலை கிடைக்கும்.




அதற்கு முதலில், குற்றபரம்பரையாக நாம் இல்லை என்ற உணர்வை பெற வேண்டும். பிள்ளை பெற்று வளர்க்கும் பன்றிகளாக அல்ல மாறாக சுயமரியாதையுள்ள மனிதர்களாக உணர வேண்டும். விவசாயி, தொழிலாளி, மாணவர்கள், அரசு ஊழியர்கள், தனியார் கம்பேனி ஊழியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் எல்லாருக்கும் பிரச்சினை ஒன்றுதான், எதிரி ஒருவர்தான் என்று உணர்ந்து அந்த அடிப்படையில் ஒன்று திரள வேண்டும். ஜனநாயகத்திற்க்கான ஒவ்வொரு வாய்ப்பையும் விட்டுக் கொடுக்காமல் உறுதிப்படுத்த போராட வேண்டும். தீர்வு தனிமனிதர்களிடம் இல்லை, ஒரு சமூகமாக நம்மிடம்தான் உள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.

அப்படியொரு சூழலில் மக்களை குற்றவாளிகளாக்கி கண்காணித்த பொழுதெல்லாம் கண்டும் காணாமல் களிவெறியாட்டம் போட்ட ஊடகங்களும், ஆளும் வர்க்கங்களும் உண்மையான குற்றவாளிகள் குற்ற பரம்பரையாக நடத்தப்படும் அந்த சூழலில் 'குற்ற பரம்பரை' 'குற்ற பரம்பரை' என்று கதறி கூச்சலிடுவார்கள். அப்படித்தான் ரஸ்யா, சீனாவில் நடந்த பொழுது உலகெங்கும் ஆளும் ஏகாதிபத்திய கும்பல்களும் அவர்களின் ஆசன வாய்களாக செயல்பட்ட ஊடகங்களும் கூச்சலிட்டன. அப்படியொரு முடை நாற்றமெடுக்கும் கூச்சலே நாம் சரியாக செயல்படுகிறோம் என்பதற்கான அளவுகோல். அதுவே மக்களுக்கான புதிய ஜனநாயகம் உறுதிப்பட்டுள்ளதிற்கான அடையாளம்.

அசுரன்

Monday, June 23, 2008

விழுப்புரத்தில் விவிமு தோழர்களை வெட்டிப் படுகொலை செய்த பாசிச CPM

விழுப்புரம் மாவட்டத்தில் ம க இ கவின் தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தி வெட்டிக் கொன்றுள்ளது பாசிச CPM. இந்த தாக்குதலில் தோழர் இராசேந்திரன் படுகொலை செய்யப்பட்டுவிட்டார். மேலும் மூன்று தோழர்கள் மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார்கள். விவரங்கள் தோழர் ஏகலைவன் மற்றும் சந்திப்பின் இருட்டடிப்பு தளங்களில் உள்ளன. தாமதமாக இன்றுதான் இந்த தகவல் தோழரின் தளத்திலிருந்து தெரியவந்துள்ளது. இது எமக்கு துயரத்தை அல்ல மாறாக இந்த தியாகங்களுக்கு நேர்மையாக இருந்து இன்னும் உறுதியுடன் நின்று எதிரிகளை துவம்சம் செய்யும் மன உறுதியை தருகிறது.
'CPM = Corporate Party of Murderers'


பாசிச CPMன் மக்கள் விரோத மோசடி வித்தைகளையும், திரிபுவாதங்களையும், பாசிச நடைமுறைகளையும் அம்பலப்படுத்தி தொடர்ந்து தோழர்கள் செயல்பட்டு வந்ததன் எதிர்வினையாகவே இது நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. பார்ப்பன பயங்கரவாத அமைப்பான பாசிச RSSயை புரட்சிகர சக்திகள் அம்பலப்படுத்திய போது கூட அவர்கள் பதில் தாக்குதல் பல இடங்களில் தொடுத்துள்ள போதும் கூட இது போல திட்டமிட்டு மாபியாக்களாக தாக்குதல் நடத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

CPM எந்த வகையிலும் ஒரு சாதாரண வோட்டு பொறுக்கி கட்சிக்குரிய அடிப்படை ஜனநாயக பண்புகள் கூட இல்லாத சுத்தமான பாசிச அமைப்பாக உருவெடுத்திருப்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது. இதை தனி ஒரு சம்பவமாக கருதி இந்த கருத்துக்களை சொல்லவில்லை. தொடர்ந்து நந்திகிராமிலும், சிங்கூரிலும், மே.வாவில் பல்வேறு ஜனநாயக சக்திகளை ஒடுக்கிய நடவடிகைகளிலும், கேரளா, மே.வாவில் இதே போன்ற பல்வேறு போராட்டங்களில் புகுந்து பாசிச CPM ரவுடிகள் நடத்திய பல்வேறு கொலைவெறி தாக்குதல்களை கவனத்தில் கொண்டுமே இந்த முடிவுகளை அறிவிக்கிறோம்.

இது ஏதோ விதிவிலக்கான ஒரு நிகழ்வு அல்ல. CPMன் தலைமையில் திரிபுவாத மாமாக்கள் உட்கர்ந்து கொண்டு வாய் கூசாமல் பொய்களை பேசி நாட்டை கூட்டிக் கொடுப்பதில் முன்னணியில் உள்ளனர். அவர்களின் அணிகளோ தாம் இருக்கின்ற இடங்களில் தண்ணீர் குழாய் கனெக்சனிலிருந்து, மின்சார கனெக்சன் வரை மாமா வேலை பார்த்து பொறுக்கி தின்பதும், கட்சி விட்டு கட்சி மாறி நக்கிப் பிழைப்பதும், எல்லா போர்ஜெரி, 420 வேலைகளையும், சாதிய ஆதிக்க நடவடிக்கைகளையும் செய்வதற்க்கான ஒரு அரசியல் அங்கீகாரமாகவே CPMல் உள்ளனர். இந்த மொள்ளமாறித்தனங்களுக்கு ஒரே அடிப்படை உழைக்கும் மக்களை சுரண்டி சுகம் காணும் CPM என்ற பாசிச திரிபுவாத அமைப்புதான். அவர்களின் பிசினஸுக்கு ஆதாரம் இந்த அமைப்புதான். போலீசிடம், அதிகாரிகளிடம் CPM என்ற அடையாளத்துடன் சென்று மொள்ளமாறித்தனங்களுக்கு பேரம் பேசி ஆன்மவிபச்சாரம் செய்வதற்க்கு அங்கீகாரம் கொடுப்பது இந்த சிவப்பு நிறம்தான். எனவேதான் புரட்சிகர அமைப்பினரின் செயல்பாடுகள் வெறுமே அரசியல் ரீதியான விளைவுகளையல்ல மாறாக அவர்களின் நக்கிப் பிழைக்கும் பொறுக்கித்தனத்திற்கே ஆப்பறைவதாக இருக்கிறது. ஏனேனில் அவர்களின் அதிகாரத்துவமே அவர்களின் பிழைப்பிற்கு அடிப்படை. CPM அம்பலமானால் அதன் அணிகள் அனாதைகளாக மாறி அதிகாரமிழப்பர். இதனை அந்த அணிகளில் உள்ள உணர்ப்பூர்வமான தோழர்களை விதிவிலக்காக கருதியே சொல்கிறோம்.

திரிபுவாத ரவுடி கும்பலின் பொருளாதார அடித்தளத்திற்க்கு வேட்டு வைக்கும் இந்த நடவடிக்கைகள் பாசிச CPMமிடமிருந்து வேறு விளைவுகளை ஏற்படுத்தியிருந்தால்தான் ஆச்சர்யம்.

ஆயுதம் தாங்குவதற்க்கு எதிராக ஏதோ அமைதி விரும்பி அஹிம்சாவாதிகள் போல வேசம் கட்டும் இந்த பாசிஸ்டுகள், ஜனநாயகத்தின் பிரதிநிதிகள் போல அறிவுஜீவிகள் அடிக்கும் ஜாலராக்கள் துணையுடன் கல்லாக் கட்டும் இந்த பாசிஸ்டுகள் - உண்மையில் அராஜகத்தையும், நேர்மையின்மையையும், மொள்ளமாறித்தனத்தையும், தாதாயிசத்தையும் மட்டுமே நம்பி பிழைப்பு நடத்துகிறது. 'எமது ஆயுதம் எது என்பதை எமது எதிரி தீர்மானிக்கிறான்' என்பதை நடைமுறையாகக் கொண்ட புரட்சிகர அமைப்புகள் CPMயை ஜனநாயக வழிகளில் மக்களிடம் சென்று பேசியே அம்பலப்படுத்தி வந்துள்ளன. மாறாக மக்களின் எதிரி CPM மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் புரட்சிகர அமைப்புகளை அரிவாள் கொண்டு சந்திப்பதாக முடிவு செய்துள்ளது. மக்களின் எதிரி CPM ஜனநாயக வழிமுறைகளை அல்ல மாறாக அராஜக ஆயுத வழியில் கணக்குத் தீர்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளதை தெளிவு படக் காட்டிவிட்டான். ஜனநாயகத்தின் பிரதிநிதியாக CPMயை தலையில் தூக்கி வைத்து ஆடிய ஜனநாயகத்தின் குலக் குஞ்சுகள் அந்த பிரச்சாரத்தை இன்னும் விரிவாக செய்ய இதுவே சரியான தருணம். ஏனேனில் இவர்கள் குறிப்பிடும் ஜனநாயகம் யாருக்கான ஜனநாயகம் என்பது வெளிப்படையாக அம்பலப்பட்டுள்ளது. "மக்களுக்கு பாசிசம், அடிவருடி பூட்ஸ் நக்கிகளுக்கு ஜனநாயகம்" - இதுதான் இவர்களின் ஜனநாயகம்.
CPMல் இருக்கும் உணர்வுப்பூர்வமான தோழர்களே! உங்களுக்கு சுரணையிருந்தால் உங்களது கம்யூனிச உணர்வுகளை நடைமுறையுடன் உரசிப் பார்த்துக் கொள்ளும் தருணம் இது. பாசிச CPMல் இருந்து மக்களிடம் அவமானப்படுவதை விட உங்களது நேர்மையான நடைமுறைக்கேற்ற புரட்சிகர ஜனநாயக அமைப்புகளில் அணி திரளுங்கள்.

வர்க்கப் போராட்டத்தில் படு கொலை செய்யப்பட்ட அந்த இனிய தோழருக்கு வீரவணக்கங்கள்....

அசுரன்

நந்திகிராமத்திலிருந்து விழுப்புரம் வரை சிபிஎம் ரவுடிக் கும்பலின் கொலைவெறித் தாண்டவம்....

ஆயுதத்தை கைகள் நடுங்க கோழைத்தனமாக ஏந்திவிட்ட‌ கூலிப்படை பொறுக்கி கும்பல்

கூலிப்படைகளாய் ஆன‌ போலி கம்யூனிஸ்டுகள்

Tuesday, October 23, 2007

பய பீதியில் மோடியும், ஜெயலலிதாவும் - பாசிசம்=கோழைத்தனம்!

பாசிஸ்டுகளின் இயல்பே உண்மையை கண்டால் பயந்து அஞ்சி ஓடி ஒளிந்து கொள்வதுதான். பாருங்களேன் October 2004 ல் ஒரு பாசிஸ்டை ஒரு பொது மேடையில் நிறுத்தி உண்மைகளை கேட்ட பொழுது அது அஞ்சி நடுங்கி மேடையிலிருந்து பயந்து ஓடியது. இ஧தா அதே Octoberல் 2007ல் இன்னொரு பாசிஸ்டை வேறொரு மேடையில் நிறுத்தி உண்மைகளை கேட்ட பொழுதும் அஞ்சி நடுங்கி நா வறண்டு தண்ணீர் தாகமெடுக்க பதறி ஓடியுள்ளது.

இங்கு தமிழ்மணத்திலும், வேறு பல்வேறு இடங்களிலும், சம்பவங்களிலும் கூட பாசிஸ்டுகளின் முன்னால் மறுக்க இயலா உண்மைகளை வைத்த போதெல்லாம் பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடி ஒளிந்ததை பார்த்த அனுபவம் நம்மில் பலருக்கு இருந்திருக்கும். இவர்கள் அனைவருமே பார்ப்பன பயங்கரவாத பாசிஸ்டுகள்.

அந்த அக்டோபர் சம்பவங்களை கீழே பார்ப்போம்.


October 2007-ல் ஒரு பார்ப்பன பயங்கரவாத பாசிஸ்டு - மோடி:

CNN IBN சேனலில் Devilஒs Advocate என்ற நிகழ்ச்சியில்(கலைஞர் கருணாநிதி இவருக்கு முன்பாக இதில் தோன்றியவர். அவர் அஞ்சி நடுங்கி ஓடி விடவில்லை) மோடியை கரன் தப்பார் என்பவர் பேட்டியெடுத்தார். பாசிஸ்டு மோடியிடம் கேட்க்கப்பட்டதெல்லாம் உண்மைகள் குறித்த ரொம்ப ரொம்ப சாதாரணமான கேள்விகள் மட்டுமே. அதற்க்கு பதிலளிக்க பயந்த அந்த கோழை பின்வருமாறு கூறி ஓடி விட்டான். அவர்களிடம் கேட்க்க தகுந்த நியாயமான கேள்விகளை கேட்டால் நெஞ்சு வெடித்து மேடையிலேயே மரணித்துவிடுவார்கள் போல...


KT: Can I point out to you that in September 2003 the Supreme Court said that they had lost faith in the Gujarat government? In April 2004 the Chief Justice of the Supreme Court said that you were like a modern day Nero who looks the other side when helpless children and innocent women were being burnt. The Supreme Court seems to have a problem with you.

Modi: I have a small request to make. Please go through the SC judgment. If there is anything in writing, I ll be happy to know everything.


KT: There was nothing in writing. You are right. It was an observation.

Modi: If it is in the judgment then Ill be happy to give you the answer.


KT: But do you mean a criticism by the Chief Justice in court doesnt matter?

Modi: Its a simple request. Please go through the court judgment. Hand out the sentence you are quoting and let the people know it.

KT: Ok. In August 2004 the Supreme Court reopened some 2,100 cases out of a total of around 4600 almost 40 per cent, and they did so because they believed that justice hadnt happened in Gujarat.

Modi: Ill be happy. Ultimately the court of law will take the judgment.


KT: Ill tell you what the problem is. Even five years after the Gujarat killings of 2002, the ghost of Godhra still haunts you. Why have you not done more to allay that ghost?

Modi: This I give it to the mediapersons like Karan Thapar. Let them enjoy.


KT: Can I suggest something to you?

Modi: I have no problem.


KT: Why cant you say that you regret the killings that happened? Why cant you say that may be the government should have done more to protect Muslims?

Modi: What I had to say I have said at that time, and you can find out my statements.


KT: Just say it again.

Modi: Not necessary that I have to talk about, in 2007, everything you want to talk about.


KT: But by not saying it again, by not letting people hear the message repeatedly you are allowing an image contrary to the interest of Gujarat to continue. Its in your hands to change it.

(Modi takes mike off)

Modi: Ill have to rest. I need some water.

Paani (water).

Modi: Dosti bani rahe bas (Friendship should be maintained, thatஒs all). Iஒll be happy. You came here. I am happy and thankful to you. I cant do this interview. Itஒs ok your things are. Apne ideas hain aap bolte rahiye aap karte rahiye (These are your ideas, you keep talking, keep doing). 3-4 questions Ive already enjoyed. Nahin please.


KT: But Modi saab...

Modi: Nahin, please Karan.


KT: But Modi saab.

Modi: Karan dekho main dostana sambhand rakhna chahta hoon, aap usko koshish kariye (Karan, I want to maintain friendly relations. You make efforts towards that).


KT: Mujhe ek cheez samjhayee sir. I am not talking about doing anything wrong. I am saying why cant you correct your image?

Modi: This is not the time. Uske liye aap mujhe 2002 mein mile hote, 2003 mein mile hote mein sab kar leta (for that, you should have met me in 2002, you should have met me in 2003, I would have done all that).



Thanks: The Hindu



தேசிய நாயகன் மோடி தேசிய காமெடியனாக மாறியதற்க்கு அவனது பாசிஸ இயல்பு தவிர வேறொன்றும் காரணமில்லை. உலகப் புகழ்பெற்ற பாசிஸ்டு ஹிட்லர் அவன் ஹீரோவாக இருந்த காலத்திலேயே காமெடியனாக சித்தரிக்க (The Great Dictator) முடிந்ததற்க்கு சார்லி சாப்ளினின் திறமை மட்டும் காரணமல்ல. அவன்(ஹிட்லர்) பாசிஸ்டு என்பதும் சேர்ந்துதான் அங்கே காமெடிக்கு வலு சேர்க்கிறது. பாசிஸ்டுகள் கோழைகளாக இருப்பது இயங்கியலின் விதி. பயப் பீதியில் இருக்கும் முதலாளித்துவத்தின் கடைசிப் புகலிடம் பாசிசம். அதன஡ல் கோழைத்தனம் என்பது அதன் அடிப்படை இயல்பு.

October 2004-ல் ஒரு பார்ப்பன பயங்கரவாத பாசிஸ்டு - ஜெயலலிதா:

இதே போல அக்டோ பர் 2004ல் ஜெயலலிதா என்ற பாசிஸ்டை மேடையில் உட்கார வைத்து சில சாதாரண கேள்விகள் கேட்டதற்க்கு அது பின்வருமாறு பதில் சொல்லி ஓடி விட்டது.
(http://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/09/040930_jayainterview.shtml)


KT: Except for the fact that many people felt, not just the press this time, but the court was actually saying that legally you were innocent but morally you had a case to answer at least to yourself personally.

JJ: I told you I do not comment on any judgment of the Supreme Court, whether the judgment involves me personally or any other matter of public importance. I never have commented on any judgment of the Supreme Court, I will not do so.


KT: You are a very tough person, Chief Minister.

JJ: People like you have made me so.

KT: You said that you were misunderstood.

JJ: Yes.

KT: Do you think that you are badly treated by the press?

JJ: I do not wish to say anything more on this. Anyway your interview is not doing anything to help matters.

KT: My aim, Chief Minister, was to get to the core of the misunderstanding. You said that the press.

JJ: Your aim seems to have been to put as many unpleasant questions as possible and try to provoke me.

KT: Not to provoke you but to put to you the questions that have been discussed for the last three years and which in many ways may be responsible for the electoral adversityஸ

JJ: Havent you asked all of your questions? Have you got anything more to ask?

KT: I have come very close to the end of this interview, I have only one last question. Are you
confident that you can see your electoral low point over with, and that you will win in 2006?

JJ: Wait and see. I told you already I dont believe in astrology. I cant predict what will happen in the next elections but you will be around I suppose. Wait and see what happens.

KT: Is that a yes, you will win?

JJ: I said wait and see.

KT: Chief Minister, a pleasure talking to you on HARDtalk India.

JJ: I must say it wasnt a pleasure talking to you. Namaste

சாதாரண கேள்விகள் கேட்டால் அது இவர்களை தூண்டிவிடுகிறதாம். இவர்கள் சொல்லும் பொய்களை நம்பும் வெறியேற்றப்பட்ட கூட்டங்களில் பேசி பழகி விட்டார்கள் அல்லவா அதனால்தான் வித்தியாசமாக ஓரளவு சொந்த புத்தியுள்ளவர்கள் மத்தியில் பேசுவதற்க்கு இவர்களால் இயலவில்லை. இப்படி பீதி கொண்டு பயந்து ஓடுவதற்க்கு ஒரு சொறிநாயாக பிறந்திருக்கலாம். அல்லது ஒரு பன்றியாய் பிறந்து மலத்தை தின்று உயிர் வாழ்ந்திருக்கலாம். மானங்கெட்ட பொழப்பு.

அரசு இயந்திரத்தின் பலத்தில் நின்று கொண்டு அடாத ஆட்டம் ஆடும் இது போன்ற பாசிஸ்டுகளை வீதிகளில் சந்தித்து கேள்விகளாலேயே கொன்று விடலாம். அவ்வளவுதான் இவர்கள். ஒரு கரப்பான் பூச்சியை ஒத்ததோரு வாழ்க்கை, மன இயல்பு.

அசுரன்

Related Article:

கரண் தாப்பரிடம் இருந்து தப்பியோடிய மோடி: சீழ்ப் பிடித்து நாறும் இந்துத்துவ முகம்

Related Posts with Thumbnails