TerrorisminFocus

Showing posts with label இடஓதுக்கீடு. Show all posts
Showing posts with label இடஓதுக்கீடு. Show all posts

Friday, May 30, 2008

குஜ்ஜார் போராட்டமும், சாதிக் கொழுப்பெடுத்த பார்ப்பன வெறி டைம்ஸ் ஆப்பு இந்தியாவும்!!

பார்ப்பன கொழுப்பெடுத்த RSS பயங்கரவாத பத்திரிகை - டைம்ஸ் ஆப் இந்தியா!!!

டைம்ஸ் ஆப்பு(ஆப்பு இந்தியாவுக்கு) இந்தியா பத்திரிகை ஒரு பார்ப்பன பத்திரிகை என்பதும், குறிப்பாக அது ஒரு RSS பயங்கரவாதிகளின் அதிகாரப் பூர்வ பத்திரிகை என்பதும் பெரும்பாலனவர்கள் அறிந்ததே.

அடிக்கடி தனது பார்ப்பன தினவெடுத்த கருத்துக்கள் மூலம் பிற பிரிவு பெரும்பான்மை மக்களை அவமானப்படுத்தி, சிறுமைப்படுத்தி வருவதை குமுதம் உள்ளிட்ட இந்த பத்திரிகைகள் தொடர்ந்து செய்து வருகின்றன.

அதே நேரத்தில், பார்ப்பன கும்பலின் அநீதியான போராட்டங்களையும் கோரிக்கைகளையும் ஏதோ மிக உயர்வானது, நியாயமானது என்றும் தவறாமல் பிரச்சாரம் செய்து வருகின்றன இந்த பத்திரிகைகள். இடஓதுக்கீடை எதிர்த்து போராடிய மருத்துவ கல்லூரி பார்ப்பன கும்பல் முதல் சேது சமுத்திர திட்டம் வரை பல்வேறு பிரச்சினைகளில் இது கண்கூடு.

தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் சாதியினர் தம்மை ST பிரிவில் சேர்க்கக் கோரி போராடி வருவதையும் தனது பார்ப்பன கொழுப்பின் அடிப்படையிலேயே கேலி செய்துள்ளது டைம்ஸ் ஆப்பு இந்தியா. குஜ்ஜார் பிரச்சினையை பொறுத்த வரை நமக்கும் சில மாற்று கருத்துக்கள் உள்ளன. ஆனால் ஒரு பிரச்சினையை அதன் சரியான அம்சத்தில் அணுகுவதும் மாறாக அந்த பிரச்சினையை தமது மேலாதிக்க கருத்துக்களை நிறுவும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளும் குசும்பும் வேறு வேறு. டைம்ஸ் ஆப்பு இந்தியா போன்ற பார்ப்பன வெறி பத்திரிகைகள் இரண்டாவதையே செய்து வருகின்றன.

துப்யமேன் என்ற பெயரில் வெளிப்படையாகவே பார்ப்பினியத்தை நக்கும் டைம்ஸ் ஆப்பு இந்தியாவின் கார்ட்டூன் படங்கள் கடந்த சில நாட்களாக மிக வக்கிரமாக எழுதி வருகின்றன.





Photobucket

டைம்ஸ் ஆப்பு இந்தியாவில் வந்த கார்ட்டூன்


29 May 2008 ல் அது வெளியிட்ட கார்ட்டூனில் பொது மக்கள் குஜ்ஜார்களை எதிர்த்து கல்லெடுத்து தெருச் சண்டையில் ஈடுபட கோரிக்கை விடும் வகையில் கார்ட்டூன் வெளியிட்டிருந்தது இந்த கொழுப்பெடுத்த பத்திரிகை. குஜ்ஜார்கள் தமது உயிரை தியாகம் செய்தே போராடுகின்றனர். அந்த கோரிக்கை ஒரு தீர்வா என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும் அந்த கோரிக்கைக்கு அடிப்படையான சமூக பொருளாதார பின்னணி சாசுவதமான பேருண்மை என்பதில் நமக்கு மாற்று கருத்துக்கள் இல்லை. மாறாக, உயர் நடுத்தர வர்க்க AIMS பார்ப்பன பொறுக்கிகளோ அல்லது RSS, விஸ்வ ஹிந்து பரிசத் பயங்கரவாதிகளோ கோழைகளாய் பிறரின் ரத்தத்தில், அப்பாவி நோயாளிகளின் மரணத்தில், சிறுபான்மை உழைக்கும் இஸ்லாமிய மக்களின் ரத்தத்தில்தான் தமது அரசியல் கள்ளச் சாராயத்தை காய்ச்சிக் கொள்கின்றனர். ஆயினும் இந்த பத்திரிகைகள் அந்த அயோக்கியத்தனமான பார்ப்பன வெறி போராட்டங்களை, பயங்கரவாத செயல்களை ஏதோ விடுதலை போராட்டம் ரேஞ்சுக்கு உயர்த்தி பிடித்து முதல் பக்கத்தில் படங்களுடன் செய்தி வெளியிட்டு தமது அரிப்பை சொறிந்து கொள்கின்றன.

குறிப்பாக அந்த கார்ட்டூன் இடஓதுக்கீடிற்கு எதிராக எல்லா மக்களும் கல்லெடுத்து போராடுவதாக குறிப்பிடுகிறது. விரல் விட்டு எண்ணக் கூடிய பார்ப்பன மேல் சாதி வெறியர்களின் போராட்டத்தை ஏதோ மிகப் பெரிய போராட்டமாகவும், பெரும்பான்மை மக்களின் போராட்டங்களை சிறுமைப்படுத்துவதுமான இரட்டை நாக்கு அணுகுமுறை இவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆயினும் இவையெல்லாவற்றையும் சூடு சுரனையின்றி படித்துக் கொண்டிருக்கும் கும்பல்தான் நமது இலக்கு. இந்தியாவில் பார்ப்பனனுக்கு மட்டும்தான் சூடு சுரனையுள்ளது என்று நம்பும் பார்ப்பனியக் கொழுப்புக்கு இந்த மயான அமைதிதான் அடிப்படை அமைத்துக் கொடுக்கிறது எனும் போது அந்த மாயான அமைதியை சுட்டுப் பொசுக்குவதுதான் நமது இலக்கு.

பிற பெரும்பான்மை மக்களை தேவடியா மகன் என்று வெளிப்படையாக சொல்லித் திரிந்த தைரியம்தான் சிறுபான்மை பார்ப்பன கும்பலின் இடஓதுக்கீடு எதிர்ப்பு போராட்டத்தை வெகு மக்கள் போராட்டமாக திரிக்கும் திமிர்த்தனத்திற்க்கும் அடிப்படையாக உள்ளது. பெரும்பான்மை மக்களின் அன்றாட அவல வாழ்வின் காரணமாக இந்த அரசு வழங்கும் அல்ப சலுகைகளில் எப்படியாவது முட்டி மோதி தமக்கு ஒரு வாய்ப்பை பறித்துக் கொள்வதற்காக அவர்கள் நடத்தும் போராட்டங்களை அவதூறு செய்யவும் அடிப்படை அமைத்துக் கொடுக்கிறது.

Photobucket
கிரிமினல்கள் ஜக் சுரையாவும், நிலாபும் வெகு மக்களை கிரிமினல்கள் என்று புரளி பேசும் TOI கார்ட்டூன்

இன்னும் ஒரு படி மேலே போய் அதற்க்கு அடுத்த நாள் இந்த துப்யாமென் பொறுக்கி குஜ்ஜார்களை கிரிமினல்களாக சித்தரிக்கிறது. பல் டாக்டர் தனது மகளை கொன்ற வழக்கையும், குஜ்ஜார் போராட்டத்தையும் ஒன்றாக பட்டியலிட்டு இரண்டு கிரிமினல்கள் பேசுவது போல கார்ட்டூன் போட்டுள்ளது இந்த பத்திரிகை. கையில் காயாமல் வலிந்து ஓடும் ரத்தக் கறையுடன் அலையும் பார்ப்பன மத வெறி தலைவர்களான அத்வானி, பால்தாக்காரே, வாஜ்பேயி, மோடி போன்ற சொறிநாய்களை இந்த பத்திரிகைகள் என்றைக்கும் கிரிமினல்களாக காட்டுவதில்லை. உண்மையிலேயே கிரிமினல் குற்றங்களின் மாட்டிக் கொண்டு கையும் களவுமாக பல்வேறு தொலைக்காட்சி, செய்தி நிறுவனங்களால் அம்பலப்படுத்தப்பட்ட பார்ப்பன மதவெறி தலைவர்கள் யாரும் இது வரை இந்த பத்திரிகைகளால் கிரிமினல்கள் என்று காட்டப்படுவதில்லை.

மாறாக, பின் தங்கிய, படு மோசமான ஏழ்மை நிலையிலுள்ள குஜ்ஜார்களின் ஓட்டுக்களை வாங்குவதற்க்காக பழங்குடியினர் பட்டியலில் அவர்களை சேர்ப்போம் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த பாஜக பயங்கரவத கட்சிதான் உண்மையான கிரிமினல். இந்த கிரிமினல்கள் குறித்து டைம்ஸ் ஆப்பு இந்தியா, குமுதம் போன்ற RSS பயங்கரவாத, மக்கள் விரோத பத்திரிகைகள் என்றைக்கும் எழுத மாட்டார்கள். உலகமய பொருளாதாரம் இந்திய கிராமங்களை சாவின் விளிம்பில் நிறுத்தி வைத்து விளையாண்டு வரும் கிரிமினல் குற்றம் இன்னும் மேலதிகமாக இது போன்ற பெரும்பான்மை பின் தங்கிய பிரிவு மக்களின் வாழ்க்கையை மோசமாக்கி வருகிறது என்பதுதான் உண்மை. இந்த கிரிமினல் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து சிலாகித்து எழுதும் இந்த மக்கள் விரோத பத்திரிகைகள் அதன் விளைவாக எழும் வெகு மக்கள் போராட்டங்களை கேவலப்படுத்தி, சிறுமைப்படுத்தி எழுதி தமது மேல்சாதி அரிப்பை வெட்கமின்றி அப்பட்டமாகவே சொறிந்து விட்டுக் கொள்கின்றன. இது போன்ற பத்திரிகைகளை துட்டு கொடுத்து வாங்காமல் புறக்கணிப்பது என்பதுதான் தன்மானமுள்ள ஒவ்வொருவனும் செய்யக் கூடிய குறைந்த பட்ச எதிர்ப்பு நடவடிக்கை.

இவர்கள் உண்மைகளை என்றைக்கும் எழுதப் போவதில்லை. இவர்களுக்கான தண்டனைகள் வீதிகளில் வழங்கப்படும் போது உண்மைகள் எழுதும் தகுதியுள்ளவர்களுக்கோ எழுதுவதற்கு நேரமிருக்காது. இவர்களின் குரல்கள் கேட்க்க நாதியின்றி கரைந்து போய் கொண்டிருக்கும். கார்ட்டூன் எழுதிய திமிர் பிடித்த கரங்கள் தெய்வங்களை இறைஞ்சி உதவி கேட்டுக் கொண்டிருக்கும். கிரிமினல்கள் தெய்வமாகி இருப்பார்கள் அப்பொழுது.

அசுரன்

இடஓதுக்கீடு பிரச்சினையில் AIMS பார்ப்பன வெறியர்கள் அப்பாவி நோயாளிகளை பணயக் கைதிகளாக வைத்து நடத்திய மிரட்டல் நாடகத்தை அம்பலப்படுத்தி கைப்புள்ள தளத்தில் வெளியிடப்பட்ட கார்ட்டூன்:


Photobucket

This cartoon I got forwarded to my Mail from my friend. Sometime before Indian Express published a cartoon ridiculing SBI strike. Now while the upper class elite are striking against the right of oppressed people, Indian Express supporting them. This is the real face of Indian Express always against right of the people. The SBI cartoon is modifed to expose the Anti reservation strike by junior Doctors.
Cartoon & Caption: Kaipulla

Related Articles:
இவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான் நம்ப விரும்புகிறோம் அல்லவா??!!!
The media’s role in communalising Karnataka
குஜ்ஜார் போராட்டமும் 'சமூக நீதி"யின் வரம்பும்

Reservation!

Reservation-Haunts Again(More teeth added) -I

Wednesday, July 11, 2007

புரளி பேசும் போலி தமிழ தேசியவாதிகள்

குழலி அவர்கள் மக இகவின் இடஓதுக்கீடு நிலைப்பாடு குறித்து எதுவுமே எழுதாமல் வெறுமனே அது பார்ப்ப்னிய நிலைப்பாடு என்று மட்டும் எழுதி சென்றுள்ளார். என்ன நிலைப்பாடு என்று முதலில் எழுதட்டும் அவர். இடஓதுக்கீடு விசயத்தில் மக இகவின் நிலைப்பாட்டை ஒட்டி நான் இட்ட சில பல துணுக்கு கட்டுரைகள். ஒரு விரிவான ஆங்கில கட்டுரை இவற்றையெல்லாம் ஆதரித்தவர்கள்தான் இதே குழலி உள்ளிட்டவர்கள். அப்பொழுது அதிலிருந்த பார்ப்ப்னிய கருத்து அவர்களுக்கு தெரியாமல் போன மர்மம் என்ன? இப்பொழுதும் கூட அந்த கட்டுரைகளை அவர்களால் மறுக்க இயலாது. அந்த கட்டுரைகளுக்கான சுட்டி இங்கே உள்ளது. அதை படித்து விட்டு குழலி உள்ளிட்டவர்கள் எந்தளவுக்கு அரைகுறையாக உள்வாங்கி வாதிடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். சரி மகஇகவின் நிலைப்பாடு என்ன என்று சொல்லி அது எப்படி பார்ப்ப்னியம் என்று சொல்லியிருக்கலாம் குழலி. அதை செய்ய இயலவில்லை என்பது பரிதாபத்திற்க்குரிய விசயமே.

மேலும் வர்க்க பிரிவு குறித்து மகஇகவின் நிலைப்பாடு என்பதாக முதலாளி தொழிலாளி என்ற இரண்டை மட்டும் அங்கீகரிப்பதாக இன்னொரு அரைகுறை வாதம் வைத்துள்ளார். அசுரன் முதல் பல்வேறு மகஇக ஆதரவு தளங்களில் வந்துள்ள கட்டுரைகளை படித்தாலே இந்திய சூழலில் வர்க்க பிரிவினை என்பது தொழிலாளி, முதலாளி என்ற பிரிவுக்ளை கடந்தது என்பதை புரிந்து கொள்ளலாம். அதுவும் மிக மிக முக்கியமாக இந்த இரண்டு பிரிவும் சிறுபான்மை என்பதை பல இடங்களில் எழுதியுள்ளோம். ஆயினும் குழலி தனது தேவைக்காக தனக்கு புரிந்த ஏதோவொன்றை மகஇகவின் நிலைப்பாடு என்று முன்வைத்து வாதாடுகிறார். அவருக்கு ஒரேயொரு கோரிக்கை மட்டுமே வைக்க விரும்புகிறேன். ஒரு விசயத்தை விமர்சனம் செய்ய முற்ப்படும் போது வெறும் உணர்வுத் தளத்திலிருந்து அனுகாமல் அதனை முழுமையாக உள்வாங்கி பின்பு பரிசீலிக்க முயற்சிக்கவும்.

மேலும் இடஓதுக்கீடு விசயத்தில் வெறுமே ஒடுக்குமுறை செய்பவர்கள் எல்லாருக்கும் இடஓதுக்கீடு கொடுக்கப்படக்கூடாது என்பதாக மகஇக வின் நிலைப்பாட்டை சொல்லி, பிறகு அதை வைத்து தலித்துக்களில் சில பிரிவினருக்கும் இடஓதுக்கீடு கொடுக்கப்படக் கூடாது என்று ம க இக வின் நிலைப்பாடு வந்தடையும் என்று கற்பனையாக வாதம் வைக்கிறார். அவரிடம் மீண்டும் ஒரேயொரு கோரிக்கைதான் மகஇகவின் நிலைப்பாடு எனன்வென்பதை புரிந்து கொண்டு பேசுங்கள் அல்லது புரளி கிளப்பாமல் அமைதியாக இருங்கள். இடஓதுக்கீடு விசயத்தில் மகஇகவின் நிலைப்பாடை இவர்கள் திரிக்கும் இடம் ஒன்றேயொன்றுதான் அதனை இப்பொழுது வெளியிட்டு எதிர்வினை புரிபவர்களுக்கு சகாயம் செய்ய விரும்பவில்லை. அவர்களே கண்டுபிடிக்க இயலுமா என்று பார்க்கட்டும். அல்லது இன்னும் ஒரிரு வாரங்கள் பொறுத்திருந்தால் இதே அசுரனில் கட்டுரை வரும்.

இந்திய தேசியத்தை ஆதரிப்பதாக இன்னுமொரு ஜல்லி. இன்றைய இந்தியா என்பது தேசிய இனங்களில் சிறைக்கூடம் என்று சொன்ன ஸ்டாலின் வழி வந்தவர்கள் நாங்கள். இந்திய தேசியம் எனப்து பார்ப்ப்னியமே என்றும், இந்தி என்பது சம்ஸ்கிருத்தத்திற்க்கு பதிலியான தேசிய ஒடுக்குமுறை ஆயுதமே என்பதுமே மகஇகவின் நிலைப்பாடு. இந்தியா என்பது அனைத்து தேசிய இனங்களும் ஒற்றுமையுடன் இணைந்த ஒரு நாடாக இருப்பதையே குழலி உள்ளிட்ட யாருமே விரும்புகிறார்கள். ஆனால் யாதர்த்தத்தில் அப்படியில்லாமல் இந்தியா என்பது ஒடுக்குமுறை சிறைக்கூடமாக இருப்பதாலேயே இன்றைய இந்திய கட்டமைப்பை எதிர்க்கிறோம். இதில் எமக்குள் வேறுபாடு இல்லை. ஆனால் இதனை சரி செய்வதாக முன் வைக்கப்படும் தீர்வில் தான் வேறுபாடு உள்ளது. அதாவது ஒவ்வொரு இந்திய தேசிய இனமும் தனியாக தனக்கான விடுதலைக்காக போராட வேண்டும் என்று பேசுகீறார்கள். இது ஏற்கனவே இந்தியாவை மேலிருந்து சுரண்டும் பார்ப்ப்னியத்தையும், ஏகாதிபத்தியத்தையும் வலுப்படுத்தும் ஒரு தீர்வே ஆகும். ஏனேனில் நமது எதிரி இந்தியாவில் உள்ள உழைக்கும் மக்கள் எல்லாரையும் ஜாதி, மதம், இனம், மொழி(தேசியம்) என்ற பெயரில் பிரித்து வைக்கும் கருத்துக்களுக்கு தண்ணீர் ஊற்றி வளர்ப்பதோடல்லாமல், பிற்போக்கு, கழிசடைத்தன, பிழைப்புவாத கருத்துக்களை ஆழ ஊன்றும் ஊடக பலத்துடன் இந்திய மக்களை தனக்கான ஒன்றிணைக்கும் மாற்று பண்பாட்டு கலாச்சார பலத்துடனும் இருக்கிறான். இந்தியாவில் ஏதாவதொரு இடத்தில் தேசிய இனக் கோரிக்கையை முன் வைத்து போராடி மக்கள் பலத்தை வென்றெடுக்க முடிந்துள்ளதா என்று ஒரு எ-கா கொடுக்கச் சொல்லுங்கள் குழலியை. அல்லது அப்படி போராடியவர்கள் எல்லாரும் தரகு வர்க்கமாக திரிந்த மர்மம் குறித்து கருத்துச் சொல்ல சொல்லுங்கள் குழலியை.

பிரிட்டிஸ் அதிகாரி ஒருவன் தன் மனைவியிடம் இந்திய பிரிவினையை ஒட்டி சொன்னானம் - "ஒரு வெற்றிகரமான ஆளும் வர்க்கம் என்பது மக்களை எப்படி ஒன்றிணைப்பதில் என்பதில் அல்ல மாறாக எப்படி பிரிப்பது என்பதில் நிபுனத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்' என்று. இவர்களின் தனித் தேசிய தீர்வு என்பது அப்படிப் பட்டதே. மாறாக பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய தேசிய கூட்டு சர்வாதிகாரத்தை தீர்வாக முன் வைக்கிறது மகஇக. இதன் மூலம் உழைக்கும் வர்க்கத்தை தேசிய இன ரீதியாக பிரித்து ஒன்றுடன் ஒன்று மோத விடுவதை தவிர்க்கிறது. இங்கு மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் இந்தியா போன்ற நாடுகளில் தேசிய இனக் கோரிக்கையை முன் வைத்து செய்யப்படும் எந்த போராட்டமும் வெற்றி பெறாது. ஏனேனில் தேசின இன உணர்வு என்பதே ஜனநாயகத்தின் சுவை அறிந்த சமூகத்தின் உணர்வு ஆகும். அப்படி ஒரு வரலாற்று கட்டத்தில் இந்தியா இல்லை. இன்றைக்கு கர்நாடகாவில் தேசிய இன வெறி என்பது நிலபிரபுத்துவ சக்திகள் தங்களின் கீழே ஜனநாயகமின்றி திரண்டுள்ள மக்களை ஆட்டு மந்தை கூட்டமாக பயனபடுத்தவே உபயோகிக்கிறதே அன்றி அது எந்த வகையிலும் தேசிய இனத்தின் வெற்றிக்காக அல்ல. இதனை கன்னட மொழி கலாச்சாரம், பண்பாட்டின் சிதைவிலிருந்தே புரிந்து கொள்ளலாம். மாறாக ஓப்பீட்டளவில் இந்தியாவிலேயே தேசிய முதலாளித்துவம் வளர்ந்துள்ள தமிழகத்தில்தான் தேசிய இன உணர்வு ஓரளவு வீரியமாக உள்ளது. இதனாலேயே பிற எந்த இந்திய மொழிகளையும் விட தமிழ் தனது தனித்துவத்தை பேணுவதில் ஒரு படி முன்னே இருக்கும் வாய்ப்பை பெற்றது.

அப்புறம் தமிழீழம் குறித்து கள்ள மௌனம் சாதிப்பதாக ஒரு ஜல்லி. ராமதாஸை விமர்சனம் செய்ததில் குழலி இந்தளவுக்கு கோபம் கொண்டவராய மாறிவிடுவார் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. தமிழீழத்தை பொறுத்தவரை விடுதலைப் புலிகளும் சரி, லங்காவின் தேசிய வெறி கும்பலும் சரி மக்களை பிரித்து ஏகாதிபத்திய சேவை செய்வதில் மட்டும் ஒன்றிணைந்துள்ளனர் என்பதை பல முறை எழுதியுள்ளது புதிய ஜனநாயகம் பத்திரிக்கை. விடுதலைப் புலிகளின் சுய அழிவுப் பாதையை பல முறை நட்பு ரீதியாக விமர்சித்துள்ளது புஜ பத்திரிக்கை. இந்திய தேசியம் துணை வல்லரசாக இங்கு செயல்பட்டு இலங்கையில் தனது அரசு நிறுவனங்களை சுரண்ட விடுவதற்க்கும், பன்னாட்டு, தரகு முதலாளிகள் இலங்கையின் வளங்களை சுரண்டுவத்ற்க்கும் புலிகளும் சரி, இலங்கை தேசிய வெறி கும்பலும் சரி எந்தவொரு இடைஞ்சலும் செய்வதில்லை. இதனாலேயே இந்த இரண்டு பேரும் ஏகாதிபத்தியங்களால ஊட்டி வளர்க்கப்படுகிறார்கள். புலிகள் வேண்டுமானால் தமது ஆட்சிப் பிரதேசத்தில் ஏகாதிபத்தியங்களீன் விருப்பத்திற்க்கு ஆபத்து விளைவிகக் முயலட்டும் பிறகு தெரியும் சேதி.

தமிழ் மொழி குறித்து, அதன் மீதான தாக்குதல் குறித்தும், தமிழர்களின் மீது தாக்குதல் நடக்கும் போது எல்லாம் வெகு விமரிசையாகவே எழுதியுள்ளது புஜ. குறிப்பாக தமிழர்களின் அமைதியில் தீ வைத்து கொளுத்து என்று மும்பையில் தமிழர்கள் சிவசேனா கும்பலால் தாக்கப்பட்ட போது உணர்ச்சி பொங்க எழுதியவர்கள்தான் மக இகவினர்(தமிழகம் அமைதிப் பூஙக் என்று பெயரெடுத்திருந்த அவமானத்தை குத்தி காட்டி).

இன்று தேசியம் குறித்து பேசும் இவர்கள் எல்லாருமே ராஜீவ் காந்தி ஈழ படுகொலைகளுக்காக பலி வாஙக்ப்பட்ட போது இந்திய தேசியத்தின் பாத தாங்கிகளாக மாறி பதுங்கிக் கொண்டார்கள். அப்பொழுதும் கூட ஈழத் தமிழர்களின் உரிமைக்காக மாநாடு நடத்தியது மகஇகதான். இத்தனைக்கும் ராஜீவ் கொலையில் மகஇக தொடர்பு படுத்தப்பட்டு அதன் சில தோழர்கள் சிறையில் இருந்து, அடக்குமுறைக்கு ஆளாகியது. இத்தனை நடந்த பிற்பாடும் உடனடியாக ஈழத் தமிழர்களின் உரிமைக்காக தைரியமாக, சுயமரியாதையுடன் மாநாடு நடத்தியது ம க இக. அப்படி ஒரு மாநாடு நடத்த அரங்கத்தை வாடகைக்கு கேட்ட பொழுது பயந்து கொண்டு தர மறுத்த சுயமரியாதை சிங்கம் வேறு யாருமல்ல நண்பர்களே அது கி. வீரமணீ அவர்கள் தான்.

இன்று இந்திய தேசியத்தை ஆதரிப்பதாக குற்றம் சாட்டப்படும் மக்இக தான் இந்தியா தேசியத்தின் ஒவ்வொரு ஒடுக்குமுறையின் மீதும் கருனையின்றி எதிர்வினை தொடுத்துள்ளது. எந்தவொரு இழப்புக்கும் அஞ்சாமல் செயப்பட்டுள்ளது. கடி நாய்கள் என்று பெயர் வாங்கிய மகஇக வினர்தான் எம்ர்ஜென்ஸி சமயத்திலும் சரி, ராஜிவ் பலிவாங்கப்பட்ட போதும் சரி தைரியமாக உரக்க ஈழத் தமிழர்களின் குரலையும், தேசிய உரிமையின் குரலையும் ஒலித்தனர். ஆனால் இன்று தேசியம் என்று ஜல்லியடித்த அத்தனை பேரும் இந்திய பார்ப்ப்னிய தேசியத்தின் அதிரடி தாக்குதலின் போது பதுங்கி ஒளிந்து கொண்டனர். வீரமணி உள்ளிட்டவர்கள் எமர்ஜென்ஸியை ஆதரித்து அறிக்கை விட்டனர். இதுதான் இவர்களின் அரசியல் நடைமுறை. இவரக்ள் நம்மை குற்றம் சொல்வது அதுவும் எதுவுமே புரிந்து கொள்ளாமல் அரைகுறை அறிவுடன் ஜல்லியடிப்பது ப்டு வக்கிரமானதாக இருக்கீறது.

இதே தமிழ்மணத்தில் திராவிட கருத்தாக்கத்தை மறுத்து வஜ்ரா என்பவன் எழுதிய பொழுது அதனை எதிர்த்து வாதிட்டவர்கள் யார் என்பதை கொஞ்சம் பிரட்டி பார்க்கட்டும் நண்பர் குழலி. ஆதாரம் வேண்டுபவர்கள் நண்பர் முத்து தமிழினியின் தளத்தில் எனது கருத்துக்களை பதிய வைத்து அதை அவரும் பாராட்டி எழுதியதை படித்துக் கொள்ளலாம்.

பார்ப்ப்னியத்தை எதிர்க்கும் கட்சிகள் என்று இவர் யாரை சொல்கிறார் என்றால் ராமதாஸ், திக, திமுக போன்றவற்றை. உண்மையில் பார்ப்ப்னியத்தை எதிர்க்கும் கட்சிகளுடன் மகஇக இணைந்து போராடி வருகிறது. பெரியார் திக முதல் சிதம்ப்ரம் ஆறுமுக சாமி வரை. நேற்றைய விடுதலை சிறுத்தைகள் முதல் தமிழ் தேசிய தோழர்கள் வரை பல அமைப்புகள் சமரசமின்றி பார்ப்ப்னியத்தை எதிர்த்த போதெல்லாம் துணை நின்று போராடியவர்கள் மகஇகவினர்தான்.

அல்பவாதம் என்பது மிடில் கிளாஸின் இயல்பு எனில் அதனை மிக வலுவாக தாக்கி கலாச்சார பிரச்சாரம் செய்யும் அமைப்பு மகஇகதான். மற்றபடி நக்சல்பாரி இயக்கங்கள் குறித்த வரலாறை தெளிவாக படிக்க குழலியை பரிந்துரைக்கிறேன். மார்க்ஸியம் குறித்தும் சித்தாந்த திரிபு குறித்தும், இடது வலது சந்தர்ப்பவாதம் குறித்தும் அவர் தனது அறிவை வளர்த்துக் கொண்டு விமர்சன்ம் செய்தால் எதிர்வினை எழுப்ப எமக்கு வசதியாக இருக்கும். அதை விடுத்து தனது அறிவு புலமை மீது வாசகர்கள் நம்பிக்கை வைத்து தமது ஆதரமற்ற கருத்துக்களை நம்ப வேண்டும் என்ற அடிபப்டையில் எழுதினால் அது வாரமலரில் வரும் கிசு கிசுவைவிட எந்த வகையிலும் உயர்ந்த தரமன்று.

தோழர்கள் கோபப்பட்டு தொலை பேசி செய்ததாக புரளி சொல்லும் குழலி அதற்க்கான ஆதரத்தை வைக்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறேன். அதை செய்யும் நேர்மையிருந்தால் பேசட்டும்.

ஒட்டு மொத்தமாக ராமதாஸை விம்ரசனம் செய்ததை நேர்மையாக எதிர் கொள்ளும் நெஞ்சுரம் இன்றி இப்படி புரளிகளின் பின்னால் ஒளிந்து கொள்ளும் அவல நிலைக்கு குழலி தள்ளப்பட்டுள்ளது வருத்தம் தரும் விசயமே.

அசுரன்


இடஓதுக்கீடு முதல் தேசிய இன உரிமைகள், தமிழீழம் வரை இவர்கள் எம்மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை தர்க்க ரீதியாகவும் தரவு ரீதியாகவும் பல முறை அம்பலப்படுத்தி கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. அவற்றுக்கு இதுவரை பதில் சொல்ல இயலாத தரகு வர்க்க அரசியல்வாதிகளின் ரசிகர்கள் வெறுமே ஒரு சில புரளிகளையே மீண்டும் மீண்டும் கடை பரப்புகிறார்கள். தமிழ் சர்க்கிள் தளத்தில் இது குறித்து சிறப்பான இரண்டு கட்டுரைகள வெளியாகியுள்ளன.

இட ஒதுக்கீடு: சாதி இந்துக்களுக்கு வக்காலத்து தான் சமூகநீதியா?

பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு : மீண்டும் தலைதூக்கும் பார்ப்பனத் திமிர்! சமூகநீதிக் கட்சிகளின்: சமரசம்!

Tuesday, April 03, 2007

இடஓதுக்கீடு!

Thanks 'The Hindu - Tuesday, Apr 03, 2007'
Asuran

Related Posts with Thumbnails