TerrorisminFocus

Showing posts with label சிதம்பரம். Show all posts
Showing posts with label சிதம்பரம். Show all posts

Monday, February 02, 2009

சிதம்பரம் கோயில் இனி தீட்சிதருக்கு சொந்தமல்ல! நந்தனை எரித்த அவமானம் ஒழிக்கப்படும்!!

சிதம்பரம் கோயிலில் தமிழில் பாட முற்பட்ட சிவனடியார் ஆறுமுகச்சாமியை பார்ப்பன ரவுடிகளான தீட்சிதர்கள் அடித்ததும், அதனைத் தொடர்ந்து மகஇகவின் தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு கழகம் பல தொடர் போராட்டங்களை பிற ஜனநாயக சக்திகளுடன் இணைந்து நடத்தி தமிழில் பாடும் உரிமையை வென்றதும் அனைவரும் அறிந்ததே. இதனையொட்டி நடந்த வெற்றி விழா கூட்டத்தின் போது நந்தனை எரித்ததன் அடையாளமான அந்த ஆயிரம் வருட அவமானச் சுவரை இடித்து நொறுக்குவதே லட்சியம் என்று சூளுரைக்கப்பட்டது.

அப்படிப்பட்டதொரு லட்சியத்தை நோக்கிய நடவடிக்கையின் முதல் கட்டமாக சிதம்பரம் கோயில், தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல என்பதை நிறுவி அதனை இந்து அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வருவதற்காக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. அதில் அரசாங்கத்துடன் மனித உரிமை பாதுகாப்பு கழகமும் ஒரு அங்கத்தினராக இணைந்து தீட்சிதர்களுக்கு எதிராக வழக்காடினர். அந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளிவந்துள்ளது.

தீர்ப்பின் படி கோயில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமாக வேண்டும். மேலும், ஒரு வாரத்தில் கோயில் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிகிறது. இது சாதரணமான தீர்ப்பு அல்ல. தீட்சிதர்களை எதிர்த்து வரலாறு நெடுகிலும் நடத்தப்பட்ட போராட்டங்களை அவர்கள் ஒழித்துக் கட்டியுள்ளனர். கடந்த 60 வருடங்களில் பல சட்டப் பூர்வ முயற்சிகளையும் அவர்கள் முறியடித்துள்ளனர். சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்களின் அடாவடித்தனம் என்பது யாராலும் கேள்வி கேட்க முடியாத ஒரு சர்வ வல்லமை படைத்த ஒன்றாகவே நம்பப்பட்டது. தீட்சிதர்களை எதிர்த்து கடந்த காலங்களில் நடந்த நிகழ்வுகள் கவனிக்கும் ஒருவருக்கு மலைப்பே ஏற்படும். அப்படிப்பட்டதொரு வெல்ல முடியாத சக்தியாக கருதப்பட்ட தீட்சிதர்களை அவர்களது கோயிலேயே முறியடித்ததுதான் தமிழில் பாடும் உரிமைக்கான அந்த முதல் போராட்டம்.

இதோ இப்போது அதன் அடுத்த கட்டமான இரண்டாவது போராட்டமும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இது முழு வெற்றியல்ல. இதனை அடுத்த கட்டமாக சட்டரீதியாக எதிர் கொள்ள தீட்சிதர்கள் தயராகலாம். அதுவும் முறியடிக்கப்பட வேண்டும் என்பதும் நந்தனை எரித்து கொன்றதன் அவமானச் சின்னமான அந்த சுவர் உடைத்தெறியப்பட வேண்டும் என்பதுமே நமது அவா. இது குறித்து பின்னூட்டத்தில் தகவல் தெரிவித்த முகம் தெரியாத அன்பருக்கு நன்றிகள்.

அசுரன்

சிதம்பரம் நடராஜனை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் தீட்சிதர்களை காவல்துறைக் கட்டுப்பாட்டில் கொண்டுபோக வேண்டும்

தில்லைச் சிற்றம்பலம் ஏறியது தமிழ்! ஆலயத் தீண்டாமை அகலும் வரைஓயாது எமது சமர்!

தில்லையில் வீழ்ந்தது பார்ப்பனிய ஆதிக்கம்! ம.க.இ.க போராட்டம் வெற்றி!!

Wednesday, March 05, 2008

தமிழர் வழிபாட்டுரிமை போரில் வென்ற சிவனடியார் ஆறுமுகச்சாமிக்கும், தோழர்களுக்கும் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்!!!

ன்று காலை சிதம்பரம் திருச்சிற்றம்பல மேடையில் வெற்றிகரமாக தேவாரத்தை பாடி வழிபட்டிருக்கிறார் சிவனடியார் ஆறுமுகச்சாமி.
( திருத்தம்: இன்று காலை சிவனடியார் ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடியதாக செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது, அது தவறான தகவலாகும் ஆறுமுகச்சாமி காவல் துறையால் கைது செய்யப்பட்ட கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் இந்த நிலையில் காலையில் சிதம்பரம் திருச்சிற்றம்பல மேடையில் வேறு சில சிவனடியார்களே தேவாரம் பாடி வழிபட்டனர், அரசை பகைத்துக் கொள்ள விரும்பாத தீட்சித ரவுடிக் கும்பல் அவர்களை மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அந்தர் பல்டி அடித்தது.)

மூன்று நாட்களுக்கு முன்பாக சிதம்பரம் திருக்கோவிலில் தமிழில் பாடி வழிபடலாம் என்று தமிழக அரசு ஆணை வெளியிட்டது, அந்த ஆணையை பெறுவதற்கென, சிவனடியார் ஆறுமுகச்சாமியும் அவருக்கு பக்கத்துணையாக‌ மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான ம.க.இ.க, பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகள் நடத்திய போராட்டம் நெடியதாகும்.

முன்னொரு சமயத்தில் திருச்சிற்றம்பல மேடையில் சிவனடியார் ஆறுமுகச்சாமி தேவாரம் பாடுவதற்கு முயன்ற பொழுது அவரது கையை முறித்து கோயிலுக்கு வெளியே வீசியெறிந்தது பார்ப்பன தீட்சித ரவுடிக் கும்பல், பார்ப்பன கும்பலின் இந்த‌ அடாவடித்தனத்திற்கு பிறகு, தமிழில் பாட முயன்று தாக்கப்பட்ட அந்த முதியவருக்காக களத்தில் இறங்கியது மனித உரிமை பாதுகாப்பு மையம்., அதன் தோழமை அமைப்பான‌ மக்கள் கலை இலக்கிய கழகமும் தமிழ்நாட்டில் தமிழில் வழிபட உரிமையற்ற இந்த கேவலமான நிலையை மக்களிடம் விளக்கி தெருமுனை கூட்டம், சுவரொட்டி பிரச்சாரம், பேருந்து பிரச்சாரம், கையெழுத்து இயக்கம் என்று வீச்சாக இயங்கியது, இந்த பிரச்சார இயக்கங்கள் மக்கள் மத்தியில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தின, அதே சமயத்தில் (மனு)நீதிமன்றமோ மொக்கையான காரணங்களை கூறி தமிழ் வழிபாட்டுரிமையை மறுத்து தீட்சிதர்களுக்கு ஆதரவாக தீர்பளித்தது, "உங்கள் மனதுக்குள்ளேயே பாடிக் கொள்ளுங்கள்" என்று திமிர் வழிய பேசியது நீதிமன்றம்."

தொடர்ந்து செய்யப்பட்ட‌ மேல்முறையீடுகளாலும், மனித உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த வழக்கறிஞர்களின் அயராத உழைப்பு, சிவனடியார் ஆறுமுகச்சாமியின் சமரசமில்லாத போராட்டம் இவற்றின் காரணமாகவும் இறுதியில் அரசும் நீதிமன்றமும் அடிபணிந்தன, சிதம்பரம் திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் வழிபடலாம் என்று தமிழக அரசு ஆணை வெளியிட்டது.,

தமிழக அரசு வெளியிட்ட இந்த ஆணைய நிறைவேற்றுவதற்காக, சிவனடியார் ஆறுமுகச்சாமியும், மனித உரிமை பாதுகாப்பு மையம், மக்கள் கலை இலக்கிய கழக தோழர்களும் இரண்டு நாட்களுக்கு முன்பு கோவிலின் உள்ளே நுழைந்த பொழுது அவர்களை சுற்றி வளைத்து தாக்கியது தீட்சித பொறுக்கி கும்பல், இந்த தாக்குதலில் சிவனடியாரின் மூக்கு கண்ணாடி உடைந்து சிதறியது, இத்தோடு நிறுத்தாமல் அங்கு 'காவ‌லுக்கு' வ‌ந்திருந்த காவ‌ல்துறையின‌ரையும் சேர்த்து தாக்கியதோடு அவ‌ர்க‌ளை க‌டித்து குத‌றிய‌து தீட்சித‌ வெறிநாய்க‌ள், இருப்பினும் இந்த‌ வெறிநாய்க‌ளை அடித்து உதைகாம‌ல், ப‌வ்ய‌மாக‌ தூக்கி வெளியில்விட்ட‌ போலீசு, போராடிய‌ தோழ‌ர்கள் மீது த‌டிய‌டி ந‌ட‌த்தி தீட்சித‌ர்க‌ளை விட‌ தாங்க‌ள் பெரிய‌ வெறி நாய்க‌ள் என்ப‌தை நிரூபித்த‌து. போலீசு வெறிநாய்க‌ள் ந‌ட‌த்திய‌ இந்த‌ தாக்குத‌லில் ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌ க‌ழ‌க‌த்தை சேர்ந்த‌ ஐந்திற்கும் மேற்ப‌ட்ட‌ தோழ‌ர்களின் ம‌ண்டை உடைந்து இர‌த்த‌ம் கொட்டிய‌து, குருதி கொட்ட‌ கொட்ட‌ அவ‌ர்க‌ளை துர‌த்தி துர‌த்தி த‌டியால் தாக்கின‌ போலீசு வெறிநாய‌க‌ள், த‌மிழ்நாட்டில் த‌மிழில் வ‌ழிப‌டும் உரிமை வேண்டி போராடியதற்காக‌ அந்த‌ தோழ‌ர்க‌ள் தாக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர், தாக்க‌ப்ப‌ட்ட‌தோடு ப‌ல‌ தோழ‌ர்க‌ள் கைதும் செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர், ம‌.க‌.இ.க.

ம‌னித‌ உரிமை பாதுகாப்பு மைய‌த்தை சேர்ந்த‌ 35 தோழ‌ர்க‌ளை கைது செய்து சிறையில‌டைத்த‌து போலீசு.

இந்த‌ அராஜ‌க‌த்தை க‌ண்டித்து சுவ‌ரொட்டி ஒட்டிய‌தோடு, சென்னையில் ஆர்ப்பாட்ட‌மும் ப‌த்திரிக்கையாள‌ர் ச‌ந்திப்பினையும் ந‌ட‌த்திய‌து ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌ க‌ழ‌க‌ம். இந்த‌ செய்திக‌ளையெல்லாம் எந்த‌ ப‌த்திரிக்கையும் வெளியிட‌வில்லை, க‌ட்டுப்பாட்டாக இவற்றை இருட்ட‌டிப்பு செய்த‌ன‌. இருப்பினும் தோழ‌ர்க‌ளின் வீச்சான‌ போராட்ட‌த்தின் விளைவாக, தமிழில் வழிபடுவதை தடுக்கும் பொறுக்கி தீட்சித‌ர்க‌ளை நேற்று எச்ச‌ரித்து அறிக்கை வெளியிட்ட‌து த‌மிழ‌க‌ அர‌சு, இந்த‌ நிலையில்தான் இன்று காலையில் சிவனடியார் ஆறுமுக‌ச்சாமி, ம‌னித‌ உரிமை பாதுகாப்பு மைய‌ம் ம‌ற்றும் ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌ க‌ழ‌க‌த்தை சேர்ந்த‌ தோழ‌ர்க‌ள் சித‌ம்ப‌ரம் கோவிலின் உள்ளே நுழைந்தனர், அப்பொழுது திருச்சிற்ற‌ம்ப‌ல‌ மேடையில் ஏறிய‌ ஆறுமுக‌ச்சாமி நெஞ்சுருக‌ தேவார‌ம் பாடி சிதம்பரம் நடராசனை வ‌ழிப‌ட்டார்.

தீட்சித பார்ப்பன வெறிநாய்களின் சதி வேலைகளையும் தாக்குதல்களையும், அரசியல் செல்வாக்கினையும் மக்கள் துணையோடு எதிர்கொண்டு வீழ்த்தி த‌மிழ‌ர்க‌ளின் வ‌ழிபாட்டுரிமைக்கென‌ ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ போரில் வென்ற‌ சிவ‌ன‌டியார் ஆறுமுக‌ச்சாமி, ம‌னித‌ உரிமை பாதுகாப்பு மைய‌ம், ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌ க‌ழ‌க‌ம் ம‌ற்றும் அத‌ன் தோழ‌மை அமைப்புக‌ளை சேர்ந்த‌ தோழ‌ர்க‌ளுக்கு எங்க‌ள் செவ்வ‌ண‌க்க‌ங்க‌ளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இமெயிலில் நந்தன்

Related Posts with Thumbnails