TerrorisminFocus

Friday, July 06, 2007

விவசாயத்தின் பேரழிவும் - உயிர்ம எரிபொருளும்!

மாற்றுப் பயிர்-மாற்று எரிபொருள்:
ஏழை நாடுகளைச் சுடுகாடாக்கும் ஏகாதிபத்திய சதி!


காட்டாமணக்கு - சாலையோரங்களில் கேட்பாரின்றி வளரும் புதர்செடி. கிராமங்களில் இதனை வேலியாக நட்டு வைப்பதுண்டு. அதன் நச்சுத் தன்மையை ஆடு-மாடுகள் கூட அறிந்திருப்பதால். இச்செடியை முகர்ந்து கூட பார்க்காமல் விலகிச் சென்று விடும். அப்பேர்ப்பட்ட நச்சுச் செடியான காட்டாமணக்கைப் பயிரிட்டு பணம் சம்பாதியுங்கள் என்று ஆட்சியாளர்கள் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறையை சவூதி அரேபியாவாக மாற்றிக் காட்டப் போவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த மைய அமைச்சர் மணிசங்கர் அய்யர், நெல் பயிரிடுவதை விட்டு மாற்றுப் பயிர் முறைக்கு மாறச் சொல்லி விவசாயிகளுக்கு உபதேசிக்கிறார். 2004-ஆம் ஆண்டிலேயே தஞ்சை மாவட்டத்தில் மக்காச்சோளமும், காட்டாமணக்கும் பயிரிட்டு விவசாயத்தை முன்னேற்றத் திட்டம் தீட்டினார் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா. வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன், கட்டாமணக்கும் மக்காச் சோளமும் பயிரிட்டு ஏற்றுமதி செய்ய சிறப்பு விவசாய மண்டலங்களை நிறுவ வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார்.

விவசாயத்தையும் விவசாயிகளையும் முன்னேற்றி விடுவதில் ஆட்சியாளர்களும் அறிவாளிகளும் இவ்வளவு அக்கறை காட்டுகிறார்களே; ஒருவேளை நாட்டு மக்களாகிய நாம்தான் இன்னமும் பத்தாம்பசலித்தனமாக இருக்கிறோமோ என்று எண்ணிக் கொண்டோ ம். அது ஒருபுறமிருக்கட்டும். ஆட்சியாளர்களும் வேளாண் விஞ்ஞாணிகளும் எதற்காக காட்டாமணக்கைப் பயிரிடச் சொல்கிறார்கள்? காட்டாமணக்கு பயிரிட்டால் ஏழை விவசாயி எப்படி குபேரனாக முடியும்?

நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் பாம் ஆயிலையும், காட்டாமணக்கு விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், சோயா எண்ணெய், புங்கை எண்ணெய் முதலானவற்றை டீசலில் 5% வரை கலந்து எரிபொருளாகப் பயன்படுத்தலாம். இதனை "பயோ டீசல்" என்கின்றனர். இதுதவிர பெற்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களில் எத்தனால் எனப்படும் எரிசாராயத்தைக் கலந்து பயன்படுத்துகின்றனர். எரிசாராயத்தை உருவாக்க கரும்பு, மக்காச்சோளம், சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இந்த மாற்று வகை எரிபொருட்கள் தாவரங்களிலிருந்து உருவாக்கப்படுவதால் இவற்றை "உயிர்ம - எரிபொருட்கள்" (Bio-Fuel) என்கின்றனர்.

இத்தகைய உயிரம எரிபொருட்களுக்கும் பயோ டீசலுக்குமான தேவை உலகெங்கும் அதிகரித்துள்ளது. தீடிரென இதற்கான தேவை அதிகரிக்கக் காரணம் என்ன?

ஆண்டுதோறும் பூமியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே போகிறது. வரைமுறையின்றி நிலக்கரி, பெட் ரோலியப் பொருட்களை எரித்து வருதால்; அவை வெளியேற்றும் கரிம வாயுக்களின் விளைவாக உலகம் மேலும் மேலும் வெப்பமடைந்து கொண்டே போகிறது. இதன் விளைவாக, வடதுருவத்திலும் தென் துருவத்திலும் உள்ள நிரந்தரப் பனிப் பாளங்கள் உருகத் தொடங்கி கடலை நோக்கி வேகமாக ஓடுகின்றன. இதனால் கடல் மட்டம் வேகமாக உயர்ந்து பல சிறிய தீவுகள் கடலில் மூழ்கி அழிந்து போகும்; வளிமண்டல வெப்பநிலை உயர்வால் வறட்சியும் வெள்ளமும் அடுத்தடுத்து நிகழும்; காடுகள் பற்றியெரியும்; வளிமண்டலம் எங்கும் புகைமயமாகும்; பல கோடி உயிரிச் சிற்றினங்கள் முதல் மனிதன் வரை அழிய நேரிடும்.

இப்பேரழிவைத் தடுக்க. பெட் ரோல் - டீசல் ஆகியவற்றின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்; அல்லது அவை வெளியேற்றும் கரிம வாயுக்களின் அளவையாவது மட்டுப்படுத்த வேண்டும் என்று சுற்றுச் சூழல்வாதிகள் எச்சரித்து வருகின்றனர். புவி வெப்பநிலை அதிகரிப்புக்கும் சுற்றுச் சூழல் நஞ்சாகி பேரழிவின் விளிம்பில் உலகம் தத்தளித்துக் கொண்டிருப்பதற்க்கும் ஏகாதிபத்தியங்களின் இலாபவெறி கொண்ட உற்பத்தி முறையும் போர் வெறியுமே முதன்மையான காரணம். சுற்றுச் சூழலால் நஞ்சாகிப் பேரழிவுக்குள் தள்ளப்பட்டுள்ள உலகை சீரமைக்க, ஏகாதிபத்திய நலனுக்கேற்ப ஏழை நாடுகளில் காடு வளர்ப்புத் திட்டங்களை செயப்படுத்திய ஏகாதிபத்தியங்கள், நச்சுத் சூழலிருந்து உலகைக் காப்பதில் தாங்கள் அக்கறை கொண்டிருப்பது போல் நாடகமாடின. இப்போது, பயோ டீசல் மற்றும் உயிர்ம எரிபொருட்களைக் கொண்டு, கரிம வாயுக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தப் போவதாகக் கிளம்பியுள்ளன.

அமெரிக்க அதிபர் புஷ் தனது 2007 - ஆம் ஆண்டின் அரசுக் கொள்கை உரையில், எரிபொருளுக்காக் பிற நாடுகளை அமெரிக்கா சார்ந்திருக்கும் நிலையை மாற்ற, "பத்துக்கு 20" என்ற திட்டத்தை குறிப்பிட்டார். அதாவது 2010-ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கா 20% வரை தனது பெட் ரோலிய பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேந்தும் என்றார். இதற்காக, உயிர்ம எரிபொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். ஐரோப்பிய ஒன்றியமும் 2007 மார்ச்சில் நடந்த மாநாட்டில், போக்குவரத்துத் துறையில் உயிர்ம எரிபொருள் பயன்பாட்டை 2020-க்குள் 10% அளவுக்கு உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்தப் பின்னணியில்தான், "சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்; புவி வெம்பலைத் தணிப்போம்; உயிர்ம எரிபொருளைப் பயன்படுத்துவோம்; காட்டாமணக்கைப் பயிரிடுவோம்" என்ற கூச்சல் ஆரவாரமாக எழுப்பப்படுகிறது.

புவி வெம்பலைத் தணித்து சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கான நல்ல திட்டம் போலத் தோற்றமளித்தாலும், இதன் பின்னணியில் ஏழை நாடுகளைச் சுடுகாடாக்கும் மிகப் பெரிய ஏகாதிபத்திய சதி அரங்கேறி வருகிறது. இத்தகைய மாற்றுப் பயிர் - மாற்று எரிபொருள் திட்டம் ஏகாதிபத்தியங்களின் அன்புக் கட்டளைப்படி உலகின் பல ஏழை நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றின் அனுபவம் என்ன?

மெக்சிகோ நாட்டில், அமெரிக்காவின் எரிசாராயத் தேவைக்காக இனிப்புச் சோளப் பயிரின் சாகுபடி பரப்பு அதிகரித்ததால், வெள்ளைச் சோளம் உற்பத்தி குறைந்தது. வெள்ளைச் சோளத்திலிருந்துதான் மெக்சிக மக்களின் அன்றாட உணவாகிய "டார்ட்டில்லாஸ்"-இன் விலையை 37%-க்கும் உயர்த்தி விட்டது. அடிப்படை உணவின் தட்டுப்பாடு - விலையேற்றத்தால் மெக்சிகோ உழைக்கும் மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தென்னமெரிக்காவிலுள்ள பிரெசில் நாட்டில் அமெரிக்க தேவைக்காக விளைநிலங்களில் கரும்பும் இனிப்புச்சோளமும் பெருமளவில் பயிர் செய்யப்படுகிறது. அவற்றின் விளைபரப்பை அதிகரிக்க, ஏறத்தாழ 9 கோடி ஏக்கர் அளவுக்கு மழைக்காடுகளான அமேசான் காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. இன்னும் 15 கோடி ஏக்கர் காடுகளை அழிக்க அந்நாட்டின் 'முற்போக்கு' அரசு தீர்மானித்துள்ளது. அமெரிக்காவுக்கான ஏற்றுமதி அதிகரித்ததும், தட்டுப்பாடு காரணமாக 2006--இல் பிரேசில் நாட்டில் சர்க்கரை விலை இரண்டு மடங்கு அதிகரித்தது.

பாமாயில் எனப்படும் பனை எண்ணெயை ஐரோப்பிய நாடுகள் டீசலுடன் கலந்து எரிப்பதால் மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் எண்ணெய்ப் பனை சாகுபடிக்காக காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. உற்பத்தியாகும் பாமாயில் 40%-க்கு மேல் எரிபொருளுக்காக ஏற்றுமதி செய்யப்படுவதால், சமையலுக்கான பாமாயில் தட்டுப்பாடு காரணமாக விலையேறிவிட்டது.

பிரேசிலில் இறைச்சி தொழிலுக்கு உறுதுணையாகப் பயிரிடப்பட்டு வந்த சோயாபீன்ஸ், இன்று மாற்று எரிபொருளாக (எண்ணெயாக) மாற்றப்படுவதால், அந்நாட்டின் ஒட்டுமொத்த சோயா சாகுபடியே அமெரிக்காவுக்காக ஒதுக்கப்பட்டு விட்டது. இதன் விளைவாக பிரேசிலுல் பன்றி மற்றும் கோழி வளர்ப்புத் தொழில் பெரும் நெருக்கடியில் சிக்கி வீழ்ச்சியடைந்து வருகிறது. ஆடு-மாடுகளின் மேய்ச்சலுக்கான நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு சோயா பண்ணைகளாக மாற்றப்பட்டு விட்டதால் ஏழை-நடுத்தர விவசாயிகள் ஆடு-மாடுகளைக் கூட வளர்க்க முடியாமால் தத்தளிக்கின்றனர். "நேற்று வரை சோயா எங்களுக்கு வாழ்வளித்த பயிர்; இன்று அது எங்கள் வாழ்வைப் பறிக்க வந்துள்ள கொலைகாரப் பயிர்" என்று குமுறுகிறார்கள் பிரெசில் விவசாயிகள்.

இந்த உண்மைகள் ஒருபுறமிருக்க, உலகின் பல ஏழை நாடுகளின் உணவுத் தட்டுப்பாடும் பட்டினிச் சாவுகளுக்கான பேராபாயம் இந்த மாற்றுப் பயிர் - மாற்று எரிபொருள் திட்டத்தால் உருவாகியுள்ளது. உலகெங்கிலுமுள்ள நிலங்களில் ஏறத்தாழ 40% பரப்பளவுக்கு பாரம்பரிய விவசாயம் நடந்து வருகிறது. இந்த விளைநிலங்களிலிருந்துதான் மாற்று எரிபொருள் - மாற்றுப் பயிருக்கான நிலத்தை ஒதுக்க முடியும். அமெரிக்காவின் கனவுத் திட்டமான "பத்துக்கு 20" திட்டத்தில் பாதியளவுக்கு நிறைவேற்ற, அதாவது அந்நாடு 10% அளவுக்கு மாற்று எரிபொருளைப் பயன்படுத்த வேண்டுமானால், உலகெங்கிலுமுள்ள விவசாய நிலங்களில் மூன்றில் ஒரு பங்கு நிலங்கள், உணவு தானிய உற்பத்தியைக் கைவிட்டாக வேண்டும். வேறு வார்த்தைகளில் சொன்னால், உலக மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் பட்டினி கிடக்க வேண்டும்.

ஒரு கார் டாங்கில் ஊற்றப்படும் எரிசாராயத்தை உருவாக்கத் தேவையான உணவு தானியத்தைக் (சோளம்) கொண்டு ஒரு வருடத்துக்கு ஒரு மனிதனின் பசியைப் போக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பல கோடி டன் உணவு தானியங்கள் கார்களில் ஊற்றப்படும் எரிசாராயமாக மாறும் என்றால், எஞ்சியிருக்கும் உணவு தானியங்களுக்காக உலகெங்குமுள்ள ஏழை மக்கள் அடித்துக் கொள்ளும் அபாய நிலை உருவாகும். எனவேதான், மார்ச் 2007-இல் அமெரிக்க அதிபர் புஷ் மாற்று எரிபொருள் குறித்த "பத்துக்கு 20" திட்டத்தை அறிவித்தவுடனேயே அமெரிக்க எதிர்ப்பாளரான கியுபா நாட்டின் அதிபர் பிடல் காஸ்ட்ரோ "இத்திட்டத்தின் மூலம் மனித இனப் படுகொலைகளை அமெரிக்கா உலகமயமாக்கியுள்ளது" என்று சாடினார்.

உயிர்ம எரிபொருளுக்கு தரப்படும் முக்கியத்துவத்தின் பின்னணியில் இன்று ஏழை நாடுகளின் உணவுப் பாதுகாப்பு ஊசலாடிக் கொண்டிருக்கிறது. வசதி படைத்தவர்களின் சொகுசுக் கார்கள் சாலைகளில் சறுக்கிக் கொண்டு ஓடுவதற்க்காகவும், ஏகாதிபத்திய நாடுகளின் எரிபொருள் தாகம் தீர்வதற்காகவும், ஏழை நாடுகள் பட்டினிச் சாவை நோக்கித் தள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பெயரளவிலான சுயசார்பையும் ஒழித்துக் கட்டும் இந்த ஏகாதிபத்திய சதிக்கு மைய - மாநில அரசுகள் விசுவாசமாகச் சேவை செய்து வருகின்றன.

தமிழக அரசு 2004-ஆம் ஆண்டிலேயே கரும்பாலைகளில் வடிக்கப்படும் சாராயத்தின் அளவைக் கூட்டிக் கொள்ளவும், புதிதாக வடிப்பாலைகள் நிறுவி எத்தனால் உற்பத்தியைப் பெருக்கிக் கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது. பயோ டீசல் உற்பத்திக்கு 5% வரிவிலக்கு அளித்துள்ளது. ஆந்திர அரசு, அம்மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காட்டாமணக்கு மற்றும் காட்டாமணக்கு வகையைச் சேர்ந்த "ஜெட்ரோபா" முதலானவற்றைப் பயிரிட பல சலுகைகளை அறிவித்துள்ளது. பல வங்கிகள் இம்மாற்று எரிபொருள் உற்பத்திக்குக் கடன் வழங்குகின்றன. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பெரியார் புரா, ஆர். எஸ். எஸ் புரா முதலான பெருந்தொண்டு நிறுவனங்களும் உயிர்ம எரிபொருள் திட்டங்களை விவசாயப் பகுதிகளில் செயல்படுத்தி வருகின்றன.

சுற்றுச் சூழலைக் காப்பது என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ள உயிர்ம எரிபொருட்களால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுமா? இது குறித்து இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகள் அனைத்தும் இதற்க்கு நேரெதிரான முடிவுகளையே வெளியிட்டுள்ளன.

எரிசாராயம் கலந்த பெட் ரோல் வெளியிடும் கரிம வாயுக்களின் பருமம் ஓப்பீட்டளிவில் குறைவு என்பது உண்மைதான். ஆனால் எரிசாராயத்துக்காக வளர்க்கப்படும் கரும்பு, இனிப்புச் சோளம் ஆகியவற்றுக்கு இடப்படும் பூச்சி மருந்துகள் - உரங்கள்; கருமபை ஆலையில் அரைத்து சாராயம் வடிக்கும் வரை எரிபொருள்கள் வெளியேற்றும் கரிம வாயுக்கள்; எரிசாராயத்தை விற்பனை நிலையம் வரை கொண்டு செல்லும் வாகனங்கள் வெளியேற்றும் புகை என ஒட்டு மொத்த கரிம வாயுக்களின் பருமத்தை கணக்கிட்டால் எல்லா கழுதையும் ஒன்றுதான்.




மேலும், மாற்றுப் பயிர் சாகுபடியானது சுற்றுச் சூழலைக் காப்பதற்கு மாறாக, பல நாடுகளில் சுற்றுச் சூழலையே நஞ்சாக்கி விட்டுள்ளதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. தென்னமெரிக்காவில், அமெரிக்காவின் எரிபொருள் பசிக்காக தொடர்ந்து காடுகள் அழிக்கப்படுவதால், பூமி வெம்பம் மேலும் தீவிரமாகி விட்டது. அங்குள்ள ஆண்டேஸ் மலைத் தொடரின் பனி சூழ்ந்த சிகரங்கள் உருகத் தொடங்கி விட்டன. இந்தோனேஷியா முழுவதும் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் தேவைக்காக எண்ணெய்ப்பனையும் காட்டாமணக்கும் காடுகளை அழித்து பயிரிடப்பட்டுள்ளதா, சுற்றுச் சூழல் சீர்கேட்டில் அந்நாடு உலகின் மூன்றாவது இடத்தை எட்டிவிட்டது.

மாற்று எரிபொருளுக்காக காடுகள் அழிக்கப்படாமலிருந்தால், அந்தக் காடுகளே சுற்றுச் சூழலைக் காப்பதில் மாற்று எரிபொருளை விட முன்னணியில் இருந்திருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். உயிர்ம எரிபொருளை உற்பத்தி செய்யப் பயிரிடப்படும் மாற்றுப் பயிர்களின் அமோக விளைச்சலுக்காகக் கொட்டப்படும் உரமும் பூச்சிக் கொல்லிகளும் பெட் ரோலியப் பொருட்கள்தான். பெட் ரோலியப் பயன்பாட்டைக் குறைப்பதாகக் கூறிக் கொண்டு நிலத்தையும் நீரையும் அதே பெட் ரோலியப் பொருட்களால் நஞ்சாக்குவது எப்பேர்ப்பட்ட புத்திசாலித்தனம்! மேலும், ஏகாதிபத்தியங்களின் எரிபொருள் தாகத்திற்க்காக காட்டாமணக்கு, ஜெட் ரோபா, சோயா, சோளம் என ஒற்றைப் பயிர் முறைக்கு நிலம் மாற்றப்பட்டால் நிலம் மலடாகிப் போகாதா?

பாரம்பரிய விவசாயத்தை நாசமாக்கி, மராமத்துப் பணிகளை அறவே புறக்கணித்து, தனது வணிகத் தேவைக்காக பருத்தி, அவுரி முதலானவற்றைக் கட்டாயமாகப் பயிரிட வைத்து பெரும் உணவுப் பஞ்சத்தை விளைவித்து நமது முன்னோர்களைக் காவு கொண்டது அன்றைய காலனியாதிக்கம். இன்று தனியார்மயம் - தாராளமயத் தாக்குதலால் விவசாயத்தைத் திவாலாக்கி ஏகாதிபத்திய தேவைக்காக காட்டாமணக்கையும் இனிப்புச் சோளத்தையும் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியாவை மாற்றி, உணவுக்காக நிரந்தரமாகக் கையேந்தும் நிலைக்கு நாட்டை தள்ளிவிட்டுள்ளது மறுகாலனியாதிக்கம். அன்று, கட்டபொம்மன் கோட்டையை இடித்த வெள்ளைக்காரன் அந்த இடத்தில் எள்ளையும், ஆமணக்கையும் விதைத்தான். இன்று, உணவுக்கான விவசாயத்தை ஒழித்து கள்ளியையும் காட்டாமணக்கையும் விதைக்கின்றன அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள். மாற்று எரிபொருள் எனும் வஞ்சக வலை விரித்து ஆதிக்கம் செய்யும் கிளம்பியுள்ள ஏகாதிபத்திய சதியை அம்பலப்படுத்தி முறியடிப்பதும், விவசாயிகளை ஓரணியில் திரட்டிப் போராடுவதுமே புரட்சிகர - ஜனநாயக சக்திகளின் இன்றைய அவசரக் கடைமையாகியுள்ளது.

இரணியன்

புதிய ஜனநாயகம் (ஜூலை 2007)


**
இப்படியாப்பட்ட ஏகாதிபத்திய சேவை செய்ய இந்திய விவசாயத்தை கூட்டிக் கொடுப்பவர்களில் ஒருவர்தான் சுயமரியாதைச் செம்மல், சமூக நீதி காத்த வீராங்கனையின் அன்பு நண்பர் கி. வீரமணி அவர்கள். இந்த வேலையை செய்பவர்களை என்ன பெயர் கொண்டு அழைப்பார்கள் என்பதை அசுரனில் வந்த முந்தைய கட்டுரைகள் செவ்வனே உரைக்கின்றன.


Related Posts:

மாமாவுக்கு சோப்பு போடும் அடிவருடி - வீரமணி தொடர்கிறார்

தி.க.வீரமணியின் ஏகாதிபத்திய சேவை

ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னொருவன் கன்னத்தை காட்டிக் கொடு - புதிய புரா

வீர'Money' - சுயமரியாதை பிரச்சாரமா? மாமா வேலை விபச்சாரமா?

ஏகாதிபத்தியக் கைக்கூலிகளான NGOகளையும் & பெரியார் புராவையும் அம்பலப்படுத்தும் நூல்கள் & கட்டுரைகள்

மாமா வேலை பார்க்கும் வீரமணியும், அதற்கு எடுபிடி வேலை பார்க்கும் லும்பன்களும்


9 பின்னூட்டங்கள்:

said...

\\எப்படியோ மாநகரத்தில் தனியார் மயத்திற்கு எதிராக போராடியது சி.பி.எம். என்று ஒத்துக் கொண்டீர்களே அதற்கு கோடி நன்றிகள்...

காட்டுக்குள் இருக்கும் புரட்சியாளர்களுக்கு புழுதி வாரித் தூற்றுவதைத் தவிர வேறு ஒன்றும்அவர்கள் கழட்டுவதில்லை. மேலும் இடஒதுக்கீட்டுக்கே எதிரானவர்கள் அவர்கள். எனவே தலித் மக்களின் முன்னேற்றத்தில் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. இடஒதுக்கீட்டில் அதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என்ற மூன்றாவது நிலை எடுத்த அதி மேதாவிகள். இதையெல்லாம் நீங்கள் பார்ப்பனீம் என்று கூறினால் தடியெடுத்துக் கொண்டு அலைவார்கள்//



சந்திப்பு ரொம்ப ஒளராத;

நாட்டை விற்க்கும் காங்கிரசு துரேகிகளுக்கு கோவனமும் நீங்கள் தான்,
ஜட்டியும் நீங்கள் தான் என்பது ஊரெ நாறி நாற்றமெடுக்கும்
விசயம் அப்புறம்
என்ன வெங்காயத்துக்கு தனியார்மய எதிர்ப்பு வேசம் போடுற நீ.

தனியார்மய தாசர்கள்.
------------------------
சாதி ஒடுக்குமுறையை பற்றி பேச சந்திப்பு உனக்கு துளி கூட
அருகதையே இல்லை ஏன்னென்றால் உன்னுடைய கட்சியில் சாதி
வெறியன்களும்,கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளும் இல்லை என்று சொல்ல முடியுமா
உன்னால் ?

உதாரனத்திற்கு நான் ஒரு அண்னனை சொல்கிறேன் அவர் KK நகர் DYF1
தலைவர் காமராஜ்,அவ்ருடைய வேலையே கட்டப்பஞ்சாயத்து செய்வது தான்.

அப்புறம் நம்ம மேற்கு வங்க "தோழர்",
அதான் நான்
முதலில் பாப்பான் அப்புறம் தான் கம்யூனிஸ்டுனு சொன்னாரில்ல
அந்த "தோழர்"

எனவே சந்திப்பு ஒன் கட்சி இருக்கிற லட்சணத்தில் நீ சாதி பற்றியெல்லாம்
பேசவே கூடாது.

லும்ப்பன் பார்ட்டி ஆப் இந்தியா
----------------------------

ம.க.இ.க இடஒதுக்கீட்டை எதிர்க்கிறது என்று சொன்னாயே உன்னிடம்
எந்த முட்டாள் அப்படி சொன்னான்?
சரிசரி CPM முட்டாளாகத்தானிருக்க வேண்டுமென்பதில்லையே!

அறிவு கெட்ட சந்திப்பே ஆளும் கும்பலுக்கு தரகு வேலை செய்யும்
உன்னுடைய கட்சி தான் இடஒதுக்கீட்டை எதிர்க்கிறது,
உன்னுடைய
கட்சி எடுத்திருப்பது ஒரு நிலைப்பாடு அந்த கேடுகெட்ட நிலைப்பாட்டை
விளக்க உன் தலைவர்களுக்கு அறிக்கை ஒரு கேடு?

உன் கட்சியிலுள்ள மீசை முறுக்கும் வீரருக்கும் [தோழருக்கு] இட ஒதுக்கீடு
கீழ் வெண்மனியை சாம்லாக்கியவர்களுக்கும்,
லீலாவதியை கூறு போட்டவர்களுக்கும் கூட இட ஒதுக்கீடு வேண்டுமோ ?

ஆனால் நீ அதற்கும் மேலே போய்
வறலாற்றில் என்னுடைய பாட்டன் முப்பாட்டனுடைய
நாக்கை அறுத்தவனுக்கும்,காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியவனுக்கும்
கூட இட ஒதுக்கீடு தர வேண்டும் என்கிறாய்.

இட ஒதுக்கீட்டில் இப்படிப்பட்ட ஒரு அயோக்கியத்தனமான
நிலைப்பட்டை வைத்துக்கொண்டுள்ள நீ
ம.க.இ.க வை பார்த்து பேசுகிறாயா ?

போ,போய் ஒழுங்கா இட ஒதுக்கீடு பற்றிய ம.க.இ.க வின்
வெளியீடை
மறுபடியும் ஒரு முறை தெளிவாக படிச்சுட்டு வந்து பேசு.


அப்புறம் எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் சந்திப்பு ?

நீ ஆறறிவுள்ள மனிதனா இல்லை கிளியா !

காடு,துப்பாக்கின்னு சொன்னதையே சொல்லிக்கிட்ருக்கியே
அதான் கேட்டேன்,

ஒன்னு பன்னலாம் ஒன் செல் நம்பரை போடு நான்
வந்து ஒன்னையெ எங்க ஆபிசுக்கே
கூட்டிட்டு போய் காட்டுறேன்.

அதே போல அவதூறு சேற்றை வாரியிரைக்கிறார்கள்
என்பதும் கூட உனக்கு
மனப்பாடமாகிவிட்ட ஒரு சொற்றொடர்.

நீயும் உன் கட்சியும் அவதூறு
செய்யுமளவுக்கு யோக்கிய
சிகாமனிகள் என்கிற நினைப்பா உனக்கு ?

கோமாளி சந்திப்பே கேட்டுக்கொள்

உன்னுடைய கட்சியையும்,திரிபுவாத ஆளும் வர்க சித்தாந்தத்தையும்
சுக்கு நூறாக உடைத்தெறிவது தான் புரட்சிகர சக்திகளின் முதல் வேலை,
நீயும் பார்க்கத்தானே போகிறாய்,
பார்ப்பது மட்டுமின்றி
பேசவும் செய்வாய் கைகூலியின் குரலில்,
நாங்களும் பார்ப்போம்
ஆனால் பேசிக்கொண்டிருக்கமாட்டோம்
கைக்கூலிகளிடம்.

said...

உயிர்ம எரிபொருளால் விவசாயம் எப்படி பாதிப்பு அடையும் என்பதை உங்கள் கட்டுரை தெளிவாக விவரிப்பதாக உள்ளது. நேற்று செய்தியில் கூட ரயில்வே துறை காட்டாமனக்கை கொள்முதள் செய்து கொள்வதாக அறிவித்து உள்ளது.பிரெசில்,பிரேசிலில் நடந்த நிகழ்வுகளை சுட்டி காட்டி எச்சரித்தது நன்று -தியாகு

said...

விவசாய நிலங்களில் காட்டாமண்க்கு போடுவது தவிர்க்கப்பட வேண்டும் , அப்படி யாரும் அவ்வளவு சீக்கிரம் விவசாய நிலத்தில் காட்டாமணக்கு போட முன்வர மாட்டார்கள். தரிசு நிலத்தில் போடுவது தான் சரி. நம் நாட்டில் நிறைய தரிசு நிலம் இருக்கிரது அதனை இதற்கு பயன்படுத்தலாம்.

said...

வவ்வால்,

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி,

இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி தன்னிறைவாக இல்லை எனும் போது, மக்கள் தொகை அதிகரித்து வருகிறது எனும் போது, ஏற்கனவே மிகப் பெரும்பான்மை மக்கள் ஊட்டச் சத்து குறைபாடால் தவிக்கும் போது நியாயமாக நாம் செய்ய வேண்டியது உணவு தானிய உற்பத்தி பரப்பை அதிகப்படுத்துவதே சரியாக இருக்கும். எவனொருவனோ லாபம் பார்க்க நமது மண்ணையும் வளங்களையும் நாம் ஏன் நாசமாக்க வேண்டும்?

ரேசன் கடைகளுக்கு ஒதுக்கப்படும் உணவு தானிய அளவில் 80% குறைக்க இருக்கிறது மத்திய அரசு. ஏன்? ஏனெனில் இந்த குறைக்கப்படும் பகுதி பயோ டீசல் உற்பத்திக்காக பயன்படுத்த திசை திருப்பப்படும் என்பதுதான்.

பயோ டீசலால சுற்றுச் சூழல் பாதிப்பு குறையும் என்பது பொய் என்பதையும் சேர்த்தே இந்த கட்டுரை அம்பலப்படுத்துகிறது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

அசுரன்

said...

தாவர எரிபொருள்களின் உற்பத்தியை பெருக்க விழைவது சுற்று சூழல் பொருட்டு மட்டும் அல்ல , பெட்ரோலிய வளம் இன்னும் ஒரு 50 ஆண்டுகளுக்கு தான் கிடைக்கும் மேலும் புதிய பெட்ரோலிய வளங்கள் கண்டுபிடிக்கபடாத நிலையில் மாற்று எரிபோருள் ஒன்றை தயார் செய்கிறார்கள் உலகம் முழுவதும் , சூரிய எரிசக்தி கார், ஹைட்ரஜென் எரி பொருள் என அது போல ஒன்று தான் பயோ டீசலும், வேறு வழி இல்லை. ஆனால் உணவு உற்பத்தியை காவு கொடுத்து இதனை செய்யக்கூடாது என்பதே எனது கருத்தும் , அப்படி நடக்காது என்றே நம்புகிறேன்.

ரேஷன் பொருளில் வெட்டு விழ காரணம் உலக வங்கி , அதற்கான மானியம் அதிகமாக இருப்பதால் அதனை குறைக்க வலியுறுத்துகிறார்கள்.

said...

இப்படி நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் மன்மோகன் சிங் முதல் எலலாரும் சொல்வது என்னவென்றால், உணவு தானியத்தில் வெட்டு விழுவதற்க்கு காரணம் உணவு தானியங்களை பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்முதல் செய்வதே என்று.

இரண்டு நாள் முன்பு வந்த பத்திரிக்கை செய்தியைப் பார்க்கவும். ஆனால் இந்த அம்சத்தில் உலக வங்கியின் பாத்திரத்தை நான் மறுக்கவில்லை.

காட்டாமணக்கை நமது தேவைக்காக என்ற அளவில் பயிர் செய்வது என்றால விசயம் வேறு. அப்படித்தான் தற்போது நடக்கிறதா? அல்லது எதிர்காலத்தில் நடக்குமா?

மேலும் உணவு உற்பத்திக்காக பயிர் செய்வதை ஊக்கப்படுத்துவதே பிரதான தேவையாக இன்றூ இருக்கிறது. அந்த அம்சத்தை மறைத்துவிட்டு இந்திய வளங்களை ஏகாதிபத்திய தேவைக்கு அடகு வைக்கும் சதி திட்டமாகவே பயோடிசல் குறித்த இந்த முயற்சி உள்ளது.

மாற்று எரிபொருள் கண்டுபிடிப்பு மிக முக்கியமானதே. ஆனால் தற்போது நடந்து வருவது யாருடைய நலனுக்காக யாருடைய நலனை அடகு வைத்து என்று பரிசீலித்துப் பாருங்கள்.

மேலும் இந்த விசயம் வெறுமே பயோ டீசல் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. பொதுவாக இந்தியா பொன்ற காலனி நாடுகளுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் உள்ள உறவை எடுப்பாக காட்டும் உதாரணமாக இந்த திட்டம் உள்ளதை இங்கு நாம் கவனிக்க வேண்டும். இதே அம்சத்தில் இந்திய வளங்களை அவனது செண்ட் பேக்டரிகளுக்காக, அவனது பிற நுகர்வு தேவைகளுக்காக சுரண்டுவதை ஒப்பிட்டு இதனை பரிசீலிக்க வேண்டும்.


பயோ டீசல் உற்பத்தி என்பது உலக உணவு பஞ்சத்துடன் வெகு நேரடியாக தொடர்புடையது என்பதையும் இந்த கட்டுரை அம்பலப்படுத்துகிறது. உணவா எரிபொருளா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்

அசுரன்

said...

ஆதாரபூர்வமான தகவல்களுடன், ஏகாதிபத்திய சதியின் அம்சங்களை அம்பலப்படுத்தும் கட்டுரை.

'மக்களுக்கு ஏதேனும் சிறு நன்மை கிடைத்தால்' அதனை ஆதரிப்பதில் என்ன தவறு என வாதித்த 'இரக்க சுபாவம்' படைத்தவர்கள், இக் கயமைத்தனத்திற்கு துணை போகின்ற வீரமணியைத் தோலுரித்த சினத்தின் பொருளை விடுத்து, சொற்களைக் கொண்டு 'ஆவேசம்' கொண்டவர்கள், இக்கட்டுரை முன்வைக்கும் வாதங்களை ஆதாரபூர்வமாக எதிர்கொண்டால் அது பயனுடையதாக இருக்கும்.

said...

கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

விவசாயிகளின் ஒருங்கிணைந்த பண்ணை முறை விவசாயம்... ஒரு கிராமத்திலுள்ள விவசாயிகள் ஒருங்கிணைந்து விவசாயம் செய்யும் போது, பெறுமளவில் உற்பத்தி செலவை குறைக்க முடியும். நிலங்கள் ஒருங்கிணைக்கப்படும். ஒரு தொழிற்சாலையில் எஞ்சினை பொருத்துபவருக்கும், பெயிண்டருக்கும் பெரிய அளவில் சம்பள வித்தியாசம் இருப்பதில்லை. மொத்த லாப அடிப்படையில் முதலீட்டாளர்கள் பணம் பெறுவர். பெயிண்டர் அந்த தொழிற்சாலையின் பங்குகளை வைத்திருந்தால், அவர் முதலீட்டாளர் அடிப்படையில் தனியாக லாபத்தில் பங்கு பெறுவார். அதே போல், மொத்த கிராமமும் ஒரு அமைப்பு. அந்த அமைப்பில் வேலை பார்ப்பவர்களுக்கு அந்த அமைப்பால் சம்பளம் வழங்கப் படும். மொத்த நிகர லாபம் விவசாயிகளுக்கிடையில் விகிதாச்சார அடிப்படையில் (நிலத்தின் அளவு, நிலத்தின் தன்மை) பிரித்துக் கொள்ளலாம்.

ஒரு முறை, ஒரு மாதிரி கிராமத்தை நடைமுறையில் வெற்றி பெறச் செய்ய முடியுமெனில்,,,

இது அவ்வளவு எளிதல்ல. ஆனால், எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு. வளர்ந்த நாடுகளுக்கும் பிற நாடுகளுக்கும் எனக்கு தெரிந்த வரையில் உள்ள ஒரு வேறுபாடு "Systematic Approach" . திட்ட மேலாண்மை வல்லுநர் என்ற முறையில், எந்த சிக்கலான பிரச்சணையையும் முறையான அணுகுமுறையில் தீர்வு காணமுடியும்.

உயிர்ம எரிபொருள், கொஞ்சம் சிக்கலான ஆனால் மிகவும் தேவையான ஒன்று. அதனை பற்றி தனிப்பட்ட முறையில் கற்றுக் கொண்டு வருகிறேன்.

அரசாங்கத்தை நம்பி ஒன்றும் ஆகப்போவதில்லை. மக்களுக்கு தெளிவு வரும் வரையில், இலவச டிவி, கடன் தள்ளுபடியை விட ஒரு தொலை நோக்கு பார்வை கொண்ட திட்டங்கள் தேவை என்று உணரும் வரையில், அரசியல் அல்லது அரசாங்க மாற்றம் என்பது வெறும் காகித்தில்தான் சாத்தியம்.

***********************************************************************************
அசுரன் --
விவசாயத்தை பற்றி கூட ஆக்கப் பூர்வமாக பதிவு எழுதி வருகிறீர்கள் வாழ்த்துக்கள் செந்தில்நாதன். குறிப்பாக பங்கு சந்தை கட்டுரைக்கு முன்பாக நீர் மேலான்மை குறித்து நீங்கள் கட்டுரை இடும் இதே நேரத்தில்தான் அண்டார்டிகாவில் உள்ள மிக முக்கிய பனிப்பாறை உருகி வருவது குறித்தும் அது தென் கிழக்காசிய நாடுகளில் கடும் தண்ணீர் பஞ்சத்தை ஏற்படுத்தும் என்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

நீங்கள் நீர் மேலான்மை குறித்து போட்டுள்ள கட்டுரையில் சில படங்களைப் பார்த்தேன். கொஞ்சம் யோசித்து பாருங்கள் அது போன்ற முதலாளித்துவ உற்பத்தி முறையை இந்திய விவசாயத்தில் செய்ய முடியாமைக்கு அதன் துண்டு துண்டான நிலங்கள் காரணம் என்பது புரியவில்லை? துண்டு துண்டான நிலங்களை பிடுங்கி ஒன்றாக்கும் தீர்வை முன் வைப்பது என்பது அந்த நிலங்களை ஆண்டாண்டு காலமாக பண்படுத்திய உழைக்கும் மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகாது?

இதற்க்கு இன்றைய இந்திய அடிமை அரசால், தரகு முதலாளித்துவ அரசால் தீர்வு கொடுக்கவே முடியாது. குறிப்பாக உணவு பற்றாக்குறை விஸ்வரூபம் எடுத்துள்ள இன்றாயை நிலையில் விவசாய உணவு உற்பத்தியை அதிகப்படுத்தாமல் பயோ டீசலுக்காக இந்திய விவசாயத்தை நாசமாக்கும் வேலை விரிவாக நடந்து வருவதும், உணவு பொருள்களை நாம் இறக்குமதி செய்து வருவதும் இங்கு ஒப்பிட்டு நோக்கத்தக்கது. விரிவாக பேச வேண்டிய விசயங்கள் உங்களது முயற்சிகளை பாராட்டவும் அதில் உள்ள சில முரன்பாடுகளை உங்களுக்கு சுட்டவும் அடிப்படையாக இருக்கும் என்று இந்த பின்னூட்டம. பேசலாம் விரிவாக.

வாய்ப்பிருந்தால் விவசாயத்தை குறித்து வரும் இந்த பதிவுகளை படித்துப் பாருங்கள்.
********************************************************************************************************************************************

said...

கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

விவசாயிகளின் ஒருங்கிணைந்த பண்ணை முறை விவசாயம்... ஒரு கிராமத்திலுள்ள விவசாயிகள் ஒருங்கிணைந்து விவசாயம் செய்யும் போது, பெறுமளவில் உற்பத்தி செலவை குறைக்க முடியும். நிலங்கள் ஒருங்கிணைக்கப்படும். ஒரு தொழிற்சாலையில் எஞ்சினை பொருத்துபவருக்கும், பெயிண்டருக்கும் பெரிய அளவில் சம்பள வித்தியாசம் இருப்பதில்லை. மொத்த லாப அடிப்படையில் முதலீட்டாளர்கள் பணம் பெறுவர். பெயிண்டர் அந்த தொழிற்சாலையின் பங்குகளை வைத்திருந்தால், அவர் முதலீட்டாளர் அடிப்படையில் தனியாக லாபத்தில் பங்கு பெறுவார். அதே போல், மொத்த கிராமமும் ஒரு அமைப்பு. அந்த அமைப்பில் வேலை பார்ப்பவர்களுக்கு அந்த அமைப்பால் சம்பளம் வழங்கப் படும். மொத்த நிகர லாபம் விவசாயிகளுக்கிடையில் விகிதாச்சார அடிப்படையில் (நிலத்தின் அளவு, நிலத்தின் தன்மை) பிரித்துக் கொள்ளலாம்.

ஒரு முறை, ஒரு மாதிரி கிராமத்தை நடைமுறையில் வெற்றி பெறச் செய்ய முடியுமெனில்,,,

இது அவ்வளவு எளிதல்ல. ஆனால், எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு. வளர்ந்த நாடுகளுக்கும் பிற நாடுகளுக்கும் எனக்கு தெரிந்த வரையில் உள்ள ஒரு வேறுபாடு "Systematic Approach" . திட்ட மேலாண்மை வல்லுநர் என்ற முறையில், எந்த சிக்கலான பிரச்சணையையும் முறையான அணுகுமுறையில் தீர்வு காணமுடியும்.

உயிர்ம எரிபொருள், கொஞ்சம் சிக்கலான ஆனால் மிகவும் தேவையான ஒன்று. அதனை பற்றி தனிப்பட்ட முறையில் கற்றுக் கொண்டு வருகிறேன்.

அரசாங்கத்தை நம்பி ஒன்றும் ஆகப்போவதில்லை. மக்களுக்கு தெளிவு வரும் வரையில், இலவச டிவி, கடன் தள்ளுபடியை விட ஒரு தொலை நோக்கு பார்வை கொண்ட திட்டங்கள் தேவை என்று உணரும் வரையில், அரசியல் அல்லது அரசாங்க மாற்றம் என்பது வெறும் காகித்தில்தான் சாத்தியம்.

***********************************************************************************
அசுரன் --
விவசாயத்தை பற்றி கூட ஆக்கப் பூர்வமாக பதிவு எழுதி வருகிறீர்கள் வாழ்த்துக்கள் செந்தில்நாதன். குறிப்பாக பங்கு சந்தை கட்டுரைக்கு முன்பாக நீர் மேலான்மை குறித்து நீங்கள் கட்டுரை இடும் இதே நேரத்தில்தான் அண்டார்டிகாவில் உள்ள மிக முக்கிய பனிப்பாறை உருகி வருவது குறித்தும் அது தென் கிழக்காசிய நாடுகளில் கடும் தண்ணீர் பஞ்சத்தை ஏற்படுத்தும் என்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

நீங்கள் நீர் மேலான்மை குறித்து போட்டுள்ள கட்டுரையில் சில படங்களைப் பார்த்தேன். கொஞ்சம் யோசித்து பாருங்கள் அது போன்ற முதலாளித்துவ உற்பத்தி முறையை இந்திய விவசாயத்தில் செய்ய முடியாமைக்கு அதன் துண்டு துண்டான நிலங்கள் காரணம் என்பது புரியவில்லை? துண்டு துண்டான நிலங்களை பிடுங்கி ஒன்றாக்கும் தீர்வை முன் வைப்பது என்பது அந்த நிலங்களை ஆண்டாண்டு காலமாக பண்படுத்திய உழைக்கும் மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகாது?

இதற்க்கு இன்றைய இந்திய அடிமை அரசால், தரகு முதலாளித்துவ அரசால் தீர்வு கொடுக்கவே முடியாது. குறிப்பாக உணவு பற்றாக்குறை விஸ்வரூபம் எடுத்துள்ள இன்றாயை நிலையில் விவசாய உணவு உற்பத்தியை அதிகப்படுத்தாமல் பயோ டீசலுக்காக இந்திய விவசாயத்தை நாசமாக்கும் வேலை விரிவாக நடந்து வருவதும், உணவு பொருள்களை நாம் இறக்குமதி செய்து வருவதும் இங்கு ஒப்பிட்டு நோக்கத்தக்கது. விரிவாக பேச வேண்டிய விசயங்கள் உங்களது முயற்சிகளை பாராட்டவும் அதில் உள்ள சில முரன்பாடுகளை உங்களுக்கு சுட்டவும் அடிப்படையாக இருக்கும் என்று இந்த பின்னூட்டம. பேசலாம் விரிவாக.

வாய்ப்பிருந்தால் விவசாயத்தை குறித்து வரும் இந்த பதிவுகளை படித்துப் பாருங்கள்.
********************************************************************************************************************************************

Related Posts with Thumbnails