TerrorisminFocus

Tuesday, July 17, 2007

ஆண்ட சாதிகளும், இடஓதுக்கீட்டின் உள் அரசியலும்

டஒதுக்கீடு குறித்து குழலி பல்வேறு வாதங்களை வைத்துள்ளார். அவற்றிற்கெல்லாம் மையமாக இருக்கும் ஒரேயொரு அம்சம் கீழே உள்ளதுதான். அதனை மட்டும் உடைத்து வாதிட்டால் போதும் என்று கருதுவதால் இந்த பதிவு.

அது தவிர்த்து இந்த கீழ் கண்ட குழலியின் புரிதலை அடிப்படையாகக் கொண்டு வைக்கப்பட்ட பிற வாதங்களை முந்தைய அசுரன் கட்டுரையின் பின்னூட்டங்களில் தோழர்களும், நண்பர்களும் உடைத்துள்ளனர். அந்த பின்னூட்டங்களின் அடிப்படையிலான வாதங்களும் இந்த கட்டுரையில் முன்னெடுக்கப்படும்.



//பார்ப்பனர்களோடு சேர்ந்து கொண்டு ஆண்ட சாதிகள் என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லும் ம க இ க தோழர்கள், சற்று யோசித்து பார்க்க வேண்டும், இடஒதுக்கீடு புள்ளிவிபரங்கள் சொல்வது இந்த ஆண்ட சாதிகள் எத்தனை சதவீத இடங்களை பிடித்துள்ளனர், பார்ப்பனர்களோடு சேர்ந்து இவர்களும் சுரண்டுபவர்கள் என்றால் பார்ப்பனர்களும் இவர்களும் இணையாகவோ அல்லது ஓரளவிற்காவது நிரம்பியிருக்க வேண்டுமே, ஆனால் இடஒதுக்கீட்டிற்கு முன் இவர்கள் நிரம்ப வில்லையே ஏன்?//

இது குழலி சொன்னது,

நாங்க சொல்வது இங்கு பார்ப்பன்ர்களுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளதை ஏன் தாழ்த்தப்பட்டவர்களுடனும், பிற பிற்படுத்தப்பட்டவர்களுடனும் ஒப்பிட்டு எழுதவில்லை என்பதுதான்.

ஏனெனில் பாப்பனரின் மேலாதிக்கம் குறித்த விசயத்தில் எமக்கு, உங்களுக்கும் கருத்து வேறுபாடு இல்லை. அதாவது மேற்சொன்ன விசயத்தில் எமக்கும் உங்களுக்கு கருத்து வேறுபாடு இல்லை.

மாறாக, பிற்படுத்தப்பட்டவர் இடஓதுக்கீட்டில் ஒரு சில ஆதிக்க சாதியினர் மட்டும் பயன்பெறுவதும் அந்த சாதியினர் எல்லாம் தமது சாதி வெறி ஆதிக்கத்தை வலுப்படுத்தி வருவதும் குறித்தே எமக்கும் உங்களுக்கு கருத்து வேறுபாடு.

இத்துடன் நாளும் வலுப் பெற்று வரும் சாதி உணர்வுக்கு எதிராகவும். அதன் பாற்ப்பட்ட வன்முறைக்கெதிராகவும் என்ன நடைமுறை தந்திரம் வைத்துள்ளீர்கள் என்பதை கேள்வி கேட்க்கிறோம். குறிப்பாக ஆதிக்க சாதியினரை கண்டுகொள்ளாமல் அவர்களை இடஓதுக்கீட்டுக்காக மட்டும் அணி திரட்டும் போக்கு எங்கு கொண்டு விட்டுள்ளது என்பதை சாதி சங்கங்களின் வலிமை பறை சாற்றுகிறது. பெரியார் திக சாதி வெறிக்கெதிராக பிரச்சாரம் செய்தால், திக ன்னு சொல்ற இடஓதுக்கீடை மட்டும் பேசு ஏன் ரெட்ட டம்ளர பத்தி பேசுற என்று கவுண்ட சாதி வெறியர்கள் அடிக்க வெரும் திமிர்த்தனத்துக்கு குழலி உள்ளிட்டவர்களின் பதில் என்ன என்று கேட்க்கிறோம்.

இந்த காரணத்தினாலேயே மேலேயுள்ள உங்களது ஒப்பீடு எந்த வகையிலும் எமது குற்றச்சாட்டிற்க்கான பதிலாக இல்லை.

இங்கு பார்ப்பன்ரையும் பிற்ப்படுத்தப்பட்டவர் பட்டியலில் உள்ள ஆதிக்க சாதியினரையும் ஒப்பிட்ட குழலி அதே கையோடு பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் உள்ள ஒடுக்கப்ப்ட்ட சாதியினருடன் ஆதிக்க சாதியினரை ஒப்பிட்டால் இந்த வகை இடஓதுக்கீட்டின் மோசடி தெரிய வரும். அதாவது ஆதிக்க சாதியினர், உண்மையிலேயே ஒடுக்குமுறைக்காளான பிற பிற்படுத்தப்பட்ட சாதியினரின் இடஓதூக்கீட்டை தின்று வருவது தெரியவரும். அத்துடன் இல்லாமல் சாதி வெறியுடன் துடுக்குத்தனம் செய்து வருவதும் தெரியவரும்.

பிறபடுத்தப்பட்டோர் குறித்த வரையறையை, பட்டியலை மாற்றியமைக்க கோரும் மகஇகவின் வாதம் இங்குதான் நிலை கொண்டுள்ளது.

இதுதான் நாம் வாதிடும் மையமான விசயமாக உள்ளது.

மேலே சொன்ன விசயத்தை கவனத்தில் கொண்டுதான் பிற்படுத்தப்பட்டோர் இடஓதுக்கீட்டை பெருவாரியாக விழுங்கி வரும் ஆதிக்க சாதியினரை தனியாக பிரித்தோ அல்லது உள் ஒதுக்கீடு கொடுத்து பிற ஒடுக்கப்ப்ட்ட பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இடஓதுக்கீட்டின் பலன் போய்ச் சேர வழி வகுக்க வேண்டும் என்பதுதான் மகஇக கோரிக்கை.

இந்த விசய்த்தில் ஏன் உங்களிடமிருந்து பதில் இல்லை.

இந்த உள் ஒதுக்கீடு செய்வதில் அல்லது ஒதுக்கீடு செய்யாமல் சமூக புறக்கணிப்பு செய்வதில் என்ன சிக்கல் வந்து விடப் போகிறது?

இந்த விசயத்தை வலியுறுத்தியே யாரோ ஒரு தோழர் BC1, BC2 என்று உட்பிரிவு ஒதுக்க வேண்டும் என்ற ஒரு பரிந்துரை செய்திருந்தார். இது நல்ல யோசனையாகத்தான் படுகிறது.

இத்துடன் சேர்ந்து சாதி மறுப்பு திருமணம் செய்தவருக்கு இடஓதுக்கீட்டில் முன்னுரிமை, தனி ஒதுக்கீடும் செய்வது.

ஆதிக்க சாதி வெறியர்கள் ஆட்டம் போடும் இடங்களில் ஒட்டு மொத்தமாக இடஓதுக்கீட்டை ஆதிக்க சாதிகளுக்கு ரத்து செய்வது. அங்கு நடைபெறும் வளர்ச்சிப் பணிகளில் ஆதிக்க சாதி வெறியர்கள் புறக்கணிக்கப்படுவது. அதாவது ஒட்டு மொத்தமாக ஆதிக்க சாதியினர் ஆட்டப் போடும் இடங்களில் அவர்களை சமூக புறக்கணீப்பு செய்ய ஜனநாயக சக்திகளையும், பொது மக்களையும் அணி திரட்டுவது. அந்த பகுதிகளில் ஆதிக்க சாதிகளின் இடஓதுக்கீட்டு பங்கை பிற பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு ஒதுக்குவது உள்ளிட்ட செயல்பாடுகள்.

இந்த வேலைகளை செய்வதில் என்ன சிக்கல் வந்து விடப் போகிறது?

இதைச் சொன்னால் மறைமுகப் பார்ப்னியம் என்று அவதூறு சொல்லும் பொழுது நமக்கு சந்தேகம் வருகிறது, சமூக நீதி பேசும் இவர்கள்தான் உண்மையான மனு நிதியின் காவலர்களாம பார்ப்னர்களோ என்று.

இது சந்தேகம்தான். எதுவும் ஊர்ஜிதப் படுத்தி சொல்லவில்லை. நண்பர்கள் மீது எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது.

இது தவிர்த்து இடஓதுக்கீடு என்பது ஒரு சீர்திருத்தம் தானேயொழிய சர்வரோக நிவாரணி அல்ல என்பதும். அந்த காரணத்தினாலேயே அதை நடைமுறைபடுத்துவது இருக்கின்ற சமூக பொருளாதார பிரச்சனைகளை வேறு வடிவங்களுக்கு பரிணமிக்க்ச் செய்யும் இயல்புடையது என்பதையும் நாம் குற்றச்சாட்டாக வைக்கிறோம். இப்படி சொல்வதின் அர்த்தம் இடஓதுக்கீட்டை எதிர்ப்பது அல்ல. மாறாக இடஓதுக்கீடு என்ற சீர்திருத்தத்துடன் ஒடுக்கப்பட்டவர்கள் திருப்திப் பட்டு நின்று விடக் கூடாது என்பதை அவர்களுக்கு புரிய வைத்து, நிரந்தர தீர்வு நோக்கி மக்களை அரசியல்படுத்தும் தேவைக்காகவே இப்படி சொல்கிறோம். இங்கு நடப்பதோ இடஓதுக்கீடு ஒன்றே எல்லா சாதிய, சமுக பொருளாதார சிக்கல்களையும் தீர்த்துவிடும் என்ற மயக்கத்தின் பாற்ப்பட்ட பிரச்சாரமே. இந்த அம்சம் குறித்தும் விவாதம் செய்யலாம்.

அசுரன்



இந்த அம்சத்தில் சிந்தனையை தூண்டும் சில பின்னூட்டங்கள்(முந்தைய கட்டுரையிலிருந்து):


//உழைக்கும் மக்களில் பெரும்பான்மையினராகிய பார்ப்பனரல்லாத தலித், பழங்குடி மற்றும் பிற்பட்டடீரும், சாதி மறுப்பாளர்களும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு தடையாக உள்ள சிறு கருத்தும் செயலும் இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்களுக்கே சாதகமாக அமையும். பார்ப்பனரல்லாதவர்களின் ஒற்றுமையில் நீடிக்கும் ஊனங்களால்தான் பார்ப்பனீயம் இன்னும் நீடிக்கிறது என்பதை யாவரும் உணரவேண்டியுள்ளது.//

குழலி, இது தான் மோசடியென்பது. பார்ப்பனரல்லாத "தலித், பழங்குடி மற்றும் பிற்பட்டோ ரும்" என்று சொல்வதன் மூலம் தலித், பழங்குடி, பிற்பட்டோ ர் எனப்படுவோர் அனைவரையும் ஒரே தட்டில் நிற்க வைக்க முடியாது. இங்கே பிற்பட்டோ ர் என்று வகைப் படுத்தப்பட்டுள்ள எல்லோரையும் ம.க.இ.க ஆண்ட பரம்பரையென்று சொல்லி நிராகரிக்கவில்லை. அவர்களுக்குள்ளும் சேவைச் சாதிகளாய் இருக்கும் குயவர், தச்சர், குரும்பர், வெள்ளாளர்களில் ஒரு சில வகையினரை இடஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள் என்றே சொல்கிறார்கள். அதாவது இடஒதுக்கீடு அதன் முழுமையான பலன் யாருக்குச் செல்ல வேண்டுமோ அவர்களுக்கே செல்ல வேண்டும் என்பதே ம.க.இ.க நிலை.

இதில் உங்கள் மோசடி எங்கே வருகிறது? "பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்டோ ர்" என்கிற வகையின் கீழ் ஆதிக்க சாதிகளான தேவர், மறவர், செட்டியார், வெள்ளாலக் கவுண்டர்கள், முதலியார்கள், நாயுடுக்கள், நாயக்கர்கள்.. இப்படி பண்ணெடுங்காலமாக பார்ப்பனியத்தின் செயல் வீரர்களாய் இருந்தவர்களையெல்லாம் ஒரே பட்டியலில் அடைப்பது என்பது எப்படி சரியானதாகும்? 1987 - 88 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விபரங்களின் படியே நாட்டில் உள்ள 77 சதவீத முற்பட்ட பிற்பட்ட சாதியினர் 83% நிலத்துக்கு உடைமையாளர்களாய் இருப்பது வெளிப்பட்டுள்ளது ( இதில் பார்ப்பனர்கள் உள்ளடங்கவில்லை )

இதற்கு நீங்கள் முன்னே வைத்த வாதம் என்ன?

//பார்ப்பனர்களோடு சேர்ந்து கொண்டு ஆண்ட சாதிகள் என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லும் ம க இ க தோழர்கள், சற்று யோசித்து பார்க்க வேண்டும், இடஒதுக்கீடு புள்ளிவிபரங்கள் சொல்வது இந்த ஆண்ட சாதிகள் எத்தனை சதவீத இடங்களை பிடித்துள்ளனர், பார்ப்பனர்களோடு சேர்ந்து இவர்களும் சுரண்டுபவர்கள் என்றால் பார்ப்பனர்களும் இவர்களும் இணையாகவோ அல்லது ஓரளவிற்காவது நிரம்பியிருக்க வேண்டுமே, ஆனால் இடஒதுக்கீட்டிற்கு முன் இவர்கள் நிரம்ப வில்லையே ஏன்?//

அரசுப் பணிகளில் அமரவோ, டாக்டர் போன்ற சேவைத் தொழிலில் இறங்க வேண்டிய கட்டாயமோ இந்தச் சாதிகளுக்கு 1800களின் பிற்பகுதி வரையில் எழவில்லை என்பது தான் உண்மை. கவுண்டர் தேவர் போன்ற சாதிகளெல்லாம் வரலாற்று ரீதியில் நிலவுடைமையாளர்களாவே இருந்து வந்துள்ளனர் ( பெருமளவிலோ, குறைந்தளவிலோ ).. இவர்களுக்கு கல்வி மறுக்கப்படவில்லை. அப்படி இவர்களை ஒடுக்கியிருந்தால் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த இந்த சாதியினர் பார்ப்பனர்களை எப்போதோ ஒழித்துக் கட்டியிருப்பார்கள். சமூகத்தில் பார்ப்பனர்கள் மேலே ஏறினார்கள் என்றால் அப்படி அவர்கள் மேலேயே உட்கார்ந்திருப்பதற்கான தேவை இவர்களுக்கும் இருந்தது. இவர்களுக்கும் கீழே அடக்கி ஒடுக்கப்பட்டு கடுமையாக சுரண்டப்பட்டு, நிலத்தின் மேல் ஆதிக்கம் இல்லாதிருந்த சாதிகளிடம் "பார் எனக்கு மேலே அவன் உனக்கு மேலே நான்" என்று நியாயப்படுத்துவதற்கு தேவையாய் இருந்தது.

அரசு வடிவம் மாறி ஆங்கிலக் கல்வியுள்ளவர்களுக்கு ( மாண்டேகு- சிம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் மற்றும் இரட்டை ஆட்சிமுறை ) அரசுப் பணி என்றும் அவர்களுக்கு சமூக அந்தஸ்தும் கிடைக்க ஆரம்பித்த புள்ளியில் தான் இவர்களுக்கும் அரசுப்பணியின் அவசியம் ஏற்பட்டது. அது நிராகரிக்கப்பட்டவனின் உரிமைக் குரல் அல்ல - மாறாக இது வரையில் இருந்த ஆதிக்கத்தை நிலை நிறுத்தியாக வேண்டியதன் கட்டாயத்தில் எழுந்ததே. உங்கள் மூலமான நீதிக் கட்சியின் நிறுவனர்கள் பழைய ஜமீந்தாரிகள், மன்னர்கள் என்பது நினைவிருக்கட்டும் ( பொப்பிலி மகாராஜா போல ).. இவர்கள் ஆரம்பத்திலேயே பெரியார் போல பகுத்தறிவு இயக்கம் நடத்தவோ பார்ப்பனிய எதிர்ப்பிலோ ஈடுபட்டிருக்கவில்லை.. மாறாக பார்ப்பனியத்தின் அத்துனை கூறுகளையும் உட்செறித்து மேலே வந்து விட முடியுமா என்கிற முயற்சியில் தான் ஈடுபட ஆரம்பித்தனர். ..

மேலும் நீங்கள் கேட்பது போல இடஒதுக்கீட்டுக்கு முன் இவர்கள் நிறம்பவில்லையே ஏன்? என்கிற கேள்வியே அப்போது எழவில்லை. இடஒதுக்கீடு அமுலான ஆரம்ப காலத்திலேயே அதன் பலன்களை அதிகம் சுருட்டிக் கொண்டதும் ( தமிழக அளவில் உதாரணம் தர முடியும் ) இந்த "பிற்படுத்தப் பட்டோ ர்" என்னும் போர்வைக்குள் புகுந்து கொண்ட ஆண்டைகள் தான்.

இவர்கள் அதிகாரத்திற்கு வந்த பின் 1927ம் ஆண்டே வகுப்புவாரி உரிமை என்னும் அரசானையின் படி தமக்கான உரிமையை நிலை நாட்டிக் கொண்டனர்.. இடஒதுக்கீடு அமுலான முதல் (20 ஆண்டுகளில் ஆண்டைகளும் நிலவுடைமையாளர்களும் தமது ஆதிக்கத்தை அரசு மட்டத்திலும் உறுதிப்படுத்திக் கொண்டனர். அதற்கு முன் - குறிப்பாக மாண்டேகு - சிம்ஸ்போர்ட் சீர்த்திருத்தங்களுக்கு முன் - இட ஒதுக்கீட்டுக்கான தேவை சாதி இந்துக்களுக்கு எழவே இல்லை.. ஏனெனில் அவர்கள் நிதர்சனத்தில் ஆதிக்க சாதிகளாகத் தான் இருந்தனர்.


இப்போது மீண்டும் உங்கள் பதிவுக்கு வந்தால், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் - தமிழகத்தில் எல்லோருமே தங்களை ஆண்ட சாதிகள் என்று தான் பெருமையடித்துக் கொள்கிறார்கள் என்கிறீர்கள். இது பார்ப்பனியம் தோற்றுவித்த காரணிகளில் ஒன்று தான். எல்லோரும் தங்களை ஆண்ட சாதி என்று சொல்லிக் கொண்டாலும் - நடைமுறையில் யார் நிலவுடைமையாளர்கள், ஆதிக்க சாதிகள் என்பதைக் கொண்டு தான் முடிவெடுக்க முடியும். இந்த வாதத்தை நீங்கள் விரிவாக்கிச் சென்றால் - தெற்கே திராவிடர்கள் வருவதற்கு முன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு ஆண்ட
சாதி என்பது இப்போது மலைவாழ் மக்கள் என்று அறியப்படுபவர்கள் தான் எனவே ம.க.இ.க மலைவாழ் மக்களுக்கும் இடஒதுக்கீடு கூடாது என்று சொல்லுமா என்று கேணத்தனமாகக் கேள்வி கேட்கும் அளவிற்கும் போகலாம்... ஆனால் துரதிர்ஷ்டவசமாக ம.க.இ.கவின் நிலை அதுவல்ல.. நாம் அறிந்த வரலாற்றிலும், நிதர்சனத்திலும் எவர் ஆதிக்க சாதியாய் இருக்கிறார்கள் என்பதைத் தான் கணக்கில் எடுக்கச் சொல்கிறார்கள். எனவே நீங்கள் கேட்கும் கேள்வி அர்த்தமற்றது மட்டுமல்ல முட்டாள்தனமானதும் கூட.

பல்லவன் குடிசையில் பன்றி மேயுது என்கிற பம்மாத்து இல்லாமல் நேரடியாகச் சொல்லுங்கள் - வன்னியர்கள் அடிமைச் சாதி தானா? அடிமைச்சாதியென்றால் "வன்னிய குல சத்திரியர்" என்கிற வெட்டிப் பெருமை மட்டும் எதற்கு? அப்படி வெட்டிப் பெருமையடிப்பதற்காக ராமதாஸ் போன்றவர்களை நீங்கள் கண்டிக்க தயாரா?

இல்லை வன்னியர்கள் குடிசையில் பன்றி மேய்வது உண்மையானால் அதற்கும் சக்கிளியன் சேரியில் பன்னி மேய்வதற்கும் ஒரே காரணம் தானா? அதாவது பார்ப்பனியம் தானா? தீண்டாமையால் கொடுமைப் படுத்தப்பட்ட சாதி தான் வன்னிய சாதியா?

வன்னியர்களையும் காட்டு நாயக்கர்களையும் ( அவர்கள் தங்களை ஆண்ட சாதி என்று கருதிக் கொள்வதால் ) ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது என்பது முழு முட்டாள் தனம்.

***************

ஆண்ட பரம்பரைகள்னு போகிற போக்கில் சொல்லி ரகசியமாய் மகிழ்ந்து கொள்ளும் அறியாமையில் கிடக்கும் ஜனங்களை நோக்கிக் கூறப்பட்டதல்ல 'ஆண்ட பரம்பரையா! அடிமைப்பரம்பரையா?" என்பது.

நாங்கள் மூவேந்தரின் வாரிசுகள் என்றும், பல்லவனின் பரம்பரை என்றும் மேடை போட்டு முழங்கி முக்குலத்தோரின், வன்னியரின் உணர்வுகளை முறுக்கேற்றி, அவர்களின் போலி கவுரவத்தை வளர்த்தெடுத்து, பிற சாதியினரை (வேறு யாரை தலித்துகளைத்தான்) தங்களுக்கு அடிபணிந்து போகச்சொல்லி மிரட்டும் 'ஆண்ட பரம்பரை'ப் பொறுக்கிகளுக்குத்தான்...இட ஒதுக்கீட்டை ரத்து செய்யச் சொல்லுகிறோம்.

பொன்.பரமகுருவில் இருந்து மலைச்சாமி வரை எத்தனையோ பேர்கள் இட ஒதுக்கீட்டால் படித்து முன்னேறினார்கள்தான். அவர்கள் தங்கள் பணிக்காலத்தில் செய்தது என்ன? தங்கள் சாதிக்காரனாகப் பார்த்து போலீசுதுறையில் ரொப்பிக்கொண்டார்கள். ஓய்வு பெற்றவுடன் ஓடிச்சென்று தேவர்பேரவை போன்ற சாதித்தீ மூட்டும் அமைப்பில் ஒட்டிக்கொண்டார்கள் என்பதில் இருந்தே இவர்களின் அரசுப்பணியின் லட்சணத்தை நல்லாவே யூகிக்கலாம். யூகம் என்ன எல்லாமே நெசந்தான். 70% பேர் போலீசுக்காரங்களா இருப்பது..ஆண்ட பரம்பரை 'தேவர்'தான். தேவர் சாதிப்போலீசின் மிருகத்தனத்தை ஒவ்வொரு தலித் - தலித் அல்லாதோரின் மோதல்களிலும் பார்க்க முடியும்.. சமீபத்தில்--கடந்த 10 ஆண்டுகளில் இட ஒதுக்கீட்டில் வந்த தேவர் சாதி போலீசுக்கும்பல் கொடியங்குளத்திலும் தாமிரபரணிக்கரையிலும் போட்ட வெறியாட்டம்...2 வயது சிறுவன் விக்னேசைக்கூட விட்டு வைக்கவில்லை.
.......
பறையர் பையனைக்காதலித்த குற்றத்துக்காக கண்ணகி-முருகேசனைக்கொன்ற சாதி வெறியர்களைக் காப்பாற்ற உள்வேலை செய்பவனோ, இட ஒதுக்கீட்டில் படித்து கலெக்டராக இருந்தவன்..இவன் திருநெல்வேலிக்கு கலெக்டராக இருக்கும்போதுதான் 17 தலித்கள் போலீசால் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. அன்று போலீசின் அத்துமீறலை ஆரம்பித்து வைத்து வன்கொடுமை சாதி வெறியந்தான் அந்த கலெக்டர்.. இவர்களுக்கு இட ஒதுக்கீட்டை தரக்கூடாது என்கிறோம்.

பிற்பட்டோ ர் பட்டியலுக்குள் ஆதிக்க சாதிகள் எல்லாம் உட்கார்ந்து கொண்டு உண்மையிலே பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இடமில்லாமல் ஆக்குகிறார்கள் என்பதற்கு புள்ளிவிவரங்களைத்தேடி எல்லாம் செல்ல வேண்டாம்.

தென் மாவட்டக்கல்லூரிகள் எங்கும் நடக்கும் மாணவர் மன்றத் தேர்தல்களே இதற்கு சான்று. BC பட்டியலில் 80 சதவீத இடங்களை நாடார்களோ நாயுடுகளோ (அதாவது வடுகன் என்பவர்கள்) ஆக்கிரமித்துக்கொண்டு சாதிச் சங்கமே மாணவர்கள் மத்தியில் அமைத்து சாதி வெறி உண்டாக்கி தேர்தலில் நிற்கின்றனர். MBC ஒதுக்கீட்டில் பெருமிடங்களை தேவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டு சாதிச்சங்கம் கட்டி, உணவு விடுதிகளில் தலித் மாணாக்கரை 'ஓசிச்சோறு' என்றும், தலித் மாணவிகளை பாலியல்ரீதியாகக் கொச்சைப்படுத்திப்பேசி வக்கிரமாய் நடந்து கொள்வதும், சேவைத் தொழில் செய்யும் சாதியில் இருந்து வரும் ஒன்றிரண்டு மாணவர்களிடம் 'எனக்கு சிரைத்து விடு' என்றோ 'என் செருப்பைத் தைடா' என்றோ சாதித்திமிரோடு நடந்து கொண்டு வருவது வெளிப்படையான விசயம்.

அக்கல்லூரிகளில் உட்கார்ந்திருக்கும் ஆசிரியர்களும் தங்களைஆதிக்க சாதி சங்கங்களுக்குள் இணைத்துக் கொண்டு அதே சாதி மாணவர்களைக் கொம்பு சீவி விடுகின்றனர்.. இதை எல்லாம் சொல்லி இந்தக் கேடு கெட்ட சாதிவெறியன் களுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்.. பிற்பட்டோ ர் பட்டியலை சீர் செய் என்றால்...மறைமுகப் பார்ப்பனீயம் என்கிறார்கள்..

ஆதிக்க சாதிகள் என நாம் சொல்லிடும் நாயுடு,கவுண்டர்,தேவர்,நாடார்,வன்னியர் எனப்படும் சாதியினரிடம் நூற்றுக்கணக்கிலும்,ஆயிரக்கணக்கிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் கல்லூரிகளும் குவிந்து கிடக்கின்றன. அங்கு இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றதாக வரலாறு உண்டா? எப்படி நாடார் நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பியூனில் இருந்து தலைமை ஆசிரியர் வரை நாடார்களாகவே இருக்க முடிகிறது? நாயுடு கல்லூரியும் அப்படித்தான்..கவுண்டன் கல்லூரியும் அப்படித்தான். ஆனால் பட்டியலில் இருக்கும் பல நூறு சாதிகளால் ஒரு நர்சரி பள்ளி ஆரம்பிக்கக் கூட தெம்பு கிடையாது என்பதுதான் உண்மை. எங்காவது வண்ணார் சங்கப் பள்ளியையோ மருத்துவ சாதி சங்க கலைக்கல்லூரியையோ காட்ட முடியுமா?

இதே மாதிரி எண்ணற்ற உதாரணங்கள் தமிழகம் எங்கும் பெருத்துக் கிடக்கும்போது சமூக நீதிப் புடுங்கிகள் இதற்கு எதிராக என்ன புடுங்கினார்கள்?

கல்லூரிக்கு அடுத்து வேலை செய்யும் இடங்களைப் பார்த்தால் பொதுத்துறை நிறுவனங்களுக்குள் ஆதிக்க சாதிக்கும்பல்தான் வேலை வாய்ப்பில் பெரும் இடங்களைப் பிடித்துக் கொண்டு சாதி ரீதியாய் தொழிற்சங்கம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். தொழிற்சங்கம் என்றால் ஏதோ தொழிலிடப் பிரச்சினைகளுக்காகப் போராடும் அமைப்பு என்றெல்லாம் எண்ண வேண்டாம். யார் யார் வீட்டில் கல்யாண வயசில் பொண்ணு இருக்கு? என்பதை விசாரித்து தங்களுக்குள் திருமணம் மூலம் மேலும் சாதியாய் இறுகிக்கொள்ளவும், மறக்காமல் ஆண்டுதோறும் தங்கள் குலதெய்வத்தின் விழா எடுக்கவும்தான் இச்சங்கங்கள்.. திருச்சி பெல்லில் பார்க்கலாம்..பெல்-சேனைத்தலைவர் சங்கம்..பெல்-வன்னியர் சங்கம்..லொட்டு லொசுக்கு எல்லாம்.

விப்ரோ டெக்னாலஜியில் பார்ப்பனர் சங்கம் கட்டி இருக்கிறார்கள்.. சவுராஸ்டிரா சங்கம் வைத்திருக்கிறார்கள்.. நவீன தொழில்நுட்பவாதிகள் இல்லையா? மெயிலிங் லிஸ்ட்டில் - ஈ-சாதிச்சங்கமாய் ஐக்கியப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு சங்கமாய்த் திரண்டு சாதியைக் காப்பாற்றும்/ சாதி வன்முறையை (கல்லூரி அளவிலேயே) வளர்க்கும் சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். அல்லது BC ஐ இரண்டாகப்பிரித்து இந்த மாதிரி ஆதிக்க சாதிகளை BC1ல் வைத்து 3 சதவீதம் அவர்களுக்கும்... இதர 200 BCகளை 27% கொடுத்து BC 2லிலும் வைப்பதுதான் உண்மையான சமூக நீதி.

சமூகநீதிப் புடுங்கிகள் என்றைக்காவது சாதிமறுப்புத் திருமணங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று கோரி இருக்கிறார்களா? சாதி ஒழிப்புதானே - சமூக நீதியாகும்! சாதி ஒழிப்பை சாதிமறுப்பு திருமணம் தானே சாதிக்கும்!

சாதி மறுப்புத் திருமணம் மூலம் பிறந்தவர்களுக்கு பெயரளவில் இருந்த சிறு வீத ஒதுக்கீட்டையும் 'சமூக நீதியை' காத்த வீராங்கனை ஒழித்துக்கட்டியது.. ஆனாலும் அதன் பிறகு ஆட்சிக்கு வந்த 'சமத்துவப் பெரியாரும்' இதைக் கண்டு கொள்ளவே இல்லை.

***********

சாதி ஒழிப்பைத் தவிர்த்து விட்டு, இட ஒதுக்கீட்டில் மட்டும் அழுத்தம் கொடுக்கும் திராவிட,தமிழ்தேசிய,வன்னியவிய,தேவர்வெறியியக் கட்சி/குழுக்களால் ஏற்பட்ட சமூகவியல் மாற்றங்களைப் புரிந்து கொள்ள சில சான்றுகள்.

1) திண்ணியம் ஊரில் சக்கிலியர் வாயில் மலத்தைத் திணித்த சாதிவெறியர்களில் ஒருவர் - அரசுப்பணியில்-ஆசிரியராகப் பணியாற்றியவர். பெயர் என்ன தெரியுமா? குடியரசு.

2) சமதாக் கட்சியின் தமிழ் நாடு பிரிவுக்கு ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டார். பெயர் குடியரசுத் தேவர். (1929இலேயே வாலை நறுக்கிய இயக்கப்பின்னணி கொண்ட பெயருடையவருக்கு வால் முளைக்கிறது)

3) பெரியார் திராவிடர் கழகத்தினர் பழனி ஒன்றியத்தில் கவுண்டர் சாதிவெறியர்கள் நிறைந்த பகுதியில் 'தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரப் பயணம்' மேற்கொண்டிருந்தபோது 'இரட்டைக்குவளைகள் முறை பற்றி'கண்டித்துப் பேசி வந்தனர். ஆத்திரமுற்ற கவுண்ட சாதி வெறியர்கள் பெ.தி.க. தொண்டர்களைத் தாக்க முயன்றனர். அப்போது அவர்கள் சொன்னது "தி.க.ங்கிற..சாமியப் பத்திப் பேசு..இட ஒதுக்கீடு பத்திப் பேசு..ஆனால் ரெட்டக்கிளாஸ் அது இதுன்ன..கொளுத்திப்புடுவோம்.."



****************


ராமதாசின் குடும்பத்தில் நடைபெற்ற சாதி மறுப்பு திருமணங்கள் எத்தனை?

ஆனைமுத்துவின் கட்சி ஏன் வன்னியர் சங்கம் மாதிரியே இருக்குது?

தமிழரசனின் தனித்தமிழ் நாடு படை ஏன் வன்னியர் படையாக மட்டுமே இருக்குது?

தமிழ் தேசியம் என்பது வன்னியர் தேசியமா?

ஆண்ட பரம்பரன்னு சொல்லுர ராமதாசு ரிலயன்சு போன்ற சேட்டுகிட்ட போய் நாய் மாதிரி வாலாட்டுறப்ப ஆண்ட பரம்பரையின் குலப்பெரும கெட்டுடாதா?

இதற்கெல்லாம் குழலி எனும் ஆண்டபரம்பரைகள் பதில் சொல்ல வேண்டும்..

*************

கம்யுனிஸ பூச்சாண்டி சொல்வதை பார்த்தால் படித்தவன் எல்லாம் சாதி வெறயில்லாம இருப்பதாக இருக்க வேண்டும். அப்ப்டி இல்லை என்பதைத்தான் கனேசு, அன்பரசன், குரல்கள், புல்டோ சர் உள்ளிட்டவர்களின் எ-கா சொல்கிறது. இன்னும் சொன்னால் கல்வி நிலையங்க்ளில் சாதி ரீதியாக திரண்டு பிற சாதியினரை இழிவுபடுத்தும் போக்கு உங்களது வாதத்திற்க்கு முரனாகவே இருக்கிறது.

கல்வியறிவினால் சாதி ஒழியும் என்பதே ஒரு அப்பட்டமான மோசடி.

எப்படி பொருளாதார விடுதலை மட்டுமே சாதியை ஒழித்துவிடும் என்று கம்யுனிஸ்டுகள் சொன்னது அடிப்படையற்றதோ அதே போல வெறுமே பண்பாட்டு சீர்திருத்தங்களால் மட்டும் சாதி ஒழிந்து விடும் என்பதும் அடிப்படையற்றதே.

தத்துவம், பொருளாதாரம், அரசியல் என்று மூன்று முனைகளிலும் சம்ரசமற்ற போராட்டமே சாதியை ஒழிக்கும்.

இடஓதுக்கீட்டை சர்வரோக நிவாரணியாக காட்டும் உங்களது சித்தாந்த ஓட்டாண்டித்தனத்தையே படித்தவன் முதல் பலரும் தமது சாதி வெறியை விடாமல் இருப்பதும், இன்றைக்கு திராவிட அரசியலுக்கு உரிமை கொண்டாடும் பாமக உள்ளிட்டவர்கள் சாதி ரீதியாக அணி திரண்டு உரிமை பெறுங்கள் என்று அப்பட்டமாக பிழைப்புவாதம் பெசுவதும், குஜ்ஜார் பிரச்சனைகளும் காட்டுகின்றன. இடஓதுக்கீடு ஒரு சீர்த்திருத்தம் என்பதை புரிந்து கொள்ளாத நண்பர்கள் அதனது யாதர்த்த விளைவுகளை கண் கொண்டு நோக்கும் வலுவின்றி இருப்பது பரிதாபமே.

****************

Gopalan Ramasubbu said...

இது சட்டநாதன் அவர்கள் எழுதிய புத்தகத்தில் இருக்கும் ஒரு பத்தி(Page-188),

[http://books.rediff.com/bookshop/bkproductdisplay.jsp?PLAIN-SPEAKING-by-A-N-SATTANATHAN&prrfnbr=60109970&multiple=true&frompg=_]

"There are two tendencies which have become noticeable.Reservationhas helped the backward classes for nearly six decades from the 1920's to the 1980s-practically three generations.The benefit of reservation has gone mostly to the top few castes amongst the backward,and to an increasing layer of upper crust in each caste.The filtration process has not been through or uniform.This is not surprising,and is to some extent unavoidable.It would be a step in the larger interest of society and of the backward classes themselves,if a check is applied to both tendencies.There has been thinking on these lines among administrators;but the opposition of vested interest has been too strong to carry out the necessary pruning.But sooner or later,the removal of the two kinds of upper crust will become un-avoidable;otherwise we will be encouraging the caste to form a class system within caste system-not an altogether desirable trend in a democratic and sicialitic society"

***********

முருகேசன் கண்ணகியை எரித்துக்கொன்ற வன்னிய சாதி வெறியர்களைக் காப்பாற்றத் துடிக்கும் முன்னாள் மாவட்ட ஆட்சித்தலைவரும் இட ஒதுக்கீட்டில்தானே படித்து முன்னேறி வந்திருக்கிறார்? இப்பேர்ப்பட்ட சாதி வெறி நாய்களுக்கு இட ஒதுக்கீட்டை இரத்து செய்யச் சொல்வதுதானே சரியாகும்?

கண்டதேவியில் தேர் இழுக்கப்படாது..வன்னியன் தெருவழியே பறையன்பிணம் வரப்பிடாது...கட்டினால் வன்னியகுல சத்திரியகுலத்திலேதான் செவப்பா அழகா கட்டுவோம் (இருப்பது இங்கிலாந்தில்) எனும் சாதி வெறியுடனும், பஞ்சாயத்து தலைவரா தலித் வந்தா ஆத்தாவுக்கு ஆகாது...ரெட்டை டம்ளர் டீ க்கடை... எல்லாவும் செஞ்சுப்புட்டு இட ஒதுக்கீடு வேணும்...நாங்கள்ளாம் மிகவும் பிற்பட்டவங்க என்பதும், சாதிக்கூட்டங்களிலே போய் நாங்க பல்லவர்களின் வழித்தோன்றல்...பாண்டிய மன்னர்கள்தான் எங்களோட 56 வது கொடிவழி பாட்டனாரு...ன்னு மீசையை முறுக்கறதும்... ஆண்ட பரம்பரைதானடா...உனக்கு எதுக்கு இட ஒதுக்கீடு...

என்னக் கேட்டால், எவன் சாதி மறுப்பு திருமணம் செய்கிறானோ, ஆதிக்க சாதி சங்கத்திலே ஒட்டாம இருக்கிறானோ அவனுக்க மட்டுமே இட ஒதுக்கீடு தரணும்...ம.க.இ.க.வும் இதத்தான் சொல்லுதுன்னு நினய்க்கேன்.

அது கிடக்கட்டும்... பெரியாரின் கொள்கையில் இட ஒதுக்கீட மட்டுமே முன்னிறுத்தி வரும் ராமதாசும், ஆனமுத்துவும் ஏன் சாதி ஒழிப்பு பத்தி பேச மாட்டக்காக?
***************

Related Articles:

புரளி பேசும் போலி தமிழ தேசியவாதிகள்

இட ஒதுக்கீடு: சாதி இந்துக்களுக்கு வக்காலத்து தான் சமூகநீதியா?

பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு : மீண்டும் தலைதூக்கும் பார்ப்பனத் திமிர்! சமூகநீதிக் கட்சிகளின்: சமரசம்!

6 பின்னூட்டங்கள்:

said...

தோழரே!

உங்களை ஒன்று விளையாட்டுக்கு அழைத்திருக்கிறேன். தயவுசெய்து 24 மணிநேரத்துக்குள்ளாக பரிசீலிக்கவும்.

அன்புடன்
லக்கிலுக்

said...

Excellent & fitting reply comrade

said...

பாறையனாக வாழு அசுரகானம் பாடு
----------------------------------

யுகம் யுகமாய் கடக்கும் இருண்ட காலம் விடியும்
முன்பே எமது வானில் மீண்டும் படர்கிறது காவி இருள்

" நாங்கள் தான் ஆண்டபரம்பரை "

ஒடுக்குமுறையால் பெற்றுக்கொண்டாய்
அடிமைசாசனத்தை.


பார்ப்பனனோடு சேரும் போது நீஆண்டபரம்பரை
என்னோடு நிற்கும் போது அடிமைப்பரம்பரை

நல்ல இனம்,
தேசிய உணர்வு எனக்கு மூக்கு,சூத்து எல்லாம் பொங்கி வழிகிறது.


இடஒதுக்கீடு வேண்டுமா உனக்கு
வா கேட்போம் ஆனால் அதற்கு முன்

நீ
அசுரனாக மாறி விடு

தேவகானம் பாடாதே

பறையன் குரலில் பேசு

தேவனாக வாழாதே

முடியுமா உன்னால்

முடியாது என்றால் பொறுத்திரு

வசந்தத்தின் இடிமுழக்கம் கேட்கும் வரை.

said...

அந்த காலத்தில் பார்ப்பனர் அல்லாத நில உரிமை சாதிகள் கல்வியில் பின்
தங்கி இருந்ததற்கு மற்றொரு காரணம் நில உரிமைதான். நிலத்துடன் சம்பந்தப்பட்ட
ஆட்கள் விசுக்கென்று பொட்டியை தூக்கிக்கொண்டு டில்லிக்கும், சென்னைக்கும்,
அதிகாரம் இருக்கும் இடத்திற்கு மூட்டை கட்டிக்கொண்டு போக முடியாது. பார்ப்பனர்கள்
சென்னைக்கும் தில்லிக்கும் ஒட்டு மொத்தமாக குடி பெயர்ந்தது போல
குடி பெயர முடியாமல் விவசாயத்தை மட்டுமே நம்பி இருந்தவர்கள் பின் தங்கியதில்
ஆச்சரியம் இல்லை. மிகப் பெரிய பணக்காரனாக இருந்தால் மட்டுமே
சென்னை பட்டணத்துக்கு அனுப்பி ஆஸ்டலில் படிக்க வைக்க முடியுமாக இருந்தது.
இன்றும் கூட கிராம பகுதிகளில் போதுமான அளவு தரமான பள்ளிகள் இருகிறதா?

முன்னேறிய BC சாதிகளின் அட்டகாசம் 'சாதி ஓட்டு' அரசியலால் விளைவது.
ஒவ்வொரு தொகுதியிலும் எந்த சாதிக்காரர்கள் அதிகம் இருக்கிறார்களோ அந்த
சாதித் தலைவர் தேர்தலில் நிற்கிறார். ஜெயிக்கிறார். அந்த தொகுதியில் இருக்கும்
மற்ற சாதிக்காரகளுக்கு என்றென்றும் ஜெயிக்க வாய்ப்பே இல்லை.தலித்துகள் கூட
பரவாயில்லை.தனி தொகுதி வைத்திருக்கிறார்கள். தலித்தும் இல்லாமல் ஓட்டு எண்ணிக்கையும்
இல்லாமல் இடையில் இருக்கும் BC யின் நிலை சோகம்.சில தொகுதிகளில்
அண்ணன் கவுண்டர் திமுகவுக்கு நிற்பார். தம்பி கவுண்டர் அதிமுகவுக்கு நிற்பார்.
யார் ஜெயித்தாலும் அதிகாரம் கை மாறாது. தமிழ்நாட்டு எம் எல் ஏக்களில்
பலர் பழைய ஜமீந்தார்கள். இந்த ஜாதி தலைவர்களின் அதிகாரத்தை
பாதுகாப்பேன் என்ற உறுதிமொழி கொடுத்தால் திருமா போன்றவர்கள் கூட
முதல்வராக முடியும்.


//ஒரு சாதியில் பிறந்த ஒருவன் ஆண்டதாலேயே அந்த சாதி சமூகத்தில்
உயர்நிலையில் இருந்ததா?//
ராமதாசும் அவர் மகனும் ஆள்வதால் அந்த சாதி முன்னேறிவிட்டதா?
அன்புமணியின் மகனும், ஏழை வன்னிய குல சத்ரியனின் மகனும் ஒரே
பள்ளியிலா படிக்கிறார்கள்? ராமதாசுக்கு மயக்கம் வந்தால் அப்போலோவில் செக்கப்
செய்கிறார். மற்ற வன்னியர்களும் அப்போலோவில் செக்கப் செய்ய முடியுமா? கருணாநிதி
பல கோடிகள் வைத்திருப்பதால் இசை வேளாளர்கள் முன்னேறி விட்டார்களா? இந்த
நிலையை மாற்ற திராவிட கட்சிகள் என்ன திட்டம் வைத்திருக்கிறது?

அன்புமணியின் மகனும் ஏழை வன்னியனின் மகனும் ஐ ஐ எம்மிற்கு விண்ணப்பித்தால் யாருக்கு
இடம் கிடைக்கும்? ஏழை வன்னியன் முன்னேறுவதற்கு இட ஒதுக்கீடு எந்த வகையில் உதவுகிறது?
அவன் அரசாங்க ப்யூன் வேலைகளுக்கும், க்லெரிக்கல் வேலைக்கும் போகலாம்.
ஒன்று, தனியார் பள்ளிகளை மூட வேண்டும் அல்லது அரசு பள்ளிகளை மூடிவிட்டு அனைவரும்
வவுச்சர் பெற்று தனியார் பள்ளிகளில் படிக்கலாம். வெறும் இட ஒதுக்கீடு சமூக நீதியை
தராது. அனைவருக்கும் சம வாய்ப்பு கொடுத்துவிட்டு இட ஒதுக்கீடும் கொடுக்கட்டும்.

said...

//கம்யுனிஸ பூச்சாண்டி சொல்வதை பார்த்தால் படித்தவன் எல்லாம் சாதி வெறயில்லாம இருப்பதாக இருக்க வேண்டும். அப்ப்டி இல்லை என்பதைத்தான் கனேசு, அன்பரசன், குரல்கள், புல்டோ சர் உள்ளிட்டவர்களின் எ-கா சொல்கிறது. இன்னும் சொன்னால் கல்வி நிலையங்க்ளில் சாதி ரீதியாக திரண்டு பிற சாதியினரை இழிவுபடுத்தும் போக்கு உங்களது வாதத்திற்க்கு முரனாகவே இருக்கிறது.//

குமாஸ்தாக்களை உருவாக்கும் கல்வியின்மூலம் சாதிய உணர்விலும்
பார்பணியத்திலும் இருந்து ஒரு மனிதனை விடுவிக்க முடியாதென தெரிந்துதான் அய்யா பெரியாரின் பகுத்தறிவு கொள்கை உருவானது.

படிப்பறிவை நான் தீர்வாக சொல்லவில்லை பகுத்தறிவை சொன்னேன்.

//எப்படி பொருளாதார விடுதலை மட்டுமே சாதியை ஒழித்துவிடும் என்று கம்யுனிஸ்டுகள் சொன்னது அடிப்படையற்றதோ அதே போல வெறுமே பண்பாட்டு சீர்திருத்தங்களால் மட்டும் சாதி ஒழிந்து விடும் என்பதும் அடிப்படையற்றதே//

பண்பாட்டு சீர்திருத்தங்களால் மட்டும் சாதி ஒழிந்து விடாதென்றால் என்னத்தை முன்வைக்கிறீர்கள் .

அவனுக்கு கொடுக்காதேன்னு சொல்லும் நீங்கள் அவன் ஆண்ட சாதி என சொல்லும் நீங்கள் ஒரு விசயத்தில் குருடணாக இருக்கிறீர்கள் .

ஒரு ஊரில் 100 குடும்பம் இருந்தால் அதில் பத்து குடும்பத்துக்குத்தான் சொந்த இடம் இருக்கும் மீதம் உள்ள 80 குடும்பம் நீங்கள் சொன்ன ஆண்ட சாதியாக இருந்தால் அவை கூலி வேலை செய்யும் . வர்க்க ரீதியில்
சுர\ண்டப்படும் வர்க்கமாக இருக்கும் அந்த கூலிகள் சாதிரீதியில் தன்னை ஆண்டானாக நினைத்துகொள்வது பேதமை அதே தவறை நீங்களும் செய்கிறீர்கள் . அவர்கள் மொத்தமும் கல்வி அறிவு பெற்றவர்களாக வும்
பணக்காரர்களாகவும் இருந்தார்கள் என்பதை உங்களிடம் பாடம் கேட்கவரும் அப்பாவிதான் நம்புவான்.

//இடஓதுக்கீட்டை சர்வரோக நிவாரணியாக காட்டும் உங்களது சித்தாந்த ஓட்டாண்டித்தனத்தையே படித்தவன் முதல் பலரும் தமது சாதி வெறியை விடாமல் இருப்பதும், இன்றைக்கு திராவிட அரசியலுக்கு உரிமை கொண்டாடும் பாமக உள்ளிட்டவர்கள் சாதி ரீதியாக அணி திரண்டு உரிமை பெறுங்கள் என்று அப்பட்டமாக பிழைப்புவாதம் பெசுவதும், குஜ்ஜார் பிரச்சனைகளும் காட்டுகின்றன. இடஓதுக்கீடு ஒரு சீர்த்திருத்தம் என்பதை புரிந்து கொள்ளாத நண்பர்கள் அதனது யாதர்த்த விளைவுகளை கண் கொண்டு நோக்கும் வலுவின்றி இருப்பது பரிதாபமே.
//

முதல் உதாரணத்தை போலவே இங்கேயும் நான் சொன்னதாக நீங்களே கற்பனை செய்து அடித்து உள்ளீர்கள் நான் அது சர்வரோக நிவாரணி என இட ஒதுக்கீட்டை எப்போது சொல்ல்வவே இல்லையே .

இடஒதுக்கீட்டை நிறுத்திவிட்டால் அவன் ஒடுக்காமல் இருப்பானா என நான் கேட்டதற்கு இடஒதுகீட்டை அதுக்குத்தான் கொடுக்கிறீங்களான்னு திருப்பி கேட்டு இயங்கியல் முறையில் அமையாத ஒரு விவாதமாக ஆக்கிடிட்டீர்.

சாதி ஒடுக்குதல் என்பது பார்பனிய சித்தாந்தம் தந்த சாபம் என்றால்
சாதியை உருவாக்கிய கருத்தியலின் மேல் தாக்குதல் தொடங்கனும் என்ற
என் கருத்தை நீங்கள் உள்வாங்கி கொள்ள சொன்னது அது .

அதை விடுத்து . அனைத்தையும் எதிர்ப்போம் என தனிமை பட்டு கொள்கிற்து ம க இ க .

வர்க்க போராட்டத்தையும் சமூக போராடத்தையும் ஒரு சேர முன்னெடுகிறோம் என சொல்லு நேரா போய் பள்ளத்தில் விழுகிறீர்கள் .

said...

அசுரன் மற்றும் குழலி ஆகியோருக்கு

இவ்வகைக் குழப்பங்களுக்குத் தீர்வாகத் தான் பெரியார் அன்றே சாதிவாரி இடஒதுக்கீடு கோரிப் போராடினார். ஓவ்வொரு சாதிக்கும் அவரவர் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு உரிய சதவீதத்தில் இடஒதுக்கீடு அனைத்து சாதிகளுக்கும் தனித்தனியாக வழங்க வேண்டும் என்பது தான் பெரியாரின் கோரிக்கை. ஆனைமுத்து அவர்கள் கூட இடஒதுக்குடு குறித்த பயிற்சி வகுப்புக்களில் அதைத்தான் சொல்லி வருகிறார்.
ஆதை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் முதலில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். விடுதலை பெற்ற இந்தியாவில் இதுவரை அப்படிக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அதுதான் சிக்கல்.

பெரியார் தி.க சார்பில் நடந்த இரட்டைக்குவளை ஒழிப்புப் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு விரட்டியடிக்கப்பட்ட தோழர்களில் நானும் ஒருவன். அதே ஒட்டன்சத்திரம் பகுதியில் கப்பல்பட்டி எனற் ஊரில் பறையர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நடத்தும் டீக்கடையில் கவுண்டர்களுக்கு சாதா டம்ளரும், தாழ்த்தப்பட்டோருக்கு சில்வர் டம்ளரும் கொடுக்கப்பட்டது. இதனால் அண்மையில் அங்கு சாதிக்கலவரம் நடந்தது.

பழனி நெய்க்காரபட்டி அருகே ஐந்துமருகால் காலனியில் பறையர் சமூகத்தைத் சேர்ந்த ஒருவர் 60 பறையர் குடும்பங்களின் பட்டாக்களை ஏமாற்றி அபகரித்துக்கொண்டு 20 ஆண்டுகளாக அங்கு வசித்து வந்த 60 பறையர் குடும்பங்களையும் விரட்டிவிட்டார். பட்டா கேட்கச் சென்றவர்கள் மீது கொலைமுயற்சி வழக்குப் போட்டு காவல்துறை மூலம் அடித்து ஜட்டியுடன் ஊர்வலமாக இழுத்துச் சென்றார். பெ.தி.க இதையும் கண்டித்து களமிறங்கியுள்ளது.

பழனி நகரிலும் சுற்றியுள்ள கிராமங்களிலும் பள்ளர்கள் சாதி வெறியுடன் பறையர்களைத் தாக்குவதும், பறையர்களின் சொத்துக்களை சேதப்படுத்துவதும், பறையர் அதிகமாக உள்ள பகுதிகளில் பள்ளர்களின் சொத்துக்கள் சூறையாடப்படுவதும் அடிக்கடி நடக்கிறது.

பள்ளர்களுக்குள்ளேயே உட்சாதிப்பிரிவுகளுக்குள் பெண் கொடுப்பது- எடுப்பது மிகப்பெரிய குற்றமாக இன்றும் நடைமுறையில் உள்ளது. உட்சாதி மறுப்புத்திறுமணங்களை பள்ளர்கள் அனுமதிப்பதில்லை. அதேபோல பறையர்கள் நடத்தும் டீக்கடைகளிலேயே சக்கிலியர்களுக்கு தனி டம்ளர் தரும் இழிநிலையும் உள்ளது.

மேலவளவு பகுதிகளிலேயே, டே கள்ளா வாடா, நீ செத்தா பொணம், நான செத்தா பணம் என்று சொல்லி மிரட்டும் தாழ்த்தப்பட்டோரும் உண்டு.

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் அருகே செட்டியபட்டி கிராமத்தில் டீக்கடையில் சக்கிலியர்கள் சிகரெட்டைப் பற்றவைத்து ஊர்க் கவுண்டர் முகத்திலேயே ஊதிவிடுவதை இன்றும் பார்க்கலாம்.

இவர்களுக்கெல்லாம் இடஒதுக்கீட்டை எடுத்திடலாமா?

சாதிவெறி சக்கிலியர் உட்பட அனைத்து சாதிகளிடமும் உள்ளது. சாதிவெறி உள்ளவனுக்கெல்லாம் இடஒதுக்கீடு கூடாது என்றால் யாருக்கும் இடஒதுக்கீடு தரக்கூடாது என்பதுதான் நியாயம். அந்த நியாயம் பார்ப்பள ஆதிக்கத்துக்குத் தானே வழிகோலும்?

ஆங்கிலேயே அரசாங்கம் அகில இந்திய அளவில் கொடுத்திருந்த இடஒதுக்கீட்டை விடுதலை பெற்ற இந்தியாவில் பார்ப்பனர்கள் ஒழித்துவிட்டார்கள். இன்றும் மத்திய அரசுப் பணிகள் மற்றும் வடமாநில மாநில அரசுப்பணிகளில் தாழ்த்தப்பட்டோரைவிட மிகக் குறைவான அளவிலேயே பிற்படுத்தப்பட்டோரின் பங்கெடுத்துள்ளனர். உங்களது பார்வையில் ஆதிக்கச் சாதிகளான வடமாநில பிற்படுத்தப்பட்டோருக்கு இன்னும் அங்கு இடஒதுக்கீடு 1 சதம் கூட வழங்கப்படவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். சமூகத்தில் படிப்பதற்கு உரிய வாய்ப்பு தாழ்த்தப்பட்டவர்களை விட பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கொஞ்சம் அதிகம். ஆனால் அப்படி படிக்கும் பிற்படுத்தப்பட்டவர்கள் இடஒதுக்கீடு இல்லாததால் பெரும் பதவிகளுக்கு வரமுடிவதில்லை. இயல்பாகவே தாழ்த்தப்பட்டோரும் வரமுடியவில்லை. எனவே காலிப்பணியிடங்கள் உருவாகிறது. அதை அப்படியே பார்ப்பான் அனுபவிக்கிறான்.

பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லாமல் நடக்கிறது. உயர்கல்விநிறுவனங்களில் 27 சத பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீடு வேண்டாம் என பார்ப்பனர்கள் அலறுவது இதற்காகத் தான். தம்மோடு போட்டியிட வாய்ப்புள்ள பிற்படுத்தப்பட்டவனுக்கு இடஒதுக்கீடு வந்தால் தமக்கு ஆபத்து என அலறுகிறான். ம.க.இ.க புரிந்துகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. தோழர் அசுரன் அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

சாதிவாரி இடஒதுக்கீடு பெறப் போராடுவோம். அதே சமயம் அனைத்து சாதியினரின் சாதிவெறிக்கும் எதிராகப் போராடுவோம். தாழ்த்தப்பட்டோர் இயக்கங்களே சாதி ஒழிப்புக்குப் பாடுபடாமல் சாதியை நிலைநிறுத்தும் சாதிச்சண்டைகளை உருவாக்கி வரும் வேளையில் நம் போன்ற முற்போக்கு சக்திகளாவது சாதி ஒழிப்பு நோக்கில் சிந்திப்போம், கணினியில் சண்டை போடுவது விட்டுவிட்டு, கடலூரிலும், மயிலாடுதுறையிலும் அவரவர் பகுதியில் சாதிவெறியர்களை எதிர்த்துக் களமிறங்குவோம். கொஞ்சமாவது செயல்படுவோம். தமிழ்நாடு முழுதும் ஆகஸ்ட் 15 அன்று பெ.தி.க சார்பில் இரட்டைக்குவளை, இரட்டை இருக்கை உடைப்புப் போராட்டம் நடக்க உள்ளது. உங்களுக்குத் தெரிந்த ஊர்களில் இக்கொடுமை நடந்துகொண்டிருந்தால் தகவல் கொடுங்கள். இயக்கங்கடந்து கொடுமைகளை உடைக்க இணைவோம். நன்றி.
-அதி அசுரன்

Related Posts with Thumbnails