TerrorisminFocus

Wednesday, July 18, 2007

சுஜாதா என்ற சில்லறை பொறுக்கி!

ண்டை முழுக்க அறிவு பொங்கி காது வழியாக வழிந்து பாரத் எலெக்றானிக்ஸ் நிறுவனத்தின் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இந்திய நிறுவனமான அதை இண்டெல் போன்ற ஜூஜூபி கம்பெனிகளுடன் மோத விட்ட ரங்கராஜன் எனும் திருநாமத்தை (அது யூ வா ஒய்யா என்பது ஆய்வுக்குரியது) உடைய சுஜாதா எனும் மாபெரும் புத்திசாலி சிவாஜி படத்தில் எழுதி இருக்கும் வஜனம்:

ரஜினிகாந்த்திற்க்கு எதிர் பாத்திரமான வில்லன் ஆதி ஸ்டைலாக ரஜினியை
நோக்கி சொல்கிறார் "டேய்! நான் ஆதி..ய்ய்ய்ய்" என்று. உடனே உடனிருக்கும் நடிகர் விவேக்கோ "போடா..." என அடுத்து வாயைத் திறக்கும் முன் ரஜினி அவரின் வாயைப் பொத்தி விடுகிறார்.

உடனே "போடா கபோதின்னு சொல்ல வந்தேன்ப்பா" என்கிறார் விவேக்.

*********************

சுஜாதா எனும் சிரீரங்கம் ரங்கராஜன் எனும் விஞ்ஞானியைப் பாராட்டுவோம் வாரீர்!!



வயசாயிருச்சின்னா புத்தி மங்கிப் போயிரும் என்று சொல்வார்கள். அது போன்று சொல்வது தவறு என்று சுஜாதா நிரூபிக்கிறார். வயசான பிற்பாடுதான் இவர் புத்தி மழுங்கி இப்படி எழுதுகிறார் என்று யாரேனும் எண்ணினால் அதை பொய்யென்று சொல்லி நாங்கெல்லாம் எழுதத் துவங்கிய காலத்தில் இருந்தே வக்கிரமாக எழுதிவருகிறோம் என்கிறார். அதுவும் குறிப்பாக வெகு சனங்களின் பொதுப் புத்தியில் இருக்கும் கசடுகளை ஊக்குவித்து வியாபாரம் செய்பவர்களில் இது போன்ற கழிசடைகள் வெகு திறமையானவர்களாக இருக்கிறார்கள். ஆணாதிக்கம் என்பது இயல்பாக நமது ஒவ்வொரு நடவடிக்கைகளிலும், சொற்களிலும் வெளிபடுகிறது. இன்றைக்கு பெண்களின் சம உரிமை குறித்து பேசும் யுகத்தில் இருக்கும் நாம் ஆணாதிக்க வக்கிரங்களை நமது நடைமுறையிலிருந்து நீக்குவதே சரியாக இருக்கும். அல்லது குறைந்த பட்சம் பொதுவில் நிலவுகின்ற ஆணாதிக்க
வக்கிரங்களை ஊக்குவிப்பதோ அல்லது அது நியாயமானது, அதுதான் பொதுவாக நிலவும் பண்பாடு என்று சொல்வதோ போன்ற சீர்குலைவு நடவடிக்கைகளாவது நிறுத்திக் கொள்வதே சரி.

சுஜாதாவோ தமது கல்லாவை நிரப்பிக் கொள்வதற்க்கு பொதுப் புத்தியில் படிந்த இந்த பலஹீனங்களை பயன்படுத்திக் கொள்கிறார். இவரின் கழிசடைத்தனம் கொஞ்சம் நாகரிகமான கழிசடைத்தனமாக இருப்பது இன்னும் வீரியமான சமூக விரோத சக்தியாக இவரை மாற்றி விடுகிறது. வாரமலர் கிசு கிசு போன்ற படித்த நடுத்தர வர்க்கம் அருவெறுப்போடு ஒதுக்கும் தரத்திலில்லாமல் கொஞ்சம் உயர்ந்த ப்ளேபாய் தரத்தில் எழுதுவதற்க்காக மட்டுமே இவர் போன்றவர்களுக்கு இலக்கிய வாசிப்பனுபவங்கள் உதவுகின்றன. இது தவிர்த்து சில மேட்டுக் குடி தடித்தனங்களை நியாயப்படுத்தும் தர்க்கங்களையும் வெகு நைச்சியாக தமது
எழுத்தின் ஊடாக வாசகனின் மூளைக்குள் செலுத்தும் திறமைக்காகவும் இவர்களின் இலக்கிய வாசிப்பனுபவம் கை கொடுக்கிறது.


இவர் பெண்களை இழிவுபடுத்தி எழுதுவதற்கு இவரது கணேஷ் வசந்த்
கதாபாத்திரங்களே சாட்சி. தண்ணீர் கொட்டிய சேலையுடன் கண்ணீர் சிந்தி
விம்மி விம்மி விசனப்படும் அபலை பெண்ணை எப்படி ரசிப்பது என்று இவரது வசந்த் நமக்கு சொல்லித் தருகிறார். இது ஒரு சாம்பிள் மட்டுமே. படிக்கும் வாசகனுக்குள் ஜேம்ஸ்பாண்டுகளும், ஆங்கிலப் பட டேம்செல் இன்
டிஸ்டெரஸ் (Damsel in Distress) எபெகக்டும் தமிழ் மொழியிலேயே கிடைத்து
விடுகிறது. இழிவான சிந்தனைவயப்பட்டோமே என்ற குற்றவுணர்வுக்கு ஆட்படும் தேவையும் இல்லாமல் இவரது எழுத்து நடை செய்து விடுகிறது.

இவரது வக்கிரத்திற்க்கு கீழே இன்னொரு சான்று உள்ளது படித்து பாருங்கள்:

விக்ரம் படம் வெளிவருவதற்கு முன் அதைக் குமுதம் இதழில் தொடராக
எழுதிவந்தார் சுஜாதா. அதில் கணேஷ் இன்னொரு பெண்ணிடம் பேசும் வசனம்.

"ஆணும் பெண்ணும் சமமெல்லாம் கிடையாது. நாங்களெல்லாம் நின்னுக்கிட்டே சுவரில் மூத்திரம் அடிப்போம்"

இந்த மூத்திர வசனத்திற்கு சுஜாதாவிற்கு எந்த இடத்தில் டைனமட் வைப்பது என்று பெண்கள்தான் முடிவுசெய்யவேண்டும் என்று கோபப்பட்டு எழுதுகிறார் சுகுணா திவாகர் என்ற எழுத்தாளர். இங்கு உண்மையிலேயே வக்கிரமாக எழுதிய சுஜாதாவின் எழுத்து படித்த மேல்தட்டு ஆட்களால் புகழ்ப்படுவதும் அதிலிருந்த வக்கிரத்தை கடுமையாக விமர்சித்து எழுதிய சுகுணா திவாகரின் எழுத்து சீ... இப்படி மோசமாக எழுதுறானே என்று தூற்றப்படுவதற்கும் அடிப்படையாக இருக்கும் உளவியல் என்னவென்பதை அவரவரே பரீசீலித்துக் கொள்ளட்டும். எனக்கென்னவோ சுகுணா திவாகர் இன்னும் மோசமாக திட்டி எழுதியிருந்தால் கூட சரியே என்று படுகிறது.

இவரது பிற சேவைகள் என்ன என்று பார்த்தால் பாய்ஸ் படம் இவரது
வக்கிரங்கள் எல்லாவற்றையும் தொகுத்து கொடுத்த படமாக நிற்கிறது. அந்த
படத்தில் பொடா சட்டம் பற்றி எழுதி கிழித்திருப்பார் சுஜாதா. அதான் அவர்
அதிமேதாவியாயிற்றே என்று ரசிக சிஸ்ய கோடிகளும் புழங்காகிதப்பட்டிருப்பார்கள். இதே சுஜாதா நக்கீரன் கோபால் பொடா
சட்டத்தில் கைது செய்யப்பட்ட பொழுது அதனை எதிர்த்து பத்திரிகையாளர்கள் நடத்திய போராட்டத்தின் போது பொடா குறித்து நேக்கு எதுவும் தெரியாது என்று கூறி பேச மறுத்த பொழுது அவரது அறிவுப்புலமை தொலைந்து போன இடம் தெரியவில்லை. அது அறிவு நாணயமற்றவர்களின் காரியப் பூர்வமான கள்ளமௌனம் ஆகும்.

இது தவிர்த்து அதே பாய்ஸ் படத்தில் விபச்சாரியுடன் சல்லாபம் செய்யும்
காட்சியில் வரும் வசனங்கள், பெண்ணின் மார்புகளை பெரிதாக்கும் வித்தைகளை சொல்லும் வசனங்கள் என்று கிளை பரப்பி சென்றது அவரது வக்கிரம். ரொம்ப சோசியலாக பழகுகிறார்களாம் இன்றைய மாணவர்கள். நமக்கு தெரிந்து பள்ளி கல்லூரிகளில் பழகும் மாணவ மாணவிகள் எல்லாம் பொதுவாக பேசி கலந்து கொள்வதுதான் நடக்கிறதே அன்றி இவர் சொல்வது போல எப்போ பார்த்தாலும் செக்ஸ் சம்பந்தப்பட்ட விசயங்களை மட்டுமே பகிர்ந்து கொண்டிருப்பதில்லை. ஆயினும் அது போன்ற அடி மனது குறு குறுப்புகளை குற்றவுணர்வின்றி செயல்படுத்த தார்மீக பலம் கொடுக்கும் வேலையை தனது எழுத்து சேவையின் மூலம் செய்கிறார். இயல்பான பால் கடந்த நட்புணர்வு என்று ஏதேனும் இருந்தால் கூட அதனை இயல்பற்றதாக மாற்றி இழிவுபடுத்த தேவையான கருத்தியல் களைகளை விதைக்கும் வேலையை இவரது எழுத்துக்கள் உறுதிப்படுத்துகீறது. இதில் Easy Money வேறு. இந்த இழவைத்தான் அறிவு ஜீவித்தனம் என்று சொல்கிறார்கள் பல நடுத்தர வர்க்க வாசகர்கள்.

இவரது அறிவுஜீவித்தனத்தின் இன்னொரு முக்கிய அம்சம் அடிக்கடி புரியாத
ஆங்கில, தமிழ் மொழிபெயர்ப்பு வார்த்தைகளை போட்டு எழுதும் இவரது பாணி. இதில் மயங்கித்தான் நடுத்தர வர்க்க வாசகர்கள் இவரைப் போன்ற
அரைகுறைகளின் வார்த்தைகளிலிருந்து தமது உலக அறிவை வளர்த்துக் கொள்ள முயல்கீறார்கள். இப்படி ஒரு பகுத்தறிவற்ற அறியாமையின்பாற்ப்பட்ட வாசகன் - எழுத்தாளன் உறவினுடைய ஆபத்தின் ஒரு அம்சம்தான் அவரது சமூக விரோத, ஆணாதிக்கம் உள்ளிட்ட பிற வக்கிரமான எழுத்துகள் வாசகனிடம் ஏற்படுத்தும் விளைவு.

சரி வேறு என்ன விளைவுகள் உள்ளன? அவரை அரைகுறை என்று விமர்சனம் செய்யும் போது அவரது அரைகுறை புலமை வாசகனிடம் கொண்டு செல்லும் தவறான வரலாற்று, அறிவியல் விசயங்களை முன்னிட்டே அவ்வாறு விமர்சிக்கிறோம். ஏனேனில் வெகு சன பத்திரிக்கைகள் இவர் சொல்லும் அரைகுறைகளுக்கு வலுவான மறுப்புகள் அதே வெகு சன பத்திரிக்கைகளில் பிரசூரமாவதில்லை. இவரது அரைகுறை அறிவின் விளைவுக்கு ஒரு எடுத்துக்காட்டு சமீபத்தில் மரபணு ஆராய்ச்சி என்பது ஆரியர்கள் என்ற கருத்தாக்கத்தை இல்லையென்றாக்கிவிட்டது என்று ஆனந்த விகடனில் எழுதிய புரளி ஆகும்.

உண்மை என்னவெனில் ஆரியர் என்ற இனக் குழு இந்தியாவிற்குள் வந்ததில் வரலாற்று, தொல்லியல் ஆய்வாளர்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அவர்களிடையே உள்ள கருத்து வேறுபாடு எல்லாம் ஆரியருக்கு முன்பு
இங்கிருந்த நாகரிகம் திராவிட நாகரிகமா என்பதிலும், அந்த நாகரிகத்தை
ஆரியர்கள் அழித்தனரா அல்லது அந்த நாகரிகத்துடன் கலந்து ஒன்றாகினரா
என்பதிலுமே கருத்து வேறுபாடு. அதாவது அவர்களின் கருத்து வேறுபாடு
எல்லாம் திராவிடம் குறித்த விசயங்களில்தானேயொழிய ஆரியர் குறித்த
விசயத்தில் அல்ல.

அப்படியிருக்கையில் பொதுவாக மனித சமூகத்தின் பரிணாம வளர்ச்சி குறித்த விசயங்களை வெளிக் கொணர செய்யப்பட்ட ஆய்வுகளை இது போன்றவர்கள் தமது சொந்த அரசியல் தேவைக்காக திரித்து பயன்படுத்தும் பொழுதுதான் இந்த வாசக- எழுத்தாளன் உறவின் அபாயம் மிக பெரிதாக உருவெடுக்கீறது.

இது போல அறிவியலை திரித்து வரலாற்றை சிதைத்து அரசியல் செய்யும்
அமைப்புகள் எதுவென்று பார்த்தால் இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகளும்,
அதன் ஆதரவாளர்களுமே இதனை செய்கின்றனர். அப்படியென்றால் சுஜாதா ஒரு இந்துத்துவ ஆதராவாளரா என்று கேள்வி எழுப்பினால் பதில் ஆம் என்றே கிடைக்கிறது. அது மட்டுமல்ல அவரது இந்துத்துவா ஆதரவிற்கு பின்னணியில் அவரது சொந்த சாதி பெருமை நிற்பதும் சாதாரண வாசகனால் சீரணிக்க இயலாத பேருண்மையாக நிற்க்கிறது.

இவர் பார்ப்பன சாதி சங்க மாநாட்டில் கலந்து கொண்டு பார்ப்பனர்கள் தமது
உரிமைக்காக போராட வேண்டும் என்று ஆனந்த விகடன் பத்திரிக்கையிலேயே வெளிப்படையாக தனது சாதி வெறியை எழுதினார். பார்ப்பனர்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு நாம் சாதிரீதியாக அணி திரள வேண்டும் என்று சாதி சங்க தலைவனைப் போல பேசினார் இந்த எழுத்தாளர். இவர்தான் தமிழகத்து நடுத்தர வர்க்க வாசகர்களுக்கு ஆதர்சமான எழுத்தாளர்.

இவரது சாதி வெறி இன்னும் வக்கிரமாக வெளிப்பட்டது அயோத்தி மடம் என்ற பெயரில் பார்ப்பன சாதியினர் தமிழகத்தில் மிகக் கோடுரமாக ஒடுக்கப்படுவதாக எழுதிய கதை. இந்த கதையை போஸ்டமார்ட்டம் செய்து அதில் உள்ள இவரது சாதி கொழுப்பெடுத்த புரளிகளை அம்பலப்படுத்தி பலரும் விமர்சித்தனர். அவையெல்லாம் சம்பந்தப்பட்ட வெகு சன பத்திரிக்கையில் வரவில்லை.

இதுதான் சுஜாதா - தனது சொந்த வியாபாரத் தேவைக்காக பொது மக்களின்
பலஹீனங்களை ஹைடெக்காக எழுதி சுரண்டுவதுடன் அல்லாமல், தனது சொந்த அரசியலுக்காக பொய்களையும், புரளிகளையும் கூட கடை பரப்புகிறவாராக இருக்கிறார்.

இவரது ஆணாதிக்கக் கண்ணோட்டத்துடன், நிறவெறியும், சாதி வெறியும்
சேர்ந்தால் என்னவாக வெளிப்படும்?

சொந்த சாதிவெறிக் கொழுப்பெடுத்த சுஜாதா தனது இனவெறியை 'சிவாஜி'
படத்தில் சாலமன் பாப்பையா எனும் பட்டிமன்ற வியாபாரி மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். கன்னங்கரேல் எனும் நிறம் பூசிய தனது இரண்டு பெண்களிடமும் ரஜினியை 'பழகிப்பாருங்கள்' எனச் சொல்லும் தந்தையாக வருகிறார் சாலமன் பாப்பையா. இப்பெண்களின் கறுப்பைக் கண்டு ஓடிவிடுகிறார் ரஜினி. தமிழர்களின் இயல்பான நிறமான கறுப்பை நிற ரீதியில் இழிவுபடுத்தி இருக்கும் சுஜாதா இப்பெண்களுக்கு வைத்திருக்கும் பெயரோ அங்கவை, சங்கவை. பாரியின் மகளிர் பெயரைச் சூடிய இவரின் புத்திக்குள் இருப்பது என்ன? தமிழைப் பழி தீர்க்கும் புத்திதானே!

தமிழுக்கும், பெண் குலத்துக்கும் இவ்வாறு இலக்கியத் தொண்டு செய்து
கொண்டிருக்கும் - இரண்டு முறை இதய வலிப்புக்கு ஆட்பட்டிருக்கும் சுஜாதா எனும் எழுத்தாளரை எல்லாரும் பாராட்டி விட வேண்டும் எனும் ஆர்வத்தில்
நாம் உள்ளோம்.

செருப்போ விளக்குமாறோ ... அன்பர்களே அது உங்கள் சாய்ஸ்...

பாராட்டத் திரள வேண்டிய முகவரி:

சுஜாதா என்ற ரங்கராஜன்,
#10 ஜஸ்டிஸ் சுந்தரம் சாலை,
2, முதல் தளம், மயிலாப்பூர்,
சென்னை - 4



மின்னஞ்சலில் திட்டுவோர்கள் வசதிக்காக:

writersujatha@hotmail.com

பாராட்ட இயலாதவர்கள் என்ன செய்யலாம்?

இந்த எலக்கிய யாவாரியின் பெருமையை தமிழ் நாடெங்கும் பரப்பிக்கொண்டிருக்கும் ஒரு கவிப்பேரரசருக்கு தங்கள் பாராட்டை அனுப்பலாம்.

கவிப்பேரரசர் பெயர்: மனுஷ்யபுத்திரன்

முகவரி: uyirmmai@gmail.com

உயிர்மை,
11/29 சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம்
சென்னை 18
Phone(044) 2499 3448
Mobile: (0) 98402 71561

கட்டுரைக்கான கரு பின்னூட்டத்தில் புல்டோசர்



எதிர்வினைகளுக்கு ஒரு நல்ல எதிர்வினை:
சுஜாதாவிற்கு செருப்படி தேவையா? http/paalveli.blogspot.com/2007/07/blog-post_22.html

74 பின்னூட்டங்கள்:

said...

எவ்வளவுதான் சொன்னாலும் அவருக்கு உறைக்காது

said...

காசுக்காக வசனம் எழுதுபவனை கொள்கை குன்றாக ஏன் நினைக்கனும்

மிக நல்ல கதை எழுதிய எழுத்தாளர்களை , எத்தனை பேரை இந்த கேடுகெட்ட சமூகம் வாழ வைத்தது சொல்லுங்கள் .

எழுத்தின் மூலம் சுரண்டல் என்று அடிக்கப்போனால் .

ஆதரிக்கப்படாத எழுத்தாளனுக்கும் அவனது குடும்பத்துக்கும் கஞ்சி ஊத்த தயாரா ?

ஏன் எழுத்தாளர்கள் சினிமாவுக்கு எழுதபோகிறார்கள் .

மூளையை கசக்கி எழுதும் ஒரு படைப்புக்கு சமூக அங்கீகாரமோ , காசோ புகழோ கிடைப்பதை விட

காசுக்காக திரையில் ஆடும் சிலுக்குக்கு
எல்லாம் அதிகம் கிடைப்பது யார் குற்றம் , மக்கள் மக்கள் என நீங்கள் தூக்கி வைக்கும் மக்களின் ரசனை மட்டத்தை உயர்த்திவிடுங்கள் உங்கள் கலை இலக்கியத்தின் மூலம் பிறகு
செருப்பை கழட்டி படைப்பாளிகளை அடிக்க போகலாம் .

said...

சுஜாதா எழுதுவதை எல்லாம் நீங்கள் உயர்தர அங்கதமென்றே எடுத்து கொள்ள வேண்டும். சுஜாதா தமிழர்களை நிறத்தை வைத்து இழிவு படுத்தாமல் இருந்த்தால்தான் ஆச்சர்யப்பட வேண்டும். சூத்திரன் எல்லாம் சோம்பேறிகள், நாகரீகமற்றவர்கள் என்று சொன்ன உழைப்பாளி மேதை அல்லவா அவர்.
*

சாலமன் பாப்பையா இப்படி தமிழை, தமிழர் நிறத்தை இழிவுபடுத்தும் காட்சியில் நடித்ததற்கு பதிலாக அமெரிக்கன் கல்லூரி வாசலில் துண்டை விரித்து கை ஏந்தி இரூந்தாலோ அல்லது குறள் சொல்லி கொடுத்தாலே அந்த படத்திற்கு பெற்ற ஊதியத்தைவிட அதிகப்பணம் கிடைத்திரூக்கும். படித்த, பல்வேறு மாணவர்களுக்கு படிப்பறிவித்த பேராசிரியனைக்கூட சினிமா மோகம் எத்தனை கீழ்த்தரமான காரியத்தையும் செய்ய வைக்கத்துணிகிறது என்பதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்

said...

ஒவ்வொரு வரியும் அந்த சொறிநாய செருப்பால அடிக்கிற மாதிரி இருக்கு...

வாழ்த்துக்கள் தோழர்...

தோழமையுடன்
ஸ்டாலின்

said...

சிலுக்கின் உடல் கவர்ச்சியை விற்றதும் முதாலளித்துவம்தான்

இது போன்ற அற்ப்பதனமான கவர்ச்சிகளில் உழைக்கும் மக்களை இருத்தி வைக்க வேண்டிய தேவையும் முதலாளித்துவத்துக்குத்தான் இருக்கிறது

முதலாளித்துவத்தை செருப்பால் அடிக்க நம்ம பூச்சாண்டி முன் வருவாரா?

இந்த பொறுக்கியை படைப்பாளீஈஈஈ என்று வேறு விளித்து தன் சுய சாதி அரிப்பையும்,பற்றையும் தானே அம்பலப்படுத்திக்கொண்டுவிட்டார் பாவம் பூச்சாண்டி அண்ணன்


ஸ்டாலின் குரு

said...

//இது போன்ற அற்ப்பதனமான கவர்ச்சிகளில் உழைக்கும் மக்களை இருத்தி வைக்க வேண்டிய தேவையும் முதலாளித்துவத்துக்குத்தான் இருக்கிறது//

முதலாளித்துவத்துக்கு இருக்குது இல்லை என்பதல்ல கேள்வி குரு.

எத்தனை பட்டிமன்றங்களில் பேசினார் பாப்பையா அப்போ மக்கள் மத்தியில் பிரபலமானதை விட சிவாஜி படத்தில் அவர் எல்லாராலும் அறியபட்டால்
அதன் குற்றம் யாருடையது .

ஏன் பாட்டாளி வர்க்கம் அந்த ஊடகத்தை குறை சொல்வதை விட்டுட்டு ஒரு படம் எடுங்க ,

ம க இ க படம் எடுத்து ஊத்திகிச்சு
வட்டி வட்டி என்கிற மாதிரி ஒரே தொணியில் அமைந்த பாடல் .

ஒரு ஊடகத்தில் நுழைந்து பெருமை தேட முயல்பவர்களை எல்லாம் செருப்பால அடிக்கனும்னா வருசையா
நிக்க வைச்சு கண்ணதாசனில் ஆரம்பித்து அனைவரையும் அடிக்கனும் .

ஏன் இளையராசா சிம்பொனி அமைச்சார் என புகழ்ந்து தள்ளுகிரீர்களே அவர் மெட்டமைத்த கேவலமான பாட்டுக்காக அவரை செருப்பால அடிக்கனும் .

எழுதிகொடுக்கும் வசனத்துக்கு சுஜாதா பொறுப்பு , பேசிய வசனத்துக்கு ரஜினி பொறுப்பு அப்ப படமெடுத்தவன் இருக்கானே அவன் எதுக்கு பொறுப்பு
அதை பார்த்து கைதட்டும் ரசிக கோடிகளுக்கு என்ன பொறுப்பு !

தனி ஒருத்தனை மட்டும் ஏன் தாக்கனும்
குடுமி வைத்த பார்பான் என்றால் பாரதிமுதல் சுஜாதாவரை தாக்கனும் என்ற உள் அரிப்பு நல்லா தெரியுது

ஒரு படத்தை கூட வர்க்க கண்ணோட்டம் , சாதிகண்டோட்டம் இதெல்லாம் கொண்டு பார்க்கும் நீங்கள் இதைத்தான் செய்வீர்கள் .

மனுசன கிறுக்கா அழைய விடாதீங்கப்பா ?

உங்களை கேட்டா எவனும் படத்துக்கு போக கூடாது , எல்லா பயலும் ஒரே இடத்தில் உக்கார்ந்து பஜனை பண்ணனும்பீங்க வேறென்னா ?

பார்பன துவேசம் இது தவிர சுஜாத எழுதிய சயின்ஸ் பிக்சன் நாவல்களை படித்து இருக்கிறீர்களா ?

5 ரூபாய்க்கு கிடைக்கும் அரைவேக்காட்டு கம்யூனிஸ்டு புத்தகங்களை ஒரு மத நூல்போலவே தொல ஆரம்பிச்சுடுறீங்க .

எல்லாம் தப்பு
பாரதி ,சுஜாதா,காந்தி அப்துல்கலாம் ,விவேகானந்தர், ராமகிருஸ்ணர் இன்னும் எத்தனை தலைவர்கள் உண்டொ அத்தனை பேரும் தப்பான ஆளுக .

மூளை சலவை செய்யும் வேலையை திறம்பட செய்யுங்கள் இவர்களை சரியா படிக்காத பாமர மக்களிடம் .

புரட்சி என வாய்கிழிய கத்துங்கள் .

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது






முதலாளித்துவத்தை செருப்பால் அடிக்க நம்ம பூச்சாண்டி முன் வருவாரா?

இந்த பொறுக்கியை படைப்பாளீஈஈஈ என்று வேறு விளித்து தன் சுய சாதி அரிப்பையும்,பற்றையும் தானே அம்பலப்படுத்திக்கொண்டுவிட்டார் பாவம் பூச்சாண்டி அண்ணன்

said...

மேலும் சுஜாதா படத்துக்கு எழுதிய வசனத்தை எழுதி பதிவு போடாமா

அவரது நாவல்களில் அவர் எழுத்தாளராக அறிய பட்ட விடயங்களில் உள்ள தவறுகளை பட்டியலிடுங்கள் .

ஒரு படம் பார்த்து அதன் வசனங்களுக்காக வசனகர்த்தாவை திட்டுவதை விட இவன் இப்படித்தான் என நீங்கள் நீரூபிக்கனும்னா ?

உண்மையிலேயே !

நாவல்களில் இருந்து ஒரு விமர்சனபதிவு போடுங்கள்

அதை விட்டுட்டு என்னா சின்ன புள்ளதனமா இருக்கு ?

said...

நிறைய புரிதல் ஏற்ப்ட்டது...

அதிலும் அங்கவை சங்கவை என்று பெண்களை அசிங்கப்படுத்திய அந்த நாயை செருப்பு என்ன வெளக்குமாத்தால அடிக்கனும்...

இந்த பதிவை தேசிகன் என்ற ஒருவருக்கும் அனுப்புங்கள்...

said...

பார்ப்பனீய பேனா விபச்சாரியை நன்கு படம் பிடித்துள்ளீர்கள்.பாராட்டுக்கள்.இந்தத் திட்டமிட்ட பார்ப்பனீய விஷத்தைப் படித்த தமிழர்கள் உணர்ந்து சொறி நாய்போல் ஒதுக்க வேண்டும்.
ஸ்ரீரங்கத்து ரெங்கராஜ அய்யங்கார் புதுடில்லியிலிருந்தே திட்ட மிட்டு படித்தவர்களை மயக்கும் விபச்சார எழுத்தைக் கடைப் பிடித்து இப்போது திறந்த சாக்கடையாக ஆண்கள் மூத்திரம் அடிக்கும் அளவிற்கு வந்திருக்கிறது.தணிக்கை குழு பரிசு கூடக் கொடுக்கும்.
பார்ப்பனர்களிடம் ஒளிவு மறைவெல்லாம் கிடையாது.அசிங்கத்தி பிறந்து அசிங்கமே பேசி வாடி,போடி பெற்ற தாயிடமே பேசி வளர்வதுகள் பெண்களை விளையாட்டுக் கருவிகளாகத்தான் எண்ணி எழுதுவார்கள்.பெண்கள் காலில் இருப்பதைக் கழ்ட்டினால்தான் இது அடங்கும்.

said...

அசுரன்,

இப்படி எல்லாம் பேசி / எழுதித்தான் புரட்சி மலர வேண்டும் என்றால் அத்தகைய புரட்சி உருவாக்கப் போகிற சமூகத்தைக் குறித்து பயமாகத்தான் இருக்கிறது.

ஒருவரின் கருத்துக்கள், நடவடிக்கைகள் மீதான விமரிசனங்களைச் சொல்வதற்கு ஏதாவது வரைமுறைகள் இருக்கின்றனவா, அல்லது 'எவ்வளவு அதிர்ச்சி ஊட்ட முடியுமோ, எவ்வளவு அடாவடியாகப் பேச முடியுமோ அவ்வளவு கொட்டி விட வேண்டும்' என்பதுதான் வழிமுறையா!

ரஜினி காந்த், வீரமணி, ராமதாஸ், சுஜாதா என்று வரிசையாக நீங்கள் விமரிசிக்கும் நடவடிக்கைகள் சரியானதாக இருந்தாலும் அதன் வெளிப்பாடு அருவெறுக்கத்தக்கதாக இருக்கிறது.

கேட்டால் குறைந்த பட்ச வன்முறை என்று சொல்வீர்கள்.

இதுதான் மகஇகவின் வழி என்றால் அந்த இயக்கத்துக்கு எதிரிகள் வெளியிலிருந்து வர வேண்டாம் என்றுதான் படுகிறது.

அன்புடன்,

மா சிவகுமார்

said...

உடம்பைக் காட்டுவது மட்டும்தான் விபச்சாரம் என்று இல்லை. பேனா கொண்டு ஆதிக்க சாதியை வாழ்த்தி ஏழைச் சாதிகளை தாழ்த்தி எழுதுவதும் ஒருவகையான விபச்சாரமே.

சுஜாதா என்னும் அந்த பிராமின் நாயை செருப்பால் அடித்து தமிழ்நாட்டை விட்டு விறட்ட வேண்டும்.

தேசிகன் என்பவன் சுஜாதாவை வாழ்த்தி பதிவு எல்லாம் போடுகிறானாம். அவனை நான் பார்க்க நேரிட்டால் அவனையும் செருப்பால் அடிப்பேன்.

said...

Asuran,
You have claimed that the Aryan invasion is a proven historical fact. I guess it is still a controversy whether that happened in history.
Could you please provide some more information/proof on that. I am not asking you to publish the archeological proof yourself but atleast if you are giving links that suffice me.
I am writing this in a belief that you have the sincerity to your concepts, even though I am not admirer of your views.
Murali.

said...

கம்யூனிச பூச்சாண்டி,

//மிக நல்ல கதை எழுதிய எழுத்தாளர்களை , எத்தனை பேரை இந்த கேடுகெட்ட சமூகம் வாழ வைத்தது சொல்லுங்கள் .//

சுஜாதாக்கள் எழுதும் கதைகளால் "இந்த கேடுகெட்ட சமூகத்திற்கு" என்ன பயன் என்று சொல்ல முடியுமா? ரெக்கார்ட் டான்ஸ் ரிக்ஷ்சா ஓட்டியின் பொழுது போக்கு என்றால் சுஜாதாக்கள் எழுதும் கதைகள் ஒரு சிலருக்கு பொழுது போக்கு அவ்வளவே. சுஜாதாக்களின் கதையைப் படித்து எங்கும் சமூகப்புரட்சி நடந்து விடவில்லை. கேப்பமாரி நடிகனுக்கு இருக்கும் இரசிகர் மன்றத்திற்கும் சுஜாதாக்களின் வாசகர் வட்ட குழுக்களுக்கும் இரண்டு வித்தியாசங்கள்?

//காசுக்காக வசனம் எழுதுபவனை கொள்கை குன்றாக ஏன் நினைக்கனும் //

சரியான கேள்வி. காசு கொடுத்தால் "ஜிப்பை அவிழ்த்துப் போடும்" காட்சிக்கு வசனம் எழுதும் ஒரு வார்ததை வியாபாரியை கொள்கை குன்றாக எண்ணி கேள்வி கேட்ட அசுரனை என்ன செய்யலாம்?

//ஏன் எழுத்தாளர்கள் சினிமாவுக்கு எழுதபோகிறார்கள் . மூளையை கசக்கி எழுதும் ஒரு படைப்புக்கு சமூக அங்கீகாரமோ , காசோ புகழோ கிடைப்பதை விட காசுக்காக திரையில் ஆடும் சிலுக்குக்கு எல்லாம் அதிகம் கிடைப்பது யார் குற்றம்//

மூளையை கசக்கி இவர்கள் எழுதுவது பொழுது போக்கிற்காகத்தான். இவர்கள் யாரும் சமுதாய புரட்சிக்காக எழுதுவதோ அல்லது மனிதனின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற கருத்துப் புரட்சி செய்வதோ கிடையாது.
ஏன், இந்த தமிழக சுஜாதக்கள் ஒரு அருந்ததிராய் போல் சமூக போராட்டத்தில் ஈடுபட்டது உண்டா? எதற்கு சமுதாயம் இவர்களை சீந்த வேண்டும்? இந்த சுஜாதாக்கள் தரும் "சுவத்தில் ஒண்ணுக்கு அடிக்க முடியுமா?", "நான் ஆதி..நீ **" என்ற பொழுது போக்கு வசனங்களைவிட சிலுக்கின் பொழுது போக்கு ஆட்டம் சிறப்பானதே.


முத்துக்குமரன்,

//சாலமன் பாப்பையா இப்படி தமிழை, தமிழர் நிறத்தை இழிவுபடுத்தும் காட்சியில் நடித்ததற்கு பதிலாக அமெரிக்கன் கல்லூரி வாசலில் துண்டை விரித்து கை ஏந்தி இரூந்தாலோ அல்லது குறள் சொல்லி கொடுத்தாலே அந்த படத்திற்கு பெற்ற ஊதியத்தைவிட அதிகப்பணம் கிடைத்திரூக்கும். படித்த, பல்வேறு மாணவர்களுக்கு படிப்பறிவித்த பேராசிரியனைக்கூட சினிமா மோகம் எத்தனை கீழ்த்தரமான காரியத்தையும் செய்ய வைக்கத்துணிகிறது என்பதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்//

சாலமன் பாப்பையா மட்டும் அல்ல பல பேராசிரியர்கள் சினிமா என்று வரும் போது சுயத்தை காட்டி விடுகிறார்கள் அல்லது சுயத்தை இழந்து விடுகிறார்கள்.

அசுரன்,

உங்களின் சுஜாதாக்கள் மீதான விமர்சனங்களால் அவரின் இரசிகர்ள் மாறப்போவது இல்லை.கதை எழுதும் தொழிலில் உள்ளவர்களுக்கும் அல்லது ஆர்வம் உள்ளவர்களுக்கும் அவர் ஒரு ரோல் மாடல்.கதை எழுதுபவர்களிடம் என்ன எதிர்பார்க்கலாமோ அதை மட்டுமே எதிர்பார்க்க வேண்டும்.சமூக உணர்வ்வை எதிர்பார்ப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர். :-))))))

said...

//மண்டை முழுக்க அறிவு பொங்கி காது வழியாக வழிந்து பாரத் எலெக்றானிக்ஸ் நிறுவனத்தின் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இந்திய நிறுவனமான அதை இண்டெல் போன்ற ஜூஜூபி கம்பெனிகளுடன் மோத விட்ட ரங்கராஜன் எனும் திருநாமத்தை (அது யூ வா ஒய்யா என்பது ஆய்வுக்குரியது) உடைய சுஜாதா..//
உங்கள் பார்ப்பன வெறுப்புத்தான் இதில் தென்படுகிறது. கூடவே தேவையின்றி அந்த ஜாதியினரைப் பார்த்து நீங்கள் பொறாமைப்படுவதும் தெரிகிறது. தேவையற்ற வேலை. சுஜாதாவை இவ்வளவு திட்ட வேண்டிய அவசியம் என்ன? அதுவும் ஜாதியை வைத்து? இதுவும் ஜாதி வெறியே. மற்றவர்கள் ஜாதி வெறியர்கள் என்று குறிப்பிடும் முன்னார் உங்களைப் பற்றி யோசியுங்கள்.

சுஜாதா சிவாஜி படத்துக்கு வசனகர்த்தா. அவ்வளவே. எழுதித் தரச் சொன்னதை இயக்குனர் ஏற்கும் வண்ணம் எழுதித்க் தரவேண்டியதுதான் அவர் வேலை. நீங்கள் திட்ட வேண்டியது சங்கரைத்தான், அதாவது யாரையாவது திட்ட வேண்டும் என எண்ணினால்.

எவ்வளவோ கூற எண்ணுகிறேன். ஆனால் நீங்களும் சரி உங்கள் நண்பர் ராஜ வனஜும் சரி இவ்வளவு பார்ப்பன வெறுப்புடன் எழுதும்போது உங்களுடன் விவாதித்து என்ன ஆகப்போகிறது என்ற அலுப்புதான் மிஞ்சுகிறது.

கூடவே உங்கள் எண்ணங்களை குழப்பமான வாக்கியங்களில் வைக்கிறீர்கள். எளிமையாக எப்படி எழுத வேண்டும் என்பதையாவது சுஜாதாவிடம் கற்றுக் கொள்ளுங்கள்.

முத்துக்குமரன்:
//சூத்திரன் எல்லாம் சோம்பேறிகள், நாகரீகமற்றவர்கள் என்று சொன்ன உழைப்பாளி மேதை அல்லவா அவர்.//
எங்கு அவ்வாறு சொன்னார்?


அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

அசுரன் அண்ணே..
'அண்ணன் வந்தா தமிழ்நாடும்அமெரிக்கா' இந்த வரிய எழுதியது யாருங்க. ஏகாதிபத்திய அமெரிக்கா போலத்தான் தமிழ்நாடும் இருக்கணுமா?

இதையும் சேத்து கேளுங்க.

மத்தபடி நீங்க சுஜாதா வசனம் எழுதிய படங்கள் மட்டுமே பார்த்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன் இல்லைண்ணா இரட்டை அர்த்த வசனத்தை வைத்து பெயரும் புகழும் சம்பாதித்தவர் சுஜாதா மட்டுமல்ல எனப் புரிந்துகொள்ளலாம்.

பெருமைக்குரிய திரு சக-திராவிடர் பாக்யராஜின் படங்களும் அவரது சிஷ்யர்களின் படங்களும் முடிந்தால் ஏதேனும் லைப்ரரியில் வாங்கி போட்டுப் பாருங்க.

கலாச்சாரம் கெடுவதற்கு ஒரு தனிமனிதன் காரணமல்ல. இப்படியும் சொல்லலாம் இதுதான் சரியான கலாச்சாரம் எனச் சொல்ல 'அசுரன்' என்ன கடவுளா?

said...

///
Asuran,
You have claimed that the Aryan invasion is a proven historical fact. I guess it is still a controversy whether that happened in history.
Could you please provide some more information/proof on that. I am not asking you to publish the archeological proof yourself but atleast if you are giving links that suffice me.
I am writing this in a belief that you have the sincerity to your concepts, even though I am not admirer of your views.
Murali.///

Murali,

அவர்களே ஹாரப்பா பற்றிய எல்லா விவாதங்களையும் பதிவு செய்யும் அதிகாரப்பூர்வமான தளம் போன்ற ஒரு வலைத்தளம் எனது வலது பக்க பட்டியில் இணைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று விசாரியுங்க்ள் தேவையான தகவல் கிடைக்கும் :-))

மேலும் ஆர்ய இன்வேசன் என்பது நீருபிக்கப்பட்டது என்று எங்குமே நான் சொல்லவில்லையே. நான் குறிப்பிட்டது ஆரியர் என்ற இனக்குழு இந்தியாவிற்குள் சிந்து சமவெளி நாகரித்தின் இடைக்கட்டத்திலோ அல்லது இறுதிக் கட்டத்திலோ வந்தனர் என்பது நீருபிக்கப்பட்ட உண்மை என்பதையே.

அசுரன்

said...

கல்வெட்டு (எ) பலூன் மாமா,

//உங்களின் சுஜாதாக்கள் மீதான விமர்சனங்களால் அவரின் இரசிகர்ள் மாறப்போவது இல்லை.கதை எழுதும் தொழிலில் உள்ளவர்களுக்கும் அல்லது ஆர்வம் உள்ளவர்களுக்கும் அவர் ஒரு ரோல் மாடல்.கதை எழுதுபவர்களிடம் என்ன எதிர்பார்க்கலாமோ அதை மட்டுமே எதிர்பார்க்க வேண்டும்.சமூக உணர்வ்வை எதிர்பார்ப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர். :-)))))) //

அப்படி சொல்லிவிட முடியாது கல்வெட்டு :-)

குறைந்த பட்சம் சுஜாதாவை விமர்சனப் பூர்வமாக அணுகும் பண்பு நேர்மையாக சிந்திக்கின்ற ஒருவனிடம் ஏற்படும் என்பதை அனுபவப் பூர்வமாகவே நான் உணர்கிறேன்.

பெரிய அளவில் இந்த விசயங்களில் அறிமுகம் இல்லாத சராசரி வாசகன் சுஜாத என்ற கழிசடையின் எழுத்தை பார்த்து பிரமித்து போயிருந்தால் அந்த மயக்கத்தை களைக்க நமது எழுத்துக்கள் உதவுகின்றன என்றே கருதுகிறேன்.



//கதை எழுதுபவர்களிடம் என்ன எதிர்பார்க்கலாமோ அதை மட்டுமே எதிர்பார்க்க வேண்டும்.சமூக உணர்வ்வை எதிர்பார்ப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர். :-)))))) //

இது தவறு என்று கருதுகிறேன். எந்தவொரு கலை வடிவமும், மக்களின் கலாச்சார வளர்ச்சி மட்டத்திலிருந்தே தன்னை வளர்த்துக் கொள்கின்றன. அந்த கலைகள் அந்த மக்களுக்கு அவர்களை அடுத்தக் கட்டத்திற்க்கு வளர்த்துச் செல்ல தேவையானதை கொடுப்பதே நேர்மையானதாக இருக்கும். அதை விடுத்து பழைய சமுதாயத்தின் பிற்போக்குத் தனத்தை தாங்கிப் பிடிப்பதை செய்யும் கலை உண்மையில் அழித்து விரட்டப்பட வேண்டிய ஒரு நஞ்சு ஆகும்.

கலைஞன் என்ன பெரிய கொம்பா? வெறுமே கலைச் சேவை மட்டும் செய்து கொண்டு உண்டு கொழுக்க?

உழை ஒன்னுடைய உடல் தேவையை பூர்த்தி செய், சமூகத்திற்க்கான பங்களிப்பை செய், உன்னோடைய அறிவு தேவையை அது கலையாக இருக்கின்ற பட்சத்தில் நிவர்த்தி செய், அதையும் சமூக விரோதமாக இல்லாமல் செய். அதை விடுத்து கலைஞன் என்பதாலேயே வெறுமே கலைத் தொழில் மட்டுமே செய்வேன் என்பதையெல்லாம் அனுமதித்துக் கொண்டிருக்க முடியாது.

அது சுஜாதா போன்ற சுரண்டல்காரர்களின் ஏஜெண்டுகளை அம்பலப்படுத்துவம் மிக முக்கியமானது.


பொதுவாகவே ஒரு தவறு இங்கு பரவலாக செய்யப்படுகிறது. சுஜாதாவோ, ரஜினியோ அல்லது ராமதாஸையோ கடுமையாக விமர்சனம் செய்தால் ஏதோ அவர்கள் திருந்த வேண்டும் என்றோ அல்லது அவர்களை முன்னிட்ட வேறு காரணங்களுக்காகவோ விமர்சனம் செய்யப்படுவதாக எண்ணப்படுகிறது.

உண்மை என்னவெனில் இந்த ஆளுமைகளின் மீது மய்கத்தில் இருக்கும் ரசிக கண்மனிகளின் மூடத்தனத்தின் மீது ஒரு தாக்குதல் தொடுத்து விழிப்புறச் செய்யவே இது போன்ற விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

அதனால் சுஜாதா ஒரு கொள்கை குன்றா இல்லையா என்பதல்ல நமது தாக்குதலை தீர்மானிப்பது. மாறாக அவ்ர் பின்னால் திரண்டு நிற்க்கும் ரசிகர் கூட்டமே நமது தாக்குதலை தீர்மாணீக்கீறது.

அசுரன்

said...

நான் கூட கறுப்பு நிற பெண்கள் வரும் காட்சியை பார்த்து மனம் வருந்தினேன். இதற்காக அது யாராக இருந்தாலும் அதற்கு செருப்பும் விளக்குமாறும் தகுதியானதே. இக்காட்சியின் போது இதைப் பார்க்கிற இந்நிற பெண்களின் மன வேதனையை கொஞ்சமும் நினைத்து பார்த்து இருந்திருப்பார்களா?

இதை எதிர்த்து சட்டப்படி வழக்கு போட்டிருக்கலாமே. தணிக்கை அதிகாரிகள் இதை எப்படி அனுமதித்தார்கள் என்பதும் விநோதமாகவே இருக்கிறது.

ஏற்கனவே சினிமாவில் வெள்ளைத்தோல் அராஜகம் தாளவில்லை. சமுதாயத்தை கெடுக்கும் தற்குறிகளெல்லாம் கலை மற்றும் ஊடக துறைகளில் நுழைந்துவிட்டால் நாமெல்லாம் உருப்பட்ட மாதிரிதான். தொடர்ந்து களை எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் ...

பகிர்ந்தமைக்கு நன்றி அசுரன்.

said...

இந்த மாதிரி விபச்சார எழுத்தாளனை இன்னும் "விட்டுவைக்கிறது தப்பு" என பதிவு அறைந்து சொல்கிறது.

மக்களின் அரசியல் உணர்வை மழுங்கடிப்பதில் சுஜாதா மாதிரி பொறுக்கிகளின் சீரழிவு கருத்துகள் பெரும் பங்கு வகிக்கிறது.

படைப்பாளியின் சுதந்திரம் என்ற பேரில் இப்படி தெனாவெட்டு எடுத்து திரியும் இது போன்ற நஞ்சு பாம்புகளை அனைத்து தளங்களிலும் எதிர்கொண்டு களையெடுப்பது சமுக மாற்றத்திற்கு அவசியமான ஒன்றாகும்.

அவசியமான பதிவு

வாழ்த்துக்கள் தோழர்...

தோழமையுடன்
புத்தகப் பிரியன்

said...

பொதுவாகவே ஒரு தவறு இங்கு பரவலாக செய்யப்படுகிறது. சுஜாதாவோ, ரஜினியோ அல்லது ராமதாஸையோ கடுமையாக விமர்சனம் செய்தால் ஏதோ அவர்கள் திருந்த வேண்டும் என்றோ அல்லது அவர்களை முன்னிட்ட வேறு காரணங்களுக்காகவோ விமர்சனம் செய்யப்படுவதாக எண்ணப்படுகிறது.

உண்மை என்னவெனில் இந்த ஆளுமைகளின் மீது மய்கத்தில் இருக்கும் ரசிக கண்மனிகளின் மூடத்தனத்தின் மீது ஒரு தாக்குதல் தொடுத்து விழிப்புறச் செய்யவே இது போன்ற விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன

you are adding fuel into fire. Finally, they are more hardcore than ever before!

said...

//அதனால் சுஜாதா ஒரு கொள்கை குன்றா இல்லையா என்பதல்ல நமது தாக்குதலை தீர்மானிப்பது. மாறாக அவ்ர் பின்னால் திரண்டு நிற்க்கும் ரசிகர் கூட்டமே நமது தாக்குதலை தீர்மாணீக்கீறது.

//
ஆக திட்டனும் என்ற நோக்கம் மட்டுமே புனிதமானது திட்டுக்கான காரணம் சப்பையானது என ஒத்துகொண்டதற்கு நன்றி

நான் சொன்னமாதிரி அவரது சிறுகதைகளை எடுத்துகொண்டு அவர் ஒரு மார்க்ஸிம் கார்க்கி இல்லை என
அக்குவேரு ஆணிவேறா நிரூபியுங்கள்

அப்படி நிரூபித்தாலும் பின்னொரு கேள்வி இருக்கு அவர் ஏன் மார்க்ஸிம் கார்கியாவோ பாப்லே நெரூடாவாகவும் இருக்கனும் என்ற கேள்வி .

அல்லது இப்படித்தான் என சொன்னால் ,
இது பாட்டாளி வர்க்க சர்வாதிகார சிந்தனை இல்லை சர்வாதிகார சிந்தனை .

said...

மக்களை அசிங்கப்படுத்தும் இந்த விபச்சார எழுத்தாளர்களை அம்பலப்படுத்த வேண்டிய தருணம் இது.

அவசியமான பதிவு.

வாழ்த்துக்கள்
கோபா

said...

// அதனால் சுஜாதா ஒரு கொள்கை குன்றா இல்லையா என்பதல்ல நமது தாக்குதலை தீர்மானிப்பது. மாறாக அவ்ர் பின்னால் திரண்டு நிற்க்கும் ரசிகர் கூட்டமே நமது தாக்குதலை தீர்மாணீக்கீறது.//

//உண்மை என்னவெனில் இந்த ஆளுமைகளின் மீது மய்கத்தில் இருக்கும் ரசிக கண்மனிகளின் மூடத்தனத்தின் மீது ஒரு தாக்குதல் தொடுத்து விழிப்புறச் செய்யவே இது போன்ற விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. //

உங்களின் நோக்கம் நல்லதாக இருந்தாலும் நிச்சயம் அது நிறைவேறாது. :-))

ஏனென்று பார்ப்போம்.

இந்த ஆளுமைகளின் மீது மயக்கத்தில் இருப்பதே பெருமையாகவும் அதையே தங்களின் அடையாளமாகவும் ஆக்கிக் கொண்டவர்களும் , ஆக்கிக்கொள்ள விரும்புவர்களும்தான் அதிகம். எனக்கு சுஜாதாக்கள் தெரியும் அவர் பல் விளக்கும்போது பேஸ்ட் எடுத்துக் கொடுத்தேன்.. எனக்கு இந்த வட்டம் தெரியும் அவர் தேர்தலின்போது வேலை செய்தேன்....எனக்கு இந்த புத்தகம் அத்துப்படி அதில் !^%$#@$%#^% இப்படி ஒரு தத்துவம் இருக்கும்.... என்ற வகையில் தனது மேதவித்தனங்களையும் , தனது இருப்புகளையும் காட்டும் விருப்பம்தான் மக்களிடம் இருக்கிறது.

உங்களுக்கு ஒருவரின்(அல்லது ஒரு இயக்கத்தின்) கொள்கைகள் எப்படி பிடித்து அதற்காக இயங்குகிறீர்களோ அப்படியே பெரும்பாலன்வர்கள். உங்கள் பார்வையில் அவர்களின் செயல்பாடுகள் தவறாகத் தெரியும். அவர்களின் பார்வையில் உங்களின் கோபம் நியாயமற்றதாக இருக்கும்.உங்களுக்கு ஒருவர் கொள்கை பிடித்து இருக்கிறது அவர்களுக்கு ஒருவரின் எழுத்து பிடித்து இருக்கிறது..(அவர் சுவத்தில் ஒண்ணுக்குப் போவதைப் பற்றிச் சொன்னாலும்).....சுஜாதாக்களின் வாசகர் வட்டங்களிடம் ஏன் சமூக விழிப்புணர்வை எதிர் பார்க்கிறீர்கள்? ஒரு சினிமா பார்க்கப்போகும் அரங்கில் உள்ள மக்களால் அந்த அரங்கம் உள்ள தெருவுக்கு ஒரு நன்மையும் இல்லை.அது அவர்களின் பொழுது போக்கு. அவ்வளவே. வேண்டுமானல் மிட்டாய்,முறுக்கு வியாபரம் அதிகரிக்கலாம்.

Q:: Why do they exists as a writer ?
A:: to entertain and to earn money.

நம்பிக்கையாளர்களுக்கு இடையேயான விவாதங்கள் அவ்வப்போது அதிர்வுகளை ஏற்படுத்துமே தவிர சமூக மாற்றங்களைக் நிச்சயம் இந்த விவாதங்கள் கொண்டுவராது.கொண்டு வந்ததும் இல்லை. சைவ சமண விவாதங்கள் கழுவேற்றலில்தான் முடிந்தன. வென்றவர்களால் வேறு ஏதும் செய்ய முடியவில்லை. இந்த வலைப்பதிவிகளிலேயே இது வரை யாராவது ....."இவரின் கருத்துக்களால் நான் எனது நம்பிக்கைகளை மாற்றிக் கொண்டேன்"....என்று சொன்னது உண்டா? நீங்கள் சொன்னது போல் உங்களின் வாதங்கள் அவர்களிடம் விழிப்புணர்வைக் கொண்டு வராது மாறாக அவர்கள், அவர்கள் பக்க நியாங்களை அடுத்து ஒரு 10 பக்கத்துக்கு எழுதுவார்கள். :-))

எழுதுங்கள் ..அம்பலப்படுத்துங்கள் ...ஆனால் யாராவது இதனால் திருந்துவார்கள் என்று என்னால் நினைக்க முடியவில்லை.

பெரியாரின் கொள்கைகள் ஓரளவிற்கு மக்களை அடைந்ததற்கு காரணம் ...அவரின் எழுத்து பேச்சு மட்டும் அல்ல ...அவர் களத்தில் இறங்கி அவர் நம்பிய கொள்கைகளுக்காக போராடியதே. நீங்களும் அவ்வாறு செய்து கொண்டு இருக்கலாம்.அப்படி இருப்பின் அதன் மூலம் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

என்ன செய்யலாம்?

நீங்கள் திடமாக நம்பும் கருத்தை ஒரு தெரு/ஊர் அளவில் மக்களுக்குப் பயன்படும் அளவில் செய்து காட்டினாலே அது வெற்றியடையும்.ரஜினி ஏன் இலவச காலேஜ் ஆரம்பிக்கவில்லை, அய்யா வீரமணி ஏன் பன்னாட்டு நிறுவனங்களை தாங்குகிறார்... என்று நாம் விவாதம் செய்யும் நேரத்தில் ஒரு ரோட்டின் 10 அடி நீளத்தில் உள்ள குப்பைகளை அள்ளிவிடலாம்.

சுயமாக வரிசையில் நிற்கக்கூடத் தெரியாத இந்த சமுதாயத்திற்கு முதலில் தேவை வாழ்வியல் பண்புகள்( Civis Sense ). அது வந்துவிட்டலே மற்ற சிந்தனைகள் தானாக வந்துவிடும் என்று நம்புகிறேன்....

இணையத்தில் ஈராக் கொடுமைக்காக அழும் அமெரிக்கவாழ் பதிவர்கள் யாரும் அமெரிக்காவுக்கு எதிராக ஒரு கண்டக் கூட்டம்/ஊர்வலம் இதுவரை நடத்தியதாக தெரியவில்லை.இலங்கைத் தமிழர்களுக்காக வாதிடும் பலர் அவர்கள் வாழும் இடங்களில் பொது தளத்தில் வந்து போராடத் தயங்குவார்கள்.அவர்கள் பிழைப்பு அவர்களுக்கு. பொழுது போக வேண்டுமா நடிகனைக் கூப்பிட்டு கூட்டம் போடு. அந்த அளவில்தான் இவர்கள் உள்ளார்கள். பொழுது போக்கிற்கும் சமூக சிந்தனைகளுக்கும் இடையில் நீங்கள்தான் குழப்பிக் கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன். :-)) டீக்கடைகளில் அரசியல் பேசுவது நாடு திருந்த வேண்டும் என்பதற்காக அல்ல...பெரும்பாலும் பொழுது போக வேண்டும் என்பதற்காகவே....

said...

//நான் சொன்னமாதிரி அவரது சிறுகதைகளை எடுத்துகொண்டு அவர் ஒரு மார்க்ஸிம் கார்க்கி இல்லை என
அக்குவேரு ஆணிவேறா நிரூபியுங்கள் //

yaaruya intha poochandi? athu thaan sujathavoda "ayothiya mandapam" sirukathaiyai asuran pottu kilichu erinjare.. appa nee enga pooyirunthe? mun mandaiya seraikkava?

dai loosu, mothalla unooda kudumiya maraichittu vada

said...

//சுஜாதாக்களின் கதையைப் படித்து எங்கும் சமூகப்புரட்சி நடந்து விடவில்லை. கேப்பமாரி நடிகனுக்கு இருக்கும் இரசிகர் மன்றத்திற்கும் சுஜாதாக்களின் வாசகர் வட்ட குழுக்களுக்கும் இரண்டு வித்தியாசங்கள்?//

புரட்சிக்காக எழுத நீங்கள் இருக்கீங்களே எல்லாரும் புரட்சிக்காகவே எழுதினா புரட்சியை தவிர வேற எந்த விசயமும் இல்லையா உலகில்
சுஜாதாவின் ஒரு சிறுகதை "அரிசி" இதில் ரோட்டில் அடிபட்டு கிடக்கும்
கிழவனை காப்பாற்ற முடியாமல் போக செய்யும் போலீசின் நடைமுறைகளை
அழகாக சொல்லி இருப்பார் .

பு.க வில் மருத்துவன் எழுதும் கட்டுரைகள் படிப்பவர்கள், மருதைய்யனின் கட்டுரைகளை படிப்பவர்கள் மட்டுமே சமூக சிந்தனை உள்ளவர்கள் எனும்
உங்கள் கருத்து குருட்டுதனமானது .

//இவர்கள் யாரும் சமுதாய புரட்சிக்காக எழுதுவதோ அல்லது மனிதனின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற கருத்துப் புரட்சி செய்வதோ கிடையாது. ஏன், இந்த தமிழக சுஜாதக்கள் ஒரு அருந்ததிராய் போல் சமூக போராட்டத்தில் ஈடுபட்டது உண்டா? //

சமூக போராட்டத்தில் ஈடுபட்டு பிறகு சொரணை இழந்து போகும் பஜகவின்
கைக்கூலியாகும் ஜெயகாந்தனை விட இவர் ஒன்னும் தப்பு செய்துடலையே.

15 வருசமா ஜெயகாந்தன் ஒன்னும் எழுதல பிறகு வந்து பஜக துதி பாடுகிறார் என்றால் அதெல்லாம் சரிதான் என்பதா உங்கள் நிலைப்பாடு

ஏன் சொல்கிறேன் என்றால் , மிக பெரிய சமூக சிந்தனை எழுத்தாளனே சந்தர்ப்ப வாதியாகும் சூழ்நிலை பாவம் சுஜாதா.

எல்லாரும் சமூக புரட்சிக்காக எழுதனும்னு இல்லை சரி அப்ப நீங்க எழுதுங்க ஒரு பெரிய ரசிக அல்லது வாசகர் வட்டத்தை உருவாங்குங்கள்
ரஸ்யாவில் நடந்தது போல ,

ஏனெனில் இம்மாதிரி திட்டுவது எளிது நண்பரே !

ஒரு விசயம் என்னை கொண்டை காரன் என்றும் சுஜாதா ரசிகன் என்றும்
ஒரு மாஸ்கு நீங்களே போட்டு விசயத்தை முடிச்சு கட்ட வேணாம்னு கேட்டுகிறேன்.

said...

ஏன் தான் அவர் பின்னடி இந்த ஷன்கர் அலயுரார்..மனி அலஞா ஒரு அர்தம் இருக்கு
இது இன்ரு வந்த ப்ரிசனை இல்லை..ரொம்ப காலமாகவெ நடந்து வரும் ப்ரிசனை...தமிழ் படம்னா அது அவா படம் தான்..இது மாரினா யெல்லம் சரி ஆகி விடும்

said...

//சுஜாதாக்கள் எழுதும் கதைகளால் "இந்த கேடுகெட்ட சமூகத்திற்கு" என்ன பயன் என்று சொல்ல முடியுமா? //

கதைக்காரன் என்பவன் சாதாரண ஒரு மனிதனா இருந்தா போதும் என கொண்டு வந்தது சுஜாதா .

நண்பரே! ஒரே விதமான சப்தமெழுப்பும் குயில்கள் மட்டும் இருக்கும் காடு அவ்வளவு ரம்மியமாய் இருக்காது !

பல வித பறவைகள் தங்கள் குரலில் கத்தட்டும் ,

சமூக விடுதலைக்கு ஒரு பறவை ,
அழகியலுக்கு ஒரு பறவை என அந்த காடு தன் இயற்க்கை அழகில் மிளிரட்டும் .

பாட்டாளிக்கான கதை , பாட்டாளிக்கான கவிதை இதை மட்டும் எழுதனும் சிந்திக்கனும் என்பது
சிந்தனை குறைபாடு.

முதலாளித்துவ அடிவருடி கதைகளுக்கும் அதான் .

எழுத்தாளனின் சட்டைக்குள் இருக்கும் பூணூலுக்காக எதிர்க்காதீங்க .

அவனது எழுத்தின் மூலம் மிளிரும்
அவனது நூலுக்காக மதிக்க கற்றுகொள்ளுன்கள் .

உலகுக்கே நான் தான் போதிப்பேன் எனும் மேதமை நினைப்பு கூடாது . உலகில் இருந்து கற்றுகொள்ளவும் நிறைய இருக்கும் .

மாவோ சொல்றாரே : கற்று கொடு , கற்று கொள்ளுன்னு .

said...

//சுஜாதாவோ தமது கல்லாவை நிரப்பிக் கொள்வதற்க்கு பொதுப் புத்தியில் படிந்த இந்த பலஹீனங்களை பயன்படுத்திக் கொள்கிறார். இவரின் கழிசடைத்தனம் கொஞ்சம் நாகரிகமான கழிசடைத்தனமாக இருப்பது இன்னும் வீரியமான சமூக விரோத சக்தியாக இவரை மாற்றி விடுகிறது//

ரஜினியின் சீர்கேடான வசனங்களுக்கு இவரும் ஆககேடான பங்காற்றி வருகிறார் . மிக நல்ல பதிவு தோழர்

said...

//சுஜாதா ஒரு கொள்கை குன்றா இல்லையா என்பதல்ல நமது தாக்குதலை தீர்மானிப்பது. மாறாக அவ்ர் பின்னால் திரண்டு நிற்க்கும் ரசிகர் கூட்டமே நமது தாக்குதலை தீர்மாணீக்கீறது.//

அசுரன்,

தமிழில் சுவாரசியமான எழுத்து சுஜாதாவின் எழுத்து என்பதை Y, U , விபூதிப்பட்டை எதுவும் அணியாத சக வலைஞர் நண்பர் லக்கிலுக்கின் வலைப்பக்கத்தின் முகப்பு வாக்கியம்
இப்படிச் சொல்கிறது

"நான் சுஜாதாவும் கிடையாது, பாலகுமாரனும் கிடையாது... அதனாலே என் எழுத்துக்கள் அவ்வளவு சுவாரஸ்யமா இருக்காது.... "

(அப்போ பகுத்தறிவு ஈவெரா, அண்ணாதுரை , கருணாநிதி, எழுத்து எல்லாம் அசுவாரசியமானது!)

பொழுதுபோக்கு என்பதை பொழுதைப் போக்க மட்டும் என்கிற அளவில் அளவிட்டால் சுஜாதாவின் எழுத்து பொழுதைப் போக்க உதவுகிறது என்பது உண்மை.

தனிமனித, சமூக வாழ்வியல் மதிப்புக்கூட்டும் கருத்துக்கள் சினிமாக் கொட்டகையில் தீவிரமாக எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை!

சுஜாதா எனும் திருவரங்கத்து அக்கிரஹார அக்காரவடிசலின் அக்கிரமம் என்று அளவில்லாமல் அலப்பறையைக் கிளப்புகிறீர்!

மொத்த/சில்லறை எழுத்துப் பொறுக்கிகள் என்றால் தேடிப்பி(ப)டிக்கும் வெகுஜனங்கள் தான்.

வெகுஜனங்களை இன்னதை மட்டுமே படி என்பது புரட்சிக்கார எழுத்தில்/ கருத்தில் சொன்னால் மேலாதிக்கம், வர்க்க அதிகாரம், முதலாளித்துவ ஆண்டைபுத்தி என்பதாகும்!

தோல் நிறம் குறித்த வசனம்/காட்சிக்குக் கண்டனம் தெரிவிப்பது என்பதை "ஹமாம் சோப்பு பம்மாத்து நேர்மையோடு" அசுரன் கையாண்டவிதம் :-))

தன் தந்தையைத் தேடி கேப்டன் பிரபாகரன் ஸ்டைலில் பகல் நேரத்தில் நெற்றியில் தேடும் விளக்குடன் கவுண்டமணி ஒரு திரைப்படத்தில் வருவார்... பகலில் ஏன் தேடும் விளக்கு என்று கேள்வி கேட்ட நபரிடம் "அந்த நாய் வெளிச்சத்திலேயே டிம்மாகத்தான் தெரிவான்" என்று தந்தையைத் தேடும் தனயனாகக் கவுண்டமணி சொல்லும் இந்த வசன/காட்சி அமைப்பு பற்றி அசுரன் மூச்சுவிடாமல் "ஹமாம் சோப்பு நேர்மையைக்" காக்கட்டும்.

கவுண்டமணியின் பெயரில் இருக்கும் "கவுண்ட" எனும் சொல் சாதிமறுப்பு முன்னெடுத்துச்செல்லும் பம்மாத்து பகுத்தறிவுச் செஞ்சுடராய் ஒளிவீசட்டும் அசுரனுக்கு!

இன்றைய தமிழ் சினிமாவின் அவலட்சணத்துக்கு சுஜாதாவின் பூணூல் மற்றும் ரங்கராஜன் தன் நெற்றியில் போடாத Y, U நாமம் மட்டும் அசுரருக்குத் தெரிவது செலக்டிவ் அம்னீசியா என்று சொல்ல மாட்டேன்.

அசுரனுக்குப் தமிழ்நாட்டு அரசியல் திரா"விட"ப் பெத்தடின் பகுத்தறிவு சுடர்விடுகிறது என்பேன் :-))

கூல் அசுரன்!

said...

காசுக்காக வசனம் எழுதுபவனை கொள்கை குன்றாக ஏன் நினைக்கனும்மிக நல்ல கதை எழுதிய எழுத்தாளர்களை , எத்தனை பேரை இந்த கேடுகெட்ட சமூகம் வாழ வைத்தது சொல்லுங்கள் .எழுத்தின் மூலம் சுரண்டல் என்று அடிக்கப்போனால் ஆதரிக்கப்படாத எழுத்தாளனுக்கும் அவனது குடும்பத்துக்கும் கஞ்சி ஊத்த தயாரா ? ஏன் எழுத்தாளர்கள் சினிமாவுக்கு எழுதபோகிறார்கள் மூளையை கசக்கி எழுதும் ஒரு படைப்புக்கு சமூக அங்கீகாரமோ , காசோ புகழோ கிடைப்பதை விட........

கதை வசன கர்த்தா மன்னிக்கவும் சதை வசனகர்த்தவிற்கு இத்தனை பின்னூட்டங்களா ? கவிக்கோவிற்கு இன்றுவரை சினிமாவிற்கு அழைப்பு வந்தாலும் வரமாட்டேன் என மறுத்து மானத்தோடு இருக்கவில்லையா ?

said...

கம்யூனிச பூச்சாண்டி

// ஒரு விசயம் என்னை கொண்டை காரன் என்றும் சுஜாதா ரசிகன் என்றும் ஒரு மாஸ்கு நீங்களே போட்டு விசயத்தை முடிச்சு கட்ட வேணாம்னு கேட்டுகிறேன்.//

:-))

நீங்கள் யாராக இருந்தால் என்ன ?
நீங்கள் எதுவாக இருக்க வேண்டும் எனபது உங்கள் விருப்பம்.

விசயத்தை முடித்துவிட்டால் நான் உங்களை அப்படி எண்ணியதாக ஆகிவிடும் என்பதால் ..மேற்கொண்டு :-))

*****

//சுஜாதாவின் ஒரு சிறுகதை "அரிசி" இதில் ரோட்டில் அடிபட்டு கிடக்கும் கிழவனை காப்பாற்ற முடியாமல் போக செய்யும் போலீசின் நடைமுறைகளை அழகாக சொல்லி இருப்பார் .//

அழகாக சொல்லி.....???

அப்புறம்...

என்ன நடந்தது ???

அதனைப் படித்து அவர் வாசகர் எல்லாம் ரோட்டில் நடக்கும் விபத்துக்களுக்கு உதவ ஆரம்பித்து விட்டார்களா? அல்லது அதை எழுதிய சுஜாதா மனம் வெதும்பி சமுதாயத் தொண்டு செய்ய ஆரம்பித்து விட்டாரா?

நண்பரே,

நானும் சுஜாதாவை ஒரு கதை சொல்லியாக/எழுத்து வியாபாரியாகவே பார்க்கிறேன் .

சுஜாதா நான் ஆதீ , நீ ..*** என்று வசன்ம் எழுதுவதிலும் நீங்கள் சொல்லியுள்ள "அரிசி" கதைகள் எழுதுவதிலும் திறமையானவர்...வல்லவர்.

கஞ்சா கருப்பின் நடிப்பை சிவாஜியின்(ரஜினி அல்ல) நடிப்போடு அல்லது கமலின் நடிப்போடு ஒப்பிட முடியாது ...இருவரும் நடிகர்கள்தான்...

அதே சமயம் கஞ்சா கருப்பை சின்னி ஜெயந்தின் நடிப்போடு ஒப்பிடலாம்...அது ஒரு சமமான தளத்தில் ஓப்பீடு...

அதைப் போல்தான் சுஜாதாவும். அவரின் தொழிலை, அது போல் தொழில் செய்பவர்களுடந்தான் ஒப்பிட வேண்டும். எழுதுகிறார் என்பதற்காக உலகில் உள்ள எழுத்தாளர்களுடன் மானாவாரியாக ஒப்பிடக்கூடாது.

அசுரன் அவரை அப்படி ஒரு எழுத்தாளாராக எண்ணியே கேள்வி கேட்கிறார் என்பது எனது எண்ணம்.

*****

பெரும்பாலான மக்களைப்போல் சுஜாதாவும் ஒரு தொழில் செய்கிறார் ...அவ்வளவே...

சாலை ஓரத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளிக்கும் சுஜாதாக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. இரண்டு பேரும் தங்களுக்குத் தெரிந்த தொழில் செய்கிறார்கள்..வாழ்கிறார்கள் எந்தவித சமூக அக்கறையும் இல்லாமல்....

சுஜாதவிடமோ அவரின் வாசகர்களிடமோ(இரசிகார்கள்) சமூகம் சார்ந்த மாற்றங்களை எதிர்பார்க்க வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.

அவர் எழுதுகிறார் இவர்கள் மகிழ்கிறார்கள்..அவ்வளவே...

****

நீங்கள் சொல்வது போல் வனத்தில் குயிலும், காக்கையும் இருந்து விட்டுப்போகட்டும். நாம் ஏன் காக்கையிடம் போய் குயிலின் குணங்களை எதிர் பார்க்க வேண்டும்? அல்லது குயிலிடம் போய் ஏன் காக்கையின் குணத்தை எதிர்பார்க்க வேண்டும்?

முக்கியம்:
குயில் மற்றும் காக்கை உதாரணம் அவரவர் விருப்பப்படி எடுத்துக் கொள்ளலாம்.

******
// எல்லாரும் சமூக புரட்சிக்காக எழுதனும்னு இல்லை சரி அப்ப நீங்க எழுதுங்க ....//
// ஒரு பெரிய ரசிக அல்லது வாசகர் வட்டத்தை உருவாங்குங்கள் ரஸ்யாவில் நடந்தது போல //


:-)) ம்ம்...இரஷ்யா புரட்சி பற்றி அசுரன்தான் சொல்ல வேண்டும். நான் எந்த இசங்களுக்கும் பாதுகாவலன் கிடையாது. :-))

கதைகளை எழுதி, அதை கும்மியடிக்கும் வாசகர் வட்டங்களால் எந்த பயனும் இல்லை என்று சொல்லும் நான் ஏன் சுஜாதாக்கள் போல கதை எழுதப் போகிறேன்?

நான் மேலே ஒரு பின்னூட்டத்தில் சொன்னபடி ...நான் நல்லது என்று நம்பும் சில நம்பிக்கைகளின் அடிப்படையில் களத்தில் இறங்கியேதான் வேலை பார்க்கிறேன்.அதனால் மாற்றம் வருகிறதோ இல்லையோ முயற்சி செய்த திருப்தியாவது கிடைக்கிறது எனக்கு.

said...

//yaaruya intha poochandi? athu thaan sujathavoda "ayothiya mandapam" sirukathaiyai asuran pottu kilichu erinjare.. appa nee enga pooyirunthe? mun mandaiya seraikkava?

dai loosu, mothalla unooda kudumiya maraichittu vada
//

அனானியின் இந்த முரட்டுத்தனமான தாக்குதல் மிக அசிங்க மானது அதை வெளியிட்ட அசுரனின் உள்நோக்கமும் கேள்வி குறியானது ?.

நான் கொண்டை போட்டு இருந்தால் என்ன போடாமல் இருந்தால் என்ன
நான் அய்யராவோ பறையனாவோ இருந்தால் உனக்கு என்னடா வந்தது

திகவுல இப்படித்தான் சொல்லுவானுக
எதிர்த்துபேசினா பார்ப்பானா .
ஜால்ரா போட்டா பாட்டாளியா

சரிடா ஜால்ரா நானும் உங்க அசுரனுக்கு
ஜால்ரா போட்டுடுரேன் .

ஏன் சிந்திக்கவோ கேள்வி கேட்கவோ இயலாதை சமூகமாய் நாம் இருக்கிறோம்
எதிர்புன்னா சரி உடனே ஆதரவு ,
நாஜிக்கள் யூதர்களை கொல்ல
என்ன காரணம் வைத்து இருந்தார்களே
அதைவிடவும் புனிதமான காரணம் ஏதும் இல்லை உங்கள் பார்பன துவேசத்தில் .

மருத்தையை குடுமிக்காரரான்னு கேட்டா
பிறப்பால் பார்பனரான்னு கேட்டு அடிக்க வறீங்க ?
அப்போ எந்த நியாயத்தில என்னை பார்பான்னு சொல்றீங்க .

அதாவது ஒரே லாஜிக் எதிர்த்து விவாதம் பண்ணா அவன் பார்பான் .
எதிர்த்தா அவன் குடுமி

ஹ ஹா அற்பமனிதன் என மார்க்ஸ் சொல்வது உங்களைத்தான்
:)

said...

சீன விடுதலைப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட கலை, இலக்கியப் பிரச்சினைகள் பற்றிய ஒரு மாநாடு, அன்று விடுதலை இயக்கத்தின் தலைநகரான யேனானில் 1942 மே-2 லிருந்து மே 23 வரை நடந்தது.
..
சீனாவின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்களும், கலைஞர்களும் யேனான் மகாநாட்டில் கலந்து கொள்ள வந்தார்கள்.கம்யூனிஸ்ட் தலைவரும், விடுதலை பெற்றுத் தந்தவருமான மா சே-துங் மகாநட்டைத் திறந்து வைத்து, ஒரு சிறு முகவுரையில், விடுதலைப் போராட்டத்தின் அடிப்படைப் பிரச்சினைகளையும் இந்தப் போராட்டத்தில் எழுத்தாளர்கள், கலைஞர்களுடைய பாத்திரம் என்ன என்பது பற்றியும் எடுத்துக் கூறினார்.


"வர்க்கமும் , கட்சி வித்தியாசங்களும் நிறைந்த ஒரு சமுதாயத்தில், இலக்கியமும் கலையும், ஒரு வர்க்கத்தையோ ஒரு கட்சியையோ சார்ந்துதான் நிற்கிறது; அதாவது, ஒரு வர்க்கம் அல்லது கட்சியினுடைய அரசியல் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதோடு, ஒரு குறிப்பிட்ட புரட்சிகரமான காலக்கட்டத்தின் புரட்சிகரமான கடமையையும் ஏற்றுக் கொள்கிறது. இந்தக் கொள்கையிலிருந்து, இலக்கியமும் கலையும் வழிவிலகிச் செல்லுமானால், மக்களின் அடிப்படைத் தேவைகளிலிருந்தே அவைகள் தங்களைக் கத்திரித்துக் கொள்கின்றனவா என்பது தான் அர்த்தம்."

from puthagapiriyan blog.

said...

கம்யூனிச பூச்சாண்டி,
//உலகுக்கே நான் தான் போதிப்பேன் எனும் மேதமை நினைப்பு கூடாது . உலகில் இருந்து கற்றுகொள்ளவும் நிறைய இருக்கும் .//

நீங்க இதைச் சுஜாதாவுக்கு சொல்றீங்கன்னு நினைக்கிறேன் :-))

அவர்தான் வலைப்பதிவு எழுத்துக்கள் பற்றி 5 நிமிசப் புகழ் என்ற ரீதியில் சொல்லியிருந்ததாக ஞாபகம்.

said...

//நீங்க இதைச் சுஜாதாவுக்கு சொல்றீங்கன்னு நினைக்கிறேன் :-))

//

நண்பரே நான் ஒன்ரும் சுஜாதா விசிறி கிடையாது .

கண்ணை மூடிகொண்டு சுஜாதா ஒரு சமூக ஆர்வலர் சமூக சிற்பின்னும் சொல்லவில்லை சுஜாதாவை செருப்பால் அடிக்கனும்னும் சொல்லவில்லை மாறாக !

செருப்பால் அடிக்க கூடிய உனக்கு என்ன தகுதி இருக்கு?
நீ பேசும் மக்களுக்கு சுஜாதா தேர்ந்தெடுத்த கதை எனும் ஊடகத்தையோ

சாலமன்பாப்பையா செய்யும் பட்டிமன்றம் என்னும் ஊடகத்தையோ தேர்ந்தெடுத்து எதாவது மக்கள் பேசும்படி செய்!

அதுதானே சிறந்தது .

சுஜாதா தன்னை ஒரு சமூக சீர்திருத்தவாதின்னு எங்கயும் சொல்லிகவில்லை .

மேலும் அவர்போல மற்ற சாதியில் இருந்து நிறைய பேர் எழுதுகிறார்கள் சினிமாவுக்கு அதற்கேற்ற உரை நடையில் . ஏன் கங்கை அமரன் எழுதினாரே ஏ ஆத்தா ஆத்தோரமா வாறியா ?

இதைவிட என்ன சமூக சீர்கேட்டை ஒரு தலித் கொண்டுவர முடியும் .

இப்படி பேசினால் இதற்கு முவிடு இருக்கா ?

said...

லூசு அசுரன் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்லாதீங்கப்பா.
அது ஒரு சாக்கடை.
போஙகப்பா போய் வேலைய பாருங்க.
அசுரன்,
த்தூ.... இது ஒரு பொழப்பு.
இதுக்கு ஒரு ப்லொக். கேவலம்.

said...

சுஜாதாவுக்கும், ஹரிஹரனுக்கும் ஒற்றுமை உண்டு. சினிமாவில் மாமா வேலை பார்ப்பதும், குவைத்தில் தொழில் செய்தும் சம்பாதிப்பதும் ஒண்ணு தான்.

said...

கங்கை அமரன் பாட்டு எழுதுனதையும் சுஜாதா 'ஆதி'..'..தி' எழுதறதய்யும் ஒன்னுன்னு சொல்ரியா?

ரெண்டும் ஒன்னுன்னா

என்ன மசுருக்குடா சுஜாதா குசு விட்டாக்கூட 'கற்றதும்..பொண்டாட்டிய வித்ததும்'ல எழுதி அறிவுஜீவி இமேஜ வழக்கிற! கங்கை அமரன் என்னிக்கு தலித் சங்கக்கூட்டத்தில வந்து ஒரயாற்றினான்?

ஆனா பூனூல் ரங்கராசன் பாப்பான்கூட்டத்தில குசுவுனத ஆனந்தவிகடன் வாந்தியெடுத்ததே!

சுஜாதா நாயி நரகல் எங்க இருக்குன்னுதானே எப்ப பாத்தாலும் எச்சி ஒழுக அலயுது?

உதாரணம்: இந்த நாயிகிட்ட 'கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி'யை இந்தியாடுடே குடுக்குது...சொறிநாயி புத்தக விமர்சனத்தில எழுதுனது என்ன தெரியுமா?

"அகராதியில் குஞ்சுவும் குசுவும் பயமிலாமல் உட்கார்ந்து இருக்கின்றன."

இப்படிப்பட்ட மோப்ப சக்தி எந்த ஜீவராசிக்கு வரும்!

அனந்தராமகிருஷ்ணன்

said...

//http://www.blogger.com/profile/03027376146007401490//

இந்த பின்னூட்டம் போலி பின்னூட்டம் என்பதாவது தெரியுமா?.. தொடர்ந்து சென்றால்.. நல்ல காமலோக கதைகள். அசுரன் பதிவுல் நல்ல விளம்பரம்.

said...

நோண்டு மாமாவுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணாக்காதீர்கள் அசுரன். அது ஒரு கேடுகெட்ட ஜன்மம், சரியாக விளக்கினால் மட்டும் புரிந்து கொண்டு ஒப்புக் கொள்ளப் போவுதாக்கும். விட்டுத்தள்ளுங்க அல்லது சுட்டுத்தள்ளுங்க

said...

சுஜாதா (எழுத்தாளர்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுஜாதா (Sujatha, பிறப்பு: மே 3, 1935) தமிழகத்தின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா.

பொருளடக்கம் [மறை]
1 புனைபெயர்
2 ஆக்கங்கள்
2.1 நாவல்
2.2 குறுநாவல்
2.3 சிறுகதை
2.4 நாடகம்
2.5 கட்டுரை
2.6 திரைப்படமாக்கப்பட்ட இவரின் கதைகள்
2.7 பணியாற்றிய திரைப்படங்கள்
3 வெளி இணைப்புகள்



[தொகு] புனைபெயர்
இவருடைய, "இடது ஓரத்தில்" என்ற சிறுகதை 1962 ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா.கி.ரங்கராஜனுடன் குழப்பம் ஏற்பட்டதால் தன் மனைவி பெயரை, 'சுஜாதா', தன் புனைப்பெயராக வைத்துக்கொண்டார்.


[தொகு] ஆக்கங்கள்

[தொகு] நாவல்
பதவிக்காக
ஆதலினால் காதல் செய்வீர்
பிரிவோம் சந்திப்போம்
அனிதாவின் காதல்கள்
எப்போதும் பெண்
என் இனிய இயந்திரா
மீண்டும் ஜீனோ
நிலா நிழல்

கரையெல்லாம் செண்பகப்பூ
யவனிகா

[தொகு] குறுநாவல்
"ஆயிரத்தில் இருவர்"
"தீண்டும் இன்பம்"
"குரு பிரசாத்தின் கடைசி தினம்"

[தொகு] சிறுகதை
ஸ்ரீரங்கத்துக் கதைகள்

[தொகு] நாடகம்
Dr. நரேந்திரநாத்தின் வினோத வழக்கு்
கடவுள் வந்திருந்தார்

[தொகு] கட்டுரை
கணையாழியின் கடைசி பக்கங்கள்
கற்றதும் பெற்றதும் [பகுதி 1-5]
கடவுள் இருக்கிறாரா
தலைமை செயலகம்
எழுத்தும் வாழ்க்கையும்
ஏன் ? எதற்கு ? எப்படி ?

[தொகு] திரைப்படமாக்கப்பட்ட இவரின் கதைகள்
காயத்ரி
கரையெல்லாம் செண்பகப்பூ
ப்ரியா
விக்ரம்
வானம்வசப்படும்

[தொகு] பணியாற்றிய திரைப்படங்கள்
ரோஜா
இந்தியன்
ஆய்த எழுத்து
அந்நியன்
பாய்ஸ்
முதல்வன்
கன்னத்தில் முத்தமிட்டால்

[தொகு] வெளி இணைப்புகள்
WriterSujatha.com - சுஜாதாவின் இணைய பக்கம். இங்கு அவர் புத்தகங்களை[e-books] வாங்கலாம்
சுஜாதா படைப்புகளின் திரட்டுப் பக்கம்
அம்பலம் (சுஜாதா நிர்வகிக்கின்ற இணைய இதழ்)
சுஜாதாவின் வாழ்க்கைக் குறிப்பு
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE_%28%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%29" இலிருந்து மீள்விக்கப்பட்டது

said...

தோழரே,
வணக்கம்.


அறிவியல் போர்வைக்குள் ஓடி ஒளிந்துகொள்ளும்
சுஜாதா குரங்கின் மூடத்தனத்தையும்,பார்ப்பனியத்தை
காக்கத் துடிப்பதையும் அம்பலப்படுத்த ஒரு நூல் இருக்கிறது.

"கடவுள் இருக்கிறாரா" என்கிற அந்த நூலில் உலகில்
நடக்கும் விசித்திரமான,புதிரான ஆனால் அறிவியலால்
அம்பலப்படுத்தக்கூடிய பல சம்பவங்களை தொடர்ச்சியாக
வியப்பில் ஆழ்த்தும் வகையில் வாசிப்பவன் முன்
அடுக்கிவிட்டு இறுதியில்

"இந்த உலகில் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா ?
இதற்கு அறிவியல் என்ன பதில் சொல்கிறது
என்று ஒரு
கேள்வியை கேட்டு அதற்கு அந்த நாயே இப்படி பதிலையும்
சொல்லியிருக்கிறது

"கடவுள் இருந்தாலும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்"

சிரிரங்கத்து அக்கிரகாரத்து குடுமி அறிவியல்
தான் இப்படி பதில் சொல்லும்.

அந்த நூலை வெளியிட்டிருப்பபது அந்த குரங்கை
குத்தகைக்கு எடுத்துள்ள "மனுக்ஷ்யபுத்திரனின்"
உயிர்மை பதிப்பகம்.

அதை படித்துப்பாருங்கள் பயன்படும்

நான் இது பற்றி ஒரு பதிவு போடலாம் என நினைத்தேன்
ஆனால் அதிகமான வேளைகள் கமென்ட் போட கூட
வாய்ப்பில்லாமல் துரத்துகிறது,
முடிந்தால் நானும் முயற்சிக்கிறேன்.

புரட்சிகர வாழ்த்துக்கள்.


தோழமையுடன்
பாவெல்

said...

தோழர் அசுரனுக்கு மிகுந்த வாழ்த்துக்கள் இந்த நெத்தியடிப் பதிவை தந்ததற்கு.

தன் நிஜ முகத்தை மறைத்து அனானியாக வந்து வசவு பாடும் பார்ப்பண பொட்டைக்கு நாம் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை.

டாக்டர். பிரகாஷ் என்ற ஒரு வக்கிரப் பொறுக்கி ஆஸ்காருக்காக படமெடுத்து ஜெயிலுக்குள் உல்லாசமயிருக்கிரானல்லவா?!... அவன் எடுத்து போலீசின் திரையில் மட்டும் ஓடிய படமங்களில் கூட நம் மானங்கெட்ட பேராசிரியன் நடித்திருப்பான் போலும்.
நம் சுஜாதாவே, வசனத்தோடு மட்டுமின்றி கதையும் கூட எழுதியிருக்கலாம். நம் ஜெயில் டாக்டருக்கே வெளிச்சம்.

சுஜாதாவின் பக்தர்களே நான் அவனுடைய திறமையை மற்ற தோழர்களைப் போல சற்று குறைத்து மதிப்பிட விரும்பவில்லை, அதனால் தான்...

சிறீரங்கத்தானுக்கு இருக்கும் சப்போர்ட் தனக்கு இல்லையே என வருந்தும் பேராசிரியனே... நீ வெறும் பாப்பையனாக இருந்தால் மட்டும் போதாது பார்ப்பனனாகவும் இருக்கவேண்டும்.

said...

சுஜாதாவைத் தோலுரித்த அசுரன் என்னைக்குய்யா பாக்யராஜை தூக்கிப் பிடித்தார்?
எதற்கு இப்பதிவில் பாக்யராஜூக்கு சம்மனில்லாமல் ஆஜராகி அந்த கழிசடைக்கு அசுரனை ரசிகராக்குகிறாய்?

இப்படித்தான், தோழரே! மதிமாறன், பாரதியை நார் நாராக் கிழிச்சித் தொங்க விட்டப்போ பாரதி குஞ்சுகள், பாரதிதாசனும் மோசம் வோய்ன்னானுக... மதிமாறன் இத்தனைக்கு 'பாரதிய ஜனதா பார்ட்டி' புத்தகத்திலே பாரதிதாசனை புகழ்ந்து ஒன்னும் எழுதல...

இந்த மாதிரி வேலை செய்யறதைத்தான் பாலகுமாரன் பாப்பான், ஜெண்டில்மேனில் 'சத்ரியனா இராதே..சாணக்கியனா இரு'ன்னு கத்துக்கொடுத்திருக்கான் தெரியுமோ... சாணக்கிய தந்திரங்களுக்கு பலியாகிடல் கூடாது..

கவி

said...

//கடவுள் இருந்தாலும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்"

//

மதம் ஒரு மார்க்சிய பார்வை எனும் நூலை பாருங்கள் பாவெல் .

மதம் ஒரு மனிதனின் தனிபட்ட விசயம் என போட்டிருக்கு .

சுஜாதா கடவுள் இருக்குன்னே சொல்லட்டும் அதுகென்ன வந்தது .

said...

//தன் நிஜ முகத்தை மறைத்து அனானியாக வந்து வசவு பாடும் பார்ப்பண பொட்டைக்கு நாம் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை.

//
மிஸ்டர் இயல் நான் பார்பான் இல்லை என்றால் நீங்கள் பொட்டை என ஒத்துகொள்ள தயாரா .

பதில் இல்லை எனவே பார்பான் பொட்டை எனும் தூற்றல் .

சரியா ?

said...

//சுஜாதாவுக்கும், ஹரிஹரனுக்கும் ஒற்றுமை உண்டு. சினிமாவில் மாமா வேலை பார்ப்பதும், குவைத்தில் தொழில் செய்தும் சம்பாதிப்பதும் ஒண்ணு தான்.//

யாருங்க இந்த ஜெண்டில்மேன், உழைத்துப் பிழைக்கும் ஹரிஹரனைத் தாக்கி இப்படி நாக்கு மேலே பல்லைப் போட்டுப் பேசுனது!
இதை ஒரு பின்னூட்டமாக அனுமதித்த திரு.அசுரனுக்கு என் வருத்தத்தைத் தெரிவிக்கிறேன்:-(

said...

போற போக்கில் ஐந்து ரூபாய் அரை வேக்காட்டு கம்ம்யூனிஸ்டு புத்தகங்கள் என்று ஒரு சில்லறத்தனமான கமென்ட் வேறு அடித்திருக்கிறார் பூச்சாண்டி

ஆமா இந்த ஐநூரு ரூபாயில் நல்ல குவாலிட்யில ஒரு கஞ்சா கைக்கும் குவார்ட்டர் கைக்கும் நடந்த உலகின் தலை சிறந்த தத்துவார்த்த உரையாடல் பொஸ்தகத்தை (அதாங்க கீதைய்) பற்றி என்ன நெனிகிறீங்க மிஸ்டர் பூச்சாண்டி

ஸ்டாலின் குரு

said...

\\மதம் ஒரு மார்க்சிய பார்வை எனும் நூலை பாருங்கள் பாவெல் .

மதம் ஒரு மனிதனின் தனிபட்ட விசயம் என போட்டிருக்கு .

சுஜாதா கடவுள் இருக்குன்னே சொல்லட்டும் அதுகென்ன வந்தது //


பூச்சாண்டி,

கடவுள் நம்பிக்கை என்பதை
சுசாதா மண்டு
சிரிரஙம் அக்கிரகாரத்தோடு நிறுத்திக்கொண்டிருந்தால்
தான் அது தனி மனித நம்பிக்கை, அதை சமூகத்திற்க்குள்
கொண்டு வந்துவிட்ட பிறகு அது தனி மனிதனின் பிரச்சனை
அல்ல,
அதுவும் கடவுளின் இருப்பு பற்றி அறிவியலின் கருத்து என்று
கூறி தன்னுடய பார்ப்பனிய கருத்தை அறிவியலுக்குள்
நுழைத்து செருகுவது
அயோக்கியத்தனம் இல்லையா,
பார்ப்பன நரித்தனம் இல்லையா?

அதை தான் நான் கூறினேன்.

நீங்கள் மறுபடியும் வந்து
கடவுளை பற்றி அறிவியல் என்ன சொல்கிறது ?
என்று பூச்சாண்டி காட்டாதீர்கள்

நீங்கள் குறிப்பிட்டுள்ள
நூலிலேயே அது பற்றி
தெளிவாக
விளக்கப்பட்டிருக்கிறது
படியுங்கள்.
எனக்கு நேரம் இல்லை.

பாவெல்

said...

//போற போக்கில் ஐந்து ரூபாய் அரை வேக்காட்டு கம்ம்யூனிஸ்டு புத்தகங்கள் என்று ஒரு சில்லறத்தனமான கமென்ட் வேறு அடித்திருக்கிறார் பூச்சாண்டி//

இந்தியாவில் அப்போ பார்பனர்களை சிலரை ரஸ்யாவுக்கு அழைத்து சென்று ஆங்கில புத்தகத்தில் இருந்து இயந்திரகதியில் மொழிபுயர்ப்பு செய்யப்பட்டதுதான் அந்த புத்தகங்கள்

அதில் ஒரு நூலை படிச்சு எவனாவது கம்யூனிசம்னா என்னான்னு புரிஞ்சுக்க முயற்ச்சி செய்தால் மண்டை கிறுக்கு புடிச்சுக்கும் .

புரியும்படியான எளிய நடையில் இருக்காது அது .

புத்தகமே புரியாதவனுக்கு தத்துவம் எங்க புரிய போறது ..

ஏன் சொன்னேன்னா அதை ஒரு பக்தனை போல தொழுவீர்கள் ஆனா
சுஜாதா எழுதிய பல நல்ல கதைகளையும் எதிர்பீர்கள் ஏன்னா ஒரே விசயம் பார்பான் இதானே?

சுஜாதா எளிமையான எழுத்துக்களை சுவராசியமா எப்படி எழுதுவது என தமிழ் வாசகர்களுக்கு அறிமுக படுத்தியவர் . அவ்ளோதான் .

said...

அசுரன், நல்ல, ஆழமான கட்டுரை. ஆனால் முதலில் வருகிற "அது யூ வா ஒய்யா என்பது ஆய்வுக்குரியது" என்றெல்லாம் தவிர்த்திருக்கலாம். தலைப்புக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற அவதூறுகளை கிளப்ப வாய்ப்பளிக்கும்.
மேலும் , சுஜாதாவை ஆதரிப்பவர்களெல்லாம் பார்ப்பன பொட்டை என்றும் குடுமி என்றும் பின்னூட்டமிட்டவர்கள் மதிப்பிடுவதும் தவறானது. உங்கள் கோபத்தை ஆரோக்கியமான விவாதத்தில் காண்பிக்கலாம் (அதிலும் "பொட்டை" என்ற வார்த்தை பிரயோகத்தையே நான் கண்டிக்கிறேன்) அதெல்லாம் பழைய காலம்..இப்பொதெல்லாம் இந்த அறிவு ஜீவிகளை மற்றவர்கள் தான் அதிகமாக தூக்கி பிடிக்கிறார்கள் என்று நாம் உணர வேண்டும். (அதைத்தான் ம.க.இ.க.வின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை சொல்கிறது)
மற்ற படி, திரு.பூச்சாண்டி! உங்கள் வாதங்களுக்கு என் பதிலை தனிப் பதிவில் சொல்லியிருக்கிறேன். படித்துக் கொள்ளவும்.
http://paalveli.blogspot.com/2007/07/blog-post_22.html

நன்றி...

பால்வெளி

said...

அசுரன்,

நல்ல, ஆழமான கட்டுரை. ஆனால் முதலில் வருகிற "யூ வா ஒய்யா என்பது ஆய்வுக்குரியது" என்பதை எல்லாம் தவிர்த்திருக்கலாம். தலைப்புக்கு சம்பந்தமில்லாத விவாதங்களையும், அவதூறுகளையும் உங்கள் கட்டுரையின் மேல் கிளப்ப வாய்ப்பளிக்கும்.
மேலும் சுஜாதாவை ஆதரிப்பவர்கள் எல்லாம் பார்ப்பன பொட்டை என்றும், குடுமி என்றும் மதிப்பிடுவது ஓரங்கட்டுவது தவறு. ( அதிலும் "பொட்டை" என்ற வார்த்தைப் பிரயோகத்தையே நான் கண்டிக்கிறேன்) அதெல்லாம் பழைய காலம். இப்போதெல்லாம், இந்த அறிவு ஜீவிகளை அதிகம் தூக்கி பிடிப்பது மற்றவர்களும் தான் என உணர வேண்டும்.
மற்ற படி, திரு. பூச்சாண்டி! உங்கள் வாதங்களுக்கெல்லாம் பதில் தனிப் பதிவில் இட்டிருக்கிறேன். படித்துக்கொள்ளவும்.
http://paalveli.blogspot.com/2007/07/blog-post_22.html

நன்றி..

பால்வெளி

said...

Kadavuley... ungallukellam eppathan buthi varapohutho? thambi...chumma ippadi vetti veerappa sondha peru podama hits paarkuruthuku sambandha sambandham illama ethayavathu ezhuthi....
Dhravisa innam munnera ore vazhi sollatuma.. peysama pothikkityu pozhaikura vazhiya paruppa.
Olaham romba persusu thambi. innum dhravidan, tamilan, parapanan, uyarndha saathi, thazhndha saathinu solli unna neeye emathikaama, un kudumbam urupada ethavathu varumanam varra thozhia paaru. unna maathiriye ellorum than kudumbam uyara unmaya ozhachaley podhumpa. naadu muneridum....

thirundhungappa...velley vetti irundha poi paarunga..summa edhayavadhu sollikkittu.perey paaru...

-- Nokia Fan

said...

கம்யுனிச பூச்சாண்டியினுடைய வாதஙக்ளுக்கு பதில் சொல்வது வீண் என்பது எனது கருத்து. அதனாலேயே ஒரு வரி கூட இது வரை அவருக்கு பதில் சொல்லவில்லை.

பதில் சொல்ல முயன்ற தோழர்களுக்கும் விவாதத்தை திசை திருப்பி திசை திருப்பி எங்கெங்கோ கொண்டு செல்லும் திரிப்பு வேலையையே அவர் கொண்டுள்ளார்.

அவர கண்டுக்காம விடுங்க நண்பர்களே, தோழர்களே...

சில அழுகிப் போன வர்க்கங்கள் இப்படித்தான் புலம்பிக் கொண்டு இருக்கும்.

அசுரன்

said...

//கம்யுனிச பூச்சாண்டியினுடைய வாதஙக்ளுக்கு பதில் சொல்வது வீண் என்பது எனது கருத்து. அதனாலேயே ஒரு வரி கூட இது வரை அவருக்கு பதில் சொல்லவில்லை.
//

என்ன இப்படி சொல்லிபுட்டீக அசுரன்

செருப்பால அடிங்கன்னீங்க சரி அடிக்கிறோம் ஏன்னு கேட்டா பதில் சொல்வது வீண்வேலை என்றால் என்ன அர்த்தம் தம்பி (உங்க வயசு 27தான் ஒரு இடத்துல படிச்சேன்)

பால்வெளி இருக்காரே அவர் சுஜாதாகதையில வரும் கேரக்டருகெல்லாம் சுஜாதாவ காரனமாக்குகிறார் .

அந்த காலத்துல எம்ஜிஆரோட சண்டை போடுற வில்லன் என்னாம் கெட்டவங்கன்ர மாதிரி . அதை விடுங்க .

கதைக்காரன் இப்படித்தான் இருக்கனும் என்பதற்கு உங்களின் வரையறை என்ன அதை சொல்லிபுடுங்க நான் உங்களை தொந்தரவு செய்யாம போயிடுறேன் .

said...

பால்வெளியில் இட்ட பின்னூட்டம்:

'மங்களா என்னடா..இங்க ஒரு பங்களாவே வந்துக்கிட்டிருக்கு..அய்யய்யோ..பங்களா போர்ட்டிக்கோவாலேயே இந்த இடி இடிச்சுருச்சே' என்று விவேக் வாயில் திணிக்கப்பட்ட வசனத்துக்காகவே சுஜாதாவை பிஞ்ச செருப்பால அடிக்கலாம்..

காரணம் கேட்ட பூச்சாண்டியே...
சுஜாதா ஓ ஹென்றியிடம் இருந்து சுட்ட கதைகளுக்கு அவனை எதனால் அடிக்கலாம்?

பார்ப்பனர் சங்க மாநாட்டில் வீர உரை ஆற்றிவிட்டு கறுப்புத்தமிழச்சிகளை இழிவுபடுத்தியதற்கு எதனால் அவனை சாத்தலாம்?

சாப்ட்வேர் ஆர்க்கிடெக்ட் என்பதனை தமிழில் மொழிபெயர்ப்பதால் யாருக்கும் பயன்படப்போவதில்லை என்று வடிவுக்கரசி வாயில் வசனத்தைத் திணித்த அந்த பன்னாடையை எதனால் சாத்தலாம்?

புறநானூற்றுக்கு எளிய உரை எழுதுகிறேன் என்று அபத்தக்களஞ்சியம் ஒன்றைத் தந்து தன் முட்டாள்தனத்தை உயிர்மை பதிப்பகம் மூலம் ஊருக்கு பறைசாற்றிய ரங்கராஜனை என்ன செய்யலாம்? (ஆதாரம்:-முனைவர் தொ.பரமசிவம் எழுதிய விமர்சனக்கட்டுரை..காலச்சுவடு)

பூச்சாண்டிப் புடுங்கிகளிடம் கேட்க இன்னும் பல கேள்விகள் உள்ளன.. தொடரும்..

புல்டோசர்

said...

பால்வெளியில் இட்ட பின்னூட்டம்:

செருப்படி தொடர்கிறது...

ஏதோ விஜயகாந்தும், அர்ஜூனும் மட்டும்தான் தங்கள் படங்களில் பயங்கரச்செயல் புரியும் மனிதர்களாக முஸ்லீம்களைக் காட்டுவதாகப் பலரும் நம்புகின்றனர். இந்தப் பன்னாடைகளுக்கெல்லாம் முன்னோடிப்பன்னாடை யாரு? நம்ம சுஜாதாதான். 1986இலேயே..இந்திய அரசின் ஏவுகணையை ஒரு முசுலீம் நாட்டுக்கு (சலாமியா) தீவிரவாதிகள் கடத்திப்போவர்.. அத்திட்டத்தை விக்ரம் எனும் இந்து முறியடித்து வருவார். சலாமிய நாட்டின் முசுலிமின் மனைவி விக்ரமிடம் சோரம் போவார்..என்று எவ்வளவு தூரம் முசுலீம்களை இழிவுபடுத்தமுடியுமோ அவ்வளவு தூரம் விக்ரமில் செய்து தீர்த்த ரங்கராஜனை எந்த செருப்பால் அடிப்பது?

ரோஜா என்றொரு இந்திய ஆக்கிரமிப்புப்படையின் காஷ்மீர் பிரச்சாரப் படத்திற்கு வஜனம் எழுதிக்கொடுத்த சுஜாதா, ஊர் ஊராய் சென்று எலக்கியம் பேசும்போது 'ரோஜா பாத்தீங்களா! எப்பிடி இருக்கு?ன்னு' கேட்டுவிட்டு மறக்காமல் ஒரு சம்பவத்தை விலாவரியாக எடுத்துச் சொல்லி தன் பங்குக்கு முசுலீம் எதிர்ப்புணர்வை எலக்கியவியாதிகளிடம் பரப்பினார். அச்சம்பவம்: "திருச்சியில் திரையரங்குகளில் அரவிந்தசாமி தீவிரவாதிகளிடம் அடிவாங்கும்போது முசுலீம் ரசிகர்கள் 'இன்னும் நல்லா குத்துடா' என்றார்கள்' " எனும் ஆக்கப்பூர்வமான இலக்கிய செய்தியை ஊரெங்கும் பரப்பினார். திருநெல்வேலி ஆர்யாஸ் ஓட்டலில் கூட 1992இல் இதனை சொல்லி இருக்கிறார்.. இந்த கொள்ளிமுடிவானை எதை வைத்து சாத்தலாம்?

கற்றதும்,விற்றதும் தொடரில் 'சிறீரங்கம் கோவில் ஒழுகுகளிலும் தேரிழுக்க வரும்ம் கோவிந்தர்களின் நாட்டுப்புறப்பாடலிலும் தேடினால் முசுலீம் மன்னர் படையெடுப்பின்போது 13000 வைஷ்ணவர்கள் கொல்லப்பட்ட சேதி கிடைக்கக்கூடும்' என்று வலிந்து செய்தி எழுதினார் சுஜாதா. இதனை மறுத்து ஆ.சிவசுப்பிரமணியனில் இருந்து பல்வேறு வரலாற்று அறிஞர்கள் வரை அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பதை அம்பலப்படுத்தியும் உள்ளனர். சும்மா கிடக்கிற ஊரிலே மதக்கலவரம் உண்டுபண்ண எழுதிவைக்கும் இந்தக் கொலை கொள்ளி மனிதனை எந்தச் செருப்பால் அடித்து நொறுக்கலாம்?

இன்னும் பல ஆதாரங்களுடன் தொடர இருக்கும்...

புல்டோசர்

said...

சுஜாதாவை செருப்பாலும் விளக்குமாத்தாலும் அடிக்கத் தகுந்த காரணங்களைத் தந்தமைக்கு தோழர் பாமரனுக்கு நன்றி:

பாமரனின் 'பாய்ஸ்' விமர்சனத்தில் இருந்து:---

மொதல் சீன்லயே ஒருத்தன் ஜிப்பக் கழுட்டீட்டு வர்றான்…

சரி ஏதோ ஜிப்பு வைக்கத்தான் காசில்லாத வறுமையோன்னு
படத்தப் பார்த்தா… எதுக்கால வர்ற பொண்ணுகிட்ட
நீ பாக்கறதுக்குத்தான் கழுட்டீட்டு வர்றேங்கறான்.

“அடி செருப்பால…”ன்னு பக்கத்துல இருந்து சத்தம் கேக்கற நேரமாப் பார்த்து…
வசனம் சுஜாதா…ன்னு தெரைல போடறான்.

ச்சேச்சே… நம்மாளு நல்லவரு…
அவர இந்தாளுதான் கெடுத்திருப்பாருன்னு நெனச்சுக்கிட்டே
படத்தப் பாக்க ஆரம்பிச்சா… கிறுகிறுன்னுவருது.

இன்னொருத்தன் வர்றான்
தொடைக்கு நடுவுல கைய வைக்கிறான்…
“என்ன அரிக்குதா..?”ங்குது ஒரு மாதர் குல மணிவிளக்கு.

எவனோ ஒருத்தன் ஒருத்தியக் கூட்டீட்டு சாப்படப் போறான்…
“சாப்புட்ட காசுக்கு அளவா கைய மட்டும் புடிச்சுக்கோ…
தொடையெல்லாம் டூமச்சூ…”ங்கிறா
.........
செருப்படிகளைத் தொடரக் காத்திருக்கும்

புல்டோசர்.

said...

///மிஸ்டர் இயல் நான் பார்பான் இல்லை என்றால் நீங்கள் பொட்டை என ஒத்துகொள்ள தயாரா .

பதில் இல்லை எனவே பார்பான் பொட்டை எனும் தூற்றல் .

சரியா ? ///

Mister. பூச்சாண்டி,

மன்னிக்கவும் திடீரென வெளியூர் செல்ல நேர்ந்ததால் தான் பதில் சொல்ல முடியவில்லை.

இப்படி கோபப்படுவதற்கு பதிலாக அணாணியாக வருவதை தவிர்த்திருக்கலாம்.

இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர் ஷங்கர், தலைசிறந்த எழுத்தாளன் சுஜாதா, சூப்பர் ஸ்டார் ரஜினி, புகழ்மிக்க AVM இவர்கள் அனைவரும் தங்கள் ஒட்டுமொத்த திறமையையும் ஒரு பெண்ணின் உடலின் மீது கட்டிவிட்ட காரணம் என்ன?.

அப்படியானால் இந்த பேடிகளின் புகழும் பண்மும் நடிகைகள் தங்கள் உடலால் போட்ட பிச்சைதானே...

குறிப்பு:-
இந்த நடிகைகளின் கவர்ச்சிக்கு நாக்கை சுழற்றுபவர்களாக ஒட்டுமொத்த சமூகத்தையும் நான் குறிப்பிடவில்லை. மாறாக இந்த ஈனர்களுக்கு வாழ்த்து மடல் வாசிக்கும், அற்ப கவர்ச்சி விரும்பிகளைக்கொண்டே இதனைப் பார்க்கலாம்.

said...

sujatha has also written excellent
short stories and plays about
feminism and equality. Pls see
his play marumanam, etc ; and
stories like reuka, etc.

Agreed that he writes some crap also occasionally. but we must have a wholesome view of all his works for a critical view. And i think he is neither a male chauvinsit nor has a brahminical outlook. his vision is much much wider and deeper ; only his descriptions regarding sexual scenes are not tolerated in a orthodox society.

said...

//இப்படி கோபப்படுவதற்கு பதிலாக அணாணியாக வருவதை தவிர்த்திருக்கலாம்.
//

அனானின்னா அய்யரா நல்ல தமாசு உங்களோட

said...

புல் டோசர்

மிக நல்ல கதை எழுதிய எழுத்தாளர்களை , எத்தனை பேரை இந்த கேடுகெட்ட சமூகம் வாழ வைத்தது சொல்லுங்கள் .

எழுத்தின் மூலம் சுரண்டல் என்று அடிக்கப்போனால் .

ஆதரிக்கப்படாத எழுத்தாளனுக்கும் அவனது குடும்பத்துக்கும் கஞ்சி ஊத்த தயாரா ? //

இதுக்கு ஏன் பதில் சொல்லாம கேள்வி கேட்க ஆரம்பிச்சுடீங்க .
குழலி மாதிரி எனக்கு கேட்கத்தான் தெரியும் அப்படிங்கிரீங்களா

said...

//மூளையை கசக்கி எழுதும் ஒரு படைப்புக்கு சமூக அங்கீகாரமோ , காசோ புகழோ கிடைப்பதை விட

காசுக்காக திரையில் ஆடும் சிலுக்குக்கு
எல்லாம் அதிகம் கிடைப்பது யார் குற்றம் , மக்கள் மக்கள் என நீங்கள் தூக்கி வைக்கும் மக்களின் ரசனை மட்டத்தை உயர்த்திவிடுங்கள் உங்கள் கலை இலக்கியத்தின் மூலம் பிறகு
செருப்பை கழட்டி படைப்பாளிகளை அடிக்க போகலாம் .
//

இதுக்கும்

said...

//பார்ப்பனீய பேனா விபச்சாரியை நன்கு படம் பிடித்துள்ளீர்கள்.//
சரியான விமர்சனம்
இந்த மேதைக்கு இன்னும் செருப்படி போதவில்லையா ?

said...

பொதுவாகவே ஒரு தவறு இங்கு பரவலாக செய்யப்படுகிறது. சுஜாதாவோ, ரஜினியோ அல்லது ராமதாஸையோ கடுமையாக விமர்சனம் செய்தால் ஏதோ அவர்கள் திருந்த வேண்டும் என்றோ அல்லது அவர்களை முன்னிட்ட வேறு காரணங்களுக்காகவோ விமர்சனம் செய்யப்படுவதாக எண்ணப்படுகிறது.

உண்மை என்னவெனில் இந்த ஆளுமைகளின் மீது மய்கத்தில் இருக்கும் ரசிக கண்மனிகளின் மூடத்தனத்தின் மீது ஒரு தாக்குதல் தொடுத்து விழிப்புறச் செய்யவே இது போன்ற விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

Your blog changed my views about
sujatha. Thanks

-Akilan

said...

தோழரே வணக்கம்

நான் வலை உலகிற்கு புதிய தோழர்.
எனது ப்ளாகிற்கு இணைப்பு கொடுங்கள்.
balraj-asath.blogspot.com

தோழமையுடன்

ஆசாத்.

said...

sorry thozar,

the correct blog name is

http://balraj-azad-100.blogspot.com/

said...

அண்மையில் குங்குமத்தில் வந்த சுஜாதாவின் கேள்வி பதிலில் ''இந்த உலகைப் படைத்த கடவுள் ஏன் சிலருக்குக் கஸ்டத்தையும், சிலருக்கு நல்லதையும் கொடுக்கிறார்..? எல்லோருமே மகிழ்ச்சியாக இருக்குமாறு இந்த உலகத்தை கடவுள் படைத்திருக்கக் கூடாதா..?" என்று ஒரு கேள்வி.

இதற்கு சுஜாதாவின் பதில் : " யோசித்துப் பாருங்கள். உலகில் யாருக்கும் எந்த துன்பமும் இல்லை. சகலரும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள் என்றால், சரியாக அடுத்த திங்கள்கிழமைக்குள் வாழ்க்கைப் போரடித்துவிடாதா..?"
என்று பதில் சொல்லியிருந்தார்.

இதே தொணியில் சில நாட்களுக்கு முன்பு கோவையில் நடந்த விழா ஒன்றில் பேசிய ஜெயகாந்தன், 'சாதி வேறுபாடுகள் இருக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும்' என்று பேசியிருந்தார்.

இந்த வரிசையில் இப்போது கம்யூனிஸ பூச்சாண்டி, " காட்டில் எல்லா பறவைகளும் இருக்க வேண்டும். அப்போதுதான் கேட்க சுவாரஸ்யமாக இருக்கும்" என்கிறார். இந்த மூன்று குரல்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

அனைத்து இனக்குழுவினரின் குரல்களும் அவரவர்க்கு உரிய பிரதிநிதித்துவத்தோடு உரத்து ஒலிக்க வேண்டும் என விரும்புகிறவர்கள் கம்யூனிஸ்டுகள். பார்ப்பனர்களோ தங்களின் குடுமியை மட்டுமே உயர்ந்ததென்று நிறுவ நினைக்கிற கூட்டம். ஆனால், காட்டில் குயில் மட்டுமே கூவ வேண்டும் என நினைக்கும் சர்வாதிகாரிகளாக கம்யூனிஸ்டுகளை சொல்கிறார் கம்யூனிஸ பூச்சாண்டி.

நண்பரே.. குயிலாக நீங்கள் யாரை உருவகப்படுத்தியிருந்தாலும் சரி.. அது தன் குரலால் கூவும் வரைக்கும் சிக்கலில்லை. பக்கத்திலிருக்கும் காக்கையின் மீது காறித்துப்பும்போதோ, ஒரு ஆந்தையை நக்கலடிக்கும்போதோதான் பிரச்னை வருகிறது.

கல்வெட்டு சொல்வதன் ஒட்டுமொத்த தொணி 'இப்படி சுஜாதாக்களை அம்பலப்படுத்தி எழுதுவதால் இணையத்தில் கருத்து மாற்றங்கள் எதுவும் ஏற்படப்போவதில்லை' என்பதாக இருக்கிறது. இதை முழு உண்மையாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை. சுஜாதாபற்றிய அரைகுறை புரிதலுடன், அவரை அறிவுசீவி பிம்பமாக நினைத்துக்கொண்டிருக்கும் பல ஆரம்பக்கட்ட வாசகர்களின் மனதை மாற்ற இதுபோன்ற கட்டுரைகள் எல்லா காலத்திலும் உதவும். எனக்குத் தெரிந்தே சில நண்பர்கள் தங்களின் கருத்தோட்டங்களை மாற்றிக்கொண்டுள்ளனர். அதுவும் போக இம்மாதிரியான கட்டுரைகள் எழுதப்படவில்லையெனில், எதிர்காலத்தில் சுஜாதாபற்றி இணையத்தில் தேடும் ஒருவருக்கு, அவர் அறிவுசீவி என்ற அளவில் மட்டுமே தரவுகள் கிடைக்கும் அபாயம் உள்ளது.

said...

///சிலரை பாரம் சுமப்பவராக வைத்து, சிலரை வசதியாக வைத்திருக்கும் கடவுள், கணக்கில் வீக் அல்லது பாரபட்சம்காட்டுகிறார். இதில் எது சரியான விடை?//

சுஜாதா : சரியான விடை கடவுள் உங்களை இந்த கேள்வி கேட்கவைக்கிறார் என்பதே! ஏற்றத்தாழ்வே இல்லாத உலகத்தை நினத்துப்பாருங்கள். எல்லாருக்கும் எல்லாமும் எப்போதும் கிடத்துவிடும் என்றால் சரியாக அடுத்த திங்கட்கிழமைக்குள் போரடித்துவிடாதா?///

எனது சுஜாதா பற்றிய முந்தைய கமெண்ட்டில் குங்குமம் கேள்வி பதிலில் அவர் சொல்லியிருந்த கேள்வியும், பதிலும் அதன் உண்மையான வார்த்தைகளில் இங்கே உள்ளது.

said...

உன்மை..!!உன்மை..!!
//*சுஜாதாபற்றிய அரைகுறை புரிதலுடன், அவரை அறிவுசீவி பிம்பமாக நினைத்துக்கொண்டிருக்கும் பல ஆரம்பக்கட்ட வாசகர்களின் மனதை மாற்ற இதுபோன்ற கட்டுரைகள் எல்லா காலத்திலும் உதவும். எனக்குத் தெரிந்தே சில நண்பர்கள் தங்களின் கருத்தோட்டங்களை மாற்றிக்கொண்டுள்ளனர்.* //

said...

13
AUG சிவாஜியும் ஜோதிடமும்
By chittoor murugeshan

கீதாச்சாரியன்,இந்து மித்திரன் தவிர எல்லாரும் சிவாஜி படத்தை விமர்சித்துவிட்டார்கள் என்று சுஜாதா எழுதியுள்ளது நிஜமே. ஆந்திர நீதிபதிகள் கூட உலகமே பார்த்த பின்னாடி தடை கேட்கறிங்களே என்று கூறியிருக்கிறார்கள்.(படத்தில் சோனியா படத்தின் பக்கத்தில் வில்லனான சுமன் படத்தை காட்டியதற்காக காங்கிரஸ் கட்ச்சியினர் தடை கேட்டு கோர்ட்டுக்கு போனது தெரிந்ததே.)

இருந்தும் இந்த கட்டுரையை வலைதளத்தில் வைக்க காரணம் நான் ஒரு ஜோதிட ஆய்வாளன் என்பதே. சுஜாதா அறிவு ஜீவியாக இருக்கலாம் . ஆனால் அவர் தொடர்ந்து ஜோதிடம் குறித்த தவறான செய்திகளையே பதிவு செய்து வருகிறார்.

*இனி சிவாஜி பஞ்சாயத்துக்கு வருவோம். ஒரு பெண்ணிற்கு ஜாதகத்தில் கடும் தோஷம் உள்ளது. இதனால் கணவனுக்கு கண்டம் வரும் என்பது கதை. ரஜ்ஜு பொருத்தம் வேறு இல்லையாம் . எனவே கணவன் ஆபிச்சுவரியில் வருவது நிச்சயமாம். ஜோதிடருக்கு நாக்கில் மச்சமாம். எனவே அவர் சொல்வது நிச்சயம் பலிக்குமாம்.

ஜோதிட ஆய்வு என்பது பிராமணர்களின் சேப்டி லாக்கரில் இருந்து சூத்திரர்கள் கைக்கு மாறி பலகாலம் ஆயிற்று. பிராமணர்களை திதி பார்க்க மட்டுமே மக்கள் அணுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜாதி அபிமானத்தில், சூத்திரர்களின் வசம் போய்விட்ட ஜோதிடத்தை கேலிக்கிடமாக்கிவிடவேண்டும் என்ற தகிப்பினால் மேற்படி முடிச்சை சிவாஜி படத்திற்கு சுஜாதா பரிந்துரைத்திருக்க வேண்டும்.

திருமணப் பொருத்தம்:

திருமண பொருத்தம் என்பது முதலில் ஆண், பெண் ஜாதகங்களை வைத்து பார்க்கப்படவேண்டும். பெண் ,பிள்ளை ஜாதகத்தை பொறுத்து அவரவர்க்கு வர வேண்டிய வாழ்க்கை துணையை பற்றிய அம்சங்களை தெளிவுப்படுத்திக் கொள்ளவேண்டும்.

அந்த அம்சங்கள் தற்போது வந்துள்ள வரனுக்கு உள்ளதா என்று ஒப்பிடவேண்டும். பிறகு இருவருக்கும் போதுமான ஆயுள்(8 ஆமிடம்),தோஷங்கள் உள்ளனவா (செவ்வாய் தோஷம்,சர்ப்ப தோஷம் இத்யாதி),குரு,சுக்கிரன் நிலை என்ன? மறுமண யோகம் (7 ஆமிடம்) ஏதும் உள்ளதா? இதை எல்லாம் பார்த்தாக வேண்டும்.

தோஷமிருந்தால் இருவருக்கும் ஒரே அளவில் இருக்க வேண்டும் (அ) சுத்த ஜாதகங்களாக இருக்க வேண்டும். படத்தில் பெண்ணின் ஜாதகம் மட்டுமே ஜோதிடரிடம் காட்டப்படுகிறது. அவரோ தன் நாக்கில் உள்ள மச்சத்தை மட்டுமே தகுதியாக கொண்டு பலனை அள்ளி வீசுகிறார்.

மச்சத்துக்கு காரகர் ராகு. ஜாதகத்தில் ராகு எங்கு நிற்கிறாரோ அந்த பாகத்தில் மச்சம் ஏற்படும். நாக்கு என்பது 2 ஆமிடம். ஜாதகத்தில் 2 ஆமிடத்தில் ராகு நின்றால் நாக்கில் மச்சம் ஏற்படும்.
2 ஆமிடத்தில் ராகு வாக்கு பலிதத்தை எப்படி கொடுப்பார்?. வாக்கு தவறுதல்,பசி,பட்டினி,விஷம் குடித்து சாதல்,குடும்பத்தை விட்டு வெளியேறுதல் போன்ற கெட்ட பலன் களைத்தான் தருவார். நாக்கில் மச்சமிருப்பவர் சொன்னது பலிக்கும் என்பது தவறு.

வெறுமனே பெண் ஜாதகத்தை மட்டும் பார்த்துவிட்டு பலன் சொல்லும் ஜோதிடர் நிச்சயமாக ஒரு பொய்யராகத்தான் இருக்க வேண்டும். பெண் ஜாதகப்படி கணவனுக்கு தோஷம் இருந்து விட்டால் போதாது. அவனுடைய ஜாதகமும் அற்பாயுள் ஜாதகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் மரணம் ஏற்படும்.

அதிலும் ஜோதிடவியலை பொறுத்தவரை ம்ரணம்,சிறை,பிரிவு, ஐ.பி போடுதல்,தலை மறைவாதல்,தனிமை எல்லாமே சமமான பலன் களாகும். பெண்ணுக்கு எட்டாமிடம் மாங்கல்ய ஸ்தானம். அதில் தோஷம் இருந்த மாத்திரத்தில் கணவன் செத்துத்தான் போவான் என்று எந்த ஜோதிடனும் கூறக்கூடாது. அப்படி கூறினால் அவன் பொய்யன்.நாஸ்திகன். ஜாதகத்தை பார்த்து பலன் சொன்னாலே இது நிலைமை.

ரஜ்ஜுப்பொருத்தம்:மேலும் படத்தில் ரஜ்ஜுபொருத்தம் பற்றியும் ப்ரஸ்தாபனை வருகிறது. ஏக ரஜ்ஜு வருவதால் மரணம் நிச்சயம் என்று கூறப்படுகிறது. ரஜ்ஜு என்பது முக்கியமான பொருத்தம்தான் இல்லை என்று கூறவில்லை. அதற்காக மரணம் என்று ஒருவரியில் கூறுவதும்,அடுத்தடுத்த சம்பவங்கள் அதற்கேற்ற மாதிரியே நடப்பதும் தான் ஜோதிடத்தை கேலிக்கிடமாக்குகிறது.

மொத்தம் 5 வித ரஜ்ஜுக்கள் உள்ளன. இதில் எந்தெந்த ரஜ்ஜு ஏக ரஜ்ஜுவானால் என்ன பலன் என்று ஜோதிடம் குறிப்பிட்டு கூறுகிறது. அதன் விவரம் வருமாறு:
1.சிரோ ரஜ்ஜு-கணவன் மரணம்2.கண்ட ரஜ்ஜு-பெண் மரணம்3.உதர ரஜ்ஜு-புத்திர தோஷம்4.தொடை-பண நஷ்டம்5.பாதரஜ்ஜு-பிரயாணத்தில் தீமை
ஜாதகப்பொருத்தம் பார்க்க ஆண், பெண் ஜாதகங்களை பார்த்தாக வேண்டும்.

சிவாஜி ஜோதிடர் பெண் ஜாதகத்தை மட்டும் பார்த்து விட்டு,ரஜ்ஜு பொருத்தம் இல்லை மரணம் நிச்சயம் என்று கூறுகிறார்.
அவர் சொன்னது போலவே நடக்கிறது.

பல நூறு கோடிகள் செலவழித்து எடுக்கப்பட்ட படம் , அதிலும் அறிவு ஜீவியும், பிராமணருமான சுஜாதா வேறு டீமில் இருக்கிறார். ஒரு கிளி ஜோசியரை வரவழைத்து சிங்கிள் டீ வாங்கி கொடுத்து கேட்டிருந்தாலும் விஷயத்தை சொல்லியிருப்பார்.

அதைக் கூட செய்யாது சுஜாதா பாஷையில் சொன்னால் ஜல்லியடித்து, வேதங்களின் அந்தர் பாகமான ஜோதிடத்தை பற்றிய தவறான நம்பிக்கைகளை வெகுஜன மீடியாவில் பதிவு செய்துள்ளார்கள்.

said...

13
AUG சிவாஜியும் ஜோதிடமும்
By chittoor murugeshan

கீதாச்சாரியன்,இந்து மித்திரன் தவிர எல்லாரும் சிவாஜி படத்தை விமர்சித்துவிட்டார்கள் என்று சுஜாதா எழுதியுள்ளது நிஜமே. ஆந்திர நீதிபதிகள் கூட உலகமே பார்த்த பின்னாடி தடை கேட்கறிங்களே என்று கூறியிருக்கிறார்கள்.(படத்தில் சோனியா படத்தின் பக்கத்தில் வில்லனான சுமன் படத்தை காட்டியதற்காக காங்கிரஸ் கட்ச்சியினர் தடை கேட்டு கோர்ட்டுக்கு போனது தெரிந்ததே.)

இருந்தும் இந்த கட்டுரையை வலைதளத்தில் வைக்க காரணம் நான் ஒரு ஜோதிட ஆய்வாளன் என்பதே. சுஜாதா அறிவு ஜீவியாக இருக்கலாம் . ஆனால் அவர் தொடர்ந்து ஜோதிடம் குறித்த தவறான செய்திகளையே பதிவு செய்து வருகிறார்.

*இனி சிவாஜி பஞ்சாயத்துக்கு வருவோம். ஒரு பெண்ணிற்கு ஜாதகத்தில் கடும் தோஷம் உள்ளது. இதனால் கணவனுக்கு கண்டம் வரும் என்பது கதை. ரஜ்ஜு பொருத்தம் வேறு இல்லையாம் . எனவே கணவன் ஆபிச்சுவரியில் வருவது நிச்சயமாம். ஜோதிடருக்கு நாக்கில் மச்சமாம். எனவே அவர் சொல்வது நிச்சயம் பலிக்குமாம்.

ஜோதிட ஆய்வு என்பது பிராமணர்களின் சேப்டி லாக்கரில் இருந்து சூத்திரர்கள் கைக்கு மாறி பலகாலம் ஆயிற்று. பிராமணர்களை திதி பார்க்க மட்டுமே மக்கள் அணுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜாதி அபிமானத்தில், சூத்திரர்களின் வசம் போய்விட்ட ஜோதிடத்தை கேலிக்கிடமாக்கிவிடவேண்டும் என்ற தகிப்பினால் மேற்படி முடிச்சை சிவாஜி படத்திற்கு சுஜாதா பரிந்துரைத்திருக்க வேண்டும்.

திருமணப் பொருத்தம்:

திருமண பொருத்தம் என்பது முதலில் ஆண், பெண் ஜாதகங்களை வைத்து பார்க்கப்படவேண்டும். பெண் ,பிள்ளை ஜாதகத்தை பொறுத்து அவரவர்க்கு வர வேண்டிய வாழ்க்கை துணையை பற்றிய அம்சங்களை தெளிவுப்படுத்திக் கொள்ளவேண்டும்.

அந்த அம்சங்கள் தற்போது வந்துள்ள வரனுக்கு உள்ளதா என்று ஒப்பிடவேண்டும். பிறகு இருவருக்கும் போதுமான ஆயுள்(8 ஆமிடம்),தோஷங்கள் உள்ளனவா (செவ்வாய் தோஷம்,சர்ப்ப தோஷம் இத்யாதி),குரு,சுக்கிரன் நிலை என்ன? மறுமண யோகம் (7 ஆமிடம்) ஏதும் உள்ளதா? இதை எல்லாம் பார்த்தாக வேண்டும்.

தோஷமிருந்தால் இருவருக்கும் ஒரே அளவில் இருக்க வேண்டும் (அ) சுத்த ஜாதகங்களாக இருக்க வேண்டும். படத்தில் பெண்ணின் ஜாதகம் மட்டுமே ஜோதிடரிடம் காட்டப்படுகிறது. அவரோ தன் நாக்கில் உள்ள மச்சத்தை மட்டுமே தகுதியாக கொண்டு பலனை அள்ளி வீசுகிறார்.

மச்சத்துக்கு காரகர் ராகு. ஜாதகத்தில் ராகு எங்கு நிற்கிறாரோ அந்த பாகத்தில் மச்சம் ஏற்படும். நாக்கு என்பது 2 ஆமிடம். ஜாதகத்தில் 2 ஆமிடத்தில் ராகு நின்றால் நாக்கில் மச்சம் ஏற்படும்.
2 ஆமிடத்தில் ராகு வாக்கு பலிதத்தை எப்படி கொடுப்பார்?. வாக்கு தவறுதல்,பசி,பட்டினி,விஷம் குடித்து சாதல்,குடும்பத்தை விட்டு வெளியேறுதல் போன்ற கெட்ட பலன் களைத்தான் தருவார். நாக்கில் மச்சமிருப்பவர் சொன்னது பலிக்கும் என்பது தவறு.

வெறுமனே பெண் ஜாதகத்தை மட்டும் பார்த்துவிட்டு பலன் சொல்லும் ஜோதிடர் நிச்சயமாக ஒரு பொய்யராகத்தான் இருக்க வேண்டும். பெண் ஜாதகப்படி கணவனுக்கு தோஷம் இருந்து விட்டால் போதாது. அவனுடைய ஜாதகமும் அற்பாயுள் ஜாதகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் மரணம் ஏற்படும்.

அதிலும் ஜோதிடவியலை பொறுத்தவரை ம்ரணம்,சிறை,பிரிவு, ஐ.பி போடுதல்,தலை மறைவாதல்,தனிமை எல்லாமே சமமான பலன் களாகும். பெண்ணுக்கு எட்டாமிடம் மாங்கல்ய ஸ்தானம். அதில் தோஷம் இருந்த மாத்திரத்தில் கணவன் செத்துத்தான் போவான் என்று எந்த ஜோதிடனும் கூறக்கூடாது. அப்படி கூறினால் அவன் பொய்யன்.நாஸ்திகன். ஜாதகத்தை பார்த்து பலன் சொன்னாலே இது நிலைமை.

ரஜ்ஜுப்பொருத்தம்:மேலும் படத்தில் ரஜ்ஜுபொருத்தம் பற்றியும் ப்ரஸ்தாபனை வருகிறது. ஏக ரஜ்ஜு வருவதால் மரணம் நிச்சயம் என்று கூறப்படுகிறது. ரஜ்ஜு என்பது முக்கியமான பொருத்தம்தான் இல்லை என்று கூறவில்லை. அதற்காக மரணம் என்று ஒருவரியில் கூறுவதும்,அடுத்தடுத்த சம்பவங்கள் அதற்கேற்ற மாதிரியே நடப்பதும் தான் ஜோதிடத்தை கேலிக்கிடமாக்குகிறது.

மொத்தம் 5 வித ரஜ்ஜுக்கள் உள்ளன. இதில் எந்தெந்த ரஜ்ஜு ஏக ரஜ்ஜுவானால் என்ன பலன் என்று ஜோதிடம் குறிப்பிட்டு கூறுகிறது. அதன் விவரம் வருமாறு:
1.சிரோ ரஜ்ஜு-கணவன் மரணம்2.கண்ட ரஜ்ஜு-பெண் மரணம்3.உதர ரஜ்ஜு-புத்திர தோஷம்4.தொடை-பண நஷ்டம்5.பாதரஜ்ஜு-பிரயாணத்தில் தீமை
ஜாதகப்பொருத்தம் பார்க்க ஆண், பெண் ஜாதகங்களை பார்த்தாக வேண்டும்.

சிவாஜி ஜோதிடர் பெண் ஜாதகத்தை மட்டும் பார்த்து விட்டு,ரஜ்ஜு பொருத்தம் இல்லை மரணம் நிச்சயம் என்று கூறுகிறார்.
அவர் சொன்னது போலவே நடக்கிறது.

பல நூறு கோடிகள் செலவழித்து எடுக்கப்பட்ட படம் , அதிலும் அறிவு ஜீவியும், பிராமணருமான சுஜாதா வேறு டீமில் இருக்கிறார். ஒரு கிளி ஜோசியரை வரவழைத்து சிங்கிள் டீ வாங்கி கொடுத்து கேட்டிருந்தாலும் விஷயத்தை சொல்லியிருப்பார்.

அதைக் கூட செய்யாது சுஜாதா பாஷையில் சொன்னால் ஜல்லியடித்து, வேதங்களின் அந்தர் பாகமான ஜோதிடத்தை பற்றிய தவறான நம்பிக்கைகளை வெகுஜன மீடியாவில் பதிவு செய்துள்ளார்கள்.

said...

சுஜாதாவின் உண்மை முகம் !

http://nermai.wordpress.com/2007/05/21/sujatha/

said...

this is pointless argument. think him as a just writter. he was not a god. Tamil people dont have humor sence..............

Related Posts with Thumbnails