TerrorisminFocus

Thursday, January 20, 2011

உச்சிக் குடுமி மன்றத்தின் ஆர் எஸ் எஸ் தீர்ப்பு - தாராசிங்

ச்சரிக்கை செய்திருந்தது போலவே உச்சிக்குடுமி நீதிமன்றம் ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை வழக்கில் தாராசிங்கிற்கு மரண தண்டனையை நிராகரித்துள்ளது. மேலும், 11 ஆர் எஸ் எஸ் கிரிமினல்களின் விடுதலையையும் உறுதி செய்துள்ளது.

""
1998இல் பஜ்ரங்தள் கிரிமினல் தாராசிங்கால் பாதிரியார் ஸ்டெயின்ஸம் அவரது இரு பச்சிளம் குழந்தைகளும் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கின் நிலை அதைவிடக் கேவலமானது. தாராசிங்கிற்கு மரணதண்டனையும் 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து 2003 இல் தீர்ப்பளித்தது சி.பி.ஐ. நீதிமன்றம். பாதிரியை எரித்த கையோடு சையிக் ரஹ்மான் என்ற வியாபாரியை எரித்துக் கொன்றது பாதிரியார் அருள்தாஸை வெட்டிக் கொன்றது ஆகிய வழக்குகளும் தாராசிங்கின் மீது உள்ளன. ஆனால் சி.பி.ஐ. நீதிமன்றமோ ஸ்டெயின்ஸ் பாதிரியார் எரிக்கப்பட்ட சம்பவம் அரிதிலும் அரிதானதொரு சம்பவம் என்றது. சங்கப் பரிவாரங்களுடன் தாராசிங்கிற்கு உள்ள தொடர்புகள் குறித்து ஆதாரங்கள் நீதிமன்றத்தின் முன்பு வைக்கப்பட்டன. ஆனால் இந்த படுகொலையில் எந்த அமைப்புக்கும் தொடர் பில்லையென்று கூறியது சி.பி.ஐ. நீதிமன்றம்.

இந்த விளக்கங்களுக்குப் பொருத்தமானதொரு தீர்ப்பாக தாராசிங்கின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும் 11 பேரை விடுதலை செய்தும் 2005இல் தீர்ப்பு வழங்கியது ஒரிசா உயர்நீதிமன்றம். பாதிரியாரைக் கொலை செய்யும் வகையில் தாராசிங் தாக்கியதற்கு ஆதாரமில்லை என்று வேறு உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
"" (புதிய ஜனநாயகம் 2010)

2005ல் இப்படியென்றால், 2010ல் உச்சிக்குடுமி மன்றம் இன்னும் ஒரு படி மேலே சென்று, மத மாற்றம்தான் இந்தப் படுகொலைக்குக் காரணம் என்ற அரியதொரு ஆர் எஸ் எஸ் கண்டுபிடிப்பை மக்களுக்கு வழங்கியுள்ளது.

"We hope Mahatma Gandhi's vision of religion playing a positive development integrating into a prosperous nation will be realized. There is no justification from interfering in someone's belief through force, conversion or false premise that one religion is better than the other."

இதைத்தானே ஆர் எஸ் எஸ்ம் சொல்லுது? அதாவது இனிமே எவனாவது மதமாற்றத்திற்கு பிரச்சாரம் செய்தால் கொலைகள் நிகழும் என்று ஆர் எஸ் எஸ்ன்  குரலில் சொல்கிறது உச்சிக்குடுமி மன்றம்.

தாராசிங் திட்டமிட்டு படுகொலைகள் செய்கிறவன் என்பதும், ஆர் எஸ் எஸ்-பஜ்ரங்தள்ளின் தலைவன் என்பதும் மறுக்க இயலாத அளவு நிருபிக்கப்பட்டுள்ள போதும் அவற்றை நீதிமன்றம் ஏற்கவில்லை எனவே அவனுக்கு ஆயுள் தண்டனை. அதே நேரத்தில் பினாயக் சென்னுக்கோ அவர் அரசின் அயோக்கியத்தனத்தை அமைதி வழியில் தட்டிக் கேட்டார் என்பதற்காகவே அவருக்கெதிராகக் கொடுக்கப்பட்ட எல்லாமே பொய் ஆதாரங்கள் என்ற போதும் ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அயோக்கியத்தனத்துடன் ஒப்பிடும் போது பிரிட்டிஷ்காரன் கூட கொஞ்சம் நேர்மையா இருந்தானே?

இப்படி, நீதிமன்றங்களே ஆர் எஸ் எஸ்ன் பினாமிகளாக இருக்கும் போது ஆப்டர் ஆல் பத்ரி சேஷாத்ரியின் கிழக்குப் பதிப்பகமும், பா.ராகவனும் ஆர் எஸ் எஸ் பினாமிகளாக இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

தங்களை நடுநிலைவாதிகள் என்றும், இந்தியாவில் ஜனநாயகம் என்ற ஏதோ ஒன்று, எங்கோ ஒளிந்து கொண்டிருப்பதாகவும் அதனைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் இந்த இடத்தில் சிந்திக்க வேண்டும்.

அசுரன்


காவிக் கறை படிந்த தீர்ப்புகள்



இது துரோகத்தின் விளை நிலம்!


பினாயக் சென்னை விடுதலை செய்! சென்னையில் HRPC மறியல், 90 பேர் கைது!!


பினாயக்சென் விடுதலை: அரசை எதிர்த்ததால் இரண்டாண்டு சிறைவாசம்!!


டீச்சர்.. அருந்ததி ராய் என்னக் கிள்ளிட்டா - நிர்மலா சீதாராமன்!!


சீமான் கைது - இது ஆரம்பம் மட்டுமே!!!


அயோக்கியா: தீர்ப்பும், வரலாறும்!!

Friday, December 10, 2010

விக்கிலீக்கை ஆதரிப்போம்!!

மீபத்தில் விக்கிலீக் வெளியிட்ட ரகசிய அமெரிக்கத் தூதரக உரையாடல்கள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. உலகிலுள்ள பல்வேறு அரசுகள், குறிப்பாக யுத்தவெறி பிடித்த அமெரிக்க அரசின் ரகசிய அயோக்கியத்தனங்களை துகிலுரித்தன விக்கிலீக்கின் இந்தச் செயல்பாடுகள். இதனைத் தொடர்ந்து கடும் கோபமுற்றுள்ள அமெரிக்கா விக்கிலீக்கின் ஸ்தாபகர் ஜூலியன் ஆசென்ஜை போலியான பாலியல் பாலாத்கார குற்றத்தில் லண்டனில் கைது செய்துள்ளது. அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.










இது தவிர விக்கிலீக் தளத்திற்கான பணப்பட்டுவாடாவை கையாண்டு வந்த விசா, மாஸ்டர் கார்டு மற்றும் பே பால் போன்ற தனியார் நிறுவனங்கள் தற்போது தமது சேவைகளை தீடிரென்று நிறுத்திக் கொண்டுள்ளனர். விக்கிலீக் தளம் செயல்பட்டு வந்த அமேசான் வழங்கி தனது சேவையை தடை செய்து விட்டது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், விக்கிலீக் சட்டவிரோதமான செயலில் இறங்கியுள்ளது என்பதே ஆகும். இது நகைப்புக்குரியது, ஏனேனில் ரகசிய ஆவணங்களை பத்திரிகைகளில் வெளியிடுவது சட்டவிரோதமானது அல்ல.










மேலும், அமெரிக்கா மற்றும் அதன் அல்லக்கை நாடுகளின் சகல மூன்றாம்தர இணையப் பொறுக்கிகளும் தற்போது விக்கிலீக்கின் இணையச் செயல்பாடுகளை முடக்க சட்டவிரோத வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை சமாளிக்கும் வகையில் பல்வேறு இணையக் திசைதிருப்பித் தளங்களில் (மிரர் சைட்டுகள்) தற்போது விக்கிலீக் செயல்பட்டு வருகிறது. விவரம் இங்குள்ளது: . இவற்றுக்கு எதிராக உலகம் முழுவதிலும் விக்கிலீக்கிற்கு ஆதரவாக ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம் இவற்றில் நம்பிக்கை கொண்ட ஆர்வலர்கள் களம் இறங்கியுள்ளனர். அரசு இணையதளங்களும், விக்கிலீக் எதிர்ப்புத் தளங்களான விசா, மாஸ்டர் கார்டு, அமேசான் போன்றவை விக்கிலீக் ஆத்ராவாளர்களால் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன.


இன்னிலையில், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் விக்கிலீக்கை பாதுகாக்க வேண்டிய அவசியம் உணர்ந்து விக்கிலீக்கின் மீது நடந்து வரும் இந்த அநீதிகளை எல்லாருக்கும் பெரும் அளவில் கொண்டு செல்லவேண்டும். விக்கிலீக்கின் போராட்டத்தில் அதற்கு பக்கபலமாக நிற்க வேண்டும்.

பதிவர்களாகிய நாம் விக்கிலீக்கை ஆதரிப்போம் என்ற லோகோவை நமது தளங்களில் ஒட்டியும், பேஸ்புக், டிவிட்டர்களிலும், இமெயில்களிலும் விக்கிலீக் பற்றிய செய்திகளை பகிர்ந்து கொண்டும். நேர் உரையாடல்களில் இது குறித்து பேசியும் தமது ஜனநாயக உணர்வை வெளிப்படுத்த கடமைப்பட்டுள்ளனர்.

தோழமையுடன்,
அசுரன்

விக்கிலீக் லோகோ:






wikileaks facebook: http://www.facebook.com/wikileaks#!/wikileaks?v=wall

தடையை மீறி விக்கிலீக்: http://www.wikileaks.ch/mirrors.html

விக்கிலீக்ஸ் பற்றிய ஒரு தொடர் பதிவு:

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 8

Saturday, November 13, 2010

பன்னியக் குளிப்பாட்டி அதுக்கு குதிரை என்று பெயர் வை!!

மியான்மார்ல ராணுவ ஆட்சியாம். என்ன கொடுமை பாருங்க 15 வருசமா ஆங்சான் சூகியி என்ற தலைவரை வீட்டுச் சிறையில் வைத்துள்ளனராம். இப்போதான் ரிலீசே செஞ்சிருக்காங்க. ராணுவ ஆட்சின்னா எப்படி இருக்கும்? நம்ம மாதிரி 'ஜனநாயாக' நாட்டுல இருக்குறவங்களுக்கு அந்த கஸ்டம் புரியாதுதான். இப்படியும் பலர் பெருமிதத்துடன் பேசிக் கொள்கிறார்கள்.

அது சரி. ஆங்சான் சூகியியாவது தற்போது விடுதலை செய்யப்பட்டு விட்டார். ஆனால் கடந்த 10 வருடங்களாக இந்தியாவில் நடக்கும் ராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடி உண்ணாவிரதம் இருந்து வருகிறார் ஐரோம் சர்மிளா. அவரை கைது செய்து 10 வருடங்களாகின்றன. அவருக்கு என்று விடுதலை? 60 வருட ஜனநாயகம் சர்மிளாவுக்கு தராததை, மியான்மார் ராணுவ ஆட்சி ஆங்சான் சூகியிக்கி தந்திருக்கு என்று சொல்லலாமா?

ஐரோம் சர்மிளா




இந்திய ராணுவம் - ஊர் மேயும் மைனர் பொறுக்கிகள்


ஜம்மு-காஷ்மீரிலும், மணிப்பூரில் 1961லிருந்தும், பெரும்பாலான வடகிழக்குப் பகுதிகளில் 1972லிருந்து ராணுவத்திற்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கொடுங்கோலாட்சிதான் நடக்கிறது. அரசே ஒத்துக் கொண்ட படி இதுவரை 20,000 பேருக்கும் மேல் காணாமல் போயுள்ளனர் மணிப்பூரில். தேச சேவை செய்வதாகக் கதை விட்டுக் கொண்டு தேக சேவை செய்யும் ராணுவப் பொறுக்கிகள் மீதுள்ள 458 வழக்குகளை விசாரிக்கக் கோரியுள்ளது ஜம்மு காஷ்மீர் அரசு. இன்று இத்தகைய ராணுவ ஆட்சி தண்டகாரன்யா, மத்திய இந்தியா, மேற்கு வங்கம் என விரிவாகி வருகிறது. நிலைமை இப்படியிருக்கு ஈயம் பித்தளையைப் பார்த்து பல்லிளித்த கதையாக இந்திய ஜனநாயகம், மியான்மார் ராணுவநாயகம் என்று வெத்துப் பெருமை பேசி இளித்துக் கொண்டழைகிறார்கள் சிலர்.

நாடாளுமன்றத்தில் படுத்துபுரளும் ஒரு எம். பி.



பன்றித் தொழுவத்தில் படுத்துப் புரளும் சில பன்றிகள் (பன்னினும் சொல்லலாம், நீங்க சொல்ற மாதிரிஎம்.பி.னும் சொல்லலாம்)

பன்னியக் குளிப்பாட்டி அதுக்கு குதிரை என்று பெயர் வைத்தால் அது #$%டேஸ்@#@ திங்காமல் இருந்துவிடப் போகிறதா என்ன? பன்றித் தொழுவத்துக்கு செண்ட் அடிச்சி நாடாளுமன்றமென்று பேர் வைத்தால் அது மியான்மார் ராணுவ ஆட்சியிலிருந்து இந்திய போலி ஜனநாயகத்தை வித்தியாசப்படுத்திவிடுமா என்ன?

அசுரன்

Related:

Irom And Her Sisters


Murder In Plain Sight

Irom And The Iron In India’s Soul

Tuesday, October 26, 2010

டீச்சர்.. அருந்ததி ராய் என்னக் கிள்ளிட்டா - நிர்மலா சீதாராமன்!!

ருந்ததிராய் மற்றும் கிலானி இருவரையும் அரசுக்கு எதிராக சதி செய்ததாகக் கூறி கைது செய்ய வேண்டும் என்று மதச்சார்புள்ள பாஜகவும், 'போலி கம்யூனிஸ்டுகளின் அக்மார்க் முத்திரையுடன்' மதசார்பற்றதாக காட்டப்படும் காங்கிரசும் ஒரே களேபாரம் செய்தன நேற்று. பிரச்சினை என்னவென்றால், 'விடுதலை ஒன்றுதான் தீர்வு' (Azadi - The Only Way) என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்ற பேருண்மையை அவர்கள் இருவரும் பேசிவிட்டார்கள். அதுவும் டெல்லியில். குறிப்பாக அருந்ததிராய் சொன்னது #$த்தில் சுண்ணாம்பு தடவியது போலாகிவிட்டது: "காஷ்மீர் எந்த காலத்திலும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை. இது வரலாற்று உண்மை. இதனை இந்திய அரசாங்கமும் ஏற்றுக் கொண்டுள்ளது".

இந்தக் கருத்தரங்கம் நடந்த முடிந்தவுடன், உள்துறை அமைச்சரை சந்திக்க ஓடி வந்தனர் எதிர்கட்சி பாஜகவினர். உள்துறை அமைச்சரும் விடியோ ஆதாரங்களைப் பார்த்து நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கொடுத்துள்ளதாக பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுத்தார் பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன்.


டீச்சர்.. அவன் என்னக் கிள்ளிட்டான் - கோள் மூட்டும் துஸ்டத்தனமான சிறுமி


மனித உரிமை என்ற பெயரில் பிரிவினைவாதிகளையும், நக்சல்களையும் ஆதரிக்கிறார்கள் அருந்ததி ராய் போன்றோர் என்று மதவாதிகளையும், காவி பயங்கரவாதிகளையும், தேச விரோதிகளையும், நாட்டின் எதிரிகளையும் வைத்து கட்சி நடத்தும் பாஜக குதியோ குதி என்று குதிக்கிறது.

வரலாறு முழுவதும் இந்துத்துவத்திற்கு பக்கவாத்தியம் வாசிக்கும் பாத்திரம் ஏற்றுள்ள காங்கிரசு, இதற்கும் வாசித்துள்ளது. காங்கிரசுத் தலைவர் சத்யப் பிரகாஷ் மால்வியா அருந்ததிராய் தனது கருத்துக்களை வாபஸ் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று மிரட்டுகிறார். சட்ட அமைச்சர் மொய்லி, 'ரெண்டு பேரும் இப்படிச் சொன்னது ரொம்ப துரதிருஷ்டமானது' என்று சொல்கிறார். யாருக்கு துரதிருஷ்டம்? யாருக்கோ.... என்று வடிவேலு பாணியில் மனதுக்குள் பேசிக் கொள்வார் போல என்று நினைத்தால் அடுத்த வரியில் சொல்கிறார், 'பேச்சு சுதந்திரமெல்லாம் இருக்கத்தான் செய்யுது.. ..அதுக்காக மக்களோட தேசப் பற்றுணர்வை புண்ணாக்கும் விதமாகப் பேசக் கூடாது' என்று தொடர்கிறார். யாருக்கு துரதிருஷ்டம் என்று தெளிவாகவே எச்சரிக்கை செய்து விட்டார்.

பேச்சு சுதந்திரம் பற்றி மொய்லி சொல்வது இருக்கட்டும், ஜான் ஸ்டுவர்ட் மில் என்ன சொல்கிறார் என்று முதலில் பார்ப்போம். ஜான் ஸ்டுவர்ட் மில் யாரென்று தெரியாதவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன், எனக்கும் அவர் யாரென்று தெரியாது. பேச்சு சுதந்திரம் என்பது என்னவென்றால், 'ஒருவருடைய கருத்தினால் பலருக்கு துன்பம் ஏற்படுவதை தடுப்பது என்ற நோக்கத்தில் மட்டுமே அவருடைய வாயை பலவந்தமாக அடைப்பதை நியாயப்படுத்த முடியும்' என்கிறார்(நன்றி: தி இந்து - அக்டோபர் 27, 2010 தலையங்கம்). எடுத்துக்காட்டுக்கு நம்ம நண்பர் அதியமானின் கருத்துக்களில் எனக்கு ஒப்புதல் இல்லாவிடினும் அதை அவர் பேசும் உரிமை அவருக்கு உண்டு என்ற உண்மையை நான் அங்கீகரிப்பதாகும். இதைத்தான் அருந்ததி ராயும் வேறு வார்த்தைகளில் சொல்கிறார், 'மதவெறி படுகொலையாளர்களாயும், மொத்த மொத்தமாக படுகொலைகள் செய்தவர்களையும், ஊழல்வாதிகளையும், கொள்ளையர்களையும், பாலியல் வன்புணர்வாளர்களையும், ஏழைகளைச் சுரண்டி கொழுப்பவர்களையும் சுதந்திரமாக அலைய விட்டு விட்டு, நீதி வேண்டும் என்று கேட்க்கும் என்னைப் போன்றவர்களை சிறையிலடைக்க முயலும் இந்த தேசத்தை நினைத்து பரிதாபப்படுகிறேன்' என்று. கிலானி இன்னும் ச்ஜிம்பிளாக முடித்துக் கொண்டார், 'எம்மேல ஏற்கனவே 70 கேசு இருக்கு இது 71வ்து' என்று.


இந்த லாவணிகள் எல்லாம் முடிவதற்குள்ளாக அருந்ததி ராயையும், கிலானியையும் கைது செய்வது பற்றிய பரிசீலனைகளை காங்கிரசு முடித்துக் கொண்டு ரிசல்டை அறிவித்துவிட்டது. இதுக்கெல்லாம் கைது செய்ய முடியாது என்று. சரி, உண்மையிலேயே காங்கிரசு பேச்சு சுதந்திரத்தை மதித்துத்தான் இந்த முடிவை எடுத்ததா? இல்லை நண்பர்களே, அத்வானி, மோடி போன்ற கிரிமினல் பாசிஸ்டுகளை பெருமைமிக்க தலைவர்களாக அலைய விடும் காங்கிரசு, எளிய உண்மைகளை உரக்க பேசிய குற்றத்திற்காக சீமான், பினாயக் சென், ஹிமான்சு குமார், ஐரோம் சர்மிளா உள்ளிட்ட பலரை சிறையிலடைத்தும், அடித்து மிரட்டியும் ஒடுக்கியுள்ளது.

அருந்ததிராய், கிலானி இருவரையும் சதி செய்ய முயன்றதாகக்(124A) கூறி கைது செய்யவே டெல்லி போலிசுக்கு முதலில் மத்திய காங்கிரசு அரசு பரிந்துரைத்துள்ளது. பிறகுதான் பின் வாங்கியுள்ளது.

அருந்ததிராய் விசயத்தில் அவரை முடக்கிப் போட நடந்த முயற்சிகளில் இதுவும் ஒன்று என்பதைத் தாண்டி இதில் காங்கிரசின் ஜனநாயக முகம் எதுவும் இல்லை. காஷ்மீர் மக்களின் போர்க்குணமிக்க போராட்டங்களும், அருந்ததிராயின் செல்வாக்குமே காங்கிரசை பதுங்கித் தாக்க அறிவுறுத்துகிறது. சுருக்கு இறுகுகிறது, வாயை அடைத்துக் கொள் என்று சாத்வீகமாக அருந்ததிராயை மிரட்டுவது ஒன்றுதான் இந்த விசயத்தை பொறுத்த வரை காங்கிரசின் அதிகபட்ச இலக்கு. மிரட்டல் அருந்ததிக்கு மட்டுமல்ல, மனசாட்சியுள்ள எல்லாருக்கும்தான்.

மக்களின் வெறுப்பை மேலும், மேலும் சம்பாதித்து நாடு முழுவதும் அம்பலப்பட்டுப் போயுள்ளது இந்திய அரசு. இந்நிலையில் பெரும் பீதியுற்றுள்ள அரசு தனது பாசிச அஸ்திரங்களைத்தான் ஒரேயடியாக நம்பியுள்ளது. எனவேதான் தன்னை நோக்கிய சிறு சலசலப்பையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கிறது. அதை தேசப் பற்று என்று நியாயம் பேசுகிறது. இந்தியா முழுவதும் மக்கள் பிரச்சினைகளுக்காக களம் இறங்கிப் போராடிய பல்வேறு ஜனநாயக சக்திகளை சமீப காலங்களில் கைது செய்தும், மிரட்டியும் முடக்கிப் போட்டுள்ளது இந்திய அரசு(தெஹல்கா). சீமான் கைதின் போது இந்தத் தளத்தில் எழுதப்பட்ட கட்டுரையின் மையக் கருவும் இதுதான், 'சீமான் கைது - இது ஆரம்பம் மட்டுமே'.

பன்னாட்டு கம்பனிகளுக்காக அரசியலமைப்புச் சட்டத்தை மீறி மக்களைக் கொல்லும், காங்கிரசும், சிபிஎம்மும் ஒரு பக்கம் என்றால், அதே அரசியலமைப்புச் சட்டத்தை மீறி மக்களை மதத்தின் பெயரால் கொல்லும் பாஜக இன்னொரு பக்கம். இதுதான் இந்திய 'ஜனநாயகம்'. இப்படி அரசியலமைப்புச் சட்டம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இந்துத்துவத்திற்கும் மீறப்படுமானால் அது தேசப்பற்றுக்கு விரோதமானது அல்ல என்பதே இவர்களின் நியாயம். தேசப்பற்று என்றால் என்னவென்று இந்தச் சிறுபிள்ளைகளுக்கு சரியான வகையில் பாடம் புகட்டுவதே ஜனநாயக சக்திகளின் இன்றைய பெரும் கடமையாக முன்னெழுந்துள்ளது.

அசுரன்

Monday, October 25, 2010

இந்துக்களின் வழிபாட்டுரிமைக்காக இந்துத்துவக் குரங்குகள் போராடுமா?

புண்ணிய பூமியாம் இந்த பாரதத்தில் இந்துக்களுக்கு எங்குமே நிம்மதியில்லை. பாரத மாதாவின் புதல்வர்களாம் இந்துக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் தட்டிக் கேட்பதற்கு ஆர் எஸ் எஸ்யையும் அதன் சங் பரிவார குரங்குகளையும் விட்டால் வேறு நாதியில்லை - இதெல்லாம் ஆர் எஸ் எஸ் குரங்குகளின் வழக்கமான புலம்பல்களாகும்.

இவர்கள் சொல்லும் இந்துக்கள் யார்? இதோ அந்த அப்பாவி இந்துக்கள்தான் திருப்பூர் உத்தமபாளையத்தில் தலித்துக்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கிறார்கள். திருப்பூரில் பெரிய புடுங்கி போல வலம் வரும் ஆர் எஸ் எஸ் இந்து - காவி பயங்கரவாதிகள் இந்த தலித் 'இந்து'க்களின் வழிபாட்டுரிமைக்காக ஏன் போராடுவதில்லை? தமிழகம் முழுவதும் இவ்வாறு தலித்துக்களின் வழிபாட்டு உரிமையை எதிர்த்து ஆதிக்க சாதி வெறியர்கள் நடத்திய பல்வேறு கொலை வெறித் தாக்குதல்கள் இந்த சுட்டியில் இருக்கின்றன. வினாயகர் சதுர்த்தி அன்று அய்யோ இந்துக்களின் உரிமையெல்லாம் பறி போகிறதே என்று ஒப்பாரி வைத்து அப்பாவி கிருத்துவ, முஸ்லீம் மக்களை வில்லன்களாக்கும் இந்த கிரிமினல்கள், ஏன் அதே போல தலித்துக்களின் வழிபாட்டு உரிமையைப் பறிக்கும் ஆதிக்க சாதியினரை எதிர்த்து ஒப்பாரி வைப்பதில்லை?

ஏனேனில், கவுண்ட சாதி வெறியர்களிடமு, பிற சாதி வெறியர்களிடமும் கஞ்சி வாங்கி ஊற்றிக் கொண்டுதான் ஆர் எஸ் எஸ் அல்லக்கைகள் வயிறு வளர்க்கிறார்கள். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்ய முடியுமா? அதுப் பாரதப் பண்பாடாகுமா என்ற லாஜிக் பிரச்சினையின் காரணமாக அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்று யாரும் தப்பாக எடை போட்டுவிடாதீர்கள்.

இங்கு மட்டுமல்ல இந்தியா முழுவதுமே ஆதிக்க சாதி வெறியர்களின் காலை நக்கும் சொறி நாய்தான் ஆர் எஸ் எஸ் இந்து காவி பயங்கரவாத கும்பல். குஜராத்தில் சாதி மீறி காதல் மணம் புரிபவர்களை கடத்தி வந்து பிரிப்பதற்கு என்றே ஆர் எஸ் எஸ் குண்டன் ஒருவன் பிரபலமாக உள்ளான். இதே காவிக் கொடி சாதி வெறி சொறிநாய்கள்தான், பசு மாட்டுத் தோலுரித்த குற்றத்திற்காக தலித்துக்களை உயிருடன் தோலுரித்தனர்.

இப்படியெல்லாம் அயோக்கியத்தனம் செய்யும் இந்த பொய்யர்கள் இன்னொரு பக்கம் இந்துக்களுக்கு அபாயம், இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று கதறுவதின் ஒரே நோக்கம், கலவரங்களின் போது அடியாள் வேலை செய்ய தலித் மக்களை அணி திரட்டுவதே ஆகும். எனவே...

எச்சரிக்கே....
எச்சரிக்கை, எச்சரிக்கை, எச்சரிக்கை...
அந்த ஆர் எஸ் எஸுக்காரன் வற்றான் எச்சரிக்கை....

எச்சரிக்கை, எச்சரிக்கை, எச்சரிக்கை...
கையில் தீப்பெட்டிய எடுத்து வற்றான் எச்சரிக்கை...

அசுரன்

Saturday, October 23, 2010

மாட்டிக் கொண்ட திருடனும், சந்தைக் கடை ரவுடியும் - ஒரு ஆர்எஸ்எஸ் காவி பயங்கரவாதியின் கதை!!

ந்தையிலோ அல்லது காலனியிலோ திருடன் எவனாவது மாட்டிக் கொண்டால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவனை ஒரு விளக்குக் கம்பத்தில் கட்டி வைத்து மக்களெல்லாம் ஒன்று கூடி கையில் கிடைத்ததை வைத்து அடித்து நொறுக்குவார்கள். இப்படி நடந்து கொண்டிருக்கும் போதே திருடனுடன் ஒப்பிடும் போது கொஞ்சம் ரீஜெண்டான தோற்றம் உள்ள (வேறென்ன வெளுத்த சட்டை வேட்டி, அல்லது பேண்டு) ஒரு தடியன் திடீரென்று எங்கிருந்தோ தோன்றுவான். மக்களே மிரண்டு போகும்படி கட்டி வைக்கப்பட்ட திருடனை சகட்டு மேனிக்கு அடித்து நொறுக்குவான். இந்த இடத்தில் மக்கள் சுதாரிக்கவில்லையென்றால், 'இந்த மொள்ளமாறிய நான் பாத்துக்கிறேன் சார்', 'கொய்யால,எங்க ஏரியாவுலய வேலையக் காட்டுற' என்று பலப் பல உதார் வசனங்களை உதிர்த்து விட்டு திருடனை தன்னுடன் இழுத்துச் செல்வான். அத்துடன் இருவரும் எஸ்கேப் ஆவார்கள்.

இதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், இப்போ இதே மாதிரி ஒரு விசயம் நடந்து வருகிறது. அதைப் பார்ப்போம்.

ஆர்எஸ்எஸ் தலைவனான இந்திரேஸ் குமார் பல்வேறு குண்டு வெடிப்பு செயல்களை செய்த ஆர்எஸ்எஸ் காவி பயங்கரவாத கும்பல்களின் தலைவன் என்பதை ஹெட்லைன்ஸ் டுடே வெளியிட்ட விடியோ ஆதாரங்கள் அம்பலப்படுத்தியிருந்தன. இதனை ஒட்டி இடப்பட்ட இடுகை இங்குள்ளது(முற்றும் கழண்ட டவுசர்!! அடடே ஆர் எஸ் எஸ் அம்மணக்கட்டை!!!).

(இந்து-காவி பயங்கரவாத கும்பலின் கொடி)


இவன் தேச விரதோ-சமூக விரோத சக்தியான ஆர்எஸ்எஸ் காவி பயங்கரவாத கும்பலின் முக்கியத் தலைவனாவான். பல்வேறு தலைமைப் பொறுப்புகள் வகிப்பவன். குறிப்பாக, ஆர்எஸ்எஸ்ன் முஸ்லீம் பிரிவின் தலைவனாகவும் உள்ளான் என்பது இவர்களது அயோக்கியத்தனத்திற்கு ஒரு சோற்றுப் பதம். மேலும், இவன் தான் காஷ்மீர் அமர்நாத் நிலப் பிரச்சினையை தூபம் போட்டு வளர்த்தவர்களில் ஒருவன். இவன் தான் நேபாள மாவோயிஸ்டுகளுக்கு எதிராகவும் வேலை செய்துள்ளான். மொத்தத்தில் தன்னைச் சுற்றியுள்ள நாடுகளில் ஒருவனும் நிம்மதியாக இருக்கக் கூடாது என்ற ஆர்எஸ்எஸ்ன் கொள்கையை செயல்படுத்திய பெரும் பயங்கரவாதியாவான்.

தற்போது ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் அஜ்மீர் குண்டு வெடிப்பு வழக்கில் இவனையும், இதர காவி பயங்கரவாதிகளையும் குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளனர். மிக விரிவாகத் திட்டமிட்டு, பயங்கரவாதிகளின் கூட்டங்களை நடத்தியுள்ளானாம். மத நிறுவனங்கள் என்ற பெயரில் ஏதாவதொரு அமைப்பை அமைத்துக் கொண்டு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட ஐடியாக் கொடுத்துள்ளான். அப்போதுதானே ஆர்எஸ்எஸ் என்ற தேசவிரோத காவி பயங்கரவாத அமைப்பைக் காப்பாற்ற முடியும்?

(மலேகான் குண்டு வெடிப்பில் இந்து-காவி பயங்கரவாதிகள்)


(இந்து-காவி பயங்கரவாதி இந்திரேஸ் குமார் - ஆர் எஸ் எஸ் தலைவன்)


இந்த உண்மைகளெல்லாம் புதிய விசயங்கள் அல்ல ஆனால் முதல்முறையாக அரசாங்கம் இந்த விசயங்களை அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது என்பதுதான் புதிய விசயம். ஆனால், வழக்கம் போல இது ஒரு அரசியல் சதி என்று புலம்புகிறது ஆர்எஸ்எஸும் அதன் ஆசனவாயான பாஜகாவும். மீசையில் மண் ஒட்டாத குறையாக 'ஆர்எஸ்எஸ் போன்ற தேசத்தை கட்டியமைக்கும்(தேசவிரோத-சமூக விரோத என்று புரிந்து கொள்ளவும்) அமைப்பின் பெருமையின் மீது சேறடிக்கும் சதி' என்று கூச்ச நாச்சமின்றி புளுகியுள்ளது பாஜக. காங்கிரசு மணீஸ் திவாரி , 'இந்தியா பன்முகப் பண்பாட்டு விழுமியங்களை சீர்குலைக்க தொடர்ந்து ஆர்எஸ்எஸ் வேலை செய்து வருகிறது' என்றுள்ளான். இங்கே மணீஸ் திவாரியை இந்தப் பதிவின் முதல் பேராவில் படித்த திடீர் தடியனுடன் ஒப்பிட்டுக் கொள்ளவும்.

"ஹேய் மீ எஸ்கேப்பு வித் திருடன்யா... நெக்ஸ்டு மீட்டு...." - சந்தைக் கடை திடீர்த் தடியன் மணீஸ் திவாரி


வசமாக மாட்டிக் கொண்டான் என்று பாஜகவை கோத்து விட்டு வேடிக்கைப் பார்ப்பதும், அதன் ஊடாக தனது ஆட்சியை கட்டிக் காப்பதும்தான் காங்கிரசின் நோக்கம். மேலும், இதுவரை ஆர்எஸ்எஸ் மாட்டிக் கொண்டுள்ள பயங்கரவாத செயல்கள் - குண்டு வெடிப்புகள், மதக் கலவரங்கள், தலித் மக்கள் மீதான சாதிவெறித் தாக்குதல்கள்- போன்றவற்றின் அடிப்படையில் அந்த அமைப்பைத் தடை செய்ய முடியும். பாப்புலர் பிரண்டு உள்ளிட்ட பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் மீது வெறும் சந்தேகத்தின் அடிப்படையிலேயே பல அடக்குமுறைகளை ஏவிவிட்ட அரசு, அதே போல, நாக்பூரிலும், டெல்லியிலும், சென்னையிலும் மேலும் பல முக்கிய இடங்களிலும் உள்ள காவி பயங்கரவாத ஆர்எஸ்எஸின் தலைமை அலுவலகங்களை சோதனையிட்டு அவர்களது பயங்கரவாதத் திட்டங்களை சந்தி சிரிக்கச் செய்ய முடியும்.

தமிழகத்தில் கூட நாகர்கோவில் அரவிந்த நீலகண்டன், மலர்மன்னன் போன்ற காவி பயங்கரவாதிகளையும் அவர்களது நண்பர்கள், தோழர்கள் என்ற பெயரில் உலாவும் பிற 'நல்லவர்களையும்' நன்கு 'விசாரித்து' பல பயங்கரவாத திட்டங்களை வெளிக் கொண்ர முடியும். ஆனால், காங்கிரசு அரசோ அல்லது 'தமிழினத் தலைவன்' 'மஞ்சத் துண்டு மன்னன்' 'பத்மா சுப்பிரமணியன் புகழ்ந்த' கருணாநிதிச் சோழனது அரசோ அவ்வாறு செய்யாது.ஏனேனில், இந்து பாசிச பயங்கரவாதத்தை அமல்படுத்துவதில் காங்கிரசுக்கும், பாஜகாவுக்கும் செயல்முறையில்தான் முரன்பாடு உள்ளது.

எனவேதான் ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் காவி பயங்கரவாத கும்பல் என்று சொல்லிக் கொண்டே பாபர் மசூதி தீர்ப்பு எனும் அயோக்கியத்தனத்தை காங்கிரசு செய்கிறது. அதே போல அமெரிக்க அடிவருடி காங்கிரசு என்று சொல்லிக் கொண்டே அமெரிக்காவின் பூட்ஸை பாஜக நக்குகிறது.

இவர்கள் அனைவருமே கூட்டுக் களவானிகள் என்பதுதான் உண்மை. ஆர்எஸ்எஸ்ன் பல்வேறு பயங்கரவாத செயல்கள் கடந்த 80 வருடங்களில் பலமுறை அம்பலமானவைதான். ஆனால், அந்த அமைப்பு இன்னமும் ஏதோ நல்லவன் போல வேசம் கட்டி வலம் வருவதும், பதிவுலகில் இருக்கும் 'நல்லவர்கள்' அதே போல 'நல்லவர்களாகவே' ஆர்எஸ்எஸ்ன் அரசியலைப் பேசுவதும் சாத்தியமாகியுள்ளதற்குக் காரணம் மக்கள் சுதாரித்துக் கொள்ளாமல் இருப்பதுதான். இந்தப் பதிவின் ஆரம்பத்தில் சொன்ன உண்மைச் சம்பவத்தையே பாருங்கள், மக்கள் சுதாரிப்பாக இருந்தால், மாட்டிக் கொண்ட திருடனை காப்பாற்றக் களமிறங்கிய ரவுடியையும் சேர்த்து புரட்டி எடுத்து ஒரேடியாக முடித்துக் கட்டியிருக்கலாம். மாறாக, தெருவோரத்தில் நின்று வேடிக்கைப் பார்ப்பதும், டீக்கடை கிசுகிசுவுமே அரசியலாக இருப்பதன் விளைவு ரவுடியும், திருடனும் எஸ்கேப் ஆகிறார்கள். மீண்டும் மீண்டும் தமது கூட்டுக் களவானித்தனத்தை செய்கிறார்கள். ஆட்டையப் போட வற்றவன் மாட்டிக் கொண்டால் தப்பிப்பதற்கு திட்டமில்லாமலா வருவான்?

எனவே மக்களே எங்கும், எப்பொழுதும் ஆர்எஸ்எஸ் காவி பயங்கரவாதிகளையும், அவர்களது கூட்டுக் களவானிகளையும் கேள்வி கேட்டு, கண்டித்து, அம்பலப்படுத்தி, அவமானப்படுத்தி வெளியேற்ற களமிறங்குங்கள்.


அசுரன்

தரவுகள் ஆதாரம்: ஹெட்லைன்ஸ் டுடே


முற்றும் கழண்ட டவுசர்!! அடடே ஆர் எஸ் எஸ் அம்மணக்கட்டை!!!

'வினை'யகர் சதுர்த்தி!!

தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!

வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!


ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!



சிபிஐயிடம் மாட்டிக் கொண்டனர் இந்து பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்ன் முக்கியத் தலைவர்கள்!



Hindu Rashtra: Saffron terror's hall of shame



The Headlines Today sting




Vedio-Saffron goons attack HT Delhi office


Saffron goons attack Headlines Today office


Hindu terror is a reality, yet India refuses to utter its name

Thursday, October 07, 2010

தீபாவளி, நவராத்தியின் போது பயங்கரவாதிகளின் தாக்குதல் அபாயம் உள்ளது எச்சரிக்கை!!

வெடிகுண்டு 1:

கடந்த தீபாவளியைப் போலவே இந்த தீபாவளிக்கும் பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்பு தாக்குதல் அபாயம் உள்ளதென்று உளவுத் துறை எச்சரிக்கை செய்துள்ளது. அதுவும் குறிப்பாக கோவாவில் அபாயம் அதிகமாம்.

போன வருடம் உளவுத் துறை எச்சரிக்கை செய்ததைப் போலவே காவி பயங்கரவாதிகள் கோவாவில் இந்துக்கள் மீது குண்டு வைக்கும் முயற்சியிலிருந்த பொழுது, அந்த சதியில் தாமே பலியாகி வெடித்துச் சிதறினர்.

ஆகவே ஜனங்களே, அதே போல இந்த தீபாவளிக்கும் இந்துக்கள் மீது இந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாலும். போன தடவை செய்து மாட்டிக் கொண்டது போலல்லாமல், இந்த முறை திறம்படச் செய்து முஸ்லீம்கள் மீது பலி போட்டு, அவ்வகையான தாக்குதலைக் காரணம் காட்டி மதவெறி தூண்டி மக்களை துண்டாடி, ரத்தம் குடிக்கும் அபாயம் இருப்பதாலும் அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், இந்து காவி பயங்கரவாதிகளின் பிரித்து மோதவிடும் அரசியலுக்கான ரத்த பலி சூத்திர/தாழ்த்தப்பட்ட இந்துக்களின் உடலிலிருந்தே எடுக்கப்பட வேண்டியுள்ளதை அவர்களின் முந்தைய நடவடிக்கைகள் பல நிரூபித்துள்ளன என்பதால், இந்த எச்சரிக்கைகளை இந்துக்கள் எனச் சொல்லப்படுபவர்கள் தகுந்த கவனத்துடன் பரிசீலிக்க வேண்டுகிறேன். இந்து என்றால் யார் என்று சந்தேகமுள்ளவர்களுக்கு கீழ்கண்ட சட்ட விளக்கம்:

"யார் முஸ்லீம், கிருத்துவ, சீக்கிய மதங்களைச் சேர்ந்தவரில்லையோ அவர் இந்து".**


இந்த பதிவை படித்து எழுச்சியுற்ற இந்துக்களுக்கான பாடல்(கிளிக்கி பாடலைக் கேட்க்கவும்):

எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை....
அந்த ஆர் எஸ் எஸுக்காரன் வற்றான் எச்சரிக்கை...

எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை....
கையில் தீவட்டிய எடுத்து வற்றான் எச்சரிக்கை...



**இந்து குறித்த இந்த சட்ட விளக்கம் அப்படியே அயோத்தி தீர்ப்பு நகலைப் போல டாமால் டூமீலாக இருப்பதற்கு கொம்பேனி பொறுப்பல்ல.

அசுரன்

Related Posts with Thumbnails