TerrorisminFocus

Monday, April 30, 2007

மேதின வாழ்த்துக்கள்!





மே 1 ரிலையன்ஸ் முற்றுகைப் போராட்டத்தில் ஜனநாயக சக்திகள் எல்லாம் கலந்து கொண்டு ரிலையன்ஸ் எதிர்ப்பை உரக்க ஒலிப்போம்!





5 பின்னூட்டங்கள்:

said...

நிலத்தை கொத்தி
நீரை சாத்தி


மரத்தை வெட்டி
மடுவை குடைந்து


கரத்தை உயர்த்தி
கழனி காத்து


சிரத்தை உயர்த்தி
வா என் தோழா!


இருக்கும் வாழ்க்கை
சடுதியில் மாற்று


மருட்டும் உலகை
உழைப்பால் திரட்டு


உயிரொடு கலக்கும்
தோழமைகொண்டு


சிரத்தை உயர்த்தி
வா என் தோழா


கலைப்பை விரட்டி
உழைப்பை பெருக்கி


மலைப்பை தகர்க்கும்
மனமது கொண்டு!


சலிப்பை வெறுக்கும்
சாட்டை கொண்டு


சிரத்தை உயர்த்தி
வா என் தோழா


களிப்பை அளிக்கும்
பாட்டுடன் சிந்து


முழிப்பை அளிக்கும்
தத்துவம் கொண்டு


சிகப்பை பூண்டு
சினமது கொண்டு


சிரத்தை உயர்த்தி
வா என் தோழா


-தியாகு
கவிதைகள்:http://www.thiagu1973.blogspot.com/
மார்சியம்:http://marxistbase.blogspot.com/index.html
குழுமம்:http://groups.google.com/group/Anbu2006

said...

அட, யாருமே இந்த பதிவை கண்டு புரட்சி முழுக்கம் எழுப்பவில்லை போல் இருக்கிறதே??

சரி தொலைகிறது விடுங்கள் அஜித் பிறந்த நாள் வாழ்த்து பதிவு எதாவது போட்டுகோண்டு இருப்பார்கள்

முற்றுகை போராட்டத்தில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் ?

சிறுசு பெருசு என்று எல்லாத்தையும் சேர்த்து மொத்தமாக ஒரு 250 இருக்குமா ?

said...

பதிவுக்கு பின்னூட்டம் கிடைக்கவில்லை என்றால் கவிதையெல்லாம் போட்டு டார்ச்சர் செய்ய வேண்டுமா ?? :)

said...

அட ரொம்ப நாளா காணமப் போன சமுத்ராவா இது?

ரொம்ப வீறாப்பா ராணுவம் ஒரு கைக்கூலிப் படை அப்படிங்கற என்னோட விமர்சனத்த பொய்யாக்குறேன்னு ஓடிப் போய் ஒளிஞ்சுக்கிட்ட சமுத்ராவா இது?

அது சரி.... உங்களுங்க மாதிரி வெட்டி ஆபிசர் வேலையா பன்றாய்ங்க எங்களுங்க.... கிடைக்கற கொஞ்ச நேரத்துல இங்க ஆட்டம் போடற உங்க ஆளுங்களுக்கு ராடு ஏத்திக்கிட்டு இருக்கிறாங்க...

என் அன்பு சமுத்ரா... இந்த தேதி வரை உங்க ஆளுங்க அடி மேல அடி வாங்கி ஏதேதோ சாக்கு சொல்லி தமிழ்மணத்த விட்டு ஓடிக்கி இருக்குறாங்க உங்ககிட்ட ஒரு ரெஸ்பான்ஸும் இல்ல?.. ம்...?

பூங்கா இதழுக்கு இந்த பதிவர் ஆதரவளிக்க மாட்டார் என்று உங்களுங்க போட்ட பட்டைய மட்டும் போடத் தெரிந்த நீங்கள், ஏன் தமிழ்மணத்தை விமர்சித்து உங்க ஆளுங்க போட்ட பட்டைகளை இது வரை உங்க பதிவுல போடல?

உங்க ஆளுங்க போடறா மொக்கை பதிவில எல்லாம் போய் ஜல்லியடிக்கிற எனதருமை சமுத்ரா அவிங்க சிக்கல் மாட்டி சிதறி ஓடின போது மறைந்த இடம் தெரியவில்லை...

இந்த மாதிரி நட்புக்கு துரோகம் செய்றது எல்லாம் ராணுவ பயிற்சி போலும் :-))) துன்பம் வரும் வேலையில இது போல நல்ல தலைமறைவாகி எஸ்கேப் ஆகிறதுக்கு சமுத்ரா கிட்டதான் பயிற்சி எடுக்கனும் :-))

அய்யோ அய்யோ...

அப்புறம் மே 1 நடந்த போராட்டதுல பெண்கள் மட்டுமே 300 பேருக்கு மேல அரஸ்ட். செய்திகளை படிங்க... ஓ... உங்களுக்கு செலக்டிவ் ரீடிங் சின்ட் ரோம் வியாதி இருப்பதை மறந்து விட்டேன்.

அசுரன்

said...

//அட, யாருமே இந்த பதிவை கண்டு புரட்சி முழுக்கம் எழுப்பவில்லை போல் இருக்கிறதே??

//உங்காளுங்க மாதிரி வெட்டி ஆபிசர் வேலையா பன்றாய்ங்க எங்காளுங்க.... கிடைக்கற கொஞ்ச நேரத்துல இங்க ஆட்டம் போடற உங்க ஆளுங்களுக்கு ராடு ஏத்திக்கிட்டு இருக்கிறாங்க...//

:-)

//சரி தொலைகிறது விடுங்கள் அஜித் பிறந்த நாள் வாழ்த்து பதிவு எதாவது போட்டுகோண்டு இருப்பார்கள்//

ஸ்ரேயாவ ஒழுங்க ஆடவிடமாட்டங்கறாய்ங்கனு ஆதங்கப்பட்டு, எப்பத்தான் நம்ம ஊர் பொண்ணுங்கள்லாம் இப்படி ஆடபோகுதுங்கனு நாக்குல எச்சில் ஒழுக விட்டுக்கிட்டு பதிவு போட்ட திரு.சமுத்ரா அவர்களே அந்த வகையில் இந்த கழிசடைக்கும் நீங்களே பதிவு போட்டு இருக்கலாமே, ஒருவேளை உங்கள் ஆதரவு கனவு தேவதைகளுக்கு மட்டும்தானா? அப்படினா சில கழிசடைங்கள்ளாம் சேர்ந்து நமீதாவுக்கு ரசிகர் மன்றம் வச்சிருக்குதுங்களாம்,அஜீத பிறந்தநாள தெரிஞ்சிகிட்ட மாதிரியே நமீதா பிறந்தநாளயும் தெரிஞ்சிகிட்டு பதிவு போட்டு போஸ்டர் ஒட்டி முயற்சி பண்ணி பாருங்க தலைவர், செயலாளர் இப்படி ஏதாச்சும் கிடைக்கும்....

//முற்றுகை போராட்டத்தில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள்?
சிறிசு பெருசு என்று எல்லாத்தையும் சேர்த்து மொத்தமாக ஒரு 250 இருக்குமா?//

ஏன்பா நீ பேப்பர்லாம் படிக்க மாட்டீயா.. சரி இதுவரைக்கும் படிக்கலன்னா பரவாயில்லை இந்தா இந்த சுட்டியில போய் படிச்சு தெரிஞ்சுக்கோ..

http://blackboards.blogspot.com/2007/05/1.html

அதுல என்ன போட்டுருக்குது 300 பெண்கள், 50 சிறுவர்கள் உட்பட, புரியுதா இப்பயாச்சும் புரியுதா உன்னுடைய மனங்கவர்ந்த பாப் ஆல்பத்துக்கு ஆடுற பெண்கள் மட்டுமல்ல.. உழைக்கும் மக்களின் வாழ்க்கை பறிக்கப்படும் போது வர்க்க கோபத்தோடு வீதிகளில் இறங்கி போராடி, பண கொழுப்பேறி திரிவோரை அடித்து விரட்டும் பெண்களும் இந்த தேசத்தில் இருக்கிறார்கள் என்று இப்போதவது புரிகிறதா? தொலைகாட்சி பெட்டியிலும் வீடியோ கேம்ஸிலும் சிந்தனையை அடகு வைத்துவிட்ட மேட்டுக்குடி, நடுத்தரவர்க்க சிறுவர்களுக்கு மத்தியில் மண்டையை பிளக்கும் உச்சிவெயிலில் செங்கொடியை தனது பிஞ்சு கைகளிலேந்தி, மழலை மாறாத குரலில் "சிறு வணிகத்தை அழிக்கும் ரிலையன்சை துரத்தியடி" என்ற முழக்கத்தை உரக்கச் சொல்லும் எங்கள் வீட்டு பிள்ளைகள், ஏகாதிபத்திய கொடுங்கரத்திலிருந்து இந்த நாட்டை மீட்டெடுக்க போகும் குட்டி பகத்சிங்குகளும் இந்த தேசத்தில் இருக்கிறார்கள் என்பதை இப்போதவது புரிந்து கொள்ள முடிகிறதா?

ஸ்டாலின்

Related Posts with Thumbnails