TerrorisminFocus

Thursday, May 14, 2009

கம்யுனிஸ்டுகளா இவர்கள்? கம்முனாட்டிகள், மலம் உருட்டும் வண்டுகள்!!!

கொஞ்ச காலம் முன்னாடி மதவாதம்தான் நாட்டின் பெரிய எதிரின்னு சொல்லிக் கொண்டு காங்கிரசுக்கு சிரத்தையாகக் கோமணம் கட்டிக் கொண்டிருந்தனர் CPM காம்ரேடுகள். காங்கிரசு கோமனம் குத்திய உள் குத்து வலி தாங்காமல் ஒரு கட்டத்தில் 'காங்கிரசு இந்தியாவை கூட்டிக் கொடுப்பதுதான்' நாட்டின் முதன்மை அபாயம்ன்னு சொல்லிக் கொண்டு வெளியே வந்தனர். ஆனால், இந்த காலகட்டம் முழுவதும் கேரளாவிலும், மே.வாவிலும் இவர்களும் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கூட்டிக் கொடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள் என்பது வேறு விசயம்.

இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற புனிதப் ப(கு)சு சோம்நாத் சாட்டர்ஜி CPMலிருந்து வெளியேறினார். இன்னிலையில் தேர்தல் வந்தது.

உடனே கொஞ்சம் கொஞ்சமாக காம்ரேடுகளின் பஞ்ச் டயலாக்குகள் உருமாறத் துவங்கின. முதல் கட்டமாக மதச்சார்பற்ற அரசு அமைப்போம் என்ற முழக்கத்தை முன்னுக்குக் கொண்டு வந்தனர்.

அத்துடன் சேர்ந்து ஜெயலலிதா எனும் இந்துத்துவ பாசிஸ்டை மதச்சார்பற்ற ராணியாக உருவகப்படுத்தினார்கள். இதன் அடுத்த கட்டமாக, மதச் சார்பற்ற அரசு அமைக்க எதையும் செய்வோம் என்றார் கரத். அடுத்த கொஞ்ச நாளிலேயே காங்கிரசுடன் கூட்டணி குறித்து மே 16க்கு அப்புறம் முடிவு செய்வோம் என்றார்.

"காங்கிரசு ஒன்றும் தீண்டத்தகாத கட்சியல்ல" என்று புத்ததேவு குத்துதேவாக மாறி ஒரு ஓரத்தில் பஞ்ச் ஒன்றை குத்தி வைத்தார். இவர்களுடன் சேர்ந்து ராகுல் காந்தியும் ரெண்டு செண்டர் குத்து குத்தி இடதுசாரிகளுடன் நாங்கள் குத்தாட்டம் போடத் தயார் என்றார்.

உடனே பாரளுமன்ற கோவனம் சோம்நாத் சாட்டர்ஜி தான் சாகும் போது ஒரு சாதாரண CPM தொண்டனாக சாக விரும்புவதாகக் கூறி செண்டிமெண்டு குத்து அடித்தார்.


இவையணைத்தும் தெளிவாக CPMன் காங்கிரசு நோக்கிய சவாரியை சுட்டிக்காட்டின.


இப்படி எல்லாம் கூடி வந்த வேளையில், சனியன் திடீரென்று யெச்சூரி நேற்று பின்வருமாறு கருத்துக் கூறினார்: "காங்கிரசு அரசுக்கு நாங்கள் ஆதரவு குத்தாட்டம் போட மாட்டோம்", "கரத் சொன்னது அவரது சொந்த கருத்து" என்றார் யெச்சு ஊறி.

இதை பார்க்கும் பொழுது ஏதோ CPM தனது கொள்கையில் விலகுவதும் பிறகு மீண்டும் சரியான பாதைக்கு வந்து விட்டதும் போன்று யாருக்காவது தோன்றினால் அவரை நினைத்து பரிதாபப்படத்தான் வேண்டியுள்ளது.

எப்பொழுதுமே சந்தர்ப்பவாதத்தின் எல்லா நிலைகளையும் ஆதரித்து தனது கட்சி அணிகளை மாற்றி மாற்றி பேச விடும் மொள்ளமாறித்தனத்தை CPM வெகு காலமாக செய்து வருகிறது. கம்யுனிசம் குறித்து கரத் கதறினால், முதலாளித்துவம் குறித்து ஜோதிபாசு உளறுவார்.

வட கிழக்கில் பாஜகவுடன் CPM மாநிலத் தலைமை கள்ளத் தேர்தல்க் கூட்டு சேர்ந்தால், இந்திய தலைமையோ அந்த அணிகள் எமது நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என்பதுடன் முடித்துக் கொள்வார்.

நந்திகிராம் குறித்து ஒருவர் பிளிறினால், மம்தா குறித்து ஒருவர் பிதற்றுவார். ஸ்டைரைக் தப்பு என்பார் புத்ததேவு, ஸ்ட்ரைக் எங்கள் மயிர் மூச்சு என்பார் கரத். அமெரிக்க பூட்ஸை மோந்து பார்க்க ஒருத்தர், நக்கி பார்க்க ஒருத்தர், அதை அம்பலப்படுத்த ஒருத்தர்.

முதலாளித்துவம் ஒழிகன்னு ஒரு காம்ரேடு சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, இன்றைய பொருளாதாரச் சரிவிலிருந்து முதலாளித்துவத்தை காப்பாற்றும் ஐ.நா ஆலோசனை குழுவில் ஒரு காம்ரேடு பஜனை செய்து கொண்டிருப்பார்.

தாழ்த்தப்பட்டவருக்கு நெஞ்சு விடைக்க குரல் மட்டும் கொடுக்க ஒருவர், ஆதிக்க சாதிகளுடன் நெஞ்சாரத் தழுவி கூடிக் குலாவ பலர்.

இப்படி எல்லா கருத்துக்களையும் சொல்லி வைப்பதன் மூலம் எல்லா வோட்டுக்களையும் பொறுக்கலாம் என்ற மக்கள் ஜனநாயக செயல் தந்திரம்தான் CPMனுடையது.

இதுகள் காமெரெடுகள் அல்ல, கன்றாவிகள். இவர்கள் கம்யுனிஸ்டுகள் அல்ல கம்னாட்டிகள். மொத்தத்தில் இந்த அருவெறுக்கத்தக்க சமூக கிருமிகளின் அழிவில்தான் விடுதலைக்கான புதிய முழக்கங்கள் தமது புத்துணர்வை பேண முடியும். இல்லையேல், இந்த கம்முனாட்டிகள் கழிக்கும் மலத்தில் பிரண்டு எழுந்து மீள்வதிலேயே பல நேர்மையான அணிகளின் காலம் கடந்துவிடும்.


அசுரன்

Monday, May 04, 2009

பெரியார் சிலை உடைத்த திமுகவினர் - ங்கொய்யால இது திராவிட லுக்குப்பா!!!

சென்னையில் பெரியார் திகவினர் கனிசமான அளவு இருக்கும் இடங்களில் ஒன்று ராயப்பேட்டை. இந்த தேர்தலுக்குள் ராஜபக்சேவுக்கு சங்கு ஊத முடிகிறதோ இல்லையோ ஆனால் அம்மா ஆட்சியை தமிழகத்தில் மலரவிட்டு தமிழர்களுக்கு அந்த சங்கை ஊதியே தீருவோம் என்று பெதிக தோழர்கள் சூறாவளியாக வேலை செய்யும் இடங்களில் ஒன்று ராயப்பேட்டை. பெரியார் திகவினரின் இந்த நடவடிக்கைகளிலுள்ள அபத்தம், அறிவிழிந்த நிலை குறித்து அடுத்த பதிவில் பார்க்கும் முன்பாக, லக்கிலுக் போன்ற சுயமரியாதை சிங்கங்களின் கட்சியான திமுக ராயப்பேட்டையில் செய்துள்ள புரட்சி குறித்து எனது காதுகளுக்கு வந்தவற்றை அறிவார்ந்த வலையுலக சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ராயப்பேட்டை பகுதியில் ஒரு கோயிலுக்குப் பின்புறமாகவே பெரியதொரு பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதனையொட்டியே பெரியார் படிப்பகமும் உள்ளது. கோயிலை ஒட்டியே 'கடவுளை நம்புபவன் அயோக்கியன்' முதலான கடவுள் மறுப்பு பெரியார் முழக்கங்கள் எழுதப்பட்டிருப்பது சிறப்பு. அதனை படித்துக் கொண்டே கோயிலை பக்தன் வலம் வரும் அவனது புதிய பகுத்தறிவோ அதனினும் சிறப்பு. இந்த ஒரு தெருவில் மட்டும் அருகருகே இரண்டு திமுக வாக்கு சேகரிப்பு சாவடிகளை வைத்து பிரச்சாரம் செய்கிறார்கள். இரண்டுக்கும் நடுவே பெதிகவினரின் படிப்பகம்.

இந்த பகுதியில் சமீபத்தில் அதிமுகவினரை வைத்து பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர் பெதிக தோழர்கள். இன்னிலையில்தான் அந்த சம்பவம் நடந்தது. சில நாட்களுக்கு முன்பாக திமுகவினர் அங்கிருந்த பெரியார் சிலையின் கையை உடைத்து விட்டனர். இதனைத் தொடர்ந்து நடந்த பெதிகவின் சாலை மறியல் போராட்டத்தில் திட்டமிட்டு கல்லெறிந்து கலவரமாக உருமாற்றி, போலீசாரின் லத்தியால் பெதிக தோழர்களையும் பதம் பார்த்து சந்தோசமுற்றனர் உடன்பிறப்புக்கள்.

மக்களுக்காக கடந்த பல பத்து வருடங்களில் ஒரு மசிரு போராட்டம் கூட நடத்தியேயிராமலேயே சில பல எம்.பி., எம்.எல்.ஏ.க்களைக் கொண்டிருக்கும் காங்கிரஸு கட்சியும், தமது உள் கம்பேனி தகாராறுகளுக்காகவே பல போராட்டங்கள் நடத்தி மக்களின் இழவை கொட்டும் திமுகவும் இணைந்து நடத்தியுள்ள இந்த பெரியாரிச சிலை உடைப்பு வைபவம் சுயமரியாதையுள்ள கண்களைத் திறக்கும். நக்கிப் பிழைக்கும் லுக்குகளுக்கோ கண் திறப்புத் தேவையில்லை.

அதிகார மையத்தில் சமரசம் செய்து கொண்டே பார்ப்பனியத்தை புடுங்கிவிடுவோம் என்று கிளம்பியவர்கள் அனைவருக்கும் என்ன நிகழ்ந்ததோ அதுவே திமுகவுக்கும் நிகழ்ந்துவிட்டது. ஆனாலும், இன்னும் பெரியார் முகமூடி போட்டுக் கொண்டு பார்ப்பனிய இந்திய அரசு அதிகாரத்தை நக்கிப் பிழைத்து, சமரசம் செய்து விடுதலை பெற்று விடலாம் என்று உலாவுபவர்களின் எண்ணிக்கை மாத்திரம் குறைந்த பாடாய்க் காணோம்.

நேற்று பெரியார் சிலை உடைத்தனர் ஆர்.எஸ்.எஸ் சொறிநாய்கள். தட்டிக் கெட்ட புரட்சிகர அமைப்புகளை மண்டையிலேயே தட்டி ஒடுக்கினார் மஞ்சள் துண்டு தா(த்)தா. பெரியாரிசத்தின் ஹோல்சேல் உரிமையாளர்களான தலைவர்களோ நாகரிகமாக போராட வேண்டினர். பெரியாரிய தொண்டர்களும், புரட்சிகர அமைப்புகளும் மட்டுமே அன்று களத்தில் நின்றனர். இன்று பெரியாரியத்தின் வழிவந்த கட்சியே பெரியார் சிலை உடைத்துள்ளது. பெரியாரியத்தின் ஹோல்சேல் உரிமையாளர்களோ பாப்பாத்திக்கு பாத பூசை செய்கிறார்கள். மண்டையுடைந்ததோ மீண்டும் பெரியாரிய தொண்டர்களுக்குத்தான்.

இந்த போராட்டமும் கூட வெற்று வோட்டு அரசியல் சண்டையாகவே பெதிகவால் முன்னெடுக்கப்படுவது இன்னுமொரு அவலம். விமர்சனம்-சுயவிமர்சனமற்ற, மலட்டு பிழைப்புவாதம் இப்படித்தான் வரலாற்றில் நகைப்புகிடமாக முடியும்.

பெரியாரின் நோக்கங்களுக்கு நேர்மையாக இருப்பவர்கள், அந்த பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல சரியான அரசியல் வழி எதுவென்று சீர்தூக்கி பார்த்து செயல்பட வேண்டிய நேரமிது.

அசுரன்

தொடர்புள்ள பதிவுகள்:

பெரியார் திராவிடர் கழகம் – வெங்காயத் தோலை உரிக்கும் வீணர்கள்!!!

பு.ஜ.மீதான பெரியார் தி.க.வின் விமர்சனம்: முரண்பாடுகளின் மூட்டை

விசுவநாத் பிரதாப் சிங் : காக்கை குயிலாகாது!

பெரியார் சிலை - மானமிகு கலைஞரும், மான்புமிகு ஆசிரியரும்!!

தோட்டத்தில் மேயப்போன சுயமரியாதை சிங்கங்கள்

கொள்கையில் தடுமாறுகின்றோமா தோழர்களே!

Friday, May 01, 2009

பெரியார் திராவிடர் கழகம் – வெங்காயத் தோலை உரிக்கும் வீணர்கள்!!!

பெரியார் திக இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்து வருகிறது. பார்ப்பனியத்தை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு திகவிலிருந்து வெளியேறி தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, இப்பொழுது அதே பார்ப்பனியத்துக்கு பாத சேவை செய்கிறது. இவர்கள்தான் பார்ப்பனியத்தை எதிர்த்துக் களத்தில் உறுதியுடன் போராடி வரும் ம க இ க அமைப்பின் பார்ப்பனிய எதிர்ப்பை சந்தேகிப்பதாக காழ்ப்புணர்ச்சியுடன் எழுதி வருகிறார்கள். பெரியார் திக அமைப்பு ஆரம்பித்த பொழுதே அவ்வமைப்பின் அரசியலை மார்க்சிய-லெனினிய ஒளியில் பரிசீலனை செய்து புதிய ஜனநாயகம் (1996) இதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பதை பெரியார் திக தற்போது நிரூபித்து வருகிறது. காலப் பொருத்தம் கருதி அந்தக் கட்டுரையை மீள் பிரசுரம் செய்கிறோம்.

அசுரன்

________________________________________________________________

பெரியார் திராவிடர் கழகம் – வெங்காயத் தோலை உரிக்கும் வீர(ண)ர்கள்
(புதியஜனநாயகம் செப்டம்பர் 1996)

கடந்த தேர்தலில் யாரை ஆதரிப்பது என வீரமணி தலைமையிலான திராவிடர் கழகத்தில் விவாதம் எழுந்தது. இது பற்றி முடிவு செய்ய தி.க. மத்திய நிர்வாகக் குழு 13.04.96-ல் திருச்சியில் கூட்டப்பட்டது. அதற்கு முன்பாக தென்சென்னை இளைஞரணித் தலைவர் மு.பாலகுரு அவர்கள் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த பொதுச் செயலர் கி.வீரமணிக்கு ‘பார்ப்பன ‘ஜெ’க்கு ஓட்டுப் போடக் கூடாது என அறிவிக்கும்படி’ காரணங்களைத் தொகுத்து 6.4.96-ல் தொலைவரி (ஃபேக்ஸ்) மூலம் தகவல் தந்துள்ளார்.

தி.க. மத்திய நிர்வாகக் குழுவில் அதிமுகவை ஆதரிக்கக் கூடாது எனப் பெரும்பான்மை கருத்து வந்தும், திராவிடர் இயக்கங்களான தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., என்ற 3 கட்சிகளில் எதற்கும் ஓட்டுப் போடலாம் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதைக் கண்டித்து பாலகுரு மீண்டும் வீரமணிக்கு 18.4.96-ல் தொலைவரி மூலம் அறிக்கை அனுப்புகிறார். 23.4.96-ல் தென்சென்னை தி.க. இளைஞரணி கூட்டத்தை பெரியார் திடலில் கூட்டியுள்ளார். தி.க. துணைப் பொதுச் செயலர் சாமிதுரை தலைமையிலும், தலைமை நிலைய செயலர்கள் கலி பூங்குன்றன், ஆனூர் ஜெகதீசன் முன்னிலையிலும் கூடிய இக்கூட்டத்தில் கொள்கை விளக்கம் கேட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து பாலகுரு கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதற்கு விளக்கம் கேட்டு 26.4.96-ல் பாலகுரு தலைமை நிலையச் செயலர்களுக்கு கடிதம் எழுதினார்.

திரும்ப 28.4.96-ல் தென்சென்னை தி.க.இளைஞரணி செயலாளர் து.கலைச்செல்வன் பெரியார்திடலில் இளைஞரணி கூட்டத்தைக் கூட்டினார். அக்கூட்டத்தில் தி.க. மாநிலச் செயலாளர் ஒரத்தநாடு குணசேகரனின் செயலைக் கண்டித்தும், பாலகுருவை நீக்கியதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும், பார்ப்பன எதிர்ப்பைக் கைவிட்டதாகவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

ஒரத்தநாடு குணசேகரனிடம் அமெரிக்காவிலிருந்த வீரமணி நேரடியாகத் தொடர்புகொண்டு அதிமுகவிற்கு ஓட்டுப் போட வேண்டும் என்பது தனது முடிவு எனக் கூறியதாகவும், அதைத் தமிழகம் முழுவதும் உள்ள தி.க. தோழர்களிடம் கூறும்படி ஆணையிட்டதாகவும் 25.4.96-ல் சென்னைக்குத் தகவல் கிடைக்கவே அதைக் கண்டித்து தீர்மானம் போட்டனர். வந்திருந்த 160 உறுப்பினர்களும் இவற்றை ஆதரித்து கையெழுத்திட்டிருந்தனர்.

அதன்பின் சுமார் 200 இளைஞரணி உறுப்பினர்கள் தி.க.விலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதன்பின் விடுதலை இராசேந்திரன் உட்பட பலரும் தி.க.விலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்கள் வீரமணி தலைமையின் கீழ் அணிந்திருந்த கருப்புச்சட்டை பார்ப்பன மயமாகிவிட்டது என அறிவித்து, அதைக் கழற்றி விட்டு தந்தை பெரியாரின் இலட்சிய கருஞ்சட்டை அணியும் போராட்டம் ஒன்றை 25.6.96-ல் சென்னை அண்ணா சாலையிலுள்ள பெரியார் சிலை முன்பு நடத்தினர்.

இதுவரை தி.க.விலிருந்து வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட பலரும் கொள்கை ரீதியாகப் போராடாததாகவும், தாங்கள் மட்டுமே பெரியாரின் கொள்கையை நிலைநாட்டப் போராடி அதனால் சந்தர்ப்பவாத, பிழைப்புவாத வீரமணியால் வெளியேற்றப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

இவர்கள், தலைமை நிலையச் செயலராக இருந்த ஆனூர் ஜெகதீசனை தங்கள் பக்கம் வென்றெடுத்துள்ளனர். இவரைத் தலைவராகக் கொண்டு 30.7.96-ல் ‘பெரியார் திராவிடர் கழகம்’ என தனியே அமைப்பு கட்டி தொடக்க விழா நடத்தியுள்ளனர்.

சாராம்சமாக இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் கீழ்க்கண்டவைதான்:

1. கடந்த 5 ஆண்டுகளில் பார்ப்பன எதிர்ப்புக் கொள்கை படிப்படியாக மழுங்கடிக்கப்பட்டே வந்து, தேர்தலுக்கு முன்பு அது பகிரங்கமாக்கப்பட்டு விட்டது. பார்ப்பன ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி மீண்டும் தமிழகத்தில் உருவாவதற்கு ஓட்டளிக்கலாம் என்று தி.க. மத்தியக் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றி, கொள்கை துரோகத்தை அதிகாரப் பூர்வமாகப் பிரகடனப்படுத்தி விட்டது.
2. பெரியார் கொள்கைக்கு எதிரான பார்ப்பனிய போக்குகள்-இயக்கத் தலைமையில் படிப்படியாக மேலோங்கி வளர்ந்தது. பெரியார் நூல்களை வெளியிடுவதும் நின்று போய், பெரியார் நடத்திய இதழ்கள் பாதுகாக்கப்படாமல், அழியும் நிலை உருவாகிவிட்டது. இலட்சியத்துக்கான இயக்கம், தனிமனிதருக்கான கட்சியாக மாறும் போக்குகள் அதிகரித்துக் கொண்டே போய் கொள்கைகளும் அணுகுமுறைகளும், தடுமாற்றத்துக்கு உள்ளாகிக் கொண்டே வந்தன. கடைசியில் இலட்சியத்துக்கு எதிரான போக்குகளே தலை தூக்கி விட்டன.
3. கல்வி நிறுவனங்கள், வங்கி, சீட்டுக் கம்பெனி என பல நிறுவனங்களைத் தொடங்கி, வீரமணி ஒரு நல்ல வியாபாரியாகிவிட்டார்.
இவை ஏதோ புதியது, கடந்த ஐந்து ஆண்டுகளில் உருவானது என்பதைப் போன்று கூறுகின்றனர். இந்தப் போக்குகள் தி.க.வில் உள்ளன என்பதைப் பற்றி எமது புதிய ஜனநாயகம் இதழ்களிலும், அதற்கு முன்பே எமது தோழமை இதழான புதிய கலாச்சாரத்தில் 80-ம் ஆண்டுகளிலும் விமர்சனங்களாக முன் வைத்தமைதான்.

அப்போதெல்லாம் இந்த நபர்கள் நம்மை வெறித்தனமாக எதிர்த்து ‘பார்ப்பனத் தலைமை’ என மூச்சுக்கு மூச்சு முத்திரை குத்தினர். தனது குறைகள், பலவீனங்களைச் சுட்டிக் காட்டுபவர்கள் மீது பார்ப்பன முத்திரை குத்துவது அல்லது இனத் துரோகி என பட்டங்கட்டி, பிரச்சினையிலிருந்து நழுவிக் கொள்வது என்ற இந்தப் போக்குகள் பெரியார் காலம் தொட்டே தி.க.வில் நடைமுறையாக உள்ளவைதான்.

வீரமணி கும்பல் 5 லட்ச ரூபாய் நன்கொடை பெற்றுக் கொண்டு பார்ப்பன ‘ஜெ’க்கு பாதபூஜை செய்ய ஆரம்பித்தது. மக்களே காறித்துப்பிய அரசியல் கழிசடை பார்ப்பன ‘ஜெ’க்கு ‘சமூக நீதி காத்த வீராங்கனை’ என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தார், வீரமணி. ‘ஜெயலலிதா ஆட்சிக்கு ஆபத்து வந்தால் தற்கொலைப் படையாக மாறுவோம்’ என வீரமுழக்கமிட்டார். பெரியார் விருது வழங்க ஆலோசனை தந்து, முதல் விருதை தானே பெற்று அகமகிழ்ந்தார். அந்தப் புகழ் மயக்கத்தில் ‘வாழ்நாள் முழுதும் துரோகம் செய்யமாட்டேன்’ என உறுதிகொடுத்தார்.

அப்போதெல்லாம் இந்த பெரியார் தி.க.வினர் இந்த இழிநிலைகளை எதிர்த்துப் போராடவில்லை. இப்போதும் இச்செயல்களைக் கண்டிக்கவில்லை.மாறாக சரியானவை என்றே அறிக்கைகளில் கூறுகின்றனர். ‘வாழ்நாள் முழுதும் துரோகம் செய்யமாட்டேன்’ என்று கூறியதை மட்டுமே சுட்டிக் காட்டுகிறார்கள். இதன் அர்த்தம் என்ன? ஆட்சியிலிருக்கும் வரை பாதபூஜை செய்வது சரி என்பதுதானே? இல்லை என்றால் இவ்வளவு மோசமான சந்தர்ப்பவாதத்தை சகித்துக் கொண்டு கழகத்திற்குள் இத்தனை நாட்களும் பிழைப்பு நடத்தியிருப்பார்களா?

இதற்கு ஒரு சப்பைக் கட்டாக, ‘இது ஒரு அணுகுமுறைதான், கொள்கை அல்ல’ என்று தலைமை விளக்கியதாம். தனியே பயிற்சி வகுப்புகள் நடத்தியதாம். இவர்களும் ஏற்றுக் கொண்டார்களாம். பார்ப்பன ஜெ தலைமையிலான ஆட்சியை சமுதாய நலனுக்குப் பயன்படுத்திக் கொள்வதில் இவர்களுக்கு இன்றைக்கும் முழு உடன்பாடு இருக்கிறது என்று பிரகடனப்படுத்தியுள்ளனர். ஆனால் தேர்தலில் பார்ப்பன ஜெயாவே முதலமைச்சராக வரவேண்டும் என தி.க. அதிகாரப் பூர்வமாக முடிவெடுத்தது மட்டுமே கொள்கைக்கு எதிரானதாம்.

எப்படி இருக்கிறது பாருங்கள்? “பார்ப்பனராகப் பிறந்த அனைவருமே நம்பிக்கைத் துரோகம் செய்து விடுவார்கள். அடுத்துக் கெடுக்கும் நரித்தனமும்சூழ்ச்சியும் அவர்களது ரத்தத்திலேயே ஊறியவை. இதற்கு விதிவிலக்கே கிடையாது” என்று கூறிக்கொண்டே, அந்தப் பார்ப்பன ஜெ. ஆட்சியை சமுதாய நலனுக்குப் பயன்படுத்திக் கொள்வார்களாம். இது எப்படி என்பது அவர்களுக்கே வெளிச்சம்!

“பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி” என்று பெரியார் கூறியுள்ளார். அப்படிப்பட்ட கொடூரமானவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால் அவர்களையே சமுதாய நலனுக்கும் பயன்படுத்துவார்களாம்! எவ்வளவு சுயமுரண்பாடு. கேட்டால் இது அணுகுமுறை, கொள்கையல்ல என சித்தாந்த விளக்கம் வேறு.

பகுத்தறிவாளர்களை விடுங்கள். ஒரு சராசரி மனிதர் என்ன எதிர்பார்ப்பார்? மனித சமூகத்திற்கே கொடிய நச்சு போன்ற பார்ப்பனியத்தை எதிர்ப்பவர்கள் (நமக்கு இதிலே எவ்விதக் கருத்து வேறுபாடுமில்லை) அப்படிப்பட்ட பார்ப்பனீயத்தை உயர்த்திப் பிடிக்கும் பார்ப்பனர் ஆட்சிக்கு வந்தால் அவர்களை ஆட்சியிலிருந்து விரட்டப் போராடுவார்கள் என்றுதானே எதிர்பார்ப்பார்.

பார்ப்பன சங்கம் ‘நம்மவா ஆட்சி’ என அகமகிழ்ந்த ‘ஜெ’ ஆட்சியை, சங்கராச்சாரிகள் ஆதரிக்கும் ‘ஜெ’ ஆட்சியை வீரமணி கும்பல் ஆதரித்து பாதபூஜை செய்தது.

மாறாக, புதிய ஜனநாயகமும், ம.க.இ.க.வும் அதன் தோழமை அமைப்புகளும் பார்ப்பன-பாசிச ஜெ ஆட்சியின் மக்கள் விரோதப் போக்குகளை எதிர்த்து சமரசமின்றிப் போராடின. எண்ணற்ற வழக்குகள், சிறைக் கொட்டடிக் கொடுமைகள், உச்சகட்டமாக அத்தோழர்கள் மீது தடாவும், தேசியப் பாதுகாப்புச்சட்டமும் பாய்ந்தன.

ஆனால் இந்த சமரசமற்ற போராட்டத்தை இழிவுபடுத்துவது போல, “புதிய ஜனநாயகத் தலைமையிலுள்ளவர்கள் பார்ப்பனர்கள். இதுதான் மிக அபாயகரமானது” என தமது ‘விடுதலை’யில் பொய்களையும்,அவதூறுகளையும் எழுதியது, பிழைப்புவாத வீரமணி கும்பல். பார்ப்பனர்களைப் போன்றே ம.க.இ.க.வின் கருவறை நுழைவுப் போராட்டத்தை வன்முறைப் போராட்டம் என எதிர்த்தது. அவற்றுக்கெல்லாம் துணை நின்று நம் மீது அவதூறுச் சேற்றை வாரியிறைத்தவர்கள்தான் இந்த விடுதலை ராசேந்திரன் உட்பட பெரியார் தி.க.வினர் அனைவருமே.

இந்த அவதூறுகளுக்குப் பதிலாக கடந்த 1994 மார்ச் 15 இதழ் முதல் 1994 அக்டோபர் 1 இதழ் முடிய பு.ஜ.வின் எட்டு இதழ்களில் 31 பக்கங்களில் வீரமணியின் துரோகங்களையும், சந்தர்ப்பவாதம்-பிழைப்புவாதங்களையும் ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தி எழுதினோம். “வீரமணி இன்று செய்துவரும் துரோகங்களுக்கு அடிப்படை ‘பெரியாரிய’த்திலும் அதை உருவாக்கிய பெரியாரிடமுமே இருந்திருக்கிறது. பெரியாரிடத்தில் இருந்த “குறைபாடு”களை அங்கீகரித்து, நிராகரிக்காத எவரும் வீரமணி கும்பலின் துரோகத்தனங்களை முற்றாக அம்பலப்படுத்தவோ, முறியடிக்கவோ முடியாது; அப்படிச் செய்யாதவர் எவரும் தாமும் துரோகத்தனத்துக்குப் பலியாவது தவிர்க்க முடியாதது. அப்படிச் செய்வது “பெரியாரிய”த்துக்கும் பெரியாருக்கும் எதிரானதும் அல்ல” என்று எழுதினோம்.

“கொள்கையில் தடம் புரளாதவர்” என்று கூறப்படும் பெரியார், ஆட்சியில் இருப்பவர்களை ஆதரிப்பதற்காக எதையும் செய்யக் கூடியவராக இருந்தார். தனக்கு உடன்பாடற்றவைகளை எல்லாம் பார்ப்பன முத்திரை குத்துபவராக இருந்தார் என்பதற்கு இரண்டு சான்றுகளைப் பாருங்கள்” என பு.ஜ.வில் எழுதி ஆதாரங்களைக் குறிப்பிட்டிருந்தோம்.

1. 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை பெரியார் கடுமையாக எதிர்த்தார்.
2. கருணாநிதி ஆட்சியில் குடமுருட்டி பாலத்தில் மீன்பிடிக்க வைத்த குண்டு தன்னைக் கொல்ல நக்சல்பாரிகள் வைத்தது என கருணாநிதி புளுகினார். அதை அப்படியே ஏற்று நக்சல்பாரி புரட்சியாளர்களை பார்ப்பன அமைப்புகளோடு சேர்த்து முத்திரை குத்தி அவதூறு செய்தார் பெரியார்.
இதே வழியில்தான் தனது ‘பார்ப்பன ஜெ’ ஆதரவு, அடிவருடி வேலைகளை சுட்டிக் காட்டி விமர்சிக்கும் புதிய ஜனநாயகத் தலைமையை பார்ப்பனத் தலைமை என முத்திரை குத்தி பொய்களை எழுதி அவதூறு செய்தனர் தி.க.வினர். உடனிருந்தனர் பெரியார் தி.க.விலுள்ளவர்கள்.

வீரமணி கும்பலுடன், அதிமுகவை ஆதரிக்கக் கூடாது என தென்சென்னை இளைஞரணி தி.க. போராடியபோது, கழகப் பொருளாளர் குப்புசாமியும், துணைப் பொதுச் செயலாளர் சாமிதுரையும்’பெரியாரே பார்ப்பனர்களை, பார்ப்பனத் தலைமையை ஆதரித்தார்’ என ஆதாரங்களை முன்வைத்தனராம். அது பொய்ப் பிரச்சாரம் என பெரியார் தி.க.வினர் எழுதுகின்றனர்.

ஆனால் இதே வீரமணி கும்பலும் விடுதலை இராசேந்திரனும் பு.ஜ.வில் பெரியார் பார்ப்பனர்களை ஆதரித்தார் என வரலாற்று உண்மைகளை ஆதாரத்துடன் முன்வைத்தபோது , நம் மீது ஆத்திரத்துடன் பாய்ந்து அவதூறு செய்தனர். ஆனால் இன்றைக்கு வீரமணி கும்பல் தனது ‘பார்ப்பன ஜெ’ ஆதரவுக்காக நாம் முன்வைத்த வாதங்களை வைத்து, தன்னை நியாயப்படுத்தி உள்ளது.

இந்த உண்மைகளை தி.க.வே முன்வைத்தமைக்கு வேண்டுமானால் நாம் இந்த பெரியார் தி.க.வினருக்கு நன்றி கூறலாம். ஆனால் பெரியார் தி.க.வினர் ‘பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு போன’தாக இந்த விசயத்திற்கு ஆத்திரப்பட்டால் தவறு.

நடந்த வரலாற்று உண்மைகள் பொய்யாகி விடுமா? அல்லது அவற்றை இருட்டடிப்பு செய்து பெரியார் எவ்வித விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டவர் எனப் புனிதப்படுத்தி விடமுடியுமா? மாறாக யாராக இருந்தாலும் அவர்களிடமுள்ள சரி,தவறுகளைப் பகுத்தாராய்ந்து, தவறுகளை நிராகரித்து, சரியானவற்றை உயர்த்திப் பிடித்து அவற்றை நடைமுறைப்படுத்தப் போராட வேண்டும். இதுதான் சரியான அணுகுமுறையாகும்.

அதேநேரம் எதிரிகள் கூறும் அவதூறுகளை நாம் உண்மை என எடுத்துக் கொண்டு வாதப் பிரதிவாதங்கள் நடத்திக் கொண்டிருக்க முடியாது.

“பெரியார் அடிக்கடி ஒன்றைக்கூறுவார். “நான் ஈ.வெ.ராமசாமி சொல்கிறேன் என்பதற்காக நீங்கள் எதையும் ஒப்புக் கொள்ள வேண்டியதில்லை. உங்கள் சொந்த புத்தியைக் கொண்டு நன்றாக யோசித்துப் பாருங்கள். உங்கள் சொந்த புத்திக்கு ஏற்புடையதாக இருந்தால் மட்டுமே எது ஒன்றையும் ஒப்புக் கொள்ளுங்கள்” என்பார் பெரியார். காரல் மார்க்சிடம் அந்தப் பண்பு இருந்தது. “எல்லாவற்றையும் சந்தேகியுங்கள்; விமர்சனப் பார்வையோடு பாருங்கள்” என்றார்” (புஜ 1 அக். ’94 இதழ் – பக் 23)

ஆனால் இன்றைக்கோ இந்த ‘பகுத்தறிவு சிங்கங்கள்’ நாம் விமர்சனம் வைக்கும்போது பாய்ந்து குதறி பார்ப்பனத் தலைமை என முத்திரை குத்துவதும், அதே நேரம் நாம் விமர்சனமாக முன்வைத்தவைகளையே தமது சந்தர்ப்பவாத, பிழைப்புவாத நடவடிக்கைகளுக்கு எடுத்து முன்வைப்பதுமாக செயல்பட்டு வருகின்றனர்.

கொள்கையிலிருந்து விலகுவதாகப் பிரிந்து தனியே பெரியார் திராவிடர் கழகம் கண்டுள்ளவர்கள் இந்த சந்தர்ப்பவாத, பிழைப்புவாத வீரமணி கும்பலிடமிருந்து எவ்விதத்திலும் வேறுபட்டதாக இல்லை.

1. கடந்த ஐந்து ஆண்டுகாலமாக ‘பார்ப்பன ஜெ’க்கு பாத பூஜை செய்ததை எந்தக் கட்டத்திலும் எதிர்க்கவில்லை. ‘பார்ப்பன ஜெ. முதல்வரான பிறகு, அந்த ஆட்சியை சமுதாய நலனுக்கு (தமது பிழைப்புவாதத்திற்கு) பயன்படுத்திக் கொள்வதில் இப்போதும் முழு உடன்பாடு உண்டு” என்றுதான் இன்றைக்கும் ‘கொள்கை’ முழக்கமிட்டுள்ளனர்.
2. பெரியாரிடமுள்ள குறை-நிறைகளைப் பரிசீலித்து குறைகளை விமர்சித்து நிராகரித்து நிறைகளை ஏற்றுக் கொள்ளும் அணுகுமுறை இவர்களிடமும் இல்லை என்பதையே தமது வெளியீட்டில் வெளிப்படுத்துகின்றனர். அதாவது பெரியார் அவரே முன்வைத்த பார்ப்பன எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு எதிராக பார்ப்பன ஆதரவு நிலைப்பாடு எடுத்த வரலாற்று உண்மைகளை கண்மூடித்தனமாக மறுக்கின்றனர். இது தற்போது வீரமணி எடுத்துள்ள நிலைப்பாட்டுக்கு எடுத்துச் செல்லவே உதவும்.
3. எதிர்க்கருத்து வரும்போது, பார்ப்பன முத்திரை குத்தி திசை திருப்புவது, அல்லது விமர்சனத்திலுள்ள விசயத்திலிருந்து நழுவிச் செல்வது என்ற கலையில் தேர்ந்த விடுதலை ராசேந்திரன் முக்கிய தலைவர்களில் ஒருவராக உள்ளார்.
4. அ.இ.அ.தி.மு.க. நிச்சயமாகத் தோற்கும், திமுக நிச்சயமாக வெற்றி பெறும் என்ற நிலையில் ஆட்சியமைக்கப் போகும் கட்சியை ஆதரிக்காமல், தோற்கும் கட்சியை ஆதரிக்கும் வீரமணி என்றுதான் குற்றச்சாட்டுகளில் ஒன்றாகக் கூறியுள்ளனர். மாறாக தப்பித் தவறி ‘ஜெ’ வெற்றி பெற்றிருந்தால் இந்தப் ‘பெரியார் தி.க.’ தோன்றியே இருக்காது என்பதுதான் உண்மை.

ஏனெனில் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர்தான் கழகம் உருவாக்குவது என முடிவெடுத்துள்ளனர்.

தமிழினத்திற்கும், தமிழகத்திற்கும் துரோகங்கள் செய்த ‘பார்ப்பன ஜெ.’ ஆட்சிக்கு பாதபூஜை செய்வதற்கு துணை நின்ற இவர்கள் இன்றைக்கும் கூட அதற்கு வருத்தம் தெரிவிக்காததோடு, அது சரி என்று கூறுவதிலிருந்தே இவர்களின் சந்தர்ப்பவாதப் பிழைப்புவாதப் போக்கை நாம் இனம் காண முடியும்.

சோமு
(புதியஜனநாயகம் செப்டம்பர் 1996)

Monday, February 09, 2009

கம்முனுஸ்டு மிஸ்டர் மீட்டிங்கு, ஈழப் பிரச்சினைக்கு தீர்வு சொல்றாருடோய்…. !!!

CPM பாசிஸ்டு கட்சியின் இணைய பிரசங்கியான சந்திப்பு வேறு வழியின்றி மார்க்ஸியத்தின் ஒளியில் விசயங்களை பரிசீலிக்கும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுவிட்டார். ஆயினும் அப்படி ஒரு ஆய்வு முறை பயிற்சியின் மூலமே ஒருவருக்கு கைவரும் என்பதும், 'போலச் செய்தல்' என்பது இங்கு சாத்தியமில்லை என்பதும் அவரது கட்டுரையை படிக்கும் போது புலப்படுகிறது. குறிப்பாக முதலாளித்துவ சிந்தனை முறைக்கு பழகிய CPM கும்பல்களால் இயங்கியல் ரீதியில் சிந்தித்து கருத்துக்களை வெளிப்படுத்துவது என்பது இயலவே இயலாத காரியமாகிவிட்டது. பரிதாபம்தான். எனினும், அவரது முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

நிற்க, ஈழம் பிரச்சினையில் புரட்சிகர அமைப்புகளை இலக்காக வைத்தே கட்டுரை எழுதியுள்ளார் திருவாளர் சந்திப்பு. நல்லது ஆனால் பிரச்சினை என்னவென்றால் புரட்சிகர அமைப்புகளின் நிலைப்பாடென்று அவரே ஒன்றை கற்பனை செய்து கொண்டு பேசுகிறார். இது நகைப்பிற்குரியது. அடுத்தவர் மண்டையில் உட்காந்து கொண்டு சிந்திக்கும் இவரது தோழர் கோமாளி வுடுதலையை இவர் ஞாபகப்படுத்துகிறார்.

சந்திப்பு சொன்னது:
""தமிழகத்தில் உள்ள பல இனவாத நக்சலிச அமைப்புகள் உட்பட பலரும் சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். ""

'சுயநிர்ணய உரிமை' என்ற சொல்பதத்தின் மார்க்ஸிய அர்த்தத்தை முதலில் சந்திப்பு புரிந்து கொண்டாரா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். மார்க்ஸியத்திலிருந்து மேற்கோள் காட்டி அவர் விவாதிக்கும் ஒரு பிரச்சினை தனது நாட்டு எல்லைகளை கடந்து உள்ள ஒரு அந்நிய பிரதேசம் பற்றியது என்பதை சுத்தமாக மறைத்து விடுகிறார் அவர். இன்னொரு நாட்டில் நிலவும் தேசிய பிரச்சினைக்கு அடுத்த நாட்டு கம்யுனிஸ்டு கட்சி தனது அரசியல் ஆதரவை மட்டுமே நல்க முடியும், தீர்வுகளை அல்ல என்பதை காமரேடு சந்திப்புக்கும், அவர் சார்ந்த CPM பாசிஸ்டுகளுக்கு ஞாபகப்படுத்த கடமைப் பட்டுள்ளேன்.

மேலும் இந்த விசயத்தில் ம க இ கவினுடைய நிலைப்பாடு என்பது ஒன்றிணைந்த இலங்கை என்பதையே விரும்புகிறது. ஆனால் அதனை முடிவெடுக்கும் தகுதி அந்த மக்களுக்கே சொந்தம். CPMமோ அல்லது இந்திய அரசோ அல்லது இலங்கை அரசோ அல்லது புலிகளோ கூட இதில் முடிவெடுக்க உரிமையற்றவர்கள்.

ஒரு முதலாளித்துவ அரசில், ஏகாதிபத்திய சூழலில் ஒரு பகுதி மக்களின் தேசிய விடுதலைக்கான போராட்டத்திற்கு வேற்று நாட்டு கம்யுனிஸ்டு கட்சி தீர்வுகளை அல்ல மாறாக தனது ஆதரவைத்தான் நல்க முடியும். இப்படி நாடு விட்டு நாடு தாண்டி தீர்வுகளை நல்கும் நாட்டாமைத்தனம் அதிகாரத்துவ இயங்கியலின் ஒரு பதம் எனில் அதன் இன்னொரு எதிர்ப்பதம் 'சரண்டர்'த்தனம்.

ஒன்றுபட்ட போலி கம்யுனிஸ்டு கட்சியாக இவர்கள் இருந்த பொழுது இந்தியாவுக்கான தீர்வைத் தேடி ஸ்டாலினிடம் சென்று 'சரண்டர்' ஆகி அதனை அவர் கண்டித்து உங்களது நாட்டுக்கு ஏற்ப மார்க்ஸியத்தை நடைமுறைப்படுத்துவதை நீங்கள்தான் செய்ய வேண்டும் என்று கூறிய கதையின் இன்றைய மறுஎதிர் ஒளிபரப்புதான் CPM கட்சி சிரிலங்கா பிரச்சினைக்கு தீர்ப்பு சொல்லும் தற்போதைய கதை. என்றைக்குமே ஒவ்வொரு நாட்டு பாட்டாளி வர்க்கமும் அந்தந்த நாட்டு பிரச்சினைக்கான தீர்வுகளை அவர்களே பருண்மையாக கண்டுணர்வதுதான் சாத்தியம். அப்படியில்லாத ஒரு தீர்வு கருத்துமுதல்வாத திரிபே ஆகும்.

இதையெல்லாம் விட மிக முக்கியமானது ஒரு நாட்டில் நடக்கும் தேசிய விடுதலை போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் அதன் பக்கத்து நாட்டு கம்யுனிஸ்டு கட்சியானது அந்த தேசிய விடுதலை போராட்டத்தின் எதிரியாகிய ஏகாதிபத்தியத்தையும், அது சர்வதேச எதிரி என்பதையும், அது ஒடுக்கும் தேசிய இனத்தின் எதிரி என்பதையும் அம்பலப்படுத்தியே அரசியல் செய்ய வேண்டும். மாறாக ஏகாதிபத்தியத்திற்கு புனித முகமூடி போடும் வேலையை செய்யக் கூடாது. இந்த அம்சத்தில் ஈழப் பிரச்சினையில் பிராந்திய ஆதிக்க சக்தியான இந்தியாவின் ஆக்கிரமிப்பு நோக்கங்களை அம்பலப்படுத்துவம், அதன் பின்னே இருந்து கொண்டு சுரண்டும் இந்திய தரகு முதலாளிகளை அம்பலப்படுத்துவதுமே சரியான அரசியலாகும்.

இந்திய மக்களின் வரிப் பணத்தில் ஈழத்தை இந்திய தரகு முதலாளிகள் சுரண்டுவதை எதிர்ப்போம், ஈழ சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்போம் என்ற அடிப்படையிலான அரசியல் முழக்கங்கள்தான் இந்திய, சிங்கள, ஈழத் தமிழர்களை, மற்றும் சர்வதேசிய உழைக்கும் மக்களை ஈழத்திற்கு ஆதரவாக திரட்டும் சரியான அரசியல் வழியாக இருக்க முடியும். ஆனால் CPM கும்பலோ இந்தியாவின் இந்த அரசியல் பொருளாதார நோக்கங்களை பற்றி பேசவே காணோம். இதுதான் இவர்களின் மார்க்ஸியம்.

சொந்த நாட்டிலேயே கூட முதலாளித்துவ அரசின் கீழ் செயல்படும் பொழுது அது அரை காலனிய நாடாக இருக்கும் பட்சத்தில் பரந்துபட்ட மக்களுடன் ஐக்கியப்பட்டு ஆளும் வர்க்கத்தை தனிமைப்படுத்தும் முயற்சிக்கு ஏதுவாக அந்த நாட்டின் தேசிய இன உணர்வுக்கு முதலில் அங்கீகாரம் வழங்குவதும். அதனுடாக அவர்களுடன் ஐக்கியப்பட்டு செயல்படுவதின் மூலம் அதனை பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்திற்கு வளர்ப்பதும் தேவைப்படுகிறது. இதன் அர்த்தம் தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவு என்று ஒருவன் கூறிக் கொண்டால் அவனை மார்க்ஸியவாதி என்று சொல்லுவதற்கு ஒரு அடிப்படையும் இல்லை. ஏனேனில் வைத்தால் முடி சிரைத்தால் மொட்டை என்பதும் இயக்கமறுப்பியல் வகைப்பட்ட சிந்தனைதான். எதையுமே அதன் வளர்ச்சி போக்கில் வைத்து புரிந்து கொள்வதும், பரிசீலிப்பதுமே இயக்கவியல் சிந்தனை முறை.

தேசிய இன பிரச்சினையில் சமரசமின்றி சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதைத்தான் மார்க்ஸியம் வலியுறுத்துகிறது. சந்திப்பு மேற்கோள் காட்டும் குறிப்பிட்ட பகுதியில், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு தேசிய இனம் பிரிந்து செல்ல விரும்பும் போது அது பாட்டாளி வர்க்க நலனுக்கு ஊறாக இருக்கின்ற பட்சத்தில் அனுமதிக்க முடியாது என்ற ஒரு விலக்கு விதியே சொல்லப்பட்டுள்ளது. ஒரு எ-காவுக்கு ஜெர்மனியுடனான ஒரு யுத்த தருணத்தில் ஒரு தேசியம் பிரிந்து செல்ல விரும்புகின்ற பட்சத்தில் அதனை அனுமதிப்பது முடியாது. ஆனால் இதனையே பொது விவரிப்பாக கூறும் சந்திப்பு சுயநிர்ணய உரிமை என்பதையே பிரிந்து செல்வது என்பதாக இன்னும் குறுக்கி சிதைக்கிறார். அதாவது விவாகரத்து உரிமையையே விவாகரத்தாக கருதி அவதூற்றும் பிற்போக்குவாதிகள் போல.

மார்க்ஸியத்தை பருண்மையாக அமுல்படுத்தியதிலிருந்து பல்வேறு நாடுகள் பெற்ற அனுபவங்களில் விதி விலக்கான விசயங்களை மட்டுமே முன்னிறுத்தி தனது திரிபுவாதத்தை நியாயப்படுத்த பயன்படுத்தும் CPM கும்பல் எப்பொழுதும் போலவே இப்பொழுதும் அதையே செய்துள்ளது ஆச்சர்யமான விசயமல்ல. பாராளுமன்றம், ரகசிய கட்சி, ஆயுத புரட்சி, வெகு ஜன அமைப்பு, புதிய ஜனநாயக கோட்பாடு போன்றவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள விதி விலக்கான விசயங்களையே பொது மார்க்ஸியமாக CPM பாசிஸ்டுகள் திரிப்பது முன்பு பலமுறை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தேசியம் குறித்த திரிபும் சேர்கிறது.

சிரிலங்கா பிரச்சினையில் மட்டும்தான் இவர்களது நிலைப்பாடு இது என்றால் அப்படியில்லை. காஷ்மீர் முதல் எல்லா இடங்களிலும் இந்திய ஆளும் வர்க்கங்களின் நிலைப்பாடிற்கு சிங்கி அடிப்பதுதான் இவர்களின் மார்க்ஸியமாக உள்ளது. தரையில் ஊன்றி நடக்கச் சொல்லி நமக்கு அறிவுறுத்தும் இவர்கள் முதலில் இந்திய ஆளும் வர்க்கத்தின் தோள் பட்டையில் உட்கார்ந்து மக்களை காட்டிக் கொடுப்பதை விட்டொழித்து கீழே இறங்கி வரட்டும்.

அசுரன்

சி.பி.எம்.(மோடியிஸ்ட்) கும்பலின் கழிப்பறைக் காகிதம் - தீக்கதிர்!.... மற்றும் ’கோயபல்ஸ்’ செல்வப்பெருமாள்!!... (ஏகலைவனின் அருமையானதொரு கட்டுரை)

சுயநிர்ணயத்தை மறுக்கும் போலி (சி.பி.எம் சந்திப்பு) கம்யூனிஸ்டுகளின் கழுதை அரசியல்

CPM கோயபல்ஸ் பீரோவின் பித்தலாட்ட ஈழ நிலைப்பாடும், டவுசர் கழண்ட சந்திப்பும்!!

யுத்தத்தின் பின், தமிழ்மக்கள் பேரினவாத அரசுக்கு தம் எதிர்ப்பை காட்டுவார்களா?

இந்திய அரசே ஈழத்தில் தலையிடாதே!! CPM பாசிஸ்டே கோயபல்ஸ்தனத்தை நிறுத்து!!

ஒரு இந்தியனாக, சிங்களர்கள் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகிறேன்!!

பாஸிஸ்டு CPMமும், லெனின் சொல்லும் ஜனநாயக புரட்சியும்!!!!

Thursday, February 05, 2009

CPM கோயபல்ஸ் பீரோவின் பித்தலாட்ட ஈழ நிலைப்பாடும், டவுசர் கழண்ட சந்திப்பும்!!

ங்கிலத்தில் உள்ளவை ஜெவிபியின் பினாமி கட்சியான CPM கோயபல்ஸ் பீரோவின் அறிக்கை.

////The government of India should seek the assistance of the United Nations to ensure the safety of the Tamil civilian population in the northern province.////

இலங்கையில் இந்தியா நேரடியாக தலையிடுவது அம்பலமாகியுள்ள இந்த சூழலில், CPMன் குலக்கொழுந்துகளான சந்திப்பு, விடுதலை போன்ற கோயபல்ஸுகளுக்கு ஒரு சவால் விடுகிறேன். இந்தியா ராணுவ வீரர்களும் அதிகாரிகளும் ஈழத்தில் யுத்தத்தில் தலையிட்டு வருவது குறித்து உங்களது கருத்து என்ன? அதனை ஆதரிக்கிறீர்களா? ஏனேனில் இந்தியா தலையிடவில்லை எனில் பாகிஸ்தான், அமெரிக்கா ஆதரிக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளீர்கள் அதனால்தான் கேட்கிறேன்.


//Sri Lankan government immediately take up the provision of genuine autonomy for the Tamil-speaking areas within a united Sri Lanka as promised during the visit of the External Affairs Minister to Colombo.//

சிங்கள அரசு தமிழர்களுக்கு உரிமை கொடுக்கிறேன் என்று உத்தரவாதம் கொடுப்பதும், ஒப்பந்தங்கள் இடுவதும் இது முதல் முறையா? வரலாற்றில் இது போல பலமுறை நடந்துள்ள பொழுது எந்த அடிப்படையில் சிங்கள அரசை CPM நம்புகிறது? ஒருவேளை ஹிந்து ராமின் நண்பர்கள்தான் சிங்கள இனவெறி அரசு என்ற அடிப்படையிலா?

மொத்தத்தில் என்னதான் சொல்ல வருகிறீர்கள்? நாங்கதான் உள்ளூர் ஆளுங்க. நீங்கதான் அகில இந்திய கட்சியாயிற்றே ஏன் பாலஸ்தீன பிரச்சினைக்கு அகில இந்திய அளவில் துடித்த உங்களால் ஈழப் பிரச்சினைக்கு உள்ளூர் அளவில் கூட துடிக்க முடிவதில்லை?

எப்படி புலிகளை எதிர்ப்பதையே ஈழ எதிர்ப்பாக புலி ஆதரவாளர்கள் முத்திரை குத்துகிறார்களோ அதே போல ஈழ ஆதரவையே புலி ஆதரவாக முத்திரை குத்தும் சிங்கள வெறி அரசுக்கும், இந்திய அரசுக்கும், சோ, ஹிந்து ராம், ஜெயலலிதா, சுசுவாமி வகையாறாக்களுக்கும், CPM பாசிஸ்டுகளுக்கும் என்ன வேறுபாடு?

வேறுபாடு இல்லை என்பதுதான் எமது கருத்து. சந்திப்பு போன்ற கூலிக்கு மாரடிப்பவர்கள் தம்மளவில் இந்த உண்மையை ஒத்துக் கொண்டால் எமது வேலை மிச்சம்.

ஜேவிபி இனவெறி கட்சியுடன் உங்களது கள்ள சிநேகிதம் தொடர்வதின் விளைவுதானா இது? அல்லது ஜெவிபியின் பினாமி கட்சியா CPM?

மக்களை சர்வதேச அளவில் அணி திரட்டி அந்தந்த நாடுகளில் உள்ள ஜனநாயக சக்திகளின் துணையுடன் அந்தந்த அரசுகளை ஈழ பிரச்சினையில் அழுத்தம் கொடுக்க கோரி போராடுவது என்பதும், இந்தியாவில் இந்திய அரசு ஈழத்தில் தலையிடுவதை எதிர்த்து மக்களை, ஜனநாயக சக்திகளை திரட்டி போராடுவது என்பதும் ம க இ கவின் நிலைப்பாடு இதற்கு பதிலாக ஜோசியக்காரன் போல ஐநாவை நம்பு, பிராந்திய மேலாதிக்க இந்தியாவை நம்பு, ராஜபக்சேவை நம்பு என்று கதை விட்டுக் கொண்டு சிங்கள இனவெறிக்கு, இந்திய தரகு முதலாளிக்கு முதுகு சொறியும் CPM கட்சி ஜெவிபியின் பினாமி என்பதில் என்ன தவறு உள்ளது என்று சந்திப்பு தெளிவுப்படுத்துவது நலம்பயக்கும்.

நாங்க மக்களை நம்பு என்கிறோம் CPM வழக்கம் போல ஆளும் வர்க்கத்தையும், அரசையும் நம்பு என்கிறார்கள். இதுதான் கம்முனிசமாம். போங்கடா....

அசுரன்

யுத்தத்தின் பின், தமிழ்மக்கள் பேரினவாத அரசுக்கு தம் எதிர்ப்பை காட்டுவார்களா?


இந்திய அரசே ஈழத்தில் தலையிடாதே!! CPM பாசிஸ்டே கோயபல்ஸ்தனத்தை நிறுத்து!!


ஒரு இந்தியனாக, சிங்களர்கள் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகிறேன்!!

Tuesday, February 03, 2009

இந்திய அரசே ஈழத்தில் தலையிடாதே!! CPM பாசிஸ்டே கோயபல்ஸ்தனத்தை நிறுத்து!!

ழத்தில் தமிழர்களை ஒழிக்க நேரடியாக தனது ராணுவத்தினரை இந்தியா அனுப்பியுள்ளது சமீபத்திய சம்பவங்களில் அம்பலமானது. இந்திய அதிகாரிகள் காயமடைந்தது, செத்து ஒழிந்தது உள்ளிட்ட செய்திகள் மற்றும் அணை கட்டு உடைந்த சம்பவத்தில் கணிசமான அளவு இந்திய ராணுவத்தினர் செத்து சின்னா பின்னமானது போன்ற செய்திகள் மற்றும் இது போன்ற தொடர் செய்திகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

விசயம் இப்படியிருக்கு CPM பாசிஸ்டுகளின் இணைய பிரசங்கி சந்திப்பு தனது தளத்தில் படு கேவலமான கருத்தை இட்டுள்ளார்:

""
இந்திய அரசு வல்லாதிக்க மனப்பான்மையுடன் செயல்படுவதாக குற்றம் சுமத்துவது இலங்கையின் சுதந்திரத்தையும் - மக்களையும் கொச்சைப்படுத்துவதாகவே முடியும். எனவே தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் மீதான தாக்குதல் மிக அதிகமான அளவில் வெறியூட்டக்கூடிய முறையில் மிகைப்படுத்தப்படுவதும் நடைபெறுகிறது.
""" (நன்றி: ஏகலைவன்)

ஈழத்தில் சிங்கள இன வெறி அரசு மக்களை கொன்று குவித்து வருவது குறித்து பல்வேறு சர்வதேச நிறுவனங்களும், நார்வோ போன்ற நாடுகளும் கூட சமீபத்தில் தமது கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில் இந்த இணைய கோயபல்ஸ் CPM சந்திப்பு வாய் கூசாமல் பேசுகிறார். கேட்டால் இலங்கையின் இறையாண்மை போய்விடுமாம். போடாங்.....

அப்படிப்பாத்தா குஜாராத் கலவரம் பற்றி பேசினால் குஜராத்தின் இறையாண்மை போய்விடும். இதே போல பாலஸ்தீனம், ஈராக் என்று எல்லா இறையாண்மைகளை பற்றியும் CPM தனது வாய், ஆசன வாய் உள்ளிட்டவற்றை மூடிக் கொண்டால் நமது வேலையாவது மிச்சமாகும்.

மிகைப்படுத்தப்பட்ட செய்தியாம். எது 150 டாங்கிகள் சென்றதா அல்லது இந்தியா அங்கு நேரடியாக தனது ராணுவத்தினரையும், ஆயுதங்களையும், ராணுவ அதிகாரிகளையும் அனுப்பி யுத்தம் செய்து வருவதா? அல்லது இதோ இன்று 48 மணி நேர கெடு என்ற பெயரில் ஒட்டு மொத்தமாக மிச்ச மீதியுள்ள தமிழர்களையும் கொன்றொழிக்கும் வெறியுடன் எறிகணைகளை பொழிந்து வருவதா? எது மிகைப்படுத்தப்பட்ட செய்தி. மிகைப்படுத்தப்பட்ட விசயம் என்று ஒன்று இருந்தால் அது இனிமேலும் உங்களை போலி கம்யுனிஸ்டு என்று அழைப்பதுதான். ஏனேனில் போலியாக கூட இருக்கும் அடிப்படையின்றி பாசிஸ்டின் குரலில் அப்பட்டமாக, வெட்கமின்றி பேசும் ஒருவனை, கட்சியை போலி கம்யுனிஸ்டு என்று அழைப்பதுதான் மிகைப்படுத்தப்பட்டது.

இந்த கும்பல் இப்படி பேசுவது ஒன்றும் ஆச்சர்யமான விசயமல்ல. ஈழத்தின் அவலத்தை எதிர்த்து ஒரு கிளர்ச்சி நிலையை உருவாக்கும் வகையில் முத்துகுமார் தன்னை எரியூட்டி தனது எழுத்தை ஒளியூட்டிய தருணத்தில் அதற்கு மறுநாள் இவர்கள் நாடகம் நடத்தி களிப்புற்றுக் கொண்டிருந்தனர். அந்த வக்கிர நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்து பகன்ற மாமாமனிதர் ஹிந்து ராம். CPMமும், சிங்கள இன வெறி கட்சி ஜேவிபியும், இந்து ராமும் இணையும் புள்ளி இதுதான். மக்களுக்கு பாசிசம். இந்த இந்து ராம்தான் ஈழம் என்ற வார்த்தையைக் கூட தனது பத்திரிகையில் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக தமிழீழ என்று ஆரம்பிக்கும் அமைப்புகளின் பெயரை சிங்கள தமிழ் என்று எழுதும் வக்கிர புத்திக்காரன். இவந்தான் சிங்கள இன வெறி அரசின் இந்திய கைக்கூலி அல்லது ஆசனவாய். இலங்கையில் கழியாமல் அஜீரமானதை இங்கு முடை நாற்றமெடுக்க நசுக்குபவன்.

CPM கும்பல் கொள்கை முரன்பாடின்றி பன்னாட்டு தரகு முதலாளிகளுக்கு காவடி தூக்கி வருகின்றனர். எனவேதான் தமது மாநிலத்தில் நந்திகிராமில் பன்னாட்டு தரகு முதலாளிகளுக்காக மக்களை சுட்டு பொசுக்குவதை செய்த இவர்களால், இந்திய தரகு முதலாளிகளுக்காக இலங்கை எனும் ஒரு நாட்டில் ஒரு இனத்தையே அழித்தொழிக்கும் யுத்தத்தை ஆதரிக்க முடிகிறது. கேட்டால் இறையாண்மை, ஜனநாயகம், சட்டம் என்று நல்லவன் போல பேசவும் முடிகிறது. மக்களின் மீது குண்டுகளும், துப்பாக்கிகளூம் பாயும் போது உனது சட்டமும், ஜனநாயகமும், இறையாண்மையும் எங்கே நக்கிக் கொண்டிருந்தது என்று நியாயமாக நாம் கேட்க வேண்டும். ஆனால் அப்படி கேட்க்கும் அளவு CPM கும்பல் தகுதியானவர்கள் அல்ல.

இந்திய முதலாளிகளின் தெற்காசிய கனவுகளுக்கு ஈழத்தை சுடுகாடாக்காதே! இந்திய அரசே இலங்கையில் தலையிடுவதை நிறுத்திக் கொள்!! CPM கும்பலே உனது மோசடித்தனத்தை மூட்டை கட்டி வைத்துக் கொள்!!!

அசுரன்

மாவீரன் முத்துக்குமாரின் தியாகம் - உணர்வாளர்களின் எழுச்சியும், துரோகிகளின் இகழ்ச்சியும்!...

ஈழம்: இந்தியாவின் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு தமிழ‌கத்தில் பிரச்சாரம்

ஒரு இந்தியனாக, சிங்களர்கள் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகிறேன்!!

பாசிசமும் சர்வதேசியமும் இந்தியத் தோழர்களும்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு, நாம் விடுக்கும் பகிரங்க வேண்டுகோள்

சர்வதேசியத்தை கைவிட்டா ஈழப்போராட்டத்தை அணுக வேண்டும்!?

ஈழமும் முத்துக்குமாரின் தியாகமும் - நமது கடமை என்ன?

Monday, February 02, 2009

சிதம்பரம் கோயில் இனி தீட்சிதருக்கு சொந்தமல்ல! நந்தனை எரித்த அவமானம் ஒழிக்கப்படும்!!

சிதம்பரம் கோயிலில் தமிழில் பாட முற்பட்ட சிவனடியார் ஆறுமுகச்சாமியை பார்ப்பன ரவுடிகளான தீட்சிதர்கள் அடித்ததும், அதனைத் தொடர்ந்து மகஇகவின் தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு கழகம் பல தொடர் போராட்டங்களை பிற ஜனநாயக சக்திகளுடன் இணைந்து நடத்தி தமிழில் பாடும் உரிமையை வென்றதும் அனைவரும் அறிந்ததே. இதனையொட்டி நடந்த வெற்றி விழா கூட்டத்தின் போது நந்தனை எரித்ததன் அடையாளமான அந்த ஆயிரம் வருட அவமானச் சுவரை இடித்து நொறுக்குவதே லட்சியம் என்று சூளுரைக்கப்பட்டது.

அப்படிப்பட்டதொரு லட்சியத்தை நோக்கிய நடவடிக்கையின் முதல் கட்டமாக சிதம்பரம் கோயில், தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல என்பதை நிறுவி அதனை இந்து அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வருவதற்காக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. அதில் அரசாங்கத்துடன் மனித உரிமை பாதுகாப்பு கழகமும் ஒரு அங்கத்தினராக இணைந்து தீட்சிதர்களுக்கு எதிராக வழக்காடினர். அந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளிவந்துள்ளது.

தீர்ப்பின் படி கோயில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமாக வேண்டும். மேலும், ஒரு வாரத்தில் கோயில் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிகிறது. இது சாதரணமான தீர்ப்பு அல்ல. தீட்சிதர்களை எதிர்த்து வரலாறு நெடுகிலும் நடத்தப்பட்ட போராட்டங்களை அவர்கள் ஒழித்துக் கட்டியுள்ளனர். கடந்த 60 வருடங்களில் பல சட்டப் பூர்வ முயற்சிகளையும் அவர்கள் முறியடித்துள்ளனர். சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்களின் அடாவடித்தனம் என்பது யாராலும் கேள்வி கேட்க முடியாத ஒரு சர்வ வல்லமை படைத்த ஒன்றாகவே நம்பப்பட்டது. தீட்சிதர்களை எதிர்த்து கடந்த காலங்களில் நடந்த நிகழ்வுகள் கவனிக்கும் ஒருவருக்கு மலைப்பே ஏற்படும். அப்படிப்பட்டதொரு வெல்ல முடியாத சக்தியாக கருதப்பட்ட தீட்சிதர்களை அவர்களது கோயிலேயே முறியடித்ததுதான் தமிழில் பாடும் உரிமைக்கான அந்த முதல் போராட்டம்.

இதோ இப்போது அதன் அடுத்த கட்டமான இரண்டாவது போராட்டமும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இது முழு வெற்றியல்ல. இதனை அடுத்த கட்டமாக சட்டரீதியாக எதிர் கொள்ள தீட்சிதர்கள் தயராகலாம். அதுவும் முறியடிக்கப்பட வேண்டும் என்பதும் நந்தனை எரித்து கொன்றதன் அவமானச் சின்னமான அந்த சுவர் உடைத்தெறியப்பட வேண்டும் என்பதுமே நமது அவா. இது குறித்து பின்னூட்டத்தில் தகவல் தெரிவித்த முகம் தெரியாத அன்பருக்கு நன்றிகள்.

அசுரன்

சிதம்பரம் நடராஜனை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் தீட்சிதர்களை காவல்துறைக் கட்டுப்பாட்டில் கொண்டுபோக வேண்டும்

தில்லைச் சிற்றம்பலம் ஏறியது தமிழ்! ஆலயத் தீண்டாமை அகலும் வரைஓயாது எமது சமர்!

தில்லையில் வீழ்ந்தது பார்ப்பனிய ஆதிக்கம்! ம.க.இ.க போராட்டம் வெற்றி!!

Related Posts with Thumbnails