TerrorisminFocus

Monday, September 06, 2010

அக்சார்தம் கோயிலை தாக்கியவர்களுக்கு மரணதண்டனை, பாபர் மசூதியை தாக்கிய காவி பயங்கரவாதிகளுக்கு?

இந்தியாவின் அதி பயங்கர உள்நாட்டு அச்சுறுத்தல் - தேசத் துரோக காவி பயங்கரவாதி அத்வானி

ல்லாயிரம் பேரை கொன்றுவிட்டு, கோயிலை இடித்துவிட்டு, கலவரங்கள் செய்துவிட்டு இந்தியாவில் பாதுகாப்பாக, பெருந்தலைவர்களாக வலம் வர முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டியவன்தான் அத்வானி என்ற காவி பயங்கரவாதி. இவனது அடியொற்றிய அதி பயங்கரவாதிதான் மோடி என்பவன்.













இன்று அக்சார்தம் கோயிலைத் தாக்கியவர்களுக்கு மரண தண்டனை இடை-நிறுத்தி வைக்கப்பட்டதாக செய்தி வெளிவந்துள்ளது. குஜராத் உயர் நீதிமன்றத்தில் மரண்தண்டனை வழங்கப்பட்ட பயங்கரவாதிகள்தான் இவர்கள். ஏனேனில், இவர்கள் சிறுபான்மை முஸ்லீம்கள் என்பதால், 'சிறுபான்மையை குளிர்விக்கும்' நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், இதற்கும் முன்பே பாபர் மசூதியை இடித்ததுடன், ரத யாத்திரைகள், கலவரங்கள் நடத்தி பல ஆயிரம் மக்களை படுகொலை செய்த ஆர் எஸ் எஸ் பயங்கரவாதி அத்வானியோ ஒரு தண்டனைக்கும் இதுவரை ஆளாகவில்லை. அவர்களது காவி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பரிசாக இந்தியாவின் 'முக்கிய'த் தலைவர்கள் என்ற கௌரவம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.






இது என்னவகையான சிறுபான்மையை குளிர்விக்கும் அரசியல் என்பதை ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள்தான் விளக்க வேண்டும். அத்வானி, மோடி போன்ற தேசத் துரோக காவி பயங்கரவாதிகள் மீது சிறு துரும்பைக் கூட தூக்கிப் போட வக்கில்லாத 'காவி மனிதாபிமானி'கள்தான் தற்போது மரண தண்டனை ஒப்புக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து சிறுபான்மை குளிர்விப்பு அரசியல் என்று ஓநாயைப் போல ஓலமிடுகிறார்கள். இவர்கள் அத்வானி, மோடி போன்றோருக்கு மரண தண்டனை இன்று வரை நிறைவேற்றப்படாததை எதிர்த்தும் ஓலமிட்டிருந்தால் நியாயவான்களாக கருத இடமுள்ளது.

இப்படி எரிப்பது எப்போது?

டைம்ஸ் நௌ போன்ற காவி பயங்கரவாத ஊடகங்களோ அல்லது என் டி டி வி போன்ற அரசு பயங்கரவாத ஊடகங்களோ அத்வானி போன்ற காவி பயங்கரவாதிகளுக்கு தமது ஆதரவையே எப்போதும் தருவார்கள். 'காவி பயங்கரவாதம்' என்ற வார்த்தை சரியா தவறா என்று தேச முக்கியத்துவம் வாய்ந்தவற்றை விவாதிப்பவர்கள்தான் இவர்கள். இத்தகைய காவி பயங்கரவாதிகளை பாதுகாக்கும் அவர்களின் பினாமி அரசா தண்டனை தரப் போகிறது?....

அசுரன்

படியுங்கள், பயம் கொள்ளுங்கள்

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...1 -2

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...3_4

முற்றும் கழண்ட டவுசர்!! அடடே ஆர் எஸ் எஸ் அம்மணக்கட்டை!!!

1 பின்னூட்டங்கள்:

said...

உண்மையை தெளிவாக எழுதியுள்ளீர்கள்...

Related Posts with Thumbnails