TerrorisminFocus

Sunday, August 29, 2010

இவனுங்க அப்பனுங்க எல்லாம் குதிருக்குள்ளே இல்லையாம், அவனுங்களே சொல்றானுங்க!!!

குதிரு 1:
"நான் ஒன்னும் அமெரிக்காவுக்காக வேலை செய்யல... புலீஸ் நம்புங்க.." - மன்மோகன்சிங்

I'm not working for US, PM tells opposition
Aug 26, 2010, 04.06am IST

அவரே சொல்லிட்டாரு அதனால 'உண்மையாத்தான்' இருக்கும் என்று கட்டாயம் எல்லாரும் நம்பிருங்க.

(ஒபமா அய்யா, இப்படி சொல்லித்தான்யா மெயின்டெய்ன் பன்னிட்டுருக்கேன்!!)


குதிரு 2:

வடிவேலு: எனக்கு கோவம் வராது....

அடிக்கிறவன்: வந்தா?

வடிவேலு: அதான் வராதுன்னு சொல்றேன்ல அப்புறம் ஏன்யா அத எதிர்பாக்குறீங்க....

மூத்திர சந்தில் அடிவாங்கி அலும்பு விடும் வடிவேலு கேரக்டர் பேசும் பிரபல வசனம்தான் மேலே உள்ளது. இதே போல பிரதமர் மன்மோகன்சிங்கும் சமீபத்தில் தான் வாங்கிய அடிமேல் அடிகளுக்குப் பிறகு அலும்பினார்.. பிறகு பம்மினார்...

அலும்பல்:
உயிரிழப்பு ஏற்படுத்தாத முறைகளைக் கொண்டு போராட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும் - 'அலும்பு' மன்மோகன்

பம்மல்:
இந்தியாவை போலிஸ்காரங்களை வைச்சி மேய்க்கிறது வரவர சிரமமாப் போய்க்கினேக்கீது - 'வடிவேலு' மன்மோகன்சிங்

காஷ்மீர், வடகிழக்கு, தண்டகாரன்யா போராட்டங்கள், நாடு முழுவதும் பல்வேறு விவசாயிகள் கிளர்ச்சி என திசை திக்கில்லாமல் வகை தொகையாக மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ள மன்மோகன், உதிர்த்த முத்துக்கள்தான் மேலே உள்ளவை. ஆனாலும், ரொம்ப நல்லவன்யா.....

(பிம்பிலிக்கி பிலாப்பி... மாமா பிஸ்கோத்து....)


குதிரு 3:
"காவி பயங்கரவாதம்னு இல்லாததையும், பொல்லாததையும் சொல்லக் கூடாது, திரும்பத் திரும்பச் சொன்னா... வலிக்குது அழுதுறுவேன்" - பாஜக மற்றும் காங்கிரசில் உள்ள ஆர் எஸ் எஸ் அல்லக்கைகள் புலம்பல்.

(காவி பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த உறுப்பினன் ஒருவன்)

(இந்து பயங்கரவாதி இந்திரேஸ் குமார் - ஆர் எஸ் எஸ் தலைவன்)


ஆர் எஸ் எஸ்ல அப்ரண்டிஸா இருந்து குண்டு வைக்கிறது, நாட்டைக் கூட்டிக் கொடுப்பது போன்ற தேசத் துரோக வேலைகளை கத்துக்கிட்டு பிறகு குண்டு வைத்து மாட்டிக் கொண்டுள்ளனர் காவி ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள். இதக் குறிப்பிட்டு பா. சிதம்பரம் இந்தியாவில் காவி பயங்கரவாதம்னு ஒரு புது போக்கு(??) உருவாகியுள்ளதுன்னு சொன்னதுக்குத்தான் இப்படி அழுது மூக்கு வடிச்சிருக்கு காவி கும்பல்.


குதிரு 4:

"விலைவாசி குறைந்து கொண்டே இருப்பது இனி தொடரும், வருட இறுதியில் பணவீக்கம் 6%த்தை அடைந்துவிடும்" - மாண்டேக் சிங் அலுவாலியா.

இத்த இவர் சொன்னது ஜூலை மாசம் (அதுக்கு முந்தின மாசம், அதுக்கும் முந்தின மாசம்னு எல்லா மாசமும் இந்த டேப்ரிக்கார்டரத்தான் அவரு ஓடவிடுவாரு).

இப்படி விலைவாசி ஒரேயடியாக 'குறைந்ததால்' சல்லிசாக கிடைத்த முட்டை, தக்காளிகளை மொத்தமாக அள்ளிக் கொண்டு போய் மாண்டேக் சிங் அலுவாலியாவிற்கு அபிசேஹம் செய்து மகிழ்ந்துள்ளனர் மேற்கு வங்க மாணவர்கள். சிங்கும் சந்தோசமாக ஏற்றுக் கொண்டார் என்று கேள்வி??

அப்புறம் மக்களே.. நாம எப்போ இதே மாதிரி விலைவாசியைக் கொண்டாடப் போறோம்?

(போட்டோவப் பாத்தா சந்தோசமா இருக்குற மாதிரி தெரியலயே...)


(இங்க வைச்சிதாங்க மூச்சுத் திணறத் திணற முட்டையெறிஞ்சாங்க... அவ்....)



குதிரு 5:

(இதோ போட்டோலக் கீதே இதுதாம்பா உலகின் மிகப் பெரிய ஜனநாயகம்)

உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் இந்தியா அப்படின்னு சொல்றதே அப்பன் குதிருக்குள்ள இல்லனு சொல்ற மாதிரிதான் இருக்கும். அதையும் தூக்கி சாப்புடுற மாதிரி ஒன்னு நடந்துருக்கு.

'எங்க வோட்டு மெசின் ரொம்ப ஸ்டிராங்க், முடிஞ்சா யார்னாலும் அத உடைக்க ட்ரை பன்னலாம்னு' போன தேர்தல் முடிஞ்ச உடனே எலக்சன் கமிசன் ஒரு சவால் விட்டது. சரி அதையுந்தான் பாப்போமேனு ஹரி என்ற ஒருவர் வோட்டு மெசின கொடுங்கன்னு கேட்டாக்க, எலக்சன் கமிசன் கொடுக்க மறுத்துடுச்சி. அவர் அங்க இங்க ஆளப் பிடிச்சு ஒரு மெசின எப்படியோ 'ரெடி' பன்னி அத உடைச்சிட்டார். அத்தோட இல்லாம "அய்யா உங்க ஜனநாயகத்த தூக்கி நிறுத்துற வோட்டு மிசினு பூட்டகேசுங்கோ, டுபாக்கூருங்கோ" அப்படின்னு பப்ளிக்கா அறிவிச்சுட்டார். வோட்டு மெசின் டூபாக்கூருனு ஏற்கனவே தெரிஞ்சனாலதான் சவால் விட்டுட்டு அமைதியா கிடந்தது எலக்சன் கமிஷன். இப்போ இந்த 'ஜனநாயக' உண்மையை ஹரி அம்படுத்தினாலும் படுத்தினார், அவரை ஏழரை நாட்டு சனிகளில் ஒன்றான போலீசு பீடை பிடித்துக் கொண்டு படுத்துகிறது. அது மட்டுமா அடுத்ததா நீதிமன்ற பீடையும் பிடித்துக் கொண்டு அவரை சிறைக்கு அனுப்பி வைத்துள்ளது. இது 'ஜனநாயகத்தை' பாதுகாக்க எடுக்கப்பட்ட 'ஜனநாயகமான' நடவடிக்கையாம். பின்ன? எங்கப்பன் குதிருக்குள்ள இல்லன்னு நான் சொல்லுவேன், அது வேற. அதுவே இன்னொருத்தன் வந்து உங்கப்பன் அந்தக் குதிருக்குள்ள இல்லனு 'நாட்டக்' காட்டிக் கொடுத்தான்னா... ங்..கொய்யால சும்மா விட்டுறுவோமா?

நாங்கலே ரொம்ப நாளா இதத்தான் ஜனநாயகம்னு சொல்லி இவிங்கள நம்ப வைச்சுக்கிட்டு இருக்கோம் திடீர்னு வந்து இப்படி அம்பலப்படுத்தினா பிடிச்சு ராடு அடிச்சுர மாட்டோம்? ஜனநாயகம்னா சும்மாவா?

நடுவால சிரிச்சுகினே போஸ் கொடுக்குறாரே, அவருதாம்பா இந்திய ஜனநாயகத்தின் அந்த 'அபாயகரமான' எதிரி!!


அசுரன்

4 பின்னூட்டங்கள்:

said...

உங்க WANTED POSTER IS நெத்தியடி..

said...

நல்லா வந்திருக்கு :)

said...

hi

said...

வித்தியாசமான பதிவு...வாழ்த்துக்கள்...

Related Posts with Thumbnails