TerrorisminFocus

Monday, January 28, 2008

கோவில்பட்டியில் பீறிட்டோடும் பார்ப்பன இன வெறி!!

நியூஸ்கேப் என்ற புதியதொரு செய்திதொகுப்பு தளத்தில் வந்துள்ள கட்டுரை கீழே உள்ளது. செய்திவிமர்சனம் என்ற புதிய செய்திவிமர்சனம் தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. செய்திகளை வெறுமே வறட்டுத்தனமாக படிக்காமல் பல்வெறு பிற செய்திகளுடன் தொடர்பு படுத்தி தொகுப்பான புரிதலுக்கு வருவதற்க்கு இந்த தளங்கள் உதவும்.


கோவில்பட்டியில் பீறிட்டோடும் பார்ப்பன இன வெறி!!


பார்ப்பன இன வெறி தட்டி போர்டு

மிழ்நாட்டின் மொழியாம் தமிழ்மொழியில் வழிபடு என்று சொன்னால் அது மொழி வெறியாம் ஏனெனில் தமிழ் நம்முடைய மொழியாம் ஆனால் சமஸ்கிருதம் எல்லா நாட்டவர்களுக்கும், உலகத்தவர்களுக்கும், இனத்தவர்களுக்கும் உரிய பொதுவான மொழியாம் அந்த வகையில் அது உயர்ந்ததாம்.கடவுளின் மொழி சமஸ்கிருதம் உலகம் முழுவதற்க்கும் புரிந்த மொழி அதுதான் எனவே அந்த மொழியில் கடவுளிடம் பேசு என்று மொழி வெறியில் அல்ல பார்ப்பன பண்பாட்டு வெறியில் ஒரு தட்டி போர்டு எழுதி அதை தைரியமாக பொது மக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர் கோவில்பட்டியில். எனது மொழி என்பது வெறும் எனது மொழி மட்டும்தானாம் அதில் அதற்க்கு மேல் ஒன்றும் கிடையாதாம். மாறாக சம்ஸ்கிருதம்தான் அதி சிறந்ததாம். ஏன் இந்த தட்டி போர்டையே சம்ஸ்கிருதத்தில் எழுதி வைத்திருக்கலாமே?யாருமே பேசாத மொழியாம் சம்ஸ்கிருதத்தில் வழிபடு என்று தைரியமாக சொல்வதோடல்லாமல் தமிழில் வழிபடு என்று சொல்வது இனதுவேசத்தால் என்கிறார்கள்? அதாவது எனது மொழியில் எனது கடவுளை கும்பிடுவேன் என்று விரும்புவது சம்ஸ்கிருத இனத்தின் மீதான துவேசத்தாலாம். அதாவது எனது மொழியை நான் விரும்பக் கூடாதாம். இனத் துவேசம் என்றால் எந்த இனத்தின் மீதான துவேசத்தால்? அப்படியானால் சம்ஸ்கிருதத்திற்க்கு என்று இனம் உள்ளதா? அப்படியானல் அந்த தட்டி போர்டே சொல்வது போல அது எல்லா இனத்திற்க்குமான மொழியில்லையா? யாருமே பேசாத மொழி எந்த இனத்திற்க்குரியாதாக இருக்க முடியும். பித்தலாட்டக்கார பார்ப்பன பண்பாட்டு வெறியர்களுக்கும் இவையெல்லாம் தெரியாமலில்லை. பார்ப்பன பண்பாட்டு அடிமைகளுக்கோ இவற்றை பகுத்தாராயும் மனிதனுக்குரிய அறிவு இல்லை.

எனது கடவுளை எனக்கு தெரிந்த மொழியில் வழிபடுவது எனது உரிமை என்று கோரினால் அவ்வாறு கேட்பவர்கள் கடவுள் பக்தியில்லாத அரசியல் பிழைப்புவாதிகளாம். சிதம்பரத்தில் தமிழில் வழிபடும் உரிமை கோரி போராடும் ஆறுமுகச்சாமி என்னும் சிவனடியாரும் இவர்கள் கணக்கில் கடவுள் பக்தியில்லாதவர். உண்மையில் அவரை அப்படித்தான் நடத்தினார்கள் தில்லைவாழ் தீட்சிதர்களும், அவர்களின் அல்லக்கையான நீதிமன்றமும். அதாவது பார்ப்பனியத்தின் பண்பாட்டு மேன்மையை ஏற்றுக் கொள்ளாத யாரும் இவர்கள் கணக்கில் கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள்தான். அதாவது பார்ப்பான்தான் கடவுள் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் இந்த வெறியர்கள்.

தமிழ் வழிபடுவதற்க்கான மொழியில்லை என்று வரலாற்றை திரித்துக் கூறும் இந்த பார்ப்பனியர்கள் இதன் மூலம் தமிழ் நீச மொழி என்பதை வேறு வார்த்தைகளில் சொல்கிறார்கள். தமிழ் வழிபாட்டு மொழி என்ற வரலாற்றிற்க்கும் கூட தில்லையே ஆதரமாக இருக்கிறது. சிவாலயங்கள் அங்கு வழிபடும் சைவர்களுக்கு மட்டுமே உரியது என்று கூறும் இவர்கள் சைவர்கள் என்று யாரைச் சொல்வார்கள் எனில் பார்ப்பனியத்தை சுவீகரித்துக் கொண்டவர்களைத்தான். ஏனேனில் பார்ப்பனியத்தை எதிர்த்து நிற்க்கும் ஆறுமுகச்சாமி என்ற சிவனடியாருக்கு இவர்கள் குரல் கொடுப்பதில்லை.

சைவ சமயம் என்பது பாரத தேச மக்கள் அனைவருக்குமான சநாதன தர்மம் என்று வெளிப்படையாக பார்ப்பனியத்தை பேசுகிறது இந்த தட்டி போர்டு.

மானங்கெட்ட இந்த தட்டி போர்டு ஒட்டு மொத்த உழைக்கும் மக்களையும், அவர்களின் மொழியையும், பண்பாட்டையும் அவமானப்படுத்தும் வகையில் பொதுச் சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதை தட்டிக் கேட்பதுடன் அல்லாமல் பார்ப்பன் பண்பாட்டு வெறியர்களையும், அவர்களின் அல்லக்கை அடிமைகளையும் நடு ரோட்டில் வைத்து நையப் புடைக்க வகையின்றி தமிழ் சமுதாயம் இருப்பது ஆக அவமானகரமானது.

இமெயிலில் செய்தி: குருசாமி, கோவில்பட்டி.

செய்திரசம்.


தட்டி போர்டில் உள்ளது:

சைவப்பெரியோர்களே!

சமீப காலமாக தெய்வ நம்பிக்கை சிறிதும் இல்லாத நாத்திகர்கள் சிலர், தமிழ் வேதம் என்ற போர்வையில், சைவ சமயத்துள்ளும், சிவாலயங்களில் செய்யப்பட்டுவரும் ஆகம வழிபாட்டு முறைகளிலும், பல குழப்பங்களைச் செய்து வருகிறார்கள். நம்முடைய சைவ மடாதிபதிகளை வம்புக்கு இழுத்து அவமானப்படுத்தியும் வருகிறார்கள். இவர்கள் கூற்று, தமிழ் மொழியால் மட்டுமே அர்ச்சனை, மற்றும் நித்திய நைமித்திக பூஜைகள், கும்பாபிஷேகங்கள் செய்யப்பட வேண்டும் என்பது. இவர்கள் கூற்று சைவ சமயப்பற்றினாலோ, தமிழ் மொழிப்பற்றினாலோ எழுந்தது அல்ல. சம்ஸ்கிருத மொழி துவேசத்தாலும், இன துவேசத்தாலும் எழுந்தது. தமிழ் மந்திரங்கள் தமிழ் அர்ச்சனை என்பது ஒரு மாயை.

சிவாலயங்கள் அங்கு வழிபாடு செய்யும் சைவர்களுக்கு மட்டுமே உரிமையுடையது. அதில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு தெய்வ நம்பிக்கையே இல்லாத இவர்கள் யார்? அவர்கள் நோக்கமெல்லாம் இது போன்ற குழப்பங்களைச் செய்து, மொழி வெறியைத் தூண்டி, சுய விளம்பரமும், அரசியல் ஆதாயமும் தேடுவது தான். இவர்களிடம் சைவ மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களின் சாதுர்யப் பேச்சுக்களை உதாசீனம் செய்யுங்கள்.

சைவ சமயம் என்பது பாரத தேச மக்கள் அனைவருக்கும் உரிய பொதுவான சநாதன தர்மம், அதைத் தோற்றுவித்தவரும், வேத ஆகமங்களை அருளிச் செய்தவரும், அனாதி மூத்த சித்துரு ஆகிய சிவபெருமானாரே.

சைவம் நம்முடைய சமயம், தமிழ் நம்முடைய மொழி, சமஷ்கிருதம் எல்லா நாட்டவர்களுக்கும், எல்லா உலகத்தவர்களுக்கும், எல்லா இனத்தவர்களுக்கும் உரிய பொதுமொழி, மொழி வெறியைத் தூண்டி நம்முடய சமயத்தை அழிக்க முயலும் வேடதாரிகளை ஒதுக்கித் தள்ளுங்கள்.

இது பற்றிய விரிவான உண்மைகளை அடியோங்கள் 14-4-1998ல் வெளியிட்ட "சைவாலயங்களில் சம்ஸ்கிருத மந்திரங்களே வேண்டும்! ஏன்?" என்ற வெளியீட்டில் கண்டு தெளிக.

இப்படிக்கு
திருமறை மன்றம், கோவில்பட்டி
ஸ்ரீ அப்பரடிகள் சிவாலய உழவரப்பணித் திருக்கூட்டம், கோவில்பட்டி
ஸ்ரீ மாணிக்கவாசகர் சைவ சபை, கோவில்பட்டி



15 பின்னூட்டங்கள்:

said...

அதில் வரும் “உழவரப்பணித் திருக்கூட்டம்” என்பது கவனத்திற்குரியது.. பொதுவாக ஆர்.எஸ்.எஸ் பன்றிகள் “ஆலய பாதுகாப்பு பேரவை” என்ற லேபிலின் பின்னே ஒளிந்து கொண்டு இது போல சைவ ஆலயங்களுக்குள் உழவாரப் பணி செய்கிறோம் என்கிற போர்வையில் ஊடுருவுவது வழக்கம். ( இந்த பிரிவுக்கு சண்முகநாதன் என்பவன் தான் தலைவனாக இருந்தான் ( செக்ஸ் புகாரில் சிக்கிய அதே சன்முகநாதன் தான்))

கோவை பேரூர் பட்டீஸ்வரன் கோயிலுக்குள்ளும் இப்படித்தான் ஊடுருவ எத்தனித்தனர். அதற்கு சாந்தலிங்க அடிகளாரும் உடந்தையாக செயல்பட்டார்.. ஆனால் அங்கே ஓதுவார்கள் கொஞ்சம் வலுவான லாபியாக இருந்ததால் இப்படிப் பட்ட பலகைகள் வைக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற முடியாமல் போய் விட்டது.

இந்த நாதாறிகள் தமது செல்வாக்கை இது போல் மக்கள் பரவலாக நம்பும் இடத்தில் இருந்து தான் பரவலாக்க முயற்சிக்கிறார்கள். ஓரளவு காலூன்றியதும் மற்ற மத மக்களுக்கு எதிரான விஷமப் பிரச்சாரத்தை ஆரம்பித்து அதை ஒரு கலவரமாக மாற்றி சமூகத்தை இரண்டாகப் பிளப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்..

விழிப்பாக இருக்க வேண்டும்!!

said...

//சைவ சமயம் என்பது பாரத தேச மக்கள் அனைவருக்கும் உரிய பொதுவான சநாதன தர்மம்//

உன் கையை எடுத்து உன் கண்ணையே குத்துவது என்று சொல்வார்களே சரிதான்.

சாநிதான தர்மமா ? அப்போ வேதவாந்திகள் எழுதியதாகத்தான் இருக்கும்.
:)

இந்துமத பீடைகளை நம்பிக்கை என்று நம்பி பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் வரை தீண்டாமை ஒழியாது, சமத்துவம் மலராது.

said...

//இவர்களின் சாதுர்யப் பேச்சுக்களை உதாசீனம் செய்யுங்கள்.//


என்ன சாதுர்யம் ! என்ன சாதுர்யம் !
:)))

said...

// மானங்கெட்ட இந்த தட்டி போர்டு ஒட்டு மொத்த உழைக்கும் மக்களையும், அவர்களின் மொழியையும், பண்பாட்டையும் அவமானப்படுத்தும் வகையில் பொதுச் சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதை தட்டிக் கேட்பதுடன் அல்லாமல் பார்ப்பன் பண்பாட்டு வெறியர்களையும், அவர்களின் அல்லக்கை அடிமைகளையும் நடு ரோட்டில் வைத்து நையப் புடைக்க வகையின்றி தமிழ் சமுதாயம் இருப்பது ஆக அவமானகரமானது.
//

உண்மை...
இவனுகளெல்லாம் பேசித்திருந்திர கூட்டமில்ல...

அடிச்சாத்தான் திருந்துவாங்க...

said...

அறிவிப்பு பலகையை உலகத்தார் அனைவருக்கும் உகந்த "தேவ பாஷை"யில் வைத்திருக்கலாமே??

ஏன்னா தமிழ்காரன்தான் நெத்தியில இளிச்சவாயன்னு எழுதி ஒட்டிக்கிட்டு திரியுறான்... Grrrr....

said...

'அடேய்..அவன் ஒங்க அம்மைய 'தேவிடியான்னு' நடுத்தெருவுல நின்னு திட்டுருண்டா..போய் நாலு மொத்து மொத்துன்னு' நாம் சொன்னால்

இந்துக் கூமுட்டைக...போர்டு வச்சு 'எங்க அம்மை விபச்சாரிதான்..ஆனால் எங்க பெரியம்மை பத்தினியாக்கும்..இருந்தாலும்..அதைக்கூட, கற்பினைப் பற்றி கறாரான கருத்தில்லாத நாத்திகன் பேசக்கூடாதுன்னு' ஒரு பிள்ளை விளம்பரம் செய்யுதுன்னா...நிச்சயமா அது விவேகாநந்தர் சொன்ன மாதிரி 'கோமாதா'வின் பிள்ளையாகத்தான் இருக்க முடியும்...

மாட்டுக்குப் பிறந்த மாடுகள்தான் இப்படி இருக்க முடியும்..

சின்ன கட்டபொம்மன்

said...

http://poar-parai.blogspot.com/2007/05/blog-post_2512.html

அம்பேத்கர் என்ன சொல்கிறார்?

என்னைப் பொறுத்தவரை, இந்நாட்டுத் தொழிலாளர்கள், இரண்டு எதிரிகளோடும் போராட வேண்டியுள்ளது. ஒன்று பார்ப்பனியம்; மற்றொன்று முதலாளித்துவம். தொழிலாளர்கள் பார்ப்பனியம் என்னும் பகைமைச் சக்தியுடனும் போராட வேண்டியுள்ளது என்பதை நமது விமர்சகர்கள் புரிந்து கொள்ளத் தவறுவதால், இத்தகைய விமர்சனங்கள் வருகின்றன. பார்ப்பனியம் என்னும் எதிரியை நாம் சமாளிக்க வேண்டும் என்று சொல்லும்போது, என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. பார்ப்பனர்கள் ஒரு வகுப்பினர் என்ற அடிப்படையில் அதிகாரம், உரிமைகள், நலன்கள் ஆகியவற்றைப் பெறுவதை நான் பார்ப்பனியம் என்று சொல்லவில்லை. அந்தப் பொருளில் நான் பார்ப்பனியம் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உணர்வுகளின் எதிர்மறைதான் பார்ப்பனியம் என்று சொல்கிறேன். இந்த எதிர்மறை உணர்வு, எல்லா வகுப்பினரிடையிலும் உண்டு, பார்ப்பனர்களோடு அது நின்று விடவில்லை. பார்ப்பனர்கள் அதைத் தோற்றுவித்தவர்கள் என்ற போதிலும், அது எல்லா வகுப்பினரிடையிலும் ஊடுருவி உள்ளது என்பது உண்மை. பார்ப்பனியம் எங்கும் பரவி எல்லா வகுப்பினரின் சிந்தனை, செயல்களில் ஆதிக்கம் செலுத்துவது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பார்ப்பனியம், சில வகுப்புகளுக்கு உரிமை மிகுந்த உயர்வுகளை வழங்குகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. பிற வகுப்புகளுக்கு சம வாய்ப்புகளை மறுக்கிறது என்பதும் உண்மை. பார்ப்பனியம் சேர்ந்துண்ணல், கலப்பு மணம் ஆகிய சமூக உரிமைகளை மறுப்பதோடு நின்று விடுவதில்லை. அப்படி நின்றிருந்தால், யாரும் அதைப் பற்றிக் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். அது, சிவில் உரிமைகளையும் பதம் பார்க்கிறது.

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:175)

நன்றி: கீற்று

said...

இத் தட்டியைத் தேவ பாசையாம் சமஸ்கிருதத்தில் வைக்காததைக் கண்டிக்கிறேன்.

said...

From an agnostic point of view, I want ppl to do away with God and Religion or keep it personal if they can't..former is better bcoz I think this world will be a better place without religion..but this idea of doing away with god and religion can hardly materialise in the current Indian social life for obvious reason..In this backdrop, expecting ppl to be less fanatical about their god and religion is the only option left out.Here is exactly where Sanskrit comes in to picture. Praying Vedic Gods using an unknown language in a way helps to detach Tamils/ppl from those gods there by making them less fanatical about God and religion so much so that they could even elect someone as CM who said "Hindu endral Thirudan". What's your views?

said...

இதுபோன்ற செய்திகளை வெளிக்கொணர்ந்து, கண்டித்து, விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் உங்கள் பணி செவ்வனே தொடரட்டும்.

said...

தட்டியில எழுதீருப்பது பேத்தல். மகா அயோக்கியத்தனம். சைவத்துக்கும் இவங்கதான் இனிமே விளக்கம் கொடுக்கப் போறாங்களாக்கும். அப்பர் மாணிக்கவாசகர் பேரை வெச்சுக்கிட்டு இப்பிடி எழுதுறது உறுத்தலையா? அட...சமஸ்கிருதத்துல எழுதவாவது தெரியுமா இந்தத் தட்டிப் பயகளுக்கு? அடுத்தவனும் பூசை செய்ய வந்துறக் கூடாதுங்குற பயத்துலதான் சமஸ்கிருதத்த உள்ள வைக்கிறது.

said...

இதே அளவுகோலின்ப்டி பார்த்தால் குஜராத்தும், ராஜஸ்தானும், கர்நாடகமும் பெனாடிக்கலாக்க இருப்பதற்க்கு அங்கெல்லாம் அந்தந்த மொழிகளிலேயே வழிபாடு நடக்கிறது என்று அர்த்தம் கொள்ளலாமா?

//that they could even elect someone as CM who said "Hindu endral Thirudan". What's your views?//

அவரால் சொல்லமுடிந்ததற்க்கு காரணம் தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு மரபும், பெரியாரும்தான்.

//expecting ppl to be less fanatical about their god and religion is the only option left out//

வேறு மதங்களில் வேண்டுமானால் வெறி என்பது பிரச்சினையாக இருக்கலாம். பார்ப்பனியம் என்பது ஒரு மதமல்ல ஒரு ஒடுக்குமுறை வாழ்க்கைத் தத்துவம் என்ற் வகையில் அதன் பிரச்சினை பெரும்பான்மை மக்களின் அடிமையுணர்வுதான். இந்த சம்ஸ்கிருத வெறி தட்டி போர்டை எதிர்க்க ஒருவரும் இல்லை என்பது இதற்க்கு ஒரு உதாரணம்.

அசுரன்

said...

இந்த மாதிரி எழுதியவனுக்கு நல்லா காயடிச்சி விட்டா தான் புத்தி வரும்

said...

m... thiruverdau karumari amman inniku kaiyil veenaiyodu saraswathi alangarathil kaatchi alikiraal. kasta kaalam.

said...

// பார்ப்பனியம் என்பது ஒரு மதமல்ல ஒரு ஒடுக்குமுறை வாழ்க்கைத் தத்துவம் என்ற் வகையில் அதன் பிரச்சினை பெரும்பான்மை மக்களின் அடிமையுணர்வுதான். //

Well said !

நிறம் அடிப்படையில் Discriminate செய்வது Racism.

பிறப்பின் அடிப்படையில் Discriminate செய்வது Parpanisam.

இந்து என்ற சனாதன மதத்தின் (அப்படித்தான் தட்டியும் சொல்கிறது... சைவ சமயம் என்பது பாரத தேச மக்கள் அனைவருக்கும் உரிய பொதுவான சநாதன தர்மம், ) அடிப்படையே பிறப்பின் அடிப்படையில் மைந்த Parpanisam என்ற Discriminate தத்துவம்தான். அது இல்லை என்றால் இந்து என்ற சனாதனம் இல்லை.

மிதிப்பவனும் ,மிதிபடுவனும் ஒரே வட்டத்திற்குள் இருப்பது இந்த இந்து என்ற சனாதன மதத்தில்தான். பெரும்பான்மை மக்களின் அடிமையுணர்வே Parpanisam இன்னும் இருக்க காரணம்.

இவர்கள் வாழைப்பழத்தில் ஊசியாய் ஏற்றிய இந்து-சனாதன-பார்ப்பனீய சாதிய அடுக்குமுறை உலகில் உள்ள எல்லா வன்முறைகளிலும் கொடியது.
அந்த வன்முறை இப்போது பல மட்டங்களில் இவர்கள் எதிர்பார்த்ததைவிட மோசமாய் சாதி வெறி கொண்டு ஆடுகிறது.

இவர்களின் சித்தாந்தங்களை அடியோடு அழித்தால்தான் பார்ப்பனீயத்தை எல்லா மட்டங்களிலும் அழிக்க முடியும்.இவர்களை மட்டும் எதிர்த்து மற்ற ஆதிக்கச்சாதிகளை சாய்ஸ்-ல் விட்டுவிடக்கூடாது. பெரும்பாலும் அதுதான் நடக்கிறது.

மனு அடுக்கு முறையில் 1-2-3-4... என்பதில் 3 என்பது 4 க்கு உயர்சாதியாகவும் 1 என்பது 3 க்கு உயர்சாதியாகவும் உள்ளது.

எந்த அடுக்கில் இருந்தாலும் ,கீழ் அடுக்கில் இருக்கும் ஒருவன் இன்னும் "மனு" வை நம்புவதாலேயே, மனு ஏணியில் மற்றவர்கள் உயர இருப்பதாக நினைக்கிறான்.

உயர இருப்பவர்களை மற்றவர்கள் அண்ணாந்து பார்க்கும் மாயையே உயர இருப்பவர்களை இன்னும் ஆளுமை செய்ய வைக்கிறது.

யானை அதன் பாகனை பாஸாக நினைத்து பிச்சை எடுப்பது போல.

பார்ப்பனீயத்தை பின்பற்றுபவர்கள் (மனுவின் அடுக்கில் 1-2-3-4.. ) யாராக இருந்தாலும் தீண்டத்தகாதவர்கள் என்று நீங்களும் நானும் ஒதுக்க ஆரம்பித்தாலே இவர்களின் மாய தோற்றம் விலகி ஆளுமை அடையாளங்கள் சிதைக்கப்படும்.பெரியார் சிதைக்க விரும்பியதும் இதுதான். அவர் அடையாளம் 1 -ல் இருந்தும் மூல காரணமான "இந்து-சனாதன-பார்ப்பனீய" மதத்தில் இருந்தும் ஆரம்பித்தார். அது சொல்லும் எல்லா புனிதத்தையும் உடைத்தார்.

ஆனால் முழுமையான அடையாள அழிப்பு இன்னும் நடக்கவில்லை.

இன்று அடையாளம் 2 ல் இருப்பவன் 4 இல் இருப்பவன் வாயில் பீயை ஊற்ற, 1 ம் 3 ம் வேடிக்கை பார்க்கிறது.

2-ல் இருப்பவன் 1-ல் இருப்பவனை இன்னும் அண்ணாந்து பார்த்துக் கொண்டுள்ளான். மேலும் சில அடையாளங்கலை வரிந்து கொள்வதன்மூலம் 1 -க்கு பிரதியாய் இருக்கவே முயல்கிறான்

**
மனுசர்ந்த பிறப்பால் வரும் FC என்ற அடையாளப்படுத்துதலையே எடுக்க வேண்டும்.அது குறியீடு சார்ந்த விசயம். தற்போது FC என்று அடையாளப்படுத்தப்பட்டு உள்ளவர்களை " நாய்கள்" என்று அடையாளப்படுத்துங்கள் அவர்கள் அங்கே இருக்க விரும்ப மாட்டார்கள்.

அதுவே அவர்களின் மனுவழி வந்த ஆளுமை அடையாளத்தை குலைத்துப் போட்டு மனு-மெஜாரிட்டி பலத்தை குலைத்துப்போடும்.

Related Posts with Thumbnails